பெரியபுராணம் – அரசியல் சூழ்ச்சியும் ஆன்மீக மாட்சியும்

பெரியபுராணம் ஏன் எழுதப்பட்டது? பேரரசன் ஒருவனின் தலைமை அமைச்சரால் எழுதப்பட்டது பெரியபுராணம். அதை யானையில் ஏற்றி வீதிவலம் வந்தான் அரசன். அமைச்சரை யானையில் அமர வைத்து அவன் கவரி வீசினான். என்றால் இதன் பின்னால் அரசியல் இருக்குமா? இருக்காதா? இந்த கேள்விக்கான விடை இது..

View More பெரியபுராணம் – அரசியல் சூழ்ச்சியும் ஆன்மீக மாட்சியும்

ஜே.சி.குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம்

மகாத்மா காந்தியை சந்தித்து குமரப்பா அடைந்த மாற்றத்திலிருந்து ஆரம்பித்து – நம் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு பார்வையைக் குறித்த அடிப்படை கேள்விகளுடன் கு.சிவகுமாரின் உரை இதயத்திலிருந்து எழுந்த உரையாக இருந்தது. அந்த கோட்பாடுகளை திருப்பூரின் வரலாற்றுப்பாதையிலிருந்தும், இன்றைய தொழில்-பொருளாதாரச் சூழலிலிருந்தும், தம் சொந்த அனுபவங்களிலிருந்தும் இணைத்து பேசியது சிறப்பு. இந்த உரையின் வீடியோ பதிவு …

View More ஜே.சி.குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம்

வால்மீகி-கம்பர் ஒப்பீடு: பிழைகளும் சரியான வழிமுறையும்

சில வருடங்கள் முன்பு ஒரு கம்பன் கழக மேடையில் ஒரு பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் “வால்மீகியின் இராமன் வழிபாட்டுக்கு உரியவன் அல்லவன், அவன் பச்சையான இராமன், கம்பன் தான் இராமனை பண்புள்ள தெய்வமாக ஆக்கினான்” என்றெல்லாம் படு அபத்தமாக உளறியதைக் கேட்க நேர்ந்தது. தமிழ்நாட்டின் பெரும்பாலான “கம்பன்” பேச்சாளர்கள் இப்படித் தான் பேசுவார்கள் சார் என்றார் நண்பர். எனவே தினமலர் ஆன்மீகம் சேனலில் இராமாயணம் குறித்த எனது தொடர் உரையாடலில் இது பற்றிப் பேசியிருக்கிறேன். இதன் வீடியோக்கள் கீழே..

View More வால்மீகி-கம்பர் ஒப்பீடு: பிழைகளும் சரியான வழிமுறையும்

கிறிஸ்தவ “கீர்த்தனைகள்” ஆய்வுக்கு 2026 தமிழ்விக்கி பெ.தூரன் விருது: ஒரு கண்ணோட்டம்

எழுத்தாளர் ஜெயமோகனின் தலைமை மற்றும் வழிகாட்டலில் தரப்படும் தமிழ்விக்கி பெ.தூரன் விருது இந்த வருடம் யோ. ஞான சந்திர ஜாண்சன் என்கிற ஆய்வாளருக்கு அளிக்கப் படுகிறது.. பொதுவான கலை, இலக்கிய, கலாசார செயல்பாடுகளுக்கான தளம் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அமைப்பு ஒன்று இத்தகைய விருதை அறிவிப்பது என்பது கிறிஸ்தவ மதமாற்றச் சூழ்ச்சிகளையும், அதன் பகுதியாக உள்ள கலாசாரத் திருட்டையும் அங்கீகரிப்பதன்றி வேறில்லை. இது பெ.தூரனுக்குச் செய்யப்படும் அவமதிப்பு.. 2021ல் ஒரு மாநாட்டில் இது குறித்து ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரையை நான் சமர்ப்பித்திருக்கிறேன்.. . 

View More கிறிஸ்தவ “கீர்த்தனைகள்” ஆய்வுக்கு 2026 தமிழ்விக்கி பெ.தூரன் விருது: ஒரு கண்ணோட்டம்

சனாதன தர்ம சர்ச்சை: ஒரு முழுமையான பார்வை

சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள் அறிவற்றவர்கள் அல்ல. அவர்கள் எந்த அடிப்படையில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று சொல்கிறார்கள்?சனாதனத்தை காப்போம் என்று சொல்வோரும் எந்த சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவோம் என்று சொல்கிறார்கள்? இந்த இரண்டு தரப்பினருமே சொல்லாமல் விடுகிற விடயங்கள் என்னென்ன? இந்த அனைத்துக் கேள்விகளுக்குமான விடைகளின் தேடல் இந்த வீடியோ..

View More சனாதன தர்ம சர்ச்சை: ஒரு முழுமையான பார்வை

பாரதி: மரபும் திரிபும் – 10

This entry is part 10 of 10 in the series பாரதி: மரபும் திரிபும்

இக்கட்டுரையில் “இந்தியாவுக்கு உடனே ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற லக்ஷயத்தில் நீயும் நானும் ஒன்றுபட்டிருக்கிறோம்” என்று கூறுகிற பாரதி, ” நம்மவரெல்லாரும் கூடி முயன்று, பாரதமாதாவின் ராஜரீக விலங்குகளை நீக்கி, விடுதலையேற்படுத்திக் கொடுக்கப்போகிற ஸுதினம்-நல்ல நாள்-எப்போது வரப் போகிறதென்பதை ஒவ்வொரு நிமிஷமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்.” என்று எழுதுகிறார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லாமல் வேறு என்ன?

View More பாரதி: மரபும் திரிபும் – 10

தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்தி

தேர்தல் ஆணையத்தை மோடி அரசு  பயன்படுத்திக் கொண்டு  வாக்கு திருட்டை நடத்துகிறார்கள்  என  ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். . ஆனால்  உண்மையில்  தேர்தல் ஆணையத்தையும்,  நீதித் துறையையும் சீரழித்தது காங்கிரஸ்.  அரசியல் சட்டத்தையே  தங்களுக்கு சாதகமாக வளைத்து எதிர்கட்சிகளை ஒடுக்க நினைத்தவர்கள்  நேருவும், இந்திரா காந்தியும்..

View More தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்தி

இந்து தியாக வீரர் குமார் பாண்டியன் குடும்பத்து வாரிசு எதிரணியில்: வேதனை

அண்மையில் மிகவும் பாதித்து மிகவும் மனத்தளர்ச்சியில் தள்ளிய விடயம் – குழந்தை ருத்ராவின் வீடியோ. அவளுக்கு நம் மீது எத்தனை கோபம் இருந்தாலும். எந்த மேடையில் ஏறி எத்தனை வசை மொழி பொழிந்தாலும் – அவள் என்றும் நம் வீட்டு குழந்தைதான். ஏனெனில் அவள் தந்தையும் அவள் சகோதரர்களும் அந்த குடும்பமும் செய்த தியாகம் அத்தகையது.. அந்த குழந்தையின் மீதும் அவள் குடும்பத்தின் மீதும் உள்ள அளப்பரிய அன்பாலும் மதிப்பினாலும் மட்டுமே, அவள் சொல்வதில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது…

View More இந்து தியாக வீரர் குமார் பாண்டியன் குடும்பத்து வாரிசு எதிரணியில்: வேதனை

‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

திரைப்படத்தை பார்த்து முடிக்கும் எவருக்கும் ஏற்படுவது பெரும் உன்னத உணர்வு.  புனித நதியில், கங்கையில் அல்லது காவேரியில், அதன் புனிதத்தை உணர்ந்து நீராடினால் ஏற்படும் மனத்தூய்மை உணர்வு… மாரி செல்வராஜ் சத்தியமாக கீதை படிக்கவில்லை. அவருக்கு அதில் ஆர்வமும் இருக்க அவசியமில்லை. அப்படி ஒரு வேலியை நாம் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் மேலே மதுராபுரி மாட்டிடையன் கீதையில் சொன்னவற்றை தம் திரைப்படத்தில் காட்சிப்படுத்திவிட்டார் அவர்… சங்கிகள் என்று தம்மை சொல்லிக் கொள்கிறவர்களில் பலர் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அப்படி செய்வது உங்கள் தலைவரான கோல்வல்கரையே கேலி செய்வதுதான்… எவ்வித மலின வணிக சமாச்சாரமும் இல்லாத, மலினங்கள் விடயத்தில் துளி சமரசமும் இல்லாத திரைப்படம் ஒன்றை தமிழ் சமுதாயம் வெற்றி பெற வைக்குமென்பதைக் காட்டியிருக்கிறது பைசன்…

View More ‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் இருமுறை தலைவர் பதவியில் திறம்பட செயல்பட்டவர் ம.வெ. அத்துடன் சிறந்த சமூக வரலாற்று அறிஞரும் ஆவார். அவருடைய உரை நேரடி அனுபவத்திலிருந்து வருவது. தூய்மைப் பணியாளர்கள் குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நேரடியாக உரையாடியது, கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் செய்த தொண்டு, தமிழ்நாடு உட்பல பல மாநிலங்களில் மாநில அரசு அமைப்புகளின் மெத்தனம், ஒப்பந்தக் காரர்களின் சுரண்டல்கள், அராஜகங்கள், பாலியல் அத்துமீறல்கள், தனது பணிக்காலத்தில் அவர் எடுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகள், பட்டியல் சமுதாயத்தினரே மிக அதிக அளவில் இந்தப் பணிகளுக்கு வரும் நிலைமை தொடர்வது சரியானதா என்று பல முக்கியமான விஷயங்களைத் தொட்டுச்செல்வதாக அவரது உரை அமைந்திருந்தது. உரையின் வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்…

View More இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்