கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

1621 பிப்ரவரி 2-ல் யாழ்ப்பாணத்தில் போர்ச்சுகீசிய உயரதிகாரியாகப் பதவியேற்ற கவர்னர் ஒலிவேராவின் ஆணையின்படி அன்றே நல்லூரின் புகழ்பெற்ற கந்தசுவாமி ஆலயம் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1622-ஆம் வருடம் இன்னொரு புகழ்பெற்ற பெருங்கோவிலான ஆரியச் சக்கரவர்த்தி ஆலயமும், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயமும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?

கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எல்லோருமே காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்று வாதாடியபோது, கோட்சே மட்டும்தான் கடைசிவரை உறுதியாக, தான் மட்டும்தான் தன்னிச்சையாக அரசியல் காரணங்களுக்காக காந்தியைக் கொன்றதாகவும், இதில் எந்தவித அமைப்போ அல்லது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கோ எந்த ரீதியிலும் சம்பந்தமில்லை என்றும், தான் நல்ல திட சிந்தனையில் காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற சரியான எண்ணத்துடன்தான் கொலை செய்ததாகவும் கூறினார். கோட்சேவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டும் அதை எதிர்த்து மேல்முறையீடு எதையும் கோட்சே செய்யவில்லை என்பதையும் பார்க்கும்போது கோட்சே இதையெல்லாம் முன்பே திட்டமிட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். ஒரு இடத்தில்கூட கோட்சே கையில் பச்சைக் குத்தியிருந்தார் என்று அரசுத் தரப்போ, பத்திரிகைகளோ குற்றம் சாட்டவும்வில்லை; சொல்லவும்வில்லை; எழுதவுமில்லை. அதற்காக எந்த பிரிவிலும் வழக்குப்போடவில்லை…

View More நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8

126 போர்விமானத் தேவைக்காக ராஃபேல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற செய்திவந்த இரண்டே வாரத்திலேயே, அதாவது 2012லேயே, டசோல் நிறுவனம் பாதுகாப்புத்துறையில் பாரதத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒரு உடன்படிக்கை செய்துகொண்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. அப்பொழுது காங்கிரஸ் கூட்டணி [யு.பி.ஏ – ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணி] பாரதத்தை ஆட்சிசெய்தது என்பதை நினைவு கூறவேண்டும்.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8

கொலைகாரக் கிறிஸ்தவம் — 25

“புனித விசாரணை என்கிற பெயரில் கட்டாயப்படுத்தி ஒரு சமுதாயத்தின் மொழியை அழிப்பதன் மூலம், அந்தச் சமுதாயம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவைக்க இயலாது என்பதினை போர்ச்சுகீசிய பாதிரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் உணர்ந்து கொள்ளவில்லை. அதன் காரணமாக போர்ச்சுகீசிய பேரரசு இந்தியாவில் அழிவுண்டு கிடந்தது”

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 25

கொலைகாரக் கிறிஸ்தவம் — 24

இன்குசிஷன் விசாரணைகளை நடத்திய டிரிபியூனல்கள் எல்லா இடத்திலும் இருந்தனவென்றாலும், கோவாவில் இருந்த இன்குசிஷன் விசாரணை டிரிபியூனலுக்கு இணையான படுமோசமான, இனவெறி கொண்ட, அயோக்கியர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படதொரு டிரிபியூனல் வேறெங்கும் இல்லை. இங்கிருந்த இன்குசிஷன் அதிகாரிகள் ஹிந்துப் பெண்களையும் கைதுசெய்து சிறையிலடைத்தார்கள். அங்கு தங்களது மிருகவெறியை அவர்களிடம் தீர்த்துக்கொண்ட பின்னர் அந்தப் பெண்களைக் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் எனக் கூறி கட்டைகளில் கட்டி தீவைத்து எரித்துக் கொன்றார்கள்”

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 24

கொலைகாரக் கிறிஸ்தவம் — 22

அவளது உடைகளை அவர்கள் களைய ஆரம்பிக்கையில், ‘கனவான்களே, நான் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன். நான் எந்தக் குற்றமும் அற்றவள். கடவுளின் பெயரால் சொல்கிறேன். நான் எதுவும் அறியாதவள்’ எனச் சொன்னாள். “அதற்குப் பிறகு அவளை தண்ணீர் சித்திரவதைக்குத் தயாராக்கினார்கள். இறைவனின் பெயரால் நான் என்ன சொல்லவேண்டும் எனச் சொல்லுங்கள். அத்தனையையும் நான் ஒப்புக் கொள்கிறேன் எனக் கெஞ்சியும் அவளைத் தண்ணீர் சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள். அவள் மயக்கமடைந்து ஏறக்குறைய மூச்சுத் திணறி இறக்கும்வரை சித்திரவதைகளை அவர்கள் தொடர்ந்தார்கள்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 22

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5

2013ல் டசோல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆயினும், பட்ஜெட் தட்டுப்பாட்டினால் 2015வரை விமான ஒப்பந்தம் பற்றிய நடவடிக்கையை ஒத்திப்போடுவது என்று காங்கிரஸ் கூட்டணி அரசால் தீர்மானிக்கப்பட்டது. இருந்தபோதிலும், டசோல் நிறுவனம் நம்பிக்கையை இழக்கவில்லை.
மூன்று ஆண்டுகள் டசோல் நிறுவனத்திற்கும், பாரத அரசுக்கும் இழுபறிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கையில், 2015, ஏப்ரல் 10ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி பாரிஸ் நகரில், “நான் அதிபரை [பிரான்ஸ்வா ஹாலன்ட்] பறக்கும் நிலையுள்ள 36 ரஃபேல் போர்விமானங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறேன். [ I have asked President (Francois Hollande) to supply 36 ready-to-fly Rafale jets to India.]” என்று தனது பிரெஞ்சுப் பயணத்தின் முதல்நாளில் செய்திக் கூட்டத்தில் அறிவித்தார்.[

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5

கொலைகாரக் கிறிஸ்தவம் — 21

முதலில் சாதாரண விசாரணைகள் செய்யப்படும் குற்றம் சாட்டப்பட்டவன் “கிறிஸ்துவுக்கு எதிரானவன்” எனப் பட்டம் சூட்டப்பட்டு, இன்னொரு பிரிவான “செக்யூலர்” பிரிவுக்கு (மதச் சார்பற்றவர்களை விசாரிக்கிற பிரிவு!) அனுப்பி வைத்தார்கள். அந்தப் பிரிவே மேற்கண்ட உடல் ரீதியான சித்திரவதைகளை “கிறிஸ்துவுக்கு எதிரானவனுக்கு” வழங்கும். எப்படிச் என்னென்ன காரணங்களுக்காக, எத்தனை நாட்களுக்குச் சித்திரவதைசெய்யவேண்டும் என்பதற்கான வழிகாட்டிகள் துல்லியமாக எழுதிவைக்கப்பட்டு, அதன்படியே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 21

கொலைகாரக் கிறிஸ்தவம் — 20

“ஹிந்துக்கள் தங்கள் திருமணங்களை ஹிந்துப் பண்டிகைகளுடன் சேர்த்துக் கொண்டாடுவதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஹிந்துத் திருமணங்கள் எவையும் திருவிழாக்காலங்களிலோ அல்லது பிறமதச் சடங்குகளுடனோ கொண்டாடுவதனை முற்றிலும் தடுத்து அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். பாதிரிகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஹிந்துக்களைக் கண்காணித்து அவர்களில் எவரேனும் பெற்றோர்களை இழந்த அனாதைகளாக, பதினான்கு வயதிற்கும் குறைந்தவர்களாக இருக்கிறார்களா என்பதினைக் கண்டறிந்து, அந்த அனாதைகளை உடனடியாகப் பிடித்துக் கொண்டுவரவேண்டும். அவ்வாறு பிடிபட்ட அனாதைகளை உடனடியாக கிறிஸ்தவனாக ஞானஸ்னானம் செய்துவைக்கவேண்டும்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 20

கொலைகாரக் கிறிஸ்தவம் — 19

சில சமயங்களில் ஹிந்துக் குழந்தைகளின் தகப்பன்மார்கள் உயிருடன் இருந்தபோதே அவர்களின் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு, சர்ச்சுகளின் அடைக்கப்பட்டுப் பின்னர் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். பாதிரிகளின் கொடூரங்களுக்கு அஞ்சிய பல ஹிந்துக்கள் இந்தச் சம்பவங்களை கண்ணீருடன் ஏற்றுக் கொண்டு அமைதியானார்கள். ஏனென்றால் போர்ச்சுக்கீசியக் கோர்ட்டுகளில் ஹிந்துக்களின் சொற்களுக்கு மதிப்பில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் மிக மோசமாக பழிவாங்கப்படுவார்கள் என்பதும் இன்னொருபுறம்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 19