சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்

மதமாற்றமே குறிக்கோள்

conversionagenda2உலகெங்கும் தங்கள் மதத்தைப் பரப்பி தங்கள் ஆட்சியை நிறுவவேண்டும் என்பதே கிறுஸ்துவர்களின் தலையாய குறிக்கோள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இரண்டாயிரம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தியா வந்த போப் ஜான் பால் நம் மண்ணில் நின்றுகொண்டே நம் பூமியை கிறுஸ்துவ பூமியாக மாற்றவேண்டும் என்று குரல் கொடுத்ததையும் நாம் பார்த்தோம். பின்னர் அமெரிக்காவில் வலதுசாரிக் குடியரசுக் கட்சியின் ஆட்சியில் அதிபர் ஜார்ஜ் புஷ் “ஜோஷுவா ப்ராஜக்ட்” மூலம் இந்தியாவில் மதமாற்றத்திற்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும் வாத்திகனின் அபிமான புத்ரியான திருமதி சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு நம் நாட்டில் மதமாற்றங்கள் பெருமளவில் நடைபெறத் துவங்கியதாகத் தெரிகிறது. குறிப்பாக ஆந்திரத்திலும் தமிழகத்திலும் கிறுஸ்துவ மிஷனரிகளின் மதமாற்ற நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

பெரும்பாலும் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழை எளிய மக்களைக் குறிவைத்து மதமாற்றம் செய்வதோடு மட்டுமில்லாமல், மிஷனரிகள் உயர் மட்டத்தில் உள்ளவர்களையும் விட்டு வைப்பதில்லை. பத்திரிகைத் துறையில் பணிபுரிபவர்கள், வெள்ளித் திரை / சின்னத் திரை உலகத்தில் இருப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என்று எவரையும் விட்டுவைக்காமல் மதமாற்றும் நோக்கத்துடன் அணுகுகிறார்கள். இது தொடர்பான ஒரு சமீபத்திய சம்பவத்தைப் பற்றி இந்தப் பதிவு.

பிராம்மணர்களை மதமாற்றும் முயற்சி

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில், திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே அட்வெண்ட் சர்ச் ஒன்று இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன் சிறிய பிரார்த்தனை கூடமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டிடம் இன்று பிரம்மாண்ட தேவாலயமாக எழுப்பப் பட்டிருக்கிறது. ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதியன்று இதன் மதில்சுவர் மேல் கண்ணைக் கவரும் விதத்தில் ஒரு விளம்பரத் தட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில், “கிறுஸ்துவ பிராம்ம்ண சேவா சமிதி, முதலாம் ஆண்டு விழா” என்று தலைப்பிட்டு, “பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயகம் சாஸ்த்ரிகள் அவர்களின் கதாகால‌ஷேபம் சனிக்கிழமை 8-ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறும், அனுமதி இலவசம்” என்று விளம்பரம் செய்யப் பட்டிருந்தது. இவ்விளம்பரத்தைப் பார்த்த திருவான்மியூர் வாழும் இந்துக்களில் சிலர் அதிர்ந்து போயினர்.

conversionagenda1தங்கள் மதத்தில் ஜாதிப் பாகுபாடுகள் கிடையாது என்று கிறுஸ்துவர்கள் பீற்றிக்கொண்டாலும், நடைமுறையில், தேவாலயத்தில் இருக்கை முறை முதல் கல்லறையில் புதைக்கும் முறை வரை, ஜாதி வேற்றுமை கையாளப் படுகிறது. மேலும் அப்பாவி இந்துக்களை மதமாற்றம் செய்யும்போது “இயேசுவின் பார்வையில் அனைவரும் சமம்” என்று சொல்லும் மதப்பிரசாரகர்களும் பாதிரிகளும் காரியம் முடிந்தவுடன் தங்கள் கண்களையும் மூடிக்கொண்டு விடுவார்கள். மாற்றப்பட்ட நம் மக்கள் தாங்கள் கும்பிடும் சாமியையும், கும்பிடும் முறையையும் தவிர்த்து வேறு எந்த மாற்றமும் காணார்கள்!

ஆனாலும் பிராம்மணர்கள் என்ற சமூகத்தினரின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு விளம்பரம் செய்த ”கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்ற அமைப்பின் பெயர் அதிர்ச்சியைத் தந்தது உண்மை. அமைப்பு புதியதாக இருந்தாலும், அதனை ஆரம்பித்து செயல்படுத்தும் “சாது செல்லப்பா” என்னும் மதப்பிரசாரகர் “அறுவடை” செய்வதில் பெயர் போனவர்தான். திருவான்மியூர் நிகழ்வுகளைப் பார்ப்ப்தற்கு முன்னால் இவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது முக்கியம்.

சூது செய்யும் சாது

தென்தமிழகத்தில் இந்துக் குடும்பத்தில் பிறந்து, கோயில் சூழ்நிலையில் வளந்த இவர் சிறு வயதிலேயே இதிஹாச புராணங்களை நன்கு கற்றவராம்! தினமும் கோயில் வழிபாடுகளில் கலந்துகொள்ளும் இவரின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் கோயில் குருக்களும் அங்கிருந்த மற்ற ”பண்டிதர்களும்” சரியாக விளக்கங்கள் கொடுக்க இயலாத நிலையில், மனம் வெறுத்து, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள எத்தனித்த போது, எங்கோ ஒரு தேவாலயத்திலிருந்து காற்றில் மிதந்து வந்த விவிலிய உரை ஒன்று வெதும்பியிருந்த இவர் மனத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாம்! அடுத்த ரயில் நிலையத்திலேயே இறங்கி அந்தத் தேவாலயத்தை அடைந்து அங்கே இயேசுவைக் கண்டு தெளிவுபெற்று மனம்மாறி கிறுஸ்துவராக மாறி விட்டாராம்! அன்றைய தினம் ’மே’ மாதம் 14-ம் தேதி, 1967-ம் வருடமாம்! (இந்த விவரங்களைத் தருவதும் கிறிஸ்தவ பிரசார இலக்கியமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்).

இனி சில உண்மையான தகவல்கள். இயேசுவின் ஆணைப்படி கிறுஸ்துவ மதத்தைப்sadhu-chellappa பரப்புவதையே தொழிலாகக் கொண்ட இவர், குறுகிய காலத்திலேயே தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து கணிசமான அளவில் இந்துக்களை மதம்மாற்றி சர்ச்சுகளில் இணைத்துள்ளார்ர். 1974-ல் முழு நேர எவாங்கலிக்க ஊழியரான இவர் ”அக்னி ஊழியங்கள்” (Agni Ministries) என்ற நிறுவனத்தைத் தொடங்கி, நடத்தி வருகிறார். 1982-ல் “அக்னி” என்ற மாதாந்திரத் தமிழ் பத்திரிகையை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காக(!?) ஆரம்பித்து, நடத்தி வருகிறார். (Agni (fire) monthly magazine in Tamil).

1995-ல் இயேசு இவருக்கு, புதிய சர்ச்சுகள் நடவு செய்யச்சொல்லி உத்தரவு இட, அன்றிலிருந்து இன்றுவரை 27 சர்ச்சுகள் நடவு செய்து, அவற்றுக்கு 27 பங்குத் தந்தைகளும் நியமனம் செய்து, அறுவடைக்கு வழிசெய்துள்ளார். 28 தமிழ் புத்தகங்களையும் 2 ஆங்கிலப் புத்தகங்களையும் எழுதியுள்ளாராம். பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள மதப் பிரசாரகர்களைச் சந்தித்திருக்கிறார். அந்த மாதிரியான வெளிநாட்டுப் பயணங்களில் ஆங்காங்கேயுள்ள இலங்கைத் தமிழ் இந்துக்களில் சிலரையும் கிறுஸ்துவர்களாக மதம்மாற்றி மாபெரும் ஊழியம் புரிந்துள்ளார் என்கிற விஷயத்தை நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும். (இவரைப் பற்றிய விபரங்கள்: https://www.agniministries.org/ மற்றும்
https://www.agniministries.org/Testimony.aspx ஆகிய தளங்களில் கிடைக்கும்).

இவருடைய அக்னி ஊழிய மையம், “இந்தியாவின் எவாங்கலிக்க நடவடிக்கைக் குழு” (“Evangelical Action Team of India”) என்ற இயக்கத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் சர்ச்சுகள் நடவு செய்து அறுவடைகள் செய்வதோடல்லாமல், எவாங்கலிக்க வகுப்புகளும் நடத்தி, பங்குத்தந்தைகளுக்கு எவாங்கலிக்கப் பயிற்சிகளும் கொடுத்து வருகிறது. இந்திய மதங்களை (இந்து, பௌத்த, ஜைன, சீக்கிய மதங்கள்) பற்றிய விவரங்களையும், அவற்றின் மத நூல்களையும், கோட்பாடுகளையும் எப்படி திரித்துக் கூறி மதமாற்றம் செய்ய உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும் விவிலிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த மையம் கற்றுத் தருகிறது. ஆங்காங்கே சிறு பிரார்த்தனைக் குழுக்கள் (Prayer Cells) அமைத்து அவற்றின் உதவியுடன் சர்ச்சுகள் நடுவது, இந்துமதக் கோட்பாடுகளை கிறுஸ்துவ மதக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு, அதற்கேற்றார் போல் அவற்றைத் திரித்து எழுதுவது, திரித்து எழுதப்பட்டவற்றைச் சொல்லி இந்துக்களை மதம்மாற்றுவது, இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகளைச் சொல்லி (நிதி திரட்டுவதற்காக) வெளி நாட்டு இயக்கங்களுடன் கூட்டணி அமைப்பது போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுகிறது (https://www.agniministries.org/AboutUs.aspx ).

saadhu-chellappa-vcd“இந்தியாவின் எவாங்கலிக்க நடவடிக்கைக் குழு”, 1980-ல் கோயமுத்தூரில், சாது செல்லப்பாவால் தொடங்கப்பட்டது. இவரே 20 இயக்குனர்கள் கொண்ட நிர்வாகக் குழுவின் தலைமை இயக்குனராகவும் இருக்கிறார். கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் சேவை என்கிற பெயரில் மதப் பிரசாரம் செய்வதும், மதமாற்றம் செய்வதும் இந்த இயக்கத்தின் பிரதான வேலை (https://www.agniministries.org/EATI.aspx). தீபாவளித் திருநாள் கிறுஸ்துவப் பண்டிகை என்றும், கடவுளர்க்கு பலி கொடுக்கும் வழக்கம் கிறுஸ்துவப் பழக்கம் என்றும், காயத்ரி மந்திரம் உண்மையில் இயேசுவைப் பற்றியதே என்றும் திரித்துக் கூறும் இந்த ”சாது”, ‘சனாதன தர்மத்தை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறும் வேதங்கள், இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருந்தன. எனவேதான் வேதத்தில் ’புருஷ பிரஜாபதி’ மனிதனாக இவ்வுலகில் அவதரித்து தன்னையே தியாகம் செய்வார் என்று சொல்லியுள்ளது. இந்திய மக்களின் (இந்துக்களின்) வேதத் தேடுதலை முழுமையாக நிறைவேற்றவே இயேசு அவதரித்தார், ஏனென்றால், இறைதூதரின் வருகையால் எப்படி ’பழைய ஏற்பாடு’ முழுமையடைந்ததோ, அதே போல் இயேசு இல்லாமல் வேதங்கள் முழுமையடையாது’ என்று பகிரங்கமாக வெட்கமில்லாமல் முழங்குகிறார்.

மேலும், “இந்துமதம் விவிலியத்திலிருந்து தோன்றியதே” என்று பத்து பாகங்களில் இந்த ”யூ டியூப்” சானலில் இந்துமதக் கோட்பாடுகளை பலவாறாகத் திரித்துக் கூறி மிக வெளிப்படையாக அப்பட்டமான மோசடியைச் செய்து வருகிறார்.

திருவான்மியூர் நிகழ்வுகள்

சூது செய்யும் “சாது”வைப் பற்றியும் அவர் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றியும் புரிந்துகொண்டீர்கள் அல்லவா! இனி திருவான்மியூரில் என்ன நடந்தது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

விஜில் இணைய தளத்தின் (www.vigilonline.com) ஆசிரியர் ராதா ராஜன், கட்டுரையாளர் பி.ஆர்.ஹரன், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் ஆகியோர் திருவான்மியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், வேறு சில காவல் துறை உயர் அதிகாரிகள், தலைமை மற்றும் உள்துறைச் செயலகங்கள் மற்றும் மாநகரக் காவல் துறை கமிஷனர் ஆகியோரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு “கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்கிற மதமாற்ற மோசடி பற்றிப் புகார் அளித்துள்ளனர்.

அதோடு, வியாழக் கிழமை ஆறாம் தேதி மாலை முன்னாள் இஆப (IAS) அதிகாரி வி.சுந்தரம், ஹரன், மற்றும் ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்த சமூகத் தொண்டர்கள் சிலர் திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் செய்ததன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சில காவலர்கள் சர்ச்சிற்குச் சென்று அங்கிருந்த இரண்டு விளம்பர பானர்களையும் அகற்றி பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயக சாஸ்த்ரிகளின் கதாகால‌ஷேபம் என்று சொல்லப்படுகிற அந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். காவல் துறையினர் முன்னிலையில் அந்த சர்ச்சைக்குரிய பேனர் அகற்றப் படுவதை கீழ்க் கண்ட வீடியோவில் காணலாம்.

Vedanayagam Sastriar with son Clement Vedanayagam Sastriar
வேதநாயக சாஸ்திரி, மகனுடன்

ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை வெறுமனே இருந்த சர்ச்சில், எட்டாம் தேதி காலை இரண்டு பானர்களும் மீண்டும் தலை தூக்கியுள்ளன. ஆனால் பானர்களின் தலைப்பில் இருந்த “கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்ற வார்த்தைகள் மட்டும் ஒரு துணியால் மறைக்கப் பட்டிருந்தன. பூஜ்ய ஸ்ரீ, பாகவதர், சாஸ்த்ரிகள் போன்ற வார்த்தைகளோ, கதாகால‌ஷேபம் என்ற வார்த்தையோ நீக்கப் படவில்லை. மேலும் சர்ச் வாயிலில் பந்தல் போடப்பட்டு பெரிய வாழை மரங்களும் இளநீர் கொத்துகளும் பந்தலின் இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு சர்ச்சுக்கே ஒரு ஹிந்து மண்டபத்தின் சாயல் அளிக்கப் பட்டிருந்தது. ஒரு இந்துப் பண்டிகை கொண்டாடும் இடம் எப்படியிருக்குமோ அப்படி இருந்திருக்கிறது சர்ச்.

அந்த மற்ற வார்த்தைகளை பானர்களிலிருந்து நீக்கச்சொல்லி செய்யப் பட்ட தொலைபேசி மற்றும் நேரடிப் புகார்களுக்கு திருவான்மியூர் காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக அவர்களின் பாதுகாப்புடன் ”பூஜ்ய ஸ்ரீ பாகவதர் ”வேதநாயகம்
“சாஸ்த்ரி”களின் ”கதாகால‌ஷேபம்” நடைபெற்று முடிந்திருக்கிறது. பானரில் ஒரு பகுதியை மட்டும் நீக்கியதன் மூலமும், நிகழ்ச்சியை பாதுகாப்பாக நடத்தியதன் மூலமும், காவல் துறை ஏதோ நடுநிலையாக நடந்து கொண்டுவிட்டதாக நினைக்கலாம். ஆனால் அது முற்றிலும் தவறு.

கடுமையான தண்டனை தேவை

சர்ச்சில் நடந்து முடிந்த நிகழ்ச்சி சட்டத்திற்கு புறம்பானது. கிறுஸ்துவ மதத்திற்கும் கதாகால‌ஷேபத்திற்கும் என்ன சம்பந்தம்? கிறுஸ்துவ மதப் பிரசாரகர்கள் தங்களை சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், என்றெல்லாம் எவ்வாறு அழைத்துக் கொள்ளலாம்? ’பூஜ்ய ஸ்ரீ’ என்ற பட்டங்களை எவ்வாறு போட்டுக் கொள்ளலாம்? இவை வெட்கங்கெட்ட செயல் மட்டுமல்லாமல் சட்டத்திற்குப் புறம்பானவை அல்லவா? தங்களிடையே ஜாதிகளே இல்லையென்றும், ஜாதி வேற்றுமைகள் நாங்கள் கடைப்பிடிப்பதில்லை என்றும் பீற்றிக்கொள்ளும் ஒரு மதத்தினர், பிராம்மணப் பிரிவு ஒன்றை எவ்வாறு துவக்கலாம்?

கிறுஸ்துவத்திற்கும் பிராம்மணத்திற்கும் என்ன சம்பந்தம்? வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிஹாசங்கள், ஆகியவை இந்து மதத்தின் ஆன்மிகப் பொக்கிஷங்கள். சனாதன தர்மத்தை இந்துக்களுக்கு விளக்கும் புனித நூல்கள். இவற்றை உபயோகித்து தங்கள் கடவுளையும், மதத்தையும், கிறுஸ்துவ மதப்பிரசாரகர்கள் வியாபாரம் செய்வது மானங்கெட்டத்தனம் மட்டுமல்லாமல் சட்டத்தின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டியதாகும். இந்து மதக் கோட்பாடுகளை உபயோகித்து கிறுஸ்துவத்தை வியாபாரம் செய்தால் என்ன அர்த்தம்? கிறுஸ்துவத்திலோ, இயேசுவிடமோ, சொல்லிக்கொள்வதற்கு உருப்படியான விஷயங்கள் ஏதும் இல்லை என்று தானே அர்த்தம்? செல்லப்பா, வேதநாயகம், மற்றும் அவர்களைப் போன்றவர்கள் அனைவரும் இ.பி.கோ. 153எ, 295எ, 298 மற்றும் பல பிரிவுகளின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டியவர்கள்.

எவாங்கலிக்கர்கள் விற்பனைப் பிரதிநிதிகள் போல. விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் சரக்கை விற்பதற்கு எப்படி அடுத்த நிறுவனத்தின் சரக்குகளின் குணநலன்களை உபயோகப்படுத்த முடியாதோ, அதே போல் எவாங்கலிக்கர்கள் இந்து மத கோட்பாடுகளை உபயோகித்து கிறுஸ்துவத்தை வியாபாரம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அவ்வாறு செய்வது ஒருவிதத்தில் இயேசுவுக்குச் செய்யப்படும் அவமதிப்பும் துரோகமுமே ஆகும் அல்லவா? இந்தப் பாவத்திற்கு மன்னிப்பு உண்டா என்பது பற்றி கிறிஸ்துவ விசுவாசிகள் தான் சொல்லவேண்டும்!

இயேசு மீது விசுவாசம் கொண்ட, கிறுஸ்துவத்தின் மீதுஅந்த மதத்தின் அடிப்படையிலேயே நியாயமான ஈடுபாடு கொண்ட, உண்மையான கிறுஸ்துவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் விரைவில் விழிப்படைந்து செல்லப்பாக்களையும், வேதநாயகர்களையும் கட்டுப்படுத்தாவிட்டால் சமூகத்தில் மத நல்லிணக்கம் பாதிக்கப் படும்; சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும்; அமைதி கெடும். இது பல மதத்தவர்களும் கூடி வாழும் நம் தேசத்திற்கு சிறிதும் நன்மை பயக்காது.

மொத்தத்தில் கிறுஸ்துவர்கள் மதப் பிரச்சாரத்தையும், மத மாற்றச் சூழ்ச்சிகளையும், கீழ்த்தரமான ஆள்சேர்ப்பு யுக்திகளையும் முற்றிலுமாக நிறுத்துவதே அமைதிக்கு வழி.

536 Replies to “சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்”

  1. every attack on hinduism should be recorded and every protest by the hindus should be supported. thamizhchelvan vaazhga.

  2. We should note that the main strength of these people is the money flowing from west. Now west is reeling under recession and scratching the vessel. still from where the money is pouring for these people?

  3. அன்புள்ள ஹிந்து தமிழ்செல்வன் அவர்களே! ஆத்திரம் பொங்கி வருகிறது.
    என்ன செய்ய? என்ன செய்யலாம். ஏதாவது சொல்லுங்கள். உங்களுடன் கைகோர்த்து பணிசெய்ய நான் காத்திருக்கிறேன்.
    அன்புடன்
    ராம்

    (Edited and Published – TamilHindu Editorial.)

  4. This Christians are only after Hindus. They will never ever have the guts to go after muslims. Because the muslims will hit back at the Christians.

    My Hindu friends, these Christians are thinking that all Hindus are fools and ignorant about their own religion. To all my HIndu friends, take care of your children, your sons and daughters. These Christians are also after them in the name of love and relationships. Please keep your children informed whats happening.

    Thank you Tamil Chelvan.

    (Edited and Published – Tamilhindu editorial.)

  5. மதமாற்றச் சூழ்ச்சி விளம்பரத்தைக் கண்டும் காணாது போய்விடாமல் அதைக் காவல் துறையினரிடம் எடுத்துச் சென்று பானரை நீக்க வைத்த செயல்வீரர்கள் வாழ்க! அதனை மறக்காமல் வீடியோ எடுத்தவர்களுக்கும், கட்டுரையாக எழுதிப் பதிவு செய்திருக்கும் தமிழ்செல்வனுக்கும் பாராட்டுக்கள். இத்தகைய சக்திமான்களையே இன்றைய இந்து தர்மம் வேண்டி நிற்கிறது. அன்னை பராசக்தி மேன்மேலும் உங்கள் நெஞ்சில் உரத்தையும், தோள்களில் வலிமையையும் அருளட்டும்!

    இந்து விராதப் போக்கைத் தன் கொள்கையாகவே வைத்திருக்கும் தமிழக அரசுக்குட்பட்ட காவல் துறையில், புகாரைக் கேட்டவுடன் விரைந்து செயல்பட்டு பேனரை நீக்கி கிறிஸ்தவ வெறியர்களை எச்சரிக்கும் அளவுக்காவது சப் இன்ஸ்பெக்டர் செயல்பட்டிருக்கிறார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமே. இது போன்ற விஷயங்களைப் புகார் செய்ய விரும்புபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விஷயம்.

    பெங்களூரில் வீடு தேடி வந்து மதமாற்றப் பிரசாரம் செய்யும் எவாஞ்கலிக்க மோசடி வியாபாரிகளை வரவேற்று உபசரித்து, உரையாடி மறக்காமல் காவல் துறையிடம் புகார் செய்து பிடித்துக் கொடுக்கும் புனிதப் பணியை எங்களது நண்பர் வட்டங்களில் செய்து வருகிறோம். பெரும்பாலான சம்பவங்களில் கிறிஸ்தவ கூலிப் படைக் காரர்களே போலீஸ் வந்ததும் வெலவெலத்துப் போய் விட்ருங்க சார், இனிமே செய்யமாட்டோம் சார் என்று கெஞ்சத் தொடங்கி விடுகிறார்கள். வேறு சில வீம்பு பிடித்த கேஸ்கள் மீது எஃப். ஐ. ஆர்கள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. சில கேஸ்களில் வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும் இப்படிப் பிடுபடுகிறார்கள், சுற்றுலாப் பயணிக்களுக்கான விசாவில் வந்து சட்டவிரோதமாக அவர்கள் மதப் பிரசாரம் செய்வதும் கண்டுபிடிக்கப் படுகிறது.

    இன்றைக்கு இந்தியாவில் நடக்கும் 98% கிறிஸ்தவ மதப்பிரசார வேலைகள் சட்ட விரோதமானவை, அப்பட்டமான மோசடிகள், இந்துமதத்திலிருந்து திருட்டுகள், இந்துமத தூஷணம், கடைந்தெடுத்த வெறுப்பியல் பிரசாரங்கள். இவற்றை சுட்டிக் காட்டி சட்டரீதியாகவே நடவடிக்கையும், தண்டனைகளும் செயல்படுத்தப் படும் நடைமுறையை நாம் பெரிய அளவில் உண்டாக்க வேண்டும். ஊடகங்களில் இருக்கும் கிறிஸ்தவ ஆதிக்கத்தையும் மீறி, இந்த உண்மைகள் வெளிவருவது ஊக்கமளிக்கும் சமாசாரம். அனைத்து இந்து அமைப்புகளூம் இத்தகைய விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும், மோசடிகளை முறியடிப்பதில் முனைய வேண்டும்.

  6. தமிழ்ச்செல்வனின் மன உறுதிக்கும் உடனடியாகச் செய்பட்ட செயல் திறத்துக்கும் நம் அனைவருடைய பாராட்டுக்கள் உரியன.

    சில ஆண்டுக்ளுக்கு முன் ஸ்வாமி அபிஷிக்தானந்தா என்னும் கதோலிக்க பாதிரியாரின் குருவும் சிஷ்யனும் என்னும் நூலும் கிறித்துவ வேதாந்தம் என்னும் அவருடைய கட்டுரையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அபிஷிக்தானந்தா பிரெஞ்சுக்காரர். பெனிடிக்ட் என்னும் கிறித்துவ சன்னியாசத்தைச் சேர்ந்தவர். அவர் திருக்கோவலூர் ஞானானந்தகிரி சுவாமிகளை அடைந்து இந்து சன்னியாசிபோல வாழ்ந்த கிறித்துவத் துறவி. தவத்திரு ஞானானந்த சுவாமிகளிடம் வேதாந்த உபதேசம் பெற்று, திருக்கோவலூர் அக்கிரகாரத்தில் பிச்சையேற்று, பிறர் இந்துத்துறவி என நம்பும்படி வாழ்ந்தார். அவரைப் பற்றி என் மனத்தில் ஒரு மரியாதை இருந்தது.

    சாது செல்லாப்பவைன் வஞ்சகத்தையும் அயோக்கியத்தனத்தையும் பார்க்கும் போது இந்துத்துறவிபோலத் தோற்றம் அளிக்கும் கிறித்துவர்கள் எல்லார்மேலும் கோபம் எழுகின்றது. இதைக்காட்டிலும் ஒருவன் நம்மை அவமானப்படுத்த முடியாது. கிறித்துவத்தில் சாதிஉயர்வு தாழ்வு கிடையாது என்று பறைசாற்றும் ஈஸ்ரா சற்குணம் போன்றவர்கள் சாது செல்லப்பாவைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்வார்களா? ஏமாற்றுப் பேர்வழி என்று கண்டிப்பார்களா?

  7. TamilSelvan, Your statement is very childish and not matured. You have to understand something very basic I.e., You have to ask the people why they want to convert to christianity from hinduism. every human being have their own rights and they have to decide whether they wanted to be christian or hindu. First thing, why Sadhu(The man above) converted as christian? because he likes christianity, which is his own rights.

    dont blame christians or christianity because its a world wide accepted religion and the percentage of people worship jesus is so huge than any other.

  8. Chrch planting என்பதைக் குறிக்க உழவுத் தொழிலில் இருக்கும் நடவு என்கிற உயரிய சொல்லைப் பயன்படுத்தி உள்ளீர்கள் தமிழ்ச் செல்வன். அது சரியாக இல்லையே.

    இது பற்றி எனது பழைய கட்டுரை ஒன்றில் எழுதுகையில் இப்படிச் சொல்லிருந்தேன். இந்தச் சொல்லை தங்களுக்கும் பரிந்துரைக்கிறேன் :))

    // குண்டு வைத்தல் (planting a bomb) என்பதற்கு ஈடாக சர்ச் வைத்தல் (Church Planting) என்ற சொல்லாடலை சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். //

  9. // dont blame christians or christianity because its a world wide accepted religion and the percentage of people worship jesus is so huge than any other. //

    Hey joe, there you come! On the same count, we should not blame *European* colonization, crusade wars, racism, slave trade, inquisition etc. etc. because these were exactly the means by which the “percentage” was achieved..hmm? What a lofty logic and noble thought process! Your Christian fanaticism and slavishness exemplifies Euro-centrism more than the europeans themselves.

    Pl read this wonderful,short book “Jesus Christ: Artifice for Aggression” By Sita Ram Goel to understand the truth behind the “percentage”. Its avaialable online –

    https://hamsa.org/preface.htm

  10. Dear Joe,

    You have asked:

    TamilSelvan, Your statement is very childish and not matured. You have to understand something very basic I.e., You have to ask the people why they want to convert to christianity from hinduism.

    My father was asked to convert to get admission for my sister at Nirmala school at Madurai. They have said that an open conversion is not required now, but asked us to change names of all the family members with christian names in the ration card. In every way it is a forced conversion in which rights to a hindu for livelihood is threatened.

    We refused.

    As everything is oral and through an intermediary this kind of conversion cannot become affidavit in the court of law. This is how the conversion is done in most cases. The remaining few do not even know that they were converted, but threatened not to escape.

  11. Joe,
    It is absolutely ridiculous to play percentage maths here. Please read the early Christian conversions and the modus operandi. If it is so spiritual ( as concluded bu you) why then you are not answering the main accusation of using Hindu spiritual words, Themes. Please answer the main accusation and then we can disciss about Spiritual superiority of the religions

    Regards
    S baskar

  12. Thanks Tamil Selvan !
    Great work !

    Day before yesterday, I saw the news item on a Christian festival launch at Velankanni. You won’t believe…they are all wearing Saffron just like Sabarimala devotees and doing Kodi ettram ( Kodi maram idea is also from Hindu temples ). They copy from Hindus thereby confusing Hindus and attract Hindu ignorants to their faith !! Inculturation at its worst !

  13. dont blame christians or christianity because its a world wide accepted religion and the percentage of people worship jesus is so huge than any other.

    Just because whole world believes in it, it does’nt make it to be true.
    Once the whole world believed earth is flat. We know now its not.

  14. Jatayu is wrong. The mission of the church in the words of the church is ‘church planting’. Planting a bomb and planting a church have the same destructive effect. Planting is both correct and apt.

  15. I had good obenion on Christians, but not now after I heard the news that Christian missions went to TSUNAMI affected areas in TN and asked the peoples to convert as Christians by giving money and other humanitarian help(refused otherwise). In fact some Christian peoples act like blind and asked the people for prayers those days.

    (Edited and Published – TamilHindu Editorial.)

  16. Dear Joe
    Because of the bundle lies propagated by church and bible christianity has collapsed in Euroupe.Please upodate your knowledge.
    You will become dunce if you roam behing these chellappas.

  17. Dear Hindus,

    please don’t blame Christianity and Christians.We are not having such kind of unity like them.

    first we need to correct us.last AIADMK government impose rule to stop conversion,because of our their unity the government failed to pass that law.

    As a true Hindu we should respect all religion and is our main duty to protect our religion.
    for that we(Hindus) have to follow this ways

    1.We should start helping poor people and slum area peoples(Their TGT area)
    2.We also need to show our strength by our unity
    3.We should make Christians to give respect to our god by our kind activity
    4.We(Hindus) should also start schools and colleges and we need to give high priority to Hindus in studying and working
    5.we should conduct bagavath geetha class compulsory in all our schools and colleges
    6.At any cost we should not blame or hurt others religions belief and we should not be the reason for creating violence in th country
    if we have no difference from them then there in no point of discussing this topic any more

    this all will happen only by our unity and helping tendency.

    Hindus please think and wake up.patience and loving all is our strength.

    UNITY IS STRENGTH

    CHEERS
    R.S.Vignesh

  18. Tamil Selvan,

    To write about christian conversions, etc, you must first understand the divisions in Chritianity. Sathu Chellapa is not a catholic(so is Bush) and so you should not bring in Vatican here. The words சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், ‘பூஜ்ய ஸ்ரீ’ do not belong to Hindus alone. They are Tamil words which can be used by anybody.

    Do not generalize anything. You know when a SC/ST Hindu converts to Chrisitanity he would become BC, but that is not the case when he converts to Budhism, Sikhism, etc. It says Indian governmetn is against Christianity. Ortherwise I would say Indian government itself think Christians are well informed and progressed in society. If you dispute this ask the government to change the reservation law as per caste not religion.

    Like this Raja’s comment about Velankanni festivals shows his ignorance. Flag hoisting,etc are practiced even in Jewish festivals. Christianity originated from Palestine/Israel area where Jewish people live and so chrisitanity adopted that (not from Hinduism).

  19. Dear Bhavatharini,

    Your contention is all about English that takes a lot from Latin. So, no wonder Jataayu’s suggestion and your rejection sounds Greek and Latin to our eyes. 🙂

    Jataayu is asking to refrain from using the terminology used by the church. Because, their terminology gives a holy aura to their illicit and filthy tricks.

    “Tree planting” is a noble karma of Hindus, whereas “Church Planting” is not. People accustomed to “Tree Planting” would tend to consider “Church Planting” in a benign manner. That would be contrary to truth.

    Only Hindu scriptures like its Pagan sisters speak highly of worshiping and supporting nature. Christianity, like its abrahamic half-brothers completely against nature and village life. That is the biggest separating factor.

    By that usage, the phrase “Planting a Church” is completely different from “Church Planting”. Christians do not plant a tree, neither can they grow the natural goodness in human beings.

    When the verb “planting” comes before a noun, it actually indicates:

    1. that is done for the first time

    2. is completely new to the surrounding

    3. is against the surrounding

    4. the planted was seeded and sprouted somewhere else, but planted in a new place

    5. mostly used to do something negative and certainly not positive or good

    So, the correct usage of the church terminology, “Church Planting” actually means “Planting of Church” like “Planting a doubt” or “Planting a bomb”. You don’t “doubt plant” or “bomb plant”; but, christians “plant a doubt” or “plant a bomb” as they are doing in north-eastern India.

    So, the usage “Planting a church” actually means what they do: that is, planting a doubt in the minds of innocents that their gods are satans and devils; they plant the idea in the believers and non-believers’ mind that that they are nothing but sinners. (Whereas, hinduism say you are all “children of eternal holy life”.)

    So, I support what Jataayu recommends. Christianity “plants a church”, then “plants a doubt”, which will end up in “planting bombs” against non-christians by christians, against catholics by non-catholics, and against non-catholics by catholics.

    The history of West is only the history of christian violence.

    But, we Hindus, do “Tree planting” and give fruits, shadow, and fulfillment to humanity; christians “plant a church” and give violent lifestyle to humanity.

    To know more about the christian strategies on “planting of a church” visit the christian Web site: Church Planting

  20. matham maatruvathu thappu endru entha sattam solhirathu? satta pirivu enna? summa kathaikkatheenga jataayu.

  21. Thanks ganapathi, for that explanation. You said it perfectly.
    Bhavatharini, thats what I had intended to convey. Hope you understood now.

    சர்ச் வைத்தல் is equivalent to வெடிகுண்டு வைத்தல், சூனியம் வைத்தல், செய்வினை வைத்தல், அடியாள் வைத்தல் ..

    So it is வைத்தல் and NOT நடவு.

  22. i agree with Presley. without knowing the truth some Hindus making lot of stories. don’t say Christianity encourage conversion by force or money. it ll be total waste. our god needs people to be holy and holy.
    many Hindus are earning money from muslim countries i know there they say SALAM ALLAIKUM to the muslims here they show more aggressiveness As vignesh say u do things preaching our faith and helping the needy LOVE THE OTHERS AS U LOVE YOURSELF are our basic.
    U know lot of people changed their religion though they loose all their benefits of SC ST class how one Hindu will become BC if he convert christian its a funny thing. our govt also do against christianity without basic view of democracy so dont waste time for shouting u try to see god first .i hope u ll not publish this.

    (Edited and Published – TamilHindu Editorial.)

  23. // The words சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், ‘பூஜ்ய ஸ்ரீ’ do not belong to Hindus alone. They are Tamil words which can be used by anybody. //

    Is that so?

    Which non-Hindu and anti-Hindu entities use these words, other than christian missions? can you pl tell me?

    Do Maoists, Dravidianists, muRpokku ezuthaalars use such terminology? No, they only make fun of it. They create new words to describe their views – Such a rich language like Tamil does not have dearth of words, isnt it?

    But Christian fraudsters will mock & ridicule them on one hand, but silently *appropriate* them on the other hand.

    The Christian Tamil fanatics who were part of Dravidian movement were all out condemning Tamils who kept their original names given to them by their parents like Narayanaswamy, Vedachalam, Paramasivam, Subramaniam etc. They caused confusion and sense of guilt in the minds of immature Tamil lovers and promoted strange sounding artificical names like vazhuthi, maran, sezhiyan etc. – names which sound alien to the families themselves and to the rest of the Indians!

    But at the same time, Christian gangs were profilically usurping all *Hindu* terms like upavasam, aaraadhanai, vedagamam, japam, moksham, jeevan etc. etc. The Christian parents were instructed to keep “double names” for their children that would contain a Hindu AND Chrisitian name -like Santosh Stephan, Prabhar David etc.

    So the argument of such words being a part of the language does NOT hold. It is pure, unadulterated robbery of not just Hindu concepts but also Hindu words by Christian missions.

  24. jADAYU,

    Looks like your contension is all Tamil words are Hindu words. Santhosh and Prabakar are not Hindu words. When people converts to christianity they were asked to change names like Narayanaswamy, Vedachalam, Paramasivam, Subramaniam, because they represent Hindu gods.

    Again do not generalize anything by saying “The Christian parents were instructed to keep “double names” for their children that would contain a Hindu AND Chrisitian name -like Santosh Stephan, Prabhar David etc. ”
    Because this is a wrong statement.

    By condemning words like vazhuthi, maran, sezhiyan you are saying that for you words sounding sanskrit is more comfortable than Tamil words.

  25. // When people converts to christianity they were asked to change names like Narayanaswamy, Vedachalam, Paramasivam, Subramaniam, because they represent Hindu gods. //

    Well, this was not related to conversion at all. this was abt the Dravidian movement which was hand in glove with the Christian missionaries in TN.

    Tamils who had these *Hindu* names were exhorted to change them to “pure Tamil” names as if those names were disgraceful! But the Christians were never asked to give up their David, George, Joseph, John names (as if they were all in “pure tamil”).. plus the Christians also appropriated Hindu names unabashedly.

    // Santhosh and Prabakar are not Hindu words //

    oh ! so which words are they – Arabic? Hebrew? Swahili? Islamic? Christian? American?

    Santhosh = sam + toshaH. The word “sam” is Vedic, meaning “With” and “together”. it is also a Bijakshara, ie. a seed syllable in Tantra.
    toshaH means inner happiness, and has a quintessential *Hindu* philosophical connotation.

    Prabhakar = prabha + kar, the one who produces encircling light (Prabha = pra + bha). It is the name of God Surya. “bhA” means not just optical light, but also the light of lights, which is Atman/Brahman …

    “tameva *bhA*ntaM anu*bhA*ti sarvam, yasya *bhA*sA sarvam idam vi*bhA*ti” as the Katha Upanishad says.

  26. Hey Presly,
    Why don’t you approach a muslim and talk to him about Jesus and see what the hell will happen to you.Christian are cunning. They know who to approach. You Christain fanatics are only targetting Hindus.
    Thats why i have been advising the Hindus. Stop being quiet. Be more aggressive. Sage Vidyaranyar and Saint Ramadass were all saints. But they encouraged aggressiveness and use of muscle power whenever there is danger to sanatana dharma. Sage Vidyaranyar laid the foundations for Vijayanagar Empire. Saint Ramadass inspired Veera Shivaji to fight for Hindu Dharma.

    Kumudam Jothidam AMR already said we Hindus have to stop this conversion games. He stresses the important for Hindu Unity. I advised all my hindu friends to start talking about this to all of your Hindu friends and most importantly to your Children. I have printed many of this articles and start distributing it. Now our mission is to make all Hindus aware of the grave Danger we are facing in the form of Islam and Chrisitanity.

  27. Dear Friends,
    In India All are brothers and sisters.
    No domination.
    Now a days it seems as tamilselvan clrified christiens are dominating and they are thinking they are top than Hindus and Muslims.It should be corrected.All are same.India is not Israel.

  28. Excellant explanation Mr Jatayu.Expose the works of these hypocrats.
    Please do write on Upanishads

  29. திரு. ஜெயமோகன் அவர்களது இணையதளத்தில் வந்த ஒரு கடிதத்திலிருந்து கொடுக்கப்பட்ட சுட்டிகள்:1. Hinduism- a heresy of Thomas Christianity:

    https://www.youtube.com/watch?v=u669U_93l50&feature=related

    2. Origin of Christianity in Madras:

    https://www.youtube.com/watch?v=wf7uVm0vX1g&feature=related

    3. Silapathikaram- An Epic with Christian allegiance

    https://www.youtube.com/watch?v=HL7doDuTPUY&feature=related
    ரத்த அழுத்தம் உள்ள ஹிந்துக்கள் இதை ஒரு நகைச்சுவை என்று எடுத்துக்கொள்ளவும்; இல்லாவிட்டால் உங்கள் உடல்நிலைக்கு நல்லதல்ல!
    கிரி

  30. Presly,

    Prabhakar is not a Hindu name.. Mmmm.. Good argument. I think Jatayu has given enough evidence otherwise..

    Please read Max Muller – A Lifelong Masquerade.. In that book you can find a character Robert de Nobili ( not fictional real one) created 4th Veda ( Atharvana veda which according to hindus was not available) and named it as Esur Vedam to fool gullible Hindus in Madurai. In that he deliberately inserted verses to have pointers to christianity, even Voltaire was dubbed by this quack ; Voltaire wrote a letter to this hoax. Please do not underestimate you fore fathers capability to go to any extent for the conversion..

    May be I am wrong after all Vedam is also in a word in a Language so why should Hindus question when Christians created one of Hindu Vedas?

    Regards
    S Baskar

  31. // Raja’s comment about Velankanni festivals shows his ignorance. Flag hoisting,etc are practiced even in Jewish festivals. Christianity originated from Palestine/Israel area where Jewish people live and so chrisitanity adopted that (not from Hinduism). //

    Dear Mr.Presley,

    At least we both agree on one point that Christians do not have any individuality of their own. They copy from Jews or Hindus !

    Coming to your point, I do not have any problem if the flag post of Velankanni resembles the flag posts used in Jewish festivals. But this one was a blatant copy from Hindu temples…

    Now, tell me…

    1. Do the Christians in Israel wear Saffron ?
    2. Do they tonsure/shave their heads as you do in Velankanni ?
    3. Do the Christians in Israel have names like
    Victor Ramaswamy
    Paul Raj Subramanian
    Joseph Sathyanarayanan etc ?
    Why this blasphemy ? If you are a Christian , be a true one.. Why this double game ? opportunism at its worst..isn’t it ?

    4. Do the Christians in Israel pull chariots as we Hindus do in temples and you do in Velankanni ?
    5. Do the Christians in Israel perform Giri Valam as you copy from Hindu Tiruvannamalai ?

  32. //மதமாற்றச் சூழ்ச்சி விளம்பரத்தைக் கண்டும் காணாது போய்விடாமல் அதைக் காவல் துறையினரிடம் எடுத்துச் சென்று பானரை நீக்க வைத்த செயல்வீரர்கள் வாழ்க! அதனை மறக்காமல் வீடியோ எடுத்தவர்களுக்கும், கட்டுரையாக எழுதிப் பதிவு செய்திருக்கும் தமிழ்செல்வனுக்கும் பாராட்டுக்கள். இத்தகைய சக்திமான்களையே இன்றைய இந்து தர்மம் வேண்டி நிற்கிறது. அன்னை பராசக்தி மேன்மேலும் உங்கள் நெஞ்சில் உரத்தையும், தோள்களில் வலிமையையும் அருளட்டும்! //

    ஜடாயுவின் இந்த மொழிகளை மனப்பூர்வமாக வழி மொழிகிறேன்.

    ஓகை நடராஜன்.

  33. //TamilSelvan, Your statement is very childish and not matured. You have to understand something very basic I.e., You have to ask the people why they want to convert to christianity from hinduism. every human being have their own rights and they have to decide whether they wanted to be christian or hindu. First thing, why Sadhu(The man above) converted as christian? because he likes christianity, which is his own rights//

    Joe,

    a religion required to be propagated looks like the sales reps promoting their goods. Let it be that way. But how can you appreciate this effort of conversion? You want to call yourself as a bramin to perform your conversion duties? This is shame and pity.

    Understand that the article is about Christians using Bramin identity for conversion.

    ஒகை நடராஜன்

  34. Presly,

    // The words சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், ‘பூஜ்ய ஸ்ரீ’ do not belong to Hindus alone. They are Tamil words which can be used by anybody.//

    ஆஹா அது அப்படியா? அப்பொ ” “கிறுஸ்துவ பிராம்ம்ண சேவா சமிதி, முதலாம் ஆண்டு விழா”” அப்டீங்கறது எல்லோருக்கும் பொது வழக்கம். அப்டீங்களா? செய்தது அப்பட்டமான அநாகரிகம் இதற்கு தமிழை துணைக்கு அழைத்துக் கொள்கிறீர்களா?

    சென்னையில் ஒரு பிராமண சமிதி அமைப்பதுதான் கிருத்துவ மதத்தின் கொள்கையா?

    அடுத்தது என்ன பூனூல் கல்யாணமா? இனிமேல் கிருத்துவ திருமணங்களில் ஜானவாசம், காசி யாத்திரை(காசி இந்துக்களுக்கு மட்டுமே உரியதா எல்லோருக்கும் பொதுவானதுதானே!) அம்மி மிதிப்பது (சட்னி அரைக்கும் அம்மி இந்துக்களுக்க் மட்டும் உரியதா?) அருந்ததி பார்ப்பது இவை எல்லாம் அமர்க்களப் படப் போகிறதா!

    அப்பறம் மாதாக்கோவில் கோபுர சிலுவைகளுக்குப் பக்கத்தில் கலசங்களா?

    ஒகை நடராஜன்

  35. Admirable were the efforts by B.R Haran, Radha Rajan, TamilSelvan. Thank you.

  36. ” மாயக்காரராகிய வேத பாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவர்கள் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களில் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்”

    முட்டாள் தனமும் , முரட்டுத் தனமும், அயோக்கியத் தனமும் சரி விகிதத்தில் கலந்து மூளைச் சலவை செய்யப் பட்டவர்கள். ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் மேலும் எங்கெல்லாம் இவர்கள் மார்க்கம் பின்பற்றப் படுகிறதோ அங்கெல்லாம் விபச்சாரக் கலாச்சாரம் வாழ்க்கை முறையாகி விட்டது. சுதந்திரம் என்ற பேரில் வாரம் ஒரு துணையை மாற்றி வாழுகிறார்கள்- துணியை மாற்றுவது போல. அவர்களுடைய அதே திருப் பணியை இந்தியாவிலும் முழு வீச்சில் ஆரம்பித்து விட்டார்கள்.

    பன்னாட்டுக் கம்பனிகள் தங்கள் விற்ப்பனை இலக்கை அடைய எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பது போல இவர்களும் எது வேண்டுமானாலும் செய்வார்கள். காவி கட்டுவார்கள். ஹிந்துப் பெயர்களை வைத்துக் கொள்வார்கள். மிகப் சிறந்த கர்நாடக சங்கீத வித்வான்களை வைத்து பாட்டுக்களை வெளியிடுவார்கள்.

    இவர்களின் மார்க்கம் மேலை நாடுகளில் எப்படிப் பட்ட கலாச்சாரத்தை கொண்டு வந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டி நாம் பதில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

  37. //dont blame christians or christianity because its a world wide accepted religion//
    கேட்டுக்குப் போகும் வழி அகலமாக உள்ளது, அதன் வழியாக பிரவேசிப்பவர் அநேகர். நல்லதுக்குப் போகும் வழி குறுகலானது , அதனுள் செல்பவர் சிலரே.

  38. Dear Presely & Edwin, If Christian missions are having deep love and concern for the oppressed and down-trodden, why do they indulge in fraudulent and dubious methods to secure converts in their hospitals? Why they are trying to lure youngsters by offering benefits and reservation based on caste? Serving the poor and uplifting the oppressed from social evils does not require change of faith. But it is an established fact that Churches and Christian missions lure the weaker sections of the society assuring them lot of benefits. This is nothing but politics and business and not spirituality. Delinking service from religious conversion and change of faith is what we expect from any social and cultural organisation.

  39. It is wonderful that we are becoming aware of the cunning and ugly side of christianity to increase their numbers. Great efforts such as them being turned to the cops also is to be commended.

    I did have respect for christianity, until my uncle whose personal life was a disaster converted to this ugly religion. All he and his children to this day ever did was to mock and slander hinduism and in the name of christianity deride all other beliefs. My grandfather on my maternal side was a pastor of catholicism, he did the same thing, to the point that my grandmother ironically enough converted to hinduism!!!!!!!

    In the west, the stupid south asians are not treated equally in their churches. One of them who happens to be a fanatical idiot when attendin an american christian conference was actually told by their racist bishop that christianity was meant only for white people, that jesus is the son of the west bla bla, that only anglo saxons will enter heaven. These people should go back to their original religion which is hinduism and learn tolerance towards all religions which ONLY HINDUISM advocates.

    The average westerner does not go to church and is turning to buddism and other ways, because they are tired of the rigidity of their religious organisation. it is few who go to church, and they do the same thing – intolerance, and evangelism.

    We should unite like the moslems and be aggressive like the moslems when it comes to these slimy christian converters. They would not dare try and convert moslems will they?

  40. Hi Guys,
    These Christian Missionaries is not only targeting Hindus. Kindly check with ur friends who work in Arab countries, Christian Missionaries are there also. It is not about a religious conversion, it is about knowing and accepting the sacrifice of CHRIST. It is just to help you guys to see the real GOD who sacrificed himself on the Cross, so that you need not spend your eternity in Hell. By converting you guys these missionary people doesn’t get anything worldly as you think. It is just out of love they are trying to reach you as Jesus commanded. There are many well educated people, who leave their high earning Job and come as Missionary, just because they don’t want you guys to spend your eternity in Hell.
    Whether you agree or not, you are sinner.
    Whether you agree or not, only JESUS can save you from SIN and HELL.
    Whether you agree or not, these Missionaries Loves you, so they want you not to spend you eternity in HELL.
    Whether you agree or not, THIS IS THE TRUTH.
    If you Accept CHRIST, you are SAVED.
    If you are rejecting JESUS, Whether you agree or not, you will be in HELL FOR ETERNITY (there is no second chance).
    Choice is yours.

    With the Love of Christ,
    Ashok kumar Ganesan

  41. கிருஸ்தவர்களை நாம் வெறுக்கவில்லை. அவர்களும் நம் சகோதரர்கள் தான்.

    இயேசு கிறிஸ்துவின் அசலான கிருத்துவ மதத்தையும் நாம் வெறுக்கவில்லை. அதில் உள்ள நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம், பின் பற்றுவோம்.

    இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை.

    ஆனால் இந்தியாவில் உள்ள கிருஸ்தவர்கள், குறிப்பாக கிறிஸ்தவ மத போதகர்கள் நமக்கு கிருஸ்தவ மதம் என்று அறிமுகப் படுத்துவது எதை ?

    சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரின் (கிருஸ்தவர்) வீட்டிற்கு சென்று இருந்தேன். அவரைப் பார்க்க அவருடைய இன்னொரு நண்பரும் வந்தார்.

    என்னைப் பார்த்தவுடன் அவர் நேராக என்னிடம் வந்து ” பாலாஜி…..” என்றார்.

    நான் ” நல்லது, உங்கள் பெயர் பாலாஜியா?” என்றேன்.

    உடனே அவர் உரத்த குரலில் ” எனக்கு தெரியும்….. நீங்கள் வழி படுவது பாலாஜியைத் தானே. அவர் ஒரு கல், உயிர் இல்லாதவர். உண்மையில் ஜீவனுள்ள கடவுளை நான் உங்களுக்கு காட்டுகிறேன்” என்றார்.

    இத்தனைக்கும் பாலாஜி என்னுடைய இஷ்ட தெய்வமோ, சிறப்பு தெய்வமோ கூட இல்லை.

    சரி இன்றைக்கு நமக்கு நேரம் சரியில்லை. நடப்பது நடக்கட்டும் என்று இருந்தேன்.

    அவர் தொடர்ந்து பல செய்திகளை , பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

    நான் பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு இரண்டையும் படித்து இருந்ததால் எனக்கு அவர் கூறியதில் புதியதாக எதுவும் இல்லை. மேலும் அவர் கூறியதில் இந்து மதக் கடவுள்கள் பொய்யானவை, அல்லது வலிமை இல்லாதவை, இந்து மதம் pagan மதம் என்பது போன்றவற்றுக்கே அதிக நேரம் ஒதுக்கினார்.

    அவரது பிரசாசாரத்தை முடித்து வைக்க முனைந்து நான் பேச ஆரம்பித்தேன்.

    இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் சிறப்பானவை என்றும் , அவரை நான் கடவுளாக கருதுவதாகவும் கூறினேன்! அது அவருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை.

    அவருடன் சேர்ந்து சர்ச்சில் பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும், நான் செய்த பாவங்களுக்கு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது எனக்கு மன நிறைவைத் தரும் என்றும் கூறினேன். நான் கிருஸ்தவப் பள்ளியில் படித்து இருந்ததால், பிரேயரில் கலந்து கொள்வது எனக்கு ஒன்றும் புதிதும் அல்ல.

    ஆனால் அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். அவருக்கு வேண்டியது இரண்டுதான். ஒன்று நானும் அவரைப் போல, அவர் கூறும் தெய்வங்களைத் தவிர பிற தெய்வங்கள் எல்லாம் (குறிப்பாக இந்து கடவுள்கள்) ஜீவன் இல்லாத வலிமை இல்லாத கற்கள் என்று அறிவிக்க வேண்டும். இரண்டாவது நான் கிருஸ்தவனாக மதம் மாற வேண்டும்.

    “நான் ஏற்கனவே கிறிஸ்துவன் தான், இயேசு கூறிய கருத்துகளில் இருந்து நான் மாறி நடக்கவில்லை” என்றேன்.

    ஆனால் சான்றிதழில், கெஜட்டில் பெயர் மாற்றம், மத மாற்றம் செய்வதுதான் அவருக்கு தேவையாக இருந்தது.

    என்னுடைய கடவுள் மட்டும்தான் ஜீவனுள்ள கடவுள், பிறரின் கடவுள்கள் எல்லாம் ஜீவன் இல்லாத கடவுள்கள் என்று சத்தமாக சொல்லும் போதே, பிறரின் மனங்களில் வருத்தத்தையும், கோவத்தையும் உண்டாக்கி விட்டு- பிறகு விருப்பமுள்ளவர்கள் ஏற்று கொள்ளட்டும் இல்லாதவர்கள் விட்டு விடலாம்- என்று கூற, இது என்ன சீட்டு ஏலமா?

    நீங்கள் இப்படி சொல்லும்போது பங்காளிகளான இசுலாமியர் மட்டும் சும்மா இருப்பார்களா. எங்க கடவுள் தான் உண்மையான கடவுள், அது மட்டும் அல்ல, விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதி, சர்வ வல்லமை உடையவர் என்று அடித்து சொல்கிறார்கள்.

    உண்மையில் யாரும் எந்தக் கடவுளையும் பார்த்தது இல்லை. பிறர் கூறியதைக் கேட்டு அதற்க்கு சாட்சி கொடுக்கும் இவர்கள், தங்களில் யார் கடவுள் அதிக வல்லமை உடையவர் என்பதை தாங்கள் மோதிப் பார்த்து முடிவு செய்யலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர். உருவு வாளை, பார்க்கலாம் என்று செயல் பட ஆரம்பித்து, எங்கு எங்கெல்லாம் சண்டை போட முடியுமோ அங்கெங்கெல்லாம் சண்டை போட்டு கல்லறைகளின் பரப்பளவை அதிகமாக்குகின்றனர். இது காட்டுமிராண்டி தனமானது. நாகரிக சமுதாயத்துக்கு ஒவ்வாதது.

  42. For all those supporters of Christian missions in India !

    Read the below incidents which have happened in our own country after 2000 and even reported by BBC.

    https://news.bbc.co.uk/2/hi/south_asia/899422.stm

    Hindu preacher killed by Tripura rebels
    A tribal Hindu spiritual leader has been killed by separatist rebels in the northeastern Indian state of Tripura.
    The separatist group says it wants to convert all tribespeople in the state to Christianity …..

    https://news.bbc.co.uk/2/hi/south_asia/953200.stm

    Separatist group bans Hindu festivities
    The outlawed National Liberation Front of Tripura warned that any tribal members seen taking part in the festival would be killed.

    https://news.bbc.co.uk/2/hi/south_asia/1089578.stm

    Tripura tribal leader killed

    Police in the northeastern Indian state of Tripura say a leading Hindu religious leader, who was kidnapped by suspected separatist rebels on Monday, has been found dead.

  43. ஐயா அசோக் குமார் க‌ணேச‌ன் அவ‌ர்க‌ளே,

    சொர்க்க‌ம், ந‌ர‌க‌ம் என்று ப‌ய‌ம் காட்டுகிறீர்கள். இத‌ற்க்கெல்லாம் நாம் அஞ்சுவ‌தில்லை. நாம் யார் ப‌ண‌த்த‌யும் திருட‌வில்லை. பிற‌ன் ம‌னைவியை நோக்க‌வில்லை. யாருக்கும் எந்த‌ தொந்த‌ர‌வும் த‌ரவில்லை. பிற‌கு எந்த‌ செக்ச‌ன் அடிப்ப‌ட‌யில் நாம் ந‌ர‌க‌த்துக்குப் போக‌ வேண்டும்?

    மேலும் நீங்க‌ள் ஏன் ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் சென்று அங்கே இருக்கும் கிருஸ்துவ‌ர்க‌ளுக்கு இந்த‌ சொர்க்க‌ ந‌ர‌க‌ உப‌தேச‌ம் செய்யக் கூடாது?

    ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் மேலும் எங்கெல்லாம் உங்க‌ள் மார்க்கம் பெருவாரியாக பின்பற்றப் படுகிறதோ அங்கெல்லாம் விபச்சாரக் கலாச்சாரம் வாழ்க்கை முறையாகி விட்டது. சுதந்திரம் என்ற பேரில் வாரம் ஒரு துணையை மாற்றி வாழுகிறார்கள்- துணியை மாற்றுவது போல. கிரிஸ்து இவ‌ர்க‌ளை எல்லாம் சொர்க‌த்தில் சேர்ப்பாரா?

    நீங்க‌ள் ஏன் ஐரோப்பாவிலும், அமேரிக்காவிலும் சென்று அங்கே இருக்கும் கிருஸ்துவ‌ர்க‌ளுக்கு இந்த‌ சொர்க்க‌ ந‌ர‌க‌ உப‌தேச‌ம் செய்யக் கூடாது!

    2000 வருட‌ங்க‌ளாக‌ நீங்க‌ள் மார்க்க‌ப் பிரச்சார‌ம் செய்த‌ அழ‌கில்தான் அவ‌ர்க‌ள் இந்த மானாவாரி ம‌ன‌ம் போல‌ உற‌வு என்று, வில‌ங்குக‌ளே ப‌ர‌வாயில்லை என்று நினைக்கும் அள‌வுக்கு சீர் கெட்டு உள்ள‌ன‌ர்.

    இப்போது இங்கே ஒழுங்காக‌ குடும்ப‌ம் குட்டி என்று வாழ்க்கை ந‌ட‌த்தும் எங்க‌ள‌யும் கெடுக்க‌ பார்க்கிறீர்க‌ள்!

    “மாயக்காரராகிய வேத பாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவர்கள் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களில் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்”

    உங்க‌ள் வழியில் போனால் நாங்க‌ள் நிச்ச‌ய‌ம் ந‌ர‌க‌த்துக்குத்தான் போக‌ முடியும்!

    உங்க‌ள் வ‌ழி ந‌ர‌க‌த்துக்கான‌ வ‌ழி,

    என் வ‌ழி ந‌ன்மைக்கு ச‌ரியான‌ வ‌ழி!

  44. // It is not about a religious conversion, it is about knowing and accepting the sacrifice of CHRIST. It is just to help you guys to see the real GOD who sacrificed himself on the Cross, so that you need not spend your eternity in Hell. //

    Vow ! Why was that a sacrifice ? Since he was brutally killed ?
    Then what about the sacrifice of lakhs of innocent Japanese who were brutally killed by Atom Bomb thrown by the followers of the Christ ?
    Are they not real GODs ? perhaps because they did not give a sermon on the mount ?

    //By converting you guys these missionary people doesn’t get anything worldly as you think. It is just out of love they are trying to reach you as Jesus commanded. There are many well educated people, who leave their high earning Job and come as Missionary, just because they don’t want you guys to spend your eternity in Hell. //

    We also love the missionaries too much and want to save them from their own sin. And out of love, we want them to stop their sinful activities and turn to our Krishna ! Is that acceptable to you ?

    // Whether you agree or not, you are sinner. //

    What a love !!

    // Whether you agree or not, only JESUS can save you from SIN and HELL. //

    Why was he not able to save himself first ??
    Are there no Christians who suffer from disease or hunger ? Which Jesus is saving them from this hell in this very world ??

    // Whether you agree or not, these Missionaries Loves you, so they want you not to spend you eternity in HELL.
    Whether you agree or not, THIS IS THE TRUTH.
    If you Accept CHRIST, you are SAVED.
    If you are rejecting JESUS, Whether you agree or not, you will be in HELL FOR ETERNITY (there is no second chance).
    Choice is yours. //

    Non-sense !

  45. Thanks tamil hindus I feel sorry for trichikaran experience which is not instructed in bible Also Jesus is against for divorce and asked to live holy life with one wife oly western people forgor JESUS.what u have edited from my previous comment i Didnt make anywords to hurt others

  46. anbull ayya,
    Thangaling kobam niyamanadhudhan. yenakkum madha mattrathil nambikkai illai.Anal enakku ulla varutham onte ontu than hindu madhathai serntha adi dravida makkalukku vazhangapadukira salugai palavattrai kirusthuva madhathai serntha adi dravida makkalukku maruppadhu yen? konjam thelivu padutha mudiyuma?Iraivan ungalai aasir vadhipparaha.

  47. Dear Editor,

    To write about christian conversions, etc, you must first understand the divisions in Chritianity. Sathu Chellapa is not a catholic(so is Bush) and so you should not bring in Vatican here. The words சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், ‘பூஜ்ய ஸ்ரீ’ do not belong to Hindus alone. They are Tamil words which can be used by anybody.

    You know, how many part go away from christian. Like Sathu chellappa. Your words very tough words. chellappa is not christian. Christians peoples like, everybody live 100 years, will prayed for the all peoples. I have so money tension to chellappa. Few peoples worked us wrong and used christian names. So never all Christians.
    Vinod

  48. // hindu madhathai serntha adi dravida makkalukku vazhangapadukira salugai palavattrai kirusthuva madhathai serntha adi dravida makkalukku maruppadhu yen? konjam thelivu padutha mudiyuma?Iraivan ungalai aasir vadhipparaha. //

    Enakkum oru sandhegam.

    Aadhi dhiraavidargal eppadi eppodhu kiruththavargal aanaargal ? avargal hindhukkalaaga irundhaal missionaries en avargalukku udhava marukkiraargal ? madham maarinaal thaan karunaiyaa ? manidhanukku illaiyaa ?

  49. //It is not about a religious conversion, it is about knowing and accepting the sacrifice of CHRIST. It is just to help you guys to see the real GOD who sacrificed himself on the Cross, so that you need not spend your eternity in Hell.//

    Ok. But who has to decide which is real GOD? Rome? US? Who??

    Don tell that Jesus sacrificed for others sake. You people killed him for your sake. Why you people always want to put your sin on him? பாவம் ஓரிடம். பழி ஓரிடமா?

    //Whether you agree or not, you are sinner.//

    S(h)ame to you.

    //If you Accept CHRIST, you are SAVED.//

    Who is the saver? One who cannot save himself?

    //If you are rejecting JESUS, Whether you agree or not, you will be in HELL FOR ETERNITY (there is no second chance).//

    “I went to hell and saw your Jesus there!!!” Can you disprove this?

    Highly Idiotic…

    These missionaries are like Cancer cells. If you leave them as such, they will ruin the entire body. Better operate them, in their early stage.

    I had a Pentacostal Aggressive Christian gal, who always call me as “Anna”. She used to tell me that she had converted around 3 persons to Christianity. She tried to convert me too. At one stage, she is ready to marry this Anna(!), if I am converted to Christianity. This is the face of the so called Christians “LOVE THE OTHERS AS U LOVE YOURSELF” 🙂

    As Gandhiji said correctly, “All Christians are unlike Christ”.

  50. To Sri Michael Vincent Louis:

    Caste division is recognisewd in Hindu society (society only-not by religion) and that Dalits qualify for reservation and other concessions, as long as they remain as Hindus. Dalits are converted to Christianity on the ploy that there is no caste division among Christians. Though it is NOT true and caste consciousness is very much viisble in the Christian society, officially there is no caste system in Christianity. It is therefore, a Dalit converted as a Christian is disqualified to claim reservation benefits. Christan Society should declare openly that it is also having caste system and converted Dalits are not treated on par with others in the Christian society. The truth is, Dalits are NOT treated equally in Christaian society; yet they claim there is no caste consciousness in their society.

    To claim benefits eligible for S.C., all converted Christinas should return to their parent religion and become part of Hindu society. Some Christina fathers advise converted Dalits to declare as Hindus and claim the benefits; then continue to be Christians. This kind of cheasting is also in vogue.

    MALARMANNAN

  51. “பரிசீலனைக்குப் பிறகு” என்பதே பெலவீனமாகும்;
    மாற்றுக்கருத்தினையும் தயக்கமின்றி தளத்தில் பதிப்பதே நேர்மையாகும்..!

  52. அன்புள்ள ஸ்ரீ ரகு,
    மிக்க நன்றி. ஆனால் ஒரு வரி எழுத ஐந்து நிமிடங்கள் ஆகின்றனவே. விரல்கள் நோகின்றனவே! பேசாமல் எழுதுவதை நிறுத்திவிடலாமா?
    மலர்மன்னன

  53. திருச்சிக்காரன் அவர்களுக்கு,

    //இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை.//

    முன்பே ஒருமுறை இக்கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.

    உங்கள் கருத்தைச் சொல்லும்போது உங்கள் கருத்தாக மட்டும் சொல்லுங்கள்; எல்லா இந்துக்களின் கருத்தாகச் சொல்லாதீர்கள்.

    `நான்’, `எனக்கு’ என்று சொல்லிக்கொள்வது உங்கள் உரிமை.

    `நாம்’, `நமக்கு’ என்று பிரச்சினைகளுக்கு உரிய கருத்துகளை இந்துக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாகவோ இந்துக்களின் சார்பாகவோ சொல்ல உங்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை.

  54. //“பரிசீலனைக்குப் பிறகு” என்பதே பெலவீனமாகும்;
    மாற்றுக்கருத்தினையும் தயக்கமின்றி தளத்தில் பதிப்பதே நேர்மையாகும்..! – glady//

    Assessing the merits of the postings before accommodating is the prerogative of the moderators. It is NOT weakness. They have the responsibility of maintaining the site decent and civilised.
    MALARMANNAN

  55. அருமை நண்பர் நம்பி அவர்களுக்கு,

    உங்களுடைய ஆட்சேபத்தை நான் என் குறிப்புகளில் பதிவு செய்து கொள்கிறேன்.

    உங்களின் ஆட்சேபம் புரிந்து கொள்ளக் கூடியதே. மற்ற மதங்களை சார்ந்தவர்கள் இந்து மதக் கடவுள்களை குறி வைத்து அநாகரீகம் செய்யும் போது, நாம் அவ்வாறு செய்யாமல் நியாயமாக நடக்கிறோம்.

    ஆனால் பிற மதக் கடவுள்களை வணங்கும் அளவுக்கு நாம் நீர்த்துப் போய் விட்டோமா என்று பலர் எண்ணக் கூடும்.

    இந்து மத்தில் தொடர்ந்து பின்பற்றப் பட்டு வரும் நல்ல பழக்கங்களின் ஒன்று பிற மதக் கடவுள்களையும் மதிப்பதுவும், வணங்குவதுவும் , பிற மதங்களில் உள்ள சிறந்த கருத்துக்களை பாராட்டுவதும் ஆகும். இந்து மதத்திலேயே எல்லா கருத்துக்களும் உள்ளன. இன்னும் சொல்லப் போனால், மனித உயிர் ஆராய்ச்சி , கடவுள் பற்றிய ஆராய்ச்சி இந்தியாவிலே , இந்து மதத்திலே நடை பெற்றது போல எங்கும் நடை பெறவில்லை. தெளிவாகச் சொல்வதானால் அவர்களிடம் ஆராய்ச்சி என்பதே இல்லை. அக்கறையும் இல்லை. ஆனால் சில கருத்துக்கள் பிற மதத்திலே அழுத்தம் கொடுக்கப் பட்டு விவரிக்கப் பட்டு உள்ளத்தைக் குறிப்பிடுகிறோம்.

    எனவே பிற மதக் கடவுள்களை வணங்குவது என்பது அமைதியும் ஆக்கபூர்வமான சிந்தனையும் உடைய இந்துக்களின் பழக்கங்களில் ஒன்று என்பதை கூறுகிறோம்.

    சுவாமி விவேகானதர், தான் இயேசுவை கடவுள் என்ற ஸ்தானத்திலேயே வைத்து நோக்குவதாகக் கூறியுள்ளார்.

    புத்தரையும் நாம் கடவுள் அவதாரமாகவே கருதுகிறோம்.

    //`நாம்’, `நமக்கு’ என்று பிரச்சினைகளுக்கு உரிய கருத்துகளை இந்துக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாகவோ இந்துக்களின் சார்பாகவோ சொல்ல உங்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை//

    இதுவும் சரிதான். நான் ஒரு சாதாரணமான தனி மனிதன் தான். ஆனால் இந்து மதத்தை சேர்ந்தவன் என்ற முறையிலே எங்களுடைய கருத்தை எடுத்து வைக்கிறோம்.

    அந்த வகையிலே இந்து மதத்திற்கு யாருமே ஒட்டு மொத்த சொந்தம் கொண்டாடவோ, கட்டளைகளைப் போடவோ முடியாது என்ற கருத்தை மனமகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்கிறேன்!

    நம்பி அவர்களே நீங்கள் மனவருத்தம் அடையக் கூடாது, நீங்கள் மட்டும்தான் இந்தக் கருத்தை (பிற மதக் கடவுள்களை வணங்குவது ) வ‌ன்மையாக மறுத்து எழுதி இருக்கிறீர்கள்!

    முடிக்கும் முன் ஒரு விடயம்,

    எம்முடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ஜீவ‌னுள்ள கடவுள் என்று ஒரு பிரிவின‌ரும், என்னுடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை உடைய‌ உண்மையான‌ க‌ட‌வுள் என்று ஒரு பிரிவின‌ரும் ஆயுத‌ங்களை எடுத்து ச‌ண்டையிட்டு உல‌கையே இடுகாடு ஆக்கும் ப‌ணியை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

    இந்து ம‌ட்டுமே அவ‌ர்க‌ளுக்கு இடையிலே அமைதியை உருவாக்கும் க‌ருத்துக்க‌ளை உடைய‌வ‌ன்.

    நாமும் ஜோதியிலே க‌ல‌ந்தால் உல‌க‌ம் தாங்குமா?

    உங்க‌ளுடைய‌ எழுத்துக்க‌ளில் உள்ள ஆத‌ங்க‌த்தை , அக்கறையைப் புரிந்து கொள்கிறேன் என்று மீண்டும் ப‌திவிடுகிறேன்.

    தொட‌ர்ந்து எழுதுங்க‌ள், என்னைக் க‌ண்டிக்க‌ உங்க‌ளுக்கு உரிமை உண்டு, அது ந‌ல்ல‌தும் கூட‌.

  56. நம்பி,

    //`நாம்’, `நமக்கு’ என்று பிரச்சினைகளுக்கு உரிய கருத்துகளை இந்துக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாகவோ இந்துக்களின் சார்பாகவோ சொல்ல உங்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை.//

    இந்துக்களின் அடிப்படை நம்பிக்கையே எல்லா கடவுளும் ஒன்றுதான் என்பது. கடவுள்களும், மதங்களும் அந்த ஒற்றைக் கடவுளை அடையும் வெவ்வேறு பாதைகளே! அதனால் திருச்சிக்காரன் சொல்வது ஒன்றும் தவறு இல்லை.

    இந்துக்கள் யாரும் இயாசுவை வணங்கக்கூடாது என்று யாரும் கட்டளையிடவில்லை. வணங்கலாமென்று உத்தரவிடவும் இல்லை.

  57. “பரிசீலனைக்குப் பிறகு” என்பதே பெலவீனமாகும்;
    மாற்றுக்கருத்தினையும் தயக்கமின்றி தளத்தில் பதிப்பதே நேர்மையாகும்..!

    உல‌க‌ம் உருண்டை என்று கூறிய‌ அறிவிய‌ல் அறிங்க‌ர்கள உயிருட‌ன் நெருப்பிலே போட்டுக் கொன்றும், ப‌ல‌ ஆண்டுக‌ள் சிறையிலெ அடைத்தும் சித்திர‌வ‌தை செய்த‌ ரோம‌ ராஜ‌ போப‌ர்க‌ள் கால‌த்திலெ நீங்க‌ல் இருந்து அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல புத்தி சொல்லிக் கொடுக்க இய‌லாம‌ல் போய் விட்ட‌தே!

  58. திருச்சிக்காரன் அவர்களுக்கு,

    உங்களிடமிருந்து இந்து சமயம் குறித்தோ பிறவற்றைக் குறித்தோ விளக்கமேதும் எனக்குத் தேவையில்லை. தேவையே இல்லாமல் முழநீளம் எழுதிக்கொண்டு இருக்காதீர்கள்.

    நான் தெளிவாகவே சொன்னேன்; இப்போதும் சொல்கிறேன்.

    ////இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை.//

    `நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான்’ என்று சொல்கிறீர்கள். `நமக்கு’ என்னும்போது என்னையும் சேர்த்தே சொல்கிறீர்கள். ஏசுவை நான் கடவுளாகக் கொள்வதில்லை. எனக்காகப் பேச நீங்கள் யார்? நானும் ஏசுவைக் கடவுளாகக் கொள்கிறேன் என்று சொல்ல நீங்கள் யார்?

    `முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை’ என்று சொல்கிறீர்கள். இவ்வாறு சொல்லும்போது ஏசுவை வழிபட எனக்குத் தயக்கம் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். இப்படிச் சொல்லுவது என்னை இழிவுபடுத்துவது ஆகும்.

    மீண்டும் சொல்கிறேன். உங்கள் கருத்தைச் சொல்லும்போது உங்கள் கருத்தாகவே சொல்லுங்கள். எனக்காகப் பேசாதீர்கள்.

    தன் தனிப்பட்ட கருத்து எல்லாருக்கும் உடன்பாடாகவே இருக்கும் என்று ஒருவர் எண்ணுவதற்கு ஆணவமோ அறியாமையோ காரணமாக இருக்கலாம்.

    நீங்கள் அவ்வாறுதான் எண்ணுகிறீர்கள்; அவ்வாறு எண்ணுவதற்கு என்ன காரணம் என்று உங்களுக்குத்தான் தெரியும்.

  59. சீனு அவர்களுக்கு,

    திருச்சிக்காரன் அவர்களுக்கு நான் எழுதிய மறுமொழியிலேயே உங்களுக்கான மறுமொழியும் அடங்கியுள்ளது.

  60. அன்புடையீர்
    அனைவருக்கும் வணக்கம்.
    மனிதர்களை மதம் மாற்றி அலுத்துப்போய்விட்டது போலும், ஆகவே இப்போது நமது வேதங்களையும் மதம் மாற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்.
    நம்ம நாட்டுப்புற பாடல் ஒன்று

    ” ஊரான் ஊரான் தோட்டத்திலே
    ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்
    அதை காசுக்கு ரெண்டாய் விக்கசொல்லி
    கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன்”

    எப்படி பாட்டு, இப்படித்தான் சுயமாக சிந்திக்க வழியில்லாமல் விவிலியத்தில் இருந்த தத்துவங்களை தனதாக்கிக்கொண்டு சிறந்த அறிவுஜீவிகளாக காட்டிக்கொண்டார்கள்.

    மாறும் காலங்களுக்கேற்ப மாற்றி விற்கப்படும் சரக்கல்ல நமது வேதங்கள். ஆட்களுக்கு தக்கபடி திரித்து ஏற்றிக்கொள்வதற்கு. இது கண்டிக்கப்பட வேண்டிய செயல்களாகும்.

    நமது வேதங்கள் “பழைய ஏற்பாடு” “புதிய ஏற்பாடு” காலத்திற்கு தக்கபடியும் இடத்திற்கு தக்கபடியும் என்று வகைப்படுத்தப்பட்டவை அல்ல அவை அன்றும் நான்கு , இன்றும் நான்கு, என்றும் நான்கே.

    இந்துத்துவ வேதங்கள் என்பது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை தத்துவங்கள், வாழ்க்கை முறைகள்.

    அதை உணர்ச்சிப்பூர்வமாக வாழ்ந்து பார்க்காதவர்கள் அதை விற்ப்பனை செய்வதை தவிர வேறென்ன செய்வார்கள்.

    எத்தனை சித்தர்கள்,எத்தனை மகான்கள், கண்டது நமது சனாதன தர்மம்.

    இவர்கள் எல்லோரும் எத்தனை அற்புதங்களை செய்துள்ளார்கள் , ஆனாலும் நாம் அவர்களை தனிப்பட்ட முறையில் தேவ குமாரன் என அழைக்கவில்லை.

    ஏனெனில் சனாதன தர்மம் என்ன சொல்கிறது, “அஹம் பிரம்மாஸ்மி ”
    நாமே கடவுளின் உறைவிடம்.

    நமக்குள் இருக்கும் இறைவனை நாம் தேடாமல் வெளியில் தேடினால்?

  61. அ. நம்பி,

    //திருச்சிக்காரன் அவர்களுக்கு நான் எழுதிய மறுமொழியிலேயே உங்களுக்கான மறுமொழியும் அடங்கியுள்ளது.//

    நமக்கு என்று சொல்லும் பொழுது “100%” என்று எடுத்துக் கொள்கிறீர்கள். பரவாயில்லை. நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் “பொதுவாக” என்று. அதனால் அவர் சொன்னதில் பிழை இருப்பதாக நான் கொள்ளவில்லை. சரியா?

  62. திருச்சிக்காரர்களுக்கு சமர்ப்பணம்:

    ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று பெருங்குரலெடுத்துப் பாடியிருப்போம்;
    இணைவைத்த குற்றத்திற்காக நம் குரல்வளை அறுக்கப்படும் நாள்வரை!

  63. நண்பர் சீனு அவர்களுக்கு நன்றி!

  64. 8000 வருங்களுக்கு மேலாக நாகரீகமான சமுதாயம் இந்து சமுதாயம் என்பதும், இந்து மதம் வெறுப்பு கருத்துக்கள் இல்லாத மதம் என்பதும் பலர் கண்களை உறுத்துகிறது- குறிப்பாக பிற மதத்தவர் கண்களை உறுத்துகிறது!

    எனவே, “என்னடா இவங்க மட்டும் எல்லா மதமும் சம்மதம்”னு சொல்லுரானுகளே என்று, மண்டக் குடைச்சல் எடுத்து விடுகிறது சிலருக்கு.

    எனவே சாத்தான் மனதிலே புகுந்தது போல, ஆவேசம் ஏற்பட்டு விடுகிறது.

    இந்துக்கள் இடையில் பிரிவினை ஏற்ப்படுத்தவும், இந்துக்களையும் காட்டு மிராண்டிக் கலாச்சாரத்துக்கு மாற்றவும் மிக நுணுக்கமாகப் பலர் முயற்சி செய்கின்றனர்.

    சாது …. கீது என்று பெயர் வைத்துக் கொண்டு, இந்து துறவிகளைப் போல உடையையும் அணிந்து கொண்டு இந்துக்களை மயக்க முயற்ச்சிக்கும் சிலர் போல,

    இங்கே, இந்த தளத்திலேயே இந்துக்களை போல எழுதி, இந்துக்களையும் காட்டு மிராண்டிக் கலாச்சாரத்துக்கு மாற்ற முயற்சிகள் நடை பெறுகிறது !

    ஆடுகளைப் போல வேடமிடும் ஓநாய்களுக்கு நான் ஒன்று சொல்வேன். நாங்கள் பல யுகங்களாக இந்த தருமத்தை- எப்போதும் உள்ள தருமத்தை- அனுசரித்து வருகிறோம்.

    நேற்றுப் பெய்த மழையிலே இன்று முளைத்த காளான்களைப் போல மார்க்கம் துவங்கியதாகக் கூறி வெறுப்பு கருத்தைப் பரப்பும் கனவான்களே,

    உங்கள் சதிச் செயல்களை புரிந்து கொள்ள எங்களுக்குத் தெரியாதா?

    இதெல்லாம் எங்களுக்கு ஜுஜூபி …..

    நான் மேலே கூறிய கருத்துக்கள், இந்து மதத்தில் குழப்பத்தை உருவாக்கி, இந்து மதத்தைக் கெடுத்து அழிக்க நினைக்கும் அந்நிய மர்க்கத்தவருக்குத் தான். நான் மேலே கூறிய கருத்துக்களைப் படித்து எந்த ஒரு இந்துவும் கோவம் அடைய மாட்டான். அடைய வேண்டிய அவசியமும் இல்லை!

    இந்து என்பவன் நாணயமானவன், பாவம் செய்யத் தயங்குபவன், அடுத்தவருக்கு இன்னல் விளைவிக்கக் கூடாது என்கிற அஹிம்சை கொள்கையை உடையவன்.
    ஆனால் அவனை கையாலாகதவன் என்றோ, கோழை என்றோ, அவனை அதட்டி மிரட்டி மீன் பிடிக்கலாம் என்றோ தப்புக் கணக்கு போடாதே!

  65. பிரபாகரன் அவர்களே,

    இந்து என்றைக்கும் இந்துவாகவே இருக்க முடியும்!

    கோழையும் பொருக்கியுமான இராவணன் சீதை அவர்களைத் தூக்கிச் சென்றான்.

    அவன் அப்படி செய்தானே என்று அனுமன் ஒரு கையில் சீதையையும் மறு கையில் அந்த இராவணனின் மனைவி மண்டோதரியையும் பற்றிக் கொண்டு பறந்து கிஸ்கிந்தா வந்து சேர நினைத்து கூடப் பார்க்கவில்லையே! அனுமன் மட்டுமல்ல, இராமர் தரப்பில் வேறு யாரும் அப்படி நினைத்து கூடப் பார்க்க மாட்டார்கள்.

    நான் ஒன்றும் பிறர் கோல் போடும்போது, விட்டு விட்டு சும்மா இருங்கள் என்று கூறவில்லையே?

    நீங்கள் இன்னும் சற்று சிந்தியுங்கள். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் பட்டபோது , அடுத்த நாளே ஒரு மிகப் பெரிய மார்க்கப் பேராசிரியரை பேட்டி எடுத்தார்கள். அப்போது அவர் ” இவர்கள் செய்தது தவறு, ஏனெனில் மார்க்கத்தில் தற்க்கொலைக்கு அனுமதியில்லை” என்று கூறினார்.

    ஏன் எனில் அவர்களது தர்மப்படி தற்கொலை தான் தவறு! ஆனால் ‘விமானத்தைக் கொண்டு போய் பெரிய கட்டிடங்களை இடித்து பல பேரைக் கொல்வது தவறு’ என்று கூறக் கூட முடியவில்லை. அவர்கள் செய்தது அவர்கள் தருமப் படி சரிதானாம். அவர்கள் அவர்களுடைய தருமத்தை அனுஷ்டானம் செய்கிறார்கள். நம் தருமம் என்ன சொல்கிறது?

    நாம் எந்த தருமத்தை அனுஷ்டிக்கப் போகிறோம்?

    நான் ஒன்றும் பிறர் கோல் போடும்போது, விட்டு விட்டு சும்மா இருங்கள் என்று கூறவில்லையே?

    நீங்கள் இன்னும் சற்று சிந்தியுங்கள்.

    இந்து என்றைக்கும் இந்துவாகவே இருக்க முடியும்!

  66. // ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று பெருங்குரலெடுத்துப் பாடியிருப்போம்;
    இணைவைத்த குற்றத்திற்காக நம் குரல்வளை அறுக்கப்படும் நாள்வரை!
    -Sri Prabhakar //
    It really happened in Bangalore once, as Sri Prabahkar warns!
    You know Sri Puttaparthi Sai Baba displays symbols of all faiths along with Aum. One printing press in Bangalore got order of printing a literature from one of the institutions of Sri Puttaparthi SaiBaba. The cover displayed all symbols including that of Mohmedans. When the cover was being printed, some Mohmedans happened to see it and immediately ransacked the press in protest against using their religious symbol along with the symbols of other faiths! Complaint with the police, as usual, did not yield any result!
    MALARMANNAN

  67. When Moplas of Malabar killed Hindus and outraged the modesty of Hindu women during Khilafat agitation, similar attacks on Hindus were also carried out elsewhere by Mohmedans. When people complained Gandhi about this, he said violence was approved in their religion! I am sad such crooked minds still exist in Hindu society. Keralam, the Chera Nadu is now a battle field of Christians and Mohmedans, as to who would take over the lead. The land of Gurvaayoorappan and Vaikattappan is fast cahnging into the combine of Christian and Mohmedan. Present day Mohmedan terrorists are from Kerala! The skyline of Tanjavur is fast changing into the domes of mosques instead of Gopuram towers! And some of us sermonise about Hindu ethos. Pure hypocracy! Mask of magnanimity to hide cowardice! While the alien forces are competing with each other as to whether it is going to be Muslim India or Christian India in a matter of just one decade (Some Mohmedan organistaions have already started referring Hindustan as the future Islamic Republic of India in thier in camera meetings)some of us behave like buffalloes in the downpour! Those who have ears, let them hear.
    MALARMANNAN

  68. What sort of mindset it is, comparing very casually the grave situation with a football match! I am afraid, unless every home of Hindu experiences the mishap, Hindus will not come to their senses!
    MALARMANNAN

  69. // சுவாமி விவேகானதர், தான் இயேசுவை கடவுள் என்ற ஸ்தானத்திலேயே வைத்து நோக்குவதாகக் கூறியுள்ளார். //

    திருச்சிக் காரன், சந்தடி சாக்கில் இப்படி ஒரு கருத்தை நுழைத்து விடுகிறீர்கள்.

    ஏசுவை அவதார புருஷர்களில் *ஒருவராக* கருத இடமிருப்பதாக சுவாமிஜி சொன்னார். Christ the Messanger என்னும் அவரது புகழ்பெற்ற உரையில் இதைச் சொல்லியிருக்கிறார். இதற்கு “கடவுள் என்ற ஸ்தானம்” என்று அர்த்தமாகாது.

    சுவாமிஜி ”இயேசுவை கடவுள் என்ற ஸ்தானத்திலேயே வைத்து நோக்குவதாக” கூறியதற்கு ஆதாரம் தர முடியுமா??

    ஏசு என்ற ஒரு மனிதரையோ, அல்லது கிறிஸ்து என்கிற ஒரு புராண-ஐதிக-சமய உருவகத்தையோ, அதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாத போதும் கூட தெய்வத் தன்மை பெற்ற *பல மகான்களில் ஒருவராக* (ஒரே ஒருவராக அல்ல) கருதுவதில் சமய நம்பிக்கை கொண்ட சில இந்துக்களுக்கு *ஆட்சேபம் இல்லை* தான்! ஆனால் அவர்கள் அப்படிக் கருதித் தான் ஆகவேண்டும் என்பதும் இல்லை – அ.நம்பி மிகச் சரியாக இதைச் சரியாகச் சொல்லியுள்ளார். எனவே நீங்கள் எழுதும் “நமக்கு” என்பது உவப்பானதல்ல என்பது மட்டுமல்ல, தவறானதும் கூட. “எனக்கு” என்று நீங்கள் எழுதினால் பாதகமில்லை.

    அதோடு, ஏசு என்ற இந்தக் கருத்தாக்கதினால் நடைமுறையில் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை அலசவும், விமர்சிக்கவும் இந்துக்களூக்கு எந்த மனத் தடையும் இல்லை, இருக்கவும் கூடாது.

  70. //இங்கே, இந்த தளத்திலேயே இந்துக்களை போல எழுதி, இந்துக்களையும் காட்டு மிராண்டிக் கலாச்சாரத்துக்கு மாற்ற முயற்சிகள் நடை பெறுகிறது !

    ஆடுகளைப் போல வேடமிடும் ஓநாய்களுக்கு நான் ஒன்று சொல்வேன். நாங்கள் பல யுகங்களாக இந்த தருமத்தை- எப்போதும் உள்ள தருமத்தை- அனுசரித்து வருகிறோம்.

    நேற்றுப் பெய்த மழையிலே இன்று முளைத்த காளான்களைப் போல மார்க்கம் துவங்கியதாகக் கூறி வெறுப்பு கருத்தைப் பரப்பும் கனவான்களே,

    உங்கள் சதிச் செயல்களை புரிந்து கொள்ள எங்களுக்குத் தெரியாதா?

    இதெல்லாம் எங்களுக்கு ஜுஜூபி …

    நான் மேலே கூறிய கருத்துக்கள், இந்து மதத்தில் குழப்பத்தை உருவாக்கி, இந்து மதத்தைக் கெடுத்து அழிக்க நினைக்கும் அந்நிய மர்க்கத்தவருக்குத் தான். நான் மேலே கூறிய கருத்துக்களைப் படித்து எந்த ஒரு இந்துவும் கோவம் அடைய மாட்டான். அடைய வேண்டிய அவசியமும் இல்லை!//

    நாம் இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய இன்னொரு கூட்டமும் உண்டு. பகுத்தறிவு என்ற சொல்லை பயன்படுத்தி, ஜால்ரா போட்டு பல்லிளித்து, சொத்து சேர்க்கும் சந்தர்ப்ப வாதிகளின் கூட்டம் தான் அது.

    73 வயதில் 26 வயது பெண்ணைத் திருமணம் செய்த பகுத்தறிவு பகலவனிடம் தங்கள் மூளையை அடகு வைத்தவர்கள், இன்றைக்கு இந்து மதத்தை இழிவு செய்ய என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் காத்து உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே!

    இந்து மதம் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட நியாயமான மதம் என்பதை மறைக்க, இந்து மதத்தின் மீது தாரைப் பூச, படாத பாடு படுகிறார்கள் இந்தப் போலி பகுத்தறிவு வாதிகள்!

    இந்து மதம் பிற மதங்களை வெறுக்காத மதம் என்று கூறினால், அப்போதுதான் இவர்களுக்கு அதிக ஆத்திரம் வரும்.

    பச்சைப் பொய்களை- இந்து மதத்தவர் பிற மதங்களை சேர்ந்தவர்களை துன்பப் படுத்துபவர்கள், கொலை செய்பவர்கள் – என்பது போன்ற பச்சைப் பொய்களை திட்டமிட்டுப் பரப்புபவர்கள் இந்தப் பொய்யர்கள். வரலாற்றிலே இல்லாத விசயங்களை இவர்கள் இருப்பது போலப் பேசுவார்கள்.

    இந்து மதத்தில், புத்தர் ஆசையை ஒழித்து விடுதலை அடையும் வழியைப் பரப்பிய போதும் சரி, ஆதி சங்கரர் விடுதலைக்கு கடவுள் பக்தி சிறந்த வழி என்ற வழியைப் பரப்பிய போதும் சரி, கத்தியின்றி , இரத்தமின்றி, வன்முறையின்றி கருத்துப் பரிமாற்றம் நடந்தது அல்லவா? இதை சீரணிக்க முடியவில்லை, இந்தப் போலி பகுத்தறிவுவாதிகளால்.

    எனவே இந்து மத்தைதைப் பற்றி நாம் சரியாக எழுதும் போது இவர்களுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வரும்! துள்ளிக் குதிப்பார்கள்!

    இந்துக்கள் சகிப்புத்தன்மையும், பிற மதங்களின் நல்ல கருத்துக்களை புரிந்து கொள்ளும் இயல்பும் , பிற மதத்தினர் கடவுளாக வணங்குபவர தாங்களும் கடவுளாக வணங்கும் தன்மையும் உடையவர்கள், என்று எழுதி விட்டால் பாதாதி கேசம் வாதம் வந்தது போல பரிதவித்துப் போய் விடுவார்கள்.

    நீ அப்படி எழுதாதே , இப்படி எழுதாதே என்று துள்ளிக் குதிப்பார்கள்!

    நாம் எழுதுவோம், பக்கம் பக்கமாக எழுதுவோம்.

    இந்து மதத்தையும், இந்தியாவையும், இந்திய மக்களையும் கெடுக்க நினைக்கும் கூட்டத்தின் பகல் கனவு சுக்கு நூறாகும் வகையிலே எழுதுவோம்.

    இந்து மத்திலே யார் வேண்டுமானாலும் தங்கள் சிந்தனைகளை முன் வைக்கலாம். அது சரியா, உண்மையான இந்து மதக் கருத்தா, என்பதைப் படிப்பவர்கள் புரிந்து கொண்டு அந்த‌க் கருத்துக்களை எடுப்ப‌தா, விடுவ‌தா என்ப‌தை முடிவு செய்வார்க‌ள்!

    வேறு யாருக்கும் விருப்ப‌ம் இருந்தாலும் அவ‌ர்க‌ளின் க‌ருத்துக்களையும் “ந‌மக்கு” என்று போட்டு எழுதிக் கொள்ளாலாம். ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌ க‌ருத்து ந‌ம‌க்கு என்ற‌ வ‌கையில் பொதுவாக‌ வைக்க‌ப் ப‌ட‌த் த‌குதியான‌ க‌ருத்தா அல்ல‌து பொய்யான‌ க‌ருத்தா என்று முடிவு செய்து கொள்வார்க‌ள்!

    இந்து ம‌த‌ம் சுத‌ந்திர‌மும், அன்பும், அமைதியும் உடைய‌து.

    ந‌ண்ப‌ர் சீனு கூறிய‌து போல‌ ந‌ம‌க்கு என்று கூறூவது பொதுவாக‌, அதாவ‌து பெரும்பாலான‌வ‌ர்க்கு பொருந்தும் வ‌கையிலே உள்ள‌து ஆகும். அது 100% ஒவ்வொருவ‌ருக்கும் பொருந்தும் என்று நாம் கூறவில்லை. ப‌குத்த‌றிவு என்ற‌ பெய‌ரிலே இந்து ம‌தத்தை கெடுக்க‌ ப‌க‌ல் க‌ன‌வு க‌ண்டு கொண்டு, அதே நேர‌த்திலே நானும் இந்துதான் அத‌னால் கூறுகிரேன் என்று மாய்மால‌ம் செய்து பிழைப்ப‌வ‌ர்க‌ளுக்கு நிச்ச‌ய‌ம் பொருந்தாது!

    நண்பர்களே நமக்கு அதிக பொறுப்பு உள்ளது. ஆனால் நாம் மிகவும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க வேண்டும்!

    இந்துக்க‌ளின் வ‌ழி, அஹிம்சை வ‌ழி, அன்பு வ‌ழி, அறிவு வ‌ழிதான்!

    முர‌ட்டுத்த‌ன‌மும், மூட‌த்த‌ன‌மும் உடைய‌வ‌ர்க‌ளிட‌ம், முள்ளில் விழுந்த‌ சேலை போல‌ ந‌ம‌து ச‌முதாய‌ம் சிக்கியுள்ள‌து. முர‌ட்டுத்த‌ன‌ம், மூட‌த்த‌ன‌ம் இதோடு அயோக்கிய‌த்த‌ன‌மும் சேர்ந்து கொண்ட‌ கும்ப‌லும் உள்ளது. சேலைக்கு சேதார‌ம் வ‌ராம‌ல் எடுப்ப‌தோடு, முள்ளை ம‌லராக்க‌ வேண்டிய‌ ப‌ணியும் ந‌ம்மிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்டு உள்ளது.

    செய‌ல் ச‌க்க‌ர‌த்தை உருட்ட‌ ந‌ம‌து தோள்க‌ளைக் கொடுத்து உத‌வுவோம்.

  71. நண்பர் ஜடாயு அவர்கள் என்னை மறுக்கவாவது ஒரு பின்னூட்டத்தை இடுவது எனக்கு மகிழ்ச்சியை தருவதாகும். கடந்த முறை நம்மிடம் மிக்க மனவருத்தம் அடைந்து சென்றவர், இப்போது மறுக்கவாவது ஒரு பின்னூட்டத்தை இடுவது எனக்கு மகிழ்ச்சியை தருவதாகும்!

    சுவாமிஜி அவர்களின் கருத்துக்களை 20 ஆண்டுகளாக படித்து வருகிறேன்.

    அவரின் கருத்துக்கள் கிட்டத் தட்ட மனப் பாடம் செய்யப் பட்ட நிலையிலேயே இதயத்தில் உள்ளன. சுவாமிஜி ”இயேசுவை கடவுள் என்ற ஸ்தானத்திலேயே வைத்து நோக்குவதாக” நான் படித்தது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது!

    நான் படித்த புத்தகங்கள் பெரும்னபாலானவை இப்போது என்னிடம் இல்லை. ஆனாலும் இந்த வாக்கியத்தை சுவாமி எப்போது கூறினார் என்பதை குறிப்பு எடுத்து தருவேன். சிறிது காலம் தேவைப்படும்.

    அந்த வகையிலே ஜடாயு போல நீங்களே விரைந்து உதவிக்கு வந்ததற்க்கு நன்றி.

    //ஏசுவை அவதார புருஷர்களில் *ஒருவராக* கருத இடமிருப்பதாக சுவாமிஜி சொன்னார். Christ the Messanger என்னும் அவரது புகழ்பெற்ற உரையில் இதைச் சொல்லியிருக்கிறார்//

    பிற கடவுள்களை மதிக்கும், வணங்கும் பழக்கம் இந்துக்களுக்கு உண்டு என்பதை உல்லங்கை நெல்லிக்கனி போல உணர்த்திய நண்பருக்கு நன்றி!

    “கிருஸ்தவர்கள் இயெசு கிருஸ்துவை கடவுளின் தூதராகக் கருதுகிறார்கள். நாங்கள் அவரைக் கடவுளின் அவதாரம் என்றே கருதுகிறொம்” என்று சுவாமி கூறியதாக தமிழ் மொழியாக்கத்தில் படித்தது படித்தது நினைவில் இருக்கிறது.

    //ஏசுவை அவதார புருஷர்களில் *ஒருவராக* கருத இடமிருப்பதாக சுவாமிஜி சொன்னார். இதற்கு “கடவுள் என்ற ஸ்தானம்” என்று அர்த்தமாகாது//

    அவதார புருஷர் என்றால் நமக்கு என்ன முறை ஜடாயு அவர்களே?
    அவதார புருஷர் என்றால் நமக்கு “கடவுள் என்ற ஸ்தானம்” இல்லையா?
    நரசிம்மர், இராமர், கிரிஷ்ணர் அவதார புருஷர்கள் இல்லையா?
    நரசிம்மர், இராமர், கிரிஷ்ணர் நமக்கு “கடவுள் என்ற ஸ்தானம்” இல்லையா?

    //ஏசு என்ற ஒரு மனிதரையோ, அல்லது கிறிஸ்து என்கிற ஒரு புராண-ஐதிக-சமய உருவகத்தையோ, அதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாத போதும் கூட தெய்வத் தன்மை பெற்ற *பல மகான்களில் ஒருவராக* (ஒரே ஒருவராக அல்ல) கருதுவதில் சமய நம்பிக்கை கொண்ட சில இந்துக்களுக்கு *ஆட்சேபம் இல்லை* தான்! //

    சுவாமிஜியின் கருத்து சில இந்துக்களின் கருத்தா?

    அப்போது நீங்களும், பெரியவர் மலர் மன்னன் ஐயாவும் கூறும் கருத்துக்கள் தான் பெரும்பாலான இந்துக்களின் கருத்தா?

    ஜாடாயு அவர்களே, நீங்கள் முன்பு குறிப்பிட்டது போல “சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” என்று நான் என் பெருமைக்காக எழுதுவதாகத் தயவு செய்து எண்ணாதீர்கள். நான் எழுதுவ‌து என்னுடைய‌ உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர், உட‌ன் ப‌ணியாற்றுப‌வ‌ர் யாருக்கும் தெரியாது. என்னை மிகவும் சாதரணமானவன், தாழ்ந்தவன் என்றே நினைக்கிறென். என்னை உங்களின் வேலைக் காரன் என்றே கருதிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து இந்து மதத்தைக் காக்கும் அவசரத்தில், இந்து மதத்தையே பலியிட்டு விடாதீர்கள்.

    அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது இதுதான். அவர்களைப் போலவே, ஆபிரகாமிய மன நிலையாளர் போலவே நம்மையும் மாற்றி விட்டு, வெறுப்பு கருத்துக்களை நம் உள்ளத்தில் திணிப்பதுதான் அவர்களின் முக்கிய பணி!

    “அத்வேஷ்டா (வெறுப்பு இல்லாத‌வ‌னாக‌, சர்வ பூதானாம் மைத்ர(எல்லா உயிர்க‌ளிட‌மும் ந‌ட்புட‌ன்); கருண ஏவ ச (க‌ருணையே உடைய‌வ‌னாய் )” – இந்தக் கருத்துக்களை நம் மனதில் இருந்து எடுத்து விட்டு,

    “நீ அந்த இனத்தை அழிக்கப் போ, நான் உனக்கு வெற்றியைப் பெற்றுத் தருவேன்”- என்று கூறிய கருத்துக்களை நம் மனதில் புகுத்துவதுதான் அவர்களின் வெற்றி!

    “அத்வேஷ்டா, சர்வ பூதானாம் மைத்ர; கருண ஏவ ச” – இதைக் கூறிய‌வ‌ர் கிரிஷ்ணர் என்ப‌து என்னை விட‌ உங்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும்! நீங்க‌ள் கிரிஷ்ணர் பக்கமா? ஆபிரகாமிய மன நிலையாளர் பக்கமா?

    //மிகச் சரியாக இதைச் சரியாகச் சொல்லியுள்ளார். எனவே நீங்கள் எழுதும் “நமக்கு” என்பது உவப்பானதல்ல என்பது மட்டுமல்ல, தவறானதும் கூட. “எனக்கு” என்று நீங்கள் எழுதினால் பாதகமில்லை//

    அவ‌ச‌ரப் ப‌ட்டு வ‌லையில் விழுகிறீர்க‌ள்!

    இந்து மதம் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட நியாயமான மதம் என்பதை மறைக்க, இந்து மதத்தின் மீது தாரைப் பூச, படாத பாடு படுகிறார்கள் இந்தப் போலி பகுத்தறிவு வாதிகள்!

    இந்து மதம் பிற மதங்களை வெறுக்காத மதம் என்று கூறினால், அப்போதுதான் இவர்களுக்கு அதிக ஆத்திரம் வரும்.

    பச்சைப் பொய்களை- இந்து மதத்தவர் பிற மதங்களை சேர்ந்தவர்களை துன்பப் படுத்துபவர்கள், கொலை செய்பவர்கள் – என்பது போன்ற பச்சைப் பொய்களை திட்டமிட்டுப் பரப்புபவர்கள் இந்தப் பொய்யர்கள். வரலாற்றிலே இல்லாத விசயங்களை இவர்கள் இருப்பது போலப் பேசுவார்கள்.

    இந்து மதத்தில், புத்தர் ஆசையை ஒழித்து விடுதலை அடையும் வழியைப் பரப்பிய போதும் சரி, ஆதி சங்கரர் விடுதலைக்கு கடவுள் பக்தி சிறந்த வழி என்ற வழியைப் பரப்பிய போதும் சரி, கத்தியின்றி , இரத்தமின்றி, வன்முறையின்றி கருத்துப் பரிமாற்றம் நடந்தது அல்லவா? இதை சீரணிக்க முடியவில்லை, இந்தப் போலி பகுத்தறிவுவாதிகளால்.

    எனவே இந்து மத்தைதைப் பற்றி நாம் சரியாக எழுதும் போது இவர்களுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வரும்! துள்ளிக் குதிப்பார்கள்!

    இந்து ம‌த‌ம் பிற‌ ம‌த‌ங்க‌ளை போல‌வே கொடுமையான‌தும், காட்டு மிராண்டித் த‌ன‌மான‌தும் ஆகும் என்று பொய்யை உண்மை போல‌ எழுத‌ விரும்புப‌வ‌ர்கள் வ‌லையில் அவ‌ச‌ரப் ப‌ட்டு விழுகிறீர்க‌ள்!

    //எனவே நீங்கள் எழுதும் “நமக்கு” என்பது உவப்பானதல்ல என்பது மட்டுமல்ல, தவறானதும் கூட//

    இந்து மத்திலே யார் வேண்டுமானாலும் தங்கள் சிந்தனைகளை முன் வைக்கலாம். அது சரியா, உண்மையான இந்து மதக் கருத்தா, என்பதைப் படிப்பவர்கள் புரிந்து கொண்டு அந்த‌க் கருத்துக்களை எடுப்ப‌தா அல்ல‌து விடுவ‌தா என்ப‌தை முடிவு செய்வார்க‌ள்!

    வேறு யாருக்கும் விருப்ப‌ம் இருந்தால், அவ‌ர்க‌ளின் க‌ருத்துக்களையும் “ந‌மக்கு” என்று போட்டு எழுதிக் கொள்ளலாம். ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌ க‌ருத்து, ந‌ம‌க்கு என்ற‌ வ‌கையில் பொதுவாக‌ வைக்க‌ப் ப‌ட‌த் த‌குதியான‌ க‌ருத்தா அல்ல‌து பொய்யான‌ க‌ருத்தா என்று முடிவு செய்து கொள்வார்க‌ள்!

    இந்து ம‌த‌ம் சுத‌ந்திர‌மும், அன்பும், அமைதியும் உடைய‌து.

    ந‌ண்ப‌ர் சீனு கூறிய‌து போல‌ ந‌ம‌க்கு என்று கூறூவது பொதுவாக‌, அதாவ‌து பெரும்பாலான‌வ‌ர்க்கு பொருந்தும் வ‌கையிலே உள்ள‌து ஆகும். அது 100% ஒவ்வொருவ‌ருக்கும் பொருந்தும் என்று நாம் கூறவில்லை.

    //அதோடு, ஏசு என்ற இந்தக் கருத்தாக்கதினால் நடைமுறையில் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை அலசவும், விமர்சிக்கவும் இந்துக்களூக்கு எந்த மனத் தடையும் இல்லை, இருக்கவும் கூடாது//

    நீங்க‌ளும் நான் இந்த‌க் க‌ட்டுரையில் இது வ‌ரையில் ப‌திவிட்டுள்ள‌ பின்னூட்ட‌ங்க‌ளை ப‌டித்துப் பார்க்க‌வும். எப்ப‌டி அல‌சியும் விம‌ரிசித்தும் உள்ளேன் என்ப‌து தெரிய‌வ‌ரும்.

    இயெசுவை ம‌திக்கிறோம், வ‌ண்ங்குகிறோம் என்றால், அவ‌ர் கூறிய‌ எல்லாவ‌ற்றையும் கண்ணை மூடிக் கொண்டு ஒப்புக் கொள்கீறோம் என்று அர்த்த‌ம் இல்லை. க‌ட‌வுளையும் கேள்வி கேட்ப‌தும் , முர‌ண்பாடூவதும் ந‌ம‌து உரிமை, ந‌ம‌து ப‌ழ‌க்க‌ம்.

    நீங்க‌ள் இந்து ம‌தத்தை எந்த‌ அள‌வுக்கு நேசிக்கிறீர்க‌ள் என்று என‌க்குத் தெரியும். ஆனால் என்னை ச‌ரியாக‌ப் புரிந்து கொள்ள‌வில்லை. இந்து மத‌த்தை வைத்து ஒரு பைசா கூட‌ ச‌ம்பாரிக்க‌க் கூடாது, என் சொந்த‌ வாழ்க்கை லாப‌த்திற்க்காக‌ அதை உப‌யொகிக்க‌க் கூடாது என்று செய‌ல் ப‌ட்டு வ‌ருப‌வ‌ன். நான் எழுதுவ‌து என்னுடைய‌ உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர், உட‌ன் ப‌ணியாற்றுப‌வ‌ர் யாருக்கும் தெரியாது.

    மிக‌வும் அதிக‌ நேர‌மெடுத்து எழுதியிருக்கிரேன். வ‌ழ‌க்க‌ம் போல‌வே நீள‌மாக‌ உள்ளது. க‌ருத்தில் ஆழமில்லை என்று நீங்க‌ள் என்னைக் க‌ண்டிக்க‌லாம். உங்க‌ளுக்கு என் க‌ருத்து ஒப்புமை இல்லை என்றால் என்னைக் க‌ண்டியுங்க‌ள். கட்டம் கட்டுங்க‌ள். ஆனால் அவ‌ச‌ர‌ப் ப‌ட்டு இந்து ம‌தத்தை நீங்க‌ள் அறியாம‌லேயே ப‌லியிட்டு விடாதீர்க‌ள்.

    இந்து மதத்தையும், இந்தியாவையும், இந்திய மக்களையும் கெடுக்க நினைக்கும் கூட்டத்தின் பகல் கனவு சுக்கு நூறாகும் வகையிலே எழுதுவோம்.

  72. பிறப்பிறப்பில் உட்பட்ட யாரையும், எத்துணைப் பெரிய ஆற்றலும் தவமும் உடையவராக இருப்பினும் அவரைக் கடவுள் எனப்பேசுவது இந்து சமயக் கோட்பாட்டுக்கு உகந்தது அல்ல. ‘ பிறவா யாக்கைப் பெரியோன்’ என ஈசனை இளங்கோவடிகள் கூறுவதும், ‘செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள’ எனக் குமரகுருபர அடிகள் கூறுவதும் கடவுளைப் பற்றித் தமிழ் இந்துக்களின் கொள்கையினை அடிகோடிட்டுக் காட்டுவனவாகும். இயேசு கிறித்து அவர் பிறந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் நல்லொழுக்கத்தையும் தெய்வபக்தியையும் கற்பித்தார், அந்தவகையில் அவரை ஒரு இறைத்தூதர் என ஏற்றுக் கொள்வதில் நமக்குக் கருத்து வேற்றுமை இல்லை. இன்று இந்தியநாட்டுக் கிறித்துவர்களிடம் Churchianity தான் உள்ளது.Christianity இல்லை என்பது தெளிவு. இயேசுவுக்கு மரணபயம் இருந்ததென்றும் கடவுள் தன்னைக் கைவிட்டு விட்டாரோ என்ற சந்தேகம் இருந்தது என்றும் பைபிளில் குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. இயேசுவின் மீது மரியாதை காட்டலாம் ஆனால் அவரை இறைவன் என்று சொல்லுவது அடாது; அது பாவம்.

  73. Dear Mr. Trichy,

    //அவரின் கருத்துக்கள் கிட்டத் தட்ட மனப் பாடம் செய்யப் பட்ட நிலையிலேயே இதயத்தில் உள்ளன. சுவாமிஜி ”இயேசுவை கடவுள் என்ற ஸ்தானத்திலேயே வைத்து நோக்குவதாக” நான் படித்தது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது!//

    Memory is correct, but understanding is not.

    Jesus is not Christ.

    Christ is different from Jesus.

    Christ is a state.

    Jesus is just a name of an imaginary person.

    Swami Vivekananda praises Christ and not Jesus.

  74. திருச்சி சார், முத்துக்குமாரசுவாமி அவர்களும் கணபதியும் உங்கள் கருத்தை அருமையாக இங்கு விமர்சித்திருக்கிறார்கள்.

    ”அவதார *புருஷர்*” என்ற சொல் பொதுவாக வரலாற்றில் வாழ்ந்த மகான்களைக் குறிக்கிறது – ரமணர், வள்ளலார், ராமகிருஷ்ணர், பாம்பன் சுவாமிகள் இப்படி. ”தீதகன்று உலகம் உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்” என்று திருஞான சம்பந்தரின் பிறப்பைப் பற்றி சேக்கிழார் பாடுகிறார்.

    ஸ்ரீராமர், நரசிம்மர் போன்றவர்கள் ”தெய்வ அவதாரங்கள்”. “அவதாரம்” என்ற சொல் இரண்டிலும் இருந்தாலும், வேறுபாடு உள்ளது. மற்ற வடிவங்கள் இறையின் அம்சங்கள், கிருஷ்ணர் பூர்ண அவதாரம், அவர் இறைவனே (கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்) என்று சொல்லப் பட்டுள்ளது. நீஙக்ள் இந்தத் தளத்தில் வந்து படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு போன வருடம் கிருஷ்ண தத்துவத்தைப் பற்றிய சுவாமிஜியின் விரிவான உரை வெளிவந்திருக்கிறது. இங்கே படிக்கலாம் –

    https://tamilhindu.com/2008/08/hthe-greatness-of-sri-krishna-by-vivekanand-2/

    ஏசுவைப் பற்றி சுவாமிஜி முழுக்கவும் “விமர்சனப்” பார்வையுடனேயே பேசியுள்ளார். இறையின் வடிவம் என்ற பார்வையுடன் அல்ல. மேலே கிருஷ்ணர் பற்றி அவர் சொல்லியிருப்பதையும் ஏசு பற்றிய அவர் கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது புரியும்.

  75. Dushta Nigraha Sishta Paripaalana is the basics of Hindu ethos. That is why all our dieties are holding suitable weapons.

    My foe decides on which kind of weapon I should use. I am NOT deciding on the weapon I should choose to face my foe. Bright minds will understand what I mean by this.

    There is no such thing as non-violence. Only minimum violence is possible. It is the universal truth. Every birth and strife to live depend on violence only. The quetion is whether minimum force or maximum. We need to practice minimum force for existence and maximum force whenever necessary. Survival of the Fittest is the basic lesson in the theory of evolution. And it is struggle for existence utmost to be fit to survive. You need to apply your mind to behave according to circumstances. Otherwise you will misearbly fail and perish. Hindus are at the receiving end since many centuries only because they failed to grasp this basic thing. Pritviraj Chouhan pardonned Mohmed Gori and allowed him to return gracefully when he was defeated. And our Pritviraj Chouhan had to pay a very heavy price for the blunder he had committed in pardoning Gori. Do you know what kind of treatment the grave of our Pritviraj is receiving till date? Become knowledgeable before making comments.
    MALARMANNAN

  76. I appreciate Sri Kalimigu Ganapathi for his correct assessment. Jesus was a Jew. But Jews do NOT consider him the Christ. For a Jew, Christ is yet to come! Those who accepted Jesus as Christ only call him Jesus Christ.

    Kindly bear in mind that Swamiji had to address gatherings of Westerners mostly. And they were mostly Christians. Swamiji’s methodology was to provide bitter pills in a sugar coated capsule while addresing the gatherings of Westerners. Think of his times and situations that warranted Swamiji’s needs to address Westerners and bring them to his fold. Mere reading his works will not help understanding him. A tortoise has been in the waters of ganges all through its life. But it does NOT mean that it can expect salvation!
    MALARMANNAN

  77. `உன்னையல்லால் ஒரு தெய்வம் உள்கேன்’ என்பார் திருநாவுக்கரசர்.

    `திருமாலை அல்லது தெய்வமொன்று ஏத்தேன்’ என்பார் பொய்கையாழ்வார்.

    நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய அருளாசிரியர்கள் அருளிச்செய்தவை நமக்கு வேண்டாவா?

    `செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய் மனப்பாறைகள்’ பத்தி செய்துகொள்ளட்டும். ஆனால் இந்துத்தளத்தில் வேற்றுச் சமயப் பரப்புரை செய்தல் எற்றுக்கு?

  78. AS recorded by one of his desciples, the last word of Jesus on the cross was lamenting, “God, God, why did you forsake me?”
    And it was also recorded that Jesus wanted to avoid the cruel death on the cross and prayed God to relieve him from that test. But his God wanted him to shed blood so that his followers can do business with his blood and flesh! Remember Jesus said in his last supper that the bread was his body and the wine was his blodd. His desciplies made full use of his flesh and blood to proselytise, wipe out all existing ancient fasiths butallly! Don’t forget Christinaty was also thrust on people by force, violence and cheating!

    Think of all these records before mustering courage to call Jesus a God!
    MALARMANNAN

  79. அன்பு நண்பர் களிமிகு கணபதி அவர்களே,

    இயேசு தான் கிறிஸ்துவா, இல்லையா என்று சர்ச்சையில் ஈடுபட வேண்டியது யூதர்களும் கிருத்துவர்களும் தான். நமக்கு அந்தக் கவலை தேவை இல்லாதது.

    இயேசு கிறிஸ்து என்று ஒருவர் உண்மையில் இருந்தார் என்று நாம் அடித்துக் கூறவில்லை.நான் இயேசுவை நேரில் கண்டதில்லை, எனவே இயேசு என்று ஒருவர் நிச்சயம் இருந்தார் என்று சாட்சி கொடுக்க நான் தயாராக இல்லை.

    அதே நேரம் இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்ததற்கான, வாழ்ந்ததற்கான வாய்ப்புகளும் உள்ளன என்றே கருதுகிறோம்.

    எனவே இயேசு கிறிஸ்து என்பது ஒரு கற்பனைக் கதா பாத்திரம் மாத்திரமே என்பதை எந்த அடிப்படையில் நீங்கள் அறுதியிட்டுத் தீர்மானமாகக் கூறுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. விளக்க முடியுமா? வலுவான ஆதாரங்கள் இருந்தால் அதை வழங்க முடியுமா?

    //Swami Vivekananda praises Christ and not Jesus//

    அப்படியானால் சுவாமிஜி, கிறிஸ்து என்று குறிப்பிட்டது யாரை? சுவாமிஜி கிறிஸ்து என்று குறிப்பிட்டு உரை நிகழ்த்தியது யாரைக் குறிப்பிட்டு?
    டல்ஹவுசி பிரபுவையா? வெல்லெஸ்லி பிரபுவையா? காரன் வாலிஸ் பிரபுவையா?

    சுவாமிஜி கிறிஸ்து என்று குறிப்பிட்டு உரை நிகழ்த்தியது யாரைக் குறிப்பிட்டு என்றும் விளக்க முடியுமா?

  80. I agree with Mr Jatayu, Mr Nambi and Mr Malarmannan. Mr Tirichikaran , you do not have the right to speak for all hindus and neither I have the right to speak for all Hindus. Also, How did you come to the conclusion or assume, that you speak for the majority of the Hindus? Hindusisim is being kicked around by one and all due to our non Khstriya attitude. Please do not act like the pacifist Gandhi as he was one of the main reason what India is today.
    To me, Christianity is a cult, the Church ia MNC, and the Pope is it’s CEO. Jesus Christ is a myth and there is no historical Jesus Christ. If Swamy Vivekanada had ever considered J.Christ, as God ( I very much doubt Swamiji had ever considered any one God, as per our religion, the God resides within you) then,I am aginst Swamiji’s view. Please read the book “A Hindu critique of Christianity”, it ia an eye opener about Christianity
    https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=9065&SKIN=C

  81. Dear Trichikkaran,

    Swamiji or for that matter Hinduism never bothered much about historicity of spiritual phenomenons, as historicity does not have any value for the spiritual upliftment.

    As Hinduism deals with eternity and aims to go beyond self, history is an unimportant addendum. But, if there are some great spiritual teachings spread in the name of a person, then Hinduism understands the spiritual state from which such teachings could have come. This spiritual state is called as Buddha or Christ or Mukta. These are just titles for identification. For a Hindu, Siddhartha is one of the buddha. And there are millions of such liberated souls in this universe who can be called Buddha. Same is applicable for the “title” Christ. It is a title and not a personality.

    What does it matter to a Hindu if Shiva or Vishnu or Parvathi is not a historical personality?

    Moreover, some sublime spiritual teachings could be compiled from many sources and attributed to a single personality. As such teachings could only come from an enlightened personality or personalities, the attributed personality is called by a Hindu as a Christ or a Buddha or a Bhodisatva.

    The personality need not be a historical truth, because teachings attributed to the personality are noble and most important.

    If liberation is about losing the self and at be one with the entire existence, then where is the personality that can have a history?

    Historical nitty-gritties in this spiritual matter are the issues that historians and researchers need to worry. After all, history keeps the record of hatred more than love, spreads mostly violence, proves that humanity never learns anything from it, and there is no help available from it for the development of humanity.

    Due to these reasons, you will find that any religion that is based on and rooted on history could only spread violence. That is the reason why these abrahamic religions such as, Islam, Christianity, or Communism results only violence. Whereas, the eastern dharmic religions such as, Hinduism, Buddhism, Taoism, Shintoism, and the Western and African Pagan religions, and other mystic traditions never resulted wars.

    Absence of history is not a big loss to human development, but absence of spirituality is.

    Swamiji’s approach is of a spiritual approach.

  82. Hai,

    I can give you an small example. See when we go alongside road, if we put a small brick on one day, then you must see immediately on the next day, people like (hindus) will solute the brick with ornaments and starting conducting poojas. Thus, you can see how Hinduism is formed all over the world.

    See god is everywhere in the form of love, mercy and glory. We must think and act accordingly. I request to all kindly not to use Jesus name in any of the message because, we, none have qualified to use his name instead we can do prayer for ourselves.

  83. Baskar,

    Please tell us where people are worshiping bricks that are put on the road?

    To prove your point, please videograph this: put a brick on the road and do puja, and let us see whether the hindus start worshiping the brick since then.

    If the video is not stage managed, then I will give Rs. 1000 to you.

    The only foolishness of modern day Tamils is that they believe that Tamils are fools. But, nobody is a fool to worship the brick or a mile stone. It never happened, will never happen.

    These opinions of yours are mere propaganda by evangelical sidekicks like EVR and his gang.

    We, Tamils, belong to the greatest intellectual tradition of this world, and it is called as Hinduism.

    But, I can show you people developing streaks of mental imbalance in church sponsored programs, crying, shouting, rolling on the road, falling down, jumping up: all in the name of the satan called jesus.

  84. வணக்கம் ஸ்ரீ மலர்மன்னன் அவர்களே,
    https://www.google.co.in/transliterate/indic/தமிழ் இந்த ஒலிபெயர்ப்பு தளம் நன்றாகவே உள்ளதே தாங்கள் இதை பயன்படுத்தலாமே. சிலநாட்களிலேயே தங்களின் தட்டச்சு திறன் மேம்பட்டுவிடுமே. மற்றபடி தங்களின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கதே.

    மன்னிக்க வேண்டும் திருச்சிக்காரர் அவர்களே உண்மையில் நான் சொல்லநினைத்த கருத்துக்களை ஸ்ரீ ஜடாயு, மற்றும் ஸ்ரீ மலர் மன்னன் அவர்களும் சொல்லிவிட்டார்கள்.

    நாம், நமது என்பது அனைவரையும் இழுக்கும் சொல்லாகவே அமையும் என்பது உண்மையே, ஆனால் நீங்கள் அதில் சின்ன மாற்றத்தை உண்டு பண்ணினாலே அதன் கருத்து மாறுமே. ஏனெனில் இந்துக்கள் அனைவருமே இயேசுவை கடவுளாக நினைப்பதில்லை.

    தங்கள் சொல்லும் எம்மதமும் சம்மதம் என்பது ஒற்றுமைக்காகவே அல்லாது அவர்களை பின்பற்றும் எண்ணத்தோடு சொல்வது அல்ல. அதே போல் இந்துக்களில் சிலர் ஏசுவையும் வழிபடத்தான் செய்கிறார்கள். அதற்காக நமது என்று சொல்லாதீர்கள்
    நம்மில் சிலர் அல்லது இந்துக்களில் சிலர் என்பதுவே சரியான சொல்லாக இருக்கும்.

    பெரும்பாலும் ஆங்கிலக்கல்விக்காக ஒரு க்ரித்துவப்பள்ளியில் படித்தவர்களோ அல்லது பக்கத்து வீட்டு பழக்கங்களால் சிறுவயதிலிருந்தே பழகியவர்களை சொல்லலாம். (இந்தப்பட்டியலில் மதம் மாறிய ஆடுகள் இல்லை).

    சுவாமி விவேகானந்தரின் கருத்தும் அவ்வாறே கொஞ்சம் குழப்பிவிட்டது என்றே கருதுகிறேன். தங்கள் சொன்ன புத்தகத்தில் அவதாரத்தையும் கடவுளையும் சரியான புரிதல் இல்லாமல் எழுதியிருக்கலாம். மற்றபடி தங்களின் கருத்துக்களில் குறையொன்றுமில்லை. நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கருத்தும் உண்மையே.

    மேலும் இப்போது மேலை நாடுகளிலேயே ஏசுவுக்கு முன்னமே ஒரு கிறிஸ்து இருந்ததாகவும், ஏசுவே கற்பனையா என்றும் குழப்பம் தீராமல் கிறித்துவத்தை இங்கே விற்றுக்கொண்டு உள்ளார்கள்.

    ஒரே ஒரு கேள்வி மட்டும் இதற்க்கு விடை சொல்லுங்கள் இயேசு தேவ குமாரன் எனில் அந்த தேவன் யார். அவர் பெயரென்ன, இங்கேயே தடுக்கி விழுந்து விடுகிறார்கள். எப்படியெனில்

    இவர்கள் செய்வது என்ன என்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்றும்,

    வரும்துன்பங்களை தாங்கும் வலிமை தாரும் என்றும் யாரிடம் கேட்கிறார் இயேசு.

    அப்படிகேட்டாரெனில் அவர் நாம் மதிக்கும் ஞானிகள் அல்லது யோகியர் சித்தர்களின் வரிசைகளில் உள்ளவர் ஆவாறேயன்றி கடவுளாகமாட்டார். சித்தர்களையும் நாம் வணங்குகிறோம் , கடவுளையும் வணங்குகிறோம், ஆனால் இரண்டிற்கும் வேறுபாடுள்ளது.

    ஆனால் அவர்களோ ஏசுவே கடவுள் வேறு ஒரு கடவுள் இல்லை என்கிறார்கள். பின்னர் அவரை தேவ குமாரன் என்கிறார்கள். இவ்வளவு பெரிய கிறிஸ்துவம் என்ற பில்டிங் இந்த வீக்கான பேஸ்மின்டை நம்பித்தான் உள்ளது எட்டாவது அதிசயமே.

    இந்த மறு மொழியின் மூலம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றேதான்.
    நமது சனாதன தர்மத்தின் மகத்துவத்தை அடித்தட்டு மக்கள் சரிவர புரியாதுளார்கள்.
    தேவாரம் திருவாசகம் பாசுரங்கள் எல்லாம் பாடுவதை விட கோவில்களில் சுண்டலுக்கே முதலிடம் என்பதையும் தயவு செய்து மாற்றுங்கள். பக்தி என்பதை என்ன என்றும வெறும் ராமாயண மகாபாரத் கதை சொல்வதை விட அதன் உயர்வான கருத்துக்களை பிள்ளைகட்க்கு புரிய வையுங்கள்.

    கடவுள் அவதாரங்களின் மாஜிக்கை காட்டி மயங்கவைக்காமல் அதன் லாஜிக்கை உணர்த்துங்கள்.
    எனது பெயரில் ஏற்க்கனவே ஒரு மறுமொழி ஆங்கிலத்தில் இட்டுள்ளார் மன்னிக்கவும் (நான் கொஞ்சம் பீட்டரில் வீக்கு) எனவே நான் இனிசியளுடன் என்பெயரை எழுதிவிடுகிறேன். ஹி ஹி .

  85. ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றி.

    அனைவ‌ரும் என்னுடைய‌ க‌ருத்தை ம‌றுத்து எழுதி இருப்ப‌து போல‌த் தோன்றினாலும் உண்மையில் ப‌ல‌ரும் என் க‌ருத்தை ஆத‌ரித்தே எழுதியுள்ளன‌ர்.

    //இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை// அத‌ன் அடிப்ப‌டைக் க‌ருத்து என்ன‌வென்றால்- ‘இந்துக்கள் பிற‌ மார்க்க‌ங்க‌ளின் மீது வெறுப்பு, பிற‌ மார்க்க‌ க‌ட‌வுள்க‌ளை இக‌ழ்வ‌து போன்ற‌ காட்டு மிராண்டித்த‌ன‌மான‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுவ‌தில்லை, மேலும் பிற‌ ம‌த‌க் க‌ட‌வுள்க‌ளை ம‌திக்கும், வ‌ண‌ங்கும் அளவுக்கு ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை உடைய‌வ‌ர்க‌ள். நாக‌ரீக‌ ச‌முதாய‌த்தை இந்து ம‌த‌ம் உருவ‌க்கியுள்ளது ‘- என்ப‌தே நான் கூற‌ வ‌ந்த‌த‌ன் சாராம்ச‌ம் ஆகும்!

    எந்த‌ அளவுக்கு ம‌திப்பார்க‌ள், எந்த‌ அளவுக்கு வ‌ண‌ங்குவார்க‌ள் என்ப‌து அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம் ஆகும்!

    முனைவ‌ர் கோ. ந‌ முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்க‌ளுக்கு ந‌ன்றி!

    //இயேசு கிறித்து அவர் பிறந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் நல்லொழுக்கத்தையும் தெய்வபக்தியையும் கற்பித்தார், அந்தவகையில் அவரை ஒரு இறைத்தூதர் என ஏற்றுக் கொள்வதில் நமக்குக் கருத்து வேற்றுமை இல்லை// – எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    இந்த‌ நாட்டிலே பிற‌ந்தும் “யூத‌ர்க‌ளின் க‌ட‌வுளாக இருப்ப‌வ‌ர் ம‌ட்டுமே ஜீவ‌னுள்ள ஒரே க‌ட‌வுள்” என்று வெறித் த‌ன‌ம் கொண்ட‌வ‌ர், வெட்கித் த‌லை குனியும் வ‌ண்ணம், அவ‌ர் நாண‌ ந‌ன்ன‌ய‌ம் செய்து இருக்கிறார் முனைவ‌ர் கோ. ந‌ முத்துக்குமாரசுவாமி ஐயா.

    இவ்வ‌ளவு கூறியும் வெறித் த‌ன‌த்திலே வெட்க‌த்தை விட்ட‌ காட்டு மிராண்டிக‌ள் கோடிக் க‌ண்க்கில் ந‌ம் நாட்டில்!

    பாஸ்கர் ஐயா அவர்க‌ளுக்கு ந‌ன்றி!

    முனைவ‌ர் ஐயாவுக்கு நான் கூறிய‌து பாஸ்கர் ஐயாவுக்கும் பொருந்தும்!

    //நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கருத்தும் உண்மையே//
    கூலிக்கு ஆள் பிடிக்கும் கூட்ட‌த்தின் முக‌த்திலே க‌ரியைப் பூசி விட்டார் பாஸ்கர் ஐயா!

    ஜடாயு அவர்க‌ளுக்கு ந‌ன்றி!

    //”அவதார *புருஷர்*” என்ற சொல் பொதுவாக வரலாற்றில் வாழ்ந்த மகான்களைக் குறிக்கிறது – ரமணர், வள்ளலார், ராமகிருஷ்ணர், பாம்பன் சுவாமிகள் இப்படி. ”தீதகன்று உலகம் உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்” என்று திருஞான சம்பந்தரின் பிறப்பைப் பற்றி சேக்கிழார் பாடுகிறார்.// இந்த‌ அளவுக்காவ‌து இயெசுவின் மீது சுவாமிஜி ஒப்பு வைத்து இருந்தார் என்ப‌தை விள‌க்கி இந்து எப்போதும் உண்மையை ம‌றைப்ப‌து இல்லை என்று உண‌ர்த்தி விட்டீர்க‌ள்.

    மற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ம்பி, rama, ஆகியோருக்கு நான் கூறீக் கொள்ள‌ விரும்புவ‌து என்ன‌ வென்றால், உங்க‌ளுடைய‌ எண்ண‌ங்க‌ள தெளிவாக‌க் கூறிய‌த‌ற்க்கு ந‌ன்றி!

    rama அவ‌ர்க‌ள் காட்டியுள்ள சுட்டி சாத‌ர‌ண‌மாக‌ உள்ளது. அதில் எந்த‌ வ‌லுவான‌ ஆதார‌மோ, க‌ருத்தோ இல்லை.

    க‌ண‌பதி ச‌ரியான‌ ப‌தில்க‌லோடு வ‌ருவார் என்றூ எதிர் பார்த்தேன். ம‌ழுப்ப‌லும், திருப்ப‌லுமாக‌ ஆபிர‌காமிய‌ பிர‌ச்சார‌க‌ர் போலே ப‌தில் அளித்து உள்ளீர்க‌ள்.

    //Swamiji or for that matter Hinduism never bothered much about historicity of spiritual phenomenons, as historicity does not have any value for the spiritual upliftment.

    As Hinduism deals with eternity and aims to go beyond self, history is an unimportant addendum//

    உண்மைதான் ஆன்மீக‌த்தில் க‌ருத்து தான் முக்கிய‌ம். ஆனால் வ‌ர‌லாற்றில் அவ்வ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம் காணாத‌ நீங்க‌ள், “Jesus is just a name of an imaginary person” என்று எழுதிய‌து ஏன்? இது வ‌ர‌லாறா? புவி இய‌லா?

    //Due to these reasons, you will find that any religion that is based on and rooted on history could only spread violence. That is the reason why these abrahamic religions such as, Islam, Christianity, or Communism results only violence//
    வ‌ர‌லாறை ம‌ட்டும் ஆதார‌மாக‌ கொண்டூள்ள மத‌ங்க‌ள் வழுக்கி விழ‌ வாய்ப்பு உள்ளது என்ப‌து ச‌ரியே!

    ஆனால் வ‌ன்முறைக்கு கார‌ண‌ம் என்ன‌?
    த‌வ‌றான‌ கொள்கை, பிடிவாத‌ம், முர‌ட்டுத்த‌ன‌ம், பிற மார்க்க‌ங்க‌ள் மீது வெறுப்பு, அறிவை அட‌கு வைத்த‌ல் இவையே வ‌ன்முறைக்கு கார‌ண‌ம்!

    ந‌ம்முடைய‌ ந‌ண்ப‌ர் ஸ்ரீ மலர்மன்னன் அவ‌ர்க‌ளோ ” There is no such thing as non-violence. Only minimum violence is possible. It is the universal truth. Every birth and strife to live depend on violence only. The quetion is whether minimum force or maximum. We need to practice minimum force for existence and maximum force whenever necessary” என்று கூறுகிறார் இது இந்து ம‌தத்திற்க்கு ஏற்புடைய‌தா?

    முடிக்கும் முன் ஒரு விடயம்,

    எம்முடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ஜீவ‌னுள்ள கடவுள் என்று ஒரு பிரிவின‌ரும், என்னுடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை உடைய‌ உண்மையான‌ க‌ட‌வுள் என்று ஒரு பிரிவின‌ரும் ஆயுத‌ங்களை எடுத்து ச‌ண்டையிட்டு உல‌கையே இடுகாடு ஆக்கும் ப‌ணியை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

    இந்து ம‌ட்டுமே அவ‌ர்க‌ளுக்கு இடையிலே அமைதியை உருவாக்கும் க‌ருத்துக்க‌ளை உடைய‌வ‌ன்.

    நாமும் ஜோதியிலே க‌ல‌ந்தால் உல‌க‌ம் தாங்குமா?

    இந்து மதம் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட நியாயமான மதம் என்பதை மறைக்க, இந்து மதத்தின் மீது தாரைப் பூச, படாத பாடு படுகிறார்கள் இந்தப் போலி பகுத்தறிவு வாதிகள்!

    இந்து மதம் பிற மதங்களை வெறுக்காத மதம் என்று கூறினால், அப்போதுதான் இவர்களுக்கு அதிக ஆத்திரம் வரும்.

    பச்சைப் பொய்களை- இந்து மதத்தவர் பிற மதங்களை சேர்ந்தவர்களை துன்பப் படுத்துபவர்கள், கொலை செய்பவர்கள் – என்பது போன்ற பச்சைப் பொய்களை திட்டமிட்டுப் பரப்புபவர்கள் இந்தப் பொய்யர்கள். வரலாற்றிலே இல்லாத விசயங்களை இவர்கள் இருப்பது போலப் பேசுவார்கள்.

    இந்து மதத்தில், புத்தர் ஆசையை ஒழித்து விடுதலை அடையும் வழியைப் பரப்பிய போதும் சரி, ஆதி சங்கரர் விடுதலைக்கு கடவுள் பக்தி சிறந்த வழி என்ற வழியைப் பரப்பிய போதும் சரி, கத்தியின்றி , இரத்தமின்றி, வன்முறையின்றி கருத்துப் பரிமாற்றம் நடந்தது அல்லவா? இதை சீரணிக்க முடியவில்லை, இந்தப் போலி பகுத்தறிவுவாதிகளால்.

    எனவே இந்து மத்தைதைப் பற்றி நாம் சரியாக எழுதும் போது இவர்களுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வரும்! துள்ளிக் குதிப்பார்கள்!

    இந்து ம‌த‌ம் பிற‌ ம‌த‌ங்க‌ளை போல‌வே கொடுமையான‌தும், காட்டு மிராண்டித் த‌ன‌மான‌தும் ஆகும் என்று பொய்யை உண்மை போல‌ எழுத‌ விரும்புப‌வ‌ர்கள் வ‌லையில் அவ‌ச‌ரப் ப‌ட்டு யாரும் விழாதீர்க‌ள்!

    நாம் அஹிம்சை கொள்கையை உறுதியாக‌ க‌டை பிடிக்கும் போதே என்ன‌ எழுதுகிறார்க‌ள்?

    //எத்தனை ஆண்டுகள் மறைந்து போனாலும், மதுரை மாவட்டத்தில் குன்றுகளாக காட்சி தரும் மலைகளைப் பார்க்கும் போது எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வு மீண்டும், மீண்டும் முளைத்தெழும். சைவர்களின் கொட்டத்திற்கு எதிராக பள்ளிகளைத் திறந்து அனைத்து தரப்பினரும் கல்வி பெற வேண்டும் என்ற உயர்நோக்கம் கொண்ட சமணர்கள், அரசதிகாரத்தின் துணையோடு கொன்றுகுவிக்கப்பட்டு கொடுமைகளின் வடுக்கள் வரலாற்றின் பக்கங்களில் இன்னமும் கறையாக காட்சித் தருகிறது//

    //பரவிக்கிடக்கும் சமணக்காட்டை அழிக்க எட்டாயிரம் சமணர்களை உயிரோடு கழுவேற்றினார்கள் சைவர்கள் அல்லது பார்ப்பனர்கள். வரலாறு அதை பதிவு செய்திருக்கிறது//

    எந்த வரலாற்றிலும் இல்லாத பொய்ச் செய்தியை தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்கள் !

    அப்பாட்டமான பொய்ப் பழியை தமிழர்களின் மேல் போட்டு, தமிழகம் தன் மார்க்கத்துக்கு மாறவில்லையே என்ற வயிற்று எரிச்சல் பட்டு விஷம் கக்குகிறார்கள்.

    ச‌ம‌ண‌ர்க‌ளின் இணைய‌ த‌ள‌த்திலே கூட‌ இல்லாத‌ ஒரு அப்ப‌ட்ட‌மான‌ அவ‌தூறை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

    நாம் ” There is no such thing as non-violence. Only minimum violence is possible என்று எல்லாம் எழுதி அவர்க‌ளின் வ‌லையில் விழ‌லாமா?

    ‘இந்துக்கள் பிற‌ மார்க்க‌ங்க‌ளின் மீது வெறுப்பு, பிற‌ மார்க்க‌ க‌ட‌வுள்க‌ளை இக‌ழ்வ‌து போன்ற‌ காட்டு மிராண்டித்த‌ன‌மான‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுவ‌தில்லை, மேலும் பிற‌ ம‌த‌க் க‌ட‌வுள்க‌ளை ம‌திக்கும், வ‌ண‌ங்கும் அளவுக்கு ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை உடைய‌வ‌ர்க‌ள். நாக‌ரீக‌ ச‌முதாய‌த்தை இந்து ம‌த‌ம் உருவ‌க்கியுள்ளது ‘- என்ப‌தே நான் கூற‌ வ‌ந்த‌த‌ன் சாராம்ச‌ம் ஆகும்!

    எந்த‌ அளவுக்கு ம‌திப்பார்க‌ள், எந்த‌ அளவுக்கு வ‌ண‌ங்குவார்க‌ள் என்ப‌து அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம் ஆகும்!

  86. Dear Trichikkaaran,
    I really appriciate you Brother. I feel you are very honest to your heart. GOD loves such honest people. You are talking truly with what ever the experiance and knowledge you have got and with any Bias.
    I like to mention that there is no hidden intensions in this appriciation (I am writing this, because Christians are generally perceived as cunning people in this forum). May GOD bless you.

    With the love of Christ,
    Ashok

  87. //எம்முடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ஜீவ‌னுள்ள கடவுள் என்று ஒரு பிரிவின‌ரும், என்னுடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை உடைய‌ உண்மையான‌ க‌ட‌வுள் என்று ஒரு பிரிவின‌ரும் ஆயுத‌ங்களை எடுத்து ச‌ண்டையிட்டு உல‌கையே இடுகாடு ஆக்கும் ப‌ணியை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்//

    இது என்ன சைவ-வைணவ யுத்தத்தை நினைவுபடுத்தும் கருத்து
    போலிருக்கிறதே ..?

    இராமாயண- மகாபாரத யுத்தத்தை டிவியில் பார்த்த பிறகுமா..?

  88. //இந்து மதத்தில், புத்தர் ஆசையை ஒழித்து விடுதலை அடையும் வழியைப் பரப்பிய போதும் சரி//

    ஓஹோ …புத்தரும் இந்துவாகிவிட்டாரா..?

  89. “பரிசீலனைக்குப் பிறகு” என்பதே பெலவீனமாகும்;
    மாற்றுக்கருத்தினையும் தயக்கமின்றி தளத்தில் பதிப்பதே நேர்மையாகும்..!

    //உல‌க‌ம் உருண்டை என்று கூறிய‌ அறிவிய‌ல் அறிங்க‌ர்கள உயிருட‌ன் நெருப்பிலே போட்டுக் கொன்றும், ப‌ல‌ ஆண்டுக‌ள் சிறையிலெ அடைத்தும் சித்திர‌வ‌தை செய்த‌ ரோம‌ ராஜ‌ போப‌ர்க‌ள் கால‌த்திலெ நீங்க‌ல் இருந்து அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல புத்தி சொல்லிக் கொடுக்க இய‌லாம‌ல் போய் விட்ட‌தே//

    அன்புள்ள் திருச்சிக்காரன் அவர்களே..,
    எனது நியாயமான எதிர்வாதத்தை மூன்று முறை அனுப்பியும் இன்னும் பதிக்கவில்லை;
    நீங்களோ என்னைப பரியாசம் செய்கிறீர்கள்..!
    வாழ்க… வளர்க..!

  90. களிமிகு கணபதி அவர்களே..,
    உங்கள் பெயர் ஏனோ களிமண்ணை நினைவுப்படுத்துகிறது;அண்மையில் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி காரணமாக இருக்கலாம்;

    //Jesus is not Christ.

    Christ is different from Jesus.

    Christ is a state.

    Jesus is just a name of an imaginary person.

    Swami Vivekananda praises Christ and not Jesus.//

    இது என்ன உங்க சொந்த கருத்தா..?
    ஒரு விஷயத்தைச சொல்லும் முன்பு யோசிக்கமாட்டீர்களா..?

    “இயேசுவே”- “கிறிஸ்து” என்பது பரிசுத்த வேதாகமத்தின் தனிச்சிறப்பாகும்;
    இது மொழி மற்றும் இனம் சம்பந்தமான வரலாற்று நிகழ்வாகும்;

    இதற்காக எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்;
    புனித பவுல் உட்பட அனைத்து முதல் நூற்றாண்டு தலைவர்களும் இதனால் கொலை செய்யப்பட்டனர்;

    நீங்கள் கிரேக்க‍,ரோமர் வழிவந்த- மாதா வணக்க- போப்புமார்க்கத்தாரின் அநியாயங்களை கிறிஸ்து மார்க்கத்துடன் இணைத்துப் பார்த்தால் தெளிவடைய இயலாது..!

    உண்மையில் இன்றைக்கு “பைபிள்” என்று பரவலாக சர்ச்சைக்குரியதாக விவாதிக்கப்படும் புத்தகமே அன்றைக்கு தடை செய்யப்பட்டிருந்தது;

    பின்னர் அதன் கருத்துக்கள் பரவியதாலேயே உலகில் ஞான மார்க்கம் செழித்தது;
    5000 வருட இந்து புராணங்கள் சாதிக்க முடியாததை பைபிள் சாதித்துவிட்டது..!

  91. baskar(changed name i presume?)

    as i stated earlier, all christians are insecure and perochial minded. please pay attention to grammatical errors it is akin to an illiterare child’s writing. Your very same attitude of jeering and mockery of hindus is the reason my grandmother converted to her original, thank god religion-if you have the indecency to criticise us in this website, dont give us orders not to put jesus down either. plenty of atrocities such as child abuse terrible cruelty to women and children , prayers and exorcism, gyrating and yelling, praying to silly statues to 2 sticks stuck together believing in a western hypocritical and obviously blood thirsty philosohy called the ‘bible’ all exists in christianity too. You know, india is a hindu country, all other beliefs are foreigh thrusted, if you dont like it, leave, and do not visit this website. You must be a sad human being to continue to hate and yet cannot help but cling to the source of the hatred, typical of your jesus philosophy. what proof do you have that he is god, or the son of god? there is new evidence that he married mary magdeline and his lineage could still be in existence_- jesus is just an ordinary bloke exalted to extraordinary status. He was a teacher, no silly fish miracles, parting the ocean – he still was nailed to the cross wasnt he? where was the miracle then? why was he tormented about the truth of his god< how about his illegitimate birth in a cow shed? this can go on, so you see, sitting in a precarious position, do not criticise us hindus.

  92. baskar,
    you learn to practice love and mercy first. where is the love in mocking hindus as worshipping bricks as well?

  93. Mr Trichikaran, you are of the opinion that the site “Jesus never existed” is pretty ordinary and had dismissed it’s findings. OK then, please enlighten us with facts regarding HISTORICITY OF JESUS.Also. I beg you to refute the evidence in that site, point by point,on the existence of Jesus, rather than labelling it as ordinary. Please, do not dismiss this with excuses as you have to stand by your statements.
    We Hindus will pray even to stones, trees, animals and anything in nature as we see Ishwara in everything but as a Hindu, I do not see Ishwara in a mythological figure of Jesus,cooked by the white supremacist Eurocentric racial group and the Catholic church.

  94. இந்த இடுகை சாது செல்லப்பா போன்ற இயேசு வியாபாரிகளின் வஞ்சகத்தையும் ஏமாற்றுதலையும் குறித்துத் தொடங்கியது. திசை மாறி இயேசுவும் கிறித்துவும் ஒருவரா வெவ்வேறு நபர்களா என தேவையற்ற விவாதமாக ஆகிவிட்டது. இயேசுவுக்கு உரிய மரியாதையை இந்துக்கள் அடிப்படையில் ஆன்மீக உணர்வு உள்ளவர்கள் ஆதலின் அளிக்கத் தவறுவதில்லை. எத்தகைய மதிப்பைத் தருகின்றனர் என்பதற்கு ஒரு சான்று தருகின்றேன்.

    ஆன்மா சித்துப்பொருள் ஆதலால் சிவனுடைய எட்டு மூர்த்தங்களும் ஒன்று. தைத்திரியாருண்யசாகை நாரணம் , “ஆத்மாய நம: ஆத்மலிங்காய நம்:” எனக் கூறுவதனால் புறத்தே செய்யும் வழிபாட்டினும் அகத்தே செய்யும் அந்தரியாகபூசை சிறப்புடையது என விள்க்கிய சந்தமறியும் தமிழுந்தேர் தன்னேறில்லாத பாம்பனடிகள்,

    “மத்தேயு 6-ஆம் அதிகாரம் -” உன் அறைவீட்டுக்குட் பிரவேசித்து உன் கதவைப்பூட்டி அந்தரங்கத்தி லிருக்கின்ற வுன் பிதாவை நோக்கிச் செபம் பண்ணு. அப்பொழுது அந்தரங்கத்திற் பார்க்கிற வுன்பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்’ உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரமுழுதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள ஒளி யிருளாயிருந்தால் அவ்விருள் எவ்வள்வு அதிகமாயிருக்கும்”
    என்ற வசனத்தைக் காட்டி,

    நம் மறைபேசும் இதயார்ச்சனை இயேசு கிறித்துவினாலும் வெளியிடப்பட்டது என்று காட்டி, ‘ இவ்வுரைகளை யேன்றுகொண்டு நடக்குங் கிறித்துவர்கள் இஞ்ஞான்றில்லை போலும்’ என்றும் கூறினார்.

    ஆங்கிலத்தையும் பைபிளையும் கற்ற நம் பெரியோர்கள் அதனில் வேதக் கலைகளான தகரோபாசனை, அந்தரியாக பூசனை முதலிய ஆன்மசாதனங்களைக் கண்டு கூற, இயேசுவை வணிகப்பொருளக்கி (merchandise) அவ்வப்பொழுது இலேபிள்களை மாற்றி சர்ச்சுக்குக் கூட்டம் சேர்த்துக் கொள்ளையடிக்கும் இயேசு வியாபாரிகளான சாது செல்லப்பா போன்றவர்களை ஆன்மிக ந்லம் நாடும் உண்மைக் கிறித்துவர்களும் கண்டிக்க வேண்டும். பைபிலில் கூறப்பட்ட ஆன்ம சாதனங்களஃஇக் கண்டு அவ்ற்ரின் வழி நடக்கும் கிறித்துவர்கள் இக்காலத்தில் இல்லை; வியாபாரிகளே உள்ளனர்.

    அப்போஸ்தலர் 16-ம் அதிகாரம், 6ஆம் வ்சனம்: “ஆசியா தேசத்திலே அவர்கள் சுவிசேஷ வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தா ஆவியினாலே தடைபண்ணப்பட்டனர்’ பரிசுத்த ஆவியானவர் ஆசியாவினுள் (இந்தியா) அவர்களை உள்ளேசெல்ல விடவில்லை ஆசாரம் புனிதம் தருமம் முதலியன சிறந்த ஹிந்துக்களுள்ள தேசத்தில் மேற்கண்ட நூலும் பிரசங்கமும் செல்லாதென்றும் அவை அனாசாரம் அதருமம் முதலியன மிகுந்த அந்நாட்டிற்கே செல்லுமென்றும் பைபிளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நமது தலையாய கடமை இயேசு வியாபாரிகளின் மயக்க மொழிகளிலிருந்து மக்களை மீட்பதுதான்.

    ஹிந்து பற்றிய கேள்வியொன்றும் இங்கு எழுந்துள்ளது. ஹிந்துக்கள் உள்ள தேசமென்றால் ஹி(சி)ந்து நதிப்பாய்ச்சலுள்ள நிலப்பகுதிக்கு ஹிந்து தேசமென்று பெயர். இங்கு வசித்து வரும் அனைவரும் பொதுவாகவும் வேதாகமநெறி நின்றவர்கள் சிறப்பாகவும் இந்துக்கள்தாம்.

  95. //Dear Trichikkaaran,
    I really appriciate you Brother. I feel you are very honest to your heart. GOD loves such honest people. You are talking truly with what ever the experiance and knowledge you have got and with any Bias.
    I like to mention that there is no hidden intensions in this appriciation (I am writing this, because Christians are generally perceived as cunning people in this forum). May GOD bless you.

    With the love of Christ,
    Ashok//

    அசோக் அவர்களே, நீங்கள் உண்மையில் யாரையாவது பாராட்ட வேண்டும் என்றால் அது இந்து மதத்தை தான்.

    உங்களின் பாராட்டு எல்லா இந்துக்களுக்கும் பொருந்தும்.

    இங்கெ எழுதிய பலரும் இயேசு கிருஸ்துவுக்கு ஏதோ ஒரு வகையில் மரியாதையை – இறைத் தூதுவர் என்றோ,நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்றோ-ஏதோ ஒரு வகையில் அவர்கள் மனதுக்குப் பட்ட வகையில் மரியாதை செலுத்துவதையே செய்வார்கள்.

    இந்து ம‌த‌த்தில் வெறுப்பு க‌ருத்துக்கு இட‌மில்லை.

    ஆனால் சில இந்துக்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர். அதற்க்கு காரணம்

    சுவிசேஷ பிர‌ச்சார‌க‌ர்களின் சித்து விளையாட்டுகள் தான்!

    உங்க‌ள் பிர‌ச்சார‌க‌ர்க‌ள் ஆதி வாசிகளின் இடங்களுக்கு சென்று,

    காரிலே கீ குடுக்காம‌லே ”கிருஷ்ண‌ர் பேரை சொல்லீ வ‌ண்டியைத் த‌ள்ளு” என்கிறார்க‌ள். வ‌ண்டி‌ ஸ்டார்ட் ஆகாது!

    பிறகு ”இயேசு சாமி பேரை சொல்லி வ‌ண்டியைத் த‌ள்ளு” என்று கூறி, அப்போது கீ குடுத்து வ‌ண்டிய‌ ஸ்டார்ட் செய்கிறார்கள்.

    ”பார்த்தியா, இயேசு தான் உண்மையான‌ க‌ட‌வுள்” என்று கூறுகின்ற‌ன‌ர்.

    முனைவ‌ர் கோ. ந‌ முத்துக்குமாரசுவாமி ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //இயேசு கிறித்து அவர் பிறந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் நல்லொழுக்கத்தையும் தெய்வபக்தியையும் கற்பித்தார், அந்தவகையில் அவரை ஒரு இறைத்தூதர் என ஏற்றுக் கொள்வதில் நமக்குக் கருத்து வேற்றுமை இல்லை// –

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    பாஸ்கர் ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கருத்தும் உண்மையே//

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    சீனு ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //இந்துக்களின் அடிப்படை நம்பிக்கையே எல்லா கடவுளும் ஒன்றுதான் என்பது. கடவுள்களும், மதங்களும் அந்த ஒற்றைக் கடவுளை அடையும் வெவ்வேறு பாதைகளே! அதனால் திருச்சிக்காரன் சொல்வது ஒன்றும் தவறு இல்லை.

    இந்துக்கள் யாரும் இயாசுவை வணங்கக்கூடாது என்று யாரும் கட்டளையிடவில்லை. வணங்கலாமென்று உத்தரவிடவும் இல்லை//

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    10,000 வருடங்களுக்கு மேலாக உயிரோட்டத்துடன் இந்த மண்ணில் பெரும்பான்மையாக உள்ள மதத்தைப் பின்பற்றுபவர்கள், யூத நாட்டில் பிறந்தவரை பாராட்டும் பண்புடன் இருக்கக் காரணம் இந்து மதமே!

    இதே மண்ணில் பிறந்து பிறகு ” கிருத்துவ மதம்” என்று சொல்லப் பட்ட மார்க்கத்துக்கு மாறிய எல்லோரும், இதே மண்ணில் 10,000 வருடங்களுக்கு மேலாக வணக்கப் படும் கடவுள்களை எப்படியாவது இகழ்ந்து சிறுமைப் படுத்த துடிக்கிறார்கள். அதனால் தான் நல்லவர்களான, சான்றோர்களுமான ஜடாயு ஐயா, மலர்மன்னன் ஐயா ஆகியோர் மன வருத்தம் அடைந்து உள்ளனர்.

    எனவே தயவு செய்து காட்டு மிராண்டிக் கருத்துக்களை ஏற கட்டி விட்டு மனம் திருந்துங்கள்.

    நான் இப்போது உங்களிடம் வெளிப்படையாக ஒன்றைக் கேட்கிறேன்.

    நான் உங்களுடன் சேர்ந்து இயேசு கிறிஸ்துவின் முன் மண்டியிட்டு வணங்கவும், அவரிடம் ஜெபிக்கவும், நான் செய்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்க்கவும் தயார்!

    அதைப் போல நீங்கள் என்னுடன் இராமர் கோவிலுக்கோ , சிவன் கோவிலுக்கோ வந்து வணங்கத் தயாரா?

    தியாகம் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இராமர்! நல்ல கொள்கைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் தன்னை மறுத்து, பிறருக்காக தான் கஷ்டங்களை சுமந்து , தன் வாழ் நாள் முழுவதும் கடுமையான துன்பத்தை அனுபவித்தவர்.

    சிவன் எல்லோரின் நன்மைக்காக விஷம் அருந்தியவர்.

    அவர்களை வழிபட இந்தியாவில் உள்ள கிருஸ்துவர்களுக்கு என்ன கஷ்டம்?

    ஏன் எனில் “எம்மமதமும் சம்மதம், மதச் சார்பின்மை” இதை எல்லாம் இன்றைக்கு யாரவது கடைப் பிடிக்க தயாராக இருக்கிறார்கள் என்றால் அது இந்து மட்டுமே!

    நல்லவனாக இருக்க வேண்டிய கட்டாயம் இந்துவுக்கு மட்டுமே!

    எல்லோரும் கக்கும் விசத்தை எடுத்து, எங்கள் தொண்டையில் வைக்க வேண்டிய நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்.

    இயேசு கிறிஸ்து சகிப்புத் தன்மையை, விட்டுக் கொடுக்கும் தன்மையை வலியிருத்திக் கூறியுள்ளார்.

    “ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தப் படுத்தினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ” என்று கூறியுள்ளார் இறை மகனார். அதை கிருஸ்துவர்களுக்கு நினைவு படுத்தினால், என்னை கிருஸ்துவர்களுடன் இரண்டு மைல் தூரம் வரும்படி பலவந்தம் செய்கிறார்கள்.

    எனவே தயவு செய்து காட்டு மிராண்டிக் கருத்துக்களை ஏற கட்டி விட்டு மனம் திருந்துங்கள்.

  96. //Dear Trichikkaaran,
    I really appriciate you Brother. I feel you are very honest to your heart. GOD loves such honest people. You are talking truly with what ever the experiance and knowledge you have got and with any Bias.
    I like to mention that there is no hidden intensions in this appriciation (I am writing this, because Christians are generally perceived as cunning people in this forum). May GOD bless you.

    With the love of Christ,
    Ashok//

    அசோக் அவர்களே, நீங்கள் உண்மையில் யாரையாவது பாராட்ட வேண்டும் என்றால் அது இந்து மதத்தை தான்.

    உங்களின் பாராட்டு எல்லா இந்துக்களுக்கும் பொருந்தும்.

    இங்கெ எழுதிய பலரும் இயேசு கிருஸ்துவுக்கு ஏதோ ஒரு வகையில் மரியாதையை – இறைத் தூதுவர் என்றோ,நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்றோ-ஏதோ ஒரு வகையில் அவர்கள் மனதுக்குப் பட்ட வகையில் மரியாதை செலுத்துவதையே செய்வார்கள்.

    முனைவ‌ர் கோ. ந‌ முத்துக்குமாரசுவாமி ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //இயேசு கிறித்து அவர் பிறந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் நல்லொழுக்கத்தையும் தெய்வபக்தியையும் கற்பித்தார், அந்தவகையில் அவரை ஒரு இறைத்தூதர் என ஏற்றுக் கொள்வதில் நமக்குக் கருத்து வேற்றுமை இல்லை// –

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    பாஸ்கர் ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //நல்லனவாகிய எதையும் இந்துக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கருத்தும் உண்மையே//

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    சீனு ஐயா எழுதியதைப் படியுங்கள்!

    //இந்துக்களின் அடிப்படை நம்பிக்கையே எல்லா கடவுளும் ஒன்றுதான் என்பது. கடவுள்களும், மதங்களும் அந்த ஒற்றைக் கடவுளை அடையும் வெவ்வேறு பாதைகளே! அதனால் திருச்சிக்காரன் சொல்வது ஒன்றும் தவறு இல்லை.

    இந்துக்கள் யாரும் இயாசுவை வணங்கக்கூடாது என்று யாரும் கட்டளையிடவில்லை. வணங்கலாமென்று உத்தரவிடவும் இல்லை//

    எவ்வ‌ளவு ந‌ல்ல‌ உள்ளம், ப‌ர‌ந்த‌ ம‌ன‌ப்பான்மை !!

    இந்து ம‌த‌த்தில் வெறுப்பு க‌ருத்துக்கு இட‌மில்லை.

    ஆனால் சில இந்துக்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர். அதற்க்கு காரணம்

    சுவிசேஷ பிர‌ச்சார‌க‌ர்களின் சித்து விளையாட்டுகள் தான்!

    உங்க‌ள் பிர‌ச்சார‌க‌ர்க‌ள் ஆதி வாசிகளின் இடங்களுக்கு சென்று,

    காரிலே கீ குடுக்காம‌லே ”கிருஷ்ண‌ர் பேரை சொல்லீ வ‌ண்டியைத் த‌ள்ளு” என்கிறார்க‌ள். வ‌ண்டி‌ ஸ்டார்ட் ஆகாது!

    பிறகு ”இயேசு சாமி பேரை சொல்லி வ‌ண்டியைத் த‌ள்ளு” என்று கூறி, அப்போது கீ குடுத்து வ‌ண்டிய‌ ஸ்டார்ட் செய்கிறார்கள்.

    ”பார்த்தியா, இயேசு தான் உண்மையான‌ க‌ட‌வுள்” என்று கூறுகின்ற‌ன‌ர்.

    10,000 வருடங்களுக்கு மேலாக உயிரோட்டத்துடன் இந்த மண்ணில் பெரும்பான்மையாக உள்ள மதத்தைப் பின்பற்றுபவர்கள், யூத நாட்டில் பிறந்தவரை பாராட்டும் பண்புடன் இருக்கக் காரணம் இந்து மதமே!

    இதே மண்ணில் பிறந்து பிறகு ” கிருத்துவ மதம்” என்று சொல்லப் பட்ட மார்க்கத்துக்கு மாறிய எல்லோரும், இதே மண்ணில் 10,000 வருடங்களுக்கு மேலாக வணக்கப் படும் கடவுள்களை எப்படியாவது இகழ்ந்து சிறுமைப் படுத்த துடிக்கிறார்கள். அதனால் தான் நல்லவர்களான, சான்றோர்களுமான ஜடாயு ஐயா, மலர்மன்னன் ஐயா ஆகியோர் மன வருத்தம் அடைந்து உள்ளனர்.

    எனவே தயவு செய்து காட்டு மிராண்டிக் கருத்துக்களை ஏற கட்டி விட்டு மனம் திருந்துங்கள்.

    நான் இப்போது உங்களிடம் வெளிப்படையாக ஒன்றைக் கேட்கிறேன்.

    நான் உங்களுடன் சேர்ந்து இயேசு கிறிஸ்துவின் முன் மண்டியிட்டு வணங்கவும், அவரிடம் ஜெபிக்கவும், நான் செய்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்க்கவும் தயார்!

    அதைப் போல நீங்கள் என்னுடன் இராமர் கோவிலுக்கோ , சிவன் கோவிலுக்கோ வந்து வணங்கத் தயாரா?

    தியாகம் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இராமர்! நல்ல கொள்கைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் தன்னை மறுத்து, பிறருக்காக தான் கஷ்டங்களை சுமந்து , தன் வாழ் நாள் முழுவதும் கடுமையான துன்பத்தை அனுபவித்தவர்.

    சிவன் எல்லோரின் நன்மைக்காக விஷம் அருந்தியவர்.

    அவர்களை வழிபட இந்தியாவில் உள்ள கிருஸ்துவர்களுக்கு என்ன கஷ்டம்?

    ஏன் எனில் “எம்மமதமும் சம்மதம், மதச் சார்பின்மை” இதை எல்லாம் இன்றைக்கு யாரவது கடைப் பிடிக்க தயாராக இருக்கிறார்கள் என்றால் அது இந்து மட்டுமே!

    நல்லவனாக இருக்க வேண்டிய கட்டாயம் இந்துவுக்கு மட்டுமே!

    எல்லோரும் கக்கும் விசத்தை எடுத்து, எங்கள் தொண்டையில் வைக்க வேண்டிய நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்.

    இயேசு கிறிஸ்து சகிப்புத் தன்மையை, விட்டுக் கொடுக்கும் தன்மையை வலியிருத்திக் கூறியுள்ளார்.

    “ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தப் படுத்தினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ” என்று கூறியுள்ளார் இறை மகனார். அதை கிருஸ்துவர்களுக்கு நினைவு படுத்தினால், என்னை கிருஸ்துவர்களுடன் இரண்டு மைல் தூரம் வரும்படி பலவந்தம் செய்கிறார்கள்.

    எனவே தயவு செய்து காட்டு மிராண்டிக் கருத்துக்களை ஏற கட்டி விட்டு மனம் திருந்துங்கள்.

  97. //Hai,

    I can give you an small example. See when we go alongside road, if we put a small brick on one day, then you must see immediately on the next day, people like (hindus) will solute the brick with ornaments and starting conducting poojas. Thus, you can see how Hinduism is formed all over the world//

    தான் ஒரு இன‌த்தை ம‌ட்டும் தேர்ந்து எடுத்து, அந்த‌ இன‌த்தை, ”நீ ம‌ற்ற இன‌த்துட‌ன் போராடு, நான் உன்னை வெற்றி பெற‌ வைப்பேன், பிற இன‌ங்க‌ளை நீ அழித்துப் போடு”என்று ஹிட்ல‌ரைப் போல‌ ரேசிஸ்ட் ம‌ன‌ப்பான்மையுட‌ன் செய‌ல் ப‌ட்ட‌ ச‌க்திக‌ளையே க‌ட‌வுலாக‌ வ‌ழிப‌டுவதை விட கல்லை வழிபடுவது ஆயிரம் மடங்கு மேலானது.

    உருவ வழிபாட்டை கண்டித்து விட்டு கடைசியில் கல்லை துணி போட்டு மறித்து வழிபடும் மார்க்கதவரையும் பார்த்து விட்டோம்!

  98. //எம்முடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ஜீவ‌னுள்ள கடவுள் என்று ஒரு பிரிவின‌ரும், என்னுடைய‌ க‌ட‌வுள் ம‌ட்டுமே ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை உடைய‌ உண்மையான‌ க‌ட‌வுள் என்று ஒரு பிரிவின‌ரும் ஆயுத‌ங்களை எடுத்து ச‌ண்டையிட்டு உல‌கையே இடுகாடு ஆக்கும் ப‌ணியை செய்து வ‌ருகின்ற‌ன‌ர்//

    இது என்ன சைவ-வைணவ யுத்தத்தை நினைவுபடுத்தும் கருத்து
    போலிருக்கிறதே ..?

    இராமாயண- மகாபாரத யுத்தத்தை டிவியில் பார்த்த பிறகுமா..?//

    சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையிலான போட்டி, யார் அதிக பக்தி செலுத்துபவர்கள் என்ற வகையில் பக்தியிலான போட்டியே தவிர என்றைக்கும் அது ஆயுதப் போராக இருந்தது இல்லை. இந்து மதம் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட மதம். வைணவர்களின் முக்கியக் கடவுளான இராமரே சிவனை வணங்கி வழிபாடு செய்தவர்.

    இராமயணப் போர், (edited) இராவணன் சீதையை பிறன் மனைவியை தூக்கிச் சென்றதால், சீதையை மீட்க நடத்தப் பட்ட போர்.

    மகாபாரதப் போர், “தன்னுடைய சகோதரர்கள் வாழவே கூடாது” என்று காண்டு வெறி பிடித்து இருந்த ஒருவருக்கு எதிராக போர். அவையெல்லாம் ஒரே மதத்தை பின்பற்றியவர்களுக்குள் நடை பெற்ற போர்கள்.

    என் கடவுள் தான் ஜீவனுள்ள கடவுள், என் கடவுள் தான் வல்லமையுள்ள கடவுள் என்று கற்கால பழக்கத்தில் தங்கள் கடவுளின் வலிமையைக் காட்ட நடத்தப் பட்ட போர்கள் அல்ல அவை.

  99. //இந்து மதத்தில், புத்தர் ஆசையை ஒழித்து விடுதலை அடையும் வழியைப் பரப்பிய போதும் சரி//

    ஓஹோ …புத்தரும் இந்துவாகிவிட்டாரா..?//

    புத்தர் எப்போதுமே இந்துதான்.

    இந்துமதத்தில் எது முக்கியம் என்று காட்டவே புத்தர் வந்தார்.

    இயேசு கிறிஸ்து எப்படி யூதர்களுக்கு உண்மையை புரிய வைக்க வந்தாரோ, அப்படி தான் புத்தர் இந்துகளுக்கு சில உண்மைகளை நினைவு படுத்த வந்தார்!

    இயேசு கிறிஸ்து எதற்காக வந்தார் என்பதை யூதர்கள் புரிந்து கொள்ளவில்லை.

    ஆனால் புத்தர் எதற்காக வந்தார் என்பதை இந்துக்கள் புரிந்து கொண்டு விட்டோம்.

    ஆனால் புத்தரைப் பின்பற்றியவர்கள் அதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

    நீங்கள் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகினால் பல உண்மைகளைப் புரிந்து கொள்ள இயலும்.

    ஆனால் பிற மதத்தில் எப்படிக் குறைகளை மட்டுமே கண்டு பிடிப்பது,

    பிற மதங்களில் உள்ள சில குறைகளைக் கண்டு பிடிப்பது,

    பிறகு இல்லாத பல குறைகளை எட்டுக் கட்டிச் சேர்ப்பது,

    பிறகு அந்த மதமே முற்றிலும் தவறானது,

    தன்னுடைய மதம் மட்டுமே உண்மையானது என்ற வழியைப் பின்பற்றினால்

    உண்மைகளை உணர முடியாது. பரலோக சாம்ராஜ்ஜியத்தில் நுழையவும்
    முடியாது!

  100. Brother Trichykkaaran,
    I am a Bible following Christian. I am aware that you have some bible knowledge. You are asking me to Break the first commandment itself by asking me to worship Rama and Shiva. I cannot do that.
    Probably you may met wrong people as Christian Evangelists. I also came across many such guys, who use the Lord Jesus name for their Business. Probably your bitter feeling with them made you to have bad opinion about all the servants of Christ. Just because one Hindu killed Gandhi, will you hate all the Hindus?
    Even though I doesn’t pray your Rama and Shiva with you. I can pray for you to Jesus.
    Knock, it will be opened to you. Ask, it shall be given to you. Search, you will find it.
    You need not believe me or anybody. Ask GOD to reveal himself to you. He will reveal himself to you.

    In the love of Christ,
    Ashok

  101. Ask GOD to reveal himself to you. He will reveal himself to you.

    I met GOD in the downtown pub. He introduced himself as an atheist.

  102. Dear Mr. Rama,

    You might have already read as what I wrote earlier,

    இயேசு கிறிஸ்து என்று ஒருவர் உண்மையில் இருந்தார் என்று நான் அடித்துக் கூறவில்லை.நான் இயேசுவை நேரில் கண்டதில்லை, எனவே இயேசு என்று ஒருவர் நிச்சயம் இருந்தார் என்று சாட்சி கொடுக்க நான் தயாராக இல்லை”

    அதே நேரம் இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்ததற்கான, வாழ்ந்ததற்கான வாய்ப்புகளும் உள்ளன என்றே கருதுகிறோம்.

    But the web site what you referred did not have the subsatance to prove that the entire life and teachings of Jesus was a mere fiction.

    From the site, what we can find that they have compared the historical proof for Caeser to that of Jesus.

    Of course I do agree that Julius Caeser has a better proof , a very good proof for his life.

    But Julius Caeser was a king, not just a king an Emperor. But Jesus was a common man , son of a carpenter. Jesus Christ was just the many of those who were under trial in the court of Philate, Just one of the Governors of Julius caesar. So we can not get historical proof for Jesus as good as that of Caesar.

    Actually ancient history is derived only from the books written on those periods and from archeological interpretation. But the period 2000 years before is not an ancient period, and more evidence could be submitted!

    Mr. Rama,If you want to proof that “Jesus of Nazaerath” never existed, …well, you can try, but you have to work hard, if you could prove that the entire story of Jesus is concocted, it could be earth shattering discovery in the history of History.

    I am sorry, but again I can only say that the website what you referred does not have that much compelling evidence, proof or findings to categorically declare that the “Jesus of Nazaerath” was a totally concocted story.

    By saying the above, it does not mean that I agree and accept to provide an unqualified authority to Bible! I reserve my rights to question each and every verse of Bible, criticise it, argue against it and may be appreciating some of the verses which I find good!

    Again,

    இயேசு கிறிஸ்து என்று ஒருவர் உண்மையில் இருந்தார் என்று நான் அடித்துக் கூறவில்லை.நான் இயேசுவை நேரில் கண்டதில்லை, எனவே இயேசு என்று ஒருவர் நிச்சயம் இருந்தார் என்று சாட்சி கொடுக்க நான் தயாராக இல்லை!

  103. திருச்சிக்காரன் அவர்களே,
    தங்களுக்கும் தங்கள் கலாச்சாரத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லாத இயேசுகிறிஸ்துவைத் தங்கள் நபி என்று சொந்தங் கொண்டாடும் இஸ்லாமியரைப் போன்று இந்துக்கள் புத்தரை சொந்தங் கொண்டாடலாம்; இப்படியே ஜைனரையும் சீக்கியரையும் ஆதி திராவிடரை அடைத்ததுபோல இந்துத்வா கூண்டுக்குள் அடைக்க இயலுமா..?

  104. Ashok, as you are a followe of the Bible I wiil appreciate your comment on King James Bible.Please have a look at the following site. All quotes are from King James bible only.
    https://www.heterodoxy.com/societyofchristians/
    Obviously, you cannot cheerypick from Bible what is good and what is bad because Bible, as per Christians, is the true word of God.

  105. தம்பி Ashok kumar Ganesan ,

    //I am a Bible following Christian. I am aware that you have some bible knowledge. You are asking me to Break the first commandment itself by asking me to worship Rama and Shiva//

    தம்பி அசோக் குமார் கணேசன் அவர்களே,

    தம்பி, நீங்கள் இஸ்ரவேலர் வழியில் வந்தவரா? நீங்கள் எகிப்து தேசத்திலிருந்து தப்பி கடலுக்குள் புகுந்து கானான் தேசம் வந்தவர்கள் வழியில் வந்தவரா? அதை நீங்கள் முதலிலேயே கூறியிருந்தால் நான் உங்களை இந்துக கடவுள்களை வணங்கத் தயாரா என்று கேட்டே இருக்க மாட்டேன்.

    ஏனெனில் நீங்கள் கூறிய மட்டும் first commandmentம், அதோடு இடப்பட்ட எல்லா commandmentகளும் இஸ்ரவேலர் வழியில் வந்தவர்களுக்கு மட்டும்தான்.

    இஸ்ரவேலர்களைத் தவிர வேறு யாருக்கும் , இந்த first commandmentட்டோ, பிற கட்டளைகளோ இடப் படவேயில்லை.

    ஏனெனில் தமிழர்களோ, தெலுங்கர்களோ, பிற எந்த இந்தியர்களோ ஒரு காலத்திலும் எகிப்தில் அடிமையாகவும் இல்லை. அவர்களை யாரும் மீட்டுக் கொண்டு வரவும் இல்லை.

    எனவே இஸ்ரவேலரைத் தவிர உலகில் எந்த மூலையில் இருக்கும் எந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கும் இந்த “கட்டளைகள் ” பொருந்தாது, விதிக்கப் படவுமில்லை

    உபாகமம்

    அதிகாரம் 5

    1) மோசே இஸ்ரவேல் எல்லோரையும் அழைப்பித்து அவர்களை நோக்கி இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்க்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள் நீங்கள் அவைகளின் படியே செய்யும் படிக்கு அவைகளைக் கைக் கொள்ளக் கடவீர்கள்.

    6)உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணிய உன் தேவனாகிய கர்த்தர் நானே!

    7) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

    8)மேலே வானத்திலும் கீழே பூமியிலும் , பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம்.

    9)நீ அவைகளை நமஸ்க் கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.

    first commandmentம், அதோடு இடப்பட்ட எல்லா commandmentகளும் இஸ்ரவேலர் வழியில் வந்தவர்களுக்கு மட்டும்தான்.

    எல்லா commandmentகளும் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களுக்கு, அவர்களை மீட்டுக் கொண்டு வந்த கடவுள் கூறியது. அடிமையாக இருந்தவர்களை மீட்ட கடவுளுக்கு நன்றியாக இருக்க வேண்டியதுதான். நீ என்னைத் தான் கும்பிட வேண்டும் என்று அந்தக் கடவுள் யூதர்களப் பார்த்து கூறியிருக்கலாம்.

    அதற்க்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? தமிழர்கள் எகிப்து போகவில்லையே?

    நியாயப் பிரமாணம் யூதர்களுக்கும் அவர்களுடைய கடவுளுக்கும் இடையில் உருவானது. அதற்க்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

    இயேசு கிறிஸ்து யூதர்களைத் திருத்த அனுப்பப் பட்டவர். அவர் உண்மையில் போதிக்க வந்தது யூதர்களுக்குத்தான்.

    “நீர் யூதர்களின் ராஜாவா”,

    “அதை நீரே சொன்னீர்”

    எனவே இயேசு கிறிஸ்து அவருடைய போதனையில் “இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29) “என்று சரியாகத் தான் கூறியுள்ளார்.

    எனவே யூதர்களுக்கு கர்த்தர் மட்டுமே கடவுள் , யூதர்களிடம் நான் சென்று ராமரையோ, சிவனையோ வணங்க சொல்லவில்லை.

    நீங்கள் பைபிளையும் , இயேசு கிறிஸ்துவையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற அச்சம் எனக்கு உண்டாகிறது!

  106. வணக்கம்,
    //இது என்ன சைவ-வைணவ யுத்தத்தை நினைவுபடுத்தும் கருத்து
    போலிருக்கிறதே ..?இராமாயண- மகாபாரத யுத்தத்தை டிவியில் பார்த்த பிறகுமா..?//

    சைவ வைணவ சண்டை என்பது சம்பந்தி சண்டை ( நன்றி: கண்ணதாசன். அர்த்தமுள்ள இந்து மதம் ). அய்யா நீங்கள் சொல்வது போல் அது யுத்தம் அல்ல. அதை யுத்தமாக காட்டி காசு பார்த்து விட்டார்கள் சினிமாவில் அவ்வளவுதான்.

    //ஓஹோ …புத்தரும் இந்துவாகிவிட்டாரா..?//

    புத்தர் இந்து தர்மத்தில் இருந்து வித்தியாசமாக அதன் தர்மங்களை வெளியிட்டார், ஆனால் அதுவே மதமானது அவரே எதிர்பார்க்காத நிகழ்வு.

    //எனது நியாயமான எதிர்வாதத்தை மூன்று முறை அனுப்பியும் இன்னும் பதிக்கவில்லை; நீங்களோ என்னைப பரியாசம் செய்கிறீர்கள்..!//
    உங்கள் எதிர் வாதம் நியாயமானதுதான் எனில் கண்டிப்பாக பதிவிட்டிருப்பர்கள்
    ஒரு வேளை அது உங்களுக்கு மட்டும் நியாயமானதாக இருந்திருக்கலாம்.

    //நான் உங்களுடன் சேர்ந்து இயேசு கிறிஸ்துவின் முன் மண்டியிட்டு வணங்கவும், அவரிடம் ஜெபிக்கவும், நான் செய்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்க்கவும் தயார்!//

    இது ‘ஒரு’ பரந்து விரிந்த இந்துவின் மனம், உண்மையான பக்தியின் அடித்தளம். சர்வமாய் சகலத்திலும் உள்ள இறைவன் சர்ச்சிலும் இருப்பான் என நம்புகிறது.

    //Break the first commandment itself by asking me to worship Rama and Shiva. I cannot do that.

    இந்த அன்பு மனமோ கடவுளை சர்சினுள்ளே மட்டும் சந்திக்கிறது. பாவம் சர்வ வல்லமை கொண்ட தேவன் சர்சுக்குள்ளே சிறைவாசம்.

    //களிமிகு கணபதி அவர்களே..,உங்கள் பெயர் ஏனோ களிமண்ணை நினைவுப்படுத்துகிறது;அண்மையில் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி காரணமாக இருக்கலாம்;//

    மன்னிக்க வேண்டும் கிலேடி சார், களி என்ற தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தால் தயவு செய்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு பொது தளம், மற்ற தனி நபர் விமர்சனம் நாகரிகமானது இல்லை. விநாயகர் சதுர்த்தியை காரணமாக சொன்னது சரிதான், இருக்கட்டும் அதாவது ஒருநாள் பண்டிகை பரவாஇல்லை, ஆனால் நான் இது வரை பார்த்த எந்த சர்ச்சிலும் ஒரு கற்சிலை கூட கண்டதில்லை. அவைகள் எதனால் செய்யப்பட்டன.

    //இதற்காக எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்;//

    ஆமாம் உண்மைதான் அதாவது க்ரிதுவரல்லாதவர் தானே, அது இன்றும் நாகாலாந்தில் நடந்துகொண்டுதான் உள்ளது.

    //5000 வருட இந்து புராணங்கள் சாதிக்க முடியாததை பைபிள் சாதித்துவிட்டது..!//

    மத மாற்றத்தை என்று தெளிவாக குறிப்பிடுங்கள் சார்.

    //நமது தலையாய கடமை இயேசு வியாபாரிகளின் மயக்க மொழிகளிலிருந்து மக்களை மீட்பதுதான்.//

    உண்மைதான் ஸ்ரீ குமார சாமி அய்யா, ஆனாலும் அடிப்படை அசல், போலி, வித்தியாசம் காட்ட விளக்கித்தான் ஆகவேண்டியுள்ளது. என்ன செய்வது கடவுளுக்கும் ஞானிக்கும் வேறுபாடு தெரியாமல், அதற்க்கு நமது தத்துவங்களுக்கு முலாம் பூசி இதுதான் அசல் என வியாபாரம் செய்தால் ஆராய்ச்சிக்கான அவசியம் ஏற்பட்டு விடுகிறது.

  107. எனது நண்பர் கிரிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் SC-பிரிவை சேர்ந்த அவர்கள் இருக்கிறார். அவர் மதத்தில் அப்பிரிவை சரியாக கவுரவிப்பதில்லை என்ற காரணத்தினால், அவர் இந்து மதம் மாற விரும்புகிறார். இப்பொழுது அவரது குழப்பம் எந்த ஜாதியில் சேர்வது என்பது ஏன்னென்றால் ஜாதி மிக முக்கியம் அல்லவா…? அவர் உயர்ஜாதிகளுக்குள் முதல் மூன்று ஜாதிகளுக்குள் இணையவேண்டும் என்கிறார். இது இந்து மதத்தில் சாத்தியமா…?

    நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் ஆனால் சிலைவழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும் வெறுப்பவன்.

  108. Dear Mr. Editor,

    I think you are selectively stopping my comments.

    Any way thanks for having published many of may comments so far.

    Regards,

    Thiruchchikkaaran

  109. Dear Mr. Ramagopal,

    //எனது நண்பர் கிரிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் SC-பிரிவை சேர்ந்த அவர்கள் இருக்கிறார். அவர் மதத்தில் அப்பிரிவை சரியாக கவுரவிப்பதில்லை என்ற காரணத்தினால், அவர் இந்து மதம் மாற விரும்புகிறார். இப்பொழுது அவரது குழப்பம் எந்த ஜாதியில் சேர்வது என்பது ஏன்னென்றால் ஜாதி மிக முக்கியம் அல்லவா…? அவர் உயர்ஜாதிகளுக்குள் முதல் மூன்று ஜாதிகளுக்குள் இணையவேண்டும் என்கிறார். இது இந்து மதத்தில் சாத்தியமா…?//

    To be frank with you, caste differences has reduced to a large extent now. Day by day, year by year the Hindu community is becoming homogenius!
    Now any Hindu can go to Thirupathi temple, nobody is asking any one as which caste he is belonging to, this applies to all the temples now.

    Still if your friend wants to join in any caste, if he wants to be a part of Bhramin caste, he can become a Bhramin.

    //நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் ஆனால் சிலைவழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும் வெறுப்பவன்//

    “வெறுப்பு” hatredness destroys the mankind,

    “வெறுப்பு” hatredness converts the civilised people into barabaric type

    “வெறுப்பு” hatredness makes the man into an animal,

    So please remove the “வெறுப்பு” hatredness from your mind!

    Why do you hate சிலைவழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும?

    What is your problem?
    Did the idol worshippers came to you and stolen your money?

    Did the idol worshippers plundered the other countries?

    Did the idol worshippers involve in war and killed millions in the name of God?

    Did the many god worshippers hate one God worshippers?

    No!

    Then why do you hate them?

    In my opinion, Idol worship is probably the best form of Worship, or atleast one of the best form of worship!

    There is absolutely no wrong or Sin in idol worship.

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the most tolerant people!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who accepts all forms of worship!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who does not spread hatredness for others!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who accepts all forms of worship!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who does not compell others to follow their method!

    I dont know what is the problem for other people, If I worship my God- I am not stealing money, I have not cheated any one, I am not disturbing the soceity!

    I can say confidently, that all these above mentioned good qualities have been inherited by me only through idol worship!

    Why do you hate these practices?

    Do you hate them because they produce civilsed people?

  110. அன்புள்ள திருச்சிக்காரன்,

    உங்கள் அருமையான கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் இந்துக்களின் பரந்த மனதினை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறீர்கள். ஆனால் கிளாடிக்கும் அசோக்குக்கும் அது புரிய போவதில்லை. சில வரலாற்று உண்மைகளை இங்கு நாம் பார்க்கவேண்டியுள்ளது. ஏசு யூதர்களிடம் உள்ள குறைகளுக்காக வரவில்லை. ஏசு என்ற உருவகம் யூதத்தின் பரிபூரணத்துவம் என்பதாக காட்டப்பட்டது. அதாவது யூதம் அடிப்படையிலேயே குறை உள்ளது என்றும் அதனை பரிபூரணப்படுத்த ஏசுவால் இயலும் என்பதும். ஏசுவை மெசையாவாக்க யூத விவிலியம் திரிக்கப்பட்டது. யூத விவிலியத்தை பழைய ஏற்பாடு என்றார்கள். வாழும் மதம் ஒன்றின் புனிதநூலை அவர்களுக்கு விரோதமாக பழைய ஏற்பாடு என அறிவிக்க தேவைப்படும் இறையியல் ஆணவத்தை பாருங்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஏசுவின் பெயரால் இவர்கள் செய்திருக்கும் ஆகச்சிறந்த சாதனைகள் என்ன? அடிமை வியாபாரம், எய்ட்ஸைவிட மோசமான இனவெறியை பரப்பியமை இன்றைக்கும் மதமாற்றத்தால் குடும்பங்களை உடைத்தல். எனவேதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னார்: “ஏசு என்று ஒருவர் பிறக்காமல் இருந்திருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்குமென்று” உங்களை போன்ற இந்துக்களால் ஏசுவுக்கு ஏதாவது கதி மோட்சம் கிடைத்தால் உண்டு. ஏசுவும் கிறிஸ்தவமும் சிலுவையில் மாண்டு வேதாந்தம் எனும் பாரத ஆன்மிகத்தளத்தில் உயிர்த்தால் உண்டு. ஆனால் அதற்கு ஏசுவே ஒரே தெய்வத்தின் ஒரே தேவகுமாரன் அவரையன்றி வேறு கதியில்லை என்கிற கருத்தாக்கங்களையெல்லாம் கைவிட வேண்டும். அது ஒன்றும் கஷ்டமில்லை. கன்னிபிறப்பு போல பொய்களின் மீது உருவாக்கப்பட்ட கதையாடலை மீள் உருவாக்கம் செய்வது அப்படி ஒன்றும் கடினமில்லை.

    அநீ

  111. அன்புள்ள அர‌விந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் அவர்க‌ளே,

    என்னுடைய‌ பின்னூட்ட‌ங்க‌ளை ப‌டித்து க‌ருத்து தெரிவித்த‌ற்க்கு மெத்த‌ ந‌ன்றி.

    நீங்க‌ள் கூறிய‌வை ப‌ல‌வ‌ற்றில் நான் உட‌ன்ப‌டுகிறேன்.

    //நீங்கள் இந்துக்களின் பரந்த மனதினை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறீர்கள்.//

    //ஆனால் கிளாடிக்கும் அசோக்குக்கும் அது புரிய போவதில்லை//

    ஆயிர‌ம் முறை கூறினாலும்,அது அவ‌ர்க‌ளுக்குப் அது புரிய போவதில்லை, புரிந்தாலும் அவ‌ர்க‌ள் அதை ஒத்துக் கொள்ள‌ மாட்டார்க‌ள்.

    எவ்வ‌ள‌வு ஆதார‌த்துட‌னும், யுக்தியை அனுச‌ரித்தும், உண்மையை பின்ப‌ற்றியும் , நியாய‌மாக‌க் கூறினாலும் அது அவ‌ர்க‌ளுக்கும், அவ‌ர்க‌ளைப் போன்றவர்க‌ளுக்கும் புரிய போவதில்லை,புரிந்தாலும் அவ‌ர்க‌ள் அதை ஒத்துக் கொள்ள‌ மாட்டார்க‌ள்.

    புரிந்தாலும் அவ‌ர்க‌ள் அதை ஒத்துக் கொள்ள‌ மாட்டார்க‌ள்.

    ஆனாலும் நாம் ந‌ம்முடைய‌ க‌ட‌மையை செய்கிறோம்.

  112. தம்பி Ashok kumar Ganesan ,

    //I am a Bible following Christian. I am aware that you have some bible knowledge. You are asking me to Break the first commandment itself by asking me to worship Rama and Shiva//

    தம்பி அசோக் குமார் கணேசன் அவர்களே,

    தம்பி, நீங்கள் இஸ்ரவேலர் வழியில் வந்தவரா? நீங்கள் எகிப்து தேசத்திலிருந்து தப்பி கடலுக்குள் புகுந்து கானான் தேசம் வந்தவர்கள் வழியில் வந்தவரா? அதை நீங்கள் முதலிலேயே கூறியிருந்தால் நான் உங்களை இந்துக கடவுள்களை வணங்கத் தயாரா என்று கேட்டே இருக்க மாட்டேன்.

    ஏனெனில் நீங்கள் கூறிய மட்டும் first commandmentம், அதோடு இடப்பட்ட எல்லா commandmentகளும் இஸ்ரவேலர் வழியில் வந்தவர்களுக்கு மட்டும்தான்.

    இஸ்ரவேலர்களைத் தவிர வேறு யாருக்கும் , இந்த first commandmentட்டோ, பிற கட்டளைகளோ இடப் படவேயில்லை.

    ஏனெனில் தமிழர்களோ, தெலுங்கர்களோ, பிற எந்த இந்தியர்களோ ஒரு காலத்திலும் எகிப்தில் அடிமையாகவும் இல்லை. அவர்களை யாரும் மீட்டுக் கொண்டு வரவும் இல்லை.

    எனவே இஸ்ரவேலரைத் தவிர உலகில் எந்த மூலையில் இருக்கும் எந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கும் இந்த “கட்டளைகள் ” பொருந்தாது, விதிக்கப் படவுமில்லை

    உபாகமம்

    அதிகாரம் 5

    1) மோசே இஸ்ரவேல் எல்லோரையும் அழைப்பித்து அவர்களை நோக்கி இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்க்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள் நீங்கள் அவைகளின் படியே செய்யும் படிக்கு அவைகளைக் கைக் கொள்ளக் கடவீர்கள்.

    6)உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணிய உன் தேவனாகிய கர்த்தர் நானே!

    7) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

    8)மேலே வானத்திலும் கீழே பூமியிலும் , பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம்.

    9)நீ அவைகளை நமஸ்க் கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.

    first commandmentம், அதோடு இடப்பட்ட எல்லா commandmentகளும் இஸ்ரவேலர் வழியில் வந்தவர்களுக்கு மட்டும்தான்.

    எல்லா commandmentகளும் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களுக்கு, அவர்களை மீட்டுக் கொண்டு வந்த கடவுள் கூறியது. அடிமையாக இருந்தவர்களை மீட்ட கடவுளுக்கு நன்றியாக இருக்க வேண்டியதுதான். நீ என்னைத் தான் கும்பிட வேண்டும் என்று அந்தக் கடவுள் யூதர்களப் பார்த்து கூறியிருக்கலாம்.

    அதற்க்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? தமிழர்கள் எகிப்து போகவில்லையே?

    நியாயப் பிரமாணம் யூதர்களுக்கும் அவர்களுடைய கடவுளுக்கும் இடையில் உருவானது. அதற்க்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

    இயேசு கிறிஸ்து யூதர்களைத் திருத்த அனுப்பப் பட்டவர். அவர் உண்மையில் போதிக்க வந்தது யூதர்களுக்குத்தான்.

    “நீர் யூதர்களின் ராஜாவா”,

    “அதை நீரே சொன்னீர்”

    எனவே இயேசு கிறிஸ்து அவருடைய போதனையில் “இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29) “என்று சரியாகத் தான் கூறியுள்ளார்.

    எனவே யூதர்களுக்கு கர்த்தர் மட்டுமே கடவுள் , யூதர்களிடம் நான் சென்று ராமரையோ, சிவனையோ வணங்க சொல்லவில்லை.

    நீங்கள் பைபிளையும் , இயேசு கிறிஸ்துவையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற அச்சம் எனக்கு உண்டாகிறது!

  113. Dear Brothers,
    Thanks for reading my humble comments and thanks for your responses. Brother Trichykkaaran, u don’t even know my age and still started calling me as Thambi. Anyway, I am happy that atleast u r able to give relationship to me.
    I am not talking about Christ with you all, because of my Bible “Knowledge” or whatever others have told about Jesus. It based on my personal relationship with Jesus. I know many of my will again make fun of me. I am not bothered brothers. God is not a political person, so that u can regionalize him. There is only one GOD for this entire universe. Looks like there is no need for me to share the Gospel with you any more. You guys have heard about it pretty much by now. My Job is done with you folks. May GOD bless you all.

    In the Love of Christ,
    Ashok

  114. No body answered me so far. conversion is not banned. its not illegal. why you all shout at a legal thing? which law says conversion is illegal? so, being an indian, why you are against a legal thing?

  115. //நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் ஆனால் சிலைவழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும் வெறுப்பவன்//

    சிலை வழிபாடு , பல தெய்வ வழிபாடு செய்வதால் உங்களுக்கு என்ன இடையூறு ஐயா? நாங்கள் சில செய்து வழிபடும் தெய்வங்கள், எங்களை எந்த ஒரு இனத்தையும் அழிக்கக் கூறவில்லையே. எந்த ஒரு குறிப்பட்ட இனத்தை தேர்ந்து எடுத்து, பிற இனத்தவர்கள் மீது படை எடுக்க சொல்லவில்லையே!

    ” உன்னைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளான எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்”

    இப்படிப் பட்ட வகையிலே ஒருவர் வாழும் இடத்திலருந்து அவர்களை விரட்டி அழித்து, அவர்களை சங்காரம் பண்ணி, வேறு ஒருவரை குடி அமர்த்தும், கிரிமினல் கட்டளை இடும் கடவுளை வணங்கினால் உங்களுக்கு இனிக்கும்!

    விக்கிரக வழிபாடு செய்தால் , பல தெய்வ வழிபாடு செய்தால் உங்களுக்கு வெறுப்பு உண்டாகுமா?

    நீங்கள் எந்தக் காலத்து ஆசாமி? கற்க் காலத்தை சேர்ந்த குகை வாசி மனிதனைப் போல எண்ணங்களை உடையவர் ஆக இருக்கிறீர்களே?

  116. //நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் ஆனால் சிலைவழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும் வெறுப்பவன்//

    உங்களுக்கு எந்தக் கடவுளை வணக்குவது பிடிக்கும்? நீ எனக்காக பலரைக் கொன்று விட்டு வா. உனக்கு யாராலுமே தொடப்படிராதவைகளை பரிசாக வழங்குவேன் என்று கூறுபவரை வணங்குவதுதான் நாகரீகம் என்று நினைப்பவர் போலும்!

  117. இராவணனை பொருக்கி என்று எழுதினால் அப்போது எடிட் செய்கிறார்கள். ஆனால் இந்து கரப்பான் பூச்சி என்ற பெயரில் எழுதியயுள்ளார் ஓர் நாகரீகமானவர். அதை எடிட் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையா?

  118. வணக்கம்,
    ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன், உங்கள் பின்னூட்டம் முழுவதும் உண்மை. நான் சொல்ல நினைத்த கருத்துக்கள். ஆனால் என்னால் இப்படி ஆணித்தரமாக எடுத்துக்கூற முடியாது நன்றி, மிக அழகாக சொன்னீர்கள். தங்களிடம் ஒருகேள்வி, தங்களின் அகப்பயணம் தொடர்கிறதா, மிகவும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன். சரி எப்படி இவ்வளவு ஆதாரங்களை சேகரிக்கிறீர்கள். அற்புதமான பணி உங்களுடையது, தொடருங்கள் நல்வாழ்த்துக்கள்.

    திருச்சி நண்பரே தயவு செய்து உறங்குபவர்களை எழுப்புங்கள், உறங்குதற்போல் நடிப்பவர்களை எழுப்ப முயற்சி செய்வது வீண் முயற்சி.

    உண்மையான பக்தி கொண்டவராய் ஒருவர் கிருத்துவராக மாறி இருப்பின் உண்மையில் அது ஒரு இறைத்தேடல் என்றாவது மதிக்கலாம். நமது தர்மத்தில் இறைவன் எல்லாமுமாக இருப்பவன் எனவே ஏசுவின் ரூபத்திலும் இறைவனை காண அவர்கள் முயன்றுள்ளார்கள் என்றாவது மதிக்கலாம்.

    ஆனால் இவர்களோ அந்தஸ்த்துக்காக மதம் மாறியவர்கள், எனவே இவர்களின் தேடல் என்பதுவே வேறுபாடானது. என்றோ தொழில் ரீதியாக ஏற்படுத்தப்பட்ட வர்ணாசிரமம் சில மானுடர்களின் சாதியாக உருமாறி விட்டது. அதை அடிப்படையில் உணர்ந்தும்
    உணராமல் இருப்பவரிடம் தத்துவமும் விளக்கமும் அவசியமில்லாத ஒன்றாகும்,

    மதிப்பும், மரியாதை, கொவ்ரவம் இவை எல்லாம் பிறப்பால் வருவபை அல்ல, நடத்தையால் வருவது. அது என்ன சார் அப்படியொரு அழுத்தமாக சாதி மிக முக்கியம்தானே என்று கேட்டுள்ளார். சரி அவர் நண்பர் எந்த நம்பிக்கையில் மதம் மாறினாராம். அங்கு மட்டும் பிரிவுகள் இல்லையா. அதைக்கண்டு திரும்ப ஓடிவர ஆசைப்படுகிறார்.

    அதிலும் தெய்வ நம்பிக்கை கொண்டவராம் பல தேவ வணக்கம் சிலை வணக்கம் வெறுக்கிறாராம். வெறுப்பு என்ற வார்த்தையை தொடங்கிய பின் விருப்பு என்பதுவே தொலைந்து விடுகிறது, விருப்பமும் சின்ன சின்ன ஆசைகளும்தானே வாழ்க்கையின் வழிகாட்டிகள். அதை விட்டு இவர்கள் உலகத்தில் என்ன வாழ்ந்து விடப்போகிறார்கள்.
    மனவிகாரத்துடன் தானும் துன்புற்று பிறரையும் துன்புருத்தவா.

    குகை மனிதர்கள் கூட தனது உணவிற்க்காகத்தான் வேட்டையாடினார்கள். இவர்களை விட அவர்கள் மேன்மையானவர்கள்.

    இந்துவாகிவிடுவதற்கு மெனக்கெட்டு ஒன்றும் மாறத்தேவைல்லை உயிர்களிடத்து உண்மையான அன்பும், கருணையும், மெய்யான ஈசுவர பக்தியும் அறம் செய்யும் மனமும் ஆத்மசிந்தனையும் நல்ல ஒழுக்கமும் நாணயமும் தமக்குள்ளும் உறையும் இறைவன் எங்கும் உள்ளான் எனவே எங்கும் எதிலும் தீங்கிளையாது இருந்தாலே அவன் இந்துவாகி மேன்மக்களிலும் மேன்மகனாய் மதிக்கப்படுவான்.

  119. தம்பி என்று கூறினால் அவ்வளவாகப் பிடிக்கவில்லை அசோக் அவர்களுக்கு, அண்ணன் என்று கூறினாலும் , திரும்பவும் வயதை கேட்பார். எனவே சகோதரர் என்றே சொல்கிறோம்.

    சகோதரர் அசோக் குமார் கணேசன் அவர்களே,

    நான் கேட்ட சந்தேகங்களுக்கு நேர‌டியான‌ பதில் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்!

    //God is not a political person, so that u can regionalize him.//

    கடவுளை regionalize செய்தது யார்?

    மோசே இஸ்ரவேல் எல்லோரையும் அழைப்பித்து அவர்களை நோக்கி இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்க்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள் நீங்கள் அவைகளின் படியே செய்யும் படிக்கு அவைகளைக் கைக் கொள்ளக் கடவீர்கள்.

    6)உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணிய உன் தேவனாகிய கர்த்தர் நானே!

    7) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

    //There is only one GOD for this entire universe//

    ” உன்னைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளான எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்” //

    கடவுள் உலகில் உள்ள எல்லோருக்கு கடவுள் என்றால் , ஒரு இனத்தை மட்டும் தேர்ந்து எடுத்து அந்த இனத்துக்காக பிற இனங்களை சங்கரித்து அழித்தது ஏன்? இது கடவுளின் செயல் போல தெரியவில்லையே? வேறு ஒன்றின் செயல் போல அல்லவா இருக்கிறது!

    இப்படிப்பட்ட கடவுளை எப்படி உலகத்தில் இருக்கும் எல்லா மக்களும் கடவுளாக ஒத்துக் கொள்வார்கள்?

    தங்களை இரக்கம காட்டாமல் அழித்து சங்கரிக்கச் சொன்னவரையே கடவுளாக எப்படி உலகம் முழுவதும் உள்ளவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.

    //There is only one GOD for this entire universe//

    இதை எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள்.

    நீங்கள் கடவுளைப் பார்த்தது இருக்கிறீர்களா?

    கண்ணை மூடிக் கொண்டு , கடவுளைக் காண்பதாக நினைத்துக் கொள்வது , அல்லது கடவுள் தனக்குள் வருவதாக நினைத்துக் கொள்வது என்பது ஒரு நிகழ்ச்சி. உண்மையில் கடவுளைக் காண்பது என்பது வேறு நிகழ்ச்சி.

    இந்த உலகத்தில் இப்போது 600 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் எத்தனை பேர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள்? சிலராவது பார்த்து இருக்கிறார்களா? ஒருவராவது பார்த்து இருக்கிறாரா?

    எனவே யாரோ ஒருவர் எப்போதோ கூறியதை கூறுவதைக் கேட்டு இங்கெ வந்து இன்னும் இன்னும் அடித்துக் கூறுவது ஏன்?

    கடவுள் எல்லாம் வல்லவராக இருக்கும் பட்சத்தில் தேவைப்படும் போது, அவர் விருப்பப்படும் உருவத்தை எடுத்துக் கொள்ள அவரால் முடியாதா?

    “ஏ கடவுளே, நீ உருவம் இல்லாமல் தான் இருக்க வேண்டும், உருவத்தை எடுத்துக் கொள்ள உனக்கு அனுமதி இல்லை” என கடவுளுக்கே கட்டளையிடும் அளவுக்கு வலிமை உள்ள நபர்கள் யாராவது இருக்கிறார்களா?

    விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதியானவர் ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு இந்த மண்ணுக்கு வர அவருக்கு ஏதாவது தடை இருக்கிறதா?

    “அட கடவுளே, நீ இனிமேல் வாய் திறந்து எதுவும் பேசக் கூடாது” என்று கடவுளின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி மூடும் வலிமை யாருக்காவது இருக்கிறதா?

    தேவைப் படும் போது, தேவையான உருவங்களை எடுத்துக் கொண்டு இந்த மண்ணில் அவதரிக்கவும், தேவைப்படும் போது அவர் விருப்பப் படும் நேரத்தில் எந்த ஒரு செய்தியையும் வெளிப்படுத்த, பிறர் அனுமதியைக் கேட்க கடவுளுக்கு கட்டாயம் இருக்கிறதா?

    அப்படிக் க‌ட‌வுள் உருவ‌ம் எடுத்து வ‌ந்து, ம‌க்க‌ளொடு ம‌க்க‌ளாக‌ வாழ்ந்து, ம‌க்க‌ளுட‌ன் விலையாடீ, மக்களுக்கு எடுத்துக் காட்டாக‌ வாழ்ந்து, ம‌க்க‌ளுக்காக‌ப் போராடிய போது, அதே வ‌டிவிலே , அதே உருவ‌த்திலே க‌ட‌வுளை வ‌ண‌ங்குவ‌துதானே, பொருத்த‌மான‌தும், பிடித்த‌மான‌தும் ஆகும்?

    கொஞ்சம் சிந்தியுங்கள்!

    உங்களின் அறிவைக் கூர்மையாக்கி, உங்களுக்கு இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து ஒளியைக் காட்டி, அழிவில்லா நித்திய ஜீவா நிலைக்கு உங்களை உயர்த்தும் படிக்கு நான் ஒளிக் கடவுளான சூரியன், சிவன், இராமன், முருகன், ஐய்யப்பன், எல்லோரிடமும், எல்லா நாம‌த்தின் பேராலும் பலமுறை வேண்டி வணக்குவேன்- இதை நான் கிண்டலாக சொல்வதாக எண்ணாதீர் , மனப் பூர்வமாக சொல்கிறேன்!

    உங‌க‌ளின் மீது அன்புட‌ன்,

    திருச்சிக்கார‌ன் !

  120. https://tamilhindu.com/2009/08/subbu-column-30/

    //இராவணனைத் தான் கோழை, பொறுக்கிப் பயல் என்று சொன்னேன். அது சரிதானே? //

    ——–

    கோழையும் பொருக்கியுமான இராவணன் சீதை அவர்களைத் தூக்கிச் சென்றான்.

    —-

    திருச்சிக்கார் திருச்சிக்கார், நீங்க எழுதினதுதானெ இதெல்லாம். இருக்கெ திருச்சிக்கார். நாண் என்ன நாகரீஇகம் இல்லாம கேட்டென்? ஆமா இல்லன்னு சொல்லுங்கோ. நீங்கா மேல சொன்னதவிடவா நாகரீஇகம் இல்ல திருச்சிக்கார்? தப்புன்னா மன்னிச்சிடுங்கோ திருச்சிக்கார். ராவணன் பத்தி சொன்னதையும் அழிச்சிடுங்கோ திருச்சிக்கார்.

    டாமில் ஹிண்டு, இதை எடிட் பண்ணிப் போடாதீஇங்க.

  121. நண்பர் திருச்சிகாரரே…

    சிலைவழிபாடு நான்கு வேதங்களும், பகவத் கீதை, முஸ்லிம் வேதம், கிரிஸ்துவ வேதம் இதுபோன்ற பெரிய வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லாதிருக்கும் போது நம்மால் உருவாக்கப்பட்ட சிலையை வணங்குவது அறிவீனமாகும். இதற்கு ஆதாரம் வேண்டும் என்றாலும் என்னால் கொடுக்க இயலும். இந்த வேதங்களில் சிலைவழிபாடு உண்டு என்பதை உங்களால் நிருபிக்க இயலுமா?

    /// உங்களுக்கு எந்தக் கடவுளை வணக்குவது பிடிக்கும்? நீ எனக்காக பலரைக் கொன்று விட்டு வா. உனக்கு யாராலுமே தொடப்படிராதவைகளை பரிசாக வழங்குவேன் என்று கூறுபவரை வணங்குவதுதான் நாகரீகம் என்று நினைப்பவர் போலும்! ///

    போரில் கிருஷ்ணன் அர்ஜூனிடம் உபதேசித்தது என்ன? இராமன் வாலியை கொன்றது என்ன…? இது பல உள்ளன. உங்களுக்கு தேவைபட்டால் போர் தர்மம் என்பீர்கள்… இல்லையேல் மனுதர்மம் என்பீர்கள்… எப்பொழுதும் ஒரே பேச்சாக இருக்க வேண்டும்.

    ஒரு கடவுள் கொள்கையை ரிக்,யசூர், சாம, அதர்வண வேதங்கள் கூறுகிறது. அந்த ஒரு கடவுள் எது? சிவனா… பார்வதியா… கிருஷ்னனா… இராமனா… இது போன்ற என்ன முடியாத அளவிற்கு கடவுளை ஏற்படுத்தி வணங்குவது சுத்த அறிவற்ற செயலாகும். இவர்கள் அவதாரம் என்றால்… இராமன் இந்தியாவில் இருந்த போது மேற்கத்திய நாடுகளை கண்டுகொள்ள முடியாதே! அப்போது என்ன அங்கு இராமன் விடுமுறை விட்டுவிட்டாரா?

    கடவுள் இல்லை என்று நான் கூறவில்லை, கடவுள் இல்லாமல் எதுவும் படைக்கப்படவில்லை. ஆனால் நாம் அறிவுகூர்ந்து சிந்திப்பதில்லையே!

    விலங்குகளை வணங்குவது அதைவிட அறிவீனமாகும். இதைகொண்டு உங்களை புண்படுத்த வேண்டுமென்று கூறவில்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்.

    மேலும் கூறினீர்கள் எனது நண்பர் பிராமன ஜாதியில் சேரலாம் என்று. எனது emailid – ramgobal2002@yahoo.com இந்த முகவரிக்கு உங்கள் முகவரியை அனுப்பினால் எனது நண்பரை நான் உங்களை சந்திக்க அனுப்புகிறேன். நன்றி…நன்றி..

  122. திருச்சிகாருக்கு

    கல்கி அவதாரம் எப்பொழுது வரும் அதற்கு வேதங்களில் இருந்து ஆதாரம் கிடைக்குமா? அதாவது அவர் வருவதற்கான அடையாளங்கள்.

    இந்து – கணக்கற்ற கடவுள்

    முஸ்லிம் – சமாதிகளை வணங்குகிறான்

    கிரிஸ்துவன் – தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாத ஒருவரை வணங்குகிறான்

    ஆனால் இந்த மூன்று மதங்களும் இதற்கு முற்றிலும் முரண்னானவைகள்.

    (Edited and published. – Tamihindu Editorial.)

  123. நான்கு வேதங்களை தவிர எதை உதாரணமாக கொண்டாலும் அது இந்து மதத்தில் இல்லை என்றே அர்த்தம். நான் கேட்ட கேள்விகளுக்கு இந்த வேதங்களிலேயே ஆதாரம் காண்பிக்க வேண்டும். பகவத் கீதையாக இருந்தாலும் பரவாயில்லை.

  124. ஐயா, க‌ர‌ப்பான் பூச்சியாரே ,

    நான் அத‌ற்க்கு எல்லாம் அஞ்சுப‌வ‌ன‌ல்ல‌.

    நான் இராவ‌ண‌ண் ப‌ற்றி சொன்ன‌து ச‌ரிதான்!

    இராவ‌ண‌ன் மிக‌வும் ந‌ல்ல‌வ‌ன் போல‌வும், பெண்க‌ளை மான‌த்தைக் காப்ப‌வ‌ன் போல‌வும் இருக்கிற‌து உங்க‌ளின் க‌ரிச‌ன‌ம்.

    ஆனால் நீங்க‌ள் செய்வ‌து இந்து க‌ர‌ப்பான் பூச்சியாரே என்ற‌ பெய‌ரில் எழுதுவ‌து, அதை த‌மிழ்இந்து எடிட்ட‌ரும் ர‌சிக்கிறார் என்றே நினைக்கிறேன்!

    நான் எழுதிய‌திக் க‌ண்டித்து தாம் தூம் என்று குதித்த‌வ‌ர்க‌ள் இப்போது எங்கே?

    பூச்சியாரே ,பூச்சியாரே , நான் அஞ்சுப‌வ‌ன‌ல்ல‌ பூச்சியாரே !

  125. ஜாதி மடையர்கள்

    இந்தியாவில் ஒரு மாநிலம் ராஜஸ்தான். பா.ஜ.க., ஆட்சி செய்யும் மாநிலம். பிற்போக் குத்தனமான மதவெறிக் கட்சி அந்த மாநிலத்தை ஆளத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்குக் காரணம் என்ன? கீழ்க்கண்டவை கார ணங்களாக இருக்குமோ?
    ஒரு மாவட்டத் தலை நகரில் உள்ள வீடுகள் ஜாதி வாரியாகக் கட்டப்பட்டி ருக்கின்ற நெடுங்காலமாக. அவற்றிற்கு வண்ணமும்கூட ஜாதியைக் குறிக்கும் வகை யில்தான். பார்ப்பனர் பகு திக்கு மஞ்சள், சத்திரியர் பகுதிக்கு நீலம், மற்றையோர் பகுதிகளுக்குப் பல வண் ணங்களில்! அதைப் பார்த்து ஆத்திரமும் ஆச்சரியமும் அடைந்த கலைஞானி கமல் ஹாசனைப் பார்த்து அந்த ஊர்க்காரர் கேட்டாராம், “ஏன், உங்கள் ஊர்ப்பக்கம் இப்படி கிடையாதா? என்று எங்கள் ஊரில் பெரி யார் பிறந்து விட்டார், அதனால் இந்த நிலையெல் லாம் எங்களூரில் இல்லை என்று பதில் சொன்னதாக அவர் எழுதிய நூலில் பதிவு செய்திருக்கிறார்.

  126. Mr. Yaroo,

    //No body answered me so far. conversion is not banned. its not illegal. why you all shout at a legal thing? which law says conversion is illegal? so, being an indian, why you are against a legal thing?//

    In tamilnadu, selling liquor is also legal. Tasmac is also legal.

    But we can advise the people not to drink, though drinking is legal.

  127. ந‌ண்ப‌ர் ராம‌கோபால் அவர்களே,

    ப‌க‌வ‌த் கீதையில் விக்கிர‌க‌ ஆராத‌னைக்கான‌வும், உருமில்லாத‌ வ‌கையில் க‌ட‌வுளை வ‌ழிப்டுவ‌து ப‌ற்றியும் விள‌க்க‌ம் உள்ளது

    கீதையில் இறைவனை அடைய உள்ள வழிகளாக – செயல்களை செம்மையாகச் செய்தல், தியானம், தியாகம், இவற்றோடு முக்யமான வழியாக பக்தியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    உருவ வழிபாடு விஷயத்தில் சகோதரின் கேள்வியை அர்ஜுனனே , கிருஷ்ணரிடம் தெளிவாகக் கேட்டு விட்டார்.

    “உருவத்துடன் காட்சியளிக்கும் உன்னை வழிபடுபவர்கள், உருவம் இல்லாத (அவ்யக்தம்)உன் நிலையை வழிபடுபவர்கள்- இவர்களில் யார் வழி சிறந்த வழி?”
    என்று கேட்கிறார் அர்ஜுனர்.
    (செய்யுள்- 470)

    அதற்க்கு பதிலாக கிருஷ்ணர்,
    “என்னை உபாசிப்பவர்களே பக்தியை , கடமை வழியை நன்கு உணர்ந்தவர்கள்.
    (செய்யுள்- 471)

    “அதே நேரம் உருவமற்ற (அவ்யக்த) நிலையை வழி பட்டு நன்னெறியில் நிர்ப்பவர்களும் என்னையே வந்து அடைகிறார்கள் ” என்று கூறி இருக்கிறார்.
    (செய்யுள்- 472,473)!

    என்பதையும் கிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

    எனவே உருவ வழிபாட்டுக்குத் தடையில்லாத முழு ஆதரவு வேத அடிப்படையிலான இந்து மதத்தில் உண்டு.

    இதில் முரண்பாடு எதுவும் இல்லை.

    பக்தி என்று வந்தால் அதில் உருவ வழிபாட்டைத் தான் சிறப்பானது என்றே இந்து மதம் கூறுகிறது.

    அதே நேரம் உருவமற்ற நிலையை வணக்குபவர்களையும் கைவிடாமல் அவர்களுக்கும் நற்கதி வழங்குகிறது.

  128. ந‌ண்ப‌ர் ராம‌கோபால் அவர்களே,

    //விலங்குகளை வணங்குவது அதைவிட அறிவீனமாகும். இதைகொண்டு உங்களை புண்படுத்த வேண்டுமென்று கூறவில்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்//

    உங்களைக் கட்டாயப்படுத்தி, இந்தக் கடவுளை வணங்கு,அந்தக் கடவுளை வணங்கு என்று நான் கூறவில்லை. கூறப் போவதுமில்லை. அன்பு என்பது, மதிப்பு என்பது, பக்தி என்பது மனதில் இருந்து வர வேண்டும். அதற்க்கு மனம் பக்குவப் பட வேண்டும்.

    இராமரின், சிவனின், அனுமனின் தியாகத்தை , சிறப்பை ஒருவர் புரிந்து கொண்டு, அவர்களின் வாழ்க்கையை மனதில் உள் வாங்கி, அவர் மனதில் மரியாதை, பக்தி, முக்கியமாக அன்பு, தானாக வர வேண்டும்.

    நான் சிறுவனாக இருந்த போது அன்னையார் கூறியே தெய்வங்களை வணங்கினேன். தனியாக வேறு ஆர்வம் இல்லை. திருச்சிக்கு அருகில் ஒரு பெருமாள் கோவில் உண்டு. நரசிம்மர் தான் அதில் மூலவர். நரசிம்மர் சன்னதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். அடுத்து கிருட்டினர் சன்னதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். இராமர் சன்னதியில் அவ்வளவு கூட்டம் இருக்காது. எல்லோரும் கண்டிப்பாக இராமர் சன்னதிக்கும் வருவார்கள். ஆனால் விரைவாக வணங்கி விட்டு சென்று விடுவார்கள்.

    நான் (சிறுவனாக இருந்த போது) இராமர் சன்னதிக்கு செல்லும்போது அவரைப் பார்க்கும் போது மனதில் பக்தி வருவதோடு அவர் மேல் ஒரு பரிதாபமும் தோன்றும். ‘அய்யோ பாவம், பெரிய ராசா வீட்டுப் பையனாக பிறந்தும்… காட்டுக்குப் போய், மனைவியும் காணாமல் போய்…’ என்று மனதில் நினைத்து, சில கும்பிடுகளைப் போட்டு விட்டு ஐய்யப்பன் சந்நிதிக்கு விரைவாக சென்று விடுவேன்.

    ஆனால் நான் வளர்ந்த பின் ஒரு சமயம் எனக்கு இசையில் ஈடுபாடு, குறிப்பாக கர்நாடக இசையில் உண்டானது. தியாகராசரின் கீர்த்தனைகளின் இசை இனிமையில் விருப்பப் பட்டு கேட்க ஆரம்பித்தவன், சிறிது சிறிதாக பாடல்களின் பொருளை உணர்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன்.

    இராமரை புதிய கண்ணோட்டத்தில் புரிய ஆரம்பித்தேன். தோள் வலிமையும், வில் வலிமையும் உடைய சிறந்த வீரன், மிகப் பெரிய ஒரு இராச்சியத்தின் இளவரசன், மக்களிடம் இணையற்ற செல்வாக்கும் மக்களின் அன்பையும் பெற்றவன், தன்னுடைய தந்தையின் சொல் காக்க, சிறிய தாயின் விருப்பத்தை நிறைவேற்ற எந்த விதமான தயக்குமோ, முணுமுணுப்போ இல்லாமல் 14 வருடம் காடு செல்கிறார்.

    இராமருக்காவது- தந்தையின் சொல், சிறிய தாயின் விருப்பம்- இந்தக் காரணங்களுக்காக காடு செல்கிறார்.

    எந்த கட்டாயமும் இல்லாமல் தன் தமையன், தியாகக் செம்மலுக்கு உண்டான இன்னலைக் கண்டு அவரைக் காக்க தானும் வனம் செல்கிறார் இலக்குவன்!

    தன்னுடைய கணவனின் கஷ்டத்தில் பங்கெடுத்து உதவி செய்ய, காட்டின் கடுமைகளை உதாசீனம் செய்து கணவனுடன் செல்கிறார் சீதை அம்மையார்!!

    தன் தமையனுக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு கலங்கி அவரிடம் இராச்சியத்தை ஒப்படைக்க ஓடுகிறார் பரதன்!!!

    இப்படிப்பட்ட நல்லவர்களை, கடவுளாக வணங்காவிட்டால் வேறு யாரை வணங்க முடியும்?

    இப்படிப்பட்ட நல்லவர்களைக் கூட , பட்ட கஷ்டங்கள் போதாது என்று இன்னும் பல இன்னல்களை தருகின்றனர் இராவணனைப் போன்ற அயோக்கியர்கள்.

    அதனால் அவர்கள் மேலும் கடும் துயருக்கு ஆளாவது கண்டு, இத்தனை நல்லவர், தோள் வலிமையும், வில் வலிமையும் உடைய சிறந்த வீரன், இவ்வளவு தூரம் கடும் துயரில் சிக்கி, மனைவியையும் இழைந்தது கண்டு, அவருக்கு உதவி செய்யும் பணியில் தன்னை ஈடு படுத்திக் கொள்கிறான் அனுமன். அவன் அமைச்சர் பதவியையோ, வாரியத் தலைவர் பதவியையோ, பணத்தையோ, பொன்னையோ எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை.

    சீதை அம்மையாரின் துயர நிலையைக் கண்டவுடன், இராவணனின் இடுப்பொடித்து, அம்மையாரின் துயரம் தீர்க்க வேண்டும் என்ற அனுமனின் நோக்கம் இன்னும் உறுதியானது.

    எந்த ஒரு சன்மானத்தையும் அனுமன் இராமரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. காட்டிலே இருக்கும் கனிகளையும் , கிழங்குகளையும் உண்டு உலகிலே யாருமே செய்யாத அரும் பெரும் செயல்களை செய்து விட்டனர், அனுமனும் அவனது சகாக்களும்.

    இந்த உண்மைகள் எல்லாம் எனக்கு தியாகராசரின் பாடல்களைக் கேட்ட பின்னே உரைத்தன.

    அனுமன் குரங்காகவோ , கரடியாகவோ இருக்கட்டும்! ஆனால் அனுமன் கடவுள் இல்லை என்றால் இந்த உலகிலே , வானத்திலே வேறு எங்குமே, யாருமே கடவுள் என்று அழைக்கப் படத் தகுதியுள்ளவர்களா, என்று எனக்கு தோன்றியது.

    வானத்திலே இருந்து கட்டளைகளை போட்டுக் கொண்டு, நாம் இங்கெ பூமியிலே துயர் அடைவதைப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களையே கடவுள் என்று அழைக்கும் போது- அநியாயத்தை தட்டிக் கேட்ட , சுயநலம் சிறிதும் இல்லாமல் உழைத்த கொள்கை வீரன், குணாளன், கர்மயோகி, அனுமனைக் கடவுள் என்று கூறுவது கூட குறைவான‌ ம‌திப்பீடு, அனுமன் அதற்கும் மேலே! ஆனால் கடவுளுக்கு மேலே வேறு எதுவும் இல்லாததால் அனுமனையும் கடவுள் ஸ்தானத்திலே வைக்கும் படியான நிலை உள்ளது.

    அனுமன் கடவுள் என்று சொன்னால் , அது கடவுள் என்ற ஸ்தானத்துக்குத் தான் பெருமை.

    நான் மிகவும் அதிகமாகப் புகழ்வது போலவோ, அல்லது மதப் பிரச்சாரம் செய்வது போலவோ உங்களுக்குத் தோன்றலாம்.

    ஆனால் நான் கூறியது அனைத்தும் உண்மை.

    அனுமனைப் பற்றி, இலக்குவன் பற்றி, சீதை அம்மவைப் பற்றி, இராமரைப் பற்றி நான் கூறியது மிகவும் குறைவு!

    இதையெல்லம் புரிந்து கொண்டு, இத்தகையவரை மரியாதை செய்வதும், வணங்குவதும், எல்லொருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அல்ல!

    உங்களைக் கட்டாயப் படுத்தி, இந்தக் கடவுளை வணங்கு,அந்தக் கடவுளை வணங்கு என்று நான் கூறவில்லை. அன்பு என்பது, மதிப்பு என்பது, பக்தி என்பது மனதில் இருந்து வர வேண்டும். அதற்க்கு மனம் பக்குவப் பட வேண்டும்.

    நீங்கள் த‌ய‌வு செய்து ந‌டு நிலையுட‌ன் சிந்திக்க வேண்டும்!

  129. Mr.Tamil Hindu pls send me the reason for the rejection of my comment;
    then only i could correct my writing or understand your idea..!

  130. என்னுடைய தொடுப்புகளை (links) நேர்மையுடன் பதித்தால் தான்……… நானும் உங்களுடைய தொடுப்புகளை (links) மற்றவருடன் பகிர்ந்து கொள்ளமுடியும்……………………..!

    https://www.geocities.com/Athens/Ithaca/1412/brahmins.html
    https://www.geocities.com/Athens/Ithaca/1412/index.html

  131. திருச்சிகாரரே உங்களை கண்டு பரிதாப படுவதை தவிர வேறுவழியில்லை. இராமாயணம் கற்பனை கதையே அன்றி நிஜகதை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாபர் மசூதியை இடித்து அகழ்வாரய்ச்சி செய்த பொழுதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அது போன்ரே மகாபாரதமும். நான்கு வேதங்களில் உள்ள கருத்துகள் பரவாயில்லை. ஆனால் அதை யாரும் படித்து அறிவு பெற்றவர்களாக தெரியவில்லை. இந்து மக்கள் இந்த 4 வேதங்களை படிக்க ஆர்வமுட்டுங்கள். பிறகு அவர்களுக்கு உண்மையான கடவுள் யார் என்பதை அவர்கள் உணர்வார்கள். உங்களுக்கு பகவத் கீதையில் மட்டும் தான் ஆதாரம் இருக்கின்றதா…

    மாரியம்மா, காளியம்மா, சூலாத்தா, வேலாத்தா இவர்களை பற்றி என்று கட்டுரை தாருங்களேன்.

  132. நண்பர்களே,
    சில காலமாக நான் இந்த பதிவை படித்து வருகிறேன். நான் அன்பையும், உண்மையையும், என் மதமாக கொண்டவன். இந்துத்துவம், இந்த நாட்டில் இப்போது இல்லை. நான் பயிலும் வேதத்தில் இப்போதைய இந்துத்துவம் இல்லை.
    இங்கே யார் இந்து? அனைவரும் தங்கள் தாய், தந்தை கற்றுக்கொடுத்த மதத்தை பின்பற்றி வருகிறோம். இந்தியாவில் இருப்பதால் அதற்க்கு இந்துத்துவம் என்று நாமே பேரிட்டுக்கொள்கிறோம். உண்மையான இந்துத்துவம் ரிக் வேடத்தை அடிப்படையாக கொண்டது, அது இங்கே யாரும் மேற்கோள் இட்டு காண்பிக்க படவே இல்லை. இங்கே இந்து என்று கூறி கொள்பவர்கள் எத்தனைபேர் ஏதாவது ஒரு வேதத்தை உருப்படியாய் படித்து இருக்கிறீர்களா? இடையில் வந்த ராமாயணத்தையும், பாரதத்தையும், கீதையையும் மேற்கோள் காட்டுவது சரியாக இல்லை.
    திருச்சிகாரர், பாவம் எது புண்ணியம் எது என்றும், யார் கடவுள், எது கடவுளின் குணாதியங்கள் என்று நிர்ணயம் பண்ணும் பெரியவர் ஆகிவிட்டார். திருச்சிக்காரரே, நீங்கள் மற்றவர் மனதை புண் படுத்தாமல், உங்கள் கருத்துக்களை பகர்வதை நான் பாராட்டுகிறேன். ஒரு கிறிஸ்துவர் உங்கள் விவிலிய ஞானத்தை பாராட்டுகிறார். நீங்கள் ஏன் வேதம் பயில கூடாது? அதை கற்பிக்க கூடாது? இந்துத்துவம் தழைக்கும் அல்லவா?
    கிறிஸ்துவர்களே, இயேசுவை வார்த்தையில் காட்டுவதை விட வாழ்ந்து காட்டுங்கள்.
    சைவமும், வைணவமும், இந்துத்துவம் அல்ல. நடந்து முடிந்த யுத்தங்கள், அதை நிரூபிக்கும்.
    இந்தியா மற்ற நாடுகள் மீது படை எடுக்கவில்லை என்று பெருமை பேசுகிறோம். உண்மையில், வெள்ளையன் வரும்வரை, முழுமையான, ஒற்றுமையான இந்தியா என்று ஒன்று இல்லவேஇல்லை. நமக்குள்ளே, நாமே சண்டைபோட்டு கொண்டிருந்தோம். அடுத்தவன், நம்மை ஆட்சிசெய்ய நாமே வழி வகுத்தோம். பாரபட்சம் இல்லாமல், உண்மையான சரித்திரத்தை படித்து, அதில் கற்ற பாடத்தை உணர்ந்து, செயல்படுவோம்.
    வேதகால முனிவர்கள் போல, நாமும் அந்த பராபரனை தேடி, அவனையே வழிபடுவோம். மாநிடர்கேல்லாம் அன்பு செய்வோம்.
    அன்புடன்,
    க.தமிழ் அரசன்

  133. ந‌ண்ப‌ர் ராம‌கோபால் அவர்களே,

    என் நிலை ப‌ரிதாப‌ம் தான். எத்த‌னை தெளிவாக‌க் கூறினாலும், நீங்க‌ள் மட்டும‌ல்ல‌, பல‌ரும் உண்மையை, நியாய‌த்தை ம‌றுக்க‌வே முய‌ற்ச்சி செய்கின்றன‌ர்.

    வரலாற்று ஆதாரம் என்பது என்ன? அந்தந்த கால கட்டத்தில் எழுதப்பட்ட நூல்கள், அகழ்வாராய்ச்சில் கிடைத்த பொருட்டகளைக் கொண்டு வூகித்தல் இப்படிதான் வரலாறு உண்டாக்கப்படுகிறது!

    வரலாறு என்பது மின்னியக்க வீதிகளைப் போல தெளிவாக நிரூபிக்ப் பட முடியாதது!

    வ‌ர‌லாற்றுக்கு முக்கிய‌ சாட்சி கால‌ம் கால‌மாக‌ சொல்ல‌ப் ப‌ட்டு வ‌ருவ‌துதான். அது ஒரு முக்கிய‌மான‌ Communication method.

    கற்ப்புக்கரசி கண்ணகியின் வாழ்க்கைக்கு என்ன ஆதாரம்- சிலப்பதிகாரம் என்னும் நூலைத் தவிர? அதைப் போல நூல் ஆதாரமாக இராமாயணமும், பொருள் ஆதாரமாக (Physical evidence) இந்தப் பாலமும் உள்ளன!

    கூகிள் Earth ல் சென்று அந்தப் பாலத்தைப் பாருங்கள். மிகத் தெளிவாக ஒரு கோடு போல பாலம் தெரிகிறதே?

    அது எப்படி இயற்கை சரியாக பால வடிவில் உருவாக்கும்?

    இந்தப் பாலத்தில் அகழ்வாரைய்ச்சி நடத்தி பாலத்தின் , நீல, அகல, உயர பரிமாணங்கள், Contour Chart எடுத்தால் தெரிந்து விடும்!

    பாலத்தில் அகழ்வாராய்ச்சி செய்யுங்கள், அதன் பரிமாண வரை படங்களை எடுங்கள் என்று அழுத்தி சொல்லுகிறோம், தைரியமாக சொல்லுகிறோம். ஆனால் அரசு அகழ்வாராய்ச்சி செய்ய மறுக்கிறது ஏன்? அறிவியலின் பாதையில் போகத் தயங்குவது ஏன்?

    அதே நேரம், இராமாயணம் நிச்சயம் நடந்த நிகழ்ச்சி என்று நான் அறுதியிட்டுக் கூறவில்லை. இராமாயணம் ஒரு நிஜமான நிகழ்வாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் அது வெறும் கதையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

    ஆனால், இராமாயணம் நிஜமான நிகழ்வாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்;

    ஆனால், இராமாயணம் நிஜமான நிகழ்வாக இருப்பதற்கான வாய்ப்புகள், அறிவியல் கண்ணோட்டத்தின் மூலமாகவே அதிகமாக இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

    இந்தப் பாலம் அமைக்கப் பட்டுள்ள வடிவமும், தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள இடமும் இராமாயணம் உண்மை நிகழ்வாகவே இருந்திருக்கும் என்ற கருத்துக்கே வலு சேர்க்கின்றன.

    முன்பு நான் இராமயணத்தப் பற்றியோ, இந்தப் பாலத்தைப் பற்றியோ அதிக அக்கறை காட்டவில்லை.

    ஆனால் இந்தப் பாலம் பற்றிய சர்ச்சை வந்தது முதல் நான் இதை கவனத்துடன் நோக்கிய வகையில், இது நேர்த்தியாக அமைக்கப் பட்ட பாலமாகவே, செயற்கையாக உருவாக்கப் பட்ட பாலமாகவே கருத வேண்டியுள்ளது.

    காணாத‌ , உண‌ராத‌ ஒரு ச‌க்திக்கு க‌ண்ண மூடிக் கொண்டு, வெறும் ந‌ம்பிக்கை அடிப்ப‌டையில் சாட்சி குடுக்கும் போது, காணும் ஒரு பொருளை ஏன் ஒத்துக் கொள்ள‌க் கூடாது (நான் இதை எழுதிய‌து உங்க‌ளை புண்ப‌டுத்தும் நோக்கில் அல்ல‌).

  134. நன்றி ராம்கோபால்,
    என் எண்ணங்களையே நீங்களும் கூறி உள்ளீர்கள்.
    திருச்சிக்காரரே,
    ராம்கோபால் கூறிய “விலங்குகளை வணங்குவது”, இப்போதைய இந்துக்கள், பாம்பு, பசு, (சில வட மாநிலங்களில்) எலி போன்றவற்றை வணங்குவது. உண்மையை சொல்லுங்கள், பாம்பு புற்றுக்கு பால் ஊற்றும் நாம், சமயத்தில் அதை அடித்து கொள்கிறோமே. உள்மனதில் பாம்பை கடவுள் என்று நினைத்தால் அதை செய்வோமா? அல்லது, பாம்பு கடவுளாய் இருந்தால் தன்னை காத்துக்கொள்ளதா?
    ஒரு குரங்கு என்ன ஒரு வீர சாகசம் செய்தாலும், அது கடவுள் ஆகாது.
    ஒரு மனிதன் (ராமன்), தன் தந்தையின் வார்த்தைக்காக எவ்வளவு சிரமப்பட்டாலும், அவன் கடவுள் ஆகமுடியாது. அவர் மனைவியை காப்பாற்றவே, அவருக்கு பலர் உதவி தேவை படுகிறது. அவர் எப்படி உங்கள் குறை தீர்க்க முடியும்?
    ராமாயணம் உண்மை என்றால், எந்த ராமாயணம் உண்மை? கம்பராமாயனமா, இலலை வால்மிகி ராமாயணமா? இரண்டும் நிறைய வேறு படுகின்றனவே?
    வேதங்களில் உண்மை இருந்தாலும், ஏன் இப்படி கதைகளில் உணர்ச்சிவசப்பட்டு மயங்கி இருக்கிறது இன்றைய இந்துத்துவம்?
    கிறிஸ்துவர்களில் பலர் விவிலியம் படித்து உள்ளனர், முஸ்லிம்கள் முழுவதும் குரான் அறிந்து உள்ளனர். என் இந்து மக்கள், தங்கள் வேதம் என்ன என்பதையே தெரியாமல் உள்ளனர். வருத்தமாக உள்ளது.
    அன்புடன்,
    க. தமிழ் அரசன்

  135. Mr. Yaroo,

    //conversion is not banned. its not illegal. why you all shout at a legal thing? which law says conversion is illegal? so, being an indian, why you are against a legal thing?//

    Then, this is my question. When JJ imposed Anti-Conversion law by FORCE, why did these peoples shout at her? The law is actually against for those who convert others by FORCE, not against who convert by willingness. Then why the hell did the Bishop of Madurai shouted that he will ask Bush to impose Economic ban on India?

    அவன் தனக்கு தெரிந்த கடவுள் என்று நம்பிக்கையுடன் ஒரு வழிபாட்டு முறைகளை வைத்திருக்கின்றான். அவனிடம் சென்று, “நீ வழிபடும் முறை தவறானது. அதனால் நீ நரகத்திற்கு கான் செல்வாய்” என்று கண்ணிற்கு தெரியாத, நிரூபிக்க முடியாத சொர்க்கத்தையும் நரகத்தையும் வைத்து அவன் நம்பிக்கையுடன் விளையாடுவது கேவலமாக தெரியவில்லையா?

  136. – பாம்பு கடவுளாய் இருந்தால் தன்னை காத்துக்கொள்ளதா?

    – ஒரு மனிதன் (ராமன்), தன் தந்தையின் வார்த்தைக்காக எவ்வளவு சிரமப்பட்டாலும், அவன் கடவுள் ஆகமுடியாது. அவர் மனைவியை காப்பாற்றவே, அவருக்கு பலர் உதவி தேவை படுகிறது. அவர் எப்படி உங்கள் குறை தீர்க்க முடியும்?

    – ராமாயணம் உண்மை என்றால், எந்த ராமாயணம் உண்மை? கம்பராமாயனமா, இலலை வால்மிகி ராமாயணமா? இரண்டும் நிறைய வேறு படுகின்றனவே?

    – வேதங்களில் உண்மை இருந்தாலும், ஏன் இப்படி கதைகளில் உணர்ச்சிவசப்பட்டு மயங்கி இருக்கிறது இன்றைய இந்துத்துவம்?

    Good questions. Ask more.

  137. ச‌கோத‌ர‌ர் த‌மிழ் அர‌ச‌ன் அவ‌ர்க‌ளே,

    உங்க‌ள் அன்புக்கு ந‌ன்றி. ஆன்மீக‌ம் என்ப‌து பெரிய‌ க‌ட‌ல். நாம் ஆக்க‌ பூர்வ‌மாக‌ சிந்திப்ப‌து ம‌கிழ்ச்சி. நான் கூறிய‌து தான் ச‌ரி என்று நான் கூற‌வில்லை.

    நான் உருவ‌ம் இல்லாத‌ நிலையில் உள்ள‌ க‌ட‌வுளை வ‌ண‌ங்கும் முறையை ம‌றுக்க‌வில்லை.அதே க‌ட‌வுள் ப‌ல‌ அவ‌தார‌ங்க‌ள் வ‌ர‌க் கூடும், எடுத்து வ‌ர‌
    அக்க‌ட‌வுளுக்கு வ‌லிமை இருக்கிற‌து என்றே ந‌ம்புகிரேன்.

    காக்க‌ முடியுமா என்று கேட்டு இருக்கிறீர்க‌ள். அப்ப‌டி ஒரு கேள்வி ம‌ன‌தில் எழுவ‌து இய‌ற்க்கை தான். இராம‌ரால் த‌ன் ம‌னைவி தூக்கிச் செல்ல‌ப் ப‌டுவ‌த‌ த‌டுக்க‌ இய‌ல‌வில்லை என‌ப‌து உண்மைதானே?

    ஆனால் இராம‌ர் என்ப‌தே க‌ட‌வுள் மனித‌னாக‌ எந்த‌ ஒரு க‌ட‌வுளுக்கான‌ ச‌க்தியும் இல்லாம‌ல் இருக்கும் போதும், எப்ப‌டி துன்ப‌ங்க‌ளை எதிர் கொள்வது, அந்த‌ துன்ப‌ நிலையிலும் பொறுமையாக‌, நியாய‌மாக‌ எப்ப‌டி வாழ்வ‌து என்ப‌தைக் காட்ட‌ வ‌ந்த‌ செய‌லாக‌வே க‌ருதுகிறோம்.

    மேலும் க‌ட‌வுளிட‌ம் நான் எதையும் எதிர்பார்க்க‌வில்லை, நான் க‌ட‌வுளிட‌ம் அன்பு செலுத்த‌ விரும்புகிறேன். நான் பீலா விடுவ‌து போல‌ உங்க‌ளுக்குத் தெரிய‌லாம். ஆனால் நான் இது வ‌ரை எலுதிய‌வ‌ற்றை நீங்க‌ள் படித்து இருப்பீர்க‌ள். சுய‌ன‌ல‌ம் இல்லாத‌வ‌ர்க‌ளிட‌ம் நான் சுய‌ ந‌ல‌த்துக்காக‌ எதையும் கேட்க‌ விரும்ப‌வில்லை.

  138. நண்பர் களிமிகு கணபதி,
    பாராட்டுகளுக்கு நன்றி. இன்னும், எனக்கு பதில் தெரியாத கேள்விகள் பல உண்டு. உங்கள் சிந்தனையை தூண்டுமானால், நான் அந்த கேள்விகளை கேட்க்கிறேன். நீங்கள் விவேகானதரால் ஈர்க்கப்பட்டவர் என்று நினைக்கிறன். நானும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ண மடத்தில் படித்தவன்.
    விஷயத்துக்கு வருகிறேன், நீங்கள் நம் நாட்டில் எங்கே மைல் கல்லை கடவுளாக வழிபடுகிறார்கள் என்று கேட்டு இருந்தீர்கள். சுமார் பத்து வருடங்களுக்கு முன் என் சொந்த ஊரான கோபிசெட்டிபாலயத்தின் அருகில் உள்ள திங்களூர் என்னும் கிராமத்தில் நான் பார்த்து உள்ளேன். அந்த கோயிலின் பெயர் “மைல் கல் முனீஸ்வரர் கோயில்”. இதற்க்கு பூசாரி உண்டா என்று எனக்கு தெரியாது. ஆனால் பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த கோயிலை வணங்கி செல்வதை நான் பார்த்து இருக்கேன். என்னிடம், வீடியோ ஆதாரம் எல்லாம் இல்லை.
    இதை நான் சொல்லுவதற்கு காரணம், நாம் நம் நாட்டில் பிரச்சனைகள் இல்லை, மக்கள் முன்னேறிவிட்டனர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது உண்மை இல்லை. படித்த மக்களாகிய நாம், செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளது. நான் என் மாணவர்களுக்கு சிந்திக்க கற்று கொடுத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காவது கற்றுகொடுங்கள்.
    அன்புடன்,
    க. தமிழ் அரசன்

  139. திருச்சிக்கார், என்னை பூச்சியாரேன்னு சொன்னதுக்கு நன்றி திருச்சிக்கார்…

    தேவகுமாரன்னு சொன்னது ஏன் திருச்சிக்கார்? பதில் சொல்லுன்கோ திருச்சிக்கார்.

    ஆனா ஒண்ணு திருச்சிக்கார், உண்மை ஒரு நாள் வெளியில் வரும் திருச்சிக்கார். ஒரு பழமொழி சொல்வாங்க திருச்சிக்கார். கர்ப்பிணி தலைக்கனம் பத்து மாசம்னு.

    ஒரு விசயம் ஒத்தக்கறேன் திருச்சிக்கார், நிறைய எழுதுறீங்க, எனக்குஅஞ்சு வரி தப்பில்லாஅம எழுத தலை சுத்துது திருச்சிக்கார்.

    டாமில்ஹிண்டு மேல பாயாதீங்க திருச்சிக்கார். என் கமெண்ட்டு அநாகரிமகா இர்ந்தா அவாளே நிறுத்துவா திருச்சிக்கார்.

  140. வணக்கம்

    //கிறிஸ்துவர்களில் பலர் விவிலியம் படித்து உள்ளனர், முஸ்லிம்கள் முழுவதும் குரான் அறிந்து உள்ளனர். என் இந்து மக்கள், தங்கள் வேதம் என்ன என்பதையே தெரியாமல் உள்ளனர். வருத்தமாக உள்ளது//

    அன்புள்ள நண்பர் ஸ்ரீ தமிழரசன். உங்களின் வருத்தம் நியாயமானதே. ஆனாலும் நீங்கள் நினைத்தது போலவே கிறிஸ்துவர்களில் பலர் விவிலியம் படித்துள்ளார்கள் எனினும் அதை படிக்காமலே எதோ ஒரு நம்பிக்கையில் வாழும் கிறிஸ்துவர்களை நீங்கள் அறிந்துள்ளீர்களா? அதைப்போல்தான் வேதம் அறியாத இந்துக்களும்.

    மேலும் அதை எளிய முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கத்தான் புராணங்களும் இதிகாசங்களும் படைக்கப்பட்டது. அவை முழுக்க பொய்யுமில்லை, முழுவதும் உண்மையுமில்லை, வேதங்களின் பொருளினை உணர்த்தும் வகையாக வாழ்ந்தவர்களின் சரிதமே காவியங்களானது, அந்த காவிய நாயகர்களின் வாழ்க்கை உணர்த்தும் உண்மையே வேதங்களின் பொருளுமாகும். ஆனால் அதை உணராமல் அதற்கான ஆதாரங்களை தேடுவது வீண்வேலை.

    ஒன்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைக்கு விஞ்ஞானம் நிரூபித்த ஒரு உண்மை நாளை போய்யாகிவ்டுகிறது. ஆனால் மெய்ஞானம் அன்று என்ன சொன்னதோ இன்றும் அதையே சொல்லும். நாளையும் அது மெய்யாகவே இருக்கும்.

    மேலும் இந்து தர்மத்தில் வேதங்கள் என்பது மட்டுமே இந்து தர்மத்தை காப்பது என்று என் நினைக்கிறீர்கள், வேதம் அறியாத ஒருவன் கூட இங்கே துறவியாகலாம். மெய்ஞானம் என்ன இறைத்தன்மை என்பது என்ன என்று தன்னை உணர்ந்து தனக்குள் உறையும் இறைவனை உணர்ந்து கொண்டவர் எவராகினும் அவரை இறைவன் அடையாளம் கண்டு தன்னோடு அரவனைத்துக்கொள்கிறான்.

    அதற்காக இந்து மதம் சந்நியாசி மதம் அல்ல, சட்டத்தை இயற்றும் நீதிபதிகள் சட்டத்தை மீறுதல் எவளவு பாவமோ அதே போல், அதே போல் விதியை நிர்ணயித்த இறைவனே அதை மீறமுடியாது.

    ஆகவே பல அவதாரங்களில் தன்னை வெளிக்காட்டி துன்புற்று, சராசரி மனிதனாக வாழ்ந்து நமக்கு வழிகாட்டி சென்றுள்ளான். அதன் உண்மையான தர்மங்களை கணக்கில் கொண்டு நாம் வாழ்வதுவே நாலாயிரம் வேதங்கள் படித்ததுக்கு சமமானது. இந்து மதம் என்பதுவே அந்நியர்களால் இடப்பட்ட பெயர். நாம் பின்பற்றுவது மதமோ , மார்கமோ அல்ல தர்மம். சனாதன தர்மம்.

    //மாரியம்மா, காளியம்மா, சூலாத்தா, வேலாத்தா இவர்களை பற்றி என்று கட்டுரை தாருங்களேன்.//

    கட்டுரை என்ற வெறும் வரிகளால் விளக்க கூடியது அல்ல பக்தி என்பது, ஒரு மனிதன் ஒருவனாக இருப்பினும் அவன் மகனுக்கு அப்பாவாக மனைவிக்கு கணவனாக பணியாளுக்கு எஜமானனாக, தன முதலாளிக்கு சேவகனாக இருக்கும் ஒருவனை அவன் எங்கே இருக்கிறானோ அங்கே என்னவாக யாராக இருக்கிறானோ அவனாகவே அழைக்கப்படுகிறான். அதே போல்தான் இறைசக்தி ஒன்றே எனினும் யார் யார் அதை எப்படி உணர்ந்தார்களோ அப்படியே அது அழைக்கப்பட்டது. அதன் வெளிப்பெயர்களே இவை யாவும். எங்கே எப்படி எந்த ரூபத்தில் இறைவனை ஒருவன் உணர்ந்தானோ அந்த ரூபத்தை அவன் வணங்குகிறான்.

    //மேலும் க‌ட‌வுளிட‌ம் நான் எதையும் எதிர்பார்க்க‌வில்லை, நான் க‌ட‌வுளிட‌ம் அன்பு செலுத்த‌ விரும்புகிறேன். //

    மிகவும் அருமை நண்பர் திருச்சி காரரே, இதுவே தன்னலமில்லாத பக்தி, அதை விடுத்து இறைவனிடம் வியாபாரம் பேசும் பக்தியால் தான் மத மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை முடிந்த அளவு மக்களிடம் தெளிவுபடுத்துங்கள். யாருக்கு எதை தர வேண்டும் என்று இறைவனுக்கு தெரியாதா, அவனிடம் போய் நான் தேங்காய் உடைக்கிறேன் நீ எனக்கு அதை செய்து கொடு , இதை செய்து கொடு என்று பேரம் பேசி விட்டு நடக்கவில்லை என்றால் இந்த தெய்வத்துக்கு சக்தியில்லை எனவே நான் அந்த சாமிய கும்பிடப்போறேன் என்று சட்டையை போல் நம்பிக்கையை மாற்றுவது. தங்களை போன்றே யாவரும் இருப்பின் எந்த போலிகளும் நம்மை ஏமாற்ற முடியாது.

  141. இங்கு வேற்று மதத்தவர் சிலர் இந்து மதத்தை புகழ்வது போலவும் தாங்கள் சரியான விளக்கம் கொடுப்பது போல் (தமது பிட்டுக்களையும் இணைத்து ) தம்மை இந்துக்களாக காட்டி வாசகர்களிடையே மதம் தொடர்பான குழப்ப நிலையை தோற்றுவிக்க முயல்கிறார்கள் இதன்மூலம் வாசகர்களிடையே Tamilhindu வின் தரம் தான் பாதிக்கும்.

    இந்து சமயத்தை பற்றி மக்கள் கேட்கும் 10 கேள்விகளும் 10 அற்புதமான பதில்களும்
    from Hinduism today

    in tamil
    https://rapidshare.com/files/276530062/Ten-Questions-About-Hinduism-and-Ten-Terrific-Answers-in-Tamil.by.VPNTS.pdf

    in English
    https://rapidshare.com/files/276530064/Ten-Questions-About-Hinduism-and-Ten-Terrific-Answers-in-English.by.VPNTS.pdf

    Hinduism today இதழில் இருந்து மேலும் யாராவது மொழிபெயர்த்து Tamilhinduவில் பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  142. மனதை ஒரு நிலைப்படுத்த இயலாதவரும் பக்தி முயற்சியின் ஆரம்பநிலையிலிருப்போரும் சிலைகளை ஸ்தாபித்தனர்;
    அதன் நோக்கத்தில் எந்த தவறும் இல்லை;

    உதாரணத்துக்கு ஒரு திருமணமான பெண் தன் கழுத்தில் தன் கணவன் கட்டிய தாலியை சுமக்கிறாள்;அந்த மங்கல நாண் கணவனல்ல என்பதை அவள் நன்கு அறிவாள்; ஆனாலும் அதனால் கணவன் தன்னுடனிருக்கும் உணர்வினைப் பெறுகிறாள் என்பதே உண்மை.

    அதுபோலவே ஆதிகாலத்தில் தன் வழிப்பிரயாணத்தில் இராத்தங்கியபோது பெற்ற அனுபவங்களின் அடையாளமாக ஒரு கல்லை நாட்டி அதற்கு எண்ணை வார்த்து தொழுதுகொண்டான் ஒருவன்;அவனை தொடர்ந்து வந்த அவன் பின்சந்ததியாரும் அதனைத் தொட்டு வணங்கிச் செல்ல அது மொழுக்கென “லிங்கம்” என்றானது;

    இதுவே சிலைவழிபாட்டின் (துவக்கம் எனலாம்..!) ஆதிகால வரலாறு.

    https://www.geocities.com/Athens/Ithaca/1412/index.html

  143. //மேலும் இந்து தர்மத்தில் வேதங்கள் என்பது மட்டுமே இந்து தர்மத்தை காப்பது என்று என் நினைக்கிறீர்கள், வேதம் அறியாத ஒருவன் கூட இங்கே துறவியாகலாம். மெய்ஞானம் என்ன இறைத்தன்மை என்பது என்ன என்று தன்னை உணர்ந்து தனக்குள் உறையும் இறைவனை உணர்ந்து கொண்டவர் எவராகினும் அவரை இறைவன் அடையாளம் கண்டு தன்னோடு அரவனைத்துக்கொள்கிறான்//

    GREAT!

    //கட்டுரை என்ற வெறும் வரிகளால் விளக்க கூடியது அல்ல பக்தி என்பது, ஒரு மனிதன் ஒருவனாக இருப்பினும் அவன் மகனுக்கு அப்பாவாக மனைவிக்கு கணவனாக பணியாளுக்கு எஜமானனாக, தன முதலாளிக்கு சேவகனாக இருக்கும் ஒருவனை அவன் எங்கே இருக்கிறானோ அங்கே என்னவாக யாராக இருக்கிறானோ அவனாகவே அழைக்கப்படுகிறான். அதே போல்தான் இறைசக்தி ஒன்றே எனினும் யார் யார் அதை எப்படி உணர்ந்தார்களோ அப்படியே அது அழைக்கப்பட்டது. அதன் வெளிப்பெயர்களே இவை யாவும். எங்கே எப்படி எந்த ரூபத்தில் இறைவனை ஒருவன் உணர்ந்தானோ அந்த ரூபத்தை அவன் வணங்குகிறான்//

    BAASKAR AIYAA, I THINK I HAVE TO GIVE YOU MORE RESPECT TO YOU, MORE THAN WHAT I HAVE SHOWN FOR YOU!
    YOUR PLANE OF THINKING IS SCALING MORE AND MORE HEIGHTS EVERY DAY!

  144. நண்பர்களே,
    மற்ற மதத்தினர், மதமாற்றதிட்க்காக நம்மிடமும், நம் பிள்ளைகளிடமும், இந்துத்துவத்தின் குறைகளாக சொல்லுவது, நம்மிடம் இருக்கும் சில மூட பழக்க வழக்கத்தைதான் (உதாரணம், பாம்பு வழிபாடு).
    நான் இந்தியரிடத்தில் காணப்படும் குறைகளை உங்களுக்கு எடுத்து காட்டினேன். உங்களை பலப்பட சொன்னேன், அதாவது வேத ஞானம் பெற சொன்னேன். உங்கள் குறைகளை களைந்து, நாம் பலப்பட்டால், நம் வேதத்தை வைத்தே நம்மை மதம் மாற்றும் முயற்சி நடக்குமா?
    சாது செல்லப்பா போன்றோர், விவிலியத்தையும் படித்து, நம் வேதங்களையும் ஓரளவு அறிந்து இருக்கும்போது. நாம் நம் எதிரியை விட பலப்பட வேண்டும் என்றும், சில குறைகளை களைந்து போடுங்கள் என்று சொல்லக்கூடாதா?
    ராஜா அவர்களே, நீங்கள் என்னை எட்டப்பன் என்று கூறினாலும். என் சேவையை நான் செய்வேன். நான் நம்முடைய குறைகளையே பேசிக்கொண்டு இருப்பதால் உங்கள் கண்ணுக்கு எதிரியாக தெரிகிறேன். நம் குறைகளை அளசிப்பார்காமல், வீண் பெருமை பேசி இருந்ததால்தான், இந்த நிலைமை.
    நம் கோட்டையை நாம் பலப்படுத்தினால், யார் படை எடுத்து வந்தாலும் பயப்பட தேவை இல்லை.
    நண்பர்களே, நான் மேலும் பலருக்கு இடையூராகவோ, எட்டப்பனாகவோ தெரிந்தால், உங்கள் எண்ணங்களை தெரிவிக்கவும். நான், என் சக்தியை மற்ற சேவைகளில் பயன்படுத்த முயற்சி செய்வேன்.
    அன்புடன்,
    க. தமிழ் அரசன்

  145. பாஸ்கர் அவர்கள் கருத்தினை நான் ஆமோதிக்கிறேன்..!

    //இறைவனிடம் வியாபாரம் பேசும் பக்தியால் தான் மத மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை முடிந்த அளவு மக்களிடம் தெளிவுபடுத்துங்கள். யாருக்கு எதை தர வேண்டும் என்று இறைவனுக்கு தெரியாதா, அவனிடம் போய் நான் தேங்காய் உடைக்கிறேன் நீ எனக்கு அதை செய்து கொடு , இதை செய்து கொடு என்று பேரம் பேசி விட்டு நடக்கவில்லை என்றால் இந்த தெய்வத்துக்கு சக்தியில்லை எனவே நான் அந்த சாமிய கும்பிடப்போறேன் என்று சட்டையை போல் நம்பிக்கையை மாற்றுவது//

    இறைவனிடம் கேட்டுப் பெறுவது பக்தி;
    அவர் தருவதைப் பெறுவது அன்பு;
    தந்தாலும் தராவிட்டாலும் நேசிப்பது யோகநிலை..!

    தன் படைப்புக்குத் தேவையான வாழ்வியல் ஆதாரங்கள் அனைத்தையும் படைத்தபிறகே மனுவைப் படைத்தான்,இறைவன்.

    இந்த தெளிவு இல்லாததாலேயே மனிதன் அங்கலாய்க்கிறான்,மனிதன்.
    அந்த அங்கலாய்ப்புக்கும் காரணம் அடுத்தவருடன் ஒப்பிடுதலும் அதன் காரணமாக எழும்பும் ஆசையுமே.அதுவே அதனை அடையும் இச்சையாக மாறி துன்பத்தைக் கொடுக்க- இறைவனிடமிருந்து மனதால் பிரிய நேர்ந்து தனிமை உருவாகிறது;

    ஆசை நல்லது;ஆக்கு சக்தியாகவும் ஊக்கு சக்தியாகவும் மாறினால்;
    மனுவைப் படைத்த “ஆதி பரா சக்தி” அவனுக்குள் கோடிக்கணக்கான அணுக்களையும் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் கோடிக்கணக்கான அணுக்களையும் வைத்துள்ளான்;இது ஒன்றுகூட மற்றதைப் போன்றதல்ல‌;

    உதாரணத்துக்கு ஒரு மரத்திலுள்ள ஆப்பிள் பழங்களை எண்ணிவிடலாம்;ஆனால் ஒரு ஆப்பிள் பழத்துக்குள்ளிருக்கும் ஆப்பிள் பழங்களை ஒருவராலும் எண்ணமுடியாது என்பார்கள்;

    அதுபோலவே “மாயா” மயக்க- கன்மத்தால் விழுந்து- கர்மாவால் கட்டப்பட்ட மனுவை அந்த இறைஒளி சந்திக்கும்வரை இது தொடர்ந்து நிகழ்கிறது;

    மனுவானது தன் தேகத்தைப் போஷிக்க எடுக்கும் முயற்சியில்(5 புலன்கள் மற்றும் 9 வாசல்கள்..!) 100 ல் ஒரு பங்காகிலும் தன் ஆன்மாவை உணர்ந்தாலே இறைவனை உணரலாம்;

    அதைவிட்டு இறைவனை மாற்றுவதால் ஒரு பயனுமில்லை;
    முப்பத்து முக்கோடி தேவர்களையும் தெய்வங்களாக்கி தன் பெலவீனங்களையெல்லாம் அதன்மீது சுமத்தி, உக்காத்தி வைத்து, சுமந்துகொண்டு திரிவதால் தெய்வநிலை அடையமுடியாது;

    ஆனால் துன்பத்துக்குக் காரணமான ஆசையை ஒழித்தாலே தெய்வத்தை உணரலாம்.

  146. Animism has to be redifined NOT discontinued. It need NOT be discarded branding it supersition. For instance, we need NOT discourage snake worship but convince people that snakes do NOT drink milk and eat egg. The practice of snake worship is like thanks giving, as they help in the eradication rodents and save the food grains from being spoiled. Presently, snake venom is also in use and killing snakes is a national loss. Worshipping animals and plants is a highly matured wisdom, an indication of the tradition of living with nature, NOT against nature. The concept of living with nature is taught to us by our enlightened forefathers but we failed to understand the meaning of it. During Naga Panjami, snakes are put to lots of sufferings though people think with sincerity that they are worshipping them. Snake is a symbolic icon and it has significance. We need NOT bother to explain and confuse but tell our people that it has to be observed as thanks giving ceremony without pouring milk into the anthills and dropping eggs. People can simply garland anthills as a mark of gratitude.
    Instead of ridiculing worship of snakes and other animals and plants, we shall educate people on the significance and tell them animism is part of our ancient tradition, developed with the profound knowledge of the need to live with the nature.
    MALARMANNAN

  147. //துன்பத்துக்குக் காரணமான ஆசையை ஒழித்தாலே தெய்வத்தை உணரலாம்//

    கிலாடியாரைப் பாராட்டுகிறேன். முன்னேற்றம் உள்ளது.

    //முப்பத்து முக்கோடி தேவர்களையும் தெய்வங்களாக்கி தன் பெலவீனங்களையெல்லாம் அதன்மீது சுமத்தி, உக்காத்தி வைத்து, சுமந்துகொண்டு திரிவதால் தெய்வநிலை அடையமுடியாது//

    முப்பத்து முக்கோடி தேவர்களை மட்டுமல்ல, இன்னும் ஒரு அறுபது கோடி தேவர்களையும் சேர்த்து வணங்கி விட்டுப் போகிறோம். கிளாடியாருக்கு என்ன கஷ்டம்? வேறு யாருக்கு என்ன கஷ்டம்?

    சிலை வழிபாடு , பல தெய்வ வழிபாடு செய்வதால் உங்களுக்கு என்ன இடையூறு ஐயா? நாங்கள் வழிபடும் தெய்வங்கள், எங்களை எந்த ஒரு இனத்தையும் அழிக்கக் கூறவில்லையே. எந்த ஒரு குறிப்பட்ட இனத்தை தேர்ந்து எடுத்து, பிற இனத்தவர்கள் மீது படை எடுக்க சொல்லவில்லையே!

    ” உன்னைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளான எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்”

    இப்படிப் பட்ட வகையிலே ஒருவர் வாழும் இடத்திலருந்து அவர்களை விரட்டி அழித்து, அவர்களை சங்காரம் பண்ணி, வேறு ஒருவரை குடி அமர்த்தும், கிரிமினல் கட்டளை இடும் கடவுளை மட்டும் வணங்க வேண்டுமா?

    விமானத்தை கொண்டு போய் கட்டிடத்தின் மேல் இடிக்கும் படிக்கான கொள்கைகளை இந்த பல கடவுள் வழிபாடு உருவாக்கவில்லையே?

    என் மேல் கோவப் படாமல் நான் சொல்வது உண்மையா என்று பார்க்க வேண்டும்!

    எந்த மரம் நல்ல கனிகளைத் தருகிறது என்று பாருங்கள்!

    உலக சமூகத்துக்கு நன்மை தரும் கருத்துக்கள் , இறைவனுக்கு பெருமையை தரும் கருத்துக்களை தான் பல தெய்வ வழிபாடு, சிலை வழிபாடு உருவாக்கியுள்ளது!

    எந்த மரம் நல்ல கனிகளைத் தருகிறது என்று பாருங்கள்!

    தான் கூறும் கடவுள்களை பிறர் வணங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்ப்பு இருக்கிறது. பிறர் கூறும் கடவுள்களை தான் வணங்க வேண்டும் என்றால், எந்த தத்துவத்தை எடுத்துக் காட்டி மறுக்கலாம் என்று தோன்றுகிறதா? தன்னைப் போல பிறரையும் நேசியுங்கள்.

    வெறுப்பு கருத்துக்களை கை விடுவோம். சமரச சம்மதத்திலே இணைவோம், உலகைக் காப்போம்!

  148. திரு.மலர்மன்னன் அவர்களுக்கு, வாழ்த்துக்கள்;
    (ஒரு வேண்டுகோள்: தமிழில் வரைய முயற்சிக்கவும்..!)

    சிங்கமானாலும் சரி அதற்கு நோகாமல் அதன் காலில் குத்திய முள்ளை எடுக்கமுடியாது; ஏழை எளிய மக்களின் மூடநம்பிக்கைகளை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தங்களை வளர்த்துக் கொள்ளுகிறார்கள்;

    அது கோழிக் குஞ்சை பலியிடுவதில் துவங்கி கர்ப்பிணிப் பெண்ணை பலியிடுவது வரை இன்னும் தொடர்கிறது; (கொல்லிமலை போன்ற பழங்குடிகள் மத்தியில் இதுபோன்ற மந்திரவாதிகளின் ஆதிக்கம் அதிகம்)

    // Worshiping animals and plants is a highly matured wisdom, an indication of the tradition of living with nature, NOT against nature.//

    ஆராதிப்பதும் தொழுதுகொள்ளுவதும் கனம் பண்ணுவதும் மரியாதை செலுத்துவதும் தனித்தனி விஷயங்களாகும்;

    ஆராதித்தல் அல்லது தொழுதல் என்பது இறைவனுக்கு மட்டுமே உரித்ததான ஏகக் கிரியை; அவன் படைத்த அனைத்தையும் மனுவுக்கு பரிசாகக் கொடுத்த நாளில் ஆண்டுகொள்ளச் சொல்லியே அவற்றைக் கொடுத்தான்;

    எனவே ஆண்டவன் என்கிறோம்; அதன்படியே அனைத்து உயிர்களும் மனிதனுக்கு அடங்கிக் கீழ்ப்படியும்; தனக்கு உதவியாக இறைவன் சிருஷ்டித்துக் கொடுத்தவற்றை பரிபாலிக்கத் தவறியதாலேயே அதனை வணங்கும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டான்..!

  149. // நாங்கள் வழிபடும் தெய்வங்கள், எங்களை எந்த ஒரு இனத்தையும் அழிக்கக் கூறவில்லையே. எந்த ஒரு குறிப்பட்ட இனத்தை தேர்ந்து எடுத்து, பிற இனத்தவர்கள் மீது படை எடுக்க சொல்லவில்லையே //

    திருச்சிக்காரன் அவர்களே,நீங்கள் நம்ம ஊரு செய்திகளை தொலைக்காட்சிகளில் கவனிப்பதில்லையா..?

    கடவுளுக்கு மரியாதை செய்து, நன்றி செலுத்தி, விருந்துசெய்து, கொண்டாடவேண்டிய மனிதன் தனக்கு மரியாதை செய்யவில்லை என்று தன்னலத்துடன் ஊரையே ரெண்டாக்கி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அந்த வருட திருவிழாவையும் தேரோட்டத்தையும் நிறுத்திவிடுகிறான்; யார் வடம் பிடிப்பது,எந்த தெரு வழியாக முதலில் செல்லவேண்டும் என்று எல்லாவற்றிலும் ஊர் ரெண்டு படுகிறதே..!

    நாமே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டிருக்கும் போது மற்றவரை அழிக்க நேரமேது..? இன்னும் சொல்லப்போனால் நம்முடைய தேசத்தில் இத்தனை தெய்வங்கள் இருப்பதே அத்தனை யுத்தங்கள் நடந்ததன் அடையாளமாக இருக்கலாமே..!

  150. Dear Sri. க. தமிழ் அரசன்,

    Sri. Malarmannan ji has answered your question beautifully.

    Worshiping animals, including snakes, help us realize and identify the life force common to all beings.

    Please continue to ask questions. It is only possible with Hinduism, and make Hinduism the perfect and open religion.

  151. //விமானத்தை கொண்டு போய் கட்டிடத்தின் மேல் இடிக்கும் படிக்கான கொள்கைகளை இந்த பல கடவுள் வழிபாடு உருவாக்கவில்லையே? //
    அருமை ஐயா!

  152. Dear Sri Glady,
    The basic difference in the outlook is: We find the creator in all creations and feel oneness. You separate creatotr and creations and feel the creation is subordinate OR inferior. If you go deep in spritual practice, you will experience oneness. Until such time, seeing the creator in creations will be strange. All we need is open mind and patience. If you go through recent thinking in the West trained to think Creator and creations are different and the later is subordinate, the undertsnding now is animism that is branded as pagan is far greator and cinducive to the eco system and environment and finally peaceful co existence.

    It takes time to feel both creator and creations one but thnakfully, the native wisdom of Hindustan has very easily attained that feel but unfortunately, got corrupted by giving room to alien faiths, with broadmindedness that all faiths lead to one goal, which is, in fact is NOT.

    SORRY for writing in English.
    MALARMANNAN

  153. திருச்சகாரர்ரே

    இதற்கு பெயர்தான் சகிப்பு தன்மையா… தமிழரசன் நம் மதத்தில் கேள்விகேட்டால் பிற மதத்தில் உள்ள குறைகளை சுட்டிகாட்டுகிறீர்களே

  154. காப்பியங்களும், புராணங்களும் கற்பனை கதைகளே அதனை ஏன் வேதத்துடன் இணைக்கிறீர்கள். மேலும் நான் ேகட்ட கேள்விகளுக்கு பதில் வரவில்லை. மாரியம்மா, காளியாத்தா, முனீஷ்வரர், பிடாரி இவர்கள் யார். இவர்கள் எந்த வேதத்தில் இருக்கிறார்கள். இவர்களின் பண்புகள் யாது. இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா… இவர்கள் இரத்தம் விரும்பாத சகிப்புதன்மையுடையவர்களா… அல்லது… அகிம்சை வாதிகளா… போர் தர்மம் பேசிய கிருஷ்ணன் அகிம்சைவாதியா… அல்லது தீவிரவாதியா… இவர்களில் யார் உண்மையான கடவுள். முன்பு ஒரு காலத்தில் கண்ணிற்கு புலப்பட்ட கடவுள் ஔஏன் இப்பொழுது புலப்படுவதில்லை.

    மனதை ஒருநிலை படுத்த சிலைவழிபாடு உருவாக்கப்பட்டதாக ஒரு நண்பர் கூறீனார்… அதற்கு தியானம் செய்யலாமே… அதைவிடுத்து தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள இயலாத சிலைகளையும், விலங்குகளையும் வணங்குவது ஏன். சிலைவழிபாடு இல்லை என்று நான்கு வேதமும் ஆனித்தனமாக கூறுகிறது மேலும் SRI SRI RAVISANKAR அவர்கள் கூட இதை ஒப்புக்கொணடார், வேத அறிவு இல்லாத நீங்கள் ஏன் ஒப்புகொள்ள மறுக்கிறீர்கள்.

  155. இராமன் கடவுள் என்றால் இது போன்ற அவதாரம் ஏன் அமெரிக்கா போன்ற நாடுகளில் அவதாரம் எடுக்கவில்லை. அவர்கள் நம்மை போன்ற அறிவு இல்லாதவர்கள் என்பதாலோ… இராமர் பாலம் இயற்கையானது என்றும் புவியியல் நிபுணர்கள் கூறியதை ஏன் திருச்சிகாரரே படிக்க மறந்துவிட்டீர்கள். இராமர், ஆதம் பாலம் போன்ற பல அற்புதங்கள் இப்புவியில் உண்டு. அவற்றுக்கெள்லாம் ஒரு கற்பனை கடவுளை நிர்ணயித்தால் மக்களின் தொகையைவிட கடவுளின் எண்ணிக்கை கூடிவிடும்.

  156. கேள்வி கேட்க என்னை ஊக்குவித்த நண்பர் களிமிகு கணபதிக்கு என் நன்றி. கேள்வி கேட்காமல் ஞானம் பிறப்பது இல்லை. நம் வீட்டில் பெரியவர்கள் பிள்ளைகளை கேள்வி கேட்காமல், அவர்கள் குறைகளை சுட்டி காட்டாமல் இருந்தால், பிள்ளைகளின் நிலை என்ன ஆகும்?
    மலர்மன்னன் அவர்களே,
    நம் வயலில் கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கு நாம் கோயில் கட்டவில்லை.எல்லையில் நமக்காய் போராடும் வீரர்க்கு நாம் கோயில் கட்டவில்லை. ஆனால், வயலில் தானியத்தை காப்பதற்காக, நாம் பாம்புக்கு வழிபாடு செய்ய வேண்டுமா? நன்றி சொல்லுதல் வேறு, கடவுள் அந்தஸ்து கொடுப்பது வேறு. நாம் காடுகளை அழிக்காமல் இருந்தால், அதுவே பெரிய நன்றி இயற்க்கைக்கு.
    கடவுளை கடவுளாய் பார்க்கவேண்டும், மனிதனை மனிதனாய் பார்க்கவேண்டும், மிருகத்தை மிருகமாய் பார்க்கவேண்டும்.
    இது மாறும்போதுதான் மற்றவர் பார்வைக்கு நாம் முட்டாளை தெரிகிறோம், அவர்கள் நம் முதுகில் குதிரை ஏற பார்க்கிறார்கள்.
    அன்புடன்,
    க. தமிழ் அரசன்

  157. இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம். —- பெரியார்.

  158. அருமை ந‌ண்ப‌ர் கிலாடியார் அவ‌ர்க‌ளே,

    வெறுப்பு க‌ருத்துக்க‌ளை, ப‌ல‌ இன‌ங்க‌ளை அழிக்க‌ப் போட‌ப்ப‌ட்ட‌ க‌ட்ட‌ளைக‌ளை நியாய‌ப் ப‌டுத்த‌ என்ன‌ ப‌டாத‌ பாடு ப‌டுகிறீர்க‌ள்!

    எந்த‌ இந்துக் க‌ட‌வுளாவ‌து “நீ போய் அந்த‌ இன‌த்தை கொஞ்ச‌ம் கூட இர‌க்க‌ம் காட்டாமல் அழித்துப் போடு” என்று கூறியிருக்கிறார்க‌ளா?

    தெளிவாக‌க் கேட்டால், இந்துக்க‌ளின் புனித‌ நூல் எதிலாவ‌து ஒரு குறிப்பிட்ட‌ இன‌த்துக்கு ம‌ட்டுமே ஆத‌ர‌வு என்றும், ப‌ல‌ பிற‌ இன‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வு அல்ல‌ அழிவு தான் த‌ர‌ப் ப‌டும் என்றும் எந்த‌ ஒரு இட‌த்திலாவ‌து கூற‌ப் ப‌ட்டு இருக்கிற‌தா?(This point was raised by Swami Vivekaananthaa in his Chicago speech. Hence this is swamijis point- I should thank him fot using his reference, but this is not his exact quote, I took the meaning and used my language)

    நூறு திருவிழாக்க‌ள், தேரோட்ட‌ங்க‌ள் ந‌ட‌ந்தால் அதில் ஓரிர‌ண்டு இட‌ங்க‌ளில்தான்
    வ‌ழ‌க்கு , பிர‌ச்சினை என்று வ‌ருகிற‌து.

    பல‌ இட‌ங்க‌ளிலும் சிற‌ப்பாக‌ திரு விழாக்க‌ள் ந‌டை பெறுவ‌து உங்க‌ள் பார்வைக்கு வ‌ர‌வில்லையா?

    வ‌ருட‌ம் தோறும் ம‌துரையில் கள்ளழக‌ர் ஆற்றில் இற‌ங்கும் விழா சிற‌ப்பாக‌ ந‌டை பெற‌ வில்லையா?

    திருச்செந்தூரில் விசாக‌ப் பெருவிழா வ‌ருட‌ம் தோறும் சிற‌ப்பாக‌ ந‌டை பெற‌ வில்லையா?

    வ‌ருட‌ம் தோறும் ஐய்ய‌ப்ப‌னுக்கு ம‌க‌ர‌ விள‌க்கு, இருமுடி க‌ட்டுத‌ல் சிற‌ப்பாக‌ ந‌டை பெற‌ வில்லையா?

    திருப்ப‌தியில் பிரும்மோத்ச‌வ‌ம் வ‌ருட‌ம் தோறும் சிற‌ப்பாக‌ ந‌டை பெற‌ வில்லையா?

    இவை எல்லாம் தொலைக் காட்சியில் காட்ட‌ப் ப‌டுவ‌து உங்க‌ள் பார்வைக்கு வ‌ர‌வில்லையா?

    இவை எல்லாம் தொலைக் காட்சியில் காட்ட‌ப்ப‌டுவ‌து உங்க‌ள் பார்வைக்கு வாராது. ஏனெனில் – என்னை ம‌ன்னியுங்க‌ள்‍-வெறுப்பு க‌ருத்துக்க‌ளை உங்க‌ள் ம‌ன‌தில் புகுத்தி உள்ளன‌ர்!

    நேற்று இர‌வு வேளாங்க‌ண்ணி ஆரோக்கிய‌ மாதா கோவிலில் ந‌ட‌ந்த‌ ச‌ப்ப‌ரத் திருவிழாவை, இன்றைய‌ தின‌ம் தொலைக் காட்சியில் காட்டினார்க‌ள். அதை ர‌சித்துப் பார்த்தேன். ஏனெனில் இந்து ம‌த‌ம் என் ம‌ன‌தில் அன்புக் க‌ருத்துக்க‌ளை, ச‌ம‌ர‌ச‌க் க‌ருத்துக்க‌ளை வ‌ள‌ர்த்து உள்ள‌து.

    தொலைக் காட்சிக்கு பேட்டி கொடுத்த‌ ம‌றைத் த‌ந்தையார், எல்லா ம‌த‌ங்க‌ளை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் அதில் க‌ல‌ந்து கொண்ட‌தாக‌ ம‌கிழ்ச்சியுட‌ன் கூறினார்!

    எல்லா ம‌த‌ங்க‌ளை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் என்று அவ‌ர் சொன்னாலும் உண்மை என்ன‌ வென்றால் இந்து ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளும் என்றுதான் அர்த்த‌ம். வேறு எந்த‌ ம‌த‌த்தை செர்ந்த‌வ‌ர் அந்த‌த் திரு விழாவிலே க‌ல‌ந்து இருக்க‌ப் போகிறார்க‌ள்? இசுலாமிய‌ர் வ‌ருவார்க‌ளா? யூத‌ர்க‌ள் வருவார்க‌ளா?

    நூறு திருவிழாக்க‌ள், தேரோட்ட‌ங்க‌ள் ந‌ட‌ந்தால் அதில் ஓரிர‌ண்டு இட‌ங்க‌ளில்தான்

    வ‌ழ‌க்கு, பிர‌ச்சினை என்று வ‌ருகிற‌து.

    இந்த‌ தேரோட்ட‌ம், திருவிழா இவைக‌ள் பொருட்டு ந‌டை பெறும் ச‌ண்டைக‌ள் எல்லாம் ப‌ங்காளிச் ச‌ண்டை தான்.

    அந்த‌க் கோவில்க‌ளைக் க‌ட்ட‌ சில‌ரின் முன்னோர்க‌ள் பெரிய‌ அளவில் பொருளுத‌வி செய்து இருப்பார்க‌ள். அத‌னால் அவ‌ர்க‌ளுக்கு அந்த‌க் குடும்ப‌த்துக்கு ம‌ரியாதை செலுத்தும் வ‌ழ‌க்க‌ம் கோவிலில் க‌டை பிடிக்க‌ப் ப‌ட்டு இருக்கும். ப‌ல‌ நூறாண்டுக‌ள் க‌ழித்து, இப்போது வேறு சில‌ர் ப‌ண உத‌வி செய்வார்க‌ள், இவ‌ரின் குடும்ப‌த்தின‌ர் த‌ங்க‌ளுக்கு அதிக‌ ம‌ரியாதை வேண்டும் என்று நினைக்க‌க் கூடும்.

    இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ம‌து வீட்டிலும் ந‌டைபெறும் நிக‌ழ்ச்சிக‌ளிலும் ந‌டைபெருவ‌துண்டு.

    இதைப் போய் “யுத்தங்கள்” என்ற‌ ரேஞ்சுக்கு எழுதுவ‌தைப் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் உங்க‌ளைப் ப‌ற்றி என்ன‌ நினைப்பார்க‌ள்?

    இந்து ம‌த‌த்தில் ம‌த‌க் கார‌ணங்க‌ளுக்காக‌ இரு பிரிவின‌ர் போர் செய்த‌து உண்டா?

    திருப்ப‌தி பாலாஜியின் ப‌க்த‌ர்க‌ளும், ச‌ப‌ரிம‌லை ஐய்ய‌ப்ப‌னின் ப‌க்த‌ர்க‌ளும் என் க‌ட‌வுள்தான் பெரிய‌ க‌ட‌வுள் என்று ஆயுத‌ம் எடுத்து யுத்தம் செய்து கொள்கிறார்க‌ளா?

    //நாமே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டிருக்கும் போது மற்றவரை அழிக்க நேரமேது..? //

    நாம் எங்கே ஒருவ‌ரை ஒருவ‌ர் அழிக்கிறோம்? அப்ப‌டி அழித்தா உல‌கின் மிக‌ப் ப‌ழைமையான‌ ச‌முதாய‌ம் இன்னும் உயிரோட்ட‌த்துட‌ன் 120 கோடி ம‌க்க‌ள் தொகையுட‌ன் வாழ்கிறோம்?

    எப்போதும் அப்ப‌டிப்ப‌ட்ட‌ அழிவுப் பாதைக்கு நாம் போக‌க் கூடாது என்ப‌த‌ற்க்காக‌த்தான் இவ்வ‌ள‌வு சிர‌ம‌ப் ப‌ட்டு எழுதுகிரோம்.

  159. Dear Brother Ramagopal,

    //RAMGOBAL
    8 September 2009 at 1:16 pm

    திருச்சகாரர்ரே

    இதற்கு பெயர்தான் சகிப்பு தன்மையா… தமிழரசன் நம் மதத்தில் கேள்விகேட்டால் பிற மதத்தில் உள்ள குறைகளை சுட்டிகாட்டுகிறீர்களே//

    Can you please clarify as which one you refer to, so that I can clarify on the same? Because you know that I wrote a lot here! So if you are specific, it will be useful for me!

  160. ram
    8 September 2009 at 12:23 pm
    //விமானத்தை கொண்டு போய் கட்டிடத்தின் மேல் இடிக்கும் படிக்கான கொள்கைகளை இந்த பல கடவுள் வழிபாடு உருவாக்கவில்லையே? //

    This was not written to hurt any one. Our aim is not to ground others. We only want to help them to get rid of violant barbaric traits.
    There are good practices in Islam. I appreciate them. I wont hesitate to highlight the good practices in Islam. I wont hesitate to follow the good practices in Islam!

    Infact we pont out the unwanted and unfair practices in Hinduism also, we take effort to rectify the same!

  161. Dear Sri Glady,
    Religious festivals are observed as social functions and the if we analyse calshes between castes, it would be easily found out that the clashes are not due to devotion toward the diety but the egoist attitude of the castes. Religion is NOT responsible for this! Unfortunately, social evils are attributed to the religion. Those who bring in superiority and inferiority complexes in religious festivals make it a prestige issue and figth to satisfy their ego. There is no devotion on such occasions. We should NOT mix social issues with religion and faith. In case of Abrahamic religions, social customes are imposed on the basis of religious faith. Every social and personal ceremony is linked to the church or mosque or syangouge and in the absence of sanction from Church/mosque/syangouge, those ceremonies do not get approval (for instance: birth, marriage, death etc.) In case of Hindu society, there is no such compulsion. Since persons from other faiths are conditioned to think on the lines of their system, they find it difficult to understand the basic difference when it comes to Hindu faith and Hindu society. A Christian or Mohmedan society cannot survive without the influence of the church/mosque/synogouge. In case of Hindu society, it is NOT so.
    MALARMANNAN`

  162. Glady,

    /////

    // நாங்கள் வழிபடும் தெய்வங்கள், எங்களை எந்த ஒரு இனத்தையும் அழிக்கக் கூறவில்லையே. எந்த ஒரு குறிப்பட்ட இனத்தை தேர்ந்து எடுத்து, பிற இனத்தவர்கள் மீது படை எடுக்க சொல்லவில்லையே //

    திருச்சிக்காரன் அவர்களே,நீங்கள் நம்ம ஊரு செய்திகளை தொலைக்காட்சிகளில் கவனிப்பதில்லையா..?

    கடவுளுக்கு மரியாதை செய்து, நன்றி செலுத்தி, விருந்துசெய்து, கொண்டாடவேண்டிய மனிதன் தனக்கு மரியாதை செய்யவில்லை என்று தன்னலத்துடன் ஊரையே ரெண்டாக்கி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அந்த வருட திருவிழாவையும் தேரோட்டத்தையும் நிறுத்திவிடுகிறான்; யார் வடம் பிடிப்பது,எந்த தெரு வழியாக முதலில் செல்லவேண்டும் என்று எல்லாவற்றிலும் ஊர் ரெண்டு படுகிறதே..!

    /////

    நீதிமன்றத்துக்கு தானே போகிறான். உயிரைக் கொல்வது இல்லையே, Glady.

    //முப்பத்து முக்கோடி தேவர்களையும் தெய்வங்களாக்கி தன் பெலவீனங்களையெல்லாம் அதன்மீது சுமத்தி, உக்காத்தி வைத்து, சுமந்துகொண்டு திரிவதால் தெய்வநிலை அடையமுடியாது//

    தெய்வ நிலையை அடைய முடியாது என்று நிச்சயமாக எப்படி சொல்கிறீர்கள்? நீங்கள் வழிபடும் முறை தான் சிறந்தது என்று எப்படி நம்புகிறீர்கள்? நீங்கள் ‘திரிவது’ போல ‘திரிந்தால்’ மட்டும் தெய்வ நிலையை அடைய முடியும் என்று எதை வைத்து நம்புகிறீர்கள்? பைபிளை கொண்டா? இல்லை. அப்படி திரிந்தவர்கள் தெய்வ நிலையை அடையவில்லை என்றாவது நிரூபிப்பீர்களா? நரகத்துக்கு சென்று பார்த்து வருவீர்களா? 🙂

    யார் எந்த வழிமுறை சிறந்தது என்று முடிவெடுப்பார்கள்? ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்.

    கிருத்துவர்கள் எல்லோருமே சொர்க்கத்தில் தான் இருப்பார்கள். மற்றவர்கள் நரகத்தில் தான் இருப்பார்கள் என்று நம்புகிறீர்கள். இது மூட நம்பிக்கையாக தெரியவில்லையா?

    நன்றாக மூளை சலவை செய்யப்பட்டுள்ளிர்கள். யார் எதை சொன்னாலும் நம்பாதீர்கள். உட்கார்ந்து யோசியுங்கள். யோசித்து முடிவெடுங்கள். அது தான் பகுத்தறிவு. உங்களை போன்றவர்களை யோசிக்க விடாமல் வைத்திருப்பவர்களுக்கு தான் வெற்றியே…

    யாரும் சொர்கத்துக்கோ அல்லது நரகத்திற்கோ சென்று திரும்பியதில்லை. அப்படியே ஒருவர் சென்று திரும்பி அவர் தான் கண்டவற்றை சொல்லியிருந்தால் நம்பலாம். எதுவுமே தெரியாது. சொர்க்கமும் நரகமும் இருப்பதாக சொல்லுவது ஒரு நம்பிக்கையே.

  163. மேலே இருக்கிறாராம் க‌ட‌வுள். ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌வ‌ராம்.

    நாம ப‌ர்த்த‌து இல்லை. ஆனால் ப‌ல‌ரும் ந‌ம்புறாங்க‌. அவர் தான் ந‌ம்மை எல்லாம் ப‌டைக்கிறாராம்.

    ச‌ரி ஐயா, மேலே இருக்கிறாரு, ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌வ‌ரு, ஆனால் அவ‌ர் நெஞ்சிலே க‌ருணை என்ப‌தே இல்லையா?

    அப்படி க‌ருணை இருந்தா எதுக்கு ஒரு குழ‌ந்தையை குருடாக‌வும், ஒரு குழ‌ந்தையை முட‌மாக‌வும் ப‌டைக்க‌ வேண்டும்?

    எத‌ற்க்கு ஒரு குழ‌ந்தையை ஒரு கோடீச்வ‌ர‌ சீமான் வீட்டிலும், ஒரு குழ‌ந்தையை தெருவிலும் ப‌டைக்க‌ வேண்டும்?

    ஒரு நூறு வ‌ருட‌ம் க‌ண்ணில்லாம‌ல் வாழ்வ‌து என்ப‌து சாதார‌ணக் கொடுமையா?

    இப்ப‌டிப் ப‌ட்ட‌ கொடுமையை உருவாக்கிய‌ ஒரு ந‌ப‌ர் எப்ப‌டிக் க‌ட‌வுள் என்று அழைக்க‌ப் ப‌ட‌ முடியும்.

    நான் அழைக்க‌ மாட்டேன். கொடுமைக்கார‌னின் த‌ண்ட‌னைக்கு ப‌ய‌ந்து, அவ‌னிட‌ம் ம‌ண்டியிட்டு வ‌ணங்கி சுக‌ வாழ்வு வாழ்வ‌தை விட‌, வ‌ண‌ங்க‌ ம‌றுப்ப‌தே என் ம‌ன‌சாட்சிக்கு நியாய‌மான‌ செய‌ல்.

    என்ன‌ த‌ண்டனை த‌ரப்ப‌டுமா? ஆயிர‌ம் முறை நெருப்புக் குழியில் விழ‌த் த‌யார்! கொடுமைக்கு அஞ்சுவ‌தில்லை.

    நான் யாரைக் க‌ட‌வுளாக வ‌ணங்குவேன் என்ப‌தை நான் தான் தீர்மானிக்க‌ வேண்டும். என்னைப் பொருத்த‌ வ‌ரையில் என் ம‌ன‌சாட்சிக்கு க‌ட‌வுள் என்று அழைக்க‌ப்ப‌ட‌த் த‌குதி உடைய‌வ‌ர்க‌ள் அனும‌ன் போன்ற‌வ‌ர்க‌ள்தான். அனும‌ன் ம‌ட்டும் அல்லாது அங்க‌த‌ன், குமுத‌ன், நீல‌ன்,ந‌ள‌ன், தார‌ன் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு வான‌ர‌ங்க‌ள், கர‌டியார் ஜாம்ப‌வான், ப‌ற‌வைக‌ள் ஜாடாயு, ச‌ம்பாதி, ப‌ட‌கோட்டிக‌ள் த‌லைவ‌ன் குக‌ன் ஆகிய‌வ‌ரை எல்லாம், ம‌ண்டியிட்டு என் நெற்றி ம‌ண்ணில் ப‌ட‌ வ‌ண‌ங்கிய‌ பின் தான், நான் இராம‌னையே வ‌ண‌ங்குவேன்.

    இந்த‌ மேலே இருக்கும் க‌ட‌வுள் இராம‌ராக‌வோ, அல்ல‌து அவ‌ர் அளவுக்கு துன்ப‌ங்க‌ளை அனுப‌வித்த‌வ‌ராக‌வோ, அவ‌தார‌ம் எடுத்து இருந்தால் அந்த‌க் க‌ட‌வுளுக்கு ம‌ரியாதை செலுத்துவோம், வ‌ண‌ங்குவோம்.

    (இயெசு கூட‌ துன்ப‌ங்க‌ள அனுப‌வித்த‌வ‌ர், அவ‌ரையும் நான் வ‌ண‌ங்குவேன்).

    மேலே இருக்கும் ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌ க‌ட‌வுள், இப்ப‌டி அவ‌தாரமாக‌ ந‌ம்முட‌ன் வாழ்ந்து சுக‌ துக்க‌ங்க‌ளில் ப‌ங்கு எடுக்காம‌ல் –

    வெறும‌னே மேலே இருந்து கொண்டு ப‌ல க‌ஷ்ட‌ங்க‌ளையும் கொடுத்துக் கொண்டும்,

    ‘என்னை வ‌ண‌ங்க‌வில்லை என்றால் உன்னைத் த‌ண்டிப்பேன்’ என்று மிர‌ட்டிக் கொண்டும் ம‌ட்டும் இருப்ப‌வ‌ராயின் நான் அவ‌ரை வ‌ண‌ங்க‌ போவ‌தில்லை.

    அத‌ற்க்காக‌த் த‌ர‌ப் ப‌டூம் எந்த‌ த‌ண்ட‌னைக்கும் த‌யார்.

    யார் ம‌ன‌தையும் புண்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌து என‌து எண்ணம் அல்ல‌. ஆனால் நான் இதை தெளிவாக‌ , வெளிப்ப‌டையாக‌ எழுதும் ப‌டிக்கு என்னைக் க‌ட்ட‌ம் க‌ட்டிய‌தாலே, இதை தெளிவாக‌த் தைரிய‌மாக‌ எழுதுகிறேன்! நான் எழுதிய‌து அனைத்தும் உண்மையே!

    அதே நேர‌ம் பிற‌ர் மார்க்க‌ங்க‌ளை நான் இக‌ழ‌வில்லை. ஒரு இசுலாமிய‌ர் நோன்பு திற‌க்கும் போது நான் அவ‌ருக்கு ப‌ழ‌ச்சாறு வ‌ழ‌ங்கி ப‌ணி விடை செய்வேன்.

    அல்லாவையும் நான் வ‌ண‌ங்குவேன், ஈஸ்வர் அல்லா தேரே நாம்‍!

    என்னைப் பொருத்த‌வ‌ரையில் இராம‌ராக‌ வ‌ந்த‌து ஈஸ்வர்தான், அல்லாதான்!

  164. //இதற்கு பெயர்தான் சகிப்பு தன்மையா… தமிழரசன் நம் மதத்தில் கேள்விகேட்டால் பிற மதத்தில் உள்ள குறைகளை சுட்டிகாட்டுகிறீர்களே//

    இந்து மதத்தை கேவலமாக விமர்சிக்கும் நீங்கள் சிலர் கிருஸ்தவத்தை விமர்சிக்கும் போது உங்களால் தாங்க முடியவில்லையா ?? பகுத்தறிவு கூட்டத்து முகமூடியை போட்டால் உங்களை அடையாளம் காண முடியாதா ? உங்கள் பைபிளை இங்கே பாருங்கள்

    https://in.news.yahoo.com/139/20090901/882/twl-the-bible-s-bad-side-sexism-genocide.html

  165. //மாரியம்மா, காளியாத்தா, முனீஷ்வரர், பிடாரி இவர்கள் யார்//

    மலர்மன்னனால் எங்கோ எழுதப்பட்ட கட்டுரை

    நாட்டார் தெய்வம் என்று அடையாளங் காணப்படும் சிறு தெய்வங்களை வழிபடும்
    வழக்கம் முறையான சமய நம்பிக்கை தோன்றுவதற்கும் முன்னதாகவே தொன்றிவிட்ட
    சமூக நடைமுறை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை பெரும்பாலும் ஒரு
    சமூகத்தின் தலைமகனாகவோ, தலை மகளாகவோதான் இருக்கக்கூடும். அல்லது தனது
    சமூகத்திற்காக உயிர்த் தியாகம் செய்த, சமர்செய்து மாண்ட, மானம்
    காப்பதற்காக உயிரைத் துறந்த, தவறான அனுமானத்தினால் தண்டிக்கப்பட்டுப்
    பின்னர் நிரபராதி என அறியப்பட்டு அதற்கான பிராயச்சித்தம் போல் மரியாதை
    செய்யப்படுகிற, ஒரு காலக்கட்டத்தில் நிஜமாகவே தம் சமூகத்து மக்களிடையே
    உயிர் வாழ்ந்த நபர்களாகவும் இருக்கக்கூடும்.

    கன்னி கழியாத மகளிரும், அதே போல் இளம் பிராயத்திலேயே மரித்துவிட்ட
    ஆண்களுங்கூடத் தம் சமூகத்தவரால் வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காமல்
    போய்விட்டார்களே என்கிற கழிவிரக்கங் காரணமாக இரங்கலுடன் நினைவுகூரப்பட்டு,
    காலப்போக்கில் வணங்கி வழிபடவும் தொடங்கப்பட்டு, தெய்வ நிலைக்கு
    உயர்ந்துவிடுவதுண்டு.

    தலைமுறைகள் பல தாண்டியதும் இவ்வாறு வணங்கப்படும் சிறு தெய்வங்கள் நமது
    நாட்டைப் பொருத்தவரை சிவ பெருமானின் கணங்களைச் சேர்ந்தவர்களாகவோ,
    பராசக்தியின் பரிவாரங்களைச் சேர்ந்து, சக்தியின் அம்சமாகவே
    கருதப்படுபவர்களாகவோ மிகவும் உயர்ந்த பீடங்களில் வைக்கப்பட்டுத் தேர்,
    திருவிழா என்றெல்லாம் கொண்டாடப்படும் நிலைக்கு அந்தஸ்து
    பெற்றுவிட்டிருக்கின்றனர். மனிதரிடையே சமய உணர்வு உருப்பெற்று, எதற்கும்
    சமயத்தின் அங்கீகாரம் தேவையென்ற விழைவும் தோன்றுகையில்தான் சிறு
    தெய்வங்கள் இம்மாதிரி உயர் அந்தஸ்து பெறும் கட்டம் தோன்றுகிறது.

    ஒரே வீச்சில் பல உயிர்களைக் குடித்துச் செல்லும் கொள்ளை நோய்களையும்
    அச்சங்காரணமாகத் தெய்வமென வணங்கும் வழக்கம் உள்ளது என்றாலும், இதுவும்
    தொடக்கத்தில் குறிப்பிட்ட நோய் கண்டு இறந்த நபரின் மீதான பரிகார உணர்வுடன்
    தொடங்கப்பட்ட சம்பிரதாயம்தான் எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

    சிறு தெய்வ வழிபாடு உலகெங்கிலும் எல்லாச் சமுதயங்களிலும் இருந்து
    வந்துள்ளது. இன்றுங்கூட அய்ரோப்பாவிலுள்ள பல நாடுகளில் பழங்குடியினப்
    பண்பாடுகளின் எச்சமாகச் சிறு தெய்வ வழிபாடு மக்களின் ஆழ்மனத்தில் உறைந்து
    கிடப்பதால் கிறிஸ்துவ தேவாலயங்களின் மேன் மாடங்களில் சிறுதெய்வப்
    பிரதிமைகள் மறைவாகப் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளன.

    கிறிஸ்தவ சமயப் பிரசாரகர்கள் தாம் சென்ற இடங்களில் மக்கள் கிறிஸ்தவத்தை
    ஏற்கச் செய்யவேண்டும் என்பதற்காக, அங்கெல்லாம் மக்களால் மிகுந்த
    நம்பிக்கையுடன் வணங்கப்பட்டு வரும் சிறுதெய்வங்களைப் பேய் என்றும் பிசாசு
    என்றும் வர்ணித்து, அவற்றை வழிபடுவது அறிவீனம் எனப் போதனை செய்ததன்
    விளைவாகக் கிறிஸ்தவம் பரவிய சமுதாயங்களில் எல்லாம் சிறு தெய்வ வழிபாடு
    இழிவாகக் கருதப்பட்டு, நின்றும் போனது. சில சமுதாயங்களில் மக்கள்
    கிறிஸ்தவராக மதம் மாறிய பின்னரும் தலைமுறை தலைமுறையாக ரத்தத்தில் ஊறிப்
    போய்விட்ட சிறுதெய்வ வழிபாட்டைக் கைவிட மனமின்றி, ரகசியமாக அதைத் தொடர்ந்த
    போது, அது தெரிய வருகையில் பாதிரிமார்கள் பூண்போட்ட பிரம்புகளால் மக்களை
    அடித்து தண்டித்தமைக்கான ஆதாரங்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி முதலான
    மாவட்டங்களில் உள்ளன.

    வனவாசிகளிடையே சிறு தெய்வ வழிபாடு என்பது முக்கியமாக முன்னோர்
    வழிபாடுதான். இதனால்தான் வனவாசி சமூகங்கள் பலவற்றில் ஒவ்வொரு
    குடும்பத்துக்குமே பிரத்தியேக தெய்வங்களின் சின்னங்கள் ஒவ்வொரு குடிசைக்கு
    வெளியேயும் வைக்கப்பட்டிருக்கும். இதன் நுட்பம் உணராமல் வனவாசிகளிடையே
    கிறிஸ்தவ மதத்தைப் பரப்பச் செல்லும் சில பிரசாரகர்கள் அத்தகைய சிறு
    தெய்வங்களான முன்னோர் சின்னங்களை உதாசீனப் படுத்தியும் அவமதித்தும்
    விடுவதால்தான் வனவாசிகளிடையே மனக் குமுறல் உருவாகி, கிறிஸ்தவ மதப்
    பிரசாரகர்களைத் தாக்கும் அளவுக்கு நிலைமை முற்றி, மோசமாகிவிடுகிறது.

    ##pg##
    முகமதியம் வேரூன்றுவதற்கு முன் அரேபிய தீபகற்பத்திலும் அதனைச் சார்ந்த
    பிரதேசங்களிலும் சிறு தெய்வ வழிபாடு இருந்து வந்தது. சொல்லப்போனால் இன்று
    முகமதியாரால் புனிதத் தலங்களாகக் கருதப்படும் மக்காவும் மதீனாவும்
    முகமதியம் தோன்றுவதற்கு முன்பே சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்களாக
    இருந்தவைதாம். அராபியர் முகமதியாரக மாறியதன் விளைவாக, மெல்ல மெல்ல அவை
    சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்களாகத் திகழ்ந்தது மறக்கடிக்கப்பட்டது.
    அங்கிருந்த சிறுதெய்வ அடையாளங்களும் அகற்றப்பட்டன. இதனைச் சிறு தெய்வ
    வழிபாட்டுத் தலங்கள் மீதான ஆக்கிரமிப்பு என்றே வகைப்படுத்த
    வேண்டியிருக்கும்.

    ஹிந்து சமயத்தைப் பொறுத்தவரை அது அனாதி காலமாகவே இருந்து வரும் சமயமாதலால்
    சிறு தெய்வ வழிபாடு வெகு இயல்பாகவே ஹிந்து சமய வழிபாடுகளுள் ஒன்றாக
    ஒன்றிப் போனது. வேத காலத்திலிருந்தே சிறு தெய்வ வழிபாடு, சமய அங்கீகாரம்
    பெற்றுவிட்டது. காலப்போக்கில் ஆண் தெய்வங்கள் சிவ கணங்களாகவும் பெண்
    தெய்வங்கள் பராசக்தியின் அம்சங்களாகவும் கருதப்பட்டு, பின்னர்
    சிவபிரானாகவும் பராசக்தியாகவுமே கூட மக்களின் விழைவால் உயர் அந்தஸ்தைப்
    பெற்று, மக்களின் விழைவினாலேயே அச்சிறு தெய்வங்களின் வழிபாட்டுத்
    தலங்களுங்கூட ஆகம விதிப்படி அமைந்த ஆலயங்களில் அனுசரிக்கப்படும் வழிபாட்டு
    முறைகளைப் பின்பற்றுவனவாகிவிட்டன.

    மக்களின் விழைவு காரணமாகத்தான் சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்கள் ஆகம விதிப்படியிலான ஆலய நடைமுறைகளை ஏற்றிருக்கக் கூடுமேயன்றி, வலிந்து திணிக்கப்பட்டனவாக அவற்றை எண்ணத்
    தேவையில்லை என்று சுட்டிக் காட்டுவதற்காகத்தான்.

    ஏன் பல வீரபத்திரர், முனீஸ்வரர் கோயில்களுங்கூட முன்பு சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்களாக
    இருந்து இன்று ஆகம விதிப்படியிலான வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கும்
    ஆலயங்களாக மாறிவிட்டிருகின்றன. எவ்வித நிர்பந்தங்களும் இன்றி, மக்களின்
    விழைவு காரணமாகவே வெகு இயல்பாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

    பல்லையும் நகங்களையும் பின்னர் கல்லையும் ஆயுதங்களாகக் கொண்டு இரை தேடித்
    தின்ற மனிதன்தான் இன்று உணவு தேடும் முறையிலும் உண்ணும் விதத்திலும் நயமான
    வழிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டிருக்கிறான். வழிபாட்டு முறையிலும்
    இதேதான் நிகழ்வதாகக் கொள்ள வேண்டும். மாற்றம் எதுவாயினும் அது இயல்பாக
    நிகழ்ந்துள்ளதா என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

  166. “அல்லா” ஒரு சந்திரக் கடவுள் என இருந்த வரைக்கும் நீங்கள் சொன்னது சரிதான்; ஏனெனில் முகம்மது அவர்கள் அவதரிக்கும் வரை இன்றைக்கு “காஃபா” என துணிபோட்டு மூடிவைத்து- சுற்றிவந்து- முத்தமிட்டு வணங்குகிறார்களே அந்த கல்லைச் சுற்றிலும் நாளைக்கு ஒன்றாக 360 குட்டி கற்களும் (சந்திர நாட்காட்டியின் கணக்குப்படி) சந்திரக் கடவுளான அல்லாவின் மூன்று குமாரத்திகளுக்கு அடையாளமாக மூன்று சிறிய கற்களும் இருந்தன;

    முகம்மது சிறுவயதில் யூத மற்றும் கிறிஸ்தவ மார்க்கக் கருத்துகளால் கவரப்பட்டு அதை சற்று மாற்றியமைத்து ஓரிரைக் கொள்கையினை நிறுவினார்; பிறகு அந்த பெரிய கல்லைத் தவிர மற்ற சிறிய கற்கள் அகற்றப்பட்டன; இதுவே இஸ்லாமின் சுருக்கமான வரலாறு;அந்த வகையில் அவர்களும்கூட‌ இந்துத்வாவின் வேர்களிலிருந்து பிரிந்து சென்றவர்கள்தான்;

    இந்துத்வா கருத்துகளை இந்தியாவிலேயே தேடிக் கொண்டிருப்பது மடமையாகும்; உதாரணத்துக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள‌ “காந்தஹார்” எனும் நகரம் திருதராஷ்டிரனின் மனைவியும் துரியோதனனின் அன்னையுமான “காந்தாரியைக்” குறிக்கும்.

  167. Dear Trichikkaran,
    You are really good at using the bible verses against GOD of the Bible. Just like how the Satan tried to use the verses to tempt Jesus to worship him. I am not trying to accuse you as satan. By, looking into the love you have for humanity, certainly you are a good human.
    //” உன்னைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளான எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்”//
    GOD is not a racist to support one race(eg:Israelites) and motivates to kill all the other races. He was punishing those tribes thru Israelities. When Israel was sinning because of pride and other things, he punished the Israel using the other tribes, that they will be humbled. If you selectively choose the verses in the Bible, you might not get the correct information. Try to read the Bible with prayer and to get understanding of GOD, then GOD will give you enough wisdom to understand it, and you will be blessed. If you try to read it, just to criticize it, you might not get the right understanding and the loss will be yours and not for GOD.
    //இந்துக்க‌ளின் புனித‌ நூல் எதிலாவ‌து ஒரு குறிப்பிட்ட‌ இன‌த்துக்கு ம‌ட்டுமே ஆத‌ர‌வு என்றும், ப‌ல‌ பிற‌ இன‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வு அல்ல‌ அழிவு தான் த‌ர‌ப் ப‌டும் என்றும் எந்த‌ ஒரு இட‌த்திலாவ‌து கூற‌ப் ப‌ட்டு இருக்கிற‌தா?//
    Parasuram (one of the avatars of Vishnu), wanted to kill the entire kshatriyas and he killed many of them (many could be innocents in that). I don’t think that you can deny this. So, please stop claiming that Hinduism is a non-violent religion. Even our Hindu brothers will not agree to this.
    //மேலே இருக்கிறாராம் க‌ட‌வுள். ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌வ‌ராம்.//
    GOD is not just sitting in Heaven and commanding over the people who are suffering. GOD is very loving, that is the reason, he came down as Jesus Christ. The very reason for your existance today, is nothing but HIS Mercy.
    //நான் யாரைக் க‌ட‌வுளாக வ‌ணங்குவேன் என்ப‌தை நான் தான் தீர்மானிக்க‌ வேண்டும். என்னைப் பொருத்த‌ வ‌ரையில் என் ம‌ன‌சாட்சிக்கு க‌ட‌வுள் என்று அழைக்க‌ப்ப‌ட‌த் த‌குதி உடைய‌வ‌ர்க‌ள் அனும‌ன் போன்ற‌வ‌ர்க‌ள்தான். அனும‌ன் ம‌ட்டும் அல்லாது அங்க‌த‌ன், குமுத‌ன், நீல‌ன்,ந‌ள‌ன், தார‌ன் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு வான‌ர‌ங்க‌ள், கர‌டியார் ஜாம்ப‌வான், ப‌ற‌வைக‌ள் ஜாடாயு, ச‌ம்பாதி, ப‌ட‌கோட்டிக‌ள் த‌லைவ‌ன் குக‌ன் ஆகிய‌வ‌ரை எல்லாம், ம‌ண்டியிட்டு என் நெற்றி ம‌ண்ணில் ப‌ட‌ வ‌ண‌ங்கிய‌ பின் தான், நான் இராம‌னையே வ‌ண‌ங்குவேன். //
    Just because we worship someone or something, He/She/that cannot become GOD. We cannot define GOD.
    Even though I have lots of differences with you brother Trichykkaran, I am impressed by your love towards humanity.

    With Prayers,
    Ashok kumar Ganesan

  168. Mr Tiruchikaran, I appreciate your comments amd your strong stance on Sanatana Dharma and your vigour in defending it. Please continue your good work.The only complaint I have about you sir is that you are a pacifist and I feel the time has come for all of us to have the “Kshtraya traits” to defend Hindusisim and wake up sleepy Hindus from having their culture and religion destroyed.Gandhi’s ways were/are the cause of all our present problems in India.
    I will not, worship Allah or Jesus for the simple raeson, as quoated by you, that ” I will not submit to a tyranic God” and anyone associated with such God. Jesus says that you can reach God only through Him.( Hence the full scale conversion of Hindus) I reckon that is a bit of an arrogant statement( my faith is better than yours).
    Mr Gladys, please learn the basics of our Dhrama before passing comments.Although there are over 30 crores of God, they are all a manifestations of one,” Brahma” or “Ishwara”. Hindus see God in everything as Mr Malarmannan said and try to live with nature. We have no superior personality sitting in high Heaven, commanding us to “obey Him or Else”. God is in You and the basis of Hinduisim is to realize the inner god in you.( I am Brahman, I am Vishnu, I am Indra as the sloka goes.)

  169. ச‌கோத‌ர‌ர் அசோக் குமார் க‌ணேச‌ன் அவ‌ர்க‌ளே,

    //Parasuram (one of the avatars of Vishnu), wanted to kill the entire kshatriyas and he killed many of them (many could be innocents in that). I don’t think that you can deny this. So, please stop claiming that Hinduism is a non-violent religion. Even our Hindu brothers will not agree to this//

    பரசுராமர் ஒரு இனம், அவர் போரிட்ட சத்திரியர்கள் வேறு இனம் அல்ல! இருவரும் ஒரே இனம்தான்! (இப்போது நீங்களும் நானும் ஒரே இனமா வேறு இனமா, ஒரே இனம்தான்)! அதைப் போலத் தான் பரசுராமரும் சத்திரியர்களும்!

    எனவே ஒரு இனத்துக்கு ஆதரவாக வேறு பல இனங்களை அழிக்க கட்டளையிட்டவர் என்ற குற்றத்தை நிராகரிக்க வேண்டியுள்ளது.

    பரசுராமர் வலுச் சண்டைக்கு போகவில்லை, கார்த்த வீரிய அர்ஜுனா என்ற பேரரசன் அவருடைய தந்தையின் ஆசிரமத்துக்கு வந்து அங்கே இருந்த அதிசயப் பசுவுக்கு ஆசைப் பட்டு, ஆசிரமத்தை அழித்து விநோதப் பசுவையும் பலவந்தமாக தூக்கிச் சென்று விட்டான். அதனால் பரசுராமர் அவனைத் தட்டிக் கேட்டதால், சண்டை மூண்டு கார்த்தவீரிய அர்ஜுனனை சண்டையிலே கொன்று விட்டார்.

    அதற்குப் பதிலாக கார்த்த வீரிய அர்ஜுனனின் மகன்கள் பரசுராமருடன் சண்டை செய்வதற்குப் பதில்லாக அப்பவித் துறவியான அவருடைய தந்தை ஜமதக்கினி முனிவரைக் கொன்று விட்டனர். அதனால் அந்த மகன்களையும் பரசுராமர் கொன்று விட்டார். அந்தக் கால கட்டத்திலும் அரசியல் ராஜாக்களின் அட்டகாசம், அட்டூழியம் எல்லை இல்லாமல் மக்கள் துயரப் பட்டதால் அவர்களைத் தட்டிக் கேட்டுத்தான் பரசுராமர் சத்திரியர்கள் மேல் போர் தொடுத்தார். சத்திரியர்களின் முக்கிய வேலை ஆட்சி நிர்வாகம், காப்பாற்றுதல் மற்றும் போர்தான். போரிலே சரணடைந்தவர்களை பரசுராமர் கொல்லவில்லை.

    நாம் இதெல்லாம் சொல்வதற்கு காரணம் பரசுராமரின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறத்தான்.

    நீங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு இந்துக்களிடமும் பேசிப் பாருங்கள். அவர்களின் கடவுள் யார் என்று கேட்டுப் பாருங்கள். அனுமன் சிவன், முருகன், விநாயகர், விஷ்ணு, இராமர், கிரிஷ்ணர், துர்க்கை …. என்று எல்லாம் கூறுவார்களே தவிர யாராவது பரசுராமர் என்று கூறினால் அது அதிசயம்தான்.
    பரசுராமருக்கு என்று ஒரு சில கோவில்கள் தான் உள்ளன.

    பரசுராமருக்கு என்று ஒரு சில கோவில்கள் தான் உள்ளன. அவர் அவதாரமாக இருந்த காலத்திலே எதை தட்டிக் கேட்க வேண்டுமோ அதைத் தான் தட்டி கேட்டார் பரசுராமர். அவர் ஆட்சி அதிகாரத்துக்கு ஆசை ப பட்டு அப்படி செய்யவில்லை. ஒரு இன மக்களைக் குடியேற்ற , பிற இன மக்களை எல்லாம் சங்கரித்து போடவில்லை

    அவர் மீது த‌வ‌று இல்லாத‌ போதும், அவ‌ர் த‌ன‌க்கு அளிக்க‌ப் ப‌ட்ட‌ க‌ட‌மையையே பொறுப்பையே செய்த ‌போதும், அப்படியும் அவரைத் தனிப் பெரும் கடவுளாக சித்தரிக்கவில்லை இந்து ம‌த‌ம் .

    ஆனால் நீங்க‌ளோ ஒரு இன‌த்துக்காக‌ ப‌ல‌ இன‌ங்க‌ளை அழிக்க‌க் க‌ட்ட‌ளையிட்ட‌ ச‌க்தியை உல‌க‌ம் முழுமைக்கும் க‌ட‌வுள் ஆக‌ ப‌ல‌வ‌ந்த‌மாக‌த் தினிக்கிறீர்க‌ள்.

    //GOD is not a racist to support one race(eg:Israelites) and motivates to kill all the other races. He was punishing those tribes thru Israelities//

    இஸ்ரேல்தான் தேர்ந்து எடுக்க‌ப் ப‌ட்ட‌ இன‌ம் என்று இருக்கிர‌தே? இன‌ம் முழுவ‌தியும் அழித்துப் போடு, இர‌க்க‌ம் காட்டாதே என்று கூறியிருப்ப‌து தெளிவாக‌ இருக்கிற‌து. நான் இன‌ அழிப்புக் குற்ற‌ச் சாட்டை அந்த‌க் “க‌ட‌வுள்” மேல் வைக்கிரேன். அவ‌ர் ஹிட்ல‌ர், ராஜ‌ப‌க்ஷே இவ‌ர்க‌ளுக்கு முன்னொடி போல‌ செய‌ல் ப‌ட்டு, இன‌ அழிப்பையே த‌ன் கொள்கையாக‌ வைத்து இருந்த‌வ‌ர் என்ப‌தை வ‌ருத்த‌த்துட‌ன் கூறுகிறேன்.

  170. Mr Ashok Kumar
    Please visit this site and try to answer questions raised there
    https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=9065&SKIN=C
    First of all: Is Jesus God? Jesus himself denies on numerous occasons that he is not God and that he is the son of Man. Do not attribute Godness to him when he himself denies.
    Now, where did this Satan come from? Was he a creation of God? Why could not God destroy him? Or is he more powerful than God? If Jesus was God, why should Satan, who is evil, confront him and try to tempt him? Satan will be so scared of God that he will not DARE to tempt him and will run away. It proves the point that Jesus was a mere mortal.If Jesus was God, why did he moan on the cross” Oh God, why have you forsaken me?”
    There are numerous questions in that book written by H.H. Chatampi Swamikal. Have a look

  171. நண்பர் பாஸ்கர் அவர்களே,
    //வேதம் அறியாத ஒருவன் கூட இங்கே துறவியாகலாம். மெய்ஞானம் என்ன இறைத்தன்மை என்பது என்ன என்று தன்னை உணர்ந்து தனக்குள் உறையும் இறைவனை உணர்ந்து கொண்டவர் எவராகினும் அவரை இறைவன் அடையாளம் கண்டு தன்னோடு அரவனைத்துக்கொள்கிறான்.//
    உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன். நான்கு வேதங்கள் உண்டென்று அறியாதவனும், கடவுளை அறியலாம், அடையலாம்.
    ஆனால், இங்கே நாம் விவாதிப்பது மதமாற்றத்தை பற்றி. இதை தடுக்க அறிவே ஆயுதம் என்று நான் நினைக்கிறேன். உங்கள் நண்பர்களில், வேதம் கற்ற ஒருவரையும், கல்லாத ஒருவரையும், சாது செல்லப்பாவின் போதகத்தை, youtube ல் கேட்க சொன்னால் உங்களக்கு வித்யாசம் புரியும்.
    நண்பர் திருச்சிக்காரரே,
    //இந்த‌ மேலே இருக்கும் க‌ட‌வுள் இராம‌ராக‌வோ, அல்ல‌து அவ‌ர் அளவுக்கு துன்ப‌ங்க‌ளை அனுப‌வித்த‌வ‌ராக‌வோ, அவ‌தார‌ம் எடுத்து இருந்தால் அந்த‌க் க‌ட‌வுளுக்கு ம‌ரியாதை செலுத்துவோம், வ‌ண‌ங்குவோம்.
    (இயெசு கூட‌ துன்ப‌ங்க‌ள அனுப‌வித்த‌வ‌ர், அவ‌ரையும் நான் வ‌ண‌ங்குவேன்).//
    உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அன்பு நிறைந்தவர் நீங்கள். ஆனால், நீங்கள் கடவுளை, மேற்சொன்னபடி தேர்வு செய்வது எனக்கு சரியாக படவில்லை. தயவுசெய்து, உணர்ச்சி நிலையைவிட்டு, அறிவு நிலையில் இருந்து யோசித்து பாருங்கள்.
    அன்புடன்,
    க. தமிழ் அரசன்

  172. Mr. rama,

    //Mr Tiruchikaran, I appreciate your comments amd your strong stance on Sanatana Dharma and your vigour in defending it. Please continue your good work.The only complaint I have about you sir is that you are a pacifist and I feel the time has come for all of us to have the “Kshtraya traits” to defend Hindusisim and wake up sleepy Hindus from having their culture and religion destroyed.Gandhi’s ways were/are the cause of all our present problems in India//

    Thanks for your support! Regarding the views I will discuss with you in detail later!

  173. ராஜா அவர்களே்…

    மாரியம்மா, காளியம்மா… இவர்களை பற்றி யூகமாக கூறுகிறீர்களே தவிர ஆதாரம் ஒன்றும் கிடையாதா… யேசு, முகமமது தூதர்கள் சிலைவணக்கத்தை அனுமதிக்கவே இல்லை. ஆனால் கூறிய அவர்களையே கடவுளாக உருவாக்கியது மனிதனின் மடத்தன்மையை காட்டுகிறது. ஆனால் இதில் முகம்மது அவர்கள் விதவிலக்கு ஏன்என்றால் அவர் தன் உருவத்தை யாரும் வரைய அனுமதிக்க வில்லை அதனால் அவர் தப்பித்தார் இல்லையேல் அவருக்கு பல கோயில் எழுப்பப்பட்டிருக்கும். இந்த பட்டியலில் புத்தர் மற்றும் பலர் அடங்குவர். இராமன் கற்பனை கதை என்பதற்கு ஒரு சிறு ஆதாரம், இராமன் கடவுளாக அவதரித்த அந்த நேரத்தில் வாணரங்கள் ஔஎப்படி கடவுளாக இருந்திருக்க முடியும். கடவுளுக்கே துன்பம் ஏற்பட்டால் அவரால் நமது துன்பத்தை எவ்வாறு தீர்த்து வைப்பார். சிந்திக்க வேண்டும் தேழர்களே…

    திருச்சி காரர் அவர்களே துன்பப்பட்ட கடவுளை வணங்குவேன் என்றால் அத வணக்கம் கிடையாது அவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுகிறீர்கள். நீங்கள் கூறும் எவையும் கடவுளாவதற்கு தகுதியற்றவை.

    (Edited and Published. – Tamilhindu editorial.)

  174. DR. அம்பேத்கர்…

    நம்முடைய முன்னோர்கள் இந்த மதத்தில் இருந்தார்கள் என்பதற்காகவே நாமும் அந்த மதத்தில் நீடித்திருக்க வேண்டும் என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான். எந்த சாதாரண மனிதனும் மதம் மாறக் கூடாது என்ற கருத்தை ஒப்புக் கொள்ள மாட்டான். இதுபோன்ற வாதத்தை முன்னிறுத்தும் எவரும் வரலாற்றைப் படிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

    பழங்கால ஆரிய மதம், வேத மதம் என்று அழைக்கப்பட்டது. இது, ¬ன்று தனித்த கூறுகளைக் கொண்டிருந்தது. மாட்டிறைச்சி தின்பது, மது அருந்துவது, கும்மாளமடிப்பது. அன்றைய மதத்தின் முக்கிய பகுதியாக இம்மூன்றும் இருந்தது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பின்பற்றினர். இன்றைக்கும்கூட சில பேர் இத்தகைய வாழ்க்கை நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.

    நம்முடைய மூதாதையர்களின் மதமே பின்பற்றப்பட வேண்டும் என்றால், இந்திய மக்கள் இந்து மதத்தைக் கைவிட்டுவிட்டு பவுத்தத்தை ஏன் தழுவினர்? வேத மதத்திலிருந்து ஏன் தங்களை விடுவித்துக் கொண்டனர். எனவே, இந்து மதம் என்பது நமது மூதாதையர்களின் மதம் அல்ல; இது, நம்மீது திணிக்கப்பட்ட அடிமைத்தனமே.
    தீண்டத்தகாத மக்களுக்கு சமத்துவமும் தேவை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இந்துவாக இருப்பதால் மட்டுமே ஒருவன் சமத்துவத்தை அடைய முடியும் என்றும், இல்லை எனில் முடியாது என்றும் எவருமே சொல்ல முடியாது. சமத்துவத்தை அடைய இரு வழிகள் உள்ளன. 1. இந்து மதத்தில் இருப்பது; 2. இந்து மதத்தை விட்டு விலகி மதம் மாறுவது.

    இந்து மதத்தில் இருந்து கொண்டு எப்படி சமத்துவத்தை அடைய முடியும்? ஒருவன் தீண்டத்தகுந்தவனாகவோ, தீண்டத்தகாதவனாகவோ இருக்கக் கூடிய உணர்வைப் போக்குவது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்து விடாது. கலப்புத் திருமணத்தாலும், கலந்துண்ணுவதாலுமே சமத்துவத்தை அடைய முடியும்.

    இதற்கு ‘சதுர்வர்ணம்’ (நான்கு வர்ணம்) அழிக்கப்பட வேண்டும்; பார்ப்பன மதம் வேரறுக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகுமா? இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுமா? ஒருபோதும் வெற்றி பெறாது.

    மதமாற்றப் பாதை இதைவிட மிகமிக எளிதானது. இந்து சமூகம், öவஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் சமமாக நடத்துகிறது. மிகத் தெளிவாக, மதமாற்றத்தின் மூலமே சமூக சமத்துவத்தைப் பெற முடியும். இது உண்மை எனில், இந்த எளிமையான வழியை நீங்கள் ஏன் பின்பற்றக் கூடாது?
    1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ஆற்றிய பேருரை

  175. ராம்கோபால் என்கிற பெயரில் எழுதுபவர் இஸ்லாமியர் என நினைக்கிறேன். பாவம்…சொந்த பெயரில் எழுதக்கூட துணிவில்லை போலும். சரி அது எப்படியும் போகட்டும். அய்யா கடவுள் என்பது ஹிந்து ஆன்மிக மரபில் ஒரு நிலை. உணர்தல் நிலை. அந்நிலையை அடைய ஆன்மிக சாதனைக்கருவிகளே பிள்ளையார் முதல் ஞான யோகம் வரை. இதஒயெல்லாம் புரியும் பக்குவமோ பகுத்தறிவோ உம்மை போன்றவருக்கு இருக்கும் என நான் நினைக்கவில்லை. ஆபிரகாமிய மதங்களில் இறைவன் என்பது படைப்புக்கு வெளியே இருக்கும் ஓர் ஆளுமை. இறைவன் படைத்தவன் என்பது போல மடத்தனமான விஷயம் உலகத்தில் கிடையாது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடத்தனம் அது. ஒருவேளை மானுடத்தின் ஆன்மிக பயணத்தின் தொடக்கத்தில் கடவுள் ஒரு படைப்பாளி என்கிற கற்பனை தேவைப்பட்டிருக்கலாம் ஆனால் வளர வளர இந்த “இறைவன் உலகைப் படைத்தவன்” என்கிற கருத்து காய்ந்த புண்ணின் ஓடு உதிருவது போல உதிர்ந்து போக வேண்டியது. இதைத்தான் ஞானமாகிய முருகன் தன்னை சிருஷ்டி கர்த்தராக நினைத்த பிரம்மாவை சிறையில் இட்டதாக தமிழரின் புராணம் பேசும். ஆனால் உங்களைப் போல ஆபிரகாமிய மரபின் கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டு ஏசு முகமது இறைத்தூதர்கள் என்று சிறுபிள்ளைத்தனமான வரலாறும் மானுடவியலும் ஏற்றுக்கொள்ளமுடியாத கருத்தாக்கங்களை பேசும் போது பரிதாபமாகத்தான் இருக்கிறது. முடிந்தால் மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்து பாருங்கள் அல்லது நாகரம்மன் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்து பாருங்கள்…ஆபிரகாமிய பித்தம் தெளிகிறதா பார்க்கலாம்…

  176. நண்பர் RAMGOPAL அவர்கள் எளிமையாக ஒரு காரியத்தைச் சொல்லியிருக்கிறார்;

    // மதமாற்றப் பாதை இதைவிட மிகமிக எளிதானது. இந்து சமூகம், முஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் சமமாக நடத்துகிறது. மிகத் தெளிவாக, மதமாற்றத்தின் மூலமே சமூக சமத்துவத்தைப் பெற முடியும். இது உண்மை எனில், இந்த எளிமையான வழியை நீங்கள் ஏன் பின்பற்றக் கூடாது? //

    இந்த போக்கிலேயே விவாதித்தால் ஓரளவு தெளிவு பெறலாமென எண்ணுகிறேன்;
    ஆம்,நாம் ஏற்கனவே வாதிட்டவண்ணமாக மதம் மாறிய கிறிஸ்தவருக்கோ இஸ்லாமியருக்கோ அந்த மதத்தில் சமத்துவம் கிடைக்கிறதோ இல்லையோ ஏனைய பெரும்பான்மை சமுதாயத்தில் அந்தஸ்து கிடைத்துவிடுகிறது;

    இதற்குக் காரணம் இந்தியரின் சகிப்புத்தன்மை,விட்டுக்கொடுத்தல்,தியாகம், அனைத்து உயிர்களிடத்தும் இனம்புரியாத அன்பு…இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்;

    மீண்டும் சொல்கிறேன்,இவை இந்திய மண்ணுக்கே உரிய தனித்துவமான அதிலும் தென்னகத்துக்கே உரிய உயரிய குணாதிசயமாகும்;

    இதில் மதத்துக்கோ சாதியினத்தவருக்கோ ஒரு பெருமையும் இல்லை;

    உதாரணமாக ஒரு இந்து தன் சூழ்நிலைகளின் காரணமாக மதம் மாறினாலும் மனதளவில் இந்துவாகவே இருக்கிறான்; அவனது பழக்கவழக்கங்களில் ஒரு மாற்றமும் இல்லை;

    அதே போல ஒரு கிறித்தவன் அல்லது இஸ்லாமியன் என்னத்தான் அவனது மார்க்கம் அன்பையும் பொறுமையும் உளத்தூய்மையையும் போதித்தாலும் அவர்கள் பேராசை பிடித்தவர்களாகவும் ஆட்களைக் கொல்லுகிறவர்களாகவும்- அதாவது துரோகம் செய்கிறவர்களாகவும் இருக்கமுடிகிறது;

    பயங்கரமான சமுதாயக் கொடுமை ஒன்றையும் இந்த தளத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்; இந்திய சமுதாயத்தில் விவாகரத்து எனும் கொடுமை பரவுவதற்கும் எண்ணற்ற ஒரு பாவமும் அறியாத சிறுவர்கள் அனாதைகளாவதற்கும் கிறித்தவமும் இஸ்லாமும் காரணமாக இருக்கிறது;

    இந்திய சமுதாயத்தில் காதல் இருந்தாலும் அது அன்று கௌரவமாக இருந்தது; அது “வாலன்டைன் டே” எனப் பிரபலமடையக் காரணமே மேற்கத்திய கலாச்சாரம் தான்; நம் இந்திய சமுதாயமோ மேற்கத்திய கலாச்சாரத்தையும் தழுவமுடியாமல் (அதுவும் மதமாற்றம்தானே..?) தமது பாரம்பரியத்தையும் விடமுடியாமல் தவிக்கிறார்கள்;

    எதிர்த் தரப்போ இரத்தம் குடிக்கிறது;(சிங்கமும் நரியும் நான்கு எருதுகளும் கதைதான் ஞாபகம் வருகிறது..!)

  177. Dear Rama,
    I have spent a few hours to send reply your questions. But our editor didn’t publish that. I never used any foul language, Never wrote anything that hurt others feelings. I am sorry. I writing this, just to let you know, that all your questions have very valid answers.
    I hope the editor will not stop this too.

    With Love and Prayers,
    Ashok

  178. //எதிர்த் தரப்போ இரத்தம் குடிக்கிறது;(சிங்கமும் நரியும் நான்கு எருதுகளும் கதைதான் ஞாபகம் வருகிறது..!)//

    என்னய்யா, ஒரே அந்தரடிச்சான் சாகிபுக்களா ஆவுறீங்க? திருச்சிக் காரன், காரர் ஆயிட்டார். கிளாடி கில்லாடி ஆயிட்டார். அப்புறம் என்ன, சட்டுபுட்டுன்னு நடய சாத்துங்க.

    டாமில் ஹிண்டு, நிறுத்திப்புடாதீங்கய்யா கமெண்ட்டை. அவனவன் என் கமெண்ட் வரலை உன் கமெண்ட் வரலைன்னு ஒரே பீலாவா வுடறான். என் கமெண்ட்டை விடலைன்னா அடுத்த கமெண்ட்டு ஹிந்திலதான் போடுவேன். யாருக்கும் புரியாது. சம்ஜய்?

  179. வணக்கம்,

    நண்பர்களே, இரண்டு நாள் உடல்நலமில்லாமல் இருந்து விட்டேன் அதற்குள் இவ்வளவு சூடான விவாதங்களா,

    எல்லாம் நன்மைக்கே, என்ன திருச்சி நண்பரே திடீரென்று சொர்க்கம், நரகம், கடவுள் என்று ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள் போல் உள்ளது.

    உண்மையில் ஊனமுற்றவர்க்காக கடவுளையே திட்டும் உங்கள் மனிதாபிமானம் உள்ளதே அது ஒன்றே ஒரு இந்து என்பதன் சான்று, ஏனெனில் நம் தந்தையை கோபிப்பதுபோல் நம் கடவுளை கோபித்துக்கொள்ளலாம் அந்த அளவுக்கு நமக்கும் கடவுளுக்கும் நெருக்கமும் உரிமையும் தந்தது இந்து தர்மம் ஒன்று மட்டும்தான்.

    நண்பர் ஸ்ரீ ராஜா அவர்கள் நல்ல விளக்கம் கொடுத்தார் எனினும் நண்பர் ராம் கோபால் அதை யூகம் என்று கூறி விட்டார். முகம்மதுவை பற்றி சொன்னாரே இவர்மட்டும் என்ன முகம்மது உடன் உட்கார்ந்து காபி சாப்பிட்டு விட்டு கை குலுக்கி பேசிவிட்டு வந்து இங்கே பதிவிட்டுக்கொண்டு உள்ளாரா. இறை பக்தி என்பது ஒரு அதீத நம்பிக்கை. இப்போது நீங்கள் எல்லாரும் யார் என்றே எனக்கு தெரியாது. இந்த கணிணியின் முன்னர் அமர்ந்து எழுத்தில் உங்களோடு பேசுகின்றேன். அப்படியானால் நான் என்ன கணினியுடனா பேசிக்கொண்டு இருக்கிறேன், என் கண்ணுக்கு தெரியாத உங்களுடன் பேச இந்த கணினி எப்படியோ அப்படியே சிலைகள்.

    சரி ராமன் கடவுளாக அவதரித்தான் என்று யார் சொன்னது, காவியத்தின் பிரகாரம் விஷ்ணு ராமன் என்ற மனிதனாகத்தான் அவதரித்தான். ” வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” . எனவே ராமனை தெய்வத்துள் வைத்தார்கள். அனுமனையும் அவ்வாறே போற்றினார்கள்.

    ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் மிக சரியாகவே சொல்லியுள்ளார். இந்து தர்மம் ஒன்றும் தேங்கிய குட்டயல்ல மகா சமுத்திரம். இப்போது வரை நாம் பேசிய அத்துனையும் சேர்ந்து கணக்கில் கொண்டாலும் அது ஒரு கண்ணீர் துளி அளவே.

    ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம், என பல பிரிவுகளாக யாராற்க்கு எந்த வழி உகந்ததோ அதன் வழியே கடவுள் என்ற மகா சக்தியை அடைய வழிவகுத்தது இந்த சனாதன (இந்து) தர்மம்.

    நண்பர் ஸ்ரீ தமிழ் அரசன் அவர்களே நீங்கள் சொல்வதும் சரியான கருத்து தான் என்னுடய கருத்தும் இது தான் . ஆனால் மக்களுக்கு வேதங்களை புரிய வைப்பது என்பது எளிமையான காரியம் அல்ல . நமது இந்து தர்மத்தின் எத்தனையோ எளிமையான கருத்துகள் உள்ளன . உண்மை சம்பவங்கள் நிறைய உள்ளன. அவைகளை எடுத்து உரைத்தாலே போதும் . நீங்கள் கூறியபடி நமது பிள்ளைகளுக்கு வேதங்களையும் அதன் தத்துவங்களையும் அறியும்படி செய்வதுவே நல்லது .

    ஸ்ரீ மலர்மன்னன் அய்யா சொன்னது போல் பாம்புகளையும் , பசுக்களையும் மக்கள் அவைகள் மனிதகுலத்திற்கு செய்யும் நன்மைகளுக்காக நாம் செய்யும் நன்றி கடனே அவைகளை நாம் தொழுவது. மேலும் பாம்பு முதல் கருடன் வரை, துளசி முதல் அரசு வரையான மரங்களையும் ஏன் வணங்குகிறோம் என்றால் எங்கும் எதிலும் இறை சக்தி மறைத்துள்ளது என்பதுவே ஒரு இந்துவின் நம்பிக்கை. இது சிலையை வணங்குவதற்கும் உரித்தான காரணம். பாம்பை வணங்குவதற்கு காரணமாக ஒரு கட்டுரையே எழுதலாம். இது கடவுள் எங்கோ இருப்பதாக நம்புபவர்களுக்கும் கடவுளே இல்லை என்பவர்களுக்கும் புரியாது .

  180. ச‌கோத‌ர‌ர் அசோக் குமார் க‌ணேச‌ன் அவ‌ர்க‌ளே,

    //You are really good at using the bible verses against GOD of the Bible. Just like how the Satan tried to use the verses to tempt Jesus to worship him. I am not trying to accuse you as satan. By, looking into the love you have for humanity, certainly you are a good human//

    இந்த செய்திக்கான பின்னோட்டத்திலே நான் இயேசு கிறிஸ்துவின் சார்பாகவே நான் வாதாடினேன். அதற்காக பலரும் என்னைக் கட்டம் கட்டிய நிலையிலும், நான் என் நிலைப் பாட்டில் பின் வாங்கவில்லை.

    அந்த நேரத்திலே சாத்தானின் கவிதை யாரின் உள்ளத்திலே புகுந்தது? First commandment என்று எல்லாம் எழுத ஆரம்பித்தது யார் சகோதரரே ?

    எந்த மார்க்கத்திலும் உள்ள நல்ல கோட்பாடுகளையே ஒரு இந்து முதலில் பார்க்க முயல்வான், என்ற வழக்கப் படி இயேசு கிறிஸ்துவுக்கு சிறந்த இடத்தை கொடுக்கவே நான் போராடி வந்தேன்.

    ஆனால் கார்ப்பெட்டுக்குள்ளே இருந்த எலும்புக் கூடுகளை வெளியே இழுத்துப் போட ஆரம்பித்தது யார்?

    காட்டு மிராண்டிக் கருத்துக்களை எடுத்துக் கொடுத்து சேம் சைடு கோல் போட்டது யார்?

    ஏனெனில் எனக்குத் தெரியும், இயேசு சொல்ல வந்தது என்ன வென்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். அதனாலே அதன் அடிப்படையிலேயே நான் அவருக்காக வாதாடி வந்தேன்.

    ஆனால் இயேசுவை கேடயமாக வைத்து காட்டு மிராண்டிக் கருத்துக்கள் மட்டுமே பரப்பப்பட்டன. என்னை மன்னியுங்கள்- காட்டு மிராண்டிக் கருத்துக்களை, பைத்தியக்காரத் தனமான கருத்துக்களை எல்லாம் எல்லாம் ஒரு இரும்புக் கவரிலே போட்டு அதில் இயேசுவின் முத்திரையைப் பதித்து, உங்கள் தலையிலே இரும்புக் கவசமாக அழுத்தி விட்டார்கள். நீங்கள் சிந்திக்க முடியாத படிக்கு அந்தக் கவசத்தை இறுக்கி விட்டார்கள்.

    நீங்கள் அந்த காட்டுமிராண்டிக் கருத்துக்களை, பெரிய சித்தாந்தங்களைப் போல எடுத்து விடுகிறீர்கள், நாகரீக சமுதாயத்தின் முன் வைக்கிறீர்கள்! அவை கார்ப்பெட்டின் அடியிலிருந்து வரும் எலும்புக் கூடுகளாக உள்ளதால், அதை உங்களாலேயே நிலை நிறுத்த முடியவில்லை.

    இதையெல்லாம் நன்கு புரிந்து கொண்டுதான் ஐரோப்பியர்கள் இப்போது இந்த பைத்தியக்காரத் தனத்தை முழுதும் விட்டு விட்டார்கள். எனது நண்பர் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்றார். Sunday அன்று அவரது வழக்கப்படி சர்ச் (தேடிக் கண்டு பிடித்து)சென்றார். ஆனால் அவர், அவரது மனைவி, அவரது இரண்டு குழ்ந்தைகள் – மொத்தம் நாலே பேர்தான் (4 PERSONS) அந்த சர்ச்சிலே. ஆனால் பிரேயரை நடத்த மொத்தம் 7 பாதிரிமார்கள் இருந்தனராம்(இதைக் கூறிய‌போது என‌து ந‌ண்ப‌ரே சிரித்து விட்டார்)!

    நான் ஐரோப்பியர்களைப் பாராட்டுகிறேன். தவறான மார்க்கத்தில் இருந்து- அந்த மார்க்கத்தால் அவர்கள் சமுதாயமே கெட்ட போதும் – பட்டது போதும் இப்போதாவது தப்பிப்போம் என்று விடு பட்ட நிலையிலே உள்ளனர்.

    ஆனால் இங்கேயோ, அந்த தவறான கருத்துக்களை இன்னும் இன்னும் இறுகப் பற்றிக் கொண்டு இந்த சமுதாயத்தையும் கெடுக்கும் முயற்ச்சியில் உள்ளனர்.

    எனவே நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி உண்மையிலே சரியாகப் புரிந்து கொள்ள விரும்பினால் எம்முடன் தொடர்பில் இருங்கள். அதிர்ச்சி அடையாதீர்கள். நான் இளக்காரமாகக் கூறவில்லை- நேர்மையுடன் சொல்கிறேன்.

    அரவிந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் அவ‌ர்க‌ள் கூறிய‌தைப் போல‌ இயேசு கிருஸ்த்துவை ச‌ரியாக‌ப் புரிந்து கொண்டு, இயேசு கிருஸ்த்துவின் பெய‌ரை மீட்டுக் கொடுக்கும் வேலையை செய்ய‌ப் போவ‌து இந்துக்க‌ள் மட்டுமே.

    இயேசு கிருஸ்த்து கூறிய‌ சிற‌ந்த‌ க‌ருத்துக்க‌ள் உண்மையில் இந்து ம‌த‌த்தின் க‌ருத்துக்க‌ள் தான்.

    இயேசு கிருஸ்து “உன் ச‌கொத‌ர‌னோடு வ‌ழ‌க்கு இருந்தால் முத‌லில் அவ‌னுக்கு கொடுக்க‌ வேண்டிய‌தைக் கொடுத்து அவ‌னுட‌ன் ச‌மாதான‌மாகி பிற‌கு இறைவ‌னிட‌ம் வ‌ந்து ப‌லியை செலுத்து” என்றார்.
    அவ‌ர் கூறிய‌த‌ற்க்கு ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ள் முன்பே, த‌ன் பேரில் த‌வ‌றே இல்லாத‌ போதும், த‌ன் த‌மைய‌னிட‌ம் காலில் விழுந்து அர‌சை ஆளுங்க‌ள் என்று க‌த‌றினார் ப‌ர‌த‌ன் சாமி.

    இயேசு கிருஸ்து “த‌ன்னை ம‌றுத்து த‌ன் சிலுவையை சும‌ந்து கொண்டு என்னைப் பின் தொட‌ர‌ட்டும்” என்றார்.

    அவ‌ர் கூறிய‌த‌ற்க்கு ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ள் முன்பே த‌ன்னை ம‌றுத்து தான் துன்ப‌ங்க‌ளை த‌ய‌ங்காம‌ல் ஏற்று காடு சென்றார் இராம‌ர் சாமி.

    “ஒருவ‌ன் ஒரு பெண்ணை இச்சையுட‌ன் பார்த்தாலே அவ‌ன் விப‌ச்சார‌ம் செய்த‌வ‌ன் ஆவான்” என்றார் இயேசு கிருஸ்து!
    த‌ன் ம‌னைவியைத் த‌விர‌ வேறு எந்த‌ப் பெண்ணையும் ம‌ன‌தாலும் நினையாம‌ல் வாழ்ந்த‌வ‌ர் இராம‌ர் சாமி.

    என‌வே இந்துக்க‌ள் ப‌ல்லாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌ சிற‌ப்பாக‌ க‌ருதிப் பின்ப‌ற்றி வ‌ந்த‌ கொள்கைக‌ளையே இயேசு கிருஸ்து பிர‌ச்சார‌ம் செய்தார்.

    நான் பைபிளில் இருந்து மேற்க்கோள் காட்டி உங்க‌ளை ஏமாற்றி, ஏய்த்து விட‌ப் பார்க்கிறேன் என்று நீங்க‌ள் க‌ருத‌க் கூடும். ஆனால் நான் நேர்மையான‌வ‌ன்.

    நான் இயேசு கிருஸ்துவை வைத்து ப‌ண‌ம் சேர்க்க‌வோ, புக‌ழ் அடைய‌வோ, செல்வாக்கு பெற‌வோ முய‌ல‌வில்லை!

    நான் ஆடைக‌ளில் தொங்க‌ல்களையோ, ச‌பைக‌ளில் வ‌ந்த‌ன‌ங்க‌ளையோ விரும்ப‌வில்லை.

    நான் இயேசு கிருஸ்துவை என்றும் ம‌றுத‌லிக்க‌ மாட்டேன். கோழி கூவும் முன் 3 முறை ம‌றுத‌லித்தார் பேதுரு. ஆனால் என் ந‌ண்ப‌ர்க‌ளே என்னை இங்கே ர‌வுண்டு க‌ட்டி அடிக்கும் போதும், நான் இயேசு கிருஸ்துவை ம‌றுத‌லிக்க‌வில்லை.

    நீங்கள் இயேசு கிருஸ்துவின் ப‌க்க‌மா அல்ல‌து காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளைக் கொண்டு சாத்தானின் ப‌க்க‌ம் இருக்க‌ப் போகிறீர்க‌ளா என்று முடிவு செய்யுங்க‌ள்.

    நீங்க‌ள் சுவிசேச‌க் கார‌ரைப் போல‌ காட்டு மிராண்டிக் க‌ருத்துக்க‌ளை தினிக்க‌ முனைந்தால் அதனா‌ல் இயேசு கிருஸ்து இன்னும் அதிக‌ வேத‌னையே அடைவார்.

    மேலும் மேலும் சாத்தானின் வ‌ழியில் சென்று இன்னும் இன்னும் அதிக‌ ஆணிக‌ளை இயேசு கிருஸ்துவின் மேல் அறையாதீர்க‌ள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி உண்மையிலே சரியாகப் புரிந்து கொள்ள விரும்பினால் எம்முடன் தொடர்பில் இருங்கள். அதிர்ச்சி அடையாதீர்கள். நான் இளக்காரமாகக் கூறவில்லை- நேர்மையுடன் சொல்கிறேன்.

  181. // அவனவன் என் கமெண்ட் வரலை உன் கமெண்ட் வரலைன்னு ஒரே பீலாவா வுடறான். // Mind ur words Hindi wala..! This is Tamil Hindu..!
    யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்..?

    இங்கே ஒவ்வொருவரும் தனித்தனி ப்ளாக் அளவுக்கு விஷயங்களைப் பகிர்ந்திருக்க அது தணிக்கை செய்யப்படும்போது இயல்பாகவே ஒரு வித வேதனை உண்டாகும்;

    எனக்கும் அந்த அனுபவம் உண்டு;
    ஆனாலும் எனக்கு வேறு தளங்களும் பெயர்களும் விசாலமான (மனதுடன் கூடிய) கருத்துக்களும் இருப்பதால் சமாளிக்கிறேன்;

    ஆனாலும் “தமிழ் ஹிந்து” சிலருக்கு அதிகமான- தேவையற்ற சுதந்தரமும்- சிலருக்கு கட்டுப்பாடும் போடுகிறார்; சிலதை நீக்கியும் விடுவதால் தொடர்ச்சியில்லாது போலத் தோன்றுகிறது;

    ஆனாலும் இது அவருடைய தனி உரிமை; அவருடைய பணி சிறக்கட்டும்..!

  182. A Dalit, treated untouchable and subjected to all sorts of humiliation particularly in rural Hindustan by other Hindu csates, when gets converted to Christinaity or Mohmedanism, the very same other Hindu castes, strangely and suddenly, beign to treat them with equality! The converts may NOT be treated with respect in their adopted (Christian or Mohmedan) society but they are able to receive the respect from the society they had left. This is a very absurd situation, a suicidal attitude of Hindu society. This is one of the reasons for Dalits and marginalised segments easliy falling into the trap of proselytisers. This is what Sri Glady contends. But the problem is, he recommends conversion on this ground! Those who are ill-treated in Hindu society can get converted to receive human treatment from Hindu society!

    WE need to concentrate more on rural areas and put maximum efforts to change the attitude of castes in Hindu society other than Dalits to treat Dalits equally in all social activities. Our concen has been very much on these lines for many decades but it is NOT enough. Until recently, whenever I was invited by small gatherings of youngsters in small towns, I used to insist on staying with a Dalit, dining with them. This was also my practice, when I was associated with VHP and going places.

    MALARMANNAN

  183. பாஸ்கர் ஐயா,

    //எல்லாம் நன்மைக்கே, என்ன திருச்சி நண்பரே திடீரென்று சொர்க்கம், நரகம், கடவுள் என்று ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள் போல் உள்ளது.

    உண்மையில் ஊனமுற்றவர்க்காக கடவுளையே திட்டும் உங்கள் மனிதாபிமானம் உள்ளதே அது ஒன்றே ஒரு இந்து என்பதன் சான்று, ஏனெனில் நம் தந்தையை கோபிப்பதுபோல் நம் கடவுளை கோபித்துக்கொள்ளலாம் அந்த அளவுக்கு நமக்கும் கடவுளுக்கும் நெருக்கமும் உரிமையும் தந்தது இந்து தர்மம் ஒன்று மட்டும்தான்//

    அப்படி என்ன உணர்ச்சி வசப் பட்டு விட்டேன்? அப்படி என்ன தவறாக எழுதி விட்டேன்?

    நான் திட்டியது கடவுளை அல்ல. கடவுளின் பெயரால் நம் மீது திணிக்கப் படும் காட்டு மிராண்டித் தனங்களை, பைத்தியக்காரத் தனங்களை , பித்தலாட்டத்தைத் தான். இவர்களால் கடவுளுக்கே சோதனை.

    க‌ட‌வுள் ஒருவ‌ரை ஒரே ஒரு முறை தான் ப‌டைக்கிறார் என்ற‌ க‌ற்பனையைக் கைக் கொண்டால்தான், அப்படி முத‌ல் முறையாக‌ ப‌டைக்கும் போதெ ஒருவ‌ரை குருடாக‌, முட‌மாக‌ப் ப‌டைகிறார், ஏழை வீட்டிலே ப‌டைகிறார் என்ற‌ அளவில் அவ‌ர் ஒரு அநியாய‌க்கார‌, கொடுமைக்கார‌ ச‌ர்வாதிகாரி என்ற‌ வ‌ர்ண‌னைக்கு, குற்ற‌ச் சாட்டுக்கு ஆளாவார்.

    ஆனால் ஒரு உயிர் ப‌ல‌முறை பிற‌ந்து இற‌க்கிற‌து. ஒரு வாழ்க்கையில் அந்த‌ உயிர் செய்த‌ த‌வ‌றுக‌ளுக்கு ஏற்ப‌ க‌ட‌வுள் அந்த‌ உயிருக்கு புதிய‌ பிற‌ப்பை அளிக்கிறார். ஒருவ‌ன் ஒரு பிற‌வியில் ஒருவ‌ன் க‌ண்ணைக் குத்தி குருடாக்கினால் நியாய‌ம் வ‌ழ‌ங்க‌ மாத்திர‌மே (அப்ப‌டிக் குத்த‌ப் ப‌ட்டு குருடான‌வ‌னுக்கு நியாய‌ம் வ‌ழ‌ங்க‌) க‌ண்ணைக் குத்திய‌வ‌னைக் க‌ட‌வுள் அடுத்த‌ பிற‌வியில் குருடாக‌ப் ப‌டைக்கிறார் என்று இருந்தால், அப்போது க‌ட‌வுள் மீது குற்ற‌ம் இல்லை.

    Sri Baaskarji,

    you yourself could have explained this concept.

    The basic concept of this was explained by Swami Vivekanandha in his popular Chicago speech. Swamji has even asserted that if one can concentrate and sharpen our mind, he can remember his previous births. He caonfirmed that he could see what happened in his previous births. In that way along with Adi Shanakara, Swami Vivekanandha also can be called as a seer. But the media is attaching the “seer” tag to any one as per its wish!

    நியாய‌ம் தான் முக்கிய‌ம். க‌ருணை இல்லாத‌வ‌ர், நியாய‌ம் இல்லாத‌வ‌ர் க‌ட‌வுளாக‌ க‌ருத‌ப் ப‌ட‌ முடியுமா? முடிய‌வே முடியாது. ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை உடைய‌ கொடுமைக்கார‌ ச‌ர்வாதிகாரியாக‌வே க‌ருத‌ப் ப‌ட‌ ‌ முடியும்.

  184. Whatever liberation tamil hindu gives for other religions is much higher than the magazines run by other religions gives to Hindus.

    the magazines run by other religions only permit our views only when we write something condeming the Hinduism.

  185. //நீங்கள் கூறியபடி நமது பிள்ளைகளுக்கு வேதங்களையும் அதன் தத்துவங்களையும் அறியும்படி செய்வதுவே நல்லது . //
    நன்றி பாஸ்கர். மீண்டும் வேதபாடசாலைகள் உயிர் பெறவேண்டும். அணைத்து மசூதிகளிலும் குரான் சொல்லிக்கொடுக்கபடுகிறது, சர்ச்களில் விவிலிய வகுப்புகள் உள்ளன. ஆனால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே வேதபாடசாலைகள் உள்ளன. சாதி பாகுபாடில்லாமல் வேதம் கற்றுத்தரப்படவேண்டும்.

    மலர்மன்னனின் கருத்து உண்மையே. நாம் ஒருவனை தாழ்ந்தவன் என்று ஒதுக்கும்போது, அவன் நம்மைவிட்டு விலகி, வேறு மார்க்கம் போவது இயற்கையே. சாதிப்பாகுபாடுகளை ஒழிக்காமல், மதமாற்றத்தை நாம் முழுமையாய் ஒழிக்க முடியாது.

    //ராம்கோபால் என்கிற பெயரில் எழுதுபவர் இஸ்லாமியர் என நினைக்கிறேன். பாவம்…சொந்த பெயரில் எழுதக்கூட துணிவில்லை போலும். //
    இது போன்ற ஆதாரம் இல்லாத, மற்றவரை தனிப்பட்ட முறையில் தாக்கும் கருத்துக்களை தவிர்க்கலாமே அரவிந்தன் நீலகண்டன். உங்கள் நல்ல கருத்துக்கள் கூட, நீங்கள் உண்டாக்கும் கோபத்தால் அடுத்தவர் மனத்தில் படியாமல் போய்விடலாம் அல்லவா.
    அன்புடன்,
    க. தமிழ் அரசன்

  186. God has given everything FREE only and GOD is never partial/biased. The disparities on the basis of rich and poor, high caste and low caste, higher status and lower status are all man made and GOD is NOT responsible for that. Blaming God for disparities is childish. Likewise, genetic maladies are also our own deficiencies. Any mishap in life, if you go deep into it will come to know that you are responsible for what had happened (Theethum Nanrum Piar Thara Vaaraa). Even natural calamities, if probed deeply will reveal that it is the outcome of man’s action. If you try to devote on GOd for spiritual advancement and not for materialistic benefits, you will not have the temperament of finding fault with God. But starngely, if you tune with the cosmic energy that is God with spiritual bent of mind, you are also benefited materially! Bhagwan Sri Ramana Maharishi has stated this. “Once you are able to tune with the cosmic energy, all your material needs are also taken care of,” He has stated. See, I left everything and came empty handed with the intention of abandoning worldly possessions; now see, how many assets and people I am surounded by, He would laugh. Sri Ramana Maharishi was a different kind of saint. He was an advaitin to the core, always asking to practice self analysis (who am I) instead of approaching a guru but very compassionate and also lived with the spirit of participating in Karmic duties. He would cut vegetables in the kitchen for the lunch of Ashramites. Unless we try to advacnce in spiritual practice, we will continue to mix up anamolies in life with God and try to expalin in different versions. Religion is NOT necessary for spiritual advancement but starngely, it is religion that takes you to the first step toward spirituality.

    For material benfits, use your intelect, limbs and faculties GOD has given you free. If there is any deficiency, identify the compensation God has made for you and use, which is known as diferently abled. If come across any mishap, try to gain c ourage to face the situation bravely instead of finding fault with God: pray to God to give you strength to face the mishap. Afterall, life span is very very short and everything will pass.
    Everything will pass, assures my Master Sri Krishna.

    MALARMANNAN

  187. //நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி உண்மையிலே சரியாகப் புரிந்து கொள்ள விரும்பினால் எம்முடன் தொடர்பில் இருங்கள். அதிர்ச்சி அடையாதீர்கள். நான் இளக்காரமாகக் கூறவில்லை- நேர்மையுடன் சொல்கிறேன்.//
    Dear Trichykkaran, if you are that sincere, why dont you answer me the following.
    Why Jesus has to come to this world (that too by a Virgin Birth)?
    What is the purpose of his Coming?
    What is his basic teaching?
    Why did he willingly died a cruel death on cross?
    What is the significance of his resurrection?
    //அவருடன் சேர்ந்து சர்ச்சில் பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும், நான் செய்த பாவங்களுக்கு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது எனக்கு மன நிறைவைத் தரும் என்றும் கூறினேன். //
    Why do you have to ask forgiveness to Jesus?

    I hope you will be honest in answering these questions.
    Also, I hope the editor will not reject this.

    With Love,
    Ashok

  188. பெரியார், அம்பேத்கர, ஜார்ஜ் பெர்னான்டஸ்,காந்தி ேபான்ற பல பெரும்பெரும் தலைவர்கள் இஸ்லாத்தைப்போற்றினார்கள். காரணம் ஜாதியில்லை, ஒரே கடவுள், சகோதரதுவம் இவைகள் தான் முக்கிய காரணம். ஆனால் முஸ்லிம்களிடமும் மூடபழக்கவழக்கம் உண்டு அதாவது சமாதி வழிபாடு, தாலி கட்டிகொள்ளுதல், மற்றவர்களில் காலில் விழுந்து சுயமரியாதையை இழக்கும் கும்பல, சந்தன கூடு திருவிழா, அதற்கு பலலட்சம் வெட்டி செலவு, இது போன்ற வற்றை பெரியார் கடைசி வரை எதிர்த்து வந்தார். ஏசுவும் கடவுள் ஒருவர் என்று போதித்தார், நான்கு வேதங்களும் ஒரு கடவுளையே போதித்தன. ஆனால் இவற்றை கற்கவும், சிந்திக்கவும் யாரும் தயாரில்லை. இந்து மதத்தில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கையை யாராவது கூறமுடியுமா? விட்டுக்கொரு கடவுள். ஏசு, முகமது, ஆப்ரகாம், மோஸஸ் இவர்கள் கடவுளர்கள் அல்ல இவர்களும் நம்மை போன்றே வாழ்ந்த மனிதர்கள்.

  189. நீலகண்ட ஐயா அவர்களே… இனி என் பெயரை பசுநண் காப்பாளன் என்று குறிப்பிடட்டுமா… இப்பக்கத்திற்கு நான் வருவது உங்களுக்கு பிடிக்கவில்லையா… அல்லது சகித்துக்கொள்ள முடியவில்லையா…

  190. இந்து மதத்தில் மட்டும் தான் உப்பை – சினி என்றாலும், கல்கண்டு என்றாலும், வைரகற்கள் என்றாலும் ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை.

  191. வணக்கம்,

    நண்பர் திருச்சிக்காரர் அவர்களே தவறுகளை சுட்டிக்காட்டி ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இறைவனை வைத்து அவர் மீது கோபிக்கும் உரிமையும் நெருக்கமும் இந்து மதத்தில் மட்டுமே சாத்தியம் என்பதை சுட்டிக்காட்டவே நான் அவ்வாறு எழுதினேன், உங்கள் மீது நான் குற்றச்சாட்டை வைக்க வில்லை, மற்ற மதங்களில் இந்த உரிமையை கண்டதுண்டா.

    ஊழ்வினை வந்து உருத்தூட்டும் என்று கூறுகிறார் இளங்கோவடிகள், பூர்வ ஜன்மாகளின் கர்மவினைப்பயனே நாம் தொடரும் இப்பிறவிகள். அந்த தெளிவு இருப்பதனால் இந்து தர்மத்தில் புண்ணிய கர்மங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. தொடராக வரும் பிறவிகளில் நமது பாவங்களை களைந்து இறைவனை நோக்கிய பயணமாகவே ஆத்மாவானது தொடர்கிறது. தனது முன்வினைக்கேர்ப்ப அடுத்தடுத்த பிறப்புகளை அடைகிறது
    ” புல்லாகி, பூண்டாகி, புழுவாகி. மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி, கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் முனிவராய் தேவராய் எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடுற்றேன்”

    இறைவனின் அடிகளை கண்ட பின்னர் மோட்சம் பெற்றேன் என்பது மாணிக்க வாசகர் வாக்கு. ஆனால் இந்தத்தெளிவு கடவுளை சொர்கத்திலும் வேறு லோகத்திலும் இருப்பதாக நம்புபவர்களிடம் இருக்காது. படைப்புக்கு இறைவனே காரணம் என்று நம்பும் இவர்களிடம் சரியான உதாரணம் சொன்னீர்கள். உலகத்தை எல்லாம் வல்ல இறைவன் படைத்தான் எனும்போது பிறப்பின் ஊனத்திற்கு இறைவனே காரணம் என்று அர்த்தமாகிறது, அப்படியானால் இவர்கள் எந்த பாவமும் செய்தவர்கள் இல்லை என்று ஆகிறது. ஊனங்களை படைத்த கடவுளே குற்றவாளி ஆகிறான். குற்றவாளியான ஒருவரை எப்படி மனதார வணங்கமுடியும்.

    “தீதும் நன்றும் பிறர்தர வாரா”. பிறகு தொடர்கிறேன்…..

  192. அருமை ந‌ண்ப‌ர் ஜ‌னாப் ராம்கோபால் அவ‌ர்க‌ளே,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    எந்த‌ ம‌த‌த்தையும் அனுகும் போது அதில் உள்ள‌ ந‌ல்ல விச‌ய‌ங்க‌ளை முத‌லில் அனுகுவ‌து, ம‌ற்ற‌வ‌ர் ம‌ன‌திற்க்கு வ‌ருத்த‌ம் த‌ரும் விச‌ய‌ங்க‌ளைத் த‌விர்ப்ப‌து என்ற‌ அனுகுமுறைதான் இந்து ம‌த‌த்தின் முறை. அந்த‌ வ‌ழியையே நானும் க‌டைப் பிடித்து வ‌ருகிறேன்.

    பல‌ தெய்வ‌ வ‌ழிபாடு ப‌ற்றி ப‌ல‌முறை தெளிவாக‌ விள‌க்கி விட்டோம்.

    Why do you hate சிலைவழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும்?

    What is your problem?
    Did the idol worshippers came to you and stolen your money?

    Did the idol worshippers plundered the other countries?

    Did the idol worshippers involve in war and killed millions in the name of God?

    Did the many god worshippers hate one God worshippers?

    No!

    Then why do you hate them?

    In my opinion, Idol worship is probably the best form of Worship, or atleast one of the best form of worship!

    There is absolutely no wrong or Sin in idol worship.

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the most tolerant people!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who accepts all forms of worship!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who does not spread hatredness for others!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who accepts all forms of worship!

    Throughout the world, if you see the behaviour of the people,
    the Idol worshippers are the only people who does not compell others to follow their method!

    I dont know what is the problem for other people, If I worship my God- I am not stealing money, I have not cheated any one, I am not disturbing the soceity!

    I can say confidently, that all these above mentioned good qualities have been inherited by me only through idol worship!

    Why do you hate these practices?

    ஒரு முறை கேட்க‌லாம். இரு முறை கேட்க‌லாம்.

    ஆனால் நாங்க‌ள் ப‌தில் கூறியும் நீங்க‌ள் திரும்ப‌த் திரும்ப‌ அதே கேள்வியை வைப்பது ச‌லிப்பை வூட்டுகிறது.

    உங்க‌ளுக்குப் பிடிக்க‌வில்லை என்ப‌த‌ற்க்காக‌, சில‌ மார்க்க‌ங்க‌ள் உருவ‌ வ‌ழிபாட்டை, ப‌ல‌ தெய்வ வழிபாட்டை க‌ண்டிக்கிற‌து என்ப‌த‌ற்க்காக எங்க‌ள் வழியை மாற்றிக் கொள்ள வேண்டுமா?

    நாங்க‌ள் அளிக்கும் ப‌தில் த‌வ‌றான‌து என்று‍ உங்க‌ளுக்குத் தோன்றினால்,
    அதை சுட்டிக் காட்டுங்க‌ள்.

    ஆனால் நீங்க‌ள், நாங்க‌ள் அளிக்கும் ப‌திலை குறுக்குவெட்டி அத‌ற்க்கான‌ ப‌தில் க‌ருத்துக்க‌ளைக் கூறாம‌ல் மீண்டும், மீண்டும் “உருவ‌ வ‌ழிபாடு, ப‌ல‌ தெய்வ வழிபாடு த‌வ‌று” என்று- ஏன் த‌வ‌று கூறாம‌லேயே- கூறி வ‌ருவ‌து இங்கே ஆரோக்கிய‌மான‌ ஆன்மீக‌ ஆராய்ச்சி ந‌ட‌த்துவ‌த‌ற்க்கு இடையூராக‌ உள்ளது.

    நாங்க‌ள் ஏதாவ‌து கூறினால் “திருச்சகாரர்ரே
    இதற்கு பெயர்தான் சகிப்பு தன்மையா… தமிழரசன் நம் மதத்தில் கேள்விகேட்டால் பிற மதத்தில் உள்ள குறைகளை சுட்டிகாட்டுகிறீர்களே” என்று வ‌ருத்த‌ப் ப‌டுகிறீர்க‌ள்.

    என‌வே ஒரு கேள்வி கேட்டால் அத்ற்க்கு நாங்க‌ள் பதில் குடுத்தால், ஒன்று திருப்தி அடைய‌ வேண்டும், அல்ல‌து அந்த‌ ப‌தில் எந்த‌ வ‌கையில் திருப்தி த‌ர‌வில்லை, அந்த‌ ப‌திலில் என்ன‌ த‌வறு என்ப‌தை சுட்டிக் காட்டுவ‌தே ச‌ரியான‌ வ‌ழி.

    தெளிவான‌ ப‌தில்க‌ள் கொடுக்க‌ப் ப‌ட்ட‌ போதும் மீண்டும், மீண்டும் இப்ப‌டி செய்யாதே, அப்ப‌டி செய் என்று க‌ட்ட‌ளைக‌ளைப் போடுவ‌து ச‌ரியா?

    குதாஃபிஸ்

    திருச்சிக் கார‌ன்

  193. //பெரியார், அம்பேத்கர, ஜார்ஜ் பெர்னான்டஸ்,காந்தி ேபான்ற பல பெரும்பெரும் தலைவர்கள் இஸ்லாத்தைப்போற்றினார்கள்//

    //பெரியார், அம்பேத்கர, ேபான்ற பெரும்பெரும் தலைவர்கள் இஸ்லாத்தைப் போற்றினார்கள்//

    ஆனால் இவ‌ர்க‌ள் யாருமே இஸ்லாத்திற்க்கு மாற‌வில்லை. அவ‌ர்க‌ளது ஆத‌ர‌வ‌ள‌ர்க‌ள் யாரையும் இஸ்லாத்திற்க்கு மாற்ற‌வுமில்லை.

    அது ம‌ட்டும‌ல்ல‌ இஸ்லாத்தின் ப‌ழ‌க்க‌ங்க‌ளைக் கூட‌ க‌டைப் பிடிக்க‌ முய‌ற்சிக்க‌வில்லை.

    ஏனெனில் இஸ்லாத்தில் இணைந்த‌ பின் எந்த‌ வித‌மான‌ சுத‌ந்திர‌மான‌ சிந்த‌னைக்கும் இட‌ம் இல்லை என‌ப‌தும்,

    அப்படி ஏதாவ‌து சிந்திப்ப‌தானால் “இஸ்லாத்திதின் ந‌ம்பிக்கைக‌ளை எல்லொரும் ஏற்றுக் கொள்ள‌ செய்ய‌ என்ன‌ செய்வ‌து?” என்ற‌ ஒரே ஒரு சிந்த‌னையை ம‌ட்டுமே செய்ய‌ முடியும் என்ப‌தும் அவ‌ர்க‌ளுக்குத் தெரியும்.

    க‌ட‌வுள் இல்லை என்று வெளிப்ப‌டையாக‌ அறிவித்தால் ஷ‌ரியா ச‌ட்ட‌ப் ப‌டி குறைந்த‌ ப‌ட்ச‌ த‌ண்ட‌னை த‌லை வெட்ட‌ப் ப‌டுவ‌து தான், என்ப‌தை அறிந்து வைக்கும் அளவுக்கு அவ‌ர்க‌ளுக்கு ப‌குத்த‌றிவு இருந்த‌து!

    அத‌னால் இஸ்லாத்தை இவ‌ர்க‌ள் பாராட்டிய‌து த‌ங்க‌ளின் அர‌சிய‌ல், ச‌மூக‌ ஆத‌ர‌வு த‌ள‌த்தை விரிவு ப‌டுத்திக் கொள்ளாத் தான்.

    //காந்தி//

    காந்தி இஸ்லாத்தில் உள்ள‌ சிற‌ப்புக‌ளைப் பாராட்டினார். நானும் இஸ்லாத்தில் உள்ள‌ சிற‌ப்புக‌ளைப் பாராட்டிகிரேன். என் வ‌ழி கிட்ட‌த் த‌ட்ட‌ காந்தி வ‌ழிதான்.

    //ஜார்ஜ் பெர்னான்டஸ் ேபான்ற பல பெரும்பெரும் தலைவர்கள் இஸ்லாத்தைப்போற்றினார்கள்//

    ஜார்ஜ் பெர்னான்டஸ் பெரும்பெரும் தலைவர்?

    த‌லைவா, காமெடிக்கு ஒரு அளவு வேண்டாம்?

  194. Will the God respond to idol worshippers?

    Please, read the following story:

    There was a big Complex including a very big tall building, of 100 floors.

    The Complex is having all fecilities, including Shopping mall, Helipad, Airconditioning, Internet, parks, theme parks …etc!

    Many people lived and worked in the Complex!

    This building is owned by a lady, who controls , can control all the operations in the Complex. She can see what happens in any part of the building through cameras and CC tvs!

    One of the owners (Lady) smal girl child about three years old, was put up in the building.

    The Girl child was put upon alone in a flat , within the building. She is nurtured by many servants from time to time.

    But the unfortunate Girl child have never seen her mother any time, but she heard many stories about her mother that her mother is rich, powerfull, kind…etc.

    One day the Girl child was left alone, nobody turned up to help her.

    She became hungry and thirsty, cried but nobody came to help her.

    She continued the crying for some time then moved to a corner of the room where she has been living.

    She found a statue of a woman above a table in the corner!

    The Girl child moved near to the statue and started talking to it.
    It said, “I think you are my mother, I am thirsty and hungry, quiet for some time I have not eaten any thing. Can you plaese give me a cup of milk?”.

    The real mother of the child who was watching all these things through CC tv, as she can see any thing happening in anypart of that complex.

    In your opinion what do you expect the mother to do?

    Do you expect that
    1) The mother will become angry with the girl child, because the girl child is assuming some one else
    as her mother- thankless that so far all the food , milk and other faecilities were arranged by the real
    mother , the owner of the complex!

    2) The mother immediately orders some servants to arrange milkfor the child, followed by food!

    3) The mother herself took up milk , food and rushed to the flat to feed the child!

    You please pick up any one of the Three above choices .

    Any way it would be very odd if you pick up the first choice, if you are a person following Logic!

    If you choose either the second or third option that shall be the answer for the question

  195. இந்து மதத்தின் மிக முக்கிய நூலாக விளங்கும் பகவத் கீதை, கடவுளே நேரடியாக மனிதனுக்கு கூறியதாக கருதப் படுவது. அதில் கடவுள் மக்களைக் காக்கவும், மக்களை அச்சுருத்தி அடிமைப் படுத்தும் தீயவர்களை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் பிறப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

    யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மார்க்கங்களில் அவ்வப்போது இறைத்தூதர்கள் அனுப்பப் படுவதாக கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்து மதத்தில் கடவுளே நேரடியாக பூமிக்கு வந்து நல்லது செய்வதாக உள்ளது, அவை அவதாரங்கள் என்று கூறப் படுகின்றன. அந்த அவதாரங்கள் கடவுளின் அவதாரம். ஆதலால், அந்த அவதாரங்களும் கடவுலேயன்றி வேறு ஒன்றாக கருதப்படவில்லை. எனவே அவதாரங்களை கடவுளாக கருதி வழி படுவதில் மக்களுக்கும் எளிதான விஷயம், கடவுளுக்கும் அது ஒப்புதலே!

    மேலும் இது வரை தாங்கள் பார்த்தே இராத உருவம் இல்லாத கடவுளை வழி படுவதை விட , அதே கடவுள் தங்களுடன் வாழ்ந்து தங்களைக் காத்த வடிவில் வணங்குவது மக்களுக்கு மிகவும் விருப்பமான, எளிய வழிபாடு ஆகும்!

    இன்னும் வள்ளுவர் ” வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர், வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்றார்.

    உருவ வழிபாடு மனக் குவிப்பிற்கு உதவுகிறது. “எல்லையற்ற, உருவம் இல்லாத” என்று கூறினாலே உடனே நமது மனம் வான வெளியை எண்ணுகிறது. எனவே வெளியிலே பார்ப்பதை மனதிலே எண்ணுவது எளிதானது.

    எனவே ஒரே தெய்வத்தை பல அவதாரங்களில், அவர் செய்த செயல்களை எண்ணி, அப்போது அவர் எடுத்த உருவத்தை எண்ணி வழிபாடு செய்வதில் இந்துவுக்கு எந்த தயக்கமும் இல்லை, மகிழ்ச்சிதான்!

    உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்த்து கண்டிக்க வேண்டிய அவசியம் என்ன என்று நமக்குப் புரியவில்லை. எப்போதோ ஒரு முறை யூத வம்சத்தில் தோன்றிய ஒருவர் கண்டித்தார் என்பதற்காக ellorum கண்டிக்க வேண்டிய அவசியம் என்ன?

    நீங்க‌ள் ஏன் காபா இருக்கும் திசையை ம‌ட்டும் நோக்கி வ‌ண‌ங்குகிரறீர்க‌ள்? காபாவில் எல்லொரும் ம‌ண்டியிட்டு வ‌ண‌ங்குவ‌து உருவ‌த்தின் முன் தானே?

    //ஒவ்வொரு ஊருக்கு ஒரு கடவுள் உள்ளது,.ஏன் ஓவொரு வீட்டிற்க்கும் (kula theivankal) கடவுள் உண்டு.
    ஏன் இத்தனை முரண்பாடு..உண்மையான மதம் பற்றி அறிய விரும்புபவனுக்கு இது இடியாப்ப சிக்கலாகவே உள்ளது..
    உண்மையில் இத்தனை கடவுள்கள் சாத்தியமா?இதில் யாருடைய கடவுள் உண்மையானவர்..ஹிந்துமதத்தில் ஒரு கடவுள் கொள்கை உண்மையெனில்,மற்றைய கடவுள்கள் பொய்யே…//

    பாஷா ப‌ட‌த்தில் பாஷாவாக‌ இருந்த‌ ர‌ஜினி, முத்து ப‌ட‌த்தில் முத்துவாக‌ இருந்த‌ ர‌ஜினி, ப‌டைய‌ப்பா ப‌ட‌த்தில் ப‌டைய‌ப்பாவாக‌ இருந்த‌ ர‌ஜினி, சிவாஜி ப‌ட‌த்தில் சிவாஜியாக‌ இருந்த‌ ர‌ஜினி, எல்லா ர‌ஜினியும் ஒரே ர‌ஜினி தான்.

    ர‌ஜினி ர‌சிக‌ன் த‌ன் வீட்டில் பாஷா ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், முத்து ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், ப‌டைய‌ப்பா ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், சிவாஜி ப‌ட‌த்தை மாட்டியிருந்தாலும், எல்லாமே ர‌ஜினிதான்.

    என‌வே நீங்க‌ள் உண்மையை புரிந்து கொள்ள‌ வேண்டும் என்று திற‌ந்த‌ ம‌ன‌த்துட‌ன் வ‌ந்தால் சிக்க‌லே இல்லை.

  196. ஏனுங்க ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கிறிஸ்துவத்தை இந்தியமயமாக்கல் வேண்டும் என குரல் கொடுக்கிறது நீங்க என்னடான்னா வாழை மரம் கட்டுனது, பந்தல் போட்டது என எல்லாத்தையும் குத்தம் சொல்லுதீய. வேத நாயகம் சாஸ்திரியாரின் பாரம்பரியம் தெரியுமா உங்களுக்கு, அவரது மூதாதையர் பல கிறிஸ்துவ கீர்த்தனைகளை எழுதியவர், தஞ்சை மன்னரின் அவைப்புலவராய் இருந்தவர். கர்நாடக சங்கீதத்தின் பிண்ணனியில் அற்புதமான பாடல்களை எழுதியுள் ளார்கள். கடைசியில் கர்னாடக சங்கீதமும் இந்து மதத்துக்கு தான் சொந்தம் என சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன்.

  197. ஒரு இஸ்லாமிய தாயின் மகன் கிருஷ்ணர் வேடம் போடலாம், கிறிஸ்தவ வெள்ளைக்காரன் கையில் கணபதி சிலை இருக்கலாம், இதெல்லாம் மத இருட்சுவர்களை தகர்த்து எரியும் ஆனால் இந்திய இந்துவின் கையில் பைபிளை பார்த்தால் கோபம் கொப்பளிக்கும்.

  198. What I wanted to stress in my previous post was:
    A Dalit, as long as he/she continues in his native faith that is Hindu, he/she is subjected to all sorts of humiliation, particularly in a rural scenario. The very same Dalit, when converted as Christian OR Mohmedan, the very same Hindu society does NOT discriminate him/her on the basis of caste and he/she is FREE from experiencing humiliation. This reality tempts a Dalit to convert to Christianity/Mohmedanism. Once other so called upper classes start treating Dalits on par with them, Dalits will have no inclination to convert to other faiths. I wish our focus is shifted to the conditions prevailing in rural and semi urban Hindustan. This is one of the reasons for Sri Nanaji to withdraw from active politics (despite being an expert political startegist) and take up rural develpoment programmes.

    I am happy that TamilHindu has brought out a story on Sri Nanaji Deshmukh, one of the brillliant karma yogins of Hindustan, on whom Bharat Mata is very proud of.

    MALARMANNAN

  199. In my post regarding Sri Nanaji: It should read STRATEGIST; By mistake, the letter ‘a’precedes the letter ‘r’! I have been a very dull student, very slow in understanding and I cannot make a good typist!
    MALARMANNAN

  200. YES. Sri Joseph has raised a valid ponit: We stress Hinduisation of Christian and Mohmedan faiths on the basis of cultural heritage of Hindus who are converted to Chrisatianity or Momedanism. If adoption of Hindu culture and tradition in religious ceremonies and festivlals by Christian and Mohmedan clergy/society is to identify with the native heritage, then it is a welcome practice. But the intention of this adoption is to convert gullible Hindus, creating an impression that there is no difference. When a Mohmedan child is don as baby Sri Krishna, it is a spontaneous integrity and when a European Christian holds the idol of Sri Ganapathi, it is real attachment with no intention or motive. That is why these are appreciated. When Indonesia, despite having been more or less totally got converted to Mohmedanism, it still preserves its Hindu tradition and that is why we appreciate this. There is no act of pretension on the part of Indonesia.

    AS Sri Joseph rightly says, in previous centuries, though some got converted to other faiths, they retained their Hindu identity and followed Hindu tradition in many ways. Especially in the North, this kind of integrity with HINDU heritage still continues among Christian and Mohmedan societies. Their sincerity is appreciated. Hinduising alien faiths with sincerity is different from pretension as following Hindu traditon with ulterior motive. I hope Sri Joseph will understand this and practice Hindu culture and tradition in good spirit.
    MALARMANNAN

  201. நண்பர் எழுதுகிறார்
    //Presley – 31 August 2009 at 4:42 pm
    Tamil Selvan,
    To write about christian conversions, etc, you must first understand the divisions in Chritianity. Sathu Chellapa is not a catholic(so is Bush) and so you should not bring in Vatican here. //

    சாது செல்லப்பா கத்தோலிகர் இல்லை. ஐயா, ஒருவர் ஜெசுட் பாதிரியாராக அதாவது ஏசு சபையின் கீழ் பாதியாராக சேரும் போது எடுக்கும் உறுதி மொழி, பிற மதத்தினரை நேரடியாகவோ மறைமுகமகவொ அழிக்க உறிதி.
    The Jesuit Extreme Oath of Induction
    The Jesuit Extreme Oath of Induction as recorded in the Congressional Record of the U.S.A.
    (House Bill 1523, Contested election case of Eugene C. Bonniwell, against Thos. S. Butler, Feb. 15, 1913, pp. 3215-3216):
    I ______, now in the presence of Almighty God, the Blessed Virgin Mary, the Blessed Michael the Archangel, the Blessed St. John the Baptist, the Holy Apostles, Peter and Paul, and all the Saints, sacred hosts of Heaven, and to you, my ghostly Father, the Superior General of the Society of Jesus, founded by St. Ignatius Loyola, in the Pontification of Paul the Third, and continued to the present, do by the womb of the virgin, the matrix of God, and the rod of Jesus Christ, declare and swear that his holiness, the Pope, is Christ’s Vice-regent, and is the true and only head of the Catholic or Universal Church throughout the earth; and that by the virtue of the keys of binding and loosing, given to his Holiness by my Savior, Jesus Christ, he hath power to depose heretical kings, princes, states, commonwealths and governments, all being illegal without his sacred confirmation, and that they may be safely destroyed.
    I do further declare, that I will help and assist and advise all or any of his Holiness’ agents in any place wherever I shall be, and do my utmost to extirpate the heretical Protestant or Liberal doctrines and to destroy all their pretended powers, legal or otherwise.
    I do further promise and declare, that notwithstanding I am dispensed with to assume any religion heretical, for the propagating of the Mother Church’s interest, to keep secret and private all her agents’ counsels, from time to time as they may instruct me, and not to divulge directly or indirectly, by word, writing, or circumstances whatever; but to execute all that shall be proposed given in charge or discovered unto me, by you, my ghostly father. …
    I do further promise and declare, that I will have no opinion or will of my own, or any mental reservation whatever, even as a corpse or cadaver but unhesitatingly obey each and every command that I may receive from my superiors in the Militia of the Pope and Jesus Christ.
    That I will go to any part of the world, whatsoever, without murmuring and will be submissive in all things whatsoever communicated to me. … I do further promise and declare, that I will, when opportunity presents, make and wage relentless war, secretly or openly, against all heretics, Protestants and Liberals, as I am directed to do to extirpate and exterminate them from the face of the whole earth, and that I will spare neither sex, age nor condition, and that I will hang, waste, boil, flay, strangle and bury alive these infamous heretics; rip up the stomachs and wombs of their women and crush their infants heads against the wall, in order to annihilate forever their execrable race.
    That when the same cannot be done openly, I will secretly use the poison cup, the strangulation cord, the steel of the poniard, or the leaden bullet, regardless of the honor, rank, dignity or authority of the person or persons whatsoever may be their condition in life, either public or private, as I at any time may be directed so to do by any agent of the Pope or superior of the Brotherhood of the Holy Faith of the Society of Jesus.

    மயிலாப்பூர் கத்தோலிக சபையின் ஆர்ச் பிஷப் அருளப்ப திருக்குறளுக்கு மோசடியான ஒரு விளக்கம் எழுதி அதற்காக சென்னை பல்கழைகழகத்தில் ஒரு துறை ஏற்படுத்தி திருக்குறளுக்கு போலியான ஓலைச்சுவடிகள் தயார் செய்து அதை செய்ய உதவிய ஆசார்ய பால் கணெஷுக்கு பல லட்சங்கள் 1970களில் செய்து, பின் அருவருப்பான மோசடி வெளியாக நீதிமன்ற வழக்காகி மன்றத்திற்கு வேளியே சொத்துக்களை ஆசார்ய பால் கணெஷுக்கு விட்டு கொடுத்தனர். இது பற்றிய இல்லஸ்ட்ரேடெட் வீக்லியின் கட்டுரைகள்.
    • “Archbishop Arulappa Makes History” -https://hamsa.org/arulappa.htm
    • “Acharya Paul Adds A Footnote” -https://hamsa.org/acharya-paul.htm
    கத்தோலிக சபையின் கத்தோலிக ஆசிரமங்கள் என்ற பெயரில் நடந்த மோசடிகள் பற்றிய நூல் இங்கே

    Catholic Ashrams – Sannyasins or Swindlers
    Catholic Ashrams : Adopting and Adapting Hindu Dharma • 9. The J.R. Ewing Syndrome • 10. Interview with Father Bruno Barnhardt: Emmaculate Heart Hermitage …
    voi.org/books/ca/index.htm – Cached – Similar

    பாடகர் ஜேஸுதாஸ் அவர்கள் கடவுள்பாடல்கள் பாடுவதால் அவர் மகன் திருமணத்தை சர்ச்சில் செய்ய சர்ச் மிகவும் எதிர்த்தது, ஏனோ நண்பர்கட்கு மறந்ந்து விடுகிறது.

  202. “என்னுடைய ஜனத்தைக் கூட்டுங்கள்” என தமது தூதர்களுக்கு இறைவன் கட்டளையிடுவார் என விவிலியம் கூறுகிறது;

    அதைப் போல எனதருமை நண்பர் ஜோசப் போன்றவர்களை இங்கே காண உதவும் “தமிழ் ஹிந்து”வுக்கு வாழ்த்துக்கள்;

    காழ்ப்புணர்ச்சியோ மதவெறியோ இல்லாமல் நாம் பொறுமையாக விவாதித்தால் நல்லதொரு நண்பர் வட்டம் இங்கே உருவாகும் மற்றும் அரிய கருத்துக்களை அனைவரும் நுகரலாம் என எண்ணுகிறேன்;

    “தமிழ் ஹிந்து” வுக்கு ஒரு வேண்டுகோள்…

    தற்போது அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் பாரதத் தாயைப் போல அரவணைக்கத் துவங்கியிருக்கிறீர்கள்;

    இதனைத் தொடர தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

    விவேகானந்தரின் முழக்கம் ஏனோ நினைவுக்கு வருகிறது;
    “தனித்திரு..!
    விழித்திரு..!
    பசித்திரு..!”

  203. Dear Trichykkaran,
    Nice anology.
    //The real mother of the child who was watching all these things through CC tv, as she can see any thing happening in anypart of that complex.

    In your opinion what do you expect the mother to do? //
    Any real mother will really go and feed the baby for that time being. But, she will also teach the baby that the statue is not the mother and she will teach, how to call the mother for any help. And no mother will be interested to make her baby to go and talk with a lifeless statue, when the baby has better ways to talk with her. Also, once the baby grows up, and if it still goes and talks with the statue, the mother will be really worried.
    //What is your problem?
    Did the idol worshippers came to you and stolen your money?//
    Yes, they tried forcing me to give donations for the Ganesha chathurthi.

    //Did the idol worshippers plundered the other countries?//
    They didn’t plunder other countries, but they created havoc in my own country.
    //Did the idol worshippers involve in war and killed millions in the name of God?//
    Luckily these idol worshippers didn’t have that much power to kill millions. Otherwise, they would have done that.
    //Did the many god worshippers hate one God worshippers?//
    No, they dont hate one GOD worshippers, because they consider that ONE GOD worshippers are subset of many GOD worshippers.

    For your clarification, no one hates “many GOD worshippers”, they hate “many GOD worshipping”. It is the act that is hated, not the person.

    With Love,
    Ashok

  204. வணக்கம்,
    //ஒரு இஸ்லாமிய தாயின் மகன் கிருஷ்ணர் வேடம் போடலாம், கிறிஸ்தவ வெள்ளைக்காரன் கையில் கணபதி சிலை இருக்கலாம், இதெல்லாம் மத இருட்சுவர்களை தகர்த்து எரியும் ஆனால் இந்திய இந்துவின் கையில் பைபிளை பார்த்தால் கோபம் கொப்பளிக்கும்.//

    அய்யா ஸ்ரீ ஜோசப் அவர்களே நன்றாக கவனியுங்கள், இரண்டுமே விரும்பி நடந்த நிகழ்ச்சியின் படங்கள். இந்திய இந்துவின் கையில் பைபிளை பார்த்து இங்கு யாரும் கோபப்படவில்லை, மாறாக திணிக்கப்படுவதையே எதிர்த்து குரல் கொடுக்கிறோம்.

  205. சகோதரர் அசோக் குமார் கணேசன் அவர்களைப் பாராட்டுகிறேன்,

    Why Jesus has to come to this world

    இறைவனின் இராச்சியத்தில் இருந்து, தன் அறியாமையினால் மேலும் மேலும் விலகி அதிகமான துன்பத்தில் உழலும் இறைவனின் மைந்தரை மீண்டும் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் சேர்க்கவே இயேசு கிறிஸ்து வந்தார் என்பதே என் கருத்து.

    (that too by a Virgin Birth)?
    இயேசு கிறிஸ்து கன்னி மேரிக்கு பிறந்து இருக்கலாம். சிலர் அதை மறுக்கிறார்கள்.
    இயேசு கிறிஸ்து கன்னி மேரிக்கு பிறந்தவரா இல்லையா என்று நாம் விவாதிக்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். அவர் என்ன சொன்னார், எப்படி நடந்து கொண்டார், அவர் காட்டிய வழி என்ன எனபதுதான் முக்கியம். இயேசு கிறிஸ்து கன்னி மேரிக்கு பிறந்ததனால் தான் அவரைக் கடவுள் ஸ்தானத்தில் வைக்கிறோம் என்பது இல்லை. ஒருவர் கன்னிக்குப் பிறந்தார் அல்லது கடவுளே நேரடியாக வானத்திலே இருந்து படைத்து கீழே இறக்கி விட்டார் என்றெல்லாம் வைத்துக் கொண்டாலும் அவர் ஹிடலரைப் போல , ராஜ பக்ஷே போல நடந்து கொண்டால் அவரை யாரும் கடவுளுக்கு நெருக்கமானவராகக் கருத மாட்டர்கள்.

    What is the purpose of his Coming?
    இறைவனின் இராச்சியத்தில் இருந்து, தன் அறியாமையினால் மேலும் மேலும் விலகி அதிகமான துன்பத்தில் உழலும் இறைவனின் மைந்தரை மீண்டும் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் சேர்க்கவே இயேசு கிறிஸ்து வந்தார் என்பதே என் கருத்து.

    What is his basic teaching?
    பிறரை நேசிப்பது, விட்டுக் கொடுப்பது, தாழ்மையுடன் இருப்பது, பிறரை மன்னிப்பது, இறைவன் நம் பேரில் அன்புடன் இருக்கிறார் என்ற கருத்து இவை போன்றவையே இயேசு கிறிஸ்துவின் முக்கியக் கருத்துக்கள் என்பதே என் கருத்து.

    Why did he willingly died a cruel death on cross?
    அவர் தன் கொள்கைகளின் படி வாழ்ந்தவர். ஒருவன் உன் வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தைக் காட்டு, என்ற கொள்கைப் படி, தன்னை சிலுவையில் அறைய விரும்பியவர்களுக்கு அவர்களின் விருப்பப் படி நடக்க தான் விட்டுக் கொடுத்தார்.

    What is the significance of his resurrection?

    இயேசு கிறிஸ்து பல அதிசயங்களைச் செய்ததாக கூறப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக இதுவும் இருக்கக் கூடும். என்னைப் பொறுத்தவரையில் அதிசயங்களை விட கொள்கைக்கு, கொள்கை வழி செயலுக்கு, தியாயகத்துக்கு முக்கியத்துவம்
    கொடுக்கிறோம்

    //அவருடன் சேர்ந்து சர்ச்சில் பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும், நான் செய்த பாவங்களுக்கு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது எனக்கு மன நிறைவைத் தரும் என்றும் கூறினேன். //
    Why do you have to ask forgiveness to Jesus?

    இயேசு கிறிஸ்து அழுத்தம் குடுத்து கூறிய கொள்கைகளில் ஒன்று பாவ மன்னிப்பு. கருணையுள்ள இறைவன் நாம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும் போது அதை மன்னித்து ஏற்றுக் கொள்வான் என்பதை இயேசு கூறியுள்ளார்.

    இராமர் அகலிகை முதலான பலரின் பாவங்ககளை மன்னித்து பாவ விடுதலை அளித்துள்ளதாகக் கூறியுள்ளனர். ” சூரா அகல்யனு சூசி புரோசிதிவி ஆரிதி தன்யு சேயவே தியாக ராஜு கேயமா ஸ்ரீ ராம பாதமா ” என்ற பாடலை பாடி ஒவ்வொரு வாரமும் நான் இறைவனிடம் நான் செய்த பிழைகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்

    சினிமாவில் வரும் அழகிகளின் அழகை ரசித்தால் கூட பின்னால் அது தவறு என்றே என் மனதை உறுத்தும்.

    எனவே ஒவ்வொரு வாரமும் ராமரிடமும், இயேசு கிறஸ்துவின் படத்தை
    சிலையைக் காணும் போது இயேசு கிறஸ்துவிடமும், மன்னிப்புக் கேட்க நான் தயங்குவதில்லை.

  206. // திணிக்கப்படுவதையே எதிர்த்து குரல் கொடுக்கிறோம். //

    பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக வேதனையுடன் காத்திருக்கும் போது கையில் கைப்பிரதி ஒன்று திணிக்கப்படும்;”முலவியாதிக்கான” நோட்டீஸ் என வாங்கிப் பார்த்தால் வியாதிக்கான மூலத்தைக் குறித்து அதில் எழுதியிருக்கும்;
    சில வினாடிகளிலேயே அது தரையில் வீசப்பட்டு கால்களால் மிதிக்கப்படும்;இங்கே திணிக்கப்பட்டது கைப்பிரதிதானே தவிர பைபிள் அல்ல‌;

    பள்ளிக்கூடத்தில் ஒன்றுமறியாத மாணவர்கள் கரங்களில் (ஒரு காலத்தில்) சிவப்பு நிற புதிய ஏற்பாடு புத்தகம் (பைபிளின் ஒரு பகுதி) திணிக்கப்படும்; வீட்டுக்குக் கொண்டு போகப்பட்ட புத்தகம் மாத இறுதியிலோ போகிப்பண்டிகையன்றோ வீட்டைவிட்டு வெளியேற்றப்படும்;

    பொழுது போக்க தொலைக்காட்சி முன்பு அமர்ந்தால் அந்த நேரம் பார்த்து யாராவது ஒருவர் “கவலைப்படாதீர்கள்” என உருக்கமாகப் பேசி மயக்கப் பார்ப்பார்; மதிமயங்கிக் கிடக்கும்போதே நிகழ்ச்சி முடிய அடுத்து சீரியல் உலகம் அழைக்கும்;

    ஒடம்புக்கு முடியாம ஆஸ்பத்திரிக்குப் போனா ஆனா அங்கே டாக்டருக்கு முன்னாலே அங்கு வந்து தந்திரமாகப் பேசி நமக்காக பிரார்த்தனை செய்து நாம் நிச்சயமாக “குணமாகிவிடுவோம்” என ஏமாற்றுவார்கள்; எப்படியோ குணமாகி வீடு வந்ததும் நமது வழக்கமான வேலைகளில் முழுகிவிடுவோம்;

    இப்படி எதாவது ஒரு வகையில் எதையாவது திணிக்கப் பார்த்தாலும், நாம் இதுவரை விட்டுக்கொடுத்ததில்லை;

    “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது” என்பது சரிதானே..?

  207. //கடைசியில் கர்னாடக சங்கீதமும் இந்து மதத்துக்கு தான் சொந்தம் என சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன்.//

    சொல்வதற்கு ஒன்றுமில்லை. அப்டியே ஷாக்காயிட்டேன்… 😉

  208. //“என்னுடைய ஜனத்தைக் கூட்டுங்கள்” என தமது தூதர்களுக்கு இறைவன் கட்டளையிடுவார் என விவிலியம் கூறுகிறது;

    அதைப் போல எனதருமை நண்பர் ஜோசப் போன்றவர்களை இங்கே காண உதவும் “தமிழ் ஹிந்து”வுக்கு வாழ்த்துக்கள்;//

    அய்யா கிளாடி, ஜோசப் தான் உங்கள் இனமா? நான், பாஸ்கர் ஐயா, மலர் மன்னன் ஐயா இவர்கள் எல்லாம் வேறு இனமா? பார்த்து ஐயா, இந்த இனவெறி இந்தியாவுக்குள் வரக் கூடாது என்றுதானே கஷ்டப் படுகிறோம்.

    விவிலியத்திலே யூத இனத்தைப் பார்த்து, “எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய் ” என்றார் கர்த்தர்.

    நீங்கள் குட்டி பதினாறு அடி பாய்வது போல இந்தியாவிலேயே தமிழ் நாட்டிலேயே மத அடிப் படையில் புதிய “இனங்களை” உருவாக்குகுகிறீர்கள். பார்த்து ஐயா!

    நானோ இயேசு கிறிஸ்துவும் என் கடவுள் என்று ஜெருசலேமோடும் சேர்கிறேன். நீங்கள் பக்கத்து வீட்டில் குடியிருப்பவனை வேறு இனம் என்கிறீர்கள்!

  209. //“தமிழ் ஹிந்து” வுக்கு ஒரு வேண்டுகோள்…

    தற்போது அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் பாரதத் தாயைப் போல அரவணைக்கத் துவங்கியிருக்கிறீர்கள்;

    இதனைத் தொடர தாழ்மையுடன் வேண்டுகிறேன்//

    கவலைப் படாதீர்கள், உங்களுக்கு அரவணைப்பு, அங்கீகாரம் எல்லாம் உண்டு!

    இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரைக்கும், நீங்கள் இந்தியாவிலே இந்து மதத்தை இகழலாம். இந்துக் கடவுள்களை ஜீவன்னில்லாத கடவுள்கள் எனலாம். இந்து மத சார்பு பத்திரிகைகளும், பிற “பொது” பத்திரிகைகளும் அதையெல்லாம் மட்டுறுத்தாமல் போடுவார்கள்.

    அப்போதும் “நீங்கள் இந்துக்கள் சகிப்புத் தன்மை இல்லாதவர்கள்” என்று நீங்கள் சொல்லிக் கொண்டே பாராட்டலாம்.

    ஆனால் இது எல்லாம் இந்தியாவில் இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருக்கும் வரைக்கும்தான். உங்கள் அறுவடை எல்லாம் முடிந்த பின் இந்த நிலைமை இருக்காது.

    இந்த அரவணைப்பு, எல்லாக் கருத்துக்களையும் வெளியிடுதல், எல்லா மார்க்கங்களுக்கும் மரியாதை, அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் பாரதத் தாயைப் போல அரவணைப்பு … இது எல்லாம் இந்து மதம் இருக்கும் வரைக்கும் தான் இருக்கும்.

    அதற்குப் பிறகு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இனத்தைக் கூட்டுவீர்களோ, என்ன செய்வீர்களோ, உங்கள் சாமர்த்தியம்!

    நான் சொல்வது உண்மையா இல்லையா என்று உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள்!

  210. Mr Ashok Kumar
    I am sorry to say that your questions all reflect your total capitulation to the Whiteman’s, Eurocentric Bible and Western Christianity. Please use your intellect ( I am not trying to offend you please) and think logically. Your statements of Jesus coming to earth, Virgin birth, his resurrection are all UNVERIFIABLE STATEMENTS. Just think a moment about this. Suppose, we have a scenario where Jesus never existed. What will happen to Christiaity as a religion then?Christianity will collapse. The whole concept of Christianity is based on unverified, unverifiable statements.
    Atma has no creation as atma is eternal. There was never a time when you were not there and there will not be a time when you will not be there. You are not a born sinner. You are complete, all fulfilling joy, SAT+CIT+ANANDA
    Please spend sometime alone and contemplate and ask your self this question: Who am I? I recommend you to read a simple book ” Who am I?” by HH Swamy Dayanada Saraswathi. Hopefully it will open your eyes.

  211. Dear Mr. Ashok Kumar Ganesan,

    //Dear Trichykkaran, if you are that sincere, why dont you answer me the following.
    Why Jesus has to come to this world (that too by a Virgin Birth)?//

    For all your questions Regarding Jesus

    Please contact me at muzumuttaal@yahoo.co.in

    Thanks,

    Thiruchchikkaaran

  212. I APPRECIATE MR. தேவப்ரியா சாலமோன் !

    Excellent!

    Thanks!

  213. //Any real mother will really go and feed the baby for that time being.//

    time being மட்டும் அல்ல. எப்போதும் காப்பற்றுவாள்!

    ஒரு தாய் தன மகனிடம் ஈகோ பார்க்க மாட்டாள். அதுவும் தன் மகன் கஷ்டப் படும் போது. இது உங்களுக்குப் பிரியவில்லை.

    காட்டு மிராண்டி கருத்துக்களின் அடிப்பையில் கடவுள் பொறாமை யுள்ளவர் எரிச்சல் உள்ள தேவன் என்ற கற்ப்பனைகளை வைத்து இருக்கிறீர்கள்.

    // But, she will also teach the baby that the statue is not the mother and she will teach, how to call the mother for any help. And no mother will be interested to make her baby to go and talk with a lifeless statue, when the baby has better ways to talk with her. Also, once the baby grows up, and if it still goes and talks with the statue, the mother will be really worried//

    நல்லது கடவுள் வந்து எனக்குத் தன்னைக் காட்டட்டுமே!
    அப்படிக் காட்டினால் அவர் யார் எப்படிப் பட்டவர் என்று தெரிந்து கொண்டு வணங்குவேன்.

    இது பற்றி பலமுறை எழுதி விட்டோம். இப்போது உலகில் இருக்கும் யாருக்காவது கடவுள் தன்னைக் காட்டியிருகிராரா( கண்ணை மூடி கொண்டு கடவுள் தகன்னிடம் வந்ததாக நினைத்துக் கொள்வது வேறு விஷயம்)?

    அப்படிக் கடவுள் தன்னைக் காட்டாத பட்சத்தில் எனக்குத் தெரிந்த வகையில் தானே நான் வணங்க முடியும்?

    The benefit of Doubt should be given to me!

    இந்த விசயத்தில் நீங்கள் என்னை நாட்டமை செய்வது ஏன்?

    //What is your problem?
    Did the idol worshippers came to you and stolen your money?//
    Yes, they tried forcing me to give donations for the Ganesha chathurthi//

    இது நடந்தது எந்த வூரில்? எனக்கு எத்தனையோ கிரு ஸ் தவ நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவர் கூட இப்படி கூறவில்லையே!

    ரவுடிகள் சிலர் விநாயகர் விழாவை சாக்காக வைத்து இப்படி உங்களை மிரட்டி இருக்கக் கூடும். ஆனால் அது ஒரு அரிதான நிகழ்வு. ரவுடிகளின் ரவுடித் தனம் பல போர்வைகளில் நடக்கிறது. உங்களிடம் வந்த ரவுடிகள் இந்த விழாவைக் சாக்காக வைத்து பணம் கேட்டு இருப்பார்கள்.

    இதை வைத்து உருவ வழிபாடு செயபவர்கள் அனைவரும் பணம் கேட்டு மிரட்டுபவர்கள் என்றோ, உருவ வழிபாடு பணம் கேட்டு மிரட்ட சொல்கிறது என்றோ கதை கட்டுவது உங்களின் மனதில் உள்ள காழ்ப்பு உணர்ச்சியை தெளிவாகக் காட்டுகிறது.

    உருவ வழிபாடு செய்பவர்களில் 99.99 % பேர் எப்படி வாழ்கிறார்கள்?
    பிறரை மிரட்டி பணம் வாங்கி வாழ்கிறார்களா?

    //Did the idol worshippers involve in war and killed millions in the name of God?//
    Luckily these idol worshippers didn’t have that much power to kill millions. Otherwise, they would have done that.//

    எத்தனை அபாண்டமான பழியை வைக்கிறீர்கள்? இந்து நியாயமாக நடந்து கொள்வான் என்று உங்களுக்குத் தெரியும். அவன் காட்டு மிராண்டித் தனம் செய்ய மாட்டன் என்றும் உங்களுக்குத் தெரியும். வலிமை இல்லையா? வலிமை இருக்கிறது. அந்த வலிமையை அடுத்தவனை அழிக்க பயன் படுத்த மாட்டோம்.

    //For your clarification, no one hates “many GOD worshippers”, they hate “many GOD worshipping”. It is the act that is hated, not the person//

    அந்த வெறுப்புதான் எதற்கு. அந்த வெறுப்பு மனிதனின் மீது உள்ள வெறுப்பாக மாரத்தான் செய்யும். நான் உங்கள் வழிபாட்டை வேருக்கவில்லையே? உங்களுக்கு ஏன் எங்கள் வழிபாட்டின் மேல் காண்டுவெறி? உங்களுக்கு என்ன கஷ்டம்?

    காரணம் இல்லாமல் ஏன் வெறுக்கிறீர்? பிறருக்கு தீங்கு செய்தோமா? பிறர் வீட்டுப் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில் நோக்கினோமா? பிறர் சொத்துக்கு ஆசைப்பட்டோமா?? பிறருக்கு சிறு தீங்காவது நினைத்தேனா?

    எந்த தீங்கும் விளைவிக்காத செயல் மேல் ஏன் உங்களுக்கு வெறுப்பு?

  214. இங்கு இந்து மதம் மீது பாயும் அனைவரும் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மற்ற மதங்கள் அனைத்தும் ஒரு கூட்டத்தை பார்த்து பேசுபவை, ஒரு தனி ஒருவரால் உண்டானவை. நபிகளுக்கு முன்னால், யாருக்கும் அல்லாவை பற்றி தெரியாது, இயேசுவிற்கு முன்பும் அதே கதைதான். அதற்கு முன்னால் இருந்த மக்கள் எல்லாரும் நரகத்திற்குதான் சென்று இருப்பார்களா? அவர்களை உய்விக்க ஏன் இந்த தேவ குமாரர்கள் முன்பே வரவில்லை. விக்கிரக ஆராதனை தவறு என்று கூறும் கிறிஸ்துவர்கள், மேரிமாதா சிலையை வழிபடுவது ஏன்.

    இந்து மதம், ஒவ்வொரு தனி மனிதனுக்காகவும் பேசுகின்றது. பிரம்மம் என்பது ஒன்றே என்பது வேதங்களின் சாரம். ஆனால் அதை உணர்வது என்பது அனைவராலும் இயலாது. பிரம்மம் ஒன்று என்று நம்புவது வேறு, உணர்வது வேறு, ராக்கெட் என்பது ஒரு விசையை தட்டினால் போகும் என்று அறிவது வேறு, அதன் ஒவ்வொரு செயல்பாட்டையும் அறிவது வேறு.

    பிரம்மத்தை உணர்வது என்பது மிக கடினமான விஷயம். விக்கிரக ஆரதனை, யாகங்கள் செய்வது, கர்மாக்களை புரிவது என்பது அதற்கான் படிகள். படிப்படியாகத்தான் அதை அடைய முடியும். ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்களின் பண்பு மாறுகின்றது என்பது நிதர்சனம். அதற்கே ஒவ்வொரு யுகத்திற்கும் தகுந்ததை செய்ய பணிக்கின்றது. க்ருத யுகத்தில் வேதமும் கலியுகத்தில் தானமும், பக்தியுமேதான் உய்வுதரும்.
    புத்த மதம், ஜைன மதம் அனைத்தும் இந்து மதத்தின் கிளைகள்தான். இந்து மதம் என்ற பெயரே, மற்றவர்கள் தந்தது தானே, பெயரில்லா, யாராலும் ஆரம்பிக்கப்படாத மதம் இது.
    ஒரு கார்ப்பரேட் அமைப்பு ஏதுமின்றி, சுய சிந்தனையோடு நடக்க அனுமதிக்கும் மதம். இதைத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டளைகள் ஏதுமில்லை இங்கு.
    பாரதமும், ராமயணமும் படிக்காமல் இங்கு பினாத்தும் முட்டாள்களுக்கு பதில் அனாவசியம். அதை யார் எழுதியது என்று கூடத்தெரியாமல் வாதிட வருபவர்களை முட்டள்கள் வரிசையில்தான் வைக்க வேண்டும். தர்க்க வாதம் புரிய முதலில் படிக்க வேண்டும், சும்மா சேற்றை வாரி இறைக்கும் பேர்வழிக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் நண்பர்களே.

  215. கிறிஸ்தவர்கள் எல்லோருமே ராமாயனத்தியோ, மகாபாரதத்தையோ பகவத் கீதையையோ படிக்காமல் வந்து விவாதம் செய்கிறார்கள் என என்ன வேண்டாம்.
    சங் பரிவாரத்தை சேர்ந்த தீனா நாத் பத்ரா என்பவர் இயேசுவை முறையற்று பிறந்தவர் என அவுட்லுக் இதழில் ஒருமுறை பேசி கிறிஸ்தவர்களை புண்படுத்தினார், அதேபோல் சீதா ராம் கோயல் போன்றோர் கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் இகழ்ந்தும் கேவலமாக பேசியும் வந்துள்ளனர். எனவே இகழ்கிறார்கள் சேற்றை வாரி இறைக்கிறார்கள் என கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிய வேண்டாம்.

  216. அய்யா வணக்கம்

    நான் சிறு வயது பையன் தயவு செய்து நான் எதாவது தவறாக அச்சிட்டால் என்னை தவறாக நினைக்க வேண்டம்.

    திரு jo மற்றும் திரு glady அவர்களுக்கு நான் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது தங்களின் முன்னோர்கள் அனைவருமே கிறிஸ்துவர் தானா ?

    //ஏனுங்க ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கிறிஸ்துவத்தை இந்தியமயமாக்கல் வேண்டும் என குரல் கொடுக்கிறது நீங்க என்னடான்னா வாழை மரம் கட்டுனது, பந்தல் போட்டது என எல்லாத்தையும் குத்தம் சொல்லுதீய. வேத நாயகம் சாஸ்திரியாரின் பாரம்பரியம் தெரியுமா உங்களுக்கு, அவரது மூதாதையர் பல கிறிஸ்துவ கீர்த்தனைகளை எழுதியவர், தஞ்சை மன்னரின் அவைப்புலவராய் இருந்தவர். கர்நாடக சங்கீதத்தின் பிண்ணனியில் அற்புதமான பாடல்களை எழுதியுள் ளார்கள். கடைசியில் கர்னாடக சங்கீதமும் இந்து மதத்துக்கு தான் சொந்தம் என சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன்.//

    கர்நாடக சங்கீதத்தை முறையாக வகுத்து கொடுத்தது இயேசுவின் பிரதான சீடர்களே
    இதை சொல்ல மறந்துவிடீர்களே, உண்மையில் வேப்பமரத்தில் குடிஇருந்து அருள் தருவது மாரியம்மாள் அல்ல. மேரி அம்மாளே . எனவே வேப்பமரமும் கிறிஸ்துவர்களுக்கே உரியது .
    மனிதர்களை குணப்படுத்தும் சுக்கு, மிளகு , திப்பிலி போன்ற மருந்துகளுக்கு சொந்தக்கரரர்கள் உண்மையில் கிறிஸ்துவர்களே .
    are you happy?

  217. அய்யா வணக்கம்

    மற்ற எந்த மதத்திலும் ஆள் சேர்ப்பதில்லை இதில் மட்டும் ஏன்?

    கிறிஸ்துவ மதத்தை சர்ச்சில் போதியுங்கள் அதை விட்டுவிட்டு ஏன் கடை விரிக்கிறீர்கள்

  218. அசோக் குமார் கணேசன் அவர்களே,

    உருவ வழிபாடோ, பல தெய்வ வழிபாடோ எந்த இந்துக்களின் மனதிலும் வெறுப்புக் கருத்துக்களையோ கெட்ட எண்ணத்தையோ உண்டாக்கவில்லை.

    இந்துக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் கடவுள்களை ஆராதனை செய்து வணங்குவதைப் பார்த்து நீங்கள் வெறுப்பு அடைகிறீர்கள்.

    சரியாக நடக்கும் எங்களைப் பார்த்து துவேஷம் அடையும் நீங்கள் வழிபடும் முறை என்ன?

    //அன்றியும் நீ ஜெபம் பண்ணும்போது மாயக் காரரைப் போலிருக்க வேண்டாம். மனுஷர் காணும் படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்.

    நீயோ ஜெபம் பண்ணும் போது , உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து , உன் கதவைப் பூட்டி ,அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு//

    நீங்கள் சர்ச்சுக்கு வந்து, பலர் சேர்ந்து, பிரசங்கங்களை நடத்தி செய்வது வழிபாடா?

    அது வழிபாடா? அரசியல் கூட்டமா?

    இயேசு தனி அறையில் கதவைப் பூட்டி ஜெபம் பண்ணச் சொன்னார். பீச்சிலே , கடற்கரையிலே ஆரவாரமாக கூட்டங்களைக் கூட்டி, ஆட்களை கொணர்ந்து “ஜெபம்” செய்கிறீர்களே? அது ஜெபமா?

    இது எப்படி இயேசு கூறிய வழி என்று விளக்க முடியுமா?

    //அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது அஞ்ஞானிகளைப் போல அதிக வார்த்தைகளைக் கொண்டு அலப்பாதேயுங்கள்//

    இந்துக் கோவில்களில் கூட ஆடி வெள்ளியில் சவுண்டு சிஸ்டம் வைத்து பாடல்களைப் போடுகிறார்கள். ஆனால் கோவில்கள் மக்கள் இருப்பிடங்களில் இருந்தாலும் ஒரு பெரிய குடியிருப்பில் அநேகமாக ஒன்று அல்லது இரண்டு கோவில்கள் தான் உள்ளன.

    ஆனால் உங்ககளில் சிலர் வீட்டிலேயே மைக் செட் வைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் காலையிலே ஜெபம் என்ற பெயரிலே தெருவையே அலற வைக்கிறார்கள். விடுமுறை நாளில் தூங்க கூட முடிவதில்லை.

    இது இயேசு கூறிய வழியா இல்லை சாத்தானின் வழியா?

    இயேசு கூறிய ஒவ்வொரு செயலுக்கும் மாறு பாடாக நடந்து அவரின் மேல் இன்னும் இன்னும் அதிக ஆணிகளை அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    இந்த இலட்சணத்தில் இவர்கள் செய்வது சுவிசேஷப் பிரச்சாரமா?

    “மாயக்காரராகிய வேத பாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவர்கள் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களில் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்”

  219. கர்னாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளான தியாகய்யர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் இன்னும் கர்னாடக சங்கீதம் மூலமாக பல சாராரையும் கவர்ந்த எம்.எஸ், பட்டம்மாள், எம்.எல் வசந்தகுமாரி போன்றோர் இறைவனை வணங்கி பாடியதை போல கிறித்தவத்திலும் வேத நாயகம் சாஸ்திரியார் போன்ற பல கர் நாடக சங்கீத விற்பன்னர்கள் பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளனர். இதற்கென ஆலயத்தில் பாடப்படும் விசேட தொகுப்பே உள்ளது. எனவே கர் நாடக சங்கீதமானது இந்தியாவில் தோன்றியது ஆனாலும் அதில் கிறித்தவரும் பங்காற்றியிருக்கின்ரனர் என்று தான் சொல்லவந்தேன், நீங்கள் ஏன் அது இந்து மதத்திற்கு மாத்திரம் சொந்தம் என்கிறீர்கள்.

  220. கர்நாடக சங்கீதம் என்பதே யூதர்கள் எகிப்தில் அடிமையாக இருந்த போது உருவாக்கியதுதான். அதற்கு ஆதாரமாக தாள வரிசையில் மிஷ்ரசாபு என்று ஒரு தாளம் உள்ளது, மிஷ்ர என்பதுதான் எகிப்து நாட்டின் சரியான பெயர்.

    எனவே கர்நாடக சங்கீதமே யூதர்களால் உருவானது என்று அடித்து சொல்லலாம்.

    இதை யாரும் எதிர்க்க முடியாது. எதிர்ப்பவன் மதச் சார்பினமைக்கு எதிரானவன் என்று கூறி விடலாம்.

    யாரு ந‌ம்மை கேக்குற‌து ? ஜாட‌யில‌ பாக்குற‌து?

  221. இயேசு கூறியது தனிப்பட்ட ஜெபத்தை குறித்தது. தன் தனிப்பட்ட தேவைஹம்பட்களுக்காக இறைவேண்டல் செய்யும்போதோ உபவாசம் செய்யும் போதோ அது குறித்து தம்பட்டம் அடித்து கொள்ள வேண்டாம் என்றார். குழுவாக ஜெபிப்பதை அவர் நிராகரிக்கவில்லை, கெத்சமனே தோட்டத்தில் தூங்கி வழிந்து கொண்டிருந்த சீடரிடம் ஒரு மணி நேரமாவது விழித்திருந்து ஜெபிக்க கூடாதா என கேட்கிறார். அது போக அவர் திரளான மக்களுக்கு பிரசங்கம் செய்தார். எனவே கிறித்தவத்தின் அடிப்படையானது இறைவனிடம் மனிதன் கொண்டுள்ள விசுவாசம், சக மனிதரிடம் உள்ள ஐக்கியம் ஆகியவற்றின் மீது உள்ளது எனவே சபை கூடி ஆராதிப்பதை தவறு என்ற உங்களது வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

  222. கொஞ்சம் இதையும் பாருங்க.
    // ஒரிஸ்ஸாவிலும், அஸ்ஸாமிலும், சூனியக்காரிகள் என்று சொல்லி வயதான மூதாட்டிகளையும், ஆதரவற்ற பெண்களையும் வேட்டையாடுகிறார்கள். அவர்களைப் பிடித்து சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி அவர்கள் மார்பில் கூரிய ஆணி அறைந்து, பின்னர், ஒரு கட்டையில் கட்டிவைத்து, பைபிள் வாசித்தவாறே எரித்துவிடுகிறார்கள். செய்தித் தாள்களில் சூனியக்காரி வேட்டையால் ஒரு சில பெண்கள் கொல்லப்பட்டார்கள்//
    // இதுபோன்ற சூனியக்காரி வேட்டையை ஆங்கிலத் திரைப்படத்தில் பார்த்து மகிழும் நமக்கு இதன் தீவிரம் தெரிவதில்லை. இந்துக்கள் அனைவரையும் சூனியக்காரர்களாகவே கிருத்துவம் கருதுகிறது என்பது பெரும்பாலான தமிழ்நாட்டுக் கிருத்துவர்களுக்கே கூடத் தெரியாத உண்மை.
    // சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கிருத்துவப் பாதிரிமார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதாகத் தொலைக்காட்சிகளில் காட்டினர். அறுவடை செய்யப்பட்ட ஆடுகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.//

    //காஷ்மீரத்தில் இருந்த பண்டிட்டுகளின் அழிவை வெறும் பத்திரிக்கைச் செய்திகளாக ”ஓரளவு” மட்டும் அறிந்த நமக்கு நாகலாந்தில் வாழும் ரியாங்குகள் அகதிகளாக மட்டுமே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாது. கிருத்துவ மதத்திற்கு மாற மறுப்பதால் லட்சக்கணக்கான ரியாங்குகள் வருடம் தோறும் அங்கே கொல்லப்படுகிறார்கள். இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட ஒரு இனப்படுகொலை இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இது தகவலாகக்கூட உங்களுக்குத் தெரியாது//

    .//வெளிப்படுத்தின விசேஷம் 0:0: நாளை தமிழகத்தில் நமது பிள்ளைகள் அகதிகளாகத் திரிவார்கள். அப்போது அவர்களின் உடம்பு துப்பாக்கிக்கு இரையாகும்போதும், நமது மகள்கள் கற்பழிக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்படும்போதும், குண்டை வெடிக்கச் செய்தும், குண்டால் வெடிபட்டும், நடுத்தெருவில் அவர்கள் உடல் சின்னாபின்னமாகச் சிதறி சாகும்போதும், நாசமாப் போகும்போதும், ………………

    இந்த உலகம் இப்போது போலவே அப்போதும் இப்படி நிம்மதியாகவே சுற்றிக்கொண்டிருக்கும்//

    ”நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்””

    அப்படியே இந்த கட்டுரைக்கு வாங்க. ( நன்றி, நன்றி, …………………பனித்துளி.

  223. வணக்கம்
    //கர்நாடக சங்கீதத்தை முறையாக வகுத்து கொடுத்தது இயேசுவின் பிரதான சீடர்களே
    இதை சொல்ல மறந்துவிடீர்களே, உண்மையில் வேப்பமரத்தில் குடிஇருந்து அருள் தருவது மாரியம்மாள் அல்ல. மேரி அம்மாளே . எனவே வேப்பமரமும் கிறிஸ்துவர்களுக்கே உரியது .
    மனிதர்களை குணப்படுத்தும் சுக்கு, மிளகு , திப்பிலி போன்ற மருந்துகளுக்கு சொந்தக்கரரர்கள் உண்மையில் கிறிஸ்துவர்களே//

    //கர்நாடக சங்கீதம் என்பதே யூதர்கள் எகிப்தில் அடிமையாக இருந்த போது உருவாக்கியதுதான். அதற்கு ஆதாரமாக தாள வரிசையில் மிஷ்ரசாபு என்று ஒரு தாளம் உள்ளது, மிஷ்ர என்பதுதான் எகிப்து நாட்டின் சரியான பெயர்.

    எனவே கர்நாடக சங்கீதமே யூதர்களால் உருவானது என்று அடித்து சொல்லலாம்.

    இதை யாரும் எதிர்க்க முடியாது. எதிர்ப்பவன் மதச் சார்பினமைக்கு எதிரானவன் என்று கூறி விடலாம்//

    சபாஷ் நண்பர் திருச்சிக்காரர், ஸ்ரீ யுவராஜ் கொஞ்சம் ஓவரா இல்ல தமாசுக்குன்னாலும் இப்படி வாரக்குடாது சாமி.

    இவங்க இப்படித்தான் எத சொன்னாலும் ஏத்துக்கவே மாட்டாங்க என்ன அவர்களின் மூளை சூப்பர் வாஷின் மிஷினால் கழுவப்பட்டது.

    நண்பர் கிலாடியாரே,

    //“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது” //

    அப்படியானால் நீங்கள் சொல்லவருவது என்ன, கிறிஸ்துவர்கள் அவர்களது சேவையை செய்து கொண்டே இருப்பார்கள் நீங்கள் ஏன் வீணாய் கூக்குரல் இடுகிறீர்கள் பேசாமல் இருங்கள் மொத்த இந்தியாவையும் விற்றுவிடுவோம் என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா.

    நீங்கள் சொல்வது திருடன் திருந்தும் வரை சந்தர்ப்பம் கொடுப்பதுதானே என்பது போல் உள்ளது. ஆனால் அதற்க்கு முன்னர் “திருடர்கள் ஜாக்கிரதை” என்ற எச்சரிக்கை பலகை வைப்பது என்பது ஒன்றும் தவறில்லையே,

    //“என்னுடைய ஜனத்தைக் கூட்டுங்கள்” என தமது தூதர்களுக்கு இறைவன் கட்டளையிடுவார் என விவிலியம் கூறுகிறது;

    அதைப் போல எனதருமை நண்பர் ஜோசப் போன்றவர்களை இங்கே காண உதவும் “தமிழ் ஹிந்து”வுக்கு வாழ்த்துக்கள்;

    காழ்ப்புணர்ச்சியோ மதவெறியோ இல்லாமல் நாம் பொறுமையாக விவாதித்தால் நல்லதொரு நண்பர் வட்டம் இங்கே உருவாகும் மற்றும் அரிய கருத்துக்களை அனைவரும் நுகரலாம் என எண்ணுகிறேன்;//

    இதற்க்கு நண்பர் திருச்சிக்காரர் // அய்யா கிளாடி, ஜோசப் தான் உங்கள் இனமா? நான், பாஸ்கர் ஐயா, மலர் மன்னன் ஐயா இவர்கள் எல்லாம் வேறு இனமா? பார்த்து ஐயா, இந்த இனவெறி இந்தியாவுக்குள் வரக் கூடாது என்றுதானே கஷ்டப் படுகிறோம்// என்று அருமையான பதில் தந்திருக்கிறார்
    நண்பர் ஜோ வருவதற்கு முன்னர் இந்த நட்பு எண்ணம் உங்களிடம் எங்கே போயிருந்தது. ஒரு வாரம், இத்தனை எழுத்துக்கள் எழுதிய உங்களுக்கு திடீரென்று ஜோ என்பவர் வந்ததும் தமிழ் இந்துவுக்கு வாழ்த்து சொல்ல மனம் வந்திருக்கிறது.

    நண்பர் திருசிக்காரரின் பதிவுகளை பாருங்கள் கிறிஸ்துவம் பேசும் அசோக் குமார் கணேசன், நாத்திகரா இந்துவா அல்லது முஸ்லிமா என்று தன்னையே சரியான அடையாளம் காட்டிக்கொள்ளாத ராம்கோபால், உங்கள் அருமை நண்பர் ஜோ, என்று யாருக்கும் ஏன் உங்களுக்கும் கூட எழுதும்போது நண்பரே அல்லது சகோதரர் என்றே அழைக்கிறார், அவ்வளவு ஏன் நம்மில் பெரியவர் மலர்மன்னன் அய்யா கூட யாரையும் ஸ்ரீ என்று மரியாதை செலுத்தி தனது நட்பை வெளிக்காட்டி உள்ளார்.

    ஆனால் நீங்கள் ………..எதிர் பார்க்கவில்ல

  224. Dear Brothers and Sisters in this Blog,
    I like to clarify few things here, so that some misconceptions can be clarified. Christians are COMMANDED by bible to SHARE their gospel of CHRIST JESUS to the world. It is not an OPTION to consider, but it is a COMMAND to follow. But, It should be based on love. It is something like, I got some goodness by Christ, so let others also get that same goodness. There is a tamil saying also “Yaam pettra inbam peruga ivvaiyagam”. Christ will be not be impressed by increasing number of people who calls themselves to be Christians or just by religious conversions or by having having a big group of people having western names.
    And NO Christian was given any right to force anyone to convert from his religion. If anyone is forcing in such a way that person is not of Christ. You can very well hand over him to concerned authorities. And no one in the entire world has any right to stop someone who is willingly convert. It is their personal choice. It is their spiritual / religious right. India is a democratic country.

    Brother Trichykkaran,
    There many things that you mention about christians are acceptable. I really agree with you that Christians are not perfect. But in the same way, non-christians are also not perfect. Just because few christians are making some mistakes, you cannot blame Christ and also the Bible.

    //நீயோ ஜெபம் பண்ணும் போது , உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து , உன் கதவைப் பூட்டி ,அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு//
    I love this verse. You are correct. The prayer should be done in privacy.

    //நீங்கள் சர்ச்சுக்கு வந்து, பலர் சேர்ந்து, பிரசங்கங்களை நடத்தி செய்வது வழிபாடா?//
    That is worship. Don’t Hindus gather together and do bajans?

    //பீச்சிலே , கடற்கரையிலே ஆரவாரமாக கூட்டங்களைக் கூட்டி, ஆட்களை கொணர்ந்து “ஜெபம்” செய்கிறீர்களே? அது ஜெபமா?//
    The preaching is different. Preaching has to be done in public.

    //ஆனால் உங்ககளில் சிலர் வீட்டிலேயே மைக் செட் வைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் காலையிலே ஜெபம் என்ற பெயரிலே தெருவையே அலற வைக்கிறார்கள். விடுமுறை நாளில் தூங்க கூட முடிவதில்லை//
    You are correct brother. They should be disturb others like the way you have mentioned. You can tell them that you disturbed by their act. If they are not listening, complain about them to Police. I am on your side regarding this.

    //எனவே கர்நாடக சங்கீதமே யூதர்களால் உருவானது என்று அடித்து சொல்லலாம்.//
    Really?? I thought Carnatic music is from our country. Still I couldn’t beleive this brother.

    Your Brother,
    Ashok

  225. திருச்சிக் காரன்:
    இது பற்றி பலமுறை எழுதி விட்டோம்;
    இப்போது உலகில் இருக்கும் யாருக்காவது கடவுள் தன்னைக்
    காட்டியிருக்கிறாரா..?
    (கண்ணை மூடி கொண்டு கடவுள் தன்னிடம் வந்ததாக நினைத்துக் கொள்வது வேறு விஷயம்)

    கேள்வி இங்கே பதில் எங்கே?
    பதில் இங்கே..!

    Paanjasanyan:
    இந்து மதம், ஒவ்வொரு தனி மனிதனுக்காகவும் பேசுகின்றது. பிரம்மம் என்பது ஒன்றே என்பது வேதங்களின் சாரம். ஆனால் அதை உணர்வது என்பது அனைவராலும் இயலாது. பிரம்மம் ஒன்று என்று நம்புவது வேறு, உணர்வது வேறு, ராக்கெட் என்பது ஒரு விசையை தட்டினால் போகும் என்று அறிவது வேறு, அதன் ஒவ்வொரு செயல்பாட்டையும் அறிவது வேறு

    இதைத்தானய்யா நாங்களும் கூவிக் கூவி சொல்லுகிறோம்;
    “மதம் மாத்தறாய்ங்க‌…” என்கிறீர்கள்;

    நம்ம ஆளு ஒருத்தரு,”நட்டகல்லு பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்…” என்றாரே அவர் மதம் மாறிட்டாரா..?

    ஓம் ஸ்ரீ ப்ரம்மபுத்திராய நமஹ‌
    ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ‌
    ஓம் ஸ்ரீ விருட்சசூலாய‌ நமஹ‌
    ஓம் ஸ்ரீ பஞ்சகாயாய‌ நமஹ‌
    ஓம் ஸ்ரீ சிபுலிஷ்டாய நமஹ‌

    இந்த வேத மந்திரங்கள் யாரைப் புகழுகிறது என யாராவது சொல்லமுடியுமா..?

  226. அருமை நண்பர் ஸ்ரீ பாஸ்கர் ஐயா அவர்களுக்கு மெத்த நன்றி.
    தொடர்ந்து இங்கெ கருத்துக்களை எழுதி, விளக்கங்களைத் தருகின்றார்.

    ஸ்ரீ மலர் மன்னன் ஐயாவும் அப்படியே செய்கிறார்.

    ஸ்ரீ களிமிகு கணபதியார் ஐயாதமிழ் மொழியில் எழுதினால் சிறப்பு.

    ஸ்ரீ கோ. ந. முத்துக்குமார சாமி ஐயா , ஸ்ரீ கார்கில் ஜெய் ஐயா, ஆகியோரின் பின்னூட்டங்கள் உண்மைக்கு வலு சேர்க்கக் கூடியவை. ஆனால் சில நாட்களாக இவர்களின் பின்னுட்டங்களைக் காண இயலவில்லை.

  227. B.பாஸ்கர்.
    நண்பர் கிலாடியாரே,
    //“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது” //
    அப்படியானால் நீங்கள் சொல்ல வருவது என்ன..?

    என்னுடைய பதிலை மீண்டும் மீண்டும் படியுங்கள்;
    வெவ்வேறு அர்த்தங்கள் வரும்; நான் சொல்லவந்தது என்ன என்பது எனக்கு மட்டுமே தெரியும்..!

    திருச்சிக் காரன்
    // நானோ இயேசு கிறிஸ்துவும் என் கடவுள் என்று ஜெருசலேமோடும் சேர்கிறேன். நீங்கள் பக்கத்து வீட்டில் குடியிருப்பவனை வேறு இனம் என்கிறீர்கள்! //

    B.பாஸ்கர்.
    நண்பர் ஜோ வருவதற்கு முன்னர் இந்த நட்பு எண்ணம் உங்களிடம் எங்கே போயிருந்தது. ஒரு வாரம், இத்தனை எழுத்துக்கள் எழுதிய உங்களுக்கு திடீரென்று ஜோ என்பவர் வந்ததும் தமிழ் இந்துவுக்கு வாழ்த்து சொல்ல மனம் வந்திருக்கிறது

    யார் கசப்பையும் வெறுப்பையும் விதைக்கிறார்கள் என்று பாருங்கள்:
    என்னுடைய கீழ்க்கண்ட வரிகள் நட்புணர்வினை காட்டவில்லையா..?

    // காழ்ப்புணர்ச்சியோ மதவெறியோ இல்லாமல் நாம் பொறுமையாக விவாதித்தால் நல்லதொரு நண்பர் வட்டம் இங்கே உருவாகும் மற்றும் அரிய கருத்துக்களை அனைவரும் நுகரலாம் என எண்ணுகிறேன்…//

    நான் புதியதாக வந்த போது யாரும் என்னை வரவேற்கவில்லை;
    ஆனாலும் “நண்பர் “இன்னாருக்கு”அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றுதான் எனது பதிவைத் துவங்கினேன்;

    ஆனாலும் வேறொரு தளத்தில் எனக்கு அறிமுகமான நண்பர் ஜோசப் இங்கே வந்ததும் வரவேற்றதுடன் இதற்கு உதவிய தளத்துக்கு நன்றியும் சொன்னேன்;

    மற்றபடி இந்த தளத்தில் யாருடனும் எனக்கு முன் அறிமுகம் கிடையாது;
    மேலும் நாம் இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களோடு மோதிக் கொண்டிருந்தாலும் நாமனைவரும் “ப்ரம்மத்திலிருந்து” தோன்றியவர்கள் என்ற வேதக் கருத்தின்படி ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்றிணைவோம் என்பது எனது எனது நம்பிக்கை;
    அதனையே கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டேன்.

    //“என்னுடைய ஜனத்தைக் கூட்டுங்கள்” என தமது தூதர்களுக்கு இறைவன் கட்டளையிடுவார் என விவிலியம் கூறுகிறது…//

  228. Dear Brothers Yuvaraj,
    // ஒரிஸ்ஸாவிலும், அஸ்ஸாமிலும், சூனியக்காரிகள் என்று சொல்லி வயதான மூதாட்டிகளையும், ஆதரவற்ற பெண்களையும் வேட்டையாடுகிறார்கள். அவர்களைப் பிடித்து சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி அவர்கள் மார்பில் கூரிய ஆணி அறைந்து, பின்னர், ஒரு கட்டையில் கட்டிவைத்து, பைபிள் வாசித்தவாறே எரித்துவிடுகிறார்கள். செய்தித் தாள்களில் சூனியக்காரி வேட்டையால் ஒரு சில பெண்கள் கொல்லப்பட்டார்கள்//
    I really never heard about such a horrible news anywhere. By the way, how did you get such a news. Such a thing should not have happened. If at all such things has happened, I really dont know what is law and order in India doing. If you guys wanted to do anything against such an act, you can count me in, I will be in your side to fight against such a horrible act.

    //இந்துக்கள் அனைவரையும் சூனியக்காரர்களாகவே கிருத்துவம் கருதுகிறது என்பது பெரும்பாலான தமிழ்நாட்டுக் கிருத்துவர்களுக்கே கூடத் தெரியாத உண்மை.//
    Many people in Western countries are thinking like this. This is because of the few money minded people, who calls themselves as christian pastors. They project such image to westerners to make some money in the name of Missionary fund. I am in USA and I am aware of these things. But, there are many pastors who are dedicately serving in India, who doesn’t expect any monitory benefits. You guys might think that I am super brainwashed and you have every right think about anyone in whatever the way you wanted to.

    Brother Rama,
    Thanks you so much for your effort in trying to put your opionion without hurting me. Believe me, I love to learn this attitude from you.
    //Atma has no creation as atma is eternal. There was never a time when you were not there and there will not be a time when you will not be there. //
    How to you verify this?
    //You are not a born sinner. You are complete, all fulfilling joy, SAT+CIT+ANANDA//
    First thing, how do you verify this?
    And I could feel the sin inside me. It was controlling me. My thoughts were not right. It was filled with lust, hatred, jealousy, etc., I was brought in a well devoted family environment. My father is a teacher. I have been tought to chant slokas by 4am. I didn’t have any bad friends. Still there was lots of sin in me. Most of the times, I didn’t act on those thoughts, I mean I didn’t do anything, just because of the fear and lack of oppurtunity to do some sinfull deeds. I was self condemning myself and living with guilt, till I had an encounter with Christ Jesus.

    Brother Trichykkaran,
    I think that following is told in a funny note, (if you are serious about this, I am sorry, you are wrong):
    //எனவே கர்நாடக சங்கீதமே யூதர்களால் உருவானது என்று அடித்து சொல்லலாம்.//
    I searched on the net and also, verified with few of my friend’s whose parents great carnatic musicians.

    Your Brother,
    Ashok

    (Edited and published – Tamilhindu Editorial.)

  229. அருமை ந‌ண்ப‌ர் கிளாடி அவ‌ர்க‌ளே,

    //அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் பாரதத் தாயைப் போல அரவணைக்கத் துவங்கியிருக்கிறீர்கள்//

    உங்க‌ளின் இந்த‌ வார்த்தைக‌ளைப் பாராட்டுகிறேன்.

    ந‌ன்றி!

    நாம் அனைவ‌ரும் இந்திய‌ர்க‌ள். இந்தியாவின் புத‌ல்வ‌ர்க‌ள். சீன‌க் கார‌னோ, பாகிஸ்தானிய‌ரொ குண்டு போட்டாலோ, வைத்தாலோ, அது நம் இருவ‌ர் மேலும்
    சேர்ந்துதான் விழும்.

  230. திருச்சிகாரரே…

    please see the following version in upanishad.

    1. God is one only. (bagavat G – chapter-7, version-20)

    2. Of him, no parents no lord. ( svetaspartara Upanishad chap- 6 , ver-9)

    3. There is no likeness of him. ( svetaspartara uapnishad chap – 6 , v-19)

    4. His form cannot be seen. (svetaspartara uapnishad chp-4, v-20)

    5. There is no image of him . ( yajur ved chp- 32, v-3)

    6. The god is bodyless and pure. ( yajur chp – 40- v-8)

    Are these enough for there is no idle worship?

    You dont try to tease me.

  231. Mr Gladys/Ashok kumar
    Where is the evidence that J.Christ was sent by god? Where is the evidence of virgin birth? Do not quote bible to verify his miracles and his birth. Why doe God need a messenger? Whole christianity is based on unverifiable statements.
    In bible God says he created mankind for His glory. That means 1) Prior to creation he was without glory. 2) He is a egomaniac and wants poor humans to praise Him or ELSE “fire and brimstones and get roasted in Hell “forever. The bible God is vengenful, unmerciful and a blackmailer to boot. Still you guys are defending this cult.

  232. சகோதரர் ராமரே
    இந்து வேதங்களிலேயே இயேசுவின் பிறப்பை பற்றி கூறப்பட்டுள்ளது ஆனால் அதை ஏற்றுக்கொள்ள தான் உங்களுக்கு மனமில்லை. இயேசுவின் பிறப்பை குறித்து யூத தீர்க்கதரிசிகள் ஏற்கனவே கூறியும் யூதர்களால் அவரை அறிய முடியவில்லை.
    மகாபாரதத்தில் குந்தி தேவியார் தேவர்களிடம் மந்திரங்களை ஜெபித்து அதன் மூலமாக கருவுற்றார் என கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் இயேசுவின் கன்னி பிறப்பை மட்டும் இல்லாஜிக்கலாக காண்கிறீர்கள்

  233. இந்தியர்கள் என்ற உணர்வு தேவைதான் ஆனாலும் அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வே இன்றைய தேவை; “உலக மய(க்க)மாக்குதலின்” ஆதாரக் கொள்கையே அதுதான்;

    கர்நாடகம் தனிநாடாக இருந்திருந்தால் காவிரிக்காக தமிழ்நாட்டின் மீது குண்டு போடாதா?பிரிட்டிஷார் வந்திராவிட்டால் இந்தியா ஏன் தமிழ்நாடே ஒன்றாக இருந்திருக்காது;

    குறைந்த பட்சமாக ஆசியர்களாகவாவது நாம் ஒன்று சேரவேண்டும்; உலகின் ஆறு பெரும் மதங்களும் ஆசியாவில்தான் தோன்றியது; கலாச்சாரம் செழித்ததும் இங்கேதான்;

    “பழம்பெருமை பேசியிருத்தல் போதும்” என்றான், முண்டாசுக்கவி.

    பிரச்சினை தேசத்தின் எல்லைகளிலல்ல; மனித மனங்களில்தான்;
    சமூகக் கொடுமைகளை வேரறுத்தாலே உலகம் சுபிட்சமடையும்.
    அதற்கு இறை அச்சம் வேண்டும்;

    ஆனால் மனிதனின் தாறுமாறுகள் காரணமாக இறைவன் தன்னை மறைத்துக் கொண்டிருக்க இறைவன் யார் என்பதிலேயே குழப்பிக் கொண்டிருக்கிறோம்;

    அரசாங்கத்துக்கு எதிராக போராடும் தீவிரவாதக் குழுக்களிடையே நிலவும் போட்டியையே அரசாங்கம் தனக்கு சாதகமாக்க அவர்களே ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்ள அரசாங்கம் வேடிக்கைப் பார்க்கும்; இறுதியில் மிஞ்சி நிற்கும் ஒரே பயங்கரமான எதிரியை எளிதாக அழித்துவிடலாம்; இதுவே விடுதலைப் புலிகள் முதலாக நம்ம ஊர் தாதாக்கள் நடைபெறுகிறது;

    இறைவனும் கூட இந்த உலகை அழிக்கப்போவதில்லை;
    இங்கே சமாதானமும் எந்த காலத்திலும் வரப்போவதில்லை;
    முடிவு நிச்சயம்…அது அனுக்ரஹமா அல்லது நிக்ரஹமா என்பதை மனிதன் தான் முடிவு செய்யவேண்டும்;

  234. What else is new Mr Joseph? Lord Krishna is actually J.Christ and Lord Rama was another form of JC.!!!! Obviously, we Hindus never knew all these facts,poor us. Thank you for your illuminating wonderful answers.
    You guys are so warped up in your thinking and brainwashed by the white church.
    Still waiting for your explanations on your tyranic bible God! Also, why does this God need a meesenger? Is He sick? Or on holidays? Or not capable of delivering it Himself?
    You still have not come out with any evidence of J.Christ’s Virgin!!! birth, other than redirecting your argument. Can you give any evidence that JC was a messenger from GOD? Please do not quote Hindu vedas, koran or Buddha’s statements!!. Like I said, the whole Christianity is based on UNVERIFIABLE STATEMENTS.It is a cult, period.

  235. //நீங்கள் சர்ச்சுக்கு வந்து, பலர் சேர்ந்து, பிரசங்கங்களை நடத்தி செய்வது வழிபாடா?//
    That is worship. Don’t Hindus gather together and do bajans?

    //அன்றியும் நீ ஜெபம் பண்ணும்போது மாயக் காரரைப் போலிருக்க வேண்டாம். மனுஷர் காணும் படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்.

    நீயோ ஜெபம் பண்ணும் போது , உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து , உன் கதவைப் பூட்டி ,அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு//

    Was this told by Jesus Christ or not? இதைக் கூறிய‌து இயேசுவா இல்லையா?

    //Don’t Hindus gather together and do bajans?//

    இது இந்து ம‌த‌த்தில் அங்கீக‌ரிக்க‌ப் ப‌ட்ட‌ முறையே! நாங்க‌ள் எங்க‌ளுக்கு அனும‌திக‌க‌ப் ப‌ட்ட‌ முறையில் ஒன்றின் ப‌டி வ‌ண‌ங்குகிறோம். நீங்க‌ள் அந்த‌ முறையை பின் ப‌ற்றுவ‌து எங்க‌ளுக்கு ஆட்செப‌னை இல்லை. ஆனால் இப்ப‌டி நீங்க‌ள் இயெசுவின் க‌ற்ப்பனையை மீறி செய‌ல் ப‌டிம் போது, எங்க‌ளிட‌ம் வ‌ந்து, உருவ‌ வ‌ழிபாடு செய்வதை வெறுக்கிறோம் என‌க் கூறுவ‌து ஏன்? நாங்க‌ள் எங்க‌ளுக்கு அனும‌திக‌க‌ப் ப‌ட்ட‌ முறையில் ஒன்றின் ப‌டி வ‌ண‌ங்குகிறோம்.

  236. ஒருவன் மரணதிர்கு முன் கடைசியாக உண்மை பேசுவான், என மரண வாக்குமூலம் என உல்கில் அனைது நாட்டு நீதிமன்றமும் ஏற்கின்ரன. புராணக்கதை நாயகர் ஏசு இரந்து 40 வருடம் பின் புனைப்பட்ட மாற்கு சுவியில் ஏசுவின் மரண ஓலம்.

    பைபிலை சிறையில் வத்து 16ம் நூற்றாண்டு வரை அடக்கப் பட்டிருந்தது,17ம் நூற்றாண்டு இறுதியில் விமர்சன ஆய்வுகள் தொடங்கின. இன்று பெரும்பாலோன பைபிளியல் அறிஞர் ஏற்பது- வரலாற்று ஏசு என சுவி புனைந்த கதாசிரியர்கள் அறியவில்லை.

    இப்பொழுது வெளி வந்துள்ள என்னும் நூல் மிகத் தெளிவாக சுவிகள் ஜோசபஸ்- சாக்கடல் சுருள்கள் மூன்றையும் ஒன்றிணைத்து Caeser’s Messiah -மிக அற்புதமான நூலைத் தந்துள்ளார். இதற்கு ஆய்வுலகில் ஒரு மிகுந்த வரவேற்பு உள்ளது.

    https://www.caesarsmessiah.com/

    இதை நண்பர்கள் அனைவரும் படிக்க வேண்டும்.

  237. உருவ‌ம் இல்லாத‌ நிலை என்ப‌து இந்து ம‌த‌த்தில் கூற‌ப் ப‌ட்டு உள்ள‌து, உருவ‌ம் இல்லாத நிலையை வ‌ணங்க‌லாம் என்றும் கூறியாகி விட்ட‌து.

    அதே நேர‌ம் உருவ‌ம் உள்ள நிலையை வ‌ண‌ங்கலாம், அது எளிமையான‌ வ‌ழி, சிற‌ந்த‌ வ‌ழி என்ப‌தும் உள்ள‌து!

    உருவ‌ வ‌ழிபாடு கூடாது என்று எந்த‌ இட‌த்திலும் கூற‌ப் ப‌ட‌வேயில்லை‍‍, இந்து ம‌த‌த்தில்!

    இதில் உங்க‌ளுக்கு என்ன‌ இத்த‌னை பிர‌ச்சினை என்று என‌க்குப் புரிய‌வில்லை! நான் உங்க‌ளை உருவ‌ வ‌ழிபாடு செய்ய‌க் க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை!

    கடவுள் எல்லாம் வல்லவராக இருக்கும் பட்சத்தில் தேவைப்படும் போது, அவர் விருப்பப்படும் உருவத்தை எடுத்துக் கொள்ள அவரால் முடியாதா?

    “ஏ கடவுளே, நீ உருவம் இல்லாமல் தான் இருக்க வேண்டும், உருவத்தை எடுத்துக் கொள்ள உனக்கு அனுமதி இல்லை” என கடவுளுக்கே கட்டளையிடும் அளவுக்கு வலிமை உள்ள நபர்கள் யாராவது இருக்கிறார்களா?

    விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதியானவர் ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு இந்த மண்ணுக்கு வர அவருக்கு ஏதாவது தடை இருக்கிறதா?

    “அட கடவுளே, நீ இனிமேல் வாய் திறந்து எதுவும் பேசக் கூடாது” என்று கடவுளின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி மூடும் வலிமை யாருக்காவது இருக்கிறதா?

    தேவைப் படும் போது, தேவையான உருவங்களை எடுத்துக் கொண்டு இந்த மண்ணில் அவதரிக்கவும், தேவைப்படும் போது அவர் விருப்பப் படும் நேரத்தில் எந்த ஒரு செய்தியையும் வெளிப்படுத்த, பிறர் அனுமதியைக் கேட்க கடவுளுக்கு கட்டாயம் இருக்கிறதா?

    கடவுள், அவ‌ர் விருப்ப‌ம் போல‌ அவ‌தார‌ம் எடுக்க‌வோ, இன்னும் பல‌ தூதுவ‌ரை
    அனுப்ப‌வோ அவ‌ருக்கு சுத‌ந்திர‌மோ, வ‌லிமையோ இல்லையா?

    அப்படிக் க‌ட‌வுள் உருவ‌ம் எடுத்து வ‌ந்து, ம‌க்க‌ளொடு ம‌க்க‌ளாக‌ வாழ்ந்து, ம‌க்க‌ளுட‌ன் விலையாடீ, மக்களுக்கு எடுத்துக் காட்டாக‌ வாழ்ந்து, ம‌க்க‌ளுக்காக‌ப் போராடிய போது, அதே வ‌டிவிலே , அதே உருவ‌த்திலே க‌ட‌வுளை வ‌ண‌ங்குவ‌துதானே, பொருத்த‌மான‌தும், பிடித்த‌மான‌தும் ஆகும்?

    கொஞ்சம் சிந்தியுங்கள்!

  238. திரு ராமா
    உங்களது பதிவுகளில் கிறிஸ்தவர்களின் மேல் உள்ள வெறுப்பை விட கிறிஸ்திவின் மேல் அதிக வெறுப்பே வெளிப்படுகிறது. நீங்கள் பைபிளில் இருந்து இது ஏன் இப்படி இருக்கிறது, அது ஏன் இப்படி இருக்கிறது என கேள்விகள் கேட்கும் போது இந்து மத நூல்களை படித்த நான் அதில் இருந்து கேள்விகள் கேட்க கூடாதா, கேள்வி கேட்க வேண்டாம் என சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
    இந்தியாவில் உள்ள எல்லா சபைகளுமே வெள்ளையரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உங்கள் எண்ணமே பிழையானது, எங்களை யாரும் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ இருந்து வந்து மூளைச்சலவை செய்யவில்லை, இயேசு எங்கள் வாழ்வில் செய்தவற்றை உணர்ந்ததால் நாங்கள் விசுவாசிக்கிறோம். போகட்டும் இயேசு வாழ்ந்த சம காலத்தில் எழுதப்பட்ட வரலாற்றாசிரியர்கள் எழுதிய நூல்கலை நீங்கள் படித்திருந்தீர்களானால் உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். உதாரணமாக ஜோசிபஸ் என்ற வரலாற்றாசிரியர் எழுதியது(இவர் கிறிஸ்தவர் அல்ல‌).
    டைரானிக்கல் கடவுள் என நீங்கள் சொன்னீர்களானால் அதே டைரானிக்கல் கடவுளை வழிபடும் யூதர்களை தான் சங் பரிவார அமைப்புகள் முழு மூச்சாக ஆதரிக்கின்றன. அது ஏன், அரசியல் நோக்கமா அல்லது இஸ்லாமிய எதிர்ப்பா. கடவுளுக்கு ஏன் தூதுவர் தேவைப்பட்டார், ஆமா அப்படி பார்த்தா ராம அவதாரம் எதற்கு, கிருஷ்ண அவதாரம் எதற்கு, ஏன் விஷ்ணு லீவில் போயிருந்தாரா? இது போன்ற சென்சிட்டிவான கேள்விகளுக்கு சென்சிட்டிவான பதில்களை என்னாலும் தர முடியும். கிறிஸ்தவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் ஒத்துக்கொள்கிறேன் ஆனால் கிறிஸ்துவின் மேல் ஏன் சேற்றை வாரி இறைக்கிறீர்கள்
    உங்கள் பதிவுகளில் வெறுப்பு தான் பளிச்சிடுகிறதே தவிர ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நீங்கள் தயாரில்லை என தெரிகிறது. நான் ஒருபோதும் ராமரும், கிருஷ்ணரும், கிறிஸ்துவும் ஒன்று என கூரவில்லை.
    இயேசு கடவுளின் தூதுவர் என கூறும் சரித்திர ஆராய்ச்சி நூலகள் பல உள்ளன ஆனால் அதையெல்லாம் அறிந்துகொள்ளும் எண்ணம் உங்களுக்கு இல்லை.

  239. ஒருவன் மரணதிர்கு முன் கடைசியாக உண்மை பேசுவான், என மரண வாக்குமூலம் என உல்கில் அனைது நாட்டு நீதிமன்றமும் ஏற்கின்ரன. புராணக்கதை நாயகர் ஏசு இரந்து 40 வருடம் பின் புனைப்பட்ட மாற்கு சுவியில் ஏசுவின் மரண ஓலம்.
    மாற்கு 15:34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ‘ என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?

    பைபிலை சிறையில் வத்து 16ம் நூற்றாண்டு வரை அடக்கப் பட்டிருந்தது,17ம் நூற்றாண்டு இறுதியில் விமர்சன ஆய்வுகள் தொடங்கின. இன்று பெரும்பாலோன பைபிளியல் அறிஞர் ஏற்பது- வரலாற்று ஏசு என சுவி புனைந்த கதாசிரியர்கள் அறியவில்லை.

    இப்பொழுது வெளி வந்துள்ள என்னும் நூல் மிகத் தெளிவாக சுவிகள் ஜோசபஸ்- சாக்கடல் சுருள்கள் மூன்றையும் ஒன்றிணைத்து Caeser’s Messiah -மிக அற்புதமான நூலைத் தந்துள்ளார். இதற்கு ஆய்வுலகில் ஒரு மிகுந்த வரவேற்பு உள்ளது.

    https://www.caesarsmessiah.com/

  240. கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் பாதிப்பு adaiந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிப்படை மத முக்கிய கோட்பாடுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.
    1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள்.
    2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.
    3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.
    4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.
    5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.
    6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.
    7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.
    9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.
    10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

    In Original:
    //I give the Current Position of Biblical Theologians summarised by American Scholar Professor John Hick, sums up the current position of Theological research as follows:
    Quote:
    “The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts.
    1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ]
    2. God Created the physical Universe out of nothing “n’ years ago.
    3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace.
    4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross.
    5. Jesus was born of a Virgin mother, without human Patenity.
    6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power.
    7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life.
    8. All men must respond to God through Jesus Christ in order to be saved.
    9. AT Death a person’s relationship to God is irrevocably fixed.
    10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. ”
    “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

  241. சகோதரர் கிலாடியார் அவர்களே,

    //திருச்சிக் காரன்:
    இது பற்றி பலமுறை எழுதி விட்டோம்;
    இப்போது உலகில் இருக்கும் யாருக்காவது கடவுள் தன்னைக்
    காட்டியிருக்கிறாரா..?
    (கண்ணை மூடி கொண்டு கடவுள் தன்னிடம் வந்ததாக நினைத்துக் கொள்வது வேறு விஷயம்)

    கேள்வி இங்கே பதில் எங்கே?
    பதில் இங்கே..!

    Paanjasanyan:
    இந்து மதம், ஒவ்வொரு தனி மனிதனுக்காகவும் பேசுகின்றது. பிரம்மம் என்பது ஒன்றே என்பது வேதங்களின் சாரம். ஆனால் அதை உணர்வது என்பது அனைவராலும் இயலாது. பிரம்மம் ஒன்று என்று நம்புவது வேறு, உணர்வது வேறு, ராக்கெட் என்பது ஒரு விசையை தட்டினால் போகும் என்று அறிவது வேறு, அதன் ஒவ்வொரு செயல்பாட்டையும் அறிவது வேறு

    இதைத்தானய்யா நாங்களும் கூவிக் கூவி சொல்லுகிறோம்;
    “மதம் மாத்தறாய்ங்க‌…” என்கிறீர்கள்;//

    ராக்கெட் போவதைக் கண்ணால் பார்க்கிறோம். அது நடந்த செயல் என்று தெரிவதால் நம்புகிறோம். ஒன்றல்ல பல முறை ராக்கெட்டுகள் இயங்கியுள்ளன. எனவே தான் அதைப் புரிந்து கொள்கிறோம்.

    ஆனால் நீங்கள் இது வரை காணாத ஒன்றை, என்னிடம் வந்து “இது தான், இது இப்படித் தான் இருக்கிறது, ஒரே கடவுள் தான், எங்க கடவுள்தான், அவர் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், மற்றவை எல்லாம் பொய்யான கடவுள்கள்” என்று காதில் பூ சுத்த வேண்டாம். கடவுள் என்ற தத்துவமே இது வரை சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபிக்கப் படவில்லை. இருக்கிறது என்று நம்புகிரோம், அவ்வளவுதான்.

    எல்லாவற்றையும் வாய் பிளந்து நம்பும் ஆள் நான் இல்லை.

    நீங்கள் மசாலா அரைக்க வேண்டுமானால் நீங்கள் குறிப்பிட்ட நண்பரிடம் முயற்சி செய்யவும்.

    //இதைத்தானய்யா நாங்களும் கூவிக் கூவி சொல்லுகிறோம்;
    “மதம் மாத்தறாய்ங்க‌…” என்கிறீர்கள்;//

    நீங்கள் செய்வது மத மாற்றம் மட்டும் அல்ல, மனிதனின் மனத்தை மாற்றி, அவன் மனதிலே வெறுப்புக் கருத்துக்களை , காட்டு மிரான்டிக் கருத்துக்களைப் புகுத்தி பிறர் தெய்வங்களை, பிறர் வழி முறைகளை வெறுத்து இகழ வைக்கும் அருவருப்பான குற்றம்.

  242. Just imagine what a peaceful world we would have had if not for Christianity and Islam. These two religions have caused human, cultural genocide wherever they had gone. I am in the process of reading a book by Ward Churchill, an American Indian, called ” A little matter of genocide in America from 1492″. Close to 100 million of the Indian population have perished under the Europeans with the full cooperation of the Church. They were butchered, hunted , raped and their land plundered by the God fearing christians. Slavery has been enshrined in the bible. The ” Thanks giving” holiay celebration is really a sick joke. It literally celbrates the slaughter of 700 Indians by the pilgrims. In Australia, the aboriginal population was completely eliminated in Tasmania.
    Having said this, I do not have any problem if the present generation of Christians /Islamists acknowldge their role in the past horrors and do something postive. Rather, it is still the same old story ie;convert non beleivers by any means ot their faith.
    Mr Joseph, I ask questions/question your holy book so as to open your eyes. Please ask all questions you want to know about Hiduisim. I am sure there are number of people more qualified than me in this forum to answer. Certainly I might be able to answer some of them.
    Your religion dicates that you can attain salvation only through Christ. I am very uncomfortable with this tenets of your faith. So, I will keep on asking questions.
    Mr Ashok kumar declares that Christ commanded his followers to spread his religion,hence Christians have no choice but to convert everyone by any means. In the same token, Koran commands it’s followes to kill the Kaffirs. As per Mr Kumar’s logic, it looks like it is ok to kill kaffirs because their Book commands it!
    Why do not you guys just leave us ALONE? You practice your religion peacefully and we will do the same. Do not thrust your views/ beliefs on us.We do not want to be saved please.

  243. வணக்கம்,

    நண்பர்களே, ஆராய்ச்சிகளாலும் விஞ்ஞானத்தாலும் ஆதாரம் தேடி இருக்கிறது என்று என்று ஆதாரத்தை காட்டப்படுமேயானால் அது சரித்திரம் மற்றும் விஞ்ஞானம் என்று மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகிவிடுகிறது, அப்போது கடவுள் என்ற தனித்தன்மை மறுக்கப்படும்.

    எந்த ஒரு செயல் மனித சக்தியால் இயலாதோ அது அங்கே நிறைவேறுமானால் அங்கே அது கடவுளின் செயலாகும். நண்பர் திருச்சிக்காரர் , அய்யா ஸ்ரீ மலர்மன்னன், ஸ்ரீ ஜடாயு அய்யா எனப்பலரும் எடுத்து சொன்னாலும் நண்பர் ஸ்ரீ கிலாடி மற்றும் ஸ்ரீ ஜோசப் ஆகியோருக்கு ஒன்றும் தெளியப்போவது இல்லை.

    கிலாடி என்னமோ பிரம்மத்தை பற்றியெல்லாம் பேசுவதினால் தாம் இந்து தர்மத்தை நன்றாக அறிந்துள்ளதாக நினைக்கலாம் ஸ்ரீ ஜோ அவர்கள் கூறிய மந்திரங்களின் உட்பொருளை சாது செல்லப்பா போன்ற ஞான சூனியங்களை தவிர வேறு யாராவது நல்ல ஸம்ஸ்க்ரிதம் தெரிந்த நேர்மையானவர்களிடம் கேட்டுத்தெளிவடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    இயேசு இருந்தது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சியில் அவரிருந்ததற்கு ஆதாரம் இல்லை என்றும் ஆய்வு விளக்கங்கள் உள்ள நிறைய நூல்கள் உள்ளன, முதலில் இவர் அதைப்படித்தாரா என்று முட்டாள் தனமாக நான் கேட்கப்போவதில்லை, ஏனெனில் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. வெறும் ஆதாரங்களை வைத்து கடவுள் நிலையை எடைபோடும் இவர்களின் இறைத்தேடல் என்பது என்ன? நண்பர் கிளாடி கூறும் பிரம்மத்தை இவர்களால் எவ்வாறு அடைய முடியும்.

    ஏற்க்கனவே யூத விவிலியத்தை யூதர்களின் கண்முன்னே பைபிளாக மாற்றி அது போதாமல் இந்து தர்மத்தின் வேதத்திலும் இயேசு பிறப்பின் ஆதாரம் தேடும் இவர்களின் கீழ்த்தரத்தை என்ன என்பது. தனக்கென்று என்ன தத்துவங்களைத்தான் வைத்து உள்ளார்கள்.

    //இதைத்தானய்யா நாங்களும் கூவிக் கூவி சொல்லுகிறோம்;
    “மதம் மாத்தறாய்ங்க‌…” என்கிறீர்கள்;//

    எந்த தேவாலயத்தில் பிரம்மத்தை உணரும் வித்தையை கற்றுக்கொடுக்கிறார்கள். “நட்டகல்லும் பேசுமோ , நாதன் உள்ளிருக்கையில் ” என்று நம் சித்தர் ஒருவர் சொன்னது தெரிந்த நண்பர் எதற்காக இயேசு உருவத்தின் முன்னர் மண்டியிடவேண்டும். அவரை(மட்டும்) ஏன் கடவுள் என்று கூற வேண்டும்.

    “நட்டகல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே, சுற்றிவந்து முனுமுனென்று சொல்லும் மந்த்ரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ,” இதுவே சித்தர் வாக்கு. இதை அறிந்த நீர் ஏன் எதற்காக இயேசு உருவத்தின் முன்னர் மண்டியிடவேண்டும்.

    சொர்க்கம், நரகம், பற்றிய அடிப்படை தெளிவு கூட உங்களிடம் இல்லை, அதையும் விவரிக்க இந்த பின்னூட்டம் இடம் போதாது, என் பிலாகரில்தான் எழுதிவைக்கவேண்டும்.

  244. திருச்சிகாரர் அவர்களே… உங்களை நேரில் கண்டு அதைபோன்றே சிலையை வடித்தால் இது திருச்சிகாரர் உருவம் என்று அனைவருக்கும் தெரியும், நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். ஆனால் உங்களுடைய உருவசிலை வடிக்கிறேன் என்று ஒரு விகாரமான சிலையை வடித்து, இது தான் திருச்சிகாரர் சிலை என்றால், நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா…? உருவழிபாடு உண்டு என்று உங்களுடைய சொந்த சோக கருத்தை கூறவேண்டாம், வேத ஆதாரங்களை குறிப்பிடவும். புராணம், காப்பியம் இவற்றை ஆதாரங்களாக குறிப்பிட தகுதியற்றவை. பிள்ளையார் சிலை முதன் முதல் உருவாக்கப்பட்ட வருடம் உங்களுக்கு தெரியுமா…? இது போன்ற கடவுள் பெயரை கூறிக்கொண்டு போலிசாமியார்கள், போலி சாமி சிலைகள் என பெருகிக்கொண்டே வருகிறது. ஜாதிச்சண்டை, மதச்சண்டை இவற்றை ஒழிக்க முடியாது. அவைகள் தான் நம்மை ஒழிக்கும். இதில் யார் பகுத்தறிவாளன்… சிந்திக்கக்கூடியவர்களா…? அல்லது மூதாதையர்கள் அறிவற்று செய்த அதே மூடதனத்தை நாமும் செய்வதா…?

  245. Dear Mr. Rama,

    //Just imagine what a peaceful world we would have had if not for Christianity and Islam. These two religions have caused human, cultural genocide wherever they had gone. I am in the process of reading a book by Ward Churchill, an American Indian, called ” A little matter of genocide in America from 1492″. Close to 100 million of the Indian population have perished under the Europeans with the full cooperation of the Church. They were butchered, hunted , raped and their land plundered by the God fearing christians. Slavery has been enshrined in the bible. The ” Thanks giving” holiay celebration is really a sick joke. It literally celbrates the slaughter of 700 Indians by the pilgrims. In Australia, the aboriginal population was completely eliminated in Tasmania.//

    //Having said this, I do not have any problem if the present generation of Christians /Islamists acknowldge their role in the past horrors and do something postive. Rather, it is still the same old story ie;convert non beleivers by any means ot their faith.//

    Your comments – all of it- are very good.

    This shows maturity. Keep it up! Keep writing!

  246. வணக்கம்,

    ஸ்ரீ ராம்கோபால் அவர்களே, நீங்கள் அரைத்த மாவையே அறைக்கிறீர்கள், புரியவில்லை என்றால் அந்த சமாசாரத்தை கைவிடுங்கள், அதைவிடுத்து மீண்டும் உருவ வழிபாடு, பல தெய்வ வழிபாடு, என்று கேள்வி கேட்டால் அதற்கான எந்தவிளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனோ பக்குவம் உங்களுக்கு இல்லை. அதற்காக நம் மூதாதையர் என்பவர் எல்லாம் முட்டாள்கள் அல்ல. அவர்களின் கண்டுபிடிப்புகள் எல்லாம் உலக நலன் கருதி பல பரி பாஷைகள் மற்றும் உருவங்கள் மூலமே உணர்த்தியுள்ளார்கள்.

    அதை புரிந்து கொள்ளவும் உணரவும் முதலில் ஏன், எதற்காக, என்ற ஆராய்ச்சியை மனதார அந்தந்த உருவங்கள், மந்திரங்களை ஏற்றுக்கொண்டபின்னர்தான் தொடர வேண்டும். அப்போதுதான் அதன் சூட்சுமங்களை உணர முடியும். சும்மா எவரோ உருவங்களின் சூத்திரம் அறியாமல் இரவு தங்கிய அடையாளம், என்னைககாப்பு; அதைத்தொடரும் பரம்பரை, என்று பீலா விட்டது அவைகளை பயனற்ற சிலைகள் என்று சொல்லி தம் மதம் பரப்பவே அன்றி வேறொரு காரணம் இராது.

    அய்யா சிலைகள் பேசாது, நாம் குடுப்பதை உண்ணாது, பால் குடிக்காது, நம்மை அப்போதைய துன்பங்களில் இருந்து சினிமாவில் உள்ளது போல் பொட்டு வீசி காப்பாற்றாது, இவை எல்லாமே உண்மை. இவை எல்லாம் செய்யாத சிலை வழிபாடு உங்களுக்கு தேவையா? இது எல்லாம் வல்ல இறைவனை கல்லுக்கு இணை வைப்பதா? இது உங்களின் அடிப்படை கேள்வி என்று நான் அறிவேன்.

    இதை எல்லாம் செய்யாத சிலைகள் எவ்வளவு தத்துவங்களை விளக்கும், அதன் இருப்பிடமான கோவில்கள் மானுட குலத்திற்கு என்னென்ன நன்மைகளை புரியும் என்பதை அறிந்து, உணர்ந்து நாங்கள் உருவ வழிபாடு செய்கிறோம், அதன் தாத்பரியங்களை விளக்கினாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை, எனவே அதைக்கைவிடுங்கள்,

    போலிச்சாமியார்கள் என்பவர்கள் சிலை உள்ளதால் மட்டுமே பெருக வில்லை, போலி பாதிரியார்கள், போலி இஸ்லாமிய மந்திரவாதிகள் என்று இன்னமும் எத்தனையோ பேர்கள் உள்ளனர், அவர்களும் சிலை வழிபாட்டால் உருவானவர்களா,

    நீங்கள் உங்கள் வழிபாடு எப்படியோ அதை செய்துவிட்டு, ஒ நீங்கள் சிலையை வழிபடுகிறீர்களா, நல்லது சரி நாங்கள் அப்படியில்லை எப்படியானால் என்ன வணங்குதல் என்பதுதான் தேவை என்ற அளவில் நின்றால் மதச்சண்டை ஏன் வரப்போகிறது, அதை விடுத்து இது கல்லு, இது மண்ணு, என்று வீண்தர்க்கம் செய்வதால்தான் நீங்கள் சொல்லும் மத சண்டை வரக்காரணம்.
    மேலும் உயிருள்ள கடவுளை காட்றேன் இவர்தான் மனிதர்களுக்காக தன உயிரை தந்தவர் எனவே இவரே கடவுள் உங்கள் சாமிகளை எல்லாம் தூக்கி எறியுங்கள் என்று சொன்னால் மத சண்டை மூளாதா.

    அண்டை பகுதியில் உண்டை பிறக்கம் என்று உலகம் உருண்டை என்ற மாணிக்கவாசகர்
    இருந்த காலத்தில் டெலஸ் கோப் இருந்ததா, அப்படியானால் அவர் முட்டாளா?
    வான்வெளியை ஆராய்ந்து பல வான்வெளி உண்மைகளை எழுதிவைத்த ஆரியபட்டர் என்ன முட்டாளா? அதே ஆய்வுகளை கொண்டு பல பாடல்கள் எழுதிய இடைக்காடர் என்ன தத்தியா? அண்டத்திலுள்ளதே பிண்டம் என்று நம்முடலையே பகுத்து ஆராய்ந்து பல ரகசியங்களை கண்டார்கள் சித்தர்கள் அவர்களே பகுத்தறிவு வாதிகளேயன்றி ஒன்றுமே இல்லை என்று எதையும் ஆராயாமல் நுனிப்புல் மேய்ந்து சொல்ல எந்த ஒரு முட்டாளும் போதும்.

    நமது மூதாதயர்கள் என்று சொல்லும்போது நமது தந்தையையும் சேர்த்து சொல்கிறோம் என்ற எண்ணம் தங்களுக்கு எங்கே போனது. நமது தந்தை முதல் அதற்கு முன்னர் வாழ்ந்த அனைவரும் தங்கள் அனுபத்தையே நமக்காக வழிமுறை செய்து தந்து விட்டுப்போகிறார்கள். நம்மை வாழ வைப்பது அனுபவமே அன்றி வெறும் ஏட்டுப்படிப்பு மட்டுமே அல்ல.

  247. ஜ‌னாப் ராம‌ கோபால் அவர்களே,

    ச‌லாம் அலைக்கும்,

    //இது போன்ற கடவுள் பெயரை கூறிக்கொண்டு போலிசாமியார்கள், போலி சாமி சிலைகள் என பெருகிக்கொண்டே வருகிறது. ஜாதிச்சண்டை, மதச்சண்டை இவற்றை ஒழிக்க முடியாது. அவைகள் தான் நம்மை ஒழிக்கும்//

    இந்து ம‌த‌த்தில் ம‌த‌க் கார‌ணங்க‌ளுக்காக‌ இரு பிரிவின‌ர் போர் செய்த‌து உண்டா?

    திருப்ப‌தி பாலாஜியின் ப‌க்த‌ர்க‌ளும், ச‌ப‌ரிம‌லை ஐய்ய‌ப்ப‌னின் ப‌க்த‌ர்க‌ளும் என் க‌ட‌வுள்தான் பெரிய‌ க‌ட‌வுள் என்று ஆயுத‌ம் எடுத்து யுத்தம் செய்து கொள்கிறார்க‌ளா?

    ஒரே ஒரு க‌ட‌வுள், உருவ‌ம் இல்லாத‌ க‌ட‌வுள் என்ற கொள்கையை கிருத்துவ‌ரும், இசுலாமிய‌ரும் யூத‌ ம‌த்த‌தில் இருந்தே பெற்று -‍ ஆனால் என் வ‌ழிதான் ச‌ரியான‌து, என் க‌ட‌வுள் தான் ஒரே க‌ட‌வுள்- என்று க‌டுமையாக‌ கொடுமையாக‌ மூவ‌ரும்
    ச‌ண்டை செய்து வ‌ந்த‌ன‌ர். இப்பொதும் ச‌ண்டை ந‌ட‌க்கிற‌து.

    மதச்சண்டை இந்து ம‌த‌த்தில் இல்லை.

    சாதிச் ச‌ண்டை குறைந்து வ‌ருகிற‌து. விரைவில் சாதியை ஒழித்து விடுவோம்.

    போலிசாமியார்களை பெண்டு எடுத்து வ‌ருகிரோம்.

    நான் சிந்திக்க‌க் கூடிய‌வ‌னா இல்லையா என்ப‌து என் எழுத்தைப் ப‌டிக்கும் எல்லொருக்கும் தெரியும்.

    குதாஃபிஸ்

    திருச்சிக் கார‌ன்

    ந‌ண்ப‌ரே ச‌லாம் சொல்லும்போது ப‌தில் ச‌லாம் சொல்ல‌ மாட்டீர்க‌லா?

  248. YES, Sri Ramgopal, it is true, idol worship is not mentioned OR recommended during vedic age because there was NO need of it then. Population was very limited and almost all of them were enlightened. In Hindu scriptures there are two sections. One is Arsha and another is Anarsha. Arsha scriptures are of vedic age, which do NOT speak about idol worship of any particular image of God (though we have references to Rudra and the like). Anarsha scriptures portrait God in different forms, praise and worship them; and these forms are manifestations of God. These Anarsha scriptures speak of avataras, and similar divine appearences. Anarsha Grantas became necessary for the later period because Arsha Grantas could not cater to the need of the people in general. I am now commisioned to write in Tamil on Arya Samaj by a leading publishing house in which I have discussed about this at length. Since it is easy to identify God in images according to one’s preference, the native wisdom of our forefathers discovered Anarsha is more effective than Arsha scriptures. It is very difficult to classify Srimad Bhagavat Geeta as to whether it belongs to Arsha OR Anarsha. Since it has more leaning on Anarsha, it has become very popular than vedas and upanishads that come under Arsha. People always prefer easy to grasp and follow easy methods. Sri Ramgopal has mentioned that our forefathers were foolish. Let him NOT think that he is very intelligent than his forefathers. They introduced idol worship to enable people easily concentrate on God with their preferred image that gives them enormous self confidence and a strong support to fall back. Any action is bound to have side effects. Some take advantage of idol worship and decieve people. You can’t help. People have to apply their common sense and be careful. If they seek God to meet their greed, they will be disappointed and they deserve that kind of disappointment.

    MALARMANNAN

  249. வணக்கம்,
    //இந்தியாவில் உள்ள எல்லா சபைகளுமே வெள்ளையரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உங்கள் எண்ணமே பிழையானது, எங்களை யாரும் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ இருந்து வந்து மூளைச்சலவை செய்யவில்லை//

    மன்னிக்கவும் ஸ்ரீ ஜோசப் அவர்களே தங்கள் செய்தித்தாள் படிப்பது இல்லையா, நீங்கள் இந்தக்கேள்வியை கேட்பது முன்னமே நான் அறிந்திருந்தால் அந்த செய்தியை அந்த செய்தித்தாளில் இருந்து வெட்டி இதில் இணைத்து இருப்பேன், சமீபத்தில் வெளிவந்த செய்திதான் அது வெளி நாட்டில் இருந்து tourist visa எடுத்து வந்த ஒரு நண்பர் குடிசை பகுதிகளில் சிறு கைப்பிரதியில் பைபிள் வாசகங்கள் பதித்து மத பிரச்சாரம் செய்து அவர்களை மதமற்ற முயற்சித்தார் என்று காவல் துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற தகவல் வந்தது. மேலும் நீங்கள் கடற்க்கரை, மற்றும் மைதானங்கள் போன்ற இடங்களில் வெளிநாட்டினர் ஆங்கிலத்தில் நற்செய்தி வெளியிட அதை தமிழில் மொழிபெயர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது நீங்கள் வெளிநாடு சென்று விடுகிறீர்களா என்று தெரியவில்லை.

    போதாகுறைக்கு தொலைக்காட்சியிலும் நற்செய்திகளை வெளிநாட்டினர் பரப்பவிடுவதில்லையா. அல்லது தங்களிடம் தொலைக்காட்சிப்பெட்டி இல்லையா. அப்படியெனில் தயவு செய்து கலைஞரிடம் விண்ணப்பிக்கவும்.

  250. இந்துமதத்தில் கடவுளாக வழிபடும் அனைவரும் குடும்ப சகிதராகவும் மலர்ந்த முகத்துடன் இருப்பது ஏன் என்று ஒரு ஜோதிட நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.
    உதாரணமாக, சிவபெருமான் பார்வதி முருகன் பிள்ளையார் சகிதம், விஷ்ணு லட்சுமி சகிதம், பிரம்மா சரஸ்வதி சகிதம்.

    உக்கிரமான சிவபெருமானை தனியே வணங்குவது கூடாது. அப்படி யோகியர், துறவியர் மட்டுமே வணங்கவேண்டியது.

    குடும்பத்தினர் பெரும் வலிமை மிக்க சிவபெருமானை அன்பு சக்தியான பார்வதியுடனேயே வணங்கவேண்டும். அதே போல முருகனையும் வள்ளி தெய்வானையுடனேயே வணங்கவேண்டும்.

    அதே போல பிணமாக இருக்கும் படங்களையோ, தனித்த தெய்வத்தையோ வணங்குவது கூடாது.

    வணங்கப்படுவதெல்லாம் இறைவனைத்தான் என்பது இந்து சாத்திரங்கள் இயம்புவது. ஆனால் எப்படி இறைவனை வணங்கவேண்டும் என்பதும் இந்து சாத்திரங்கள் கூறுவது.

    பிணமாக தொங்கும் இயேசு கிறிஸ்துவை வணங்குவது, துணை இல்லாத அல்லாவை வணங்குவது ஆகியவை தீய விளைவுகளை மனதில் தோற்றுவிக்கும்.

    பிரார்த்தனை மூலம் பல கிறிஸ்துவர்கள் நலம் பெற்றிருக்கலாம். (வணங்கப்படுவது இறைவனைத்தானே?)

    ஆனால், வெகு விரைவில் பிணமாகத்தொங்கும் இயேசுவை வணங்குபவர்கள் வீட்டில் துர் விஷயங்கள் நடப்பதை பார்க்கலாம். அல்லாவை வணங்குபவர்கள் மன நிம்மதி இழந்து அலைவதையும் பார்க்கலாம். ஆனால், மனதை இந்த துர்விஷயங்கள் ஆக்கிரமித்துவிடுவதால், அதிலிருந்து விடுதலை அடைவதும் எளிதானதல்ல. இன்னும் அதிகமாக வணங்கினால் சரியாகிவிடும் என்று நினைத்து உள்ளேயே முழுகி விடுகிறார்கள்.

    ஆரம்பத்தில் நன்றாக இருக்கும் இந்த மத மாற்றம், வெகு விரைவில் தீய சிந்தனைகளும் தீய செயல்களுமாக ஆகி குடும்பங்கள் அழிந்துவிடுகின்றன. விவாகரத்துகள் பெருகுகின்றன. பெண்கள் அமங்கலமாக ஆகின்றார்கள். ஆண்கள் நிம்மதி இழக்கின்றனர்.

    இப்படிப்பட்ட மன நிம்மதி இழந்தவர்கள் திரும்பி வரும்போது தாயார் தெய்வங்களையே முதலில் வணங்க ஆரம்பிக்க வேண்டும். லலிதா சகஸ்ரநாமம், அல்லது மாரியம்மன் பாடல்களை கேட்பது, பாடுவது ஆகியவற்றின் மூலம் இழந்த நிம்மதியையும், குடும்ப சிக்கல்களையும் தீர்க்கலாம்.

    நன்றி

  251. //உங்களை நேரில் கண்டு அதைபோன்றே சிலையை வடித்தால் இது திருச்சிகாரர் உருவம் என்று அனைவருக்கும் தெரியும், நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். ஆனால் உங்களுடைய உருவசிலை வடிக்கிறேன் என்று ஒரு விகாரமான சிலையை வடித்து, இது தான் திருச்சிகாரர் சிலை என்றால், நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா//

    அடடே, நாங்கள் பார்க்காத ஒரு பொருளுக்கு சாட்சி குடுக்கவோ, சிலை வடிக்கவோ இல்லை.

    எங்களுடன், எமது முன்னோருடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்தவரைத் தான், வானுறையும் தெய்வத்துள் வைத்து இராமரை, கிருட்டினரை, முருகரை… சிலை வடித்து வழிபடுகிறோம்.

    கிருத்துவர்களுடன் சேர்ந்து இயேசுவை வணங்கவும், இசுலாமியருடன் சேர்ந்து அல்லாவை வணங்கவும், நீர் கூட அருந்தாமல் நோன்பு நோக்கவும் எனக்கு ஒப்பே! என்னை இவ்வளவு சகிப்புத் தன்மையும், நல்லவற்றை பாராட்டும் தன்மையும், நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்த தருமத்தை விட்டு விட்டு,

    பிறர் மார்க்கத்தை இகழவும், பிறரை வெறுக்கவும், கட்டாயப் படுத்தவும் செய்யுமான ஒரு மார்க்கத்திற்கு சென்று என்னை அழித்துக் கொள்ள நான் தயார் இல்லை.

    இப்படி நன்மையின் பக்கம் இருப்பதால் தண்டனை தரப்படுமானால் அத‌ற்க்காக‌த் த‌ர‌ப் ப‌டூம் எந்த‌ த‌ண்ட‌னைக்கும் நான் த‌யார்.

  252. //YES, Sri Ramgopal, it is true, idol worship is not mentioned OR recommended during vedic age because there was NO need of it then//

    துருவன், பிரகாலாதன் , மார்க்கனதேயன் இவர்கள் எல்லாம் இருந்தது எந்தக் காலத்தில்? இவர்கள் சிலை வணக்கம் செய்யவில்லையா? மார்க்கண்டேயன் சிவனை வணங்க வில்லையா? மார்க்கண்டேயன் எப்படிக் காப்பாற்றப் பட்டான்?

  253. //YES, Sri Ramgopal, it is true, idol worship is not mentioned OR recommended during vedic age because there was NO need of it then//

    துருவன், பிரகாலாதன் , மார்க்கனதேயன் இவர்கள் எல்லாம் இருந்தது எந்தக் காலத்தில்? இவர்கள் சிலை வணக்கம் செய்யவில்லையா? மார்க்கண்டேயன் சிவனை வணங்க வில்லையா? மார்க்கண்டேயன் எப்படிக் காப்பாற்றப் பட்டான்?

  254. //ஸ்ரீ ஜோ அவர்கள் கூறிய மந்திரங்களின் உட்பொருளை சாது செல்லப்பா போன்ற ஞான சூனியங்களை தவிர வேறு யாராவது நல்ல ஸம்ஸ்க்ரிதம் தெரிந்த நேர்மையானவர்களிடம் கேட்டுத்தெளிவடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்//.
    அதே போல நீங்களும் கோன்ராட் எல்ஸ்ட் போன்ற ஞான சூனியங்கள் எழுதும் குப்பைகளை தூர எறிந்துவிட்டு, கிறித்தவம் பற்றியதான சந்தேகங்களுக்கு கிரித்தவ வேத அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படித்து தெளிவு பெறுங்கள்

  255. நண்பர் ராமா
    கிறித்தவத்தின் பேரில் நடந்த கொலை,கொள்ளை, பாலியல் வன்முறைகள் தவறுதான், அதில் எனக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை. காட்டு மிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்த ஆங்கிலோ சாக்ஸன் வெள்ளையர்களை செம்மைப்படுத்தியதே கிறிஸ்தவம் தான். இன்றைக்கு மேற்கத்திய நாடுகளிலெ உள்ள கலாச்சார சீரழிவுக்கு காரணம் அவர்கள் கிறித்தவத்தை பின்பற்ற தவறியது தான். உலகில் உள்ள மற்ற இனங்களான ஹிஸ்பானியர், ஆசியர், நீக்ரோ, ஜிப்சிகள், மங்கோலியர் கிறித்தவம் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை பிறழாமல் பின்பற்றும் போது வெள்ளையர்கள் மாத்திரம் தாந்தோன்றித்தனமாக அதை விட்டுவிட்டதற்கான காரணம் அவர்களது மன ஸ்திரமற்ற தன்மையே. வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான் என்று கேள்விப்படுகிறோமே அது வெள்ளையரை பொறுத்த வரை உண்மை. மற்றபடி அரசியல் நோக்கங்களுக்காகவும் சுய நலத்துக்காகவும் படையெடுப்புகளை நடத்தி பலரை கொன்றது தவறுதான்.
    அன்றைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பழங்குடிகளை தவறாக நடத்தியதற்க்காக மன்னிப்பு கேட்டார். பல அபோரிஜினல்கள் அதை கேட்டு கண்ணீர் விட்டனர். ஆஸ்திரேலிய பிரதமர் ஒழுங்காக சர்ச்சுக்கு சென்று வழிபடும் கிறிஸ்தவர் என்பதை அவர் கான் பெர்ராவில் அடிக்கடி செல்லும் ஆலயத்திற்கே நான் சென்ற போது கேள்விப்பட்டிருக்கிறேன்.

  256. அவரவர் தங்கள் மதத்தை பிரச்சாரம் செய்வதே தவறுதான் என்றால் அமெரிக்காவில் உள்ள கிருஷ்ண பக்தி இயக்கமும், சின்மயா இயக்கமும் செய்வது தவறா சரியா? முதலில் இந்தியர்களை யெல்லாம் பிச்சைக்காரர்களாகவும், வெள்ளையர்களை யெல்லாம் கொட்டிக்கொடுக்கும் வள்ளல்களாகவும் சித்தரிப்பதை பற்றி யோசியுங்கள்.

  257. //இயேசு இருந்தது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சியில் அவரிருந்ததற்கு ஆதாரம் இல்லை என்றும் ஆய்வு விளக்கங்கள் உள்ள நிறைய நூல்கள் உள்ளன, முதலில் இவர் அதைப்படித்தாரா என்று முட்டாள் தனமாக நான் கேட்கப்போவதில்லை, ஏனெனில் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. வெறும் ஆதாரங்களை வைத்து கடவுள் நிலையை எடைபோடும் இவர்களின் இறைத்தேடல் என்பது என்ன? நண்பர் கிளாடி கூறும் பிரம்மத்தை இவர்களால் எவ்வாறு அடைய முடியும்.

    ஏற்க்கனவே யூத விவிலியத்தை யூதர்களின் கண்முன்னே பைபிளாக மாற்றி அது போதாமல் இந்து தர்மத்தின் வேதத்திலும் இயேசு பிறப்பின் ஆதாரம் தேடும் இவர்களின் கீழ்த்தரத்தை என்ன என்பது. தனக்கென்று என்ன தத்துவங்களைத்தான் வைத்து உள்ளார்கள்.//

    அதேபோல‌ இயேசு வாழ்ன்தார் என்ப‌த‌ற்கும் ப‌ல‌ விள‌க்க‌ நூல்க‌ள் உள்ள‌ன‌, இத்தொகுப்பில் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ர் ஆதார‌ம் என்ன‌ ஆதார‌ம் என்ன‌ என்றுதானே கேட்ட‌ன‌ர், கேட்ட‌தால் சொன்னோம். ஆதார‌ங்க‌ளை பார்த்து ந‌ம்புப‌வ‌ர்க‌ள் அல்ல‌ நாங்கள். “விசுவாச‌ம் என்ப‌து ந‌ம்ப‌ப்ப‌டுகிற‌வைக‌ளின் உறுதியும் காண‌ப்ப‌டாத‌வைக‌ளின் நிச்ச‌ய‌மாக‌ இருக்கிற‌து” என்கிற‌து பைபிள், என‌வே எங்க‌ள‌து ந‌ம்பிக்கைக்கு ஆதார‌ங்க‌ள் தேவையில்லை, உங்க‌ளை போல‌ ப‌ல‌ர் ஆதார‌ங்க‌ளை கேட்ப‌தால் தான் சொல்கிறோம். ஏன் இன்து வேத‌ங்க‌ளில் இயேசுவை பற்றி கூறியுள்ள‌து என்றால் உங்க‌ளுக்கு எரிகிற‌து, இது உங்க‌ள் காழ்ப்பையே காட்டுகிற‌து.

  258. அதுபோக கிறிஸ்து இந்தியா வந்தார், இமயமலையில் தங்கியிருந்தார், அங்குள்ள முனிவர்களிடம் மாஜிக் கற்றார் என இயேசுவுக்கு காவி உடை உடுத்த நீங்கள் ம்யற்சிக்கும் போது நாங்கள் வேதங்களில் இருந்து மந்திரங்களை சுட்டிக்காட்டினால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது

  259. நன்றி மலர்மன்னன்….
    நீங்கள் பதில்லளித்த விதம் நன்று. நீங்கள் சொல்வது போல் சிலைவழிபாடுகளை கொண்டு ஔஏமாற்று பேர்வளிகள் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதை சொல்லப்போனால் சிலர் மதச்சண்டையை வளர்க்கிறார்கள். வேண்டுமென்றால் இன்னும் ஆதாரம் வேண்டுமா…

  260. வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிஹாசங்கள், evaikalai ella indhiya molikalilum eluda vendum. apppa than unmai purium

  261. வணக்கம்,
    நண்பர் ஸ்ரீ ஜோசப் அவர்களே நான் ஏன் கிறிஸ்துவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் மந்திரங்களின் அர்ததம் என்ன என்று கேட்டமையால் அதற்கு விடை சொன்னேன், மேலும் வாழ்வியல் வழிமுறைகள், வாழும் கலைகள், வாழ்வின் ஆதாரம், வாழ்க்கையின் நோக்கம், பிறவிப்பயன், உயிரின் ஆதாரம், இன்னும் எத்தனையோ விளக்கங்களையும், அடிப்படை சூத்திரங்களையும் தனக்குள்ளே கொண்டுள்ள இந்து தர்மத்தை கடை பிடிக்கும் நாங்கள் எதற்காக கிறிஸ்துவத்தை பற்றி அறிய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உங்கள் சூதாட்டங்களை உங்கள்
    தேவாலயங்களுக்குள் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

    நம்மிடத்தில் எது இல்லையோ அதன் மேல்தான் நாட்டம் ஏற்ப்படும்,
    எல்லா வாழ்வியல், லௌகீக, மெய்ஞான, விஞான, தத்துவங்களும் எம்மிடத்தே இருக்கும் போது உமது கிறிஸ்துவ தத்துவம் படித்து நாங்கள் பயன் பெற வேண்டிய அவசியம்? மேலும் ( பிறப்பு இறப்பு இலாத) எமது இறைவன் தோன்றியதற்கு உமது வேதங்களில் ஆதாரம் தேடும் அவசியம் எங்களுக்கு இல்லை.

    நாங்கள் இந்து மகாசமுத்திரத்தில் நீராடியவர்கள், குட்டை நீரில் குளிக்க தேவை இல்லை.

    முதலில் அந்த மந்திர வரிகள் எதற்க்காக உச்சரிக்க படுகின்றன, அவைகட்கு உண்மையான் அர்த்தம் என்ன என்று தெளிவடைந்து பின் அதை பற்றி பேச வேண்டும்.
    எதோ ஒரு நோய் இருக்கிறதாம் அதன் பெயர் நினைவில் இல்லை, யார் என்ன பேசினாலும் நம்மை பற்றித்தான் பேசுகிறார்கள் என்று என்னும் எண்ணம் வருமாம்.அதைப்போல்தான் இதுவும், பார்த்தாயா உங்கள் வேதங்களே யேசுவைப்பற்றி பேசுகின்றன என்று பாமரர்களை வளைப்பது.

    இயேசு இந்தியா வந்தார், இங்கேதான் மாஜிக் கற்றார் என்பது போன்ற தந்திர வரிகளை இந்துக்களிடம் பரப்பிவிட்டதும் கண்டிப்பாய் கிறிஸ்துவத்தின் வியாபார தந்திரமாகத்தான் இருக்கும். ஏனெனில் நமது இந்தியாவில்தான் இயேசு ஞானம் பெற்றார் எனில் அதுவும் நல்வ்ளியாகத்தான் இருக்கும் என்று யாராவது ஏமாறுவார்கள் என்ற எண்ணம்.

    அய்யா நாங்கள் இறைவனை எங்குமே காண்பது இல்லை உணர்கிறோம், அந்த உணர்வுகளுக்கு ஆதாரம், அத்தாட்சி பத்திரம், நிரூபணங்கள் தேவையில்லை. பிறப்பு என்பது எங்களுக்கு இயற்கையானது ஆனாலும் இறையின்பால் நாம் கொண்ட பக்தியும் அப்பியாசங்களும் இறைத்தொண்டும் முற்றி ஒருகாலத்தில் ஞானியாகவும், சித்தராகவும், பரிணாமம் பெரும் எமது மக்கள் ஒவ்வொருவரும் ஒரு தேவகுமாரர்.

  262. The “rationalist” leaders have [much-worshipped] statues in our state!:-)
    maalai, mariyaadhai on important days-utsavam, vizha what not!All that they were supposedly against while alive!:-)
    May be friends can object to that first! They will not ,as they know the
    “adi” -yaars of those Godly leaders dont believe in decent discussion.]:-)

  263. //சிலைவழிபாடுகளை கொண்டு ஔஏமாற்று பேர்வளிகள் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்- Sri Ramgopal//

    It is NOT only in the name of religion but in every field you will find rogues taking advantage of the faith and belief of the people. If you analyse, you will come to the conclusion that it is greed OR some personal unjust ambition, which is leading people to those rogues and the rogues take advantage of it. Why do you want to attribute it to idol worship only? Because you are antagonised toward idol worship or particularly Hindu religion, which is your parent religion. Will you blame your mother on filmsy grounds? In every religion, you will find bogus persons exploiting people’s faith in the name of religion. People who want to make quick and easy money or to gain something else materially fall to the temptations of those who promise more interests, doubling money OR making them realise their ambition even if it is NOT just. Politicians cheat with false promises. Try to understand finding fault with the religion or faith of a people is NOT bonafide unless the religion itself is insisting on unjust practices. It is NOT only idol worship but so many other factors by which people are cheated. Have you NOT heard of some Mohmedan Fakirs cheating people by offering talismans, black magic like billi, sooniyam etc.? They even advertise about this in periodicals! Likewise, there are also evangelists who claim the lame are walking, blind are seeing in the name of Jesus! They arrange some people to tesitfy like that duirng their conventions and gullible people are easily convinced and accept Jesus as saviour! Don’t you know T G Dinakaran family is giving false promise to students during public examinations that they will paas easily if they attend spl prayers being arranged for students? Therefore, stop worrying about some persons cheating people taking advantage of people’s faith in idol woeship. My sincere suggestion to all Christian and Mohmedan citizens in Hindustan is to return to their parent faith; it is afterall the faith followed by their own forefathers only. It is NOT from any country outside Hindustan. Just imagine, when you mention the names from Bible OR Koran, do you really feel identified with those names? If you argue the same way with regard to Samascrutam also, you have options in Tamil and other languages of Hindustan to follow Hinduism, your parent religion. I have chaste Tamil name, I read Tirumandiram and call myself a proud Hindu. I don’t have to depend on Samascrutam to be a Hindu, unless I am personally interested to know the scriptures in Samascrutam. Therefore, give up foreign faiths, strengthen your parent religion and return home. Realising logic in my suggestion, many Mohmedans and Christians have returned to their parent faith and become proud Hindus, the only surviving ancient faith with profound philosophy and spiritual depth.
    MALARMANNAN

  264. Bhavishya Puranam is full of stealthy interpolations by early wily evangelists to create an impression that Hindu mythology has predicted the coming of Jesus. This was to cheat Brahmins with the help of some Brahmins! Even during our times, one Brahmin helped to create bogus records in favour of Christianity.

    Bhavishya Puranam is authentic but unfortunately, it is the most corrupted Anarsha Granta of Hindu religion. But if you have sound knowledge in Samascrutam, you can easily find out the interpolations.

    Charlatans like Sadhu Chellappa use those interpolations to cast the net to catch gullible Hindus.

    This Chellappa ran away from my home unable to answer my questions. Anybody having access to Sadhu Chellappa can verify this.

    MALARMANNAN

  265. Mr Joseph, Hinduisim does not depend or need Vedas/Ithikasams. Sanatna Dharma is eternal and even you take away all our holy books, it will thrive because it about each individual Dharmic way and has to come from the heart. Take away the Bible and Christianity will collapse. By the way, Bible says that god created the world in 3 days about 5000 years back and the earth is flat. I presume you are sticking to these FACTS.
    The destruction caused by the whites all over the world had the stamp of approval from the Church.Your religion confered Sainthood to Xavier who butchered the Hindus in Goa. Same story in America where another butcher of the Indians is now catholic saint. (Read the book by Ward Churchill,who is a RED Indian.) Christianity and the Vatican has a funny way of showing their compassion.
    I should know about Kevin Rudd, the Aussie PM, as I live here. He did say sorry for the stolen generation only. Saying sorry is one thing but not compensating the aborigines is another. The govt is hell bent on not compensating the natives of Australia for their cruel past deeds. I have just returned from Alice Spring and had witnessed the third world conditions these people live in.You will weep when you see how a population of once a proud race was reduced to this squalid state.By the way, Church attendance have dropped dramatically here. The last survey showed over 70% of the population are “non practicing christians” whatever that means.

  266. If somebody is taking advantage of people’s belief in idol worship and cheat them, should anybody advise people NOT to have belief in idol worship? Is it NOT nonsense if anybody advises not to travel by bus just because a bus has met with an accident? First of all, people should know God will NOT fulfill greed or unjust ambition whether they worship with idol or by any other manner. When people come and tell me they have been cheated, I use to say, Well, you deserved it. In Chettinadu paralance, they call it Butti Kolmutal.

    MALARMANNAN

  267. //வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிஹாசங்கள், evaikalai ella indhiya molikalilum eluda vendum. apppa than unmai purium//
    Dear Sri Muthu,
    There are already Tamil translation of many scripturers. I remember Sri Anna Subrahmanyam of Sri Ramakrishna Mutt has translated some Upanishads. Valmeeki Srimad Ramayanam and Sri Vyasa Maha Bharatham, Srimad Bhagavatam etc., are available in Tamil. Swami Chitbhavaananda has translated some, I believe. Likewise, these are available in other languages also.
    MALARMANNAN

  268. //நாங்கள் இந்து மகாசமுத்திரத்தில் நீராடியவர்கள், குட்டை நீரில் குளிக்க தேவை இல்லை. //

    சரியாக சொன்னீர்கள்

  269. ஜோசப் அவர்களே,
    உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன், திரு மலர் மன்னன், பாஸ்கர் அய்யா, திருச்சிக்காரர், ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன், மற்றும் பலரும் தங்கள் கருத்துக்களை வெவ்வேறு கருத்துக்களை சொல்லியும் திருப்தியடையாத நீங்கள் உங்களின் மதம்தான் உயர்ந்தது என்று சொன்னால் திருப்தி அடைவீர்களா?

    பைபிளை உதாரணமாக நீங்கள் காட்டும்போது நான் உங்கள் வேதத்தை உதரணம் காட்டினால் ஏன் கொவப்படுகிறீர்கள் என்று சலித்து கொள்கிறீர்களே, உதாரணமாக திருச்சிக்காரர் பைபிளை உதாரணமாக சொன்னாலும் அதில் பாருங்கள் என் தேவனின் பெயர் உள்ளது, எமது சாமியின் ஆதாரம் உள்ளது என்று ஏதாவது சொல்கிறாரா,

    இப்பவும் இந்துக்களின் பலரின் வீட்டில் அன்னை தெரசாவின் படம் உள்ளது அவரின் தொண்டுக்களை யாரும் மறுக்கவோ மறக்கவோ இல்லை, ஏனெனில் அதற்குக்காரணம் அன்னையாரின் மத சார்பற்ற தன்மை, எனக்கு தெரிந்து தான் செய்யும் நன்மைகள் அனைத்தும் தேவன் தனக்கு இடப்பட்ட கட்டளை என்று எண்ணி பணிசெய்தார், அன்றி தான் செய்த உதவிக்காக மக்களிடம் அவர் மதமாற்றம் செய்யவில்லை.

    மேலும் இது பிரசார மேடை இல்லை, கட்டாய மத மாற்றம் என்பது ஒரு மோசடியான செயல், உங்களுக்கு இயேசுவை பிடிக்குமானால் நீங்கள் அவரை வழிபடுங்கள், இந்துக்கள் அவரவர் தங்களின் தெய்வங்களை வழிபடட்டும். இதில் சிறுசு பெரிசு என்று ஏதாவது உள்ளதா. நாம் இங்கே எழுவது கணினிமுன்னர் இருப்பவர்களுக்கு மட்டும், அதுவும் இந்த தளத்தை பார்பவர்க்கு மட்டும்தான் தெரியும், இதில் கிறிஸ்துவை தவறாக விமர்சித்தாலே உங்களுக்கு கோபம் வருகிறதே, வீதிகளில் மேடைகளில் என்று தங்களது தெய்வங்களை இகழ்ந்து பேசினால் இந்துக்களுக்கு மனவருத்தம் ஏற்படாதா. அதைத்தான் திருத்திக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

  270. இன்றைக்கு இயேசு நாதர் மீண்டும் உயிரோடு வந்து நின்றாலும், இவர்கள் அவரை மதிக்கப்போவது இல்லை ஏனெனில் இறந்து போன எசுவினால்தான் இவர்களின் மத மாற்ற பிழைப்பு ஓடுகிறது, எனவே ஜோசப் அவர்களே தயவு செய்து நீங்கள் உண்மையாக இயேசுவின் பக்தராக இருப்பின் கருத்து சண்டைகளை விட்டு விட்டு இயேசுவின் வழியிலும் அன்னை தெரசாவின் வழியிலும் நடக்க முயலுங்கள்.

  271. Mr Superstar, I do appreciate your comments though I will not be that charitable to Ms Teresa. Please read the book ” The missionary position: Mother Teresa in theory and practice” by Christopher Hitchens.
    I wonder why we have no pictures of Dr Modi in our homes, the great eye surgeon,who had worked all his life tiredlessly, restoring eyesight to hundreds and thousands of Indians,by running free eye camps. He did not get the Noble prize. He was never regonised by the mainstream media. On the other hand, MS Teresa with doubtful credentials had been confered Sainthood by the Vatican. Ramakrishna Missionary had done more charitable work in Calcutta than anybody else, including Ms Teresa but goes unrecognized.
    Dr Fred Hollows ,now deceased, the wonderful eye surgeon,from Australia ( please refer to Fred Hollow’s foundation)had dedicated his entire life like Dr Modi, restoring eye sights to poor people all over the world, including Africa. He apparently told his family/ friends prior to his death, so the story goes, ” Don’t ever let the Christian mob get me after my death”. Obviously, as true Christian and it’s belifs, Mr Jospeh will expect Dr Hollows to rot in Hell, as he did not follow Christianity and rejected Christ.

  272. joseph
    1
    அதேபோல இயேசு வாழ்ன்தார் என்பதற்கும் பல விளக்க நூல்கள் உள்ளன, இத்தொகுப்பில் நண்பர்கள் பலர் ஆதாரம் என்ன ஆதாரம் என்ன என்றுதானே கேட்டனர், கேட்டதால் சொன்னோம். ஆதாரங்களை பார்த்து நம்புபவர்கள் அல்ல நாங்கள். “விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமாக இருக்கிறது” என்கிறது பைபிள், எனவே எங்களது நம்பிக்கைக்கு ஆதாரங்கள் தேவையில்லை, உங்களை போல பலர் ஆதாரங்களை கேட்பதால் தான் சொல்கிறோம். ஏன் இன்து வேதங்களில் இயேசுவை பற்றி கூறியுள்ளது என்றால் உங்களுக்கு எரிகிறது, இது உங்கள் காழ்ப்பையே காட்டுகிறது.//

    //அதே போல நீங்களும் கோன்ராட் எல்ஸ்ட் போன்ற ஞான சூனியங்கள் எழுதும் குப்பைகளை தூர எறிந்துவிட்டு, கிறித்தவம் பற்றியதான சந்தேகங்களுக்கு கிரித்தவ வேத அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படித்து தெளிவு பெறுங்கள்//
    In his Book “Real Jesus” Professor F.F.Bruce Rylands Professor of Biblical Criticism and Exegesis. University of Manchester, this professor quoted Bultman and others who said that there are no enough material about Historical Jesus and then Praises the work of C.J.Cadoux, for his book “ Life of Jesus” and let us read from this Author.
    “Jesus was the firstborn son of a Jewish Girl named Mary and her husband Joseph, a descendant of King David, who worked as a Carpenter at a small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about 7-5BC., and the place in all probability Nazareth itself. Towards the end of the First Century A.D., it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a Virgin, who bore him by the miraculous intervention of God. This view, however, though dear to many Modern Christians for its doctrinal Value, is unlikely to be true in point of fact.”
    Page-29, Life of Jesus; Professor Cecil John. Cadoux, Profeesof New Testament at the Yorkshire United Independent College, Bradford and later Professor of Church History at Mansfield College –Oxford
    Jewish Bible does not expect any body as Christ at all as divine, and as per Pictorial Biblical Encyclopedia-
    “Messiah-The Escahatological King who is to rule over Israel at the end of the days….. None of the older sources referred to a Messiah who should appear on earth in Poverty and Humility to be rejected by his own people and suffer and die, giving his life as a ransom for mankind. P-456 Pictorial Biblical Encyclopedia

    “The Jews received many religious notions from the Persians to whom they communicated few if any of their own. “ Prof.D.V.Moses- Chief Minister –London Synogouge of British Jews in his book Religious Systems of the World .

    If we had only Mark’s Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one firstand final visit to Jerusalem and that the Galilean ministry began after John was imprisoned.
    4th Gospel takes a different view . Here the scene shifts backwards and forwards between Galilea and Judea during the first six chapters, (From Chapter -7 onwards the Scene is laid wholly in Judea and Jerusalem) See John3:24 for John and Jesus
    -The Work and Word of Jesus, Professor A.M.Hunter, Kings College Aberdeen University.

  273. ” The Great Majority of readers take for Granted that Some Word Equivalent to “LORD” is in the Hebrew Text, but it is not. The Word-”Lod” is a title, not name;and not Name; and Putting it in Capital Letters does nothing to change this fact. But where the Bible Specifically has the personal name, translators should not take it upon themselves to make a substitution. The use of “Lord” instead of “Yahweh” effectively Depersonalises the Deity, turns Him into a kind of Vaugue abstaraction and rejects the repeated Emphasis in the Bible on his Unique personal relationship with Israel. It also disguises the fact tat YAHWEH is a Character in the Biblical Drama, with entrances and exis and a role to play, all assigned by the Writers.”
    -Page 313 -Bible As Literature, Oxford University Press,
    written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.

  274. இசைக்கு ஒரு “சுப்புடு”வையும்
    அரசியலுக்கு ஒரு “சோ”வையும் நினைத்துக் கொள்ளவேண்டுகிறேன்;

    ஒத்து ஊதுபவர்களே ஆபத்தானவர்கள்;
    எனது விமர்சனங்களைத் தவிர்ப்பது உங்களுக்கே ஆபத்தானதாகவும் அபத்தமானதாகவும் முடியும்..!

  275. மலர்மன்னன் அவர்களே…

    எனது பெற்றோர் இந்து மதத்தை சேர்ந்தவர். நானும் சிலைகளை வழிபட்டுக்கொண்டு தான் இருந்தேன். ஆனால் சிலை என்பது தன்னை தானே காத்துக்கொள்ள இயலாத ஒரு கள் அவ்வளவுதான். இதை நாம் நம்பிக்கையின் அடிப்படையில் வணங்கினால், அது பகுத்தறிவு ஆகாது. சிலை வணக்கம் வேதங்களில் இல்லை என்பதற்கு இன்னும் ஆதாரம் வேண்டுமா…

    BHAGAVAD GITA:

    The most popular amongst all the Hindu scriptures is the Bhagavad Gita.

    Consider the following verse from the Gita:

    “Those whose intelligence has been stolen by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures.”
    [Bhagavad Gita 7:20]

    The Gita states that people who are materialistic worship demigods i.e. ‘gods’ besides the True God.

    UPANISHADS:

    The Upanishads are considered sacred scriptures by the Hindus.

    The following verses from the Upanishads refer to the Concept of God:

    1. “Ekam evadvitiyam”
    “He is One only without a second.”
    [Chandogya Upanishad 6:2:1]1
    2. “Na casya kascij janita na cadhipah.”
    “Of Him there are neither parents nor lord.”
    [Svetasvatara Upanishad 6:9]2
    3. “Na tasya pratima asti”
    “There is no likeness of Him.”
    [Svetasvatara Upanishad 4:19]3
    4. The following verses from the Upanishad allude to the inability of man to imagine God in a particular form:

    “Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam.”

    “His form is not to be seen; no one sees Him with the eye.”
    [Svetasvatara Upanishad 4:20]4

    1[The Principal Upanishad by S. Radhakrishnan page 447 and 448]
    [Sacred Books of the East, volume 1 ‘The Upanishads part I’ page 93]

    2[The Principal Upanishad by S. Radhakrishnan page 745]
    [Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page 263.]

    3[The Principal Upanishad by S. Radhakrishnan page 736 & 737]
    [Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

    4[The Principal Upanishad by S. Radhakrishnan page 737]
    [Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

    THE VEDAS
    Vedas are considered the most sacred of all the Hindu scriptures. There are four principal Vedas: Rigveda, Yajurveda, Samveda and Atharvaveda.

    1. Yajurveda
    The following verses from the Yajurveda echo a similar concept of God:

    1. “na tasya pratima asti”
    “There is no image of Him.”
    [Yajurveda 32:3]5
    2. “shudhama poapvidham”
    “He is bodyless and pure.”
    [Yajurveda 40:8]6
    3. “Andhatama pravishanti ye asambhuti mupaste”
    “They enter darkness, those who worship the natural elements” (Air, Water, Fire, etc.). “They sink
    deeper in darkness, those who worship sambhuti.”
    [Yajurveda 40:9]7

    4. Sambhuti means created things, for example table, chair, idol, etc.

    The Yajurveda contains the following prayer:
    “Lead us to the good path and remove the sin that makes us stray and wander.”
    [Yajurveda 40:16]8

    5[Yajurveda by Devi Chand M.A. page 377]

    6[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

    7[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

    8[Yajurveda Samhita by Ralph T. H. Griffith page 541]

    2. Atharvaveda

    The Atharvaveda praises God in Book 20, hymn 58 and verse 3:
    1. “Dev maha osi”
    “God is verily great”
    [Atharvaveda 20:58:3]9

    3. Rigveda
    1. The oldest of all the vedas is Rigveda. It is also the one considered most sacred by the Hindus.
    The Rigveda states in Book 1, hymn 164 and verse 46: “Sages (learned Priests) call one God by many
    names.”
    [Rigveda 1:164:46]
    2. The Rigveda gives several different attributes to Almighty God. Many of these are mentioned in
    Rigveda Book 2 hymn 1.

    Describing Almighty God in anthropomorphic terms also goes against the following verse of Yajurveda:

    “Na tasya Pratima asti”
    “There is no image of Him.”
    [Yajurveda 32:3]

    ஒன்றே குலம் ஒருவனே தேவன். இது மட்டும் தான் உண்மை.

    மனிதன் எவனும் பிறப்பால் உயர்ந்தவனும் கிடையாது, தாழ்ந்தவனும் கிடையாது. ஔஏழை, பணக்காரன் என்று பாகுபடுத்தலாம். ஆனால் தீண்ட தாகவன் என்று ஒரு ஜாதியை ஒதுக்குவது இந்து மதத்தில் மட்டும் தான் இருக்கிறது. மற்ற மதத்திலும் இருக்கிறது என்று சுட்டிகாட்ட வேண்டாம் அதைவிடுத்து இவற்றை ஔஎப்படி ஒழிப்பது என்பதை சிந்திக்க வேண்டும். சிலைவழிபாட்டால் தான் எண்ணற்ற ஜாதி உருவாகியது. இந்த விஷயத்தில் கிஸ்துவும், இஸ்லாமும் மேல்.

    முதலில் ஜாதியை ஒழித்தால் தான் மதங்களை ஒழிக்க முடியும். அதற்கு ஒரே வழி கலப்பு திருமணம்.

  276. // முதலில் ஜாதியை ஒழித்தால் தான் மதங்களை ஒழிக்க முடியும். அதற்கு ஒரே வழி கலப்பு திருமணம் //

    திரு.இராம்கோபால் எழுத்துப் பிழையினைத் தவிர்க்க வேண்டுகிறேன்;

    ஜாதி வெறியும் நிறவெறியும் வர்க்கக் கொடுமையும் மனுக் குல வாழ்வில் தவிர்க்க இயலாதது; அது மனித இனம் தோன்றியதிலிருந்தே இருப்பதாகும்;
    திருமணத்தால் மட்டுமே அதனை ஒழித்துவிடமுடியாது;

    ஏனெனில் கலப்புத் திருமணம் செய்த ஆண்,பெண் இடையே ஏதேனும் சச்சரவு தோன்றும் போதோ அல்லது அவர்கள் வாழும் சமுதாயத்தினாலோ அது மீண்டும் நினைவுபடுத்தப்படும்; இன்னும் பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதியையே குறிப்பிடுவதால் அது மீண்டும் உயிர்பெறும்.

    மனிதன் இயற்கையை வழிப்பட்ட நாளிலேயே வர்க்க வேறுபாடு இருந்ததாம்; உதாரணத்துக்கு “ஆபிரகாம்” எனும் முன்னோர் காலத்தில் சூரியனை வழிபட்டோருடன் அவர் போராடவேண்டி வந்ததாம்; காரணம் அவர் சந்திரனை தெய்வமாக வழிபட்டோர் வழிவந்தவர்;

    இன்றைக்கு நமது வாரம் ஞாயிற்றுக்கிழமையில் தான் துவங்கும் என்பது வரை இந்த ஆதிக்கம் தொடருகிறது;

    கிரேக்கர் மற்றும் ரோமர்களும் கூட சூரிய வழிபாட்டு வழிவந்தோரே;

    ஒரு முக்கிய தகவல்:
    நேற்று 15.09.2009 என்ற தேதி குறிப்பிட காரணமான முடிவு 1752 ம்
    ஆண்டு நேற்றைய நாளில்தான் எடுக்கப்பட்டதாம். இது ஆதிக்கத்தின் வெளிப்பாடுதானே; இதற்கு எந்த மதமும் காரணமல்ல‌.

  277. கீதையில் கூறியதை பாதியை மட்டும் எழுதி இருக்கிறார்.

    அதே கீதையில் தான் கிருஷ்ணன் எப்போதெல்லாம், தருமமா தாழ்ந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் நான் நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் நான் அவதரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    நானே அவதரிக்கிறேன் என்று கூறி உள்ள அவதாரங்களைத தான் நாம் வணங்குகிறோம்.

    செல்வங்களை பொருள்களை வேண்டுபவர்கள் தான் “டெமி கோட்”களை வேண்டுகிறார்கள். நான் எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் வணங்குகிறோம், நாம் வணங்க்குகிறவர்களும் அப்படி பலன் எதிர்பாராமல் கொள்கைக் காக வாழ்ந்தவர்கள்தான். நான் உன்னைக் காப்பாற்றினேனே நீ என்னை வணக்கியே ஆக்க வேண்டும் என்று கட்டளையிடுபவரை நாம் வணங்கவில்லை.

    “”இந்து மத்தில் உருவமற்ற கடவுளை வணங்கும் வழக்கம் உண்டு. கடவுள் உருவம் இல்லாத நிலையிலும் இருக்கிறார்” என்று நாமே பலமுறை எழுதியாகி விட்டது. மனிதனே இறந்த பின் அவன் உடல் சாம்பலான பின், அவன் உயிர் உருவம் இல்லாமல் தானே இருக்கிறது? அப்பா மனிதன் உருவம் இல்லாத நிலையில் இருக்கும் போது கடவுள் உருவம் இல்லாத நிலையில் இருக்க முடியாதா? மனிதன் உர்வத்தை எடுக்கும் போது கடவுள் உருவம் எடுக்க முடியாதா?

    //ஒன்றே குலம் ஒருவனே தேவன். இது மட்டும் தான் உண்மை//

    என்று எல்லாம் யாரும் கட்டாயப் படுத்த முடியாது. மின் இயக்க விதிகளைப் போல நிரூபித்துக் காட்டுங்கள் !நிரூபிப்பது போல உருவம் இல்லாத கடவுளுக்கு உருவத்தை எடுத்துக் கொள்ளும் சக்தி இல்லை என்பதை மின் இயக்க விதிகளைப் போல நிரூபித்துக் காட்டுங்கள் !

  278. To Sri Ramgopal:
    I am aware already that there was no idol worship in vedic age. I have already mentioned about Arsha scriptures and all that you have quoted belong to Arsha scriptures, which do NOT prescribe idol worship (I am aware of all those lines already and I can give you even more than those lines.). Arsha scriptures describe God as formless cosmic energy and praise God as posessing various qualities (later on, images/forms came into being in the form of idols and the system of idol worship started). Idol worship is a later development. All Anarsha scriptures created after vedic age only refer to idol worship. The original Srimad Vaalmeeki Ramayana and Vyasa Mahabharatam do NOT speak about Idol Worship (beware of interpolations! however, scholars can identify interpolations). But I do NOT find anything worng in idol worship because that is an easy method of worsip. I also do NOT find anything wrong if a person visualises God in any particular form according to his liking and worships God in that form. Exploitation of gullible people exisists in every field and therefore we need NOT think it is found in idol worship only (people are cheated even without any idol or image but in the name of religion and non-idol worship). I do NOT understand why Idol Worsship should be made an issue because, as for me, worshipping God is purely an individualistic personal matter and there should be freedom of choice in such matters. Also, division of caste has nothing to do with idol worship. Division of castes has to be seen from anthropological and social angles. It has got nothing to do with religion, under which comes system of worship. If you have access to Kalchuvadu Sep 2009 issoe, and if you wish, you can read my column under Ethir Vinai about Division of Castes and Hindu religion. Kalachuvadu is available on internet also with a separate website as kalachuvadu.com, I think.
    MALARMANNAN

  279. திருச்சி காரர் அவர்களே…

    கடவுள் உருவமற்றவர் என்று என்னால் நிருபிக்கமுடியாது என்பதை ஔஒத்துக்கொள்கிறேன். ஆனால் சிலைகளுக்கு சக்தி இல்லை என்பதை என்னால் நிருபிக்கமுடியும். நிருபிக்க வேண்டுமா…? தேவையில்லை அது உங்களுடைய புத்திக்கே தெரியும். ஏன் இந்த பாகுபாடு, நாம் இருவகுப்பாரும் நாத்திகத்தை ஏற்றுக்கொள்ளலாமா…? நம்மை கண்டு பயந்தோடும் பாம்பையும், குரங்குகளையும், நரி, கழுதை, கள் என்று வணங்குவதை விட பகுத்தறிவு வாதி என்று நற்பெயர் எடுக்கலாமே. ஆனால் அதற்கு யாரும் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள்.

  280. //ihiபிணமாக தொங்கும் இயேசு கிறிஸ்துவை வணங்குவது, துணை இல்லாத அல்லாவை வணங்குவது ஆகியவை தீய விளைவுகளை மனதில் தோற்றுவிக்கும்.

    பிரார்த்தனை மூலம் பல கிறிஸ்துவர்கள் நலம் பெற்றிருக்கலாம். (வணங்கப்படுவது இறைவனைத்தானே?)

    ஆனால், வெகு விரைவில் பிணமாகத்தொங்கும் இயேசுவை வணங்குபவர்கள் வீட்டில் துர் விஷயங்கள் நடப்பதை பார்க்கலாம். அல்லாவை வணங்குபவர்கள் மன நிம்மதி இழந்து அலைவதையும் பார்க்கலாம். ஆனால், மனதை இந்த துர்விஷயங்கள் ஆக்கிரமித்துவிடுவதால், அதிலிருந்து விடுதலை அடைவதும் எளிதானதல்ல. இன்னும் அதிகமாக வணங்கினால் சரியாகிவிடும் என்று நினைத்து உள்ளேயே முழுகி விடுகிறார்கள்.//

    நண்பர் பரிமேலழகரே
    என்ன எழுதுகிறோம் என யோசித்து தான் எழுதுகிறீரா??
    முதலில் பிணமாக தொங்கும் இயேசுவை வணங்குவது நல்லதல்ல என்கிறீர், பிறகு கிறித்தவர்கள் அதனால் நண்மைகள் பெற்றிருக்கலாம் என்கிறீர் அப்புறம் துர்சம்பவங்கள் நடைபெறும் என்கிறீர், இப்படி உமது ஒரு வாதத்திலேயே 3 முறை அந்தர் பல்டி அடித்திருக்கிறீர்.
    கிறிஸ்தவர்கள் பிணமாக தொங்கும் இயேசுவை வணங்குவதில்லை, உயிர்த்தெழுந்த இயேசுவை தான் வணங்குகிறார்கள், கடந்த 31 ஆண்டுகளாக இயேசுவை வணங்கியதால் நான் குறைவுபட்டு போகவுமில்லை. எனவே இப்படி அர்த்தமற்ற வாதங்களை முன்வைக்குமுன் கொஞ்சம் யோசித்து எழுதுங்கள்.

  281. அப்போ இந்து கடவுள்களை வணங்குபவர் வீட்டில் துர் விஷயங்கள் நடைபெறாது என்கிறீரா, தலை சுற்றுகிரது

  282. அன்புள்ள ராம் கோபாலுக்கு ,

    நீங்க உபநிஷடம் வேதம் எல்லாத்துல இருந்தும் மேற்கோள் காட்டி கடவுளுக்கு உருவம் இல்லை என்று எழுதி irukuringa பாராட்டுகள் . இதன் முலம் நீங்கள் ஆசை படுவது என்ன? இஸ்லாமை நிறுவ வேண்டும் என்ற இல்லை கிருஸ்தவம் நிறுவ வேண்டும் என்ற? எது செய்தாலும் இந்த கட்டுரையின் தலைப்புடன் ஒத்து போவது போலவே உள்ளதே!

    அன்புடன்,
    பிரதிப் பெருமாள்

  283. அன்புள்ள ராம் கோபாலுக்கு ,

    தெளிவா சொல்லுங்க நீங்க நாத்திகமா? ஆத்திகமா?

    சரி எப்பிடி இருந்தாலும் ஒரு கேள்வி, உருவம் இல்லாத கடவுளை எப்பிடி நெனைபிங்க? கொஞ்சம் vlakkamaga பதில் தந்த நான் கூட அந்த கடவுளை கும்பிட வசதியா இருக்கும். ஹிந்து மத கலப்பு இல்லாம சொன்ன ரொம்ப நல்லது

    சும்மா சும்மா சிலைக்கு சக்தி இல்லை, pampai kumbidathey, பல்லிyai kumbidatheynnu iyarkaiyai valipatta engalin munorgaliyum அதை thodarum engalaiyum keli pesa உங்களுக்கு நாம் urimai tharavillai.

    அனபுடன்,
    பிரதிப் பெருமாள்

  284. నేను తెలుగువదండి!

    మీరు మట్లదేతి నాకు అర్థం అవలేతు .తనికోసం కొంచం న పాషలో మాట్లాడతారా! నాకు గూడా కష్టంగా ఉన్తంది. ఇతి మతిరి వేరా మతం మన తేసంలో వంతు అరజగం సేసేతి.

    ప్రియంగా
    పురుషోత్తం నాయుడు

  285. // பரிமேலழகன் said
    இந்துமதத்தில் கடவுளாக வழிபடும் அனைவரும் குடும்ப சகிதராகவும் மலர்ந்த முகத்துடன் இருப்பது ஏன் என்று ஒரு ஜோதிட நண்பர் ஒருவரிடம் கேட்டேன். //

    // ஆனால், வெகு விரைவில் பிணமாகத்தொங்கும் இயேசுவை வணங்குபவர்கள் வீட்டில் துர் விஷயங்கள் நடப்பதை பார்க்கலாம். அல்லாவை வணங்குபவர்கள் மன நிம்மதி இழந்து அலைவதையும் பார்க்கலாம். //

    இது தவறான கருத்து.

    அன்னை காளியை உக்ர ரூபிணியாக பாரத நாடெங்கும் வணங்குகின்றனர். அவள் கபால மாலை சூடி அரக்கனின் துண்டித்த சிரத்தைக் கரத்தில் ஏந்தி உள்ள வடிவத்தை வங்கத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் காணலாம். மகிஷாசுர மர்த்தினியின் சிலா ரூபத்தில், தேவி சிம்மவாகினியாக மகிஷனை வதம் செய்ய அவன் செத்து வீழும் கோலத்துடனேயே உள்ளான். அதன் முன்பு நின்று வணங்கும் போது மகிஷனின் மூஞ்சியை மறைத்து விட்டா வணங்குகிறோம்?

    ஆன்மிக ரீதியாக இந்துத் திருவங்கள் அனைத்தும் தத்துவ உட்பொருள்களை உணர்த்தும் ஆழ்ந்த குறியீடுகள். அவற்றை வெளிவடிவத்தை மட்டும் கொண்டு புரிந்து கொள்ள முயல்வது அறியாமை.
    அறிவீனர்களான கிறிஸ்தவ பிரசாரகர்கள் காளி உருவத்தை “கொடூர சாத்தான்” என்று உலகெங்கும் பிரசாரம் செய்கிறார்கள்.

    ஆனால் கிறிஸ்தவ வடிவங்கள் பற்றி இப்படி சொல்ல முடியுமா? அதில் குறியீடுகள் இல்லை. நேரிடையாக இறந்து கிடக்கும் வடிவத்தைத் தான் வணங்குகின்றனர்.

    ஆபிரகாமிய மதங்களின் கருத்தியலை அவற்றின் நூல்கள், அதைப் பின்பற்றுவோர் செயல்கள் ஆகியவற்றை வைத்தே அறிவு பூர்வமாக இந்துக்கள் விமர்சித்து வருகிறோம். இப்படி பூச்சாண்டி காட்டி, பயமுறுத்துவது போன்ற கருத்துக்கள் வேண்டுமா? அதில் உண்மையிருந்தாலும் கூட.

  286. இந்த பல உருவ வழிபாட்டை இன்னொரு நிலையிலும் பார்க்க வேண்டும். ஒரு மார்கத்திற்கு ஒரே ஒரு உருவம் தான் கடவுள் என்று மொத்த பேரும் அந்த உருவத்தை வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பிரார்த்தனை நிரைவேறாமல் போனால், அந்த உருவத்தின் மீதான நம்பிக்கை குறையும் அதே நேரத்தில் அந்த உருவத்தை மையப்படுத்தும் மார்க்கத்தின் மீதும் நம்பிக்கை போய்விடும். ஆனால் இந்து தர்மத்தில் ஒரு உருவ தெய்வத்தின் மீது நம்பிக்கை போனால் கூட அவன் இன்னொரு உருவ வழிபாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்வான். அவனது நம்பிக்கை உருவத்தின் மீது தான் இல்லாமல் போகுமே ஒழிய அவன் பின்பற்றும் தர்மத்தின் மீது நம்பிக்கை போகாது. இதுவே இந்து தர்மத்தின் சூட்சுமம். அதாவது ஒரு மனிதன் எந்த உருவத்தின் வாயிலாக‌ வழிபட்டாலும் தத்துவமார்க்கமான தர்மத்தை கடைபிடிக்கும் வாழ்க்கைக்குள் வந்து விட வேண்டும் என்பதேயன்றி உருவ வழிபாடு மட்டும் முக்கிய நோக்கமல்ல.

    இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

    மேலும் விளக்கங்களுக்கு http://www.hayyram.blogspot.com

  287. hmm…very interesting debate.

    Mr.Ramgobal..a simple question….if i see your family photo and ask who are they, will you say ‘this is my mother, this is my father, this is my sister…” etc.. OR will you say ‘This is how my father looks, this is how my mother looks, this is how my sister looks…” etc????

    Naturally you will say the first and I will understand. If I am a ‘nakkal’ pervazhi then I will stress ‘IS THIS YOUR FATHER?’.Then you will realize my nakkal and say ‘its not my father but my fathers picture’.

    The same way the photo is the ‘uruvagam’ of a person, and the photo is not actually the person, idol is a ‘uruvagam’ of the devine and may not be devine by itself. but still when we are away and wanted to see our near and dear, we look at their photos and remember them. If you are really a ‘pagutharivala’ you should have never posed for a photo or look at your family members in the photo, because ‘pagutharivu’ says that the photo is not the actual person, then why look at the photo? Photo is just a rememberance and so is idol to remember god in a form. it can be any form, even a mile kal….’deviam endral athu deivam, silai endral athu siali than’.

    If you argue that the idol do not have the power to protect itself and hence it is not god, then it is similar to saying, the photo does not speak like your father and hence he is not your father. doesnt it sound stupid?

    yosinga sir…ana kutharkama yosikkatheenga….

  288. నేను తెలుగువదండి!

    మీరు మట్లదేతి నాకు అర్థం అవలేతు .తనికోసం కొంచం న పాషలో మాట్లాడతారా! నాకు గూడా కష్టంగా ఉన్తంది. ఇతి మతిరి వేరా మతం మన తేసంలో వంతు అరజగం సేసేతి.

    ప్రియంగా
    పురుషోత్తం నాయుడు

    நேனு தெலுகு³வாட​³\‍ம்டி³!

    மீரு மாட்​ல‌தெ³தி நாகு அர்​த‍ம் அவ‌லெது .த‌னிகோச​’\‍ம் கொ\‍ஞ்ச‌\‍ம் நா
    பாஷலொ மாட்​லாட​³தாரா!

    நாகு கூ³டா³ க‌ஷ்​ட‌\‍ம்கா³ உன்​‌\‍தி³. இதி மாதிரி வேரா ம‌த‌\‍ம் ம‌ன‌
    தேச​’\‍ம்லொ வ‌\‍ந்து அராஜக³\‍ம் செ’ஸேதி.

    // I am a Telugu guy

    I couldn’t understand what do you speak.. for that could you speak in my
    language??

    I am also feel pain..other religion guys came to our land doing
    atrocities..//

  289. நண்பர் திரு பரிமேலழகர் அவர்களே, நீங்கள் தவறான அல்லது இந்து கடவுள்களை அல்லது மொத்தமாக கடவுள் பற்றிய அரைகுறை அறிவு பெற்ற யாரிடமோ விளக்கம் பெற்று உள்ளீர்கள் என்பது நன்றாக தெரிகிறது, ஒரு நல்ல ஆசாரியாரிடம் தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள் அப்போதுதான் உங்களுக்கு நல்லது,
    நண்பர் ஜோசப் அவர்களே,
    // பிணமாக தொங்கும் இயேசுவை வணங்குவது நல்லதல்ல என்கிறீர்/// இந்த வரிகளை பாவம் பரிமேலழகர் யாரிடமோ தவறான செய்தியாக அறிந்து வெளியிட்டு விட்டார், தங்களை போன்றே எனக்கும் சற்று வருத்தம்தான், ஆனாலும் ஒன்றை நீங்கள் நன்கு யோசித்து பாருங்கள், யாரோ சொன்னதாக நண்பர் பரிமேலழகர் எழுதியது தங்கள் மனதை பாதித்ததும் உடனே கொஞ்சம் யோசித்து எழுதுங்கள் என்று அறிவுறுத்துகிறீர்கள். தங்கள் பதிவுகளினால் மற்ற மதத்தினர் புண்படும் என்று நீங்களும் நினைக்கவில்லை, அட நீங்களாவது கணினியில்தான் எழுதுகிறீர்கள் ஆனால் உமது நற்செய்தியாளர்கள் மேடை போட்டு இந்துக்கடவுள்களை கேவலப்படுத்துகிரார்களே.
    ” தலை வலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்”

  290. Dear Editor,
    Why do we have to allow the languages that many of us dont understant? I feel allowing tamil and English is good enough. Even, if you insist, I also will try to type in Tamil, because it is a tamil forum. Please consider this.

    Your Brother,
    Ashok

  291. பரிமேலழகர் சொல்வதில் உண்மை இருக்கிறது என்றே கருதுகிறேன். ஜடாயு சொல்வதிலும் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனால், அது சரிவர சொல்லப்படவில்லை.

    காளியை கும்பிடுபவர்கள் உக்கிரமான தெய்வ உருவை வணங்குகிறார்கள். ஆனால், மகிஷனின் உருவம் அழிக்கப்பட்ட தீமை. மகிஷனின் உருவத்தை வணங்குவதில்லை. வணக்கம் காளிக்கே. ஆனாலும் அது தாய் தெய்வம். அது அநீதியையே அழித்து மக்களை காப்பாற்றுகிறது. சரஸ்வதியை வணங்குபவர்கள் கல்வியை வணங்குகிறார்கள். லட்சுமியை வணங்குபவர்கள் செல்வத்தை அடைகிறார்கள். அனைத்திலும் உள்ளே உறைவது பரம்பொருளே.
    (ஜோஸ‌ப்புக்கு: குஷ்புவை வ‌ண‌ங்கினாலும் உங்க‌ளுக்கு 50 சதவீத‌ பிரார்த்த‌னைக‌ள் நிறைவேறும். முய‌ற்சித்துப்பாருங்க‌ள். அந்த‌ ச‌த‌வீத‌ம் இயேசுவை வ‌ண‌ங்கினாலும் அதே)

    ஆனால் பிண‌த்தை வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ள் குழ‌ப்ப‌த்தையே அடைகிறார்க‌ள். வீட்டில் கூட‌ ம‌றைந்த‌ நிலையில் ப‌ட‌ம் எடுக்க‌வோ அத‌னை வ‌ண‌ங்க‌வோ செய்ய‌மாட்டார்க‌ள். உயிரோடு இருக்கும்போது எடுத்த‌ ப‌ட‌த்தையே வ‌ண‌ங்குவார்க‌ள்.

    இயேசு சிலுவையில் தொங்குவ‌து போல‌ இருப்ப‌து பிண‌மே. ‌ அவ‌ர் சிலுவையில் இற‌ந்து கிட‌க்கும் உருவ‌மே எல்லா ச‌ர்ச்சுக‌ளிலும் மூல‌ஸ்தான‌ங்க‌ளில் இருக்கிற‌து. அவ‌ர்க‌ள்

    50. அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
    And they all forsook him, and fled.
    51. ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.
    And there followed him a certain young man, having a linen cloth cast about his naked body; and the young men laid hold on him:
    52. அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களைவிட்டு ஓடிப்போனான்.
    And he left the linen cloth, and fled from them naked.
    மாற்கின் 14ஆம் அதிகாரத்தில் நிர்வாணமான ஒரு சிறுவன இயேசுவுடன் இருந்தது வருகிறது. இந்த இடத்தில் மாற்கில் முக்கியமான பகுதி கத்தோலிக்க சர்ச்சினால் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனாலேயே கத்தோலிக்க சர்ச் பாதிரிகள் சிறுவர்களை வன்புணர்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. வாடிகனில் மட்டும் 6000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வன்புணரப்பட்டுள்ளார்கள் என்று அஸோஸியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ தமிழ் சிறுவர்கள் இப்படி சிதைக்கப்பட்டார்களோ தெரியவில்லை.

    இதே போலவே உக்கிரமான தவறான தெய்வ‌ பிம்பத்தை வணங்கும் முஸ்லீம்கள் உக்கிரமான தவறான பாதையிலேயே செல்கிறார்கள். பொறாமையான கடவுள், என்னைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்று தன்னம்பிக்கயற்ற வரிகள் எப்படி கடவுளின் வாயிலிருந்து வரும் என்று இவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

  292. ஏன் எல்லோரும் பரிமேலழகர் அவர்களைப் போட்டுத் காய்ச்சுகுகிறீர்கள்?

    நானும் இயேசுவின் மேல் மரியாதை உள்ளவன்தான், ஏசுவையும் வணங்குபவன் தான்! இயேசுவை வணங்கும் போது அவர் சிலுவையில் அறையப்பட்ட வடிவத்தை விட வேறு பல வடிவங்களில் ஒன்றை உபயோகப் படுத்துவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் நான் கூறியது என்னை பற்றித்தான்.

    நான் “யாரும் சிலுவையில் தொங்கும் இயேசு கிறிஸ்துவை வீட்டில் வைக்கக் கூடாது, வழி படக் கூடாது” என்று சொல்ல வரவில்லை. அது அவரவர் விருப்பம்

    பரிமேலழகர் கூற வந்த விஷயம் தவறு என்று கூறப் பட முடியாது . ஆனால் கூறிய முறை கொஞ்சம் ஓவராகி விட்டது.

    அவர் கருத்தைக் கூற அவருக்கு உரிமை இல்லையா?

  293. வணக்கம்,

    //கடவுள் உருவமற்றவர் என்று என்னால் நிருபிக்கமுடியாது என்பதை ஔஒத்துக்கொள்கிறேன். ஆனால் சிலைகளுக்கு சக்தி இல்லை என்பதை என்னால் நிருபிக்கமுடியும். நிருபிக்க வேண்டுமா…?//

    ஸ்ரீ ராம் கோபால் அவர்களே நீங்கள் நினைக்கும் எந்த சக்தியும் சிலைகட்கு இல்லை என்பது உண்மையே, எந்தெந்த சிலைகட்கு என்னென்ன சக்தி உள்ளது என்பது சித்த ரகசியம், ஆனால் அந்த ரகசியங்கள் ரகசியமாகவே இருப்பதுவே நல்லது, ஆனால் எல்லா சிலைகளும் சக்தி உள்ளதா என்றால் இல்லை என்பதுவே என் பதில்.

    மேலும் நீங்கள் வேதத்திலிருந்து ஆதாரம் கேட்பது என்பது மற்றைய மதங்கள் போல் வேத நூல்கள் மட்டுமே இந்து தர்மத்தின் அடித்தளம் என்ற கருத்துக்கொண்டு உள்ளீர்கள், அதனால்தான் அதிலிருந்துதான் ஆதாரம் வேண்டுமென்கிறீர்கள், ஆனால் உங்களின் எண்ணம் தவறானது. வேதங்கள் இந்து தர்மத்தின் ஆதார தூன்கலேயன்றி அடித்தளமல்ல
    .
    மேலும் சக்திகளை விடுங்கள் இந்த தளத்தில் பலரும் பல விளக்கங்கள் கொடுத்து விட்டார்கள், நண்பர் ஸ்ரீ ஜடாயு விளக்கமாகவே எழுதியுள்ளார். சிலைகள் இறைசக்திக்கான ஒரு உருவகம் என்று. சிலைகள் பேசாது நடக்காது ஆனாலும் நாங்கள் சிலைகளை வழிபடும் அணுகுமுறை என்பது இறைவனுக்கும் எமக்குமான நெருக்கத்தை ஏற்படுத்துவதை உணர்ந்தே வழிபாடு செய்கிறோம் என்பதை நானும் ஏற்கனவே பதித்துள்ளேன். எனினும் நீங்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?

    இந்து தர்மத்திலே உருவ வழிபாடு என்பது மட்டுமில்லாது, அருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு , குரு வழிபாடு, ஜங்கம வழிபாடு, ஜோதி வழிபாடு, என பல்வகை வழிபாடுகள் உள்ளன, யாரும் அவரவர் தன்மைக்கு ஏற்ப வழிபடும் முறைகளை வகுத்து வைத்து உள்ளனர். கிருஸ்துவத்திலும் இயேசு உருவத்தின் முன்னே மண்டியிட்டு வணங்குவதில்லையா, இஸ்லாமிலும் தர்காவில் சமாதிகளின் முன்னே வணங்குவதில்லையா?

    தாங்கள் வெளிப்படையாக சிலைகள் என்று மட்டும்தான் பார்க்கிறீர்கள் அவைகள் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான தத்துவங்களை குறிக்கும் குறியீடுகள், பிரம்ம ரகசியத்தை சங்கேத வார்த்தைகளால் குறிப்பிடுபவை, அவற்றை யோகியாரின் பார்வையோடு நீங்கள் பார்த்தலன்றி தங்களுக்கு யார் என்ன சொன்னாலும் புரியாது.

    //ஆன்மிக ரீதியாக இவ்வுருவங்கள் அனைத்தும் தத்துவ உட்பொருள்களை உணர்த்தும் ஆழ்ந்த குறியீடுகள். அவற்றை வெளிவடிவத்தை மட்டும் கொண்டு புரிந்து கொள்ள முயல்வது அறியாமை.//

    நண்பர் ஸ்ரீ ஜடாயுவின் இந்த வரிகள் முற்றிலும் உண்மையான கருத்துக்கள். வேண்டுமானால் இந்தப்பாடலை நினைத்துக்கொள்ளுங்கள் ” கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது “.

    அதை போலவே பாம்பும், மற்றும் குரங்கு, கருடன் என எல்லாமே இறை சக்தியின் பலவிதமான குறியீடுகள். நண்பரே உண்மையில் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது போல் பல விஷயங்கள் உண்மையில் அந்த குறியீடுகளை தவறாக புரிந்து கொண்டதன் வெளிப்பாடுகள். எனவே புரியாத மக்கள் தவறாக செய்யும் செயலை கணக்கில் கொள்ளாமல் ஏன் பாம்பை சிலை செய்து வைத்து உள்ளார்கள் என்று சிந்தனை செய்து பாருங்கள், அல்லது நேர்மையான உண்மையான அணுகுமுறையோடு விவரம் தெரிந்த குரு மார்களிடம் தெளிவு பெறுங்கள்.

    பின்குறிப்பு: உண்மையில் நீங்கள் இந்துவாக இல்லாவிட்டாலும், இதற்காக மதம் மாற தேவை இல்லை. மானுட ரகசியங்களை நல்லவர் யாராகினும் அறிதல் நலமே

  294. அய்யா உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர்களே
    முதலில் உங்கள் நண்பர்களான பகுத்தறிவு சிங்கங்களை கேளுங்கள்.
    அவர்கள் வைத்து மாலையிட்டு மரியாதை செய்யும் தலைவர்கள் சிலைகளுக்கு சக்தி உண்டா இல்லையா என்று.
    எளிய மக்களால் வணங்கப்பட்ட மூர்த்திகளை[ சிலைகள் அல்ல]உடைத்தவர்களுக்கே சிலை !
    நல்ல பேச்சில் நம்பிக்கையில்லாத மனிதர்களிடம் உங்கள் கருத்துக்களை திணித்துப்பாருங்களேன்.

  295. RAMGOBAL அவர்களே,

    நீங்களும் நானும் சில நண்பர்களுடன் சில குழுக்களாக ஒரு பெரிய காட்டின் முன் நிற்கிறோம்.

    அந்த நெடிய காட்டைக் கடந்து செல்ல சில வழிகள் உள்ளன.

    நாம் இருவரும் அந்தக் காட்டினுள் இது வரை போனதில்லை.

    எந்த வழி சரியான வழி என்று தெரியாமல் திகைத்து நிற்கும் போது, ஒருவர் உங்களிடம் வந்து ஒரு வழியைக் காட்டி, இந்த வழியில் போ என்று காட்டி விட்டு செல்கிறார்.

    இன்னொருவர் வந்து என்னிடம் வேறு வழியைக் காட்டி, இந்த வழியில் போ என்று காட்டி விட்டு செல்கிறார்.

    நாம் பயணத்தை ஆரம்பித்து அந்தந்த வழியில் போய் காட்டைக் கடக்கப் போகிறோமா அல்லது – என் வழிதான் சரியான வழி, என் வழி மட்டுமே சரியான வழி – என்று சண்டையிட்டுக் கொள்ளப் போகிறோமா?

    நான், உங்கள் வழி தவறானது என்று ஒரு போதும் சொல்லவில்லை!

    உருவமில்லாத கடவுள் நிலையை நீங்களும் பார்த்தது இல்லை. உருவம் உள்ள கடவுள் நிலையை நானும் பார்த்தது இல்லை.

    நம்முடைய நோக்கம் இந்த பெரிய , கடினமான உலக வாழ்க்கைக் காட்டைக் கடப்பதுதான். கடந்த பின் அங்கே நம்மை வரவேற்ப்பது உருவமில்லாத கடவுளா, அல்லது உருவம் உள்ள கடவுளா என்று அப்போது பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?

  296. கிறித்துவ துறவிகளில் stigmata என்று சிலரைச் சொல்லுகிறார்கள். அல்போன்ஸா என்னும் பெண் துறவி அத்தகையவர் என்று கூறப்படுகிறார். இயேசு கிறித்து சிலுவையில் அறையுண்டபோது அவருடைய உடலில் எங்கெங்கு புண்ணாகிக் குருதி ஒழுகியதோ அப்புண்களில் ஒன்றிய மனத்தினராய்த் தியானமும் செபமும் செய்தமையால் தங்கள் உடலிலும் அத்தகைய புண்கள் உண்டாகப் பெற்றவர்களே ‘ஸிடிக்மேடா’ என்று அழைக்கப்பெறும் சிறப்பினைப் பெற்றதாகக் கூறப்பெறுவர்.
    இதனால் யாரொருவர் எதனை மனமொன்றித் தியானிக்கின்றனரோ, அதன் இயல்பைப் பெறுவர் என்ற நம்பிக்கை கிறித்துவத்தில் உண்டெனத் தெரிகின்றது. செபமும் தியானமும் இந்துக்களின் அனைத்துப் பிரிவினரிடமும் நித்திய கடமையாக விதிக்கப்பட்டுள்ளது.
    இறை அல்லது கடவுள் என்பது,அருவமுமன்று உருவமுமன்று அருவுருவமுமன்று.ஆணுமன்று,பெண்ணுமன்று; உயர்திணையும் அன்று; அஃறிணையுமன்று. இவற்றில் எதுவும் அல்லாமையே இறையின் உண்மை நிலை. அருவம், உருவம், அருவுருவம் என்பன உயிர்கள் தன்னை அறிந்து உய்யவேண்டும் என்ற கருணையால் இறை தன்னைக் காட்டிக் கொள்ளும் வடிவம். இது தடத்தநிலை என்று சாத்திரங்கள் கூறும். இந்த வடிவங்களை விளக்கும் தியான சுலோகங்கள் தமிழிலும் வடமொழியிலும் உண்டு. உருவங்களை வடிக்கும் சிற்ப சாத்திரங்களிலும் உண்டு. சுருக்கமாக எல்லா வடிவங்களும் இறையின் எண்குணங்களான 1.முற்றறிவு 2.வரம்பிலின்பம் 3.இயற்கையுணர்வு 4. தன்வயம். 5.குறைவிலாற்றல் 6. வரம்பிலாற்றல் 7.பேரருளுடைமை 8.தூயவுடம்பினனாதல். என்பனவற்றின் அடையாளங்கள் அல்லது குறியீடுகள். இந்த எட்டிலும் பேரருளுடைமையே இறையின் பெண் அல்லது சத்தியாகப் போற்றப்படுகின்றது.

    ஒருவன் புறத்தே வழிபடவும் உள்ளத்தில் வைத்துத் தியானிக்கவும் மந்திரமாகச் செபிக்கவும் திருவுருவம் இன்றியமையாதது.வடிவமில்லாத ஒன்றைப் பாவிப்பது பொய்ப்பாவனையாகவும் போலிப்பாவனையாகவுமே இருக்கும். இந்துக்கள் வழிபடும் இறைவடிவங்கள் உருவமாக இருந்தாலும் அருவமாக இருந்தாலும் மந்திர வடிவமாக இருந்தாலும் மேற்கூறிய எண்குணங்களின் பருவடிவங்களேயாகும். அழகிய வடிவங்களிலேயே மனம் தங்கும். இந்து வழிபடும் உருவங்கள் அனைத்தும் அழகிய கலை வடிவங்கள்.

    இறைமைக் குணங்களான எண்குணங்களை பருவடிவமாகத் தியானித்து வழிபட்டுப் பயன்பெறுதலே சிறந்தது. ‘ஸ்டிக்மேடா’ போல உடலில் குருதிப் புண் பெற்று defeated, apolegetic appearance’ பெறுதலில் என்ன மகிழ்ச்சி? என்ன பயன்?

    63 சைவ நாயன்மாரில் சேரமான் பெருமாள் எனும் மலையாள நாட்டு மன்னரும் ஒருவர். அவருக்கு ‘வண்ணானைக் கும்பிட்டார்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அவர் ஒருநாள் பட்டத்து யானையின் மத்தகத்தில் பவனி வரும்போது ஒரு வண்ணான் உவர்மண்ணைத் தலைமேல் வைத்துக் கொண்டுவந்தான். கேரளநாட்டில் திடீரென மழை பெய்யும்; உடனே வெய்யிலும் அடிக்கும். அந்த முறையில் மழையில் கரைந்த உவர் மண் வெயில் புலர்ந்து வண்ணானின் மேனி முழுதும் வெண்மையாகப் பரவியிருந்தது. வண்ணானை அந்தக் க்கோலத்தில் பார்த்த சேரமான் யானையை விட்டு இறங்கி வண்ணானை நோக்கி வீழ்ந்து வணங்கினார். அச்சமும் கலக்கமும் அடைந்த வண்ணான், சேரமானை நோக்கி, ‘அடிவண்ணான்’ என்றான். சேரமான், ‘வாரவேடம் நினைப்பித்தீர், கலங்காதேகும்’ என்று மறுமொழி கூறினார். அதாவது, ‘நீ வண்ணான் என்பதனை நான் அறிவேன், உன்னுடைய உவர்மண் பூசிய கோலம் திருநீற்று மேனியனான எம்பெருமானை நினைப்பூட்டியது. நான் எம்பெருமானைக் கண்டு, நினைந்து வணங்கினேன். ஆதலால் நீ அச்சமின்றி வழிச் செல்க’ என்றார்.

    சேரமன்னர் வண்ணானைக் கும்பிட்ட மனநிலையே இந்துக்கள் செய்யும் உருவ வழிபாடு. திருக்கோவிலில் இருப்பது கல் என்பது நன்கு தெரியும். அடியவர்கள் நம் போன்ற மக்களே என்பதும் நன்கு தெரியும். எங்கும் வியாபகமாக ‘விஸ்வாதீதனாக’, எவற்றினுள்ளும் ‘விஸ்வாந்தர்யாமியாக’ இருக்கும் இறைவன் அடியவர்கள் வழிபடும் பொருள்களில் வந்து வழிபாட்டை ஏற்றுக் கொள்கின்றான். எல்லா இடத்திலும் வியாபகமாவும் எல்லாப் பொருளிலும் கலந்தும் இருக்கும் இறைவன் நான் வணங்கும் பொருளிலும் இடத்திலும் வாராமல் இருப்பானோ? ‘எங்கு தட்டினாலும் ‘அவன் ஏனென்று கேட்டுத் திறப்பான். எங்கு கேட்டாலும் கொடுப்பான்.

    கதவிடுக்கில் சிக்கி நசுக்குண்ட பல்லிபோலிருக்கும் சிலுவையில் அறையுண்ட இயேசு எப்படி தியானப் பொருளாக இருக்க முடியும்?

  297. முனைவர் கோ. ந. முத்து குமார சாமி ஐயாவின் கருத்துக்களுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.

    தமிழ் சைவ முறையிலே, மிகச் சிறந்த கருத்துக்கள் உள்ளன. ஆனால் சிவ பெருமானை வணங்குவது தவிர, நாயன்மார்களின் சில பாடல்களைத் தவிர,
    நாம் அதிக அளவில் அறியாமல் இருக்கிறோம்.

    இந்த இறைவனின் 8 qualities// 1.முற்றறிவு 2.வரம்பிலின்பம் 3.இயற்கையுணர்வு 4. தன்வயம். 5.குறைவிலாற்றல் 6. வரம்பிலாற்றல் 7.பேரருளுடைமை 8.தூயவுடம்பினனாதல்// நான் இது வரை கேட்டு இராதது.

    தயவு செய்து ஐயா அடிக்கடி எழுத வேண்டும்.

    ஐயா சைவ சிந்தாந்தம் பற்றி ஆதியோடந்தமாய் நமக்கு விளக்க வேண்டும். அதிக நாள் பிடிக்கும். ஆனாலும் அவ்வப் போது சிறிது சிறிதாகவாவது இங்கே எழுத வேண்டும்.

  298. சிறுவயதில் நண்பர்களுடன் சர்ச்சுக்குப் போயிருக்கிறேன். எனக்கும் பரிமேலழகர் சொல்வதைபோல சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் பிணத்தைப் பார்த்து பயம்தான் ஏற்பட்டது. விபத்தில் கோரமாய் செத்துப்போன யாராவது மூதாதையர்களை கும்பிடும்போது கூட நம் மதத்திலே அவரின் நல்ல மங்கலகரமான படத்தை வைத்து அதில் சந்தனம் குங்குமம் வைத்து மலர்மாலை சாத்தி அல்லவா கும்பிடுகிறோம். எப்படி கோரமாய் செத்தாரோ அப்படியே அந்த வடிவத்தையே கும்பிடுவோம் என்று சொல்வது ஒருவகை விபரீதமாகவும் வக்கிரமாகவும் தோன்றுகிறது.

  299. Dear Mr. Anbarasn,

    //(ஜோஸ‌ப்புக்கு: குஷ்புவை வ‌ண‌ங்கினாலும் உங்க‌ளுக்கு 50 சதவீத‌ பிரார்த்த‌னைக‌ள் நிறைவேறும். முய‌ற்சித்துப்பாருங்க‌ள்)//

    மிகவும் போல்டாக கருத்து தெரிவித்து இருக்கிறீர்கள்!

  300. இங்கே ராம்கோபால் என்று எழுதியுள்ளவர் ஒரு முஸ்லீம். இவர் இந்துவாக இருந்திருக்கமுடியாது. இவரது அனைத்து வாதங்களும் அப்படியே இஸ்லாமிய பிரச்சாரத்திலிருந்து வந்துள்ளன.

    இவ‌ர் இந்துவாக‌ இருந்திருந்தால், சில‌ இந்தும‌த‌ அடிப்ப‌டைக‌ளை தெரிந்திருப்பார். உதார‌ண‌மாக‌ இறைவ‌ன் உல‌குக்கு வெளியே இல்லை. தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். அணுவுக்குள்ளும் ஆட்டுவிக்கும் இறைவ‌ன். வானாகி ஒளியாகி ஊற்றாகி எங்கும் நீக்க‌ம்ற‌ நிறைந்திருக்கும் இறைவ‌ன் என்ப‌தை இவ‌ர் அறியாம‌ல் இருக்க‌ முடியாது.

    அப்ப‌டி எங்கும் நீக்க‌ம‌ற‌ நிறைந்துள்ள‌ இறைவ‌ன் எப்ப‌டி சிலையினுள் இல்லாம‌ல் போவான்? சிலைக்குள் இறைவ‌ன் இல்லை என்றால், அங்கு என்ன நடக்கிறது என்று இறைவனின் உள்ளம் அறியாதா? இறைவனின் உள்ளம் எல்லாம் அறியும்தானே? அப்போது இறைவனின் உள்ளம் அந்த சிலைககுள் புகுந்துதானே உள்ளது? இறைவனின் உள்ளம் இருக்குமிடம் எப்படி இறைவன் இல்லாத இடமாகும்?

    சிலையை உடைத்தால் இறைவ‌ன் உடைந்துவிடுவானா? அணுவுக்குள்ளும் அணுவாக‌ அம‌ர்ந்திருக்கும் இறைவ‌ன் எப்ப‌டி சிலையை உடைத்த‌தும் உடைவான்?

    விக்கிர‌க‌த்தை உருவாக்குவ‌து ம‌னித‌ ம‌ன‌ம். ஆனால், விக்கிர‌க‌த்தை புரிந்த‌தும் ம‌னித‌ ம‌ன‌மே. பிர‌ப‌ஞ்ச‌ம் பிர‌ப‌ஞ்ச‌மாக‌ விரிந்துள்ள‌ அனைத்திலும் நீக்க‌ம‌ற‌ நிறைந்துள்ள‌ இறைவ‌னுக்கு, ராம்கோபால் என்ற‌ பெய‌ரில் எழுதும் முஸ்லீம் சிலையை உடைத்தால் கோப‌ம் வ‌ந்துவிடுமா? அவ்வ‌ள‌வு கையாலாக‌தவ‌ரா க‌ட‌வுள்?

    உதார‌ண‌த்துக்கு ஒன்று சொல்கிறேன். தாயை ஒரு சிறு குழந்தை க‌ம‌ர்க‌ட்வாங்கித்த‌ர‌வில்லை என்று அடிக்கிற‌து. கோப‌ம் கொண்டு அந்த‌ தாய் அந்த‌ குழ‌ந்தையை எண்ணெயில் போட்டு வ‌றுப்பாளா? ஒரு சாதார‌ண‌ தாய்க்கு இருக்கும் அன்பு கோடானுகோடி பிர‌பஞ்ச‌ங்க‌ளின் தாயான‌ க‌ட‌வுளுக்கு இல்லாம‌ல் இருக்குமா?

    ஆனால், இவ‌ர்க‌ள‌து அல்லா பூமியில் இல்லை. ஏழு வான‌ங்க‌ளை க‌ட்டி அத‌ன் மீது அர்ஷ் என்னும் சிம்மாச‌ன‌ம் வைத்து உட்கார்ந்திருக்கிறார் என்று ம‌ட‌த்த‌ன‌மாக‌ இவ‌ர்க‌ள் ந‌ம்புகிறார்க‌ள். மாலையில் சூரிய‌ன் ம‌றைந்த‌தும் அல்லாவின் அர்ஷின் கீழ் அடுத்த‌ நாள் சூரிய‌ உத‌ய‌ம் செய்ய‌ அனும‌தி கேட்கிற‌து என்று சொல்கிறார்க‌ள். இது ரொம்ப‌ ப‌குத்த‌றிவோ? இன்னும் உல‌க‌ம் த‌ட்டை. பூமியை சூரிய‌ன் சுற்ற‌வில்லை.சூரிய‌ன்தான் பூமியை சுற்றுகிற‌து என்று விவாதித்துக்கொண்டிருக்கிறார்க‌ள் இவ‌ர்க‌ள். ந‌பி த‌ன்னிட‌ம் அல்லா உலகம் தட்டை என்று சொன்னார் என்று ரீல் விட‌ ஆர‌ம்பிப்ப‌த‌ற்கு முன்ன‌ரே ஆரிய‌ ப‌ட்டா உல‌க‌ம் உருண்டை என்று புத்த‌க‌ம் எழுதிவிட்டார் என்ப‌து இந்த‌ போலி ராம்கோபால்க‌ளுக்கு தெரியுமா?

    இந்த மடத்தனமான வாதங்களை மீண்டும் மீண்டும் இஸ்லாமிய பேச்சாளர்கள் பேசுகிறார்கள். என்ன‌ ச‌கிப்புத்த‌ன்மை கார‌ண‌மாக‌வோ இந்த‌ உள‌ற‌ல்க‌ளை அனும‌தித்துக்கொண்டிருக்கிறோம்.

  301. I really wonder how these anti-idol worshipers are so stupid. The Christ in the cross or the mary is in form of a statue in the church and they pray to that statue. So they are also idol worshipers. Muslims pray towards mecca where there is a stone structure. So it is also a form of idol. Only difference is they pray to one or two idols where as Hindus worship more than one or two idols. So why do they make so much fuss and try to fool the world.

  302. திருச்சிகாரரே..

    இவர்கள் அறிவு பெற நான் விரும்புகிறேன் ஆனால் நீங்களோ… அதை விரும்பவில்லை. பரவாயில்லை. நம் இருவரின் கருத்துகளை பார்த்து மக்கள் அறிவு பெறுவதை ஏன் நீங்கள் விரும்பவில்லை.

  303. அன்பரசன் அவர்களே

    என்னை காரணகாட்டி முஸ்லிம்கள் பற்றிய உங்கள் கருத்து சிறந்தது. இன்னும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

    எனது கருத்துக்களை கூற இத்தளம் எனக்கு முழு அனுமதி அளித்துள்ளது. இந்துக்கள், கிருஸ்துவர்கள், நாத்திகர்கள் இவர்கள் அனைவரிலும் இஸ்லாத்தில் விரும்ப தக்க கருத்து பல உள்ளது. இருப்பினும் முஸ்லிம்களிலும் சாமதியை வணங்கிக்கொண்டும், சிலர் கோயிலுக்கும் செல்கின்றனர், நாகூர் போன்ற சமாதி வழிபாட்டு தளங்களில் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றும் பிணந்திண்ணிக்கள் இருக்கின்றன. இவற்றை முஸ்லிம் மக்களே கூறுகின்றனர்.

    எனது கருத்தை மற்றவர் கேட்டுவிடுவார்களோ… என்று பயப்பட வேண்டாம்.

  304. Dear Friends,
    It is a shame to know that as Indians we have lost our unity because of religion. As a Christian I would like to say that every religion and faith should be respected and be equally treated.
    Nobody in this world is perfect to blame the other.
    Forcible conversion is wrong. Christ never said that covert everybody as Christians but he taught people to follows his ways. Christians cannot expect others to covert to get benifits. It is wrong to criticize other Gods. There are many things those happen within Christianity which the bible does not support.
    At the same time one should not have an aversion or hostility against Christianity by seeing some so called Christians.
    I suggest that Christians should read Hindu Vedas and Upanishads and Hindus should read the bible so that we will know the values of other religions. One should not restrict any language to any one particular religion.
    I do not see anything wrong if a christian tries to associate himeself or uses certain terms which Hindus does. I think that shows the respect one has for Hinduism.
    Above all we as humanbeings should realize we are governed by one God and we are all His children. We are Indians

  305. அய்யா வணக்கம்

    இங்கு சிலர் உருவ வழிபாடு பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    அய்யா ஒரு உதவி வேண்டுமாலும் நாம் யாராவது ஒருவரை பார்த்து தான் கேட்க வேண்டும் அது போலதானே இதுவும். யாருமே இல்லாத இடத்தில அமர்துகொண்டு எனக்கு உதவுங்கள் உதவுங்கள் என்றால் யார உதவுவது.

    நம்மை படைத்தது இறைவன் என்றல் நம்மக்கே உருவம் இருக்கும்போது ஏன் இறைவனுக்கு இருக்க கூடாது ?. உருவம் இல்லாத இறைவன் நம்மை எப்படி உருவத்துடன் படைக்க முடியும் ?. அப்படி என்றல் இறைவன் பொய்யா படைப்பு பொய்யா ?

    ஏன் ஆளே இல்லாத கடைக்கு டீ போட்டு கொண்டு இருக்கிரீர்கள்,

    somthing is better than nothing.

    இவன்
    D.J. Yuvaraj

  306. திரு ஜோசப் அவர்களுக்கு

    இது எனது சிறு விண்ணப்பம் நான் சர்ச்சுக்கு செல்லும்போது அங்கே உள்ள சில சிலுவைகளின் மேலே INRI என்ற எழுத்து பொறித்துள்ளது இதற்கு முழு அர்த்தம் தெரியவில்லை இதை அறிந்துகொள்ளும் எண்ணத்துடன் தான் கேட்கிறேன் . இதற்க்கு திரு ஜோசப் அவர்கள் மட்டுமல்ல வேறு யாருக்காவது தெரிந்தாலும் விளக்கவும் .

    இது தெரிதுகொள்ளும் ஆர்வத்துடன் மட்டுமே ?

  307. நண்பர் அன்பரசன் அவர்களே !

    சும்மா போட்டு தாக்குறிங்க! விளாசுங்க! எனக்கு ரொம்ப நாட்களாக இருந்த ஆதங்கம் எல்லாம் இங்க வேடியுதுக!

    எனக்கு இன்னொரு கேள்வி கேக்கணும் இந்த ராம்கோபால் மாதிரியான முஸ்லிம் கிட்ட!

    உங்க quran புஸ்தகத்துக்கு ரொம்ப பவர் இருக்காங்க? நான் அதை எரிக்கலாம்னு இருக்கேன். அந்த புக் தன்ன கப்பதிகுமன்னு பாக்கணும். கடவுளோட வாய்ஸ் இல்லையா அது?.

    யோசிங்க ராம்கோபால் .

    அன்புடன்
    பிரதிப் பெருமாள்

  308. நண்பர் ஜோசப் அவர்களே,

    நீங்கள் எம் அதே வேதங்கள் குஉறி உள்ள சிவனை,முருகனை,கணேஷனை, விஷ்ணுவை மேலும் உள்ள முப்பது முக்கோடி தேவர்களை ஏற்று கொள்ளுங்கள். அப்படி ஏற்பிர்களே ஆனால் நாங்களும் தத்துக்கு பிதுக்கு என்று நீங்கள் எங்கள் வேதத்தில் சொல்லி இருப்பதாக ஜல்லி அடிக்கும் கதவிடுக்கில் சிக்கி நசுக்குண்ட பல்லி போலிருக்கும் சிலுவையில் அறையுண்ட இயேசுவை ஏற்க முயற்சி செய்ய உள்ளேன்.

    அன்புடன்
    பிரதிப் பெருமாள்

  309. நண்பர் ramgopal அவர்களே,

    உங்க quran புஸ்தகத்துக்கு ரொம்ப பவர் இருக்காங்க? நான் அதை எரிக்கலாம்னு இருக்கேன். அந்த புக் thannai kaapaatri kolluma என்று பாக்கணும். கடவுளோட வாய்ஸ் இல்லையா அது?.

    அன்புடன்
    பிரதிப் பெருமாள்

  310. Dear Mr. Clem,

    //At the same time one should not have an aversion or hostility against Christianity by seeing some so called Christians//

    I think 99.999% of Christinas brlive that “என்னுடைய கடவுள் மட்டும்தான் ஜீவனுள்ள கடவுள், பிறரின் கடவுள்கள் எல்லாம் ஜீவன் இல்லாத கடவுள்கள்”!

    I dont know why I said that 99.999% percent instead of 100% . I leave the 0.001% for any one whom I am yet to met!

    நான் இப்போது உங்களிடம் வெளிப்படையாக ஒன்றைக் கேட்கிறேன்.

    நான் உங்களுடன் சேர்ந்து இயேசு கிறிஸ்துவின் முன் மண்டியிட்டு வணங்கவும், அவரிடம் ஜெபிக்கவும், நான் செய்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்க்கவும் தயார்!

    அதைப் போல நீங்கள் என்னுடன் இராமர் கோவிலுக்கோ , சிவன் கோவிலுக்கோ வந்து வணங்கத் தயாரா?

    தியாகம் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இராமர்! நல்ல கொள்கைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் தன்னை மறுத்து, பிறருக்காக தான் கஷ்டங்களை சுமந்து , தன் வாழ் நாள் முழுவதும் கடுமையான துன்பத்தை அனுபவித்தவர்.

    சிவன் எல்லோரின் நன்மைக்காக விஷம் அருந்தியவர்.

    அவர்களை வழிபட இந்தியாவில் உள்ள கிருஸ்துவர்களுக்கு என்ன கஷ்டம்?

    ஏன் எனில் “எம்மமதமும் சம்மதம், மதச் சார்பின்மை” இதை எல்லாம் இன்றைக்கு யாரவது கடைப் பிடிக்க தயாராக இருக்கிறார்கள் என்றால் அது இந்து மட்டுமே!

    நல்லவனாக இருக்க வேண்டிய கட்டாயம் இந்துவுக்கு மட்டுமே!

    எல்லோரும் கக்கும் விசத்தை எடுத்து, எங்கள் தொண்டையில் வைக்க வேண்டிய நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்.

    இயேசு கிறிஸ்து சகிப்புத் தன்மையை, விட்டுக் கொடுக்கும் தன்மையை வலியிருத்திக் கூறியுள்ளார்.

    “ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தப் படுத்தினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ” என்று கூறியுள்ளார் இறை மகனார். அதை கிருஸ்துவர்களுக்கு நினைவு படுத்தினால், என்னை கிருஸ்துவர்களுடன் இரண்டு மைல் தூரம் வரும்படி பலவந்தம் செய்கிறார்கள்.

  311. //Forcible conversion is wrong. Christ never said that covert everybody as Christians but he taught people to follows his ways. //

    Somehow this bs is being distributed freely. As soon as no one rebutts christians, the christians will go on the offensive and call names of other people’s religion.

    As soon as they are in the receiving end, they will suddenly turn to become peaceful people.. “My little hanging poor god is also a good god.. please…”

    violence of christianity is part of its theology which seeks to wipe out the other people’s culture and religion. Portugese and other christian colonisers went about forcible conversion of Indians and whereever they ruled with the direct blessing from bible, pope and jesus.

    Mark : Any city that doesn’t “receive” the followers of Jesus will be destroyed in a manner even more savage than that of Sodom and Gomorrah. 6:11

    Mark 10:5 These twelve Jesus sent forth, and commanded them, saying, Go not into the way of the Gentiles, and into any city of the Samaritans enter ye not:
    Mark 10:6 But go rather to the lost sheep of the house of Israel.

    Mathew 12:30 He that is not with me is against me;

    John 8:24 I said therefore unto you, that ye shall die in your sins: for if ye believe not that I am he, ye shall die in your sins.

    Luke : Jesus says that entire cities will be violently destroyed and the inhabitants “thrust down to hell” for not “receiving” his disciples. 10:10-15

    John: The “wrath of God” is on all unbelievers. 3:36

    If you don’t believe in Jesus you are going to hell. 12:48


    I am irritated by the christians “goody goody” talk. I am saying this openly.

    Christianity is a vile religion and christ as depicted in the bible is a vile character. There is no surprise when the followers become vile.

  312. ///முதலில் ஜாதியை ஒழித்தால் தான் மதங்களை ஒழிக்க முடியும். அதற்கு ஒரே வழி கலப்பு திருமணம்.///

    நண்பர் ராம்கோபால் அவர்களே, இ. வே. ராமசாமி நாயக்கர் சொன்னதை மனதில் வைத்து நீங்கள் கலப்பு திருமணத்தை ஆதரித்து இருந்தால் ஒன்றை கவனிக்கவும், அவர் கலப்பு திருமணம் என்று பார்ப்பானுக்கும் தலித்துகளுக்கும் சிண்டு முடிந்தாரேயன்றி
    நடு சாதி என்று அவர் சொல்லும் சூத்திரரோடு அல்ல என்பதை பெரியார் பற்றிய பதிவுகளில் அறிந்து கொள்ளுங்கள்,

    சரி நீங்களாக சொல்வது என்றால் மாப்பிள்ளையானவன் இந்துவாக இருந்தால் தங்களின் மதத்திற்கு மாறினால்தான் பெண்ணை கொடுப்போம் என்று இஸ்லாமியர் சொல்கிறார்கள். ஏனெனில் இஸ்லாத்தில் பெண் வழி உறவே முக்கியம் என்கிறார்கள், இல்லை பெண் இந்துவாக இருந்து மாப்பிள்ளை இஸ்லாமியராக இருப்பின் உங்கள்( இந்து) மரபின் படி மாப்பிள்ளை என்ன மதமோ அதையே பெண் சாரவேண்டும் என்கிறார்கள். ( இதில் எனக்கு நிறைய அனுபவம் உண்டு)

    கிருஸ்துவத்திலும் ஆணாக இருந்தாலும் , பெண்ணாக இருந்தாலும், மதம் மாறினாலன்றி திருமணமே கிடையாது என்பது சர்வ நிச்சயம்.

    இந்த நிலையில் நீங்கள் சொல்வது போல் கலப்பு திருமணத்தில் எப்படி சமரசம் உருவாகும்? ஆனால் ஒருவகையில் நீங்கள் சொன்னது சரி, எல்லோருமே இஸ்லாமியராகவோ, அல்லது கிறிஸ்துவராகவோ மாறிய பின் இந்துக்கள் இல்லைஎன்றாகிவிடும். அவ்வளவுதான்.

  313. Dear sir(Thiruchi Karan),
    Following Christ is one’s own wish and will. Just because you follow Christ that does not mean to say you are doing a favour for Christianity.
    It is your wish.
    At the same time you cannot expect somebody to follow a religion which one may not be convinced about. I am convinced that I can approach God through Christ. The same God may have releaved himself to others through somebody or something.
    Just because I am not convinced about Islam I cannot condemn it. I should learn to respect every religion and their faith. I really appreciate the attitude and compromising spirit of my Hindu friends which Chirstians do not have.
    I see good and bad people in every religion. My concern is we all should learn to live in peace and harmony instead of condemning and criticizing other faiths and religions.
    I am happy that you are quoting biblical verses but you should always keep in mind the context in which The words were spoken.
    I always tell my friends that Brahma and Saraswathi are not too far from Christians. I see the name Brahma in Abraham’s name and Sarswathi in Sarai’s(Abraham’s wife) name.
    Our debates should always make us improve our knowledge but should not lead to enemity.

    Please note: I am sorry if I have mentioned something that would hurt somebody.
    Clem

  314. Dear Hindu Friends,

    This Christians like Giladys (after you become christian why need brahmin pattam),

    வெறும் காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு தாய் பிள்ளைகளான இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் குறுகிய எண்ணத்துடன் விஷ வித்துக்களைத் தூவிக் கொண்டிருக்கிறார்கள்;

    We can not allow this any more. We need to stop immediately.

    With Love,
    Naganathan

  315. கிலாடி,
    பார்க்கலாம் நீ எந்த அளவுக்கு நடுநிலைமையோடு மற்றவர் கருத்துகளை மதிப்பாய் எனறு.

  316. கிளம்சனின் பதில் எதிர் பார்த்துதான்,

    நாம் கேள்வி கேட்ட குற்றத்திற்காக பிரம்மாவை ஆபிரகாம் ஆக்கி விட்டார்.

    உலகிலேயே நான் பிற மதக் கடவுள்களை மனப் பூர்வமாக வணங்குவேன், பிற மத்தில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களை பாரரட்டுவேன் என்று சொல்பவன் இந்துதான்!

  317. Mr Anbarasan
    Sabash!! You are in in the same wavelength as me and many others.If Hindus continue to behave like pacifists, (like Gandhi), Christians and Islamists will walk over all of us. As I said earleir ” Where are the Kshathriyas to defend our faith?” I do not advocate violence in any form. At the same time I do not want poor Hindus taken for a ride by this Christian mob. What can you say about a religion where conversion is it’s core tenet and will go to any length to implement it?

  318. எங்கேயோ ஆரம்பித்து எங்கோ போய்க் கொண்டிருக்கிறது இந்தக் கட்டுரை மறுமொழிப் பெட்டி. ஆனால் பல அருமையான கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    வழிபாட்டு உருவங்கள் பற்றி முத்துக்குமாரசுவாமி ஐயா, சூப்பர் ஸ்டார், அன்பரசன், திருச்சிக் காரன், ப்ரதிப் …. இப்படிப் பலரும் பல கோணங்களில் இருந்து அருமையாக பதில் சொல்கிறீர்கள், கேள்விகள் எழுப்புகிறீர்கள்!

    உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருக்கள்
    உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருக்கள்

    என்றும்

    ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
    திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ

    என்றும் நம் முன்னோர் உரைத்த தொன்மை தெய்வீக ஞானமே உங்கள் சொற்கள் வழியாக வெளிப்படுகிறது. இந்து ஞானம் எத்தனை ஆழமானது, அழகானது, எப்பேர்ப்பட்ட பன்முகத் தன்மை உடையது என்பதை இங்கு மறுமொழியிடும் இந்துக்களே நிரூபிக்கிறார்கள். அற்புதம்!

    இந்தப் புனித பூமியில், கலாசார சூழலில் பிறந்து வளர்ந்தும், காலாவதியாகிவிட்ட பாலைவனக் குருட்டு வெறுப்பியல் பிரசாரங்களின் மூடிய கருத்துக்களை தாங்கள் பின்பற்றுவது மட்டும் போதாது என்று இங்கே வந்து பிரசாரமும் செய்து, அவற்றுக்கு வக்காலத்தும் வாங்கும் வெறியர்களைப் பார்த்துப் பரிதாபம் தான் ஏற்படுகிறது. அவர்கள் உள் உறையும் புத்தி சக்தி அவர்களுக்கு நல்ல புத்தி அளிக்கட்டும்.

    அமுதவெள்ளம் அருகில் இருக்க சாக்க்டைத் தண்ணீரை நோக்கி ஓடும் ஜந்துக்கள் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் உதாரணம் சொல்வார். அது தான் நினைவுக்கு வருகிறது.

  319. Dear Mr.Y.D. Yuvaraj

    //இது எனது சிறு விண்ணப்பம் நான் சர்ச்சுக்கு செல்லும்போது அங்கே உள்ள சில சிலுவைகளின் மேலே INRI என்ற எழுத்து பொறித்துள்ளது இதற்கு முழு அர்த்தம் தெரியவில்லை இதை அறிந்துகொள்ளும் எண்ணத்துடன் தான் கேட்கிறேன் //

    INRI என்றால் “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” என்று அர்த்தம்.

    “இயேசு கிருஸ்துவுக்கு கிடைத்த ஆக்கினையியின் (தண்டனையின்) முகாந்ததிரத்தைக் (காரணத்தைக்) காண்பிக்கும் பொருட்டு ” இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்”

  320. வணக்கம்,
    //நண்பர் ramgopal அவர்களே,

    உங்க quran புஸ்தகத்துக்கு ரொம்ப பவர் இருக்காங்க? நான் அதை எரிக்கலாம்னு இருக்கேன். அந்த புக் thannai kaapaatri kolluma என்று பாக்கணும். கடவுளோட வாய்ஸ் இல்லையா அது?.//

    நண்பர் ஸ்ரீ பிரதிப் பெருமாள் அவர்களே, நமக்கு அந்த சர்ச்சை தேவை இல்லாதது, ஏனெனில் நண்பர் ஸ்ரீ ராம்கோபால் வாதத்தின் படி தன்னை காத்துக் கொள்ளாத சிலைகளை அதன் தத்துவங்களை நாம் எவ்வாறு உணர்ந்து வழிபடுகிறோமோ அவ்வாறே அவர்களும் தன்னை காத்துகொள்ளாத குரான் புத்தகத்தை மதிக்கிறார்கள்.
    ஆனால் அதை அவர்கள் வழிபடுவது இல்லை. அனாலும் இரண்டும் அடிப்படை நம்பிக்கையில் இறை நம்பிக்கை பற்றியதே ஆகும்,

    நமது முன்னோர்கள் மனித வாழ்வின் மேன்மைக்காக இறைத்தன்மையை உணர்த்தும் வழிபாடு மற்றும் சிலைகளை வடிவமைத்தார்கள். இஸ்லாமியரின் நம்பிக்கையின் படி குரானும் இறைவனின் வாக்காக கருதுகிறார்கள், நம்பும் மனிதர்கள் வேறானவர்கள் ஆயினும் நம்பிக்கை ஒன்றுதான்.

    அதன் தாத்பரியங்கள் தத்துவங்களை விவாதிக்கலாம் தவறில்லை, ஒரு மனிதன் என்ற நிலையில் நின்று பார்த்தால் இஸ்லாமிய மனிதர்கள் குரானில் இறைவனை காண்கிறார்கள் எனில் நாமும் இந்து மனிதராக குரானில் இறைவனை காணலாம்.
    ஆனால் எரிக்கலாம் என்று நீங்கள் சொல்லும் வார்த்தை அவர்களின் உணர்ச்சிகளை தூண்டுமேயல்லாது சிந்தனையை தூண்டாது. ஏனெனில் மனிதன் உடனடியாக அடிமையாவது உணர்வுகளுக்கு அல்ல உணர்சிகளுக்கே.

  321. வணக்கம்,
    அனைவரையும் பாராட்டிய ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள், அன்றியும் தங்களும் ஸ்ரீ முத்து குமாரசாமி அய்யா அவர்களின் விளக்கமும் மிகவும் பயனுடடயதாக மட்டுமில்லாமல் மற்றைய மதத்திரனர்க்கு விளக்கமானதுடன் இன்னமும் விவரமறியாத ஏனைய இந்து த்ரமத்தினர் யாவருக்கும் இது ஒரு சிறிய விளக்க உரையானது பற்றி உளமார மகிழ்கிறேன், அவர்களின் சார்பாகவும் எனது நன்றிகள்.

    தொடரட்டும் தங்கள் பணி. வளரட்டும் தமிழ் ஹிந்து தளம்.

  322. அய்யா ஸ்ரீ பாஸ்கர் அவர்களே ,

    நான் சிறுவன், குரான் எரிப்பது அல்ல என் நோக்கம். அவர்கள் ஜாலத்தை அவர்களுக்கே காட்டுவது தான் என் எண்ணம்.

    ஏன் நம்முடைய கடவுள் சிலைகள் உடைக்கபடுவது நம் உணர்ச்சிகளை தூண்ட கூடாது என்று அவர்கள் ஆசை படுகிறார்கள் என்பதே என்னுடைய கேள்வி.

    குரான் எரிப்பதால் அவர்கள் நம்பும் கடவுளின் வாக்கும் எரிந்து விடுமா என்ன? ஒ அவர்கள் உணர்ச்சிகள் தீ பற்றி எரியுமோ!

    எம்பெருமான் திருமால் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இருக்கும் காட்சி சிலையாக வடிக்க பட்டு இருப்பதற்கும் திருகுரான்-கும் உண்மையில் எனக்கு எந்த உயர்வு தாழ்வும் இல்லை என்பதையும் இங்கே தெரிவித்து கொள்கிறேன் .

    ஒன்று மட்டும் புரியலை இவாளுக்கு இன்னும் எத்தனை வருஷம் தேவை நம்மளை புரிய என்பது .

    அன்புடன்,
    பிரதிப் பெருமாள்

  323. அய்யா ஸ்ரீ பாஸ்கர் அவர்களே,

    நான் சிறுவன், குரான் எரிப்பது அல்ல என் நோக்கம். அவர்களின் ஜாலத்தை அவர்களுகே காட்டுவது தான் என் எண்ணம்.

    குரான் எரிப்பதினால் அவர்கள் நம்பும் கடவுளின் வாக்கும் எரிந்து போகுமா என்பதே என் கேள்வி.சிலைகளை உடைபதினால் அதில் உள்ள எம் கடவுளர்யையும் உடைத்துவிடமுடியமா என்பதே அவர்களை பார்த்து நான் கேட்கும் கேள்வி. குரான் என்று சொல்லப்படும் புஸ்தகம்மும் ஜடபொருளே சிலையும் ஜடபொருளே. அது புனிதம் ஆவது என்பது நாம் பார்க்கும் மனநிலை பொருத்து என்பதை தெளிவு படுத்தவே எரிப்பதை குறித்து சொல்ல வேண்டியதாக போனது.

    அது தவிர எம் பெருமான் திருமால் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இருக்கும் காட்சி சிலையாக வடிக்கபட்டு இருப்பதற்கும் திருகுரான்னுக்கும் உயர்வு தாழ்வு கற்பிக்கும் அளவுக்கு சான தான தர்மம் என்னை கை விட்டு விடவில்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்ள ஆசை படுகிறேன்.

    அன்புடன்,
    பிரதிப் பெருமாள்

  324. திரு திருச்சிக்காரர் அவர்களுக்கு நன்றி

  325. அய்யா வணக்கம்

    எனக்கு ஆன்மீக அனுபவம் குறைவு அதனால் கொஞ்சம் தேடி பார்த்ததில் இந்த பதில் கிடைத்தது .

    உருவ வழிபாட்டிற்கு வேதங்களில் ஆதாரம் உள்ளதா என்று கேட்ட அன்பர்களுக்கு இதை எந்த பதிவை என் பரிசாக்குகிறேன்

    வேதங்களிலும் உருவ வழிபாடு உள்ளதை இந்த கேள்வி பதில் குறிபிடுகிறது (நன்றி திரு ஜடாயு அய்யா அவர்களுக்கு )

    // கேள்வி 3 : வேதத்தில் சிவலிங்க வழிபாடு பேசப்படுகிறதா? சிவலிங்க வழிபாடு வேதத்திற்கு முந்தியதா? பிந்தையதா? வேதப் பிராமணர்கள் ஸ்ரீ ருத்ரத்தில் குறிக்கும் ருத்ரனே சிவன் என்பதை சித்தாந்திகள் ஒப்புக்கொள்கிறார்களா? மறுக்கிறார்களா? //

    பதில்:
    (அ) சந்தேகமில்லாமல், கண்டிப்பாகப் பேசப் படுகிறது. “லிங்கம்” என்கிற சம்ஸ்கிருதச் சொல் முதன்முதலில் வேத மந்திரங்களில் தான் வருகிறது. இமயம் முதல் குமரி வரை எல்லா சிவபூஜைகளிலும் தவறாமல் இடம்பெறும் “நிதனபதயே நம:” என்று தொடங்கும் வேத அர்ச்சனையில் “ஊர்த்வாய நம:, ஊர்த்வலிங்காய நம:” முதல் “சிவாய நம: சிவலிங்காய நம:” “பரமாய நம: பரமலிங்காய நம:” வரை லிங்கரூபங்கள் துதிக்கப் படுகின்றன. இம்மந்திரமும், “ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி” என்று தொடங்கி ஐந்து முகங்களுக்குமான மூலமந்திரங்கள் மற்றும் சிவபூஜையில் ஓதும் சகல மந்திரங்களும் யஜுர்வேதத்தின் ஒரு பகுதியான “தைத்திரிய சம்ஹிதா”வில் இருந்தே தொகுக்கப் பட்டவை.

    சிவலிங்க வழிபாட்டின் மூலம் வேத காலத்தில் வேள்விகளில் வணங்கப் பட்ட யூபஸ்தம்பம் (கம்பம்). சுவாமி விவேகானந்தர் மிகத் தெளிவாக இதைக் கூறியுள்ளார் –

    “The Swami said that the worship of the Shiva-Linga originated from the famous hymn in the Atharva-Veda Samhit sung in praise of the Yupa-Stambha, the sacrificial post. In that hymn a description is found of the beginningless and endless Stambha or Skambha, and it is shown that the said Skambha is put in place of the eternal Brahman. As afterwards the Yajna (sacrificial) fire, its smoke, ashes, and flames, the Soma plant, and the ox that used to carry on its back the wood for the Vedic sacrifice gave place to the conceptions of the brightness of Shiva’s body, his tawny matted-hair, his blue throat, and the riding on the bull of the Shiva, and so on — just so, the Yupa-Skambha gave place in time to the Shiva-Linga, and was deified to the high Devahood of Shri Shankara. In the Atharva-Veda Samhita, the sacrificial cakes are also extolled along with the attributes of the Brahman.

    In the Linga Purna, the same hymn is expanded in the shape of stories, meant to establish the glory of the great Stambha and the superiority of Mahdeva.”

  326. அய்யா வணக்கம்

    திரு பிரதிப் பெருமாள் அவர்களுக்கு

    #ஒன்று மட்டும் புரியலை இவாளுக்கு இன்னும் எத்தனை வருஷம் தேவை நம்மளை புரிய என்பது .#

    அவர்களுக்கு புரியவே புரியாது . திருக்குரானும் திருக்குறளும் எங்களது தான்னு சொல்லாமே இருகிறதே பெரிய விஷயம் ?.

    திருக்குறளை ஏற்கனவே தம்முடைதாக்க போலி சுவடிகள் தயாரித்து மானம் போனது தனி கதை.?

  327. வணக்கம்,
    நண்பர் ஸ்ரீ பிரதிப் பெருமாள் அவர்களே,

    நீங்கள் சிறுவன் என்று சொல்லியுள்ளீர்கள், மிக்க மகிழ்ச்சி, இந்த வயதில் இந்த வார்த்தைகளை கண்டு மெய்யாகவே எனது மனம் மகிழ்வுறுகிறது,

    ///அது தவிர எம் பெருமான் திருமால் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இருக்கும் காட்சி சிலையாக வடிக்கபட்டு இருப்பதற்கும் திருகுரான்னுக்கும் உயர்வு தாழ்வு கற்பிக்கும் அளவுக்கு சான தான தர்மம் என்னை கை விட்டு விடவில்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்ள ஆசை படுகிறேன்.///

    இந்த அளவுக்கு தெளிவுள்ள நீங்கள் நமது சனாதன தர்ம நலனுக்காக ஒன்று செய்தால் நான் இன்னமும் மகிழ்வேன்.

    உங்களின் வார்த்தைகளில் நியாயமான கோபம் உள்ளது, ஆனால் கோபம் என்பது ஒரு சரியான எரிபொருள், அதை சரியாக உபயோகிப்பின் பயனுறும், அல்லேல் அது தங்களையே எரித்து விடும், எனவே தங்களின் சக்திகளை நமது தர்மத்திற்கான ஆக்கபூர்வமான பணிகளில் செலவிடுங்கள், என்றுமே எதிரிகளை குறைப்பதை விட நம்மை பலப்படுத்திக்கொள்வது பயனளிக்கும்.

    நீங்கள் யோகம், த்யானம் கற்றுக்கொள்ள முயலுங்கள், சமய ஞானத்தில் தெளிவு பெறுங்கள் உங்களை சார்ந்தவர்களை தெளிவு படுத்துங்கள். அதுவே மிகுந்த பயன் தரும்.

  328. //The Swami said that the worship of the Shiva-Linga originated from the famous hymn in the Atharva-Veda//

    //the Yupa-Skambha gave place in time to the Shiva-Linga, and was deified to the high Devahood of Shri Shankara. In the Atharva-Veda Samhita, the sacrificial cakes are also extolled along with the attributes of the Brahman.//

    Vedic scriptures praise God attributing various qualities to God. Manifestations were described on those qualities. On the basis of those manifestations, various imgaes were given to God later on for worship and thus beagn idol worship at a later age according to personal preference. Notice the words ‘ORIGINATED’ and The yupa skamba ‘GAVE PLACE IN TIME’ to the shiva linga.

    Atharva Veda, last of all the four veda in time, speaks on rituals and many non-spritual topics. That is why there is no declared followers of it. For instance, among Brahmins, you find people following Rig, Yajur and Sama.

    Stating that idol worship is a later development does not in any way condemning idol worship. There is also nothing wrong in stating that idol worship is a later development. Animism, the root of all sorts of worship, began with the worship of GOd in images only, BUT, pl NOTE, those images were real, that is tress and plants, sun and moon, thunderbolt and lightenings, rains, etc., also animals.
    MALARMANNAN

  329. பைபிளுக்கு ஆதரவாகப் பேசும் பலரும் எந்த அளவிற்கு அதன் பின் உண்மைகளை அறிந்துள்ளார்கள்- தெரியாது, இது இன்றைய பைபிளியல் அறிஞர்கள் பொதுவாக ஏற்கும் நிலை

    https://tamilhindu.com/2009/08/christianity-in-india-book-intro/

  330. அய்யா வணக்கம்

    நல்ல வித்தியாசமான கருத்துக்கள் மழை துளி போல் வந்து கொண்டிருக்கிறது மாறுபட்ட கருத்துகளை எழுதும் திரு ஜோசப் அவர்களோ திரு glady அவர்களோ திரு yuvaraj அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் முன் திரு திருச்சி காரர் அவர்கள் பதில் அளித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது .

    கர்த்தர் மேல் பற்றுள்ளவர்கள் இதற்க்கு விளக்கம் தந்திருந்தால் நன்றாய் இருதிருக்கும். ஆனால் இவர்களுக்கு மற்ற மதத்தை பற்றி கேலி செய்வதையே பெருமிதமாக நினைக்கிறார்கள் போலும். மேலும் இந்து மதத்தில் வாழ்க்கைக்கு தேவையான எந்த தத்துவமும் இல்லை என்று அவர்கள் நினைத்தால் அவர்களை விட அறிவிலிகள் யாரும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

    சூப்பர் ஸ்டார்

  331. வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்கள் இந்து மதத்தில் இல்லை என்று யாரும் இங்கே சொல்லவில்லை;

    என்னைப் போல சிலரும்கூட இந்தப் பதிவு சிறப்பு பெற மறைமுகமாக உதவியிருக்கிறோமென்தற்காக யாரும் நன்றி சொல்லவேண்டாம்..!

  332. அய்யா ஸ்ரீ பாஸ்கர் அவர்களே.

    நன்றி.

    சிறிது காலமாக சனாதன சமய அறிவை வளர்த்து கொள்ள ஆசை பட்டு அதை செய்து வருகிறேன்.இப்போதைகு நான் புரிந்து கொண்டது எல்லாம் “கடலுக்கும் அதில் உள்ள ஒரு துளிக்கும் தரத்தில் எந்த வித்யாசம் இல்லை, அளவில் மட்டுமே” என்று.

    இனி தெரிய வேண்டியது கடல் ஆவது எப்படி என்பது மட்டுமே.

    அதையும் (மிகபெரியது அது) அறிய முயற்சி செய்து கொண்டுள்ளேன் என்பதை தங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    அன்புடன்,
    பிரதிப் பெருமாள்

  333. வணக்கம்,

    தன் வயிறு நிரப்ப அடுத்த வீட்டில் சமைத்து உண்ண நினைக்கும் தெய்வநாயகம் போன்ற நயவஞ்சக கும்பலின் முக மூடியை சமயத்தில் கிழிக்க துணிந்த ஸ்ரீ கணேசன் மற்றும் உடனிருந்த அன்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    உடனடியாக வினாக்களை உருவாக்கி வாதத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு துணிவை தந்த தமிழ் இந்து.காம் தளத்திற்கு வெகு நன்றி, நாம் அனைவரும் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும், என்னவெனில் நமது இந்து தர்மத்தில் உள்ள தத்துவங்களும், நீதிகளும் வேறு எங்கும் கிடையாது எனவே அவர்கள் அதற்க்கு கிறிஸ்துவ முத்திரை குத்தி உலகெங்கிலும் விற்பனை செய்ய ஆயத்தமாகி உள்ளார்கள் என்பதை நாம் உணர வேண்டும். செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோர் நமது தத்துவங்களின் அரைக்கால் பகுதியை கூட சரிவர அறியாதவர்கள்.

    அவர்களின் தந்திரங்களையும், மேலும் கூட்டத்தை கூட்டி மேடையில் (போலி) நோயாளிகளை குணமாக்கும் போலி பிரசங்கியரையும் நமது மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுதல் முக்கியமான கடமையாகும். நமது பரத கலாச்சாரத்தில் உள்ள முக்கியமான ஒருவார்த்தையை மாத்திரம் தயவு செய்து நமது பிள்ளைகளுக்கு கற்று தராதீர்கள். அது ” எம்மதமும் சம்மதம் “

  334. This week Kumudam Jothidam September 25th issue . Mr AMR has written a soul stirring article regarding sadhu chellappa . Can anyone please upload this?

  335. //கிறித்துவ துறவிகளில் stigmata என்று சிலரைச் சொல்லுகிறார்கள். அல்போன்ஸா என்னும் பெண் துறவி அத்தகையவர் என்று கூறப்படுகிறார். இயேசு கிறித்து சிலுவையில் அறையுண்டபோது அவருடைய உடலில் எங்கெங்கு புண்ணாகிக் குருதி ஒழுகியதோ அப்புண்களில் ஒன்றிய மனத்தினராய்த் தியானமும் செபமும் செய்தமையால் தங்கள் உடலிலும் அத்தகைய புண்கள் உண்டாகப் பெற்றவர்களே ‘ஸிடிக்மேடா’ என்று அழைக்கப்பெறும் சிறப்பினைப் பெற்றதாகக் கூறப்பெறுவர். இதனால் யாரொருவர் எதனை மனமொன்றித் தியானிக்கின்றனரோ, அதன் இயல்பைப் பெறுவர் என்ற நம்பிக்கை கிறித்துவத்தில் உண்டெனத் தெரிகின்றது.//

    https://www.skepdic.com/stigmata.html

  336. All Hindus, please watch this you tube clip ” Jesus Christ and Gayatri Mantra”. It makes you feel sick to the stomach. I could not watch it, wanted to throw up. How this mongrels are hijacking the most sacred of our mantra for their evil deeds.
    I have only one word for this …

    (comment edited)

  337. சூபிகளும் இந்து துறவிகள் போல வேஷம் போட்டு இஸ்லாமை பரப்பிய சூதுக்காரரக்ளே.

    முதல் தலைமுறை இந்து மதத்தை மதிக்கும். அடுத்த தலைமுறையிலிருந்து ஜிகாதியாகி விடும். இந்துக்களை கொல்ல அலையும்.

  338. Hindhuthva- myth

    “மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பார்களே அது போல மேற்கண்ட படத்தைக் குறித்து பரபரப்பான செய்தி ஒன்றை “தினமலர்” நாளிதழ் வெளியிட, அதை “தமிழ் ஹிந்து” தளமும் வெளியிட்டிருக்கிறது;

    ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்:
    மக்கள் அதிருப்தி
    செப்டம்பர் 20,2009,00:00 IST

    தேவாரம்: ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் சம்மந்தமான வாசகங்கள் அச்சிடப் பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம், கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. முழுக்க விவசாயம் சார்ந்த இந்த பகுதியில் காய்கறிகளை மொத்த விற்பனை செய்ய 42 கமிஷன் கடைகள் உள்ளன. இங்கிருந்து கேரளாவிற்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் காய்கறி அனுப்பப்படுகிறது.

    நேற்று, கமிஷன் கடைகளிலிருந்து விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டுகள் சிலவற்றில் மதப்பிரசாரம் சம்மந்தமான வாசகங்கள் அச்சிடப் பட்டிருந்தன. இதைப்பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    பத்து ரூபாய் நோட்டில் காந்தி படம் அச்சிடப் படும் வாட்டர் மார்க்கில் வெள்ளை நிறத்தில் வெற்றிடம் இருக்கும். இந்த பகுதியில் “நீ பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்.ஏசா: 41:10 “என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளன.

    ரூபாய் நோட்டில் உள்ள வாட்டர் மார்க் பகுதியை அளவெடுத்து அதற்கு தகுந்தாற் போன்ற சீல் தயார் செய்து ரூபாய் நோட்டில் புளுக்கலரில் அச்சிட்டுள்ளனர்.

    ரூபாய் நோட்டில் எழுதுவதற்கே தடை உள்ள நிலையில் மதப்பிரசார வாசகங்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு ரொம்ப பொறுப்பாக சில வாசகர்கள் கீழ்க்கண்டவாறு கருத்து தெரிவிக்கிறார்கள்:

    >Dear sir, This act is too bad. It should be investicated and the person”s must be punished.
    by Fr.Augi ,India
    Posted on செப்டம்பர் 20,2009,13:06 IST

    >Goverment must findout the particular groups and give punishment ,heavy finedup thats good for our country.otherwise the stupid people cannot be change.
    by D sara,India
    Posted on செப்டம்பர் 20,2009,12:40 IST

    இது எப்படி மதப் பிரசார வாக்கியமாகும்? புரியவில்லையே..!
    அதில் எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் குறித்து எதுவும் இல்லையே..! இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது..?

    கரன்சியே எல்லா பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது; அதற்காக சிரமப்படும் ஏழை எளிய மக்கள் ஆறுதலடையவோ மன அமைதியடைவோ கூடாதா? எவ்வளவு கெட்ட எண்ணம் பார்த்தீர்களா?

    ‘இந்துவா’ எனும் மதவெறி இந்த அளவுக்கு ஏழை இந்தியாவைப் பாடாய்ப்படுத்துகிறது.

    https://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_51813471318.jpg

    (Edited and published – Tamilhindu Editorial.)

  339. Glady
    Let us talk about slavery which is endorsed in your bible. Let us talk about stoning to death for adultery in your bible which apparently ” true word of God”. Blacks did have souls until recently, 90 -100 million Red Indians were butchered under the God fearing Christians. Hundreds of thousnads of Hindus were massacred and crucified in Goa under the Sanit! Xavier. Apartheid was practiced with the full cooperation of the Church in Africa. Let us all talk about this. Also let us talk about Your Venegnful egocentric vain God of the Bible.
    As someone said,” If you spread rumours about my religion( Hinduisim) I will start telling the truth about your religion ( Christianity).

  340. Dear Rama,
    //Let us talk about slavery which is endorsed in your bible. Let us talk about stoning to death for adultery in your bible which apparently ” true word of God”.//
    Bible talks about slavery as a historical event and never prescribed slavery to anyone.
    Even when the Jews wanted to stone a women to death who got caught on adultery, Jesus came inbetween in stopped that.
    Bible also, says that a human should not judge or punish someone, because only God has the authority to do that.
    //Blacks did have souls until recently, 90 -100 million Red Indians were butchered under the God fearing Christians. //
    Who certified them as God fearing Christians, when they did something against the teachings of Christ. Gandhiji also was killed by a God fearing Hindu. We are not accusing every Hindu or the Hinduism for that.
    Try to understand the truth brother, rather than trying to win the argument for the sake of it.

    Your Brother,
    Ashok

  341. Dear Brother Ashok
    You guys never give up. You are denying your own God’s words, that is the Bible. Here is a sample from King James Bible for you to ponder. Either the Bible is God’s words or it is not, in which case Christianity will have no base. You guys got to make up your mind.Also, do not bring political correctness in the Bible because that will be going against your own God’s words. Please do not say that this site is anti christian, etc. Does King James Bible contains what is written here or not is question. If Jesus stopped someone getting stoned to death, he obviously was going against his own father’s wishes.
    Best of luck
    Rama
    This is from Hetrodoxy.com
    https://www.heterodoxy.com/societyofchristians/
    God Hates Rape Victims
    It is fashionable to go around saying what God hates, from fags to figs and from America to amputees. Nonetheless, we at the Society of Christians for the Restoration of Old Testament Morality prefer to let Almighty God speak for Himself, through the Holy King James Bible, with no “interpretation” to make it more politically correct for modern liberals. We will therefore quote His own words — in Scripture verses that you will not hear preached from the pulpit of the ungodly Church of Compromise — about a group of people whom He says He hates, namely, rape victims.
    If a virgin betrothed to a husband is raped, what happens to her depends on whether the rape occurs inside or outside of city limits. If it occurs inside, being raped is a capital offense:
    Deuteronomy 22:23-24: If a damsel [that is] a virgin be betrothed unto an husband, and a man find her in the city, and lie with her; Then ye shall bring them both out unto the gate of that city, and ye shall stone them with stones that they die; the damsel, because she cried not, [being] in the city; and the man, because he hath humbled his neighbour’s wife: so thou shalt put away evil from among you.
    Note that the reference to “evil” does not differentiate between the rapist and his victim, as John-3:16-only liberal “Christians” imagine that it might.
    On the other hand, if the rape occurs beyond city limits, she is blameless:
    Deuteronomy 22:25-27: But if a man find a betrothed damsel in the field, and the man force her, and lie with her: then the man only that lay with her shall die: But unto the damsel thou shalt do nothing; [there is] in the damsel no sin [worthy] of death: for as when a man riseth against his neighbour, and slayeth him, even so [is] this matter: For he found her in the field, [and] the betrothed damsel cried, and [there was] none to save her.
    We suppose that in a densely populated but unincorporated suburb like Bethesda, the former rule will apply. We should definitely err on the side of caution and stone them both to death, so that we can be sure that we are putting away evil whenever God wants us to do so.
    If a virgin is not betrothed, she is forced to marry her rapist, with no possibility of divorce, ever:
    Deuteronomy 22:28-29: If a man find a damsel [that is] a virgin, which is not betrothed, and lay hold on her, and lie with her, and they be found; Then the man that lay with her shall give unto the damsel’s father fifty [shekels] of silver, and she shall be his wife; because he hath humbled her, he may not put her away all his days.
    Note that it is her father who gets the fifty shekels. The rape victim herself is not even worthy to receive monetary damages.
    If a man rapes a slave woman who is betrothed to a husband, she is to be scourged, but all he has to do is to donate a ram as a trespass offering:
    Leviticus 19:20-22: And whosoever lieth carnally with a woman, that [is] a bondmaid, betrothed to an husband, and not at all redeemed, nor freedom given her; she shall be scourged; they shall not be put to death, because she was not free. And he shall bring his trespass offering unto the LORD, unto the door of the tabernacle of the congregation, [even] a ram for a trespass offering. And the priest shall make an atonement for him with the ram of the trespass offering before the LORD for his sin which he hath done: and the sin which he hath done shall be forgiven him.
    Further, with regard to prisoners of war, God explicitly gives permission for nonconsensual sexual activity:
    Numbers 31:17-18: Now therefore kill every male among the little ones, and kill every woman that hath known man by lying with him. But all the women children, that have not known a man by lying with him, keep alive for yourselves.
    Deuteronomy 21:10-14: When thou goest forth to war against thine enemies, and the LORD thy God hath delivered them into thine hands, and thou hast taken them captive, And seest among the captives a beautiful woman, and hast a desire unto her, that thou wouldest have her to thy wife; Then thou shalt bring her home to thine house; and she shall shave her head, and pare her nails; And she shall put the raiment of her captivity from off her, and shall remain in thine house, and bewail her father and her mother a full month: and after that thou shalt go in unto her, and be her husband, and she shall be thy wife. And it shall be, if thou have no delight in her, then thou shalt let her go whither she will; but thou shalt not sell her at all for money, thou shalt not make merchandise of her, because thou hast humbled her.
    Finally, with regard to man-on-man rape, the Bible has the following to say:
    Leviticus 20:13: If a man also lie with mankind, as he lieth with a woman, both of them have committed an abomination: they shall surely be put to death; their blood [shall be] upon them.
    Note that lack of consent is not mentioned as a defense; they both must be put to death, regardless. The fact that hippy-dippy liberal “Christians” assume that this verse applies only to consensual homosexual activity shows how deep in apostasy they

  342. Rama,
    you guys are keen about winning the argument than knowing the truth. I really cannot conduct a bible course in this blog. You can consider that you won. You can consider that I am escaping. I am really tired. But my faith is still same. Love you.

    Your Brother,
    Ashok

  343. //Let us talk about slavery which is endorsed in your bible. Let us talk about stoning to death for adultery in your bible which apparently ” true word of God”.//
    The so called slave eleazar in Abraham’s family was literally ruling the house and was considered to be Abraham’s son equivalent. The way of treating slaves or servants depends upon individuals rather than attaching the religious tag to it

  344. //Blacks did have souls until recently, 90 -100 million Red Indians were butchered under the God fearing Christians. //
    The same blacks were liberated by the efforts of Abraham Lincoln who was a God fearing christian

  345. ஐயா தமிழ் ஹிந்து,
    ஆங்கில வாடை ரொம்ப வீசுதே. இந்த ஆங்கில மோகம் போனாலே, பாதி பிரச்னை முடிஞ்சிடுமே.
    நண்பர்களே, தமிழில் பேசினால் உங்கள் எண்ணங்களும் மிகச்சரியாய் வெளிப்படுமே. குறைந்த பட்சம் என்னை போன்றவர்களும் பங்கு பெறுவார்களே.
    நன்றி,
    சந்தோஷ்

  346. ஐயா,
    இன்று அதிக அளவில் மதமாற்றம் நடப்பது, தலித்களிடத்தில். இந்துக்கள் அவர்களை சரியாய் நடத்தாத போது, அவர்கள் வேறு மார்கங்களுக்கு போவது தவிர்க்க முடியாதது. கோவையில், கே கே புதூரில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலில், அரிஜன மக்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் தெருவில் நின்றுதான் வழிபட வேண்டும். கடந்த வருடம்கூட ஒரு அறிஜணன் அடிக்கப்பட்டார். பக்கத்தில் உள்ள ஒரு சிறிய சர்ச் இப்போது வளர்ந்து வருகிறது.
    இங்கே பல கிறிஸ்துவர்களிடம் விவாதம் செய்வதைவிட, அங்கே சில தலித் என சொல்லப்படும் மக்களிடம் அன்பு காட்டிலே இந்த பிரச்சனைகளை நாம் களைந்து விடலாம். நான் அதைத்தான் செய்கிறேன், விருப்பம் உடையவர்கள் என்னுடன் கைகொர்த்துக்கொள்ளலாம்.
    அன்புடன்,
    சந்தோஷ்

  347. //Abraham Lincoln who was a God fearing christian//

    What a nonsense! Abraham Lincoln never went to church in his entire life!

  348. https://www.adherents.com/people/pl/Abraham_Lincoln.html

    ஒரு தகவலை அதுவும் வலை தரும் தகவலை பகிர்ந்துக் கொள்ளும் அதிக எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்; ஒரு தகவலைச சொல்லப்போய் அது வேறொரு வலையில் சிக்க வைத்து விடும்;

    நான் கேட்கிறேன், ஆபிரகாம் லிங்கன் கிறிஸ்தவர் என்பது உண்மையானால் நிங்களும் கிறிஸ்தவராக மாறுவிர்களா? பிறகு எதற்கு வீணான விவாதம் ?

  349. //Abraham Lincoln who was a God fearing christian//

    What a nonsense! Abraham Lincoln never went to church in his entire life!
    ஆபிரகாம் லிங்கன் ஒரு இறை பக்தியுள்ள கிறிஸ்தவர் என்று தான் சொன்னேன், அவர் சர்ச்சுக்கு போனார், போகவில்லை என நான் சொல்லவில்லை, கிறிஸ்தவத்தின் தாக்கம் அவர் வாழ்வில் அதிகம் இருந்தது, தினமும் அவர் அதிகாலையில் இறைவனை தேடினார்.
    ஆலயத்திற்கே செல்ல முடியாமல் பக்தியுள்ள கிறிஸ்தவர்களாக இருந்து கடைசியில் மடிந்து போன எத்தனையோ கிறிஸ்தவர்கள் கம்யூனிச நாடுகளில் இருந்திருக்கிறார்கள்.

  350. ///////////Ashok kumar Ganesan
    24 September 2009 at 12:19 pm
    Rama,
    you guys are keen about winning the argument than knowing the truth. I really cannot conduct a bible course in this blog. You can consider that you won. You can consider that I am escaping. I am really tired. But my faith is still same. Love you.

    Your Brother,
    Ashok///////////////
    சரி உங்கள் உண்மையான கிறிஸ்தவப் பெயர் என்ன என்பதை இப்போதாவது சொல்லிவிட்டுப் போங்கள்.

  351. Brother Ram,
    This shows how much of misconceptions that you guys have about Christians. A Christian need not have a English name or a Biblical name. Name doesn’t have anything to do with my faith in Christ. My name is Ashok kumar and my father’s name is Ganesan. I got converted in 1999. I never bothered to change my name because of my conversion. No missionary or currency involved in my conversion. My spiritual searchings took me to Christ. I am first Christian in my family and in a span of 5yrs my entire family is coverted.
    You need to know anything more? Oh Yeah, Out of my passion, I am helping people to know about Christ. I am not doing this for money. It is just based on my love for the humanity.

    Your Brother,
    Ashok

  352. //I am really tired. But my faith is still same. Love you. -Sri Ashok//
    I am sad that Sri Ashok is unable to get over from his Jesus phobia. The venom has gone that extreme in his blood. I request him to think deep sitting alone for half an hour everyday for atleast seven days and analyse the wisdom of his forefathers who were Hindus. They were NOT narrow minded to be adamant to stress that salvation is possible only through Jesus. Books like Bible and Koran are elementary with wild imaginations, picturising God as somebody sitting somewhere and watching you like big brother waiting with a whip to punish you, if you do NOT accept him. Dear Sri Ashok, you are NOT living in mediaevel age to blindly accept a dogma. The vedas and Upanishads are far advanced in spirituality though written in ancient times but still valid because of the profound knowledge expressed in them. Why, Gayatri Mantram itself is enough if you analyse its meaning. And if you read Tirumandiram with concentration, you will be astonished when it unfolds its profound spiritual enlightment step by step. When you have such rich spiritual treasure at home, why do you go for an alien stuff? You can opt for Jesus OR Mohmed if you did NOT have any option at home. BUT you have more indepth source for spiritual advancement already given by your ancestors. Why should you behave like a beggar extending your bowl to others when you are a heir of a very rich asset?
    MALARMANNAN

  353. ஹாய் வணக்கம் திரு.டேனியல் ,

    எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இயேசு மேலயோ கிறிஸ்டியன் மேலயோ இல்லைங்க. என்னோட ஆதங்கம் எல்லாம் அது நமக்கு எங்கே இருந்து வந்துட்டு இருகோ அங்கேயே அது தோத்து இருக்கிறப்போ அது எப்படி நம்மளை கரை சேர்க்கும் என்பது தான். அதோட அவசியம் நமக்கு என்ன என்பது தான். இங்கேயே நாம சொர்க்கம் போறதுல இருந்து கடவுள் அடியிலே போய சேர்ற வரைக்கும், ஏன் கடவுல ஆக தேவையான எல்லா தத்துவங்களும் இருக்குறப்போ எதுக்கோ எங்கேயோ யாருக்கோ வந்த தத்துவம் நமக்கு எதற்கு என்பது தான்ga.

    இன்னிக்கு அந்த அளவுக்கு பாதிப்பு வரலைங்க ஆனா இது ரொம்ப அச்சுன்ன நம்மோட கலாச்சாரமும் அமெரிக்க ஐரோப் மாதிரி ஆயுடுமோ என்ற அடுத்த தலைமுறை பற்றிய பயம் தான். ஆகாது என்று தைரியமாக சொல்ற அளவுக்கு கிறிஸ்தவம் இல்லைங்க. இப்ப நடகரதை பாக்கறப்பவே தெரியுதுங்க.

    தமிழ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க ” தாய போல பிள்ளை நுல போல சேலை’ என்று. நமக்கு கிறிஸ்தவம் ஆக்ரோசமா வந்துட்டு இருகிற மேற்கை பாத்தே நாம கிறிஸ்தவத்தை இன்னும் ஆக்ரோசமா எதிர்கிரோமுங்க. கர்த்தருக்கு தெரியுமுங்க நாங்க ஏன் இதை செயுரோமுன்னு. நாங்க செய்வோமுங்க. நீங்க அடங்கற வரை செய்வோமுங்க.

  354. //Abraham Lincoln who was a God fearing christian-Daniel//
    That is the basic difference.
    Christians are taught to fear God whereas Hindus are taught to love God. The Christian and Mohmedan dogma arises out of the concept that people are wrong doers by nature, and children should fear their father to be good as they grow up and they can escape from the punishment and receive gift from their father for being obdient and listening to him. Just think for a while. Is it NOT stupidity?

    Don’t fear God. Feel Godliness. It is the next stage in evolution. Try to read Sri Aroubindo’s Life Divine and understand every line of it. Then only you will realise how childish the Christian and Mohmedan beliefs are.
    MALARMANNAN

  355. யூதர்களுக்கு அவர்கள் தெய்வம் கொடுத்த முதல் கட்டளையே “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடு அன்பு செலுத்து” என்பதுதான்;

    அவர்கள் வழி வந்த கிறிஸ்தவர்களின் ஆதார வாக்கியமும் “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலக‌த்தில் அன்பு செலுத்தினார்” என்பதே;

    இந்த வார்த்தையைச் சொல்லியே உலக முழுவதும் தினமும் இலட்சக்கணக்கானோர் கிறிஸ்தவ மார்க்கத்தில் இணைக்கப்படுகின்றனர்;

    தெய்வ பயத்தினை “ரெவரென்ஸ்” என்னும் ஆங்கிலச் சொல்லால் எளிதாகப் புரியவைக்கலாம்; “அது பயத்துடனே சேவியுங்கள்; நடுக்கத்துடனே களிகூறுங்கள்” என்றும் சொல்லப்படுகிறது;

    அதாவது நாம் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ள தலைவருக்கு செலுத்தும் கனம் என்றும் சொல்லலாம்;

    கிறிஸ்தவத்தில் பயம் என்ற சொல்லுக்கே இடமில்லை;
    எத்தனை பெரிய பாவியாக இருந்தாலும் அது “ஆட்டோ சங்கர்” ஆக இருந்தாலும் “தீட்சை” பெற்று “சாந்தி” பெற்றார்கள்..!

  356. ஒரு உண்மையான இந்து மற்ற மதத்தினரை தன மதத்திற்கு வாருங்கள் என்றோ, தான் மற்ற மதத்திற்கு மாறவோ எண்ண மாட்டான். ஓம் சாந்தி என்று அமைதியை பற்றியும் அன்பைப் பற்றியும் உலகுக்கு எல்லாம் எடுத்துரைத்த நமது வேதங்களுக்கு நிகராக எந்த மதத்தின் போதனைகளையும் ஒப்பிட முடியாது. கலாச்சார சீரழிவுகளுக்கு உண்மையான இந்துக்கள் உடன் பட மாட்டார்கள். இன்று அவர்களை கலாசார ரீதியாக ஒருங்கிணைப்பது சனாதன தர்மக் கருத்துக்களே. இந்தியாவை கூறு போட நினைக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, மாவோஇச வாதிகளின் எண்ணங்களை முறியடிக்க இந்த நாளில் நான் மிகவும் எதிர் பார்ப்பது ஆதி சங்கரர் அல்லது விவேகானந்தர் போன்ற சக்தி வாய்ந்த ஒரு தலைவரையே. நல்லதை நினைப்போம். நல்லதே நடக்கும். தமிழ் ஹிந்து இணைய தளத்தின் செய்திகளை தமிழ் பேசும் எல்லார்க்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். வாலறுந்த நரிகள் வாலுள்ள நரிகளின் வாள்களை இழக்கச் செய்ய எல்லா தகிடு தத்தங்களும் செய்வார்கள். சிவன் நம்மை காத்துக் கொள்ளும் வல்லைமையை வழங்கப் பிரார்த்திப்போம். செயல் வீரர்களை ஒருங்கிணைத்து செயல் பட்டால் போலிசமய வாதிகளை மக்களுக்கு அடையாளம் காட்டலாம்.

  357. //The same blacks were liberated by the efforts of Abraham Lincoln who was a God fearing christian – Joseph Daniel//

    The Church and the Pope endorsed slavery and that is why Christianity’s true colour was exposed by one of the readers here, mentionoing Bible’s endorsement also to it. And for that, the above answer is given by a reader named Sri Joseph Daniel. Since he is able to read Tamil, I can say he is a convert only, if not in his time , some time back his parents or parents of parents, parents to parents etc., etc., abandoned their original faith for whatever be the reaon.

    It is funny Lincoln’s religious identity is brought to the fore in his action in the abolition of slavery, a social legal action. If so, were NOT there thousands and thousands of Christians including the chrush of the southern states who opposed to his abolition act of slavery? Were NOT there civil wars in America because of that?

    Was NOT Lincoln assassinated on that ground by a Christian?

    Read the history of America before coming with a comment related to the abolitiopn of slavery.
    OK, agreed the “noble” Christian ideology influence Lincoln to abolish slavery but, now why all slaves were made Christians by their masters after they were captured, brought, sold in hordes and bought and owned by those masters? When slavery was abolished, why no step was taken to identify their original faith and given them an opportunity to return to their parent faith? Apply your mind and think, say good bye to the adopted faith and return to your parent faith which is sure help for spiritual advancement. Otherwise, there will be no difference between you and the ex-slaves of America.

    The god as projected by the Bible has many dictates to mankind with authority. Then why did he not give his decree against slavery? Is it NOT escapism to state that Bible only refers slavery but NOT approves of it?

    In Hindu scriptures, there are umpteen guidelines insisting on there is no difference by birth and all are same. There is no mentioning of Jati in Hindu scriptures and Varna has nothing to do with Jati.

    Think in peace and get over from the influence of Bible and Jesus, as both are inconsistent and childish with many flaws .

    The god of Bible and Jesus dictate terms for your social behaviour. The GOD of Hindu does NOT interfere in your social activity but stands to help you advance in spritual enlightenment. This is the basic difference. You are NOT just a physical body. You have NOT just anna maya khosa only. That is the wisdom found out by your ancestors. You have two more bodies that are subtle. You can identify them if you try with spiritual bent of mind. That is what the message you have from yogis like Sri Ramana (who advised to probe as to who is I) and Sri Aurobindo.

    TAMILHINDU, I HAVE A REQUEST TO YOU. WHEN CHRISTIAN AND MOHMEDAN FORCES OPENLY INDULGE IN CONVERTING HINDUS FULL SWING APPLYING SEVERAL CLEVER STRATEGIES UNASHAMEDLY AND ARE ALSO EMBOLDENED TO JUSTIFY THEIR ACTIVITY, HELP MY LONELY CAMPAIGN OF ASKING CHRISTIANS AND MOHMEDANS OF HINDUSTAN TO RETURN BACK TO THEIR PARENT FAITH THAT IS HINDU. SINGULARLY I WAS ABLE TO BRING BACK A FEW CHRISTIANS AND MOHMEDANS TO THEIR PARENT FAITH.BY INDIVIDUAL COUNSELLING. BUT IT IS HIGH TIME WE CAMPAIGNED FOR THAT BY CONDUCTING REGULAR OPEN MEETINGS, DISTRIBUTING HANDBILLS ON ROADSIDE ETC. ARYA SAMAJ WILL HELP ME TO SOLEMNISE HOME COMING TO THOSE WHO WANT TO RETURN BUT I WILL NOT BE FUNDED BY ANYBODY TO RUN THE CAMPAIGN. i AM READY TO SHED MY BLOOD FOR THIS, AS I KNOW WHAT HAD HAPPENED TO SWAMI SHRADDHANANDA AND MANY OTHERS WHO TOOK UP THIS WORK. SADHU CHELLAPPA AND THE LIKES GET HUGE FUNDS FOR THEIR NEFARIOUS ASCTIVITIES. IS THERE ANYONE TO HELP IN MY GENUINE CAUSE?
    Malarmannan

  358. The Bible introduces god as jealus and cruel. He is kind and rewarding only to those who are obedient to him. It is like a strict father showing love to his children who listen to him. There is vast difference between the love as projected by the Bible and the real love of God who gave every thing FREE to every living being without expecting any reciprocation! Don’t be carried away by Hindu mythologies to find an answer to this. Go to Veda and Upanishad to discover Godliness. A HIndu knows he has to follow Sruti (Vedas and Upanishad) and NOT Smruti ( mythologies ).
    MALARMANNAN

  359. I HAVE COME OUT FROM MY FAMILY LONG LONG AGO AND I AM ONLY AN OCASIONAL VISITOR TO MY HOME. I AM SILENTLY SERVING HINDU SOCIETY AND PEOPLE WHO ARE NEARBY ME KNOW THIS. I DO NOT WANT TO ELABORATE. AND I FOLLOW SAMA, DHANA, BEDA AND OCASIONALLY ALSO DHANDA, AS PRESCRIBED BY MY MASTER. THIS IS ALSO NOT A SECRET. IN THE PROCESS, I AM PHYSICALLY ASSAULTED MANY TIMES AT DIFERENT PLACES. I WRITE THIS AS A SELF INTRODUCTION IF ANY READER WANTS TO KNOW MY BACKGROUND.
    MALARMANNAN

  360. Mr.Giladi tells,

    “கிறிஸ்தவத்தில் பயம் என்ற சொல்லுக்கே இடமில்லை;
    எத்தனை பெரிய பாவியாக இருந்தாலும் அது “ஆட்டோ சங்கர்” ஆக இருந்தாலும் “தீட்சை” பெற்று “சாந்தி” பெற்றார்கள்..!”

    அதனால தான் எங்களுக்கு பயமே! எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டும் அதுக்கு மன்னிப்பு இருக்கு என்று நம்பறதே எல்லா தவறுகளும் நடக்க காரணமா இருக்குது. இந்த நம்பிக்கையின் எதிர்வினை என்ன என்பது மேற்கை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

  361. மலர்மன்னன் சார்,
    //I HAVE COME OUT FROM MY FAMILY LONG LONG AGO AND I AM ONLY AN OCASIONAL VISITOR TO MY HOME. I AM SILENTLY SERVING HINDU SOCIETY AND PEOPLE WHO ARE NEARBY ME KNOW THIS. I DO NOT WANT TO ELABORATE. AND I FOLLOW SAMA, DHANA, BEDA AND OCASIONALLY ALSO DHANDA, AS PRESCRIBED BY MY MASTER. THIS IS ALSO NOT A SECRET. //
    நல்லா கதை சொல்லறீங்க.

    சந்தோஷ் கதைய கேட்டாலே உங்க இந்துத்வா நிலைமை தெரியுது. ஒரு மனிதனை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளுவது இந்துக்கல்ன்னு தெளிவா சொல்லிட்டார் சந்தோஷ்.
    இந்துக்களை குறைகூற எனக்கு வருத்தமாதான் இருக்கு. ஆனால், உங்கள் உண்மை நிலையை புரியவைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை.
    அன்புடன்,
    அசோக்.

    (Edited.)

  362. Mr Malarmannan, May Lord Rama shower his graces and blessings on you for your great work. I will contribute to your work. TamilHindu should organise some form of fund raising activity.
    Mr Joseph Daniel, Do you really know the American history? Abe Lincoln, George Washinton and Thomas Jefferson were all guilty of ordering the massacre of native Indians of America. They wanted these “savages to be exterminated”.These people are portrayed as fathers of USA. Please read the book” A little matter of genocide in America from 1492″ by Ward Churchill, a native Indian. If you and Mr Gladys want to claim all the above men as true christians, you are welcome to this claim.

  363. வணக்கம்,

    அய்யா அசோக் அவர்களே ஒரேயடியாக இந்துக்களை ஜாதி பெயரை சொல்லி ஒன்றும் ஜல்லியடிக்க வேண்டாம், ஏன் வெள்ளைக்காரன் ஆண்டானே அப்போது ஒட்டு மொத்த இந்தியனையும் பல இடங்களில் உட்புகாமல் வைத்து இருந்தானே அவன் என்ன இந்து வெறியனா, இன்னமும் மேற்கத்திய நாடுகளில் இன வெறி கொண்டு அலைகிறார்களே அவர்கள் கிறிஸ்துவர்கள் இல்லையா?, இல்லை அவர்களால் வெறுக்கப்படும் ஏனய்யா இந்த வேறுபாடு கறுப்பர்கள் எல்லோருமே கிறிஸ்துவர் கிடையாதா?

    அவ்வளவு தூரம் எதற்கு இங்கே இருக்கும் கிறிஸ்துவர்கள் யாராவது பிற்படுத்த பட்டோரை தன வீட்டுக்குள் அனுமதிக்கிறார்களா? வேண்டுமானால் சர்ச்சுக்குள் விடுவார்கள், விடாவிட்டால் சாயம் வெளுத்து விடும்.

    நேற்று மதியம் ஒரு நிகழ்ச்சி நடந்தது பள்ளி குழந்தைகள் அதுவும் சேரி குழந்தைகள் கூட இல்லை, விளையாடிவிட்டு ஒருவீட்டில் தண்ணீர் கேட்டால் அந்த பெண்மணி தண்ணீரை ஒரு குவளையில் கூட தரவில்லை செம்பு நீரை இருகைகளிலும் வாயருகே வைத்து குடிக்க வைத்தது. இத்தனைக்கும் அவர்கள் பரம்பரையாக கிறிஸ்துவர்கள் இதற்க்கு என்ன சொல்கிறீர்கள்.

    ஏனையா எந்த ஏமாற்று வேலை?

  364. //ஒரு மனிதனை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளுவது இந்துக்கல்ன்னு தெளிவா சொல்லிட்டார் சந்தோஷ்.
    இந்துக்களை குறைகூற எனக்கு வருத்தமாதான் இருக்கு. ஆனால், உங்கள் உண்மை நிலையை புரியவைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை.
    அசோக்//

    ஒருவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை அவரது குணமும் செயல் செய்யும் வைக்கும் தான் தீர்மானிக்கிறது. இதை நாம் தெளிவாகக் கூறி விட்டோம். இதைத்தான் கிருட்டினரும், வள்ளுவரும் கூறியுள்ளனர்.

    ஒருவர் உயருவது தாழ்வதும் அவரவர் குணத்திலும் , செய்கையிலுமே இருக்கிறது – அது கடவுளின் கையில் இல்லை.
    அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.

    குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப நான்கு வகையான பிரிவுகள் , வர்ணங்கள் உள்ளன என்று கிருட்டினர் கூறியே உள்ளார்.

    ஆனால் அவை குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்பது தெளிவாக, அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

    குணத்துக்கும், செயலுக்கும் ஏற்ப என்றுதான் கூறப் பட்டுள்ளதே தவிர பிறப்பின் அடிப்படையில் வர்ணம் என்று கூறப்படவில்லை.

    இதையே வள்ளுவர்

    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமையான்”

    “பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் அவரவர்
    கருமமே கட்டளைக் கல்”

    கூறியுள்ளார்.

    கர்மா – செயல்களில் பல வகையான செயல்கள் உண்டு. அதில் முக்கியமாக சில வகை- மக்களுக்கு அவசியமானவை- மக்களுக்கு அவசியம் இல்லாதவை- ஆனால் கெடுதல் விளைவிக்கக் கூடியவை- மக்களுக்கு கெடுதல் விளைவிக்கக் கூடியவை.

    கிருட்டினர் எந்த இடத்திலும் தச்சனின் மகன் தச்சனாகவும், அரசனின் மகன் அரசனாகவும் , பார்ப்பானின் மகன் பார்ப்பனாகவும் இருக்கவேண்டும் என்று கூறவேயில்லை.

    ஆனால் பிரதமர் தம் மகனை பிரதமராக்குவது போல,
    முதல்வர் தம் மகனை முதல்வராக்குவது போல,
    நடிகர் தம் மகனை நடிகராக்குவது போல,
    எல்லோரும் சுயநலமில்லாமல் “மக்களின் விருப்பத்தின்” பேரில், இப்படிப் பரம்பரை பாத்தியதை கொண்டாடி விட்டனர்.

    ஆனால் நாம் ஆனால் நாம் கூற‌ வ‌ருவ‌து இந்தையெல்ல‌ம் விட‌ முக்கிய‌மான‌ விட‌ய‌ம்.
    எந்த‌ செய‌லை செய்தாலும் அவ‌ர் அந்த‌ தொழிலை எவ்வ‌ள‌வு திற‌மையுட‌னும், நாண‌ய‌த்துட‌னும் செய்கிறார்க‌ள் என‌ப‌தைப் பொருத்தே ச‌மூக‌ம் அவ‌ரை ம‌திக்கும்.

    ஒரு த‌ச்ச‌ர் ந‌ன்றாக‌ மேசை த‌யாரித்துக் குடுத்தால் அவ‌ரைப் பார்ர‌ட்டுகிறோம். ஒரு க‌ண‌க்க‌ர் திற‌மையுட‌ன் செய‌ல் ப‌டாவிட்டால் எந்த‌ ம‌திப்பும் குடுப்ப‌து இல்லை.

    ஒரு பொறியாள‌ர் அவ‌ர் கையூட்டு பெற்றுக் கொண்டு, பால‌த்தை இடிந்து விழும்ப‌டிக் க‌ட்டினால் அவ‌ர் பார்ப்ப‌ன‌ராக‌ இருந்தாலும், வேறு எந்த‌ சாதியின‌ராக‌ இருந்தாலும் அவ‌ர் இழிவான‌வ‌ராக‌வே, கீழ்மையான‌வ‌ராக‌வே நான் க‌ருதுவேன்.

    ஒரு காவ‌ல் துறை அதிகாரி, அவ‌ர் க‌ற்ப்ப‌ழிப்புக் கேசை மூடி அனியாய‌ம் செய்தால் அவ‌ர் பார்ப்ப‌ன‌ராக‌ இருந்தாலும், வேறு எந்த‌ சாதியின‌ராக‌ இருந்தாலும் அவ‌ர் இழிவான‌வ‌ராக‌வே, கீழ்மையான‌வ‌ராக‌வே நான் க‌ருதுவேன்.

    என‌வே குணத்தின், தொழிலை செய்யும் வித‌த்தின் அடிப்ப‌டையில் வேறுபாடுக‌ள் என்பது இய‌ற்க்கையாக‌ உருவாவ‌து. ஆனால் அதை சுய‌ன‌ல‌முடையோர், பிற‌ப்பின் அடிப்ப‌டையில் என்று மாற்றி விட்ட‌ன‌ர்.

    ஆனால் குணத்தின், தொழிலை செய்யும் வித‌த்தின் அடிப்ப‌டையில் கூட‌ வேறுபாடுக‌ள் வேண்டாம்- வேண்ட‌வே, வேண்டாம்- என்பத‌ற்க்காக‌த்தான் நான், எல்லொரும்
    க‌ன‌வானாக மாறும் வ‌கையில், ந‌ல்லொழுக்க‌த்தில், ந‌ல்லெண்ண‌தில், அன்பின் அடிப்ப‌டையில் ஒன்றாக‌ இணைவொம் என்று கூறுகிறென்.

    க‌ள்ள‌ச் சாராயம் காச்சி விற்று பலர் சாகக் காரணமாய் இருப்பவர் கீழானவராகவே கருதப் பட முடியும்.

    நண்பனை நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றி அவன் மனைவியோடு தொடர்பு வைப்பவர் கீழானவராகவே கருதப் பட முடியும்.

    நான்தான் உய‌ர்ந்த‌ சாதி, என்னைத் தொடாதெ என்று கூறுப‌வ‌ன் கீழானவராகவே கருதப் பட முடியும்.

    பிற‌ர் வாயில் பீ தினிப்ப‌வ‌ன் கீழானவராகவே கருதப் பட முடியும்.

    துறவி போல வேடமிட்டு துஷ்டத்தனம் செய்பவர் கீழானவராகவே கருதப் பட முடியும்!

    எனவே ஒருவர் உயருவது தாழ்வதும் அவரவர் குணத்திலும் , செய்கையிலுமே இருக்கிறது – அது கடவுளின் கையில் இல்லை.
    அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.

    ஆனால் எல்லோரயும் நற்குணம் உடையவரக்கி உயர்த்துவது அவசியம்.

    ஆனால் பிறப்பின் அடிப்படையில் ஒருவர் கீழானவர் என்று இந்து மதத்தின் எந்த வேத‌ நூல்களிலும் இல்லை.

    கீழான மனநிலையை உடையவருக்கு பிறந்த மக்கள் மேலான நிலயை அடைவதும், நல்லவருக்குப் பிறந்த ஒருவர் நாற்றமெடுக்கும் செயல்களை செய்வதும் நடந்து வருகிறது.

    அர‌சிய‌ல் வாதிக‌ள், “மான‌மிகு” வாதிக‌ள் சிலர் சாதியை ஒழிக்க விடக் கூடாது என்றே நினைக்கிறார்கள். ஏன் எனில் இப்போது சாதி ஒழிந்து விட்டால், அவர்கள் வேறு எதை வைத்து பிழைப்ப‌து?

    பெரியாரின் பெயரை வைத்து பில்லியன்களைக் குவித்த பலர், இன்னும் இன்னும் அதிக சொத்து சேர்க்க நம்பி இருப்பது சாதிகளைத் தான். சாதிகள் அழிக்கப் பட்டு விட்டது என்றால் அவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடும். மேலும் இந்து மதத்தையும் அவர்கள் எதிர்க்க உபயோகப் படுவது சாதியே.

    தமிழ் நாட்டிலே எந்த அரசியல் வாதியும் சாதி அழிவதை அனுமதிக்கப் போவது இல்லை.

    உங்களுக்கும் எனக்கும் வேறு வேலை உண்டு. இங்கெ எழுதுகிறோம். எழுதுவதோடு செய்யவும் செய்கிறோம். சாதி அமைப்பு அழிவதால், உங்களுக்கோ எனக்கோ பைசா நஷ்டமில்லை.

    ஆனால் அரசியலின் ஆணி வேறாக சாதி மத வேறுபாடு ஆக்கப் பட்டு விட்டது. தேர்தலில் தோற்றால் பல கோடிகள் நஷ்டம். வென்றால் பலப் பல கோடிகள் லாபம்!

    நாங்கள் இப்போது இந்து மதத்தை எப்படி கையாளப் போகிறோம் என்று கூறினால், 4000 வருடம் முன் மனு என்னும் அரசன் எழுதிய நூலைக் குடுக்கிறார்கள். நான் மனுவைப் பின்பற்ற போவது இல்லை என்றால், இல்லை நீ மனுவைத் தான் பின் பற்றியாக வேண்டும் என்று வ‌ற்புறுத்துவ‌து போல‌ உள்ளது.

    எனவே சாதி அமைப்பு முறை இல்லாத வகையில் இந்து மதத்தை சீர் திருத்துவோம் என்றால்- இல்லை , இல்லை அது முடியாது என்கிறார்கள்- இல்லை நீ சாதி அமைப்பை வைத்துக் கொண்டுதான் ஆக‌ வேண்டும் என்று ந‌ம்மிட‌ம் திணிப்பார்க‌ள் போல‌ தோன்றுகிற‌து.

    ஆனால் என் வாழ்க்கை என் கையில். நாங்க‌ள் இந்துதான். நாங்க‌ள் அமைக்க‌ இருக்கும் ச‌மூக‌ம் இதுதான்.

    அத்வ‌தைம், அ துவைத‌ம், இர‌ன்டு அல்ல‌, ஒன்றுதான் என்ற‌ கொள்கையின் அடிப்ப‌டையில் நாங்க‌ள் சிற‌ப்பான‌ ச‌மத்துவ‌ ச‌மூக‌த்தை அமைத்தே தீருவொம்‍- யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்‍ -‍ யார் த‌டுத்தாலும் த‌டுக்க‌விட்டாலும், நாங்க‌ள் சிற‌ப்பான‌ ச‌மத்துவ‌ ச‌மூக‌த்தை அமைத்தே தீருவொம்!

    எனவே ஒருவர் உயருவது தாழ்வதும் அவரவர் குணத்திலும் , செய்கையிலுமே இருக்கிறது – அது கடவுளின் கையில் இல்லை.
    அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.

    எங்க‌ள் வழி ப‌குத்த‌றிவு வ‌ழியே. கூற‌ப் ப‌ட்ட‌, கேட்க்க‌ப் ப‌ட்ட‌ ஒவ்வொரு க‌ருத்தும் உண்மை என்னும் உரை க‌ல்லில் சோத‌னை செய்ய‌ப் ப‌ட்டே அங்கீக‌ரிக்க‌ப் ப‌டும்!
    க‌ட‌வுள் இல்லை என்ப‌து நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌ , ச‌ந்தேக‌த்திற்க்கு அப்பாற்ப‌ட்ட‌ உண்மையானால், அதுவும் ஏற்றூக் கொள்ள‌ப் ப‌டும். வேத‌மோ, கீத‌மோ, ஒவ்வொரு க‌ருத்தும் உண்மை என்னும் உரை க‌ல்லில் சோத‌னை செய்ய‌ப் ப‌ட்டே அங்கீக‌ரிக்க‌ப் ப‌டும்- உண்மை அல்லாத‌து வில‌க்க‌ப் ப‌டும்.
    ச‌த்ய‌ம் ஏவ‌ ஜ‌ய‌தெ, உண்மையே வெல்லும் என்கிற‌ ப‌குத்த‌ரிவு கொள்கை அடிப் ப‌டைக் கொள்கையாகும்.
    எங்க‌ள் நிலைப் பாடு, செய‌ல் பாடு இதுதான்.

    இந்து ம‌தத்தை எதிர்ப்ப‌தோ, “அழிப்ப‌”தோ அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம்.

    ம‌த‌ம் எதிர்ப்பையே உர‌மாக்கி வ‌ளர்கிற‌து!

    8000 வ‌ருட‌மாக‌ அழியாத‌ ஒன்றை இப்பொது நீங்க‌ள் சில‌ர் செர் ந் து அழிக்க‌ முடியும் என்று நினைத்தால் முய‌ற்ச்சி செய்து பாருங்க‌ள். வெளீ நாட்டில் இந்து ம‌த‌ம் இல்லை என்றால் , வெளி நாட்டில் யார் ம‌த‌ங்க‌ளை ஒரு பொருட்டாக‌ நினைக்கிறாற்காள்?

    என‌து கிருத்துவ‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் ஸ்பெயின் நாட்ட்ற்க்கு சுற்றுப் ப‌ய‌ண‌ம் சென்றார். அன்று ச‌ர்ச் சென்றால் , அங்கெ இவ‌ர், ம‌னைவி இரண்டு குழ‌ந்தைக‌ள், உட்ப‌ட‌ மொத்த‌ம் நாலெ பேர்தான். பூச‌னை ந‌ட‌த்த‌ பாதிரியார்க‌ள் 7 பேர் இருந்த‌ன‌ராம். ‌

    இந்து ம‌த‌ம் வ‌ளர்ந்து வ‌ருகிற‌து. அதை விட‌ முக்கிய‌ம் அது செம்மைப் ப‌ட்டு வ‌ருகிர‌து. இன்னும் செம்மை ஆக்குவொம்.

  365. வணக்கம்,

    நண்பர்களே, குறிப்பாக ஸ்ரீ சந்தோஷிற்கு,

    இங்கே நண்பர் அசோக் கூறியது போல் இந்துக்களில் மாத்திரம் அல்ல எல்லா மதங்களிலும் பிரிவினைகள் உள்ளன, அது பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை, அது அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். என்னுடைய எண்ணம் என்ன என்றால் இந்த வருணாசிரம (ஜாதி) சமாசாரம் தொழில் சார்ந்தது என்று எல்லோரும் அறிந்ததே, அறியாதோரும் இன்னமும் உண்டு.

    ஒவ்வருவரும் தங்கள் தொழில் மாற்றத்தினால் இயல்பாகவே வர்ணம் மாறி விடுகின்றனர், பிராமணனே ஆனாலும் அவன் ஒரு வியாபாரம் செய்யின் அவன் வர்ணாசிரம தர்மப்படி அவன் வைசியன் ஆகிறான், ஆனால் உலக பார்வை மற்றும் பரம்பரை பழக்க வழக்கங்கள் ஆகிய வாசத்தினால் அவன் பிராமணனாகவே இருக்கிறான்.

    நாடு, நகரம் முதலான மற்றும் அரசாங்க இடங்கள் அதிகாரிகள் மாளிகைகள் என பல இடங்களை சுத்தம் செய்ய என்று ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் அத்தொழில் செய்யும் பொருட்டு வியாதிகளால் பாதிக்க படுவர் என்றும், அதனால் சமுதாயம் பாதிக்க படலாகாது என்றும் அவர்களை தனியாக குடியமர்த்தினர் நமது முன்னோர்கள். அவர்களின் பார்வையில் சமுதாய நலன் மட்டுமே இருந்ததேயன்றி மனிதருள் ஏற்ற தாழ்வு கருதவில்லை.
    அவர்களை தாழ்த்த பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லவில்லை,

    தாழ்த்த பட்டவர்களாய் தன்னை நினைத்து கொண்டுள்ள நண்பர்களே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள், தாழ்வு மனப்பான்மை கொள்ளாதீர்கள், உயர்ந்த குடியில் பிறக்க வில்லை என்று வருந்தாமல் உங்கள் குடிகளை உயர்த்துங்கள்.உங்களை மதியாத சிலரை நீங்கள்மதியாதீர்கள்.

    சமுதாயத்தில் நீங்கள் மிகவும் போற்றத்தக்கவர்கள், ஏனெனில் நீங்கள் இல்லையேல் நாம் சுகாதாரமாக வாழ இயலாது. உண்மையில் நாட்டிற்காக தன்னை உண்மையாகவே அற்பநித்தவர்கள் நீங்கள்தான்.

    ஆனால் இன்று நீங்கள் வெவ்வேறு தொழில்கள் செய்து கொண்டுள்ளீர்கள் எனவே நீங்கள் அந்த வர்ணாசிரமம் விட்டு வெளியேறி விடுகிறீர்கள். இன்று பல இடங்களில் இந்தப் பிரச்சினை இல்லை சில இடங்களில்தான். இன்னமும் சில நாட்களில் அந்த பிரச்சினையே இல்லாது போய்விடும்.

    உங்களை என்றும் சுத்தமாக வைத்திருங்கள், உங்களிடம் உள்ள கொடிய போதை மற்றும் சில தீய பழக்கங்களை விட்டு விடுங்கள், ஏனெனில் மாற்றார் உங்களை தள்ளி வைக்க இவைகளும் சில காரணங்களே.

    சிலர் சொல்வார்கள் சொந்த மதத்தில் இருந்து என்ன சாதித்தோம் என்று, எந்த மதத்தில் இருந்தாலும் உங்களின் பசிக்கு நீங்களே உண்ணவேண்டும் எந்த கடவுளும் வந்து வயிற்றை நிரப்பாது, எனவே நீங்கள் முயன்றாலன்றி சாதனை என்பது பேச்சளவில்தான். தன்னம்ம்பிக்கையோடு முயன்றால் எதுவும் சாத்தியம். வெறும் மத மாற்றத்தால் உங்கள் வாழ்க்கை மாறாது, மாறுவது உங்கள் பெயர் மட்டுமே.

  366. நண்பர் பாஸ்கர்!
    //அவ்வளவு தூரம் எதற்கு இங்கே இருக்கும் கிறிஸ்துவர்கள் யாராவது பிற்படுத்த பட்டோரை தன வீட்டுக்குள் அனுமதிக்கிறார்களா? வேண்டுமானால் சர்ச்சுக்குள் விடுவார்கள், விடாவிட்டால் சாயம் வெளுத்து விடும்.//
    சர்ச்சுகளிலும் விடுவதில்லையே! ஏறையூர் சம்பவத்தை மறந்து விட்டீர்களா என்ன? அந்தப் பிரச்சனை இன்னும் தீராமல் தானே இருக்கிறது!
    அப்படியே பல ஊர்களில் சர்ச்சுக்குள் அனுமதித்தாலும் உட்காரும் இடம் தனியாக ’ஒதுக்கப்பட்டே’ இருக்கிறது. சர்ச்சுகளில் தான் இப்படி என்றால்….பள்ளிகளிலும் அதே கதை தான். முதலில் பள்ளிகளில் சேர்த்துக் கொள்வதே இல்லை….அப்படியே சேர்த்துக் கொண்டாலும் அங்கும் ’தனி’ கவனிப்பு தான்.
    அராஜகத்தின் உச்சக்கட்டம் இடுகாட்டில். தலித்துகளுக்கு என்று தனியாக இடுகாடுகள். மற்ற ஜாதி கிறுஸ்துவர்களைப் புதைக்கின்ற இடங்களில் தலித்துகளுக்கு இடம் கிடையாது.

  367. //மாறுவது உங்கள் பெயர் மட்டுமே.//
    எனக்கு வாழ்க்கை மாறியது. பெயர் மாறவில்லை. இயேசுவை ஏற்று கொண்டதால்.
    உங்கள் கண் முன்னாள் நான் ஒரு உதாரணம் இருக்கிறேன். இருந்தாலும் பொய் பேசுகிறீர்கள் நண்பர்களே.

    அன்புடன்,
    அசோக்

  368. //சர்ச்சுக்குள் விடுவார்கள், விடாவிட்டால் சாயம் வெளுத்து விடும்.//
    சரி, நீங்கள் உங்கள் கொவிலுக்குல்லாவது விடுங்களேன். நான் எதுவும், சொல்லிவிடவில்லை. மதம் மாறிவிடுவாரோ என்று, பொத்திபொத்தி வைக்கிறீர்களே அந்த சந்தோஷ்தான் சொன்னார்.

    //ஆனால் இன்று நீங்கள் வெவ்வேறு தொழில்கள் செய்து கொண்டுள்ளீர்கள் எனவே நீங்கள் அந்த வர்ணாசிரமம் விட்டு வெளியேறி விடுகிறீர்கள். இன்று பல இடங்களில் இந்தப் பிரச்சினை இல்லை சில இடங்களில்தான். இன்னமும் சில நாட்களில் அந்த பிரச்சினையே இல்லாது போய்விடும்.//
    எவ்வளவு படித்து இருந்தாலும், எந்த ஒரு அரிஜனனுக்கு பிராமணன் பெண் கொடுக்க முன் வருகிறான்? Matrimonial site களை பாருங்கள் நன்றாக தெரியும், உங்கள் வருணாசிரமம்.
    அன்புடன்,
    அசோக்

  369. நண்பர்களே,
    நிறைய பேர் வர்ணாசிரமத்தை பற்றி பல நல்ல விளக்கங்களை கொடுத்தீர்கள். ஆனால், நடைமுறையில் இது இல்லை. அது வரவேண்டும் என்றுதான் நானும் போராடுகிறேன். நான் நல்ல மதிப்பெண் எடுத்து பொறியியல் படிக்க சென்றாலும், என்னை கோட்டாவில் வந்தவன் என்றுதான் குறிப்பிடுகிறீர்கள். அவர்களை மதிக்கவேண்டாம் என்று கூறுகிறீர்கள். நான் மதிக்கவில்லை, ஆனால் அவர்களை ஒதுக்கவும் முடியவில்லை.
    கிறிஸ்துவர்களே,
    எங்கள் இந்த நிலையை வைத்து, நீங்கள் காரியம் சாதிக்கலாம் என்று மனப்பால் குடிக்காதிர்கள். மேலே குறிப்பிட்டு இருப்பது எங்கள் சகோதர்களுக்குள் இருக்கும் பிரச்னை, குடும்ப பிரச்னை. நாங்களே இதை தீர்த்துக்கொள்வோம். யார் தலையீடும் தேவை இல்லை.
    நட்புடன்,
    சந்தோஷ்.

  370. //எனக்கு வாழ்க்கை மாறியது. பெயர் மாறவில்லை. இயேசுவை ஏற்று கொண்டதால்.
    உங்கள் கண் முன்னாள் நான் ஒரு உதாரணம் இருக்கிறேன். இருந்தாலும் பொய் பேசுகிறீர்கள் நண்பர்களே//

    இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதாக கூறுவது நீங்கள் அறியாமல் சொல்லும் பிழை.

    ஏனெனில் நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக செயல் படுகிறீர்கள்.

    இயேசு கிறிஸ்து எதிர்த்து நின்ற, திருத்த நினைத்த காட்டு மிராண்டிக் கொள்கைகளை இயேசு கிறிஸ்துவின் பெயராலே பிரச்சாரம் செய்கிறீர்.

    இயேசு கிறிஸ்து அறைக்குள்ளே போய், அந்தரத்திலே தொழுவு என்றால், மைக் செட் போட்டு காதைப் பிளக்கிறீர்கள். இயேசு சென்ற பிறகும் விடாமல் ஆணி அடித்து துன்புறுத்துகிறீர்கள்.

    “நீங்கள் புற ஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டங்களில் பிரவேசிக்கமலும், காணமற் போகிய ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்க்குப் போங்கள்” என்று இயேசு கிறிஸ்து கூறினால்,

    புற ஜாதியினராகிய இந்தியரிடத்திலே வந்து பிரச்சாரம் செய்கிறீர்கள்- அதுவும் இயேசு கிறிஸ்து எதிர்த்து நின்ற, திருத்த நினைத்த காட்டு மிராண்டிக் கொள்கைகளை இயேசுவின் பெயராலே பிரச்சாரம் செய்கிறீர்!

    உங்களால் யூதர்களை இயேசு என்பவர், யூதர்களை ரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்து என்று கூற வைக்க முடியுமா? நீங்கள் காணமற் போகிய ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்க்கு சென்று பிரச்சாரம் செய்யத் தயாரா?

    நீங்கள் சரியான சாட்சியாக இருக்கிறீர்கள்- இயேசுவின் பெயரால் சைத்தானியக் கருத்துக்களைப் பரப்புவதற்கு!

  371. I do not understand the above comment by Ashok Kumar. He had said earlier that he has faith in his religion and will follow it..That is called BLIND FAITH. There is no reasoning in blind faith. No amount of logic or quoating his own Bible will change him.Though I do admire his tenacity in holding on to his beliefs. I WISH HIS FOREFATHERS HAD THE SAME TENACITY IN THE PAST IN HOLDING ONTO THEIR HINDU BELIEFS AS HIM.Had they done so, Mr A.Kumar would have been a strong defender of our Sanatana Dharma.
    All forgiven AK, come back to your mother religion, the religion of your forefathers. You are more than welcome in our Hindu fold.!!Come back home PLEASE!!!!

  372. //எனக்கு வாழ்க்கை மாறியது. பெயர் மாறவில்லை. இயேசுவை ஏற்று கொண்டதால்.
    உங்கள் கண் முன்னாள் நான் ஒரு உதாரணம் இருக்கிறேன். இருந்தாலும் பொய் பேசுகிறீர்கள் நண்பர்களே.//

    யார் பொய் பேசுவது? நீங்கள் சொன்னதெல்லாம் பொய் என்று அன்பரசன் நிரூபித்ததும் ஓடிய நீங்களா?

    இந்த மதமே பொய் என்பதால், இதில் இருப்பதாக கூறும் நீங்களும் கூசாமல் விடாமல் பொய் பேசுவது ஆச்சரியமாக இல்லை.

  373. என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே ஜல்லி அடிக்கிறார் சகோதரர் அசோக்.

    பிராமண வகுப்பை சேர்ந்த பெண்கள் ஒதுக்கபப்பட்ட பிரிவை சேர்ந்த இளைங்கர்களை திருமணம் செய்வது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

    நான் பல உதாரணங்கள் சொல்ல முடியும். பெயர் , இடம் எல்லாம் சொல்லலாம். ஆனால் மண மக்களின் சொந்த வாழ்க்கையை பகிரங்கப் படுத்தி எழுதுவது சரியல்ல.

    சாதிப் பிரிவுகள் முற்றிலும் மறைந்து விட்டன என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் சாதிப் பிரிவினைகள் வேகமாக மறைந்து வருகின்றன.

    இந்து மதத்தில் உள்ள சாதி என்னும் ஒரே காரணத்தை வைத்து ஜல்லியடித்து வரும் அசோக் போன்ற சகோதரர்கள், அந்த சாதிப் பிரிவினைகள் மறைந்து விட்டால் என்ன செய்வார்கள்? அய்யகோ என் செய்வேன்?

  374. மதிப்பிற்குரிய மலர்மன்னன் ஐயா, திருச்சிகாரர் ஐயா,பாஸ்கர் ஐயா உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    இங்கே புரிந்தும் புரியாமல் போல் இருப்பவர்கள், புரிந்து கொள்ளவே முயற்சிக்காதவர்களை பற்றி இனி நாம் பேசி பயன் ஏற்பட போவதில்லை.

    அதனால் அதை விட்டு விடவேண்டிய அவசியமும் இல்லை. Nammudaiyathu Defense செய்து கொள்ள mattume !

    போனவர்களை பற்றி கவலை பட்டு இனி என்ன ஆக போகிறது. அது அவர்களின் கர்ம வினை.

    தமிழ் ஹிந்து.காம் வளர என் வாழ்த்துக்கள் இந்த வெப் தளத்தை மிக பெரிய அளவில் பரப்ப தேவையானவற்றை செய்ய நடத்துபவர்கள் யோசிக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்களை வெளிப்படுத்தி கொள்ள ‘உணர்வு’ போன்ற பத்திரிகைகளை நடத்துகிறார்கள். அது போல ஹிந்துகளின் சமுக அரசியல் உணர்வை வெளிப்படுத்த தமிழில் ஒரு பத்திரிகை இல்லாதது ஒரு பெரும் குறையே.

    அன்புடன்,
    Pratheep Perumal

  375. ///பிராமண வகுப்பை சேர்ந்த பெண்கள் ஒதுக்கபப்பட்ட பிரிவை சேர்ந்த இளைங்கர்களை திருமணம் செய்வது சர்வ சாதாரணமாக நடக்கிறது.///

    ஆம் திருச்சிக்காரன் அவர்களே!

    இது அப்படியே தொடர்ந்து பிராமண கலாச்சாரமே எதிர்காலத்தில் இல்லாமல் போகவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டது போலத்தான் சினிமாக்காரர்கள் படம் எடுக்கிறார்கள்.

    எல்லா ஹீரோக்கும் பிராமண கதாநாயகி இல்லாமல் நடித்தால் பெண்டாட்டி சோறு போடமாட்டாள் என்னுமளவுக்கு களம் இறங்கியிருக்கிறார்கள்.

    சமீபத்திய ஐந்தாம் படை படத்தில் ஒரு பிராமணப்பெண் கதாபாத்திரத்தை தாவணியில்லாமல் மார்பகங்கள் தெரிய ஓடுவதுமாதிரியும், சுந்தர் சி மாமி, மாமி என்று ஜொள்ளு பொங்க துரத்துவதும்…பிராமணர்கள் முகம் சுளிக்க நடத்தப் படுகிறது சினிமா கலாச்சாரம். சுந்தர் சி ஏன் தன் மனைவி குஷ்பூவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து மார்பகம் தெரிய ஓட விடவில்லை. தன் பெண்டாட்டி , தன் இனம் என்றால் அதற்கு வெட்கப்படுவார்கள். மற்றவர்களைப் பற்றி என்ன கவலை.

    இப்படி பிராமணர்கள் சொந்த ஜாதி ஆண்களை நினைத்தே பார்க்கக் கூடாது என்று பிராமணப் பெண்களுக்கு தமிழ் சினிமாவில் கலப்புத்திருமணம் தொடர்கிறது. அப்படியே சமூகத்திலும் நிறையவே நடக்கிறது. பிராமணராக வாழ்ந்து பார்த்தால் தான் அதன் கஷ்டம் புரியும். பலருக்கு அவர்களை குறை சொல்வது மட்டுமே தொழிலாதலால் புரிவதில்லை போலும்.

    அது மட்டுமா, அந்தப் படத்தில் நடராஜர் சிலையை சுந்தர் சி கீழே போட்டு உடைப்பதைக் காட்டுகிறார்கள். அந்த காட்சிக்கு அவர் அணிந்திருப்பது கருப்புச் சட்டை என்பதை கவனியுங்கள். கருப்புச் சட்டை போட்டால் ஏதோ சப்போர்ட் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை போலிருக்கிறது.

    என்னே வீரம் இவர்களுக்கு!

    (Edited.)

  376. //இந்து மதத்தில் உள்ள சாதி என்னும் ஒரே காரணத்தை வைத்து ஜல்லியடித்து வரும் அசோக் போன்ற சகோதரர்கள், அந்த சாதிப் பிரிவினைகள் மறைந்து விட்டால் என்ன செய்வார்கள்? //

    கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவேன்.

    With Love,
    Ashok

    Edited and Published.

  377. அசோக் குமார் அவர்களே,

    நீங்கள் மகிழ்ச்சி அடைய ஆரம்பித்து விடலாம்.

    எல்லா பிரிவு மக்களும் அறிவு முதிர்ச்சி பெற்று வன்முறையைக் கைவிடவும்,

    நல்லெண்ணத்தின் அடிப்படையில்,

    அன்பின் அடிப்படையில் சமரச சமூகத்தை உருவாக்கவுமான செயல்கள் நடை பெற்று வருகின்றன.

  378. I ahve been reading with concern about the comments made here with regard to Varna and jati, in the context of untouchabilty and keeping Dalits aloof from other dwelling places in villages and townships.

    There were individual locations for each labour oriented segments of the society in every village /township for the convenience and not for discrimination. And no segment was kept far away from others, as if that should be discriminated.

    There is lot of confusion even among Hindus about Varnashrama Dharma and caste system. This is because the Varna division had been very cleverly super imposed on Jati system later on by vested interests (Sri Santosh, Kindly NOTE this). Giving opinions on the basis of individual inference about Varna and Jati will only lead to further confusions. Varna and Jati should not be mixed.There is no reference to Jati system in Vedic age, which is the ancient HIndu society. There is also no reference that a section of the society was kept outside others’ dwelling places on the basis of Varna, as if that section was quarantined because that section was engaged in scavenging or such kind of physical labour. It is a wrong notion that a particular section was kept outside from other communities, away from the village/township.

    The system of scavenging came into being only after the invasion of alien Mohmedans who settled in Hindustan after aggression. Until such time, there was no need of any particular section to attend to scavenging in a HIndu society. This is proved from the ancient town planning references. Even in palaces, there was no provision for toilets. The human wastes were let on the soil to enrich it. It was a simple and healthy practice. The waste would be covered by sand and mud after easing so that it was absorbed by the soil. Those who contributed to the society with their physical faculties were also living within the society only. It was only after the Mohmedan influence, separating a section of the society from other sections and keeping it far away came into being. The jati system is also a later introduction and the vested interests in the society mixed it with Varnashrama for their advantage applying religious sanction to it.. It is quite common for the vested interests to take advantage and exploit other sections in any society, whether Hindu or otherwise.
    The segragation is quite common every where. Even in the allotment of Govt quarters, you will find separate quarters for officers and last grade servants. Especially in defence you will find the family of officer cadre would never mingle with the family of ordinary soldiers. Over the years, this kind of .high and low mentality takes root in a community.
    Sri Ramanujacharya, the greatest social reformer of HIndu society took initial steps to abolish caste divisions in the society. He took non Brahmins for his teachers and served them in gurukula fashion. Also, he made all Dalits wear sacred thread and become Brahmins following Sri Vaishnava Sampradaya. Dalits were referred as Thiruk Kulattaar. In order to remove the superior and inferior complexes among the sections, many Dalits were given high rank among devotees. In Tamil society, you will find references for Idankai and Valangkai. These were two different caste segments. Dalits were included in these segments, which proves they were not kept aloof from the society.
    You have to study a lot and do research on this subject before coming with an opinion. I therefore request everybody as NOT to give individual opinons aboput Varna and Jati unless they have made a thorough study on the subject. I do NOT NOT claim I am an authority on this but I have made a very elaborate study on Varna and Jati, spending many years in refering various sources. You know the present day Keralam was Tamil Chera Nadu. Where from the caste of Namboodiris, an exclusive section to Kerala society came into being there only with its own customs ? What made them differ from the Brahmins of other parts of Tamilnadu in many social orders ? Why untouchability was practised more vigourously in Keralam than in any other part?
    REMEMBER, In Hindustan, Keralam was the first gateway to the two alien religions that is Christian and Mohmedan. Think about this factor deeply and many truths will unfold gradually.
    Also remeber, by the Jewish community, from where Christianity originated, non Jews like Samaritans were treated as untouchables. Eevn in the life of Jesus, there is a reference to the practice of untochability in his days among Jews.

    MALARMANNAN

  379. Jesus made it amply clear that “not a single word from Torah can be changed and his visit is for this”

    As per Jewish Laws-

    Only Levi Caste can become Jewish Padri and enjoy temple donations.

    Only Judah’ caste can take King Postions, and read Ezra to know about further.

    Varna and caste or different. Caste must be controlled and that is already happening but for Reservations.

  380. கல்வியறிவு பெற்ற இளம்பெண்கள் சுயமாக முடிவெடுத்து வேற்று இன பையன்களை மணமுடிக்கின்றனர்;

    ஏற்றுக்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சில சம்பந்தங்களில் பணமும் அந்தஸ்துமே அதற்குக் காரணமாக இருந்துள்ளது; இது சமுதாய மாற்றத்துக்கு வழிவகுக்காமல் மேலும் கல(க்)கமே வரும்;

    ஆனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் இதனை ஏற்றுக் கொள்ளுமானால் இரு வீட்டார் சம்மதத்துடன் இது நடந்தாலே சாத்தியம்;

    (Comment edited & published)

  381. I thank Sri Deva Priya for sharing his/her knowledge. The caste system and discrimination on the basis of caste has presence in various forms in many societies with no exception to modern times.

    MALARMANNAN

  382. Devapriya Solomon,
    for you also, you cannot understand the Bible with out the Help of Holy Spirit. Your worldly knowledge will not help you to understand Bible. Not only me, no one can make you understand about the Bible unless you change your attitude. So, try to work on your attitude, if at all you want to know something from Bible.
    God Bless you,
    Ashok

  383. Devapriya Solomon,
    for you also, you cannot understand the Bible with out the Help of Holy Spirit. Your worldly knowledge will not help you to understand Bible. Not only me, no one can make you understand about the Bible unless you change your attitude. So, try to work on your attitude, if at all you want to know something from Bible.
    God Bless you,
    Ashok

    I certainly have Divine blessing and have learnt – Greek, Hebrew and Latin words to interpret the frauds behind church and bible.

    HAS ANY HUMAN BORN MAN Call another man Pig or Dog – Please reply that first. One who call another man as PIG is HIMSELF PIG.

  384. இத்தாலியில் வாழும் இந்தியர்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாட அரசிடம் உரிய முறையில் விண்ணப்பித்து அனுமதி பெற்றபின் இந்தியாவின் அயல்நாட்டு தூதரை அழைத்து அவர் வருவது உறுதி செய்தபின் அனுமதியை ரத்து செய்துள்ளது. இது சென்ற ஆண்டும் நடந்ததே. இது பற்றி பத்திரிக்கை செய்தி இங்கே.

    https://www.dailypioneer.com/205141/In-Rome-Durga-is-not-welcome.html

    மக்களுக்கு தங்கள் பண்டிகை கொண்டாட வாங்கிய அனுமதியை மறுக்கும் ஐரோப்பிய நாடுகள்.

    சர்ச் போடும் பொய்களுக்கு பின் அலையும் இந்திய அரசியல்வாதிகள் இங்கே.

  385. Dear Devapriya Solomon,
    your divine blessings and knowledge is shown very much in blogs. Keep it up.
    God Bless you,
    Ashok

  386. Ashok kumar Ganesan
    28 September 2009 at 9:35 pm
    Dear Devapriya Solomon,
    your divine blessings and knowledge is shown very much in blogs. Keep it up.
    God Bless you,
    Ashok

    God Bless you Ashok to think and get TRUTH. YOU HAVE NOT ANSWERED
    HAS ANY HUMAN BORN MAN Call another man Pig or Dog – Please reply that first.
    One who call another man as PIG is HIMSELF PIG.

  387. //போனவர்களை பற்றி கவலை பட்டு இனி என்ன ஆக போகிறது. அது அவர்களின் கர்ம வினை. -Sri Pradeep Perumal//
    No, we have to worry about “Ponavarkal.’ It is NOT their karma vinai but our karma vinai because we lost them due to our carelessness and irresponsibilty.
    When a shepperd has one hundred sheep and lost one while gracing, he would be worried about that one missing sheep and NOT be satisfied for having ninety nine sheep in tact. If he feels happy that only one sheep could had taken away by a woulf or jackal, he is NOT a good shepperd.
    MALARMANNAN

  388. I think it is a waste of time to convince/ argue logically with this Ashok Kumar . When you quoate Bible, he says he has no time to teach Bible classes. Apparently, he only can understand Bible becaue, LADIES AND GENTLEMEN, HE HAS THE THIS HOLY SPRIT SITTING NEXT TO HIM AND HELPING HIM! When cornered in arguments, he changes the topics or blesses you.he will not answer to the questions like( from Bible, the true word of God) 1) God of Bible created this world about 5000 years ago.2) The earth is flat . 3) Noaha took one species of ALL animals of the earth each in his boat 4) God created mankind for His glory ( obviously He was lacking in glory prior to creation and also He wanted fans who always wanted to praise Him, in other words He was VAIN) 5) All the contradictions in Bible, of eternal Hell and Heaven, the angry, egocentric God, slavery in Bible and last but not the least the atrocious massacre of entire civilizations by the God fearing Chrisatians wherever they went. No Sir, we are to be blamed,because we do not understand this Bible,

  389. பிரதீப் பெருமாள்
    // என் ஸ்டைல்-la சொல்லனும்னா “போடா டுபாகூறு //

    இன்னாதிது…?
    சின்னபுள்ளத்தனமா இருக்கு..!

    தகவல்:
    காட்டுமிராண்டித்தனமான யூத மார்க்கத்தினைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் கிறிஸ்தவ தேசவிரோதிகளின் புத்தி தெளிய அண்மையில் தமிழ்நாட்டில் பிரபலமான நகரத்தில் நடந்த சவுக்கடித் திருவிழாவுக்குக் கொண்டுச் சென்று “பேய்” ஓட்டியிருக்க‌வேண்டும்..!

    அங்கே பிள்ளைப் பேறு முதலாக சகல தேவைகளுக்கும் பெண்களுக்கு பூஜாரி சவுக்கடி கொடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறார்..!

    வாழ்க இந்து மத..மத..மதம்..!

  390. YES, Sri Galdy, I have seen that most indecent and humiliating practice of whipping, exclusively on women in a particular temple. This kind of exploitation is present in every field, need NOT be Hinduism specific. There were many more such undesirable practices among Hindus all over but have been dropped and forgotten in course of time. This whipping of women and breaking coconut on the scalp are NOT happening in every temple to claim that they are the prescribed rituals in Hinduism. As such, it is NOT a religious BUT social custom without any approval of the religion. This must have been imposed by somebody at certain point of time in some places on innocent and ignorant people. This practice will also vanish in course of time, as other undesirable social practices vanished from Hindu society.
    MALARMANNAN

  391. நண்பர் கிலாடி,
    பிரதீப் பெருமாள் என்ன வேண்டுமானாலும் சொல்லிகொள்ளட்டும். நட்பு முறையில் சொன்னதாக எடுத்துக்கொள்கிறேன்.

    ராமா,
    நான் சொன்ன பதில்களை பிரசுரிக்கப்படவில்லை. என்ன செய்வது.
    //HE HAS THE THIS HOLY SPRIT SITTING NEXT TO HIM AND HELPING HIM!//
    நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.
    //This link is for Ashok Kumar from Newsweek.Apparently Americans are all turing towards Hinduisim!//
    இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    //யார் பொய் பேசுவது? நீங்கள் சொன்னதெல்லாம் பொய் என்று அன்பரசன் நிரூபித்ததும் ஓடிய நீங்களா?//
    நான் பெரிய வீரன் எல்லாம் கிடையாது ஐயா. ஆனால் இதுவரை ஓடி போகவில்லை. எனது வார்த்தைகள் இங்கு பிரசுரிக்கப்படவில்லை அவ்வளவுதான். உங்கள் வார்த்தைகள் பல நேரங்களில் வலிக்கத்தான் செய்கிறது ஓடி போனாலும் ஆச்சரியம் இல்லை.

    அன்புடன்,
    Ashok

  392. Mr G;adys, may be you will answer to the above questions.
    As per your bible 1) Is the earth is flat? 2) Did God create heaven and earth in 6 days 5000 years ago for his glory, as described in Bible? 3) Did Noah take a pair of each specimen present on earth?
    For all other intresting stuff in Bible , please have a look into this.
    https://www.youtube.com/watch?v=Y_sb2fSRByI
    https://www.youtube.com/watch?v=8RV46fsmx6E
    Gladys, may your ignorance continue to grow in the fertile land of Christiandom!

  393. //HAS ANY HUMAN BORN MAN Call another man Pig or Dog – Please reply that first.
    One who call another man as PIG is HIMSELF PIG.//

    Do not give what is holy to the dogs; nor cast your pearls before swine, lest they trample them under their feet, and turn and tear you in pieces.
    நண்பர் தேவப்ரிய, மேல குறிப்பிட்ட வசனத்தை குறித்து பேசுகிறார் என்று நினைக்கிறேன். ஐயா, தமிழில் ஒரு பழமொழி உண்டு, “கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை” என்று. தமிழில் கழுதையையும் கர்ப்பூரத்தையும் வைத்து யாரோ சொன்னதைத்தான், இயேசு பன்றியையும் முத்துக்களையும் வைத்து சொன்னார். கழுதைக்கு எப்படி கர்ப்பூரத்தை பற்றி தெரியாதோ, அதேபோல் பன்றிக்கும் முத்துக்களை பற்றி தெரியாது.
    இதில் நீங்கள் உணர்ச்சிவசப்பட ஒன்றும் இல்லை. அவர் உங்களை குறித்து ஒன்றும் இங்கு சொல்லவில்லை.
    அன்புடன்,
    அசோக்

  394. //ஹாய் வணக்கம் திரு.டேனியல் ,

    எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இயேசு மேலயோ கிறிஸ்டியன் மேலயோ இல்லைங்க. என்னோட ஆதங்கம் எல்லாம் அது நமக்கு எங்கே இருந்து வந்துட்டு இருகோ அங்கேயே அது தோத்து இருக்கிறப்போ அது எப்படி நம்மளை கரை சேர்க்கும் என்பது தான். அதோட அவசியம் நமக்கு என்ன என்பது தான். இங்கேயே நாம சொர்க்கம் போறதுல இருந்து கடவுள் அடியிலே போய சேர்ற வரைக்கும், ஏன் கடவுல ஆக தேவையான எல்லா தத்துவங்களும் இருக்குறப்போ எதுக்கோ எங்கேயோ யாருக்கோ வந்த தத்துவம் நமக்கு எதற்கு என்பது தான்ga.

    இன்னிக்கு அந்த அளவுக்கு பாதிப்பு வரலைங்க ஆனா இது ரொம்ப அச்சுன்ன நம்மோட கலாச்சாரமும் அமெரிக்க ஐரோப் மாதிரி ஆயுடுமோ என்ற அடுத்த தலைமுறை பற்றிய பயம் தான். ஆகாது என்று தைரியமாக சொல்ற அளவுக்கு கிறிஸ்தவம் இல்லைங்க. இப்ப நடகரதை பாக்கறப்பவே தெரியுதுங்க.

    தமிழ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க ” தாய போல பிள்ளை நுல போல சேலை’ என்று. நமக்கு கிறிஸ்தவம் ஆக்ரோசமா வந்துட்டு இருகிற மேற்கை பாத்தே நாம கிறிஸ்தவத்தை இன்னும் ஆக்ரோசமா எதிர்கிரோமுங்க. கர்த்தருக்கு தெரியுமுங்க நாங்க ஏன் இதை செயுரோமுன்னு. நாங்க செய்வோமுங்க. நீங்க அடங்கற வரை செய்வோமுங்//

    Again and Again you do the same mistake by equating christianity with white west. Can you say that Indian society is spoilt because of Indian Christians here. Again I would like to say that christianity has not failed there in the west, it is because of the people’s mindset there to think that they can achieve anything with their money. They have bacome much unchristian and that’s why they are spoilt.
    We christians in India, despise the west because of the fact that they have come far away from God. Many habits they have are not prescribed by the teachings of christ.

  395. //தகவல்:
    காட்டுமிராண்டித்தனமான யூத மார்க்கத்தினைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் கிறிஸ்தவ தேசவிரோதிகளின் புத்தி தெளிய அண்மையில் தமிழ்நாட்டில் பிரபலமான நகரத்தில் நடந்த சவுக்கடித் திருவிழாவுக்குக் கொண்டுச் சென்று “பேய்” ஓட்டியிருக்க‌வேண்டும்..!

    அங்கே பிள்ளைப் பேறு முதலாக சகல தேவைகளுக்கும் பெண்களுக்கு பூஜாரி சவுக்கடி கொடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறார்..!

    வாழ்க இந்து மத..மத..மதம்..!//

    இயேசு கிறிஸ்துவின் பெயராலே காட்டு மிராண்டிக் கருத்துக்கள் பரப்பப் படுவதாக நான் தொடர்ந்து எழுதி வருகிறேன் அல்லவா,

    அதற்கு பதிலடியாக இந்து மதத்தின் “காட்டு மிராண்டி” தனங்களை அம்பலப் படுத்தி, என்னை மூக்குடைக்க வைக்க முயற்சி செய்கிறார் அருமை சகோதரர் க்லாடியார் அவர்கள்!

    அருமை சகோதரர் க்லாடியார் அவர்கள் குறிப்பிடும் “காட்டு மிராண்டி தனம்” என்ன தெரியுமா?

    நாமக்கல் மாவட்ட்டத்தில் பவித்திரம் என்ற வூரிலே கோவில் திரு விழா நடக்கிறது.

    அந்த விழாவிலே வரிசையாக பல பெண்கள் உட்கார்ந்து கையைத் தூக்கிய வண்ணம் உள்ளனர்.

    பூசாரி நடந்து வந்து வரிசையாக உட்கார்ந்து இருக்கும் பெண்களின் தூக்கிய கரங்களில் ஒரு முறை சாட்டையால் அடிக்கிறார். பிறகு அந்தப் பெண்கள் கும்பிட்டு விட்டு செல்கின்றனர்.

    இந்த சாட்டையடிப்பு நிகழ்ச்சி காட்டயத்தின் பேரில் நடத்தப் படுவதில்லை. பெண்கள் தாமாகவே வந்து வரிசையில் அமர்ந்து சாட்டையடி பெற்றுக் கொள்கின்றனர்.

    இந்தப் பெண்களும் சரி, அந்தப் பூசாரியும் சரி, இந்த உலகத்தில் இருக்கும் யாருக்கும் கெடுதல் நினைக்கவில்லை. பிறர் அழிய வேண்டும், தான் பிறரின் இடத்தை அபகரிக்க வேண்டும் என்று கேட்டு சாட்டையடி வாங்கவில்லை. தங்களைத் தாங்களே ஆக்கினைக்கு உள்ளாக்கிக் கொள்கின்றனர்.

    திருவிழாவுக்கு வந்த பல பெண்கள் இந்த வரிசையில் அமரவோ, சாட்டையடி வாங்கவோ இல்லை. விருப்பப் பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்!

    விருப்பம் இல்லாதவர்கள் சாமியைக் கும்பிடுவது, திருவிழாவை வேடிக்கை பார்ப்பது இப்படி இருந்து விட்டு வூர் போகின்றனர்.

    இப்படித் தான் ஒரு முறையோ, இரு முறையோ சாட்டையடி வாங்கித் தன்னை சிறிது துன்புறுத்திக் கொல்வதேயல்லாமல், மற்ற யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காத , மனதாலும் தீங்கு நினையாத ஒரு நிகழ்ச்சியை,
    நமது அன்பு சகோதரர் க்லாடியார் பெரிய “காட்டு மிராண்டித்” தனமாக சித்தரித்து நமது முகத்தில் கரியைப் பூசியதாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்.

    இந்த நிகழ்ச்சியை,

    உலகம் உருண்டை என்று கூறிய அறிங்கரை நெருப்பிலே போட்டுக் கொளுத்திய நிகழ்ச்சி போலவோ,

    இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய, – அங்கே வசிக்கும் கிழவர்கள், பெண்கள், மாடுகளைக் கழுதைகள் கூட விடாமல் பட்டயக் கருக்கினால் சங்க்காரிக்க ஆணையிட்டது – போலவோ,

    இன்னும் தொடர்ந்து நடை பெற்று வரும்

    காட்டு மிராண்டித் தன அங்கீகரிப்பு,

    காட்டு மிராண்டித்தன ராஜ்ஜியத்தை அர்ச்சிப்பது,

    மற்றும் காட்டு மிராண்டித் தனத்தை அங்கீகரிக்க எல்லோரையும் கட்டாயப் படுத்துவது- போன்ற நிகழ்ச்சிகளாக கருதினால்,

    இந்த நிகழ்ச்சிகள்(பிறருக்கு எந்த தீங்கும் தராத நிகழ்ச்சிகள்) ஏமாற்றத்தையே அளிக்கும்.

    இந்த சாட்டையடி போலவே , தலையில் தேங்காய் உடைப்பு, தீமிதி, பூச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் என பல வகையாக தங்களை வருத்திக் கொண்டு ஆண்டவனிடம் முறையிடும் முறைகள் வழக்கத்தில் உள்ளன.

    இப்படி தங்களை வருத்திக் கொள்பவர்கள் துன்பங்களைத் தாங்கும் சக்தியை பெருக்கிக் கொள்வதோடு, அதனை வெளிப் படுத்தவும் செய்கின்றனர்.

    அதே நேரத்தில் இவற்றால் அவர்களின் உடலில் எப்போதைக்குமான வூனம் எதுவும் உண்டாவதில்லை என்பதோடு , அவர்கள் நிகழ்ச்சி முடிந்தவுடன் மன நம்பிக்கை அடைகின்றனர்.

    பூசாரி யாரையும் கட்டாயப் படுத்தி அடிக்கவில்லை. அவர்களாகவே வந்து நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியால் ஒரு ஈ, எறும்புக்கு கூட தொல்லையோ துன்பமோ ஏற்ப்படுவதில்லை.

    நான் எப்படியெல்லாம், இயேசு கிறுஸ்துவைப் புகழகலாம், எப்படி எல்லாம் இயேசு கிறுஸ்துவைப் பெருமைப் படுத்தலாம், எப்படி எல்லாம் காட்டு மிராண்டிக் கொள்கைப் பிரச்சாரகர்கள் அடிக்கும் ஆணிகளில் இருந்து இயேசு கிறுஸ்துவைக் காத்து அவரை மகிமைப் படுத்தலாம் என்று எண்ணி இங்கே எழுதி வருகிறேன்.

    ஆனால் அருமை சகோதரர் க்லாடியாரோ, எப்படியெல்லாம் இந்து மதத்தை நிராகரிப்பது, இழிவு படுத்துவது, அழிப்பது என்ற வகையிலே தேடித் தேடி, மூளையை தேய்த்து எழுதி வருகிறார். ஆனால் சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை!

    நீங்கள் சாத்தானியக் கருத்துக்களை- வெறுப்புக் கருத்துக்களை- மனதில் வைத்துக் கொண்டு எப்படி வெல்ல முடியும்?

    கிருட்டினர், புத்தர், இயேசு கிறிஸ்து உட்பட எல்லோரும் எங்கள் பக்கத்தில்-அன்பின் பக்கத்தில், உண்மையின் பக்கத்தில், நியாயத்தின் பக்கத்தில்- இருக்கிறார்கள்.

    மனம் திரும்புங்கள். பரலோக சாம்ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது!

  396. //நீங்கள் சாத்தானியக் கருத்துக்களை- வெறுப்புக் கருத்துக்களை- மனதில் வைத்துக் கொண்டு எப்படி வெல்ல முடியும்? //
    திருச்சிக்காரன்,
    கிளாடியோ, நானோ எங்கள் வெற்றிக்காக இங்கே போராடவில்லை. உங்கள் வெற்றிக்காகத்தான்.
    ஏசுவையே யூதகுருமார்கள் சாத்தானின் தலைவன் என்று கூறினார்கள். அதனால், இயேசுவின் சீடர்களான எங்களை நீங்கள் சாத்தானிய கருத்துக்களை பரப்புபவர்கள் என்று கூறுவது எதிர்பார்க்கப்பட்டதே. உங்கள் ஏச்சும் பேச்சும், நாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
    மிக்க நன்றி,
    அசோக்

  397. கும்பாபிஷேகம் போன்ற விழாக்கள்தான் இவைகள். எப்படி உங்கள் பூஜைகளால் உங்கள் பிரச்சனைகள் தீருகிறது என்று நினைகிறீர்களோ, அப்படிதான் இங்கே மக்கள் தங்கள் நோய்கள் தீரும் என்று வருகிறார்கள். பூஜை செய்த பிறகு உங்கள் பிரச்னை தீரவில்லை என்றால் புஜாரியை கைது செய்வீர்களா?

    அன்புடன்,
    அசோக்

  398. இந்த் 21ம் நூற்றாண்டில் ஆவிக் கூட்டம், பேய் ஓட்டுதல் என செய்யும் அருவெறுப்பான கிறிஸ்துவர்கள், இல்லாத வியாதிகள் தீர்ந்ததாக பொய் சொல்லுவோரை பொய் சாட்சிக்கு அழைத்து வருவோர் மற்ற மதங்களை விமர்சிக்கலாகாது.

    அமெரிக்காவில் மிகவும் பரபரப்பான- ஒரு ஹோமோ சிறுவனை சர்ச் உள்ளே பேய் ஓட்டும் வீடியோ. இதை இணையத்தில் விட்ட சர்ச் அதை பின்னர் நீக்கி விட்டது.

    //Exorcism of Gay demon……..yeah, a video of it while it happens!!!!!
    Dancing Bear Jun 24, 2009 at 6:51 PM

    https://www.youtube.com/watch?v=L9v2uk99o2E

    My turn to puke. Arrest these people for child abuse.

    Some may call this worship. So were human sacrifices, stonings, castrations and many other religious offerings. Perhaps Sharia Law should be put into effect and honor killings allowed. These are all forms of worship. Maybe we should sacrifice animals at alters and execute people of other faiths. I believe us non-zealots call that genocide. But who am I to criticize how people worship. Maybe we can reinstate Biblical favorites like incest and polygamy. Or maybe we can just mentally and physically abuse and brainwash children. After all we can force them to believe whatever we want to or kick them to the curb. Gotta love those family values.//

    ஏசு ஏனோ நான்காவது சுவியில் ஒரு பேய் ஓட்டுதல் கூட செய்யவில்லை.

    கிறிச்துவ RC பாதிரிகட்கு மற்றயவர்களைவிட 5 மடங்கு வேகமாக எயிட்ஸ் நோய் வருவதாக ஒரு பத்திரிக்கை செய்தி சொல்கிறது.

  399. அசோக் குமார் கணேசன்,

    //ஏசுவையே யூதகுருமார்கள் சாத்தானின் தலைவன் என்று கூறினார்கள்//

    1) பைபிளில் எந்த இடத்தில் “யூதகுருமார்கள் ஏசுவை சாத்தானின் தலைவன்” என்று கூறியுதாக எழுதியுள்ளது என்பதை மேற்க்கோள் காட்டி விளக்க முடியுமா?

    2)// கும்பாபிஷேகம் போன்ற விழாக்கள்தான் இவைகள். எப்படி உங்கள் பூஜைகளால் உங்கள் பிரச்சனைகள் தீருகிறது என்று நினைகிறீர்களோ, அப்படிதான் இங்கே மக்கள் தங்கள் நோய்கள் தீரும் என்று வருகிறார்கள். பூஜை செய்த பிறகு உங்கள் பிரச்னை தீரவில்லை என்றால் புஜாரியை கைது செய்வீர்களா?//

    பூசாரிகள் பிரச்சினை தீரும் என்று உத்தரவாதம் கொடுத்து, வியாபாரம் போல கடவுள் பணியை செய்யவில்லை. மக்கள் கடவுளிடம் தங்கள்
    கோரிக்கையை வைக்கிறார்கள்.

    கடற்க்கரையிலே குருடர்கள் பார்க்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள். எக்காளத் தொனி என்று, உடல் நன்றாக இருப்பவர்களை முடவர் போல நடந்து வர செய்து, இவர்கள் தொட்ட பின் சரியாக நடந்து காட்டி, இப்படி நாடகங்களை அரங்கேற்றி , கொடிகளைக் குவித்து வியாபாரத்தை செய்வது போல செய்ய வேண்டுமா?

    வர வர உங்களின் கருத்துக்களில் கண்ணியம் குறைந்து , காழ்ப்புணர்ச்சி முழு அளவில் இருக்கிறது.

    இந்துக்கள் பெருமளவில் வாழும் நாட்டில், சிறுபான்மையினராக உள்ளவர்கள், பெரும்பாலான மக்கள் பின்பரும் மதப் பழக்கங்களை கிண்டல் செய்தும், நக்கல் அடித்தும், பொய்களை எழுதவும் மவுனமாக புண் சிரிப்புடன் அனுமதித்து வருகிறோம். ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டும் செயலை இராமரின் காலத்திற்கும் முன்பு இருந்தே, சனாதனமாக, ஆரம்பத்தில் இருந்தே இந்துக்கள் செய்து வருகிறோம்.

    எங்கள் முகத்தில் துப்பி இகழும் செயலை, நீங்கள் தைரியமாக மகிழ்ச்சியுடன் செய்யலாம்- அப்போதும் உங்களைப் பாதுகாப்பதும் எங்கள் பணியே- ஏனெனில் இந்து என்றைக்குமே இந்துவாகவே இருப்பான்!

  400. Ashok Kumar, Gladys, I have not heard from you guys reg flat earth, creation of universe in 6 days, Noah and his boat, etc. Please enlighten us on these matters. Do not change topics and go on about some Hindu rituals. Here we are talking about something important to you and to us, namely the words utterd by your God in your holy Book.
    A yes or no will do for the following questions, thank you
    Is the earth flat ?
    Did God create Universe 5000 years ago?
    Did Noah carry a specimen of all species on earth in his boat?

  401. ////ஏசுவையே யூதகுருமார்கள் சாத்தானின் தலைவன் என்று கூறினார்கள்//

    1) பைபிளில் எந்த இடத்தில் “யூதகுருமார்கள் ஏசுவை சாத்தானின் தலைவன்” என்று கூறியுதாக எழுதியுள்ளது என்பதை மேற்க்கோள் காட்டி விளக்க முடியுமா?
    //
    But some of them said, “By Beelzebub, the prince of demons, he is driving out demons.” Luke 11:15
    Yeah, you are right trichykkaaran. They didn’t say him as cheif of demons. But they said that he is using the cheif of demons. I haste I wrote it in a different way. To err is human.. Nothing intentional.
    In Gospel meetings also no one is assuring you anything. Some might receive a miracle and not everyone. They are just saying whatever had happened previously. And no one is charging any money for the people who are attending these meetings. In those meetings, these pastors are just praying for the sick. And healing is left to the GOD.
    //வர வர உங்களின் கருத்துக்களில் கண்ணியம் குறைந்து , காழ்ப்புணர்ச்சி முழு அளவில் இருக்கிறது.//
    I really dont understand trichykkaaran. Can you please clarify where my ganniyam is lagging. If you can point out, i am open to correct myself.
    Thanks,
    Ashok

  402. //Is the earth flat ?//
    No. Many beleive that bible says that earth is flat. Bible is not saying that earth is flat. I cannot explain the entire thing. Please go thru this url:https://www.tektonics.org/af/earthshape.html

    //Did God create Universe 5000 years ago?//
    Bible doesn’t say exactly it is 5000 years. But, definitely it is not that millions and millions of years, as the scientists say.

    //Did Noah carry a specimen of all species on earth in his boat?//
    First of all there is no need to carry the water living animals. And bible doens’t say that it carried every species but every kind. The species concept is much narrower than this; therefore many species can be included in a single biblical “kind.” The word kind is probably closer to the modern taxonomic unit of genus, and in some cases the larger taxonomic unit, family.

    The Canidae (canine) family includes about 14 genera of dog like animals. These include the coyote, dog, wolf, jackal, etc. The ark did not have to contain the hundreds of species of canines that make up this group. In reality, these were all represented by a few “kind.” These “kind” would then produce all the animals that make up the Canidae family. For example all of the hundreds of varieties of domestic pigeons that have all been produced originated from one species, the wild rock pigeon (Columbia livia).
    Hope you understand. If you have anything more, I will try answering.

    with love,
    Ashok

  403. //ஏசு ஏனோ நான்காவது சுவியில் ஒரு பேய் ஓட்டுதல் கூட செய்யவில்லை.//
    Correct way to say is, “John did not record anything about Jesus casting out demons”.
    With Love,
    Ashok

  404. //வர வர உங்களின் கருத்துக்களில் கண்ணியம் குறைந்து , காழ்ப்புணர்ச்சி முழு அளவில் இருக்கிறது.//
    I really dont understand trichykkaaran. Can you please clarify where my ganniyam is lagging. If you can point out, i am open to correct myself.
    Thanks,
    Ashok

    //கும்பாபிஷேகம் போன்ற விழாக்கள்தான் இவைகள். எப்படி உங்கள் பூஜைகளால் உங்கள் பிரச்சனைகள் தீருகிறது என்று நினைகிறீர்களோ, அப்படிதான் இங்கே மக்கள் தங்கள் நோய்கள் தீரும் என்று வருகிறார்கள். பூஜை செய்த பிறகு உங்கள் பிரச்னை தீரவில்லை என்றால் புஜாரியை கைது செய்வீர்களா?

    அன்புடன்,
    அசோக்//

    இது நீங்கள் எழுதியது தானே?

    தான் உண்டு, தன் கோவில் உண்டு என்று பூசனை செய்து கொண்டு பக்தர்கள் வரும்போது சூடம் சாம்பிராணி காட்டும் பூசாரி, யாராவது என்றைக்காவது குருடரைப் பார்க்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறாரா?

    தங்கள் கஷ்ட நேரத்திலே கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை போன்ற நேரங்களில் கோவிலுக்கு வந்து, கடவுளை வேண்டி , விபூதி குங்குமத்தை வாங்கி கணவனுக்கு நெற்றியில் இட்டு, எல்லாம் சரியாக நடக்கும் என்று இறைவன் பேரில் நம்பிக்கையோடு அமைதி அடைகின்றனர்.

    இது உங்களுக்குப் பொறுக்கவில்லை.

    அந்தப் பூசாரியை கைது செய்ய வேண்டும் என்று துடிக்கிறீர்கள்.

    அதே நேரம் வூர் முழுவதும் போஸ்டர் அடித்து,

    “அற்ப்புத சுகமளிக்கும் ஆராதனைக் கூட்டங்கள்.

    குருடர்கள் பார்வை அடைகின்றனர்,

    முடவர்கள் நடக்கின்றனர்,

    எக்காளத் தொனி”

    என்று போஸ்டர்கள் இருப்பது உங்கள் கண்ணுக்குத் தெரியாதா?

    யாரை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்?

    “பிறன் கண்ணில் இருக்கும் துரும்பைக் குறை கூறும் முன் உன் முதுகில் இருக்கும் உத்திரத்தை எடுத்துப் போடு” என்று கூறியது உங்களைப் போன்றவர்களுக்குத் தான்!

    மத வெறியிலே, காழ்ப்புணர்ச்சியிலே,

    அப்பாவிப் பூசாரிகளைக் கைது செய்து ,

    அற்புத சகமளிப்பதாக கூறும் சுவி சேச மாயக்காரரை காப்பற்றப் பார்க்கும் நீங்கள்,

    ஒன்றும் தெரியாதது போல, என்ன எழுதினேன் என்று கேட்கிறீர்கள்.

  405. //glady
    பைபிள் பொய்யாக இருக்குமானால் அடுத்து தாங்கள் நிச்சயமாக இஸ்லாமியரிடம் வகையாகச் சிக்கிக் கொள்வீர்கள்; ஏனெனில் அவர்களின்
    வேதமான குரானுக்கு அடிப்படையே பைபிள்தான்..!//

    என் பார்வை வரலாற்று நோக்கு மட்டுமே, உண்மை தேடுதல் மட்டுமே.

  406. நண்பர் திருச்சிக்காரன்,
    நான் யாரையும் கைது செய்ய சொல்லவில்லை. எனக்கு அதற்க்கு அதிகாரமும் கிடையாது. தப்பு செய்தவர்கள் கூட மனம்திரும்பினால், மன்னித்து தண்டனையிலிருந்து விடுவிக்கபட வேண்டும் என நான் நினைக்கிறேன். அப்பாவி பூசாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என நான் ஏன் நினைக்கப்போகிறேன்.
    பூசாரி, வரும் மக்கள் நலம் பெற ஆண்டவனை வேண்டுவது இல்லையா? அதையேதான் இவர்களும் செய்கிறார்கள். தங்கள் பிரார்த்தனையால் அதிக மக்கள் பயன்பெற விளம்பரமும் செய்கிறார்கள். முக்கிய விஷயம், பிரார்த்தனைக்கு வரும் மக்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. அற்புதங்கள்
    அந்த கூட்டங்களில் நடக்கத்தான் செய்கிறது (நீங்கள் நம்பாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்).
    போலி சாமியார்கள் போல, போலி சுவிசேஷகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அனைவரும் போலி அல்ல என்பதுதான் நான் சொல்ல வந்த கருத்து.
    இதை சொல்வாதால் நான் கண்ணியம் இல்லாதவன் என்று நினைத்தால், நான் என்ன செய்ய முடியும்.

    //மத வெறியிலே, காழ்ப்புணர்ச்சியிலே//

    வெறி யாருக்கு என்று நம் இருவரது பதிப்புக்களை, வார்த்தைகளை பார்த்தாலே தெரியும்.

    //“பிறன் கண்ணில் இருக்கும் துரும்பைக் குறை கூறும் முன் உன் முதுகில் இருக்கும் உத்திரத்தை எடுத்துப் போடு” என்று கூறியது உங்களைப் போன்றவர்களுக்குத் தான்! //
    அறிவுரை எல்லாம் மாற்றவர்க்கு மட்டும்தான் என்று நினைக்கவேண்டாம்.

    அன்புடன்,
    அசோக்

  407. வணக்கம்,

    அன்புள்ள நண்பர்களுக்கு,

    ஒரு பேருந்தில் பயணம் செய்யும்போது கூட பக்கத்தில் அமரும் நண்பரை பார்த்து புன்னகை செய்து அவரை நட்புடன் பார்ப்பதில் தவறில்லை, ஆனால் அப்போது கூட அந்த பயண நேரத்தை வீணாக்காமல் நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்………என ஆரம்பித்து பல கிறிஸ்துவர்கள் தங்களின் மத புராணத்தை பேச ஆரம்பித்து பிரசாரம் செய்து ஆள்பிடிக்கும் வேலையை துவங்கி விடுகிறார்கள். கிறிஸ்துவர்களை தவிர வேறு யார் அதை செய்கிறார்கள்? மத மாற்றமே குறிக்கோள்!

    கிறிஸ்துவர்கள் வீடிற்கு அருகில் குடி புகவே மிக வேதனையாய் உள்ளது, இரண்டு நாள் பேசினாலே உடனே நீங்களும் எங்களோடு பிரார்த்தனையில் கலந்து கொண்டு தீராத நோய்களை தீர்த்து கொள்ளுங்கள், உங்கள் குடும்பங்களை மேடேற்றுங்கள், உங்களின் கடவுள்களெல்லாம் பொய்யானவை எமது ஏசுவே உயிருள்ள கடவுள் என்று அண்டை வீட்டாரை நச்சரிப்பது இந்துக்களா? கிறிஸ்துவர்களே காரணம் மதமாற்றமே குறிக்கோள்!

    எவனோ ஒரு தெருக்கூத்து நடிகனை முடவனாக, குருடராக, உடல் ஊனராக மேடையேற்றி பிரசங்கியார் கை பட்டதும் குணமானது போல் நடிக்கவைப்பது யார் பூசாரிகளா? கிறிஸ்துவர்களே, மதமாற்றம் ஒன்றே குறிக்கோள்!

    நம்ம நண்பர் திருச்சி காரர் பல முறை ஒரு விஷயத்தை எழுதி விட்டார் ஒரு பாதிரியை சந்தித்து உரையாடும்போது தான் இயேசுவை மனப்போர்வமாக வணங்குகிறேன் என்ற போதும் அந்த பாதிரி அவரை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக, ஏன் ஏசுவையும் வணங்குகிறேன் என்றால் சரி என்று போகவேண்டியதுதானே, வந்து காளியை கும்பிடு, முருகனை கும்பிடு, என்று வலுக்கட்டாயமாக வாதிட்டது எந்த கோவில் பூசாரியும் இல்லை ஒரு கிறிஸ்துவ பாதிரி, ஏன் மத மாற்றம் ஒன்றே தேவை அவர்களுக்கு.

    நேர்த்திக்கடன் என்ற பெயரில் வில்லங்கமான செயல்களை செய்வதில் எனக்கும் உடன் பாடில்லை, ஆனால் அதன் பேரில் நம்பிக்கை வைத்திருப்பவர்களை நான் வேண்டாம் என்று சொல்வதில்லை , ஏனெனில் நம்பிக்கையே வாழ்கையின் உத்திரவாதம். தனது நம்பிக்கைகளை அடுத்தவர் மீது திணிப்பது அல்ல, அப்படி தான் வாங்கிக்கொண்ட சவுக்கடியை அந்த பக்தர் இன்னொரு நபரை இழுத்து வந்து இதான் தேவ பக்தி நீயும் இணைந்து கொள் என சொல்வதில்லை. அது கிறிஸ்துவர்களின் வேலை மத மாற்றம் மிக முக்கியம்,

    அது போன்றே கிறிஸ்துவர்களின் நம்பிக்கை களை யாரும் குறை
    கூற முற்ப்படவில்லை, அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை சந்தைப்படுத்தும்வரை. கடை விரித்தபின் அதைப்பற்றி ஆராய வேண்டியது அவசியமாகிறது. நான், ஸ்ரீ மலர்மன்னன் அய்யா, ஸ்ரீ ஜடாயு, மேலும் ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் திருச்சிக் காரன் மற்றும் பலரும் கிறிஸ்துவர்கள் தங்கள் முகங்களை வெளிக்காட்டிய பின்னர்தான் அதை பற்றி அலசிப்பார்க்க நேர்ந்தது. இந்த வரிசையில் ஸ்ரீ தேவ் ப்ரியா சாலமன் உண்மையிலேயே பைபிள் ஆராய்ச்சியாளர் என எண்ணுகிறேன், நண்பர் (நண்பி?) ஸ்ரீ தேவ பிரியா சாலமன் ஆராய்ச்சியின் முடிவில் இந்து தர்மத்தின் கோட்பாடுகளை விடவும் கிறிஸ்துவ கோட்பாடுகள் உன்னதமானவை என்று எடுத்து காட்டினால் அதையும் பின்பற்ற எந்த இந்துவுக்கும் தயக்கமில்லை, ஆனால் அதைமட்டுமே பின்பற்றியே ஆகவேண்டுமெனில் அதை நிராகரிப்பதை தவிர வேறு மார்க்கமுமில்லை. சுதந்திரமாகவே இறை வழிபாட்டையும், தனது வாழ்க்கையையும் அமைத்து கொண்டவன் இந்து தர்மத்திணன், இறைவன் எங்கோ இல்லை தன்னுடனே உறைபவன் என்ற அதி நுட்பமான கொள்ளகை உடையவன் இந்து. ஒரு நம்பிக்கையை உள் நுழைத்த பின் மாற்று நம்பிக்கையை உள்வாங்குவது என்பது இரண்டு நம்பிக்கையையும் பொய்ப்பிக்கும் செயல். பாரதத்தில் கடவுள் தந்தையாகவும் கலாசாரம் தாயாகவும் மதிக்கபடுகிறது. திடீரென தந்தையை மாற்றிகொள்வது என்பது எவ்வளவு மோசமான துரதிர்ஷ்டம்.

    B. பாஸ்கர்.

  408. Dear Baskar,
    nice posting. Honestly I tell you that your posting is very honest.
    //அந்த பயண நேரத்தை வீணாக்காமல் நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்………என ஆரம்பித்து பல கிறிஸ்துவர்கள் தங்களின் மத புராணத்தை பேச ஆரம்பித்து பிரசாரம் செய்து ஆள்பிடிக்கும் வேலையை துவங்கி விடுகிறார்கள். கிறிஸ்துவர்களை தவிர வேறு யார் அதை செய்கிறார்கள்?//
    I agree that only Christians are doing that. Apart from Christians, the similar activity is done by multi level marketting people. I also stay away from multi level marketing people just like many others do. I know, many are having similar feelings towards the evangelical Christians. But, one thing you should notice, the Multi Level Marketting guy might make some money from you. But, do the Christian gets anything by introducing Christ to you? Infact almost every Evangelical Christian know that people doesn’t like their talk about Christ all the time. But still they are doing it. Can you just think why they have to do that? What benefit your neighbour get by inviting you for their prayer? Do you know how difficult it is for someone to comment on others faith? But still these Christians are doing it. If Baskar becomes a Christian, in what way Ashok or Glady is benefitted? Please think on these lines.

    Thanks,
    Ashok

  409. When the missionaries came to Africa, they had the Bible and we had the land. They said “let us close our eyes and pray.” When we opened them, we had the Bible, and they had the land.
    —Desmond Tutu

  410. அனபுடய அசோக் அவர்களே, நீங்கள் எங்கேயோ ஒரு அரத பழைய செய்தியை நீங்கள் கேட்டு விட்டு அது தான்ச சிறந்த செய்தி என்ன்று சொல்லிகொண்டிருந்தால் மன்னிக்கவும், நீங்கள் சவுதி அரேபியா சென்று அங்கு உங்கள்ளுக்கு மட்டும் கிடைத்த செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். சாத்தான் பற்றிய கருத்துக்கள் அடுத்த பதிவில்.

  411. Sri Baaskar Ji

    //ஆனால் அதைமட்டுமே பின்பற்றியே ஆகவேண்டுமெனில் அதை நிராகரிப்பதை தவிர வேறு மார்க்கமுமில்லை. சுதந்திரமாகவே இறை வழிபாட்டையும், தனது வாழ்க்கையையும் அமைத்து கொண்டவன் இந்து தர்மத்திணன், இறைவன் எங்கோ இல்லை தன்னுடனே உறைபவன் என்ற அதி நுட்பமான கொள்ளகை உடையவன் இந்து//.

    Very good , matured thoughts.

    All your writings are decent!

  412. //glady
    பைபிள் பொய்யாக இருக்குமானால் அடுத்து தாங்கள் நிச்சயமாக இஸ்லாமியரிடம் வகையாகச் சிக்கிக் கொள்வீர்கள்; ஏனெனில் அவர்களின்
    வேதமான குரானுக்கு அடிப்படையே பைபிள்தான்..!//

    பொய்தான் வேறென்ன?

  413. Dear Sri Ashok,
    Pl listen to me for a while with open mind, without any pre-conceived notion or influence because you have put me on par with your father. I must be older than your father because I started my career even before nineteen sixties. Permit me to call you My Son.

    Kindly understand the evangelists are richly compensated for “soul harvesting.” And huge donations are collected on the pretext of they are in dire need of funds to implement various shemes to help the poor and by doing so, “save” them from satanic Hindu religion. There is also campaign in the West that Christians are persecuted in India and they need funds to rehabilitate the affected Christians. Proselytisation is in full swing all over Hindustan today.
    They bring people with Hindu names purposely and make them declare that they had so many ills , physically and menatlly and all those sufferings continued as long as they prayed to Shiva, Vishnu, Murugan, Vinayaka, Durga, Kali, Mariamman and the like. When they started praying to Jesus, they were relieved of all those ills. Is it fair to stage manage such dramas?

    Kindly realise the intention is to increase their number to increase the population of Christians so that they become powerful politically. They are least bothered about your spiritual advancement. You seem to be intelligent. I know you will change your mind if you think.

    I have toured in Khadamal Distirct of Orissa personally, and spent about two weeks there. The district is typically tribal with over 50% tribes named Khands. The proselytisation is in full swing in the district and to prove that the deities of the tribes do NOT have any power, the Christian evangelists insult the idols of the dieties including urinating on the idols The Christaians in Khandamal are Panos, a Scheduled Caste settled in Khandamal from neighbouring districts. The clever clergy of the Church induce Panos to grab the land of the tribles, put Khandos in tight spot in variuos manner and advise that they can be redeemed if they accept Jesus.
    I have seen many other ploys by the Church. They run free clinics and when innocent tribal people come for treatment, they are given medicines that have lost their efficacy (several months after expiry date). Then they are asked to come after three days. When the innocent patient comes, the Christian proselytiser in the grab of a doctor asks him/ her whether there was any relief. The patient would reply in the negative. Then the ‘doctor’ would say. I’t was given to you after praying to your god. Now I give you another medicine. Try it and report after three days.’ Now he gives very effective medicines. The patient returns after three days and happily reports that he/she is cured. The doctor now says, “See, that medicine was given after praying to Jesus. His picture is here, take it. He will cure NOT only illness but bless you with all fortunes including heaven.” The doctor gives the picture of Jesus to the patient and lo and behold, the patient has fallen to the trap of the proselytiser and the entire family of the patient becomes believers of Jesus and want to be baptised!

    My dear Sri Ashok, somebody commented here that I am telling stories nicely. But believe me, those are all true stories only. Even the story I told just now is also a true story. Iam preocupied with so many thigns and that I don’t have to tell stories as if I have nothing to do

    I have exposed the evangelical frauds and saved many Hindu boys and girls from falling into the trap of evengelists and start reading Bible and being impressed by it. The reason is they are NOT EXPOSED TO THE SPIRITUALLY RICH, PHILOSOPHICALLY IN DEPTH sciptures of Hindu religion. Kindly start reading Upanishads, works of Swami Vivekananda, compare them with the Bible and apply your intellect. I don’t have to request you, you will automatically stay a HIndu.
    MALARMANNAN

  414. நண்பர் பாஸ்கர் எழுதிய மறுமொழியில்

    //நம்ம நண்பர் திருச்சி காரர் பல முறை ஒரு விஷயத்தை எழுதி விட்டார் ஒரு பாதிரியை சந்தித்து உரையாடும்போது தான் இயேசுவை மனப்போர்வமாக வணங்குகிறேன் என்ற போதும் அந்த பாதிரி அவரை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக, ஏன் ஏசுவையும் வணங்குகிறேன் என்றால் சரி என்று போகவேண்டியதுதானே, வந்து காளியை கும்பிடு, முருகனை கும்பிடு, என்று வலுக்கட்டாயமாக வாதிட்டது எந்த கோவில் பூசாரியும் இல்லை ஒரு கிறிஸ்துவ பாதிரி, ஏன் மத மாற்றம் ஒன்றே தேவை அவர்களுக்கு//
    என குறிப்பிட்டுள்ளார்.

    இது விடயமாக ஒரு சிறு விளக்கத்தை அளிக்க வேண்டியுள்ளது.

    நான் குறிப்பிட்ட பிரசாரகர் – அவர் ஒரு எவாங்க்லிஸ்ட்- சி. எஸ். ஐ பிரிவை சேர்ந்தவர்.

    நாம் இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், பாதிரி என்ற சொல் பெரும்பாலும் கத்தோலிக்க பாதிரியார்களைக் குறிக்க பயன் படுவது ஆகும்.

    நான் குறிப்பிட்ட சம்பவம் உண்மை சம்பவம் ஆதலால், சரியான உண்மையை விளக்குவது தேவையாகிறது.

    இதில் நண்பர் பாஸ்கரின் மீது சிறு பிழையும் கிடையாது.

    ஏனெனில் நான் இரண்டு மூன்று முறை இந்த சம்பவத்தைப் பற்றி எழுதிய போதிலும் பிரசாரகர் எந்தப் பிரிவை சேர்ந்தவர் என்று நான் குறிப்பிடவில்லை.

    எனவே இப்போது விளக்கம் அளித்து விட்டேன்!

  415. Mr Ashok Kumar, I have given you passages from King James Bible reg women and slavery.You got out of it saying that you haven’t got time to take Bible classes.I know there are many Bibles with different versions. Also, the 4 gospels differ a great deal in resuscitation, place of birth of Jesus etc. I presume Bible, being the word of God should not differ from one version to another.
    The story of Noah; simple version
    Bible God was unhappy/angry with His creation on earth as He found them hard minded , not respecting Him , not praising Him and due for punishment. He then decided to drown the whole lot of his creation except Noah and his family. He asked Noah to build a boat and to take 2 pair of clean animals and 7 pairs of unclean ones along with al other species. So Noah built a boat and took all the animals as instruced by the Lord to safety when the whole earth got flooded by 40 days of continious rain. After 6 months/ 11 months, the flood receeded and Noah and co reached Turkey and all the animals went their merry way
    As an intelligent man, do you not find this tale stupid? First of all, why does this God need constant praise from His creation? What about all the innocent babies and children He drowned? What did He except the animals do in the department of praising?Like,saying a little prayer to Lord befor the Lion kills his prey or the deer standing on it’s forlegs in reverence to the Lord before munching on the grass? Don’t you think it is just ridiculous about taking all these animals on board /feeding themfor the duration of the journey of 6/11 months? I presume the lions and tigers and other carnivore would have consumed the veggie animals! What about all the excreation of the animals? Did Noah and family cleaned all the poo and how? What about the food for all these animal for 6 months? Also, where did the flood recede to? Of course you can throw in another miracle from the Lord here and get out of this embrassing situation. We can just go on and on reg this ridiculous tale,

  416. “யார் எதைக் கூறினாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

    பைபிளில் கூறப்பட்டுள்ள வெறுப்புக் கருத்துக்களை, காட்டு மிராண்டிக் கருத்துக்களை, இனவாத, இனவெறிக் கருத்துக்களை- நல்ல கருத்துக்கள் என்று சாதிப்பேன்” என்ற மனப் போக்கில் இருப்பவர்கள் இந்த பிரசாகர்கள்!

    “இயேசு கிறிஸ்துவே பைபிளில் கூறப் பட்டுள்ள காட்டு மிராண்டிக் கருத்துக்களை, வெறுப்புக் கருத்துக்களை மாற்றிக் கொண்டு நாகரீகமான சமுதாயமாக வாழக் கூறினாலும், அதைக் கேட்க மாட்டேன்.

    இயேசுவின் கிறிஸ்துவின் பெயராலேயே வெறுப்புக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து, இயேசு கிறிஸ்துவுக்கு இன்னும் அதிக வேதனையை உண்டாக்குவேன்” என்ற மனப் போக்கில் இருப்பவர்கள் இந்த பிரசாகர்கள்!

    “நியாயப் பிரமாணம் என்பது ‘கர்த்தருக்கும்’, அவர் எகிப்தில் இருந்து காப்பாற்றி அழைத்து வந்த யூதர்களுக்கும் இடையிலே உருவானது என்பது மிகத் தெளிவாக இருந்த போதிலும், அந்த உடன் படிக்கைக்கும் பிற இனத்தவருக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும், பல்வேறு மார்க்கங்களுக்கு இடையிலே வெறுப்பையும் பூசலையும் உண்டு பண்ணும் வகையிலே ‘ நான் வணங்கும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிறர் வணங்கும் கடவுள்கள் ஜீவன் இல்லாதவை’ என்று (கடவுளை நேரே பார்த்து கை குலுக்கி வந்தது போல) கூறுவார்கள், இந்த பிரசாகர்கள்.

    இவர்களுக்கு நாம் எத்தனை முறை கூறினாலும், அறிவு பூர்வமாக விளக்கினாலும் , அன்பின் அடிப்படையில் கூறினாலும், சமரச அடிப்படையில் கூறினாலும் எப்படிக் கூறினாலும் திருந்தாமல்,

    மீண்டும் மீண்டும் இங்கெ வந்து முட்டாள் தனமாக தங்கள் வெறுப்புக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து கொண்டு இருப்பார்கள்.

    எனவே வெறுப்புக் கருத்துக்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களை, தன் மதம் மட்டுமே உண்மை என்று பிடிவாதம் செய்பவர்களை, நாம் ஒன்றுமே செய்ய முடியாது. அவர்களுக்கு புத்தி சொல்லுவதை விட- திருச்சியில் பொன் மலை என்று மலை ஒன்று உள்ளது- முழுதும் கல்லால் ஆனா அந்த பெரிய குன்று போன்ற கல்லிடம் விவாதம் செய்வது கூட பலன் கொடுக்கக் கூடும்.

    இந்த அசோக், கிளாடி, டேனியல் போன்றவர்களிடம் வாக்கு வாதம் செய்வதால் எந்தப் பலனும் இல்லை.

    இவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தால் சமூகத்துக்கு ஆபத்து.

    அவர்களின் தவறான கருத்துக்களை தமிழ் ஹிந்து தடை செய்வதே நல்லது.

  417. இது என்ன ஐயா ஞாயம்

    ௧) அவர்களுக்கு கிடைத்த செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். அது அவர்களுக்கு இட்ட கட்டளையாம். தவறு ஒன்றும் இல்லை. அனால் அதை கேள்வி கேட்காமல் ஒத்துகொள்ள வேண்டும் என்றால் எப்படி? எவன் ஒருவன் அவன் கடுவுளே உண்மை அடுத்தவரது பொய் என்று சொல்லுகிரனோ, அவன் தான் தன கடவுள் மெய் என்பதை நிரூபிக்க வேண்டுமே அல்லாமல், கேள்வி பதில் தெரியாமல் சினம் கொள்வது என்ன ஞாயம் இருக்கிறது? கடைந்து எடுத்த அயோகிய தனமாக படுகிறது.

    செங்கலை கேள்விக்கு பதில்?

    இறைவன் தூணிலும் உள்ளான் , துரும்பிலும் உள்ளான். ஒருவன் செங்கலை கடவுளாக நினைத்து உண்மையாக , சத்தியமான அன்புடன் இருந்தால் கண்டிபாக அவன் படி நிலைகளால் உயர்ந்து மெய் ஞானம் அடைவான். அவனுக்கு செங்கலில் கடவுள் இருபது புலப்படும் ஆனால் செங்கல் கடவுள் இல்லை என்பதுவும் புலப்படும். எதனை கடந்தும், எதன் உள்ளும் இருப்பதுதான் கடவுள்.

    ஆனால் ஒரு செங்கலை [ அல்லது இயேசு ] கும்பிடுபவன் தான் செய்வது சரி, மற்றவன் செய்வது தவறு என்றல் அவனுடைய அகந்தையால் வந்த அறியாமை கண்டிப்பாக வெட்ட வெளிச்சம் ஆக்கப்படும். இதுவே உண்மை.

  418. குரானும் ஏசுவும் – குரானில் எதோ இயேசுவை புகழ்ந்து தள்ளியது போல் ஒரு மாயை உலவ விட்டு இருகிறார்கள். அடுத்த பொய்.
    அவர் ஒரு இறை தூதர் அனால் அல்லாவும், முஹம்மத் மட்டுமே உண்மை என்று தான் சொல்லி இருகிறார்கள். மீண்டும் இயேசு உயிர்த்து எழுந்ததை அவர்கள் ஒத்துக்கொள்ள வில்லை. இங்கே glady சொன்னது உண்மை என்றல் ஏன் இஸ்லாமியர்கள் அல்லாவை மட்டும் வணங்குகிறார்கள். நபி ஒருவரே இறை தூதர் என்கிறார்கள்.

    எப்படி அந்த ஒரே கடவுளும் ஆண்பால் என்று கிறிஸ்தவர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள். ஏன் அம்மாவாக இருக்க கூடாதா?

  419. எந்த commandmentல் ஹிந்துக்களை மதம் மற்றும் பொழுது அவர்கள் அந்த சாதியில் தான் மாற்ற வேண்டும் என்று பைபிள் ல் சொல்ல பட்டு இருக்கிறது.

  420. 2. உன் தெய்வமாகிய கர்த்தர் , அவர்களை உன்னிடத்தில் பிடித்து கொடுக்கும் போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் கொல்லு; அவர்களோடே உடன்படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.
    And when the LORD thy God shall deliver them before thee; thou shalt smite them, and utterly destroy them; thou shalt make no covenant with them, nor show mercy unto them:

    3. அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளைக் உன் குமாரருக்கும் கொள்ளாமலும் இருப்பாயாக.

    Neither shalt thou make marriages with them; thy daughter thou shalt not give unto his son, nor his daughter shalt thou take unto thy son.

    4. என்னைப் பின்பற்றாமல், வேறு தெய்வங்களை கும்பிடும் அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தர் யாஹ்வேயுடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.
    For they will turn away thy son from following me, that they may serve other gods: so will the anger of the LORD be kindled against you, and destroy thee suddenly.

    5. நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்.

    But thus shall ye deal with them; ye shall destroy their altars, and break down their images, and cut down their groves, and burn their graven images with fire.

  421. உலகம் படைக்கப்பட்டதின் பைபிள் தரும் துல்லியக் வரலாற்று கணக்கு

    சந்ததி பிறந்த ஆதாமிய வருடம் வாழ்நாட்கள் இறந்த ஆதாமிய வருடம்
    ஆதாம் ——————-000——————-930—————930
    சேத்————————-130————————912—————1042
    ஏனோஸ் —————–235————————-905—————1140
    கேனான்——————–325———————–910—————1235
    மகலாலெயேல்————395———————–895—————1290
    யாரேத்———————-460————————962—————1422
    ஏனோக்கு——————622————————-365————–987
    மெத்தூசலா—————-687————————-969————–1656
    லாமேக்கு ——————874————————-777————–1651
    நோவா———————-1056———————-950—————2006
    சேம்————————–1556———————-600—————2156
    அர்பக்சாத்——————1658———————-438—————2096
    ************************************************************************
    சாலா————————-1693———————433—————2122
    ஏபேர்————————1723———————-464—————2187
    பேலேகு———————1757———————–239————–1996
    ரெகூ————————-1787———————–239————–2026
    செரூகு———————–1819———————–230————–2049
    நாகோர்———————1849————————148————–1997
    தேராகு———————-1878————————-205————-2083
    ஆபிராம்———————1948————————175————-2123
    இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
    ****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார்.

    லூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன்.

    நோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர்.

    தன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன்.

    நோவா காலத்தில் அதாவது BCE 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 10000 வருடங்கட்கும் மேலாக.

    யூதர்கள் மிகத் தெளிவாக உலகம் படைக்கப் பட்டது முதல் கணக்கு வைத்துள்ளதாகவும் இந்த வருடம் 2009- ஆதாமிய வருடம் 5770 எனப் புனைகின்றனர்.

    இந்த பிரச்சனைக்கு மழுப்பலாளர் என்ன பதிலைத் தருவார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன்

    அவை அர்த்தமற்ற மழுப்பல்கள், உளறல்களே.

  422. Congragulations and thanks Mr Devapriya Solomn. Your knowldge of the Bible is amazing. .Please keep up the good work and God bless you,Sir.
    Rama

  423. Singapore PM Makes A Strong Case Against Aggressive Proselytising
    Posted September 8, 2009
    https://christianaggression.org/item_display.php?type=NEWS&id=1252433151

    Kalinga Seneviratne
    Sept 7, 2009
    Source Link
    In his annual National Day Rally Speech it is customary for Singapore� Prime Minister to praise the achievements of his government in the past 12 months and raise peoples� hopes for the coming 12 months. But, this year, to the surprise of many, he touched a subject that has been taboo for public discussion in this multi-religious nation of 4 million people for the past four decades � Religion.

    Prime Minister Lee Hsien Loong, the son of the nationâ��s founding father Lee Kuan Yew spent more than half of his hour-long speech in English – delivered on August 16th – talking about the dangers to the harmony of the nation from aggressive preaching or proselytising. Though he did not name any religion, it was clear to most people listening to the speech and familiar with modern day Singapore society, that he was referring mainly to Christian evangelical groups, who have increased their numbers alarmingly, in the past decade.

    �There is nothing wrong with people becoming more religious because religion is a positive force in human societies� noted Mr Lee. �But, at the same time, stronger religious fervour can have side-effects, which have to be managed carefully, especially in a multiracial and multi-religious society�.

    In a brilliant speech designed not to directly point fingers at any particularly religion, he gave examples from around the world where religious fault-lines have created conflicts and riots. Singapore itself has learned its lessons in 1950 when religious riots took place here over a conversion issue, and this has influenced the country�s internal policies ever since.

    Mr Lee admitted that this topic was a serious subject for a National Day Speech, which usually talks about babies and bonuses. But, due to some recent developments the Cabinet has advised him that he should take up this subject this year, which the premier described as a �bonus lecture on a serious subject�.

    He warned that aggressive preaching or proselytising causes a nuisance and offence to others. He pointed out two recent events where this happened. One when a Christian couple that distributed leaflets offensive to other faiths, was charged under the Sedition Act and jailed. And the other the takeover bid by a Christian group of one of Singapore�s oldest civil society organizations.

    There are over 50 new Christian churches that have sprung up in this small island nation in the past decade or more, which could be described as born again or evangelical churches. They are believed to have a combined war chest of over $ 100 million annually. Many of them aggressively proselyte among the country�s Buddhist, Taoist, Hindu and Catholic population that has created much resentments among these communities. Because of the taboos on public discussion on religion, particularly in the media, expression of this resentment has largely been restricted to internet forums and private discourses.

    In March this year, such taboos were broken for the first time, when Singapore�s media, gave wide coverage to an event where a Christian evangelical group aggressively moved and successfully took over the country�s peak women rights lobby group because they did not agree with the non-government organisations� s stance on homosexuality,

    Association of Women for Action and Research (AWARE), a fiercely secular organization formed in 1984 is Singapore�s leading advocacy group dedicated to promoting gender equality. It has been instrumental in successfully advocating for change in such areas as law reforms to tackle sexual harassment in the workplace, rights of women to sponsor foreign husbands for citizenship and equal rights for women in the workplace.

    At their annual general meeting (AGM) in March, the old guard, which has spearheaded these advocacy activities was voted out of office by a new group of women who have joined the association in the previous 3 months. Some 80 of the 120 members who attended the AGM were also new members. Six of the 11 positions in the management committee of AWARE fell to these new members, who are Chinese Singaporean women with good academic and professional backgrounds, but, all belong to The Church of Our Saviour, which is well-known here as an evangelical church with a strong anti-gay and �pro-family� stance.

    Suspicions of an evangelical takeover of AWARE was further enhanced when the newly elected executive committee immediately made public statements accusing the old guard of promoting homosexuality and declaring themselves as �pro-family� a familiar word used by evangelical Christians worldwide.

    There was an overwhelming response to this takeover of AWARE with over 2000 new members joining the organization within 2 weeks of the event and calling for an extraordinary general meeting (EGM). At this EGM the Christian group was soundly beaten in a no-confidence motion, and a new executive was elected which is now representative of all religious communities living in Singapore.

    Though only a quarter of Singapore�s population are Christians, the number of evangelical Christians among them have been growing, and they belong mainly to the English-speaking elite well represented in politics, medical, legal, financial and academic professions.

    Buddhists and Taoists make up over a half of Singapore�s population, while Hindus and Muslims account for the rest. Some 70 percent of Singapore�s ethnic Chinese population are known to be Buddhists.

    The Prime Minister spelt out 3 basic problems that could lead to disharmony in the society, giving examples to illustrate his points.

    The first was aggressive preaching or proselytising. He said that from time to time the government gets complaints �of groups trying to convert very ill patients in our hospitals who do not want to be converted and who do not want to have the private difficult moments in their lives intruded upon�.

    The second Mr Lee pointed out is intolerance – not respecting the beliefs of others or not accommodating others who belong to different religions. â��Sometimes, we have parents who have traditional religions (meaning Taoism or Buddhism), and children have converted away. Then when the parents die, and they have asked to be buried according to traditional rites, the children stay away from the funeral or the wake. It is very sadâ��: reflected the premier.

    The third problem he said was exclusiveness � segregating into separate exclusive circles, not integrating with other faiths. �It means you mix with your own people. You do not mix with others. You end up as separate communities� he noted, giving the examples of people not wanting to do yoga or taichi because they believe it has religious meanings, when such communal activities could bring people together. Mr Lee believes that these are secular activities suited to all religious groups as communal activities.

    Mr Lee appealed to Singaporeans to keep religion out of politics, to exercise restraint and to up hold sound moral values. He pointed out that all major religions represented in Singapore are free to propagate their teachings on social and moral issues, but within limits of tolerance and respect for each other.

    The PM hinted during his speech that the government may invoke the 20 year-old Maintenance of Religious Harmony Act, which has never been used. Some internet forums and even a few letters published in the Straits Times have called for a prohibition of proselytising in public spaces.

    �While evangelists may think they are � helping� others, what would they think, if others told them they were praying to the wrong god, living life the wrong way and would never find redemption?� asked Harvey Neo in a letter published in the Straits Times. �It is imperative that proselytising in public spaces, particularly in schools, hospitals, libraries and workplaces, be prohibited, or at least strongly and explicitly discouraged�.

    (END)

    * Dr Kalinga Seneviratne is the Head of Research at the Asian Media Information and Communication Centre in Singapore. The ideas reflected in the article are his own and not necessarily that of his employer.

  424. Thank you Sri Devapriya Solomon. Can we expect this kind of Independence Day speech from our PM even though the evangelic activities are hectic in our region?
    MALARMANNAN

  425. இங்கு ஓர் அறிவுப்பூர்வமான விவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் வாசித்தும் 20 சதவிகித பதிப்புகளைக் கூட எட்ட முடியவில்ல். தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. எல்லா பதிப்புகளையும் வாசித்த பிறகு கருத்தை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

    அன்புடன்,
    ஜான்சன் விக்டர்
    மலேசியா

  426. அப்பப்பா, இந்த சுவையான கருத்து மோதல்களைப் படிக்கும்போது நேரம் போகிறதே தெரியவில்லை. இதுவரைக்கும் ஒரு 35சதவிகிதம்தான் என்னால் படிக்க முடிந்தது. அதற்கு மேல் தொடர முடியவில்லை.

    திருச்சிக்காரர் அருமையாக வாதிடுகிறார்.
    அவருக்கு நிகராகத் தமிழரசனும் பேசத் தொடங்கியிருக்கிறார்.

    நானும் பேச வேண்டும் என்று தோன்றினாலும், உலறிவிட்டு மாட்டிக் கொள்வேனோ என்று பயமாக இருக்கிறது.

    நாளை தொடர்ந்து வாசிக்கிறேன்.

  427. உங்கள் பதிவிற்கு நன்றி.மிகவும் நன்றாக உள்ளது.சாது செல்லப்பாவால் வெளியிடப்பட்ட நம் ஹிந்து வேதம், புருஷ சுக்தம் போன்றவை இயேசுவை பற்றி சொல்லப்பட்டவை என்ற துண்டு பிரசுரங்களை படித்து மிகவும் மனம் வருந்திஇர்ருந்தேன்.உங்கள் பதிவு என்னை தெளிவு படுத்தியது.மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

  428. Unlike Sri Victor above I am giving my thought on the above post before reading all the comments fully. Is it possible to get patent or intellectual property right over our vedas and upanishads, which are the most abused ones by these converters. Maybe efforts can be made to get GI like Tirupati laddu as even gayathri mantra has been solemnised(!) by these converters(search youtube for relevant video).

  429. If what I know is correct STs even after conversion retain their ST status unlike SCs who become BCs after conversion.

  430. வணக்கம்,

    //உங்கள் பதிவிற்கு நன்றி.மிகவும் நன்றாக உள்ளது.சாது செல்லப்பாவால் வெளியிடப்பட்ட நம் ஹிந்து வேதம், புருஷ சுக்தம் போன்றவை இயேசுவை பற்றி சொல்லப்பட்டவை என்ற துண்டு பிரசுரங்களை படித்து மிகவும் மனம் வருந்தி இருந்தேன் உங்கள் பதிவு என்னை தெளிவு படுத்தியது.மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.//

    அது மட்டுமல்ல நண்பர் ஸ்ரீ தனபால் அவர்களே, திருக்குறள் முதல் கொண்டு பல விஷயங்கள் களவு போக உள்ளன, மேலும் இப்போது திருவள்ளுவர் புனித திருவள்ளுவர் என்று மதம் மாற்றப்பட்டுள்ளார், சிரிப்பாக இருக்கிறதா? கொஞ்ச நேரம் கண் மூடி அசந்து விடாதீர்கள். அப்புறம் என்ன களவு போனது என்றே நமக்கு தெரியாது.

    எனவே உங்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கு மற்றும் உங்களுக்கு தெரிந்த நெருங்கிய நண்பர்களின் குழந்தைகளுக்கும் இப்போதிருந்தே நமது இந்து தர்மத்தின் சிறப்பினையும், இதிகாசங்களையும், கற்றுக் கொடுங்கள். நன்றி.

  431. நண்பர்களே வணக்கம்,
    தமிழ் ஹிந்துவுக்கு என் நன்றி. படித்தவர்கள் மத்தியில் தமிழ் அழிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, தமிழ் இன்னும் உபயோகத்தில் உள்ளது என்று புரியவைத்துள்ளீர்கள்.
    திரு.B. பாஸ்கர்,
    சாது செல்லப்பாவை பற்றி வலையில் தேடியபோது, நான் இங்கே வர நேர்ந்தது. என் கிறிஸ்த்துவ நண்பர் கூறியதை கேட்டு, நான் செல்லாபா அவர்களின் youtube videoவை பார்த்தேன். மனதில் பல குழப்பங்களுடன் வேதங்களை பற்றி இப்போது தேடி வருகிறேன். எனக்கு தெரிந்தவரை,
    என் கிறிஸ்துவ நண்பர், நல்லவர். மதமாற்ற பேர்வழியாக தெரியவில்லை. அவர் பேசிய பேச்சில் அக்கறையை தான் நான் பார்க்க முடிந்தது, அதில் உள்நோக்கம் ஒன்றும் இருப்பதாய் தெரியவில்லை. என் வழிபாட்டு முறைகளில் அவர் குறை கூறவும் இல்லை. சாது செல்லப்பா அவர்கள் கூறிய புருஷ சுத்தம், பிரஜா பதி, போன்ற விஷயங்கள் என் நண்பருக்கும் புதிது. இங்கே நல்ல வேளையாக, ஹிந்துத்துவம், கிறிஸ்துவம் இரண்டிலும் தேர்ந்தவர்கள் உள்ளீர்கள். யாராவது, சாது செல்லப்பா கூறிய புருஷ சுத்தம் பற்றி விளக்க முடியுமா. நீங்கள் எழுதுவதற்கு சிரமமாக இருக்குமானால், நான் உங்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் தயார்.
    நன்றி,
    அருண்

    பின் குறிப்பு:- இந்த தளத்தில், கோப வார்த்தைகள் குறைவாய் இருந்தால் ஒரு சிறந்த ஆன்மீக தளமாக மாற வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.

  432. வணக்கம்,

    நண்பர் ஸ்ரீ அருண் அவர்களே, நமது வேதங்கள் பற்றிய எந்த ஒருவிளக்கமும் இந்த மறு மொழியிலோ அல்லது நீங்கள் சொன்ன படி தொலை பேசியிலோ விளக்கிவிடும் ஒரு சாதாரண சமாசாரம் அல்ல, அப்படி விளக்க முயல்வது கடல் நீரை கையில் அள்ளி காலி செய்ய முயற்சிப்பது போன்றதாகும். மேலும் எனக்கும் முழுமையான வேத ஞானம் கிடையாது. செல்லப்பா போல அரைகுறையான விளக்கமளிக்க நான் விரும்பவில்லை.

    அந்த மாதிரியான அரைகுறை விளக்கங்கள் தந்து வேதங்களை தமக்கு செல்லப்பா சாதகமாக சொல்கிறார். இப்போது உங்களுக்கு இந்த தளத்திலோ தொலை பேசியிலோ விளக்கங்கள் பெற நீங்கள் முயற்சித்தால் அதற்கான முழு , தெளிவான விளக்கம் உங்களுக்கு கிடைக்காது, அது உங்களை மேலும் குழப்பம் அடையச்செய்யும்.

    மேலும் வேதங்கள் என்பது மட்டுமே இந்து தர்ம ஆன்மிகம் அல்ல என்பதயும் உணருங்கள், செல்லப்பா போன்றவர்கள் கிறிஸ்துவத்தில் பைபிள் உள்ளது போல இந்துக்களுக்கு வேதம் என்பது போலவும், வேத நூல்களிலேயே இயேசுவின் குறிப்பு உள்ளது என்பது போன்றும் திரித்து கூறினால் பல இந்துக்கள், குறிப்பாக வேதத்தின் மதிப்பு அறிந்து இருந்தாலும் ஆனால் அதன் பொருள் புரியாது இருப்பவர்களை தன் வலையில் வீழ்த்த செல்லப்பாவின் தந்திரமே இவைகள்.

    ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள் உண்மையான ஆன்மிகம் என்பது உங்களின் உள்ளுணர்வின் மூலம் வெளிப்படவேண்டுமே அல்லாது எந்த ஒரு வேதங்களும் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்குமே அன்றி உங்களை அது மேல்நிலைக்கு இட்டுச்செல்லாது.

    இதுவரை நீங்கள் பொருள் புரிந்திராத எந்த ஒரு வேதங்களோ, அல்லது வழி பாடுகளையோ புரிந்து கொள்வது என்பது உங்கள் ஆன்மீக பயணத்தை அகலமாகுமே அன்றி ஆழமாக்காது, ஒரு வேளை அதுவே உங்களுக்கு தடையாகவும் கூடும், எனவே நண்பரே யோகம், தியானம், கிரியைகள், போன்ற மிக சுலபமான வழிகளில் உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளுங்கள்,

    தொடர்ந்து இந்த தளத்தில் இருங்கள், மேலும் பல அற்புதமான கட்டுரைகளும் கருத்துக்களும் உங்களின் பல கேள்விகட்கு விடை அளிக்கும்.

  433. //அது மட்டுமல்ல நண்பர் ஸ்ரீ தனபால் அவர்களே, திருக்குறள் முதல் கொண்டு பல விஷயங்கள் களவு போக உள்ளன, மேலும் இப்போது திருவள்ளுவர் புனித திருவள்ளுவர் என்று மதம் மாற்றப்பட்டுள்ளார், சிரிப்பாக இருக்கிறதா? கொஞ்ச நேரம் கண் மூடி அசந்து விடாதீர்கள். அப்புறம் என்ன களவு போனது என்றே நமக்கு தெரியாது//
    நன்றி ஸ்ரீ B.பாஸ்கர் அய்யா.
    நான் சில நாட்களுக்கு முன்புதான் இத்தளத்திற்கு வந்தேன்.மிகவும் அறிவுபூர்வமாக விவாதங்கள் நடைபெற்றுகொண்டிருக்கிறது.மிகவும் நன்றாக உள்ளது.நான் ஒரு மாணவனை போல் படித்து(கற்று)க்கொண்டிருக்கிறேன்.
    நன்றி.

  434. எனக்காக நேரம் ஒதுக்கி பதில் கொடுத்த பாஸ்கர் ஐயாவுக்கு நன்றி. அயயா, நான் ஒரு ஆன்ம சாதகன். வேதாத்ரி மகரிஷியின் குண்டலினி யோகம், பிராண சிகிச்சை, ரெய்கி, முதாலான கலைகளை பயிற்சி செய்தவன். தற்போது பனி நிமித்தமாக அமெரிக்காவில் இருக்கிறேன். நான் கற்ற கலைகள் எனக்கும் மற்றவர்க்கும் உபாயோகமாக இருக்கிறது. இன்னும் ஆழமான ஆன்மீகத்தை என் மனம் நாடுகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு குழப்பம் வேறு. உங்களுக்கு தெரிந்த யாராவது எனக்கு பிரஜாபதி, புருஷ சுத்தா போன்ற விஷயங்கள் யாரை குறிக்கிறது என்று சொல்ல முடியுமா? அல்லது அதை பற்றி பேசும் தளம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.
    நன்றி,
    அருண்

  435. //எனவேதான் வேதத்தில் ’புருஷ பிரஜாபதி’ மனிதனாக இவ்வுலகில் அவதரித்து தன்னையே தியாகம் செய்வார் என்று சொல்லியுள்ளது. இந்திய மக்களின் (இந்துக்களின்) வேதத் தேடுதலை முழுமையாக நிறைவேற்றவே இயேசு அவதரித்தார், ஏனென்றால், இறைதூதரின் வருகையால் எப்படி ’பழைய ஏற்பாடு’ முழுமையடைந்ததோ, அதே போல் இயேசு இல்லாமல் வேதங்கள் முழுமையடையாது’ என்று பகிரங்கமாக வெட்கமில்லாமல் முழங்குகிறார்.//
    தமிழ்செல்வன் அவர்களே,
    அவர் அதை உண்மை என்று நம்பும்போது எதற்காக வெட்கப்பட வேண்டும்?
    திரு.சாது செல்லப்பா சொல்வது தவறு என்று சொல்லும் நீங்கள். பிரஜாபதி என்று யாரை வேதம் சொல்லுகிறது என்று சொல்ல கடமை பட்டு இருக்கிறீர்கள். நன்றி அருண், நல்ல கேள்வி கேட்டு உள்ளீர்கள். உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு இந்த கேள்வி கட்டாயம் வரும். பதில் வருமா? அல்லது என் கேள்வி நிராகரிக்கப்படுமா?

    அசோக்

  436. Arun
    12 October 2009 at 8:24 pm

    //யாராவது, சாது செல்லப்பா கூறிய புருஷ சுத்தம் பற்றி விளக்க முடியுமா//

    அலோ…அரூண் ஸார்! இன்னா ஸொல்டும் நானு, ஆ? அளுவர்தா…சிரிக்கர்தா தெர்ல எனுக்கு.

    தமில்ஸெல்வன் ஸாரு சூது ஸெல்லப்பா பத்தி ஸோக்கா எயுதிகினாரு; அத்த படிக்க ஸொல்ல தமில் இந்து வாஸகருங்க அல்லாரும் படா பேஜாராயி 400 கமெண்டுக்கு மேல போட்டுகறாங்க; கட்டுர, கமெண்டு அல்லாத்தையும் பட்சுட்டு, இப்டி ஒரு கேல்வி கேட்டுகினியே நைனா! நியாயமா இது?

    ஸூது செல்பா டுபாகூர் பார்டீன்னு தெர்ஞ்சுட்சு இல்ல? அப்பாலிகா அந்த ஆளு இன்னா ஸொன்னாருன்னு இன்னா கேல்வி? அத்த தெர்ஞ்சுக்குனா உங்க்லுக்கு தான் பேஜாராவும். கொயம்பி போய்ருவ வாத்யாரே! அந்தாள மறந்துருங்க…
    எப்பனாச்சும் உங்க உராண்ட வந்து மீட்டிங் போட்டு ஜனத்த கொயப்புனாருன்னா, நேரா போலீசாண்ட போய் கம்ப்லேண்ட் குட்துருங்க, இன்னா தெர்தா?

    சரி,மேட்டருக்கு வரேன் வாத்யாரே! நீங்க ஸொன்னாபோல “புருஷ சுத்தம்” இல்ல நைனா….அது.. ”புருஷ ஸூக்தம்”.

    இன்னும் விலாவாரியா ஸொல்னூன்னா….”வேதம்” கீது பாத்யா வேதம்? அது முடிய ஸொல்ல வருது பாரு…அததான் “உபநிஷதம்” அப்டீன்னு ஸொல்றாங்கோ. அத்தோட கூட நடுவுல வேற மந்த்ரல்லாம் வருது. அதுல சிலத “ஸூக்தம்” அப்டீன்னு ஸொல்வாங்கோ.

    ”ஸூக்தம்” அப்டீன்னா “ஸோக்கா ஸொல்லிகுது” –ன்னு அர்த்தம். (:-)))

    புர்ல? அதாவது….நைனா…. ”நன்றாகச் சொல்லப்பட்டது” அப்டீன்னு அர்த்தம். இப்ப புர்தா? (:-)))

    ஆவ மொத்தத்துல…உபநிஷதம், ஸூக்தம், வேற சில மந்திரம்….அல்லாமே வேதம் தான். இன்னா புர்ஞ்சுக்கினீங்களா?

    இதுல ஸூக்தம் அப்டீன்றது…கடவுளுங்கள பாராட்டி ஸொல்றது வாத்யாரே. புருஷ ஸூக்தம்….நம்ம ”விஷ்ணு” கீறாரு பாத்யா….அவுர பாராட்டி ஸொல்றது. அதுல தான் ஒரு எடத்துல…

    “ப்ரஜாபதிச்சரதி கர்பே அந்த: அஜாயமானோ பஹூதா விஜாயதே”…

    அப்டீன்னு வருது. அதுக்கு இன்னா அர்த்தம்னா…… ”கடவுள் இந்த உலகத்துல இயங்குறாரு. அவுரு பொறக்கலன்னாலும் பல உருவத்துல வராரு” அப்டீன்றது தான்.

    அத்தொட்டு… மேல ”பிரஜாபதி”-ன்னு ஸொல்றது நம்ம கடவுள் ”விஷ்ணு”வதான். ஒகேவா?

    ஆனாக்கா…ஸுது ஸெல்பா மாதிரி டுபாகூர் பார்டிங்க “ப்ரஜாபதி” ன்றது “ஏஸ்து கிறுஸ்து” தான்னு ஜனங்கள டபாய்க்கறானுங்கோ. அத்னால ஜாக்கர்தயா இரு வாத்யாரே, ஆமா ஸொல்டேன், அஆங்!

    கடேசியா ஒன்னு கேட்டுக்க நைனா….ஆன்மீகம் கீது பாத்யா ஆன்மீகம்… அத இந்த ஸூது பார்டிங்க பஜார் மாறி ஆக்கிபுட்டானுங்க வாத்யாரே. ஆவஸொல்ல… பஜார்ல உஜாரா இல்லன்னா நிஜார கயட்டிருவானுங்க. அப்பாலிகா.. பேஜாரா ஆயுருவ, ஆங்!

    இன்னா, வர்டா…

    மன்னாரு.

  437. அரூண் ஸார்! ஸூது ஸெல்ல்பா மாறி வில்லனுங்க கூட அஸோக்கு மாறி காமெடி பார்டியும் பஜார்ல சுத்திகினு இருக்கும்.

    காமெடி பார்டின்னு லூஸ்ல கேர்லெஸ்ஸா வுட்றாதீங்க… வுட்டீங்க….நீங்க காலி, ஆமா ஸொல்டேன்.

    வர்டா…

    மன்னாரு

  438. இயேசு எனப்படும் கிறிஸ்து பற்றி முதலில் எல்லவித சந்தேகங்களும் நீங்க சுவிசேஷக் கதைகளை- நீங்கள் வரலாற்று ரீதியில் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

    அதன் பின்னர் பிறப்பில் விருத்த சேதனம் என ஆண்குறி நுனித்தோல் வெட்டப்பட்ட இயேசு – பஸ்கா பண்டிகை என எபிரேயர்களுக்கான கடவுளின் ஒரே இருப்பிடமான ஜெருசலேம் வந்து ஆட்டை கொலை செய்து பலி தர் வந்த போது ரோம் ஏகாதிபத்திய கவர்னரால் கைது- விசாரணைக்குப் பின் ரோம் தன் ஆட்சிக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியாளருக்கான மரண தண்டனை முறையான தூக்கு மரத்தில் தொங்கவிடப்படுதல் முறையில் ஏசு மரணம். அதாவது இயேசு பிறப்ப்லிருந்து மரணம் வரை யூதராகவே வாழ்ந்தார்.

    யூதரல்லாதவர்களை நாய் – பன்றி என்கிறார். எந்த ஒரு யூதரல்லாதவர் வீட்டிற்கும் அவர் செல்லவே இல்லை. இறந்தபின்னர் இவர் பழைய உடம்பில் மீண்டும் உயிர் பெற்று சிலருக்கு காட்சி தந்தான ஒரு ஊகக்கதையின் அடிப்படையில் இயேசுவை நேரில் சந்திதிராத பவுல் என்பவரால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு மதக் குழுவே கிறிஸ்துவம். சுவிக் கதைப்படி இயேசு தன் வாழ் நாளில் உலகம் அழியும் எனப் பார்த்தார். பின் பவுலும் இயேசுவின் இரண்டாவது வருகை என உலக அழிவை தன் வாழ்நாளில் பார்த்தார். இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனையப்பட்ட பல புதிய ஏற்பாட்டுக் கடிதங்களும்- இது கடைசிக்காலம் என இவற்றை கூறுகின்றன.[என் தனி கட்டுரை விரைவில்]

    எனவே கிறிஸ்து என்பவர் வந்தால் அவர் வாழும் காலத்தின் தலைமுறையுடன் [சந்ததியுடன்] உலகம் அழிய வேண்டும். பின்னர் கணக்கெடுப்பு- இது தான் கிறிஸ்து என்ற மூட நம்பிக்கையின் அடிப்படை. இயேசுவின் காலத்திலும் பின் ரோம்- எபிரேயர் போர் என 65ல் வந்தவரை யூத எபிரேயர் ஆலயப் தலைப் பாதிரி பதவி வகித்தவர்கள் சதுசேயர்கள். இவர்களெபிரேயப் பாரம்பரியப்படி கொண்டிருந்த நம்பிகை என்ன என்பதை அப்போஸ்தலர் நடபடிகள் என்னும் நூலில் காணலாம்.

    அதிகாரம் 23 1 பவுல் தலைமைச் சங்கத்தாரை உற்றுப் பார்த்து, சகோதரரே! நான் இந்நாள்வரை கடவள் முன்னிலையில் என் மனச்சான்றுக்கிசைய முற்றிலும் நேர்மையாக வாழ்ந்து வந்தேன் என்றார்.2 அப்பொழுது தலைமைக் குருவாகிய அனனியா அவரது வாயில் அடிக்கும்படியாக அருகில் நிற்பவர்களைப் பணித்தார்.3 பவுல் அவரிடம், வெள்ளையடிக்கப்பட்ட சுவரே! கடவுள் உம்மை அடிப்பார். திருச்சட்டத்தின்படி எனக்குத் தீர்ப்பளிக்க அமர்ந்திருக்கும் நீர் அச்சட்டத்துக்கு முரணாக என்னை அடிக்க எப்படி ஆணை பிறப்பிக்கலாம்? என்று கேட்டார்.4 அருகில் நின்றவர்கள், கடவுளின் தலைமைக் குருவைப் பழிக்கிறாயே? என்று கேட்டார்கள்.5 அதற்குப் பவுல், சகோதரரே! இவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் உன் மக்களின் தலைவரைச் சபிக்காதே என மறைநூலில் எழுதியுள்ளதே என்றார்.6 அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்: இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன் என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார்.7 அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.

    மோசேயின் நாற்காலியை ஏற்றிருந்த மூல எபிரேய மொழியில் பழைய ஏற்பாட்டை அறிந்த சதுசேயர்கள் நம்பிக்கை பார்த்தீர்கள். அப்படிதான் பழைய ஏற்பாடு உள்ளது, அதில் கடவுள் மனிதனாக வரவேண்டும் என்பதே கிடையாது.

    எபிரேயரின் பழைய ஏற்பாட்டின் அடிப்படை நம்பிக்கை- இஸ்ரேல் நாட்டின் அரசியல் ஆட்சியுரிமை ஆபிரகாமின் வாரிசுகளான தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்னும் கதை.

    ஆதியாகமம்: 1518. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்19. கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,20. ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,21. எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.

    பழைய ஏற்பாடு ஆபிரகாமிலுருந்து என ஆரம்பிக்க இயேசு எனப்படும் கிறிஸ்துவ புராண நாயகர் வாழ்ந்தது CE 1ம் நூற்றாண்டில், அதன் பிந்தைய வரலாற்று விபரம் அறியப் பட்டதே. கடந்த 4000 ஆண்டுகளில் ஒரு நாள் கூட ஆபிரகாமுக்குக் கொடுத்ததான பகுதி எபிரேயர் கீழ் வரவில்லை.

    அதன் வளர்சி – தாவீது ராஜா பரம்பரையில் ஒரு வீரன் தோன்றி பிரிந்து கிடக்கும் எபிரேயர்களை ஒன்று சேர்த்து – கடவுளின் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களை ஒன்று சேர்த்து – கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தின் ஆட்சியுரிஅமையை எபிரேயர் அல்லாத [இய்யெசு வாய்மொழிப்படி நாய்-பன்றிகள்] ஆட்சியாளர்களை தோற்கடித்து கணக்கெடுப்பு நாளில் நேரடியாக கர்த்தரிடம் சேர்க்கவேண்டியவரே மேசியா.

    எபிரேய மததிதின் நம்பிக்கைப்படி அவர்கள் எல்லை தெய்வமான யவவின் பெயரைக்குட உச்சரிக்கப்படலாகாது. 8000 முறை எழுத்தில் பழைய ஏற்பாட்டில் யவ என்று வரும்போதெல்லம் எஜமானரே என பொருள் படும் அடனோய் எனப் படிப்பர். எபிரேய மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் கிடையாது.

    அசோகர் மூலம் பரவிய இந்திய நம்பிக்கைகளும் எபிரேய அரசியல் நம்பிக்கைகளும் ஒன்று சேர எழுந்த ஒரு மூட நம்பிக்கை தான் கிறிஸ்துவம். பவுல்- பழைய ஏற்பாட்டில் உள்ள ஒரு படைப்புக் கதையை எபிரேயர் பார்வையை மீறி- ஆதாம் பாவம் நீக்க கிறிஸ்து எனப் புனைந்தார்.
    ஒரு தப்புக்கு- தண்டனையோ – அபராதமோ அனுபவித்தால் அதன் பின் தண்டனை முடிந்துவிடும் என்பது இயல்பு. மனிதன் பூமியில் மரணம் அடையக் காரணம் ஆதாம் பாவம் எனில் இயேசு மரணம் அதற்கான பரிகாரம்[அபராதம்] எனில் அதன் பின் உலகில் யாருமே மர்ணம் அடையக் கூடாது. பூமியில் மனிதன் மரணத்தின் அடிப்படை விலகவும் இல்லை.

    ஏன் இயேசு சொன்னதாக நாம் காணும் வசனத்தில்:
    யோவான்:6:48, ஜீவ அப்பம் நானே. 49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமேஎன்றார்.

    மன்னா சாப்பிட்டவர்கள் மரணம் அடைந்தனர். ஜீவ அப்பம் சாப்பிட்டவர்களும் மரணம் அடைந்தே வருகின்றனர்,

    யாரோ ஒருவர் அபிரகாம் தான் பிரம்மா என எழுதினார். பழைய ஏற்பாட்டை எடுத்துப் படித்தால் ஆபிராம் என்பவர் ஆபிரஹாம் என மாறினார். ஹா என்பது இல்லை என்னும் நிலை தரும். பிரம்மத்துலிருந்து- கடவுளிலிருந்து விலகியவர் எனப்தே ஆபிரஹாம் ஆகும்.

    உலகினைப் படைத்த கடவுளுக்கு கீழ்ப்பட்ட எபிரேயர்களின் சிறு எல்லை கடவுள் கர்த்தர்.

    அந்த நம்பிக்கையில் எழுந்த ஒரு மூட நம்பிக்கைக் குழு.
    கேட்பவை கேள்விகளே இல்லை உளறல்கள்.

    தன்னை முதலில் எபிரேயரிடம் ஸ்தாபித்து பின் மற்றவர்களிடம் வரட்டுமே.

  439. Priest admits to idol worship in churches

    Posted March 14, 2009

    12 March 2009
    Indian Express
    https://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Priest+admits+to+idol+worship+in+churches&artid=1WM/aO6Ec6I=&SectionID=7GUA38txp3s=&MainSectionID=7GUA38txp3s=&SectionName=zkvyRoWGpmWSxZV2TGM5XQ==&SEO=B%20K%20Somashekara

    BANGALORE: In a revelation that could have widespread ramifications, Father Joseph Menengis, priest of St James Church in Mariyannapalya, Bangalore, confessed before the Justice B K Somashekara Commission of Inquiry on Wednesday that idol worship was being performed in churches to attract Hindus and convert them to Christianity.

    The Commission is inquiring into the recent attacks on churches in Karnataka.

    �Hindus believe in idol worship
    . So to attract them to Christianity, idol worship is performed in churches,� Menengis said.

    During cross-examination, the priest said that �despite idol worship being prohibited in Bible, we have idol worship in churches.� �The duty of every Christian is to convert non-Christians to Christianity by any means,� the priest told the commission.

    St James Church was attacked by miscreants on September 21, 2008.

    The church is running co-education institutions, with classes from first to eight standard.

    During cross-examination the priest confessed that �no girl students are permitted to use kumkum, bangles and wear flowers. In our institution, we have moral science textbook.

    But it does not contain texts regarding Holy Bible and Jesus,� the priest added.

    The commission has requested the priest to submit the textbook to it.

  440. மன்னாரு…அருண் ஏற்கனவே கவுந்துட்டாரு நைனா…
    கொஞ்சம் வெயிட் பண்ணிப்பாரேன்..!

  441. ///இயேசு கடவுளின் தூதுவர் என கூறும் சரித்திர ஆராய்ச்சி நூலகள் பல உள்ளன ஆனால் அதையெல்லாம் அறிந்துகொள்ளும் எண்ணம் உங்களுக்கு இல்லை////
    ஜோ
    சரித்திர ஆராய்ச்சி படி ஏசு ஒரு புரட்சிக்காரர், யூதர்களின் ராஜா என்று தன்னை அழைத்துக் கொண்டதால் அந்நாட்டுச் சட்டப்படி சிலுவையில் அரைந்து கொல்லப்பட்டார். அவ்வளவு தான். அவரை மாயாஜால நாயகன் ஆக்கிய பெருமை உங்களைப் போன்றவர்களைச் சேரும்.

  442. //எப்பனாச்சும் உங்க உராண்ட வந்து மீட்டிங் போட்டு ஜனத்த கொயப்புனாருன்னா, நேரா போலீசாண்ட போய் கம்ப்லேண்ட் குட்துருங்க, இன்னா தெர்தா? ///

    அக்காங்…கம்ப்ளெயிண்டு குடுத்துட்டா மட்டும் கீஷுரப் போரானுகளாக்கும்…

    அங்க எதுனா தேருச்சுன்னா அவுங்களுக்கே காவலுக்கு நின்னு நம்மளையே லட்டியால அடிப்பானுவ….இன்னமோ பேஸ்ரியே மன்னாரு …

  443. ///“ப்ரஜாபதிச்சரதி கர்பே அந்த: அஜாயமானோ பஹூதா விஜாயதே”…

    அப்டீன்னு வருது. அதுக்கு இன்னா அர்த்தம்னா…… ”கடவுள் இந்த உலகத்துல இயங்குறாரு. அவுரு பொறக்கலன்னாலும் பல உருவத்துல வராரு” அப்டீன்றது தான்.

    அத்தொட்டு… மேல ”பிரஜாபதி”-ன்னு ஸொல்றது நம்ம கடவுள் ”விஷ்ணு”வதான். ஒகேவா?///

    மன்னாரு அன்னாத்தே! சும்மா சொல்லக்கூடாது….ஷொக்கா எய்திகிரீங்கோ!..

    அப்டியே ரூட்டு புட்சி நிறைய எய்து அன்னாத்தே…நாங்களுங் கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம்ல…

  444. //////இயேசு கடவுளின் தூதுவர் என கூறும் சரித்திர ஆராய்ச்சி நூலகள் பல உள்ளன ///

    //// சரித்திர ஆராய்ச்சி படி …//

    There is no single historical evidence to support the existence of Jesus.

    It is the biggest hoax of humanity.

  445. வணக்கம்

    ஸ்ரீ அருண் அவர்களே,

    நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கு பார்த்தீர்களா எத்தனை விதமான பதில்கள் என்று, ஸ்ரீ அசோக் இங்கே செல்லப்பாவின் வார்த்தைகளை உண்மையாகும் பொருட்டு திடீரென்று புதியதாக புருஷ பிரஜாபதி என்று சொல்கிறார்,

    அவர்கள் சொல்லும் பிரஜாபதி என்ற சொல்லுக்கு பிரஜைகளின் தலைவன் என்ற பொருளாகும், நமது பலம் பாரதத்தில் இருந்த ஒரு சில குழுக்களுக்கு ஒரு தலைவன் இருந்ததாகவும் அவர்களுக்கு பிரஜாபதி என்று பெயர் எனவும் எப்போதோ படித்த நினைவு, ஆனால் வேதங்கள் சொல்வது அந்த பிரஜாபதியை அல்ல, நீங்கள் ஒன்று செய்யுங்கள் கூகிள் தேடலில் prajapati என்று தேடுங்கள், அதிலே உங்களுக்கான விடை உள்ளது, அதைப் போலவே புருஷ சூக்தமும், தேடி பாருங்கள். (purusha suktam). புருஷ சுக்தம் என்பது பகவான் விஷ்ணுவை பற்றிய சூக்தம். (புருஷ சுத்தம் அல்ல)

    ////அயயா, நான் ஒரு ஆன்ம சாதகன். வேதாத்ரி மகரிஷியின் குண்டலினி யோகம், பிராண சிகிச்சை, ரெய்கி, முதலான கலைகளை பயிற்சி செய்தவன். தற்போது பனி நிமித்தமாக அமெரிக்காவில் இருக்கிறேன். நான் கற்ற கலைகள் எனக்கும் மற்றவர்க்கும் உபாயோகமாக இருக்கிறது. இன்னும் ஆழமான ஆன்மீகத்தை என் மனம் நாடுகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு குழப்பம் வேறு.////

    நண்பரே ஆன்மீகத்தில் முதலில் தவிர்க்கப் பட வேண்டியது குழம்பிய மன நிலை, அடுத்தது குழப்பும் காரணங்கள், அல்லது மனிதர்கள்.

    நீங்கள் விளக்கம் கேட்டு நிற்கும் இந்த வேதங்கள் மற்றும் எல்லா ஆன்மீக சமாச்சாரங்களும் அதை எழுதிய, கூறிய ரிஷிகளின் குண்டலினி சக்தியின் மூலமே பெறப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அனேகமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    குண்டலினி யோகம், பிராண பயிற்சி, தியானம், முதலான பயிற்சியில் ஈடுபடும் நீங்கள் ஏன் வீணாக குழம்புகிறீர்கள். நான் ஏற்க்கனவே கூறியது போல் இன்னும் வேதம் மற்றும் வேறு சமாசாரங்களை அறிந்து கொண்டால்தான் ஆன்மீகத்தில் முன்னேற முடியும் என்று நீங்கள் தவறாக கணக்குப் போடாதீர்கள்,

    நம் சித்தர்கள் சிலருக்கு வேத ஞானம் இல்லை என்பது தெரியுமா? ஆனாலும் அவர்கள் முக்தி அடைந்தார்கள், செயற்கரிய செயல்கள் செய்தார்கள். ஆன்மீகத்தில் உங்கள் சிந்தனையை அகலமாக்குதல் விட ஆழமாக்குதல் மிக முக்கியம். எனவே உங்களை குழப்பும் எந்த சிந்தனையும் தூக்கி வீசுங்கள், உங்கள் பயிற்சிகளில் விழிப்புணர்வோடு இருங்கள். பயிற்சிகளில் மனதை ஒருமைப் படுத்துங்கள்.

    இது தவிர சமயம், சந்தர்ப்பம் கிடைக்கும் போது வேண்டுமானால் வேதங்களை படிக்க முயலுங்கள், அதற்காக சிந்தனையை சிதற அடிக்காதீர்கள். வேதங்கள் கற்று ஆன்மீக முன்னேற்றம் என்பது ஒரு வழி, எனில் யோகத்தின் மூலம் ஆன்மீக முன்னேற்றம் என்பது இன்னொரு வழி உங்களுக்கு கிடைத்ததை நேர்த்தியாக பயன்படுத்துங்கள். அதுவே உங்களின் முன்னேற்றத்துக்கு மிக சிறந்த வழி என்பது தங்களின் நலன் கருதி என்கருத்து.

    அன்புள்ள ஸ்ரீ கிலாடி,

    //// மன்னாரு…அருண் ஏற்கனவே கவுந்துட்டாரு நைனா…
    கொஞ்சம் வெயிட் பண்ணிப்பாரேன்..!////

    அருண் கவுந்துட்டாரு என்பதில் உள்ள உங்களின் சந்தோசம் புரிகிறது, நண்பரே ஆனால் அவர் கேட்ட கேள்விக்கு விளக்கம் ஸ்ரீ மன்னாரு கொடுத்து விட்டார், ஆனாலும் இந்து நண்பர்கள் எவரும் சைக்கிள் கேப்பில் புகுந்து தன் இறை விளக்கம் கொடுத்து அருண் கவுந்துட்டாரு என்று சந்தோசப் படவில்லை, விளக்க வேண்டியது கடமை, அதை செய்தாயிற்று, புரியாமல் அவர்கள் கவிழ்வதும், உயர்வதும் அவர்களின் மதியில்தான் உள்ளது, அதற்காக எம்மிடம் வருத்தமுமில்லை.

  446. வணக்கம் மன்னாரு சார்,
    உங்க பாஷையை பார்த்து உங்களை என்னமோன்னு நினைச்சுட்டேன். உங்களுக்கு நிறைய தெரிஞ்சு இருக்கு. இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதினா ரொம்ப நல்லா இருக்கும். புருஷ ஷுக்த்ததை புருஷ சுத்தம்ன்னு சொல்லி குழப்பிட்டாங்க. ஆனா, இந்த பிரஜாபதி மூலமாய் பாபவிமொச்சனம்ன்னு சொல்லறாங்களே, பிரஜாபதி பலிதான், இயேசுவின் மரணம்ன்னு சொல்லி பல ஒற்றுமை எல்லாம் சொல்லறாங்களே. இதையும் கொஞ்சம் கிளியர் பண்ணிவிடுங்க தலைவா. இவங்களை ஒரு கை பார்க்கலாம்.
    என் குரு வேதாத்ரி மகரிஷி கூட இயேசுவை ஒரு அவதாரம்ன்னு சொல்லறார், அதனால் நான் அவரை மதிக்கிறேன். (என்னங்க கிலாடி, சந்தோஷமா?).
    நன்றி,
    அருண்

  447. அரூன்
    ///என் குரு வேதாத்ரி மகரிஷி கூட இயேசுவை ஒரு அவதாரம்ன்னு சொல்லறார், அதனால் நான் அவரை மதிக்கிறேன். (என்னங்க கிலாடி, சந்தோஷமா?).//

    அப்படியெல்லாம் கிலாடி சந்தாஷம் அடைந்து விடுவாரா என்ன? அரூன் கிறிஸ்தவனாக மாறும் வரை ஜோசப் அரூன் என்று பெயர் வைத்துக்கொள்ளும் வரை கிளாடிக்கு சந்தோஷம் கிடைக்குமா என்ன?

    ஹய்யோ ஹய்யோ!

  448. வணக்கம்,

    நண்பர் ஸ்ரீ அருண் அவர்களே, ஸ்ரீ தேவ ப்ரியா சாலமனின் இந்த வரிகளை படியுங்கள் மேலும் அவரது பின்னூட்டத்தை மீண்டும் ஒருமுறை கவனித்து படியுங்கள் தங்களுக்கான அருமையான விளக்கம் அங்கே உள்ளது.

    தேவப்ரியா சாலமன்
    14 October 2009 at 5:35 am
    ///அசோகர் மூலம் பரவிய இந்திய நம்பிக்கைகளும் எபிரேய அரசியல் நம்பிக்கைகளும் ஒன்று சேர எழுந்த ஒரு மூட நம்பிக்கை தான் கிறிஸ்துவம். பவுல்- பழைய ஏற்பாட்டில் உள்ள ஒரு படைப்புக் கதையை எபிரேயர் பார்வையை மீறி- ஆதாம் பாவம் நீக்க கிறிஸ்து எனப் புனைந்தார்.
    ஒரு தப்புக்கு- தண்டனையோ – அபராதமோ அனுபவித்தால் அதன் பின் தண்டனை முடிந்துவிடும் என்பது இயல்பு. மனிதன் பூமியில் மரணம் அடையக் காரணம் ஆதாம் பாவம் எனில் இயேசு மரணம் அதற்கான பரிகாரம்[அபராதம்] எனில் அதன் பின் உலகில் யாருமே மர்ணம் அடையக் கூடாது. பூமியில் மனிதன் மரணத்தின் அடிப்படை விலகவும் இல்லை.///

    புரிகிறதா மரணம் என்பது இயற்க்கை, அதை ஆதாமின் பாவத்தின் சம்பளமாக அவன் வழிவந்த நம் எல்லோருடைய தலையிலும் உள்ளதாகவும் அதை இயேசு தன சுய பலி மூலம் நிவர்த்தி செய்ததும், மேலும் நித்திய ஜீவனை அவர் நமக்கு பெற்று தருவார் என்பதும் கிறிஸ்துவ செய்திகள்.
    ஆனால் குண்டலினி யோகம் அறிந்த தங்களுக்கு உயிர் ஆன்மா போன்றவற்றின் விளக்கம் தெரியும் என நினைக்கிறேன், நம் தூல உடலின் காலம் முடிந்ததும் உயிர் பிரிகிறது , ஆனால் ஒரு யோகி, சித்தர்கள் முதலானோர் தங்களுக்கு தன் ஆன்ம பலத்திற்கு இந்த தூல உடல் இனி தேவைப் படாது என நினைத்து தமது ஆன்மாவை தாங்களே உடலை விடுத்து வெளியேறுகின்றனர். தூல உடல் மட்டுமே இல்லாமல் ஆன்மாவாக நித்திய வாழ்வில் உள்ளார்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல என்பது எனது கருத்து.

    நன்றாக ஒரு முறை யோசித்து பாருங்கள் உங்கள் யோக சாதனையால் நிகழ வேண்டிய ஒரு மோட்சம் இன்னொரு மனித பலியால்(இயேசுவின் பலி) நிகழ்வது என்பது சாத்தியமா?

  449. இயேசு எப்போவோ தோன்றி மறைந்து போன கலகக்காரராக இருந்திருப்பாரானால் இப்போதும் எங்கள் வாழ்வில் அவரால் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இது நாள் வரை நான் தெய்வமாக வணங்கி வந்த அவர் என்னை வழி நடத்தி வந்திருக்கிறார். ஒருவேளை தெய்வமாக கருதப்படாத இயேசுவை நான் வணங்கி வந்திருந்தால் என்னால் எப்படி இவ்வளவு வெளிப்படையாக சொல்ல முடியும்.( இதை சொல்வதற்கு வெள்ளைக்காரன் காசு கொடுத்திருப்பான் என உடனே சொல்லி விடாதீர்கள்… )

  450. //நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கு பார்த்தீர்களா எத்தனை விதமான பதில்கள் என்று, ஸ்ரீ அசோக் இங்கே செல்லப்பாவின் வார்த்தைகளை உண்மையாகும் பொருட்டு திடீரென்று புதியதாக புருஷ பிரஜாபதி என்று சொல்கிறார்//

    நண்பர் பாஸ்கர், ஒருவரை குற்றப்படுத்தும் முன் கொஞ்சம் யோசியுங்கள். “புருஷ பிரஜாபதி” என்று நான் சொன்னேனா? என் பதிவை தெளிவாக இன்னொரு முறை படித்துவிட்டு சொல்லுங்கள். நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் உங்கள் கண்களை மறைக்கிறது என்று நினைக்கிறேன். என்ன இருந்தாலும் நானும் நீங்களும் மனித பிறவி தானே, தவறு செய்வது நாம் எல்லோர்க்கும் சகஜம்தான்.
    நான் அருணின் கேள்வியினை ஊக்குவிக்க மட்டுமே செய்தேன். இதுவரை தமிழ்செல்வனிடமிருந்து பதில் இல்லை. பிரஜாபதியை பற்றி தெரியாமலேயே அவர் சாது செல்லப்பாவை விமர்சித்து விட்டாரோ என்று தோன்ற செய்கிறது.

    நன்றி,
    அசோக்

  451. நண்பர்களே,
    இது என் தனிப்பட்ட கருத்து, எனக்கு பைபிளில் சொல்லப்பட்ட ஏசுவே போதுமானவராக இருக்கிறார். பிரஜாபதி பற்றி நான் கவலைப்படவில்லை. I was just little curious after listening to Sadhu Chellappa about prajapathi. Thatz all.
    Thanks,
    Ashok

  452. வணக்கம்,

    மன்னிக்கவும் ஸ்ரீ அசோக் அவர்களே உண்மையில் அந்த பதிவின் அடைப்புக்குறியை நான் கவனிக்கவில்லை, சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, நண்பரே அனைவருமே ஒரே கருத்து கொண்டவர்களாக இருப்பின் நாம் இயந்திரம் ஆகி விடுவோமேயன்றி மனிதர்களாக இருக்க மாட்டோம். ஆனால் உங்களை குறை கூறியே ஆகவேண்டும் என்பதற்காக நான் அதை சொல்ல வில்லை, உண்மையில் அது என் கவனப் பிழையே.

  453. திரு.பாஸ்கர்,
    என் குருவான வேதாத்ரி மகரிஷி, அவர் கற்பித்தபடி ஜீவசமாதி அடைந்து இருந்தால், நான் அவர் கற்பித்த குண்டலினி யோகத்தை விட்டு திரும்பி இருக்க மாட்டேன். ஆனால், அவர் இறந்து விட்டார். இது எனக்குள் பெரும் கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்த யோகத்தால் பலன் இல்லை என்று சொல்லவில்லை. நான் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். ஆனால், இதை வைத்து நான் கடவுளை அறிய/அடைய முடியுமா? மரணமில்லா பேரு வாழ்வு என்று அவர் கூறியது என்ன? இப்படி பல கேள்விகள். நான் குழம்பியவன் என்று கூறுவதை விட கேள்வி உள்ளவன் என்று கூறலாம்.
    தேவப்ரியாவின் வார்த்தைகளை, நான் இப்போது எடுத்துக்கொள்ள முடியாது. என்னை மன்னிக்கவும், நீங்கள் காட்டிய பாதையில் போக முடியாமல் இருக்கிறேன். சற்றே அலுவல் இருப்பதால் மீதியை நாளை எழுதுறேன்.
    நன்றி,
    அருண்

  454. ///daniel
    15 October 2009 at 3:35 pm
    இயேசு எப்போவோ தோன்றி மறைந்து போன கலகக்காரராக இருந்திருப்பாரானால் இப்போதும் எங்கள் வாழ்வில் அவரால் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இது நாள் வரை நான் தெய்வமாக வணங்கி வந்த அவர் என்னை வழி நடத்தி வந்திருக்கிறார். ஒருவேளை தெய்வமாக கருதப்படாத இயேசுவை நான் வணங்கி வந்திருந்தால் என்னால் எப்படி இவ்வளவு வெளிப்படையாக சொல்ல முடியும்.///

    நீங்கள் மனது நிறைய அன்பை வைத்து ஒரு கல்லைக் வணங்கி வந்தீர்களானாலும் அது உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இறையுணர்வு உங்களுக்குள்ளேதான் இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவதற்கும் உணர்வதற்குமே உருவம் அல்லது உருவமில்லா வழிபாட்டு முறைகளை நாம் செய்கிறோம். அதைத்தான் அஹம் பிரம்மாஸ்மி என்று உயர்ந்த வாக்கியம் மூலமாகச் சொல்கிறார்கள். ஆக நீங்கள் தாக்கத்தை உணர்வதற்கும் வழி நடத்தப்படுவதர்க்கும் ஏசு உண்மையாகவே தெய்வமாக இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே நிஜம். அதனால் தான் இந்து தர்மத்தில் தெய்வ உருவங்கள் அவரவர் இஷ்டப்படி உள்ளது. அவை உண்மையான வாழ்ந்த உருவமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவசியம் நம்முள் இருக்கும் இறையுணர்வு வெளிப்படவேண்டியதே அதன் முக்கிய நோக்கம். இப்போதாவது இந்து தர்மத்தின் உயர்ந்த தத்துவங்களை உணருங்கள்.

  455. Let us analyse this:
    Jesus died because of Adam/Eve’s sins, and mankind’ sins. So he has completed his “sentence” as per God’s wishes and paid for the entire humanity’s crimes with his life. .On the other hand, if you say that he did not die for the sins of mankind, then this Christianity becomes irrelevent.You cannot have it both ways.
    God cannot keep on punishing mankind for eternity for original sin beacuse !) He will then be a merciless God 2) He sent His own mwssiah JC, specifically for this purpose,to rid Humans of their sins, by dying on the cross. JC had done a pretty good job in carrying out God’s wishes by getting crucified and getting his life snuffed out
    All happy with this analysis so far? Good.
    So we all human beings now should be sin free. Why carry on about JC and Christianity still? It is all history!!
    Amen

  456. வணக்கம்,

    நண்பர் ஸ்ரீ அருண் அவர்களே, நீங்கள் குழம்பியவர் அல்ல கேள்வி உள்ளவர் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியையே தருகிறது. உங்களின் கேள்விகளுக்கான விடைகள், கருத்துக்களை பிறகு தொடரலாம் என எண்ணுகிறேன், இப்போது நான் சொல்வது எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியை மகிழ்ச்சயுடன் கொண்டாடுங்கள்.

    அனைவருக்கும் எனது தீபாவளி நல வாழ்த்துக்கள்.
    நன்றி.

  457. திரு.B.பாஸ்கர்,
    வாழ்த்துக்களுக்கு நன்றி. இனி வரும் தீபாவளிகள் எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிதர, பல சுபமங்கள நிகழ்ச்சிகள் உங்கள் இல்லத்தில் நிகழ வாழ்த்துகிறேன்.
    இந்தியாவின் தீபாவளி குதுகலத்தை இங்கே (அமெரிக்காவில்) ரொம்ப miss பண்ணுகிறேன்.
    அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்,
    அருண்

  458. வணக்கம்,

    இந்த தளத்தில் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

    நண்பர் ஸ்ரீ அருண் அவர்களே உங்களின் வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றி, தீபாவளியை அமெரிக்காவில் இருப்பதால் miss பண்ணுவதாக வருந்தாதீர்கள் நண்பரே. இத்துணை நண்பர்கள் இந்த தளத்தில் உங்களோடு கருத்து பரிமாற்றம் மூலம் உரையாடும்போது நீங்கள் சிறிதாவது மகிழ்ச்சி அடைவீர்கள் என எண்ணுகிறேன்,

    உலகின் எல்லா இன்ப துன்பங்கள் எதுவும் நீங்கள் வெளியே உணர்வது இல்லை, அனைத்தும் தனக்குள்ளேயே எல்லா மனிதர்களும் உணர்கிறார்கள், உண்மையில் என்னைப் பற்றி சொல்ல வேண்டுமானால் எனக்கு தினமும் தீபாவளியாகத்தான் இருக்கிறது எனவே கடந்த தீபாவளி கூட என்னை மாற்றிவிடாமல் ஒரு வழக்கமான தினமாகவே இருந்தது.

    ஒரு மனிதன் தீபாவளி தினம் வரும் தினத்தை ஒவ்வொருநாளும் எப்படி சந்தோஷத்துடன் எதிர் நோக்குவானோ அப்படியே அந்த சந்தோஷத்துடனே எனது ஒவ்வொரு நாளையும் நான் மகிழ்ச்சியுடனேயே கழிக்கிறேன். அந்த மன நிலை வந்து விட்டால் எந்த நாளும் நமக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் தீபாவளி வரும் மகிழ்ச்சி என்பது தீபாவளி நாள் வந்தவுடன் முடிந்து விடுகிறது. அதன் பிறகு… நம் மனம் அடுத்து சந்தோஷத்தை வேறு பண்டிகையின் மூலம் எதிர்பார்க்கிறது. எனவே எனது சந்தோஷத்தை ஒரு தீபாவளி, மற்றும் எந்த ஒரு பண்டிகைக்குள்ளும் அடக்கிக் கொள்வதில்லை,

    நான் மறுபடி உங்களுக்கு விவரமாக எழுதுகிறேன். நன்றி.

  459. //daniel
    15 October 2009 at 3:35 pm
    இயேசு எப்போவோ தோன்றி மறைந்து போன கலகக்காரராக இருந்திருப்பாரானால் இப்போதும் எங்கள் வாழ்வில் அவரால் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இது நாள் வரை நான் தெய்வமாக வணங்கி வந்த அவர் என்னை வழி நடத்தி வந்திருக்கிறார். ஒருவேளை தெய்வமாக கருதப்படாத இயேசுவை நான் வணங்கி வந்திருந்தால் என்னால் எப்படி இவ்வளவு வெளிப்படையாக சொல்ல முடியும்.( இதை சொல்வதற்கு வெள்ளைக்காரன் காசு கொடுத்திருப்பான் என உடனே சொல்லி விடாதீர்கள்… )

    நீங்கள் மட்டுமல்ல, நானும் இயேசு கிறிஸ்துவை கடவுளாக கருதி வணங்குகிறேன். அதற்காக பிற மதங்களை அழிக்க நினைக்கவில்லை. ஆனால் பெரும்பாலான சுவிசெசகர்கள், “என்னுடைய கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள். மற்ற கடவுள் எல்லாம் ஜீவன் இல்லாதவர்கள்”, என்று பிற மதங்களை நிந்தனை செய்து, பிற மதங்களின் மீது வெறுப்புக் கருத்துக்களைப் பரப்புவதை நாகரீக சமுதாயம் ஆதரிக்காது.

    அந்த வகையான வெறுப்புக் கருத்துக்களால உலகிலே இரத்த ஆறு ஓட விட்டு பல இனங்களை சிதற அடித்து இருக்கிறார்கள்.

    அந்த வெறுப்பு கருத்துக்களை விநியோகம் செய்து வருவது சரியல்ல, நோய்க் கிருமிகளைப் பரப்பும் கொசுக்களைப் போல செயல் பட வேண்டாம் என்பதே நாகரீக சமூகத்தின் எதிர்பார்ப்பு.

  460. வணக்கம்,

    நண்பர் ஸ்ரீ அருண் அவர்களே,

    //என் குருவான வேதாத்ரி மகரிஷி, அவர் கற்பித்தபடி ஜீவசமாதி அடைந்து இருந்தால், நான் அவர் கற்பித்த குண்டலினி யோகத்தை விட்டு திரும்பி இருக்க மாட்டேன். ஆனால், அவர் இறந்து விட்டார். இது எனக்குள் பெரும் கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்த யோகத்தால் பலன் இல்லை என்று சொல்லவில்லை. நான் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். ஆனால், இதை வைத்து நான் கடவுளை அறிய/அடைய முடியுமா? மரணமில்லா பேரு வாழ்வு என்று அவர் கூறியது என்ன?///

    உங்களிடம் சில கேள்விகள் , ஜீவா சமாதி அடைவது என்றால் என்ன ? குண்டலினி யோகம், குண்டலினி சக்தி என்பது என்ன ?
    இதைப்பற்றிய உங்களின் கருத்து சொல்லவும். மேலும் மரணமில்லா பெரு வாழ்வு என்று நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

  461. டி.எல்.மூடி எனும் பிரபலமான அமெரிக்க சுவிசேஷகர் சொன்னது,
    “இரயில் பாதையில் நட்டையும் போல்டையும் திருடிக் கொண்டிருந்தவனை திருத்த கல்லூரிக்கு அனுப்புகிறீர்கள்; அவனோ படிப்பை முடித்து வந்ததும் இரயில் டிராக் முழுவதையுமே கொள்ளையடிக்கிறவனாகிறான்..!”

    கருத்து:
    கல்வி மட்டுமே ஒருவனை முழுவதும் மாற்றிவிடாது.

  462. //“இரயில் பாதையில் நட்டையும் போல்டையும் திருடிக் கொண்டிருந்தவனை திருத்த கல்லூரிக்கு அனுப்புகிறீர்கள்; அவனோ படிப்பை முடித்து வந்ததும் இரயில் டிராக் முழுவதையுமே கொள்ளையடிக்கிறவனாகிறான்..!”//
    A thief will be sent to the prison not college!
    A hindu boy/girl is sent to a missionary school/college thinking that he/she will get good education but gets converted if weak in the knowledge of his/her dharma as evangelist teaching is also part of the invisible curriculum which includes peer pressure also.

  463. ///glady
    24 October 2009 at 8:28 am
    டி.எல்.மூடி எனும் பிரபலமான அமெரிக்க சுவிசேஷகர் சொன்னது,
    “இரயில் பாதையில் நட்டையும் போல்டையும் திருடிக் கொண்டிருந்தவனை திருத்த கல்லூரிக்கு அனுப்புகிறீர்கள்; அவனோ படிப்பை முடித்து வந்ததும் இரயில் டிராக் முழுவதையுமே கொள்ளையடிக்கிறவனாகிறான்..!”

    கருத்து:
    கல்வி மட்டுமே ஒருவனை முழுவதும் மாற்றிவிடாது.///
    அதாவது பைபிளைப் படிப்பதால் மட்டுமே ஒருவன் மனிதனாகி விடமாட்டான்னு சொல்றீங்க. அப்படித்தானே

  464. Well said Gladyji,

    The Missionaries and the Church Theologians are educated but not interested in Truth and live blindly in their false Beliefs and till Education level to others increased followed the policy of
    ” Convert or get Killed” this is the Success Mathra of Christianity

  465. வணக்கம்,

    //glady
    24 October 2009 at 8:28 am

    டி.எல்.மூடி எனும் பிரபலமான அமெரிக்க சுவிசேஷகர் சொன்னது,
    “இரயில் பாதையில் நட்டையும் போல்டையும் திருடிக் கொண்டிருந்தவனை திருத்த கல்லூரிக்கு அனுப்புகிறீர்கள்; அவனோ படிப்பை முடித்து வந்ததும் இரயில் டிராக் முழுவதையுமே கொள்ளையடிக்கிறவனாகிறான்..!”///

    சரி நண்பர் கிலாடி அவர்களே ஆனால் நீங்கள்தான் இங்கே ஒரு முறை நம்நாட்டில் மிசிநரிகள் வந்துதான் கல்விக்கண்ணை திறந்து வைத்ததாக எழுதினீர்கள், அப்படியானால் அவர்கள் ரயில் டிராக்கை எப்படி கொள்ளையடிப்பது, அதை எப்படி விற்ப்பது எனவும் கிளாஸ் எடுத்திருப்பார்களோ?.

  466. அன்பர் அருண் அவர்களே

    ///மரணமில்லாப் பெரு வாழ்வு என்று அவர் கூறியது என்ன?///

    ஸ்வாமி வேதாத்திரி மஹரிஷி அவர்கள் இறப்பில்லாப் பெருவாழ்வு என்று கூறினாரா? அல்லது பிறப்பில்லாப் பெருவாழ்வு என்று கூறினாரா?

    அவர் இறப்பில்லாப் பெருவாழ்வு என்று கூறியிருப்பார் என்று தோன்றவில்லை.

    அவ‌ர‌து காய‌ க‌ல்ப‌ வ‌ழிமுறை நீண்ட‌ ஆயுளுக்கும், நோய‌ற்ற‌ வாழ்வுக்கும் வ‌ழிவ‌குக்கும் என்றாரே அன்றி இற‌ப்பில்லாப் பெருவாழ்வை அளிக்கும் என்று சொல்ல‌வில்லை.

    இந்து மதம் பிறப்பில்லாப் பெருவாழ்வு வாய்க்கும் என்றுதான் கூறுகிறது. ஜீவன் முக்தி வெகு சில மஹான்களுக்கே வாய்த்திருக்கிறது. அப்படி ஜீவசமாதி அடையாதோர் மஹான்களல்ல என்று பொருளல்ல.

  467. // இந்து மதம் பிறப்பில்லாப் பெருவாழ்வு வாய்க்கும் என்றுதான் கூறுகிறது. ஜீவன் முக்தி வெகு சில மஹான்களுக்கே வாய்த்திருக்கிறது. அப்படி ஜீவசமாதி அடையாதோர் மஹான்களல்ல என்று பொருளல்ல.
    //

    Well said Thiru Umashankar – Dasaratha despite being so true to Dharma did not get Jiva mukthi – he only went to heaven, whereas a simpleton pot maker called Thathi pandan (during krishna avataram) who did even know what dharma is got Jiva mukthi – God sets no rules to offer Mukti to anyone

  468. நான் உண்மையில் இஸ்லாமை விரும்புகிறேன்! லாஸ்ட் இயர் நான் குர்ரான் படித்தேன்! உண்மையில் ‘குர்ரான்’ உண்மையின் மொழி! எடிட்டர் நீங்களும் படியுங்கள்! ‘குர்ரான்’ நாட் ஒன்லி போர் முஸ்லிம் பீப்பல், அது ஒரு உலக பொது மொழிய உள்ளது! ட்ரை பனுங்கோ! என்நேனாவமோ இருக்கு! உண்மையிலே சிலை வழிபாட்டுக்கு மனசு பயபுடுது! நாம எநோமோ தப்பு செயரோமொனு தோணுது! நான் மனசார சிந்திக்கிறேன்,

  469. Even when prophet Mohammad started Islam, there were more than 350 gods in Arabia. Read the history of Arabia, so Muslims should not insult Hindus like what they are doing now.

  470. ///நான் உண்மையில் இஸ்லாமை விரும்புகிறேன்! லாஸ்ட் இயர் நான் குர்ரான் படித்தேன்! உண்மையில் ‘குர்ரான்’ உண்மையின் மொழி! எடிட்டர் நீங்களும் படியுங்கள்! ‘குர்ரான்’ நாட் ஒன்லி போர் முஸ்லிம் பீப்பல், அது ஒரு உலக பொது மொழிய உள்ளது! ட்ரை பனுங்கோ! என்நேனாவமோ இருக்கு! உண்மையிலே சிலை வழிபாட்டுக்கு மனசு பயபுடுது! நாம எநோமோ தப்பு செயரோமொனு தோணுது! நான் மனசார சிந்திக்கிறே///
    திரு சிதம்பரம் அவர்களே,
    பகவத் கீதையோ ,உபநிசத்தோ அல்லது விவேகனந்தரின் ஞான தீபங்களையோ,அல்லது வேறு சித்தர்கள்,மகான்கள் ,போன்றோர்களது புத்தகங்களை யோ நீங்கள் படிக்க வில்லையென்று நினைக்கிறேன்.சிலை வழிபாட்டிற்கும்,மெக்காவில் உள்ள புனிதக் கல் இருக்கும் திசைஏய் நோக்கி வழிபாடு செய்வதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் கிடையாது.”அனைத்து மதங்களும்,அனைத்து வழிகளும்,நம்மை கடவுளிடமே கொண்டு வந்து சேர்க்கிறது ” என்று அனுபவத்தில் கண்டு கூறிய,சிலை வழிபாட்டின் மூலம் கடவுளைக் கண்ட, ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகளைப் படிக்கவில்லையா? இறைவன் மிகப்பெரியவன் என்றால் அந்த இறைவனாக நீங்கள் எதை நினைப்பீர்கள்,அகண்ட வானத்தையும், பரந்த நிலப்பரப்பையும்,அல்லது கடலையும், அல்லது பல கோள்கள் ,நட்சத்திரங்கள்,நிறைந்த இந்த பிரபஞ்சத்தையும் தான் நினைக்க முடியும்.இதில் கடவுளை எங்கே நினைகிறீர்கள்??மெக்காவில் உள்ள புனிதக் கல் ஒரு உருவமாக தெரியவில்லையா?நீங்கள் தாராளமாக இஸ்லாமை பின்பற்றுங்கள்,ஆனால் இந்து மதத்தைக் குறை கூறாதீர்கள்.

  471. What Christianity achieved?

    1. The family values are destroyed all across the West

    2. People lost faith on God

    3. The Asian Chrsitian countries have become beggers ( Philipines, South Korea)

    4. Become the appendix of US

    5. Crime rate increased

    6. Great cultures like Mayan, Inka and Aztec are now only in books. They were not converted but killed.

    7.4 Million Jews killed

    8. Black people are untouchables

    Compare this with Hindu/Bhuddist countries.

    Christianity is not a religion. That is a corporate and Power center. In fact they dont even believe Jesus. Have you seen the picture of Jesus in their posters. Only their photos will be there.

    I recoomend you all to read the article ” Ahimsa Soldiers required ” in deivathin kural, volume 2.

  472. what? Christians are word wide? How many people follow christianity in west? churches are empty.

    Compare the people of oriental religion like Hinduism and Budhism with other religions.

    what you have? divorce, drug abuse, pre martial sex, child sex , terrorism.

    If christians are so great then why africans are still violent?

    After spoiling eurpoe, america, africa noe these christians have targetting South asia.

    There is no relationship between christ and christians.

    If Christianity is religion of love then why you treat blacks untouchable. You are giving a lecture on untouchability.

    The current pope himself is a nazi. they killed 40 lakh jews.

  473. sankaranarayanan
    30 November 2009 at 10:49 pm
    Christianity is not a religion. That is a corporate and Power center. In fact they dont even believe Jesus. Have you seen the picture of Jesus in their posters. Only their photos will be there….4 Million Jews killed

    sankaranarayanan
    24 December 2009 at 11:02 pm
    There is no relationship between christ and christians.
    If Christianity is religion of love then why you treat blacks untouchable. You are giving a lecture on untouchability;The current pope himself is a nazi. they killed 40 lakh jews.

    அற்புதம்,ஆரவாரம்,அமர்க்களம்…எப்படி புகழ்வதென்றே தெரியவில்லை;
    நண்பர் சங்கரநாராயணன் அவர்களுக்கு நவரத்தின மோதிரம் போடவேண்டும் போலிருக்கிறது; நாங்கள் சர்ச்சுக்குள்ளிருந்து போராடுகிறோம்; நீங்கள் வெளியிலிருந்து போராடுகிறீர்கள்; அதுமட்டுமே வித்தியாசம்;

    கிறிஸ்தவர்கள் வேறு, யூதர்கள் வேறு; இன்றைய கிறிஸ்தவத்துக்கும் கிறிஸ்துவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அப்படியிருந்தால் அவர்கள் படங்களில் இயேசுவும் இருக்கவேண்டுமே என்ற வரிகள் கோடி பெறும்;
    நன்றி நண்பரே..!

  474. Hi every body this website is really cool. I’m christian of RCand doing my BE final yr in ECE,I lov philosophy and ve passion to kno more abt each religion.I’m only 21 yrs old. I accept wat U all told abt todays christianity. I ve also experianced the same with some protestants trying us to become them not an RC.But my small and pity request is that it is well known,that religions are made based on the atmosphere and environtment the man lived. If u take our christianity our God and Angels used to wear Jews dress bcoz its Basic is Judaism.and Ur Hindhu Gods used to wear Indian Dress and as India is a diversed nation U can See one Godess ve Lion as her vahana in south or in region where lions are found most and in Rajasthan Godess have Camel as Her Vahana . In south Godess Parvathi and Other Godess wear sari as Tamil women wor while in north they wore the dress as those women. so we can say lot of example like this wat my Humble request Pls try to enrich Ur Hindhu Youngsters with Ur faith but at the same time dont put vengence in their mind abt other religion as U say U r Hindhus with MOTHER Like behaviour .
    Once again I feel sorry for those who Spoils the Name of Jesus and I delebrately ask sorry and ask ur pardon for their hurts.One more thing I delibrately not like the preaching of our religion with quoting of Hindhu myths coz I know there are lot to quote from our religion itself.
    I wish to have tamil name for my future generation but some body told usage of certain names are Hindhus and Double game, my kind request is that we r tamils in the name of Chriatians so we also have rights to use tamil words for our preaching and family .
    with Love
    Jasr
    Note: I just want to shorten my name as Sundar and dont say its Hindhu name acccording to tamil literature Sundaran= Handsome man, Smart man: So that only Great Tamil poet Kambar Used the Word SUNDARAN to quote Hanuman and Named a kandam as “SUNDARA KANDAM” i HOPE SO… If its wrong Kindly qoute the mistake and Im ready to accept it………

  475. நண்பர்களே, தமிழ்செல்வன் எழுதிய இந்த கட்டுரை இன்று நடக்கும் மத மாற்ற நடவடிக்கைகளை தோலுரித்து காட்டுகிறது. மத மாற்றத்துக்கு அயல் நாடுகளில் இருந்து பணம் பட்டு வாடா பண்ணபடுகிறது.

    சைவ, வைணவ மதங்கள் மிகவும் தொன்மையானவை. புத்த மதம் இந்தியாவில் தோன்றி அற்று போனது – புத்த துறவிகள் இதே மாதிரியான மத மாற்றத்தை அரசர்கள் மூலம் செய்தார்கள். மற்ற இந்து மதங்கள் மீது காழ்புணர்ச்சி கட்டினார்கள். விளைவு எந்த மண்ணில் buddha மதம் பிறந்ததோ அந்த மண்ணில் தழிக்க முடியவில்லை. சகிப்பு தன்மை இல்லாத எந்த மதமும் இந்து மதங்களுக்கு மாற்றாக, போட்டியாக வளர முடியாது.

    கிருஸ்துவ மதம் ஐரோப்பியா, அமெரிக்க நாடுகளில் தனது மதிப்பை இழந்து, பெரும்பாலானவர்கள் இதனை வெறுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

    இந்து மதங்களை எதிர்த்து எந்த மதமும் வளர்ந்ததாக சரித்திரம் கிடையாது. மாறாக எதிர்பாளர்களுக்கு அழிவு நிச்சயம். இந்து மதம் சக்தி வாய்ந்தது.

    இந்து மதங்களின் மூலாதாரம் மற்றும் தொன்மை தெரியாதவர்கள் தான், இந்து மதந்தை துவேஷம் பண்ணுகிறார்கள். திருமுறைகள் ஒன்று போதும் நம் மதம் எப்பேர்பட்டது என்று.

    வாழ்க, வளர்க

  476. Each Friday night after work, Sardar would fire up his outdoor grill and cook a tandoori chicken and some meat kebabs. But, all of his neighbors were strict Catholics … and since it was Lent, they were forbidden from eating chicken and meat on a Friday.

    The delicious aroma from the grilled meats was causing such a problem for the Catholic faithful that they finally talked to their Priest. The Priest came to visit Sardar and suggested that he become a Catholic. After several classes and much study, Sardar attended Mass… and as the priest sprinkled holy water over him, he said, You were born a Sikh, and raised a Sikh, but now, you are a Catholic.”

    Sardar’s neighbors were greatly relieved, until Friday night arrived. The wonderful aroma of tandoori chicken and meat kebabs filled the neighborhood. The Priest was called immediately by the neighbors and, as he rushed into Sardar’s backyard, clutching a rosary and prepared to scold him, he stopped and watched in amazement.

    There stood Sardar, holding a small bottle of holy water which he carefully sprinkled over the grilling meats and chanted: “Oye, you were born a chicken, and you were born a lamb, you were raised a chicken and you were raised a lamb but now you are a potato and tomato”

  477. The aim & spread of Christianity by developed countries to dominated all the under developed countries and stop their progress further otherwise their survival is difficult & it is a big question mark? Their war field arms sales are the only boost for their economic survival. Christianity ruined old cultured people throughout the world by genocide. The latest genocide took place in Sri Lanka by slow poisoning of converting Tamil & Shingle. The same way slow poisoning being attempted in India for several decades & it is very worst in Tamil Nadu (poisoning done by separating Davidian/Ariyan, Tamil/Sanskrit Brahmin/non-Brahmin etc) Funds flows into all the Dravidian parties through Christian Missionary . Pl note that it started from the day when Justice Party arrived. The mind set of Dravidian parties should change (Instead of working under white people co-operate with Hindu and & they are your real ancestors). Save the Nation and stop shaving attempts by collaborating with Christian. Muslim looted India for 700 years, Britishers looted India for 150 years but you hate your own brethren Hindu believing all false notions created by foreigner. Leave a peaceful Nation to your younger generation. Other wise we have to face the same situation like Sri Lanka. Now Christian domination is taking place in larger scale in Kanyakumari & Rameswaram, Muslim domination in Kerela.
    Already boarder areas of India are eaten away by Christian/Muslim – Nagaland, Mizoram, Arunachal Pradesh & , Kashmir. India do not have a proper control over these states.
    Given below the recent happening of Christian domination & control around us (Captured these countries and making their puppet government & their troops are still there)
    Syria, Somalia, Afghanistan, Iraq – plans are in full swing to capture these countries also – Pakistan, Iran, Yemen & India/ V.Gopal
    Note:- Request to put the new comments first & it is easy to browse instead of scrolling the entire page

  478. வெறும் வாதமாக இல்லாமல் ..ஆதாரபூர்வ கூற்றுகளோடு ஹிந்து விழிப்புணர்வு பணி செய்யும் தமிழ் ஹிந்து குழுவினருக்கு நன்றி ……

  479. ratham kothikaratu
    baratha matha vai arrikkum kirumikal
    intha nachu kirumikalukku udanadi marana dandanai kodukka vendum
    paralokathirku anuppa vendum

  480. As per Mahabaratha Prajapathi means caretaker of 14 worlds and they are the first beings created by Brhama.

    Mahabaratha mentions following as names of Prajapathi.

    Daksha, Prachetas, Pulaha, Marichi, Kasyapa, Bhrigu, Atri, Vasistha, Gautama, Angiras, Pulastya, Kratu, Prahlada and Kardama.

    Out of these name one is the “AATUKUTTIANA PRAJAPATHI”. Might be he is the one referred by Chellapa.

  481. Daksha Prajapathi because of his EGO developed hatred towards the GOD and insulted HIM and because of that he lost his life but all merciful god RESTORED HIS LIFE but with the head of the GOAT. This is the story of AATUKUTTIANA PRAJAPATHI.

    So AATUKUTTIANA PRAJAPATHI is the one who had hatred towards GOD.

    Might be he is the PRAJAPATHI referred by SUDHU CHELLAPA.

  482. A friend of mine who is a manager in a bank narrated this to me
    One day the lady sweeper in his branch brought her son’s 10th standard school leaving certificate to him
    On going through it he found that her son’s religion was mentioned as ‘christianity’
    He asked the lady whether she was a christian.
    To that she replied in the negative and said that she was very much a Hindu
    Then he pointed out the entry in the certificate
    The poor illiterate lady recollected the day that she took her son to the school to get him admitted in standard one.
    Because she was unlettered she had asked the Headmistress ( a christian) to fill up the application form for her
    Would a true christian let go of such a golden opportunity?
    The HM had promptly entered the boy’s religion as christianity
    The headmistress has not so far complied with the poor mother’s request to change the entry in the certificate.
    I read somewhere that this is one of the strategies of the church to increase it’s flock!
    So let the joes and others of his ilk tell their cock and bull stories to someone else.

    R.sridharan

  483. பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களும், ஏழைகளும் தான் Christian-ஆகா மாறுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்டால் அவர்கள் தன்னிறைவு, தன்னம்பிக்கை பெற்று, தம் மதத்தில் பெருமை பெற்று இதில் நிலைத்திருக்க அதிகமான சாத்தியகூறுகள் உள்ளன. மற்றவரால் தான் கீழாக பார்க்க படும் பொழுது, அதிலிருந்து வெளியேறுவது மனிதர் இயல்பு.

  484. One christian gentleman has said that ‘sadhu’ Pujya sri’ etc are Tamil words and can be used by any one.
    Then why is the need for a different religion when it does not have any uniqueness?

    Why is the Bible called ‘Viviliam’, Jesus is called ‘Yesu’, John is called ‘yovan’ in Tamil?
    Similarly in every other language they are called differently!
    Is there any other religion or philosophy which adopts such tactics?

    Is there any different name for Lord Rama in English?
    Is Bhagwat Gita called by any other name in French or Russian?

    So the only conclusion is that the Church wants to convert people in different lands to christianity by cheating and deceiving them by using their familiar idioms and usages.
    It is the most sinister and fraudulent game!
    R.Sridharan

  485. It is not true to say that mostly the socalled backward class people convert to christianity.

    Amazingly as compared to many wealthy and the socalled higher classes these people have more self respect and are more faithful to their ancient traditions

    During the tsunami in Nagapattinam the missionaroies distributed relief materials tro the surivivors.Next day these Misha ‘naries’ came to their homes and started to pray in their houses.

    But the people resisted it saying that they were Hindus
    On this the Misha naries demanded that they return the relief materials given by them
    The poor people did not hesitate even for a minute.

    Saying that their customs are more important to them than the cheap plastic buckets and mats they immediately returned them

    The Misha naries had their faces blackened
    But I know some people belonging to the so called higher class converting because they received money from the church to square their personal debts etc.

    R.Sridharan

  486. // Then he pointed out the entry in the certificate
    The poor illiterate lady recollected the day that she took her son to the school to get him admitted in standard one.
    Because she was unlettered she had asked the Headmistress ( a christian) to fill up the application form for her
    Would a true christian let go of such a golden opportunity?
    The HM had promptly entered the boy’s religion as christianity
    //

    சிறுபிள்ளைத்தனமானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்,நண்பர் “சிரிதர்”.

    இதுபோல எங்குமே நடைபெறமுடியாது;ஏனெனில் தகப்பனாருடைய சான்றிதழை வைத்தே சாதிச் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது;

    சாதிச் சான்றிதழ் என்பது சலுகைக்காகவே எனில் அதனைக் காப்பாற்றிக் கொள்ளவும் பல்வேறு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்;

    சான்றிதழில் மட்டுமே கிறித்தவன் என்று குறிப்பிட்டு பாவியாகவே வாழும் எத்தனையோ கிறித்தவர்கள் உண்டு; எனவே இது முழுக்க முழுக்க பெலவீனமான வாதமாகும்..!

    (edited and published)

  487. i regret ho Glady wants to refute regular errors done by Church and church run schools.

    One of Friend gave me a True Incident.

    Student studying in 9th was an average student in a Hindu run scholl, failed the Student.
    Parent met the Correspondent and Principal and requested to promote the Student and give him TC, so that the School Results would be good.. They showed the Student’ answer papers and suggested that it would do good to the student and refused the TC. The Parents agreed. However a Relative who was working in Educational Department, took it to a Missionary run school, records were made as if that Student was studying in that school and got TC with 9th Pass, and joined another school.

    The boy later learnt lesson and studied well and has become a software professional. I know the original School, later where the boy completed the 10+th and +2 etc.,, and being a known person I am not giving the details.

    Missionaries and churches misuse every power they have.

  488. Nothing is impossible for the church, the Missionaries and the christians because of the enormous clout they enjoy due to money power.They just purchase everyone – the police, politicians,administrators. Even the judiciary seems to favor the christians and the muslims.
    So entering the religion of the child in the certificate is child’s play for them.
    Especially in our country where anything is possible because of the corruption at every level and there being no respect for law and absence of Rule of law.
    The church makes use of it very well.

    R.Sridharan

  489. One friend ‘Kalaignani’ kamahassan’s experiece in Rajasthan – regarding caste differences.
    It seems kamal lectured about ‘EVR. Did they not wonder why he did not follow EVR’s lectures about ‘women’s Rights’ when he drove away his two wives unfairly?
    R.Sridharan

  490. Pleae read Editorial in this week ‘Kumudam Jothidam’ to know about latest trick of Soodhu Chellapa

  491. Recently I read in a a Tamil Magazine ( Hindu Mitran) the following:
    A boy was converted by missionaries by getting him a job in a company run by a christian.
    After some time the boy’s father expired.As per the Hindu custom he was to light his father’s pyre.
    But the boy refused saying that he had converted to christianity.

    His relatives pleaded with him saying’Anyway You are his son; is it not your duty to perform his last rites?’
    But the boy was adamant and went away .

    Then the unthinkable happened.
    His 17 year old younger sister offered to perform the last rites for her father.
    But her Mother told her not to do so saying that in that case she may have to get her head shaved.

    But the young girl replied that for the sake of her beloved father who had brought her up all these years she will do it.

    Let us ask why such things happen in the society?
    All because of conversions.
    This is what the church wants- shake the foundations of the Hindu family and destroy it so that their job of conversion becomes easier.
    They are so perverted, sadistic and ruthless!

    R.Sridharan

  492. அனைவருக்கும் வணக்கம்.
    எனக்கும் இதே (கிருத்தவர்களின் பொய் கூறி/கட்டாய மதமாற்றம் குறித்த) ஆதங்கம் வெகு நாளாய் இருந்தது…..
    இங்கு மறுமொழிகளை (விவாதங்களை) பார்த்து நிறைய தெரிந்துகொண்டேன்.
    நன்றிகள் பல.
    எனது கருத்து யாதெனில் –
    நமது நாட்டில் இருப்பது மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக பேசுவதும் , செயல்படுவதும் தான்.
    போலி மதச்சார்பின்மை கட்சிகளான congress,dmk திருந்தும் வரை இப்படிதான்.
    அதிலும் கருணாநிதி இந்துக்களை விமர்சிப்பார்,
    ஆனால் முஸ்லிம் நோன்பில் கலந்து கொள்வார்.
    கிருத்தவ விழாக்களில் கலந்து கொள்வார்.
    இதுதான் நாத்திகமா?
    கிண்டல் செய்வதற்கு இந்துக்கள்,
    வோட்டுக்கு முஸ்லிம்,கிருத்தவர்கள்.
    போலி மதச்சார்பின்மை/நாத்திகர்களால் ஏமாற்றப்படும் மக்களை
    யார் காப்பாற்றுவது?
    நமது இந்துக்கள் மட்டும் தான் மதநல்லிணக்கம் என்று மௌனமாகவே இருக்கிறோம் (நமது ஒவ்வொரு பாரம்பரியமும்(கலாச்சாரமும்) அழிக்கப்படும்போதும்).
    கடவுள் அனைவரையும் காப்பாற்ற வேண்டுவோம்.

    நன்றியுடன்
    அன்பன் CM ரகு

  493. //Majority of a seven-judge bench of the High Court yesterday quashed the quota saying it is religion specific and will encourage conversion.//

    Indian Constitution does not allow reservation based on religion and also
    reservation above 49%

    Tamilnadu and Karnataka has more than above.

    This must be first stopped, now SC uses this illegal thing to justify muslim reservation in Andhra.

  494. வாழ்த்துக்கள்,

    தங்களது தகவல்கள்களுக்கு நன்றி,
    இந்து மதம் அழியாதது, அழிக்கமுடியாதது,உண்மையானது.

    யார் வேண்டுமானாலும் முயற்சிக்கட்டுமே!
    மலை மீது மோதட்டுமே!

    எப்படியோ, இந்தியத் திருநாட்டின் கொள்ளையடிக்கப்பட்ட செல்வம் மீண்டும் திரும்பி வரட்டும்! ஏழை மக்கள் வாழவேண்டும்!

    (edited and published)
    நன்றி.

  495. இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் மத மாற்றம் செய்கின்றார்கள்.
    மத்தியில் காங்கிரஸ் இருக்கும் வரை இந்துமத விரோதம் தொடரும்.

  496. இது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நடந்தது .
    அந்த வங்கியின் யூனியன் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் பழனிக்கு பாத யாத்திரை செல்வர்
    அவருடன் பல ஊழியர்களும் நடந்து செல்வர் .ஒரு யாத்திரையின் போது ஒரு கடை நிலை ஊழியர் மாரடைப்பால் காலமாகி விட்டார் .அவரது மனைவி மிகவும் அதிர்ந்து விட்டாள்.அவள் படித்தவள் அல்ல. அந்த வங்கியில் இருந்த சில கிறித்தவர்களுக்கு உடனே ஒரு பளிச் யோசனை.அந்தப் பெண்ணை அணுகி அவர்களது வேலையை ஆரம்பித்தார்கள்.அவளது துக்கத்தில் பங்கேற்பது போல் நடித்தனர்.அவளுக்காக ஜெபம் செய்வதாக கூறினார்கள்.அவளை மெதுவாக சர்ச்சுக்கு இட்டுச் சென்றார்கள் .அவளிடம் ‘உன் கணவன் ஹிந்துக் கடவுளான முருகனை நம்பினதால் தான் இப்படி அகாலமாக இறந்தார் . அதனால் நீ கிறிஸ்துவை நம்பு’ என்று மூளை சலவை செய்து கொஞ்ச நாளில் அவளை மதம் மாற்றியே விட்டனர்.
    ஹிந்துக்கள் பொதுவாக அனுஷ்டிக்கும் ஒரு வருட துக்க காலம் கூட முடியவில்லை. எவ்வளவு கொடுமை.
    பிணத்தை வட்டமிடும் கழுகுகள் போல் எங்கேயாவது துக்கம் இருந்தால் அங்கே இந்த கழுகுகள் வட்டமிடும்.கடைசியில் அந்தப் பெண்ணுக்கு அதே வங்கியில் வேலை வங்கிக் கொடுத்தவர் முருக பக்தரான யூனியன் தலைவர்!

    ரா.ஸ்ரீதரன்

  497. சர்ச்சின் நோக்கம் மத மாற்றத்தினால் மற்ற நாடுகளை மாற்ற வேண்டும் என்பது மட்டும் அல்ல.முக்கியமாக நாடுகளை உடைப்பதும் சிதைப்பதும் மிக முக்கிய நோக்கம் ஆகும்.
    உதரணமாக ஒரு நாட்டில் முழுதும் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் இருந்தால் அங்கு மதத்தின் மூலமாக பிரிவினையை ஏற்படுத்த முடியாது.
    ஆகவே ஒரு கணிசமான எண்ணிக்கையில் அவர்களை கிறித்தவத்துக்கு மாற்றினால் அங்கு அதன் அடிப்படையில் வெறுப்பும், சண்டைகளும் ஏற்படும். இல்லாவிட்டாலும் அவர்களே ஏற்படுத்துவார்கள்.ஒரு கட்டத்தில் நிலைமை தலைக்கு மீறிப் போகும் போது இவர்களது எஜமானர்களான அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, ஏன், ஐநா சபையோ கூட தலையிட்டு அழகாக அந்த நாட்டைப் பிரித்து விடுவார்கள்
    மேலும் ஒரு நாட்டை உடைத்து அதன் பலத்தைக் குறைத்த மகிழ்ச்சியும் அவர்களுக்குக் கிடைக்கும்.இனிமேல் அந்த நாடு கிறித்தவ நாடுகளுக்கு போட்டியாக இருக்க முடியாது. ஒரு படி மேலேபோய் அந்த நாடுகள் கிறித்தவ நாடுகளின் அடிமைகளாக இருக்க நேரிடும்.
    மேலும் ஒரு நாட்டைக் காட்டி இன்னொரு நாட்டில் இருந்து நன்றாக கனிம வளம் ,வியாபாரம் மூலம் நன்றாக சுரண்டலாம் .இது எப்படி இருக்கு !
    ரா.ஸ்ரீதரன்

  498. அமெரிக்காவில் அரசாங்கம் மட்டுமே கிறித்தவத்தின் பாதுகாவலனாக உள்ளது
    பெரும்பாலான மக்கள் அதைச் சீந்துவதே இல்லை .
    சர்ச்சுகள் காலியாக உள்ளன
    பல சர்ச்சு கட்டிடங்கள் விற்கப்படுகின்றன
    சில ஹிந்துக் கோயில்கள் அவ்வாறு வாங்கப்பட்ட இடங்களில் கட்டப் பட்டுள்ளன
    இது ஏனென்றால் கிறித்தவத்தில் அறிவுக்குத் தீனி போடும் எந்த அம்சமும் இல்லை
    ஏதோ கன்னா பின்னா என்று அர்த்தமில்லாமல் உரத்த குரலில் எதையோ கத்துவதுதான்
    ஒரு கிறித்தவரே சர்ச்சில் நடப்பதைப் பற்றிக் கூறும் போது’ஒரு நகைச்சுவை நாடகம் போல் உள்ளது’ என்று கூறுகிறார்
    இரா.ஸ்ரீதரன் .

  499. ஹிந்துக்கள் மட்டுமே உண்மையான செகுலர்வாதிகள்
    உதாரணமாக பிறப்புச் சான்றிதழ் வேண்டுமானால் அல்லது ஒருவன் கிறித்தவன் என்று நிரூபிக்க வேண்டுமானால் சர்ச் ரிஜிச்டருக்குப் போக வேண்டும்

    அது போலவே முஸ்லிம்கள் தங்களுக்குள் தகராறு வந்தால் ஜமாதுக்குப் போக வேண்டும் .அவர்கள் சொல்வது தான் சட்டம். அங்கு கிடைப்பதுதான் நீதி
    ஆனால் ஹிந்துக்களுக்கு முனிசிபல் ஆபிஸ் சென்றாலே போதும் .
    பாதிரிகளிடமும் முல்லாக்களிடமும் அடிமைப் பட்டுக் கிடக்கும் இவர்கள் விரைந்து விடுதலை பெறுவார்களாக

    இரா.ஸ்ரீதரன்

  500. இனிமேல் நாம் செய்ய வேண்டுவதெல்லாம் நம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற இந்தப் பொன்னான தாய் நாட்டை யும் ( இழந்தது போக) அதன் விலை மதிக்க முடியாத அறிவுப் புதையல்களையும் ,வாழ்க்கை நெறிகளையும் நமது எதிர்கால சந்ததிக்கு சிதையாமல் விட்டுச்செல்லப் போகிறோமா அல்லது பாலைவன மதங்கள் அவர்களது குரல்வளையை நெருக்கும் நிலைமையில் விட்டுச் செல்லப் போகிறோமா என்பதுதான்.
    ஒரு பக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு இன்னொரு புறம் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்
    முக்கியமாக அடித்தட்டு ஹிந்துக்களின் அன்பைப் பெற வேண்டும்
    அவர்களை அரவணைத்து அவர்களின் துன்பத்தில் உண்மையான அக்கறை காட்ட வேண்டும்
    நம்மால் இயன்ற பொருள் ,மற்ற உதவிகள் செய்திடல் வேண்டும்
    இது இப்போதே ஆரம்பிக்க வேண்டும்
    தனியாக இல்லாவிட்டாலும் ஹிந்துக்களுக்காகத் தொண்டு புரியும் இயக்கங்களுடன் சேர்ந்து செய்யலாம்

    இரா.ஸ்ரீதரன் .

  501. பதிவும் அதன் மறுமொழிகளும் புண் பட்ட நெஞ்சிற்கு மருந்து தடவியது போலிருந்தது. நம்மிடையே உள்ள பிரச்சினைகளை நன்றாக ஆராய்ந்து மேலும் அதை தீர்ப்பதற்கான வழி முறைகளையும் சொல்லியிருப்பதுடன், இணைந்து செயல்படுவோம் என்ற எண்ணத்தை வலியுறுத்தியது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. நன்றி. நமக்கு இன்னும் நிறைய பணிகள் காத்திருகின்றன.

  502. Christianity

    // Christian faith – GOD fallows the earring human to confer his mercy on him // so every one is permitted to commit sins till in his death bed and finally ask Jesus for repentance whole heartedly HE will forgive – GOD has created human being only to commit sins ? – What a foolish proposal. He is a GOD or DEVIL – what an idiotic senseless statement//

    // Christianity promotes – Your children & my children are playing with our children – is it a true family system or cannibalism //

    // Christianity policy – “USE AND THROUGH” use, exploit, enslave if not surrendered – murder

    “Missionaries are perfect nuisances and leave every place worse than they found it.” – Charles Dickens (1812-1870).

  503. கிறித்தவம் பணத்தின் அடிப்படையிலும் ,நாடுகளுக்கு எதிரான சதியின் அடிப்படையிலும் செயல் படுகிறது.
    இல்லை என்றால் ஏன் கிறித்தவத்தைப் பரப்ப இவ்வளவு தலை போகும் முயற்சி ?
    பொழுது விடிந்தால் கிட்டத்தட்ட பத்து டிவி சானல்களில் கிறித்தவப் பிரசாரம் !

    இங்கு மட்டும் இவ்வளவு என்றால் பாரதம் முழுக்க எவ்வளவு இருக்கும் ?
    உலகம் முழுக்க எவ்வளவு ?
    இதற்கெல்லாம் எவ்வளவு பணம் செலவாகும்
    கிறித்தவம் உண்மையிலேயே ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்கிறதென்றால் இவ்வளவு பணத்தையும் வறியவர்களுக்காக செலவு செய்யலாமே?
    இந்த முயற்சிகளில் எதோ ஒரு அவசரம் தெரிகிறது
    போலித்தனமாகச் செய்யும் எதிலும் உண்மைகள் இருக்காது
    உடனடியாக நமது ஹிந்து இயக்கங்கள் மற்றும் மடாதிபதிகள்,சமய அறிஞர்கள் ஒன்று கூடி , கிறித்தவ மத மாற்றத்தை நிறுத்துமாறு வாடிகனை வற்புறுத்த வேண்டும்.

    இல்லை என்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இங்கு கிறித்தவத்தின் பெயரால் செய்யப்படும் மோசடி மத மாற்றங்களை அந்நாட்டு மக்கள் அறியச் செய்ய வேண்டும்

    இரா.ஸ்ரீதரன்

  504. கிறித்தவ மத மாற்றியான , கோடீஸ்வரனான டி ஜி எஸ் தினகரன் இறந்த போது அவரது மகனான மற்றொரு மதம் மாற்றியான பால் தினகரன் ‘தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணத்துக்கு என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்து வருந்தினேன் ‘என்று கூறியது உலகிலேய மிகப் பெரிய பித்தலாட்டமாகும்.
    .
    ஏராளமான கிறித்தவர்களே இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்துள்ளனர்
    கறுப்புப் பணத்தை வெள்ளையாக ஆக்கும் முயற்சியா இது என்று அவர்களே கேட்கின்றனர்

    தினகரன் குடும்பத்தைப் பற்றிய ஒரு கட்டுரை முன்பு ஒரு ஆங்கில தினசரியில் வெளியானது
    அதில் எப்படி அந்தக் குடும்பத்தினர் நினைத்தால் ஊர் சுற்றவும் ,ஓய்வெடுக்கவும் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என்றும், எவ்வாறு பணத்தை தண்ணீர் மாதிரி செலவு செய்வார்கள் என்றும் எழுதி இருந்தது.

    அவர்கள் ஷாப்பிங் செய்தால் லண்டனில் உள்ள மிகப் பெரியதும், மிகப் பணக்காரர்கள் மட்டுமே பொருள்கள் வாங்கக் கூடியதுமான harrods போன்ற சூப்பர் மார்க்கெட்களில் தான் வாங்குவார்கள் என்றும் படித்தேன் .
    மிகவும் அதிர்ந்து போனேன்
    இவர்களெல்லாம் என்ன மதத்தைப் பற்றிப் பேசுவது?
    தாங்கள் திருந்தாமல் ஹிந்துக்களைத் திருத்த வந்து விட்டார்கள்!
    இரா.ஸ்ரீதரன்

  505. என்னுடைய நல்ல நண்பர் ஒருவர் கிறிஸ்டியன். அவர் என்றுமே மதமாற்றம் பற்றி பேசியதும் கிடையாது, என்னிடம் மத போதனைகள் செய்ததும் கிடையாது. ஒரு நாள் ஆபீசில் இருந்தபோது, என்னிடம் இருந்த ஜாதக சாப்ட்வேர் மூலம் தன்னுடைய ஜாதகம் கணித்து பார்த்து மகிழ்ந்தார். அப்படி பார்க்கும்போது, பக்கத்தில் இருந்த இன்னோர் கிறிஸ்டியன் அலுவலர் கடுப்பாகி, “நிறுத்துங்க.. ஒரு true கிறிஸ்டியன் இதெல்லாம் பண்ண கூடாது ” என்று கத்தி சீன் ஆக்கி விட்டார். அவருடைய மத வெறி கண்டு அருவேருப்பாகி போனது எல்லாருக்கும்.

    ரொம்ப வருடங்களுக்கு முன், எனக்கு தெரிந்த தஞ்சாவூர் பிராமின் பாமிலி ஒன்றை மதமாற்றம் செய்து விட்டார்கள். மதம் மாறினால் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறினார்களாம். ஆனால் நடந்தது என்ன? குடும்பமே உடைந்தது. அவர் சிறந்த குடிகாரராய் மாறினார். பிள்ளை இறந்து போனான். மனைவியும் மகளும் திண்டாடி போயினர்.

    அதையெல்லாம் பார்த்த பிறகு, கிறிஸ்டியன் என்றாலே அலர்ஜி ஆகி விட்டது எனக்கு. ஈரோட்டில் உள்ள ஒரு கிறிஸ்டியன் பள்ளியில்தான் நானும் படித்தேன். நான் படித்த காலத்தில் இருந்த பாதர் நல்லவர். படிப்பை மட்டும் சொல்லி குடுத்தார். அவருக்கு பிறகு வேறொரு பாதர் வந்தார். அப்போது அதே பள்ளியில் என்னுடைய அக்கா பெண்ணை சேர்த்தோம். கொஞ்ச நாள் கழித்து அவள் “ஜெசுஸ் தான் ஒன்லி காட் ” என்று சொல்ல ஆரம்பித்தவுடன், பள்ளியை மாற்றி விட்டேன்.

    மத மாறுதல்’க்கு முக்கிய காரணம், நம் ஹிந்து மதத்தில் இப்போது உள்ள பாகுபாடுகள் தான் என்று நான் நினைக்கிறேன். ஜாதிகள் பெருகி தீண்டாமை பெருகியது. அதனால் பாதிக்கப்பட்டவர்களை இந்த கிறிஸ்டியன் சர்ச்சுகள் குறி வைத்து மத மாற்றம் செய்கின்றன.

    மனதில் நிறைய இருக்கிறது .. மேலும் எழுதுகிறேன்.

  506. அலுவலகத்தில் பனி புரியும் ஒரு ஊழியர் கூறியது
    அவரது அண்ணன் மன நோயாளி போல் இரூக்கிராராம்

    என்ன என்று விசாரித்ததில்:

    அவர் நன்றாகத் தான் இருந்தாராம்
    திடீரென்று அவர் இரண்டு கிறிஸ்தவ நண்பர்களுடன் சுற்ற ஆரம்பித்தாராம்
    கொஞ்ச நாட்களில் அவரது பழக்க வழக்கங்கள் மாறுவதை வீட்டில் உள்ளவர்கள் உணர ஆரம்பித்தனராம்
    சாதுவான ஸ்வபாவம் கொண்ட அவர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப் படுவது,ரகளை செய்வது, தாய் என்றும் தம்பி என்றும் பார்க்காமல் கண்டபடி கேட்ட வார்த்தைகாளால் ஏசுவது என்றுமாறிவிட்டாராம்
    இரவு திடீரென்று எழுந்து கத்துவாராம்
    அப்போது உடம்பெல்லாம் நடுங்குமாம்
    அடிக்கடி தன தாயிடம் காசு கேட்க ஆரம்பித்தாராம்
    கொஞ்ச நாள் கழித்து அந்த நண்பர்களுடன் சர்ச் செல்ல ஆரம்பித்தாராம்

    பிறகுதான் அவர்களுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது
    அந்த கிறிஸ்தவ நண்பர்கள் இவனுக்கு போதை மருந்து பழக்கம் ஏற்படுத்தி உள்ளனர்
    அப்படியே ஒடிந்து விட்டனனர் குடும்ப உறுப்பினர்கள்
    அவர்கள் போகாத மருத்துவர் இல்லை ஆனால் ஒன்றும் பயன் இல்லை .
    ஆனால் அவன் எப்போதும் பிரமை பிடித்தது போலவும், சுய நினைவு அற்றவன் போலவும் இருக்கிறானாம்

    தம்பிக்கு மணம் ஆகி விட்டது
    அண்ணனால் குடும்பத்தில் குழப்பம் சச்சரவு
    தம்பி பாசத்துடன் இருந்தாலும் அவன் மனைவி அண்ணன் செய்யும் அட்டகாசங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனை வெளியே விரட்ட வேண்டும் என்கிறாளாம்.

    இதற்கு நடுவில் திடீரென்று இரண்டு பாதிரிகள் வீட்டுக்கு வந்து அண்ணனை பற்றி விசாரித்திருக்கின்றனர் .
    என்ன என்று கேட்டால் ‘அவன் எங்களிடம் பணம் வாங்கினான் அதை திரும்பக் கேட்க வந்தோம் என்றனராம்
    அண்ணனின் இரண்டு கிறிஸ்தவ நண்பர்களும் அழகாக திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்கின்றனாராம்

    எப்படியெல்லாம் கிறிஸ்தவத்தின் பெயரால் ஹிந்துக் குடும்பங்களை அழிக்கின்றனர்!

    bவீட்டிலும் ள் வருத்தத்தினால் என்றால் அவர் அவரது தந்தை எழுதிய நூல்களை படிக்கவே இல்லை என்று தெளிவாகிறது .ராமலிங்க வள்ளலின் திரு எனது நபர் அருட்பா, அருந கிரினாதரின் கந்தர் அலங்காரம், சைவத் திருமுறை திருவாசகம் மற்றும் நூற்றுக் கணக்கான நெஞ்சை உருக்கும் ஹிந்து சமய நூல்கள் கொடுக்காத மன அமைிதியையா கிறிஸ்தவம் கொடுக்கும்?
    சுவாமி விவேகனந்தரின் சிங்க நாத உரைகளை படித்தால் மலையளவு துன்பமும் கடுகாகத் தோன்றாதா?
    கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்று இதைத்தான் கூறலாம்
    கங்கையில் குளித்துக் கொண்டிருப்பவர் என் கழிவுக் குட்டையில் விழ வேண்டும் ?
    இப்படி்த்தான் மலையாள பெண் எழுத்தாளர் கமலா தாஸ் திடீரென்று முஸ்லிமாக மாறினார்
    ஆனால் தனது கடைசிக் காலத்தில் ‘ நான் பெரிய தவறு செய்து விட்டேன்,இஸ்லாம் குரல்வளையை அழுத்தும் கோட்பாடு,அதில் பெண்களுக்கு உரிமை இல்லை’ என்றெல்லாம் புலம்பி இறந்து போனார்.
    சில சமயம் சிலர் யார் மேலேயோ இருக்கும் அல்லது சமுதாயத்தின் மேல் இருக்கும் அல்லது குடும்பத்தில் மனக் கசப்பு இதற்காகவும் ஏதோ மற்றவர்களை பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு மதம் மாறி தங்களையே தண்டித்துக் கொள்கின்றனர்.

    இரா.ஸ்ரீதரன்

  507. அலுவலகத்தில் பனி புரியும் ஒரு ஊழியர் கூறியது
    அவரது அண்ணன் மன நோயாளி போல் இரூக்கிராராம்

    என்ன என்று விசாரித்ததில்:

    அவர் நன்றாகத் தான் இருந்தாராம்
    திடீரென்று அவர் இரண்டு கிறிஸ்தவ நண்பர்களுடன் சுற்ற ஆரம்பித்தாராம்
    கொஞ்ச நாட்களில் அவரது பழக்க வழக்கங்கள் மாறுவதை வீட்டில் உள்ளவர்கள் உணர ஆரம்பித்தனராம்
    சாதுவான ஸ்வபாவம் கொண்ட அவர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப் படுவது,ரகளை செய்வது, தாய் என்றும் தம்பி என்றும் பார்க்காமல் கண்டபடி கேட்ட வார்த்தைகாளால் ஏசுவது என்றுமாறிவிட்டாராம்
    இரவு திடீரென்று எழுந்து கத்துவாராம்
    அப்போது உடம்பெல்லாம் நடுங்குமாம்
    அடிக்கடி தன தாயிடம் காசு கேட்க ஆரம்பித்தாராம்
    கொஞ்ச நாள் கழித்து அந்த நண்பர்களுடன் சர்ச் செல்ல ஆரம்பித்தாராம்

    பிறகுதான் அவர்களுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது
    அந்த கிறிஸ்தவ நண்பர்கள் இவனுக்கு போதை மருந்து பழக்கம் ஏற்படுத்தி உள்ளனர்
    அப்படியே ஒடிந்து விட்டனனர் குடும்ப உறுப்பினர்கள்
    அவர்கள் போகாத மருத்துவர் இல்லை ஆனால் ஒன்றும் பயன் இல்லை .
    ஆனால் அவன் எப்போதும் பிரமை பிடித்தது போலவும், சுய நினைவு அற்றவன் போலவும் இருக்கிறானாம்

    தம்பிக்கு மணம் ஆகி விட்டது
    அண்ணனால் குடும்பத்தில் குழப்பம் சச்சரவு
    தம்பி பாசத்துடன் இருந்தாலும் அவன் மனைவி அண்ணன் செய்யும் அட்டகாசங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனை வெளியே விரட்ட வேண்டும் என்கிறாளாம்.

    இதற்கு நடுவில் திடீரென்று இரண்டு பாதிரிகள் வீட்டுக்கு வந்து அண்ணனை பற்றி விசாரித்திருக்கின்றனர் .
    என்ன என்று கேட்டால் ‘அவன் எங்களிடம் பணம் வாங்கினான் அதை திரும்பக் கேட்க வந்தோம் என்றனராம்
    அண்ணனின் இரண்டு கிறிஸ்தவ நண்பர்களும் அழகாக திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்கின்றனாராம்

    எப்படியெல்லாம் கிறிஸ்தவத்தின் பெயரால் ஹிந்துக் குடும்பங்களை அழிக்கின்றனர்!

    இரா.ஸ்ரீதரன்

  508. ஹிந்துக்களாகிய நாம் மற்ற மதங்களை வெறுக்கவில்லை ஆனால் மற்ற மதங்களின் பெயரால் வெறுப்பைப் பரப்பும் ,மற்றும் உலக சமுதாயத்துக்கே குறையாத நல் முத்துக்களை வாரி வாரி வழங்கக் கூடிய கடலான நம் ஹிந்துக் கலாசாரத்தை பூண்டோடு அழித்து விட வேண்டும் என்று நாளும் பாடுபடும் எண்ணத்தைத்தான் வெறுக்கிறோம் .
    கிறிஸ்தவ ர்களின் இந்த மனோபாவம் இரண்டு காரணங்களால் வருகிறது
    ஒன்று ஹிந்து சமயத்தில் உள்ள, மனித குலம் முழுமைக்கும் பொருந்தக் கூடிய உயர் கோட்பாடுகள் அவர்கள் மதத்தில் இல்லை என்பதால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை
    மற்றொன்று, மேலை நாடுகள் பாரதம் போன்ற நாடுகளை உடைக்க கிறிஸ்தவத்தை ஒரு கருவியாக உபயோகிப்பது

  509. ஹிந்து சமயம் பாகுபாட்டைப் போதிக்கவில்லை
    எந்த ஹிந்து சமய நூலிலும் அவ்வாறு எழுதவில்லை
    சில தனி மனிதர்களின் செய்கையால் எதோ ஹிந்து தர்மத்தில் சாதி உயர்வு தாழ்வு நியாயப் படுத்தப் பட்டுள்ளதாக நினைப்பது தவறு.

    வெள்ளைக்கார சரித்திர் ஆசிரியர்கள் விதை ஊன்றி,நம் நாட்டு அரசியல் வாதிகள் தண்ணீர் ஊற்றி வளர்த்து ,கிறிஸ்தவ மதம் மாற்றிகள் அறுவடை செய்யும் விஷப் பயிரே இந்த சாதி துவேஷம்.

    ராமன் க்ஷத்ரியன் . கிருஷ்ணன் யாதவன். வேதம் தொகுத்த மற்றும் மகாபாரதம் எழுதிய வியாசர் பரதவர் குலம். கபீர் தாசர் நெசவாளி. கண்ணப்பன் வேடன். குங்கிலியக் கலய நாயனார் குயவர். மெய்ப்பொருள் நாயனார் மல்லர் மற்றும் மன்னர் .திருமங்கை ஆழ்வார் அரசர், கனக தாசர் மிகத் தாழ்த்தப் பட்டவர், திருநாளைப் போவாரும் அவ்வாறே. சேக்கிழார் வேளாளர், ராமலிங்க வள்ளலார் வெள்ளாளர், தாயுமானவர்,குமார குருபரர், பட்டினத்தார் இவர்கள் அந்தணர் அல்லர்.கம்பரும் அந்தணர் அல்லர்.

    விபீஷன ஆழ்வார் என்று பெருமை படுத்தப்படுபவர் இராக்கத குலம்
    நரசிம்மநின் அருள் பெற்ற் அருளாளன் பிரகலாதன் அசுர குலம்
    மேலும் நாம் வணங்கும் அனுமன் வானரன். ஜடாயு பட்சி. கருடன் பட்சி. உயர்வாகப் பேசும் ஜாம்பவான் கரடி.

    இவ்வாறு பண்பை மட்டுமே அளவுகோலாக்கி சமுகத்தில் எல்லாப் பிரிவு மக்களையும் , ஏன் ஐந்தறிவுள்ள உயிரினங்களையும் உயரிய இடத்தில் வைத்த கலாச்சாரம் ஹிந்து கலாச்சாரம் .
    அது எவ்வாறு பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கும்

    ஆகவே நாம் இனிமேலாவது ஜாதி ஜாதி என்று கிளிப் பிள்ளை போல் சொல்வதி விட்டு ஹிந்து தர்மம் என்ற ஆலமரத்து விழுதுகள் நாம் எல்லோரும் என்று நினைப்போமாக .

  510. அன்புள்ள அனைத்து வாசகர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்க் கொள்கிறேன் இந்திய ஒரு இந்து நாடாக மலர வேண்டும்.அதற்க்கு இந்துக்களிடையே தியாக மனப்பான்மையும் ஜாதி இன பேதமற்ற ஒற்றுமையே முதல் தேவை. இந்து மத கல்வி முறை ஆரம்ப பாடசாலையிலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும்.மதமாற்ற தடைச்சட்டம் மத்திய அரசினால் நிறைவேற்றப்படவேண்டும்.இந்து நிறுவனங்கள் தமக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். இந்து சமய நிறுவனங்கள் தமது சேவைகளை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். மத மாற்று நடவடிக்கைக்கெதிராக அணிதிரள வேண்டும். இந்து மத பாடசாலைகள் நிறுவி அங்கே எல்லாவிதமான நவீன காலத்துக்கு ஏற்ற கல்வி முறைகளையும் அரசாங்க உதவியுடன் கற்பிக்க ஏற்ப்பாடு செய்யப்பட வேண்டும். இதற்க்கு பொருளாதார வளம் பெற்ற இந்து தொழிலதிபர்கள், கோவில்கள் இந்து மத மடாதிபதிகள் முன் வரல் வேண்டும். இவை போன்ற அடிப்படை விஷயங்களை நாம் கடைப்பிடித்தோமானால் இந்து மதம் நன்றாக தழைத்து வளரும் என்பதற்கு ஐயம் இல்லை. நன்றி. வணக்கம்.
    சர்வே ஜனாஹா சுகினோ பவந்து

  511. அன்புள்ள இந்து பெருமக்களே
    இந்த சாது செல்லப்பா போன்றவர்களின் பிரசங்கத்துக்கு எல்லாம் ஏன் செல்கிறீர்கள்
    இப்படியான இந்து மத நூல்களை திரிபு படுத்தி அநியாயம் செய்யும் சாது செல்லப்பா போன்றவர்களை தட்டி கேட்க்க இந்து மத குருமாரும் இந்து மக்களும் ஏன் முன் வரவில்லை அதனால் தானே அவர் இவ்வளவு வளர்ச்சி அடைய முடிந்தது இவர்கள் கூட்டம் நடத்த முடியாதவாறு இந்துப்பெருமக்கள் கிளர்ந்து எழவேண்டும்.மடாதிபதிகளே இவற்றை முன்னின்று நீங்கள் தான் நடத்த வேண்டும்.
    இப்படிப்பட்ட வஞ்சகர் வலையினில் இந்து மக்களே ஏமார்ந்து விடாதீர்கள். போலி மதச்சார்பின்மைக்கு துணை போகாதீர்கள். இப்போதே தொடங்குங்கள் உங்கள் போராட்டங்களை நாடாளாவ அது விரிவடையட்டும்.ஜெய் பாரத மாதா

  512. ///தங்கள் மதத்தில் ஜாதிப் பாகுபாடுகள் கிடையாது என்று கிறுஸ்துவர்கள் பீற்றிக்கொண்டாலும், நடைமுறையில், தேவாலயத்தில் இருக்கை முறை முதல் கல்லறையில் புதைக்கும் முறை வரை, ஜாதி வேற்றுமை கையாளப் படுகிறது.////

    இது போன்று ஒரு செல்லப்பா இல்லை, பல செல்லப்பாக்கள் இப்போது அலைகிறார்கள், [..], மக்களே உஷார்!

    [Edited and published]

  513. உங்களால் முடிந்தால் திருப்பதி உண்டியலை எடுத்தும் , சபரி மலை உண்டியலை உடைத்தும் ஏழைகளுக்கு உதவுங்கள் .உங்களால் முடியாது .ஆனால் கிறிஸ்தவன் செய்வான் .அவன் பனி தொடரும்……..

  514. @ barathi :

    What are saying about Christians help???? shall i tell what’s happened on refugee camps on vavuniya,when final war was taken place in srilanka . Missionaries came in one hand food,in other hand bible.if you accept bible,we will give food.this is what’s happened.and more about this so many Hindus helping privately and through the temples to the people who are in orphanages and etc.but the christian salvation is like this.they say ,if you accept jesus as your lord and pacifier you will get blessings in your life. 90 out of 100 this is what they are help!!!!!! when you jump from one path to another path.afterwards whatever happens in your life favorably,you tend to think start ,yes this is the right path and this is the true god,but at that moment you neglect your good things that you are received when you are in your old religion,

    அடுத்த உளறல்…..கிறிஸ்தவன் அனைவருக்கும் உதவுவானா??????ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ …கொசு ..சூ சூ ….
    பால் தினகரன்,மோகன் டி லாசரஸ்,சூது சொல்ல…சாரி செல்லப்பா,இவனுங்க எல்லாம் என்ன உதவி பண்ணி கிழிச்சாங்க???
    தினகரண்ட காருண்யா கல்லுரி என்ன தர்ம ஸ்தாபனமா ???கிறிஸ்தவ டிவிகளில் மக்களக்கு உதவி பண்ணுற அல்லது இரத்த தான முகாம் நடத்துற காட்சிகளா காண்பிக்க படுது??? Harvesting souls !!!!!அது தானே பொய்க்கு ஆத்தும அறுவடைகள் பண்றது மட்டும் தான் உங்க உதவின்னா அந்த உதவிய வெளிய சொல்லிடு திரிய வேணாம்…அதுவும் சபைல சேர்ந்து அதிகமா ஆத்தும அறுவடை செய்றவனுக்கு தான் அந்த உதவிகள் கிடைக்குது???வேணும்னா நல்ல சந்தைபடுத்தல் தந்திரோபாயங்கள் கற்றுக்கொள்ள ஏத்த இடமா அது இருக்கலாம்… எந்த கோவில் அய்யரும் கார்ல வந்து இறங்கல,பங்களா வீடு வாங்கல, இதெல்லாம் எங்க நடக்குதுன்னு பாருங்க????
    நான் ஒருவர் இருவரை பற்றி சொல்லவில்லை,பல கிறிஸ்தவர்களின் மன நிலை இதுவே…மதம் பார்த்து அல்லது மதம் மாறிய பின்னரே உதவி செய்யும் கேவலமான பழக்கம் எந்த இந்துவிடமும் இல்லை …தாங்கள் இந்துவா அல்லது மதம் மாறிய நபரா தெரியவில்லை ..போலி பூச்சாண்டிகளை நம்பி ஏமாறாதீர்கள்..இறுதி தீர்ப்பு நாள் எப்போது வரும் என அறுதியாக கூறி விட்டு ஆன்ம அறுவடையை தொடருங்கள் அல்லது தொடர சொல்லுங்கள்

  515. பாரதி அவர்களே ஒரு அப்பிரிக்கா பழமொழி கேளும் “நங்கள் கண்களை மூடும் போது பைபிள் அவர்கள் கையில் இருந்தது நாடு எங்கள் கையில் இருந்தது ,கண்களை திறந்துபார்த்த பொழுது நாடு அவர்கள் கையிலும் பைபிள் எங்கள் கையிலும் இருந்தது.

  516. @ பாரதி,

    உங்கள் அறியாமையை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். நீங்கள் சொன்ன எந்த உண்டியலையும் ஹிந்துகள் கையில் இல்லை. அரசாங்கத்தின் கையில் அதாவது கிறித்துவ மிஷினரிகளின் வழிகாட்டுதலின் படி காங்கிரஸ் என்ற தேச துரோகியின் மூலமும் பிற அடிவருடிகள் மூலம் மதசார்பு அற்ற அரசாங்கத்தின் கையில் உள்ளது.

    அடுத்து விவேகானந்த ஆஸ்ரமம் முதல் அமிர்தானந்தா ஆஸ்ரமம் வரை எத்தனையோ அமைப்புகள் எண்ணிலடங்கா சேவையை செய்து வருகின்றன்.

    முதலில் மதம் மாறிய ஏழை ஆப்பிரிக்க மக்களுக்கு வெள்ளை ஏகாதிபத்திய பொறுக்கிகள் சுரண்டுவதை நிறுத்த சொல்லி விட்டு அதன் பிறகு இந்தியாவில் குவியும் மத மாற்ற வியாபார முதலீட்டை சோமாலியாவுக்கும் கானாவுக்கும் ருவாண்டாவுக்கும் திருப்ப சொல்லுங்கள்….

  517. ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள்.. முக்கியமாக ஹிந்து பிராமணர்கள் ஒன்று கூடி சாது செல்லப்பா போன்ற திருட்டு கிருத்தவர்களை சட்ட ரீதியாக எதிர்க்க வேண்டும். கிருத்தவர்கள் நம்முடைய மத நூல்களை தவறான வழியில் பயன்படுத்துவதை வெளிப்படையாக எதிர்க்க வேண்டும். அவர்கள் நம்முடைய நூல்களுக்கு தவறான விளக்கங்கள் குடுப்பதை கண்டிக்க வேண்டும். ஹிந்து அமைப்புகள் ஒன்று கூடி போராட்டம் நடத்த வேண்டும். கிருத்தவத்தை நம் இந்திய நாட்டில் இருந்து விரட்டி அழிக்க வேண்டும்.
    Hindus must unite and be strong.Hindus must wake up. Its already time. we must kick these xtian parasite religion from our Indian soil. please create awareness among our fellow Hindus. we should never allow these evil christian missionaries to touch our holy scriptures and twist their meanings.

  518. நம்முடைய வேதத்தை தானே போதிக்கிறார்கள்.. போதிக்கட்டும்..

    காயத்திரி மந்திரம் அணைத்து மதத்துக்கும் உரியவை தானே..

    அனைவரும் அதை படிக்கட்டும்..

    இந்து மதம் அனைவருக்கும் பொதுவானது..

    பொதுவானதாக இருந்தால் மட்டுமே உண்மையாக இருக்க முடியும்..

    உங்கள் நோக்கம் இந்து மதத்தை அழிப்பதா இல்லை வாழ வைப்பதா.,?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *