‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

திரைப்படத்தை பார்த்து முடிக்கும் எவருக்கும் ஏற்படுவது பெரும் உன்னத உணர்வு.  புனித நதியில், கங்கையில் அல்லது காவேரியில், அதன் புனிதத்தை உணர்ந்து நீராடினால் ஏற்படும் மனத்தூய்மை உணர்வு… மாரி செல்வராஜ் சத்தியமாக கீதை படிக்கவில்லை. அவருக்கு அதில் ஆர்வமும் இருக்க அவசியமில்லை. அப்படி ஒரு வேலியை நாம் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் மேலே மதுராபுரி மாட்டிடையன் கீதையில் சொன்னவற்றை தம் திரைப்படத்தில் காட்சிப்படுத்திவிட்டார் அவர்… சங்கிகள் என்று தம்மை சொல்லிக் கொள்கிறவர்களில் பலர் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அப்படி செய்வது உங்கள் தலைவரான கோல்வல்கரையே கேலி செய்வதுதான்… எவ்வித மலின வணிக சமாச்சாரமும் இல்லாத, மலினங்கள் விடயத்தில் துளி சமரசமும் இல்லாத திரைப்படம் ஒன்றை தமிழ் சமுதாயம் வெற்றி பெற வைக்குமென்பதைக் காட்டியிருக்கிறது பைசன்…

View More ‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் இருமுறை தலைவர் பதவியில் திறம்பட செயல்பட்டவர் ம.வெ. அத்துடன் சிறந்த சமூக வரலாற்று அறிஞரும் ஆவார். அவருடைய உரை நேரடி அனுபவத்திலிருந்து வருவது. தூய்மைப் பணியாளர்கள் குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நேரடியாக உரையாடியது, கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் செய்த தொண்டு, தமிழ்நாடு உட்பல பல மாநிலங்களில் மாநில அரசு அமைப்புகளின் மெத்தனம், ஒப்பந்தக் காரர்களின் சுரண்டல்கள், அராஜகங்கள், பாலியல் அத்துமீறல்கள், தனது பணிக்காலத்தில் அவர் எடுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகள், பட்டியல் சமுதாயத்தினரே மிக அதிக அளவில் இந்தப் பணிகளுக்கு வரும் நிலைமை தொடர்வது சரியானதா என்று பல முக்கியமான விஷயங்களைத் தொட்டுச்செல்வதாக அவரது உரை அமைந்திருந்தது. உரையின் வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்…

View More இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை

பெண்விடுதலை என்பது ஈவெராவால் முன்னெடுக்கப்படவில்லை. அதை முன்னெடுத்தவர்கள் வேறு பலர்.. ஈவெரா கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய இடம் கீழ்வெண்மணி விஷயத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை. பொதுவாக அவரிடம் இருந்த சாதியம். ஈவெரா குறித்து எவ்வித மலினமும் ஆபாசமும் இல்லாமல் காத்திரமானதோர் விமர்சனத்தை முன்வைத்தவர் தேசிய சுகாதார தொழிலாளர் துறை தலைவராக இருக்கும் ம.வெங்கடேசன், இந்துத்துவ இயக்கத்திலிருந்து வந்தவர்..

View More ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை

மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்

இந்து தர்ம ஆசாரியர், வேத-ராமாயண அறிஞர் டாக்டர் ரங்கன் ஜி அவர்களின் சமீபத்திய வீடியோ. மகாவிஷ்ணு சர்ச்சை பின்புலத்தில் தமிழ்நாட்டில் ஒலிக்கும் ஏகப்பட்ட கூச்சல்கள், குழப்படிகளுக்கு நடுவில், தர்மம் குறித்த சரியான, ஆதாரபூர்வமான, உண்மையான விளக்கத்தை இந்த வீடியோ அளிக்கிறது… பாவம் செய்பவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்று சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆனால், இதை வைத்து, நாம் பார்க்கக்கூடிய கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம், முன்பு ஏதோ பாவம் செய்திருப்பார்கள் என்று முடிவு கட்டி விடலாமா?…

View More மகாவிஷ்ணு – கர்மா தியரி: சரியான விளக்கம்

இராமாயண கால ஆராய்ச்சி, உபன்யாசகர்கள், சம்பிரதாயவாதிகள்

பிரபல உபன்யாசகர் துஷ்யந்த் ஶ்ரீதர் மீது பிரபல ஆலயப் பாதுகாப்பு போராளி ரங்கராஜன் நரசிம்மன் விடுத்துக் கொண்டிருக்கும் சமீபத்திய எதிர்ப்பு வீடியோ ஏவுகணைகள் குறித்து எனது கருத்து என்ன என்று கேட்டார் நண்பர் ஒருவர். “அரைகுறை வரலாற்று ஆராய்ச்சி கோமாளித்தனத்தைக் குறிவைத்து குருட்டு சம்பிரதாயவாத கோமாளித்தனம் நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்”, என்று கூறினேன்… நமக்குத் தேவை முதிர்ச்சியான, ஆழமான, பன்முகப் பார்வை கொண்ட கண்ணோட்டங்கள்…

View More இராமாயண கால ஆராய்ச்சி, உபன்யாசகர்கள், சம்பிரதாயவாதிகள்

கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்

உங்கள் பெரியாரால் *** கதை என்று இழிவு படுத்தப்பட்ட சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டியிருப்பது பாராளுமன்றத்தைக் கொச்சைப்படுத்தவா? பெரியார் அப்படி என்ன சொன்னார்?… “மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” தமிழர் முறை. யார் தமிழர் இங்கே? கண்ணகியின் சாபம் தெரிந்த உங்களுக்கு கண்ணகியின் திருமணம் பற்றி தெரிந்திருக்க வேண்டுமே.. சிலப்பதிகாரத்தில் உங்களைப்போலவே, உங்கள் திராவிட இயக்கத்தைப் போலவே, ஒரு ஆசாமி இருந்தான். பொற்கொல்லன் அவன்…

View More கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்

ராகுல் காந்தியின் “நான் சாவர்க்கர் அல்ல” – இரு சாட்டையடிகள்

புழுக்களுக்கு புலியின் வலிமை தெரியாது. புழுக்களின் உலகமே வேறு. பதவிக்காலம் முடிந்த பின்னும் அரசாங்கம் வழங்கிய சொகுசு பங்களாவில், வெட்கமேயில்லாமல், வசித்து வந்த ஒரு காந்திக்கு, சாவர்க்கர், அந்தமான் சிறைத்தண்டனையின் வேதனை புரியுமா?… செக்கிழுத்து தேங்காய் நார் உரித்து மலக்குழியைவிட கேவலமான அறையில் தரையில் படுத்து தனிமை சிறையில் தங்கி இருக்க முடியுமா? 50 ஆண்டுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சூழலில் நான்கு வருடங்கள் மிகக் கொடுமையான தண்டனைகளை அனுபவித்த ஒருவர், என்னை மட்டும் சிறையில் வைத்துவிட்டு பிறர் அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என எழுதுகிறார். இந்த தியாகத்தை கிண்டலடிப்பவன் மனிதர்களில் சேர்த்தியா? அப்படி கிண்டலடிப்பவன் பின்னால் செல்பவர்கள் இந்திய ரத்தம் கொண்டவர்களா?….

View More ராகுல் காந்தியின் “நான் சாவர்க்கர் அல்ல” – இரு சாட்டையடிகள்

அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?

உண்மையான எதிரிகளைப் பந்தாடினால்தான் இந்த உள் முரண்கள் விலக வழி பிறக்கும். இது தொடர்பாக மத்தியிலிருந்து எந்தவொரு பெரிய முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. மத்திய பாஜக செய்யும் ஐந்தாவது தவறு இது… இந்த விளையாட்டுக்கு அண்ணாமலை தயாராக இல்லை. இது மிகவும் நியாயமான விஷயம் தான். தலைமைப் பதவிக்கு எந்தவித அரசியலும் செய்யாமல் நேரடியாக வந்தவர் அப்படியான நிமிர்வுடன் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை… இதில் ஒரே ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால், கூட்டணி பற்றிய விவாதம் உள்ளரங்கில் நடக்கவேண்டியது. எதனால், யாரால் பொதுவெளிக்கு வந்தது?…

View More அண்ணாமலை தலைமை: மத்திய பாஜக செய்யவேண்டியது என்ன?

சாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்

வீர சாவர்க்கர் மிகக் கொடுமையான வருடங்களுக்கு மத்தியில் எழுதிய மனுவில், தமக்கு விடுதலையே கிடைக்காது போகலாம் என்கிற சூழலில், என்னைத்தவிர பிறரை விடுவித்துவிடு என கேட்கிறாரே இந்த மனத்திண்மை சவுக்கு சங்கருக்கு உண்டா? அல்லது வீர சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார் என வாய் கூசாமல் பேசும் புல்லர் கும்பலில் எவனுக்கும் உண்டா?.. தனக்கு அடிப்படை வரலாறே தெரியாமல் இருப்பதை சவுக்கு சங்கர் வெளிக்காட்டுகிறாரா? அல்லது புத்தகம் படித்தால் கூட (அல்லது படித்ததாக பொய் சொன்னால் கூட) அதுவும் அவருக்கு புரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே நேர்மையில்லாமல் பொய் சொல்வதை வந்தவுடனேயே ஆரம்பித்துவிட்டாரா?…

View More சாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்

அண்ணாமலை வீரமாமுனிவருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? : பதிலடி

நீங்கள் ஒவ்வொருமுறை கே.அண்ணாமலை என்ற பெயரை எழுதும்பொழுதும் கே என்பதில் வரும் இரட்டை சுழியை கொடுத்த வீரமாமுனிவருக்கும் ‘லை’ கொடுத்த பெரியாருக்கும் நன்றி செலுத்த வேண்டும் – என்கிறார் சு.வெங்கடேசன்.. இவர் கூறுவதில் ஏதாவது உண்மை உள்ளதா என்று இந்தக் கட்டுரையில் ஆராய்ந்து பார்க்கலாம்.. இரட்டை சுழி கொம்பு மீனாட்சி அம்மன் கோயில் ஓவியங்களிலேயே காணக்கிடைக்கிறபோது, வரலாற்றுப் புலமையுள்ள மதுரைவாசிக்கு மட்டும் தெரியாமல் போனது வியப்புதான்… பள்ளன் கோயில் செப்பேடு என்று அழைக்கப்படும்
பல்லவர் காலத்திய செப்பேட்டில். ஐந்து விதமான லை எழுத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன…

View More அண்ணாமலை வீரமாமுனிவருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? : பதிலடி