யாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்

கடந்த சில நாட்களாக இஸ்லாமிய பயங்கரவாதியும் 300 பேர்களைக் கொல்லவும் 2000 பேர்கள் உடல் உறுப்புக்கள் இழக்கவும் காரணமான யாஹூப் மேமன் குறித்து பலருக்கும் பாசம் பொங்கி வழிகிறது. சிலர் கண்ணீர் விட்டுக் கதறுகிறார்கள். சிலர் அழுது புரள்கிறார்கள், சிலர் பார்ப்பனீய பாசிச பா ஜ க அரசைத் திட்டித் தீர்க்கிறார்கள், சிலர் நீதி செத்து விட்டது என்கிறார்கள், சிலர் மரண தண்டனையையே ஒழிக்க வேண்டும் என்கிறார்கள், இன்னும் சிலர் இந்தியாவைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்கிறார்கள். சோட்டா ஷகீல் இதற்கான பதிலடி கடுமையாக இருக்கும் என்று எச்சரித்திருக்கிறான் அதாவது இன்னும் பல ஆயிரம் பேர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொல்லப் போகிறார்கள் என்று அர்த்தம்.

இதில் மேமனுக்கு ஆதரவாகக் கொடி பிடிக்கும் கோஷம் போடும் இஸ்லாமியர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அப்துல் கலாம் போலவோ ப்ரேம்ஜி போலவோ ஹிந்துஸ்தானி பண்டிட்கள் போலவோ ஷேக் சின்னமவுலானா போலவோ அமைதியை விரும்பும் பிற மதத்தினரை மதிக்கும் அறவுணர்வுள்ள இஸ்லாமியர்கள் அல்ல. வன்முறையையே மதக் கடமையாகக் பூண்ட வெறி பிடித்த மிருகங்கள் அவர்கள். அவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. காசு வாங்கிக் கொண்டு கூலிக்கு மாரடிக்கும் அந்தோணி மார்க்ஸ்களையும், ஞாநி சங்கரன்களையும், அருந்ததி ராய்களையும் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் யாஹுபுக்கு ஆதரவு தெரிவித்தால் கண்ணீர் விட்டால் தாங்களும் முற்போக்கு ஆகி விடலாம் என்ற எண்ணத்தில் தங்கள் குண்டிக்கடியில் அவர்கள் வைத்த குண்டுகள் இருப்பது கூடத் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கும் முட்டாள்களைக் கண்டுதான் பரிதாபமாக இருக்கிறது.

எலிகள் எல்லாம் எள்ளுருண்டைக்குக் காய்கின்றன. எதற்குக் காய்கிறோம் என்று தெரியாமலேயே காய்கின்றன இந்தக் கூமுட்டை எலிப் புளுக்கைகள். அந்த முட்டாள்களுக்காகவும் இந்த நீண்ட பதிவு.

B-Raman-The-Kaoboys-of-RAWஇந்த பி.ராமன் குறித்து பல முறை பேசியிருக்கிறேன். அவரது காவ் பாய்ஸ் ஆஃப் ரா படித்த பிறகு எனக்கு ரா மீது இருந்த மரியாதை பெரும் அளவு குறைந்து விட்டது. அந்த நூலில் அவரே ரா அமைப்பை மகா மட்டமாக எழுதியிருக்கிறார்.

ரா என்பது ரிலேட்டிவ்ஸ் அண்ட் அசோஷியட்ஸ் விங் என்றும் பெரும்பாலான ரா அதிகாரிகள் பிருஷ்டத்தைக் கூட அசைப்பது இல்லை என்றும் அதிக பட்சமாக அவர்கள் செய்யும் உளவு வேலையே லோக்கல் செய்தித் தாள்களில் வரும் செய்திகளை வெட்டி ஒட்டி அனுப்புவதுதான் என்கிறார் ராமன். இதையும் மீறி அஜித் டோவால் மாதிரி ஒரு சிலர் இருந்தால் அதிகம்.

அதில் 30 ஆண்டுகள் குப்பை கொட்டிய ராமனே சொல்கிறார் ஒத்துக் கொள்கிறார். ரா முழுவதும் தங்கள் சொந்தக் காரர்களையும், நண்பர்களையும், எடுபிடிகளையும், இன்னும் காசு வாங்கிக் கொண்டு ஆட்களையும் சகட்டு மேனிக்குச் சேர்த்து விட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அது முழுக்க முழுக்க உறவினர்கள் உறவினர்களுக்காக நடத்தும் சந்தை மடமாக சத்திரமாக ஆகி விட்டிருக்கிறது. ஃபாரின் அசைன்மெண்டுகளுக்கான ஜாலி டூர் போகும் இடமாக மாறி விட்டிருக்கிறது. ராமன் அனைத்தையும் வெட்கம் இல்லாமல் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி நொந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த ராவுமே பனாமா டெய்லர்களால் நிரப்பப் பட்டுள்ளது என்றும் சொல்கிறார். ஆனால் அப்படியாகப் பட்ட ரா செய்த ஒரு சில வேலைகளையுமே சோப்ளாங்கி பிரதமர் ஐ.கே.குஜ்ரால் நிறுத்தி அவர்கள் வைத்திருந்த ஏஜெண்டுகளையும் காட்டிக் கொடுத்து விட்டார். அவரது சர்வீஸில் பெரும்பாலான வருடங்களில் அவரைப் போன்றவர்கள் வெறும் கூரியர் ஏஜெண்டாக மட்டுமே வேலை பார்த்திருக்கிறார் என்பது புரிந்தது. ஜான் லீக்கரேயின் பனாமா டெய்லருக்கும் இவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் கிடையாது என்பது புரிந்தது.

இருந்தாலும் நேர்மையான அதிகாரி என்ற முறையிலும், ஒரு அனலிஸ்ட் என்ற முறையிலும் ரிட்டயர்ட் ஆன பிறகும் பல விஷயங்களிலும் கட்டுரைகள் எழுதினார் என்ற முறையிலும் மதிக்கப் பட்டவர் பி.ராமன். கடந்த சில வருடங்களில் அவர் கேன்சரினால் பாதிக்கப் பட்டிருந்தார். அப்பொழுது அவர் என்ன மன நிலையில் இருந்தார் அவருக்கு கான்சர் எவ்வளவு தூரம் முற்றி விட்டிருந்தது அவர் ஸ்திரமான மன நிலையில் இருந்தாரா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அந்த சமயங்களில் அவர் உளறல்கள் அதிகமாயின. அவர் அடிப்படையில் இந்திரா காந்திக்கு விசுவாசமானவர். ரா அமைப்பை உருவாக்கினார் என்ற முறையில் அவருக்கு இவரைப் போன்ற மூத்த அதிகாரிகள் விசுவாசமாக இருந்தவர்கள்.

அவர் ரிடீஃபுக்கு 2007ல் எழுதி அனுப்பியதாக இந்தக் கட்டுரையை இப்பொழுது ரிடீஃப் வெளியிட்டிருக்கிறது (இதை ஏன் இப்பொழுது யாக்கூபுக்கு ஆதரவாக இந்த தருணத்தில் வெளியிட்டார்கள் அதற்காக நஷ்டத்தில் இருக்கும் ரீடீஃபுக்கு ஏதேனும் டைகர் மேமன் கம்பெனி காசு கொடுத்ததா, டி கம்பெனி மிரட்டியதா என்பதையும் மோடி சர்க்கார் விசாரிக்க வேண்டும்).

ராமன் 2007ல் எழுதியதாக ரிடீஃப் இப்பொழுது வெளியிட்டிருக்கும் கட்டுரை இங்கே.

இந்தக் கட்டுரையைப் படிகாமலேயே மனுஷ்யபுத்திரன் முதல் சினிமா பற்றி எழுதும் தமிழ் ஃபேஸ்புக்கர்கள் வரை ஆகா ராமனே சொல்லி விட்டார் ராமனே சொல்லி விட்டார் இந்தியாவின் பாசிச பா ஜ க அரசு யாக்கூப்பைக் கொன்று விட்டது என்று ஊளையிடுகிறார்கள். இந்த வரை இந்த அதிமேதாவிகளுக்கு பி,ராமன் என்ற ஒருவர் இருந்த விபரமே தெரியாது. இன்று ராமன் சொல்லி விட்டார் என்று ஏதோ ராமன் விளைவைக் கண்டு பிடித்துச் சொன்ன சர்.சி.வி ராமன் போல குதிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அறிவாளிகள் எவருமே ராமன் என்ன சொன்னார் என்பதையே படிக்காமல் ராமனே சொல்லி விட்டார் ராமனே சொல்லி விட்டார் என்று உளறித் தள்ளுகிறார்கள்.

அப்படி ராமன் என்ன சொல்லியிருக்கிறார்? முதலில் ராமன் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர் செத்துப் போன பிறகு அவர் சொன்னார் என்று வரும் கட்டுரைகளை சுப்ரீம் கோர்ட் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சைஃபர் ஃப்ரொன்ஸிக் செய்து பார்த்து உண்மையானால் ஒரு வேளை ஏற்றுக் கொள்ளலாம். ஆகவே கோர்ட் இதை இடது கையால் நிராகரித்து விடலாம். இருந்தாலும் பி.ராமன் இதை எழுதியிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவரது சகோதரர் பி.எஸ்.ராகவனும் இதற்கு சாட்சி சொல்கிறார். ஆகவே கோர்ட் நம்பத் தேவையில்லை என்றாலும் நாம் நம்பிக் கொள்ளலாம். போகட்டும். அதில் அவர் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்?

1. முதலில் யாகூப் மேமனை கைது செய்யவில்லை அவனே சரண்டர் ஆனான் என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? இல்லையே. அப்படி எங்கே ஐயா சொல்லியிருக்கிறார் என்று இந்த மேதாவிகளில் ஒருவரைக் கேட்டேன் ஆள் அப்ஸ்காண்ட் ஆகி விட்டார்! உண்மையில் பி.ராமன் எங்குமே எப்பொழுதுமே மேமன் சரண்டர் ஆனான் என்று சொல்லவேயில்லை. இந்த அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் தாங்கள் சொல்லும் விஷயத்திற்கான ஆதாரமே இல்லாமள் புளுகுகிறார்கள். இவர்கள் பிரச்சினைதான் என்ன. அப்படியாவது பொய் சொல்லி புளுகி இவர்கள் யாரைத் திருப்தி செய்கிறார்கள்? அல்லது கூலி வாங்கிக் கொண்டு எழுதுகிறார்களா? எதற்காக இந்தக் கேவலத்தை பாவத்தைச் செய்கிறார்கள்?

ராமன் என்ன சொன்னார்? யாஹுப் சரண்டர் ஆகவில்லை அவனை கைதுதான் செய்தோம் என்கிறார்.

அவனை நேபாள போலீஸ் கைது செய்ததாகவேதான் சொல்லியிருக்கிறார். ஆகவே அவன் தானாக வந்து சரண்டர் ஆனான் ஆகவே அவனை தூக்கில் போட்டிருக்கக் கூடாது என்பது அபத்தம். அண்டப் புளுகு மட்டுமே. அவன் சரண்டர் ஆனதாக ராமன் எங்குமே சொல்லவில்லை. நேபாளத்தில் கைது செய்த ஒருவரை இந்தியாவின் ராவிடம் ஒப்படைத்ததாக வெளிப்படையாக நேபாளம் ஒத்துக் கொள்ள முடியாது. ஆகவே அங்கு கைது செய்து இவர்களிடம் ஒப்படைக்கப் பட்டதை மறைத்து பின்னர் டெல்லியில் கைது செய்தது போல செட்டப் செய்திருக்கிறார்கள். எங்குமே அவன் தானாக வந்து சரண்டர் ஆகவில்லை. அவனை நேபாளத்தில் பொறி வைத்து பிடித்திருப்பார்கள் என்பது வேறு விஷயம்.

ராமன் சொன்னது இதோ. ஆங்கிலம் புரியா விட்டால் கேளுங்கள் மொழி பெயர்த்துத் தருகிறேன்.

The prosecution was right in saying that Yakub was arrested in Old Delhi. Yakub was right in claiming that he was not arrested in Old Delhi. In July 1994, some weeks before my retirement, he was informally picked up in Kathmandu, with the help of the Nepal police, driven across Nepal to a town in Indian territory, flown to Delhi by an aircraft of the Aviation Research Centre and formally arrested in Old Delhi by the investigating authorities and taken into custody for interrogation. The entire operation was coordinated by me.

He had come to Kathmandu secretly from Karachi to consult a relative and a lawyer on the advisability of some members of the Memon family, including himself, who felt uncomfortable with Pakistan’s Inter-Services Intelligence, returning to India and surrendering to the Mumbai police. The relative and the lawyer advised him against surrender due to a fear that justice might not be done to them. They advised Yakub to go back to Karachi.

ஆக மொத்தம் ஆதாரமே டுபாக்கூர் புளுகு மூட்டை என்பதை ராமனே உறுதி செய்கிறார்.

2. இரண்டாவதாக யாக்கூபுக்கு மும்பை குண்டு வெடிப்பில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ராமன் சொல்லவில்லை. அவனும் அவன் குடும்பமும் முழுக்க முழுக்க அந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டது என்றே ராமனும் சொல்கிறார். யாஹூப் ஒரு அப்பாவி என்றோ அவனுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் சம்பந்தமில்லை என்றோ பி.ராமன் எங்கும் சொல்லவில்லை. அவர் என்ன சொல்கிறார்?

There is not an iota of doubt about the involvement of Yakub and other members of the family in the conspiracy and their cooperation with the ISI till July 1994. In normal circumstances, Yakub would have deserved the death penalty if one only took into consideration his conduct and role before July 1994.

இதற்கு என்ன அர்த்தம் என்று ராமனை படிக்கச் சொல்லி எனக்கு புத்திமதி சொன்ன அதிமேதாவிகள் சொல்ல முடியுமா?

ஆக அவன் சரண்டர் ஆனதாகவும் ராமன் சொல்லவில்லை, அவனுக்கும் குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் இல்லையென்றும் ராமன் சொல்லவில்லை. பின்னே ஏன் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்று ராமன் சொன்னதாக ரிடீஃப் சொல்கிறது?

அதற்காக ராமன் சொன்னதாகச் சொல்லப் படும் காரணங்கள் கீழே:

1. யாகூப் கைதான பிறகு ராவுடன் ஒத்துழைத்தான்

2. யாகுப் கைதான பிறகு ராவுடன் ஒத்துழைத்து தனது குடும்பத்தையும் இன்னும் சிலரையும் துபாய் வழியாக பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவ்க்குக் கடத்திக் கொண்டு வர உதவினான்

3. அதன் மூலம் மும்பையில் குண்டு வைத்த பயங்கரவாதிகளை பாக்கிஸ்தானில் ஒளித்து வைத்த விபரத்தை இந்தியா உலகுக்குக் காட்ட முடிந்தது.

ஆகவே அவன் கைதான பிறகு ராவுடன் ஒத்துழைத்து அவனது குடும்பத்தையும் கூட்டாளிகளையும் இந்தியாவுக்குக் கொண்டு வர அவன் ஒத்துழைத்த காரணத்தினால் அதைக் கருத்தில் கொண்டு அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்கிறார் ராமன்.

yakub-memon

அப்படி அவன் ஒத்துழைக்கும் பட்சத்தில் அவனுக்கு மரண தண்டனை அளிக்கப் படாது என்று இந்தியா அவனுடன் எங்காவது ஒப்பந்தம் போட்டிருக்கிறதா? அப்படி ஏதாவது ஒரு ஒப்பந்தம் இந்தியாவை கட்டுப் படுத்துகிறதா? அந்த ஒப்பந்தத்திற்காக ராமன் நரசிம்மராவிடமோ அல்லது சவானிடமோ அல்லது தனது ரா உயர் அதிகாரியான பாஜ்பாயிடமோ ஏதேனும் அப்ரூவல் வாங்கினாரா? அதற்கான அடிப்படை என்ன ஆதாரம் என்ன? அப்படி ஒரு மன்னிப்பை ஒரு சாதாரண ராமன் மட்டுமே வழங்கியிருக்க முடியாதே ஐயா? ஒரு உளவுத் துறை எஸ்பியனாஜ் ஏஜெண்ட் தனக்கு செய்தி தரும் நபர்களுக்கு பணம் கொடுக்கலாம். சில சின்னச் சின்ன உதவிகளைச் செய்யலாம். அவர்களுக்குத் தொழில் கூட அமைத்துத் தரலாம். பெண்களைத் தரலாம். போதை மருந்துதகள் தரலாம். மேலும் உபத்திரவமில்லாத அவன் கேட்க்கும் ஆயிரத்தெட்டு உதவிகளைச் செய்து தரலாம் தருகிறார்கள். ஏன் தேவைப் பட்டால் சினிமா நடிகைகளைக் கூட ஏற்பாடு செய்து தருவார்கள். அது போல சில பல உத்திரவாதங்களை யாகூபுக்கும் ஒரு வேகத்தில் ராமன் அளித்து விட்டு பின்னர் தன் சக்திக்கு மீறிய வாக்குறுதிகளை அளித்து விட்ட குற்ற உணர்வில் மட்டுமே இதை எழுதியிருக்க வேண்டும். சைன்ஃபீல்ட் காமெடி சீரியலில் வரும் ஜார்ஜ் கான்ஸ்டான்ஸா ஒரு இன்பமான சூழலில் படுக்கையில் தன்னுடன் படுத்திருக்கும் தன் பெண் உதவியாளரிடம் உனக்கு அடுத்த மாதத்தில் இருந்து சம்பளம் டபுள் என்று சொல்லி விடுவார். பின்பு வேலை முடிந்த பிறகுதான் அவருக்கு அந்த அதிகாரம் தனக்குக் கிடையாதே பெண்புத்தியில் நடக்காத காரியத்தைச் சொல்லி மாட்டிக் கொண்டேமே என்று முழிப்பார். அந்தக் கதைதான் ராமனின் கதையும் கூட.

ஒருவன் 300 பேர்களைக் கொன்று விட்டு 2000 பேர்களை கை கால் இல்லாமல் முடமாக்கி விட்டு விட்டு மாட்டிக் கொண்டவுடன் அடி தாங்காமலும் சிறையில் சுகமாக இருக்கும் வசதிகளுக்காகவும் ஒரு சில தகவல்களைச் சொல்வதினாலும் தனது சொந்தக் குடும்பத்தைப் பத்திரமாக அபாயமான பாக்கிஸ்தானில் இருந்து சொகுசான இந்தியாவுக்கு தன் சொந்த சுயநலன் காரணமாக கடத்த ஒத்துக் கொண்டதினாலும் மட்டுமே அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்கிறார் பி.ராமன். அது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அதற்கு இந்திய அரசாங்கம் பொறுப்பாகாது. ஒரு உளவு அதிகாரியின் தனிப்பட்ட உறுதிமொழி அல்லது அத்துமீறல் மட்டுமே. காரியம் ஆவதற்காகச் சொல்லி விட்டு பின்பு மன உளைச்சலில் குற்ற உணர்வு அடைந்திருக்கிறார். இது சாதாரணமாக ஒற்று வேலைகளில் இருக்கும் பெரும்பாலான ஏஜெண்டுகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்தான். ஜான் லீக்கரேயின் டிங்கர் டெய்லர் சோல்ஜர் ஸ்பை, ஸ்பை ஹூ கேம் ஃப்ரம் கோல்ட், ஸ்மைலீஸ் பாய்ஸ், எ மோஸ்ட் வாண்ட்டர் மேன் போன்ற கதைகளைப் படித்தவர்களுக்கும் பார்த்தவர்களுக்கும் நான் சொல்ல வருவது புரியும். ஆனால் பெரும்பாலான ஏஜெண்டுகளுக்கு அது போன்ற குற்றவுணர்வுகள் ஏதும் இருப்பதில்லை. உண்மையான நிதானம் தவறாத தேசபக்தியுள்ள ஏஜெண்டுகளுக்கு இந்த சஞ்சலம் வரவே வராது. தேசத்திற்கும் தேச மக்களுக்கும் மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் பார்த்தால் 300 பேர்களைக் கொன்ற ஏமாற்றி ஆர் டி எக்ஸ் கடத்தி பதுக்கி வைத்து குண்டுகளை வெடிக்க ஆட்களை பாக்கிஸ்தானுக்கு பயிற்சிக்கு அனுப்பி துபாயில் சதித்திட்டம் போட்டு ஒரு பயங்கரமான மதவெறி பிடித்த மிருகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக பி.ராமன் இவ்வளவு தூரம் சஞ்சலப் பட்டிருக்க வேண்டியதில்லை. அவரது கேன்சரும் முதிய வயதும் சேர்ந்து அந்த குழப்பமான மனநிலைக்கு அவரைத் தள்ளியிருந்திருக்கலாம். மற்றபடி யாஹூப் சரண்டர் ஆகவில்லை அவனுக்கு இந்திய அரசு எந்தவிதமான உத்திரவாதத்தையும் அளிக்கவில்லை

மாறாக, அதே மும்பை குண்டு வெடிப்பில் குண்டுகளை எடுத்துச் சென்று வெடிக்க வைத்த பாதுஷா பாய் என்பவன் அப்ரூவராக மாறி உண்மைகளைச் சொன்னான். அவன் மாறியதால் அவனுக்கு மரண தண்டனையில் இருந்து இதே இந்திய கோர்ட்டும் அரசும் விலக்கு அளித்துள்ளது. ஆகவே இந்திய அரசு எந்த துரோகத்தையும் எவருக்கும் இழைக்கவில்லை என்பதே உண்மை.

உண்மை, நடைமுறை எதுவுமே புரியாமல் முற்போக்கு பட்டங்களுக்காகவும் காசுக்காகவும் ஒப்பாரி வைக்கும் அற்பர்களுக்கு இதெல்லாம் புரியப் போவதில்லை. நான் சொல்வதெல்லாம் புரிந்து கொள்ளும் அறிவும் நிதானமும் கூட இருக்கப் போவதும் இல்லை.

உலகத்தின் அனைத்து விதமான உளவு அமைப்புகளும் ஏதாவது ஒரு விதத்தில் தங்களது எதிரிகளுடன் ஏதாவது ஒரு தொடர்பிலேயே இருக்கிறார்கள். கோல்ட் வார் சமயத்தில் ஏராளமான சோவியத் ஏஜெண்டுகளை பிரிட்டனும் அமெரிக்காவும் மேற்குக்குக் கடத்தி வந்து அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளித்துள்ளது. அது போல அவன் தேடப் படும் குற்றவாளியாக இருந்தாலும் அவன் தகவல்களைத் தரும் பட்சத்தில் அவனுக்கு தண்டனை குறைப்பு உட்பட பல சலுகைகளை அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தியாவும் அளித்தே வந்துள்ளன. ராஜீவ் கொலையாளிகளை உயிருடன் பிடிக்கமல் அவர்களாகவே தற்கொலை செய்ய வைத்தன் பின்ணணியும் இதுதான். இதுதான் உலகளாவிய ஒற்று அமைப்புகள் இயங்கும் விதமே. ஒற்றர்கள் அவர்களின் சொந்த தேசத்தை விட அவர்களுக்குத் துப்புக் கொடுக்கும் ஆட்களுக்கு விசுவாசமாக மாறிய உதாரணங்கள் எல்லாம் உண்டு. அந்த வகையில் ஒரு அதிகாரியாக யாகூபுக்கு ராமன் சில பல உத்திரவாதங்களை அளித்திருக்கலாம். அதை அவர் பிரதமர் அளவுக்குக் கொண்டு சென்று உறுதிப் படுத்தாமல் விட்டிருந்திருக்கலாம். யாகூபுக்கு ராமன் விஸ்வாசமாக இருப்பதன் கட்டாயம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு துப்புக்காரனைக் கை கழுவி விட்டால் பிற துப்புக்காரர்கள் எளிதில் கிடைக்காமல் போய் விடுவார்கள் என்ற பதட்டமும் குற்றவுணர்வுகளுமே ராமனின் மனநிலைக்குக் காரணம். அமெரிக்காவிலும் பல சி ஐ ஏ ஏஜெண்டுகளுக்கு இந்த சிக்கல் நிகழ்கிறது. சிரியானா என்ற சினிமாவிலும் நான் அஸெட் என்ற மினி சீரிஸிலும் நான் இங்கு ஏற்கனவே எழுதியுள்ள ஃபேர் கேம் என்ற சினிமா அறிமுகத்திலும் எ மோஸ்ட் வாண்டட் மேன் என்ற சினிமா அறிமுகத்திலும் சொல்லியிருக்கிறேன். உண்மையில் ஒற்றர்களுக்கும் அவர்களுக்கு துப்பு கொடுக்கும் ஆட்களுக்கும் ஒரு விதமான பிணைப்பு விளக்க முடியாத மனரீதியான நட்பு ஏற்பட்டு விடுகிறது. அது ஒரு விதமான உளவியல் சிக்கலும் கூட. ராமன் போன்றவர்கள் வயதாகி நோயால் தாக்கப் பட்ட பலவீனமான காலத்தில் அது போன்ற ஒரு விதமான மன உளைச்சலுக்கும் நோய்க்கும் உள்ளாகியிருக்க சாத்தியங்கள் அதிகம். அதீதமான மன உளைச்சல்களும் குற்றவுணர்வும் ஏற்படுத்தும் ஒரு கடினமான பணி ஒற்றர் வேலை.

ஒற்றர்களினால் உத்தரவாதம் கொடுக்கப் பட்டு அழைத்து வரப்yakum-memon-death படும் அல்லது தகவல் பெறப்படும் குற்றவாளிகளை அந்த அரசாங்கங்கள் தண்டிப்பதும் கை விட்டு விடுவதும் புதிதல்ல. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அவனுக்கு சலுகைகளை அளிப்பதா வேண்டாமா என்பதை அரசாங்கமே முடிவு செய்யும். இந்த இடத்தில் யாகூப் மேனனுக்கு அந்த சலுகையை அளிக்கும் வண்ணம் அந்த அளவுக்கு அவன் எந்தவிதாமான முக்கியமான துப்புகளையும் அளிக்கவில்லை. மும்பை போலீஸ் கமிஷனரான மொரியாவுக்கு யாகூபுக்கு முன்பாகவே பாதுஷா பாய் என்பவன் அனைத்து தகவல்களையும் அளித்து விடுகிறான். யாகூபின் தகவல்களினால் புதிதாக பெரிய கைதுகள் ஏதும் நிகழவும் இல்லை. யாகூப் அவனது சகோதரனைப் போலவே 300 பேர்களின் படு பாதக கொலைகளுக்கு அனைத்து விதங்களிலும் திட்டமிட்டவனே காரணமானவனே. அவனுக்கு ராமன் போன்ற ஒரு அதிகாரி கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் நிர்ப்பந்தம் ஏதும் கிடையாது. ஒரு பி.ராமனை விட கொல்லப் பட்ட 300 உயிர்களும் உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்குமே இந்திய அரசு கடமைப் பட்டுள்ளது. அவர்களுக்கான நீதி ஒரு ராமன் ஒரு பயங்கரவாதிக்குக் கொடுத்த வாக்கை விட மிக மிக முக்கியமானது.

ராமனின் வாக்கை மீறியதால் எதிர்காலத்தில் ராவுக்கு கிடைக்கவிருக்கும் ஒரு சில அசெட்கள் தகவாளிகள் கிடைக்காமல் போகலாம். அதற்காக இந்தியா தனது மக்களை கை விட்டு விடக் கூடாது. ஒரு உளவு அதிகாரி ஒரு பயங்கரவாதிக்குக் கொடுத்த உத்திரவாதத்தை விட இந்திய அரசு தனது மக்களுக்கு பெரிதும் கடமைப் பட்டுள்ளது. பி.ராமன் இந்திய அரசின் ஒரு அங்கமே அன்றி அவரே இந்தியாவாகி விட மாட்டார்.

ஆகவே, கூக்குரல் இடும் பயங்கரவாத ஆதரவாளர்களே! ராமனின் ஆவி அமைதியாக உறங்கட்டும். அவரது ஆவியை விட உங்களது இஸ்லாமிய பயங்கரவாதி நண்பர்களை விட இந்தியா மக்களின் பாதுகாப்பானது அதி முக்கியமானது. அதையே இந்த அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

காலம் கடத்திய தவறுக்காக இந்திய அரசையும் அதன் நீதிமன்றங்களையும் கண்டிக்கலாமே அன்றி நிச்சயமாக யாகூபை தூக்கில் இட்டதற்காக இந்தியாவையும் அதன் கோர்ட்டுகளையும் எவரும் கண்டிக்கக் கூடாது. அப்படிச் செய்வது மனமறிந்தே செய்யும் பாவம். பலியான உயிர்களுக்குச் செய்யும் துரோகம் மொத்தத்தில் இந்தியாவைக் கூறு போட்டு விற்கும் துரோகம் யாகூபை ராமனின் துணை கொண்டு ஆதரிப்பது. இன்று யாகூப் மேமனுக்காக கண்ணீர் விடுபவர்களும் ஆதரவு தெரிவிப்பவர்களும் ஒப்பாரி வைப்பவர்களும் சப்பைக் கட்டு கட்டுபவர்களும் அவனை விட பல மடங்கு கொடிய மிருகங்களாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கு கொல்லப் பட்ட குடும்பங்கள் குறித்தோ கை கால் இழந்தவர்கள் குறித்தோ எந்தவிதமான குறைந்த பட்ச அக்கறையும் மனிதாபிமானமும் கிடையாது. யாகூபை விட பல மடங்கு வக்கிரம் பிடித்த இழி பிறவிகள் மட்டுமே அவனை ஆதரிக்க முடியும். அதைச் செய்பவர்கள் சொல்லொணா பாவங்களைச் சம்பாதிக்கிறார்கள்.

(திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

31 Replies to “யாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்”

  1. இதில் 6 விஷயங்கள் கவனிக்க வேண்டியவை.
    1. யாகூப் கைது செய்யப்பட்டவன்.
    2. குண்டு வெடிப்பில் அண்ணனுடன் ஈடுபட்டவன்.
    3.பின்னர். அண்ணனை மட்டும் விட்டுவிட்டு, மற்ற குடும்பத்தினர் முதலில் இந்தியா திரும்ப திட்டமிட்டு நேபாளம் வந்தவன்.
    4. ராமன் என்ற அதிகாரி மூலம் குடும்பத்தினரை பாக், அரசிடம் இருந்து மீட்டு இந்தியா கொண்டு வந்து விட்டவன்.
    5. சதி பற்றிய உண்மைகள் முழுதும் அப்ரூவராக மாறிய பாதுஷா பாய் மூலம் மட்டுமே இந்திய அரசுக்கு தெரிந்தது.
    6. நீதித் துறை இருக்கையில், ராமன் அவர்கள் எந்த ஒரு உறுதியும் குற்றவாளிக்கு அளிக்க அதிகாரம் இல்லை. யாகூபுக்கும் இது நன்கு தெரியும்.
    அவ்வளவே. இந்த கூச்சல், எல்லாம் குண்டு வெடிப்பில் இறந்த 257 பேரையும், உடல் உறுப்புகள் இழந்த 780 பேரையும் அவமதிக்கும் செயல்.

  2. உண்மைகளை புட்டுப் புட்டு வைத்துள்ள திரு ச திருமலைக்கு நமது நன்றிகள். செக்குலர் என்ற பெயரில் பொய் பித்தலாட்டங்களை மட்டுமே செய்துவரும் காம் ரேடுகள் , வி சி, போன்ற அரசியல் வாதிகள் திருந்த மாட்டார்கள். மீடியாக்கள் மூடி மறைக்கும் உண்மைகள் மற்றும் சுற்றுக்கு விடும் பொய்கள் ஏராளம் உள்ளன. மேமன் இந்திய காவல்துறையிடம் சரண்டர் ஆனவர் அல்ல. நேபாள போலீசால் தடுக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு தப்பி செல்லும் முன்னர் இந்திய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர். அவர் ஐ எஸ் ஐ யின் கைக்கூலியாக இருந்தவர். பாகிஸ்தான் முழுவதையும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மூன்றில் ஒரு பங்கு தாலிபான், அல்காயிதா கும்பல்களை ஒரு கை பார்த்துவிட்டான். தாலிபான் கும்பல் பாகிஸ்தான் இராணுவத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் , ஏராளமான குழந்தைகளை கொன்று , பாகிஸ்தான் இராணுவத்தினால் படிப்படியாக தூக்கில் ஏற்றப்பட்டும் , நேரடி தாக்குதலிலும் வான் வழி தாக்குதலிலும் தினசரி பலியாகி வருகிறார்கள்.

  3. அரசியல் செய்யும் சில முஸ்லீம்களைத் தவிர மற்ற பெருவாரியான முஸ்லீம்கள் இதைப்பற்றி ஒன்றும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.

    யாகூபுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்களும், கூச்சல் போடுபவர்களும் பெருவாரியாக வெள்ளைக் கிரிஸ்தவ- ரோமானிய மதஸ்தாபன கும்பலின் ஆட்களாகவும், அவர்களிடம் கூலி பெற்றவர்களாகவுமே இருக்க முடியும்.

    ஏனெனில் அவர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டுப் பல ஆண்டுகளாக ஹிந்துக்களுக்கும் ,முஸ்லீம்களுக்கும் பகையை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு முறை இப்படிச் செய்து நாட்டைப் பிளவு படுத்தி விட்டனர்.

    நன்றாகக் கவனித்தால் இந்த கும்பல் அப்துல் கலாம் போன்ற படித்த, நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லும் முஸ்லீம்களை எதிர்க்கிறார்கள்; ஆனால் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள்; பெருவாரியான முஸ்லீம்கள் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை விரும்புபவர்கள் போல் ஒரு தோற்றத்தை
    ஏற்படுத்துகிறார்கள்; அப்படி இல்லாவிட்டாலும் அவர்களை அந்த நிலைக்குத் தள்ளுகின்றனர்.
    பயங்கரவாதிகளுக்குத் தண்டனை அளிக்கப்பட்டால் அது ஏதோ ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாயத்துக்கு எதிரானது என்பது போல் ஒரு பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்;
    இது எதற்காக என்றால் கலாம் போன்றவர்களைத் தங்களது வழிகாட்டியாக முஸ்லீம்கள் ஏற்றுக் கொண்டு விட்டால் பிறகு நம் நாட்டில் தீவிரவாதம் ஒழியும்; ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டு விடும்; நாடு உருப்பட்டு விடும்;
    ஆனால் அது இவர்களது தீய நோக்கம் நிறைவேறத் தடையாகும் .

    இந்த ஒநாய்த் தந்திரத்தை மக்கள்,முக்கியமாக முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ‘எவரிடமிருந்தோ காசு வாங்கிக் கொண்டு நீங்கள் எங்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது போதும்; உங்களது எண்ணம் எங்களுக்குப் புரிகிறது; நீங்கள் செய்யும் செயல்களினால் எங்கள் சமுதாயம் ஒரு நாளும் முன்னேற்றமோ , சிறப்போ , மேன்மையோ அடையப் போவதில்லை; நாங்கள் பயங்கரவாதிகளை ஆதரிக்க மாட்டோம்; கலாம் போன்றவர்களே எங்களது ஆதர்ச புருஷர்கள்; எங்கள் இளைஞர்கள் கல்வி பெற வேண்டும்; வேலை பெற வேண்டும்; எங்களது ஏழ்மை விலக வேண்டும்; எங்கள் முன்னோர்கள் ஹிந்துக்களே ; அதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் ; அவர்களுடன் எங்களுக்குப் பகை இல்லை; நீங்கள் அதை உருவாக்க நினைக்க வேண்டாம்’ என்று அவர்கள் கூற வேண்டும்.

    அப்போது இந்த நாசகார கும்பலின் கொட்டம் அடங்கும்; வெளிநாட்டிலிருந்து இவர்களை இயக்கும் சக்திகளின் சதி முறியடிக்கப்படும்.

    செய்வார்களா?

    இரா.ஸ்ரீதரன்

  4. தூக்கில் போட்டது சரியா என்பது விமர்சனம் செய்யவெண்டிய விஷயம் இல்லை செய்த தவறினை நினைத்து நினைத்து மனசுஅளவில் சாக அடித்திருக்க வேண்டும் அதாவது தேச முழுவதும் இட்டுசென்று நாற்சந்திகளில் காரி உமிழ்ந்து இருக்கவேண்டும் தண்டனை அவன் தலையெழுத்து

  5. வாயை திறந்தாலே தேசவிரோத கருத்துக்களை விதைக்கும் திருமாவளவன், அருணன், போன்றோரின் பின்புலத்தில் இருக்கும் சக்திகளை இனங்கண்டு வேரறுக்கும் பொறுப்பும் கடமையும் அரசிற்கு உள்ளது.

  6. I have not read any police officer disagreeing with Raman in the point namely Memon turning as a helper in investigations should be ignored.

    The system of approver in crimimal justice system was made in order to enable the investigating agencies to unravel deeper mysteries in such cases where there are no plain but complicated facts. The complexity of the case should be investigated in order to derive benefits in larger interests.

    Suppose in a bomb blast case, culprits are arrested and immediately hanged, with a short trial. It will serve the justice but we won’t ever know the larger conspiracy, the network, the kingpins etc. Only by knowing all these, we can be able to uproot the terror completely; or devise appropriate strategies in future to prevent the acts of terrorists and nullify them. In view of this, it is always insisted to not kill the culprits in encounter etc. but bring them alive and keep them alive for such time till we get all that we need. It is a common practice in police investigation the world over.

    The person who spills the beans are encouraged to do so with certain assurance that the punishment given to him will be scaled down considering his cooperation and vital help to the State. On this assurance only, he gives. If not, too, he will but under third degree methods, in which case, he can suppress some, reveal some; but never fully. The police and the country will be the loser.

    Only in ordinary murders, we can proceed fast w/o minding about any conspiracy at all. In such network conspiracy, it is essential to be patient in order to get all facts fully.

    As I understand, Raman is clear about the Memon’s cooperation and returning to India with family with the hope of telling all. He did which should make the sentence to him somewhat different from other culprits. Being an approver, his penalty should not be death, but life imprisonment or whatever. It may be that the court has not be explained about his cooperation or turning approver. Otherwise, they couldn’t straightaway hanged him.

    This case will be held up to show in future that if get caught, don’t turn approver. No use because your penalty will be death sentence only. There will be no difference between you, the approver and they, the non-approvers. As no one turns approver, the police cannot establishment anything beyond the act. All that lies behind the act will remain in the dark. You cannot prove to UN or international forums that Pak is behind all.

    In this essay, many bad words are used against Raman who rendered glorious service to his country as RAW chief. I have not read anything like this essay, even in articles written by Hindutavites in English papers, questioning his character.

    One should not trash good men like Raman like this as if they are against our country or common criminals. Raman did service more than this essayist ever dream off. Perhaps this essayists Thirumalai may have thought Tamilhindu readers will be happy to read an essay with such words – like Vijay films engage vijay fans, or Dhanush, his fans, Ajit his fans etc.

    If you write soberly, your points will go and sink in more effectively. If you write otherwise i.e using bad words against good men like Raman, it will give the effect of a masala movie only.

  7. ஆயிரக்கணக்கான இந்தியர்கள் செத்தாலும் கவலை illai. ஒரு பயங்கரவாதிக்கு ஏதும் இழப்பு வர koodaadhu. எங்களுக்கு ஒட்டு வங்கிதான் mukkiyam.

  8. That whether Yakub Memon has been through due process of law dealt with as an approver in this case is the moot point. Not gossips in MSM or in social media. And that fact needs to be corroborated from the deliberations in the judgment.

    Defence of Yakub and contempt for Social Media – An article by Sh.Akhilesh Mishra in Swarajya Magazine condemning the broker / middleman like attitude of MSM editors. That also brought out frustration of MSM editors that because of Social Media which is open to world at large, they could not effectively suppress a genuine debate. Both print media and visual media ……. rather than playing the role of disseminating information and encouraging genuine debates ………. are extremely bypartisan and are suppressors of information.

    https://swarajyamag.com/politics/defence-of-yakub-and-contempt-for-social-media/

    Another article, Dear media, don’t misreport, misrepresent and communalize Yakub Memon by their Guest Author, Shri Mohammed Zeeshan, an another eye opener.

    https://www.opindia.com/2015/08/dear-media-dont-misreport-misrepresent-and-communalize-yakub-memon/

    Smart trolls in the social media tear off the evil veil of MSM by bringing forth the facts suppressed / doctored by MSM and shame them in every story after story. But MSM is a breed of shameless creatures.

    Gone are the days of oligopoly of MSM, the suppressors of genuine information. They have a fearful challenge from Social Media.

    Journalists who are tired of old and beaten track lines of phoney secularism are rebelling and slowly coming out. A beginning has been made.

    Earlier the presstitutes are shoed off the better it would be for the future of the country.

  9. A passionate articulation by Shri Mohammed Zeeshan is wonderful……….

    especially this passage……..

    What is most unfortunate about the misled debate on this issue is the communalization of it all. As it turns out, fundamentalists in both religious communities have misused the discourse to show that all Muslims were hurt by the hanging of Yakub Memon, or that Yakub Memon was innocent and wronged. Neither is true. The Indian Muslim community does not sympathize with terrorists (Muslims in Mumbai pointedly refused to bury the body of Ajmal Kasab in their graveyard), nor do they believe that they are under attack by the Hindu community, as is being insinuated by some fundamentalists.

    Well done Zeeshan bhai.

    And Sa Thirumalai, is full of logic and unsparing.

  10. மேலே தெரியும் மாஸ் ஹெட்டில் இருக்கும் சாது யாரென்றே தெரியவில்லை. மவுசின் கர்சர் பாயிண்டைப் படத்தில் மேல் வைத்தவுடன் அவர் பெயர் தெரியுமாறு செய்யவும். இரவிதாசா? இராமதாசா? இல்லை ஹரிதாசா? இப்பெயர்களைச் சொல்லக்காரணம் அவர் வடக்கத்திக்காரரைப்போலத் தெரிவதால்.

  11. Mr.BS

    Will you please be specific about your comments that I undermined the services of B.Raman or using bad words on him. Will you please show those lines so that I can either clarify or correct if my words are wrong

    Thanks

  12. Great article. I thank the author. Where were the bleeding heart Mamon sympathizers all these years? They all should be tried for treason.
    “அரசியல் செய்யும் சில முஸ்லீம்களைத் தவிர மற்ற பெருவாரியான முஸ்லீம்கள் இதைப்பற்றி ஒன்றும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.”
    The enormous Muslim crowd at the funeral say otherwise. Look at the pictures of the funeral. They don’t look anything ” ordinary Muslims”
    Here is a great article by a cop
    https://www.opindia.com/2015/07/an-open-letter-by-a-cop-to-those-opposing-death-penalty-to-yakub/

  13. அன்புள்ள பி.ஸ்,

    // மேலே தெரியும் மாஸ் ஹெட்டில் இருக்கும் சாது யாரென்றே தெரியவில்லை.//

    இந்த முகப்புப் படத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தோன்றுகிறது – https://tamilhindu.com/wp-content/uploads/2015/08/th_banner_guru_kalam.jpg

    இதில் இடப்புறம் இருப்பது சுவாமி ரவிதாஸ் மீராபாய்க்கு உபதேசம் செய்யும் காட்சி. வலப்புறம் கலாம்+குழந்தைகள் படத்திற்கு மேல் இருப்பது சுவாமி சிவானந்தர். குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தை வெளியிட்டுள்ளோம்.

  14. எதுக்கு சாகிறோம் என்று தெரியாமல் அந்த அப்பாவிகளின் சாவுகளுக்கு ,எவனெல்லாமொ மன்னிப்பு கொடுக்கிறான்!கருணை(!)காட்டியே ஆக வேண்டும் கட்டளை இடுகிறார்கள் .கோபால கிருஷ்ண காந்தி ,மணி சங்கரன் ,சந்த்ரூ,போன்ற இடது சாரி குளுவான்கள் தங்களை இந்த ஆட்சியில் சீந்த நாதியில்லை என்பதை உணர்ந்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்.மத மாற்ற ,பெட்ரோல் கமிஷன் தரகு குஞ்சுகள் மறக்காமல் சிறுபான்மை அறச்சீற்றதுக்கு அனுமதி இல்லையா?என்று ‘பரிதாப’மாகவே கேட்கிறார்கள்.வீதியில் குண்டு வைத்தால் ,அந்த வீதி பழி வாங்க படுக்கை அறை வரை வரும்.அப்படி உங்கள் சாகசத்தை காட்ட வேண்டுமென்றால் உங்களை ரசிக்கும் கட்சித்தலைவர்களின் வீட்டில் ,பங்களாவில்’ அனுதாப அறிக்கைகள் வெளியிடும் பத்திரிகை அந்த பத்திரிகை அலுவலகத்தில் வையுங்கள் அவர்கள் மன்னித்து விடுவார்கள்!செத்து செத்து விளையாடுங்கள் ,அதை விடுத்து சாவது ஒருத்தன் ,கொலையாளியை மன்னிக்கும் ‘மகான்கள் ‘ஒரு கூட்டமோ?
    மத சார்பின்மை ”பிரகஸ்பதிகள் ”ஒரு பக்கம் ஓயாமல் உருகி உரு குலைகிறார்கல்.
    இந்த பள்ளிளிச்சான் குஞ்சுகளை படுதாவாக பயன்படுத்தி எங்காவது மாட்டி விட போகிறான்கள்.{ராஜீவ் கொலை இல் அதிகபிரசங்கிகளையும்,ஆர்வக்கோளாருகளையும் மாட்டிக்கொண்ட நிலையில் அண்ணன் வைக்கோ ,கருணாநதி கம்பனி ,வீரமனிகலெல்லாம் தப்பித்த சாகசம் பெருந்தலைகளுக்கே கிடைக்கும்!}அப்புறம் வாங்கும் அடியில் ‘புரட்சி பொங்க’ரவுத்திரம் பழகுவதெல்லாம் ‘முடியாது.
    நடைவண்டி வேண்டுமானால் பழகலாம்!

  15. மாரடித்துக்கொள்ளும் மத சார்ப்பற்ற மாமாக்களில் ,திருமாவளவன் அழுகை தனி சுரத்தில் ஓங்கிக்கேட்கிறது ,அது 7 ஸ்வரத்தை தாண்டிய ஏழரையில் சஞ்ச்சரிக்குகும்,சாமாச்சாரம்!வாழா வெட்டிகள் வாழும் வகையில் ஒரு கூட்டணியில் ஆளாளுக்கு கைகளை தூக்கிக்கொண்டு நிற்கும் படம் புகழ் பெற்ற ஒன்று.{கைகளை பிடித்துக்கொள்ளாமல் நின்றால் ஒருத்தன் பாக்கெட்டில் ஒருத்தன் கையை விடும் கேடிப்பையன்கள்!}அதில் பிழைக்க” எதற்கும் தயார் ”என்ற திருமுகங்கள் .
    சிறுபான்மை ஆதரவு என்ற முக்காட்டில் ,அவர்கள் செப்பும் திருவாய் உளறல்கள் டிவி விவாதங்களிலும் ,பத்திரிக்கை கட்டுரைகளிலும் ரசிக்கத்தக்க நகைச்சுவை ஊட்டுபவை

  16. அரிய தகவல்களுடன் கூடிய, சரியான நேரத்தில் வெளியாகியுள்ள கட்டுரை. சகோதரர் திருமலைக்கு நன்றி.

    -சேக்கிழான்

  17. //As per comments in thinnai , BS = RV;
    https://puthu.thinnai.com/?p=29935
    what is the fun , changing names portal by portal, comments by comments!!??
    //

    You haven’t correctly understood those comments. They refer to my posting in RV’s silcon bookshelf blog featuring RV’s blogpost on Kalam. to which I invited Thinnai readers to read my comments therein.

    You have assumed RV and BS are one and the same person. NO. BS is a short form for Bala Sundara Vinayagam. RV is the son of Shri Ramasamy. I persume V stands for Vaiyanathan. He is a contributor of articles here; I am just a commenter her. He lives in USA, Iive in India.

    In RV’s blog and in Mintamil, I write under my full name. Here and in Thinnai I write under BS.

    Things clear to you now?

  18. பாலசுந்தரம் விநாயகம்

    அது ஆர் வி யின் ப்ளாகில் உங்கள் பெயரில் வந்த கமெண்ட் என்பதையும் இருவரும் ஒருவர் என்பதையும் அறிவேன். பாண்டியன் என்பவர் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார். ஆர் வி எப்பொழுதும் அவர் பெயரில் மட்டுமே எழுதுகிறார். ஆகவே எனக்குக் குழப்பம் ஏதுமில்லை. நான் பி.ராமனை அவதூறாகப் பேசியிருப்பதாகவும் அவர் செய்த தியாகங்களைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவும் என் மீது குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். அதற்கான இடங்களைக் கேட்டிருந்தேன். நான் அவ்வாறு எதையும் செய்யவில்லை என்பதே என் தரப்பு. உங்கள் மறுவினை கிட்டத்தட்ட யாகூப் மேமனுக்கு மரண தண்டனை கூடாது என்று சொல்லும் பயங்கரவாத ஆதரவாளர்களின் குரலையே பிரதிபலிக்கின்றது. எல்லா சமயங்களிலும் உளவு அமைப்புக்கு ஒற்று சொல்பவர்களையும் தகவல் அளிப்பவர்களையும் உதவுபவர்களையும் எந்தவொரு அரசும் காப்பாற்றிக் கொண்டிருப்பதில்லை. அப்படிக் காப்பாற்றுவது ஒட்டு மொத்த குடிமக்களுக்கான நீதியில் தலையிடாதவரை ஓரளவுக்கு காப்பாற்றுவார்கள். இந்த இடத்தில் அப்படி எந்தவொரு உத்தரவாதத்தையும் அரசாங்கமோ ஏன் பி.ராமனோ யாகூபுக்கு அளித்ததாக பி.ராமன் எங்குமே சொல்லவில்லை. அவராகவே தனிப்பட்டக் கருத்தாக அவனது மரண தண்டனை மீதான கருணை மனுவினை அரசு ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்கிறார். இது அவரது தனிப்பட்டக் கருத்து மட்டுமே அன்றி இந்திய அரசின் கருத்து அல்ல. அப்படியான உடன்படிக்கை அவனுடன் என்றும் போடப் படவில்லை உறுதி மொழிகள் எதுவும் அரசாங்க முத்திரையுடன் தரப்படவில்லை என்பதே உண்மை நிலவரம். ஆகவே இந்திய அரசு எந்த துரோகத்தையும் யாகூபுக்குச் செய்து விடவில்லை என்பது உறுதி. நான் ராமன் உளறுவதாகச் சொன்னது இது போன்று இந்திய மக்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களையே. இதை அவர் ரிடீஃபுக்கு அனுப்பியிருக்கக் கூடாது. அவர்கள் முன்பே வெளியிட்டிருந்தால் இது ஒட்டு மொத்த விசாரணையையும் பாதித்திருக்கும். மாபெரும் தவறைச் செய்து தனது அத்தனை வருட உளவு வாழ்வினையும் பெயரையும் இந்தியாவின் பாதுகாப்பையும் அவர் ஒட்டு மொத்தமாக அழித்திருந்திருப்பார். நல்ல வேளையாக அவர் இறப்புக்குப் பின்னால் வந்தபடியால் அது தனது முழுத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மற்றபடி நான் ரா பற்றி குறிப்பிட்டிருப்பது அனைத்தும் அவரது புத்தகத்தில் அவரே எழுதியுள்ள தகவல்களே. அவரைப் பற்றிய ஒரு அறிமுகத்திற்காக அவற்றை அளித்திருக்கிறேன்

    ச.திருமலை

  19. இருவரும் ஒருவர் இல்லை என்பதையும் நான் அறிவேன் என்று படிக்கவும்

    ச.திருமலை

  20. //உங்கள் மறுவினை கிட்டத்தட்ட யாகூப் மேமனுக்கு மரண தண்டனை கூடாது என்று சொல்லும் பயங்கரவாத ஆதரவாளர்களின் குரலையே பிரதிபலிக்கின்றது. //

    Wrong understanding.

    I am not discussing here about him but about a subtle point in criminal justice system.

    Capital punishment is the ultimate punishment, which is not given to approvers. I don’t say approvers should go scotfree; but I only aver that the punishment meted out to approvers should differ from the ones given to others. If not, why to become an approver at all? Why should be there a system of approver in the Criminal Justice administration? As long as it is there, so long as the difference in punishment is in place. Further, in this case, I have said, it is important to unravel the whole intricate network of conspiracies for which, it is essential to have an insider in the net of the prosecuting agencies and Yakub Memon was that catch. In ordinary crimes, even though no such intricate web is available; even available, it is not that difficult to unravel, there are approvers coming forward; or the agencies cultivate them. Finally, such approvers are not given the maximum punishment as given to the other accused. If they are not treated differently, police won’t get approvers.

    I think this point seems to have not been highlighted in the proceedings. If it had been, the punishment would have been scaled down like LI.

    Your article discusses the issue from the common standpoint. Mine is legal. In law, there are no emotions felt or released – which will make a person annoyed at us, and even charge us with unpatriotism. We can’t help it; and You can’t help yours. We live in two different worlds.

    However, the best way to skupper my point for you is to say Yakub Memon was not an approver at all. He was caught and treated all along like other accused. He spilled the beans only out of fear of third degree methods. This is the right way to argue back. Because I cannot controvert your point as I am writing out of hearsay read in newspapers only,

  21. அன்பின் ஸ்ரீ பாண்டியன்

    உங்கள் ஏற்கமுடியாத சமன்பாட்டை முதலில் துலக்கி விடுகிறேன்.

    ஆர்வி தமிழ் ஹிந்து தளத்தின் மூத்த வாசகர்களுள் ஒருவரும் கூட.

    ஸிலிகான் ஷெல்ஃப் என்ற உபயோககரமான ஒரு தளத்தை நடத்தி வருகிறார். இன்னும் ஓரிரண்டு தளங்களும் கூட.

    ஒரே பெயரில் தொடர்ந்து எழுதிவருபவர்.

    காட்டமான எதிர்க்கருத்துக்களை தீர்க்கமான வாதங்களுடன் முன்வைப்பவர். நீங்கள் இவருடைய வாதங்களுடன் முரண்படலாம். அதில் காணப்படும் ஆழமான தர்க்கங்களை ஒதுக்க முடியாது.குதர்க்கவாதங்கள் விதிவிலக்காக மட்டிலும் ஆர்வியிடம் காணப்படும்.

    முக்கியமாக தன்னுடைய பெட் தியரிகளை ஜபர்தஸ்தியாக ஒரு இழையில் நுழைத்து இழையின் போக்கை மாற்றும் அவலத்தைச் செய்யாதவர் ஆர்வி. எதிர்வாதமே செய்தாலுமே இழையை ஒட்டிய விவாதம் செய்யும் நேர்மையை உடையவர் ஆர்வி.

  22. //. Because I cannot controvert your point as I am writing out of hearsay read in newspapers only,//

    உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை விட பத்திரிகைகள் வழங்கும் ‘நீதி’ தான் சரியானது என்று சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா ?

  23. அன்பின் ஸ்ரீ திருமலை

    தீபாவளியின் போது நமுத்துப்போன பட்டாசைக் கொளுத்திப்போட்ட பிறகு அது வெடிக்கவும் வெடிக்காமல் அணைந்தும் போகாமல் மினுக்கு மினுக்கென்று மினுக்கி ஸஸ்பென்ஸ் கொடுக்கும். அது போல நீங்கள் கேள்வி கேட்டபின்னர் அன்பர் அவர்களது தரப்பில் பதில் வருமா வராதா என்று ………. ஸஸ்பென்ஸாக இருந்தது.

    நீங்கள் வினாவெழுப்பிய பிறகு அன்பர் அவர்கள் உங்கள் மீது அபாண்டமாகச் சாட்டிய குற்றத்திற்கு ஏதாவது சொல்லுவார் என்று அப்பாவி வாசகர்களைப்போல நானும் ……… வரும் ஆனாக்க வராது என்று ஸஸ்பென்ஸாகக் காத்திருந்தேன். பட்டாசு கடேசில வெடிக்கவே இல்ல.ம்………..

    \\ One should not trash good men like Raman like this as if they are against our country or common criminals. \\

    ஸ்ரீ ராமன் அவர்களது கருத்துக்களில் சிலதை நீங்கள் verbatim quote செய்து அதை விதந்தோதிய பிறகும் ராமன் அவர்களை நீங்கள் ***TRASH** செய்த படிக்கு ஒரு கருத்து அன்பர் அவர்களால் பகிரப்பட்டது அக்ரமம். அது வெட்டியாக விவாதத்தை தடம் புரளச்செய்வதாகவே பார்க்கப்படும். அது பற்றி ஏதும் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். வழக்கம் போல அன்பர் அவர்கள் அவருடைய விதண்டாவாதத்திற்கு பதிலளிக்காமல் கடந்து செல்கிறார்.

    …………..

    சட்ட மேதையாக அன்பர் அவர்கள் தெரிவித்த கருத்து சிந்திக்க வைக்கிறது.

    LEGAL LUMINARY SAHEB ஆவர்கள் பெரிய மனது பண்ணி …….அவர்களது கீழ்க்கண்ட வாசகத்தில் உள்ள கருத்துக்களைப் பற்றி மெய்யான விபரங்களை பகிர விக்ஞாபித்துக்கொள்கிறேன். ஒரேயடிக்க தேசாபிமானம் என்று தத்தா பித்தா என்று இருக்கும் அப்பாவி வாசகர்களைப் போலல்லாமல் சாஹேப் அவர்கள் சமூஹம் அறிவு ஜீவியாக சட்ட மேதையாக உணர்வுகளுக்கு இடம் கொடாது சட்டக்கோப்புகளின் பாற்பட்டு மட்டுமே கீழ்க்கண்ட சம்சயங்களை தெளிவு படுத்தவும்.

    \\ I am not discussing here about him but about a subtle point in criminal justice system. Capital punishment is the ultimate punishment, which is not given to approvers. I don’t say approvers should go scotfree; \\ Your article discusses the issue from the common standpoint. Mine is legal. In law, there are no emotions felt or released – which will make a person annoyed at us, and even charge us with unpatriotism. \\

    1. Hope the legal luminary saheb read the judgment.
    2. Thirumalai’s article explicitly narrate about one Badshah Bhai who was an approver in the court proceedings and was not given capital punishment
    3. Now legal luminary saheb may please enlighten the readers as to whether yakub memon was an approver as per the court proceedings or alleged as approver by vested interests. If as per court proceedings he was an approver, Saheb may please quote the relevant extract of the judgment please.

    சாஹேப் அவர்களது சமூஹம் சட்டக்கோப்புகளிலிருந்து மேற்கண்ட வினாக்களை அணுகினால் அப்பாவி வாசகர்களும் மெய்யாலுமே கருத்துத் தெளிவு பெறுவார்கள். ஆயினும் வழக்கம் போல அன்பர் அவர்கள் தன்னுடைய கருத்தை விவரிக்காது கடந்து சென்றால் அன்பர் அவர்கள் மட்டிலுமே உணர்வு பூர்வமாக இந்த விஷயத்தை அணுகியதாக வாசகர்கள் கருத வாய்ப்புண்டு.

    ம்………… இந்த முறையாவது பட்டாசு நமுத்துப் போகாது வெடிக்குமா பார்க்கிறேன்.

  24. எச்சூஸ் மீ ரங்கன் ஐயா

    நீங்கள் உணர்வுமேலிட்டு சுதந்திரதினமும் அதுவுமாக தேசாபிமானம் மேலிட்டு கருத்துத் தெரிவித்துள்ளீர்கள்.

    அன்பர் ஐயா அவர்கள் போற போக்கில் கேழ்ப்பார் பேச்சைக்கேட்டும் நூஸ்பேப்பர் வாசித்தும் மட்டும் கருத்துத் தெரிவிக்கவில்லை என்று அறியக்கடவீர். ஐயா அவர்கள் கிரிமினல் சட்ட நுணுக்கங்களில் அறிவு பூர்வமாகவும் புகுந்து புறப்பட்டுள்ளார்.

    நம்மைப்போல் உணர்வு பூர்வமாக இல்லாது அறிவு பூர்வமாக ஐயா அவர்கள் யாகூப் மேமன் தீர்ப்பில் பூந்து புறப்பட்டு அவர் அப்ரூவர் தான்னு பட்டாசு வெடிக்கப்போகிறார்னு நான் சொல்லுகிறேன்.

    பாருங்கள் பட்டாசு வெடிக்கிறதா இல்லையான்னு.

  25. என்னுடைய RV = BS குழப்பம் தீர்ந்தது . ஐயா BS அவர்கள திடீர் என்று நான் IIM கணபதி ராமன் என்ற பெயரில் இந்த வருடம் இருந்து எழுத போவது இல்லை என்று நீங்கள் திண்ணையில் சொன்னீர்கள் . ஆக IIM, BS என்று எனக்குள் ஏகப்பட்ட குழப்பம்

  26. உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை விட பத்திரிகைகள் வழங்கும் ‘நீதி’ தான் சரியானது என்று சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா ?//

    Don’t take like that. You can take like as under:

    If, indeed, it is the Indian investigating agencies that had persuaded Memon to come to India with his family and tell all, under the assurance that he would be treated differently i.e. not on exact parallel with the other accused, (not let off, but no capital punishment) and this point was not brought to the notice of the court making the court proceed under the conclusion that he was brought to India by force and coughed up all information under harsh police methods.

    You must always bear in mind that judgement is written based on the material placed before the Bench. If the material has suppressed certain things to the convenience of prosecution or petitioner, there will be miscarriage of justice. Court cannot know where and what has been suppressed unless the defence lawyers tell the Bench, in which case the court will order for full details. Miscarriage of justice is not a conscious act; it is always a logical corollary. However, such miscarriage can be rectified on a later date if a curative petition is filed bringing the suppressed matter to light. The rectification may happen even after many decades ie. after the falsely sentenced person has undergone one third of the punishment. In Pune, it happened a few years ago. A Tamil coolie (Pune has a lot of them) was arrested for murder of a person. The prosecution proved the crime beyond doubt and the court awarded LI to him. About 30 years he spent in jail because the judgement itself came many years after while he was under trail. One day, the police constable concerned died leaving behind a confessional letter. He had suffered from a disease for a long time and out of pricks of conscience, he wrote the letter – which explained the background with details which made him frame the innocent man. The letter was produced before the Court and the court examined the evidences given by the letter afresh and concluded that the murderer was someone else. The man was released and the court ordered compensation. He travelled back to his home state

    (Don’t link this example with Memon case. It is just an example of how a case of miscarriage of justice could be re-opened after a long time, only.). Similar examples are found in US and UK also : persons proven innocent and getting released after they have served many years in jail 🙂

    Therefore, we cannot at all criticise a judgement as the Judges themselves are restricted in their observance i.e. they cannot observe a matter which is suppressed or kept out of their sight. They are humans, not super humans to imagine things. Further, based on any imagination or speculations, judgement is not written. They require either solid or circumstantial evidences to proceed to the conclusion.

    So, here judgement is not criticised. Only that S Thirumalai should categorically state that Memon was as good (=) as other accused; he didn’t surrender on any promise; he gave all information only under compulsion and threat etc. In that case, no argument; and I have nothing to controvert – this is what I have meant. Indeed, a curative petition was filed by Memon lawyers. But it does not refer to the fact his turning approver. Which means the approver theory is not substantiated. The curative petition was to postpone the execution under some provisions available even now: a four months time. Perhaps they thought the 4 month-time can be used to make some fresh arguments. The petition was heard and found to be weak; hence, rejected.

  27. //காட்டமான எதிர்க்கருத்துக்களை தீர்க்கமான வாதங்களுடன் முன்வைப்பவர். நீங்கள் இவருடைய வாதங்களுடன் முரண்படலாம். அதில் காணப்படும் ஆழமான தர்க்கங்களை ஒதுக்க முடியாது.குதர்க்கவாதங்கள் விதிவிலக்காக மட்டிலும் ஆர்வியிடம் காணப்படும்.//

    இன்னொரு குணத்தையும் சேர்க்க வேண்டும் கண்டிப்பாக.

    தன் தளத்தில் எவ்வளவுதான் மாற்றுக்கருத்தை (அவர் எழுதியதை மறுத்து) வாசகர் இட்டாலும் அவற்றை அப்படியே வெளியிடுபவர் மட்டுமன்று; மாற்றுக்கருத்தை வைப்பரை அசிங்கமாக த்னிநபர் தாக்குதல் நடாத்தமாட்டார். தன்மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை மறுத்து விளக்குவாரேயன்றி, எழுதியவரைத் தூற்றும் வழக்கமில்லை. அந்த விமர்சனம் அவரின் தந்தையார் எழுத்துக்களின் மேல் வைக்கப்பட்டாலும் கூட:

    ஓரெடுத்துக்காட்டு:

    ஒரு முறை திரு இராமசாமி (ஆர் வி யின் தந்தை) ஒரு நூலை எழதிவெளியிட்டதாக ஆர் வி ஒரு பதிவு எழுதினார். அந்நூலையும் விவரித்து இருந்தார். அந்நூல் இந்துத்வா கொள்கை பற்றி.

    திரு இராமசாமியின் கருத்தாவது இந்துத்வா என்றாலே பலர் நெகட்டிவ் ஆக புரியத்தொடங்கியிருக்கிறார்கள் என்று தொடங்கி, இந்துத்வா என்றால் என்ன? அதன் குணங்கள் எப்படி அனைவருக்குமே பிடிக்கும் என்று விளக்கியிருந்தார்.

    என் மறுவினை இப்படி அமைந்தது:

    இந்துத்வா இருவகையாகப் பார்க்கப்படும்.
    ஒன்று மதம் மதமே சார்ந்து அதை விட்டு விலகாமல் மக்களிடம் போய்ச் சேர்வது. இன்னொன்று; அரசியல் வழியாக வெளிவருவது.
    இரண்டாவதில் அரசியல் மதத்தையும் விழுங்க வாய்ப்புண்டு.

    முதல்வகை இந்துத்வா பிரச்சினையே இல்லை. அது பிறமதக்காரர்களோடு நல்லிணக்கமாக இணங்கும். எ.கா: காஞ்சி மடத்துக்குப் பக்கத்திலேயே இருக்கும் மஜுதி வரலாறு. ஆதிகாலம் தொட்டு அம்மசூதியும் மடமும் நல்லிணக்கத்தோடு இண்ங்குகின்றன. மஹா பெரியவாள் அதைப்பற்றிச் சிலாகித்துச் சொல்லிய தருணங்கள் உண்டு. அதே போல, இன்றைய செய்தித்தாளின்படி, நேபால் இசுலாமியர்கள் நேபால் ஒரு இந்துநாடாகவே இருக்கவேண்டுமென்று விழைகிறார்களாம். ஏனென்றால், மாவோயிஸ்டுகள் அந்நாட்டை ஒரு மதச்சார்பற்ற நாடாக்க வேண்டுமென விழைவது மட்டுமல்லாமல், மக்களும் விழைகிறார்கள் என்று சொன்னதால், இசுலாமியர்கள் தாங்கள் அப்படி விழையவே இல்லை; ஏனென்றால், மதச்சார்பற்ற் நாடாயிருந்தால் எங்கள் மதத்துக்கும் மாவோயிஸ்டுகள் வேட்டு வைப்பார்கள். இந்து நாட்டில்தான் நாங்கள் எவ்வித துன்புறுத்தலுக்கும் ஆளாகமல் இருப்போம் என்று சொல்லியிருக்கின்றனர். (நேற்றைய அல்லது இனறைய செய்தித்தாள்கள்படி).

    இது முதல்வகை இந்துத்வாவின் சாத்தியம். திரு இராமசாமி இதையே சொல்கிறார். அதே வேளையில் அவர் இரண்டாவது வகை இந்துத்வா இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளவே இல்லை. முதல் வகையால் பிரச்சினையே இல்லை. இரண்டாம் வகைதான் எல்லாராலும் பேசப்படுகிறது. இதுதான் நான் வைத்த விமர்சனம்.

    இqதை இன்னொருவர் என்றால், என் அப்பாவைப்பற்றியே விமர்சனமா? என்று ஃபக் ஆஃப் என்று சொல்லிவிட்டிருப்பார். ஆர் வி செய்யவில்லை. போய்ப் படித்துக் கொள்ளலாம். ஆர் வியின் வரிசையில் பத்ரி சேஷாத்ரியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    ஆக, ஆர் வியிடமிருந்து படித்துக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன.

    I don’t find any attackers on me in swarajyamag where I write freely under the name ERGO – which was already intimated to readers here. My latest criticism is on Jeyamohan. I enjoy freedom in mintamil where there is only one attacker on for differing views. Krishnakumar has left it. If not, I will be having two attackers there.

    We ought to mind the fact always that there are always different viewpoints in society; and we cannot accept all; but it is culture to put up with them all, agreeing to disagree. I hope this democratic spirit will continue to permeate here too, although it gets ruptured many times. Allowing people freedom to express different views is the essence of Hindutva.

  28. அன்பின் ஸ்ரீ பாண்டியன்

    இது என்ன ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள்

    \\ ஐயா BS அவர்கள திடீர் என்று நான் IIM கணபதி ராமன் என்ற பெயரில் இந்த வருடம் இருந்து எழுத போவது இல்லை என்று நீங்கள் திண்ணையில் சொன்னீர்கள் . ஆக IIM, BS என்று எனக்குள் ஏகப்பட்ட குழப்பம் \\

    பால சுந்தரம் கிருஷ்ணா / பால சுந்தர விநாயகம் / BS என்ற பெயர்களில் இயங்கும் ஒரே நபர் இதற்கு முன் வேறு பெயரில் இயங்கியதே இல்லை (அப்படி இருக்குமா என்று சம்சயப் படுபவர்கள் அப்படி நினைத்துக் குழம்பிக்கொள்ளலாம்) என்று அல்லவா கமுக்கமாக அவருடைய உத்தரங்கள் ………… வரும் ஆனா வராது என்ற பெயரில் …….. தீபாவளி பட்டாசு வெடிக்குமா வெடிக்காதா என்ற ரீதியில் வந்திருக்கின்றன.

    அய் அய் எம் கணபதிராமன் என்ற அன்பர் இதற்கு முன்னர் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ, திருவாழ்மார்பன், காவ்யா, தமிழ் என்ற பெயர்களில் கலாய்த்திருக்கிறாரே.

    தமிழ் என்ற பெயரில் இந்த தளத்தில் வெ.சா ஐயாவை வாழ்த்திய இந்த நபர் அய் அய் எம் கணபதிராமன் என்ற பெயரில் திண்ணை தளத்தில் தூற்றியது உலகம் அறிந்த விஷயமாயிற்றே. அது சமயம் திண்ணை தளத்தில் யாரும் பேசாதிருந்த போது அதை நான் அழுத்தம் திருத்தமாக அப்போது ஸ்ரீமதி பவளசங்கரி அம்மையாருக்குச் சுட்டிக்காட்டியதும் கூட என் நினைவில் வருகிறது.

    தூற்றுதலின் இலக்கணம் என்ன என்பதற்கு அது சாக்ஷி ஆயிற்றே. தூறல் நின்னு போச்சுன்னு நெனச்சேன். நான் அகழ்வாராய்ச்சி செய்து ஜகதலப்ரதாப தூற்றலைப் பகிரவும் வேண்டுமோ?

  29. பேரன்பிற்குரிய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலசுந்தரம் கிருஷ்ணா எனப்படும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பால சுந்தர வினாயகம் எனப்படும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பிஎஸ் அவர்கள் சமூஹத்திற்கு

    \\ தன் தளத்தில் எவ்வளவுதான் மாற்றுக்கருத்தை (அவர் எழுதியதை மறுத்து) வாசகர் இட்டாலும் அவற்றை அப்படியே வெளியிடுபவர் மட்டுமன்று; மாற்றுக்கருத்தை வைப்பரை அசிங்கமாக த்னிநபர் தாக்குதல் நடாத்தமாட்டார். \\

    தனிநபர் தாக்குதல் தவறு என்று ……….. என்று………. தேவரீர் சாதிக்கிறீர்களா…………… வியப்பளிக்கிறது.

    தேவரீருடைய ஜாதிக்காழ்ப்புக் கருத்துக்களுக்கும் ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்களுக்கும் பயங்கரவாத ஆப்ரஹாமிய (தேசிய ஹைந்தவ ஆப்ரஹாமியம் அல்ல) ஆதரவுக் கருத்துக்களுக்கும்…………..தமிழ் மொழியை, தமிழ் வித்வான்களை, தமிழ்ச் சான்றோர்களை, தமிழிலக்கியங்களை………… தலித்துகளை தன் வாழ்நாள் முழுதும் இழிவு செய்த……….. ஹிந்து மதத்தை இடைவிடாது இழிவு செய்த, பிள்ளையார் சிலைகளை தெருத்தெருவாகப் போட்டுடைத்த………… ஆதிக்கஜாதி இனவெறி ஈ.வெ.ராமசாமிநாயக்கர் அவர்களை தாங்கள் விதந்தோதும் கருத்துக்களுக்கும் எதிர்க்கருத்து வைப்பவர்கள் அனைவரையும்…………

    அவர்களது முகத்தை நேரில் காணாத போதும் …………. அவர்களுடைய ஜாதிச்சான்றிதழைக் காணாத போதும் கூட….. அவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்றும்…………. அவர்கள் பார்ப்பனர்கள் ஆதலால் தான் அவ்வாறு கருத்துப்பகிர்கிறார்கள் என்று……… தாங்கள் இந்த தளத்திலும் ஏனைய தளத்திலும் கருத்துக்கள் பதிந்துள்ளது உலகம் அறிந்ததே. இப்படிப்பட்ட கருத்து வாழ்த்தா அல்லது தூற்றலா…………. தனிநபர் தாக்குதலா இல்லையா………… என்பதனை சிறியேன் தங்களுக்கும் தளத்தை வாசிக்கும் ஏனைய வாசக அன்பர்களுக்கும் விட்டு விடுகிறேன்.

    வள்ளல் அருணகிரிப்பெருமானிலிருந்து தாங்கள் தூற்றிய ஹிந்துச் சான்றோர்களின் பட்டியல் வெகு நீளம்.

    வெளிப்படையாக சைவ சமயத்தை வெறுப்பதாக இந்த தளத்தில் கருத்துப்பகிர்ந்துள்ளீர்கள். இது வாழ்த்தா தூற்றலா?

    ஹிந்து மதத்தை இகழ்பவர்கள் அவர்கள் பார்ப்பனர்களாக இருந்தாலும் தங்களுக்கு ஆப்தர்கள். எந்த ஜாதியைச் சார்ந்தவர்களாயினும் ஹிந்து மதத்தை சரியான படிக்கு மக்களிடம் விளக்குபவர்களும் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடும் எந்த ஒரு இயக்கத்தையும் தரம் தாழ்த்தி தூற்றுவது தங்கள் செயல்பாடு. ஹிந்துமதத்தைப் பற்றிய பொய்த்தகவல்களைப் பகிர்ந்துள்ள அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் என்ற அன்பரை தாங்கள் விதந்தோதியுள்ளமையும் அதற்கு மறுப்பு மடல்கள் எழுதியுள்ள பூஜ்ய ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களை தளம் தளமாக தாங்கள் தூற்றியுள்ளமையும் உலகம் அறிந்ததே. இதே தளத்தில் இதே பெயரில் தேவரீர் டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களைத் தாங்கள் தரமின்றித் தூற்றியமைக்கு வாசகம் வாசகமாக சிறியேன் தகுந்த தரவுகளுடன் மறுப்பு தெரிவித்தமையும் உலகம் அறிந்ததே.

    தமிழ் ஹிந்து தளத்தின் ஒட்டு மொத்த ஆசிரியர் குழுவினரையும் இவர்கள் பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பன ஆதரவாளர்கள் என்று தாங்கள் இதே தளத்தில் சிறிது காலம் முன் சிறுமைப்படுத்தியதையும் இந்த தளத்து வாசகர்கள் அறிவர். இப்படி சிறுமைப்படுத்தியது வாழ்த்தா அல்லது தூற்றுதலா என்பதை தேவரீடைய மனசாக்ஷிக்கும் வாசகர்களது புரிதலுக்கும் விட்டு விடுகிறேன்.

    தமிழ் ஹிந்து தளத்தை பிற தளங்களில் தாங்கள் தூற்றிக் கருத்துப் பகிர்ந்த போது அந்த தூற்றல் மொழிகள் தங்களுக்கு உகப்பளித்திருக்கலாம். தங்களுடைய மட்டில்லாத தூற்றல் மொழிகளையும் பொருட் படுத்தாது தமிழ் ஹிந்து தளம் தங்களுக்கு இங்கு கருத்துப் பகிர அனுமதித்திருப்பது தள நிர்வாகிகளின் பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று வாசகர்கள் அறிவர்.

    ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தைச் சார்ந்த ஸ்வயம் சேவகர் என்று மட்டிலும் தான் எனக்குத் தெரியும். அவர் பார்ப்பனரா செட்டியாரா தலித்தா என்று ஏதும் எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவச்யமும் இல்லை. சங்கத்தில் பயிற்சி பெற்ற நான் என்னை எந்த ஒரு தளத்திலும் என்னுடைய ஜாதி இன்னது என்று எங்கும் எப்போதும் சொல்லியதில்லை.அனைத்து ஜாதி அன்பர்களுடனும் (என்னுடைய ஷாகாவில் இஸ்லாமிய சஹோதரர்களும் இருந்துள்ளனர் என்றபடிக்கு மாற்று மத அன்பர்களுடனும்) பழகிய எனக்கு ஒருவருடைய கருத்தை மட்டும் அவதானித்துத் தான் வழக்கம். ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் பகிரும் கருத்துக்களை அவர் பார்ப்பனர் என்ற படிக்கே அவர் பகிர்கிறார் என்று இந்த தளத்தில் தாங்கள் கருத்துப் பதிந்தது வாழ்த்தா தூற்றலா. தனிநபர் தாக்குதலா இல்லையா.

    அக்னிஹோத்ரம் தாத்தாசாரியார் என்ற பார்ப்பனரது கருத்துக்களை நாங்கள் ஒதுக்குவதற்கும் அவரது கருத்துக்களுக்கு மறுப்பெழுதிய பூஜ்ய ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களை விதந்தோதுவற்கும் அலகீடு ஜாதி அல்ல. ஸர்வ நிச்சயமாக அதன் அலகீடு ஜாதிகளைக் கடந்த ஹிந்து மதப்பற்று என்று அறியக்கடவீர்.

    இந்த இரண்டு பேரைப்பற்றியதான தங்களது செயல்பாடு தங்களது ஹிந்துமதக்காழ்ப்பை………….. ஹிந்துமதக்காழ்ப்பை மட்டிலும் வெளிப்படுத்துகிறது என்றும் உலகம் அறியும். தங்களுக்கு ஹிந்து மதக்காழ்ப்பு கொள்ள எந்த அளவுக்கு உரிமையுள்ளதோ அதே அளவு உரிமை அதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கும் ஒவ்வொரு அன்பருக்கும் உள்ளது என்று அறியக்கடவீர்.

    அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயருடன் பாலசுந்தரம் கிருஷ்ணா என்ற பெயரிலோ பாலசுந்தர வினாயகம் என்ற பெயரிலோ பிஎஸ் என்ற பெயரிலோ யாரும் கருத்துப்பரிவர்த்தனம் செய்ததாக எனக்கு நினைவில்லை. இந்தப் பெயரில் கருத்துப் பகிரும் அன்பர் அவர்களோ ஏனைய வாசகர்களோ அமரர் ஸ்ரீ மலர் மன்னன் மஹாசயருடன் இந்தப்பெயரில் பொதுதள விவாதங்கள் ஏதும் நிகழ்ந்திருந்தால் அதன் உரலைப் பகிரவும். என்னுடைய நினைவில் வராத எனக்குத் தெரியாத விஷயத்தை அப்டேட் செய்து கொள்கிறேன்.

  30. ஸ்ரீ வெ.சா ஐயா அவர்களுக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் கர்நாடகத்தில் விருது வழங்கப்பட்டது. அதையொட்டி அந்த விழாநிகழ்வுகளை வ்யாசமாக வடித்து தமிழ் ஹிந்துவிலும் திண்ணையிலும் ஸ்ரீ வெ.சா ஐயா அவர்கள் ஒரு வ்யாசமாக சமர்ப்பித்திருந்தார்.

    தமிழ் ஹிந்துவில் தமிழ் என்ற பெயரில் விமர்சனங்கள்

    https://tamilhindu.com/2013/08/honour-that-came-in-the-name-of-pb-srinivas/

    திண்ணையில் அய் அய் எம் கணபதிராமன் என்ற பெயரில் வந்த விமர்சனங்கள்

    https://puthu.thinnai.com/?p=22421

    இத்தகைய மனோதிடம் இல்லையென்றால் பொதுவெளியில் நுழைந்து ஏன் வருந்த வேண்டும்?
    Harsh? But wounds cannot be cured w/o searching !

    திண்ணையில் கருத்துக்களின் கடைசியில் பகிரப்பட்ட வாசகம் மேற்கண்ட வாசகம். Harsh என்று தெரிந்தே அழுத்தம் திருத்தமாகப் பகிரப்பட்ட கருத்து.

    ஒரு விழாவில் தான் கௌரவிக்கப்பட்டதாக ஒரு 80 வயது முதியவர் தமிழகம் கொண்டாடும் ஒரு விமர்சகர் கருத்துப் பகிர அதை தமிழ் என்ற பெயரிலும் கணபதிராமன் என்ற பெயரிலும் கருத்துப்பகிர்ந்த அன்பர் ……….. வெ சா அவர்களது கருத்துக்களை எப்படித் திரித்து………….. தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்பதனை வாசகர்கள் வாசித்தறியலாம்.

    அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களது ஒவ்வொரு வ்யாசமும் திரிக்கப்பட்டு…………… அவரைத் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்கியது தனிவ்யாசமாகவே பகிர்ந்தாலும் குறைவாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *