தமிழகத்துக்கு நயவஞ்சகம் இழைத்தாரா நரேந்திர மோடி?

நரேந்திர மோடி பாரதப் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்தே தமிழகத்தில் அவருக்கு எதிரான கடுமையான காழ்ப்பு தூண்டப் பட்டு வருகிறது. அவர் தமிழகம் வரும் பொழுதெல்லாம் கருப்புக் கொடி காட்டுவதும் கருப்பு பலூன்கள் பறக்க விடுவதும் திரும்பிப் போ மோடி என்று கோஷம் இடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வெறுப்பைத் திமுக கட்சியும் அதன் ஆதரவு ஊடகங்களும் மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து பெரும்பாலான தமிழர்கள் மூளைச் சலவை செய்யப் பட்டு விட்டனர். அந்த அளவுக்கு தமிழக மக்களினால் வெறுக்கப் படும் அளவுக்கு அவர் தமிழகத்துக்கு என்ன துரோகம் இழைத்தார்? தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தாரா? அவர்களின் நிலங்கள் வீடுகளை அடித்துப் பிடுங்கினாரா? அவர்களுக்கு மின்சாரம் அளிக்காமல் இருட்டில் தள்ளினாரா? பொது மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துத் தன் குடும்பத்துக்குக் கொடுத்தாரா? என்ன செய்தார் நரேந்திர மோடி? தமிழக மக்களுக்கு அவர் மீது ஏன் இவ்வளவு வெறுப்பும், காழ்ப்பும்? காரணம் என்ன? உண்மை நிலவரம் என்ன? அவர் மீது வெறுப்பும் காழ்ப்பும் கொள்வது நியாயம்தானா? அதற்கான ஏதேனும் குன்றிமணி அளவுக்கான காரணமாவது உள்ளனவா?

அவர் மீது பரப்பப் படும் பொய்யான குற்றசாட்டுக்களும் உண்மை நிலவரங்களும்:

தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை நரேந்திர மோடி தடை செய்தாரா?

கிடையாது. அப்பட்டமான பொய். ஜல்லிக்கட்டை தடை செய்தது அவருக்கு முந்தைய மன்மோகன் தலமையிலான திமுக அங்கம் வகித்த யுபிஏ அரசாங்கமும் அதன் காங்கிரஸ் அமைச்சரான ரமேஷ் ஜெயராம் என்பவரும் மட்டுமே. இதற்கு திமுகவும் உடைந்தையாக இருந்தது. ஆனால் பழி மட்டும் நரேந்திர மோடி மீது போடப் பட்டது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் மட்டுமே அதன் மீதான தடையை அவர் நீக்கி ஜல்லிக்கட்டைத் தொடர வைத்தார். ஆகவே ஜல்லிக்கட்டுக்காக வெறுக்க வேண்டும் என்றால் தமிழக மக்கள் அதைத் தடை செய்த காங்கிரஸையும் ராகுலையும் திமுகவையும் அல்லவா வெறுக்க வேண்டும். கோ பேக் ராகுல் கோ பேக் ஸ்டாலின் என்றல்லவா போராட வேண்டும்? மாறாக தடையை நீக்கிய நரேந்திர மோடி மீது கோபம் கொள்வது என்னவிதமான மனப்போக்கு?

நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணித்தாரா மோடி?

நீட் தேர்வை அமுல் செய்தது காங்கிரஸ், திமுக கூட்டணி மத்திய அரசு. அதை அமுல் படுத்தச் சொல்லி உத்தரவு போட்டது சுப்ரீம் கோர்ட். நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது மத்திய காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மோடி அரசாங்கம் மீற முடியாது. ஆக நீட் தேர்வை கொண்டு வந்த திமுக மீதும் காங்கிரஸ் மீதும் அல்லவா தமிழர்கள் கோபம் கொள்ள வேண்டும்? கோ பேக் சொல்ல வேண்டும்? மாறாக நரேந்திர மோடி மீது ஆத்திரம் கொள்வதில் ஏதாவது தர்க்க நியாயம் இருக்கிறதா என்ன?

இந்தியைத் திணிக்கிறாரா மோடி? தமிழுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் மோடி எதிரியா?

இன்று தமிழகத்தில் தமிழ் படிக்காமலேயே கல்லூரிக் கல்வி வரை முடித்து விடும் சாத்தியம் இருக்கிறது. ஆனால் தாய் மொழித் தமிழிலேயே ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறது மோடி அரசின் புதியக் கல்விக் கொள்கை. இது தமிழ் வளர்ச்சிக்கான அடித்தளம் அல்லவா? வரவேற்கவல்லவா செய்ய வேண்டும்? மேலும் தமிழ், ஆங்கிலம் தவிர இன்னொரு மொழியை ஒவ்வொரு மாணவரும் தேர்ந்தெடுத்துப் படித்துக் கொள்ளலாம் என்கிறது புதிய கல்விக் கொள்கை. அது எந்தவொரு இந்திய மொழியாகவும் இருக்கலாம். திராவிட இயக்கத் தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லித் தரப் படுகிறது ஆனால் அதே திக திமுகவினர் சாதாரண ஏழைக் குழைந்தகள் படிக்கும் அரசு பள்ளிகளில் மூன்றாவதாக ஒரு மொழி சொல்லித் தரக் கூடாது என்று ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பறிக்கும் அவர்களையல்லவா தமிழர்கள் எதிர்க்க வேண்டும்? கேள்வி கேட்க்க வேண்டும் மாறாக ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் மொழியில்தான் படிக்க வேண்டும் என்று உத்தரவு போடும் மோடியா தமிழ் மொழிக்கு எதிரி?

வெளிநாடுகளிலும் சரி இந்தியாவிற்குள்ளும் சரி மோடி ஒவ்வொரு பொது மேடைகளிலும் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் அதன் சிறப்புக்கள் குறித்தும் பேசுகிறார். துண்டு சீட்டு இன்றி ஒளையார் பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் மிக அற்புதமாக மேடைகளில் மேற்கோள் காட்டுகிறார். காங்கிரஸ் அரசால் மறைக்கப் பட்ட ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார், கீழடி ஆராய்ச்சிகளுக்கு நிதி அதிகரித்துள்ளார், ராஜேந்திர சோழன் பெயரை மும்பை துறைமுகத்துக்கு பா ஜ க அரசு சூட்டியுள்ளது. தமிழ் தெரியவில்லையே என்று வருத்தப் படுகிறார் மோடி. அவர் தேர்தலுக்காக இதைச் சொல்வதில்லை. தேர்தல் நடக்கும் வேறு மாநிலங்களில் அவர் அந்தப் பிற மாநில மொழிகளைப் பற்றி இவ்வளவு தூரம் பெருமையாக அவர் பேசுவதில்லையே? தமிழ் மொழியின் பெருமையையே மட்டுமே எங்கு போனாலும் பேசி வருகிறாரே. அவரா தமிழுக்கு எதிரி? ஜல்லிக் கட்டு நடக்கக் கூடாது என்று தடை திமுக காங்கிரஸ் அரசு விதித்த தடைகளை நீக்கிய மோடியா தமிழர்களுக்கு எதிரி? அவருக்கா காட்டுகிறீர்கள் கருப்புக் கொடி? இது நியாயமா? அறமா? தகுமா?

மீத்தேன் எடுப்பு போன்ற எரிவாயு திட்டங்கள் மூலமாக விவசாய நிலங்களை அழிக்கிறாரா மோடி?

மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைத் தீட்டியது மன்மோகன் தலமையிலான காங்கிரஸ் மட்டும் திமுக கூட்டணி அரசு. அதற்கான உத்தரவுக்குக் கையெழுத்திட்டவர் திமுக துணை முதல்வராக இருந்த ஸ்டாலின். எப்படியாவது மீத்தேன் எரிவாயு திட்டத்தைக் கொண்டு வந்தே தீருவோம் என்று சவால் விட்டவர் திமுகவின் மத்திய மந்திரி. ஆனால் மோடி அரசாங்கமோ காவிரிப் படுகை மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் அமுல் படுத்த மாட்டோம் என்கிறார்கள். அதே டெல்ட்டா பகுதிகளில் திமுகத் தலைவர்களின் சாராய ஆலைகள் விவசாய நிலங்களைப் பாழ் படுத்தி வருகின்றன அதை எவரும் கேள்வி கேட்ப்பதில்லை. தமிழர்கள் மீத்தேன் திட்டத்திற்காக யாரை எதிர்க்க வேண்டுமோ அவர்களை விட்டு விட்டு மோடியை எதிரியாகப் பாவித்து எதிர்க்கும் மர்மம் என்ன?

தமிழர்களின் நீராதாரங்களை மோடி பறிக்கிறாரா?

காவிரி ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்ட பின்னரும் அதை அமைக்காமல் தள்ளிப் போட்டது திமுக காங்கிரஸ் அரசாங்கம். ஆனால் அதை அமைத்தது மோடி அரசாங்கம். முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்தி அதன் நீர் கொள்ளளவை அதிகரிக்கும் உத்தரவு அமுல படுத்தியது மோடி அரசாங்கம். கல்லணை திட்டத்தை துவக்கி தமிழகத்தின் மிகப்பெரிய நீர் மேலாண்மை திட்டத்திற்கு நிதியுதவி அளித்தது மோடி அரசாங்கம். இன்னும் நதிநீர் இணைப்புகள் பெரும் பெரும் நீர் மேலாண்மைத் திட்டங்கள் தமிழகத்திற்கு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது மோடி அரசாங்கம். ஆனால் காவிரி ஆணையத்தை அமைக்க, முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தாத காங்கிரஸ் திமுக தலைவர்கள் விட்டு விட்டு தமிழகத்தின் நீர் ஆதாரத்திற்கு இவ்வளவு பெரிய உத்தரவுகளைப் போட்ட மோடியைத் திரும்பிப் போ என்று சொல்வது நன்றி கெட்ட ஒரு செயல் அல்லவா? முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக்கின் மணிமண்டபம்/ சிலை அமைத்த நன்றியுணர்வுடன் தமிழர்களுக்கு கோ பேக் என்று சொல்லி மோடியை அவமானப் படுத்த எப்படி மனம் வந்தது?

தமிழகத்திற்கு எந்த ஒரு ரயில்வே திட்டங்களையும் மோடி அரசு செயல் படுத்தவில்லையா?

2010ம் ஆண்டு முதல் மதுரை போடி ரயில் பாதையை நிறுத்தி வைத்து அதன் தண்டவாளங்களையும் அகற்றியது முந்தைய காங்கிரஸ் திமுக அரசுகள். ஆனால் தான் ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குள் மோடி அரசாங்கம் அந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி இன்று மதுரை முதல் தேனி வரையிலான அகல பாதை போட்டு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு விட்டது. விரைவில் தேனி போடி ரயில்வே லைன் போட்டு முடிக்கப்பட்டு விடும். வரும் மே மாதம் முதல் தேனி சென்னை ரெயில் போக்குவரத்து தொடங்கப் போகிறது. அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டம் இது. இது தவிர்த்து சென்னையில் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களையும், பிற ரயில்வே திட்டங்களையும் பெரும் அளவில் அறிவித்து நிதியுதவி செய்துள்ளது மோடி அரசாங்கம். நீண்ட காலம் முடக்கப்பட்ட மதுரை போடி ரயில் திட்டத்தை செயல்படுத்தியது மோடி அரசாங்கம். ஆனால் நிறுத்தி வந்தவர்களை வரவேற்று விட்டு செயல்படுத்திய மோடியைத் திரும்பிப் போ என்று சொல்வது அறமுள்ள ஒரு செயலா? அதை அறம் படித்த தமிழர்கள் செய்யலாமா?

மீனவர்களுக்கு எதிரியா மோடி?

சென்ற காங்கிரஸ் திமுக கூட்டணி அரசாங்கத்தின் பொழுது நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கைச் சிறையில் வாடினார்கள். ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். ஆனால் மோடி பதவி ஏற்றதிலிருந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது அநேகமாகத் தடுக்கப்பட்டு விட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர்கள் இலங்கைக்கு அடிக்கடி சென்று மீனவர்கள் துன்பப்படுத்த படாமல் பாதுகாத்து வருகிறார்கள். மீனவர்களை இலங்கைப் படையினர் சுட்டுக் கொல்வது நிறுத்தப் பட்டுள்ளது. இப்படி மீனவர்களின் பாதுகாப்புக்காக உழைக்கும் மோடியைப் பார்த்து திரும்பிப் போ என்று சொல்வது கருப்புக் கொடி காட்டுவது நியாயமான செயலா என்பதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவரா மோடி?

இலங்கையில் நடந்த போரின் பொழுது பெரும் அளவில் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது உண்ணாவிரத நாடகம் ஆடியது கருணாநிதி. அதற்கு ஆதரவாக இருந்தது சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கம். ஆனால் தற்போதைய மோடி அரசாங்கம் இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு நிதியுதவி அளித்து ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் நேரில் சென்று அவர்களுக்காகச் செயல்படும் நலத்திட்டங்களை பார்வையிட்ட ஒரே இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அப்படி இந்திய தமிழர்களுக்காக மட்டுமின்றி இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காகவே உழைத்து வரும் நரேந்திர மோடியா தமிழர்களின் எதிரி? இலங்கைத் தமிழர்களின் படுகொலை களுக்குக் காரணமான ராகுலையும்ம், சோனியாவைய்யும், ஸ்டாலினையும் அல்லவா தமிழர்கள் சொல்லி இருந்திருக்க வேண்டும் திரும்பிப் போ என்று? மோடியை இப்படி அவமதித்தது எவ்வளவு மோசமான ஒரு செயல்?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காமல் ஏமாற்றுகிறாரா மோடி?

தமிழர்கள் தன்னை கோ பேக் மோடி என்று சொல்லி அவமானப் படுத்திய பொழுதும், கருப்புக் கொடி காட்டிய பொழுதும், பத்திரிகை, டிவி மற்றும் திராவிடக் கட்சிகளின் பொய் பிரசாரங்களால் தமிழர்கள் தன்னைக் கடுமையாக எதிர்த்த பொழுதும், ஒரு சீட்டு கூட அளிக்காத பொழுதும் தமிழகத்திற்கு பெரும் பெரும் நலத் திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்தும் நிதி ஒதுக்கியும் செயல்படுத்தியும் வருகிறார் மோடி. அதில் முக்கியமான ஒரு திட்டம் மதுரையில் 20000 கோடி ரூபாய்கள் செலவில் ஜப்பான் நிதியுதவியுடன் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை. அதற்கான இடத்தை கையகப்படுத்துவதில் தமிழக அரசினால் நிகழ்ந்த கால தாமதத்தால் கொரோனா பாதிப்புகளால் இந்தத் திட்டம் துவக்கப்பட்டது சற்று கால தாமதமாகி விட்டது. நிச்சயமாக 2023ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப் படும் என்ற உறுதிமொழி மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அளித்துள்ளார். தாமதத்திற்கு காரணம் மாநில அரசு என்று சொன்னது மதுரையின் கம்யூனிஸ்ட் கட்சி எம் பியே. கொரோனாவால் தாமதம் ஆகி விட்டது என்று மாநில அமைச்சர் உதயகுமார் ஒத்துக் கொள்கிறார். இருந்தாலும் பழி மோடி மீது போடப்பட்ட அவரைத் தமிழர்கள் வெறுக்கும் வண்ணம் செய்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் தவிர தமிழகம் முழுவதும் 4 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை இதே மோடி அரசாங்கம் கட்டி அவை அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவே? அதற்காக எவரேனும் மோடிக்கு நன்றி சொன்னார்களா? கடந்த 70 ஆண்டு கால ஆட்சியில் எந்த ஒரு பெரிய சுகாதாரத் திட்டத்தையும் அறிவிக்காத காங்கிரஸையும் அதன் தலைவர் ராகுலையும் தமிழர்கள் வரவேற்பதும் பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்புவதும் தனது 6 ஆண்டு கால ஆட்சிக்குள் இவ்வளவு பெரிய மகத்தான திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கி செயல்படுத்தியும் வரும் மோடியை திரும்பிப் போ என்று சொல்வது என்னவிதமான நோய்க்கூறு மனநிலை?

தமிழகத்திற்கு எந்த நிதியுதவியும் திட்டங்களும் அளிக்காமல் வஞ்சித்தாரா மோடி?

தமிழகத்திற்கு மோடி அரசாங்கம் கடந்த 2014 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையில் பல லட்சம் கோடி திட்டங்கள் அறிவிக்கப் பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே, சாலை, பொது சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, கழிவறைகள், வீடுகள், காப்பீடு, விவசாயிகள் நலன்கள், ஏழைகளுக்கு உதவிகள், தொழில் மேம்பாடுகள், சிறு குறுந்தொழில் வளர்ச்சி என்று நூற்றுக்கணக்கான நலத் திட்டங்கள் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மோடி அரசாங்கம் பெரும் அளவில் உதவி வருகின்றது. சில புள்ளி விவரங்கள் கீழே:

கடந்த காங்கிரஸ் திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு அளிக்கப் பட்ட திட்டங்கள் நிதியை விட மோடி அரசாங்கம் 74% கூடுதல் நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. 2009 முதல் 2014 வரை காங்கிரஸ் திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 56971 கோடி ரூபாய்கள். ஆனால் 2014 முதல் 2019 வரை மோடி அரசு தமிழக அரசு தமிழக அரசுக்கு வழங்கிய நிதி 98911 கோடி ரூபாய்கள் இது காங்கிரஸ் அரசை விட 74% அதிகமான நிதி ஒதுக்கீடாகும். இதற்காகவா வெறுக்கிறீர்கள் நரேந்திர மோடியை?

  • ஜன் தன் திட்டம் மூலமாக 94,10,000 தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் 1600 கோடி ரூபாய்கள் வரவு வைக்கப்பட்டுள்ளது.
  • மோடி அரசின் ஜன் சுரக்‌ஷணா என்ற காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் 1 கோடியே 14 லட்சம் நபர்களுக்கு முதியோர் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது
  • பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்யா இன்சூரன்ஸ் திட்டத்தில் பயன் அடைந்தவர்கள் 16% பேர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்
  • தொழில் துவங்குவதற்கு அளிக்கப்படும் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே மிக அதிகமான பயனாளர்கள் 1 கோடியே 96 லட்சம் பேர்கள் தமிழர்களே அவர்கள் 74 லட்சத்து 145 கோடி கடன்களை பெற்று சிறு தொழில் நடத்தி வருகிறார்கள்
  • பட்டியல் இனத்தவர்களுக்கும் பெண்களுக்குமான ஸ்டாண்டப் இந்தியா தொழில் துவங்கும் திட்டத்தின் மூலம் 6179 தமிழர்கள் 1390 கோடி ரூபாய்கள் பயன் பெற்றுள்ளார்கள்
  • மோடி அரசாங்கத்தின் விவசாயிகளுக்கு உதவு கிசான் சம்மான் திட்டம் மூலமாக தமிழகத்தில் 48 லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு 6000 ரூபாய்கள் பெற்றுள்ளார்கள்.
  • தமிழகத்தில் 27 லட்சத்து 11,628 விவசாயிகள் மோடி அரசின் பயிர் பாதுகாப்பு திட்டம் மூலமாக 6296 கோடி ரூபாய்கள் இழப்பீடு பெற்றுள்ளார்கள்
  • பெண்கள் குழந்தைகள் நலத் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் மட்டும் 2964 கோடி ரூபாய்கள் அளிக்கப் பட்டுள்ளன. 36 லட்சத்து 60 ஆயிரம் பேர்கள் இலவச கேஸ் சிலிண்டர்கள் பெற்றுள்ளார்கள்
  • தூய்மை இந்தியா திட்டம் மூலமாக 49 லட்சம் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளன
  • 1735 கி மீ தூரத்திற்கு தமிழகத்திற்குள் மட்டும் மத்திய அரசின் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன.
  • மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப் பட்டுள்ளது மோடி அரசினால்
  • வேலை வாய்ப்புகளை வளர்க்கும் மேக் இன் இந்தியா தற்சார்பு திட்டம் மூலமாக தமிழகத்தில் ராணுவ தளவாடங்களையும் உபகரணங்களையும் ரயில் பெட்டிகளையும் செல்போன்களையும் தயாரிக்கும் மோடி அரசாங்கத்தால் துவக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
  • மோடி அரசின் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலமாக தமிழகத்தில் 7 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் ஏழைத் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.

இன்னும் இவை போன்ற நூற்றுக்கணக்கான திட்டங்கள் மூலம் மோடி தமிழகத்திற்கு பெரும் அளவில் நன்மைகள் செய்து வருகிறார். இந்த அளவுக்கு பிரமாண்டமான நலத்திட்டங்கள் முந்தைய காங்கிரஸ் திமுக அரசாங்கம் தமிழகத்திற்கு அளித்ததே இல்லை. அனைத்தையும் இங்கு விளக்க வேண்டுமானால் பல நூறு பக்கங்கள் தேவைப்படும். மேலே சொல்லப் பட்டவை எல்லாம் ஒரு சிறு அறிமுகம் மட்டுமே.

நன்றி மறப்பது நன்றன்று. உப்பிட்டவரை உள்ளளவு நினை. மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்றெல்லாம் தமிழர்கள் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள். விருந்தினர்களை வரவேற்பது பெற்ற உதவிகளுக்கு நன்றியுடன் இருப்பது அவர்களின் பண்பாடு. ஆனால் அவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டு தமிழகத்தின் மீது பாசத்துடனும் அன்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வரும் ஊழல் கறை படியாத அப்பழுக்கற்ற பாரதப் பிரதமரை அவமதிப்பது திரும்பிப் போ என்று சொல்ல எப்படி தமிழர்களுக்கு மனம் வந்தது? அவரைத் தோற்கடித்து ஊழல்வாதிகள் தங்கள் வீடுகள் நிலங்களை அடித்துப் பிடுங்கும் மின்சாரம் இன்றி இருட்டில் தள்ளிய அராஜக கட்சிகளின் அரசியல்வாதிகளையும் தமிழர்கள் ஓட்டுப் போட்டு ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? ஜல்லிக்கட்டை தடை செய்த, தமிழர்களுக்கு துரோகம் செய்த திமுக காங்கிரஸை ஏன் ஆதரித்தார்கள்? மேற்சொன்ன அனைத்தையும் தமிழக வாக்காளர்கள் அலசி ஆராய்ந்து பார்த்து அவர்கள் மனசாட்சிப்படி அறவுணர்வு அடிப்படையில் ஒரு முடிவு எடுக்கட்டும். இனியாவது பொய்யான பரப்புரைகளை நம்பி மோடியையும் பா ஜ க அரசையும் வெறுப்பதை நிறுத்தி அவர்களுக்கு உண்மையாகவே உதவி செய்யும் நேர்மையான குடும்ப அரசியல் செய்யாத ஊழலற்ற தமிழகத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட அப்பழுக்கற்ற ஒரு தலைவரை அடையாளம் கண்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்கட்டும். தமிழகத்தின் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் அதைக் கட்டாயம் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

2 Replies to “தமிழகத்துக்கு நயவஞ்சகம் இழைத்தாரா நரேந்திர மோடி?”

  1. + பார்ப்போம் எத்தனை பேர் இந்த பதிவை முழுமையாக படித்து லைக்

    + சி.எஸ்.ஐ லாசரஸ், காஸ்பர்களுக்கு தங்கள் 13000 N.G.O களை முடக்கியதால் உள்நாட்டு கருப்பு பணத்தை வெளிநாட்டுக்கனுப்ப முடியல, வெளிநாட்டு சட்டவிரோத பணத்தை உள்ளே கொண்டுவர முடியல!
    + 700 மீனவன் செத்திட்டிருந்தான். இப்போ 5 வருஷத்துல ஒரே ஒருத்தன். அதைக்கூட பக்கத்து நாடு நாங்க சுடவில்லைன்னு சொல்லி பம்மிடிச்சு. இப்படியே போனால் தமிழ் வியாபரமும் படுத்துடும்.
    + #ரியல்_எஸ்டேட் என்னும் கட்டப்பஞ்சாயத்து மூலம் நில அபகரிப்பு பண்ணுற கும்பல், அபகரிச்ச நிலத்தை விற்க முடியல. விற்பனைக்கு வரும் நிலத்தை வாங்க முடியல. ஏழைகள் வீட்டு கனவு நிறைவேற விலை கட்டுக்குள் வந்தது. காரணம் ஆதார், டிஜிட்டலைஷேசன், வரி சீரமைப்பு!
    + G.S.T , e-billing மூலம் கள்ள பில் , #கள்ளக்கடத்தல் பிசினஸ் பண்ணுறவன் #மூலத்துலரத்தம் வருது.
    + ஏற்கனவே கொள்ளையடிச்ச பணத்தை வெச்சு மிச்சமிருக்குற காலத்தை ஓட்டிடலாம்ன்னா, அதையும் செல்லாக்காசாக்கி கழிவு நீர் ஓடையில் மிதக்க விட்டுட்டாங்க.
    + #பணமதிப்பிழப்பு_ க்கு பின் நக்சல் இயக்கங்களுக்கு நாஷ்டா துன்னவே பிச்சையெடுக்கும் நிலை.
    + #கம்யூனிசத்துக்கு திரிபுராவில் கரும்புள்ளி , செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்திப்புட்டானுங்க.
    + ப்ளாக்ல சிலிண்டர் விற்க முடியல, ரேசன்ல கள்ளக்கணக்கு எழுத முடியல, மானிய பணம் #வங்கிகணக்கில் நேரடியாக செல்வதால் #கமிஷன் அடிக்க முடியல , ‘#டிஜிட்டலைஷேசன்”.
    + மத்தியில் ஆட்சியில் இருந்துட்டே இந்த குத்துன்னா, நாளை இவனுங்க மாநிலத்திலும் வந்துட்டா , #நவோதயா பள்ளிகளை திறந்து மிச்சமிருக்குற L.K.G சீட் பிசினசையும் படுக்க வெச்சிருவானுங்க.
    + என்னா…… அடி!
    உங்கவூட்டு அடியா.? எங்கவூட்டு அடியா ..?
    + மோடிய தோற்கடிச்சே ஆகணும் னு பூரா அயோக்கியனுகளும்.
    உசுர கொடுத்தாவது ஜெயிக்க வச்சே ஆகனும்னு #நாட்டுபற்றுஉள்ள சிலரும் மோதுகிறார்கள்.
    + 5 ஆண்டுகளில் நாடு அடைந்த முன்னேற்றம் மிக அதிகம் தான்.
    நண்பர் #பரமஜோதி எழுதியது
    இதை எழுத கிட்ட தட்ட ஒரு நாள் ஆகிவிட்டது , கண்டிப்பாக நிறைய விடுபட்டு இருக்கும் , முடிந்தவரை திரட்டி இருக்கிறேன்
    + இதே போல் கடந்த 60 வருடம் இந்த தேசத்தை ஆண்டவர்கள் தங்கள் பட்டியலைத் தரட்டும். இந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்து பார்த்து விடுவோம்..! ❤❤
    [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [] []
    1. தமிழக மீனவர் சுடப்படவில்லை,
    2. இந்தியாவில் பொது மக்கள் மீது தீவிரவாத தாக்குதல் இல்லை,
    3. ஆளில்லாத ரயில்வே கேட் இல்லை,
    4. மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை,
    5. 16 மணி நேர மின் தடை இல்லவே இல்லை,
    6. 5 வருடமாக ஊழல் இல்லை,
    7. விலைவாசி உயர்வு இல்லை,
    8. 17 விதமான வரிகள் இல்லை,
    9. போலி கீஸ் சிலிண்டர் இல்லை,
    10. போலி ஆசிரியர்கள் இல்லை, போலி ஸ்காலர்ஸிப் இல்லை இன்னும் பல இல்லைகள்
    11. நக்சல் தொந்தரவு குறைந்தது,
    12. தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லை தாண்டுவதற்கு உயிருடன் இல்லை,
    13. ரயில் விபத்துக்கள் குறைவு,
    14.சாலைகள் அமைப்பது வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு,
    15. நீர்வழி சாலைகள் அமைப்பு,
    16.கங்கை சுத்தமானது,
    17. கும்ப மேளா அருமையாக நெரிசல் இல்லாமல் நடக்கிறது,
    18. பாக்கிஸ்தான் பணத்துக்கு பல நாடுகளிடம் கையேந்துகிறது,
    19. வீடு கட்ட கடன் சுலபமாக குறைந்த வட்டியில் கிடைக்கிறது,
    20 மருந்துகள் விலை மிக குறைவு,
    21. இதய வால்வு, செயற்கை மூட்டு போன்றவை விலை மிக குறைவு,
    22. மருத்துவ காப்பீடு 5 லட்சத்திற்கு,
    23. 5+4.5 லட்சம் வரை வருமான வரி இல்லை,
    24. பயிர் காப்பீடு, பயிர்களுக்கான குறைந்த பட்ச விலை 1.5 மடங்காக அதிகரிப்பு,
    25. இதுவரை இல்லாத அளவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வட கிழக்கு மாநிலங்களுக்கு விமான மற்றும் நெடுச்சாலை இணைப்புகள், விமான நிலையங்கள்
    26. தமிழ்நாட்டுக்கு AIIMS, மற்றும்
    27. நாடு முழுவதும்,. பல புதிய IIT மற்றும் IIM கள்,
    28. கோதாவரி- காவிரி இணைப்பு,
    29. காவிரி ஆணையம் அமைப்பு,
    30. பெரியாறு அணை நீர் இருப்பு உயரம் அதிகரிப்பு,
    31. 2 ஆண்டுகளில் APJ கலாமுக்கு நினைவிடம் அமைப்பு,
    32. முகம் தெரியாத பலருக்கு பத்ம விருதுகள்,
    33. கந்து வட்டியில் இருந்து விடுபட வங்கியில் முத்ரா கடன் திட்டங்கள்,
    34. மோடியின் தொகுதியான காசியின் சுத்தம்,
    35. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் உயர்வை கட்டுக்குள் வைத்து இருப்பது,
    36. இந்திய ரூபாயில் வெளிநாடுகளுடன் கச்சா எண்ணெய் வணிகம்,
    37. வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு,
    38. உலகத்தின் 5 வது பெரிய பொருளாதரமாக வளர்ச்சி,
    39. ஊழல் நாடுகள் பட்டியலில் முன்னேற்றம்,
    40. தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் முன்னேற்றம்,
    41. GDP கிட்ட தட்ட 8 சதவீதம்,
    42. OROP அமல்படுத்தியது,
    43. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்து இருப்பது,
    44. அனைத்து ஊழல் வாதிகளையும் ஒன்று சேர்த்து இருப்பது,
    45. ஆயுத பேரத்தில் இடைத்தரகர்களை ஒழித்தது,
    46. உள்நாட்டில் ஆயுத, ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பது,
    47. இடைத்தரகர்களை நாடு கடத்தி கொண்டு வருவது,
    48. ஸ்விஸ் வங்கியில் விபரங்களை பெற்றது,
    49. தினமும் 18 முதல் 20 மணி நேரம் உழைப்பது,
    50. தமிழ்நாட்டுக்கு Defence corridor அமைத்து கொடுப்பது,
    51. 8 வழி சாலை,
    52. அனைத்து நாடுகளிடமும் நட்பு பாராட்டுவது,
    53. இலங்கை தமிழ் பகுதிக்கு சென்றது,
    54. அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படச் செய்தது,
    55. இலங்கை தமிழர்க்கு வீடு கட்டி கொடுத்தது,
    56. கள்ள நோட்டை ஒழித்தது,
    57. NEET மூலம் ஏழையும் மருத்துவம் படிக்க வழி செய்தது,
    58. GST மூலம் விலைவாசியை கட்டுக்குள் வைத்தது
    59.ந.2 வியாபாரத்தை படி படியாக ஒழித்து வருவது,
    60. பணமதிப்பு இழப்பு கொண்டு வந்தது,
    61. ஏழைகளுக்கு 10 %இட ஒதுக்கீடு
    62. ராணுவத்துக்கு நவீன தளவாடங்கள்,
    63. குண்டு துளைக்காத ஆடைகள்,
    64. புதிய ஹெலிகாப்டர்கள்,
    65. புதிய விமானங்கள்,
    66. ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள்,
    67. குண்டு துளைக்காத தலை கவசங்கள்,
    68. ரயில் 18, 180 km வேகத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில்,
    69. ஜப்பான் உடன் இணைந்து புல்லட் ரயில் திட்டம்,
    70. அனைவருக்கும் இன்டர்நெட் இணைப்பு, கிராமங்கள் வரை,
    71. பல பாலங்கள் மற்றும் குகை பாதைகள் மூலம் நேர, பண விரையம் தவிர்ப்பு,
    72. மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் நீக்கம்
    73. இதனால் லஞ்சம் தவிர்ப்பு,
    74. நாட்கணக்கில் தாமதம் தவிர்ப்பு,
    75. ஓட்டுனர்களுக்கு வருடத்திற்கு 100 நாள் சேமிப்பு,
    76. தேய்மானம் குறைவு,எரிபொருள் சேமிப்பு,
    77. 28 % GST இல் 10 க்கும் குறைவான பொருட்கள்,
    78. அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் 12 % உள்,
    79. 5 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள்,
    80. அனைத்து அரசாங்க உதவியும் நேரடியாக வங்கியில் செலுத்துவதால் பல ஆயிரம் கோடி சேமிப்பு,
    81. பங்கு சந்தை உயர்வு,
    82. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிட்ட தட்ட 100 % கழிப்பறை வசதி
    83. மக்களின் சுகாதாரம் மேம்பட்டது,நோய்கள் குறைந்தது,
    84. காஷ்மீரில் பல மாவட்டங்கள் தீவிரவாதம் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டது
    85. எதிர் கட்சியின் முலாயம் சிங் மீண்டும் மோடியின் ஆட்சி வேண்டும் என பாராட்டினார், பல பன்னாட்டு அமைப்புகளும் ,உலக தலைவர்களும் ,பல உள்நாட்டு நற்பெயர் கொண்ட தொழில் அமைப்புகளின் தலைவர்களும் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்றுதான் சொல்கின்றனர்
    86. Insolvency சட்டத்தில் மாற்றம் மூலம் பல பெரிய கடன்கள் வசூல்,
    87. இலங்கையில் தூக்கில் இருந்து தமிழக மீனவர்கள் மீட்பு
    88. வெளியுறவு துறை மூலம் பல நன்மைகள்,அப்படி ஒரு துறையில் இப்படி எல்லாம் செயல்படமுடியும் என்று காட்டினார்கள்
    89. பல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல வகையில் எதிர்பாராத மீட்பு பணிகள்,பாஸ்போர்ட் சேவைகள்,விசா சேவைகள்,இன்னல்களில் இருந்த்து மீட்பு
    90. பாஸ்போர்ட் வாங்கும் வழிகள் எளித்தாக்கப்பட்டது
    91. விண்வெளி இஸ்ரோ மூலம் பல செயற்கை கோள்கள் ஏவப்பட்டது
    92. இந்தியாவின் எல்லைகள் எப்போதும் கண்காணிக்கப்பட்டது
    93. இந்தியா எல்லையில் ஊடுருவலை தடுக்க நவீன லேசர் கண்காணிப்பு வேலிகள் அமைப்பு
    94. பங்களாதேஷ் உடனான பல ஆண்டு எல்லை பிரச்சனைக்கு தீர்வு
    95. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் மற்ற தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்று கொடுக்க மறுத்து கூட்டணியை இழந்தது
    96. சீனாவை விட அந்நிய முதலீட்டில் முன்னணி வகிப்பது
    97. தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் ஸ்மார்ட் நகரங்கள்
    98. தமிழ்நாட்டுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு
    99. 18 % இருந்த உணவக வரியை 5% ஆக்கியது
    100. காங்கிரஸ் வாங்கிய கடனை வட்டியுடன் 200000 கோடி திருப்பி செலுத்தியது
    101. சிறு குறு விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் உதவித்தொகை
    102 .கணக்கு காண்பிக்காத 20,000 NGO உரிமங்கள் ரத்து
    103. கள்ளப்ணம், வரி ஏய்ப்பின் ஊற்றுக்கண்ணான லட்சக்கணக்கான ஷெல் கம்பெனிகள் அழிப்பு
    104. 59 நிமிடத்தில் 10000000 வரை கடன் திட்டம்
    105. கட்டற்று இருந்த மத மாற்றம் இப்போது கட்டுக்குள் இருக்கிறது
    106. VVIP கார்களில் பொருத்தப்பட்ட சிவப்பு விளக்குகள் அகற்றம்
    107. கிட்ட தட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு (குறைந்த பட்ச தொகை தேவை இல்லாதது )
    108. தனி நபர் வருமானம் 1 .17 லட்சமாக அதிகரிப்பு
    109. பினாமி சொத்து சட்டம்
    110. உள்நாட்டு பாதுகாப்பில் பொது மக்கள் உயிரிழப்பு இல்லை என்ற சாதனை
    111. மத கலவரங்கள் கட்டுக்குள்
    112. முத்தலாக் தடை சட்டம் , மற்ற கட்சிகள் ஒத்துழைப்பு இல்லை
    113. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரில் ரயில் பாதை அமைக்க அனுமதி
    114. LED விளக்குகளின் மூலம் மின் நுகர்வு மற்றும்,விலை மிக குறைவு
    115. உபயோகப்படுத்தாத பல விமான நிலையங்கள் மீண்டும் போக்குவரத்தில் இணைப்பு
    116. UDAN திட்டத்தில் விமான கட்டணம் குறைப்பு
    117. அமைச்சரவை சகாக்கள் யார் மீதும் குற்ற சாட்டு இல்லை
    118. பெண்களுக்கு அமைச்சரைவயில் முக்கிய பதவிகள் ,
    119. சூரிய மின் உற்பத்தியில் சாதனை
    120. நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டு ,உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு
    121. மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு எப்பபோதும் நல்ல நிலையில்
    122. திருக்குறள் நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் இணைப்பு
    123. மீன் வளத்துக்கு தனி அமைச்சரவை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு கப்பல் மாண்யம்
    124. ரயில் பயண கட்டணம் ஏற்றப்படவில்லை
    125. தமிழ் நாட்டில் கோவை -பெங்களூரு இரண்டு அடுக்கு ரயில் ,மதுரை சென்னை பகல் நேர ரயில் போன்ற பல ரயில்கள்
    126. 17 வருடமாக விடுமுறை எடுக்காத ஒரே தலைவர்
    127. வெளி நாட்டு பயணத்தின் போது ஜால்ரா போடும் பத்திரிக்கையாளர்களை அழைத்து செல்லாத ஒரே தலைவர்
    128. வெளிநாட்டு பயணங்களில் விமானத்திலேயே உறங்கி நேரத்தையும் செலவையும் குறைத்தது
    129. விவசாயி விற்பனையில் படிப்படியாக இடைத்தரகர் ஒழிப்பு E – NAM திட்டம்
    130. திருப்பூருக்கு பல ஆண்டாக கேட்ட ESI மருத்துவமனை
    131. பல அரசாங்க மருத்துவ மனைகள் தரம் உயர்வு
    132. சென்னை விமான நிலைய விரிவாக்கம்
    133. கோவை விமான நிலைய விரிவாக்கம் ,நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக அறிகிறேன்
    134. கோவைக்கு வெளி சுற்று வட்ட சாலை
    135.முத்ரா திட்டத்தில் கடந்த 7 தேதி வரை 15,73,78,344 கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன
    136. மின்னணு பண பரிவர்த்தனை ஊக்குவிப்பு ,BHIM செயலி அறிமுகம்
    137. மாஸ்டர், விசா அட்டைகளுக்கு இணையாக RUPAY அட்டை ஊக்குவிப்பு
    138. மிக முக்கியமாக பாக்கிஸ்தான் மற்றும் பர்மா வில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக துல்லிய தாக்குதல் (surgical strike )
    139. சிறுபான்மையினர் பாதுகாப்பு
    140. GST யில் 40 லட்சம் வரை விற்று முதல் உள்ளவர்க்கு விலக்கு
    141. முறை சாரா(un organised sector ) தொழில் செய்யும் தொழிலாளர்க்கும் ஓய்வூதிய திட்டம்
    142. பெண் தொழில் முனைவோர் அதிகளவில் ஊக்குவிப்பு
    143 தட்டுப்பாடு இல்லாத உர விநியோகம்
    144. UREA வில் வேப்பை எண்ணெய் கலந்து தவறான உபயோகம் தவிர்ப்பு
    145. இதுவரை அமைக்கப்படாத NATIONAL WAR MEMORIAL டெல்லியில் அமைப்பு
    146. குடும்பத்தில் ஒருவர் கூட அரசியல் பதவியிலோ ,அரசாங்க பதவியிலோ இல்லை , அரசாங்க வேலையில் கூட மிகவும் குறைந்த அந்தஸ்தில் இருப்பதாக அறிகிறேன்
    147. இந்தியா ரயில்வே ரயில் பெட்டி தொழிற்சாலை 17 வருடமாக தயாரித்த பெட்டிகளின் அளவை கடந்த 2 ஆண்டுகளில் கடந்து உள்ளது
    148. Tax free Gratuity limit increase to 20 Lakhs from 10 Lakhs
    149. பெண்களுக்கு 26 வாரங்கள் பேறு கால விடுப்பு
    150. ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக வடிவமைப்பு
    151. உலக அளவில் 2 வது மிக பெரிய எக்கு உற்பத்தியாளர் என்ற அந்தஸ்து
    152. ஈரானில் சப்பார் துறைமுகம்
    153. சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றம்
    154. உலகத்தில் பெரிய சிலையாக சர்தர் வல்லபாய் படேல் சிலை அமைப்பு
    155. மனித உரிமை கவுன்சில் தேர்தலில் 193 ஓட்டுக்கு 188 வாங்கி வெற்றி
    156. அண்ணா பல்கலைக்கழகம் வேந்தர் போன்றவைகளில் சூரப்பா போன்ற கல்வியாளர்கள் நியமனம்
    157. L & T மூலம் HOWITZER பீரங்கிகள் உற்பத்தி செய்து ராணுவத்தில் இணைப்பு
    158. எந்த மிரட்டலுக்கும் பயப்படாத அரசாங்கம் ,உதாரணம் ௧.தங்க நகை உற்பத்தியாளர் கடை அடைப்பு 2 .லாரிகள் வேலை நிறுத்தம் 3 அய்யாக்கண்ணுவின் உள்நோக்கம் கொண்ட ஆடை அவிழ்த்து போராட்டம்
    159. ஹாஹாஹா மறந்துட்டேன் தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு !!!!
    160. தீவிரவாதம் இல்லா நாடு மற்றும் பல நாட்டவர்க்கு visa on arrival என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு ,பல வேலை வாய்ப்புகள் பெருக்கம்
    161. காடுகளின் பரப்பு 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர் க்கு மேல் அதிகரிப்பு
    162. பரோடாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி
    163. சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று பாகுபாடு இல்லாத திட்டங்கள் மற்றும் வளர்ச்சி
    164. சர்வதேச மதிப்பீட்டில் நமது பொருளாதாரம் Fragile 5 என்ற நிலையில் இருந்து BAA3 என்ற நல்ல தரம் உயர்த்தப்பட்டது.
    165. RERA மூலம் வீடு வாங்குபவர்களின் சிரமங்களைக் குறைத்தது
    166. ஆழ்கடல் மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பயிற்சி மற்றும் படகுகள் வாங்க 90 % மானியம்
    167. புதிய வீடுகளுக்கு GST குறைப்பு
    168. ஒரு நாடு ஒரு அட்டை, One Nation One Card திட்டம் அறிமுகம்.
    169. விளையாட்டை ஊக்குவிக்க புதிய செயலி அறிமுகம்.
    170. புல்வாமா தாக்குதலுக்கு உடனே பதிலடி, பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    171. சிறை பிடிக்கப்பட்ட விமானி ஒரே நாளில் விடுதலை என்ற சரித்திரம்.
    172. சாகர் மாலா திட்டத்தின் கீழ் பல புதிய துறைமுகங்கள்.
    173. ராமேஸ்வரம் – மண்டபம் இடையே புதிய பாம்பன் பாலம்.
    174. கன்யாகுமரியில் இதுவரை இல்லாத அளவு 40,000 கோடிக்கு வளர்ச்சித் திட்டங்கள்
    175. பலரும் பரப்பும் பொய் போல் இல்லாமல் 6 மான்ய சிலிண்டர் என்பதை 12 ஆக உயர்த்தி விலை ஏற்றம் இல்லாமல், பதிவு செய்த உடன் கிடைக்க செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1200 + விற்கப்பட்டது என்பதை இங்கே தவிர்க்க முடியாமல் பதிவு செய்கிறேன்.
    176. சீனா எல்லையில் பல சாலைகள் மற்றும் பாலங்கள்.
    177. பலமான அயல்நாட்டு உறவு ,அனைத்து நாடுகளும் நமது நிலைப்பாட்டுக்கு ஆதரவு
    178. மலிவு விலை மத்திய அரசு மருந்து கடைகள்
    179. பாக்கிஸ்தான் உடனான நதி நீர் பங்கீட்டில் நமது பங்கை சரியாக உபயோகப்படுத்த நடவடிகக்கை.
    180. விபத்து காப்பீடு வருடம் 2 லட்சம் பலனுக்குப் பிரீமியம் தொகை வெறும் 12 ரூபாய்
    181. உயிர் காப்பீடு 2 லட்ச ரூபாய்க்குப் பிரீமியம் தொகை 330 ரூபாய்
    182. ஸ்டாண்ட் அப் இந்தியா மூலம் SC/ST, பெண்களுக்கு 10 லக்ஷம் முதல் 2 கோடி வரை தொழில் தொடங்க கடன்.
    183. ஈரான் நாட்டிலிருந்து எரிவாயு பைப் மூலமாக கொண்டு வர ஒப்பந்தம்.
    + செய்ததை மட்டுமே எழுதி இருக்கிறேன்..!
    விடுப்பட்டதை சொன்னால் சேர்க்கிறேன்..!
    + நீ ஏன் செய்யவில்லை என்று கேட்கவில்லை,
    செய்ததை சொல்லியிருக்கிறேன்.
    நெகடிவ் அரசியல் செய்ய விரும்பவில்லை
    நல்லதை சொல்லுவோம்..!
    + பாரத் மாதா கிஜே..!
    வந்தே மாதரம்..!நண்பர் ஒருவர் திரட்டிய உண்மை தகவல்கள். #பாஜக
    + இதை எழுத கிட்ட தட்ட ஒரு நாள் ஆகிவிட்டது , கண்டிப்பாக நிறைய விடுபட்டு இருக்கும் , முடிந்தவரை திரட்டி இருக்கிறேன்
    + இதே போல் கடந்த 60 வருடம் இந்த தேசத்தை ஆண்டவர்கள் தங்கள் பட்டியலைத் தரட்டும். இந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்து பார்த்து விடுவோம்..!
    + கண்டிப்பாக மோடி அவர்களுக்கு #வாக்களித்துவிட்டு….
    தேசத்தை #வளர்ச்சி நோக்கி நகர்த்துவோம்.✨
    () கல்லாதது உலகளவு. ! கற்றது கைமண்ணளவு. ! அற்புதமான பதிவை காட்டிய திருமதி பூங்குழலி சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.!
    #வாழ்கபாரதம்.!
    #ThamaraiTV #BJP4IND #Modi #NamoAgain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *