ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!

அரசியல் களத்தில் அவர் போராடட்டும். அவரை ஏற்பதோ, நிராகரிப்பதோ தமிழக மக்களின் உரிமை. அதைத் தடுக்க பாரதிராஜா, சீமான் வகையறாக்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இப்போதைய சிக்கல், இதுபோன்ற கிறுக்கர்களின் மிரட்டல்கள் அல்ல. அரசியலில் இறங்க விரும்பும் ரஜினிகாந்தின் தலைமைத் தகுதி தான். நடிகர் என்பதை மீறி, தனது தனித்துவத்தை அவர் மேம்படுத்திக் கொண்டு களமிறங்கினால், அவருக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது….

View More ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!

கையாலாகாதவனாகிப் போனேன்! — 5

நீ கோட்டும் சூட்டும் போட்டு ஆபீசுலே வேலை பார்க்கற சாப். உன் உலகம் வேற. நான் மூட்டைதூக்கிப் பொழப்பு நடத்துறவன். ரெண்டு வருசம் முன்னால குடிச்சுட்டுப் இவளைப் போட்டு அடிச்ச இவ புருசனை நீ கேட்டமாதிரி ஏண்டா அடிக்கறேன்னு கேட்டேன். அவனும் நான் உங்கிட்ட சொன்னமாதிரி, அடிக்கறத நிறுத்தறேன். தில் இருந்தா இவளையும், இவ புள்ளையையும் கூட்டிக்கிட்டுப்போடான்னான். பாவப்பட்டு இவ புருசன் கிட்டேந்து இவளையும், இவ பிள்ளையும் நான் சேர்த்துகிட்டேன். என்னால அப்படிச் செய்யமுடியும். என் உலகம் அப்படி. உன்னால முடியாது. எங்க வாழ்க்கை ஒனக்குப் புரியவும் புரியாது. இவனை இப்படி நான் தண்டிக்கலேன்னா, இவனும் ஒரு தெருப்பொறுக்கியா, கேப்மாரியா, திருட்டுப்பயலாத்தான் அலைவான். போலீசு இவன்பின்னாலே சுத்தும். ஜெயில்தான் இவனுக்கு மாமியா வூடாகிப்போகும். உனக்குச் சொன்னாப்புரியாது.

View More கையாலாகாதவனாகிப் போனேன்! — 5

தமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017

இந்து ஊடக அமைப்பான விஸ்வ சம்வாத் கேந்திரம் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் ஆக்கபூர்வமாக இந்து சிந்தனையை வளர்ப்பவர்களை கௌரவித்து ’நாரதர் விருதுகளை’ வழங்கி வருகிறார்கள். இவ்வருடம் சென்னை மையம் அளிக்கும் விருதுகளுக்கு சத்யா (துக்ளக்), ஜடாயு (தமிழ்ஹிந்து.காம்) மீனாக்ஷி (மங்கையர் மலர்), பத்மன்ஜி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். விருது விழா ஜூன் 10, 2017, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தி.நகரில் நடைபெறுகிறது. அனைவரும் வருக, அழைப்பிதழ் கீழே…

View More தமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017

இந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்

மன்னார் மாவட்டம் முழுவதுமே இந்துக்களைக் குறிவைத்துக் கிறித்தவராக்கும் நிலை இருந்துவருகிறது. நாற்பது விழுக்காடு [%] இந்துக்கள் அங்கிருப்பினும், அவர்களது நெருக்கடியை நீக்க, அவர்களுக்காக வாதாட, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்பிரதிநிதிகள் யாரும் இல்லை. அனைவரும் கிறித்தவர்களே! மேலும், மாவட்ட நிர்வாக, நீதித்துறை அதிகாரிகள் அனைவரும் அவர்கள்தாம். காவல் துறையோ பௌத்தர்கள் கையில்…

View More இந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்

கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்

பயணம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தேன். சிலர் முதல் வாரத்திற்குப் பதிலாக இரண்டாவது மூன்றாவது வாரத்தில் இதைச் செய்திருக்கலாம் என்றுசொன்னார்களே தவிர எவரும் கண்டிக்கவோ மோடியை எதிர்க்கவோ இல்லை. இதை ஒரு மாபெரும் துணிவான புரட்சிகரமான நடவடிக்கை என்றே ஏகோபித்துப் பாராட்டினார்கள். வங்கிகளில் காத்திருத்தலை ஒரு தேச தேச சேவையாகவே பலரும் எடுத்துக் கொண்டார்கள்… நிச்சயமாகப் பல எளிமையான வணிகர்களும் பொதுமக்களும் பாதிக்கப் பட்டிருப்பார்கள். சிலர் அவசரத்தேவைகளுக்காகத் தவித்திருப்பார்கள். இருந்தாலும் இங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியப் பட்டவர்கள் அல்லர். கூடுமானவரை பரஸ்பர புரிதலுடன் அனுசரித்துச்செல்கிறார்கள். எவரும் எவரையும் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாக அனுமதிப்பதில்லை. பரஸ்பர உதவிகளின் மூலமாகக் கடந்து செல்கிறார்கள்… இந்த மாபெரும் பணியைக் கூடுமான வரையிலும் மக்களுக்கு இடர்பாடின்றி செயல் படுத்த உதவிக் கொண்டிருக்கும் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், காவலர்களுக்கும், அரசுப் பணியினருக்கும் நமதுபாராட்டுக்கள்….

View More கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்

வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது

வலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ விஜயதசமி (அக்டோபர்-11) அன்று வெளியானது. முதல் இதழை திருமதி. சரோஜா (பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன்பிரசன்னா அவர்களின் தாயார்) பெற்றுக்கொண்டு வாழ்த்தினார். வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம் – நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்; வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்; மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்; இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்; அருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்; மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு….

View More வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது

2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்

கடந்த வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இந்து இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து மூன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் இரண்டில் சம்பந்தப் பட்ட தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி (எ) சுரேஷ் , இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்த சசிகுமார் இருவரும் மர்ம நபர்களால் இரவில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.. திண்டுக்கல் மாவட்டத்தின் இந்து முண்ணனியின் மாவட்ட பொறுப்பாளர் சங்கர் கணேஷ் அடையாளம் மறைக்கப்பட்ட நபர்களால் கொடூரமாகத் தாக்கப் பட்டார். மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டிருக்கிறார்.. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதம் தீவிரமாக வளர்ந்து வருகிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிந்தே இருக்கக் கூடும். இந்து இயக்கங்களின் முக்கியத் தலைவர்களுக்கு எந்நேரமும் அபாயம் என்ற சூழலும் இதனால் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு அபாயம் இருக்கும் நிலையில், தமிழ்நாடு மாநில அரசும், காவல்துறையும் ஏன் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. சம்பந்தப் பட்ட இயக்கங்களும் கூட தங்களது முக்கியத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் ஏன் இவ்வளவு தொய்வு காண்பிக்கின்றன என்பது புரியவில்லை…

View More 2016: இந்து இயக்கத் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்

கையாலாகாதவனாகிப் போனேன்! – 1

என் தங்கை அழுதாலே பொறுக்காமல், “பாப்பாவைத் தூக்கு, அம்மா!” என்று முறையிடும் என்னால் அதைக் காணச்சகிக்கவில்லை. எந்தவொரு மாட்டுவண்டியைப் பார்த்தாலும் என் கையாலாகாத்தனத்தையும், அந்த வாயில்லா ஜீவனையும், இரத்தம்சொட்டும் மென்மையான அதன் பின்பாகத்தையும், அதன் கண்ணிலிருந்து வழிந்து தரையில் சிந்திய கரிய நீரையும், அதன் கண்களில் உமிழப்பட்ட புகையிலைச் சாறையும், அது வழியும்போது அந்த வாயில்லா ஜீவன் தன்னை நொந்துகொண்டு இரத்தக்கண்ணீர் வடிப்பதுபோன்ற தோற்றமும், மெல்ல எழுந்திருந்து தள்ளாடித் தள்ளாடி வண்டியை இழுத்துச்சென்றதையும் நினைவுக்குக் கொண்டுவந்து என்னுள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

View More கையாலாகாதவனாகிப் போனேன்! – 1

சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

2004ல் பிடிபட்ட நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே 16 கோடி. அது கோயிலுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதா என்பது போன்ற தகவல்களை எல்லாம் கேட்பது, வாசகர்களின் அறிவுக்கு அதீதமான விஷயம். எனவே, நாங்கள் அதையெல்லாம் சொல்ல மாட்டோம். 2004ல் தப்பித்த தீனதயாளன் 1965லும் பிடிபட்டு தப்பித்தவர். இப்போதும் அவர் பிடிபடவில்லை.
93 சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இவை அனைத்தின் மதிப்பும் 50 கோடிகள் மட்டுமே… கரப்ஷன் தடுப்பதற்காக இந்திய அரசால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட துறைகள், சிலைகடத்தலின் போது சேர்த்து கடத்தப்பட்டதால் அவை எதுவும் இந்தியாவில் இல்லை. அதனால்தான் செல்வக் குவிப்பு குறித்துக் கேள்விகேட்க எந்தத் ‘துறையும்’ இல்லை…

View More சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

அன்னையர் தினம்

ஒருதாய் எட்டு குழந்தைகளைக் காப்பாற்றுவாள். ஆனால் அந்த எட்டுக் குழந்தைகளும் சேர்ந்துகூட அந்தத் தாயைக் காப்பாற்றமாட்டார்களாம். முன்பெல்லாம் மதர்ஸ் டே என்ற ஒன்றைப்பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. இப்பொழுது வருஷம் 365 நாட்களுமே ஏதாவது ஒரு டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மீடியாவில் ‘மதர்ஸ் டே’ ஆரவாரமாகப் பேசப்பட்டாலும் மறுபக்கம் முதியோர் இல்லங்கள்! மதர்ஸ் டேயில் அக்கறையும் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் முதியோர் இல்லங்கள் ஏன்?

View More அன்னையர் தினம்