பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10

மணிமேகலையின் உடல் சிலிர்த்தது. இதென்ன இப்படி ஒரு நினைவு? முற்பிறவியில் இராகுலன் என்ற அரசகுமாரன் தன் கணவனாக அமையப்பெற்று கொடிய நாகம் தீண்டி இறந்து விட்டான், அவன் மனைவியாகிய தானும் அவனுடன் தீயில் வீழ்ந்து மாய்ந்து. மணிமேகலை என்ற பெயருடன் காவிரி பூம்பட்டிணத்தில் பிறந்திருக்கிறோம் என்றால், இராகுலனும் மறுபிறவி எடுத்திருக்க வேண்டுமே, அவன் யாராக இருக்கும் என்ற ஐயம் அவளுக்கு எழுந்தது.

View More பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10

மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]

புத்தபிரானுக்கு என்று வடிவமைக்கப்பட்ட பத்மபீடிகை அது. மரங்கள் அதன்மீது மணமில்லாத மலர்களைச் சொரிவதில்லை. பறவைகள் அதன்மேல் அமர்ந்து சப்தம் எழுப்பவோ, எச்சமிடவோ செய்யவில்லை. தேவர் தலைவன் இந்திரனால் புத்தபெருமானுக்கென்று சிறப்புடன் செய்துகொடுக்கப்பட்ட பீடிகை அது. அதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால், அதனைக் காண்பவர்களுக்குத் தங்களது முந்தையப் பிறப்புகளை நினைவுபடுத்தும் தன்மையேயாகும்.

View More மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]

துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]

எனக்கு நீ ஒரு உதவி செய்யவேண்டும். நேற்றிலிருந்து உன்னையும் மணிமேகலையையும் காணாது மாதவி அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள். நீ அவளிடம் சென்று, மணிமேகலை என்னுடைய பாதுகாப்பில் மணிபல்லவத் தீவில் இருக்கும் சேதியைக் கூறு. அவளுக்கு ஏற்கனவே என்னைப்பற்றித் தெரியும். இந்தப் புகார்நகரின்கண் மணிமேகலா என்ற பெண் தெய்வம் உலாவுந்தது என்பதை அறிந்த கோவலன் என்னைப்பற்றி மாதவியிடம் கூறியிருக்கிறான். இதன் பொருட்டே இருவரும் தங்கள் புதல்விக்கு என் பெயரைச் சூட்டியுள்ளனர்.

View More துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]

சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]

எரிப்பவர்களும்,கொண்டுவந்து கிடத்துபவர்களும், குழிபறித்து அதில் இறந்த உடல்களை இடுவோரும், பள்ளத்தில் உடலைப் போடுபவர்களும், முதுமக்கள் தாழியில் போட்டுப் புதைக்க வருபவர்களும் இரவு-பகல் என்று பாராமல் வந்துபோய்க்கொண்டிருப்பதால் பலத்த ஓசை உடைய இடமாக அது இருந்தது… “இறந்த பிறகு உடலைப் பிரியும் உயிரானது, இப்பிறவியில்செய்த நன்மை-தீமைகளுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்கும் என்பதை அறிந்தவள்தானே நீ? பின் எதற்குக் கலங்குகிறாய்? உயிர் உடலைவிட்டு நீங்கியபின், அதனை மீட்டுத்தரும் ஆற்றல்கொண்டவளல்ல நான். தெரிந்துகொள்…”

View More சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]

மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]

“என்னவெல்லாம் கூறியிருப்பான்? கற்பில்லாதவள், தூய தவமற்றவள், வருணக்காப்பு இல்லாதவள், விலைமகள் என்று என்னவெல்லாம் கேவலப்படுத்தியிருப்பானா? இவனது பழிச்சொற்கள் எதையுமே பொருட்படுத்தாமல், என் மனம் ஏன் இவன்பால் செல்கிறது? இதுதான் காமத்தின் இயல்பா? நான் துறவறக் கோலம் பூண்டுள்ளது எல்லாம் வேடம்தானா? இதுதான் உண்மையென்றால், என்னுடைய நேர்மை அழியட்டும்!“

View More மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]

பளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]

இன்று பல்வேறு திரைப்படங்களிலும் கதாநாயகனை அறிமுகம்செய்யும்போது அவனுடைய வீரபிரதாபத்துடன் அறிமுகப்படுத்துவதுபோல, உதயகுமாரனை ஒரு யானையை அடக்கும் நிகழ்ச்சியுடன் அறிமுகப்படுத்துகிறார். அதேபோல் தாமரைமீது துள்ளிய கயல்மீன் மீன்கொத்திப் பறவையிடம் சிக்காமல் தப்பியதைக் கூறுவதன்மூலம் மணிமேகலை உதயகுமாரன் கைகளுக்குச் சிக்காமல் தப்பிக்கப் போவதை குறிப்பால் உணர்த்துகிறார்.

View More பளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]

மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]

கணிகையர் இல்லங்களில் பிறந்த பெண்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒருவழி பாட்டி சித்திராபதி கூறுவதுபோல சகல கலைகளையும் கற்றுக்கொண்டு பேர்பெற்ற கணிகையாக ஆடம்பரவாழ்வு வாழலாம், அல்லது அம்மாவைப்போல இளம்வயதில் துறவு மேற்கொண்டு புத்தபிக்குணியாக சமயவிற்பன்னர்களுடன் ஊர் ஊராக மதம்பரப்பச் செல்லலாம். இரண்டுமே ஒரு பெண்ணிற்கு இரண்டு உச்சங்களைத்தொடும் வாழ்க்கை. இதற்கு இடையில் ஒரு வாழ்க்கை உள்ளது. உரியபருவத்தில் காதல்மணவாளன் ஒருவனைக் கைப்பிடித்து, வேதியர் வேள்விவளர்த்து, தீவலம்வந்து, இல்லறம்தொடங்கும் வாழ்க்கையே அது.

View More மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]

ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]

வேந்தன்முன்பு ஆடப்படும் வேத்தியல் கூத்தும், பொதுமக்கள்முன்பு ஆடும் பொதுக்கூத்தும் நன்குகற்றவள் நீ. இசையும், எழுவகைத் தூக்குகளும், தாளக்கட்டும், யாழ்வகைகளும், அவற்றின் பண்வகைகளும் கற்றுத் தேர்ந்தவள் நீ. பல மொழிகளில் பாடல்வகைகள் அறிந்தவள் நீ. மத்தளமும், வேய்ங்குழலும் கற்றவள் நீ. பள்ளியறையில் என்னவிதமான அலங்காரம் செய்துகொள்ளவேண்டும் என்பதை நன்கு அறிந்தவள் நீ. ஒழுங்கமைவுடன்கூடிய பருவமாற்றங்களை உடையவள். உடலின் பல்வேறு உறுப்புகளால் செய்யும் அறுபத்துநான்கு கரணங்களை அழகாக அபிநயம்பிடிக்கத்தெரிந்தவள் நீ. மற்றவர் மனதில் இருப்பதை அறிந்து இதமான வார்த்தைகளைப் பேசத்தெரிந்தவள் நீ. மற்றவர்முன்பு தோன்றாமல் இருக்கத் தெரிந்தவள் நீ. ஓவியம்தீட்டுவதில் வல்லவள் நீ. மாலைதொடுக்கத்தெரிந்தவள் நீ. ஒவ்வொரு பொழுதிற்கும் ஏற்ப அழகாக அலங்காரம்செய்துகொள்பவள் நீ…

View More ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]

ஆதிசங்கரர் படக்கதை — 9

“இந்தக் கள்குடத்திலும், ஓடும் புனிதமான கங்கையிலும் சூரியன் ஒரேமதிரியாகத்தானே பிரகாசிக்கிறான்? நான் புலையன், நீங்கள் உயர்ந்தவர் என்பதாலன்றோ என்னை விலகச் சொல்கிறீர்கள்? அத்வைதத்தில் உமக்கே சந்தேகமா?”

View More ஆதிசங்கரர் படக்கதை — 9

அமெரிக்க [அதிபர்] அரசியல் – 5

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வுமுறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொறு விதமான கணக்கீட்டைப் பின்பற்றுகிறது. இதனால் ஏகப்பட்ட குழப்பங்களும், தேர்தலில் ஒரு விறுவிறுப்பும் நமக்கு ஏற்படுகிறது. தமிழ் தொலைக்காட்சி சீரியல் கதைகளில் உள்ள குழப்பங்களும், வளைவுநெளிவுகளும் தோற்றுப்போகும் அளவுக்கு நெளிவுசுளிவுகள் இருக்கின்றன.
அனுமதியில்லாமல் அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு எதிராக வன்மையாகக் கண்டனம் தெரிவித்து வருபவரும், மத்தியகிழக்கு முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று குரல்கொடுத்துவருபவரும், தொலைக்காட்சிமூலம் பிரபலமானவருமான டானல்ட் ட்ரம்ப் 2016 அமெரிக்க ஆளுநர் தேர்தலுக்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளராகும் நிலைமையில் உள்ளார்.

View More அமெரிக்க [அதிபர்] அரசியல் – 5