கிறுத்துவப் ‘பொதிகை’ பொழியும் மதப் பிரசாரம்!

pothigaiகிறுத்துவமயமாக்குதல் – சிறிய பின்னணி

உலகம் முழுவதையும் கிறுத்துவமயமாக்குவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, உலகெங்கும் உள்ள கிறுத்துவமல்லாத நாடுகளைக் குறி வைத்துத் தன் அரசியல் பலத்தையும் பணபலத்தையும் பெருமளவில் முதலீடு செய்து ஆன்மாக்களை அறுவடை செய்வது கிறுத்துவ மத நிறுவனங்களுக்குக் கைவந்த கலை. ஆப்பிரிக்க, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் இருந்த பழங்குடியினரை அழித்து அவர்கள் கலாசாரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து அவ்விடத்தில் சிலுவைகளை நட்டுத் தங்களின் கிறுத்துவ கலாசாரத்தை ஸ்தாபித்து அந்த தேசங்களைக் கிறுத்துவ தேசங்களாக மாற்றியவர்கள் கிறுத்துவர்கள். ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அங்குள்ள பூர்வபழங்குடியினரை அழித்தொழித்து அந்நாட்டைக் கிறுத்துவ நாடாகப் பிரகடனப்படுத்துதல் ஒரு வழி; வியாபரம், மனித சேவை போன்ற பெயர்களில் ஒரு நாட்டிற்குள் நுழைந்து பின்னர் பல துறைகளிலும் ஆக்கிரமிப்பு செய்துத் தங்கள் அரசியல் நோக்கங்களைச் சாதித்துக்கொண்டு அந்நாட்டைக் கிறுத்துவ மயமாக்குவது இரண்டாவது வழி.

பாரதத்தைப் பொருத்தவரை, போர்ச்சுகீசிய படையெடுப்பில் ஆரம்பித்த கிறுத்துவ தாக்குதல், பிரெஞ்சுக்காரர்களுடனும் டச்சுக்காரர்களுடனும் உள்ளே நுழைந்து கடைசியாக ஆங்கிலேயர் ஆட்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. மலைப்பிரதேசங்களையும், கடலோரங்களையும் கைப்பற்றிய கிறுத்துவர்கள், உள்பிரதேசங்களிலும் கல்விச்சேவை, மருத்துவச்சேவை என்கிற போர்வையில் பெருமளவு நிலங்களைக் கைப்பற்றினர். பல ஆண்டுகள் போராடி சுதந்திரம் அடைந்த பின்னரும் கிறுத்துவ மத நிறுவனங்களை விரட்டி அடிக்காமல் அவர்களை இங்கு தொடர்ந்து இருக்கச் செய்தது நம் தலைவர்கள் செய்த மாபெரும் தவறாகும். அரசியல் சாஸனத்தில் அவர்களுக்குச் சலுகைகள் அள்ளித்தந்தது அடுத்த பெரும் தவறு. ஆங்கிலேயரின் கல்வித் திட்டத்தையே தொடர்ந்து கொண்டிருப்பது மற்றுமொறு முட்டாள்தனம். இவற்றின் பலன் பாரதத்தில் பல துறைகளும் இன்று கிறுத்துவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆட்சியும் கூடத்தான்!

கிறுத்துவமயமாக்கப்பட்ட ஊடகங்கள்

ஊடகங்களைப் பொருத்தவரை அவை என்றோ கிறுத்துவமயமாக்கப் பட்டுவிட்டன. பத்திரிகைத்துறை கிறுத்துவர்களின் கூடாரமாக ஆகிவிட்டது என்றால் அது மிகையல்ல. பத்திரிகைத் துறைக்குத் தேவையான கல்வியும், பாடத்திட்டங்களும் (Journalism, Media Management, Electronics & Visual Communication போன்றவை) கிறுத்துவ கல்லூரிகளில்தான் இருக்கின்றன. எனவே அங்கு பயிலும் ஹிந்து மாணவர்கள் கூட, மதச்சார்பின்மை என்கிற போதை மருந்து கொடுத்தே பயிற்சி அளிக்கப் படுவதால், தங்களை “செக்யூலரிஸ்டுகள்” என்று சொல்லிக்கொண்டு நாளடைவில் ஹிந்துத் துவேஷிகளாக மாறிவிடுகின்றனர்.

மேலும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பெரும்பாலும் கிறுத்துவ நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவ நாடுகளிடமிருந்து நிதி பெறும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களால் நடத்தப்படும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களும் இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் செக்யூலரிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் மௌடீக ஹிந்துக்களும் அதிக அளவில் வேலைபார்க்கும் நிறுவனங்களாகவோ இருக்கின்றன. எனவே அவை அனைத்தும், இந்த தேசத்தின் ஹிந்துத் தன்மையை முழுவதுமாக அழித்து, கிறுத்துவ கலாசாரத்தை இந்நாட்டில் நுழைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் ஒன்று சேர்ந்து வேலை செய்கின்றன.

இந்திய ஊடகங்களில் தற்போதைய நிலைமை

இன்றைய ஊடகங்கள், ஹிந்து மத நம்பிக்கைகளை இழிவு படுத்தும் விதமாகவும், ஹிந்து ஆன்மீகப் பாரம்பரியத்தை கேவலப்படுத்தும் விதமாகவும், ஹிந்து கலாசரத்தைக் கொச்சை படுத்தும் விதமாகவும், ஹிந்து மத சம்பிரதாயங்களைக் கிண்டல் செய்யும் விதமாகவும், பல நிகழ்ச்சிகளை ஒலி/ஒளி பரப்பியும், பல கட்டுரைகளையும் செய்திகளையும் பிரசுரித்தும், இன்றைய இளைய தலைமுறையினர் மனங்களில் ஹிந்து மதத்தைப் பற்றிய ஒரு தவறான எண்ணத்தை உண்டாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

தனியார் ஊடகங்கள்தான் இவ்வாறு இருக்கின்றன என்றால் அரசு நிறுவனங்கள் அதற்குச் சற்றும் குறைவில்லாமல் இயங்குகின்றன. ஆகாஷவாணியும் தூர்தர்ஷனும் இன்று கிறுத்துவமயமாக ஆகிக்கொண்டு வருகின்றன. இந்த அரசு நிறுவனங்களிலும், மற்றும் பிரஸ்ஸார் பாரதி அமைப்பிலும் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை உள்ளவர்களாகவும், கிறுத்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் போலி மதச்சார்பின்மைவாதிகளாகவும் இருக்கின்றனர்.

தற்போது ‘பொதிகை’ என்று அழைக்கப்பட்டு வரும் சென்னைத் தொலைக்காட்சி நிலையம் ஒரு பரிபூரண கிறுத்துவ நிறுவனமாக மாற்றப்பட்டு விட்டது என்றால் அது மிகையாகாது.

கிறுத்துவப் ‘பொதிகை’

”பொதிகை” என்று அழைக்கப்படும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் பல பெயர்களில் கிறுத்துவ மதப்பிரசாரம் நடந்துகொண்டிருக்கின்றது. சந்தோஷமான வாழ்க்கை (Happy Living), வாழ்க்கையில் வெற்றி பெறுவது (Success in Life), வாழ்க்கையில் முன்னேறுவது (Progress in Life), தனிப்பட்ட சிறப்பு குணநலன்களைப் பெறுக்கிக் கொள்வது (Personality Development), என்கிற போர்வையில் வெறும் கிறுத்துவ மதப் பிரசாரம் அப்பட்டமாய் நடந்து கொண்டிருக்கிறது பொதிகையில். இந்த நிகழ்ச்சிகளெல்லாம் ஏதோ மனிதவள மேம்பாட்டுக்காக என்று நினைத்தால் நம்மைப் போல முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது. இந்நிகழ்ச்சிகளில் தோன்றி நடத்துபவர்கள் மெத்தப் படித்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அல்ல; அவர்கள் வெறும் பங்குத் தந்தைகளும், பாஸ்டர்களும், எவாங்கலிஸ்டுகளும்தான்! இவர்கள் மனிதவளம் மேம்படுத்தும் போர்வையில் மனித மனங்களை அறுவடை செய்கின்றார்கள்.

விளம்பரதாரர் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்களெல்லாம் (Slots for Sponsored Programs) கிறுத்துவ மதப்பிரசார நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. இதற்கு, சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பதவிகளில் பணிபுரிபவர்களே மறைமுகமாக உதவி செய்வதாகத் தெரிகிறது. அவர்கள் “நிலையத்தின் நிதி வருவாய் பெருகும்” என்று சொல்லி நிலைய இயக்குனரை நம்பச் செய்வதாகவும் தெரிகிறது. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் பல்லாயிரம் ரூபாய்கள் கட்டணமாகப் பெறும்போது பொதிகையில் குறைந்த செலவு மட்டுமே ஆவதால் இந்தக் கிறுத்துவ நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் அதிக அறுவடையும் நிறைய மகசூலும் கிடைக்கிறது. கிறுத்துவத்தின் அனைத்துப் பிரிவனருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அனைவரும் சேர்ந்து அறுவடை செய்யச் செய்ய மகத்தான மகசூல் பெறுகிறார்கள்.

‘பொதிகை’ பொழியும் கிறுத்துவ மழை

பொதிகையில் எத்தனை விதமான கிறுத்துவ மதப்பிரசார நிகழ்ச்சிகள் வருகின்றது என்று பார்ப்போம்:

காலை 5.30 – “விக்டரி டுடே” (Victory Today-தினமும்)

காலை 8.30 – “சந்தோஷமாய் வாழ” (தினமும்)

காலை 9.30 – “வாருங்கள் முன்னேறலாம்” (திங்கள், புதன், வெள்ளி)

மாலை 9.00 – “நீடூழி வாழ்க” (தினமும்)

மாலை 10.30 – “வெற்றியும் வாழ்வும்” (தினமும்)

ஞாயிறு காலை 10.30 – “ஆராதனை உமக்கே”

காலை 8.15 – “வரலாற்றில் வாழ்வோர்” (சனி மற்றும் ஞாயிறு) – ஜாய்ஸ் மேயெர்ஸ் என்கிற உலகப் பிரசித்தி பெற்ற எவாங்கலிக்கர் நடத்தும் இந்நிகழ்ச்சி, தமிழ் மட்டுமல்லாமல் பஞ்சாபி, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பஞ்சாப் மற்றும் ஆந்திர ஆகாஷவாணி, தூர்தர்ஷன் நிலையங்களிலும் ஒலி/ஒளி பரப்ப படுகிறது.

மாலை 10.10 – “புனிதத்தை நோக்கியே” – சர்ச்சில் நடக்கும் ஞாயிறு தொழுகையின் படப்பிடிப்பு.

பொதிகையின் ஒளிபரப்பு நேரம் காலை 5.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிக்கு முடிவடைகிறது. இரவு 11 மணியிலிருந்து காலை 5.30 மணி வரை காண்பிக்கப்படுவது மறு ஒளிபரப்பு தான்.

“வந்தேமாதரம்” நீக்கல்; “தேவ மந்திரம்” நுழைத்தல்

இதில் மிகவும் முக்கியமான, நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய, விஷயம் என்னவென்றால், தினமும் காலை 5.30 மணிக்கு இசைக்கப்படவேண்டிய “வந்தேமாதரம்” பாடல், கிறுத்துவ நிகழ்ச்சிக்காக வேண்டி, சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. இங்கே தேசபக்திக்கு இடமில்லை. தேவன் பக்தியைவிட தேசபக்தி முக்கியமா என்ன? அதாவது பொதிகையானது விடியும்போது தேவனின் ஆசீர்வாதத்துடன் விடியவேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், பொதிகையின் நேயர்களும் ‘பாவிகளே’ என்ற மொழியைக் கேட்டுத் தான் விழிக்க வேண்டும் அல்லது ‘பாவிகளை’ மன்னிக்கும் ஏசுவின் முகத்தில்தான் விழிக்க வேண்டும். ஏனென்றால் பொதிகையின் நேயர்கள் அனைவரும் பாவிகள் அல்லவா!

தற்போது பள்ளிகளில் தேர்வுக்காலம் ஆதலால் தினமும் காலை 5 மணிக்கு “காண்போம் கற்போம்” நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. ஆயினும் 5 மணிக்கு அந்நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னர் கூட வந்தேமாதரம் இசைக்கப்படுவதில்லை. பின்னர் மீண்டும் 5.30 மணிக்கு எவாங்கலிஸ்ட் வந்துவிடுகிறார். அனைத்து தூர்தர்ஷன் நிலையங்களும் காலை 5.30 மணிக்கு வந்தேமாதரம் தேசியப் பாடலுடன் துவங்கபடவேண்டும். ஆனால் சென்னை தொலைக்காட்சி நிலையம் மட்டும் தேவ மந்திரத்துடன் துவங்கும். இந்த அநியாயத்தைத் தமிழர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ் மக்கள் திராவிட மாயையில் தேசபக்தியைத் தொலைத்துவிட்டனர்!

கிறுத்துவப் பொதிகையின் பாதிப்பு

nagpur_christian_conversionபொய்கை கிறுத்துவமயமாக்கப்பட்டதன் விளைவுகள் மிகவும் பாதகமானவை. பாதிப்புகள் என்னமாதிரியானவை என்று பார்ப்போம்:

கிறுத்துவ மதப்பிரசாரத்திற்கு அரசு அங்கீகாரம் கிடைக்கிறது. அரசாங்கமே கிறுத்துவ மதத்தை ஆதரிப்பதாக மதப்பிரசாரகர்கள் மக்களிடையே பிரசாரம் செய்து அப்பாவி மக்களை ஏமாற்ற ஏதுவாக இருக்கிறது.

வாழ்க்கையில் முன்னேறவும், நீடூழி வாழவும், மகிழ்ச்சியாக வாழவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் கிறுத்துவம் உதவுகிறது என்கிற எண்ணத்தை அப்பாவி மக்களின் மனதில் அரசு அங்கீகாரத்துடன் ஏற்படுத்துகிறார்கள் எவாங்கலிக்கர்கள். நிகழ்ச்சியின் தலைப்புகளே இவ்வுண்மையை உறுதி படுத்துகின்றன.

கிராமப்புரங்களில் தனியார் சானல்களைவிட தூர்தர்ஷனின் சேர்வும், அடைவும், தாக்கமும் அதிகம். புயல் எச்சரிக்கை, நோய் தாக்குதல் எச்சரிக்கை, வானிலை, குடும்பக்கட்டுப்பாடு பிரசாரம், அரசின் கொள்கைகள் விளக்க விளம்பரங்கள், கல்வி மற்றும் மருத்துவ சம்பந்தமான விளம்பரங்கள், வயலும் வாழ்வும் போன்ற வேளாண்மை நிகழ்ச்சிகள் என்று பல விதமான நிகழ்ச்சிகளைப் பார்த்து தூர்தர்ஷனின் மீது, நம் நல்வாழ்வின் மீது அக்கறை கொண்டுள்ள அரசாங்க நிறுவனம் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டுள்ள மக்கள், அந்தச் சானலில் கிறுத்துவம் பேசப்படுகிறபோது அதையும் சுலபமாக நம்பிவிடுகிறார்கள். தூர்தர்ஷனின் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கிறுத்துவ நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தி பயங்கரமான அறுவடை செய்கிறார்கள்.

கிறுத்துவ மதபோதகர்களும் அவர்களின் உதவியாளர்களும் தற்போது கிராமம் கிராமமாகச் சென்று, பொதிகை நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டி, தங்கள் மதமே அரசு அங்கீகாரம் பெற்ற மதம் என்றும், தங்கள் மதத்திற்கு மாறினால் கிறுத்துவ நிறுவனங்கள் செய்யும் உதவிகள் மட்டுமில்லாமல் அரசாங்க சலுகைகளும் ஏராளமாகக் கிடைக்கும் என்றும் தீவிரமாகப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

செவந்த் டே அட்வெண்டிஸ்ட் (Seventh Day Adventist) என்கிற கிறுத்துவ பிரிவைச் சேர்ந்த ரான் வாட்ஸ் (Dr.Ron Watts) என்கிற கனடா நாட்டு எவாங்கலிக்கர் மற்றும் அவருடைய அமெரிக்க மனைவி தாரதி வாட்ஸ் (Dorothy Watts) சுற்றுலா விஸாவில் (Tourist VISA) இந்தியா வந்து தமிழக-கர்நாடக எல்லையில் ஓசூரில் ஒரு தலைமையகம் அமைத்து 1970-களிலிருந்து தென்னிந்தியாவில் தீவிரமாக மதமாற்றத்தில் இயங்கி வருகிறார்கள். அவர்கள் மீது பல புகார்கள் சென்று, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைப்படி, மாநில அரசு அவர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி 2003-ல் ஆணை பிறப்பித்தும், அரசங்கத்தில் அக்வனிக்க வேண்டியவர்களை கவனிக்கும் விதத்தில் கவனித்து, தங்கள் மதமாற்ற வேலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். (The State Government ordered the Dharmapuri District Collector to deport Ron Watts and his American wife, Dorothy Watts. A deportation order against him dated 05/09/2003 Letter No: 3608/A1/2003-1 given by Tmt R.Vasantha, B.A., Under Secratary to Government, Public (Foreigners) Department, Secretariat, Chennai-600 009, addressed to the Collector of Dharmapuri and received by the collector on 12 Sept, 2003). ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தால் மறைமுகமாக நிதி ஒதுக்கப்பட்டு இத்தாலிய பெண்மணியான சோனியா அரசாங்கத்தின் மறைமுக உதவியுடன் இந்தியாவில் நுழைக்கப்பட்ட “ஜோஷுவா 2000” (Joshua Project – 2000) என்கிற திட்டத்தின் படி பல கோடி டாலர்கள் பல எவாங்கலிக்க நிறுவனங்கள் மூலம் மதமாற்றத்திற்காகச் செலவு செய்யப்படுகிறது. மாரநாதா ஊழியர்கள் சர்வதேச அமைப்பு (Maranatha Volunteers International) என்கிற அமைப்பும் இந்தியக் களத்தில் இறங்கியுள்ளது. பைபிள் ஃபார் த வேர்ல்டு (Bible For the World), காமன் குளோபல் மினிஸ்ட்ரீஸ் போர்டு (Common Global Ministries Board), யுனைடட் சர்ச்சு போர்டு ஃபார் வேர்ல்டு மினிஸ்ட்ரீஸ் (United Church Board for World Ministries) ஆகிய அமெரிக்க தீவிர கிறுத்துவ இயக்கங்களும் வேலை செய்கின்றன. கிறிஸ்டியன் ஸாலிடேரிட்டி வேர்ல்டுவைட் (Christian Solidarity Worldwide), கான்ராட் அடெனௌர் ஃபௌண்டேஷன் (Konrad Adenauer Foundation), வேர்ல்டு விஷன் (World Vision) ஆகிய அமைப்புகள் நிலங்கள் கையகப்படுத்டுவதற்கும், அரசியல் ஆதரவு பெறுவதற்கும் பெரிதும் உதவுகின்றன.

இந்தியாவிலேயே தலைமையகம் கொண்டுள்ள சாது செல்லப்பா, பால் தினகரன் போன்ற பல எவாங்கலிக்கர்களும் பலகோடி டாலர்கள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுகின்றனர். தமிழகத்திற்குச் சராசரியாக வந்துகொண்டிருந்த 700 கோடி ரூபாய், சோனியா அரசு 2004-ல் பதவி ஏற்றதிலிருந்து 2300 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப் பூர்வமான தகவல். அரசுக்குத் தெரிந்து வருகின்ற நிதியே இவ்வளவு என்றால் தெரியாமல் வருகின்ற நிதியை வாசகர்கள் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்!. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் 200 கோடி ரூபாய் சிலுவை நடுவதற்கும், சர்ச்சு கட்டுவதற்கும், ஆன்மா அறுவடை செய்து மதமாற்றம் செய்வதற்கும் செலவு செய்யப்படுகிறது. இந்த இயக்கங்கள் அனைத்தும் இப்போது பொதிகை மூலம் அரசாங்க அங்கீகாரம் பெற்று, ஊர் ஊராகச் சென்று சிறப்பான மகசூல் பார்க்கின்றனர். (மேற்கண்ட விஷயங்களைப் பற்றிய விவ்ரமான அனைத்து தகவல்களையும் இந்த லிங்குகளில் பார்க்கலாம் – https://www.harekrsna.com/sun/features/04-07/conversions.pdf மற்றும் https://www.vigilonline.com/index.php?option=com_content&task=view&id=1073&Itemid=1 மற்றும் https://www.mha.nic.in/fcra.htm).

தனியார் ஊடகங்களின் பாதிப்பு

இப்படி அனைத்து ஊடகங்களிலும் இந்து எதிர்ப்பும் இந்து துவேஷமும் எவாறு சாத்தியமாகின்றது என்று சிந்திக்கும்போது அடிப்படையில் ஒரு முக்கியமான விஷயம் நமக்குப் புலப்படுகின்றது.

ac01அதாவது நம் நாட்டில் உள்ள கல்லூரிகளில் ஜர்னலிஸம், விஷுவல் கம்ம்யுனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மீடியா துறை போன்ற ஊடகத்துறை சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்கள் இருப்பது பெரும்பாலும் கிறுத்துவ கல்லூரிகளில்தான். இக்கல்லூரிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் கிறுத்துவர்களும், இடது சாரி சிந்தனை உள்ளவர்களும்தான். இக்கல்லூரிகளில் பயிலும் ஹிந்து மாணவர்கள் கூட நாளடைவில் ஸூடோ செக்யூலரிஸ்டுகளாக மாற்றப்பட்டு விடுகிறார்கள். இக்கல்லூரிகளிலிருந்து ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பத்திரிகைத் துறைக்கும், மின் ஊடக நிறுவனங்களுக்கும் வேலைக்குச் செல்லுகிறார்கள். ஒவ்வொரு பத்திரிகையின் ஆசிரியர் குழுவையும், ஒவ்வொரு சானலின் ஆசிரியர் குழுவையும், அந்நிறுவனங்களில் வேலை செய்யும் முக்கிய நிருபர்களையும், அப்பத்திரிகைகளில் எழுதும் கட்டுரையாளர்களையும் பட்டியல் போட்டுப் பார்த்தால் தெரியும். கிட்டத்தட்ட 95% சிறுபான்மையினரும், இடது சாரி சிந்தனை உள்ளவர்களும், திராவிட இனவெறியர்களும், ஸூடோ செக்யூலரிஸ்டுகளுமாக இருப்பார்கள். இம்மாதிரியான சூழலில் ஹிந்து துவேஷமும், எதிர்ப்பும் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்?

இந்த தனியார் நிறுவனங்களுடன் பொதிகையும் தூர்தர்ஷனும் சேர்ந்துகொண்டால் கேட்கவா வேண்டும்? ஒரு பக்கம் தனியார் நிறுவனங்கள் ஹிந்து துவேஷத்தை விஷமெனக் கக்க, மறுபக்கம் தூர்தர்ஷனும், ஆகாஷவாணியும் கிறுத்துவ மதப்பிரசாரம் பொழிய, கிறுத்துவ நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்தான், அறுவடைதான், மகசூல்தான்!

அவமானப்பட்ட பொதிகை

ஒரு பக்கம் ஹிந்துக்களுக்கு எதிராக இயங்கிகொண்டிருந்தாலும், பணத்திற்காகப் புராண இதிகாசங்களைப் பற்றிய தொடர்களை ஒளிபரப்பியும், வைகுண்ட ஏகாதசி, சிவ ராத்திரி போன்ற முக்கியமான விசேஷ தினங்களில் திருவிழாக்களை நேரலையாக ஒளிபரப்பியும், ஹிந்துக்களின் கால்களில் விழுவதற்கு இந்த ஊடக நிறுவனங்கள் வெட்கப்படுவதில்லை. போட்டி போட்டுக்கொண்டு நேரலை ஒளிபரப்பு செய்வார்கள். பொதிகையும் அவ்வாறு செய்ய முயன்று எவாங்கலிக்கரினால் அவமானப்பட்டு நின்றது. சென்ற வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கமும், திருவல்லிக்கேணியும் மாற்றி மாற்றிக் காண்பிக்க முடிவு செய்து, விடியற்காலை ஆரம்பித்து காலை ஆறு மணியளவிற்குப் போகும் என்பதால், அந்த ஒரு தினம் மட்டும் ‘விக்டரி டுடே’ மதப்பிரசார நிகழ்ச்சியாளர்களை அரை மணி நேரம் தள்ளி வைக்கச் சொல்லிக் கேட்டுப்பார்த்தது பொதிகை. அவர்கள் மறுத்துவிட்டனர். (ஆண்டு முழுவதற்கும் ஒப்பந்தம் போட்டாகிவிட்டதே!) எனவே சரியாகக் காலை ஐந்தரை மணிக்கு வைகுண்ட ஏகாதசி நேரலை ஒளிபரப்பை அரைகுறையாக முடித்துக்கொண்டு முகத்தில் கரி பூசிக்கொண்டது பொதிகை.

அரசியல் சாஸனத்திற்கு எதிரான பொதிகை

அரசியல் சாஸனத்தின்படி இந்தியா ஒரு மதச்சர்பற்ற நாடு. ஆகாஷவாணியும் தூர்தர்ஷனும் பொது ஒலி/ஒளி பரப்பு ஸ்தாபனங்கள் என்கிறபடியால் அவை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குச் சார்பாக நடந்து கொள்வது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஒரு மதத்தினரின் விசேஷ தினங்களில் அவர்களின் ஆன்மீக கலாசார பாரம்பரிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது தவறில்லை. பாரதத்தைப் பொருத்தவரை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரீகம் கொண்டது. நாடு முழுவதும் உயர்ந்து நிற்கும் ஆலயங்கள் நம் பண்பாட்டுச் சின்னமாகத் திகழ்கின்றன. நமது கட்டடக்கலையின் அழகையும் சிற்பக்கலையின் சிறப்பையும் பகன்று, அவை மூலம் நம் கலாசாரத்தின் மகோன்னதத்தை இவ்வுலகிற்குப் பிரதிபலிக்கின்றன. அறுபதாண்டுகளே வயது கொண்ட அரசியல் சாஸனத்தில் மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிவிட்டதால் இந்த நாட்டின் ஹிந்துத்தன்மை மறைந்து விடாது. மதச்சார்பற்ற நாடு என்று சொன்னது ஆட்சி முறைக்காகத் தானேயொழிய, இந்த நாட்டின் கலாசாரத்தையோ பண்பாட்டையோ மாற்றியமைக்க அல்ல. இந்த நாடு ஹிந்து நாடு, இந்த நாட்டின் கலாசாரம் ஹிந்து கலாசாரம் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. எனவே ஹிந்துப் பண்டிகைகளின் போது நடக்கும் வழிபாடுகளையும், திருவிழாக்களையும் ஒளிபரப்புவதும், அதன் மூலம் மக்களிடையே நம் பண்பாட்டின் மகிமையை எடுத்துச் செல்வதும் அரசு ஸ்தாபனமான தூர்தர்ஷனின் கடமை.

கிறுத்துவமும் இஸ்லாமும் வெளியிலிருந்து வந்தவர்கள் நம் தேசத்தில் திணித்த மதங்கள். இந்த மண்ணின் மதங்கள் அல்ல. அவர்களின் கலாசாரமும்ம் பண்பாடும் வேறுபட்டவை. ஆயினும் அம்மதங்களுக்கு மாற்றபட்டவர்கள் கணிசமான அளவில் இந்த தேசத்தில் குடிமக்களாக வாழ்ந்து வருவதால், அவர்களின் பண்டிகைகளையும் வழிபாட்டுத் திருவிழாக்களையும், மதச்சார்பற்ற ஆட்சிமுறை காரணமாக, ஒளிபரப்புவதும் சரியானதே. அதில் குற்றம் காண்பதும் தவறு. ஆனால் திருவிழாக்கள் என்பது வேறு, மதப்பிரசாரம் என்பது வேறு. பொதிகைத் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை கிறுத்துவ மதப்பிரசாரத்தை ஒளிபரப்புகிறது. மேலும் அவ்வொளிபரப்புகளில், இந்த தேசத்தின் கலாசாரமும், ஆன்மீகமும், இந்த மண்ணின் தெய்வங்களும் அவ்வப்போது கொச்சை படுத்தப்படுகின்றன. மதச்சார்பற்ற ஆட்சிமுறையில் இவ்வாறு ஒரு மதத்தின் பிரசாரத்தை ஒரு பொது ஊடக நிறுவனம் செய்வதென்பதும், பெரும்பான்மை மக்களின் மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதும், அரசியல் சாஸனத்தை மீறிய அதற்கு எதிரான செயல்.

சட்டத்தை மீறிய பொதிகை

ஆகாஷவானி, தூர்தர்ஷன் ஆகிய பொது ஒலி/ஒளி பரப்பு ஸ்தாபனங்களுக்கு என்று “நிகழ்ச்சிகளுக்கான நியதிகள்” (Program Code) இருக்கின்றன. (https://www.ddindia.gov.in/Business/Commercial+And+Sales/Code+for+Commercial+Advertisements.htm) அதில் உள்ள பல க்ஷரத்துகளை பொதிகை கிறுத்துவ மதப்பிரசாரத்தை அனுமதித்ததன் மூலம் மீறியுள்ளது. உதாரணத்திற்கு, எவாங்கலிக்க பிரசாரகர்கள் விக்ரஹ வழிபாட்டை கொச்சைப்படுத்தி விமரிசனம் செய்வதும், கிறுத்துவரல்லாத மற்ற மதத்தவர்களை “பாவிகளே” என்று அழைப்பதும், மற்ற மதத்தவரைப் புண்படுத்தக்கூடாது, தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பங்கம் விளைவிக்கக்கூடாது ஆகிய விதிகளை மீறுகின்றன.

அதே போல “பிரஸார் பாரதி (இந்திய ஒலி/ஒளிபரப்பு ஸ்தாபனம்) சட்டம் 1990”-ம் மீறப்பட்டுள்ளது. (https://www.ddindia.gov.in/Information/Acts+And+Guidelines) இந்தச் சட்டத்தில் தூர்தர்ஷன் ஆகாஷவாணி போன்ற பொது ஒலி/ஒளி பரப்பு ஸ்தாபனங்கள் எவ்விதம் இயங்கவேண்டும் என்று நியதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பல க்ஷரத்துக்களை பொதிகை மீறியுள்ளது.

நிர்வாகத்தின் அலட்சியம்

ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில், நான் மேலே கொடுத்துள்ள அனைத்துத் தகவல்களையும் அளித்து, பொதிகை சட்டத்தையும், அரசியல் சாஸனத்தையும் மீறியுள்ளது என்று தெரிவித்து, இவ்விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்துச் சரி செய்யுமாறு வேண்டி, தூர்தர்ஷனின் தலைமை இயக்குனர் திருமதி அருணா ஷர்மா அவர்களுக்கு மின் அஞ்சல் (இ-மெயில் கடிதம்) அனுப்பியிருந்தேன். அந்தக்கடிதத்தின் நகல்களை, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி அம்பிகா சோனி, இணையமைச்சர் டாக்டர் S. ஜெகத்ரக்ஷகன், ராஜ்ய சபை எதிர்கட்சித் தலைவர் திரு. அருண் ஜேட்லி, லோக் சபை எதிர்கட்சித் தலைவர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், பாஜக தலைவர் திரு. நிதின் கட்கரி, பாஜக மூத்த தலைவர் திரு. அத்வானி, பிரஸார் பாரதி தலைமை நிர்வாக அலுவலர் திரு. B.S. லல்லி, தூர்தர்ஷன் துணைத் தலைமை இயக்குனர்கள் திரு.அஷோக் ஜெய்ல்கானி, திரு. R.வெங்கடேஸ்வரலு, திருமதி உஷா பாஸின் ஆகியோருக்கும் அனுப்பியிருந்தேன். கடிதத்தைப் பெற்றுக்கொண்டதற்கான ஏற்பையும், நடவடிக்கை எடுக்கப்போவதற்கான உறுதியையும் தெரிவித்து பதில் அளிக்குமாறும் திருமதி அருணா ஷர்மாவிடம் வேண்டியிருந்தேன். ஆனால் இந்தக் கட்டுரை எழுதும் வரை பதில் இல்லை. இனியும் வரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

இதனிடையே, தில்லியில் நடைபெற்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அலுவலர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஜெகத்ரக்ஷகன், “கிறுத்துவ மதப் பிரசாரத்திற்கென்றே ‘ஆசீர்வாதம்’ போன்ற பல தனிப்பட்ட சானல்கள் இருக்கும்போது, பொதிகை ஏன் அந்நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது?” என்று கேட்டு சென்னை கேந்திரத்தின் அதிகாரிகளைக் கடிந்துகொண்டதாக நமக்குத் தகவல்கள் வந்துள்ளன.

முடிவுரை

அமைச்சகமும், நிர்வாகமும் அலட்சியமாக இருப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது. நாம் அமைதியாக இருந்தால் நாட்டில் உள்ள அனைத்து தூர்தர்ஷன் சானல்களிலும் கிறுத்துவ மழைதான் பொழியும். எனவே, வாசகர்கள் அனைவரும் தூர்தர்ஷன் தலைமை இயக்குனர் திருமதி அருணா ஷர்மா அவர்களுக்குக் கீழ்கண்ட இ-மெயில் முகவரியில், தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கடிதம் அனுப்புமாறு வேண்டிக்கொள்கிறேன். கடிதத்தின் நகல்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திற்கும், பிரஸார் பாரதி தலைமை நிர்வாக அலுவலருக்கும், அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் சக்திக்கு என்றுமே மதிப்பு உண்டு. வெற்றியும் நிச்சயம்.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரிகள்:

Ms. Aruna Sharma, Director General, Doordarshan dgdd@doordarshan.gov.in

Ms.Ambika Soni, Minister, Information and Broadcasting and mib.inb@sb.nic.in
Dr.S.Jagathrakshakan, Minister of state, Information and Broadcasting msib.inb@nic.in
Ashok Jailkhani Dep.Director Gen (Program)

R.Venkateswarlu Dep.Director Gen (Program)

Ms.Usha Bhasin Dir.General Gen (Program)

B.S.Lalli, CEO PB

45 Replies to “கிறுத்துவப் ‘பொதிகை’ பொழியும் மதப் பிரசாரம்!”

  1. சம்பந்தப்பட்ட மின்னஞ்சல்களைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. ஹிந்து அமைப்புகளூம் பல நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவும் தொலைக்காட்சிகளின் நேரங்களை வாங்கி அவற்றை ஒளிபரப்பவும் முன்வருவது மட்டுமே இதற்கு மாற்று வழியாகும். விஎச்பி, ஹிந்து முன்னணி, சைவ வைணவ மடங்கள், முதலானவற்றிடம் ஏராளமான பணம் குவிந்துள்ளது. அவை கேட்டால் நிதி கொடுப்பதற்கும் நிறைய செலவந்தர்களும் நிறுவனங்களும் உள்ளனர். ஆனால் அவை இம்மாதிரி செலவுகளையெல்லாம் ஏற்க விரும்புவதில்லை. சமய விளக்க நிகழ்ச்சிகளை மடங்களும், சமூக நல விளக்க நிகழ்ச்சிகளை விஎச்பி, ஹிந்து முன்னணியும் ஏற்கலாம். இவ்விரு அமைப்புகளும் மத மாற்றத்தால் ஒரு குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை விளக்கும் நாடகங்களை மிகவும் புத்திசாலித்தனமாக பிரசார வாடையின்றி எழுதுவித்து தாம் வாங்கிய நேரத்தில் ஒளிபரப்பச்செய்யலாம். நவீன மடங்களும் (ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் போன்றவர்களின் அமைப்புகளும்) இதில் ஈடுபடலாம். ஆனால் கற்பனை வளமும் சமூக அக்கறையும் உள்ள தலைமை தமிழ்நாட்டு வி எச் பி யிலோ ஹிந்து முன்னணணியிலோ இல்லை. ஒரு ஆவேசமும் செயல் துடிப்பும்கூட அங்கு இல்லை. நவீன மடங்களின் கவனமும் சுய பிரதாப பிரசாரத்தில்தான் உள்ளது. இவை த்மது மேற்கத்திய ஆதரவுகளுக்காக கிறிஸ்தவ அமைபுகளைப் பகைத்துக் கொள்ளவிரும்புவதில்லை. சமயங்களில் இவை அல்லேலூயா போடவும் தயங்குவதில்லை! டிஜிஎஸ் தினகரன் என்கிற எவாஞசலிஸ்ட் சென்னை கிரின்வேஸ் சாலையில் த்மது மத மாற பிரசார அமைப்பை நடத்திய ஒரே காரணத்திற்காக அவர் இறந்ததும் அவர் பெயரை சென்னை மாநகராட்சியோ, மாநில அரசோ அந்தச் சாலைக்கு வைத்துவிட்டது. இதைக் கேட்க நாதியில்லை. விஎச்பியும் ஹிந்து முன்னணணியும் என்ன செய்கின்றன?

  2. Good information.
    I have sent protset letter to DD and honourable minister.
    I request everybody to do the same.

  3. nalla katurai ethai aarapatthil kantukkama vittuvittal melum kiruthuvam valra valivitta madtri aakividum

  4. இந்த நான்கு இ-மெயில் முகவரிகள் விட்டுப் போய்விட்டன

    Ashok Jailkhani Dep.Director Gen (Program)

    R.Venkateswarlu Dep.Director Gen (Program)

    Ms.Usha Bhasin Dir.General Gen (Program)

    B.S.Lalli, CEO PB

    நன்றி

    தமிழ்செல்வன்

    தமிழ்செல்வன்

  5. மெயில் அனுப்புவதை ஒரு புறம் செய்யலாம், செய்ய வேண்டும், அதே நேரத்தில் ஒரு வழக்குப் போட முடியுமா? அப்படி வழக்கு போட்டால் அதற்கான நிதியுதவியை நாம் இங்கேயே கூட வசூல் செய்யலாம். நான் அதற்கான என்னாலான உதவியை செய்யத் தயாராக இருக்கிறேன். நம்மிடம் முதலில் ஒரு நல்ல வழக்கறிஞர்கள் குழு உருவாக்க வேண்டும். இந்த கேஸை நாம் முதலில் எடுக்கலாம்.

    அன்புடன்
    ச.திருமலை

  6. Nice write-up.

    Both the government and private media are showing Hindu and christian programs. But, there are differences.

    1. For Hindu programs the viewership is very huge.

    2. But, the Hindu programs are shown occasionally only on the days when the major festivals occur for which the viewership is in millions

    3. For Hindu programs the money invested is very less compared to the huge returns. That is why even the pseudo-atheistic MakkaL tv shows a daily temple darshan program, which is the best among all the channels.

    4. The comparative share of investments for christian programs are higher than the Hindu programs, and the return is in the reverse.

    5. In Doordarshan, prime slots are not allocated to any Hindu programs, but all the major prime slots are allocated to christian programs. This is done to force people (who otherwise do not want to watch those programs) to compulsorily watch these programs.

    6. All these prove that though showing christian programs are a big loss for Doordarshan, such programs are being pushed on to the viewers. In other words, the government is funding the christian evangelicalism and conversion and government infrastructure is misused.

    7. The private channels are benefiting by the “pay-per-news”, “pay-per-scenes”, and “pay-per-programs” schemes. Most of the money is paid by western NGOs.

    8. Muslims do not agitate against such christian programs, because they have got a dedicated Doordarshan channel for Urdu, which only shows the Islamic programs.

    9. But, the christian method is far more effective for the conversion agenda, because people who do not have an alternative choice are forced to watch these bible shitting programs.

    10. As Doordarshan is the free and government channel, viewership across the nation is very very high compared to any other private channels. It reaches even the remotest corner of India where print media is never heard.

    11. And the viewers of Doordarshan are poor people who are easily manipulated by these programs.

    12. All said, spoken, written and done, the hindu organizations are not ready to enter the media. So long that does not happen, nothing of worthy can happen to hindus.

    The real battle for hinduism will start only when there is a political media for hinduism. Until then, it will only have gas emitting gag-bags.

    13. But, like Rajputs, let the real, anti-castistic, pro-hindutva scholars on the streets do the intellectual Johar – entering the battlefield when the defeat is certain and death is imminent.

    Let these foot soldiers of Hindutva enter the fire of Johar when our reluctant wishy washy leaders watch from their elite traditional pedestals and ritualistic zenanas. These abrahamic mindsets with hindu garbs are only dead weights who could only generate the puss of Hinduism.

    But, Hinduism will resurrect with such enterprises like Tamil Hindu, and its valiant intellectuals.

    In the deaths of billions of Rajputs and Sikhs and Marattas the Hinduism is rejuvenated; in the authorizing of living zombies, Hinduism is weakened.

    The death of the valiant leaves seeds that are alive while the seeds of the dastards never sprout. That is why we still have Hinduism while all other pagan and kaffir religions are completely annihilated.

    Hinduism has done it before and it can do it now.

    Hara hara Mahadev !

  7. Friends,

    Please do not forget some of the central ministers are also having a Hindu name but they are christians.

    For instance, the minister for whom you want to send the mail, Ms. Ambica Soni is also a christian.

    Beware.

  8. Doordarshan Acts&Guidelines
    https://www.ddindia.gov.in/Information/Acts+And+Guidelines

    இதில் எங்கு விதிமுறை மீறல் நடந்து உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன். எந்த விதி மேலே குறிப்பிட்டு உள்ள கருத்துக்கு எதிராக உள்ளது. Mention the rule no: that is displayed in the DD’s website.

  9. வருவாய்க்கான ஒரு மார்க்கமாகவே பொதிகையும் பிற தொலைக் காட்சி நிறுவனங்களும் கிறிஸ்தவ மத பிரசார நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாக வாதிடும். மேலும் கிறிஸ்தவ அமைப்புகள் மிகவும் சாமர்த்தியமாகத் தமது பிரசார முறைகளைக் கையாள்வதால் அவை எளிதில் தப்பித்துக் கொள்ளும். எனவே வழக்கு எதுவும் இந்த விஷயத்தில் எடுபடாது என்றே கருதுகிறேன். மேலும், ந்மது நீதிபதிகளின் நடுநிலைத்தன்மையும் நம்பகமாக இல்லை. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே அரசியல் சாசனத்தில் உரிமை உள்ளது எனறு தள்ளுபடி செய்தாலும் வியப்பில்லை. எனவே நமது நேரமும் பொருளும்தான் விரையமாகும். ஒரே வழி போட்டி நிகழ்ச்சிகள் நடத்துவதுதான் என நினைக்கிறேன். கிறிஸ்தவ அமைப்புகளை முந்திக்கொண்டு நேரங்களை வாங்கி ஒப்பந்தம் போட முன் வரும் சாம ர்த்தியம் வேண்டும். பொருள் செலவு செய்து நிகழ்ச்சிகள் தயாரிக்க வேண்டும். வெறும் பூஜை பஜனை சமாசாரங்களால் பயனில்லை. சமூகப் பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக காட்ட வேண்டும். உதாரணமாக மக்கள் தொகை அதிகரிப்பை விளக்கும் நிகழ்ச்சி அமைத்து ஜாடையாக சில காட்சிகளை வைக்கலாம்.

  10. மறுமொழி இட்ட அனைவருக்கும் நன்றி.

    திருமலை, உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நாம் ஒரு வழக்கறிஞர்கள் குழு அமர்த்துவது நல்ல முயற்சியாகும் என்று நானும் நம்புகிறேன். இதைத் தமிழ்ஹிந்து பரீசிலனை செய்ய வேண்டிக்கொள்கிறேன்.

    Thank you Saakshin! You have grasped my article well and sent a good analysis. A truly fiery response! It gives immense satisfaction to hear from people like you. Please spread the message. God Bless!

    Muttal! என்ன தான் நீங்களே வைத்துக்கொண்ட பெயர் என்றாலும் தமிழில் எழுத மனம் வரவில்லை. [()]. நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் ஆதாரம் இல்லாமல் எழுதக் கூடாதே! [()]

    SS!

    பொதிகை செய்வது அரசியல் சாஸனத்திற்கு எதிரானது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    “பிரஸார் பாரதி (இந்திய ஒலி/ஒளிபரப்பு ஸ்தாபனம்) சட்டம் 1990”- ஐ பொறுத்தவரை பனிரெண்டாவது விதியில் இரண்டாவது உபவிதியைப் பாருங்கள்:-

    (2) The Corporation shall, in the discharge of its functions, be guided by the following objectives, namely:¬
    upholding the unity and integrity of the country and the values enshrined in the Constitution;

    பொதிகை செய்யும் கிறுத்துவ மதப் பிரசாரம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்கும் என்ரு நினைக்கிறீர்களா? பொதிகை அரசியல் சாஸனத்தில் புனிதமாக வைக்கப்பட்டுள்ள கொள்கைகளைத் தாங்குகிறதா? பாதுகாக்கிறதா?

    மேலும் பாருங்கள்:

    safeguarding the citizen’s right to be informed freely, truthfully and objectively on all matters of public interest, national or international, and presenting a fair and balanced flow of information including contrasting views without advocating any opinion Of ideology of its own; .

    இந்த விதி மீறப்படவில்லையா?

    உபவிதி மூன்றுக்கு வாருங்கள்:

    to negotiate for purchase of, or otherwise acquire, programmes and rights or privileges in respect of sports and other events, films, serials, occasions, meetings, functions or incidents of public interest for broadcasting and to establish procedures for the allocation of such programmes, rights or privileges to the services;

    மேற்கண்ட விதியின் படி தான் சென்னை கேந்திரம் எவாங்கலிக்க நிகழ்ச்சிகளை அனுமதித்துள்ளதா என்று விசாரணை செய்யச் சொல்லித் தான் தலைமை இயக்குனருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். (பிரஸார் பாரதி தலைமை நிர்வாக அலுவலருக்கும் நகல் அனுப்பியுள்ளேன் என்பதை நினைவில் கொள்க).

    மேலும் கீழே கொடுத்துள்ள லிங்கிற்குச் சென்று பாருங்கள். (இதை நான் கட்டுரையில் குறிப்பிட மறந்து விட்டேன்)

    https://www.ddindia.gov.in/Information/Citizen+Charter

    PRASAR BHARATI DOORDARSHAN

    CITIZEN’S CHARTER

    இந்த சிடிஸன் சார்டரில் முதலாவது, ஐந்தாவது, ஒன்பதாவது விதிகள் முறையே

    • Inform freely, truthfully and objectively the citizens of India on all matters of public interest, national and international.

    • Promote social justice, national consciousness, national integration, communal harmony, and the upliftment of women.

    • Ensure that the programmes telecast on its channels are in full compliance of the AIR/Doordarshan programme and advertisement code.

    பாருங்கள்.

    இவை எல்க்லாவற்றையும் விட மோசமானது வந்தேமாதரத்தை நிறுத்தியது தான். அங்கேயே பொதிகையின் கதை கந்தலாகிவிட்டது. வந்தேமாதரத்தை நிறுத்துவது matter of national and public interest-ஆ?

    மிக்க நன்றி. அன்புடன்

    தமிழ்செல்வன்

  11. There are no examples given against akashvani but blamed along with podhigai!

  12. //////////பாரதத்தைப் பொருத்தவரை, போர்ச்சுகீசிய படையெடுப்பில் ஆரம்பித்த கிறுத்துவ தாக்குதல், பிரெஞ்சுக்காரர்களுடனும் டச்சுக்காரர்களுடனும் உள்ளே நுழைந்து கடைசியாக ஆங்கிலேயர் ஆட்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. மலைப்பிரதேசங்களையும், கடலோரங்களையும் கைப்பற்றிய கிறுத்துவர்கள், உள்பிரதேசங்களிலும் கல்விச்சேவை, மருத்துவச்சேவை என்கிற போர்வையில் பெருமளவு நிலங்களைக் கைப்பற்றினர். ///////

    ஓண்ணு சத்தியமா புரியெல்லைண்ணா…

    ஆங்கிலேயர்கள் சுமார் 90 அல்லது 100 வருஷங்கள் நம்மை முழுதுமாய் ஆண்டனர்… அந்த கால கட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராய் ஒரு பெரிய இநதிய ராஜாவும் / இந்திய சுல்தானும் இல்லை…

    சுமார் 1847 அல்லது 1857 முதல் 1947 முடிய இருந்த காலத்தில் அவர்களி நம்மை ஒட்டுமொத்தமாய் மதம் மாற்றி இருக்கலாம். எத்தினி ரத்தம் சிந்தி இருப்பொம்றதெல்லாம் பின்னாடி அலசலாம்..ஆனா ஒட்டுமொத்தமாய் மதம் மாற்றவாவது முயற்சி செய்து இருக்கலாம். அந்த கால கட்டத்தில ஆங்கிலேயர்கள் இந்தியர்களை மதம் மாற்ற முயற்சி செய்யவில்லை. நம்மை undermine பண்ணினர் … நம்மை மூன்றாம் தர பிரஜையாய் நடத்தினார்கள் அது ..இது ..எல்லாம் என்று சொல்லாம்…

    பாம்புக்குட்டி என்று நினைத்தோ, பழுதை என்று நினைத்தோ, எதோ நினைத்து இருக்கலாம். ஆனால் ஆங்கிலேயர் நம்மை முழுதுமாய் கிராமம் கிராமாமாய், நகரம் நகரமாய் மதமாற்றம் செய்த வரலாறு , செய்ய முயன்ற வரலாறு இல்லை.

    சுதந்திரம் வந்த பின் சுதந்திரம் வந்த பின்பு இருக்கும் புதிய கிறித்தவர்களை , இந்திய கிறித்தவர்களை …மதம் மாறிய பால்ராஜ்களையும் , அந்தோணிசாமிகளையும் பாத்தா தான் பயமா இருக்குது. இவங்களால இன்னித் தேதிக்க்கு மீதமுள்ள இந்தியாவில மதமாற்றம் கூடிப்போச்சோ என்ற சந்தேகம் வருது…

    ///////மேலும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பெரும்பாலும் கிறுத்துவ நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவ நாடுகளிடமிருந்து நிதி பெறும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களால் நடத்தப்படும் நிறுவனங்களாகவோ, //////

    சரீண்ணா.. நீங்க சொல்றதே உண்மைன்னு வெச்சுக்குவோம். எல்லா டீ வீ யும் கிறித்தவ நிருவனம்னு , இல்லை கிறித்தவ சார்பு நிருவனம்னு வெச்சிக்குவோம். என்னாத்துக்கு அங்கே எழுதி …இங்கே எழுதி..அவன் நம்ம லெட்டரை வாங்கி குப்பையில போட ? நேர உங்க வீட்டுக்கு போங்க. வீட்டு பெண்மணி கிட்ட அம்மா தாயே, நாளையில் இருந்து வீட்டில சன் டீ வி, விஜய் டீ வீ , கிறித்தவ டீ வீ எதுவும் பாக்காதே.. அவன் சோப்பு, பொடவை, ஜாக்கெட் பீஸ் விளம்பரம் பண்ணினா நானும் அதை வாங்க மாட்டேன்னு, இது ஸ்டிரிக்டு ன்னு சொல்லுங்க…. நடக்குதா பாப்போம் …எந்த பொம்பளை டீ வி பாக்குறதை நிப்பாட்டுறாங்க பாப்போம்

    சீரியல் பாக்கும்போது வீடு கொள்ளையே போனாக்ககூட தெரியமாட்டேங்குது …என்னாண்ணா அவனையும் இவனையும் திட்டி

    இந்த டி வி ன்னதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருது … தாலியை திட்டி விஜை டீ வி ஒரு நிகழ்ச்சி நடத்தினாங்க…. நாமும் அங்க எழுதினோம், இங்க எழுதினோம்… ஆனா ஒண்ணும் நடக்கல்லை… நிகழ்ச்சி நடந்திச்சு ….

    புர்காவை திட்டி அதே விஜை டீ வீ ஒரு நிகழ்ச்சி நடத்த போறோம்னு விளம்பரம் பண்ணுணாங்க… நிகழ்ச்சி நடக்கல்லை..விளம்பரம் மட்டும் தான். விளம்பரம் வந்த உடனேயே முஸ்லீம்கள் போராட்டம் ஆரம்பிச்சிச்சு … விஜை டீவீ மன்னிப்பு கேட்டுக்கிட்டு புர்கா நிகழ்ச்சிக்கு மூடி போட்டுட்டு போயிட்டாங்க

    எண்ணா…யார் யாரையோ குத்தம் சொல்லிக்கிட்டு..

    சோனியா கிறித்தவர் தான்… யார்ணா ஓட்டுப் போடுறது ? ஜார்ஜு புஸ்சா இந்தியா வந்து ஒட்டு போடுறார் ? நாம தானண்ணா ஓட்டு போடுறோம் ?

    என்னா சொல்ல …?

    சீற்மிகு இந்தியாவில இன்னும் என்ன என்ன நடக்குது பாருங்க

  13. முன் பதில்ல விட்டுப் போச்சு

    ….சீற்மிகு இந்தியாவில இன்னும் என்ன என்ன நடக்குது பாருங்க …

    https://bit.ly/9TmJLu

  14. Armchair Critic!

    கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தது: –
    //காலை 8.15 – “வரலாற்றில் வாழ்வோர்” (சனி மற்றும் ஞாயிறு) – ஜாய்ஸ் மேயெர்ஸ் என்கிற உலகப் பிரசித்தி பெற்ற எவாங்கலிக்கர் நடத்தும் இந்நிகழ்ச்சி, தமிழ் மட்டுமல்லாமல் பஞ்சாபி, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பஞ்சாப் மற்றும் ஆந்திர ஆகாஷவாணி, தூர்தர்ஷன் நிலையங்களிலும் ஒலி/ஒளி பரப்ப படுகிறது.//

    இந்த ’ஜாய்ஸ் மேயெர்ஸ்’ நிகழ்ச்சி “குட் நியூஸ் டி.வி” என்கிற கிறுத்துவ கம்பெனியால் தயாரிக்கப்பட்டு சென்னையைச் சேர்ந்த ஒரு கிறுத்துவரால் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஆகாஷ்வாணி – தில்லி, ஜல்லந்தர், ஹைதராபாத் நிலையங்களில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. மற்ற நிலையங்களில் (ஆகாஷ்வாணி/தூர்தர்ஷன்) ஒலி/ஒளி பரப்ப அவர்களுக்கே தெரிந்த வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  15. இதில் வழக்கு போடா முடியுமா? மத ரீதியான இட ஒடுக்கிட்டுக்கே சுப்ரேம் கோர்ட் அனுமதி வழங்கி விட்டதே ? இதிலயும் ஒடுக்கிடு கொடுத்திடுவாங்க

    இலவசமா ஒரு தமிழ் சேனல் தொடங்கி கேபிள் மூலமா பரப்பணும். திருப்பதி சேனல் தமிழ் ஹிந்தி கன்னடத்துல தொடங்கரடையும் நிறுத்திட்டாங்க.

    தமிழ் நாட்டுல தனிய ஒரு ப்ரீ டிவி தொடங்கி எல்லா மடத்துக்கும் டைம் அல்லாட் பண்ணி நடத்தனும். ஆனா எல்லா மடங்களும் ஒண்ணா இருக்க எடாவடு பண்ணனும்

  16. அற்புதமான கட்டுரை. திருமலை சொல்லிய வழக்காடுதல் நல்ல பலனளிக்கும் என்றே தோன்றுகிறது. இதற்கு நிதி சேர்ப்பதும் பெரிய பிரச்சனையாக இருக்காது. வந்தே மாதரம் பாடலை நிறுத்துவது மிகப்பெரிய தவறாக வாதாட வாய்ப்பிருக்கிறது. போட்டி நிகழ்ச்சிகளை அளிக்கும் யோசனையும் ஏற்புடையதாகவே இருக்கிறது. ஆனால் அப்போது இந்த நிகழ்ச்சிகள் நிறுத்துவதற்கான வழிமுறை அடைக்கப்பட்டுவிடும். அரசு தொலைக்காட்சியான பொதிகை தொலைக்காட்சியின் விளம்பர நேரங்களை மத போதனைக்கு பயன்படுத்தாமல் செய்வதே முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். போட்டி நிகழ்ச்சிகள் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பொருந்திவரும்.

  17. தமிழ்ச்செல்வன் உங்கள் பயணம் தொடரட்டும். நாங்களும் உடன்வருகிறோம்.

  18. அய்யா கட்டுரை ஆசிரியரே!! மிக்க நன்றி. நான் அவ்வளவு கூர்ந்து அந்த விதி முறைகளை படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. now i understand clearly. am supporting ur views and feel worry abt the biased mind of DD nowadays.

  19. நான் என் கண்டனத்தைத் தெரிவித்து கீழ்கண்டவாறு ஒரு கடிதம் மெயில் செய்துவிட்டேன்.

    Respected Madam
    Namaskar.

    As a regular viewer of Doordarshan, I thought I must write to you about a recent development with regards to “Podhigai” Tamil Channel of Chennai Doordarshan Kendra.

    Of late, I find a lot of evangelical programs preaching Christianity being aired in Podhigai. Some times, I have also come across these evangelists ridiculing Hindu culture and tradition and ultimately hurting our religious sentiments. This is quite outrageous. I feel that airing evangelical programs, which preach Christianity, is a violation of our Constitution and a threat to the secular fabric of our nation.

    Another shocking development is the termination of Vande Mataram song, with which Doordarshan starts the day early in the morning at 5.30 am. Instead, the day starts with an evangelical program preaching Christianity. This blatant appeasement is atrocious and I don’t understand how Chennai kendra could take such an unilateral decision of terminating the sacred national song Vande Mataram while all other forty plus kendras start the day with it.

    It is also disgusting that the day not only starts with Christian preaching but also ends with the same at 10.30 pm.

    I request you to kindly take immediate steps to restore Vande Mataram song and terminate the evangelical programs.

    Thanking You,

    Yours Sincerely,

    A.Suthan,
    ……….
    ………..
    …………
    Chennai

  20. இவை அனைத்தும் நமது ஆட்சியாளர்களால் செய்யபடுபவை, நமது கலைஞர்-க்கு காசு கொடுத்தால் குடும்பத்தை-ஏ கிருத்துவத்துக்கு மாற்றி விடுவர். அவரும் சோனியா அம்மையார்! இருக்கும் வரை இது தொடரும்..

  21. அநியாய‌த்தை, அசிங்க‌த்தை , அற்ப‌த்த‌ன‌த்தை, சூதினை எதிர்க்க‌ நியாய‌மான‌, அமைதியான‌ போர‌ட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌மாகக் கூடும்.

    ஆனால் வெறும் போராட்ட‌ங்க‌ளை ம‌ட்டும் ந‌ம்பிக் கொண்டு அடிப்ப‌டைக‌ளில் கோட்டை விட்டால் அதோ க‌திதான்.

    உண்மையில் இந்து ம‌த‌ம் என்றால் என்ன‌, ஆன்மீக‌ம் என்றால் என்ன‌ என்று புரிந்து கொண்டால், அதை ம‌க்க‌ளிட‌ம் ப‌ர‌ப்பினால், பிற‌கு நீங்க‌ள் எதைப் ப‌ற்றியும் க‌வ‌லைப் ப‌ட‌ வேண்டி இருக்காது. ஆனால் உண்மை ஆன்மீக‌த்தின் வ‌லிமை என்ன‌ என்று ப‌ல‌ருக்கும் தெரிய‌வில்லை.

    ந‌ண்ப‌ர்க‌ள் நான்கைந்து பேர் விடுமுறை நாட்க‌ளில் கிராம‌ப் ப‌குதிக‌ளுக்கு, த‌லித் பிரிவு ம‌க்க‌ள் வசிக்கும் ப‌குதிக‌ளுக்கு சென்று அதிகாலையிலே ம‌க்க‌ள் ந‌ன்மைக்கான‌ கீர்த்த‌னைக‌ளைப் பாடி அவ‌ர்க‌ளின் ம‌ன‌திலே த‌ன் ந‌ம்பிக்கையை வூட்டுங்க‌ள். அங்கேயே ச‌ட்டி பானையில் ச‌ர்க்க‌ரைப் பொங்க‌லும் , வெண் பொங்க‌லும் ச‌மைத்து சேரி ம‌க்க‌ளுக்கு நிவேத‌ன‌ம் அளியுங்க‌ள்.

    “ஓம், ஓம் என‌ வ‌ருவோர்க்கு நாம் என‌த் துணையாவான்”, என்ற‌ த‌மிழ‌ரின் உதார‌ண‌ புருட‌னைப் பற்றிப் பாடி ம‌க்க‌ள் ம‌ன‌தில் த‌ன்ன‌ம்பிக்கையை வ‌ள‌ருங்க‌ள்.

    கோவிலே, இனி ம‌க்க‌ளின் வீடுக‌ளுக்கு செல்ல‌ வேண்டும்.
    ரா, ராமா இண்டி தாகா… என்று இராம‌ரை ம‌க்க‌ளின் வீடுக‌ளுக்கு கொண்டு செல்லுங்க‌ள். ஆன்மீக‌த்தில் முன்னேற்ற‌ ம‌டைந்த‌வ‌ர்க‌ள் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌வராக‌ க‌ருத‌ப் ப‌ட‌வே முடியாது.

    சேரிக்கு சென்று பாட‌ல்க‌ளைப் பாடி நிவேத‌னம் அளித்து, அப்ப‌டியே பிற‌ சாதியின‌ர் வ‌சிக்கும் ப‌குதிக்கும் சென்று, அவ‌ர்க‌ள் வீட்டிலும் வா இராமா வீட்டிற்க்குள்ளே என்று பாடி அவ‌ர்க‌ள் ம‌ன‌திலும் ஆன்மீக‌ ஒளி ஏற்றுங்க‌ள்.

    “திக்கு நீவ‌னுசு தெலிசி ந‌ன்னு புரோவ‌
    கிர‌க்குன‌ ராவு க‌ருண‌னு நீ சே,
    ஜிக்கி யுன்ன‌ தெள்ள‌ ம‌ர‌ துராயிக்க‌
    ஸ்ரீ தியாக‌ராஜுனு பாகிய‌மா”

    “திக்கு (திசை) அறியாம‌ல் திகைக்கும் எனைக் காக்க‌
    விரைந்து நீ வ‌ந்து வ‌ழியினைக் காட்டு,
    சிக்கித் த‌விக்கும் நான் விடுத‌லை பெற்றிட்டால்
    என் பாக்கிய‌மாகும்”

    உண்மையை உண‌ர்ந்த‌ ம‌க்க‌ள் ஒரே ச‌முதாய‌மாக‌ உருவெடுப்பார்க‌ள். குக‌னும், வ‌சிட்ட‌ரும், அனும‌னும், வீபிட‌ண‌னும், ஜ‌டாயுவும், சுமேந்திர‌ரும் ஒரே கொள்கைக‌ளின் அடிப்ப‌டையில் – ‍‍ம‌ற்ற‌வரின் ந‌ன்மைக்காக‌ த‌ன் சுக‌த்தை விட்டுத் த‌ருவ‌து, பிற‌ன் ம‌னை விழையாமை, அநியாய‌ அக்கிர‌ம‌த்தை முழு வீச்சில் எதிர்ப்ப‌து‍ – ஆகிய‌ கொள்கைக‌ளின் அடிப்ப‌டையிலே, ஒரே த‌ன்மையில் அன்பின் அடிப்ப‌டையில் வாழும் வ‌கையை ,ஆன்மீக‌ம் உருவாக்குமானால் அந்த‌ ஆன்மிக‌த்தை நாம் வ‌ர‌வேற்க்கிரோம்.

    அறிவின் அடைப்ப‌டையிலான‌, கொள்கைக‌ளின் அடிப்ப‌டையிலான‌, த‌ன்ன‌ம்பிக்கையை உருவாக்கும் ஆன்மீக‌த்தைக் கொண்டு செல்லுங்க‌ள். ம‌றுப‌டியும் மூட‌ப் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை எடுத்து சென்றால் பின்ன‌டைவே உண்டாகும்.

    ம‌க்களுக்கு அமைதி அளிக்க‌க் கூடிய‌, ந‌ம்பிக்கை அளிக்க‌க் கூடிய‌ உண்மை ஆன்மீக‌த்தை ம‌க்க‌ளிட‌ம் கொண்டு செல்லுங்க‌ள். அப்போது யார் எந்த‌ பிரசாரம் செய்தாலும் ம‌க்க‌ளே உண்மையை எடுத்து உரைப்பார்க‌ள்.

  22. நான் என் கண்டனத்தைத் தெரிவித்து கீழ்கண்டவாறு ஒரு கடிதம் மெயில் செய்துவிட்டேன்
    Dear Sir,
    I would like to bring the following points for your kind attention and immediate action to set right the wrong propagation through the National Broadcasting Station (particularly Podugai Channel Tamil)
    1. Remember India is a secular country and professing ones own religion and propagation is permitted in our constitution for harmonized existence of the entire citizen.
    2. Remember that India’s population consists of more than 80% of Hindus and rest is minorities. Preference of programme to be given according to the percentage
    3. National media should not be used for propagation of particular religion and also not to be used for abusing any religion. It is criminal offence and against the constituted laws.
    4. In recent time the slot allotted to the Christian Church group is too much and also the programmes telecasted are used only for propagation and abuse of other religious practices. This is a clear irritation for tolerant Hindus
    5. We are not against showing any religious functions, lecture, discourse and good teachings of Bible, Koran or Gita. But it is an offence to abuse other religion and claim that their GOD alone is true and rest are false.
    6. True patriotic secular Indians should be ashamed of wrong propagation of dividing the people which results in un-rest and promote only civil war.

    Hence I request the concern authority to take corrective step immediately and stop unlawful activities.
    With regards,
    V.Gopal

  23. திருச்சிக்காரரே! நீங்கள் எழுதியுள்ள தியாகராஜரின் பாடலின் முதல் வரிக்குப் பொருள்:”நீயே (எனக்கு) திக்கென்று அறிந்து கொண்ட என்னைக் காக்க “

  24. Dear Mr. Rishi,

    Many thanks for your clarification. I regret for the mistake. Its correctto say that நீயே (எனக்கு) திக்கென்று அறிந்து கொண்ட என்னைக் காக்க “.

    Can you clarify the second line also?

    ஜிக்கி யுன்ன‌ தெள்ள‌ ம‌ர‌ துராயிக்க‌
    ஸ்ரீ தியாக‌ராஜுனு பாகிய‌மா”

    Many thanks.

    Thiruchchikkaaran

  25. தொலைக்காட்சி அணைத்து மதத்திற்கும் பொதுவானது. நீங்கள் ஒரு மதத்து நிகழ்சியை ரத்து செய்ய விரும்பினால், எதிர் காலத்தில் எந்த மத நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப இயலாது. இதில் சட்டப்படி செய்வதற்கு எதுவும் இல்லை.

  26. அமெரிக்கா, யு.கே, போன்ற நாடுகளிலிருந்து கிறிஸ்துவ நிறுவனங்கள் மட்டும் பணம் பெறுவது இல்லை. B.P.O. போன்ற நிறுவனங்களும் பெருமளவில் பணம் பெறுகின்றனர். சென்னையில் உள்ள பெரிய கண்ணாடி கட்டிடங்கள் அனைத்தும் அந்நிய நிறுவனங்கள் தொழில் தொடங்க கட்டப்படுகின்றது. நவீன அடுக்குமாடி குடியிருப்புகள் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்காக கட்டபடுகின்றது. கிருஸ்தவ நிறுவனங்களுக்கும், இது போன்ற B.P.O நிறுவனங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, இருவரும் வெள்ளையர்கள் இட்ட வேலையை முடிக்க ராத்திரி பகலாக உழைக்கிறார்கள். எனவே B.P.O வையும் தடை செய்வது நலம்.

  27. திருச்சிக்காரரே!
    நான் ஒன்றும் தெலுங்கு மொழியை முழுதும் கற்றவனல்ல. எதோ அறையும் குறையுமாக, தியாகராஜரின் கிருதிகளில் interest மிகவும் உடையவனாதலால் , சில வார்த்தைகளின் பொருளை அறிந்திருக்கிறேன்.அவர் பாடல்களின் பொருட்களை அறியவேண்டுமானால் திரு.T.S. பார்த்தசாரதி அவர்களின் ” ஸ்ரீ த்யாகராஜ சுவாமி கீர்த்தனைகள் ” (The Karnatic Music Book Centre, 14 Sripuram First Street,Royapettah, Chennai-14) என்ற புத்தகத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

  28. I AM SURPRISED THAT WE HINDUS HAVE WOKENUP NOW AFTER several YEARS OF SLUMBER WATCHING DD PODHIOGAI, HATS OFF to TAMIL CHELVAN FOR UR great ARTICLE, u have woken up millions of sleeping giants to SAVE DD from the mercenary missionaries of jesus, NOW THE CAMPAIGN IS MORE to – SAVE DD THAN SAVE HINDUISM, becoz a public service broadcaster like DD can be a potent weapon in the hands of the missionaries, just imagine the psyche of the dalits in the villages who watch podhigai tv, and dd national on their community TV, they believe what DD says is GOI- govt of indias voice , they now strongly believe that Dd and Govt of india is asking them to convert to christianity, they are being brainwashed now by the local cchurches to se podhigai to believe that THE GOVT OF INDIA vt is ENDORSING, VALIDATING AND PATRONIZING CHRISTIANITY, DD CLARION CALL TO CONVERT IS THE CRUX OF THE MESSAGE.
    BE AWARE AND BEWARE OF THE CLANDESTINE CALCULATIONS OF THE CHRISTIAN PADRIS.
    ARISE OH HINDU, WE NEED MORE TAMILCHELVANS TO WAKE US UP, MAY BHARATH MATHA GIVE BIRTH TO MORE TAMILCHELVANS TO PROTECT THE OLDEST LIVING CIVILIZATION OF THE WORLD.
    JAI BHIM,
    AMBEDKARDASAN

  29. katturai mega arumai asantha neram namalaya sapidurathuthan evanga velai so, pothigai ya eppo aiuthama eduthukettanga government etha asaltta vettuta kudathu .

  30. ராமர் கிடையாது என்று கூறிய பெரிய குங்கும கலர் பொட்டு வைத்த கிறிஸ்த்துவ அம்பிகா சோனி , தகவல் மற்றும் ஒளிபரப்பு மந்திரி என்று இத்தாலிய சொநிஆவால் அமர்த்தப்பட்டும் , காங்கிரசும் கருணாநிதியும் சேரும் கூட்டுக்கு , மக்கள் சன் டிவி மூலம் தலை ஆட்டுவதை என்ன வென்று சொல்ல; சன் டிவி குழுமம் என்று ஒழிகிறதோ , அன்று முதல் மக்களில் பல பேர் பயித்தியம் ஆவது திண்ணம்; இவற்றின் நடுவில் “நல்லது’ என்பது சிறிது இருப்பது தான் ஆச்சரியமான தெய்வீகம்; ‘பொதிகையை’ பலபேர் பார்ப்பதில்லை என்பதால் ஏற்பட்ட அலங்கோலத்தை தான் கட்டுரையாளர் காண்பிக்கிறார்.

  31. அலோ….தமிள் இந்து! இந்த அம்மா அம்பிகா சோனி கீறாங்களே…..அவுங்க கிறுஸ்துவா இல்ல இந்துவா? வெளீல இந்துன்னு சொல்லிக்கினு உள்ளார ஏஸ்துவ கும்பட்றாங்க போல கீது, ஆஅங்!

    உங்க நிருபருங்க ஆர்னாச்சும் இருந்தாங்கன்னா கண்டுபுட்சு போட ஸொல்லு ஸார்.

    கீள ஒரு மேட்டரு குட்துகறேன் ஸார்….அல்லாரும் பாருங்க.

    https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=10815&SKIN=B

    Ambika Soni reconverted to Hinduism?
    09/04/2010 08:21:52 HK

    Ambika Soni, Information and Broadcasting Minister of UPA has now either converted to Hinduism or is playing dirty tricks to fool the Public once again.

    Ambika Soni , A crypto Christian had used her Hindu name even after conversion to fool the Public and now when the truth has been exposed there seems now to have a plan to project her again as a Hindu.

    Untill Recently in WikiPedia her religion was stated as Christianity, But suddenly now it has been changed to Hinduism!

    https://en.wikipedia.org/wiki/Ambika_Soni

    One can check the earlier Wikipedia entry here

    https://www.bookrags.com/wiki/Ambika_Soni

    In yet another wikipedia entry on List of prominent Indian Christians , The name of Ambika Soni is still there along with the name of A K Antony Ajit Jogi Y. S. Rajasekhara Reddy Margaret Alva Oscar Fernandes Jagdish Tytler P. A. Sangma George Fernandes Oommen Chandy Joy Cherian Rajkumari Amrit Kaur Cherian Philip Sonia Gandhi ( Priyanka/Rahul Gandhi)

    https://en.wikipedia.org/wiki/List_of_Indian_Christians#Politicians

    So why now this double game to cheat the gullible masses over the faith one follows?

    அந்த விக்கிபீடியா போட்டோ இதுல ஒட்ட மாட்டேங்குது ஸார். நா குட்துக்குற லிங்குல போயி நீங்களே எட்து போடுங்க ஸார் இங்க..

    இன்னா பாத்துட்டீங்களா? பாத்துட்டு சுளுவா எதுனாச்சும் செய்ங்க ஸார்.

    இன்னா….வர்டா

    மன்னாரு.

  32. I have also sent a mail to Aruna sharma with CC to Ambika Soni and Jegath ratchagan. Wonderful information given by the author.

    Siva

  33. Some of the entries in the link given by mannaru!

    Sonia Antonia Maino ( Gandhi) and Priyanka Gandhi / Robert Vadra / Rahul Gandhi ( Roman Catholics) – Supreme leaders of the ruling Congress-UPA party of India !

    Arundhati Roy – Winner of the Prestigious Booker prize at a young age, and her intelligence, creativity and personality has made her popular in literary circles worldwide.

    Dr.Pranooy Roy – pioneer of digital TV Mass Media and founder of NDTV.

    Vikram ( Real name : Joseph Kennedy)- Catholic, 2 time National Award winning Tamil superstar, who is well renowned for his outstanding acting & genius ! He is quite technology proficient too !

    Joseph Vijay : Tamil movie industry superstar, he is 2nd only to actor Rajnikanth in terms of popularity.

  34. Dear Mr. Tamil Selvan and Mr. Sudhan,

    Thanks for bringing these information, it is long time since i viewed any DD programme, once again thanks to Mr. Tamil Selvan.

    Mr. Sudhan, you expressed our feelings in your mail and placed in this blog also,, so it was easy for me to make use of drafting the same. Thank you very much. It is better some one draft a letter for such cases and we can take it and forward it. Kindly send the other 3 or 4 more
    Ashok Jailkhani Dep.Director Gen (Program)

    R.Venkateswarlu Dep.Director Gen (Program)

    Ms.Usha Bhasin Dir.General Gen (Program)

    B.S.Lalli, CEO PB
    Mail ids also. unfortunately Ms.Ambika Soni, & Dr.S.Jagathrakshakan,
    Both are christian, hope they will abide INDIAN Law and do the needful, let us pray for it.

    Kindly send their postal address also, we will send the letter to them by hard copy also.

    Advocate team and law suit is must.

    regards

    G. Murugan

  35. கிறிஸ்துவப் பிரசாரகர்கள் எந்த அளவு நம்மை வளைத்துள்ளனர் என்பதற்கு ஒரு சாட்சி, இந்து மதத்தைப் பற்றி எழுதும் என்னைப் போன்ற சமானியர்களது வலைப் பதிவின் பெயரில் அவர்கள் விளயாடியுள்ளதில் தெரியும்.

    My blog ID is https://jayasreesaranathan.blogspot.com
    Remove ‘b’ from blogspot and type as
    https://jayasreesaranathan.logspot.com/
    See what you get!!!!

    ரொம்ப நாட்களாகவே இப்படி இருக்கிறது.

  36. ஆங்கிலேயர்கள் அரசாங்க மதமாக கிறிஸ்தவத்தை ஆக்கி ஆட்சி செய்திருந்தால் இன்று நம் நாட்டில் குறைந்தது 10 சதவீதமாவது கிறிஸ்தவர்கள் இருப்பரே. நாட்டை முழுமையாக ஆட்சி செய்யாடத இஸ்லாமியரே 14 சதவீதம் இருக்கும் போது இது ஏன் நடக்கவில்லை. இதை யோசிக்க மாட்டீங்களா?

    அன்று கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்கள் உங்களைப் போன்ற காவிகள் அல்ல, ஆங்கிலேயர்தான் என்பதை அறிந்து கொள்ளும். தொலைக்காட்சி சேனல்களில் கிறிஸ்தவ நிகழ்ச்சி என்று கூப்பாடு போடுவதில் அர்த்த்மில்லை. முத்லில் உங்க நரேந்திர மோடி மாநிலத்தில் தூர்தர்சனில் ஒளிபரப்பாகும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை முடி்ந்தால் தடுத்துப் பாரும்.

    (edited and published)

  37. நமது அரசியல்வாதிகளின் சுயநலமும்,அதிகார போதையும் தான் நமது
    நாட்டை சீரழிக்கிறது.ஜெயலலிதா முதல்வராக இருந்த பொது கொண்டு வந்த மத மாற்று தடை சட்டத்தையே சுய நலத்திற்க்காக எதித்தவர்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்.கிறிஸ்துவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமது ஹிந்து நாட்டை கிறிஸ்துவ நாடாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்..
    .அ.சந்தர் சிங்.

    (edited and published)

  38. நீங்கள் குறிப்பிட்டபடி உங்கள் பெயரில் இங்கு ஒரு கிறிஸ்துவ பிரசார வலை உலகமே உள்ளது. இதை கேள்வி கேப்பார் யாருமில்லையே. இதற்க்கு என்ன பண்ணலாம். என்ன பண்ண வேண்டும் அவர்கள் வழி பிரச்சாரம் தனி வலை பதிவில் பின்னட்டுமே. எதற்காக ஒரு ஹிந்து மத வலை பதிவலரில் பெயரில் ஒளிந்துகொள்ளவேண்டும் இதை நாம் வன்மையாக கண்டிக்கவேண்டும்

    சேசுரா

  39. //Se Su Ra Ja16 April 2010 at 11:32 am

    நீங்கள் குறிப்பிட்டபடி உங்கள் பெயரில் இங்கு ஒரு கிறிஸ்துவ பிரசார வலை உலகமே உள்ளது. இதை கேள்வி கேப்பார் யாருமில்லையே. இதற்க்கு என்ன பண்ணலாம். என்ன பண்ண வேண்டும் அவர்கள் வழி பிரச்சாரம் தனி வலை பதிவில் பின்னட்டுமே. எதற்காக ஒரு ஹிந்து மத வலை பதிவலரில் பெயரில் ஒளிந்துகொள்ளவேண்டும் இதை நாம் வன்மையாக கண்டிக்கவேண்டும்//

    இதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.

    அவர்கள் இப்படி ஏன் செய்ய வேண்டும்?
    என் வலைப்பதிவின் பெயரை சிறு பிழையுடன் யாரேனும் எழுதிவிட்டால் அவர்கள் கிறிஸ்துவ பிரச்சாரத் தளத்துக்கு வரலாம் என்றா?
    அல்லது, இந்து மதத்தவர் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக இபப்டி செய்கிறார்களா??

    ஏன் என் வலைப்பதிவை ஆரம்பித்தேன் என்பதில் இப்படி எழுதி இருப்பேன் :-
    மற்ற மதத்தவர்களை நான் தாக்க மாட்டேன். அந்த மதங்களில் உள்ள குறைகளை எழுத மாட்டேன். நம் மதம் என்ன சொல்கிறது என்று மட்டுமே சொல்வேன். நம் மதத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

    இது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். நம் மதத்தை உண்மையாகப் புரிந்து கொண்டால் அவர்கள் வலையில் படித்தவர்களும் விழுவது கடினம். அதனால் இப்படி செய்கிறார்களோ? இன்னும் எத்தனை இந்து வலைப் பதிவர்களின் பெயரில் இப்படி ஊடுருவி உள்ளார்களோ?

  40. arpuda

    //
    ஆங்கிலேயர்கள் அரசாங்க மதமாக கிறிஸ்தவத்தை ஆக்கி ஆட்சி செய்திருந்தால் இன்று நம் நாட்டில் குறைந்தது 10 சதவீதமாவது கிறிஸ்தவர்கள் இருப்பரே. நாட்டை முழுமையாக ஆட்சி செய்யாடத இஸ்லாமியரே 14 சதவீதம் இருக்கும் போது இது ஏன் நடக்கவில்லை. இதை யோசிக்க மாட்டீங்களா?
    //

    புள்ளி விவரங்களை அப்படியே பார்ப்பவர் பார்பவரே அல்லர் – ஆங்கிலேயர் காலத்தில் கிறிஸ்தவ மயமாக்கல் இல்லை என்பதற்கு காரணம் ஒன்றும் அவர்களின் பெருந்தன்மை கிடையாது – அது ஒரு அரசியல் உக்தி – வேறு ஒரு நாட்டை அந்த நாட்டின் தன்மையை பொறுத்து எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பது ஒரு strategy. The Prince by Niccolò Machiavelli என்ற புத்தகத்தையும், மாமன்னன் alexander இன் வரலாற்றையும் படித்தால் இது நன்றாக விளங்கும்- ஆங்கிலேயர்கள் பொதுவாக இந்த இரண்டை ஆதாரமாக வைத்துதான் ஆட்சி புரிந்தார்கள்.
    – சுருக்கமாக சொன்னால் – உனது மதத்தை விட முற்றிலும் மாறுபட்ட மத்ததை சேர்ந்த நாட்டை ஆளும் போத அன் நட்டு மக்களை நேரடியாக மதம் மாற்றாதே – அப்படி செய்தால் கிளர்ச்சி எழும் நீ விரட்டப்படுவாய் என்பதே செய்தி

  41. //ஆங்கிலேயர்கள் அரசாங்க மதமாக கிறிஸ்தவத்தை ஆக்கி ஆட்சி செய்திருந்தால் இன்று நம் நாட்டில் குறைந்தது 10 சதவீதமாவது கிறிஸ்தவர்கள் இருப்பரே. நாட்டை முழுமையாக ஆட்சி செய்யாடத இஸ்லாமியரே 14 சதவீதம் இருக்கும் போது இது ஏன் நடக்கவில்லை. இதை யோசிக்க மாட்டீங்களா? – arputhaa //

    இன்று நம் நாட்டில் மத்திய மாநில அரசுகளுக்கு அடுத்த்படியாக ஏராளமான நிலங்களுக்கு, அதிலும் அயனான நகர்ப்புற மையங்களில் இடம் வ ளைத்துப் போட்டிருப்பது கிறிஸ்தவ மதத்தின் பல்வேறு பிரிவுகள்தான் என்பது கண்கூடு. ஆங்கிலேய அரசின் பரிவு அவற்றுக்கு இருந்ததுதான் இதற்குக் காரணம். நியாயப்படி 1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகு அவை யாவும் அரசால் கையகப் படுத்தப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிறுபான்மை என்கிற தனிச் சிறப்பு அவற்றுக்கு இருந்ததால் அவற்றின் மீது கைவைக்கப்படவில்லை. கிறிஸ்தவப் பிரிவுகளின் மத மாற்ற முயற்சிகளுக்கு ஆங்கிலேய அரசின் மறைமுக ஆதரவுதான் இருந்தது. மதம் மாறியவர்களுக்கு பலவாறான ஊக்க்குவிப்புகள் வேலை வாய்ப்பு சலுகைகள் இருந்தன. கிழக்கிந்திய கம்பனி ஆளுகையில் நேரடியான ஆதரவு கிறிஸ்தவ அமைப்புகளுக்குக் கிட்டியது. அக்காலத்தில் மத மாற்றம் துரித் கதியில் நிகழ்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் 200 ஆண்டுகள் மட்டுமே. கடந்த கால ஹிந்துக்களின் மன உறுதியினாலும் துணிவினா லுமே முஸ்லிம் கிறிஸ்தவர் மத மாற்ற முயற்சிகள் முழு வெற்றி பெறவில்லை. ஹிந்து சமுதாயத்தில் சாதியமைப்பு இருந்தமையால் கிடைத்த நன்மை இது என்றும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஹிந்து சமுதாயம் முழுவதும் ஒரே சாதி, அதற்கு ஒரே தலைவர் என்ற நிலை இருந்திருக்குமானால் கடந்த 1000 ஆண்டுகளில் ஹிந்துக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கும்.

  42. ஆங்கிலேயர்கள் இந்தியாவை முழுவதுமாக கடைசிவரை பிடிக்கவேயில்லை எடுத்துகாட்டிற்கு திருவன்கூர், புதுகோட்டை, ஹைதராபாத், க்வாலியர் சமஸ்தானங்களை சொல்லலாம். ஆங்கிலேயர் காலத்திலேயே தேர்தல் நடைபெற்று இந்திய முதல் அமைச்சர்கள் இருந்தார்கள் (17 Dec 1920 – 11 Jul 1921 Subbarayalu Reddiar – Chief Minister of Madras) அவர்கள் இந்து மதத்தை அதிகம் கவனம் செலுத்த வில்லை, கிறிஸ்துவ மதத்தை பாரப்பியவர்கள், அதற்காகவே தனியாக கப்பல் ஏறி வந்தவர்கள். ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும், மிஷனரிமார்களுக்கும் வேறுபாடு மிக அதிகம். நீங்கள் நினைப்பது போல் எல்லா வெள்ளையர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல! அதனால்தான் ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியாவை விட்டு சென்றாலும், மிஷனரிமார்கள் இன்னும் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

  43. Very good article!

    Can you please publish a draft of the complaint. So that i can forward this to all my friends and they can forward that too the government. Most of the friends wouldnt take time to write a complaint. So if you publish a common complaint draft then they can simply forward that to the respective ministry.

    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *