யாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்

.. யாழ்ப்பாணம் இந்து சமயம் சிறப்புற்றிருக்கும் பிற பிரதேசங்களை விடவும், இன்னும் இலங்கையின் பிற பகுதிகளை விடவும் சிறப்பான, தனித்துவமான பல பண்புகளை, நம்பிக்கைகளைக் கொண்டதாகவுள்ளது…ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்களும் அவர் வழி வந்தவர்களும் எவருக்கும் விட்டுக் கொடுக்காத வீரசைவ செந்நெறியை இங்கே வளர்த்திருக்கிறார்கள்..

View More யாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்

இந்துத்துவம் என்றால் என்ன? – கட்டுரைப் போட்டி

இந்திய தேசிய நலன் நாடும் சிந்தனைகளை வளர்த்தெடுத்து வரும் Centre Right India…

View More இந்துத்துவம் என்றால் என்ன? – கட்டுரைப் போட்டி

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்

முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில்…

View More இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்

எழுமின் விழிமின் – 21

”சுவாமிஜி! இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்?” என்று நான் துணிந்து கேட்டேன். ”நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்” …எங்கே உனது நம்பிக்கை? எங்கே உனது தேச பக்தி? கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது? எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்?….

View More எழுமின் விழிமின் – 21

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7

ஹிந்து பத்திரிகை மட்டுமல்ல, இடதுசாரி நிபுணர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே கருணைக் காவலர்களாக தங்களை முன்னிறுத்த விழையும் பல அதிகாரிகளும் நிபுணர்களும் பொருளாதார ஏற்றதாழ்வு என்பது ஒரு இயற்கை நியதி என்ற பச்சையான உண்மையை ஏற்க மறுக்கின்றனர். இருப்பவர்களிடமிருந்து அதிக வரிவசூல் செய்வதன் மூலம், இல்லாதவர்களுக்கு வசதிகளை அளித்துவிட முடியும் என்று துடிக்கின்றனர்… பட்ஜெட் பற்றாக்குறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய, பா.ஜ.க அரசு திரு.விஜய் கெல்கார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது…5 இலட்சம் கோடிகளை பற்றாக்குறையாக மாற்றி விட்டது ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் தற்பொழுதைய அரசு… இந்தியாவில் அமலில் உள்ள இரண்டு பிரம்மாண்டமான மானிய திட்டங்களான 100 நாள் வேலைத் திட்டத்தையும், உணவுக்கான மானியங்களையும் ஒருசேர நோக்குவதே சரியான வழியாக இருக்கும்…

View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7

[பாகம் 15] சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஆத்ம விசாரம்

காலமெல்லாம் ஆத்ம விசாரம் நிகழ்ந்து வருகிறது. மக்கள் மனது ஆத்ம விசாரத்தில் ஈடுபடாத காலமே கிடையாது. ஆத்மவிசாரம் செய்கின்ற முறை காலத்திற்கேற்றவாறு அமையலாம். தாங்களாகவே ஆத்ம விசாரம் செய்யும் பொழுதுதான் சமயத்தைப்பற்றிய அனுபவ ஞானம் ஒவ்வொருவருக்கும் கிட்டுகிறது… ஆத்ம ஞானத்தைப் பற்றிய தெளிவு பெறாதவர்கள் குருவை நாடிப் போவது உண்டு. பிப்பலாதரிடம் பரத்வாஜருடைய புத்திரர் சுகேசர், சிபியின் புத்திரர் சத்தியகாமர், சூரியனுடைய பெளத்திரர் கார்க்கியர், அசுவலரின் புத்திரர் கெளசல்யர், விதர்ப்பநாட்டினராகிய பார்க்கவர், கத்தியரின் புத்திரர் கபந்தி என்னும் அறுவர்…

View More [பாகம் 15] சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஆத்ம விசாரம்

ஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்

பிரமிடின் அடித்தட்டில் இருப்பவர்கள் மிகவும் ஏமாளிகள், கொஞ்சம் மேல் அடுக்கில் உள்ளவர்கள் சுமாரான ஏமாளிகள்,மேலே உள்ளவர்கள் ஏமாற்றத் தெரிந்தவர்கள். அனுபவிக்கத் தெரிந்தவர்கள்… எந்த நிறுவனத்திலும் எந்த வியாபாரத்திலும், லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். ஆனால், இந்த ‘எம்.எல்.எம்’-ல் மட்டும் நஷ்டமே இல்லை!…. நேஷனல் ஜியாகரஃபி சேனலில் மட்டுமே பார்த்திருந்த ஆஸ்திரேலிய பறவை இனத்தை எதை நம்பி அது பொன்முட்டையிடும் என்று தமிழர்கள் நம்பினார்கள்?… பாசி நிறுவத்திடம் 10 கோடியை லஞ்சமாக பெற்ற டி.எஸ்.பி, 3 கோடியை பெற்ற இன்ஸ்பெக்டர் இவர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்! என்ன செய்வது?…

View More ஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்

எழுமின் விழிமின் – 20

கல்வியென்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாகுகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும்… உங்களுக்கு இளமையின் சக்தித்துடிப்பு இருக்கும் பொழுதுதான் உங்களது வருங்காலத்தைப் பற்றி நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் தளர்ந்து வாடித் தேய்ந்துபோன பிறகு அல்ல; பணி புரியுங்கள். இதுவே தக்க தருணம்… உங்கள் ஆத்மாவில் அளவற்ற சக்தியிருக்கிறதென்றும் இந்நாடு முழுவதையும் உங்களால் தட்டியெழுப்ப உங்களால் முடியும் என்றும் உங்களில் ஒவ்வொருவரும் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்….

View More எழுமின் விழிமின் – 20

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6

உண்மையான ஏழை மக்களுக்கு, அவர்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கப் பயன்படும் அனைத்து மானியங்களும் பிரயோஜனமில்லாத மானியங்களே!… எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்பதில் உயிரியலாளர்களிடையே விவாதம் நடக்கிறது. குடும்ப அளவிலா, நாட்டின் அளவிலா, இன அளவிலா, மொத்த மனித அளவிலா அல்லது அனைத்து உயிர்களின் அளவிலா?…. எங்கள் மாவட்டத்தில் மொத்தமாக 10,15 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அனைவர்க்கும் இழப்பீடு வழங்கப்பட்டது…. ஒரு உதாரணத்திற்காக, திருபாய் அம்பானியின் விதவை மனைவியையும், என் தாயாரையும், என் வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியையும் அவதானிக்கலாம்….

View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5

..பெட்ரோலின் விலை மாதத்திற்கு ஒருமுறையாவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை சரி என்று சொல்லும் ஒரு அரசியல்வாதியும் இங்கு இல்லை. காங்கிரஸ் அரசில் உள்ளவர்களும் இது கடுமையானது ஆனால் தேவையான ஒன்றே என்றே சப்பைக் கட்டு கட்டுவார்கள்…இன்றும் பெட்ரோலின் விலை ஏற்றத்தை ஆதரிக்கவே செய்கிறேன். காரணம் மிகவும் எளிமையானது. வாஜ்பாய் தலைமையில் விலை ஏற்றத்துக்கான காரணங்களாக எவை முன்வைக்கப் பட்டதோ அதே காரணங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும்….

View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5