லோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா?

திர்பார்த்ததுபோல சமூகசேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் முழுமையான வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், நாடு முழுவதும் தேசபக்தியை கிளறச் செய்ததில் பெரும் பங்காற்றியுள்ளது. இமயம் முதல் குமரி வரை, குஜராத் முதல் அருணாச்சல் வரை, ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகக் கிளம்பிய நாட்டுமக்கள் ‘வந்தேமாதரம்!’, ‘பாரத் மாதா கி ஜெய்!’ ஆகிய கோஷங்களை விண்ணதிர எழுப்பி, ஊழல்மயமான மத்திய அரசை நிலைகுலையச் செய்தார்கள். ஆரம்பத்தில் ஹசாரே குழுவை பகடி பேசிய காங்கிரஸ் கும்பல், மக்கள் எழுச்சி கண்டு மிரண்டது; பிறகு வழிக்கு வந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கண்டிப்பான அணுகுமுறையும் காரணம் எனில் மிகையில்லை.

நடந்தது என்ன?

கடந்த ஐந்தாண்டுகளாக நமது நாட்டிற்கு போதாத காலம். அடுத்தடுத்து வெளிவந்த பல்லாயிரம் கோடி ஊழல்களால் மக்கள் வெகுண்டு போயிருந்தார்கள். ரூ. 1.76 லட்சம் கோடி இழப்புக்குக் காரணமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு மோசடி, ஊழல்களுக்கெல்லாம் ‘ராசா’வாக அவதாரம் எடுத்தது. காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் ஊழல், கார்கில் வீரர் குடியிருப்பில் ஊழல், இஸ்ரோ அலைக்கற்றை ஊழல் என, ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த ஊழல்களால் நாட்டுமக்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள். ஆனால், அரசைக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகளை வக்கணையாக விமர்சித்தபடி, சிறுபான்மையினர் ஆதரவு கோஷங்களுடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தது மன்மோகன் அரசு. இந்த நிலையில்தான், ஊழலுக்கு எதிரான களப்போராளியாக ஏற்கனவே சிறு வெற்றிகளை அடைந்திருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரே தலைமையில் ஒரு குழு ஊழலுக்கு எதிரான வலிமையான குரலுடன் களம் கண்டது.

மகசேசே விருது பெற்ற சமூக சேவகர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷன், உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே உள்ளிட்ட பிரமுகர்கள் அங்கம் வகிக்கும் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா‘ இயக்கம், தற்போதைய சூழலில் ஊழலுக்கு எதிரான வலிமையான சட்டத்தின் தேவையை வலியுறுத்தியது. தற்போதுள்ள சட்டங்கள் பல்லுடைந்தவையாக இருப்பதால்தான் ஊழல் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகிறார்கள்; எனவே, கீழ்நிலையிலிருந்து பிரதமர் வரை அனைத்து பொதுநலப் பணியாளர்களும் ‘லோக்பால்‘ எனப்படும் மக்கள் கண்காணிப்பு சட்டத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே இக்குழுவின் கருத்து.

இந்தக் கருத்து புதியதல்ல. லோக்பால் சட்டத்தின் முன்வரைவு 1963 -லேயே அரசால் தயாரிக்கப்பட்டது. ஆனால், அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கடந்த 63 ஆண்டுகளாக முடியவில்லை. இதற்கான காரணம் வெள்ளிடைமலை. அரசை மறைமுகமாக நடத்தும் பெரும் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் அரசியல்வாதிகள் லோக்பால் சட்டம் வலிமையாக அமைந்தால் தங்கள் பிழைப்பு பாதிக்கப்படும் என்று கருதியதில் வியப்பில்லை. அதனால் தான் நேரு துவங்கி மன்மோகன் வரையிலும் பல பிரதமர்களைக் கண்ட பின்னரும் லோக்பால் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை.

மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசும், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், லோக்பால் விஷயத்தில் ஓரளவு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவில் ஆதரிக்காததால், அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. தவிர அந்த அரசுகள் சொந்தக் காலில் நிற்பவையாக இல்லாமல் இருந்ததும், லோக்பால் நிறைவேறத் தடையாக இருந்தது. ஒவ்வொருமுறை லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்போதும் அப்போதைய அரசுகள் குறைந்த நாட்களில் ஆட்சி இழந்ததும், லோக்பால் மீதான அச்சத்துக்கு காரணம் ஆனது.

இந்நிலையில், ஊழல்மயமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தன் மீது மக்களுக்கு ஏற்பட்ட கோபத்திலிருந்து தப்ப, லோக்பால் சட்டத்தைப் பயன்படுத்த விழைந்தது. ஆனால், அரசின் உள்நோக்கத்தை உணர்ந்த ‘ஊழலுக்கு எதிரான இந்தியா‘ அமைப்பினர், அரசு முன்வைக்கும் லோக்பால் மசோதாவின் ஷரத்துகள் சாரமில்லாதவையாக இருப்பதை எடுத்துரைத்தனர். அரசு உத்தேசிக்கும் லோக்பால் மசோதாவுக்கு மாற்றாக, குடிமக்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட ‘ஜன லோக்பால்‘ மசோதாவை இந்த அமைப்பு அறிமுகம் செய்தது. சமூக சேவகர் அண்ணா ஹசாரே தலைமையில இக்குழு செயல்பட்டது.

எதிர்பாராத மூலையிலிருந்து கிளம்பிய இந்த எதிர்ப்பை அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. அதே சமயம், இக்குழுவை எளிதில் கையாண்டுவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டனர் ப.சி, கபில் சிபல், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள். தவிர, வலுவான லோக்பால் சட்டம் கொண்டுவரப்படுவது உடனடியாக தங்களுக்கே ஆபத்தானது என்ற உள்ளுணர்வும் அவர்களை ஹசாரே குழுவுக்கு எதிராகப் பேசச் செய்தது.

ஹசாரே குழு குறித்த அவதூறுகளை மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களும் வாய் கூசாமல் அள்ளித் தெளித்தனர். குறிப்பாக ஹசாரே, காங்கிரஸ்காரர்களின் எளிய இலக்காக இருந்தார். ‘ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி, பாஜக ஆதரவாளர், ஊழல் பேர்வழி, பின்வாசல் வழியாக அதிகாரம் செலுத்த முனைபவர்’ என்றெல்லாம் ஹசாரே குறித்து பிரசாரம் செய்யப்பட்டது. அதன்மூலமாக, ஹசாரே குழுவினரை தனிமைப்படுத்தலாம்; வேறு வழியின்றி எதிர்க்கட்சிகளுடன் ஹசாரே குழு இணைந்தால் அதைக்கொண்டே, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிளவுபடுத்தி தான் நினைத்தபடி வலுவற்ற லோக்பால் மசோதாவை நிறைவேற்றலாம் என்று திட்டமிட்டது காங்கிரஸ் கட்சி.

ஹசாரே அதிரடி:

ஆனால், காங்கிரசின் திட்டங்களை உணர்ந்த ஹசாரே குழு அமைதி காத்தது. முரண்டு பிடிக்கும் மத்திய அரசை வழிக்குக் கொண்டுவர, 2011, ஏப்ரல் 5 ல் புதுதில்லி, ஜந்தர்மந்தரில் தனது உண்ணாவிரதத்தைத் துவக்கினார் அண்ணா ஹசாரே. ‘லோக்பால் குழுவில் ஊழல் கறை படிந்தவர்கள் இருக்கக் கூடாது; லோக்பால் மசோதா உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் குடிமக்கள் குழுவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பப்ட வேண்டும்; அரசு உத்தேசித்துள்ள ஓட்டைகள் மிகுந்த லோக்பால் மசோதாவுக்குப் பதிலாக வலிமையான சட்டவிதிகளுடன் கூடியதாக புதிய மசோதா உருவாக்கப்பட வேண்டும்’ என்பதே ஹசாரேவின் நிபந்தனைகளாக இருந்தன.

இந்த உண்ணாவிரதம் மூன்று நாட்களை எட்டியபோது நாடு முழுவதும் பரவலான ஆதரவு வெளிப்பட்டது. யோகா குரு ராம்தேவ், மேதா பட்கர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், கபில்தேவ் உள்ளிட்ட பிரபலங்கள் ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவால் ஊடகங்களும் அதை மேலும் பெரிதுபடுத்தி டி.ஆர்.பி.ரேட்டிங்கை அதிகப்படுத்திக்கொண்டன.

விளைவாக, மத்திய அரசு இறங்கிவந்தது. ஹசாரே உண்ணாவிரத்தை முடிவுக்குக் கொண்டுவர, அவரது நிபந்தனைகளை ஏற்பதாக அறிவித்தது. குறிப்பாக, லோக்பால் குழுவில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர் சரத் பவார் (இவரை ஹசாரே காட்டமாக விமர்சித்திருந்தார்) தாமாகவே விலகிக் கொண்டார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் குடிமக்கள் குழுவின் பிரதிநிதிகளும் மத்திய அமைச்சர்களும் கொண்ட லோக்பால் வரைவுக் குழு அமைக்கப்பட்டது. ஹசாரே குழு முன்வைத்த ஜன லோக்பால் மசோதாவின் ஷரத்துகளை அதில் சேர்ப்பது குறித்து விவாதிக்கவும் அரசு ஒப்புக்கொண்டது.

ஆனால், மத்திய அரசு அதற்குப் பிறகே தனது சதியை அரங்கேற்றியது. குடிமக்கள் குழுவின் பிரதிநிதிகளுடன் பல சுற்று ஆலோசனை நடத்திய அரசின் லோக்பால் குழு, ஹசாரே குழு முன்வைத்த கருத்துகளை புறந்தள்ளி, தனக்கு பிடித்தமான வகையில் லோக்பால் மசோதாவை தயாரித்தது (ஜூலை 28); நாடாளுமன்றத்திலும் அவசர அவசரமாக அறிமுகப்படுத்தியது. இதில் பிரதமர் லோக்பால் வரம்புக்குள் சேர்க்கப் படவில்லை. இவ்விஷயத்தில் எதிர்க்கட்சிகள் எதனிடமும் காங்கிரஸ் ஆலோசனை நடத்தவில்லை. அதாவது, இந்த விவகாரமே அரசுக்கும் குடிமக்கள் குழுவுக்கும் மட்டுமே என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்றது. லோக்பால் மசோதா நிறைவேற்றத்தில் பிற கட்சிகள் பயன் அடைந்துவிடக் கூடாது என்பதிலும், எதிர்க்கட்சிகளை ஆலோசனைக்கு அழைத்து, அவை ஹசாரே குழுவுக்கு ஆதரவாக ஒன்றிணைந்துவிடக் கூடாது என்பதிலும் காங்கிரஸ் கவனமாக இருந்தது.

அதற்கு ஏற்றாற்போல, காங்கிரஸ் தவிர்த்த அரசியல் கட்சிகள் பலவும் ஹசாரே குழுவின் தன்னிச்சையான செயல்பாட்டால் துணுக்குற்று அமைதி காத்தன. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான பாஜக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஹசாரே குழுவின் திட்டம் புரியாமல், வேடிக்கை பார்த்தனர். காங்கிரஸ் காலை வாரியதை உணர்ந்த பிறகே அக்கட்சிகளை ஹசாரே குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு முன்னதாகவே நிகழாமல் தடுத்தது காங்கிரசா, குடிமக்கள் குழுவா என்பது புரியாத புதிர். எனினும், குடிமக்கள் குழு முன்வைத்த ஜன லோக்பால் மசோதாவில் சில ஏற்க முடியாத அம்சங்கள் இருப்பினும், அரசு அறிமுகப்படுத்தியுள்ள லோக்பால் மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.

மீண்டும் உண்ணாவிரதம்:

”நாடாளுமன்றமே ஜனநாயகத்தில் உயர்ந்த அமைப்பு; எனவே நாடாளுமன்றம் லோக்பால் மசோதா விஷயத்தில் உரிய முடிவு எடுக்கும். இதில் குடிமக்கள் குழுவுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் அறிவித்தனர். ஒருவகையில் காங்கிரஸ் கூறியது உண்மையே. சட்டத்தை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே. அதற்காகவே அவர்களை நாட்டுமக்கள் தேர்தலில் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். மக்களின் அபிலாஷைகளுக்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இடம் பெறுகிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் பணியை மறந்து ஊழல் பேர்வழிகளுடன் இணைந்து கூட்டுக்கொள்ளை அடிக்கத் துவங்கும்போது, ஜனநாயகமே கேலிக்குரியதாகி விடுகிறது. இதுதான் நமது நாட்டில் தற்போது நடக்கிறது. இத்தகைய நிலையில், ஊழல் விவகாரத்துக்கு தீர்வு என்ன? இதுவே குடிமக்கள் குழுவின் கேள்வி. நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்ட மக்களை அணிதிரட்டுவதன் மூலமாக, அரசை நிர்பந்தித்து நேர்வழியில் செலுத்த முடியும்- இது ஹசாரே குழுவின் நம்பிக்கை.

அதனை வலியுறுத்தும் வகையில், நாட்டு மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்யும் வகையில், ஆக. 16 ல் தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கப்போவதாக அறிவித்தார் அண்ணா ஹசாரே. இதனை ‘மிரட்டும் தந்திரம்’ என்று ஒதுக்கியது மத்திய அரசு. ஹசாரே உண்ணாவிரதம் இருக்க பல கட்டுப்பாடுகளை விதித்த தில்லி மாநில அரசு, சட்டம்-ஒழுங்கு நிலையைக் காரணம் காட்டி, அதற்கான இடத்தை அளிக்காமல் காலம் கடத்தியது. இறுதியில், உண்ணாவிரதத்தை முடக்க, ஆக. 16 அதிகாலையில் அண்ணா ஹசாரேவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. யோகா குரு ராம்தேவ் தில்லி ராம்லீலா மைதானத்தில் கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது, நள்ளிரவில் (ஜூலை 6) அடக்குமுறையால் அதை நசுக்கியது போல ஹசாரே போராட்டத்தையும் நசுக்க மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், அது அரசையே நிலைகுலையச் செய்வதாக மாறியது. அதற்குக் காரணம், ஹசாரேவின் மனஉறுதியும், நிமிர்ந்த பார்வையும்தான்.

திகார் சிறைக்குள்ளும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த ஹசாரே, அதன்மூலமாக மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபித்தார். இப்போது மத்திய அரசின் நிலை சிக்கலாகிவிட்டது. சிறையிலிருந்து அவரை விடுவிப்பதாக பேச்சு நடத்திய அரசிடம், ராம்லீலா மைதானத்தில் தொடர் உண்ணாவிரதத்துக்கு அனுமதித்தால் மட்டுமே சிறையிலிருந்து வெளிவர முடியும் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் ஹசாரே. பல தந்திரங்களும் செயலிழந்த நிலையில், ஹசாரே முன் மண்டியிட்டது மத்திய அரசு. தனது கோரிக்கையை ஏற்கச் செய்வதில் ஹசாரே முதல்கட்ட வெற்றி பெற்றுவிட்டார்.

பிறகு ராம்லீலா மைதானத்தை அவசர அவசரமாக செப்பனிட்டுக் கொடுத்தது தில்லி அரசு. எந்த நிபந்தனையும் இன்றி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அங்கு தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார் ஹசாரே (ஆக. 20). இதற்கு நாட்டு மக்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் கிளம்பிய போராட்டங்களே காரணம். எதிர்க்கட்சிகளும் ஹசாரே கைதை வன்மையாகக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இயக்கத்தை முடக்கின. தவிர அரசு அறிமுகப்படுத்திய லோக்பால் மசோதாவைத் திரும்பப் பெறுமாறு எதிர்க்கட்சிகள் கோரின. ஊடகங்களும் ஹசாரேவை 24 மணிநேர காட்சிப் பொருளாக்கின. இந்த போராட்டம் 12 நாட்கள் நீடித்தது.

மக்களின் எழுச்சி:

இந்த உண்ணாவிரதம், நாடு முழுவதும் பேரலை போல தேசபக்தியை புனருத்தாரணம் செய்தது. ஹசாரே தனது 74 வயதில் நாட்டுக்காக உண்ணாவிரதம் இருப்பது மக்களை நெகிழ வைத்தது. அடிப்படையில் ஊழலுக்கு எதிரான மனோபாவத்துடன் ஏற்கனவே கொந்தளித்த நிலையில் இருந்த மக்கள், ஹசாரேவுக்கு ஆதரவாக தெருக்களில் திரண்டனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு யுகமாக உண்ணாவிரதம் கழிந்துகொண்டிருந்த நிலையிலும் காங்கிரஸ் அமைச்சர்கள் ஹசாரே போராட்டத்தை விமர்சித்தபடி காலம் கடத்தியது மக்களை மேலும் ஆவேசம் கொள்ளச் செய்தது. ஒவ்வொரு பகுதியிலும் கட்சி வித்தியாசமின்றி பல்லாயிரக் கணக்கில் திரண்ட மக்கள், ‘வலிமையான லோக்பால் சட்டம்’ தேவை என்று முழங்கினர். ஹசாரே தேசிய கதாநாயகன் ஆனார். இந்த 12 நாட்களில் ஹசாரே உடலின் எடை 7.5 கிலோ குறைந்தது. ஆயினும் அவர் அச்சமின்றி உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
அரசு சற்றும் இறங்கிவராத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக ஹசாரே முழங்கினார். ”வலிமையான லோக்பால் சட்டம் கொண்டுவா! இல்லையேல் பதவி விலகு” என்று மத்திய அரசுக்கு சவால் விடுத்தார். பிறகு காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் வழிக்கு வந்தனர். எனினும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தனது நிலையைக் காத்துக்கொள்ள பிரதமர் முயன்றார். அந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு இல்லாததால் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஹசாரேவும் சற்றே தனது நிலைப்பட்டிலிருந்து இறங்கி வந்தார். “அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் சாசனம் இருக்க வேண்டும்; அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்; அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்” ஆகிய மூன்று நிபந்தனைகளை அரசு ஏற்காதவரை, உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதாவது தனது முந்தைய நிலைப்பாடான ஜன லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதிலிருந்து, யதார்த்தத்தை உணர்ந்து கீழிறங்கினார் ஹசாரே. இதற்கு குடிமக்கள் குழுவில் உள்ள காங்கிரஸ் ஆதரவு மனப்பான்மை கொண்ட சுவாமி அக்னிவேஷ், சந்தோஷ் ஹெக்டே போன்றவர்கள் அளித்த நிர்பந்தமே காரணம் என்று கூறப்படுகிறது. தவிர ஹசாரே உடல்நிலை மோசமானால் அதை குடிமக்கள் குழு மீது குற்றமாக சுமத்த காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் மெல்லிய சமரசமே அறவழிப் போராட்டம் வெற்றிகரமாகத் தொடர உதவும் என்ற கண்ணோட்டத்தில், மூன்று நிபந்தனைகளை மட்டும் விதித்தார் ஹசாரே. அதை லாவகமாகப் பிடித்துக்கொண்ட மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் ஜன லோக்பால் உள்ளிட்ட மூன்று வகையான லோக்பால் மசோதாக்களை பரிசீலிக்கவும், ஹசாரேவின் மூன்று நிபந்தனைகளை ஏற்கவும் சம்மதித்தது.

நாடாளுமன்றத்தில் ஹசாரேவுக்கு ஆதரவாக பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜும் அருண் ஜெட்லியும் தெளிவுடனும் உறுதியுடனும் முன்வைத்த கருத்துகளும், அரசின் பிடிவாதப் போக்கை மாற்றின. ஜனலோக்பால் மசோதா குறித்தும் விவாதித்து நல்ல முடிவு எடுப்பதாக ஏக மனதாக நாடாளுமன்றம் கூடி முடிவெடுத்தது. ஹசாரேவின் போராட்டம் அடுத்த வெற்றியை அறுவடை செய்தது. பிரதமர் கைப்பட எழுதிய உறுதிமொழிக் கடிதம் கிடைத்தவுடன் தனுது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் அண்ணா ஹசாரே (ஆக. 28).

போராட்டம் வெற்றியா?

அண்ணா ஹசாரேவின் அறவழிப் போராட்டம் இப்போதைக்கு அரைக்கிணறு தாண்டிய நிலையில்தான் உள்ளது. அவரே கூறுவதுபோல, ” இனிமேல்தான் முழுமையான போராட்டம் துவங்க உள்ளது”. மத்திய அரசு ஏற்கனவே தன்னை இருமுறை ஏமாற்றியது போல இம்முறை ஏமாற்றிவிடக் கூடாது என்பதில் ஹசாரே தெளிவாக இருந்தததால் தான் இப்போது நாடாளுமன்றமே ஹசாரேவுக்கு ஆதரவாக குரல்கொடுத்தது. எனினும் அவரது குழுவில் உள்ள அக்னிவேஷ் போன்ற சிலரின் நம்பகத்தன்மையற்ற தன்மையும் இப்போது வெளுத்துள்ளது.
ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கபரிவார் இயக்கங்களும் இடதுசாரி தொழிற்சங்கங்களும் அவரவருக்கு ஏற்ற விதமாக ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றன. பாஜக வெளிப்படையாகவே ஹசாரே போராட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்கள் மனோபாவத்தை உணர்ந்து தாங்களும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து, ஹசாரே ஆதரவு போராட்டத்தை மாற்றி அமைத்தன. எனினும் இந்தப் போராட்டம் எந்தக் கட்சியின் அடையாளமும் இன்றி, தேசியக் கொடிகளை ஏந்திய இளைஞர் பட்டாளமாக பெரும் உற்சாக அலையை நாடு முழுவதும் எழுப்பியது. அந்த வகையில் ஹசாரே உண்ணவிரதம் நூறு சதவிகித வெற்றியை இப்போதே பெற்றுவிட்டது.

ஆனால், ஊழலுக்கு எதிரான போர் அவ்வளவு எளிதாக முடிந்துவிடாது. ஊழல் புரிந்தவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது அவ்வளவு எளிதாக பதவியிலிருந்து விடுபட ஒத்துழைக்க மாட்டார்கள். தலித் தலைவர் உதித்ராஜைத் தூண்டிவிட்டு ‘பகுஜன் லோக்பால் மசோதா’ என்ற ஒன்றை புதிதாகப் புகுத்துபவர்கள் ஆளும் தரப்பினரே என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. பல ஊழல் வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்குபவர்கள் மற்றும் எதிரணியினரை கீழ்மைப்படுத்தி அரசியல் சாகசம் செய்பவர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பதுங்கியுள்ள காங்கிரஸ் நரி எப்போது வேண்டுமானாலும் பாயலாம். அதை ஹசாரே குழுவினர் உணர்வது நல்லது.

இப்போது அரசு பம்பிப் பதுங்கும் நிலையை சாதகமாக்கி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை ஒன்றிணைத்து, ஊழலுக்கு எதிரான போரை முனை மழுங்காமல் காத்தால் தான் இறுதி வெற்றி கிடைக்கும்.

இதையே அண்ணா ஹசாரேவிடம் நாடு எதிர்பார்க்கிறது.

38 Replies to “லோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா?”

  1. Why still lokpal bill should be doubted?

    1. Anna never talked or worried about the corruption in Media and NGOs.
    2. He gives certificate to Mr. Deshmuk (who is accused in Adarsh scam).
    3. He indirectly supports Reliance.

    What is the answer for the above from Anna or his supporters?

  2. சமநிலை கொண்ட, ஆக்கபூர்வமான அணுகுமுறை, சேக்கிழான். நன்றி.

    நேற்று இரவு விஜய் டிவியில் அண்ணா ஹசாரே பற்றிய நீயா நானா நிகழ்ச்சி பார்த்தீர்களா? அது பற்றி சில அவதானிப்புகள்:

    அண்ணா எதிர்ப்பு தரப்பில் இடதுசாரி எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் பேசியது அப்பட்டமான வெறுப்பு பிரசாரம் போல கீழ்த்தரமாக இருந்தது, ஒரு சிந்தனையாளர் போலவே இல்லை.. அண்ணா ஹசாரே மீதான தனிப்பட்ட அவதூறுகளையாவது தவிர்த்திருக்கலாம்.

    அண்ணா எதிர்ப்பு தரப்பில் கொதித்தெழுந்து பேசிய அரசு அதிகாரி அம்மாளுக்குத் தான் என்ன ஒரு ஆவேசம், சீற்றம்.. விட்டால் அண்ணா ஹசாரேயை தன் ஃபைல் கட்டுகளாலேயே மொத்தி சமாதியாக்கியிருப்பார் என்று தோன்றியது. ஓவியா என்ற அம்மாள் அமைதியாகப் பேசினாலும் அண்ணா மீதும் காந்தியப் போராட்டம் மீதும் ஏளனத்தையும் வெறுப்பையும் கக்கினார்.

    ஹிந்து பத்திரிகையாளர் கிருஷ்ண அனந்த் இவ்வளவு நன்றாக தமிழ் பேசுவார் என்று தெரியாது.. அவரது கருத்துக்களும் நன்றாக இருந்தன.

    அண்ணா எதிர்ப்பு கேம்ப் நல்ல தயாரிப்புடன் வந்திருந்தது.. அரசு ஊழியர்கள், இடது சாரி, திராவிட, பெரியாரியர்கள், இஸ்லாமிஸ்ட்கள், இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள், தலித் முறையீட்டாளர்கள் என்று பக்காவாக எல்லா குரல்களும் அண்ணாவுக்கு எதிராக ஒருமித்து ஒலித்தன.

    நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி அண்ணா எதிர்ப்பு முகாமின் நியாயங்களுக்கு அதிக நேரமும் ஸ்பாட்லைட்டும் அளித்தது அப்பட்டமாக தெரிய வந்தது.. இதற்குப் பெயர் தான் நடுநிலையான நிகழ்ச்சியா?

    அண்ணா ஆதரவு கேம்ப்பின் மென்மையான பேச்சாளர்கள் சுருதி குறைந்தே இருந்தது. அமர்ச்சையாக நன்றாக பாயிண்டுகளுடன் பேசினார்கள், குறிப்பாக அண்ணா தொப்பி வைத்த துடிப்பான இளைஞர்.

    அண்ணா ஆதரவு தரப்பில் தான் skeptics இருந்தார்கள். அண்ணா எதிர்ப்பு தரப்புக்கு சந்தேகங்கள் துளிக்கூட இல்லை – அனைவரும் அண்ணாவையும் அவர் போராட்டத்தையும் துவைத்து எடுத்தார்கள்!

  3. அண்ணாஜி போராட்டம் பற்றி எழுதப்படாத செய்திகள்.

    ௧. மேலே பாரதமாதா ஓவியத்தின் பின்னணியில் அண்ணா உட்கார்ந்திருப்பது. பின்னால் இயக்கத்தினர் தங்கள் மதசார்பின்மையை தெளிவுறுத்த (????) அந்தப்படத்தை நீக்கி விட்டார்கள்.

    ௨. அண்ணா அவர்கள் அப்பழுக்கற்ற காந்தியவாதியே. அவரைச்சூழ்ந்த என்ஜிஓ என்ற அரசு சாராத குழுக்களின் செயல்முறை பலமுறை பலரால் கேழ்விகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. முக்யமாக ஸ்வாமி (??) அக்னிவேஷ் என்ற நபர் காவியுடையணிந்து வெள்ளைக்கார அம்மணிக்கு சலாமிடுவதும் நாட்டுக்கு சேவை செய்யும் ராணுவ துணைராணுவ வீரர்களை பேடித்தனமாக கொலை செய்யும் நக்ஸல் வாதிகளுக்கு அப்பட்டமாக ஆதரவு தெரிவிப்பதும் நாடறிந்த விஷயம். கிரண்பேடி அவர்கள் அக்னிவேஷ் mole என குறிப்பிட்டுள்ளார்.

    ௩.நாளை பாஜக போன்ற ஹிந்து ஆதரவு சக்திகள் ஆட்சிக்கு வந்தாலும் அக்னிவேஷ் போன்ற காவியுடையணிந்த சந்தேஹாஸ்பதமான சாமியார்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்து அதை ஞாயப்படுத்த போலி செக்யுலர்வாத தொலைக்காட்சிகள் செய்திப்பத்திரிக்கைகள் முனைந்தால் நாடளாவிய செய்திப்பத்திரிக்கையோ அல்லது தொலைக்காட்சியோ இல்லாத ஹிந்து சக்திகள் சொல்லொணா அல்லலுக்கு உள்ளாகும். ஊடக பலம் ஹிந்து விரோதிகளுக்கே ஹிந்துக்கள் தங்கள் ஞாயத்தை சொல்ல யத்தனிக்கும் முன்னரே அந்யாயம் நாடறிய பறை சாற்றப்படும்.

    4.\\\\\தலித் தலைவர் உதித்ராஜைத் தூண்டிவிட்டு ‘பகுஜன் லோக்பால் மசோதா’ என்ற ஒன்றை புதிதாகப் புகுத்துபவர்கள் ஆளும் தரப்பினரே என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. \\\\

    ஒன்றென்ன ஒரு பூஷணியை சோற்றால் வேண்டுமானால் மறைப்பது கடினம். பல பூஷணிகளால் மறைப்பது ஒன்றும் ச்ரமசாத்யமல்லவே. என் ஏ சி உறுப்பினர் அருணாராயின் மசோதா முன்னாள் தேர்தல் ஆணைய தலைவர் ஸ்ரீ டி.என்.சேஷன் அவர்களின் மசோதா என வரிசையாக பல மசோதாக்கள். இவையெல்லாம் யாரால் யாருக்காக என மக்களறிவர்.

    \\\\\\\Anna never talked or worried about the corruption in Media and NGOs.
    2. He gives certificate to Mr. Deshmuk (who is accused in Adarsh scam).\\\\

    Although I differ from many of your views, sri Sarav, I completely agree with above views.

    ஆனால் எது எப்படியிருந்தும் ஹிந்துஸ்தான மக்கள் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்த “வந்தே மாதரம்” மற்றும் “பாரத் மாதா கீ ஜெய்” போன்ற கோஷங்கள் தேசிய அரங்கில் புனர்ஜீவிதம் பெற்றதற்கு பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீ அண்ணா ஹஜாரேவை எவ்வளவு பாராடினாலும் தகும். ஒரு புதிய தேச பக்த சக்திகளின் எழுச்சி தேசத்தில் ஆரம்பமாகியுள்ளது மறுக்க முடியாதது.

  4. வந்தேமாதிரம், பாரத் மாதாகீ ஜே போன்ற கோஷங்கள் மக்கள் கூட்டத்தை கூட்டியது என்பதில் ஒரு அல்ப திருப்தி. இதனால் ஊழல் ஒரு படிகூட குறைவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. லோக்பாலில் இவை இவை வேண்டும் என்று முதலில் பிடிவாதம் செய்து அதை படி படியாக சுருக்கி எதையோ சாதித்துவிட்டது போல் ஒரு தோற்றதம்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் எந்த அளவிற்கு என்று சட்டமாகும் என்பதை யாரும் ஊகி்க்க முடியாது. மேலும் இந்த என்.ஜி.ஓ களை நம்புவது சற்று ஆபத்தான விஷயம். ஏன் என்றால் 75 சதவிகிதம் கிருஸ்துவத்தை சார்ந்த நிறுவனங்களிலிருந்துதான் ஏதேதோ தலைப்பில் பணம் வெள்ளமாய் பாய்ந்து வருகிறது. தொலைநோக்கு பார்வையில் நன்மை செய்வதுபோல் தீமைசெய்யவே பணம் அனுப்புகிறார்கள். இது மத மாற்றம் உள்நாட்டு கலகம் பொருளாதார சிக்கல் அரசியலில் ஸ்திர தன்மையை குலைப்பது போன்ற காரணங்களுக்கா அனுப்புகிறார்கள். இவர்களை முதலில் இந்த மசோதாவுக்குள் கொண்டுவரவேண்டும்.
    ஒருபுறம் பட்டிணியால் பலர் உண்ணாமல் மேடையில் இருக்க அவர்களை ஆதரித்து கோஷம் போடவந்தவர்களுக்கு பொட்டல உணவு 12 நாட்களிலும் எல்லா இடங்களிலும் வழங்கப்பட்டதாக கூறுகிறார்கள். கிண்டலாக சிலர் (There is fast and also a feast ) என்கிறார்கள். கிடைத்த வாய்புகளை என்றுமே (BJP) தனக்கு சாதமாக மாற்றியதில்லை என்பது ஒரு சாபகேடு. வாய்புகள் கிடைத்தும் ஷீலா தீக்ஷிக்தை பதவி விலக செய்யவில்லை தயாநிதி மாறனை பதவி விலக்க செய்யவில்லை சிதம்பரத்தையும் 2ஜி விசாரணை வரம்புக்குள் கொண்டுவர முயலவில்லை தாங்கள் அமைத்த கமிடியின் வெளிநாட்டில் பண பதுக்கலில் சோனியாவின் குடும்பத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது என்பதை தெரிவித்தும் சோனியா வருத்தப்பட்டார் என்பதற்காக அத்வானியும் வருத்தப்பட்டால் என்ன அர்த்தம் சரி அன்னாவின் உண்ணாவிரதத்தை நிறுத்த (BJP) உதவி செய்யாவிட்டால் காங்ரஸின் நிலை இன்னும் மோசமாக போயிருக்கும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
    அன்னிய முதலீட்டுடன் பவனிவரும் பத்திரிகைகள் உலகவர்தகத்துடன் போட்டிபோடும் பெரும் தொழில் அதிபர்கள் என்.ஜி.ஓ கள் இவர்களின் தயவால்தான் அரசியல் வியாதிகள் இந்தியாவை கொள்ளையடித்து அனைவரும் பங்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்

    போராட்டம் நடத்திய அன்னா தங்களது (India Against Corruption – web site ) சொல்லியுள்ள பல ஊழல் குற்றசாட்டப்பட்வர்களையும் அன்னிய நாட்டில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றியும் (சோனியா குடும்பம் உட்பட) பானர்கள் தாங்கி ஊர்வலமாக வராதது ஏன்

  5. //கிடைத்த வாய்புகளை என்றுமே (BJP) தனக்கு சாதமாக மாற்றியதில்லை //

    முற்றிலும் உண்மை. எடியுரப்பாவை நீக்க காங்கிரஸ் எடுத்த முயற்சியை ஷீலா தீக்ஷித் விசயத்தில் பிஜேபி எடுக்கவில்லை என்பது வெட்ககேடு. தற்போது பிஜேபி-க்கு கிடைத்துள்ள ஆதரவை வாக்குகளாக (vote) மாற்ற தேவையான நடவடிக்கைகளை பிஜேபி மேற்கொள்ளவேண்டும்.

    சுரேஷ் கு

  6. பாரத மாதா படத்தை எடுத்தது, இன்குலாப் ஜிந்தாபாத் கோஷத்தைச் சேர்த்தது…

    அப்பா, அந்நா ஹசாரே மேல் குறை சொல்ல உங்களுக்குக் கிடைக்கிற விஷயங்களின் முக்கியத்துவத்தை நினைத்தால்…

    உங்களுக்கே இவையெல்லாம் அபத்தமான, அம்மாஞ்சித்தனமானக் காரணங்களாகத் தெரியவில்லையா ?

    அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக அனைத்துத் தரப்பையும் ஒன்றிணைக்க முயல்கிறார். அதற்கு மீடியா என்பதும், அதிகார சக்திகளும் ஒத்துழைப்பைத் தரவேண்டும்.

    அந்த ஒத்துழைப்புக்காகச் சில விஷயங்களை அவர் ஒதுக்கி வைக்கிறார் எனில், தவறு அவருடையதல்ல. அவற்றை ஒதுக்க வேண்டும் என்ற் கேட்பவர்களும், அங்கனம் ஒதுக்கும் நிலையை மாற்ற இதுவரை உழைக்காத நாமும்தான்.

    இந்தப் போராட்டத்தின் நோக்கம் ஜன்லோக்பால் பில்லை நிறைவேற்றுவது. அதற்காக ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு, கௌபாய் தொப்பி அணிந்துகொண்டு, குதிரை ஏறித்தான் வரவேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால், அந்நா ஹஸாரே அந்த உருவத்தில்தான் வரவேண்டும் என்பது ஒரு இந்துத்துவவாதியாக என் புரிதல்.

    இங்கே அந்நாவை எதிர்த்துக் கமெண்ட் போடுபவர்களைவிட, அந்நா ஹஸாரேவின் போராட்டக் கூட்டக் களவேலைகளில் தன்னார்வத்துடன் பணி செய்யும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி தொண்டர்களே உண்மையான தேச பக்தர்கள் என்பேன்.

    அவர்கள் தங்கள் இயக்கங்களின் அடையாளச் சின்னங்களை போராட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டங்களில் கொண்டு வந்தனர். ஆனால், ஒரு தேசப் போராட்டத்தை இந்து அமைப்புக்களின் போராட்டமாகக் காங்கிரஸ்-இடதுசாரி கும்பல்கள் திரிப்பதைக் கண்டதும், தங்கள் இயக்க அடையாளங்களைத் துறந்து, உழைப்பின் அங்கீகாரம் எதிர்பாராமல் பணி செய்கிறார்கள்.

    அவர்கள் ஏன் தங்கள் இயக்க அடையாளங்களைத் துறக்க வேண்டும் ?

    அவர்கள் எதற்காகத் தங்களது இயக்கங்களின் அடையாளங்களை, அங்கீகாரம் கோருதலைத் துறந்தார்களோ, அதே காரணங்களுக்குக்காகத்தான் அந்நா ஹஸாரே பாரதமாதா படத்தைத் துறந்தார்.

    பாரத மாதாவைப் படத்தில் மட்டுமே காணும் சடங்காச்சாரவாதிகளுக்கு மேடையில் இருப்பவருடைய தியாகம் மட்டுமல்ல, மேடைக்குக் கீழேயும் உண்ணாவிரதம் இருப்பவர்களின் தியாகம் புரியாதுதான்.

    .

  7. அன்புள்ள நண்பர்களுக்கு,

    எதிர்பார்த்தது போலவே அண்ணா ஹசாரே குழுவினர் மீது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டது. இதைத் தவிர வேறெதையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்பதை ஹசாரே உடன் இருப்பவர்களும் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

    —-

    திரு.ஜடாயு,

    தங்கள் விமர்சனத்துக்கு நன்றி.

    இவ்விஷயத்தில் ஊடகங்களின் தடுமாற்றம் குறித்து தனியே ஒரு கட்டுரை எழுத வேண்டும். அது குறித்த தரவுகளை சேகரித்து வருகிறேன். ஸ்டார் குழுமம் சார்ந்த விஜய் டிவியிடம் நீங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறீர்கள். தவறு உங்களுடையது தான். அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் அங்கு என்ன பேசினாலும் எடுபட வாய்ப்பில்லை. ஏனெனில் இது தான் விஜய் டிவியின் ஊடக தர்மம்.

    பெரும்பாலான அரசு ஊழியர்கள் அண்ணா உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்துவதை (எனது உறவினர்கள் உள்பட) கண்டு ஆரம்பத்தில் நானும் அதிர்ச்சியையே அடைந்தேன். இதுவும் எதிர்பார்க்கக் கூடியதே. லோக்பால் வலுவாக அமையுமானால், தாங்கள் உண்மையில் மக்கள் சேவகர்கள் மட்டுமே என்பது முகத்தில் அறைந்தது போல தெரியவரும் என்பதாலேயே, பெரும்பாலான அரசு ஊழியர்கள் அண்ணாவின் போராட்டத்தை உளப்பூர்வமாக எதிர்க்கிறார்கள்.

    ——–

    திரு. சாரவ்,

    ரிலையன்ஸ் உடன் அண்ணாவை தொடர்பு படுத்துவது அவதூறு பிரசாரத்தின் ஒரு பகுதியே. அதேபோல தேஷ்முக்கிற்கு அண்ணா சான்றிதழ் வழங்கவில்லை. அவர் மராட்டிய முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட நட்புறவு பேச்சுவார்த்தைக்கு பயன்படும் என்று காங்கிரஸ் தான் தேஷ்முக்கைப் பயன்படுத்தியது. இதற்கு அண்ணா பொறுப்பாளியல்ல.

    எனினும் ஊடகத் துறையிலும் அரசு சாரா அமைப்புகளிலும் நிலவும் ஊழல், எல்லை தாண்டிய கட்டுப்பாடு போன்றவை ஆபத்தானவையே. இவை குறித்து இப்போது அண்ணா பேசவில்லை என்பது உண்மையே. ஒரே நேரத்தில் அனைவரையும் எதிர்த்து கத்திச்சண்டை போட முடியாது. அதே சமயம், அண்ணா குழுவில் கிரண் பேடி, கேஜ்ரிவால் இருப்பது போல, தேசநலன் விரும்பும் இந்து இயக்கங்களின் நிர்வாகிகளும் இணைவது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. இம்முறை நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் ஹிந்து இயக்கங்கள் அடையாளம் துறந்து களப்பணி ஆற்றியதை அனைவரும் அறிவர். அதேபோன்ற அணுகுமுறை வரும்காலத்தில் தொடர்வது, மேற்படி அபாயத்துக்கு மருந்தாகும்.

    ——

    திரு.க்ருஷ்ணகுமார்,

    அக்னிவேஷின் வேஷம் கலைந்துவிட்டதை ஹசாரே உள்பட அக்குழுவினர் அனைவரும் இப்போது அறிந்துவிட்டனர். உண்ணாவிரதப் போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்தபோது இவரும் சந்தோஷ் ஹெக்டேவும் அடித்த பல்டிகள் அவர்களின் முகாம் எது என்பதைக் காட்டிவிட்டன. வரும் நாட்களில் இவர்களை அண்ணா குழுவினர் ஒதுக்கிவைப்பது நல்லது என்பதை அவர்களே உணர்ந்திருப்பார்கள்.

    அதேபோல, பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜாக்கி வாசுதேவ் போன்ற ஆன்மிகவாதிகள் வெளிப்படையாக ஹசாரேவுடன் மேடையில் இருந்து அரசுக்கு எச்சரிக்கை செய்ததை மறக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் அந்த மேடைக்கு வரவில்லையே தவிர, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் அண்ணாவின் போராட்டத்துக்கு ஆதரவாக களம் இறங்கினர். உதாரணமாக திருப்பூரில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியை (ஆக. 26) நடத்தியது, சங்க ஸ்வயம்சேவகர்கள் நடத்தும் ‘திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு’ தான். இதை ஹசாரே உடனிருக்கும் விஷமிகள், மற்றவர்களை விட நன்றாகவே அறிவார்கள்.

    தவிர ஊழலுக்கு எதிரான போரில் பலதரப்பட்ட கருத்து உள்ளவர்களும் ஏதாவது ஒரு கண்ணோட்டத்தில் இணைவது நல்லதே. நக்சல்களும் இடதுசாரிகளும் இதில் இணைவது மகிழ்ச்சிக்குரியதே. அவர்கள் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கோஷமிட்டதாலோ, மேடையில் பாரத மாதா படம் தவிர்க்கப்பட்டதாலோ, நாம் வருந்த ஏதுமில்லை. ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பில் சங்க ஆதரவாளர்கள் அதிகமானோர் இடம் பெறுவதன் தேவையையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இவ்விஷயத்தில் திரு. களிமிகு கணபதியின் கருத்துக்கள் உற்சாகம் ஊட்டுகின்றன.

    திரு.களிமிகு கணபதி,

    உங்கள் கருத்து மனநிறைவு அளிக்கிறது. இதையே நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள் செய்வார்கள். ஆர்.எஸ்.எஸ். தேசபக்தியை நமது நெஞ்சில் விதைப்பது இதற்காகவே.

    ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் நாட்டைக் காப்பதாக ‘பிரதிக்ஞை’ ஏற்றவர்கள். நாட்டுக்காகவே அவர்கள் இயக்கத்தில் இணைகின்றனர். அதனால் தான் உடனடியாக இயக்க அடையாளம் துறந்து களத்தில் குதிக்க அவர்களால் முடிகிறது. இதற்காக சங்கத்தில் யாரும் பாடம் நடத்துவதில்லை. அவர்கள் தினமும் பாடும் பிரார்த்தனையின் ஒரு வரியே (மகத்தான தாயகமே, உன்பொருட்டு இவ்வுடல் வீழட்டும்!) ஸ்வயம்சேவகர்களுக்கு இத்தகைய உள்ளஉறுதியை அளிக்கிறது. இத்தகைய அமைப்பில் நாம் அனைவரும் இணைந்து பணி புரியும்போது, தடைக்கற்கள் அனைத்தும் தவிடென மாறும் காலம் விரைவாக வந்துசேரும்.

    திரு. சுரேஷ் கு, திரு.வேதம்கோபால்,

    கிடைத்த வாய்ப்புகளை பாஜக சாதகமாக்கவில்லை என்பது உண்மை. அதைவிட, பாஜக காத்த அமைதியே அண்ணா போராட்டம் இந்த அளவுக்கு வெற்றி பெறக் காரணமாகவும் இருந்துள்ளது. பாஜக அவசரப்பட்டிருந்தால், ஹசாரே மீது பாஜக முத்திரை குத்தப்பட்டிருக்கும். இப்போதே அதுதான் நடக்கிறது என்பதை அறிவீர்கள். இது குறித்து எனது கட்டுரையிலேயே சில விஷயங்களைக் கூறி இருக்கிறேன்.

    தவிர நமது ஊடக உலகம் முட்டாள்தனமான கருத்தாளர்களாலும் குறுக்குப்புத்தி கொண்ட அறிவிஜீவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ஹசாரே இப்போது ஓரளவேனும் தப்பியுள்ளதற்கு பாஜக வகித்த நிதானமே காரணம் எனில் மிகையில்லை. எனினும், மக்கள் பாஜகவின் செயல்பாடுகளை உணர்ந்தே உள்ளனர். உதாரணமாக, ஈரோட்டில் நடந்த அண்ணா ஆதரவு நிகழ்வில் பெருமளவு பங்கேற்ற பாஜகவினரைக் கூற முடியும். இந்தியா டுடே பத்திரிகை, ‘அண்ணாவின் போராட்டத்தால் பாஜக மட்டுமே அதீத பலன் பெறும்’ என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளதை இங்கு நினைவு கூரலாம்.

    மொத்தத்தில் எந்த ஒரு விஷயத்திலும் நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது அணுகுமுறைகளும் செயல்முறைகளும் அமைகின்றன. யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல், தனது உள்ளத்தின் அடியாழத்தில் இருந்து கிளம்பிய சத்திய ஆவேசத்துடன் களம் இறங்கிய சங்க பரிவார் அமைப்புகளின் உறுப்பினர்கள் விளம்பரம் நாடி இதைச் செய்யவில்லை. ஆனால், அவர்கள் களத்தில் இருந்ததை ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷமே வெளிப்படுத்தியது. நமது இறுதி லட்சியமும் அது தானே?

    -சேக்கிழான்

  8. நேர் மாறான கருத்தை தெரிவித்த பி.ஆர்.ஹரனின் வ்யாசம் பற்றி குறிப்பளித்ததற்கு நன்றி ஸ்ரீ ராமா.

    \\\\\\\தவிர ஊழலுக்கு எதிரான போரில் பலதரப்பட்ட கருத்து உள்ளவர்களும் ஏதாவது ஒரு கண்ணோட்டத்தில் இணைவது நல்லதே. நக்சல்களும் இடதுசாரிகளும் இதில் இணைவது மகிழ்ச்சிக்குரியதே. அவர்கள் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கோஷமிட்டதாலோ, மேடையில் பாரத மாதா படம் தவிர்க்கப்பட்டதாலோ, நாம் வருந்த ஏதுமில்லை.\\\\\\\\

    ஸ்ரீ சேக்கிழான், என் உத்தரத்தில் இந்த போராட்டத்தால் விளைந்த ஒரு நல்ல மாற்றத்தைத் தெளிவு படுத்தியிருந்தேன். திரும்ப நினைவு கூர்கிறேன்.

    /////ஆனால் எது எப்படியிருந்தும் ஹிந்துஸ்தான மக்கள் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்த “வந்தே மாதரம்” மற்றும் “பாரத் மாதா கீ ஜெய்” போன்ற கோஷங்கள் தேசிய அரங்கில் புனர்ஜீவிதம் பெற்றதற்கு பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீ அண்ணா ஹஜாரேவை எவ்வளவு பாராடினாலும் தகும்./////

    தேச நன்மைக்கான போராட்டத்தில் சில சமயம் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் இணையநேருகிறது. தேச நலன் கருதாத இடதுசாரிகள் (குழப்பவாதிகள்) இப்போராட்டங்களில் இணைவது பற்றியும் அவர்கள் தேச ஒற்றுமையின் அடையாளங்களை வகுப்புவாத அடையாளங்களாக புறந்தள்ளுவதைப்பற்றியும் வருந்தி என்ன பயன். விழிப்புடன் இருப்பது மிக முக்யம். யார் எதற்காக இணைகிறார்கள் என்பது அவர்கள் செயல்பாடுகளாலேயே மக்களுக்கு தெரிந்து விடுகின்றது.

    அண்ணா போராட்டாத்திலிருந்து சாத்வி உமாபாரதி பலவந்தமாக வெளியேற்றப்பட்டும் பாரதமாதா திருவுருவம் வகுப்புவாதத்தின் அடையாளமாகவும் மதசார்பின்மைக்கு எதிரானது போலும் நீக்கப்பட்டும் ஸ்ரீ அண்ணா அவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்புக்கும் இந்த போராட்டத்துக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்று சொல்லியும் சங்கத்தினர் இப்போராட்டத்தில் ஈடுபட்டது தேச நலனை முன்னிறுத்தியே என்பதில் இரு கருத்திருக்க முடியாது.

    இதற்கு நேர் எதிரான நிலையை எடுத்த பாபா ராம்தேவ் அவர்களின் போராட்டமும் நினைவுக்கு வருகிறதே. பாபா ராம்தேவ் அவர்களின் போராட்டத்தில், அவர் தேச நலனுக்காக, ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட எல்லா அமைப்புகளிடமிருந்தும் ஆதரவு பெறுவேன் என தலைநிமிர்ந்து சொல்லியுள்ளார். போகுமிடமெல்லாம் நக்ஸல்வாத போராட்டத்தை வெகுவாக கண்டிக்கிறார். நக்ஸல்வாதம் தேசத்திற்கு எதிரான இயக்கம் என்பதை தெளிவு படுத்துகிறார். ஷியா தர்மகுரு மௌலானா கல்பே சாதிக் மற்றும் சாத்வி ரிதம்பரா போன்ற அனைத்து மதத்தவரும் அவரது போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னும் அப்போராட்டத்தை ஊடகங்கள் ஸம்ப்ரதாயவாதம் (வகுப்புவாதம்) கலந்த போராட்டம் என சாயம் பூசின.

    அன்பார்ந்த ஸ்ரீ களிமிகுகணபதி, நீங்கள் சினமிகுந்து தரம்தாழ்ந்த வாசகங்களால் எதிர் கருத்தை சாடியது கீழே.

    \\\\\உங்களுக்கே இவையெல்லாம் அபத்தமான, அம்மாஞ்சித்தனமானக் காரணங்களாகத் தெரியவில்லையா ? \\\பாரத மாதாவைப் படத்தில் மட்டுமே காணும் சடங்காச்சாரவாதிகளுக்கு மேடையில் இருப்பவருடைய தியாகம் மட்டுமல்ல, மேடைக்குக் கீழேயும் உண்ணாவிரதம் இருப்பவர்களின் தியாகம் புரியாதுதான்.\\\\\

    கராராக ஒரு ப்ரச்சினையை விவாதம் செய்ய சங்கத்தில் பயிற்சி பெற்ற நான் தங்களது போன்ற தரம் தாழ்ந்த வாசகங்களால் உத்தரமளிக்க இயலாது. ஆனால் ஒன்று நினைவில் கொள்ளுங்கள். விஜயவாணி தளத்தில் படித்தீர்களானால் ஸ்ரீ பிஆர் ஹரன், ஸ்ரீமதி ராதா ராஜன் மற்றும் ஸ்ரீமதி சந்த்யா ஜெய்ன் போன்ற பல ஹிந்துசமூஹத்தில் நலன் உள்ள எழுத்தாளர்கள் இந்த போராட்டத்தை மிகக் கடுமையாக சாடியுள்ளார்கள். இவையேதும் அண்ணா போராட்ட ஆதரவாளர்கள் இவர்களுக்கு என்ன சான்றிதழளிப்பார்கள் என்று எதிர்பார்த்து அல்ல. ஹிந்துக்களிடையே மாற்றுக் கருத்துக்களும், இப்போராட்டத்தின் சில அம்சங்களுக்கு எதிராக, மற்றும் அண்ணா ஹஜாரே என்ற காந்திய வாதியை சூழ்ந்த துஷ்டர்களுக்கு எதிராக உண்டு, என தெரிவிப்பதற்கு. மாற்றுக் கருத்தாளர்கள் தேச நலனுக்கோ அல்லது ஹிந்துக்களின் நலன்களுக்கோ எதிரானவர்கள் என்று நீங்கள் சொல்வீர்களா? அல்லது போராட்டத்தினரின் த்யாகம் ஏதும் இவர்கட்கு தெரியாது என சொல்வீர்களா?

    பரம பவித்ர பகவா த்வஜத்தின் முன் நின்று “நமஸ்தே ஸதா வத்சலே மாத்ரு பூமே” என்று சொல்பவர்கட்கு பாரத மாதா திருவுருவம் வெளியேற்றப்பட்டால் அது கண்டிப்பாக உறைக்கும். வெளியே நின்று வேடிக்கை பார்ப்பவர்கட்கு பகவா த்வஜத்தின் முன் நின்று ஸ்வயம் சேவகர்கள் “நமஸ்தே ஸதா வத்சலே மாத்ரு பூமே” என்று ப்ரார்த்தனா பாடுவது கூட வெறும் சடங்காசாரமாகவே தோன்றும். ஆனால் டாக்டர்ஜீ காலம் துவங்கி இன்று வரை பின்பற்றப்படும் ஒழுங்குமுறையடங்கிய பல சடங்காசாரங்களின் பலத்தால் தான் சங்கம் சகோதரத்துவம், ஒழுக்கம், தேசபக்தி மிகு ஹிந்துஸ்தானத்தை உருவாக்கி வருகிறது என தங்கள் வாழ்க்கையை சங்கத்திற்கு அர்ப்பணித்த சான்றோர் பலர் எனக்கு தெளிவு படுத்தியுள்ளார்கள். இவர்களது கருத்து அன்பார்ந்த தங்கள் கருத்தை விட எனக்கு மேலானது.

    மாற்றுக்கருத்தை நிச்சயம் வரவேற்கிறேன். அது தரம் தாழாது இருந்தால் நன்று.

  9. //எனினும் ஊடகத் துறையிலும் அரசு சாரா அமைப்புகளிலும் நிலவும் ஊழல், எல்லை தாண்டிய கட்டுப்பாடு போன்றவை ஆபத்தானவையே. இவை குறித்து இப்போது அண்ணா பேசவில்லை என்பது உண்மையே. ஒரே நேரத்தில் அனைவரையும் எதிர்த்து கத்திச்சண்டை போட முடியாது.//
    You dont need to do that but at least they could try to bring awareness among the people gathered at Ramlila maidan about NGO,Corporate,Media corruptions and the need to bring NGO,Corporate and Media under the ambit of Lokpal… See below the glimpses of Corporate corruption

    1. இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ 240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது.

    2.2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும்.

    3.ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இது போன்ற எண்கள் ‘வராத வருவாய்ப் பட்டியல்‘ என்ற அளவில் சேர்த்துக் கொண்டே செல்லப்படுகிறது. இது கார்ப்பரேட் முதலாளிகளின் கடலில் விழும் மழையோடு, ஆயத்தீர்வை மற்றும் சுங்க வரிகளில் அரசு விட்டுக்கொடுக்கும் சலுகைளையும் சேர்த்தால் சமூகத்தில் நல்ல நிலையிலுள்ள பெருமுதலாளிகளுக்குத்தான் பெரிய அளவில் பயன் முழுவதும் சென்று சேருகிறது.

    4.பெரிய அளவில் சுங்க வரி அரசிற்கு வர வேண்டியதை விட்டுக் கொடுக்கும் வைரத்தையும், தங்கத்தையும் எடுத்துக் கொள்வோம். இந்த நடப்பு பட்ஜெட்டில் மிக அதிக அளவிலான சுங்கவரி விட்டுக் கொடுத்தல் இதற்கு ரூ. 48,798 கோடியளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்த பொது விநியோக முறைக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகையில் பாதி இது. கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ. 95,675 கோடியாகும்.

    5.. ’இயந்திரங்கள்’ என்ற தலைப்பிலும் பெரிய அளவில் சுங்க வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. இவை கண்டிப்பாக கார்ப்பரேட் பெருமுதலாளிகள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு வாங்கப்படும் நவீன மருத்துவ சாதனங்கைள உள்ளடக்கியது என்பதுடன், அவற்றிற்கு ஏறக்குறைய வரியே விதிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். சுங்க வரியில் மொத்த வருவாய் விட்டுக் கொடுத்தல்தான், இந்த பட்ஜெட்டில் 1,74,418 கோடி (இதில் ஏற்றுமதி சலுகைக்கான எண்கள் சேர்க்கப்படவில்லை).

    6.சுங்கவரி வராக்கடன் தள்ளுபடி என்பது தொழிற்சாலைக்கும், வியாபாரத்திற்கும் நேரடியாகக் கிடைக்கின்ற பயன் ஆகும். மக்களை / நுகர்வோரைச் சென்றடைகிறது என்பது ஏமாற்று வாதம்தான், உண்மையல்ல. பட்ஜெட்டில் சுங்க வரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ 1,98,291 கோடி என சொல்லப்பட்டுள்ளது. தெளிவாக 2ஜி ஊழல் இழப்பை விட அதிகம் (கடந்த ஆண்டு வருவாய் இழப்பு ரூ 1,69,121 கோடி).

    7. ஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர். ஆனால் தற்போது வரா இனம் என கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வருமான வரி, சுங்கவரி, ஆயத்தீர்வை ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் மொத்தமாக எவ்வளவு தொகை??? 2005-06 முதலான 6 ஆண்டு விவரங்களில் 2005-06ல் மட்டும் ரூ. 2,29,108 கோடி. நடப்பாண்டு பட்ஜெட்டில் இரட்டிப்பாகி அது ரூ. 4,60,972 கோடி. கடந்த 6 ஆண்டுகளின் இழந்த இத்தொகையைக் கூட்டினால் ரூ 21,25,023 கோடிகள் அல்லது அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அருகில் உள்ள தொகை.

    இது 2ஜி அலைக்கற்றை ஊழல் மதிப்பீட்டுத் தொகையைப்போல் 12 மடங்கு மட்டுமல்ல, உலக நிதி நாணய நிறுவனம் சமீபத்தில் கணக்கிட்டுள்ளபடி இந்த நாட்டைவிட்டு கள்ளத்தனமாக /சட்ட விரோதமாக 1948 லிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு முதலீடாகச் சென்றுள்ள ரூ 21 லட்சம் கோடி தொகைக்கு சமம் அல்லது கூடுதலாகும் (462 பில்லியன் டாலர்). இந்தக் கொள்ளை என்பது 2005-06 தொடங்கி 6 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது.

    கள்ளத்தனமாக வெளிநாட்டு முதலீடு என்பது போலல்லாமல் – இந்தக் கொள்ளைக்கு சட்டப் பாதுகாப்பும் உள்ளது. மாறாக, அரசின் கொள்கை முடிவு. இத்தகைய பணபலம் பொருந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மேலும் சொத்து சேரும் வகையில் நடைபெறும் இந்தப் பரிமாற்றங்களை எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை.

    எந்த கட்சி அரசு இருந்தாலும் (காங்கிரஸ் அல்லது BJP), கார்பரேட் கொள்ளை தொடர்கிறது. அண்ணா அவருடைய திட்டத்தில் இதையும் கண்டுகொள்ள வேண்டும்.

  10. //தலித் தலைவர் உதித்ராஜைத் தூண்டிவிட்டு ‘பகுஜன் லோக்பால் மசோதா’ என்ற ஒன்றை புதிதாகப் புகுத்துபவர்கள் ஆளும் தரப்பினரே என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை.//
    // என் ஏ சி உறுப்பினர் அருணாராயின் மசோதா முன்னாள் தேர்தல் ஆணைய தலைவர் ஸ்ரீ டி.என்.சேஷன் அவர்களின் மசோதா என வரிசையாக பல மசோதாக்கள். இவையெல்லாம் யாரால் யாருக்காக என மக்களறிவர்.//

    ஒரு மசோதா உருவாக்க அண்ணாவுக்கு மட்டும் உரிமை இருப்பதுபோல் சொல்லக்கூடாது.. மற்றவர்கள் உருவாக்கினால் அவர்கள் ஆளுங்கட்சி என்று சொன்னால், அண்ணா குழு எதிர்கட்சியின் ஆட்களா?

    இவ்வாறு சொல்லுவதைவிட பகுஜன் லோக்பால் மசோதாவில் உள்ள தவறானவை எவை என்பதை சொன்னால் நன்று.

    அண்ணா மற்றும் மற்றவர்களின் மசோதாக்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து சரியான விவாதம் நடத்தி எல்லா மசோதாக்களில் உள்ள நல்லவற்றிநை வைத்து சட்டம் இயற்ற்ற வேண்டும்

  11. நான் தெரிவித்த கருத்துக்கள் தரம் தாழ்ந்தவை அல்ல க்ருஷ்ணக்குமார்.

    போராட்டம் எதற்கு நடக்கிறது என்பதைக் கவனிக்காமல், அது வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என யோசிக்காமல் அர்த்தமற்ற உணர்ச்சிகரக் கூக்குரல்களால் எதுவும் நேர்மறையாகச் செய்ய இயலாது.

    எனக்கு என் தாயார் மீது மிகுந்த பக்தி உண்டுதான். ஆனால், அவரை நான் வேலை செய்யும் இடத்திலும் வைத்து வழிபட வேண்டியதில்லை. பாரத மாதாவை பூஜிக்கும் பக்குவம் இல்லாதவர் இடத்தில் பாரத மாதா படம் இருக்க வேண்டியதில்லை.

    அந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன ? அந்நோக்கம் பாரதமாதாவிற்கு நன்மை செய்யுமா தீமை செய்யுமா? இவை அல்லவா நாம் யோசிக்க வேண்டிய விஷயங்கள்?

    சாத்வீகமான, நேர்மறையான, ஆக்கபூர்வப் போராட்டங்களுக்கு மதிப்பிற்குரிய ஸ்ரீமதி ராதா ராஜன் உள்ளிட்டவர்களின் குரல்கள் எப்போதும் எதிராகவே பேசுவதைக் காணுகிறேன்.

    என்.ஜி.ஓக்களின் கையில் நாட்டை ஒப்படைப்பதா என்று அவர்கள் எழுப்பும் கேள்வி மேலோட்டப் பார்வையில் சரியாகவே தெரியும். ஆனால், ஜன்லோக்பால் அமைப்பானது ஒரு என்.ஜி.ஓ அமைப்பு அல்ல. அது முழுக்க முழுக்க அரசு சார்ந்த அமைப்பு. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, அரசு நிர்வாகம், மற்றும் நீதித்துறைகளின் தலைவர்களால் நியமிக்கப்படுபவர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்பே ஜன்லோக்பால் அமைப்பு.

    ஆனால், இந்த உண்மையைச் சொல்லாமல் ஏதோ டீயஸ்டா ஸ்டால்வட்டும், அருந்ததி ராயும் சேர்ந்த என்.ஜி.ஓக்களால இது நடத்தப்படும் என்பது போல அவர்கள் எழுதிவருவது தவறான தகவல்களையே மக்களிடையே பரப்புகின்றது. உங்களைப் போன்ற தேச பக்தர்களை ஏமாற்றுகின்றன.

    மேலும், இந்துத்துவம் என்பது இந்தியத் தன்மையுடையதாகவே இருக்க வேண்டும். நமது இந்துத்துவ அரசியல் அமைப்பு எப்போதும், அதிகார மையக்குவிப்பு (centralized) உடையதாக இருந்ததே கிடையாது. இந்துத்துவ அரசியல் அமைப்பில் (polity) சமூகத்தின் சக்தி அதன் அடிப்பாகத்தில்தான் இருந்தது.

    கிராமப் பஞ்சாயத்து என்பது அதன் எச்சமே. இந்த அமைப்பைத் தகர்க்கும் ஐரோப்பிய அரசியலமைப்பையே நாம் தற்போது கொண்டிருக்கிறோம். இந்த யூரோப்பிய மைய அதிகாரக்குவிப்பு அமைப்பு பாராளுமன்ற முறையாக இருக்கிறது. பாராளுமன்றம் என்பது வெள்ளையர்கள் உருவாக்கிய நியோ-ஜமீந்தாரி முறை. அதை நேருவிய அரசமைப்புப் பின்பற்றச் செய்கிறது.

    அன்னா ஹஸாரேவின் அடுத்த போராட்டம் de-centralizationஐ நோக்கியதாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் என்று நான் யூகிக்கிறேன். ஏனென்றால் அதுதான் இந்தியத் தன்மை கொண்டது. இந்துத்துவத் தன்மை கொண்டது.

    ஸ்ரீமதி ராதாராஜன் இத்தகைய ஐரோப்பிய அராஜக அமைப்பான பாராளுமன்றம்தான் எதேச்சதிகாரம் செலுத்த வேண்டும் என்கிறார். இதைத்தானே அருந்ததி நாய் உள்ளிட்ட காங்கிரஸ்-இடதுசாரி குழுக்களும் சொல்கின்றன.

    மேலும், அவர்கள் அந்நா ஹஸாரேவை எதிர்க்கக் காரணம் அவர் ஒரு காந்தியவாதி என்பதுதான். காந்தியவாதத்தை பாரம்பரிய இந்துத்துவ அமைப்புக்களும், ஆர்.எஸ்.எஸ்ஸும் எப்போதும் ஆதரித்தே வந்துள்ளன. மார்க்கஸிய, கிறுத்துவ, இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்த்தே வந்துள்ளன. வரலாறு பெரும்பாலும் மாறுவது இல்லை.

    உதாரணமாக, இந்தப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே, மோகன் தாஸ் காந்தி ஜியின் “ஹிந்த் ஸ்வராஜ்” என்ற புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பரவலாக விநியோகித்து வருகிறார்கள்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மானனீய மோகன் பாகவத்ஜியும், மானனீய நரெந்திர மோடிஜியும் ஒன்றாகத் தோன்றிய மேடை, இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா. செய்திக்கு:

    RSS supremo Bhagwat, Modi release Gandhi`s book `Hind Swaraj`
    https://zeenews.india.com/news/state-news/rss-supremo-bhagwat-modi-release-gandhi-s-book-hind-swaraj_690421.html

    ஒரு மேடையில் மானனீய நரேந்திர மோடி ஜி இந்தப் புத்தகத்தை ஒரு மணிநேரம் சத்தமாக வாசித்திருக்கிறார். செய்திக்கு:

    Narendra Modi spends an hour reading Bapu’s ‘Hind Swaraj’
    https://www.dnaindia.com/india/report_narendra-modi-spends-an-hour-reading-bapu-s-hind-swaraj_1460124

    இந்தப் புத்தகத்தில் பாராளுமன்ற முறை பற்றி காந்தி இப்படிச் சொல்லுகிறார்:

    “That which you consider to be the Mother of Parliaments is like a sterile woman and a prostitute ”

    இந்த யூரோப்பிய பாராளுமன்ற முறையைத்தான் ராதா ராஜனும், காங்கி-இடதுசாரிகளும் ஆதரிக்கிறார்கள்.

    முழுக்க முழுக்க இந்துத்துவத் தனமை இல்லாத யூரோப்பியத் தன்மை வாய்ந்த இந்தியாவை அவர்கள் தொடர்ந்து செயல்படுத்த விரும்புகிறார்கள்.

    இதை எப்படி ஒரு இந்துத்துவவாதி ஏற்றுக் கொள்ள முடியும் ? இதை மாற்றுக் குரலாகக் கருத, நியாயமான காரணிகள் ஏதேனும் இருக்க வேண்டும் அலல்வா ?

    ஜன்லோக்பால் என்பது அதிகாரக் குவிப்பைச் சமன் செய்யும் முயற்சி. அதை எதிர்ப்பவர்கள் இந்துத்துவர்களாகத் தங்களை அடையாளம் காட்டலாம். ஆனால், அவர்கள் பேசுவது இந்துத்துவமா என்பதைக் கவனிக்க வேண்டும்.

    கெட்டப்பை மட்டும் மாற்றி என்ன பலன் ? கேரக்டரும் மாற வேண்டும் அல்லவா ?

    யார் சொல்கிறார்கள் என்று பார்க்காதீர்கள் நண்பரே. என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.

    அப்போது, அருந்ததி நாய் சொல்வதற்கும் ஸ்ரீமதி ராதா ராஜன் சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தெரியும்.

    இது ஒரு ஆக்கபூர்வப் போராட்டம். எனவே, எல்லா வகையிலும் அது ஒரு இந்துத்துவப் போராட்டம். அதற்கு ஆதரவு தருவது நம் கடமை.

    மாறுபடும் குரல்களில் உண்மையும், நியாயமும் இருந்தால் மட்டுமே அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடிய மாற்றுக் குரல்களாக நாம் கருத முடியும்.

    .

  12. Whenever the natural process of national and political evolution is violently suppressed by the forces of wrong, then revolution must step in as a natural reaction and therfore ought to be welcomed as the only effective instrument to reenthrone Truth and Right

    Veer Savarkar

  13. why Bahujan Lokpal Bill ?

    1. As numerous reports mainly in the alternate media have pointed out, Anna Hazare’s crusade against corruption has won little support from among the Dalits and other marginalized caste groups, minorities who are undoubtedly among the most miserable victims of India’s thoroughly corrupt social order.

    2. more than that, numerous Dalit intellectuals have denounced Mr. Hazare’s proposed Jan Lokpal as allegedly calculated to subvert Constitutional Democracy, just as Hazare’s backers of being vehemently opposed to reservations for the oppressed castes.

    who drafted Bahujan Lokpal Bill?
    Uditraj, along with numerous other leaders from the Dalit, Backward Caste and religious minority communities, has proposed a Bahujan Lokpal Bill, arguing that the draft presented by Team Anna is clearly flawed and inadequate as far as the Bahujan Samaj is concerned.

    What are the important features/provisions of Bahujan Lokpal Bill?

    1.The Bahujan Lokpal bill draft points out that Anna Hazare’s proposed Jan Lokpal leaves out other vast sectors where corruption is rampant like corporate houses, the media and NGOs. Hence Bahujan Lokpal bill draft says these sectors, too, should be included under the jurisdiction of the Lokpal and Lokayukt.

    2.The drafters of the Bahujan Lokpal Bill clearly distance themselves from the backers of the Jan Lokpal Bill but, at the same time, argue in support of what they term a strong and effective Lokpal Bill which can be instrumental in eradicating corruption from public life.

    3. The draft Bahujan Lokpal Bill commences with a reminder that Babasaheb Ambedkar, the architect of the Indian Constitution, was convinced that the plight of the Dalits required corrective measures on the part of the state, including affirmative action, but regrets that this has not happened in the manner and on the scale that it should have.

    3. In the backdrop of the Hazare-led agitation for a powerful Lokpal, it says, the interests of the marginalised sections including Dalits, tribals, minorities must be kept foremost in mind. Anna’s proposed Jan Lokpal will result in “new laws and rules” that are oppressive and discriminatory and that would subvert the Constitutional provisions for Dalits and other marginalized communities as formulated by Dr. Ambedkar.

    4. As per the Bahujan Lokpal Bill, The Lokpal, if it comes into being, must in no way negatively impinge of various acts, laws, rules and besides institutions created by Constitutional means for the marginalized communities, including the National Commission for Scheduled Castes, National Commission for Scheduled Tribes, National Commission for Backward Classes and National Commission for Minorities.

    5. Moreover, rather than remaining confined simply to fighting corruption, the draft Bahujan Lokpall Bill says that the Lokpal should also be anti caste-discrimination, suggesting that corruption cannot be seen in isolation from the casteism and communalism, which it identifies as two major bases for corruption.

    6. In addition, the Bahujan Lokpall Bill says that the Lokpal should also combat and punish caste discrimination in public offices and places.

    7. The draft Bahujan Lokpal Bill notes that Social discrimination is more poisonous and injurious to a civil society as compared to corruption in public offices because social discrimination is against humanity and hence it is a social evil.

    8. Accordingly, Bahujan Lokpal Bill says that there is a need for “substantial changes” in the proposed Lokpal Bill, for it contends that Mr. Hazare’s Jan Lokpal Bill is an attempt to supersede existing Constitutional bodies and attempt to create a super institution with sweeping powers which can be dangerous for the benevolent laws enacted by the Indian Parliament safeguarding Dalit employees, labourers, workers and citizens who are facing the arrogant and biased attitude of the non-Dalits towards Dalits in different spheres of life and employment.

    9. Given that, as the Bahujan Lokpal Bill contends, Dalits, Adivasis, Backward Castes, religious minorities, children and women are the worst sufferers of the many ramifications of corruption, including mis-governance, misconduct, maladministration, improper discrimination, etc.,Therefore Bahujan Lokpal Bill argues that it is crucial that their rights and interests are secured and promoted through the institution of the Lokpal, rather than being subverted, which might well happen if the Team Anna’s Jan Lokpal comes into force.

    10. For this purpose,Bahujan Lokpal Bill argues that the concept of “corruption” with regard to the Lokpal be widened to include
    a) diverting outlays for plans marked for the benefit of Dalits, Adivasis, Backward Castes and religious minorities, as the case might be, to any other purpose;
    b) failure to formulate these plans in a manner which will reduce the gap between the particular marginalized community the plans is ostensibly meant for and the non-dalit castes; c) reporting utilisation of funds earmarked for these plans for purposes other than for directly and exclusively benefitting the particular marginalized community it is meant for;
    d) and failure on the part of public servants to take prompt take remedial and punitive action when any of these failures, diversions misutilisations or misreporting are brought to their notice.

    11. To ensure that the interests of the Bahujan Samaj are not ignored by the Lokpal, the Bahujan Lokpal Bill suggests that the Lokpal, supported by the Lokayukt at the state-level, ought to have proper representation from the “marginalized communities” and that this should be reflected in its membership.

    12.Bahujan Lokpal Bill says that The search and selection committees formed to appoint the Lokpal and Lokayukt should have at least four members from the marginalized communities, and the selection must involve detailed discussions with intellectuals and social activists from these communities.

    13.The draft Bahujan Lokpal Bill also proposes that the Lokpal and Lokayukt be supervised by the National Commission for Scheduled Castes, National Commission for Scheduled Tribes, National Commission for Backward Classes and National Commission for Minorities besides other institutions in case the allegations of corruption that it deals with are against members of SC, ST, OBC or religious minority communities respectively.

    13. Bahujan Lokpal Bill recommends that the opinion or advice of the respective Commission should, prevail over the respective Lokpal or Lokayukt, and once a case is referred to the Commission, the Lokpal or Lokayukt shall cease to have the power to further act upon it.

    14.The Bahujan Lokpal Bill suggests that before initiating investigation against a member of any marginalized community, prior approval from the respective Commission should be mandatory. In case this approval is granted, the suspect is to given a fair hearing before filing an FIR against him. Members of marginalized communities would be entitled to have advocates from the Government free of cost to present their cases before the Lokpal/Lokayukt.

    15. The Bahujan Lokpal Bill also suggests that Special Courts shall be notified, formed and presided over by judges belonging to marginalized communities to prosecute members of such communities.

    16.Bahujan Lokpal Bill recommends that the investigating agency under the Lokpal and Lokayukt be headed by a member of a marginalized community in case the suspect is a member of that particular community.

  14. அன்பார்ந்த ஸ்ரீ களிமிகுகணபதி,

    \\\\ஆனால், இந்த உண்மையைச் சொல்லாமல் ஏதோ டீயஸ்டா ஸ்டால்வட்டும், அருந்ததி ராயும் சேர்ந்த என்.ஜி.ஓக்களால இது நடத்தப்படும் என்பது போல \\\\கெட்டப்பை மட்டும் மாற்றி என்ன பலன் ? கேரக்டரும் மாற வேண்டும் அல்லவா ?\\\\

    உங்களுடைய இரண்டாவது வாசகத்தில் முதல் வாசகத்திற்கான பதில். தீஸ்தா சீதள்வாத் மற்றும் அருந்ததி ராய் மட்டும் கயவர்கள் போலும் ஸ்ரீ அண்ணா ஹஜாரே அவர்களை சூழ்ந்த என்ஜிஓக்கள் எல்லோரும் கேழ்விக்கு அப்பாற்பட்டவர்கள் ஸாது ஸந்த் என்பீர்கள் போலும்

    ஸ்ரீமதி ராதாராஜன் மற்றும் ஸந்த்யா ஜெய்ன், ஸ்ரீமான்கள் பிஆர் ஹரன் இவர்களுடன் ஸ்ரீ க்ருஷண் கெக் அவர்களை சேர்க்க விட்டு விட்டது. ஸ்ரீ க்ருஷண் கெக் முன்னமேயே ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் என்ஜிஓ என்ற பணம் காய்ச்சி மரத்தின் அருமை பெருமைகளை பிட்டுப் பிட்டு வைத்துள்ளார். ஸ்ரீ அண்ணாவை சூழ்ந்த துஷ்ட சதுஷ்டர்களின் குறிப்பாக ஸ்ரீ அண்ணா சான்றிதழ் அளிக்கும் அர்ஜுன் கேஜ்ரிவாலின் என்ஜிஓ வின் கணக்கு வழக்கு குழப்பங்களைப் படம் பிடித்துள்ளார்.

    https://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1948

    \\\யார் சொல்கிறார்கள் என்று பார்க்காதீர்கள் நண்பரே. \\\

    ஊரில் உள்ளவர்களை கணக்கு கேழ்க்க வேண்டும் என ஸ்ரீ அண்ணா சொல்வது ஞாயம் தான். அந்த ஞாயம் அவரைச்சூழ்ந்த துஷ்ட சதுஷ்டர்களுக்கு இல்லையோ?

    இவர்களைப்பற்றி காகிதங்கள் சொல்லும் கதை மேல் சுட்டியில்.

    \\\\ காந்தியவாதத்தை பாரம்பரிய இந்துத்துவ அமைப்புக்களும், ஆர்.எஸ்.எஸ்ஸும் எப்போதும் ஆதரித்தே வந்துள்ளன. \\\

    தவறு. சங்கத்தின் ராம ராஜ்யத்திற்கும் காந்தியின் ஹிந்த் ஸ்வராஜுக்கும் ஒற்றுமைகள் உண்டு. அதற்காக காந்தியவாதத்தை பாரம்பரிய ஹிந்துத்துவ அமைப்புகள் ஆதரிக்கின்றன என்பது ஏற்க முடியாது. குரான்-ஏ-ஷெர்ஃப், பைபலில் கூட தேடிப்பார்த்தால் ஹிந்து மதத்தில் சொல்லும் நல்ல விஷயங்கள் இருக்கும். ஆனால் அதற்காக அவற்றை அப்படியே ஏற்பதில்லை. அது போல் தான் “ஹிந்த் ஸ்வராஜ்”. பரம் பூஜனீய ஸ்ரீ மோஹன் பாகவத் அவர்களும் ஹிந்து ஹ்ருதய ஸாம்ராட் ஸ்ரீ நரேந்த்ர மோடி அவர்களும் “ஹிந்த் ஸ்வராஜ்” வெளியிட்டார்கள் என்றால் அது சங்கத்தின் க்ராம ஸ்வராஜ்ய கொள்கையை ஒத்தது என்பதால் தான். ஏன் நீங்கள் பரம் பூஜனீய ஸ்ரீ. ஹொ.வே.ஸேஷாத்ரிஜி அவர்களின் “Tragic Story of Partition” படிக்கலாமே. பாரதத்தைப்பிளக்கும் முன் என்னைப்பிளந்து போடுங்கள் என்றார் காந்தி. ஆனால் ஹிந்துஸ்தானத்தைப் பிளந்ததை ஏற்றார். ஹிந்துஸ்தானம் பிளந்தது காந்தியவாதிகளைப்பொறுத்த வரை முடிந்த கதை. ஹிந்துத்துவ அமைப்புகளுக்கன்று. ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு சாதிக்க வேண்டியது அகண்ட ஹிந்துஸ்தானம் .

    ஸ்ரீ மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி சங்கத்தில் போற்றப்படுவதை அகழ்வாராய்ச்சி போல் ஏன் சொல்கிறீர்கள். பாரதத்தின் சான்றோர்களை போற்றும் ஒரு ஸ்தோத்ரம் சங்கத்தில் இப்போது வாசிக்கப் படுகிறது. ஏகாத்மதா ஸ்தோத்ரம் என்று பெயர். ஒரு முப்பது முப்பத்தைந்து வருஷம் முன் இது வேறு வடிவில் இருந்தது. அதற்குப் பெயர் ப்ராதஸ்மரணம் அதவா பாரத பக்தி ஸ்தோத்ரம்

    “கராக்ரே வஸதே லக்ஷ்மி கரமத்யே ஸரஸ்வதி” என ஆரம்பித்து

    அஸ்வத்தாமா பலிர் வ்யாசோ ஹனுமான்ச விபீஷண : என்ற படி போகும் ஸப்த சிரஞ்சீவிகளை ஸ்மரித்து வருகையில் கடைசீ சில அடிகளில்

    “மஹாமனா மாளவியோ மஹாத்மா காந்திரேவச என பனாரஸ் ஹிந்து விச்வ வித்யாலயத்தை நிறுவிய பண்டித ஸ்ரீ மதன் மோஹன் மாளவியா மற்றும் ஸ்ரீ மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களையும் ப்ராதஸ்மரணீயர்களாய் நினைவுறுவோம். பழைய ஸ்வயம் சேவகர்களிடம் ப்ராதஸ்மரணம் இருக்கும் வாங்கிப்பாருங்கள்.

    காந்தி சுடப்பட்டு இறக்குந்தருவாயில் கூட ராம நாமம் சொல்லி இறந்தார் என்பது எனக்கு ஆன்மீகமாய் முக்யமான விஷயம். குலசேகர மன்னன் , “ப்ராண ப்ரயாண சமயே கப வாத பித்தை:” என்ற படி இறக்கும் தருவாயில் நெஞ்சடைக்க உன் நாமம் சொல்ல இயலுமோ இயலாதோ, இன்றே என் மனதாகிய ராஜஹம்சத்தில் இருப்பாய் கண்ணா என்று சொல்வார். ராம நாமம் ரூடமாய் ஹ்ருதயத்தில் இருந்ததால் மஹாத்மா காந்திக்கு ராம நாமம் சுடப்பட்ட பின்னும் வந்தது அவர் அருளாளர் என்று எனக்கு அவர் மீது மரியாதை அவசியம் உண்டு.

    ஆனால் காந்தி என்ற ராஜநீதிக்ஞரிடம் எனக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. எப்படி ஸ்ரீ ராமசாமி பெரியாரின் இரட்டை வேடங்கள் இங்கு அம்பலமோ ஸ்ரீமதி ராதா ராஜன் அவ்வாறே காந்தி என்ற ராஜநீதிக்ஞரின் இரட்டை வேடங்களை அம்பலம் செய்துள்ளார். எல்லாம் அவர் ஹரிஜன் பத்திரிகையில் எழுதிய வ்யாசங்கள் மூலமே. எதுவும் ஸ்ரீமதி ராதாஜி அவர்களின் புனைவு அல்ல.

    \\அருந்ததி நாய் சொல்வதற்கும் ஸ்ரீமதி ராதா ராஜன் சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தெரியும்.\\\ஸ்ரீமதி ராதாராஜன் இத்தகைய ஐரோப்பிய அராஜக அமைப்பான பாராளுமன்றம்தான் எதேச்சதிகாரம் செலுத்த வேண்டும் என்கிறார். இதைத்தானே அருந்ததி நாய் உள்ளிட்ட காங்கிரஸ்-இடதுசாரி குழுக்களும் சொல்கின்றன.\\\

    இதையே தான் ஸ்ரீ அண்ணா ஹஜரேவும் சொல்கிறார் என்பது தெரியாதோ. அவர் ஹிந்தியில் சொன்னதால் தங்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம். ஸ்ரீமான் ஜடாயுவின் வ்யாசத்தில் என் மறுமொழி, அதற்கு அவர் குறிப்பு

    ////// உயர்ந்த ஸ்தானம் “ஸன்ஸத்” என்ற படிக்கு பாராளுமன்றம் என்ற அமைப்புக்குத்தானேயொழிய “ஸான்ஸத்” என்ற ஜன ப்ரதிநிதிகளுக்கல்ல என்று தெளிவாக கூறியுள்ளார்.//

    கிருஷ்ணகுமார் ஐயா, இதன் மூலம் தான் பாராளுமன்றத்தை மதிப்பவர் என்பதை அண்ணாஜி தெளிவு படுத்தி விட்டார்! தங்கள் விளக்கங்களுக்கு நன்றி.//////

    லோக்பால் மசோதா என்பது பாராளுமன்றத்தில் தானே ஏற்கப்படவேண்டும். ராம்லீலா மைதானத்திலோ போட்க்ளப் மைதானத்திலோ அல்லவே. ஸன்ஸத் என்ற பாராளுமன்றத்தின் அதிகாரம் அரசியல் சாஸனத்தால் ஊர்ஜிதம் செய்யப்பட்ட விஷயம். அதை மாற்றுவது இது வரை ஸ்ரீ அண்ணவின் கோட்பாடுகளிலோ அல்லது எனது மதிப்பிற்குறிய ஹிந்துக்களை ஹிந்து இயக்கங்களை மதிக்கும் பாபா ராம்தேவ் அவர்களின் கோட்பாடுகளிலோ இன்று வரை இல்லை. பாராளுமன்றத்தின் அதிகாரம் எதேச்சாதிகாரம் என்று சொல்வதில் வெறும் காரம் மட்டும் தான் சாரம் ஏதுமில்லை. நிதர்சனமான ஒரு விஷய்த்தை ஏன் குழப்புகிறீர்கள்.

    ஸ்ரீமதி ராதா ராஜன் சொல்லும் பல விஷயங்களில் எனக்கும் வேற்றுமை உண்டு. எக்காரணம் கொண்டும் தேச விரோத குழப்பவாத இடதுசாரி சக்திகளான என்ஜிஓக்களை ஸ்ரீமதி ராதா ராஜனுடன் ஒப்பிட்டு பார்ப்பதை என்னால் அறவே ஏற்க முடியாது. ஸ்ரீமான் களிமிகு கணபதி ஹிந்து இயக்கங்களுக்காக என்ன செய்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை நீங்கள் ஸ்ரீமதி ராதா ராஜன் அவர்கள் ஹிந்துக்களுக்காக பாடுபடுவதை விட அதிகம் பாடு படுகிறீர்களா தெரியாது. எனது பெருமதிப்பிற்குறிய ஸ்ரீமதி ராதா ராஜன் தனிஒரு பெண்ணாக ஹிந்துக்களுக்காக சாதிப்பது அதிகம். ஆம் அவர் சொற்களில் அமிலம் தெரிக்கும். காந்தி என்பவரை அவர் அறவே ஏற்பதில்லை. அதற்காக அப்பழுக்கற்ற தேசியவாதியான ஹிந்துத்வவாதியான அவரை தேச விரோத சக்திகளான அருந்ததி ராய் என்ற பெண்மணியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    அப்பழுக்கற்ற ஹிந்துத்வவாதியான ஸ்ரீமதி ராதா ராஜன் அவர்களை தேச விரோத கருத்துக்கள் பரப்பும் அருந்ததி ராயுடன் ஸ்ரீ களிமிகு கணபதி ஒப்பிட்டதை ப்ரசுரம் செய்த தமிழ் ஹிந்து தளத்தின் அபிப்ராயமும் இது தானா?

    மிகுந்த மன வருத்தத்துடன்
    க்ருஷ்ணகுமார்

  15. Dear all, the following for your attn.- A person’s methods and his character should be judged by the eld result of his efforts. I cannot accept Gandhi in any form because the end result of his amateurish, egotistic and despotic political adventurism is vivisection of the Hindu bhumi. My second and equally strong objection to Gandhi is his abnormal, cruel and downright untimely experiments with women not his wife and in the lifetime of his wife. If Gandhi wanted to test his brahmacharyam he should have done it with his wife, not other women many of whom were emotionally destroyed because they could not speak out or share their humiliation with any one. For the rest, I believe the RSS is Hindu society’s immune system. When I see the system being weakened, I will raise my express my concerns as strongly as they are merited. I write to offend no one; i also dont write to please anyone. I am driven only by the Hindu nation. The rest is immaterial.

  16. Smt. Radha Rajan ji,

    Your strong and socially respectable arguments make everyone agree with them. Your argument about Gandhi’s experiment about his celibacy is not only strong and aligned with social morals, but seeks to relook the brand called Gandhi the “Mahatma”.

    Especially, your argument that asks why Gandhi experimented celibacy with another lady, while his wife is alive. Counter-arguments could say that Gandhi cannot do that, because he had already expressed to his wife his promise that he would never relate to her in any way that is not celibacy. However, this topic is going to be a never ending discussion, but one that should be pursued with open mind.

    That said, Gandhi is an enigmatic personality for those who have not given thought about the underlying understanding that Gandhi had about India and her methods. Your other arguments that say Gandhi’s methods have not provided any positive end result, and he is the only cause of India-Pakistan split are far from the facts recorded in history.

    Gandhi became accepted not only because of his expert communication methods, but also because of the successes his methods have achieved, which you refute strongly. From his fight against Salt tax, non-cooperation movement, and all other of his actions have provided very strong end results. That is why people were and are strongly attracted to him. He could prove that these methods can provide successful end results.

    The only issue that he miserably failed is in his attempt towards creating real peace loving muslims who are ready to give equal rights and respect to non-believers: which, he tried and failed because of his ignorance about Abrahamic faiths and their ethics. This failure should not make us overlook or ignore the distinguished achievements he brought to the Hindus.

    And, madam, your other argument that Gandhi is the only person and sole responsible for India-Pakistan split is also contrary to the historical findings. Gandhi has been against vivisection from the beginning, and it is people like Rajagopalachari and others who were for separating India into two. Separation of India is the most painful thing in Gandhi’s life as it is against the Hindu principle of co-existence.

    In addition, Gandhi is not the only person at the time who supported Khilafat movement that has created the split between Hindus and Muslims. Even great personalities like Tilak and others supported it.

    The methods that Gandhi followed are there in India from time immemorial, and all his ideas about Ramarajya, Village oriented society, Ahimsa, and others are only Indic. The only thing Gandhi did was to give name to those methods that have been practiced in India from unknown times. He coined the name Satyagraha for peaceful protest, and Ramarajya for the polity India should re-acquire.

    Will Durant, one of the most objective and great historian records that Gandhi’s arguments are that those of the Brahmins of India. Gandhi’s reluctance towards modernization and European political system are but the expression of Indians of those times. If we read Kanchi Mahaperiyava’s works “theivaththin kural”, we can see that Gandhi spoke the same arguments. Refusing Gandhi’s arguments, to me, equals to refuting what Maha periyava asked us to practice.

    Even Gandhi’s political guru, Sri Gopalakrishna Gokhale chose to advocate Ahimsa over violent methods even before Gandhi. Sadly, people only blame Gandhi, but ignore Gokhale.

    There are a lot of arguments in support of Gandhi that need to be told, and also the questions about his methods must be allowed.

    But, the real question is, can we use what is positive from any of the leaders of the past, and learn from their mistakes, and move ahead towards the “future” with the “learning” instead of negative emotions ?

    That is Hindutva.

    .

  17. Respected Smt. Radha Rajan,

    \\\\I cannot accept Gandhi in any form because the end result of his amateurish, egotistic and despotic political adventurism is vivisection of the Hindu bhumi. \\\\\\

    I had a myth that Sri Ramaswamy periar worked for the uplift of dalits which stands demolished by going through many articles in this web site. Similarly, many of your critical articles on Sri Mohandas karamchand Gandhi are in a way eye openers. I do not know whether they have been compiled and published. If they have not been compiled, better it is. Hinuds better not worship false messiahs cause the unfinished big agenda of achieving Akhand Hindusthan can not be so achieved by going in an exactly opposite direction.

    regards
    krishna kumar

  18. “Eclipse of the Hindu nation” by Radha Rajan Ji has exposed Gandhi for what he was. He was nothing more than an egocentric, selfish individual with weird sexual orientations.What about his wife? Did Gandhi ever consider her feelings when he conducted these weird experiments? This book should be a compulsory reading for every patriotic Indian. Let us also not forget his opinion of Blacks in Africa. He considered them Kaffirs (!!!) and was horrified when the Whites classified Indians in the same category as Blacks.
    But in liberal India, we are not allowed to talk about the shortcomings of Gandhi. Nathuram Godse’s drama show is still banned in Maharashtra.

  19. Having promised “vivisect me before you vivisect Bharat”, Hindus in undivided Punjab, Balochistan, Sindh and NWFP expected that the person who experiment with truth would hold on to it. If it was horrible that he did not hold on to it and agreed for partition of Hindusthan, the way country was partitioned, the way partition was handled, the way Gandhi Nehru duo handled Kashmir have landed the Nation what it is today.

    My family in NCR, my friends circle comprise of a good lot of kashmiri Hindus, Punjabi, Balochi, Sindhi and Multani Hindus settled down in Delhi. Kashmiri Hindus are the refugees driven out of their Homeland because of pseudo secularism in independent Hindusthan. The other group of people had to cross the Wagah border because of ethnic cleansing soon after partition.

    The plight of Kashmiri Hindus. The people have lost their homeland, their type of food, their dress, the sharda script in which Kashmiri language used to be written, even the language altogether. Whereas children from Tamizh, Telugu, Bengali and Oriya families could comfortably talk in their mother tongue, most of the Kashmiri children especially in and around delhi and NCR are not quite comfortable with their language. This is classic example of a civilization being wiped out slowly. The Kashmiri samaj against all odds try to reverse things, but thats an uphil task. Root cause, false mindset of British educated and brainwashed Nehru, who sort of discovered India out of Hindusthan, and his British Ideas of “fairplay” and Mohandas Karamchand Gandhi’s nod to the playboy who succumbed to the tricks of the vampire, the lady mountbatten.

    ratnakaraadhautapadaa.n himaalayakiriiTiniim.h .
    brahmaraajarshiratnaaDhyaa.n vande bhaaratamaataram.h
    praataHsmaraNametadyo viditvaa.a.adarataH paThet.h .
    sa samyagdharmanishhThaH syaat.h sa.nsmR^itaakhaNDabhaarataH

    Pratah Smaranam athava bharata bakthi sthothram ends with Samsmrutaa AkhandabharataH. In 80s when I visited Sangh Karyalaya in Nagpur, daily in the early morning, the inmates and guests who visit the karyalaya assemble together and recite this bharatha bakthi sthothra which ends reminding the reciter of Akhand Bharat.

    How the older and younger generation of families remember Karachi, Lahore, Gujranwala, Abbotabad,Peshawar,Multan, Hyderabad ( now in Baqi Sthan). The old people who lost everything during partition started afresh in Hindusthan and because of their hard work made fortunes in Hindusthan. Sitting leisurely, simply utter 1947, their memories go back, the shiver in body, the stare which try to recollect a brother, a sister, a mother, a father lost during partition, their havelis ( big houses), their temples. During one sathsangh, some snaps of Hinglaj matha yatra as performed in current day Pakisthan was shown to these people who recollected their memories. Even in the age old dry eyes, there were tears whispering among themselves in their language the things they have lost.

    The younger generation? taken care of by Gandhigiri, at large do not have much idea of their lost heritage. What is lost is almost a closed issue.

    For the Sangh Pariwar people, whereas Akhand Bharath is sort of fire covered under Ashes, the fire is still not doused. For the rest of Hindusthan, the legacy left by Gandhi Nehru duo is the order of the day which demands Hindus to befool the Hindu community at the cost of minorities.

    Although Hindus are sandwitched between secular goondagiri and Gandhigiri, their march towards Hindu Rashtra is slow but steady

    Aur, hum honge kamyab ek din; that we will be successful a day.

  20. அன்புள்ள கிருஷ்ணகுமார், ராமா, களிமிகு கணப்தி,

    ராதாராஜனின் காந்தி பற்றிய புத்தகம் இந்த தளத்தில் மிக விரிவாக ஏற்கனவே discuss பண்ணப் பட்டிருக்கிறது, இந்தக் கட்டுரை comments பகுதியில் –
    https://tamilhindu.com/2009/10/mahatma-gandhi-and-hindu-dharma/

    இதை முழுதாகப் படித்து விட்டு, நீங்கள் சொல்வதற்கு புதிதாக ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.

    இதில் அரவிந்தன் நீலகண்டன் சொல்கிறார்:

    aravindan neelakandan (author)
    4 October 2009 at 4:49 pm

    The book by Radha Rajan is a travesty of history. She tries to straight jacket history into her own ideological whims and fancies. She wants to demonize Gandhi and towards that end she finds faults with every contribution of history. Hinduthva as defined by Guruji Golwalkar, Nanaji Deshmukh and Pandit Deendayal Upadhyaya has no place for such narrow-minded distortion of history. Gandhi is an important and positive personality of Hindu history in the this and preceding century. Every RSS Swayam Sevak mentions his name along with other great sons and daughters of Mother India. Yes…he has done miscalculations with regard to Islamic fanaticism for which we have paid a heavy price. We can learn from his mistakes as well. H.V.Shesadri has done that analysis wonderfully in his Tragic story of partition without demonizing anyone. What Radha Rajan provides in the pages of her Eclipse of Hindu nation is neither history nor scholarship. It is ignorance peddled as perspective with an air of abject arrogance and nothing else. That is my view.

  21. What Aravindan Neelakantan is peddling are his deep-rooted prejudices and subconscious fears. He has not read the book, that much is certain; or if he has, he is intentionally misleading his captive audience. Dishonest intellect is worse than ignorance. What is under the scanner is Gandhi’s catastrophic political misadventure because he did not have the intelligence or the capacity to handle the British or the Muslims. And ultimately these two forces vivisected the Hindu bhumi because Gandhi with his despotic control of the INC did not allow the INC to respond effectively to the ascendant Muslim League or to the determined British government. Hindu society was kept in a state of unorganized impotent anger which expressed itself as individual acts of extreme courage or the courageous acts of small groups. This is my final intervention on the issue because the book must be read to be understood.

  22. About Hindutva, AN is placing it in the straitjacket of just three thinkers while this must include minimally at least Aurobindo, Savarkar and Hedgewar. AN cannot be the last prophet on what constitutes Hindutva and to say critiquing Gandhi is tantamount to ‘faulting every contribution of history’ makes little sense. Is AN saying Gandhi is the same as History and faulting Gandhi is to “fault every contribution of history” whatever that may mean? Aravindan Neelakantan is creating a brand of intellectualism which is intolerant and confined within very narrow margins of his own self-identity. This grand of intelelctualism may be well-informed but does not reflect an evolved mind.

  23. அன்புள்ள இராதா இராசன் அம்மையாருக்கு,

    இந்தியா என்றெல்லாம் இத்தனை பிரியமாக பேசும் நீங்கள் ஏன் ஆங்கிலத்திலேயே பேசுகிறீர்கள் எழுதுகிறீர்கள்? ஏன் தமிழில் எழுதுவதோ ஒழுங்காக பேசுவதோ இல்லை? வேறு வேறு பாசைகள் கற்பாய் நீ வீட்டுபாசை கற்கிலாய் என்று முண்டாசு பாட்டுக்காரன் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. அம்மணி நீங்கள் சொல்கிற இந்து பூமி எப்போதிருந்து அரசியல் ரீதியாக ஒரு நாடாக உருவானது? சொல்ல முடியுமா? பண்பாட்டு அடிப்படையில் இந்தியா ஒரு நாடாக இருந்தது சரி. முதன் முதலில் பிரிவினைக்கு ஒத்துக் கொண்டு அதை நோக்கி காந்தியை மனரீதியாக தயார்படுத்திய ராசாசியை நீங்கள் எந்த கோதாவில் சேர்ப்பீர்கள்? அதை குறித்து உங்கள் புத்தகத்தில் ஒரு வார்த்தை கூட இல்லையே ஏன்? அநீ கோல்வல்கர், தீனதயாளர் அப்புறம் தேஷ்முக் என்கிறவர்களை சொல்கிறார் உடனே நீங்கள் ஏன் சாவர்க்கர் ஸ்ரீ அரவிந்தர் (அதில் ஸ்ரீ யை கவனமாக தவிர்த்த உங்கள் சாக்கிரதையை பாராட்டுகிறேன்) கெட்கேவார் இவர்களை சேர்க்கவில்லை என்கிறீர்கள். சாவர்க்கரின் இந்துத்துவத்தை நீங்கள் ஏற்கிறீர்களா அம்மணி? என்றால் சாதிகள் இல்லை என்று சொல்கிறது அவரின் இந்துத்துவம். தலித்தை சங்கராச்சாரியார் ஆக்க வேண்டாம். ஆனால் சங்கராச்சாரியாராக ஒரு தலித்தை நியமிக்க குரல் கொடுத்து உங்கள் சாவர்க்கரிய இந்துத்துவத்தை நிரூபியுங்கள். கோல்வல்கரின் இந்துத்துவம் கெட்கேவாரின் இந்துத்துவத்தை உள்ளடக்காதது என்று நினைக்கிற உங்கள் அறிவு சுடர் விட்டு பிரகாசிக்கிறது. கொஞ்சம் உங்கள் மனசிறைகளில் இருந்து வெளியே வாருங்கள்.

    அன்புடன்
    மக்கு மாக்கான்.

  24. //…while this must include minimally at least Aurobindo, Savarkar and Hedgewar. …//

    தமிழில் அரவிந்தர், சாவர்க்கர், மற்றும் ஹெட்கேவார் பற்றி அதிகம் எழுதியவர் யாரென்று கூகிளில் தேடினேன்.

    திண்ணை, தமிழ்பேப்பர், உட்பட பல்வேறு இணையதளங்களில் இவர்கள் மூவர் பற்றியும் அதிகமாக எழுதியவர் பெயர் “அரவிந்தன் நீலகண்டன்” என்று வருகிறது.

    அந்த அரவிந்தன் நீலகண்டன் என்பவரிடம் இருந்து இந்த AN நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

    AN என்பவர் சாவர்க்கர், அரவிந்தர், ஹெட்காவார் போன்றோரை ஒதுக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  25. ஸ்ரீமான் க்ருஷ்ண குமார்,

    என் பதிலைக் கண்டு ஏற்கனவே மிகுந்த மனவருத்தத்துடன் இருக்கும் நீங்கள் மேலும் மனம்வருத்தம் கொள்ள ஆசைப் படுகிறேன்.

    நீங்கள் கீழ்க்கண்டவாறு சொல்லி இருந்தீர்கள்:

    //காந்தி சுடப்பட்டு இறக்குந்தருவாயில் கூட ராம நாமம் சொல்லி இறந்தார் என்பது எனக்கு ஆன்மீகமாய் முக்யமான விஷயம். குலசேகர மன்னன் , “ப்ராண ப்ரயாண சமயே கப வாத பித்தை:” என்ற படி இறக்கும் தருவாயில் நெஞ்சடைக்க உன் நாமம் சொல்ல இயலுமோ இயலாதோ, இன்றே என் மனதாகிய ராஜஹம்சத்தில் இருப்பாய் கண்ணா என்று சொல்வார். ராம நாமம் ரூடமாய் ஹ்ருதயத்தில் இருந்ததால் மஹாத்மா காந்திக்கு ராம நாமம் சுடப்பட்ட பின்னும் வந்தது அவர் அருளாளர் என்று எனக்கு அவர் மீது மரியாதை அவசியம் உண்டு.//

    சுடப்படும்போது காந்தி “ஹே, ராம்” என்றெல்லாம் சொல்லவில்லை. அது காங்கிரஸ்காரர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதை.

    இனி நீங்கள் காந்தியை முற்றிலும் வெறுக்கலாம். வெறுப்பது என்று முடிவு செய்த பின்னர் ஆன்மீகத்தில் உசத்தி அரசியலில் தாழ்த்தி என்று பார்க்க வேண்டிய தொந்தரவு இல்லை.

    உங்களின் இந்தப் பாமரப் புரிதலுக்கு நான் உங்களைக் குறை சொல்லக் கூடாது. அது உங்கள் தப்பு இல்லை. தமிழ் இந்து இணையதளத்தின் தப்பு.

    காந்தி என்பவரின் சாதனைகள் என்ன, அவர் எந்த அளவு இந்துத்துவவாதியாக இருந்தார் என்பவை பற்றிப் பேசாத தமிழ் ஹிந்து இணையதளத்தைக் கண்டிக்கிறேன். இந்த உண்மைகள் தெரிந்தும், இவை குறித்துக் கட்டுரைகள் எழுதாத சோம்பேறிகளை அதைவிட அதிகமாகக் கண்டிக்கிறேன். கோபம் வருகிறது. என் நரம்புகள் புடைக்கின்றன.

    பிடியுங்கள் என் சாபத்தை !

    “முருங்கை மர வேதாளம் உங்கள் தோள்களில் தொங்கட்டும்.”

    தொங்கிக்கொண்டே “காந்தி பற்றிய உண்மையான பதில் தெரிந்தும், பதில் எழுதாவிட்டால் உங்கள் மண்டை சுக்கு நூறாக வெடிக்கும்” என்று பயமுறுத்தட்டும்.

    அப்போதாவது காந்தி எனும் உன்னத ஹிந்துத் தலைவரைப் பற்றி நீங்கள் எழுதுவீர்களாக.

    .

  26. மரியாதைக்குரிய சிந்தனையாளரான அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் மீது ராதா ராஜன் என்பவர் கூறும் பழிகளுக்கும், திட்டுகளுக்கும் என்ன ஆதாரம்? ராதா ராஜனின் அறியாமையையும் அவர் எவ்வளவு அகம்பாவம் பிடித்தவர், arrogant ஆனவர் என்பதையும் தான் அது காட்டுகிறது. ரொம்ப மோசமான personal attack. இதனை ஆசிரியர் குழு அனுமதித்திருக்க கூடாது.

    நான் கொடுத்திருந்த பழைய link அவர் இப்போ தான் படிக்கிறார் என்று தெரிகிறது. அவரது பொய்களை அப்போதே தோலுரித்து பணால் ஆக்கி விட்டார்கள் என்ற கடுப்பில் தான் இவ்வாறு எழுதுகிறார் என்று நினைக்குறேன்.

    இவர்கள் இருவரது எழுத்துக்களையும் நான் follow செய்கிறேன்..

    திரு அரவிந்தன் அவர்கள் எழுதியுள்ள நம்பக் கூடாத கடவுள், Breaking India, இன்னும் பல கட்டுரைகள் அவரது அறிவையும் மேதாவிலாசத்தையும் உழைப்பையும் காட்டுகின்றன.. ரிக்வேதத்திலிருந்து டார்வின் வரை, சங்க இலக்கியத்திலிருந்து சங்க பரிவார் வரை அவரால் ஆழமாக பேச முடியும். அவர் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் இந்து விரோத அரக்கர்களை அழிக்கும் வஜ்ராயுதம் மாதிரி! தேவி சரஸ்வதியின் பூரண ஆசி அவர்மீது இருக்கிறது.

    ராதாராதனால் அதிகபட்சம் முடிந்த செயல் திட்டிக் கொண்டே இருப்பது. அதுவும் ஹிந்து மதத்திற்கு நன்மை செய்பவர்களைத் தான் விசேஷமாக குறிபார்த்து திட்டுவார். காந்திஜி, சுவாமி தயானந்த ச்ரஸ்வதி, வாஜ்பாய், பாரதிய ஜனதா, அண்ணா ஹசாரே, அரவிந்தன் நீலகண்டன் என்று எல்லாரையும் விதவிதமாக திட்டிக் கொண்டே இருப்பார்.

  27. //ராதாராதனால் அதிகபட்சம் முடிந்த செயல் திட்டிக் கொண்டே இருப்பது. //

    திருமதி. ராதா ராஜனின் கருத்துகலுடன் உடன்பாடு இல்லை என்றாலும், அவரது தீர்க்கமான உறுதியான வாதங்களையும், தெளிவான குறிக்கோள்களை எந்த வித சமரசங்களும் இல்லாமல் எடுத்து வைக்கும் நேர்மையையும் யாராலும் மறுக்க முடியாது.

  28. Dear Friends

    Radha Rajan’s book is completely based on Gandhis own writings and speeches which are documented in 100 volumes as “Collected Works of Mahatma Gandhi”. As a friend living close by, I have personally watched with amazement the tireless efforts and concentrated hard work which she put for years to complete this magnificent work. That the book has gone for a third print, without even an iota of Advertisement and Sales Promotion, proves its success and acceptance.

    When everything has been taken from Gandhi’s own words, and quoted accordingly in the book too, where is the question of distortion? The book is an honest analysis of Gandhi’s politics from a Hindu nationalistic perspective.

    Almost all the media houses have got copies of the book immediately after its launch and no one had the courage to review it even critically. That itself shows that the book is filled with facts and not distortions.

    If the well-read Aravindan feels it is distorted, he can join Jayamohan and both of them, with their vast knowledge of history, could come out with a book in the form of a befitting rebuttal to Radha Rajan. That is the right way of doing things. I hope both of them will consider my suggestion in the right spirits.

    Until then, it would be better for minions like Makkus, Makkaans and Balas to keep quiet and refrain themselves from posting personal slander against a well respected writer and nationalist like Radha Rajan.

    Here is a review of Radha Rajan’s book by a balanced, neutral and one of the most respected writers, Dr.Koenrad Elst.

    https://bharatabharati.wordpress.com/2011/05/25/questioning-the-mahatma-koenraad-elst/

    Hope Dr.Elst’s understanding will not be termed “distorted”!

    Thanks

    B.R.Haran

    (Edited and published)

  29. அன்பார்ந்த ஸ்ரீ களிமிகு கணபதி,

    \\\\\\இந்த உண்மைகள் தெரிந்தும், இவை குறித்துக் கட்டுரைகள் எழுதாத சோம்பேறிகளை அதைவிட அதிகமாகக் கண்டிக்கிறேன். கோபம் வருகிறது. என் நரம்புகள் புடைக்கின்றன. \\\\\\\

    cool !

    \\\\\\சுடப்படும்போது காந்தி “ஹே, ராம்” என்றெல்லாம் சொல்லவில்லை. அது காங்கிரஸ்காரர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதை. \\\\\\

    சுடப்பட்ட பின் ஸ்ரீ காந்தி ராம நாமம் சொல்லி இறந்தார் என்று எழுதியிருந்தேன். இது பரவலாக நம்பப்படும் ஒரு கருத்து. எனது கருத்து கூட நம்பிக்கை தான்.அதில் ஒரு விகுதி வேறு சேர்த்து ராம நாமம் எப்படி சொன்னார் என்று நம்பப்படுகிறது என்று எழுதியுள்ளீர்கள். நன்று

    \\\\\உங்களின் இந்தப் பாமரப் புரிதலுக்கு\\\\\\

    யார் யார் இப்படி பாமரர்களாக புரிந்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

    \\\Gandhiji’s death was also divine as his last words were ‘Ram’. \\\\

    https://www.iiramii.net/katha604_manas_mahatma.html – கதாவாசக் ஸ்ரீ மொராரி பாபு அவர்களின் இணையதளம்.

    https://en.wikipedia.org/wiki/Talk%3AMahatma_Gandhi/Dying_words_controversy

    விக்கி தளம் முழுதும் படியுங்கள். இது ஒரு விவாதத்திற்குறிய கருத்து என்று சொன்னீர்களானால் சரி.

    விக்கியில் விவாதத்தில் உள்ளது. சுடப்பட்டபோது ஸ்ரீ காந்தியைச்சுற்றி அவரது மூன்று உதவியாளர்கள் கூட இருந்ததாக சொல்லப்படுகிறது. மனு மற்றும் ஆபா என்ற இரு சிறுமியர் மற்றும் கல்யாணம் என்ற ஒரு நபர். இரு சிறுமியர்களும் அவர் ராம நாமம் சொல்லி இறந்தார்கள் என்று சொன்னதாகவும் ஸ்ரீ கல்யாணம் அவர் சாகும்போது ஏதும் சொல்லவில்லை என்றும் மற்றபடி அங்கிருந்த சாக்ஷிகள் அபிப்ராயம் ஏதும் சொல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆதார பூர்வமாக மறுப்பதற்குப் பதில் நம்பிக்கைகளுக்கு விகுதிகள் மட்டும் சேர்ப்பது தரம் தாழ்ந்த விவாதம். நீங்கள் ஆதாரம் ஏதும் அளிக்காத பக்ஷத்தில், “அது காங்கிரஸ்காரர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதை” என்று சொல்வதை தங்கள் சொந்தக்கருத்தாக மட்டும் ஏற்கலாம்.

    ஆப்-ஏ-ஜம் ஜம் என்ற முஸல்மான் களுக்கான புனிதநீர்க்கூபத்தை நீங்கள் கலைநயமிக்ககுளம் என்று சொல்லி நீரைக் கழிவு நீராக்கி இட்ட பதிவை மறுப்பதற்கு சரியான ஆதாரம் முன் வைக்கப்பட்டுள்ளது. கருத்தை மறுத்துப்பேச ஆதாரங்கள் முன் வையுங்கள்.

    ஸ்ரீ அன்னா ஹஜாரே அவர்கள் எல்லா தொலைக்காட்சிகளில் தான் மதிப்பது ஸான்ஸத் என்றபடிக்கு பாராளுமன்றத்தின் உயர்வையேயன்றி ஸன்ஸத் என்ற படிக்கு ஜனப்ரதிநிதிகளுக்கல்ல என்று சொல்லியும் தாங்கள் “அன்னா ஹஸாரேவின் அடுத்த போராட்டம் de-centralizationஐ நோக்கியதாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் என்று நான் யூகிக்கிறேன்” என்று சொந்தக்கருத்தை சொல்வது போதாது என்று அதற்காக தேசவிரோதக் கருத்துகள் பரப்பும் அருந்ததி ராயை தேசபக்தர் ஸ்ரீமதி ராதாராஜனுடன் ஒப்பிடுவதை என் சொல்வது.

    \\\\\\\\\\\\\\\\நான் தெரிவித்த கருத்துக்கள் தரம் தாழ்ந்தவை அல்ல க்ருஷ்ணக்குமார்.\\\\\\\\\

    \\\\\\\ஸ்ரீமான் க்ருஷ்ண குமார்,

    என் பதிலைக் கண்டு ஏற்கனவே மிகுந்த மனவருத்தத்துடன் இருக்கும் நீங்கள் மேலும் மனம்வருத்தம் கொள்ள ஆசைப் படுகிறேன். \\\\\\\\\

    \\\\\\\\\பிடியுங்கள் என் சாபத்தை !

    “முருங்கை மர வேதாளம் உங்கள் தோள்களில் தொங்கட்டும்.”

    தொங்கிக்கொண்டே “காந்தி பற்றிய உண்மையான பதில் தெரிந்தும், பதில் எழுதாவிட்டால் உங்கள் மண்டை சுக்கு நூறாக வெடிக்கும்” என்று பயமுறுத்தட்டும்.

    அப்போதாவது காந்தி எனும் உன்னத ஹிந்துத் தலைவரைப் பற்றி நீங்கள் எழுதுவீர்களாக.\\\\\\\\

    There is a certain decorum in which discussions are held in sangh baithaks and trained in Sangh, I always try to put forth my discussions in a dignigied way. தரம் தாழ்ந்த விதத்தில் கருத்துக்களைப் பரிமாறுவதில் என்னால் தங்களுடன் போட்டியிட இயலாது. தங்கள் கருத்துக்கள் தரம் தாழ்ந்தவை அல்ல என்று தாங்கள் சொல்லியுள்ளீர்கள். என்னுடைய கருத்துக்களை நான் பகிர்ந்த முறையையும் தாங்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த முறையையும் ஒருங்கே படிக்கும் வாசகர்களிடம் தரம் தாழ்ந்த விதத்தில் கருத்துப்பரிமாற்றம் செய்வது யார் என்பதை விட்டு விடுகிறேன்.

    பூஜனீய ஹொ.வெ.சேஷாத்ரிஜி அவர்களின் “tragic story of partition” மற்றும் ஸ்ரீமதி ராதா ராஜன் அவர்களது பல வ்யாசங்களைப் படித்து அகண்ட பாரதம் என்ற கோட்பாட்டில் சங்கம் மூலமாக உறுதிப்பாடு பெற்ற எனக்கு நாட்டைப்பிளந்த காந்தி என்ற அரசியல் வாதியை ஏற்க வேண்டும் என்ற கருத்துக்களை முன் வைக்க விரும்புவோர் ஆதார பூர்வமாக ஸ்ரீமதி ராதாராஜன்அவரது கருத்துக்களை மறுக்கலாமே.

  30. // திருமதி. ராதா ராஜனின் கருத்துகலுடன் உடன்பாடு இல்லை என்றாலும், அவரது தீர்க்கமான உறுதியான வாதங்களையும், தெளிவான குறிக்கோள்களை எந்த வித சமரசங்களும் இல்லாமல் எடுத்து வைக்கும் நேர்மையையும் யாராலும் மறுக்க முடியாது. //

    கிரிஷ், ஆங்கிலத்தில் கடினமான வார்த்தைகளைப் போட்டு எழுதுவதால் வாதம் “தீர்க்கமாகவும் உறுதியாகவும்” ஆகிவிடாது நண்பா.. ராதா ராஜன் குறிக்கோள்களில் என்ன “தெளிவை” பார்க்கிறீர்கள்??

    காந்தி மட்டுமல்ல, Hindu Dharma Acharya Sabha பற்றி, அண்ணா ஹசாரெ பற்றி அவர் எழுதியிருப்பதைப் பாருங்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உட்பட எல்லா மேற்கத்தியர்களையும் ஒரே Brush வைத்து White Christians என்று இனரீதியாக வெறுத்து எழுதுவார் (ஆனால் தமிழ்ஹிந்து தளத்தில் கூட இங்கிலீஷில் மட்டும் தான் எழுதுவார் !!!!) அவர் எழுதிய கட்டுரைகளை ஒரு கணக்கு எடுத்துப் பாருங்கள் – Islamists, கிறிஸ்த மிஷனரிகள், மாவோயிஸ்டுகள், காங்கிரஸ் போன்ற ஹின்து விரோதிகளைத் தாக்குவதை விட, ஹிந்து camp ல் இருக்கும் உள்குழுக்களைத் தான் அதிகமாகத் தாக்கியிருப்பார்.. இதற்குப் பெயர் தான் தெளிவா?

  31. காந்தி நாட்டை பிளந்தார் என்பதற்குதான் நீங்கள் ஆதாரம் வைக்க வேண்டும் காந்தி நாட்டை பிளந்தார் என்றால் எபப்டி? அன்றைக்கு இராசாசி இந்திய நாட்டை பிளக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். காந்தியின் சிந்தனையில் முக்கிய தாக்கம் கொண்டவர் இராசாசி காந்தியும் இராசாசியும் சேர்ந்து திட்டம் போட்டு நாட்டை துண்டாடினார்களா? கிருஷ்ண குமார் போல வேண்டுமென்றே அளவுக்கு அதிகமாக வடமொழியை கலந்து தமிழை கொலை செய்து கூடவே வடமொழி மீது நடுநிலையாளருக்கும் எரிச்சல் உருவாக்குவோருக்கு இராதாஇராசன் போன்றவர்களை பிடிப்பது ஆச்சரியம் தரவில்லை. இந்தியாவின் உச்ச நீதிமன்றமே கோவிலில் தாயக்கட்டை உருட்டுவதற்கு அல்லது சோழிகள் உருட்டுவதற்கு கட்டுபட்டு நடக்க வேண்டும் என்கிற தோரணையில் கட்டுரைகளை எழுதி தள்ளும் பி.ஆர்.அரன் என்கிறவருக்கு இராதாஇராசன் மீது பரிவு வருவதும் ஆச்சரியமளிக்கவில்லை. ஆனால் இவர்களெல்லாம் ஏதாவது தாம்பிராஸ் போல சாதி அமைப்புகளில் சேர்ந்து கொள்ளலாம். இந்து என்று சொல்லி இந்துக்களின் கழுத்தை அறுக்காமல் இருக்கலாம். குறைந்த பட்சம் தமிழ் இந்துக்களின் கழுத்தை.

  32. உங்களைப் போன்ற ஆழமாகச் சிந்திப்பவர்கள் இருக்கும்வரை இந்து தர்மத்துக்கு வேறு கவலைகளே தேவையில்லை !!

    .

  33. Rama, irasasi is red tamil by a green tamilan for Rajaji. Green is also the prefered adjective in red tamil for falsehood.

  34. India To Honour Man Who Bared Truth Of Jallianwala Massacre By The British

    NEW DELHI – Little is known of Pandit K. Santanam, the man who first
    bared the horrors of Jallianwala Bagh massacre by the British to the
    world and who, despite being a conservative Iyengar from Tamil Nadu,
    left his native place and made Lahore his permanent home. This August
    25, the Department of Posts will release a commemorative stamp in
    Santanam’s memory, 62 years after he passed away

    https://thelinkpaper.ca/?p=9444
    Those who have expressed strong anti-brahmin and anti-North India sentiments in their comments must ponder over their neo Justice Party tendencies

  35. அன்பார்ந்த ஸ்ரீ களிமிகு கணபதி, சொல்ல வேண்டிய சில விஷயங்கள் விடுபட்டுப்போனமையால் அவற்றை தொடர்கிறேன்.

    \\\\இனி நீங்கள் காந்தியை முற்றிலும் வெறுக்கலாம். வெறுப்பது என்று முடிவு செய்த பின்னர் ஆன்மீகத்தில் உசத்தி அரசியலில் தாழ்த்தி என்று பார்க்க வேண்டிய தொந்தரவு இல்லை.\\\\\

    சிரிப்பு தான் வருகிறது. நான் ஸ்ரீ காந்தி என்ற வ்யக்தியின் ராஜநீதி சார்ந்த பல கருத்துக்களை ஏற்காததால் நான் அவரை வெறுத்தே ஆக வேண்டும் என்பது தங்கள் அவா மட்டுமே. வாஸ்தவம் அது அல்ல. என் உத்தரங்களில் காந்தியை நான் வெறுக்கிறேன் என்று எங்கே பதிவு செய்துள்ளேன் என்று தாங்கள் சுட்டினால் க்ருதார்த்தனாவேன். மாறாக சங்கத்தில் முந்தைய ப்ராதஸ்மரணத்திலும் பின்னர் ஏகாத்மதா ஸ்தோத்ரத்திலும் ஸ்வயம்சேவகர்களாகிய நாங்கள் நித்தம் ஸ்ரீ காந்தியை ஸ்மரிக்கிறோம் என்று தெளிவு படுத்தியுள்ளேன். மேலதிகமாக மேற்கண்ட இரண்டு ஸ்தோத்ரங்களும் அகண்ட பாரதம் என்ற ஸ்மரணையுடனேயே நிறைவுறுகிறது என்ற படிக்கு அகண்ட பாரதம் மீட்க இடைஞ்சலாக இருக்கும் கருத்துக்களை களையெடுப்பதும் ஸ்வயம் சேவகர்களின் பணியாகிறது என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. சங்கப்பயிற்சி பெற்றவர்கள் தனிமனிதர்களை ஸ்துதி செய்வது மற்றும் நிந்திப்பது என்பதிலிருந்து விலகியிருப்பார்கள். சங்க நிகழ்ச்சிகளில் பெருந்தகைகள் மற்றும் சான்றோர்கள் பேசும்போதோ அல்லது பேசி முடித்த பின்னரோ கை தட்டல் என்ற வழக்கம் கூட கிடையாது. எனது சில உத்தரங்களில் “தனி நபர் ஸ்துதி” என்ற தோஷத்தை நீங்கள் ஆரோபிக்கலாம் தனி நபர் நிந்தை என்ற தோஷத்தை அல்ல. என்னால் விமர்சிக்கப்படுவது கருத்துக்கள் மட்டுமே. அதுவும் மட்டு மீறாது. தங்கள் உத்தரங்களிலிருந்து தங்களுக்கு சங்க பரிசயம் இல்லையோ என்ற சம்சயம் எனக்குள்ளது. சங்கம் பற்றி நான் சொன்ன விஷயங்களில் பிழை இருக்கும் என்று நீங்கள் எண்ணினால் சங்க பரிசயம் உள்ள சஹ்ருதயர்களிடம் சரிபார்த்துக்கொள்ளலாம்.

    ப்ராதஸ்மரணத்தில் ஸ்ரீ காந்தி பற்றி

    மஹாமனா மாளவியோ மஹாத்மா காந்திரேவச

    அகண்ட பாரதம் பற்றி

    ப்ராதஸ்மரணம் ஏதத் ய: விதித்வா அதரத: படேத்
    ஸ ஸம்யக் தர்மநிஷ்டஸ்யாத் ஸம்ஸ்ம்ருதா அகண்ட பாரத:

    எண்பதுகளின் கடைசியிலிருந்து ப்ராதஸ்மரணத்திற்கு பதிலாக இப்போதெல்லாம் சொல்லப்படும் ஏகாத்மதா ஸ்தோத்ரத்தில் ஸ்ரீ காந்தி பற்றி

    தாதாபாயீ கோபபந்து: திலகோ காந்திராஹ்ருதா:

    அகண்ட பாரதம் பற்றி :

    இதம் ஏகாத்மதா ஸ்தோத்ரம் ச்ரத்தயா ய: ஸதா படேத்
    ஸ ராஷ்ட்ரதர்ம நிஷ்டாவான் அகண்டம் பாரதம் ஸ்மரேத்

    ப்ராதஸ்மரணத்தில் ஸ்ரீ காந்திக்கு மஹாத்மா என்ற விகுதியுள்ளதே ஏகாத்மதா ஸ்தோத்ரத்தில் மஹாத்மா என்ற விகுதி கழட்டி விடப்பட்டுள்ளதே என்ற குறிப்பில் இறங்கி விடவேண்டா. ஸ்ரீமதி ராதா ராஜனை அருந்ததி ராய் அவர்களுடன் தவறாக ஒப்பிட்டாகி விட்டது போதும். அது போல் சங்கத்தை காந் தீய வாதிகள் ஒப்பிடுவது போல் அன்ய ஆப்ரஹாமிய ஸம்ப்ரதாயவாதி இயக்கங்களுடன் ஒப்பிட இறங்கிவிடக்கூடாது.

    ஒவ்வொரு பாதத்திற்கும் எட்டெட்டு அக்ஷரங்களாக நான்கு பாதங்களாக நாலெட்டு முப்பத்திரண்டு அக்ஷரங்களால் ஆன அனுஷ்டுப் என்ற எளிய சந்தஸில் (செய்யுள் நடையில்) கடைசீ சில அடிகள் தவிர்த்து ஏகாத்மதா ஸ்தோத்ரம் செய்யப்பட்டுள்ளது என்பது கற்றறிந்த சான்றோர் கருத்து. மஹாத்மா என்ற விகுதி சேர்க்கையில் சந்தஸ் அடிபட்டுப்போகும். எப்படி அலகிட்டு பிரித்துப்பார்க்கையில் யாப்பிலக்கணப்படி செய்யப்பட்ட செய்யுட்களில் தளை கெடலாகாதோ அப்படி. அவ்வளவே.

    விஷயம், மனிதர்களுடைய நல்ல கருத்துக்கள் எப்படி போற்றப்பட வேண்டுமோ அதுபோன்றே தவறான கருத்துக்கள் நிர்தாக்ஷண்யமாக நிராகரிக்கப்பட வேண்டும். முப்பது ஸ்லோகங்களால் ஆன முந்தைய ப்ராதஸ்மரணத்தின் துவக்கத்தில் ஸப்த சிரஞ்சீவிகள் ஸ்மரிக்கப்படுகிறார்கள். அவர்களில் முதல் சிரஞ்சீவி ஸ்ரீ அஸ்வத்தாமா. தூங்கிக்கொண்டிருந்த யுவ பாண்டவர்களை கொன்றது, உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசுவை சேதிக்க அஸ்த்ரம் விட்டது இதுபோன்ற துஷ்க்ருத்யங்களுடன் சம்பந்தப்பட்ட வ்யக்தி. இவரை ப்ராதஸ்மரணத்தில் ஏன் ஸ்மரிக்கிறோம் என எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லலாம். ஆனால் அவரை ஸ்மரிப்பதால் அவருடைய ப்ரூண ஹத்தி போன்ற துஷ்க்ருதயங்களையும் ஜீர்ணம் செய்ய வேண்டும் என நினைப்பது முற்றிலுந்தவறு. அது போன்றதே ஸ்ரீ காந்தி என்ற வைஷ்ணவர் விஷயத்திலும்.

    வைஷ்ணவர் என்று சொல்லிய படி ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் போற்றுவது அவரது ராம நாம நிஷ்டை. குலசேகராழ்வார் முகுந்தமாலையில் மரணத்தருவாயில் நெஞ்சடைக்கயில் பகவன் நாமம் சொல்லவருமோ வராதோ ஆகையின் இப்போதே என் மனமாகிய ராஜஹம்சத்தில் வீற்றிருப்பாயாக என கண்ணனிடம் இறைஞ்சுகிறார். அதன் கருத்து என்றென்றும் இறைவன் திருநாமம் சித்தத்தில் இருக்க வேண்டும் என்பதே. வாழ்நாள் முழுதும் நாம நிஷ்டையில் இருந்த ஒரு வ்யக்திக்கு மரணத் தருவாயில் இறைவன் திருநாமம் வாயில் வந்ததா அல்லது வரவில்லையா என்பது சர்ச்சையில் இருக்கத் தேவையில்லாத ஒரு விஷயம் என்பது என் அபிப்ராயம்.

    ஸ்ரீ காந்தியின் கடைசீ இருநூறு நாட்களின் நிகழ்ச்சிகளைத்தொகுத்து “ஹிந்து” தினசரியில் வெளியிட்ட ஸ்ரீ ராமமூர்த்தி அவர்கள் ஸ்ரீ காந்தி அவர்கள் ஸ்ரீ ஜெய்சுக்லால் காந்தி என்பவருக்கு எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு அதில் எழுதியதாக தெரிவிப்பது

    “I have expressed my wish at prayer that, should someone kill me, I should have no anger in my heart against the killer, and that I should die with Rama Nama on my lips”

    பூஜ்ய மொராரி பாபு அவர்களின் கதைகளில் காந்தியின் ராம நாம நிஷ்டை பற்றி நான் கேட்டுள்ளதால் அவர் இறக்குங்கால் ராம நாமம் சொல்லி இறந்தார் என்ற அவரின் கருத்தையும் பாமரத்தனமாக ஏற்றிருக்கலாம். அக்கருத்து தவறு என்றால் ஆதாரத்துடன் சந்தேகத்திற்கிடமின்றி நிருபிக்கப்பட்டால் ஏற்கப்பட வேண்டியதே.

    மற்றவர்களிடம் கற்பனை செய்து அத்யாரோபம் செய்யும் விஷயம் தவிர்த்து தலித்துகள் விஷயத்தில் உங்கள் அக்கறைகளை ச்லாகிக்கிறேன். ஆனால் உங்கள் ஆதர்சரான ஸ்ரீ காந்தி என்ற ராஜநீதிக்ஞரின் நிலை வேறு. ஸ்ரீ காந்தி 1946ம் வருஷம் constituent assembly க்கு தன்னையும் ஒரு ப்ரதிநிதியாக கருத விண்ணப்பம் செய்த “மெஹ்தார்” (துப்புறவு தொழிலாளி) என்ற ஜாதியை சேர்ந்த தலித்துக்கு எவ்வளவு க்ருத்ரிமமாக உத்தரம் கொடுத்துள்ளார் என்பதை ஸ்ரீமதி ராதா ராஜன் தனது வ்யாசத்தில் பதிவு செய்துள்ளார். அது கீழே. முக்யம் கீழே கொடுக்கப்பட்டவையில் ஒரு அக்ஷரம் கூட ஸ்ரீமதி ராதாஜி அவர்களுடையது அல்ல. ஆதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அக்ஷரமும் ஸ்ரீ காந்தி அவர்களுடையது.

    The writer has paid me a left-handed compliment and that perhaps in order to teach me how to express my love for the B***i, otherwise known as Mehtar. The writer is a discontented graduate, setting no example or a bad example to B***s. He has isolated himself from them, though he professes to represent them. He will certainly become my teacher if he will be a graduate in the art of being a good B****i. I very much fear that he does no scavenging himself; he does not know what scientific scavenging is. If he became an expert in the art, his services would be wanted by all the cities of India. When B****s really rise from the slumber of ages, they will successfully sweep the Augean stables everywhere and India will be a pattern of cleanliness and there will be in India no plague and other diseases which are the descendants of filth and dirt.

    இதன் ஆதாரம் “Left-handed Compliment, Bombay, July 6, 1946, Harijan 14-7-1946, CWMG Vol. 91, pp 241-43”

    சரி. சங்கம் ஸம்ப்ரதாய வாத இயக்கம் என கூசாது புறஞ்சொல்லும் காந் தீய வாதிகள் சங்கத்தில் ஈடுபடுவோரின் தலித்துகள் பற்றிய நிலை என்ன என்பதறிவது நன்று. சங்கப்பயிற்சி பெறுவோரில் ஹிந்து ஐக்யதை எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது?

    ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் போஜனத்தின் போது அனைத்து ஸ்வயம்சேவகர்களும் ஒன்றாக போஜனம் செய்ய வேண்டும்(ப்ராம்ஹணர், செட்டியார், கவுண்டர், தலித் போன்ற அனைத்து ஜாதியினரும்- சங்கத்தில் யார் என்ன ஜாதி என்ற பேச்சுக்கள் கிடையாது) சங்கச் சான்றோர் வகுத்தபடி ச்ருதியிலிருந்து (வேதம்) எடுக்கப்பட்ட மந்த்ரம் போஜன காலத்தில் எல்லோரும் சொல்ல வேண்டும். தைத்ரீய சம்ஹிதை ப்ரம்மானந்த வல்லியின் ஆரம்பமாகிய “ஸஹனா வவது” எனவாரம்பிக்கும் ரிக் அது. யார் என்ன ஜாதி என பார்க்காது அனைத்து ஸ்வயம் சேவகர்கட்கும் ஒருங்கே பயிற்றுவிக்கப்பட்டு போஜனத்தின் முன் எல்லோரும் ஒருங்கே சொல்லும் மந்த்ரம் அது. நான் திருப்பராய்த்துரையில் சங்க சிக்ஷாவர்கவில் பயிற்சி பெற்ற போது ஒருநாள் இருநாள் என்றில்லாது முழுதாக ஒரு மாதம் முழுதும் அனைத்து ஹிந்துக்களுடன் இணைந்து ஓதிய மந்த்ரம்.

    ஒருவேளை தங்களுக்கு இதை விட அதிகமாக அனைத்து ஹிந்துக்களுக்கும் பணி செய்யும் வாய்ப்பு கிட்டியிருக்கலாம்.

    பின்னும், இப்படி ஒரு சங்க ஸம்ஸ்காரம் உள்ள எனக்கு ஸ்ரீ காந்தி அவர்களின், எனது ஹிந்து சஹோதரரான தலித்தைப் பற்றிய க்ருத்ரிமமான மேற்கண்ட கருத்தை அறவே ஏற்க இயலாது. அதுவும் “bh…” என்று தலித் சஹோதரர்கள் ஏற்கவொண்ணாத மற்றும் இழிவாய்க் கருதும் சொல்லை ஸ்ரீ காந்தி உபயோகம் செய்தது புரையோடிய புண்ணில் உப்பைத் தேய்ப்பதற்கு சமானம். காந் தீய வாதத்தை எப்படியும் ஏற்றே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் இதற்கு ஏதும் அழகான வ்யாக்யானங்கள் கொடுக்கலாம். ஆனால் ஹிந்து ஒற்றுமை என்பதை ஆதாரமான விஷயமாய்க் கொண்ட ஸ்வயம் சேவகர்களுக்கு ஸ்ரீ காந்தி என்ற ராஜநீதிக்ஞரின் மேற்கண்ட கருத்து ஏற்கவியலாத கருத்தே ஆகும்.

    கடைசியாக, நீங்கள் தெரிவித்த கருத்து,

    “என் பதிலைக் கண்டு ஏற்கனவே மிகுந்த மனவருத்தத்துடன் இருக்கும் நீங்கள் மேலும் மனம்வருத்தம் கொள்ள ஆசைப் படுகிறேன்.”

    இள வயதினர் என்று தெரிகிறது. தவறான பாடம் கற்பது என்றும் நல்லதல்ல.

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

    என்பது உங்களுக்கு தெரியாததும் அல்ல. ஆனாலும் அதீத வெறுப்பின் பாற்பட்டு மட்டுமீறி சொல்லப்பட்ட இந்த கருத்து ஹிந்துப்பண்பாடு என்ன மனிதப்பண்பாட்டுக்கே உகந்தது அல்ல. அபத்ரமான அஸப்யமான கருத்துக்கள் வைக்கப்படும் போது அதை சமனம் செய்ய மங்களமான கருத்துக்கள் வைப்பது பண்பாடு. நீங்கள் பல நல்ல கருத்துக்கள் சொல்கிறீர்கள். ஹிந்துக்களுக்கு உழைப்பது மட்டுமின்றி ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை என்பது போன்ற சில கருத்துக்களிலும் தங்களது ஈடுபாடு தெரிகிறது. இவற்றிற்கெல்லாம் தேவையானது நிதானம். அதை வளர்த்துக்கொள்வது அவசியம். எனக்கு அதீத துன்பம் விளைவதில் தங்களுக்கு ஆசை என்று தாங்கள் தெரிவித்தாலும் தங்களுக்கு தங்களின் கோட்பாடுகள் நிறைவேற வள்ளி மணாளன் சர்வ மங்களங்களும் அருள்வானாக என இறைஞ்சுகிறேன்.

    மிக முக்யமானது தாங்கள் மேலே சொன்ன கருத்து தங்கள் ஆதர்சரான ஸ்ரீ காந்தி என்ற ராஜநீதிக்ஞரின் கருத்திற்கு நேர் எதிரானது. ஸ்ரீ காந்தி அவர்களின் கருத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் பார்த்தறியலாம்.

    The test of passive resistance is self-suffering and not infliction of suffering on others.

    (Excerpts from ‘Letter to Lord Ampthill’, London July 29, 1909, CWMG Vol. 9, pp 447-49)

    எனது ஸம்ஸ்காரங்கள் ஸ்ரீ காந்தி அவருடையதல்ல மாறாக சங்கச்சான்றோர்களால் பதிவு செய்யப்பட்டவை.

    வாருங்கள், பரஸ்பரம் ப்ரியத்துடன் கருத்துகள் பரிமாற்றம் செய்து ஹிந்து ஐக்யதைக்கு பாடுபடுவோம்.

    if possible, start attending sanga shakas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *