பாரதி: மரபும் திரிபும் – 10

This entry is part 10 of 10 in the series பாரதி: மரபும் திரிபும்

இக்கட்டுரையில் “இந்தியாவுக்கு உடனே ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற லக்ஷயத்தில் நீயும் நானும் ஒன்றுபட்டிருக்கிறோம்” என்று கூறுகிற பாரதி, ” நம்மவரெல்லாரும் கூடி முயன்று, பாரதமாதாவின் ராஜரீக விலங்குகளை நீக்கி, விடுதலையேற்படுத்திக் கொடுக்கப்போகிற ஸுதினம்-நல்ல நாள்-எப்போது வரப் போகிறதென்பதை ஒவ்வொரு நிமிஷமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்.” என்று எழுதுகிறார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லாமல் வேறு என்ன?

View More பாரதி: மரபும் திரிபும் – 10

ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு

தமிழ்நாட்டின் நினைவிலேயே ஏறக்குறைய விலகிவிட்டிருந்த “திருநெல்வேலிப் புரட்சி”யையும் அதன் முக்கியப்புள்ளியான வாஞ்சிந்தாதனின் வீர வரலாற்றையும் குறித்து பல்லாண்டு கால உழைப்பைச் செலுத்தி, ஆதாரங்களைத் திரட்டி அதன் அடிப்படையில் மிகச்சொற்பமான புனைவுத்தன்மை சேர்த்து ரகமி எழுதிய நூல் இது. அச்சில் இல்லாதிருந்த இந்த நூலை, இந்த சுதந்திரப் பவள விழா ஆண்டில் பாரதி நூலகம், மறுபதிப்பு செய்துள்ளது. அதே பழைய எழுத்துருவில், படங்களுடன் சேர்த்து வெளியிருப்பது மிகச் சிறப்பு..

View More ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு

தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து

சில வருடங்களுக்கு முன் தேசதுரோக வெறுப்பு இயக்கங்களின் உள்வட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும் இடம்பெற்ற பொய்ப்பிரசாரம் இப்போது தமிழ் ஊடகங்களிலும் நாளிதழ்களும் வருமளவுக்கு ஆகியிருக்கிறது. வீரவாஞ்சியின் தியாக நினைவை அவமதிக்கும் இந்தக் கீழ்மகன்களை எதிர்த்துக் கேள்விகேட்க நாதியில்லையா? தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை?…. 1857 கிளர்ச்சி, வாஞ்சி, ஆசாத், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்கள், நேதாஜியின் ராணுவம் இவை எதுவுமே முற்றிலுமாக *தோல்வியில்* முடிந்தன என்பது சரியல்ல என்று நாம் கூறுகிறோம். அவை ஒவ்வொன்றும் தேசபக்தி என்ற ஜ்வாலை அணைந்துவிடாமல் எரிவதற்காக அளிக்கப்பட்ட ஆகுதிகள்….

View More தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து

பாரதி: மரபும் திரிபும் – 9

This entry is part 9 of 10 in the series பாரதி: மரபும் திரிபும்

சர் கர்ஸன் வில்லி மற்றும் டாக்டர் லால்காகா ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்ற மதன்லால் திங்காராவின் செயலை ஆதரித்து எழுதப்பட்ட கட்டுரையை எதிர்த்து மூன்று மாதங்கள் ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார்… பாரதியின் வாழ்க்கை முழுவதுமே போராட்டங்களால் சூழப்பட்டிருப்பினும் அவர் பயங்கரவாதத்தை எப்போதுமே ஆதரித்ததில்லை… பாரதி நினைத்ததெல்லாம் இந்தியருக்கு சுய உணர்ச்சி வரவேண்டும். அப்போதுதான் அவன் தன்னுடைய சுதந்திரத்திற்காகப் போராடுவான் என்பதுதான்… வியாச பாரதத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே மொழிபெயர்த்திருக்கிறார் பாரதி. இந்தச் சபதம் பாரதியின் கற்பனையில் உருவான சபதம் இல்லை…

View More பாரதி: மரபும் திரிபும் – 9

17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு

நெல்லைச் சீமை ஈன்றை வீரத் திருமகனின், தியாகச் சுடரின் புனித நினைவுக்கு எமது இதய அஞ்சலி.

நண்பர்களுக்கு: இன்றோ அல்லது இந்த வாரமோ நீங்கள் ஏதாவது கூட்டமோ பொது நிகழ்ச்சியோ நடத்துவதாக இருந்தால், இந்த தகவலை அங்கு வந்திருக்கும் தமிழர்களுக்கு மறக்காமல் குறிப்பிடவும். விரும்பினால் 1 நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கலாம்…

வந்தே மாதரம்!

View More 17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு