பாரதி: மரபும் திரிபும் – 10

This entry is part 10 of 10 in the series பாரதி: மரபும் திரிபும்

இக்கட்டுரையில் “இந்தியாவுக்கு உடனே ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற லக்ஷயத்தில் நீயும் நானும் ஒன்றுபட்டிருக்கிறோம்” என்று கூறுகிற பாரதி, ” நம்மவரெல்லாரும் கூடி முயன்று, பாரதமாதாவின் ராஜரீக விலங்குகளை நீக்கி, விடுதலையேற்படுத்திக் கொடுக்கப்போகிற ஸுதினம்-நல்ல நாள்-எப்போது வரப் போகிறதென்பதை ஒவ்வொரு நிமிஷமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்.” என்று எழுதுகிறார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லாமல் வேறு என்ன?

View More பாரதி: மரபும் திரிபும் – 10

தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்தி

தேர்தல் ஆணையத்தை மோடி அரசு  பயன்படுத்திக் கொண்டு  வாக்கு திருட்டை நடத்துகிறார்கள்  என  ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். . ஆனால்  உண்மையில்  தேர்தல் ஆணையத்தையும்,  நீதித் துறையையும் சீரழித்தது காங்கிரஸ்.  அரசியல் சட்டத்தையே  தங்களுக்கு சாதகமாக வளைத்து எதிர்கட்சிகளை ஒடுக்க நினைத்தவர்கள்  நேருவும், இந்திரா காந்தியும்..

View More தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்தி

இந்து தியாக வீரர் குமார் பாண்டியன் குடும்பத்து வாரிசு எதிரணியில்: வேதனை

அண்மையில் மிகவும் பாதித்து மிகவும் மனத்தளர்ச்சியில் தள்ளிய விடயம் – குழந்தை ருத்ராவின் வீடியோ. அவளுக்கு நம் மீது எத்தனை கோபம் இருந்தாலும். எந்த மேடையில் ஏறி எத்தனை வசை மொழி பொழிந்தாலும் – அவள் என்றும் நம் வீட்டு குழந்தைதான். ஏனெனில் அவள் தந்தையும் அவள் சகோதரர்களும் அந்த குடும்பமும் செய்த தியாகம் அத்தகையது.. அந்த குழந்தையின் மீதும் அவள் குடும்பத்தின் மீதும் உள்ள அளப்பரிய அன்பாலும் மதிப்பினாலும் மட்டுமே, அவள் சொல்வதில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது…

View More இந்து தியாக வீரர் குமார் பாண்டியன் குடும்பத்து வாரிசு எதிரணியில்: வேதனை

‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

திரைப்படத்தை பார்த்து முடிக்கும் எவருக்கும் ஏற்படுவது பெரும் உன்னத உணர்வு.  புனித நதியில், கங்கையில் அல்லது காவேரியில், அதன் புனிதத்தை உணர்ந்து நீராடினால் ஏற்படும் மனத்தூய்மை உணர்வு… மாரி செல்வராஜ் சத்தியமாக கீதை படிக்கவில்லை. அவருக்கு அதில் ஆர்வமும் இருக்க அவசியமில்லை. அப்படி ஒரு வேலியை நாம் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் மேலே மதுராபுரி மாட்டிடையன் கீதையில் சொன்னவற்றை தம் திரைப்படத்தில் காட்சிப்படுத்திவிட்டார் அவர்… சங்கிகள் என்று தம்மை சொல்லிக் கொள்கிறவர்களில் பலர் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அப்படி செய்வது உங்கள் தலைவரான கோல்வல்கரையே கேலி செய்வதுதான்… எவ்வித மலின வணிக சமாச்சாரமும் இல்லாத, மலினங்கள் விடயத்தில் துளி சமரசமும் இல்லாத திரைப்படம் ஒன்றை தமிழ் சமுதாயம் வெற்றி பெற வைக்குமென்பதைக் காட்டியிருக்கிறது பைசன்…

View More ‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் இருமுறை தலைவர் பதவியில் திறம்பட செயல்பட்டவர் ம.வெ. அத்துடன் சிறந்த சமூக வரலாற்று அறிஞரும் ஆவார். அவருடைய உரை நேரடி அனுபவத்திலிருந்து வருவது. தூய்மைப் பணியாளர்கள் குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நேரடியாக உரையாடியது, கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் செய்த தொண்டு, தமிழ்நாடு உட்பல பல மாநிலங்களில் மாநில அரசு அமைப்புகளின் மெத்தனம், ஒப்பந்தக் காரர்களின் சுரண்டல்கள், அராஜகங்கள், பாலியல் அத்துமீறல்கள், தனது பணிக்காலத்தில் அவர் எடுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகள், பட்டியல் சமுதாயத்தினரே மிக அதிக அளவில் இந்தப் பணிகளுக்கு வரும் நிலைமை தொடர்வது சரியானதா என்று பல முக்கியமான விஷயங்களைத் தொட்டுச்செல்வதாக அவரது உரை அமைந்திருந்தது. உரையின் வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்…

View More இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை

பெண்விடுதலை என்பது ஈவெராவால் முன்னெடுக்கப்படவில்லை. அதை முன்னெடுத்தவர்கள் வேறு பலர்.. ஈவெரா கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய இடம் கீழ்வெண்மணி விஷயத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை. பொதுவாக அவரிடம் இருந்த சாதியம். ஈவெரா குறித்து எவ்வித மலினமும் ஆபாசமும் இல்லாமல் காத்திரமானதோர் விமர்சனத்தை முன்வைத்தவர் தேசிய சுகாதார தொழிலாளர் துறை தலைவராக இருக்கும் ம.வெங்கடேசன், இந்துத்துவ இயக்கத்திலிருந்து வந்தவர்..

View More ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை

மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்

இந்து தர்ம ஆசாரியர், வேத-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி அவர்களின் சமீபத்திய வீடியோ. மகாவிஷ்ணு சர்ச்சை பின்புலத்தில் தமிழ்நாட்டில் ஒலிக்கும் ஏகப்பட்ட கூச்சல்கள், குழப்படிகளுக்கு நடுவில், தர்மம் குறித்த சரியான, ஆதாரபூர்வமான, உண்மையான விளக்கத்தை இந்த வீடியோ அளிக்கிறது… பாவம் செய்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆனால், இதை வைத்து, நாம் பார்க்கக்கூடிய கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம், முன்பு ஏதோ பாவம் செய்திருப்பார்கள் என்று முடிவு கட்டி விடலாமா?…

View More மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்

இராமாயண கால ஆராய்ச்சி, உபன்யாசகர்கள், சம்பிரதாயவாதிகள்

பிரபல உபன்யாசகர் துஷ்யந்த் ஶ்ரீதர் மீது பிரபல ஆலயப் பாதுகாப்பு போராளி ரங்கராஜன் நரசிம்மன் விடுத்துக் கொண்டிருக்கும் சமீபத்திய எதிர்ப்பு வீடியோ ஏவுகணைகள் குறித்து எனது கருத்து என்ன என்று கேட்டார் நண்பர் ஒருவர். “அரைகுறை வரலாற்று ஆராய்ச்சி கோமாளித்தனத்தைக் குறிவைத்து குருட்டு சம்பிரதாயவாத கோமாளித்தனம் நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்”, என்று கூறினேன்… நமக்குத் தேவை முதிர்ச்சியான, ஆழமான, பன்முகப் பார்வை கொண்ட கண்ணோட்டங்கள்…

View More இராமாயண கால ஆராய்ச்சி, உபன்யாசகர்கள், சம்பிரதாயவாதிகள்

கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்

உங்கள் பெரியாரால் *** கதை என்று இழிவு படுத்தப்பட்ட சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டியிருப்பது பாராளுமன்றத்தைக் கொச்சைப்படுத்தவா? பெரியார் அப்படி என்ன சொன்னார்?… “மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” தமிழர் முறை. யார் தமிழர் இங்கே? கண்ணகியின் சாபம் தெரிந்த உங்களுக்கு கண்ணகியின் திருமணம் பற்றி தெரிந்திருக்க வேண்டுமே.. சிலப்பதிகாரத்தில் உங்களைப்போலவே, உங்கள் திராவிட இயக்கத்தைப் போலவே, ஒரு ஆசாமி இருந்தான். பொற்கொல்லன் அவன்…

View More கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்

ராகுல் காந்தியின் “நான் சாவர்க்கர் அல்ல” – இரு சாட்டையடிகள்

புழுக்களுக்கு புலியின் வலிமை தெரியாது. புழுக்களின் உலகமே வேறு. பதவிக்காலம் முடிந்த பின்னும் அரசாங்கம் வழங்கிய சொகுசு பங்களாவில், வெட்கமேயில்லாமல், வசித்து வந்த ஒரு காந்திக்கு, சாவர்க்கர், அந்தமான் சிறைத்தண்டனையின் வேதனை புரியுமா?… செக்கிழுத்து தேங்காய் நார் உரித்து மலக்குழியைவிட கேவலமான அறையில் தரையில் படுத்து தனிமை சிறையில் தங்கி இருக்க முடியுமா? 50 ஆண்டுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சூழலில் நான்கு வருடங்கள் மிகக் கொடுமையான தண்டனைகளை அனுபவித்த ஒருவர், என்னை மட்டும் சிறையில் வைத்துவிட்டு பிறர் அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என எழுதுகிறார். இந்த தியாகத்தை கிண்டலடிப்பவன் மனிதர்களில் சேர்த்தியா? அப்படி கிண்டலடிப்பவன் பின்னால் செல்பவர்கள் இந்திய ரத்தம் கொண்டவர்களா?….

View More ராகுல் காந்தியின் “நான் சாவர்க்கர் அல்ல” – இரு சாட்டையடிகள்