சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்

பகவத்கீதை ஏன் உலகிலேயே மோசமான புத்தகம், இந்துமதத்தை அழித்து ஒழிப்பதே நமது நோக்கம் போன்ற பிரசாரங்களை வேறுவேறு தலைப்புகளில் சொல்லும் விதவிதமான புத்தகங்கள் கணிசமான அரங்குகளில் இருந்தன. இதற்கு நடுவில், வாசிப்பின்பத்தையும் அறிவுத் தேடலையும் மையப் படுத்தி நல்ல புத்தகங்களை விற்கும் அரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன..”புத்தகங்களில் நான் பொன்னியின் செல்வனாக இருக்கிறேன்” என்று மிஸ். தமிழ்த்தாயின் கீதை கட்டாயம் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு சின்னதும் பெரிசுமாக விதவிதமான அளவுகளில், விதவிதமான அட்டைப்படங்களுடன் பொ.செ. வீற்றிருந்தது… சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு. அது தொடர்ந்து இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வீச்சுடன் நடப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம்…

View More சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 9

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>  ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம்…

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 9

தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது

தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டுவரும் சில நண்பர்களுக்கு எனது பரிந்துரை (நூலகத்தில் போய் புத்தகம் படிப்பதெல்லாம் ruled out, வாங்கித் தான் வாசிக்க வேண்டும் என்பதால், ‘வாங்கி’ படிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதையும் கணக்கில் கொண்டு)… உங்கள் ஒட்டுமொத்த தமிழ் நவீன இலக்கிய வாசிப்புக்கு இந்த நூலை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம். நூலின் கடைசியில் தமிழின் மிகச்சிறந்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வணிக இலக்கியம் எனப் பட்டியல்கள் உள்ளன.. திரும்பத் திரும்ப வாசித்துத் தீரவேண்டிய, பல எழுத்தாளர்களின் கதைகள் ஒரே புத்தகத்தில் அடங்கிய தொகுப்பு இது… கவிதைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டா தெரியவில்லை. ஆனால், கவிதைகளை வாசித்து ரசிக்க இயலாத இலக்கிய வாசிப்பு முழுமையானதல்ல, சொல்லப் போனால், ரொம்பவே அரைகுறையானது…

View More தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது

அமெரிக்க அதிபர் அரசியல் – 4

அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநிலங்களால் நியமிக்கப்பட்ட வாக்காளார்[எலெக்டர்]குழாத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதும், அதோடு பதவியில் உள்ளவர்களும், பசையுள்ளவர்களும் உட்புகுந்து, தங்களுக்கு வேண்டியவர்களை வாக்காளர்களாக நியமித்துவிடக்கூடாது என்பதிலும் அமெரிக்கத்தந்தையர் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

ஒரொரு மாநிலத்தின் வாக்காளர்குழாத்தில் எத்தனைவாக்காளர்கள் இருக்கவேண்டும் என்பதை அரசியல் அமைப்பு தீர்மானித்துவிட்டது. அந்த வாக்காளர்குழாம் அதிபராகத் தேர்தலுக்குநிற்கும் எவருக்குச் செல்லவேண்டும் என்பதை அம்மாநிலத்தின் வாக்காளர்கள்[வாக்களிக்கும் மக்கள்] தங்கள் வாக்குகள்மூலம் தீர்மானிக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநிலங்களால் நியமிக்கப்பட்ட வாக்காளார்[எலெக்டர்]குழாத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதும், அதோடு பதவியில் உள்ளவர்களும், பசையுள்ளவர்களும் உட்புகுந்து, தங்களுக்கு வேண்டியவர்களை வாக்காளர்களாக நியமித்துவிடக்கூடாது என்பதிலும் அமெரிக்கத்தந்தையர் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

ஒரொரு மாநிலத்தின் வாக்காளர்குழாத்தில் எத்தனைவாக்காளர்கள் இருக்கவேண்டும் என்பதை அரசியல் அமைப்பு தீர்மானித்துவிட்டது. அந்த வாக்காளர்குழாம் அதிபராகத் தேர்தலுக்குநிற்கும் எவருக்குச் செல்லவேண்டும் என்பதை அம்மாநிலத்தின் வாக்காளர்கள்[வாக்களிக்கும் மக்கள்] தங்கள் வாக்குகள்மூலம் தீர்மானிக்கிறார்கள்.

தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல இருக்கிறது என்று தோன்றலாம். அது ஏன் அப்படித் தீர்மானிக்கப்பட்ட்து என்பது முன்பகுதிகளில் விளக்கப்பட்டது.

அதிபரின் வாரிசுகளைப்பற்றிச் சொல்லும்முன்னரே, அவரை எப்படிப் பதவியிலிருந்து நீக்குவது என்பதை முதலில் சொல்லுகிறது, அரசியல் அமைப்பின் இரண்டாம்பகுதியின் நான்காம் பிரிவு:

“[நாட்டுத்]துரோகம், லஞ்சஊழல், அல்லது மற்ற பெருங்குற்றங்களும், சிறுகுற்றங்களும் செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, அது உறுதியாக்கப்பட்டால், அமெரிக்காவின் அதிபர், துணைத்தலைவர், மற்ற குடியாட்சி அதிகாரிகள் அப்பதவியிலிருந்து விலக்கப்படுவர்.”[3]

நன்றி: familypedia.wikia.com

[அமெரிக்க அதிபரி ஆன்ட்ரூ ஜாக்ஸனை பதவிநீக்கம்செய்யமுயல்வது பற்றிய கேலிப்படம்]

பழைய[மாஜி] அமெரிக்க அதிபர் பில் க்லின்ட்டனை வழக்குமன்றத்தில் பொய்யுரைத்தார் என்று அப்போதிருந்த பிரதிநிதிசபை குற்றம்சாட்டி உறுதிசெய்தது [impeached]. ஆயினும், அதை செனட்டும் உறுதிசெய்யாததால், பில் க்லின்ட்டன் பதவிநீக்கம் செய்யப்படவில்லை.[4],[5],[6]

அதற்குப் பிறகு வந்த பன்னிரண்டாவது திருத்தம் ஒரு முக்கியமான ஷரத்தைக் கொணர்ந்தது. அமெரிக்க அதிபரும், துணை அதிபரும் ஒரே மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்பதுதான் அது.[7] இதன்மூலம் ஒரு மாநிலத்திடமே அமெரிக்காவின் செயலாற்றும் உரிமை குவிந்துவிடக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

autoஅதிபரின் வாரிசுகளைப் பற்றிச் சொல்லப்போவதாகச் சொல்லிவிட்டு — ஊருக்குப்புதிதாக வருபவர்களை நேர்வழியில் போகுமிடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் இழுத்தடிக்கும் ஒருசில ஆட்டோ-டாக்சி ஓட்டுனர்களைப்போல [ஆட்டோ/டாக்சி ஓட்டுனர்கள் மன்னிக்க; இது தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை, இந்தியவின் மற்ற மாகாணங்களிலும், உலகின் பலநாடுகளிலும் நடக்கிறது!] எங்கெங்கோ இழுத்தடிக்கப்படுவதுபோல உணரவேண்டாம். அமெரிக்க அரசியல் அமைப்பைப்பற்றி அறியவிரும்புவர்களுக்கு அதை நன்றாகச் சுட்டிக்[ற்றி]காட்ட வேண்டுமல்லவா!

சொல்ல எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் அரசியல் அமைப்பின் இருபதாம் திருத்தத்தில் சொல்லப்பட்டதால், ஒவ்வொரு திருத்தமாக இழுத்தடிக்க — மன்னிக்க – ஒவ்வொன்றாகச் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அமெரிக்க அதிபராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அதாவது, நவம்பர் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தல் முடிந்து இன்னார் புதிய அதிபர் என்றும் தெரிந்துவிட்டது. அதென்ன நவம்பர் மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை என்று மனதுள் கேள்வி எழுகிறதா? அப்பொழுதான் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவேண்டும் என்பது விதி — இல்லையில்லை, சட்டம்! தேர்தல் முடிந்தபின்வரும் ஜனவரி இருபதாம் தேதி அதிபர் பதவி ஏற்பார். அதற்குள் அவர் இறந்துவிட்டால் என்ன செய்வது? அவரது வாரிசு யார்?

அதைத்தான் இருபதாம் திருத்தம் சொல்கிறது:

“அதிபரின் பதவிக்காலம் துவங்குமுன்னர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இறந்துவிட்டால், துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் [அமெரிக்க]அதிபராவார்.”[8]

அமெரிக்க அதிபராக இருமுறையே தேர்ந்தெடுக்கப்படலாம் என்று இருபத்தியிரண்டாம் திருத்தம் சொல்கிறது. இத்திருத்தம் 1947ல் கொண்டுவரப்பட்டு, 1951ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமெரிக்க அதிபர் எத்தனைமுறை தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது அரசியல்சாசனத்தில் முதலில் வரையறுக்கப்படாவிட்டாலும், முதல் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் முதலானோர் தானாகவே இருமுறைக்குப்பின் போட்டியிடவில்லை. எழுத்திலில்லாத இம்முறை கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்களால் கடைப்பிடிக்கப்பட்ட்து.

ஆயினும், அமெரிக்கா பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைவு அடைந்தபோது அதை மீட்டெடுத்தவர் என்பதாலும், இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் சிறந்தமுறையில் அமெரிக்காவை வழிநடத்திச்சென்று வெற்றிக்கு அடிகோலியவர் என்பதாலும், மூன்றாம்முறை தேர்தலுக்கு நின்ற பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர்காலத்திற்குப்பின்னர், மற்ற அதிபர்கள் கைப்பிடித்த இருமுறை பதவிக்காலமே சிறந்த ஒன்று என்றும், மக்களாட்சி நடந்துவரும் ஒரு நாடு தனிமனிதர் ஒருவரால் பல பத்தாண்டுகள் ஆளப்படக்கூடாது என்பதாலும், அதிபர் பதவியை இருமுறையோடு கட்டுப்படுத்தும் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

ஒருவழியாக அமெரிக்க அதிபரின் வாரிசுகளைச் சுட்டிக்காட்டும் இருபத்தைந்தாம் திருத்தத்திற்கு வந்துசேர்ந்துவிட்டோம். நிச்சயமாக வண்டி வேறுவழியில் செல்லாது, வாருங்கள்!

பிரிவு 1: [அமெரிக்க] அதிபர் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ, விலகினாலோ, இறந்தாலோ, துணைத்தலைவர் அதிபராவார்.

பிரிவு 2: துணைத்தலைவர் பதவி காலியானால் {அவர் நீக்கப்பட்டாலோ, விலகினாலோ, இறந்தாலோ என்று புரிந்துகொள்ளவும்] அதிபர் ஒரு துணைத்தலைவரை நியமிப்பார். சட்டமன்றத்தின் இருபிரிவுகளும் அதை உறுதிசெய்யதபின் அவர் பதவியேற்பார்.

அமெரிக்கத் துணைத்தலைவர் செனட்டின் தலைவர். அவரை செனட்டின் ‘பிரசிடென்ட் ப்ரோ டெம்ப்போரே [President Pro Tempore]’ என்றழைக்கிறார்கள். பிரதிநிதிசபையின் தலைவர் ‘ஸ்பீக்கர் ஆஃப் த ஹவ்ஸ்’ என்றழைக்கப்படுகிறார். எனவே, துணைத்தலைவருக்கு அடுத்தபடி அதிகாரம் பெற்றவர் ‘ஸ்பீக்கர் ஆஃப் த ஹவ்ஸ்’தான்.

ஒருவேளை, அமெரிக்க அதிபரும், துணைத்தலைவரும் ஒரே சமயத்தில் விபத்துக்குள்ளாகிச் செயலிழந்துவிட்டால், ‘ஸ்பீக்கர் ஆஃப் த ஹவ்ஸ்’ அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்பார்.

ஒருவழியாக அமெரிக்க அதிபர்பற்றிய நெளிவுசுளிவுகளை ஓரளவு அறிந்துகொண்டோம். அடுத்தபடி, தேர்தலுக்குச் செல்வோம்.

8. கட்சி வேட்பாளர்கள்

அமெரிக்க அதிபர் பதவிக்குவர என்னென்ன தகுதிகள் வேண்டும் என்றும், அதிபர் எப்பொழுது பதவிநீக்கம் செய்யப்படுவார், அதை எப்படிச் செய்வது, அவர் பதவியிலிருந்து நீங்கினாலோ, நீக்கப்பட்டாலோ, நீங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ, பதவியிலிருக்கும்போது இறந்தாலோ அவரது பதவிக்கு யார் வருவார்கள் என்றும் அறிந்துகொண்டோம்.

அப்படி அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்தலுக்குநிற்பவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அப்படி நடக்கும் தேர்தலில் மற்றநாடுகளுக்கும், அமெரிக்காவுக்குமுள்ள வேறுபாடு என்ன என்பதையும் கண்டுகொண்டோம்.

தேர்தல் என்றாலே பல அரசியல் கட்சிகள் இருக்கும்; எனவே, ஒவ்வொரு கட்சியிலிருந்தும் வேட்பாளர்கள் அப்பதவிக்குப் போட்டியிடுவார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே!

இந்தியாவைப் பொறுத்தவரை கட்சிமேலிடம் யார் அக்கட்சியின் வேட்பாளராக நிற்கவேண்டும் என்பதை முடிவுசெய்கிறது. மற்றநாடுகளிலும் அப்படியே! இப்படிச் செயல்படுவது, போட்டியிடவிரும்பும் பலரில், அல்லது சிலரில் சிறந்தவரை, வெற்றிபெறும்வாய்ப்பு உள்ளவரை, அக்கட்சி முடிவுசெய்ய உதவுகிறது என்பது கொள்கையளவில் உண்மையாகும். ஆனால், கட்சிச் செயலகத்தின் நான்கு சுவர்களுக்குள் என்னநடக்கிறது என்பதை நாம் ஊகித்தாலும், அதைப்பற்றி இங்கு விவாதிக்கவேண்டிய அவசியமோ, அதைத் தெரிந்துகொள்ளவேண்டிய ஆவலுமோ இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்புக்கு அப்பாற்பட்டது.

ஆகையால், அமெரிக்க அரசியலுக்குத் திரும்பிவருவோம்…

பிரித்தானியக் கட்சிகள்

ஆஸ்திரேலியக் கட்சிகள்

மக்களாட்சி நிலவும் எந்தநாட்டிலும் ஒருசில நாடளாவிய கட்சிகளும், பல பிராந்தியக் கட்சிகளும் உண்டு. பிரிட்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் கிட்டத்தட்ட பதினேழு கட்சிகள் உள்ளன. அவற்றில் பிரிட்டனைப் பொறுத்தவரை கன்செர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் முக்கியமான இரண்டு கட்சிகள். இவைதான் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆஸ்திரேலியாவில் தற்பொழுது கூட்டணி ஆட்சி [இந்தியாவைப்போல] நடந்துவருகிறது. அக்கூட்டணியில் உள்ள இரண்டு பெரிய கட்சிகள் லிபரல் பார்ட்டி ஆஃப் ஆஸ்திரேலியாவும், லிபரல் நேஷனல் பார்ட்டி ஆஃப் க்வீன்ஸ்லாந்தும் ஆகும். இதில் லிபரல் நேஷனல் பார்ட்டி ஆஃப் க்வீன்ஸ்லாந்து தமிழ்நாட்டின் திமுக, அதிமுக போன்ற பிராந்தீயக் கட்சி. எதிர்க்கட்சி ஆஸ்திரேலியன் லேபர் பார்ட்டி.

அமெரிக்கக் கட்சிகள்

குடியரசுக் கட்சியும்[Republican party], மக்களாட்சிக் கட்சியும் [Democratic party]

அமெரிக்காவிலும் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஐந்து நாடளாவிய கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சி உள்பட முப்பத்தியொன்று உதிரிக்கட்சிகளும் உள்ளன. இவற்றில் பெரியவை டெமக்ராடிக் [ஜனநாயக, அல்லது மக்களாட்சி] கட்சியும், ரிபப்லிகன் [குடியரசு] கட்சியும் ஆகும். சிறிய கட்சிகளில் குறிப்பிடத் தகுந்தவை லிபர்டேரியன் கட்சி, க்ரீன் கட்சி.

பிரபலமான அமெரிக்க அதிபர்களில் ஆபிரஹாம் லிங்கன், ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்; பிராங்க்லின் ரூஸ்வெல்ட், ஜான் கென்னடி, பில் க்லின்ட்டன், பராக் ஒபாமா ஆகியோர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இதுபோக சுயேச்சையாக நின்று பதவிக்கு வருவபர்களும் உண்டு. சுயேச்சையாக வெற்றிபெற்றவர்கள் பொதுவாக பெரிய கட்சிகளான இரண்டில் ஒன்றுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது வழக்கமாக இருந்துவருகிறது. அவர்கள் அதை முன்னமேயே அறிவித்தும் விடுவார்கள்.

அமெரிக்காவில் எந்தக்கட்சி வேட்பாளரையும் கட்சி மேலிடம் முடிவுசெய்வதில்லை. அந்தந்தக் கட்சியைச் சார்ந்த மக்களே தீர்மானிக்கிறார்கள்.

வியப்பாக இருக்கிறதா? ஆனால், அதுதான் உண்மை! உதாரணமாக ஒரு மாநில ஆளுநர்[கவர்னர்] பதவிக்குப் போட்டியிட ஜனநாயகக் கட்சியின்சார்பாக நான்குபேரும், குடியரசுக் கட்சியின்சார்பாக மூன்றுபேரும் முடிவெடுத்துத் தேர்தல் ஆணையத்தில் மனுக்கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்..

“அதுகிடக்கட்டும்! அமெரிக்க அதிபர் வேட்பாளரைப்பற்றிச் சொல்லாமல், மாநில ஆளுநரைப்பற்றி ஏன் சொல்கிறீர்?” என்று கேட்கிறீர்களா? முதலில் சுலபமானதைச் சொன்னால், பின்பு கடினமானதைச் சொல்லலாம் என்றுதான்..

“இவ்வளவு குழப்பமான அரசியல் என்றால், யாரைய்யா ஓட்டுப்போடுவார்கள்? கேட்கவே தலைசுற்றல் வருகிறது.” என்று அலுத்துக் கொள்கிறீர்களா?

வாஸ்தவம்தான்.

அதனால்தான் இங்கு இந்த கட்சிவேட்பாளர் தேர்தலில் அதிகமானவர் கலந்துகொள்வதில்லை. அப்படி நினைத்து, இந்த ஆண்டு, அமெரிக்க அதிபர் கட்சி வேட்பாளர் தேர்தலுக்கு அரிசோனாவில் மாநிலம் முழுவதற்கும் அறுபதே ஓட்டுச்சாவடிகளே திறக்கப்பட்டன. நினைப்புக்குமாறாக நிறையப்பேர் வாக்களிக்கவந்ததால், மணிக்கணக்காக [சில இடங்களில் ஐந்துமணிக்கும் மேலாகவே] வரிசையில் நிற்கவேண்டிவந்து, விசாரணைக்கமிஷன் அமைக்கவேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது![i]அரிசோனா கவர்னை டக் டூசி இந்நிலைமை ஏற்கத்தக்கதல்ல என்று பொங்கியெழுந்துள்ளார்.[ii]

அதுபோகட்டும், விஷயத்திற்கு வருவோம்: ஓட்டுரிமையுள்ள வாக்காளர் அனைவரும் வாக்காளராகப் பதிவுசெய்யும்போது தாங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கவேண்டும். அரசு ஊழியர்களும் கட்சியில் இருக்கலாம், தடையில்லை. இதற்காக கட்சிக்கு சந்தா எதுவும் செலுத்தவேண்டியதில்லை. கட்சிவேட்பாளர் தேர்தலில் கலந்துகொள்ளவே இக்கேள்வி கேட்கப்படுகிறது. எக்கட்சியையும் சாராதவர் என்றால் ‘சுயேச்சை’ என்றும் பதிந்துகொள்ளலாம். சில மாகாணங்களில் சுயேச்சை என்று பதிந்துகொண்டால், எக்கட்சி வேட்பாளர் தேர்ந்தலிலும் வாக்களிக்க இயலாது.

ஆனால் அரிசோனாவில், சுயேச்சைகள் எக்கட்சி வேட்பாளருக்குவேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால், ஒரு கட்சியைச்சேர்ந்தவர் என்று பதிந்தால் அக்கட்சி வேட்பாளர்களுக்குமட்டுமே வாக்களிக்க அனுமதி உண்டு. இதைப் பாதி-திறந்த, அல்லது பாதி-மூடிய கட்சித் தேர்தல் [semi-open, or semi-closed primary] என்கிறார்கள். ஆயினும், அமெரிக்காவில் இருபத்தியிரண்டு மாநிலங்களில் கட்சிசார்பு பற்றிக் கேட்பது இல்லை. இந்த மாகாணங்களில் திறந்த வேட்பாளர்தேர்வு [open primary] நடைபெறுகிறது.[iii]

ஏன் இந்தக் குழப்பம் என்கிறீர்களா? அதது, அந்தந்த மாநில உரிமையாகும். இவை பின்னால் மாற்றப்படவும் வாய்ப்பிருக்கிறது. இந்த விஷயத்தில் ஒவ்வொரு மாநிலமும் தன்னுரிமை பெற்றிருக்கிறது.

இப்படிக் குழப்பினால் யாரும் ஓட்டுப்போட வரமாட்டார்கள் என்றுதான் “வராதோர் வாக்கு [absentee ballot]” என்றொன்று இருக்கிறது. ஒட்டளிக்கப் பதிவு செய்துகொள்ளும்போதே, நமது முகவரியைக் கொடுத்து, வராதோர் வாக்குரிமை வேண்டும் என்று குறிப்பிட்டால், தேர்தலுக்குக் கிட்டத்தட்ட இருபது நாள்களுக்கு முன்னதாகவே வாக்குச்சீட்டு நம்மைத்தேடி நம் வீட்டிற்கே வரும்.
“அட ராபணா, இப்படிச் செய்தால் வாக்கு ஊழல் நடக்காதா? வேட்பாளர்கள் கையூட்டு அளித்து வாக்கைச் சேகரித்து வெற்றிபெற்றுவிட்டால்…?” என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

View More அமெரிக்க அதிபர் அரசியல் – 4

சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

2004ல் பிடிபட்ட நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே 16 கோடி. அது கோயிலுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதா என்பது போன்ற தகவல்களை எல்லாம் கேட்பது, வாசகர்களின் அறிவுக்கு அதீதமான விஷயம். எனவே, நாங்கள் அதையெல்லாம் சொல்ல மாட்டோம். 2004ல் தப்பித்த தீனதயாளன் 1965லும் பிடிபட்டு தப்பித்தவர். இப்போதும் அவர் பிடிபடவில்லை.
93 சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இவை அனைத்தின் மதிப்பும் 50 கோடிகள் மட்டுமே… கரப்ஷன் தடுப்பதற்காக இந்திய அரசால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட துறைகள், சிலைகடத்தலின் போது சேர்த்து கடத்தப்பட்டதால் அவை எதுவும் இந்தியாவில் இல்லை. அதனால்தான் செல்வக் குவிப்பு குறித்துக் கேள்விகேட்க எந்தத் ‘துறையும்’ இல்லை…

View More சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது – தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத் தேவை… அறிவுஜீவிகள் கூறுவதுபோல இந்துத்துவம் என்பது இந்து ஞான மரபுடன் தொடர்பு இல்லாத வெறும் அரசியல் சித்தாந்தம் அல்ல. இந்துத்துவத்தின் வரலாறு என்பது வீர சாவர்க்கருடன் தொடங்கி ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பின் இயக்க வரலாறு என்பதாக மட்டும் இல்லை. அதன் தொடக்க வேர்கள் புராதனமானவை. பாரதத்தின் உன்னதங்களைக் கொண்டாடிப் பாதுகாப்பவை. அவற்றைத் தகவமைத்து வளர்த்தெடுப்பவை. அதுபோலவே பாரதத்தின் சீர்கேடுகளுக்கு ‘பார்ப்பனீயம்’ போன்ற பொய்யான எதிரிகளை உருவாக்காமல் பொறுப்பேற்பவை. அந்த சமூக தேக்கநிலைகளிலிருந்து விடுதலையாகும் உத்வேகத்துடன், இந்துத்துவம் அதற்கான தீர்வுகளைப் பாரத மண்ணிலிருந்து உருவாக்குகிறது….

View More கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்

அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்

1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். காந்தியவாதியும் வரலாற்றாசிரியருமான தரம்பால், பிரிட்டிஷாரின் ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆதாரபூர்வமான நூலை எழுதினார். மிக முக்கியமான இந்த வரலாற்று நூலை B.R.மகாதேவன் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து நமக்கு அளித்திருக்கிறார்..

View More அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்

இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்

தமிழில் இப்படி ஒரு நூல் வந்திருப்பது நம் நல்லூழ். இன்றைய அறிவியலுக்கும் பாரத மெய்ஞானச் சிந்தனை முறைகளுக்கும் என்ன தொடர்பு? அறிவியல் கண்டுபிடிப்புகளை நம் பாரம்பரியமான சிந்தனை மரபுகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடியுமா என்னும் கேள்வியுள்ள தேடல் கொண்டவர்களுக்கு வீணான பெருமித மார்தட்டல்களின்றி, மிகக் கறாராக நவீன விஞ்ஞானத்தின் பாய்ச்சலை, பாரதத்தின் மெய்ஞான தரிசனங்களின் ஒளியில் விளக்கும் சிறந்த நூல். இந்நூலுக்காக அரவிந்தன் நீலகண்டனுக்கும் சாந்தினிதேவி ராமசாமிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். பாரதம் அளித்த தரிசனங்களிலும் நவீன அறிவியலிலும் ஈடுபாடுள்ளவர்கள் இந்த நூலைக் கண்டிப்பாகத் தவறவிடக் கூடாது….

View More இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்

‘நமசிவாய’ மந்திரம் ஏழு காண்டங்கள் அடங்கிய கிருஷ்ண யஜுர்வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதையில், நான்காம் காண்டத்தில், ருத்ர நமகத்தில் எட்டாவது அநுவாகத்தில் வருகிறது. ருத்திரம் நமகம், சமகம் என்று இரண்டு பிரிவுகளை உடையது. ஒவ்வொன்றிலும் பதினொன்று அநுவாகங்கள் [துதிகள்] இருக்கின்றன.

சிவபெருமானின் ஒரு அம்சமான ருத்திரனைக் குறித்து இத்துதிகள் பாடப்படுவதால் இதற்கு ருத்ரம்என்று பெயர். ருத்ரத்திற்கு குத்ரப் ப்ரஸ்’னம், சதாருத்ரீயம், ருத்ராத்யாயம் என்ற மற்ற பெயர்களும் உள்ளன.
யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகவேண்டும் என்று சிவபெருமானிடம் வரம்பெற்ற பத்மாசுரனை அழிக்க மோகினியாக வேடம்தரித்துவந்த விஷ்ணு, அந்த அரக்கனை, அவன் தன் தலையிலேயே கைவைக்கும்படி செய்து, அவனை அழித்தபின்னர், தாண்டவ நடனமாடி, உலகநன்மைக்காக ருத்ரயக்ஞம் செய்தார் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றன.

View More அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்

கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்

ஏசுவின் உபதேசங்களை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம், ஏசு போதித்ததாகச் சொல்லப் பட்டும் அன்பை மட்டும் விதைக்கவில்லை. உலக வரலாற்றைப் படிக்கும் எவரும் கிறிஸ்தவ மதப் பரப்பலுக்காக சிந்தப்பட்ட ரத்தம் உலகத்தின் பாவங்களைக் கழுவுவதற்காக ஏசு சிந்தியதாகச் சொல்லப் படும் ரத்தத்தைவிடப் பல்லாயிரம் மடங்கு அதிகமானது என்பதை அறியக் கூடும். மறுக்கமுடியாத ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்தவத்தை கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தும் பல நூல்கள் ஏற்கெனவே மேற்கத்திய நாடுகளில் வெளிவந்திருக்கின்றன. தமிழில் அதைப் போன்ற விரிவான தொகுப்பு நூல் ஒன்றும் இல்லாதிருந்தது. உமரி காசிவேலு எழுதியுள்ள இந்த நூல் அக்குறையை ஈடு செய்கிறது….

View More கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்