அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி

இந்து தருமம் அழியாத சனாதன தர்மம் என்கிறோம். அப்படி அழியாத தர்மமாக அது வாழ்வதற்கு காரணம் அதனால் வாழ்க்கையில் மங்கல ஒளி பெற்றவர்கள் அதனைக் காப்பாற்ற செய்யும் தியாகங்களினால்தான். நீங்கள் படிக்க போவது வெறும் செய்தியல்ல. ஒரு அரசின் மதவெறிக்கு எதிராக போராடும் ஒரு இளம் பெண்ணின் உண்மைக் கதை.

பங்காரம்மா…. தமிழ் ஹிந்துக்களின் வரலாறு எழுதப்படும் போது, ஹிந்துக்கள் உலகெங்கிலும் மகோன்னத வாழ்வு வாழும் நல்ல சூழல் ஏற்படும் போது, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் ஒரு பெயராக விளங்கப் போகிறது.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வேத மந்திரங்கள் முழங்க மங்கல இசை ஒலிக்க ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் காதல் கணவனை கைப்பிடித்தார் பங்காரம்மா…ஆனால் மலேசிய அரசின் இஸ்லாமிய நீதி மன்றமும் ஆவணங்களும் பங்காரம்மாவை ஒரு இஸ்லாமியர் என கூறுகின்றன.

ஏன்?

kedah-pkr-youth-deputy-chief-gooi-hsiao-leung-left-talkingபெரும்பாலான இந்து தமிழர்கள் மலேசியாவில் அனுபவிக்கும் ஒரு கொடுமையின் பெயர் வறுமை. அந்த வறுமையின் காரணமாக ஐந்து வயதே ஆகியிருந்த பங்காரம்மாவை மாணவர் சேவை விடுதியொன்றில் தங்கிப் படிக்கச்செய்தார் அவரது தந்தை. 1989 இல் – அதாவது பங்காரம்மாவுக்கு ஏழு வயதில் அவரது மதத்தை இஸ்லாம் என பதியவைத்தார்கள் இந்த ‘சேவை’ விடுதியினர். 16 வயதில் பங்காரம்மா இந்த விடுதியை விட்டு வெளியேறினார். பின்னர் சில ஆண்டுகளில் திருமணம் செய்தார். அவரது கணவர் சொக்கலிங்கம். திருமணம் ஹிந்து கோவிலில் நடைபெற்றது. பின்னர் அவர்கள் தேசிய ஆவண நிலையத்தில் தங்கள் திருமணத்தை பதியச் சென்ற போதுதான் பங்காரம்மா முஸ்லீமாக அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டார்கள்.

எப்படி ஒரு ஏழு வயது குழந்தை இஸ்லாமுக்கு சுய அறிவுடன் மதம் மாறியிருக்க முடியும்? இந்த மதமாற்றம் குறித்த நினைவு கூட தமக்கு இல்லை என்கிறார் பங்காரம்மா. ஆனால் இவரை நிர்பந்தித்து முஸ்லீம் ஆக்குவது என முடிவு செய்துவிட்ட மலேசிய அரசு துறைகளோ பங்காரம்மாவின் தந்தையே இவர்களை இஸ்லாமியராக்கி விட்டதாக ஒரு புறம் சொல்கிறது. அப்படியானால் ஏற்கனவே இஸ்லாமியராகிவிட்ட ஒருவரை ஏன் ஏழு வயதில் மீண்டும் இஸ்லாமியராக மதம் மாற்ற வேண்டும் என்கிற கேள்விக்கோ ஏதொரு பதிலும் அவர்களால் கூற முடியவில்லை. அரசுதுறையின் சார்பில் ஆதாரமாக கொடுக்கப்பட்ட சான்றிதழில் பங்காரம்மாவுடன் சேர்ந்து அவரது சகோதரியும் இஸ்லாமியராக மாறியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த ஆண்டு அவரது சகோதரி பிறக்கவேயில்லை என சுட்டிக்காட்டுகிறார் பங்காரம்மா. இந்த கொடுமையின் உச்ச கட்டம் என்னவென்றால் பங்காரம்மா-சொக்கலிங்கம் தம்பதியினருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளின் சான்றிதழ் பதிவில் அவர்களின் மதம் என்னும் இடத்தில் “போதிய தரவுகள் இல்லை” என்றும் தந்தை என்னும் இடத்தில் எந்த பெயரும் கொடுக்காமல் வைத்திருக்கும் அவலம்தான். மதவெறி நீதி பரிபாலனம் செய்யும் போது எளிய ஹிந்துக்களுக்கு கிடைக்கும் நீதி இதுதான் போலும்.

bangarammaமலேசியாவில் இரட்டை நீதி முறை உள்ளது. இஸ்லாமியரல்லாதவர்களுக்கு சிவில் நீதி மன்றங்களும் இஸ்லாமியருக்கு ஷரியா நீதி மன்றங்களும் இயங்குகின்றன. முஸ்லீம் – முஸ்லீமல்லாதவர்களுக்கு இடையேயான பிரச்சனைகளில் ஷரியா நீதி மன்றத் தீர்ப்பே இறுதியாக அமைவதே நிலையாக உள்ளது. இத்தகைய நிலை 8 விழுக்காடு வாழும் தமிழ் இந்துக்களுக்கு தங்களுக்கு நீதி மறுக்கப்படும் என்கிற அச்சத்தை உருவாக்கியுள்ளது. பங்காரம்மா இஸ்லாமியர் என ஷரியா நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும் பட்சத்தில் அவர் ஹிந்துவானது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரித்து இஸ்லாமிய சீர்திருத்த நிலையத்தில் அடைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுவார். பலவித மன-சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட ரேவதி எனும் ஹிந்து பெண்ணின் நிலையை உலகமே கண்டு அதிர்ச்சி அடைந்தது.

ரேவதியின் கதையும் பங்காரம்மா போன்றதுதான். ரேவதி தமது 26 வயதில் காதலித்து கரம் பற்றிய கணவர் சுரேஷ். கரம் பற்றி வேள்வித்தீ சுற்றி திருமணம் செய்த கணவருடன் சகதர்மிணியாக நடத்திய இல்லற அன்பின் விளைவு திவ்வியதர்ஷனி. தமிழ் பண்பாட்டில் பொங்கலும் கார்த்திகையும் கொண்டாடி வளர்ந்த ரேவதியின் பெயர் அதிகார ஆவணங்களில் தொடர்பேயில்லாமல் என இருந்தது. சிதிபாத்திமா!

ஏனெனில் ரேவதியின் பெற்றோர் ஒரு கட்டத்தில் இஸ்லாமியராக மாறினராம். ஆனால் ரேவதி வளர்ந்ததோ தன் பாட்டியிடம். அவரோ தமிழர் பண்பாட்டில் தோய்ந்தவர். திருவள்ளுவரும் மாணிக்கவாசகரும் என தொடங்கி தாயுமானவ சுவாமிகளும் வள்ளலாருமென வாழையடி வாழையாக வந்த தமிழ் பண்பில் வாழ்ந்தவர். நெறி தப்பி செல்லாமல் நல்தமிழர் வாழ்நெறியை தன் சந்ததிக்குப் புகட்டினார் அவர். இந்நிலையில் ஆவணங்களில் தம் பெயர் சிதிபாத்திமா என தமிழர் பண்பாட்டிற்கு தொடர்பற்றதோர் பெயராக இருப்பதை வெறுத்தார். அதனை மாற்றிட விழைந்தார்.

முதலில் அவர் அணுகிய அரசு அலுவலகம் அவரை இஸ்லாமிய சட்ட மையத்தினை அணுகிட சொல்லியது. அவரும் அணுகினார். பெயர் மாற்றம் தானே இதிலென்ன இருக்கிறதென்று. பிறகுதான் தொடங்கியது ஒரு முடிவில்லா தீக்கனவாக கொடுஞ் சம்பவத்தொடர். ரேவதி ஒரு இஸ்லாமியர் என அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் தன்னை இந்துவாக கருதுவது செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவர் ‘இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லம்’ ஒன்றில் அடைக்கப்பட்டார். இங்கு அடைக்கப்பட்டவர்கள் இஸ்லாமிலிருந்து விலகிட நினைப்பவர்கள். இஸ்லாமியரல்லாதவரை மணந்திட்ட இஸ்லாமிய பெண்கள் – குறிப்பாக கருவுற்ற நிலையில் இருப்பவர்கள்.

ரேவதி தன் கணவனையோ அல்லது குழந்தையையோ பார்ப்பது தடைசெய்யப்பட்டது. கணவன் சுரேஷின் நிலையும் இன்னமும் பரிதாபகரமாக மாறியது. அவரது குழந்தையும் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டது. குழந்தை திவ்விய தர்ஷனி சுரேஷிடமிருந்து எடுத்து செல்லப்பட்டு ரேவதியின் முஸ்லீமான பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவளை காண முதலில் சுரேஷ் அனுமதிக்கப்பட்டாலும் பின்னர் அதற்கும் தடைவிதிக்கப்பட்டது. என்ற போதிலும் சில மணிநேரங்கள் தனது காரில் சென்று அந்த இஸ்லாமிய இல்லத்தின் முன்னர் நிற்பார் சுரேஷ். அங்கு கம்பிகளுக்கு நடுவில் பிரிந்தவர் காண்பர் ஒரு சில நிமிடத்துளிகள். இந்த உணர்ச்சிபூர்வமான கண்ணீர் வரவழைக்கும் காட்சியை அல்ஜஸீரா தொலைக்காட்சி காட்டியது.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள கம்பிக்கதவுகளில் அடைப்புகள் வைக்கப்பட்டு வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவர்களை காணமுடியாமல் ஆக்கப்பட்டது. சுரேஷ் மனம் தளர்ந்துவிடவில்லை. இந்த இஸ்லாமிய அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்ந்தார். ‘மனிதரை கொண்டு வந்து நிறுத்தும்’ அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக இஸ்லாமிய அதிகாரிகள் தந்திரமாக ரேவதியை விடுதலை செய்து அவர் தனது இஸ்லாமிய பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என விதித்தனர்.29 வயதான ஒரு பெண்மணி தனது பெற்றோரின் கட்டுப்பாட்டில் தனது கணவரிலிருந்து பிரிந்திருக்க வேண்டும் எனக் கூறும் மடத்தனமான மானுடத்தன்மையற்ற மதவெறியை என்னவென்று சொல்வது?

revathiஇந்நிலையில் ஆறுமாதங்கள் 180 நாட்கள் தாம் சிறை போன்ற அந்த ‘இஸ்லாமிய நெறி தவறியவர்களை நல்வழிப்படுத்தும் இல்லத்தில்’ நடந்த சித்திரவதைகளை மனரீதியிலான கொடுமைகளை விவரித்துள்ளார் ரேவதி. தலையில் முக்காடு அணிந்திட வற்புறுத்தப்பட்ட ரேவதி பசுமாமிசம் உண்ணும்படி வற்புறுத்தப்பட்டுள்ளார். அதைவிடக் கொடுமை “நீ முஸ்லீமாக மாறாவிட்டால் உன் குழந்தையை பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிடுவோம். உன்னால் பார்க்கவே முடியாது.” என மனரீதியில் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர் மானுடத்தன்மை இழந்த மதவெறி மிருகங்கள். ஆனால் ரேவதி கூறுகிறார்: “என் கணவர் எனக்காக வெளியே காத்திருப்பதை நான் காண்பேன், அவர் நிற்கும் இடத்துக்கு ஓடுவேன் ஆனால் அவர்கள் என்னை பிடித்து இழுத்து சென்றுவிடுவார்கள். அந்த இல்லத்திலிருந்து பலரும் தாங்கமுடியாமல் ஓடிவிடுகிறார்கள். ஆனால் நான் ஓடவில்லை. நான் இந்து தருமத்தின் நற்பெயரை காட்டவே ஓடி ஒளியாமல் அங்கு (கொடுமைகளை)எதிர் கொண்டு பொறுத்திருந்தேன்….என் பெயர் ரேவதியாகவே இருக்கும் இறுதிவரை….”

தமிழ் பண்பாட்டுக்காக தான் அணியும் திலகத்துக்காக தன் கணவருடன் இணைவதற்காக போராடும் ஒரு வீர தமிழ் பெண்மணியின் வாழ்க்கை ரேவதியுடையது. தன் திருமணத்தை நிலைநிறுத்தவும் தன் குழந்தைகளுக்கு தானும் தன் கணவரும் பெற்றோராகவும் தனது தாய் மதத்தின் பாரம்பரியம் கிடைக்கவும் போராடும் தாயின் போராட்டமே பங்காரம்மாவுடையது.

உலகின் மிக தொன்மையானதும் இன்றும் வாழக்கூடியதுமான அழிவற்ற என்றைக்கும் வாழும் அறமான இந்து தருமத்தினை காப்பாற்ற ஒற்றைப் பெண்களாகக் குரல் கொடுக்கும் இத்தகைய வீரப் பெண்மணிகளாலேயே நம் தருமம் வாழ்கிறது. இவர்களுக்கு நம்மால் என்ன கைமாறு செய்ய முடியும்? பங்காரம்மா போராடுவது அவருக்காக மட்டுமல்ல உங்களுக்கும் எனக்கும்தான் நம் ஒவ்வொருவருடைய நாளைய தலைமுறையும் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை உணர வேண்டும்.

தமிழ் ஹிந்து வாசகர்களை பங்காரம்மாவுக்கு உதவ இந்த இணைய கோரிக்கையில் கையெழுத்திடக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியாவில் உள்ளோர் டெல்லியில் உள்ள மலேசிய இந்திய தூதரகத்துக்கு பின்வரும் கடிதத்தை பிரதியெடுத்து உங்கள் கையெழுத்தை இட்டு தபால் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் சென்னையில் உள்ள மலேசிய ஹை கமிஷனுக்கு கீழ்க்காணும் கோரிக்கையை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

டெல்லி மலேசிய தூதரக முகவரி:

His Excellency Malaysian High Commissioner to India
50-M, Satya Marg
110021
Chanakyapuri
New Delhi
India

Email: maldelhi@kln.gov.my

சென்னை மலேசிய ஹை கமிஷன் முகவரி:

Mr. Anuar Kasman
Consul General
No. 44, Tank Bund Road
Nungambakkam
Chennai-600034
E-mail : malchennai@kln.gov.my

தயவு செய்து எவ்வித கடுமையான அல்லது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்திவிட வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறோம். நமது நோக்கம் நம் சக-தமிழ் ஹிந்து
சகோதரியான பங்காரம்மாவுக்கு ஹிந்துவாக வாழும் உரிமையை ஏற்படுத்திக்
கொடுப்பதுதான் என்பதை நினைவில் கொண்டு அதற்கு ஏற்ப பொறுப்புணர்வுடன்
நடந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

From

[தங்கள் முகவரி]

To

[டெல்லி மலேசிய தூதரக முகவரி] அல்லது [சென்னை மலேசிய ஹை கமிஷன் முகவரி]

Your Excellency,

I recently read the news about Bangaramma, a 27 year old Tamil Hindu woman who being converted unethically to Islam when she was a child  is now fighting for her right to live as a Hindu. She is also the wife of a Hindu husband and mother of two children. As a Hindu and as a Tamil I am pained to see her agony in her battle for her right to live as a Hindu. As Hindus we value the innate spirituality of all religions and at the same time we also claim our right to live and practice our age old traditions, which form an integral part of one of the oldest and richest spiritual
traditions in the history of humanity.

Forced to lose that tradition is a traumatic event for a Hindu and almost a soul-death for a Hindu mother. Hence we request you to understand the Hindu feelings and ensure that Bangaramma is allowed to practice her ancestral faith and allow the children of this Hindu couple to be registered as Hindus in the government records.

I thank your excellency for your time and patience,

Yours truly,

[தங்கள் பெயர்]

Date:
Station:

20 Replies to “அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி”

  1. Bangaramma is suffering in an alien country. As Swami Vivekananda told,even if one hindu suffers from such avoidable problems, all Hindus should wake and give their moral support through letters to the respective authorities.
    What has happened to our High-Class shouting Pseudo-Secularists who are shouting from the roof-top for justice for I ndian minorities (Popular Media also).
    will the popular media will take up these cases of harassement by the Majority muslim population of Malasia.
    Let us all join in this crusade.
    Hariharakrishnan.

  2. ennanga ithu…. aio aioo…. enna koduma sir… ?? islamukku matham maaruvatharkkaaga etho oru viduthiyil kattayapaduthi adaikkapaduvathu… cheee chee… enna aalunga sir ivanga??? en ithai ellam Sun TV Nijam ? Vijay TV Neeya Naana ellam thatti ketka koodathu? unmaiyileye aangalaagavum aanmai udayavargalaagavum irunthaal intha media niruvanangal ithai pola enna intha prachanaiyai en veliyil konarnthu needhikkaaga porada koodathu? manathil thunivu undaa? ithai oru puram vaipom. Intha maadhiri kedu ketta avalangalukku thunai poga enre ingu baarathathil miga periya arasaangam malay arasukku kai kodukkum. en enil kerlaavil Islamic Banking endru Sharia sattapadi oru Nidhi niruvanam thodanguvatharku satrum vekkam maanam illamal enna enre aarayamal permission kuduthu irukkirare Nagaratthhar kudi P.Chidambaram? munnar East India Company moolamaaga Vellaiargal nuzhainthanar, inru ippadi noothanamana muraiyil ivargal aakramithu nam thonmaiyaana panpaatai seerkulaikka erpaadugal nadantha vannam ullana. nalai naamum bangarammavagavo,revathiyaagavo marakoodum kaalam vanthu vidumo??

  3. நாம் எந்த காலத்தில் இருக்கிறோம் என்று ஐயமாக இருக்கிறது. முகலாயர் காலத்துக் கொடுமைகளிலிருந்து மீண்டுவிட்டோம், இனிமேல் உலகில் அது போன்ற கொடுமைகள் நிகழாது என்று நினைத்து ஏமாந்து போகிறோமா?

    தமிழ் மாநாடு நடத்தும் முதல்வர் இந்தப் பிரச்சினையை ஏன் கண்டு கொள்ள மறுக்கிறார்?

  4. அன்பான எனது ஹிந்து நண்பர்களுக்கு,
    மலேசிய அரசின் இந்த சட்டம் சுத்த பேத்தலாக உள்ளது…இது முற்றிலும் வன்மையாக கண்டிக்க தக்கது..இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் மற்றவர்களுக்கு,உள்ள உரிமைகளுக்கான தெளிவான வழிகாட்டல் உள்ளது.
    இப்படி கட்டாயப்படுத்தி ஒருவரை முஸ்லிமாக்கி,என்ன ஆகப்போகிறது…
    யாருக்கும் எந்த பயனும் இல்லை..இதனால் அந்த குடும்பம் கஷ்டப்படுவதை தவிர வேரொன்றும் நடந்துவிடாது….
    இது இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டதும் அல்ல…இது இஸ்லாத்தை முன்னிருத்தி செய்யப்படும் அடக்குமுறையே…

    ஒரு முஸ்லிமாக…அவரை விடுவிக்க எனது சார்பாக கோரிக்கை வைத்து விட்டேன்,
    226 வது கோரிக்கை எனதாக பதிவாகியுள்ளது,…ஒரு தமிழ் பெண்ணுக்காக ஒரு தமிழனாக எனது கோரிக்கையை வைத்துள்ளேன்….விரைவில் அவர் அந்த பிரச்சனையில் இருந்து விடுவிக்கப் படுவார்…..

    நன்றி
    அன்புடன்
    ரஜின்

  5. மலேசிய அரசு ஒரு மத வெறி அரசாக இருக்கிறது, மலேசிய சமுதாயமும் மத சகிப்புத்தன்மை இல்லாத சமூகமாகவே இருக்கிறது.

    மலேசிய நாட்டின் முக்கிய பொருளாதரங்களில் சுற்றுலாவும் ஒன்று. இந்தியர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா சென்று வருவதை மலேசிய அரசு வூக்குவிக்கிறது. வருந்தி வருந்தி அழைக்கிறது. நாம் அந்த நாட்டிற்கு சுற்றுலா செல்வது மதவெறி காட்டுமிராண்டி தனத்துக்கு ஆதரவு அளிப்பதாகவே அமையும்.

    மலேசிய நாட்டின் அரசும், சமூகமும் நாகரீக நிலைக்கு மாறும் வரையில் இந்தியர்கள் மலேசியா நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    பங்காரம்மா விடுவிக்கப் படும் வரையிலே நாம் மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் செய்ய மாட்டோம், மலேசிய பொருட்களை புறக்கணிப்போம் என்பதையும் நாம் கடிதத்திலே குறிப்பிட்டு எழுத வேண்டும் என வேண்டு கோள் விடுக்கிறேன்.

    பங்காரம்மா விடுவிக்கப் படும் வரையில் இந்த கட்டுரையை அடிக்கடி தமிழ் இந்து வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
    .

  6. சகோதரர் ரஜினின் நல்ல உள்ளத்தை பாரட்டுகிறேன். எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருடைய நண்பர்களுக்கு இதை தெரியப் படுத்தி அவர்களையும் இதே போல கடிதம் எழுதக் கூறினால் நாகரீக சமுதாயம் சகோதரர் ரஜினிக்கு நன்றிக் கடன் பட்டதாக இருக்கும்.

  7. இந்த விடயத்தில் இந்து மதக் கோட்பாட்டை முன்னுறுத்திக் கடிதம் எழுதுவதை விட,

    இது மனித உரிமைகளுக்கு எதிரானது, இது நாகரீக சமுதாயத்துக்கு எதிரானது, இது மனித உரிமைகளுக்கு எதிரானது, இது கொடுங்கோல் அடக்குமுறை என்பதை முன்னிலைப் படுத்தி எழுதினால் இன்னும் உபயோகமாக இருக்கும்.

    மலேசிய அரசாங்கம் பிற மதங்களிடம் சகிப்புத் தன்மை காட்டும் ஒரு அரசாக தெரியவில்லை. இந்த நிலையிலே நாம் இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற வகையிலே, இந்து மதத்தின் பழைமையையும் சிறப்பையும் சுட்டிக்காட்டி கடிதம் எழுதினால், மலேசிய அதிகாரிகள் இன்னும் அதிக மத வெறியுடன் செயல் பட்டு, இந்த விடயத்திலே இன்னும் அதிக கடுமை காட்ட வாய்ப்பு உள்ளதோ என்ற அச்சத்தை தாழ்மையுடன் முன் வைக்கிறேன்.

  8. I have sent mail to both embassies of Delhi and Chennai. Please wake up all around us are morally destroying our mental strength. Christian countries are spending money for conversion and Muslim countries are spending money for terrorism both physical and mental (like Mrs Bangarramma and Mrs Revathy).

    Sureshkumar S

  9. Pingback: thunai
  10. நான் மலேசியாவில் வேலைக்காக சில ஆண்டுகள் இருந்துருக்கிறேன் . மலேசியாவில் பேசுவதெல்லாம் ராமாயணம், இடிப்பது ராமர் கோயில் என்ற பழமொழிக்கு ஏற்ப அனைத்து இனத்தவர்களும் சம்மம் என்பார்கள் ஆனால் அனைவரயும் (ஹிந்துக்களை) மதம் மாற்றவே பலவித முயற்சிகள் செய்வார்கள் . சிறை கைதிகளை அவர்கள் மதம் மாற்றுவது உங்களுக்கு தெரியுமா ? நம் ஊரில் அண்ணா பிறந்த நாளுக்கு சிறை கைதிகளை விடுதலை செய்வது போல அங்கே ஹிந்து கைதிகள் முஸ்லிம்மாக மதம் மாறினால் தண்டனை குறைப்பு.
    ஆக ஏமாற்றி மதம் மாற்றுவதில் முஸ்லிம்கள் எந்த விதத்திலும் கிருஸ்துவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.

  11. காங்கிரஸ் என்ற ஒரு கட்சி என்று துவக்கப் பட்டதோ அன்றே பாரதத்துக்கு ஆரம்பித்தது அழிவு
    முகலாயர்,கிறித்தவர்,இவர்களின் தனித்தனி ஆட்சி போச்சே என்று பெருமூச்சு விட்ட ஹிந்து சமுதாயத்துக்கு பேரிடியாக- இதோ நாங்கள் இருக்கிறோம் கிறித்தவ-முஸ்லிம் இணைந்த ஆட்சி என்று அறுபது வருடங்களுக்கு மேலாக நம் நாட்டை நாசம் செய்து கொண்டிருகிறது
    பாகிஸ்தானுக்கு மூன்றில் ஒரு பாகம் நாட்டை தானே கொடுத்தோம்?
    மிஞ்சியுள்ள பாகத்தையும் கொடுத்து விட்டுத்தான் போவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தொடர்கிறது
    காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது
    ஹிந்துக்கள் இப்போதாவது தடியெடுத்து அதன் தலை மேல் போடாவிட்டால் !
    இரா.ஸ்ரீதரன்

  12. ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய முஸ்லிம் டாக்டரை கைது செய்தால் நமது பிரதமர் என்று சொல்லப் படுபவர் ‘ஐயோ,நான் இரவு முழுதும் தூங்கவில்லை’ என்கிறார்.
    டென்மார்க்கில் யாரோ ஒருவர் முகம்மது பற்றி கார்டூன் போட்டால் இங்குள்ள அந்த நாட்டின் தூதுவரைக் கூப்பிட்டு நம் அரசு கண்டனம் தெரிவிக்கிறது .
    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நம் காங்கிரஸ் அரசாங்கம் ஒப்பாரி வைக்கிறது.
    ஆனால் மலேசியாவில் ஹிந்துக்கள் மீது மிகப் பயங்கரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டால் வாயை மூடிக் கொண்டிருக்கிறது
    சிறிலங்காவில் தமிழினத் தலைவருடன் சேர்ந்து ஹிந்துக்களை சீரழித்து விட்டு ஒன்றும் தெரியாத பூனை மாதிரி இருக்கிறது .

    இரா.ஸ்ரீதரன்

  13. ஹி்ந்துக்கள் இவ்வாறெல்லாம் கொடுமைப் படுத்தப்படுவது முடிவுக்கு வர வேண்டுமென்றால் முதலில் நம் நாட்டில் ஹிந்து சார்பான ஆட்சி வர வேண்டும்.
    அதற்கு ஹிந்துக்கள் எல்லாம் ‘வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருப்போம், ஆனால் நாட்டை ஆள்வோர் ஹிந்துக்களுக்கு ஆதரவானவர்களாக இருக்க வேண்டும்’ என்று உறுதி எடுக்க வேண்டும் .வெவ்வேறு ஹிந்து விரோதக் கட்சிகளில் உள்ளவர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் அதன் தலைவர்களின் போக்கு மாறவில்லை என்றால் அந்தக் கட்சிகளை விட்டு வெளியே வர வேண்டும்.
    ஏனென்றால் அதுதான் அவர்களின் எதிர்கால சந்ததியைக் காப்பாற்றும்

    தங்கள் குழந்தைகளை டாக்டர் ,என்ஜினீயர் என்றெல்லாம் படிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பதை விட ,எதிர் காலத்தில் அவர்களுக்கு என்று ஒரு நாடு இருக்க வேண்டும்,அங்கு அவர்கள் சுதந்திரச் சிந்தனையுடன் வாழ வேண்டும் எ்ன்று நினைப்பதுதானே அறிவுடைமை?
    இல்லை என்றால் அவர்கள் எல்லாம் தனித் தனியே அழிக்கப் படுவர்.

    இரா.ஸ்ரீதரன்

  14. இதே போல்தான் பாகிஸ்தானில் பல இடங்களில் ஹிந்துக்கள் முஸ்லிமாக மதம் மாற வற்புறுத்தப் படுகின்றனர்
    சில மாதங்களுக்கு முன் ‘ஜிசியா’ என்ற முஸ்லிம் அல்லாதாருக்கான கொடுங்கோல் வரி செலுத்த மறுத்த இரு சீக்கியர்களின் தலை வெட்டப் பட்டு ஒரு குருத்வாராவுக்கு பார்சலில் அனுப்பப் பட்டது.
    சமீபத்தில் அங்கு ஒரு மசூதி வாசலில் இருந்த குழாயில் தண்ணீர் குடித்த ஹிந்துச் சிறுவர்கள் தாக்கப் பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
    இதையெல்லாம் பார்க்கும் போதுதான் ஹிந்துக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

  15. மனித உரிமை என்ற ஒன்று ஹிந்துக்களுக்கு இருப்பதாகவே நம் நாட்டிலும் மற்ற நாடுகளிலும் யாரும் நினைப்பதில்லை
    பாகிஸ்தானிலும்,மலேசியாவிலும்,பங்களாதேஷிலும்,சிறிலங்காவிலும் ஹிந்துக்கள் கொடுமைப் படுத்தப் பட்டால் நம் அரசும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை
    ஆனால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் முஸ்லிம் தீவிரவாதிகள் மேல் நடவடிக்கை எடுத்தால் நம் அரசும்,கட்சிகளும் கண்டிக்கின்றன.

    காஷ்மீரிலிருந்து நன்கு லட்சம் ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப் பட்டுள்ளனர். சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர் .இது இவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.
    ஜெர்மனி நாட்டிலிருந்து சில மாதங்கள் முன்பு குஜராத்துக்கு ஒரு குழு வந்தது .அக்வர்கள் அந்த மாநில அரசாங்கத்தின் விருந்தினராக இருந்தனர் . பிறகு குஜராத் அரசாங்கம் பற்றி அங்கு சிறு பான்மையருக்கு அது இல்லை இது இல்லை என்று கண்ட படி அறிக்கை விட்டது. அதில் ஒரு உறுப்பினர் சிறிதும் நாகரிகம் இல்லாமல் ‘மோடி ஒரு ஒரு சர்வாதிகாரி’ என்று பேசினார்.
    இதே போல் ஒரு குழுவை நாம் ஜெர்மனிக்கு அனுப்ப முடியுமா?
    இவர்கள் ஏன் பாகிஸ்தானுக்கும் ,பங்களாதேஷுக்கும்,மலேசியாவுக்கும் சென்று அங்கு ஹிந்துக்களின் நிலைமையைப் பார்ப்பதில்லை?

    போலி மனித உரிமைக் குழுக்கள், மிஷனரிகள், கம்யுனிஸ்டுகள் சேர்ந்து மோடி அமெரிக்க செல்லவிருந்த போது அவருக்கு அந்நாடு விசா கொடுக்க கூடாது என்று வலியுறுத்தினர்.
    ஒரு சுதந்திர நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு முதல் அமைச்சருக்கு விசா மறுக்கப் பட்டது
    ஆனால் அதே அமெரிக்கா சர்வாதிகரிகளான முஷாரப்,மற்றும் சீன தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது
    இது நம் நாட்டுக்கே அவமானமாகும்.
    இந்த கீழ்த்தரமான வேலை எல்லாம் செய்பவர்கள் ஹிந்துக்களே
    நாளை இது மற்றவர்களுக்கும் நடக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *