திருப்பரங்குன்றம்: ஜிஹாதி தாக்குதலும், ஆக்கிரமிப்பு சதிகளும்

திருப்பரங்குன்றம் மலையின் பெயரை சிக்கந்தர் பாஷா மலை என பெயர் மாற்றம் செய்து, 2025 பிப்ரவரி 18 அன்று முருகன் சந்நிதிக்கு மேல் ஆடு மாடு கோழியை வெட்டி விருந்து வைக்கிறோம், முடிஞ்சா தடுங்கடா சும்பைகளா என சவால் விட்டிருக்கின்றன இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள். இந்த ஜிஹாதிய கனவுகள், சிறுபான்மை அதிகார உறுதிப்படுத்தல் எனும் அரசியல் சதி, அதன் மூலம் இந்து இன ஒழிப்பு – இது ஒவ்வொரு கட்டமாக, படிப்படியாக எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு இது.

சிறுபான்மையினர் என்ற பெயரில் அதிகாரத்தை ருசித்துக்கொண்டும், பெரும்பான்மையினர் உரிமையினை சுரண்டி பிழைப்பதற்காகவும் சில சதிகளை படிப்படியாக அரங்கேற்றுகிறார்கள். முதலில் அமைதியாக இருக்கும் சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்துவது. அப்புறம் அதற்கு இடை நிலையில் ஒரு அநியாய சம நிலையை ஏற்படுத்துவது, பின்னர் இன்னும் அயோக்கியத்தனமான ஒரு பொய்யை சமூக நீதியின் பெயராலும் சிறுபான்மை உரிமை மீட்பு என்ற ஜல்லியாலும் கோருவது.

இஸ்லாமிய மதவெறி, பயங்கரவாத அமைப்புகளிடம் கூலி பெற்று கொண்டு கூட்டிக்கொடுக்கும் அரசியல் கட்சிகள் & அதிகார கும்பல்கள். சுயலாபத்திற்காக அவர்களிடம் கொத்தடிமைகளாய் பிழைக்கும் இழிசினர்கள். பிரிவினைவாதிகள், தேச துரோகிகள். இப்படி ஒரு நெட்வொர்க் மூலம் பெரிய கூச்சலை உருவாக்கி சிறுபான்மையினர் ஒடுக்கப் படுகின்றனர், நசுக்கப் படுகின்றனர் என்று பொய்க்கதைகளை தொடர்ந்து உருவாக்குகிறார்கள். இவற்றை எந்த அரசியல், கலாசார பிரக்ஞையும் இல்லாத தமிழ்நாட்டின் பெரும்பான்மை இந்துக்களில் பலர் நம்பவும் செய்கிறார்கள் என்பது தான் கொடுமை. அயோத்தி இயக்கத்தின் போது பாப்ரி கும்மட்டத்தின் வரலாறு மற்றும் கோத்ரா ரயில் தாக்குதல் ஆகியவை பற்றி பரப்பப்பட்ட பொய்கள் நினைவிருக்கலாம்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். தமிழின் முதுபெரும் நூல்களான சங்க இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை என்ற நூலில், இங்கு உறைந்து அருள்புரியும் முருகப் பெருமானை மலைமகளோடு சேர்ந்து வாழும் தெய்வமாக சங்கப் புலவர் நக்கீரர் புகழ்ந்து பாடுகிறார் –

“செங்கோல் உகந்த செல்வன்,
திருப்பரங்குன்றத்தான் தெய்வச் செல்வன்,
குன்று இடுகட்கு இடைச் செல்வன்,
வேல் இடுகட்கு இடைச் செல்வன்,
குன்று முலை அடைச் செல்வன்,
நெய்யிடை அடைச் செல்வன்,
முல்லை அடைச் செல்வன்!”

அகநானூற்றில் முருகனையும், திருப்பரங்குன்றம் மலையின் தன்மையையும் விவரிக்கும் பாடல் –

“மதுரை மருதம் கழனிக் கிடந்து,
திருப்பரங்குன்றத்து வேலன் அடிக்கீழ்,
உயிர்த்துணை புலம்புவன பாடலால்!”

இதைத் தொடர்ந்து திருப்புகழ், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் என்று மிகப்பல இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், சாசனங்களிலும் திருப்பரங்குன்றம் இடம் பெறுகிறது.

இத்தகைய புனிதம் வாய்ந்த திருப்பரங்குன்றம் மலையில் சில பத்தாண்டுகளுக்கு முன் மலை மீது யாருக்கும் தெரியாமல் ஒரு கூரை ஒற்றை சாய்ப்பை போட்டார்கள் . கேட்டவர்களிடம் எல்லாம் மேலே சித்தர் பெருமானைப் பார்க்க வருபவர்களுக்கு இளைப்பாற என்று கூறப்பட்டது. பின்னர் அது சித்தர் சமாதி அல்ல, சிக்கந்தர் பாதுஷாவின் தர்கா, பள்ளிவாசல் என்று திட்டமிட்டு கிளப்பி விட்டார்கள்.

பின்னர் கூரையை இரும்புக்கொட்டகையாக மாற்றி, சிக்கந்தர் பாதுஷா ஹஜரத் என்று அரபிய எழுத்துக்களுடன் உதிர்ந்த தகர போர்டில் எழுதியதோடு இந்தப் பொய்க் கதையை மதுரை சுற்றுவட்டாரங்களில் புழக்கத்தில் விட்டார்கள். இதெல்லாம் நடக்கும்போது, எருமை மாட்டு மீது மழை பெய்தது போன்ற உணர்வுடன் மதுரையிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வாழும் இந்துக்கள், முருக பக்தர்கள், எந்த உணர்வுமின்றி தங்களின் வேறு பணிகளை பார்த்து கொண்டு எந்த எதிர்ப்பும் இல்லாமல் வெட்கமில்லாமல் இருந்தனர் என்பது தான் வேதனையான உண்மை. கூடவே, இஸ்லாமியர்களிடம் பிரியாணி வாங்கி தின்று கொண்டு மதமென பிரிந்தது போதும்ன்னு ல்லால்லலான்னு பாடிகொண்டும் இருந்தார்கள். அட, எந்த எதிர்ப்பும் இல்லையே என்று அடுத்த கட்ட நகர்வாக தகரக் கொட்கையை பள்ளி வாசலாக மாற்றி, உச்ச நீதி மன்றம் தடை விதித்த கூம்பு ஒலி பெருக்கியை வைத்து, தொழுகை என்று ஆரம்பித்து, இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக “இஸ்லாமிய வழிபாட்டிடம்” என்று கோருவதற்கான எல்லா வேலைகளையும் செய்தார்கள்.

கூடவே, இஸ்லாமிய மத வெறியர்களிலேயே இருக்கும் அதீத அடிப்படைவாதிகள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் “தரைக்கு மேல் இருக்கும் கோபுரங்கள், பள்ளிகள், வழிபாட்டிடங்களை தகர்தெறிவோம்” என்று திருப்பரங்குன்றம் முருகன் ஆலயம் முன்னிலையிலேயே 30 அடிக்கு 16 அடியில் ப்ளெக்ஸ் போர்டு வைக்கிறார்கள். ஊர் முழுக்க போஸ்டர் அடிக்கிறார்கள்.

ஆண்டிற்கு 5 கோடி உண்டியல் வருவாய் கொடுக்கும் திருப்பரங்குன்றம் ஆலயத்தை காப்பதாக சொல்லி வருகிறது தமிழக அரசின் இந்து அற நிலத்துறை. ஊழலும் செயலின்மையும் மலிந்த இந்தத் துறையிலிருந்து எந்த எதிர்ப்பும் வராதது கண்டு, இன்னும் ஊக்கம் பெறுகிறார்கள் இந்த இஸ்லாமிய மதவெறியர்கள். கார்த்திகை தீபத்தன்று மலை மீது இந்துக்கள் ஏறக்கூடாது, ஜோதி தீபம் ஏற்றக்கூடாது என்று துணிந்து சொன்னார்கள். பின்னர் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும், அங்கு இருப்பது சிக்கந்தர் பாஷா தர்கா என்பதற்கு ஆதரவாக கூலிக்கு விலை போகும், எழுத்தாளர்கள், பத்திரிகைகள், ஊடகங்களின் கூலிப்பட்டாளத்தைக் கொண்டு சிக்கந்தர் பாஷா ஒரு இஸ்லாமிய சித்தர், சூபி ஞானி என்ற பொய்க் கதையைக் களமிறக்கினார்கள்.

வித விதமாக ஏமாற இந்துக்களுக்கு சொல்லியா தர வேண்டும்? இதன் பின்னர்,

  • மலையை சிக்கந்தர் மலை என்று அழைக்க வேண்டுமே தவிர திருப்பரங்குன்றம் என அழைக்க கூடாது என ஒரு வழக்கு
  • கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என ஒரு வழக்கு
  • இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது என்று வழக்கு தொடுத்திருக்கிறோம், தீர்ப்பு வரும் வரை இந்துக்கள் வழிபடக்கூடாது என்று காவல் துறையில் புகார்

இப்படி, சதிக்கண்ணியின் அடுத்தடுத்த கட்டங்களை இஸ்லாமிய வெறியர்கள் கச்சிதமாக செயல்படுத்துகிறார்கள். பெரும் திரள் நிதியை வசூலிக்கிறார்கள். இதற்காக மதுரையில் மாபெரும் மதக்கலவரங்களை நிகழ்த்தி இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர்கள் துணிந்து விட்டார்கள் என்பது தான் நிதர்சனம்.

முதல் கட்டம்: சிக்கந்தர் பாஷா மலையை திருப்பரங்குன்றம் என்று சொல்லி சிறுபான்மையினரின் மனதை புண்படுத்தும் கெடு செயலை கைவிடகோரி 26 இஸ்லாமிய அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்.

இரண்டாவது கட்டம்: அடுத்து மாமனாய் மச்சானாய் எச்சில் பிரியாணிக்கு நாக்கை தொங்கப்போட்டு வாங்கித்தின்னும் இந்துக்களே, சிக்கந்தர் பாஷா மலை மீது துவா செய்யும் இஸ்லாமியரின் பாரம்பரிய உரிமையை கெடுக்காதே, தடுக்காதேன்னு அதே 26 அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

மூன்றாவது கட்டம்: பின்னர் சட்டமன்றத்தில் சிக்கந்தர் பாஷா மலை மீது வழிபாடு செய்யும் “ஆயிரம் வருட உரிமை”யை மீட்டுக்கொடுக்க, தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை.

நான்காவது கட்டம்: உடனே, சட்ட மன்றத்திலேயே, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “சிக்கந்தர் பாஷா மலை மீது, சிக்கந்தர் ஒலியுல்லா தர்ஹாவில், உச்ச நீதிமன்றம், அரசியல் சாசனங்கள் தடைசெய்துள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கி முலம் பாங்கு சொல்லி உங்கள் பலத்தை நிருபிக்க எந்த இடையுறும் அரசு செய்யாது” என்று அறிவிக்கிறார். அதோடு இப்படி நீங்கள் அராஜகம் செய்யும் பொழுது பாதுகாப்பாய் நிற்பது திமுக அரசின் பெருமை கடமை என்று அதிகார பூர்வமாக கெஜட்டிலும் பதில் சொல்லியாகி விட்டது.

இனி, அடுத்து என்ன நடக்கும்?

இந்துக்கள் ஒருவழியாக கொதித்தெழுந்து எதிர்க்க ஆரம்பித்தால், சமூக ஒற்றுமை சீர் குலைவு என்ற ஒப்பாரி தொடங்கும், இந்துக்கள் தங்கள் புனித மலையை இஸ்லாமியர்களுக்கு விட்டுக்கொடுப்பதில் என்ன பிரசினை என்று அறிவுரை கூறப்படும்.

இதேபோலத் தான், கோவையில் சிவன் கோவில், மாரியம்மன் கோவில் அருகில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் பசுமாட்டை வெட்டி கூறு போட்டு பீஃப் பிரியாணி விற்போம் என்று இஸ்லாமிய பெண்ணை வைத்து கலவர முன்னோட்டம் பார்த்தார்கள். நடப்பது இந்து விரோத தி.மு.க ஆட்சி, காவல்துறை என்பது ஆட்சியாளர்கள் காலால் இட்டதை சிரமேற்கொண்டு செய்யும் ஏவல்துறை தானே என்று துணிந்து ஆடினார்கள். வெகுஜன இந்துக்களுக்கு என்றைக்கு சொரணை வந்திருக்கிறது? கோவில் இடத்தில் பசுமாட்டுக்கறி , பீப் பிரியாணி என துவங்கினால் சோற்றில் உப்பு போட்டு தின்னும் சில இந்துக்கள் யாராவது பள்ளி வாசலுக்கு அருகில் பன்றிக்கடை திறக்கும் போராட்டம்ன்னு ஆரம்பிப்பானுக, அவனுகளை வாயோடு வெட்டி அவனுக குடும்பத்தையே நாசம் செய்து, கலவரத்தை ஆரம்பித்தால், திருமா தலைமையிலான கூலிப்பட்டாளம், லிபரல் அடியாட்கள், திமுக கொத்தடிமை பத்திரிக்கையாளர்கள் மூலம் இந்துக்களுக்கு எதிரான சொல்லாடல்களை (நேரேட்டிவ்) கட்டமைக்கலாம். பொது இந்து மனதில் குற்ற உணர்வை தூண்டலாம் என விரிவாக திட்டமிட்டிருந்தார்கள்.

இத்தகைய பிரசினைகளில் எல்லாம், வழக்கமாக கேள்வி கேட்கும் உணர்வுள்ள இந்து இயக்க செயல்வீரர்கள் மீது, வழக்கம் போல தி.முக. அரசின் காவல் துறை, பல வழக்குகளை போட்டு அந்த அப்பாவி இந்துவின் எதிர் காலத்தை நாசம் செய்தால் எவன் கேள்வி கேட்பான் என்ற சரியான திட்டமிடலில் இஸ்லாமிய மத வெறியர்களும், காவல்துறையும் கச்சிதமாக பணி செய்தார்கள். ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்துக்களை இங்கு தான் சற்று குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள். கோவையில், பொது மக்கள், வெகுஜன இந்துக்கள் பொறுக்காமல் கேள்வி கேட்டதால் கோவில் வாசலில் பீஃப் பிரியாணி போடும் திட்டம் வீணாணது.

இப்போது, அதே ஜிஹாதி மாடலை திருப்பரங்குன்றம் மலைமீது செயல்படுத்த துணிந்து விட்டார்கள்.

இப்போதாவது இந்துக்கள் விழித்துக் கொள்வார்களா? இந்த சதியை முறியடிப்பார்களா? இல்லையென்றால் திருப்பரங்குன்றம் மலையை மட்டுமல்ல, இப்படி பல புனிதத் தலங்களின் மீதும் ஜிஹாதி தாக்குதல் என்பது தொடர்கதையாக நடக்கும்.

வெற்றிவேல். வீரவேல்.

One Reply to “திருப்பரங்குன்றம்: ஜிஹாதி தாக்குதலும், ஆக்கிரமிப்பு சதிகளும்”

  1. நடுநிலை மக்கு இந்துக்களை விழிப்படைய இது போன்ற பல கட்டுரைகள் தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *