லாவண்யா மரணமும் “நடுநிலை” பாசாங்குகளும்

லாவண்யாவின் மரணத்தை முன்வைத்து ஒரு உண்மையான சீரியசான மக்கள் பிரசினையைப் பேசிக்கொண்டிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் கசப்புகளை “மத அரசியலை” கொண்டுவருகிறதாம். எப்படியெல்லாம் சீன் போடுகிறார்கள் பாருங்கள்… இப்படித்தான் தமிழ்நாடும் ஒரே “அமைதிப்பூங்கா”வாக இருக்கிறது என்று வழக்கமாகக் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் உருவாக்கியுள்ள அகராதியில் “அமைதிப்பூங்கா” என்றால் அங்கு கிறிஸ்தவ மதமாற்றமும், கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு அராஜகங்களும், இஸ்லாமிய மதவெறி – ஜிகாதி பிரசாரங்களும் ஜகஜ்ஜோதியாக எந்த இடையூறுமில்லாமல் அரசு ஆதரவுடன் ஏகபோகமாக நடக்கும் என்று பொருள்…

View More லாவண்யா மரணமும் “நடுநிலை” பாசாங்குகளும்

லாவண்யா: கிறிஸ்தவ மதமாற்ற வெறிக்கு பலியான இன்னொரு இந்து மாணவி

லாவண்யாவின் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்று நடப்பது முதன்முறையல்ல. 2006ல் ஓமலூர் சுகன்யா, சென்னையில் 2009ல் ரஞ்சிதா, 2011ல் ரம்யா, 2015ல் உசிலம்பட்டியில் சிவசக்தி ஆகிய மாணவிகள் தாங்கள் படிக்கும் கிறிஸ்தவ பள்ளிகளில் தரப்பட்ட மதமாற்ற அழுத்தம் மற்றும் உளவியல் சித்ரவதைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இவை செய்திகளில் பரவலாக வந்து விவாதிக்கப்பட்டவை. இதுபோக இன்னும் எத்தனையோ? இவற்றை முன்பே “ஏசுவுக்கான இந்து நரபலிகள்” என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்… கிறிஸ்தவ மதமாற்ற வெறி என்பது இன்றைக்கு தமிழகத்தின் தலையாய பிரச்சினையாகி வருகிறது . அரசியல் கட்சி பேதமின்றி தமிழ்நாட்டின் அனைத்து இந்துக்களும் இந்தப் பிரசினையில் மரணமடைந்த இந்துக் குழந்தைக்கு நீதி கேட்டுப் போராட வேண்டும்.

View More லாவண்யா: கிறிஸ்தவ மதமாற்ற வெறிக்கு பலியான இன்னொரு இந்து மாணவி

கொலைகாரக் கிறிஸ்தவம் — 14

போர்ச்சுக்கீசிய அரசருக்கு மிக நெருக்கமானவரான பாதிரி மின்குல் வாஸ், போர்ச்சுக்கல்லுக்குச் சென்று திரும்பிய சிறிது காலத்திற்குள்ளாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். அரசனிடமிருந்து பெற்றுவந்த அளப்பரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி கோவாவிலிருந்த ஹிந்துக் கோவில்களை இடித்தும், ஹிந்துக்களைத் துன்புறுத்தியும் வந்ததால் ஹிந்துக்களின் கோபத்தைச் சம்பாதித்திருந்த மின்குல் வாஸ் இறுதியில் ஹிந்துக்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்

View More கொலைகாரக் கிறிஸ்தவம் — 14

கொலைகாரக் கிறிஸ்தவம் – 11

அடில்ஷாவின் ஆட்சியின்கீழ் ஹிந்துக்கள் துருக்கியர்களிடமும் அவர்களது ரூமஸ் அலுவலகர்களிடமும் தாங்கவொன்னாத் துயரம் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். எனவே கோவா ஹிந்துக்கள் அவர்களின் அருகாமை நாடான ஹொனாவர் நாட்டின் கப்பல்படையை அனுப்பி துருக்கர்களை அடக்குமாறு அந்த நாட்டின் அரசனான டிமோஜா (Timoja) என்பவனை வேண்டுகின்றனர். தன்னால் தனியாக துருக்கர்களை அடக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட தமோஜா போர்ச்சுகீசிய தளபதி அல்பர்கர்க்கை உதவிக்கு அழைக்கிறான்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 11

கொலைகாரக் கிறிஸ்தவம் – 10

“இதே ஊர்வலங்களும், மதமாற்றங்களும் ஒவ்வொரு வருடமும் பலமுறைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்துமஸ் நாட்களில் பலமுறை ஃப்ரான்ஸிஸ்கன் சர்ச்சில் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் கட்டாய, ஏமாற்ற மதமாற்றம் செய்யப்பட்டதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.”
அவ்வாறு மதம் மாறியவர்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து மதம் மாறிக் கொண்டார்கள் என்பது ஒரு பெரும் பொய்யே. டாக்டர் நூரன்ஹா இதனை இன்னொரு விதமாக விளக்குகிறார்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 10