இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் இருமுறை தலைவர் பதவியில் திறம்பட செயல்பட்டவர் ம.வெ. அத்துடன் சிறந்த சமூக வரலாற்று அறிஞரும் ஆவார். அவருடைய உரை நேரடி அனுபவத்திலிருந்து வருவது. தூய்மைப் பணியாளர்கள் குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நேரடியாக உரையாடியது, கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் செய்த தொண்டு, தமிழ்நாடு உட்பல பல மாநிலங்களில் மாநில அரசு அமைப்புகளின் மெத்தனம், ஒப்பந்தக் காரர்களின் சுரண்டல்கள், அராஜகங்கள், பாலியல் அத்துமீறல்கள், தனது பணிக்காலத்தில் அவர் எடுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகள், பட்டியல் சமுதாயத்தினரே மிக அதிக அளவில் இந்தப் பணிகளுக்கு வரும் நிலைமை தொடர்வது சரியானதா என்று பல முக்கியமான விஷயங்களைத் தொட்டுச்செல்வதாக அவரது உரை அமைந்திருந்தது. உரையின் வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்…

View More இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்