ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?

தனது கடும்போக்கு மூலம் ஜெயலலிதா என்ன உணர்த்துகிறார்? “ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்” என்ற ஒற்றை பிரசினையை மையமாக வைத்துத் தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் உள்ள உறவு நிர்ணயிக்கப் படும் என்கிறாரா? இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்குக் கூட தங்களது அன்றாட வாழ்வாதார, சமூக, பொருளாதார பிரசினைகளைத் தாண்டி *மையமான* ஒற்றைப் பிரசினையாக இந்த விஷயம் இல்லை… தமிழகத்தின் மக்கள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு வாக்களித்தது ஜெயலலிதா ராஜபட்சேக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பதற்காகவா என்ன?… தனக்குக் கிடைத்திருக்கும் ஜனநாயக பூர்வமான அதிகாரத்தை ஜெயலலிதா துஷ்பிரயோகம் செய்கிறார்…

View More ஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா?

திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

தமிழர்கள் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழும் இந்தியாவின் நட்புநாடாக இலங்கையை மோதி மாற்றுவார். அதற்கான நோக்கமும், திட்டமிடலும், செயல் வேகமும், தகுதியும் ,வாய்ப்பும், ஆர்வமும் இன்று மோதி அவர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால் அவரைப் புரிந்துகொண்டு பாரதத்தின் புணர்நிர்மாணத்தில் தோள்கொடுக்க தமிழகம் தவறியது வேதனையான ஒன்று… மோதி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபச்சாவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததைக் காட்டமாக விமர்சிக்கும் தீவிர தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழருக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும் தவறான பாதையில் திருப்புகிறவர்கள். இதில் பலரது நோக்கம் வயிற்றுப்பிழைப்பு, இவர்களால் ஈழத்தமிழர்கள் பெற்ற நன்மை என்ன? ஒன்றுமே இல்லை…

View More திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு

பாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில்…

View More பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு

இந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா?

மனித வாழ்வுக்கு  அடிப்படையாக விளங்குவது  பொருளாதாரமே ஆகும்.  எனவே நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கும்,…

View More இந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா?

மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!

இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் செயலற்ற தன்மை மீதான மக்களின் கோபமே காரணம் என்றாலும், அதை வாக்குகளாக மாறியது தான் மோடியின் அசுர சாதனை. கண்டிப்பாக மோடியின் இடத்தில் அத்வானி உள்ளிட்ட வேறு எவர் இருந்திருந்தாலும், இத்தகைய இமாலய சாதனையை நிகழத்தியிருக்க முடியாது…. மோடியின் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் திட்டமிட்டு நடத்தியது பாஜகவின் நிகரற்ற சாதனை…. விலைக்கு வாங்கப்படும் ஊடகங்களைக் கொண்டு அரசியல் நடத்திவந்த காங்கிரஸ் கட்சியால் பாஜக வெகுவாக பாதிக்கப்பட்டுவந்தது. அந்நிலையும் இம்முறை மாறியது. காங்கிரஸுக்கு எதிரான மக்களின் மனநிலை ஊடகங்களின் காங்கிரஸ் ஆதரவுப் போக்கிற்கு கடிவாளமானது…. சுயநல நாட்டம் மிகுந்த அரசியல்களத்தில் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களை இணைத்து, ஓரணியாகக் கொண்டுசெல்வது மிகவும் கடினமானது. அதை சங்கமே சாதித்தது….

View More மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!

மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

1984-க்குப் பிறகு இந்திய அரசியலில் நிலவிய குழப்பமான, அரசியல் எண்ணிக்கை விளையாட்டுக்கு வழிவகுத்த சூழல் இத்தேர்தலில் காணாமல் போயிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் சிறு கட்சிகள் கூட ஆதிக்கம் செலுத்தும் நிலையையும், பாஜகவின் மகத்தான வெற்றி மாற்றி அமைத்திருக்கிறது…. மக்களிடம் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்து வென்று, பிறகு மக்கள் முதுகில் குத்துவது போல காங்கிரஸை ஆதரித்துவந்த பல கட்சிகளுக்கும் இத்தேர்தல் ஆப்பு வைத்துவிட்டது… இஸ்லாமியர்களும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்து, தங்கள் மீதான அபவாதத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கிற்கு இத்தேர்தல் முடிவு கண்டிருக்கிறது…

View More மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

புதிய பாரதம் மலர்கிறது

நரேந்திர மோதியின் வெற்றி என்பது ஒரு அரசியல் தலைவரின், அரசியல் கட்சியின் வெற்றி மட்டுமல்ல. ஒரு மகத்தான இந்தியக் கனவின் வெற்றி. மிக எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையிலும் கடும் உழைப்பிலும் வளர்ந்து, தனது தாய் தந்தையரின் குடும்பத்தினரின் தியாகங்களையும் அபேட்சைகளையும் சுமந்து, மலினமான அரசியல் சூழலுக்கு நடுவிலும் வீரம் தேசபக்தி, நேர்மை, தன்னலமின்மை, எளிமை, தியாகம், மன உறுதி ஆகிய உன்னதப் பண்புகளைக் கைவிடாமல் அல்லும் பகலும் அயராது உழைத்து, படிப்படியாக உயர்ந்து நாட்டின் தலைமைப் பதவியை எட்டியிருக்கும் ஒரு மாமனிதரின் சரித்திரம் எழுதப் படும் தருணம் இது. “Ab ki bar Modi Sarkar” என்று யூ ட்யூப் வீடியோக்களில் மழலை மொழியில் பேசிய 5 வயதுக் குழந்தைகள், தாங்கள் வாக்களிக்கும் வயது வரும்போது, அதே வாசகத்தை இன்னும் அழுத்தமாக வீதிகளில் முழங்குவார்கள்…

View More புதிய பாரதம் மலர்கிறது

சாதி அரசியல் செய்கிறாரா மோதி?

“மோதியை எப்படி வேண்டுமானாலும் எதிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் எனது சாதியை வைத்து, கீழ் சாதிகளில் பிறக்க நேர்ந்து விட்ட மக்களை (நீசீ ஜாதி மே பைதா ஹுயே லோக்) அவமதிக்காதீர்கள்” என்று மோதி பதிலடி கொடுத்தார்.. பிரியங்கா நேரடியாக சாதியைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லாத போது, மோதி வலிந்து இதில் சாதியை நுழைக்கிறார் என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. “நீச்” என்ற சொல் உடனடியாக ஹிந்தி பேசும் பாமர ஜனங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு எப்படிப் பட்டது என்பதை மேல்தட்டுகளிலேயே புழங்கிய பிரியங்கா அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், மக்களோடு மக்களாக புழங்கிய மோதி உடனடியாக அறிந்து கொண்டு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்…

View More சாதி அரசியல் செய்கிறாரா மோதி?

மோடி பிரதமரானால் யாருக்கெல்லாம் ஆப்பு?

இதுநாள் வரை எந்த வேலையும் செய்யாமல் அரசியல் தலைவர்களுக்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்த அதிகாரிகளுக்குத்தான் முதல் ஆப்பு. எங்கே, எப்படி எந்த திட்டத்தில் கொள்ளையடிக்கலாம் என்று அரசியல்வாதிகளுக்கு கோடிட்டுக் காட்டுபவர்களே இந்த அதிகாரிகள்தான்… அரசாங்கத்திற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பாலமாக இருக்கும் இந்த புரோக்கர்கள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமில்லை… என்.ஜி.ஓக்களின் பண புழக்கங்கள், பட்டுவாடாக்கள் மேற்பார்வை இடப்படும். இவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பண உதவிகள், புதிய சட்டங்கள் மூலம் தீவிரமாக கட்டுப்படுத்தப்படும்…. இந்திய ஜனநாயகத்தின் ஐந்தாதவது தூண் என்று பறைசாற்றிக்கொண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்களில் முதன்மையானவர்கள் இந்த ஊடகத்துறையினர். அரசியல் அமைப்புச் சட்டம் தங்களுக்கு கொடுத்த கருத்து சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்த அரக்கர்கள்….

View More மோடி பிரதமரானால் யாருக்கெல்லாம் ஆப்பு?

தேர்தல் ஆணையத்தின் அராஜகம்

ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக இந்தியா முழுவதுமான பாராளுமன்றத் தேர்தல்கள் ஒரு சில தினங்களில் நடத்தி முடிக்கப் பட்டு உடனே முடிவுகள் அறிவிக்கப் பட்டன. ஆனால் பரவலான நவீனமான தொலைத் தொடர்பு வசதிகளும் தேர்தல் இயந்திரங்களும் இருக்கும் இன்றைய சூழலிலும் கூட தேர்தல் நடத்த 2 மாதங்கள் எடுத்துக் கொள்வது கண்டிக்கப் பட வேண்டிய ஒரு மோசமான திறனற்ற செயல்பாடாகவே கருதப் படும்… தேர்தலை ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க வக்கில்லாத இந்தத் தேர்தல் ஆணையம் பல காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை மட்டுமெ அதிகாரத் திமிருடன் ஒரு தலை பட்சமாக பயன் படுத்தி வருகிறது. தவறு செய்பவர்களையும் பணம் பட்டுவாடா செய்பவர்களையும் கைது செய்ய துப்பில்லாத, அதிகார பீடத்துக்கு அடி பணிந்து நடக்கும் சம்பத் ஒரு மோடி தனது படத்தைப் போட்டவுடன் அதை உலக மகா குற்றமாகக் கண்டு பிடித்து அவரைக் கைது செய்யத் துடிக்கிறார்… ஆளும் காங்கிரஸ் கட்சியினரின் அடிமைகளைக் கொண்டு முற்றிலும் திறமையற்ற விதத்தில் மிகக் கேவலமாகவும் மிக மோசமான திறமையற்ற முறையிலும் நடத்தப் படும் இந்த ஆணையம் உடனடியாக சீர்திருத்தப் பட்டு காலாவதியான சட்டங்கள் களையப் பட்டு வளர்ந்த ஜனநாயக நாடுகளில் கடை பிடிக்கப் படும் சிறப்பான முறைகள் பின்பற்றப் பட்டு சீரமைக்கப் பட வேண்டும்…

View More தேர்தல் ஆணையத்தின் அராஜகம்