ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!

ஈரோட்டில்  ஜூலை-24ம் தேதி நடந்த உள்ளூர் மோதல் சம்பவம் பற்றி பத்திரிகைகளில் வந்திருந்தது.

மொத்தமாக இந்துக்கள் வாழும் பகுதிகளில் சென்று பொதுமக்களின் கடுமையான ஆட்சேபத்தையும், எச்சரிக்கையையும் புறக்கணித்து கிறிஸ்தவப் பாதிரிகள் மதமாற்றப் பிரசாரத்தைத்  தொடர்ந்தனர்.  இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில்  இந்து வர்த்தக நிறுவனம் ஒன்றும்,  இந்து இயக்கத் தலைவர்களும் கடுமையாகத் தாக்கப் பட்டனர்.   பயங்கர ஆயுதங்களுடன்  விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்த,  கிறிஸ்தவ அமைப்புகளும், த.மு.மு.கவும்  அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்தனர்.   காவல்துறையினர்  மிகவும் அருவருக்கத் தக்க வகையில் செயல்பட்டனர். பாதிக்கப் பட்ட பொதுமக்களுக்கு உதவாமல்,  வன்முறையாளர்களின் கையாட்களாகச் செயல்பட்டு, பாதிக்கப் பட்டவர்களையே கைது செய்து துன்புறுத்தும் அவலமும் நடந்தேறியது..

இது பற்றிய  நேரடி செய்தியினை ஈரோடு கனிவை சீனு அவர்கள் நமக்கு அனுப்பியுள்ளார்.  கீழே உள்ள இரு படங்களில் செய்தியும் அதைத் தொடர்ந்து சம்பவம் பற்றிய புகைப்படங்களும் உள்ளன.

erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-1

செய்தி: பக்கம் 1

erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-2

செய்தி: பக்கம் 2

erode-studio-incident-july-2010-1

படம் 1 – தாக்குதலுக்கு உள்ளான போட்டோ ஸ்டுடியோ

erode-studio-incident-july-2010-2

படம் 2 – பொதுமக்களை மிரட்டும் காவல்துறையினர்

erode-studio-incident-july-2010-3

படம் 3 – ஆயுதங்களைக் கொண்டுவந்த காரும் ஓட்டுநரும்

erode-studio-incident-july-2010-4

படம் 4 – தாக்குதலுக்கு கொண்டுவந்த உருட்டுக்  கட்டைகள்

erode-studio-incident-july-2010-5

படம் 5 – ஆயுதங்களைக் கொண்டுவந்த கார் பொதுமக்களால் சேதப்படுத்தப் பட்டது

erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-6

படம் 6 – தாக்குதலுக்கு பயன்படுத்தப் பட்ட வாகனம்

erode-studio-incident-july-2010-7

படம் 7 – ஆயுதங்களைக் கொண்டுவந்த காரை சேதப்படுத்தும் பொதுமக்கள்

erode-studio-incident-july-2010-8

படம் 8 – உடைக்கப் பட்ட கம்ப்யூட்டர் மற்றும் பொருட்கள்

erode-studio-incident-july-2010-9

படம் 9 –  திரண்டிருந்த பொதுமக்களில் ஒரு பகுதியினர்

கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சினை என்பது ஈரோட்டில் தொடர் கதையாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற மத பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண எந்த ஒரு முயற்சியும் செய்யாத அரசின்  போக்கு பொது மக்களுக்கு ஒட்டுமொத்தத நம்பிக்கையின்மையையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

119 Replies to “ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!”

  1. நாடார்,கௌண்டர்,தேவர்……எப்பொழுது இந்துவாக இருப்போம்…..

  2. விசி-யினர் இதில் ஈடுபட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லை.

    இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட தமிழர்களை ‘பார்ப்பதற்காக’ சென்ற திருமா, அங்கு சென்றதும் பேசியது, “நீங்கள் உங்களை இந்துவாக நம்பியது தான் உங்களை இந்த அளவுக்கு விட்டிருக்கிறது” என்று பொருள் படும்படி கூறினார் (பழைய ஜு.வி. இருந்தால் சரி பார்த்துக் கொள்ளலாம்). சொல்லி வைத்தார் போல், அடுத்த சில வாரங்களில் கிருத்துவ ஆள் பிடிக்கும் பாதிரிகள் மதம் மாற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

    யாராவது ஸ்டிங் ஆப்பராஷன் பன்னி திருமாவை பிடித்துக் கொடுத்தால் தேவலை.

  3. மற்றவர்களை எதாவது செய்வார்கள் என்று எதிர்பார்க்காமல் நம்மையும் நமது மதத்தையும் காக்க நாமே களம் இருங்கினால் மட்டுமே முடியும். ஈரோடு பொது மக்களை இந்த செயலில் நான் பாராட்டுகிறேன்.

    ம. மணிவண்ணன்
    புதுவை

  4. ஈரோட்டில் இதுபோல் நடப்பது ஆச்சரியமாக உள்ளது கோவை குண்டு வெடிப்பின்போது கூட அமைதியாக இருந்த நிலை மாறி தற்போது மிகவும் மோசமடைந்துள்ளதையே இது காட்டுகிறது. இந்துக்கள் ஒன்றிணையாவிட்டால் எதிர்வரும் காலங்களில் மிகவும் மோசமான நிலைமையை எதிர்கொள்ள வேண்டிவரும்.

  5. மத மாற்றத்தில் ஈடுபடும் கிறிஸ்தவ பரதேசிகளை ஊருக்குள்ள நுழையவே நாம் அனுமதிக்க கூடாது…மேலும் இந்து மத துரோகியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை இந்துக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புறகணிக்க வேண்டும்.. …….. இந்துக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த இரண்டு பேர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும்

    [Edited and published]

  6. Pingback: Indli.com
  7. Erode, the place notorious for the origin of a very very bad disease of TN, should lead from the front to reverse the damages done by that same person.
    Hindus have become refugees in their own land, protesting for their basic rights and very survival from the hands of both Abrahamic faiths.

  8. ஒன்று படுவோம் ! இல்லையேல் வீழ்ந்து படுவோம்! பெயரை மட்டும் தமிழில் மாற்றிக் கொண்டு தமிழர்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்குமே துரோகம் செய்பவர்களை வெறுத்து ஒதுக்குவோம்! வாழ்க பாரதம்! வெல்க ஒற்றுமை! ஒற்றுமையின் பலத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

  9. Sir,

    We have to be strategic in dealing with these issues. In many christian preachings like this, i have seen those missionary people abusing our god.. like the way we worship is NOT true worship and that our gods are satan and sinned..

    We have to complain that these people are abusing our religion and insulting our god.. this should be a genuine case… if we complain that they are converting, then we wont have legal standing as this is allowed in law..

    Its high time that hindus should learn to be strategic..

  10. i disagree with ur comments on the comments made by thiruma. he is 10000% right . as we are hindus everywhere in the world we are treated bad. example india, srilanka,nepal, pakistan, bangladesh,figi,maldives,malaysia,australia,afghanistan and so on. all the hindu organisations of india are equally responsible for the plight of poor hindus in srilanka.

  11. அப்பாவி ஹிந்துக்களை குறிவைத்து தாக்கும் தீய சக்திகளை வன்மையாக கண்டிக்கிறோம் .ஈரோடு ஹிந்து மக்களுக்கு நன்றி .ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    ஜெய் ஹிந்த்

    முகுந்தவேல்

  12. அன்பு நண்பர்களே,மகிழ்ச்சி.
    மகத்தான பணி செய்து கொண்டிருக்கும் தமிழ் இந்து இணையதள நிர்வாகிகளுக்கு வணக்கங்கள் கோடி.
    கிருத்துவத்தின் கோர முகத்தைக்காட்டும் வகையிலும்,அதன் போலித்தனத்தை கிழிக்கும் வகையிலும் நண்பர் ஒருவர் இணையப்பக்கம் நடத்தி வருகிறார்,
    அவரது தளம்
    https://bibleunmaikal.blogspot.com/
    முடிந்த வரை இதைப்பரப்புங்கள்,அவரையும் நம்மோடு இணைத்து
    விழிப்புணர்வு பணி செய்வோம்

  13. missionaries are cunning
    they never act directly
    they have paid agents like viduthalai chiruthaikal,maoists, naga rebels etc
    they carry out their acts of sabotage through them.

  14. bibleunmaigal.com getting aborted when opening.Not able to open;
    editor : Please help.

  15. சீனு அனுப்பி இருக்கும் செய்தியை பார்த்ததும் ஒரு curiosity கேள்வி எழுகிறது. // இதற்கு மேல் இவர்களிடம் பேசிப் பயனில்லை, இவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுவோம் என எண்ணி அழைத்து செல்லும்போது ஒருவன் தப்பி ஓடிவிட்டான் // என்று எழுதி இருக்கிறார். மத மாற்ற பிரச்சாரம் சட்டப்படி குற்றம் இல்லையே? காவல் நிலையத்துக்கு அழைத்துப் போவது எந்த முகாந்தரத்தை வைத்து? தப்பி ஓடியவர்கள் அடி விழப் போகிறது என்று ஓடி இருக்க வேண்டும்!

    சாலமனை ஸ்டுடியோவில் வைத்து பேசிக் கொண்டிருந்தோம் என்கிறார். இது சாலமனின் சம்மதத்தோடு செய்யப்பட்டதில்லை என்பது தெளிவாக செய்தியிலேயே தெரிகிறது. சாலமனுக்கு தான் கடத்தப்பட்டதாக கேஸ் கொடுக்க முகாந்தரம் இருப்பது இந்த செய்தியிலேயே தெரிகிறது. ஆனால் சாலமன் மேல் பொது சொத்தை நாசப்படுத்தியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கேஸ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது!

    சட்டத்தை மீறித்தான் செயல்பட வேண்டும் என்ற முடிவில் சீனுவும் மற்றவர்களும் இருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. இன்றைய சமூக அரசியல் சூழ்நிலை அப்படித்தான் இருக்கிறது. உருட்டுக்கட்டைகளுக்கு முன் பேச்சுவார்த்தை பயனளிக்கப் போவதில்லை. ஆனால் அதே போல கிருத்துவ அமைப்புகளும், விடுதலை சிறுத்தைகளும் கூட நினைக்கலாம் இல்லையா? சட்டப்படி எந்த குற்றமும் செய்யாதபோது மிரட்டப்படுகிறோம், நமக்கு உருட்டுக்கட்டைதான் வழி என்று அவர்கள் நினைத்தால் அதை எப்படி தவறு என்று சட்டத்தை மீறுவதை தவிர வேறு வழி இல்லை என்று நினைக்கும் இந்த இந்து அமைப்புகள் சொல்ல முடியும்? அதுவும் காலம் காலமாக நம் அரசியல் சமூக சிஸ்டத்தால் அமுக்கப்பட்டு வந்திருக்கும் தலித் அமைப்புகள் அப்படி நினைத்தால் அதை தவறு என்று சொல்வது – அதுவும் சட்டத்தை மீற நினைக்கும் வேறு “உயர் ஜாதி” அமைப்புகள் சொல்வது – hippocrisy ஆக தெரியவில்லையா?

  16. தலித்து சகோதரர்கள் ஏன் கோயிலை எதிர்க்க வேண்டும்?
    அவர்கள் எதிர்க்கவில்லை.
    திருமாவளவன் கட்சியினர்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெளிவாகிறது
    அவரது கட்சியை அவர் கிறிஸ்தவ சர்ச்சின் கைப்பாவையாக ஆக்கி உள்ளார் என்பது தெளிவு
    முன்பு அவர் ‘ஹிந்துப் பண்பாடு எதிர்ப்பு மாநாடு’ என்று நடத்திக் கொண்டிருந்தார்.
    முன்பு சர்ச் அவரையோ அல்லது அவரது கட்சி ஆளையோ அமெரிக்காவுக்கு அனுப்பி இந்தியாவில் தலித்துகளுக்கு எதிராக கொடுமைகள் நடப்பதாக புகார் கொடுக்கச் செய்ததாக நினைவு.

    சர்ச் இந்த மாதிரி விஷயங்களில் ‘தில்லாலங்கடி’
    நேரடியாக எதுவும் செய்யாமல் பூனை மாதிரி நடக்கும்
    ஒரிசாவில் சுவாமி லக்ஷ்மனானந்தா கொலையில் மாவோயிஸ்டுகள் செய்தது போல் நாடகம் நடத்தினர்.
    சபரிமலை பேரைக் கெடுக்கும் விவகாரத்தில் ஜெயமாலா என்ற கிறிஸ்தவ நடிகையை வைத்து நடத்திய நாடகம் முன்பு அம்பலம் ஆகியது .

  17. @ RV

    நீங்கள் கேட்டது:

    “சட்டப்படி எந்த குற்றமும் செய்யாதபோது மிரட்டப்படுகிறோம், நமக்கு உருட்டுக்கட்டைதான் வழி என்று அவர்கள் நினைத்தால் அதை எப்படி தவறு என்று சட்டத்தை மீறுவதை தவிர வேறு வழி இல்லை என்று நினைக்கும் இந்த இந்து அமைப்புகள் சொல்ல முடியும்? ”

    என் பதில்:

    இல்லை சார்.

    எடுத்தவுடன் மக்கள் மதமாற்றிகளை மிரட்டிப் பிடித்து வைக்கவில்லை. முதலில் இங்கே பிரச்சாரம் செய்யாதீர்கள், எங்கள் மேல் மதத்தைத் திணிக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதைக் கேட்காமல் அப்படித்தான் பிரச்சாரம் செய்வோம் என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

    எனவே, இது வன்முறையாக மதமாற்றம் செய்யும் முயற்சி. சட்டப்படி தப்பு.

    சட்டப்படி தப்பு செய்பவர்களைத்தான் பொதுமக்கள் பிடித்துவைத்து விசாரித்து இருக்கிறார்கள். தப்பில்லை.

  18. ஆர்.வி. சார்,

    மத மாற்ற பிரசாரம், கிறிஸ்தவர்களிடமோ, கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியிலோ செய்தல் தவறில்லை. ஆனால் முழுக்க முழுக்க ஹிந்துக்கள் மட்டுமே வாழும் பகுதியில் வந்து, அப்பகுதி பொதுமக்கள் வேண்டாம் என்று எடுத்து கூறிய பிறகும், என்னை தடுக்க நீங்கள் யார் என கேட்பது எந்த வகை சுதந்திரம் அய்யா?.

    யார் சொல்லியும் கேட்காமல், மத துவேசத்தை தூண்டுபவர்களை காவல் நிலையத்திற்கு கூட்டி போகாமல், கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து உதைத்திருந்தால் சரி என்று கூறுவீர்களா?

    உலகம் முழுவதும் பரவி கிடக்கும் இந்து துறவிகளால் எந்த நாட்டிற்கும், எந்த மதத்திற்கும் கேடு உருவாகவில்லை.

    கிறிஸ்தவ பாதிரிகலின் மத துவேச பிரசாரத்தால், இன்று உலகம் முழுவதும் சமுதாய நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளது. ஆகவே பாதிரியார்களை கண்டால் பொதுமக்கள் உதைக்கிறார்கள்.

    இந்தியர்களே! இளைஞர்களே ! நாடு பிடிக்கும் வெள்ளை படைக்கு பலியாகாதீர்!.

    ஆயிரம் ஆண்டுகள், நுற்றுக்கணக்கான நாட்டவர்களின் தாக்குதலை சந்தித்த இந்து சமுதாயம், இந்த வெள்ளை படைஎயும் வேரருக்கும்.

  19. களிமிகு கணபதி, (என்ன அருமையான பெயர்!)
    // எடுத்தவுடன் மக்கள் மதமாற்றிகளை மிரட்டிப் பிடித்து வைக்கவில்லை. முதலில் இங்கே பிரச்சாரம் செய்யாதீர்கள், எங்கள் மேல் மதத்தைத் திணிக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதைக் கேட்காமல் அப்படித்தான் பிரச்சாரம் செய்வோம் என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். எனவே, இது வன்முறையாக மதமாற்றம் செய்யும் முயற்சி. சட்டப்படி தப்பு. //
    என் மேல் திணிக்காதே என்று சொல்லலாம், என் குடும்பத்தினர் பக்கம் வராதே என்று சொல்லலாம், என் வீட்டிற்குள் நுழையாதே என்று சொல்லலாம். இது எங்க ஏரியா உள்ள வராதே என்று சொல்ல முடியுமா? என் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுக்குள் நுழையாதே என்று சொல்ல முடியுமா? ஈரோட்டின் அந்த வீதிகள் என்ன ப்ரைவேட் ப்ராப்பர்டியா? அப்புறம் நீங்கள் சொன்னதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அது வன்முறை என்கிறீர்கள். நான் போன மறுமொழியில் எழுதியதை கூட நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் நீங்கள் என் மீது எந்த வன்முறையையும் அவிழ்த்துவிடவில்லை. 🙂

    சீனு,

    இந்த செய்தியை அனுப்பிய சீனு நீங்கள்தானா என்று தெரியவில்லை. உங்கள் பிரச்சினை புரிகிறது. ஆனால் சட்டத்தை மீறுவதாக முடிவெடுத்தால், அதிலும் சில பிரச்சினைகள் இருக்கின்றன.

    அப்புறம் // மத மாற்ற பிரசாரம், கிறிஸ்தவர்களிடமோ, கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியிலோ செய்தல் தவறில்லை. // என்று எழுதுகிறீர்கள். என்ன திருப்பதிக்கே லட்டா?ஏற்கனவே கிருஸ்துவர்கள் வாழும் பகுதியில் என்னங்க மத மாற்றம்? கிருஸ்துவர்கள் வாழாத பகுதியில்தானே இதை செய்ய முடியும்?
    // ஆனால் முழுக்க முழுக்க ஹிந்துக்கள் மட்டுமே வாழும் பகுதியில் வந்து, அப்பகுதி பொதுமக்கள் வேண்டாம் என்று எடுத்து கூறிய பிறகும், என்னை தடுக்க நீங்கள் யார் என கேட்பது எந்த வகை சுதந்திரம் அய்யா? //

    அதுதானே கருத்து சுதந்திரம்? உங்கள் வீட்டுக்குள் வரக்கூடாது என்று சொல்லலாம், வீதியிலே பேசக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லையே? இங்கே தமிழ் ஹிந்து தளத்தினர் மாற்று கருத்துகளை அனுமதிப்பில்லையா? “ஹிந்துத்துவ” கருத்துகளை மட்டுமே அனுமதிப்போம் என்றா கச்சம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்? மத துவேஷத்தை தூண்டினார்கள் என்றால் அது சட்டப்படி குற்றம் (என்று நினைக்கிறேன்) அப்போது மட்டுமே காவல் நிலையத்துக்கு கூட்டிப் போனது எல்லா விதத்திலும் சரி என்று சொல்ல முடியும். அப்போதும் ஸ்டுடியோவுக்கு கூட்டிப் போய் விசாரித்தது சட்டப்படி தவறாக இருக்கலாம்.

  20. கொங்கு மண்டலம்போல், தமிழகம் முழுவதும் மத மாற்றத்தை தடுப்போம். ஹிந்துக்களே ஒற்றுமையாய் இருப்போம்.

  21. ஐநுறு பேர் உள்ள தெருவில் அந்த ஐநுறு பேருக்கும் பிடிக்காத ஒரு விசயத்தை செய்வது பொது இடையூறாகவே கருதப்படும்.அத்துனை பேரும் வேண்டுகோள் விடுத்த பிறகும் ஒரு நாகரிகம் கருதியாவது பிரசங்கத்தை நிறுத்திவிட்டு மரியாதையாக போய் இருக்க வேண்டும்.
    உங்கள் கருத்து சுதந்திரத்தை முஸ்லிம்கள் வாழும் தெருவிலே காட்ட வேண்டியதுதானே.
    உங்கள் வீட்டுக்குள் வரவில்லை, வீட்டுக்கு வெளியே தெருவிலே நின்று கொண்டு சிலர் உங்கள் வீட்டில் உள்ளவர்களை பற்றி தரக்குறைவாக பேசினால் அது அவர்களுடைய கருத்து சுதந்திரம் என்று கேட்டுக்கொள்வீர்களா? அவர்களை எதிர்த்து கேட்பீர்களா ?

    இளிச்சவாயர்கள் இந்துக்கள் கேட்க ஆளில்லாதவர்கள் இந்துக்கள் எனவே நீங்கள் கிள்ளு கீரையாக நினைப்பது ஒன்றும் வியப்பல்ல.

    500 ஆண்டுகள்ளுக்கு முன் மதம் மாற்ற இங்கே வந்த கயவர்களை ஆரம்பத்திலேயே எம் கொள்ளுத்தாத்தாக்கள் கொன்று விட்டிருந்தால் இப்போது இந்த பிரச்சனை இல்லை. எம் முன்னோர்களே குற்றவாளிகள்,அவர்கள் சரியாக இருந்திருந்தால் உங்களின் வக்கிரம் பிடித்த கருத்தே இன்று இருந்திருக்காது.போகட்டும் இப்பவும் உங்கள் கருத்து சுதந்திரம் அடுத்தவரை பாதிக்காத வரை மட்டுமே நியாயமானது.
    மனசாட்சி இல்லாதவர்களே நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம் உங்கள் வம்பு வேண்டாம் நாங்கள் ஒதுங்கியே எங்கள் சுயகௌரவத்துடன் வாழ்கிறோம்.எங்களிடம் வந்து வாலாட்டினால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கேற்ப நீங்கள் அனுபவிக்க வேண்டிவரும்.

  22. ஆர் வி

    ஆம் ஒரு சில தெருக்களில் ஒரு சில காரியம் செய்யக் கூடாது. இது ஒன்றும் அறிவிக்கப் பட்ட சட்டம் கிடையாதுதான் இருந்தாலும் பொது அமைதி நாகரீகம் கருதி யாரும் செய்வதில்லை. தமிழ் நாட்டில் இன்று பல ஊர்களில் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளுக்குள் நம் இந்திய ராணுவம் கூட நுழைய அனுமதி கிடையாது. சர்ச் முன்பாகவும் மசூதி இருக்கும் வழியாகவும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் சென்று கொண்டிருந்த நம் உற்சவ வீதியுலாக்கள் இன்று அனுமதிக்கப் படுவதில்லை. மீறிப் போனால் கொலை விழுகிறது. அப்படியிருக்க இந்துக்கள் வாழும் ஒரு தெருவுக்குள் போய் ஒருவன் “பாவிகளே” என்று அழைத்தால் அவனை போலீஸிடம் ஒப்படைப்பதுதானே முறை? முதலில் இந்துக்களைப் பார்த்து எவனும் பாவிகளே என்று அழைப்பதே குற்றம். மதமாற்றிகள் அதைத்தான் செய்கிறார்கள். இங்கு போல தமிழ் நாட்டில் 911ஐ அழைத்தவுடன் போலீஸ் வந்து விடாது. என் வீட்டில் சமீபத்தில் கொள்ளை போன பொழுது நாங்கள் சென்னையில் உள்ள ஒரு உயர் அதிகாரியை அழைத்துச் சொன்ன பின்னால்தான் வெகு நேரம் கழித்தே போலீஸ் வந்தது. ஒரு வேளை அதற்குள் வீட்டில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற திருடனை நாங்கள் ஒரு வேளை பிடித்திருந்தால் அவனை என்ன செய்வது? பக்கத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் அது டீ கடையோ, ஸ்டுடியோவோ எதுவோ ஒரு இடத்தில் உட்கார வைத்திருக்க வேண்டும். அவனை வெளியே நிறுத்தினால் தெருவில் போவோர் வருவோர் எல்லாம் தர்ம அடி கொடுத்து அவன் உயிரே போய் விடும் ஆகவே ஏதாவது ஒரு இடத்தில் அவனை பிடித்து நிறுத்தி வைக்க வேண்டும். அது இந்த இடத்தில் ஒரு ஸ்டூடியோவாக இருக்கிறது. மதுரையில் ஒரு முறை நாங்கள் எங்கள் தெருவுக்குள் வந்த ஒரு திருடனை பிடித்து போலீஸ் வரும் வரை அவனை ஒரு பெட்டிக்கடையில் கட்டிப் போட்டு காவல் காத்திருக்கிறோம். இது தமிழ் நாட்டில் சாதாரணமாக நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம் தான், அவன் பொருள் கொள்ளை அடிப்பவனாக இருந்தால் என்ன ஆன்ம அறுவடைக் கொள்ளை அடிக்க வந்தவனாக இருந்தால் என்ன திருடன் திருடன் தானே? இதில் என்ன பெரிய பிரச்சினையை நீங்கள் கண்டீர்கள் என்பது என் சிற்றறிவுக்குப் புரியவில்லை.

    போகட்டும். அடுத்த முறை நீங்கள் என் வீட்டிற்கு வரும் பொழுது எங்கள் காம்ப்ளக்ஸின் நுழைவாயிலில் ஒரு போர்ட் வைத்திருக்கிறோம் அதைப் படியுங்கள். அது சொல்லும் “சொலிசிடேஷன் ப்ராஹிபிட்டெட்” என்று. அதாவது நான் அழைக்காமல் அவர்களாக வந்து எந்தப் பொருளையும் என்னிடம் யாரும் விற்க முயன்றாலோ அல்லது வீணாக வந்து எதையாவது சொல்லி எதற்காகவாவது மாற வற்புறுத்தினாலோ நாங்கள் தாராளமாக அவர்களை போலீஸிடம் ஒப்ப்டைக்கலாம். என் வீட்டிற்கு யாரேனும் மிஷ நரிகள் வந்தால் நான் போலீசை அழைத்து அவர்கள் எனக்குத் தொந்தரவு அளிக்கிறார்கள் என்று புகார் செய்ய முடியும். இது அமெரிக்காவிலேயே இருக்கும் பொழுது தமிழ் நாட்டில் ஒரு தெருவில் வாழும் இந்துக்களுக்கு அந்த உரிமை கிடையாதா என்ன? அவனை அடித்தார்கள் என்றால் அது தவறு. அவனை போலீஸ் வரும் வரை ஒரு இடத்தில் பிடித்து வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை. திருடர்களை நம்ம ஊரில் அப்படித்தான் கையாள்வது வழக்கம்.

    அன்புடன்
    ச.திருமலைராஜன்

  23. நாமும் இனி தேவாலயங்களின் வாசலிலும்,கிறித்தவ சகோதரர்களின் வீடுகளுக்கும் போய்,
    கிருஷ்ணர் ஒருவரே ஜீவனுள்ள கடவுள், அவரே உண்மை ,சத்யம். கீதை மட்டுமே புனிதமான நூல். மற்ற புனித நூல்கள் எல்லாம் கீதையிலிருந்து வந்தவையே. கிறித்தவ கடவுள் எல்லாம் சாத்தான்,நீங்கள் கிருஷ்ணரை வழிபட ஆரம்பியுங்கள். உங்கள் மேல் கங்கை நீரை தெளித்து நாங்கள் உங்களை எல்லாம் புனித ஆத்மா ஆக்குகிறோம்.
    நீங்கள் எல்லாம் இப்போது பாவிகளாக இருக்கிறிர்கள்,எங்கள் கண்ணனிடம் வாருங்கள் உங்கள் பாவங்களை போக்கி ரட்சித்து உங்களை வைகுண்டத்தில் ஏற்றுகொள்கிறோம். முருகனிடம் வாருங்கள் உங்களை ரட்சித்து கைலாயத்தில் ஏற்று கொள்கிறோம் .

    உங்கள் ஆத்மா பரமத்வாவினை சென்றடைய உங்களுக்காக நாங்கள் கிருஷ்ணனையும்,முருகனையும் பிரார்த்தித்து உங்கள் பாவங்களை எல்லாம் போக்கி புண்ணிய ஆத்மாக்களாக மாற்றி நற்பேறு அடைய வைக்கிறோம். அனால் நாங்கள் உங்களுக்கு லஞ்சமாக பணம் எல்லாம் கொடுக்க மாட்டோம்.சத்தியமாக சத்யமான ஜீவனுள்ள உண்மையான கடவுளையும் நற்பெற்றினையும் உங்களுக்கு தருகிறோம். மகா பாவிகளே (சகோதரர்களை இப்படி அழைக்க மனம் வேதனையாக இருப்பதால் சகோதரர்களே ) வாருங்கள்.
    என்று நோட்டீஸ் மற்றும் பிரசங்கம் செய்தால் அது நம்முடைய கருத்து சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளப்படும். நமக்கு கருத்து சுதந்திரம் இருப்பதால் நாமும் இனி கிறித்தவ சஹோதரர்களை நம் மதத்திற்க்கு
    மாற்றுவோம். (மன்னிக்கவும் அவர்களுடைய உண்மையான தாய்மதத்திற்கு வரவேற்ப்போம் ) உண்மையை சத்தியத்தை மறந்து பாவிகளான நம் சொந்தங்களை உண்மைக்கு திரும்பி வருமாறு அழைப்போம்.

  24. மிஸ்டர் ஆர்.வி.

    கிறிஸ்தவர்களுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குரீங்களே.

    இதே தமிழ் நாட்டில் பெயரை மட்டும் மாற்றி கொண்டு, இந்து தாழ்த்தப்பட்ட மக்கலுக்கு கிடைக்க வேண்டிய அரசு வேலை மற்றும் சலுகைகளை அனுபவிக்கும் கிறிஸ்தவர்கள் அதை உதர தயாரா…?

    உரிமையும், சலுகையும் இந்துக்களுடையது, உணர்வு இத்தாலிக்கா…?

    இந்த நாட்டில் எல்லா மதத்திற்கும் மரியாதை உண்டு. ஆநால் அதை பயன்படுத்தி மக்களை பிரித்து, நாட்டை துண்டாட நினைத்தால்…

    (edited and published)

  25. @ RV

    நீங்கள் சொன்னது

    என் மேல் திணிக்காதே என்று சொல்லலாம், என் குடும்பத்தினர் பக்கம் வராதே என்று சொல்லலாம், என் வீட்டிற்குள் நுழையாதே என்று சொல்லலாம். இது எங்க ஏரியா உள்ள வராதே என்று சொல்ல முடியுமா? என் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுக்குள் நுழையாதே என்று சொல்ல முடியுமா? ஈரோட்டின் அந்த வீதிகள் என்ன ப்ரைவேட் ப்ராப்பர்டியா? அப்புறம் நீங்கள் சொன்னதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அது வன்முறை என்கிறீர்கள். நான் போன மறுமொழியில் எழுதியதை கூட நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் நீங்கள் என் மீது எந்த வன்முறையையும் அவிழ்த்துவிடவில்லை.

    என் பதில்

    வீடு எனக்கு உரிமையானது. நான் எனது வீட்டில் சில சுதந்திரங்களை எதிர்பார்க்கிறேன். அதற்குள் வராதே என்று சொல்லலாம். ஆனால், ஒரு தனிமனிதனின் சுதந்திரம் வீட்டிற்குள் மட்டும்தானா?

    வீட்டையும் தாண்டி எங்கும் எனக்குச் சில சுதந்திரங்கள் இருக்கின்றன. நான் வேறு ஒரு ஊருக்கு, ஏன் வேறு ஒரு நாட்டிற்கே போனாலும் சரி. அந்த சுதந்திரங்கள் எனது உரிமை. என்னிடம் யார் எப்படிப் பழகவேண்டும் என்று நிர்ணயிக்கிற சுதந்திரம் எனது அடிப்படைத் தேவை.

    எனக்குப் பிடிக்காத ஒன்றை ஒருவர் பேசினால், என்னிடம் இனி நீ இந்த விஷயம் குறித்துப் பேசாதே என்று சொல்லும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. முடியாது அப்படித்தான் பேசுவேன் என்று ஒருவர் உங்கள் பின்னாலேயே வந்து அந்த விஷயத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசினால், அது எனக்கு வன்முறையாகத்தான் தெரிகிறது.

    நன்றாகக் கவனியுங்கள். நான் சொன்னதை ஒருமுறை மீண்டும் படித்துப் பாருங்கள். வீதிக்குள் நுழையாதே என்று சொல்லவில்லை. வீதிக்குள் நுழைந்து மதமாற்றப் பிரச்சாரம் செய்யாதே என்றுதான் சொல்லப்பட்டது.

    வீதியில் போவோர், வருவோரிடமெல்லாம் போய் சாத்தானைக் கும்பிடுகிறாய், பேயைப் பூஜிக்கிறாய், நரகம்தான் உனக்கு என்று ஒரு சிலர் விடாமல் சொன்னால், எங்கள் ஏரியாவுக்குள் வந்து இப்படி எங்களைத் தொந்தரவு செய்யாதே என்றுதானே சொல்லுவார்கள்.

    இன்னொன்றையும் கவனியுங்கள். இங்கே நாமிருவரும் உரையாடுகிறோம். மாறுபட்ட கருத்துக்களைப் பரிமாறுகிறோம். இதை நடத்த முதலில் நாம் இருவரும் மற்றவரையும், அவரது கருத்துக்களையும் மதிக்கிறோம். ஒருவர் சொல்லுவது எனக்குப் பிடிக்கவில்லை என்றால், அதைப் படிக்காமல் தவிர்க்கும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. படித்துத்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் ஏதும் இல்லை. ஆனால், மதமாற்றிகள் இந்த சுதந்திரத்தை மதிக்கிறார்களா?

    ஒரு உரையாடல், ஒரு பகிர்வு எப்போது வன்முறையாகிறது? அடுத்தவர் பக்கத்துக் கருத்தைக் கொஞ்சம்கூட கேட்கத் தயாராக இல்லாமல், நான் உங்களைப் பார்த்தோ அல்லது நீங்கள் என்னைப் பார்த்தோ, “நீ ஒரு பாவி, சண்டாளன், கேவலமான மதப் பழக்கங்கள் உள்ள கீழான மனிதன், கட்டுவிரியன், உனது பெற்றோர்களும் மூதாதையர்களும் கேவலமான சாக்கடைப் பிறவிகள், நான் நம்புகிற ஏசுவை நம்பாவிட்டால் நரகத்திற்குத்தான் போவாய்” என்று மீண்டும் மீண்டும் சொன்னால், அது வன்முறைதானே? (இப்படித்தான் கிறுத்துவமும், சர்ச்சும் போதிக்கின்றன.)

    இந்த வன்முறையை என்மேல் ஏவாதே என்றுதானே இந்துக்கள் கேட்கிறார்கள். இத்தனைக்கும், இப்படி எல்லாம் எங்களைக் கேவலமாகப் பேச உங்களுக்குச் சர்ச்சுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோமே, அங்கே போய் பேசுங்கள், இங்கே வந்து எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லுவது தவறா, நண்பரே ?

    எங்களது தெருவிலேயே நாங்கள் காதுகளை அறுத்துக் கொண்டுதான் நடமாடவேண்டும் என்றால், நண்பரே, நாங்கள் அந்த நிலை வேண்டாம் என்று ஏன் சொல்லக் கூடாது?

    இந்த உரிமை நமக்கு இப்போது இருக்கிறது. நமது குழந்தைகளுக்கு இருக்காது.

    செத்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்திற்குக் கடைசிப் பால் குடிக்கும் பாக்கியமாவது எஞ்சட்டும் என்று மன்றாடுகிறோம். இது தவறா?

  26. ஆகா ஹிந்துப் பகுதிகளுக்கு கிறிஸ்தவ சுவிஷேஷகர்களும், மத மாற்றிகளும் செல்வது மதம் மாற்றத்தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்!

    ஆனால் நீங்கள் கிறிஸ்தவ மக்களிடம் தான் முதலில் செல்ல வேண்டும்.
    ஏனென்றால் அவர்கள் என்ன கிறிஸ்தவர்களாக மாறியவுடன் ( தினகரன் குடும்பம் போல)கோடீஸ்வரர்களாக மாறி விட்டார்களா?
    அல்லது அவர்களது துன்பங்கள் தீர்ந்து விட்டனவா?
    அங்கு சென்று முதலில் அவர்களின் துன்பத்தை களையுங்கள்

    தெரேசா பிறந்த அல்பேனியா நாடு ஐரோப்பாவிலேயே மிக ஏழ்மையான நாடு
    அனால் அவர் அங்கு சமுதாயத்துக்கு சேவை செய்யாமல் இங்கு வந்தது மக்களை மதம் மாற்றவே
    அனால் அதை எதோ உலக மகா அதிசயம் போல் ஊடகங்களை வைத்து ஜாலம் காட்டுகிறார்கள்

    ஆப்பிரிக்காவுக்கு கிறிஸ்தவம் சென்று கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் ஆகிறது
    அனால் அங்கு ஏழ்மை,பசி ,பஞ்சத்தால் லட்சகணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.
    காங்கோ, சூடான் முதலிய நாடுகளில் உள் நாடு நாட்டு போரால் லட்சகணக்கானவர்கள் மாண்டனர். இன்னும் அது தொடர்கின்றது.
    கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் கிறிஸ்தவ- முஸ்லிம் ஓயாத சண்டை. அதனால் மக்கள் கொல்லப் படுகின்றனர்

    மிகப் பெரும் அளவில் கனிம வளங்கள் உள்ள ஆப்பிரிக்க நாடுகளை கிறிஸ்தவ மேலை நாடுகள் சுரண்டிக் கொண்டு தாங்கள் செல்வ போகத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஒத்து ஊதுவதும் மிஷனரிகளே.

    அந்த நாடுகளை எல்லாம் கெடுத்து விட்டு இப்போது இந்தியாவா?
    எதோ முறை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கண்டத்தையும் நாசம் செய்ய வேண்டும் என்பது தான் சர்ச்சின் கொள்கையா?
    போப்பு இந்தியா வந்த போது ‘மற்ற இடங்களில் எல்லாம் ‘வேலை’முடிந்து விட்டது . இனிமேல் ஆசியா, குறிப்பாக இந்தியா’ என்று சொன்னதன் பொருள் இதுதான்!

  27. எனது நண்பர் ஒருவர் கூறியது
    அவர் ஒரு இடத்தில் காரை விட்டு இறங்கிய போது திடீரென்று ஒருவன் அருகில் வந்து அவரது நெற்றியில் இருந்த குங்குமப் பொட்டைக் காண்பித்து ‘இனிமேல் இதையெல்லாம் விட்டு விடுங்கள்.உங்களைப் போன்றவர்களால்தான் பரலோக சாம்ராஜ்யம் வருவது தாமதம் ஆகிறது’ என்றானாம்
    அதற்கு அவர்’ இன்னும் இரண்டு நிமிடம் தருகிறேன்.அதற்குள் இங்கிருந்து ஓடிப் போய் விடு’ என்றாராம்

    ஆனால் அவன் கொஞ்சம் கூட பதறாமல் மெள்ளமாக நடந்து சென்றானாம்.
    அவனைப் பார்த்தால் படித்த ஆசாமி போல இல்லையாம்.
    ‘அவன் பேசுவதைப் பார்த்தால் உண்மையாகவே என்னால் தான் ஏசு வருவது தாமதமாகிறது என்று சின்சியர் ஆக அவன் நினைப்பது போல் இருந்தது ‘என்றார் என் நண்பர்.
    அந்த அளவுக்கு பாமரார்களிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி மூளை சலவை செய்கின்றனர்

  28. முதலில் நாட்டுக்குள் நுழைவார்கள்
    பின்பு வீதிக்கு வருவார்கள்
    அதன் பின் வீட்டுக்குள் வருவார்கள்
    கடைசியாக அவர்கள் நம் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருப்பார்கள்
    ஆனால் நம் வீட்டில் ஒருவரோ பலரோ வீட்டை விட்டுப் போக நேரிடும் ( ஏனென்றால் வீட்டில் ஒருவரை மதம் மாற்றி விடுவார்கள்.மற்றவர்கள் மாறா விட்டால் குடும்பம் ரெண்டு படும்.)

    முதலில் நம் துன்பங்களில் பங்கேற்பது போல் நடித்து விட்டு பின்பு மெதுவாக ‘உனக்காக ஜெபம் செய்கிறேன் என்று ‘ஊத’ ஆரம்பிப்பார்கள்.
    நீங்கள் கேட்க ஆரம்பித்தால் அப்புறம் சர்ச்சுக்கு ‘அழைப்பார்கள்’ .என்ன நடந்தது என்று உங்களுக்குப் புரியு முன் தண்ணீரில் உங்களை அமுக்கி ஞான ஸ்நானம் செய்தே விடுவார்கள் .
    அதனால்தான் சில பெரியவர்கள் சொல்வார்கள் -கிறிஸ்தவர்களை உன் வீட்டிலேயே அனுமதிக்காதே என்று

    இவர்களால் உடைந்த குடும்பங்களுக்கு கணக்கில்லை.

  29. பிரச்சாரம் செய்ய உரிமை உண்டுதான், மைக் செட்டு போட்டு தெருவை அலற வைக்க உரிமை இருக்கிறதா?

    தெருவில் நடந்து போகிறேன். என்னிடம் வந்து கேட்பதானால் ஏதாவது அட்ரஸ் கேட்பது என்றால் கேட்கலாம். அதை விட்டு என்னை அழைத்து பிரச்சாரத்தை ஆரம்பிக்க இன்னொருவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

    என்னுடைய நேரம் எனக்கு முக்கியமானது. போகிற போதே மூடைக் கெடுக்கிறார்கள.

    அமேரிக்கா போக எம்பசிக்கு என் நண்பன் சென்று கொண்டு இருந்தார். ஒரு பிரச்சாரகர அவனை நெருங்கி எங்கே போகிறாய் என்று கேட்டார். அமெரிக்கன் எம்பசி போகிறேன் என்றான். அமேரிக்கா போய் என்ன செய்யப் போகிறாய், தேவனுடைய சாம்ராச்சியத்துக்கு உன்னை அழைத்து செல்கிறேன் என்றார். அவன் கடுப்பு ஆகி ஆகி விட்டான். அவரவர் ஆயிரம் ஜோலிக்காக வெளியில் செல்லும் போது, குறுக்கிடுகிறார் களே இவர்கள வியாபாரத்தை நடத்த அதுவா நேரம்?

    தெரு எல்லோருக்கும் பொதுவானதுதான் அப்படிப் பார்த்தால் விநாயகர் வூர்வலம் நடத்த ஏன் அனுமதி கொடுப்பதில்லை? மதம் என்பது சென்சிடிவான விடயம். அவரவர் அவரவர் மதக் கொள்கைகளைப் பரப்பினால் சரி. அனால் பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புக் கொள்கைகளைப் பரப்பி சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கிறார்கள்.
    பெரும்பாலான இந்துக்கள் பிறமதங்களை வெறுப்பதில்லை. அவர்கள் மனதிலே இஸ்லாம், இந்து , புத்த மதங்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்லி வெறுப்புக் கருத்துக்களை விதைத்து அவனை அமைதிப் பாதையில் இருந்து பிடிவாதப் பாதைக்கு அழைத்து செல்கிறார்கள்.

    இயேசு எந்தக் கருத்துக்களை வேண்டாம் என்று சொன்னாரோ அதே கருத்துக்களை அவர் பெயரால் பரப்புகிறார்கள். யூதர்க்ளைடத்திலே போங்கள். புற ஜாதியிடத்தே போக வேண்டாம் என்று இயேசு சொல்லி இருக்கிறார். தப்பும் தவறுமாக கொள்கைகளை உருவாக்கி, பாவம் செய்யாமல் இருக்க முடியாது, மன்னிப்பு கேட்டுக்கலாம் என்ற வகையிலே கோட்பாட்டை உருவாக்கி மேற்கத்திய சமுதாயத்தை டேட்டிங் கலாச்சார சமுதாயமாக்கி அங்கே குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய் விட்டது. பள்ளியிலே ஆரம்பித்து பாடை வரை ஒரு மனிதன் எத்தனை பெண்களுடன் உறவு வைக்கிறான். இதுதான் இயேசு சொல்லிக் கொடுத்தாதா? அங்கே சென்று இயேசு கிறிஸ்துவின் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதுதானே முக்கியம்.

    அன்பிற்கும் மதிப்ப்பிர்க்கும் உரிய திரு R. V அவர்கள கூட்டான் சோறு தளம் நடத்துபவர் என நினைக்கிறேன். மிகுந்த அறிவுலவரும் திறமை சாலியுமான அவர் இலக்கியத்திலே சிறப்பானவர். தேவன், சாம்பு, சுஜாதா என்று புகுந்து விளையாடுவதோடு, டாங்கர் பச்சிடி , கத்திர்க்காய் பிட்லை
    டி போனரவர்ரிலும் ஒரு கை பார்ப்பார். . ஆனாலும் மத வெறியர்களின் “மனித” உரிமைகளை பாதுகாப்பதுதான் அவருடைய தலையாய செயல்.

  30. சட்டம், நாகரீகம், நியாயம், ப்ராக்டிகல் நிலை எல்லாம் தொடர்புடையவையே; ஆனால் வேறு வேறு என்பதை நாம் உணர வேண்டும். அதை இங்கே பலரும் குழப்பிக் கொள்கிறீர்கள்.
    மதமாற்றம் தானாக விரும்பி நடந்தால்தான் நியாயம். அடுத்தவர்கள் தூண்டுவது அநியாயம். இவர்கள் செய்வது அநியாயம் என்பது தெளிவு. ஆனால் சட்ட விரோதம் இல்லை.
    இங்கே மதமாற்றம் செய்ய வருபவர்களிடம், அய்யா உங்க பப்பு இங்கே வேகாது, தொந்தரவு செய்யாதீர்கள் என்று நாகரீகமாக சொல்லி இருக்கிறீர்கள். அவர்களும் நாகரீக மனிதர்களாக இருந்தால் போயிருப்பார்கள். விடாமல் தொந்தரவு நடக்கிறது. இது அநாகரீகம், ஆனால் சட்ட விரோதம் இல்லை. (உங்களிடம் தினமும் செல் ஃபோனில் கூப்பிட்டு கடன் தருகிறேன் என்பவர்களையே ஒன்றும் செய்யமுடியாது என்பதை நினைவு கொள்ளுங்கள்.)
    ப்ராக்டிகலாக என்னதான் செய்ய முடியும்? போலீஸ் என்று மிரட்டலாம், ஸ்டுடியோவுக்கு தள்ளிக்கொண்டு போய் விசாரிக்கலாம். ஆனால் அது சட்ட விரோதம். அவர்கள் எந்த சட்டத்தையும் மீறவில்லை, அவர்களை எப்படி மிரட்டுவது?
    உருட்டுக்கட்டைகளோடு ஒரு கும்பல் வருகிறது. அங்கே போய் சட்டம், நியாயம், தருமம், நாகரீகம் என்று பேச முடியுமா? காந்தியால் கூட முடியாது. திருப்பி அடிப்பதுதான் ஒரே வழி. உங்கள் மீது தாக்குதல் நடக்கும்போது எதிரியை துரத்தி துரத்தி அடிக்கக் கூடாது, அவன் அடித்தால் தடுக்கலாம், நீயாக அடிக்கக் கூடாது என்று விதி போட முடியுமா?

    உங்களைப் போலவே ப்ராக்டிகலாக என்ன செய்வது என்று தலித் அமைப்புகளும் யோசிக்கலாம். தலித்கள் மீது அநியாயங்கள் பல நூறாண்டு காலமாக நடந்துவருகின்றன. அவர்கள் நமக்கு ஒரே பாதுகாப்பு உருட்டுக்கட்டைதான் என்று முடிவு செய்ய மதமாற்ற பிரச்சாரம் கண்டு கொதிப்பவர்களை விட இன்னும் அநேக காரணங்கள் இருக்கின்றன. தனக்கு ஆதரவு தருபவர்கள் – மதமாற்ற அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ, லோகல் ரவுடிகளோ – “ஆபத்தில்” இருப்பதாக கேள்விப்பட்டு உருட்டுக்கட்டையோடு வந்தால் – உங்களைக் காப்பாற்றிக் கொண்ட பிறகு – அவர்கள் காரணிகளையும் யோசியுங்கள். ஏதோ தேவர் பேரவையோ நாடார் சங்கமோ இங்கே குறிப்பிடப்பட்டன என்று நினைக்கிறேன். அவற்றின் உணர்ச்சிகள் கொஞ்சம் இந்த தலித்கள் மீதும் திரும்பட்டும்! மதமாற்றத்தை தடுப்பதைவிட ஆயிரம் பங்கு முக்கியமான விஷயம் இந்த சமூக அநியாயங்களைத் தடுப்பது!

    தனிப்பட்ட பதில்களுக்கான என் பதில்கள்:

    பாபு எழுதுகிறார்: // ஐநுறு பேர் உள்ள தெருவில் அந்த ஐநுறு பேருக்கும் பிடிக்காத ஒரு விசயத்தை செய்வது பொது இடையூறாகவே கருதப்படும். அத்துனை பேரும் வேண்டுகோள் விடுத்த பிறகும் ஒரு நாகரிகம் கருதியாவது பிரசங்கத்தை நிறுத்திவிட்டு மரியாதையாக போய் இருக்க வேண்டும். // சட்டம், நியாயம், நாகரீகம் ஆகியவற்றை குழப்பிக் கொள்ளாதீர்கள். First Amendment போல ஒன்று இல்லாவிட்டாலும், இந்தியாவிலும் கருத்து சுதந்திரம் ஓரளவுக்கு இருக்கிறது.
    // உங்கள் வீட்டுக்குள் வரவில்லை, வீட்டுக்கு வெளியே தெருவிலே நின்று கொண்டு சிலர் உங்கள் வீட்டில் உள்ளவர்களை பற்றி தரக்குறைவாக பேசினால் அது அவர்களுடைய கருத்து சுதந்திரம் என்று கேட்டுக்கொள்வீர்களா? அவர்களை எதிர்த்து கேட்பீர்களா ? // எதிர்த்து கேட்க எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறதே? கருத்து சுதந்திரம் என்றால் அடுத்தவருக்கு உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை பேசவும் சுதந்திரம் இருக்கிறது என்று பொருள். உங்களுக்கு கேட்க கட்டாயம் இல்லை; திருப்பி பேசவும் சுதந்திரம் இருக்கிறது!

    // நாமும் இனி தேவாலயங்களின் வாசலிலும்,கிறித்தவ சகோதரர்களின் வீடுகளுக்கும் போய்,…// உங்கள் கருத்து சுதந்திரம்!

    திருமலைராஜன் எழுதுகிறார்: // ஒரு சில தெருக்களில் ஒரு சில காரியம் செய்யக் கூடாது. இது ஒன்றும் அறிவிக்கப் பட்ட சட்டம் கிடையாதுதான் இருந்தாலும் பொது அமைதி நாகரீகம் கருதி யாரும் செய்வதில்லை. // சட்டம், நியாயம், நாகரீகம் எல்லாம் தொடர்புடையவை, ஆனால் வேறு வேறு…

    சீனு எழுதுகிறார்: // கிறிஸ்தவர்களுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்குரீங்களே… // வக்காலத்து வாங்குவது என்றால் கருத்து சுதந்திரத்துக்குத்தான் வாங்க வேண்டும்; கிருஸ்துவர்களுக்கு இல்லை. பிரச்சினையை குழப்பிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு சட்டத்தை மீற ப்ராக்டிகல் காரனன்கள் இருக்கின்றன; அதை விட பல மடங்கு காரணங்கள் தலித்களுக்கு இருக்கின்றன.

    களிமிகு கணபதி எழதுகிறார்: // முடியாது அப்படித்தான் பேசுவேன் என்று ஒருவர் உங்கள் பின்னாலேயே வந்து அந்த விஷயத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசினால், அது எனக்கு வன்முறையாகத்தான் தெரிகிறது.// ஆனால் சட்டம் அப்படி நினைக்காது என்பதுதான் பிரச்சினையே.

    // வீதிக்குள் நுழையாதே என்று சொல்லவில்லை. வீதிக்குள் நுழைந்து மதமாற்றப் பிரச்சாரம் செய்யாதே என்றுதான் சொல்லப்பட்டது. // வீதி உங்கள் ப்ரைவேட் ப்ராப்பர்டியாக இருந்தால் தாரளமாக அப்படி சொல்லலாம். பொதுத் தெருவில் எச்சில் துப்புவதைக் கூட உங்களால் நிறுத்த முடியாது என்பதை நினைவு கொள்ளுங்கள்.

    சிறீதரன் எழுதுகிறார்: // ஆகா ஹிந்துப் பகுதிகளுக்கு கிறிஸ்தவ சுவிஷேஷகர்களும், மத மாற்றிகளும் செல்வது மதம் மாற்றத்தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்! // என்னங்க விடிய விடிய ராமாயணம் கேசா இருக்கு? மதமாற்றத்தைப் பற்றித்தானே உரையாடலே?

    திருச்சிக்காரன் எழுதுகிறார்: // பிரச்சாரம் செய்ய உரிமை உண்டுதான், மைக் செட்டு போட்டு தெருவை அலற வைக்க உரிமை இருக்கிறதா? // அது அந்த லோகல் சட்டத்தை, போலீசை, நிர்வாகத்தை பொறுத்தது. அனுமதி வாங்கி செய்தால் உரிமை இருக்கத்தான் செய்கிறது.
    //அதை விட்டு என்னை அழைத்து பிரச்சாரத்தை ஆரம்பிக்க இன்னொருவருக்கு என்ன உரிமை இருக்கிறது?// சட்டம், நியாயம், நாகரீகம் எல்லாம் வேறு வேறு…
    // திரு R. V அவர்கள கூட்டான் சோறு தளம் நடத்துபவர்…// ஆமாம், “RV” என்ற பேரை க்ளிக் செய்தால் என் தளத்துக்கு போகலாம். உங்கள் பாராட்டுக்கு நன்றி, திருச்சிக்காரன்!

  31. இது பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்தது.
    எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் இருக்கிறது. அதற்கு அருகே பால் தினகரனின் ஆட்கள் வெளியூரிலிருந்து வருவார்கள். அந்த கோவிலுக்கு முன்னால் நின்றுகொண்டு வெள்ளை பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு கையில் பைபிள் புத்தகம் வைத்துகொண்டு எ பாவிகளே என்று ஆரம்பிப்பார்கள். அங்கே யாரும் அவர்களை ஒன்ற்ம் சொல்லவில்லை. அவர்களை சுற்றி சிறுவர்கள்நின்று கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். யாரும் அடிகக்வும் இல்லை துரத்தவும் இல்லை. அவர்களும் விடாப்பிடியாக கோவிலுக்கு முன்னால் நின்றுகொண்டே இது சாத்தான், இதனை வணங்கக்கூடாது. நீங்கள் நரகத்துக்குப் போவீர்கள் என்றெல்லாம் சொல்லிகொண்டே இருந்தார்கள். அப்போது ஊர் பெரியவர்கள் கூட அவர்களை அடிக்க போன இளைஞர்களை தடுத்தார்கள். அது சிறுபான்மையினர் உரிமை. அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. நாம் அவர்களை அடித்தால் ந்ம்மைத்தான் போலீஸ் பிடிக்கும். வேண்டாம். அவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும் என்றார்கள். இப்போது எங்கள் கிராமத்தில் நிறைய பேர் கிறிஸ்துவர்கள்.

    கிறிஸ்துவர்களுக்கு இருக்கும் உரிமை, இஸ்லாமியர்களுக்கு இருக்கும் உரிமை இந்துக்களுக்கும் வேண்டும்.

  32. இந்தியாவில் நீங்கள் முஸ்லீம் தெருக்கள் வழியே வினாயகர் ஊர்வலம் போனால் தடுக்கப்படுகிறீர்கள். காரணம் உங்கள் ஊர்வலம் மீது கல்லெறியப்படுகிறது. அரசாங்கம் என்ன சொல்கிறது? இந்துக்கள் முஸ்லீம் தெருக்கள் வழியாக ஊர்வலம் போவதால் முஸ்லீமகள் கொதித்து கல்லெறிகிறார்கள். இது மதக்கலவரத்தை தூண்டுவது போன்றது. ஆகவே போகவேண்டாம் என்று இந்துக்களை தடுகிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் இந்துக்களின் தெருக்களில் வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், முஸ்லீம்கள் தெருக்கள் வழியாக இதுவரை போய்க்கொண்டிருந்த ஒரு ஊர்வலம் இனி போகமுடியாது. இது எப்படி இருக்கிறது? மனித உரிமைகள் என்பது பரஸ்பரம் இருக்கவேண்டும். இந்துக்கள் முஸ்லீம்கள் தெருக்களில் சென்று அங்கு மதமாற்றம் செய்வதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை வேண்டும். இந்துக்கள் கிறிஸ்துவர்கள் தெருக்களுக்கு சென்று அங்கு மதப்பிரச்சாரம் செய்யவும் மதம் மாற்றவும் உரிமை வேண்டும். ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்களை அவர்கள் நடத்துவது போல, கிறிஸ்துவர்கள் பெருவாரியாக வாழும் இடங்களிலும் சர்ச்சுகள் முன்னாலும் நேரடியாக இந்துக்கள் இந்து மத பிரச்சாரம் செய்யவும், கிறிஸ்துவ மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் கேலி செய்வதற்கும் விமர்சிப்பதற்கும் அங்கிருக்கும் மனிதர்களிடம் பேசி மதம் மாற்றுவதற்கும் உரிமை வேண்டும். அதனை கொடுத்த பின்னால், ஈரோட்டில் என்ன? திருப்பதியில் கூட அவர்கள் மதப்பிரச்சார கூட்டம் நடத்தட்டும். அதுவரை அவர்கள் எங்கே சென்றாலும் இந்துக்கள் உதைத்தால் வாங்கிகொள்ள வேண்டியதுதான்.

    மனித உரிமைகள் பரஸ்பரம் இருக்கவேண்டும். அது ஒருவழிப்பாதை அல்ல. சவுதி அரேபியாவில் இந்துக்கள் மதம் மாற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை கொடுத்த பின்னாலேயே இந்தியாவில் இஸ்லாமை பரப்பவும் மதமாற்றம் செய்யவும் உரிமை கொடுக்கப்படும்.

  33. திரு. RV , நீ

    ங்கள் அவசரமாக ஒரு வேலைக்கு செல்லும்போது , உங்களை குறுக்கிட்டு கடை விரித்தால் அதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? அது எந்த சட்டப் படி சரியாகும்? முகேஷ் அம்பானியை முன் அனுமதி இல்லாமல் இல்லாமல் சந்திக்க முடியுமா? பெரிய மனிதர்களுக்கு எப்படி அவர்களின் நேரம் முக்கியமோ, அப்படியே ஒவ்வொருவருக்கும் அவரவரின் நேரம் முக்கியம்.

    என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிட , என்னுடைய வேளையில் தலையிட, என்னுடைய வழியில் குறுக்கிட எந்த சட்டப்படி அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது?

    அரசாங்க அதிகாரி என்றால் அவர்கள் என்னை கேட்க உரிமை உண்டு . போலீசு வந்து உங்களிடம் மிக முக்கிய விசாரணை நடத்தலாம். வருமான வரித்துறை அதிகாரிகள் என்றால் என் வீட்டுக்கு சோதனைக்கு வரவும், சோதனை முடியும் வரை என்னை வீட்டிலே இருக்க சொல்லவும் சட்டப் படி அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

    பிற மதங்களுக்கு எதிராக வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பிரச்சாரம் செய்பவருக்கு என்னை அணுகி குறுக்கிட எந்த சட்டப் படி அதிகாரம் இருக்கிறது? அவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்றாலும் நீங்களே அந்த அதிகாரத்தை வழங்க சொன்னாலும் சொல்வீர்கள். அதாவது மதவெறி பிரச்சாரம் செய்பவர்தான் அரசாங்க அதிகாரிகளை விட சட்டத்தால் அதிகாரம் அளிக்கப் பட்ட பட்ட பெரிய அதிகாரி என்று வாதிடுவீர்கள் போல இருக்கிறதே.

    எப்படியாவது மதவெறியர்களுக்கு அடுத்தவரை தொல்லை செய்யும் உரிமைகளைப் பெற்றுத்தர, நீங்கள வக்காலத்து வாங்குவது தெரிந்ததே.

  34. அன்புள்ள ஐயா RV அவர்களே,
    பாபு எழுதுகிறார்: // ஐநுறு பேர் உள்ள தெருவில் அந்த ஐநுறு பேருக்கும் பிடிக்காத ஒரு விசயத்தை செய்வது பொது இடையூறாகவே கருதப்படும். அத்துனை பேரும் வேண்டுகோள் விடுத்த பிறகும் ஒரு நாகரிகம் கருதியாவது பிரசங்கத்தை நிறுத்திவிட்டு மரியாதையாக போய் இருக்க வேண்டும். // சட்டம், நியாயம், நாகரீகம் ஆகியவற்றை குழப்பிக் கொள்ளாதீர்கள். First Amendment போல ஒன்று இல்லாவிட்டாலும், இந்தியாவிலும் கருத்து சுதந்திரம் ஓரளவுக்கு இருக்கிறது.

    நீங்கள் தான் குழப்புகிறீர்கள்,சட்டப்படி அடுத்தவரை சீண்டுவது அங்கீகரிக்கப்பட்டதா?.ஒருவருடைய சுதந்திரம் அடுத்தவரை பாதிக்காத வரை மட்டுமே தகுதி உடையது.நீங்கள் சொல்லும் ஓரளவு கருத்து சுதந்திரம் பத்து பேர் சகித்து கொள்ளும் வரை மட்டுமே.அந்த எல்லை தாண்டினால் அது பொது இடையுறு என்று புகார் செய்யலாம். ok உங்கள் சட்டத்தின் எந்த பகுதி ஊரே எதிர்த்தாலும் பிரசங்கம் செய்ய அனுமதி அளிக்கிறது.(அப்படியே சட்டம் உங்கள் திறமையால் திருத்தப்பட்டாலும் திருத்தப்படும்.)சட்டத்தின் படி கொலை செய்யிறோம் நீங்கள் என்ன நியாயப்படி பேசுகிறீகள் என்று நாளை விவாதம் செய்தாலும் செய்வீர்கள்.
    // உங்கள் வீட்டுக்குள் வரவில்லை, வீட்டுக்கு வெளியே தெருவிலே நின்று கொண்டு சிலர் உங்கள் வீட்டில் உள்ளவர்களை பற்றி தரக்குறைவாக பேசினால் அது அவர்களுடைய கருத்து சுதந்திரம் என்று கேட்டுக்கொள்வீர்களா? அவர்களை எதிர்த்து கேட்பீர்களா ? // எதிர்த்து கேட்க எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறதே? கருத்து சுதந்திரம் என்றால் அடுத்தவருக்கு உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை பேசவும் சுதந்திரம் இருக்கிறது என்று பொருள். உங்களுக்கு கேட்க கட்டாயம் இல்லை; திருப்பி பேசவும் சுதந்திரம் இருக்கிறது!

    அதைத்தான் முதலில் செய்திருக்கிறார்கள்,எல்லை மீறியபின்தான்
    இவை நடந்திருக்கிறது.உங்கள் கருத்து எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கொண்டு நல்லவன் மாதிரியே இருக்க வேண்டும் என்பது போல் உள்ளது அல்லாது காவல் துறையில் புகார் செய்ய போனால்,சம்பந்தப்பட்ட நபரை காவல் துறையில் ஒப்படைக்கப்போனால் உடனே ஆள் அழைத்து வந்து அடிதடியில் இறங்குவீர்கள்.நான் கேட்கிறேன் ஏன் நிறைய பேருக்கு பிடிக்காத விசயத்தை அவர்கள் வேண்டாம் என்று சொன்னபிறகும் அவர்கள் இடத்திலேயே பேசி வெறுப்பேத்தி ,பதிலுக்கு அவர்களும் அவர்கள் எதிர்கருத்தை பேசி வாக்கு வாதம் முற்றி பின்னர் ஆளை வைத்து நீங்கள் அடிதடி செய்ய வேண்டும்.இதில் பிரச்னை யாரிடம் இருந்து ஆரம்பிக்கிறது.குழப்பத்திற்கு யார் காரணம்?.கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கலகம் அல்லவா ஏற்பட்டிருக்கிறது.நீங்கள் ஏன் இந்த அளவு பிரச்னையை வளர்க்க வேண்டும்.அடுத்தவர்கள் அமைதியாக வாழும் பகுதியில் நீங்களே சென்று ஆரம்பித்து விட்டு அவர்கள் நியாயமான முறையில் சொல்லியும் கேட்க்காமல் பிரச்சினையை வளர்த்து விட்டு இன்னும் உங்களுக்கு origin of problem எங்கே என்று உணர முடியவில்லையா?

    // நாமும் இனி தேவாலயங்களின் வாசலிலும்,கிறித்தவ சகோதரர்களின் வீடுகளுக்கும் போய்,…// உங்கள் கருத்து சுதந்திரம்!

    என் கருத்து சுதந்திரம் என்று நான் செய்தால் சர்ச்சும்,நீங்களும்,நம் இந்திய அரசாங்கமும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியாது என்றால்,sorry நான் இதற்குமேல் ஒரு ரொம்ப நல்லவரிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.தவறு என்று தெரிந்தே கொஞ்சம் கூட உணராமல் என்னமாய் விளக்கம் கொடுக்கிறீர்கள்.முடிந்தால் திருச்சி ஐயாவுடைய இந்த கேள்வியையாவது உணர முடியுமா என்று பாருங்கள் .
    //தெரு எல்லோருக்கும் பொதுவானதுதான் அப்படிப் பார்த்தால் விநாயகர் வூர்வலம் நடத்த ஏன் அனுமதி கொடுப்பதில்லை? மதம் என்பது சென்சிடிவான விடயம். அவரவர் அவரவர் மதக் கொள்கைகளைப் பரப்பினால் சரி. அனால் பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புக் கொள்கைகளைப் பரப்பி சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கிறார்கள்//.
    மனதிலே நியாயம் இல்லாத போது நீங்கள் செய்வதுதான் நியாயம் என்று கற்பித்துக்கொண்டு வாதத்தில் எல்லாவற்றையும் நீங்கள் அரசாங்க அதிகார துஷ்பிரயோகத்தாலும்,பண பலத்தாலும் வென்றாலும் வெற்றிக்கனி கிட்டும் ஆனால் அது வேப்பங்கனியாகவே கிட்டும்.
    //ஏதோ தேவர் பேரவையோ நாடார் சங்கமோ இங்கே குறிப்பிடப்பட்டன என்று நினைக்கிறேன். அவற்றின் உணர்ச்சிகள் கொஞ்சம் இந்த தலித்கள் மீதும் திரும்பட்டும்! மதமாற்றத்தை தடுப்பதைவிட ஆயிரம் பங்கு முக்கியமான விஷயம் இந்த சமூக அநியாயங்களைத் தடுப்பது!//
    நிச்சயம் சமுக அநியாயங்களை தடுப்பது மிக முக்கிய இன்றியமையாத விஷயம். அநியாயங்கள் யார்மீது நடந்தாலும் அவர்களுக்காக போராடி அவர்களுக்கு உரிய உரிமையை பெற்றுத்தர போராட வேண்டியது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருடைய கடமை. இதை எல்லோரும் ஏற்க்க கூடிய ஒன்றே ,அது போல் மதமாற்றத்தை தடுப்பதும் அவசியமே.
    பிறந்த எல்லா உயிர்க்கும் சம உரிமையும்,சுயகௌரவத்தை பாதுகாக்க வேண்டியதும் மிக அவசியம்.இங்கே நடந்தது சம உரிமையை, சொந்த உணர்வுகளுக்கு ஏற்ப்பட்ட அவமானத்தை (இந்துக்களையும் இந்து வழிபாட்டையும் இழிவாக பேசியது) எதிர்த்து நியாயத்தை நிலைநாட்ட போராடிய ஒரு குழுவுக்கும்,அவர்களை அசிங்கமாக பேசி அவர்களுக்கு எதிராக வம்புக்கிழுத்த ஒரு குழுவுக்கும் ஏற்பட்ட மோதல். உங்கள் தாள் பணிந்து கேட்கிறேன் தயவு செய்து இதை திசை திருப்ப முயற்சிக்காதிர்கள்.
    களிமிகு கணபதி எழதுகிறார்: // முடியாது அப்படித்தான் பேசுவேன் என்று ஒருவர் உங்கள் பின்னாலேயே வந்து அந்த விஷயத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசினால், அது எனக்கு வன்முறையாகத்தான் தெரிகிறது.// ஆனால் சட்டம் அப்படி நினைக்காது என்பதுதான் பிரச்சினையே.
    சட்டம் கொலை செய்வதை அனுமதித்தால் மதத்தை பரப்புவதற்காக அதை செய்வதற்கும் உங்களுக்கு கஷ்டம் இல்லை அப்படித்தானே?

    // வீதிக்குள் நுழையாதே என்று சொல்லவில்லை. வீதிக்குள் நுழைந்து மதமாற்றப் பிரச்சாரம் செய்யாதே என்றுதான் சொல்லப்பட்டது. // வீதி உங்கள் ப்ரைவேட் ப்ராப்பர்டியாக இருந்தால் தாரளமாக அப்படி சொல்லலாம். பொதுத் தெருவில் எச்சில் துப்புவதைக் கூட உங்களால் நிறுத்த முடியாது என்பதை நினைவு கொள்ளுங்கள்.

    உச்சகட்ட அராஜகம் .உன்னால் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்வது நேரடியாகத் தெரிகிறது.

    திருச்சிக்காரன் எழுதுகிறார்: // பிரச்சாரம் செய்ய உரிமை உண்டுதான், மைக் செட்டு போட்டு தெருவை அலற வைக்க உரிமை இருக்கிறதா? // அது அந்த லோகல் சட்டத்தை, போலீசை, நிர்வாகத்தை பொறுத்தது. அனுமதி வாங்கி செய்தால் உரிமை இருக்கத்தான் செய்கிறது.
    //அதை விட்டு என்னை அழைத்து பிரச்சாரத்தை ஆரம்பிக்க இன்னொருவருக்கு என்ன உரிமை இருக்கிறது?// சட்டம், நியாயம், நாகரீகம் எல்லாம் வேறு வேறு…

    ஆக சட்டம் அனுமதிப்பதால் எதை வேண்டுமாலும் செய்ய தயார் என்பது தெளிவாக தெரிகிறது so அன்பு வழியில்,சமாதான வழியில் நியாய வழியில் இல்லை உங்கள் சமாதான பிரசாரம்.
    பின்னர் ஏன் அன்பு வழி,சத்திய வழி,தர்ம வழி.ஒரே வழி என்று உங்கள் மதத்தை கூறுகிறீர்கள்?.நீங்கள் பேசும் ஒரே வழி என்னவோ சட்ட வழி அராஜக வழி.
    இதற்குமேல் என்னால் விளக்க முடியாது.

  35. அழுதபிள்ளைதான் பால்குடிக்கும் என்பதை மற்றவர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி ஒரு கோட்டை போல மற்றவர்கள் உள்ளே நுழைய முடியாதது போல எல்லா ஊர்களிலும் இருக்கிறது. அதுவும் இந்தியாவின் ஒரு பகுதிதான் அங்கே சென்று இந்து மத பிரச்சாரம் செய்யலாம், அதிலும் சென்று கிறிஸ்துவ எழுப்புதல் கூட்டங்கள் நடத்தலாம், வினாயகர் ஊர்வலம் நடத்தலாம் என்று வரட்டும். பிறகு கிறிஸ்துவ பிரச்சாரத்தை இந்து பகுதிகளில் வைத்துகொள்ளலாம். கிறிஸ்துவ எழுப்புதல் கூட்டங்களையும் வினாயகர் ஊர்வலங்களையும் முஸ்லீம் பகுதிகளில் தெருக்களில் நடத்த ஏன் போலீஸ் தடுக்கிறது? அப்படி போலீஸ் தடுத்தால், கிறிஸ்துவ மதப்பிரச்சாரத்தையும் இஸ்லாமிய மதப்பிரச்சாரத்தையும் இந்து பகுதிகளில் நடத்த அதே போலீஸ் தடுக்கத்தானே வேண்டும்?

  36. சீனு 6 August 2010 at 5:06 pm
    // பன்னி திருமாவை பிடித்துக் கொடுத்தால் தேவலை …//

    இப்படியெல்லாம் கூட எழுத்துப்பிழை வருமா…சார்..?

  37. நண்பர்களே,உலகமுழுதும் வியாபித்திருக்கும் ஒரு மார்க்கத்தை இத்தனை சிறுமைப்படுத்த உங்களால் மட்டுமே முடியும்;எல்லாவற்றுக்கும் நன்றி.

    Psa 50:7 என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.

    Psa 50:8 உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

    Psa 50:9 உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.

    Psa 50:10 சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

    Psa 50:11 மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

    Psa 50:12 நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

    Psa 50:13 நான் எருதுகளின் மாம்சம்புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?

    Psa 50:14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;

    Psa 50:15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

  38. மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்ல வேண்டி இருக்கிறது. எனக்கு அவ்வளவு பொறுமை இல்லை. 🙂 கடைசி முறையாக:

    தங்கமணி எழுதுகிறார்: // இந்தியாவில் நீங்கள் முஸ்லீம் தெருக்கள் வழியே வினாயகர் ஊர்வலம்… // நீங்கள் ப்ராக்டிகல் நிலை பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் சொல்வதெல்லாம் சரியே. அதே போல ப்ராக்டிகல் நிலை பற்றி சில தலித் அமைப்புகளும் யோசிக்கலாம். பல நூறாண்டுகளாக கொடுமைகள் நடக்கின்றன, நமக்கு ஆதரவு எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வோம், உருட்டுக்கட்டை இல்லாவிட்டால் நியாயம் கிடைக்காது என்ற முடிவுக்கு வரலாம். அப்படிப்பட்ட முடிவுக்கு வர தலித் அமைப்புகளுக்கு உங்களை விட அநேக காரணங்கள் இருக்கின்றன.

    திருச்சிக்காரன் எழுதுகிறார்: // என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிட , என்னுடைய வேளையில் தலையிட, என்னுடைய வழியில் குறுக்கிட எந்த சட்டப்படி அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது?…// என்ன செய்யலாம் இருக்கத்தான் செய்கிறது. வீதியில் பேச அவர்களுக்கும் உரிமை இருக்கிறதே? என்னிடம் பேசாதே, என் வீட்டுக்குள் வராதே என்று சொல்லும் உரிமைதான் நமக்கு சட்டப்படி இருக்கிறது. வீதியில் பிரசாரத்தை விடுங்கள், உங்கள் செல் ஃபோனில் கூப்பிட்டு உங்களுக்கு வேண்டாத கடனை கொடுங்கள் என்று சொல்லவும் உரிமை இருக்கிறதே! அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு தெரிந்திருக்கும் – காஸ்ட்கோ பக்கம் போனால் யாராவது வந்து ஆம்வே என்பார்கள், அவர்களை அங்கே வரவே கூடாது என்று சொல்லும் அதிகாரம் சட்டப்படி இல்லையே!

    பாபு எழதுகிறார்: // ஐநுறு பேர் உள்ள தெருவில் அந்த ஐநுறு பேருக்கும் பிடிக்காத ஒரு விசயத்தை செய்வது பொது இடையூறாகவே கருதப்படும்… // அந்த தெரு அந்த ஐநூறு பேருக்கு மட்டும் சொந்தமானது இல்லை, இந்தியாவில் இருக்கும் 120 கோடி பேருக்கும் சொந்தமானது என்பதுதான் விஷயம். ஐநூறு பேருக்கும் பிடிக்காத விஷயத்தை அங்கே பேசக் கூடாது என்பது நாகரீகம் மட்டுமே; ஐநூறு பேருக்கும் பிடிக்காத ஒரு கட்சி கூட்டம் அங்கே நடக்கலாமா? ஒரு நூறு வருஷம் முன்னால் போவோம்; அன்றைக்கு அந்த ஐநூறு பேரும் ஜாதி சரி என்று நினைத்திருப்பார்கள்; பெண் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்; ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்திருப்பார்கள். அதே ஐநூறு பேர் தெருவில் “ஜாதி தவறு, விடுதலை வேண்டும், ஆணும் பெண்ணும் சமம்” என்று ஒருவர் பேசலாமா?

    உங்களுக்கு சட்டம் பிடிக்கவில்லை என்றால் சட்டத்தை மாற்றலாம். இல்லை எனக்கு ப்ராக்டிகலாக சட்டம் போதவில்லை என்று கோதாவில் இறங்கலாம். அப்படி சட்டம் போதவில்லை என்ற முடிவுக்கு வேறு யாராவது வந்தால் அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லையே என்று கூப்பாடு போடுவதில் உள்ள முரண்பாட்டை உணர்ந்துகொள்ளுங்கள்!

  39. எத்தனை முறை தெளிவு படுத்தினாலும் தான் சொல்ல வந்ததை திரும்பி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சில நண்பர்கள்.

    நான் வீட்டிலே இருந்தாலும், தெருவிலே இருந்தாலும் என்னுடைய நேரத்தில், அலுவலில் குறுக்கிட இன்னொருவருக்கு சட்டப் படி என்ன உரிமை இருக்கிறது.

    வீதியில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றால் அவர்கள என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். நான் செல்லும் வழியில் குறுக்கிட்டு, என்னிடம் பேசி, என்னைக் கட்டாயப் படுத்தி என் நேரத்தை, அலுவலைக் கெடுக்க சட்டப் படி யாருக்கும் உரிமை இல்லை.

    அமெரிக்காவில் செய்வதை வைத்துக் கொண்டு இங்கே வந்து பேசக் கூடாது.

  40. RV அவர்கள் மிக அருமையாக நடுநிலையாக யோசித்து எழுதுகிறார்; இதுபோன்ற சிந்தனை வந்தாலே மத நல்லிணக்கம் வரும்;
    தீவிர சித்தாந்தம் எங்கிருந்தாலும் அது எங்கிருந்தாலும் அது வேரறுக்கப்படவேண்டும்;

    பட்டயத்துக்கு முன் நிற்பவனைவிட பட்டயத்தைப் பிடித்திருப்பவனுக்கே அதிக பொறுமை வேண்டும்;

    நாங்கள் யாரோ எவரோ அல்ல,உங்களில் ஒரு பாகம் என்பதை தயவுசெய்து சிந்தித்து உணருங்கள்;

    உங்கள் கையோ காலோ கண்ணோ தொல்லை கொடுத்தால் அதனை குணப்படுத்துவீர்களல்லவா அதுபோல நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருத்தல் வேண்டும்;

    இதில் சகிப்புத்தன்மை, பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் போன்ற எண்ணங்கள் தேவையற்றது;

    ஒரு சந்தையிலுள்ள ஒவ்வொரு கடைக்கும் ஒரு நோக்கமும் அவசியமும் உண்டு; ஒரு சமூகத்தில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பும் தேவையும் உண்டு; இப்படியே தெய்வத்தைக் குறித்த பார்வையும் அதனை வெளிப்படுத்தும் முறையும் ஒவ்வொரு கூட்டத்துக்கும் மாறுவதுண்டு;விளம்பரப்படுத்துவதும் தான் விரும்புவதை உயர்த்திப் பேசுவது மனித இயல்பு.

  41. //Psa 50:10 சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

    Psa 50:11 மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
    //

    பாவம் அவருக்கு செடி கொடிக்கும் உயிர் இருக்குன்னு தெரியாது – நம்ம போஸ் சொன்னதுக்கு அப்புறம் தான் அவுகளுக்கு தெரிய வந்துது

    என்ன பண்றது ஞானம் போறாது – இந்த கர்மம் தான் உலகம் பூர வியாபித்து இருக்காக்கும் – இது பூர இஸ்ரவேலின் மிருகக் கூட்டத்துக்க் சொனது தானே அதனால் தான் ஒரே காட்டு மிருகம் example ஆ இருக்கு – இதுக்க தான் நாங்க பஞ்ச தந்திர கதை வெச்சிருக்கோம்

  42. திரு RV அவர்களே

    எவரது சுதந்திரமும் சட்டத்தால் மட்டும் நிர்ணயிக்கப் படுவதில்லை. சில கோட்பாடுகளின் அடிப்படையிலேயே சுதந்திரமும் என் சட்டமும் கூட அமைகின்றன.

    ஒருவரது சுதந்திரம் கட்டுப்பாட்டுக்கு உட்படாததாக இருக்கவேண்டும் என்றாலும், அதற்கும் ஒரு வரைமுறை உள்ளது. அவ்வரைமுறையின் அடிப்படியில்தான் எழுதப்பட்ட சட்டம் கூட அமல் படுத்தப் படுகிறது. (Even law is interpreted and implemented only on the basis of such principles)

    எவரது சுதந்திரமும் அடுத்தவரது சுதந்திரத்தைச் கிரண்டாதவரை செயல் பட அனுமதிக்கப் படும். அடுத்தவர் சுதந்திரத்தில் அது குறுக்கிடும்போது அதன் எல்லை வரைவு செய்யப் படுகிறது.

    மதத்தைபின்பற்ற, வளர்க்க உள்ள உரிமை அடுத்தவர் மதத்தைச்சுரண்ட ஆரம்பிக்கப் படும்போது முடிவடைகிறது.

    இங்கே உள்ள ஒரு உதாரணம் உலகெங்கிலும் சுதந்திரத்துக்கு ஒரு பிரபலமான சொல்லாக்கம் ஆகும்.

    Once a person not a supporter of Sir Winston Churchill in a punishing mood stood very close to Churchill, he stretched out his arms outward forcefully such that his stretched arm hit Churchill on the nose.
    Hurt by this act, Churchill tapped the shoulder of that gentleman and said “See, What you have done”.
    The gentleman acting as if he did not know what had happened said, “Oh Sir, the Champion of freedom, is this freedom that you have been advocating were your fellow can’t even stretch his arms freely?”
    Churchill thundered but politely “Yes You are a free man living in a free country unconditionally, but, dear, your freedom ends at the point where my nose begins.”

    எனது மதத்தின் எல்லைக்குள் நுழையும்போது கிறித்துவத்தின் சுதந்திர எல்லைகள் முடிவுறுகின்றன. அப்போது நான் அதை எதிர்க்கவும் தடுக்கவும் முழு அளவிலான (unfettered) உரிமை பெற்றவனாகிறேன். இது நடப்பது எனது கோவிலிலா, அவரது கோவிலிலா அல்லது நடுத்தெருவிலா என்பதெல்லாம் வரைமுறை அல்ல. இங்கே வரைமுறைக்கு நாம் கொள்ள வேண்டியது எனது நம்பிக்கை, அவரது நம்பிக்கை என்ற எல்லைகள்தாம்.

    எல்லை என்பது பரிணாமம் கொண்டதாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. It need not be seen materially. The border need not be visual. It can be at the invisible levels also. Faith cannot be seen but it also has its borders. When the person of other faith intrudes my faith, he violates my freedom. He tresspasses my faith and this is not what the Constitution guarantees. Tresspassers will asways be repelled by the rightful owner. That is what is now happening as the grass root level. When this catches up at the National level, Law will accept the reality and the Courts will say “Yes, intrusion of the mind is as bad as intrusion of the body” Till then, the debate will go on.

  43. திருச்சிக்காரன்,
    /எப்படியாவது மதவெறியர்களுக்கு அடுத்தவரை தொல்லை செய்யும் உரிமைகளைப் பெற்றுத்தர, நீங்கள வக்காலத்து வாங்குவது தெரிந்ததே.//

    RV சொன்னது ப்ராக்டிகலாக என்ன நடக்கிறதோ அதை. அடுத்தவர் மீது அபாண்டப் பழிபோடுதலை நிறுத்துங்கள்.

  44. Article 25 {Freedom of conscience and free profession, practice and propagation of religion}
    1. Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion.
    2. Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law –
    a. regulating or restricting any economic, financial, political or other secular activity which may be associated with religious practice;
    b. Providing for social welfare and reform or the throwing open of Hindu reli- gious institutions of a public character to all classes and sections of Hindus.
    [Explanation I: The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion.]
    [Explanation II: In sub-Clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly.]
    Article 26 (Freedom to manage religious affairs)
    Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right –
    a. to establish and maintain institutions for religious and charitable purposes;
    b. to manage its own affairs in matters of religion;
    c. to own and acquire movable and immovable property; and
    d. to administer such property in accordance with law.
    (Subject to public order, morality) மேலே சொன்ன நமது சட்டப்படி பொதுஜனங்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாதிக்கப்டும் பொழுதும் அவர்களது பண்பாடு ஒற்றுமை சீர்குலையும் என்னும் பொழுது மாநில அரசாங்கம் அதை தடைசெய்யலாம். (Practice) – நடத்தை – சுதந்திரமாக பழகிக்கொள்ளலாம். (Profess) – தொழில் – சுதந்திரமாக தங்கள் மத போதனைகளை வேண்டும் என்பவர்களுக்கு கூறலாம். (Profess ) இதற்க்கு தமிழ் வர்தமானன் அகராதியில் ” போலியாக நட – இல்லாததை உள்ளதாய் பாசாங்கு செய் என்ற அர்த்தமும் உண்டு. (Propagate) – பரப்புதல் இனபெருக்கம் செய்தல். மேலே சொன்ன மத பழகுதல் போதித்தல் பரப்புதல் எல்லாம் பொதுஜன ஒற்றுமையையும் பண்பாட்டையும் சீர்குலைக்ககூடாது. மத பரப்புதலில் என்று ஈடுபட்டு இனபெருக்கம் செய்ய ஆரபித்தார்களோ அன்றிலிருந்து இன்று வரை பொதுஜன ஒற்றுமையும் பண்பாடும் சீர்குலைந்து வந்திருகின்றது என்பது குருடனுக்கும் தெரியும். இப்பொழுதும் சில மாநிலங்களில் மத மாற்று தடை சட்டங்கள் அழூலில் உள்ளன இருந்தும் அவர்களால் முழுபதுமாமக கட்டுபடுத்த முடியவில்லை. எனவே இந்திய சட்டம் 25 திருத்தப்படவேண்டும். இந்த (Propagate) என்ற வார்தையையே எடத்துவிடுவது இந்திய இறையாண்மைக்கு அவசியம் ஆகும்.
    சட்டம் – 26 இதைப்போல் மத ஸ்தாபனங்களையும் வழிபாட்டு இடங்களையும் (கோவில்கள் சர்ச் மசூதி) இவைகளை மேலே சொன்ன இடையூருகள் ஏற்ப்படும் என்றால் மாநில அரசாங்கம் அவற்றை தங்கள் கட்டுபாடில் கொண்டுவர இந்திய சட்டத்தில் இடம் இருக்கிறது. இந்த சட்டத்தை இன்று இந்தியாவில் பல மாநிலங்களில் அமுல் படுத்தி இந்து கோவிலகளிலும் இந்து மத ஸ்தாபனங்களிலும் மட்டும் தான் தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது. இதற்க்கு என்ன அர்தம் இந்துக்களின் வழிபாட்டு தளங்களால் மட்டும் தான் பொதுஜன ஒற்றுமை குலையும் பண்பாடு நலிவுரும் செய்கிறது என்பதாகும். மற்றமதத்தவர்கள் எல்லாம் அப்பழுக்கற்றவர்கள். அவர்களது வழிபாடு இடங்களாலும் மத ஸ்தாபனங்களாலும் மட்டுமே ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும் என்று செக்யூலரிஸம் என்ற பூவை இந்துக்கள் காதில் சுற்றி வைத்திருக்கிறார்கள். இந்த இந்திய சட்டம் 26ல் மாநிலத்திற்க்கு அளித்துள்ள தனிசட்ட சலுகையையும் நீக்கவேண்டும்
    மேலும் இந்த மாநில தனிசட்டங்கள் (FUNDAMENTAL DUTIES UNDER ARTICLE 51(A) – It shall be the duty of every citizen of India ) கூறியுள்ள பல சரத்துக்களுக்கு முரணாக உள்ளது.
    இப்படிப்பட்ட முரண்பாடான சட்டங்கள் இந்தியாவை தவிற வேறு எந்த நாட்டிலும் கிடையாது.

  45. நிருபரின் செயலும், போட்டோக்களும் அருமை. வாழ்த்துக்கள்.

  46. @ RV
    நீங்க புரிஞ்சுக்கலை. நான் மதங்களை மறுக்கவோ சிறுமைப் படுத்திச் சொல்லவோ விரும்பவில்லை. ஆனால் உங்களுக்கு இங்குள்ள நிலைமை புரியலை.
    சாதிக் கட்டுபாடுகளை ஒழிக்க, வறுமைப் போராட்டத்தைக் களைய எலோரும் குரல் கொடுக்கலாம். தன்னால் ஆன உதவிகள் செய்யலாம்.
    ஆனால் கிறிஸ்தவ அமைப்புகள் செய்வது அது இல்லை என்பதை நேரடி அனுபவங்களோடு சொல்ல முடியும். மதம் மாறினால் அல்லது மாறுவார்கள் என்று தெரிந்தால் மட்டுமே, அல்லது அதை நோக்கியே அவர்கள் செய்யும் உதவிகள் இருக்கும்.
    இது அப்பட்டமான உண்மை. இப்போ அமைப்புகள் மட்டும் இல்லை தனி மனிதர்களும் ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை, அஞ்சாம் கிளாஸ் படித்தவன் முதல்IIT படித்தவன் முதல் ( இந்தியர்களைத் தான் சொல்லுகிறேன்) இந்த நோக்கத்திலேயே அணுகத் துவங்கி இருக்கிறார்கள்.
    நீங்கள் கோவிலுக்கு செல்கிறீர்கள். அங்கே என்ன செய்வீர்கள்? தெரிந்தா மாதிரி சாமி கும்பிட்டு திரும்புவீர்கள். ஒரு ஆன்மீக கச்சேரிக்குச் செல்கிறீர்கள். அங்கே என்ன செய்வார்கள் ? ஏதாவது ஒரு புராணம் அல்லது ஆன்மிக விளக்கம் கொடுத்து சில பாடல்கள் பாடுவார்கள்.
    ஆனால் இவர்கள் மட்டும் ஜெபித்தலில் இந்து மதப் பழித்தலையும் சேர்த்தே செய்கிறார்கள்.
    இங்கே இதெல்லாம் சட்டத்தில் வராது. காரணம் ரொம்ப சிம்பிள்.

    மத மாற்றத்தில் அறியாமையில் உடமைகளை ஏமாறுபவர்களும் உண்டு.

    இந்தக் கருத்துக்களைக் கூறும் நானோ, மற்றவர்களோ கண்டிப்பாக அக்கம்பக்கம் மற்றும் நட்பு வட்டாரங்களில் எந்த வித்தியாசமோ பகைமையோ பாராட்டுவது இல்லை என்பது மட்டும் அல்ல வித்யாசம் இல்லாமல் உதவுபவர்களும் தான். மற்றவர்களைப் பற்றி உனக்கு எப்படி தெரியும் என்றால் இதெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியதே. இந்து மதத்தின் அடிப்படையே அது தான்.
    தயவு செய்து நிலைமை புரியாது வக்காலத்து வாங்க வேண்டாம்.

  47. சில்லி சாம்

    //
    // பன்னி திருமாவை பிடித்துக் கொடுத்தால் தேவலை …//

    இப்படியெல்லாம் கூட எழுத்துப்பிழை வருமா…சார்..?
    //

    என்று இல்லை ஸ்டிங் ஆபரேஷன் பன்னி (செய்து) என்று தான் சீனு சொன்னது உள்ளது – இந்த மோசமான செயல் எதற்கு? போச்சு பொய் சொல்லிட்டீங்க சாத்தான் உங்கள தொம்சம் பண்ணப் போறான். பவ இன்னிக்கே மன்னிப்பு கேட்டுட்டு எஸ்கேப் ஆயிருங்க

  48. @ RV

    தலித்துகள் அக்காலத்திலேயே உருட்டுக் கட்டைகளைத் தூக்காமல் போனதுதான் இக்காலத்துத் தலித்துகள், தலித்துகளாக இருப்பதற்குக் காரணம்.

    சுய-சுதந்திரத்திற்கு பாதிப்பு வரும்போது உருட்டுக்கட்டை தூக்குவதுதான் பலன் தரும் என்றால் தூக்குவது தப்பே இல்லை.

  49. ர.வி அவர்களே

    நீங்கள் வழக்கரிங்கரா என்பது தெரியாது

    காமன் லா படி யார் வேண்டுமானுலும் இன்னொருவரை சிறைப் படுத்தலாம் – இந்த இரண்டு பேரும் சந்தேகத்திர்க்கு இடம் கொடுக்கும் படி செயல் பட்டார்கள் அதனால் அவர்களை நாங்கள் பிடித்து வைத்தோம் என்று கூர சட்டம் இடம் தருகிறது – இல்லை என்றால் திருடனை உங்களால் பிடித்து வைக்கவே முடியாது – போலீஸ் வரும் பிடிப்பார்கள் என்றால் அவன் விமானாம் ஏறி காங்கோ பொய் விடுவான்.

    காமன் லா படி என்னை வாயால் (வாக்கால்) இம்சை செய்தான் என்று சொல்லியும் வழுக்கு போடலாம் – என்ன இருவது வருஷம் வைதவிலேயே இழுக்கும் என்பதால் மட்டுமே இதை யாரும் செய்வதில்லை

  50. @Chilsam
    //உங்கள் கையோ காலோ கண்ணோ தொல்லை கொடுத்தால் அதனை குணப்படுத்துவீர்களல்லவா அதுபோல நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருத்தல் வேண்டும்;//

    தொல்லை கொடுப்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

    மத நல்லிணக்கத்தை எல்லோரும் விரும்புவார்கள். அது செயல்படாமல் தடுப்பதே இந்த மத மாற்ற உள்நோக்கத்தோடு செய்யப் படும் உதவிகள்.
    வெளியில் நல்லினக்கணம் ஒரு பக்கம் இருக்கட்டும். உறவுகளே உடைந்து பல குடும்பங்கள் இன்று தவிக்கின்றன. பெற்றோர் பிள்ளைகள் உறவு கூட பாதிக்கப் பட்டு விடுகிறது. காரணம் குடும்பத்தில் சிலர் மதம் மாற்றப் பட்டு விடுவதால் ( வேறு காரணங்களுக்கு உறவுகள் உடைவதில்லையா என்று திசை மாற்ற முயற்சி செய்ய வேண்டாம். subject அது அல்ல). மதம் மாறி விடுதல் கூட பிரச்னை இல்லை. மாறிய பின் செய்யும் பழித்தல்கள், கூடவே மதம் மாறச் சொல்லி கட்டாயப் படுத்துதல், மாறாதவரின் உணர்வுக்கு மரியாதை கொடுக்காது செயல்படுதல்

    இதை உங்கள் அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இங்கே நான் வைக்கும் விண்ணப்பம்

  51. //நாங்கள் யாரோ எவரோ அல்ல,உங்களில் ஒரு பாகம் என்பதை தயவுசெய்து சிந்தித்து உணருங்கள்// – சில்லி சாம்.

    அன்பரே, எங்களில் ஒரு பாகமாக இருந்து கொண்டே எங்கள் கண்ணைக் குத்திக் கொண்டிருப்பது ஏனோ???. வெளிநாட்டான் இங்கே இருந்த போதை விட இப்போது உங்களைப் போன்றோர் மத வியாபாரத்தில் வெறிபிடித்து அலைவது ஏன்???. இதனால் நம் நாட்டிற்கு விளைந்த நன்மை என்ன???இதை அன்பர் ஏன் சிந்தித்து உணர மறந்தீர்??? மதத்தின் பெயரால் மூளை மழுங்கி, நமது தேசபிதா காந்தியை அவமதித்து, அவர் சொன்னதாக ஒரு கருத்தை நீங்கள் பிராடு விட்டது ஏன்???? – பிராடு விட்டதற்காக இங்குள்ள வாசகர்களிடம் நீங்கள் மன்னிப்பு கோரவேண்டும். இல்லையென்றால் நீங்கள் சொல்வது எல்லாம் பிராடாகவே கருதப்படும்.
    சில்லி சாம் >>>>>>>> பிராடு சாம்.

    வாழ்க பாரதம்.

    அன்புடன்,
    ஆரோக்யசாமி

  52. அந்த தெரு நூற்றி இருபது கோடி மக்களுக்கும் உரியது!
    மண்ணாங்கட்டி- இங்கு இருக்கும் ஐஸ் ஹவுஸ் மசூதி வாசலில் ஒரு ஆயிரம் ஹிந்துக்கள் ஊர்வலம் போக முடியவில்லை.இந்த லட்சணத்தில் இது வேறு
    காஷ்மீரில் முஸ்லிம் சட்டம் ஷரியா.
    அங்கு மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் நிலம் ,வீடு வாங்க முடியாது செட்டில் ஆக முடியாது

    இந்த மண்ணின் மைந்தர்களான ,நம் நாட்டின் மீது் உயிரையே வைத்திருக்கும் மோடி அவர்களும், தொகாடியா அவர்களும் ஒரிசாவுக்கோ ,பீகாருக்கோ வரக் கூடாதாம்!
    ஆனால் இத்தாலிய சோனியா இந்தியா பூரா எங்கு வேண்டுமானாலும் போய் வாய்க்கு வந்த பொய்யை சொல்லலாம் .யாரையும் திட்டலாம் .
    நீங்களெல்லாம் எங்கு இருக்கிறீர்கள்?

  53. கிறிஸ்தவர்கள் எவ்வள்ளவு மத வெறியும் குள்ளநரித்தனமும் கொண்டவர்கள் என்பது சென்ற நாடாளு மன்ற தேர்தலின் போது தெரிந்தது.
    கன்யாகுமரி தொகுதியில் மூன்று கிறிஸ்தவர்கள் மூன்று கட்சிகளின் சார்பான நின்றனர்.
    கிறிஸ்தவர்களின் ஒட்டு அவர்களுக்குள் பிரியும் ,அதனால் தாங்கள் வெற்றி பெற்று விடலாம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் நினைத்தனர்
    அந்தோ! நடந்தது என்ன?- இரண்டு கிறிஸ்தவர்கள் டெபொசிட் இழந்தனர்.
    மூன்றாமவர் வெற்றி பெற்றார்.
    அப்படியென்றால் எவ்வளவு அன்டர்கிரவுண்டு வேலை நடந்திருக்கிறது?

    இவர்கள் தொகை அதிகரித்தால் ஹிந்துக்களை வாழ விடுவார்களா?

  54. கீழ்க்கண்ட நிரலியைப் பாருங்கள்:

    https://www.youtube.com/watch?v=_CS6beERvSI

    இதிலே இளைய ராஜாவின் திருவாசகப் பாடலுக்கு, ஏசு கிறிஸ்துவின் திரைப்படத்தில் சில காட்சிகளை இணைத்து எந்த அளவுக்கு புரட்டு செய்திருக்கிறார்கள்? இதற்காகத்தான் “அருள்தந்தை” ஜகத் காஸ்பர் இளையராஜாவின் திருவாசக “symphony” க்கு அத்தனை ஒட்டு ஒட்டிக் கொண்டார் என்பது தெரிகிறது.

    கீழ்க்கண்ட நிரலியைப் பாருங்கள்:

    https://www.youtube.com/watch?v=lssaVu_eyso&feature=related

    பவிஷ்ய புரானத்தைனைச் சிதைத்து ஏசுவின் வரவை வேதங்கள் முன்னரே கூறின என்று ஒரு புரட்டு இதில் வருகிறது.

    கீழ்க்கண்ட நிரலியைப் பாருங்கள்:

    https://www.youtube.com/watch?v=9DXCZFRsyl8&NR=1
    https://www.youtube.com/watch?v=T340DUSq9SY&feature=related

    இது BBC யின் documentary! ஏசு காஷ்மீருக்கு வந்தாராம் ! ஆராய்ச்சி, செய்திப்படம் என்றெல்லாம் எத்தனை புரட்டுக்கள். புரட்டுத்தான் கிறிஸ்தவம் என்கிற அளவுக்குப் போய்விட்டது. காஷ்மீர் ஏற்கனவே இஸ்லாமியர்கள் ஆதிக்கத்தில், இப்போது அதற்கு கிறிஸ்தவர்களும் கோர ஆரம்பிப்பார்கள். இன்னொரு west bank அரசியல்.

    இதையும் பாருங்கள்:

    https://www.youtube.com/watch?v=XpfJTelSK0c&feature=related
    காஷ்மீரில் எத்தனை குழப்பமோ?

    https://www.youtube.com/watch?v=LcQW5Vn5fCs&feature=related

    பத்தும் பத்தாதற்கு இஸ்லாமியர்கள் கூட வேதத்தில் விளையாட / வினையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

    புரட்டு செய்வதுதான் மத சுதந்திரமா?

    இதே குரான் வைத்து இப்படி மற்ற மதத்தினர் பிரச்சாரம் செய்தால் வெட்டிவிடுவார்கள் இல்லையா? fatwa?

  55. இங்கு கிறிஸ்தவர்களைப் பற்றித்தான் பேச்சு
    தலித்து எங்கிருந்து வந்தனர்
    ஆகவே சும்மா தலித்துக்கு முதலைக் கண்ணீர் வடிப்பவர் கிறிஸ்தவர் என்பது நிரூபணம் ஆகிறது
    அவர் தனது கிறிஸ்தவப் பெயரை ( இருந்தால்) உபயோகிக்கலாமே

  56. அன்புள்ள ஆர்வி.
    நீங்க்ள் நான் எழுதியதை படித்தும் உங்களது ஈகோ ஒப்புக்கொள்ள விடவில்லை போலிருக்கிறது
    //
    தங்கமணி எழுதுகிறார்: // இந்தியாவில் நீங்கள் முஸ்லீம் தெருக்கள் வழியே வினாயகர் ஊர்வலம்… // நீங்கள் ப்ராக்டிகல் நிலை பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் சொல்வதெல்லாம் சரியே. அதே போல ப்ராக்டிகல் நிலை பற்றி சில தலித் அமைப்புகளும் யோசிக்கலாம். பல நூறாண்டுகளாக கொடுமைகள் நடக்கின்றன, நமக்கு ஆதரவு எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வோம், உருட்டுக்கட்டை இல்லாவிட்டால் நியாயம் கிடைக்காது என்ற முடிவுக்கு வரலாம். அப்படிப்பட்ட முடிவுக்கு வர தலித் அமைப்புகளுக்கு உங்களை விட அநேக காரணங்கள் இருக்கின்றன.//

    நிச்சயமாக. தலித்துகளை ஒரு தெருவுக்குள் விடவில்லை என்றால் உருட்டுக்கட்டையை எடுப்பதை நான் ஆதரிக்கிறேன். அதே போல இஸ்லாமியர்களது தெருக்களின் வழியே வினாயகர் ஊர்வலம் தடைசெய்தாலும் அதற்கும் உருட்டுக்கட்டை எடுப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அவ்வளவுதான் கேள்வி.

  57. சில்சாம் சொல்கிறார்//நாங்கள் யாரோ எவரோ அல்ல,உங்களில் ஒரு பாகம் என்பதை தயவுசெய்து சிந்தித்து உணருங்கள்;

    உங்கள் கையோ காலோ கண்ணோ தொல்லை கொடுத்தால் அதனை குணப்படுத்துவீர்களல்லவா அதுபோல நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருத்தல் வேண்டும்;

    //

    கண் தொந்தரவு செய்தால் கண்ணை நோண்டி எடுத்துப்போடு என்பதுதானே உங்களது மார்க்க அறிவுரை.

  58. திருச்சிக்காரன்:
    // நான் வீட்டிலே இருந்தாலும், தெருவிலே இருந்தாலும் என்னுடைய நேரத்தில், அலுவலில் குறுக்கிட இன்னொருவருக்கு சட்டப் படி என்ன உரிமை இருக்கிறது. வீதியில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றால் அவர்கள என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். நான் செல்லும் வழியில் குறுக்கிட்டு, என்னிடம் பேசி, என்னைக் கட்டாயப் படுத்தி என் நேரத்தை, அலுவலைக் கெடுக்க சட்டப் படி யாருக்கும் உரிமை இல்லை. //

    நண்பரே, தங்கள் வரிகளை நீங்களே ஒருமுறை படித்துப் பாருங்கள்; அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்ட வண்ணமாக நாம் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் “டைம் என்ன ” என்று கேட்பவர் முதலாக பின் தொடர்ந்து வேவு பார்த்து திருடும் பிச்சைக்காரன் வரை பல்வேறு இடையூறுகளை தினமும் சந்தித்தே வருகிறோம்;என்ன,பெண்கள் கேட்டுவிட்டால் வழிந்துக்கொண்டே வந்த வேலையை மறந்துவிடுவோம்;

    இங்கே கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள துண்டுப் பிரதியை நன்றாக வாசியுங்கள்;ஆரம்பத்திலேயே குறிப்பிட்ட வண்ணமாக வம்புக்குச் சென்றது இந்து நண்பர்தான்;பதிலுக்கு அவர்களும் எகிறியிருக்கிறார்கள்;நீங்கள் சொல்வதுபோல இந்து நண்பரிடம் யாரும் வம்புக்குச் செல்லவில்லை;

    கிறித்தவ சுவிசேடகர்களைப் பொறுத்தவரையிலும் நீங்கள் சொல்வது உண்மைக்கு மாறானது;சித்தாந்த ரீதியிலும் சிந்தனா மண்டலத்திலும் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்ட பகையுணர்ச்சியும் சலிப்புமே பிரச்சினைக்குக் காரணம்;

    அப்படியே அவர்கள் உங்களிடம் வந்தாலும் கால நேர சூழ்நிலை பார்த்தே பேசும் வண்ணம் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்;”யுரேகா ஃபோர்ப்ஸ்” ஆட்களைவிட இவர்கள் மோசமல்ல;வந்ததும் உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா என்றே ஆரம்பிப்பார்கள்;இந்த காலத்தில் யார் நம்மிடம் உட்கார்ந்து பேசி நம்முடைய பிரச்சினைகளைக் காது கொடுத்து கேட்கிறார்கள்?

    ஆனால் இவர்கள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொள்வதுடன் ஜெபிக்கிறேன் என்று கூறிச் சென்று மீண்டும் வந்து சந்தித்து விசாரிப்பார்கள்;மதம் மாற்ற அல்ல அந்த பிரச்சினையின் நிலை என்ன என்பதை;நம்ம ஊர் கவுன்ஸிலர் கூட இத்தனைப் பொறுப்பாக நடந்துக்கொள்வதில்லை;இவர்களுக்கென்று சம்பளமென்று எதுவும் கிடையாது;தங்கள் ஓய்வுநேரத்தில் இப்படி இறைப்பணியாற்ற வருகிறார்கள்;

    உங்களிடம் வந்து “சார் ஒரு நிமிடம் உங்களிடம் பேசலாமா ” என்று கேட்டதும் புரிந்துக்கொண்டு மறுக்கலாமே;அதற்கும் மேல் பேசினாலும் “சார்,ப்ளீஸ் விட்டுடுங்க” என்று விலகிச் செல்லலாமே;

    உள்ளத்தில் அன்பு இருந்தால் சகிப்புத்தன்மை என்பது தானாக வரும்; பத்து எறும்புகள் சேர்ந்து 90 யானைகளைக் கடித்து குதறிவிடும் என்பது போல உள்ளது தங்களது பதட்டம்..!

  59. சில்சாம்,
    நீங்கள் உங்களது கருத்தர் சொன்னதுமாதிரி அவர் மீதுள்ள நம்பிக்கையை நிரூபிக்க விஷம் குடித்து காட்ட தயார் என்றால் பேசுங்கள். நீங்களே நம்பாததை இங்கே வியாபாரம் செய்யவேண்டாம்.

  60. @Chillsam
    //யுரேகா ஃபோர்ப்ஸ்” ஆட்களைவிட இவர்கள் மோசமல்ல;//

    ரொம்ப சரியா புரிய வச்சுட்டீங்க.
    அந்த வியாபார அணுகுமுறையை விட உங்கள் வியாபார அணுகுமுறை மோசமா? என்று கேவி எழுப்பி தெளிவுபடுத்தி விட்டீர்கள். மட்டுமில்லை, உங்களுக்கும் இந்த வியாபாரம் புரிந்தே இருக்கிறது என்பதையும் புரிய வைத்துவிட்டீர்கள்.
    //உங்களிடம் வந்து “சார் ஒரு நிமிடம் உங்களிடம் பேசலாமா ” என்று கேட்டதும் புரிந்துக்கொண்டு மறுக்கலாமே;அதற்கும் மேல் பேசினாலும் “சார்,ப்ளீஸ் விட்டுடுங்க” என்று விலகிச் செல்லலாமே;//

    எதற்காக வந்து பேசணும். வாழ்க்கையில் இப்படி பேசுபவர்கள் ஒருவரை மட்டுமா சந்திக்கிறோம். விவரம் தெரியாத பள்ளி நாட்களில் துவங்கி இதோ இப்போ வரை. ஏங்க உங்களுக்கு இது அநியாயமா தெரியலை?. சகிசுகிட்டுத் தான் இருக்கோம். எங்கோ சில இடங்களில்சிலரால் வெடித்து விடுகிறது . நாங்க நிறுத்த மாட்டோம் நீங்க சகிசுகிட்டே இருங்க என்று சொல்லுவது புரியுது

  61. @தங்கமணி
    உருட்டுக் கட்டையை நியாயப் படுத்த வேண்டாமே please . நியாமான கோபங்களை முறைப்படி பதிவு செய்ய சட்டம் சரியாக இல்லாதபோது சில அத்து மீறல்கள் நடந்து விடுகிறது என்ற அளவிலே மட்டும் இதை அணுகலாம். ஆனால் அதை அங்கீகரிக்க வேண்டாம். சட்டத் திருத்தங்களுக்கும், பிரச்சனையின் அடிப்படைகளை கருத்தில் கொள்ளவும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் நம் உணர்வுகளை இது போல் பதிவு செய்யலாம்.

  62. பல நேரங்களில் பெரிய விலங்குகளையும் வீழ்த்துவது நுண்ணுயிரிகள்தான். இத்தாம் பெரிய மனுசன் எய்ட்ஸ் வைரஸுக்கு பயப்படுவதில்லையா அதைப் போலத்தான் நாங்களும் கிறிச்தவ நோய் அண்டாமல் வாழ ஆசைப்படுகிறோம். எனவேதான் தெருக்களில் உங்கள் ஆத்ம விவிலிய விபச்சாரத்தை செய்யாதீர்கள் என்கிறோம்.

  63. நண்பர்களே இது என் கருத்து அல்ல ,தினமலர் வாசகர்களின் கருத்து.
    மேலும் விவரங்களுக்கு
    https://www.dinamalar.com/News_Detail.asp?Id=௬௧௫௪௬

    வெள்ளக்காரன் எழுதி வச்சிட்டு போன குப்பயதான் நாம சரித்திரம்னு தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடிகிட்டு இருக்கோம். மத மாற்றத்துக்கு உள்ளே வந்து சைலண்டா பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செஞ்சுக்கிட்டுருந்த ஆட்களை தமிழ் அறிஞர் பட்டம் கொடுத்து சிலை வெச்சு கொண்டாடிகிட்டு இருக்கோம்; அண்ணல் அதுல ஒரு ஆளுதான் நம்ம கட்ட பொம்மனை கொள்ளைகாரன்னு எழுதி வச்சிட்டு போனான்; 1857 முதல் சுதந்திர போரை எங்கியோ ஒரு மூலையில ஒரு நூறு சிப்பாய்கள் பண்ணின கலகமனு இன்னி வரைக்கும் நம்ம புள்ளைங்க படிச்சுட்டு வராங்க! இன்னொரு பெரிய தலைவரு…பிரிட்டிஷ் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தந்து தன்னோட பத்திரிக்கைய சுதந்திர போராட்டத்துக்கு எதிரான பிரசாரத்திற்கு குத்தகை விட்டு காசு பாத்தாரு, சுதந்திர தினத்தை துக்க தினமா பிரகடனம் பண்ணினாரு; நம்ம கலாச்சாரத்தை மோசமா காடுமிராண்டிதனம்னு கிண்டல் அடிச்சுகிட்டு நாகரிகம் என்கிறதே மேற்கிலேர்ந்து இங்கிலீசுகாரன் கொண்டு வந்ததுன்னு பிரச்சாரம் பண்ணி அதுல ஓரளவு வெற்றியும் அடஞ்சாறு..இங்க துரோகிகளுக்குதான் பாராட்டு, பதவி எல்லாமே ..விடுங்க பாஸ்! திட்டமிட்டு பண்ணின ஆளுங்கலேயே நாம ஒன்னும் பண்ண முடியல..விவரம் தெரியாத அச்சக உரிமையாளர்களை நொண்டி ஏன்னா பிரோஜனம்?…
    இன்றும் கிறிஸ்தவர்கள் ஜாலியன்வாலாபாக் நிகழ்ச்சிக்காக வருத்தப்படவில்லை, விருப்பமும் இல்லை என்பது போனதடவை போப் இந்தியா வந்தபோதே தெளிவுபடுத்தப்பட்டது அவராலேயே ! அவர், பஞ்சாபுக்கு வந்தபோது ஜாலியன்வாலாபாக் நிகழ்ச்சிக்காக வருத்தம் தெரிவிக்கும்படிக் கேட்கப்பட்ட போது அதை மென்மையாகக் கூட அல்ல, மூர்க்கமாகவே மறுத்து விட்டார் ! அவ்வளவு பெருந்தன்மை ! இங்கு வருமுன் வேறொரு கிறிஸ்தவ நாட்டுக்குச் சென்றார். அங்கு அந்நாட்டவர் சரித்திர சம்பந்தப்பட்ட ஒரு கொடுமையான நிகழ்ச்சிக்கு வருத்தம் தெரிவிக்கச் சொன்னபோது, உடனே வருத்தம் தெரிவித்ததுடன், அவர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்தார் ! ஜாதிமதச்சார்பற்று அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்ததற்கு, இந்தியாவை 25 வருடங்களுக்குள் கிறிஸ்தவ நாடாக மாற்றும்படி, இங்குள்ள கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையிட்டுச் சென்றவரிடம், ஒரு நல்ல பண்பாட்டை எதிர்பார்க்க முடியுமா என்ன ? ஆனால், நம்மை விடச் சீனர்கள் கெட்டிக்காரர்கள் ! அங்கு செல்ல வாடிகன் விசா கேட்டபோது, நீங்கள் எங்கள் நாட்டுக்கு வர வேண்டாம் என்று தெளிவாகச் சொல்லியே மறுத்தது ! துரோகம் செய்தே ஒவ்வொரு நாட்டையும் பிடித்தவர்கள் சரித்திரம் தெரிந்தும், நம்மால் சீனாவைப்போல் இருக்க முடியாமல், நம் நாட்டையே இத்தாலி வாடிகன் பிடியில் அல்லவா கொடுத்திருக்கிறோம் ?…
    கேரளப் பிரஸ் அவ்வாறு செய்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை ! கிழக்கிந்தியக் கம்பெனியினர் வியாபாரம் என்ற பெயரில் முதன் முதலில் கப்பலில் கேரளக் காலிகட் சமஸ்தானத்துக்கு வந்தபோது, அவர்களுக்குக் கடற்கரை அருகே இடமும் ஒதுக்கிக் கொடுத்துப் பல வசதிகளையும் செய்து தந்து புண்யம் தேடிக்கொண்டது, அந்நாட்டு மன்னர் ZAAMORIN அல்லவா ? அந்தப் பாசம்தான் இப்படியெல்லாம் செய்யச் சொல்கிறது ! எப்படியெல்லாம், மதத்தைப் பரப்புவதில் தீவிரமாக இருக்கிறார்கள் பாருங்கள் ? அடுத்து, ராபர்ட் க்ளைவ்தான் நமக்குத் தேசியத் தலைவர் ! எப்படிப்பட்ட உத்தமர் தெரியுமா ? இங்கிலாந்தில், பணம் கொடுக்கும்வரைக், கடைத்தெருவில் உள்ள கடைகளின் முன் உள்ள சாக்கடையில் படுத்துக் கழிவுநீரைக் கடைக்குள் போகச் செய்து, புகழ் பெற்றவர் ! அவர் தொல்லை தாங்காது, இங்க்லாந்து அரசு ஒரு சிப்பாய் வேலை கொடுத்துச் (விலை இல்லாமலே வந்த) சனியை இந்தியாவுக்குக் கப்பலில் அனுப்பி வைத்தனர் ! பின்னர் வாரிசுரிமைச் சட்டாம் கொண்டு வந்து, வாரிசு இல்லாத ராஜ்யங்களை கபளீகரம் செய்து இங்க்லாந்து அரசிடம் SIR பட்டம் பெற்ற மகான் ! போதுமா ?…

  64. @chill sam said
    “அப்படியே அவர்கள் உங்களிடம் வந்தாலும் கால நேர சூழ்நிலை பார்த்தே பேசும் வண்ணம் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்;”
    அனுப்பியது யாரு ,என்ன என்ன அறிவுரை வழங்கி அனப்புவீர்கள்

    “”யுரேகா ஃபோர்ப்ஸ்” ஆட்களைவிட இவர்கள் மோசமல்ல;’
    ”யுரேகா ஃபோர்ப்ஸ்” அவர்கள் மோசமானவர்கள் என்று சொல்ல உங்கள் கர்த்தர் சொன்னாரா , நல்ல கடவுள், உங்களுக்கு நல்ல சகிப்பு தன்மை ,
    பாஸ் அவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள் . அது பொழப்பு அங்கு அவரின் உழைப்பு இருக்கு ,நேர்மையா பொருள் வேணுமா என்று தான் கேட்கிறார்கள்

    “வந்ததும் உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா என்றே ஆரம்பிப்பார்கள்;இந்த காலத்தில் யார் நம்மிடம் உட்கார்ந்து பேசி நம்முடைய பிரச்சினைகளைக் காது கொடுத்து கேட்கிறார்கள்?”
    கவுன்செல்லிங் சென்டர் நடத்துநீங்கன்னா , மக்கள் சென்டர தேடி வருவாங்க

    “ஆனால் இவர்கள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொள்வதுடன் ஜெபிக்கிறேன் என்று கூறிச் சென்று மீண்டும் வந்து சந்தித்து விசாரிப்பார்கள்;மதம் மாற்ற அல்ல அந்த பிரச்சினையின் நிலை என்ன என்பதை;நம்ம ஊர் கவுன்ஸிலர் கூட இத்தனைப் பொறுப்பாக நடந்துக்கொள்வதில்லை;”
    ஏன் கவுன்சிலர்ரோட நின்னுடீங்க mla ,மினிஸ்டர், முதலமைச்சர் ,
    பிரதம மந்திரி, ப்ரெசிடென்ட் ,யாருமே மதம்மாற்றும் சகோதரர்கள் போல் பொறுப்பா இருக்க மாட்டார்கள் ,
    தேசத்தைய மாற்ற முடிவு செய்து விட்டீர்கள்.

    “இவர்களுக்கென்று சம்பளமென்று எதுவும் கிடையாது;தங்கள் ஓய்வுநேரத்தில் இப்படி இறைப்பணியாற்ற வருகிறார்கள்”
    முழு நேர ஊழியர்கள் இருக்கிறார்கள் ,இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா . அவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது ?

    “வேவு பார்த்து திருடும் பிச்சைக்காரன் வரை பல்வேறு இடையூறுகளை தினமும் சந்தித்தே வருகிறோம்;”
    திருடன் மாட்டினால் தண்டனை இருக்கு,இவர்களுக்கு
    பிச்சைக்காரன் ,திருடன் இவர்களை விட கேவலமானவர்கள் இந்த மதம் மாற்ற நடக்கும் கூட்டம்.mafia வை விட பயங்கரவாதிகள் .
    chillsam எவள்ளவு நல்லவர் நீங்கள் .அவர்களிடமும் (கிருத்துவ மதம் மாற்றிகளிடம் ) அன்பையும் சகிப்புத்தன்மையும் போதியுங்கள்

    அன்பே சிவம்
    வந்தே மாதரம்
    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  65. //
    உங்களிடம் வந்து “சார் ஒரு நிமிடம் உங்களிடம் பேசலாமா ” என்று கேட்டதும் புரிந்துக்கொண்டு மறுக்கலாமே;அதற்கும் மேல் பேசினாலும் “சார்,ப்ளீஸ் விட்டுடுங்க” என்று விலகிச் செல்லலாமே;
    //

    அஹா என்ன அற்புதம் – ஒரு ரவுடி வெட்ட வரான் பிக் பகட் அடிக்க வரான் – சார் வேணாமே விட்டுடுங்க 🙂

    ஒரு பெண்ணை ஒருத்தன் மான பங்க படுத்த வரான் – சார் ப்ளீஸ் விட்டுடுங்க

    சார் ஒரு நிமிஷம் – நா கிளி ஜோசியம் சொல்றேன் – உங்க கஷ்டம் என்ன, உங்களுக்கு அதிஷ்டம் அள்ளிகிட்டு வரப்போவுது

    சார் ஒரு நிமிஷம் – உங்க கஷ்டம் என்ன, உங்களுக்கு நான் ஜபிக்கறேன், அப்புறம் நீங்க எங்க மதத்துக்கு மாறி என்ன மாதிரி அகேன்ட் ஆகிடுங்க

    இது எடுக்குமே வித்யாசம் கிடையாது

    தப்பு பண்ரோமுன்னு அப்பட்டமா தெரிஞ்சும் – என்ன நெஞ்சழ்த்தம் – ஒண்ட வந்த பிடரி செய்யம் வேல இது தான்

    உண்மையான அக்கறையோட இவனுங்க சுத்தரானுங்கோ – கணைக்கு காட்டி காசு பண்ண – வட கிழக்கு மாநிலங்களிர்ந்து இங்க அழசிகித்ட் வந்து ஆசை காட்டி மதம் மாத்தி கணக்கு காட்டி துட்டு சேர்க்கும் புரோக்கர்கள், மாமாக்கள் – இவைகளுக்கு சப்ப கட்டு கட ஒரு சில்லியான கூட்டம் – இவங்களுக்கு கிடைக்கற ஒவ்வொரு காசு, சர்ச் கட்டற ஒவ்வொரு செங்கலும் ஹிட்லர் செத்து வச்ச பணம், அமேரிக்கா காரன் குண்டு போட்டு போனொம் குவிச்சு சேத்த பணம்

    //
    சித்தாந்த ரீதியிலும் சிந்தனா மண்டலத்திலும் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்ட பகையுணர்ச்சியும் சலிப்புமே பிரச்சினைக்குக் காரணம்
    //

    சித்தாந்தம் என்றால் என்ன என்று சரியான அர்த்தம் கூட தெரியாவர்கள் எல்லா எழுதுரான்கப்பா – இது பஞ்ச தந்திர கதைக்கும், ஆன்மிகத்துக்கும் வித்யாசம் தெரியாத போக்கை தான் காட்டுகிறது

  66. அன்புள்ள ஐயா RV அவர்களே,

    பாபு எழதுகிறார்: // ஐநுறு பேர் உள்ள தெருவில் அந்த ஐநுறு பேருக்கும் பிடிக்காத ஒரு விசயத்தை செய்வது பொது இடையூறாகவே கருதப்படும்… // அந்த தெரு அந்த ஐநூறு பேருக்கு மட்டும் சொந்தமானது இல்லை, இந்தியாவில் இருக்கும் 120 கோடி பேருக்கும் சொந்தமானது என்பதுதான் விஷயம்.//
    இன்னும் இவ்வளவு விளக்கிய பிறகும் உங்க வில்லத்தனம் குறைய வில்லையே.
    பப்ளிக் நுசென்ஸ் கேஸ் என்று ஒன்று உண்டா இல்லையா? அல்லது அது சிறுபான்மையினர் என்பதால் விலக்கு அளிக்கபட்டுவிடுமா?
    120 கோடி பேருக்கு சொந்தமான கீழ் விஷாரத்தில் போய் இந்த கருத்துக்களை கூறுவீர்களா? முடியாது என்றால் ஏன்?.
    120 கோடி பேருக்கு சொந்தமான கூத்தநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை (தமிழ் நாட்டில் உள்ள கிராமங்கள்தான் ) போன்ற கிராமங்களில் பிரசாரம் வேண்டாம் சும்மா நிதானமாக ஒரு ரவுண்டு உரை சுற்றிவிட்டு எந்த பிரச்னையும் இல்லாமல் வர முடியுமா?

    //ஐநூறு பேருக்கும் பிடிக்காத விஷயத்தை அங்கே பேசக் கூடாது என்பது நாகரீகம் மட்டுமே;//
    ஓஹோ ,அப்படி என்றால் அவர்கள் நாகரீகம் இல்லாதவர்கள்தான் என்கிறீர்களா? இது உங்கள் கருத்து தானே தவிர என் கருத்து அல்ல. பின் எப்படி நாகரீகம் கூட இல்லாதவர்கள் கூறுவது நல்லவிசயமாக இருக்க முடியும்?

    //ஐநூறு பேருக்கும் பிடிக்காத ஒரு கட்சி கூட்டம் அங்கே நடக்கலாமா? ஒரு நூறு வருஷம் முன்னால் போவோம்; அன்றைக்கு அந்த ஐநூறு பேரும் ஜாதி சரி என்று நினைத்திருப்பார்கள்; பெண் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்; ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்திருப்பார்கள். அதே ஐநூறு பேர் தெருவில் “ஜாதி தவறு, விடுதலை வேண்டும், ஆணும் பெண்ணும் சமம்” என்று ஒருவர் பேசலாமா?//
    நேற்று கலைஞர் டிவியில் காட்டியது .உத்தபுரம் மக்கள் கம்னிஸ்ட் கட்சியை எதிர்த்து,அவர்களால்தான் தலித் பிரிவு மக்களுக்கும் பிள்ளை பிரிவு மக்களுக்கும் பிரச்னை உண்டாக்க பெரிதாக வளர்க்கப் பார்க்கிறார்கள். நாங்கள் ஒன்றாக எந்த பிரச்னையும் இல்லாமல் சேர்ந்து வாழத்தான் செய்கிறோம் என்று இரு பிரிவின் தலைவர்களும் பேட்டி அளித்தார்கள்.
    இரு பிரிவும் ஒன்றாக இணைந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகபோராட்டம் நடத்தினார்கள்.இதற்க்கு மேலும் அங்கே அந்தக்கட்சி அங்கே தன் அரசியலை காட்டினால் உரே ஒன்றிணைந்து அவர்களுடன் மோதலில் இறங்கத்தான் செய்யும்.
    ஜாதி சில கயவர்களால் அவர்கள் சுயலாபத்துக்காக மக்களை பிரித்தால்வதர்க்காக உருவாக்கப்பட்டது. இன்னும் அதை நீருற்றி வளர்ப்பது அரசியல் வாதிகளும்,அந்தந்த ஜாதியின் தலைவரும், ஆள் பிடிக்கும் கூட்டமும்தான்.அவர்களுக்கு தான் ஜாதியால் மகசூல் கிடைக்கும்.
    //ஒரு நூறு வருஷம் முன்னால் போவோம்; அன்றைக்கு அந்த ஐநூறு பேரும் ஜாதி சரி என்று நினைத்திருப்பார்கள்; பெண் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்; ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்திருப்பார்கள். அதே ஐநூறு பேர் தெருவில் “ஜாதி தவறு, விடுதலை வேண்டும், ஆணும் பெண்ணும் சமம்” என்று ஒருவர் பேசலாமா?//
    எதனுடன் எதனை ஒப்பு வைப்பது ஜாதி, பெண்ணடிமை என்பது களையப்பட ,ஒழிக்கப்பட வேண்டிய வேண்டிய ஒரு கெட்ட விஷயம் (விஷம்) .உங்களுக்கு இந்து தர்மமும் ஒழிக்க வேண்டிய விசயமாகப் படுகிறதா? இந்துக்களை சாத்தான் பிள்ளைகள் என்று கேவலப்படுத்துவதும் ஜாதி மற்றும் பெண்ணடிமை ஒழிப்பும் ஒன்றாக முடியுமா?
    நீங்கள் ஒரு படைப்பாளி. ஒரு படைப்பாளியின் மனதில் ஒரு இனத்தை கேவலப்படுத்துவதை அழிக்க முயல்வதை எப்படி ஆதரித்து பேச முடிகிறது? அந்த அளவு உங்கள் கண்களை கட்டியது எது?

    //உங்களுக்கு சட்டம் பிடிக்கவில்லை என்றால் சட்டத்தை மாற்றலாம். இல்லை எனக்கு ப்ராக்டிகலாக சட்டம் போதவில்லை என்று கோதாவில் இறங்கலாம். அப்படி சட்டம் போதவில்லை என்ற முடிவுக்கு வேறு யாராவது வந்தால் அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லையே என்று கூப்பாடு போடுவதில் உள்ள முரண்பாட்டை உணர்ந்துகொள்ளுங்கள்!//
    இங்கே விளக்க மட்டுமே முயல்கிறோம் கூப்பாடு ஒன்றும் போடா வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

    //திருச்சிக்காரன் எழுதுகிறார்: // என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிட , என்னுடைய வேளையில் தலையிட, என்னுடைய வழியில் குறுக்கிட எந்த சட்டப்படி அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது?…// என்ன செய்யலாம் இருக்கத்தான் செய்கிறது. வீதியில் பேச அவர்களுக்கும் உரிமை இருக்கிறதே? என்னிடம் பேசாதே, என் வீட்டுக்குள் வராதே என்று சொல்லும் உரிமைதான் நமக்கு சட்டப்படி இருக்கிறது. வீதியில் பிரசாரத்தை விடுங்கள், உங்கள் செல் ஃபோனில் கூப்பிட்டு உங்களுக்கு வேண்டாத கடனை கொடுங்கள் என்று சொல்லவும் உரிமை இருக்கிறதே! அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு தெரிந்திருக்கும் – காஸ்ட்கோ பக்கம் போனால் யாராவது வந்து ஆம்வே என்பார்கள், அவர்களை அங்கே வரவே கூடாது என்று சொல்லும் அதிகாரம் சட்டப்படி இல்லையே//

    ஐயா கடை சரக்கும் கிறிஸ்தவ மதமும் ஒன்று தான் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? சேல்ஸ் பேர்சன்,மத பிரசாரகர் இருவரும் ஒன்றுதானா? விற்பனையாளர் வாயிற்று பிழைப்புக்காக இடையுறு செய்பவர். நம்மிடம் வேலை நடக்காது என்று தெரிந்து விட்டால் நம் குடும்பத்தை பற்றி எல்லாம் தவறாகப் பேசி கொண்டிருக்க மாட்டார், அடுத்த கஸ்டமர் பார்க்க போய் விடுவார்.

    (edited and published)

  67. அப்பா இந்த பத்து கிறிஸ்தவ எறும்புகள் கடித்துக் கடித்தே எத்தனை யானைகளை கொன்றிருக்கின்றன?
    தென் அமெரிக்காவில் மாயா ,இன்கா என்ற மிகப் பெரிய பல ஆயிரக் கணக்கான வருட வயதான யானைகளைக் கடித்தே குதறி இருக்கின்றன.
    வட அமெரிக்காவில் மிலியன் கணக்கில் காட்டு எருமைகளோடு சிவப்பு இந்தியர்களையும் கடித்துக் கடித்து காணாமல் போக வைத்தன.
    ஆப்பிரிக்காவில் இந்த கிறிஸ்தவ எறும்புகள் இருநூறு வருடங்களாக அங்கு இருக்கும் கோடிக்கணக்கான யானைகளைக் கடித்துக் கடித்து பூனைகளாக மாற்றி விட்டன.

    இப்பொது அந்த எறும்புகளின் தலைவன் போப்பு எறும்பு சொல்லி விட்டது
    ‘இந்த இந்திய யானை ரொம்பதான் துள்ளுகிறது
    நீங்கள் இப்படி கடித்துக் கொண்டிருந்தால் போதாது . நறுக்கு நறுக்கென்று அழுத்திக் கடியுங்கள் .
    உங்களுக்கு வழி காட்ட நான் சோனியா என்ற ராணி எறும்பை அனுப்பி உள்ளேன்
    உங்களுக்கு நல்ல தீனியாக மூட்டை மூட்டையாக டாலர் என்ற அஸ்கா எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு அனுப்புகிறேன்.
    கடி கடி என்று கடித்து இந்த லட்சக் கணக்கான ஆண்டு வயதான இந்த யானையை பரலோக சாம்ராஜ்யத்துக்கு சீக்கிரம் அனுப்புங்கள் .

    கூட சேர்ந்து கொட்ட நான் உங்களுக்கு கருணாநிதி என்ற ஒரு குளவியையும் மேலும் உங்களுக்கு களைப்பு ஏற்ப்படும் போ்து ரீங்காரம் பாட முலாயம் ,லாலு,மம்தா, மாயாவதி, எச்ச வூறி,பிருந்தா காரட் ,என்ற பல வண்டுகளையும் அனுப்பி உள்ளேன்
    அவர்கள் அவ்வப்போது ஹிந்து யானையைக் கொட்டவும் உபயோகமாக இருக்கும்’.
    அவர்களுக்கும் நிறையா அஸ்கா ,தேன் எல்லாம் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்’

  68. களிமிகு கணபதி
    11 August 2010 at 5:21 pm
    // இப்படி எல்லாம் எங்களைக் கேவலமாகப் பேச உங்களுக்குச் சர்ச்சுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோமே…//

    எத்தனை ஆணவமான பேச்சு…இதற்கும் மத நல்லிணக்கம் என்று தான் பெயரோ.?

  69. சில்சாம் கூறுவது நல்ல யோசனை.

    “ஒரு நிமிடம் பேசலாமா?” என்று கேட்பவர்களிடம் பதில் என்ன கூறுவது என்பதை தமிழ் இந்து ஒரு கேள்வி பதிலாகவும், அப்படிப்பட்ட மூளைச் சலவை செய்யப்பட்டவர்களை அவர்களது மூளைச்சலவையிலிருந்து காப்பாற்றுவதற்கும், அவர்களை மீண்டும் இந்து மதத்த்குக்கே கூட்டிவரவும் தேவையான விஷயங்களை கொண்ட கட்டுரையை வெளியிட வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். அதனை பிறகு துண்டு பிரசுரமாகவும் வெளியிடலாம்.

  70. sarang
    14 August 2010 at 12:54 pm
    // ஒண்ட வந்த பிடரி செய்யம் வேல இது தான் //

    தேச ஒற்றுமை இங்கே வாசம் வீசுதே…!!!

  71. #
    naan yaaro
    14 August 2010 at 10:17 pm

    களிமிகு கணபதி
    11 August 2010 at 5:21 pm
    // இப்படி எல்லாம் எங்களைக் கேவலமாகப் பேச உங்களுக்குச் சர்ச்சுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோமே…//

    எத்தனை ஆணவமான பேச்சு…இதற்கும் மத நல்லிணக்கம் என்று தான் பெயரோ.?
    #
    naan yaaro
    15 August 2010 at 8:07 am

    sarang
    14 August 2010 at 12:54 pm
    // ஒண்ட வந்த பிடரி செய்யம் வேல இது தான் //

    தேச ஒற்றுமை இங்கே வாசம் வீசுதே…!!!

    நான் யாரோ நண்பரே,

    ஓரளவுக்கு மேல் தாண்டியதால் தாங்க முடியாததால் வந்த இந்த பதில்களால் மிகவும் வருந்துகிரீரே.இதன் ஆரம்பமே பிரசாரகர்கள் இங்கே (நம் நாட்டில்) எங்களை திட்டம் போட்டு நிதானமாக திட்டி தீர்த்த பிறகும் இன்னும் திட்டிக்கொண்டிருப்பதால்,நீங்கள் செய்த, செய்கின்ற தூற்றல்களின் ஒரு கடுகளவே .நீங்கள் தூற்றும் பொது எங்களுக்கு எல்லாம் எப்படி வலித்திருக்கும். அதை சற்றே சிந்தித்து பார்த்து இனியாவது நீங்கள் உங்கள் ஆட்களையும் இனியாவது அடக்கி வாசிக்க சொல்லலாமே.

  72. ஆனாலும் இவர்கள் குறிப்பிட்டிருப்பது உண்மையும் கூடத்தான்.

    மேலும் நீங்கள் யார் என்றும் இங்கே நன்றாகத் தெரிகிறது

  73. இனி மேல் இங்கே எழுத ஒன்றுமில்லை, எல்லாரும் சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சிலர், குறிப்பாக உமாசங்கர்/வேதம் கோபால் சிறப்பான முறையில், புதிய வாதங்களை எழுதி இருக்கிறீர்கள்.

    // ஒருவரது சுதந்திரம் கட்டுப்பாட்டுக்கு உட்படாததாக இருக்கவேண்டும் என்றாலும், அதற்கும் ஒரு வரைமுறை உள்ளது. // என்றும் // your freedom ends at the point where my nose begins // என்றும் நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். “மூக்கு” இந்த விஷயத்தில் எங்கே ஆரம்பிக்கிறது என்பதில்தான் நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது என்று நினைக்கிறேன். “மூக்கு” உங்கள் வீட்டு எல்லையோடு முடிவடைகிறது என்றும், வீதி வரை போகாது என்றும் நான் உறுதியாக கருதுகிறேன். உங்கள் வீட்டுக்குள் எவரையும் வராதே என்றோ, என்னை, என் குடும்பத்தினரை தொந்தரவு செய்யாதே என்றோ சொல்ல உங்களுக்கு எல்லா சட்டப்படி, நியாயப்படி, எல்லா உரிமையும் உண்டு என்பதை பல முறை எழுதியும் இருக்கிறேன். பொது வீதியில் பிரச்சாரம் செய்வதும் சில கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டதே – இந்த பிரசாரகர்கள் உத்தமர்கள் என்றோ, அவர்கள் செய்வது நியாயம் என்றோ அவர்களை துரத்தியது நியாயமற்ற செயல் என்று நான் வாதிடவில்லை. அது சட்ட விரோதம் மட்டுமே. என்னைப் பொறுத்த வரை அந்த சட்ட மீறல் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் சட்டத்தை மீற இந்த ஈரோட்டுக்காரகளுக்கு இருக்கும் காரணிகள் போலவே சட்டத்தை மீற தலித் அமைப்புகளுக்கு பல ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறிய ஒரு குழு எங்களை எதிர்த்து இந்த தலித் அமைப்புகள் சட்டத்தை மீறுகிறார்களே என்று கூப்பாடு போடுவதில் உள்ள முரண்பாட்டையே சுட்டி காட்டுகிறேன்.

    வேதம் கோபால், உங்கள் மறுமொழியும், அணுகுமுறையும் சிறப்பான முறையில் இருக்கிறது. சட்டம் சரியில்லை, அதை மாற வேண்டும், தெளிவாக வேண்டும் என்கிறீர்கள். நான் கருத்துரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கருத்துரிமையை பாதுகாக்க மத மாற்ற பிரச்சாரம் போன்ற distasteful செய்கைகளை அனுமதிக்க வேண்டும் என்றும் கருதுகிறேன். ஜனநாயக நாடு, எந்த கருத்தை மக்கள் ஏற்கிறார்களோ, அது நடக்கட்டும்.

    விருட்சம், உங்கள் சகிப்புத்தன்மையைப் பற்றி நீங்கள் சொல்லித்தானா நான் புரிந்துகொள்ள வேண்டும்? ஆனால் நான் சொல்ல வருவது வேறு. சட்டத்தை மீறி இந்த் பிரசாரகர்களை பிடித்ததற்கான காரணங்கள் தெளிவு. ப்ராக்டிகலாக வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் அது சட்ட விரோதம் என்பதும், அந்த சாலமனோ கீலமனோ தான் கடத்தப்பட்டதாக புகார் கொடுக்க முகாந்தரம் இருப்பதும், ஸ்டுடியோவில் வைத்து அவரை சுற்றி பத்து பேர் நின்று “பேசி” இருந்தும் அவர் மேல் கொலை மிரட்டல் செய்தார் என்று கேஸ் போட்டிருப்பதில் உள்ள குறைகளும் இங்கே தெளிவாக உங்களுக்கு தெரிகிறதா?

    திருச்சிக்காரன், மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்ல முடியாது. – பொது வீதியில் பிரச்சாரம் செய்ய சட்டப்படி உரிமை இருக்கிறது என்று நான் ஒரு உண்மையை முன் வைக்கிறேன். அதற்கு இந்தியாவில் கிரெடிட் கார்டு கொடுக்கிறேன் என்று ஃபோன் செய்பவர்கள், அமெரிக்காவில் ஆம்வேக்கு ஆள் பிடிப்பவர்கள் என்றும் இரண்டு உதாரணமும் தருகிறேன். நீங்கள் சட்டப்படி என்ன உரிமை இருக்கிறது என்று கிளிப்பிள்ளை மாதிரி கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். ஒன்று நான் சொன்னது தவறு என்று எடுத்துக் காட்டுங்கள், இல்லை இந்த டாபிக்கை விட்டுவிடுங்கள். அமெரிக்காவில் என் செல் ஃபோனில் என்னை அழைத்து கிரெடிட் கார்ட் தருவதாக சொல்ல முடியாது, இந்தியாவில்தான் முடியும். நீங்கள் என்ன selective reader ஆக இருக்கிறீர்களே?

    ல்சாம், உங்கள் பாராட்டுக்கு நன்றி! ஆனால் உங்கள் இன்னொரு மறுமொழியைப் பார்த்தால் நமக்குள் இசைவு இருக்கும் என்று தோன்றவில்லை. நான் மதமாற்ற பிரச்சாரம் சட்டப்படி சரியாக இருந்தாலும், தவறான விஷயம் – அதுவும் இன்று இந்தியாவில் இது நடக்கும் விதம் – பணம் கொடுத்து, ஆசை காட்டி, பிரஷர் கொடுத்து, ஏமாற்றி நடத்துவது – அயோக்கியத்தனம் என்று கருதுபவன். மத மாற்றம் என்பது தானாக நடந்தால் மட்டுமே சரியான விஷயம்.

    கார்கில் ஜே, உங்கள் பாராட்டுக்கு நன்றி!

    களிமிகு கணபதி (உங்கள் பேரை படிக்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது, என்ன அருமையான பெயர்!) // தலித்துகள் அக்காலத்திலேயே உருட்டுக் கட்டைகளைத் தூக்காமல் போனதுதான் இக்காலத்துத் தலித்துகள், தலித்துகளாக இருப்பதற்குக் காரணம். // அருமையகா எழுதி இருக்கிறீர்கள்.

    சாரங், நான் வக்கீல் இல்லை. 🙂 திருட்டு, பிக்பாக்கெட், செய்தால் காமன் லா படி பிடித்தேன் என்று சொல்லலாம். மதப் பிரசாரத்துக்கு முடியாது என்றே கருதுகிறேன். நீங்களோ, இல்லை யாராவது சட்டம் தெரிந்தவர்களோ தெளிவாக்கலாம்.

    சிறீதரன், // இங்கு இருக்கும் ஐஸ் ஹவுஸ் மசூதி வாசலில் ஒரு ஆயிரம் ஹிந்துக்கள் ஊர்வலம் போக முடியவில்லை…// அப்படி முடிவெடுக்க ஒரு அரசுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அந்த உரிமை பொதுவாக சிறுபான்மையினருக்கு “ஆதரவாக” துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பது அரசின் உரிமையையும் சட்ட நிலையையும் மாற்றாதே!

    தங்கமணி, // தலித்துகளை ஒரு தெருவுக்குள் விடவில்லை என்றால் உருட்டுக்கட்டையை எடுப்பதை நான் ஆதரிக்கிறேன். // என்று எழுதுகிறார். தெருவுக்குள் விடவில்லை என்று ஒரே காரணமாக ஏன் சுருக்குகிரீர்கள் என்று தெரியவில்லை. அவர்கள் தங்களுக்கு “ஆதரவு” தருபவர்களுக்காக உருட்டுக்கட்டை எடுப்பது என்ற முடிவுக்கு வர பல காரணங்கள் இருக்கிறது என்று எழுதி இருக்கிறேன், நீங்கள் இந்த வரியை படித்தீர்களா என்றும் தெரியவில்லை.

    பாபு, நீங்கள் நான் எழுதிய எதையும் படித்ததாக தெரியவில்லை. உதாரணத்துக்கு ஒன்று – // ஜாதி, பெண்ணடிமை என்பது களையப்பட ,ஒழிக்கப்பட வேண்டிய வேண்டிய ஒரு கெட்ட விஷயம் (விஷம்) // இது பாபு நினைப்பது. நூறு வருஷத்துக்கு முன் இறந்த நம் முப்பாட்டனும் அப்படி நினைத்திருக்கமாட்டார். அவர் போன்றவர்கள் நிறைந்திருக்கும் தெருவில் அன்று ஒருவர் ஜாதி ஒழிக்கப்பட வேண்டிய விஷயம் என்று பேச வந்தால் உங்கள் லாஜிக்படி அவர் கதி என்னாகும்? இந்த சாதாரண விஷயம் கூட புரியாமல் கோபம் உங்கள் கண்களை மறைக்கும்போது பேசுவதில் என்ன பயன்? என்றாவது இதைப் பற்றி வாதிக்க நினைத்தால் நான் எழுதியதை எல்லாம் படித்துவிட்டு வாருங்கள்.

  74. பைபிள் எந்தவிதமான ஆதாரமற்ற ஒர் வெற்றுப் புனையல் புராணம் என்பதை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.

    ஆயுதபலத்தால் இது உலகெங்கும் திணிக்கப்பட்டதானால் எந்த பெருமைய்ம் கிடையாது. இன்றும் படிப்பறிவு குறைந்த மக்களை பெருமளவில் மாற்றவே முயற்சிப்பது ஏன்?

    சில்சாம் போன்ற ஒரு அருவ்றுப்பு மிகுந்த நபர் கிறிஸ்துவத்தின் பொய்மையை தோலுறித்துக் காட்டியுள்ளோம், இவ்வலைப்பூவில்.
    சில்சாம் ஓட்டம் வெற்று பொய்கள் நிலைக்காது-https://saintthomasfables.wordpress.com/2010/08/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA/#comment-377

  75. தொடரும் இந்த கருத்துக்களோடு…

    இந்துக்களிடம் கிறிஸ்தவ, முஸ்லிம்கள் மத மாற்ற பிரசாரம் செய்வது

    சரியா ?
    தவறா?

    என்ற ஒரு வாக்கெடுப்பை நடத்துவோமா நண்பர்களே ?

  76. திரு RV அவர்களே

    ///“மூக்கு” இந்த விஷயத்தில் எங்கே ஆரம்பிக்கிறது என்பதில்தான் நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது என்று நினைக்கிறேன். “மூக்கு” உங்கள் வீட்டு எல்லையோடு முடிவடைகிறது என்றும், வீதி வரை போகாது என்றும் நான் உறுதியாக கருதுகிறேன்.///

    அன்பரே, நான் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தேன். at the cost of repetition I state this.

    /// எனது மதத்தின் எல்லைக்குள் நுழையும்போது கிறித்துவத்தின் சுதந்திர எல்லைகள் முடிவுறுகின்றன. அப்போது நான் அதை எதிர்க்கவும் தடுக்கவும் முழு அளவிலான (unfettered) உரிமை பெற்றவனாகிறேன். இது நடப்பது எனது கோவிலிலா, அவரது கோவிலிலா அல்லது நடுத்தெருவிலா என்பதெல்லாம் வரைமுறை அல்ல. இங்கே வரைமுறைக்கு நாம் கொள்ள வேண்டியது எனது நம்பிக்கை, அவரது நம்பிக்கை என்ற எல்லைகள்தாம்.

    எல்லை என்பது பரிணாமம் கொண்டதாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. It need not be seen materially. The border need not be visual. It can be at the invisible levels also. Faith cannot be seen but it also has its borders. When the person of other faith intrudes my faith, he violates my freedom. He tresspasses my faith and this is not what the Constitution guarantees. Tresspassers will asways be repelled by the rightful owner. That is what is now happening as the grass root level. When this catches up at the National level, Law will accept the reality and the Courts will say “Yes, intrusion of the mind is as bad as intrusion of the body” Till then, the debate will go on.///

    எல்லை மீறல் என்பதை நீங்கள் வெறும் காட்சி அளவில் பார்க்கிறீர்கள். காட்சிக்கு மேற்பட்டு எல்லை இருக்கிறது என்பதே உண்மை. மதம் மத நம்பிக்கை ஆகியவற்றின் எல்லைகள் பரிணாமத்துக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அதனால்தான் கருத்து சுதந்திரம் என்பது பாரதம் மட்டுமல்ல உலகெங்கிலும் எந்த நாட்டிலுள், முகமது நபியின் உருவத்தை வரைவதற்குக் கூட, அந்தந்த நாட்டின் சட்டங்களுக்கும் அப்பாற்பட்டு, வலி கொடுப்பதில்லை.

    Force of Law எனப்படுவதின் ஆரம்பமும் எல்லையும் எந்தச் சட்டமும் ஆட்சிமைப் படுவதில்தான் இருக்கிறது. மக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் பொது வன்முறை ஏற்படுகிறது. ஆனால் கூட சட்டமே சில சமயங்களில் மக்கள் அவ்வாறு சட்டத்தை நிலைநாட்டுவதை அனுமதிக்கிறது, ஆதரிக்கிறது. தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்ட நிச்சயமாக நான் எனது தற்பாதுகாப்புக்காக வன்முறையைக் கையாளவேண்டி வந்தால் அது சட்டத்தால் அனுமதிக்கப்படும். வரப்பு எல்லையை நான் காத்துக் கொள்ள எனக்கு முழு உரிமை உள்ளது. அதைப்போலவே என்னம்பிக்கை சார்ந்த உரிமையைக் காத்துக்கொள்ள எனது மதப் பாதுகாப்புக்காக எனது மதத்தில், நபிக்கைகளில் எனது எச்சரிக்கியையும் உதாசீனம் செய்துவிட்டு எவரேனும் அத்து மீறினால் tress pass செய்தால், என்னிடம் உள்ள முழு force ஐ உபயோகித்து எனது எல்லைகளைக் காத்துக் கொள்ள எனக்கு முழு உரிமை உள்ளது. இந்த வாதத்தை நீதிமன்றங்கள் கூட அந்தந்த வழக்குகளின் உண்மைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளும் / கொண்டிருக்கிறன. எனது எச்சரிக்கையையும் மீறி என்னிடம் பிரச்சாரம் செய்வதும் எனது நண்பர்கள் உறவினர்களிடம் பிரசாரம் செய்வது எனது அடுத்தவீட்டுக்காரரிடம் தெருவினரிடம் ஊர்க்காரரிடம் பிரச்சாரம் செய்வது ஆகியவையையும் எதிர்க்க எனக்கு முழு உரிமை உள்ளது என்பது சட்ட ரீதியான ஏற்கப்படக்கூடிய உரிமையே. ஒவ்வொரு வழக்கும் அதனுடைய தொடர்புடைய உண்மைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

    மற்றபடி தலித்துகளுக்கு இருக்கும் காரணங்கள் பற்றி இந்த விஷயத்தோடு தொடர்பு செய்வது சரியல்ல. தாழ்த்தப் பட்ட மக்களின் உரிமைகளும் வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப் படவேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. அதற்காக சில/ பல இடங்களில் அவர்களும் இப்படிப்பட்ட உருட்டுக்கட்டை போன்ற (துப்பாக்கியுடன் நோக்குங்கால்) “மென்மையான” ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்துவது தெரிந்ததே. இத்தகு போராட்டங்களுக்காக அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. அத்தகு போராட்டக்காரர்களை ஆதிக்கச் சாதியினர் வன்முறையால் தண்டித்திருக்கிரார்கள், அது கண்டனத்துக்குரியது, தண்டிக்கவும் படவேண்டியது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

  77. ஆர் வீ அவர்களே,

    காரணம் பின்னால் சொல்லப்படுவது – சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பிடித்து வைக்க சட்டம் வழி தருகிறது – அனால் உடனே காவல் துறையினருக்கு தகவல் தர வேண்டும் – அவர்கள் வந்த பிற்பாடு காரணத்தை கூறிக் கொள்ளலாம் – அது உண்மையாக இருந்தால் போலீஸ் பிடித்து போகும் – பொய்யாக இருந்தால் வெறுமே போகும்

  78. பாபு, நீங்கள் நான் எழுதிய எதையும் படித்ததாக தெரியவில்லை. உதாரணத்துக்கு ஒன்று – // ஜாதி, பெண்ணடிமை என்பது களையப்பட ,ஒழிக்கப்பட வேண்டிய வேண்டிய ஒரு கெட்ட விஷயம் (விஷம்) // இது பாபு நினைப்பது. நூறு வருஷத்துக்கு முன் இறந்த நம் முப்பாட்டனும் அப்படி நினைத்திருக்கமாட்டார். அவர் போன்றவர்கள் நிறைந்திருக்கும் தெருவில் அன்று ஒருவர் ஜாதி ஒழிக்கப்பட வேண்டிய விஷயம் என்று பேச வந்தால் உங்கள் லாஜிக்படி அவர் கதி என்னாகும்? இந்த சாதாரண விஷயம் கூட புரியாமல் கோபம் உங்கள் கண்களை மறைக்கும்போது பேசுவதில் என்ன பயன்? என்றாவது இதைப் பற்றி வாதிக்க நினைத்தால் நான் எழுதியதை எல்லாம் படித்துவிட்டு வாருங்கள்.

    ஐயா RV அவர்களே,
    நான் தெளிவாக பதில் எழுதி இருக்கிறேன். என் கண்களை கோபம் ஒன்றும் மறைக்கவில்லை,இங்கு நாங்கள் தருவது அனைத்தும் நடந்த சம்பவத்தின் விளக்கங்களே, கோபத்தால் மற்றவருக்கு நம் கருத்து சேராது என்பது எனக்கு நன்றாக தெரியும்.மேலும் நண்பரே நீங்களும் மற்றவர்களும் அவரவர் கருத்துகளை இங்கே மற்றவர்க்கு விளக்கவே முற்படுகின்றனர்.
    திரும்பவும் கேட்கிறேன் ஜாதி ஒழிக்கப் பட வேண்டிய ஒன்று அது எந்த நூற்றாண்டிலும் உண்மை, அந்த காலத்தில் உள்ளவர்கள் அப்படி நினத்திருக்கமாட்டார்கள் என்பது ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும் , எந்த நுற்றாண்டு கழிந்தாலும் இந்து மதம் பற்றிய இழித்துரைப்பும்,இந்து மத ஒழிப்பும் தேவை என்றோ உண்மை என்றோ எல்லோரும் ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம் என்றோ சொல்ல முடியுமா”?.
    நீங்கள் எழுதியதை படித்த பின்னரே பதில் எழுதுகிறேன் நண்பரே.
    உங்கள் கருத்துக்களை எழுதி அதற்க்கு மறுமொழி கொடுத்திருப்பேன் பாருங்கள்.
    ஆனால் என் தாத்தாவும், அவர் அப்பாவும் 1920 களிலேயே சமபந்தி போஜனம் வீட்டிற்குள்ளேயே நடத்தியவர்கள்.கோவிலுக்குள் அனுமதி இல்லாத மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றவர்கள்,நீங்கள் என்னைபோன்றவர்கள் என்று ஒன்றும் சொல்ல வேண்டாம்.

    நீங்கள் மற்ற கேள்விகள் (நண்பர்கள் எல்லோருடையதும் தான்) விளக்கங்களில் உள்ள உண்மைகளை கருத்துகளை இன்னும் உணர்ந்து விட்டிர்களா என்று தெரியவில்லை.
    மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன் இது ஜாதி சண்டையோ தாழ்த்தப்படவர்களுக்கு எதிரான அடக்கு முறையோ அல்ல.அந்த கோணத்திலேயே உங்கள் கருத்துக்கள் இருக்கின்றன.இங்கே நடந்தது சம உரிமையை, சொந்த உணர்வுகளுக்கு ஏற்ப்பட்ட அவமானத்தை (இந்துக்களையும் இந்து வழிபாட்டையும் இழிவாக பேசியது) எதிர்த்து நியாயத்தை நிலைநாட்ட போராடிய ஒரு குழுவுக்கும்,அவர்களை அசிங்கமாக பேசி அவர்களுக்கு எதிராக வம்புக்கிழுத்த ஒரு குழுவுக்கும் ஏற்பட்ட மோதல். உங்கள் தாள் பணிந்து கேட்கிறேன் தயவு செய்து இதை திசை திருப்ப முயற்சிக்காதிர்கள்.

    //இந்த பிரசாரகர்கள் உத்தமர்கள் என்றோ, அவர்கள் செய்வது நியாயம் என்றோ அவர்களை துரத்தியது நியாயமற்ற செயல் என்று நான் வாதிடவில்லை. அது சட்ட விரோதம் மட்டுமே//
    //ஐநூறு பேருக்கும் பிடிக்காத விஷயத்தை அங்கே பேசக் கூடாது என்பது நாகரீகம் மட்டுமே;//
    இந்த உண்மைகளை உங்கள் மறு மொழிகளிலேயே ஒப்புகொண்டிருக்கிரீர்களே , உங்கள் கருத்துகளை நீங்களே படிக்கவில்லையோ என்று தோன்றுகிறது .எப்படியோ உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
    இதற்காக தான் நண்பரே நாங்கள் இவ்வளவு தூரம் விளக்கி கொண்டிருந்தோம்,இதற்கு மேல் நான் இதில் விளக்கமளிக்க விரும்பவில்லை.
    இந்த சம்பவத்திற்கு இதற்க்கு மேல் கருத்து எழுத விரும்பவில்லை.
    புரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் ,புரியாதவர்களுக்கு புரியவே புரியாது. எந்த குற்றமும் செய்யாமல் நியாயத்தை எதிர்த்து கேட்டதற்காக கைது செய்யப்பட்ட நண்பர்கள் தான் பாவம். அவர்கள் வெற்றி பெற்று வழக்கு்களில் விடுதலை ஆகி நிம்மதியான இயல்பு வாழ்க்கை திரும்பிட இறைவனை வேண்டி கொள்கிறேன்.
    தாம் செய்வது தவறு,சட்டவிரோதமானது ,நாகரீகமற்றது என்று தெரியாமல் அமைதியாக மக்கள் வாழும் பகுதியில் சென்று வீண்வம்பிழுத்து கைதான நண்பர்களும் மனம் திருந்தி விடுதலை அடைந்து இனியாவது அவர்கள் நியாயமாகவும் மற்றவரிடம் சீண்டாமலும்,வீண் வம்பு வளர்க்காமலும் நிம்மதியாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  79. RV யின் கடைசி மறுமொழியை நான் ஏற்கிறேன். இந்த தளத்தில் எழுதுபவர்கள் படித்தவர்கள். ஆனாலும் ஒரு வித emotional approach உடன் மறுமொழி, மற்றும் மத தாக்குதல் வாதங்கள் செய்ய முனைவது எதிர்மறை விளைவை தரும். யோசித்து பொறுமையோடு அணுகக் கூடிய அவகாசம் இருக்கும் இந்த இடத்திலேயே இவ்வளவு கோபம் வெளிப்படும் போது அதிகம் படிக்காத வசதி குறைவான மக்கள் நேரடியாக பாதிக்கப் படும் சூழலில் நிதானம் சகிப்புத் தன்மையை விட சிலரின் தூண்டுதலில் அத்து மீறும் வாய்ப்பே அதிகம்.
    இது மாதிரி பிரச்சனைகளை களைய நினைக்கும் அமைப்புகள் இதை கவனத்தில் கொண்டு நிதானமாக செயல்படுவதோடு , சட்டத் திருத்தத்துக்கும் கோரிக்கை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நியாயங்கள் கூட சட்டம் இல்லை என்பதால் அநியாயமாமாகி விடும்.

  80. ‘சட்ட திருத்தத்துக்கு கோரிக்கை வைக்க வேண்டும்’
    நல்ல ஹாஸ்யம்
    இன்று இருக்கும் நிலைமை என்ன?

    குஜராத் அரசு பயங்கரவாதத்தை எதிர் கொள்ள ஒரு சட்ட மசோதாவை சட்ட சபையில் நிறைவேற்றி அது ஆறு வருடங்களாக மத்திய காங்கிரஸ் அரசால் மறுபடி மறுபடி திருப்பி அனுப்பப பட்டு நிறைவேற்ற விடாமல் அலைக்கழிக்கப் படுகிறது.
    இது ஏனென்றால் மோடியும் , குஜராத்தும் காங்கிரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிரி.
    இதே மாதிரி ஒரு சட்டம் மகாராஷ்ட்ராவில் இயற்றப் பட்டுள்ளது
    அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .

    இந்த ஹிந்து விரோத மத்திய மாநில அரசுகள் ஹிந்து சமயத்தை பூண்டோடு அழிக்கும் சக்திகளின் கையில் உள்ளன.
    அவர்கள் எந்த நல்லது கெட்டதுக்கும் அஞ்சாதவர்கள். சட்டத்தை துச்சமாக மதிப்பவர்கள்அதை தங்களுக்கு ஏற்ற முறையிலும்,ஹிந்து இயக்கங்களுக்கு எதிரான முறையில்வளைக்கின்றனர்.

    போப்பு இறந்த பொது இங்கு விடுமுறை விட்டனர். அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப் பட்டது.
    அவருக்கும் நம் நாட்டுக்கும் என்ன சம்மந்தம்?
    அனால் இது வரை ஒரு -ஒரே ஒரு ஹிந்து துறவியின் மரணத்துக்கு விடுமுறை கூட வேண்டாம், துக்கமாவது அனுஷ்டிக்கப் பட்டதா?

    சுவாமி ரங்கநாதானந்த என்ற ராமகிருஷ்ண மடத் தலைவர் பூர்வாசிரமத்தில் இன்று பாகிஸ்தான் வசம் உள்ள ஹிந்துஸ்தானத்தில் பிறந்தவர்
    பாரதம் துண்டாடப்பட்ட போது இந்தப் பக்கம் வந்தவர்.
    அவர் ராமகிருஷ்ண மிஷனில் சேர்ந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் நமது சமுதாயத்துக்காக உழைத்தவர்.
    அவர் இயற்கை எய்திய போது நம் அரசும் ,ஊடகங்களும் கண்டு கொள்ளவே இல்லை

    ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதம் மாற்றிக்கு பத்ம ஸ்ரீ கொடுத்தனர்
    எதற்காக?
    அவர் இந்த நாட்டுக்கு என்னசெய்தார்?
    ஹிந்துக்களை மதம் மாற்றியதாலா?

    செயின்ட் அல்போன்சா உருவம் நம் நாட்டு நாணயங்களில் பொறிக்கப் படுகிறது.
    அனால் ஆயிரம் ஆயிரம் தூய்மையும் த்யாகமுமே உருவான, இந்த சமுதாயத்தை தங்களின் கண்களெனப் போற்றிய ஹிந்துத் துறவிகளில் ஒருவர் கூட அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

    இப்படிப்பட்ட ஒரு கடைந்தெடுத்த அக்கிரமம் எந்த சமுதாயத்துக்கு எதிராகவாவது நடக்க முடியுமா?
    சட்டம் முஸ்லிம்களுக்கும் ,கிறிஸ்தவர்களுக்கும் தவறு செய்தாலும் பாதுகாப்பு அளிக்கிறது.
    ஹிந்துக்கல் நியாயமாக் நடந்தாலும் தண்டிக்கிறது.

    நம் மனம் புழுங்காதா?

  81. ‘ மசூதி வாசலில் ஊர்வலம் செல்வதை தடை செய்ய அரசுக்கு உரிமை உள்ளது’- ஆனால் அது எதற்காக ? ஒரு ஞாயம் இல்லாத காரணத்துக்காக! ஆகவே அந்த உரிமையை தவறாக அரசு பயன் படுத்துகிறது .

    மசூதி வாசலில் ஊர்வலம் போகக் கூடாது என்று சொல்வது எதற்காக என்று கேட்டால் சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படுமாம்!
    யாரால்? இது தெரிந்த விஷயம்!
    அப்படி ஏற்படும் என்றால் அப்படி ஏற்படாமல் தகுந்த ஏற்பாடு செய்வதுதான் , பாதுகாப்பு கொடுப்பதுதான் ஒரு அரசின் கடமையே தவிர அந்த சக்திக லுக்குப் பயந்து சட்டத்தைப் பின்பற்றுபவர்களை முட்டாள் ஆக்குவது அல்ல

    இப்படி கேட்போம்
    ஒரு ஊரில் உள்ள எல்லா வீதிகளிலும் ஒரு மசூதி உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.அப்போது அந்த ஊரில் எந்த வீதி வழியாகவும் ஹிந்துக்கள் ஊர்வலம் போகக் கூடாதா?
    அல்லது இப்படிக் கேட்போம்- ஹிந்துக்களின் கோயில் இல்லாத வீதியே இல்லை -அவர்கள் முஸ்லிம் ஊர்வலம் கோயில் வழியாகப் போகக் கூடாது என்றால் விட்டு விடுவார்களா ?
    அப்போது என்ன கெடுபிடி செய்வார்கள்?
    எப்படியெல்லாம் மிரட்டுவார்கள்
    என்ன என்ன வழக்கெல்லாம் போடுவார்கள்

  82. எத்தனை முறை சொல்வது.

    தெருவில் பிரச்சாரம் செய்யகது சட்டப்படி தவறு என்று நாம் சொல்லவில்லை.

    தெருவில் பிரச்சாரம் செய்வது – அது காவல் துறை சம்பந்தப் பட்ட விடயம். அவர்கள அனுமதி பெற்று செய்கிறார்களோ, அனுமதிபெறாமல் செய்கிறார்களோ அதைப் பற்றியும் நாம் ஒன்றும் சொல்லவில்ல.

    யாராவது தெருவில் மூலையிலோ நடுவிலோநின்று கொண்டு ஏதாவது சொல்லிக் கொண்டோ, பேசிக் கொண்டோ, சத்தமாக மைக் செட் போட்டு பிரச்சாரம் செய்து கொண்டோ இருந்தால் அதை ஆட்சேபிக்கும் உரிமை சட்டபூர்வமாக எனக்கு இல்லை. ( ஒலி அளவு குறிப்பிட்ட டெசிபலுக்கு மேலே போனால் அதை ஆட்சேபித்து நாம் தகுந்த அதிகாரியிடம்புகார் கொடுக்கலாம்).

    என்னை வழிமறித்து, என்னை அணுகி என் வழியில் குறுக்கிட்டு என்னிடம் பேச சட்டப் படி யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.இதை புரிந்து கொள்ள பெரிய படிப்பு அவசியமில்லை.

    கூப்பிட்டு கிரெடிட் கார்டு வாங்க சொல்லி நச்சரித்தால் அதுவும் ந்யூ சென்சே , அதை சிலர் ஒத்துக் கொள்ளலாம். எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. அப்படி நம்மை நச்சரிக்க , அணுக அவர்க்ளுக்கு சட்டப் படி உரிமை இல்லை.

  83. என்ன சட்டம்?
    என்ன கோர்ட்டு
    என்ன நீதி?
    ஜேம்ஸ் லைன் என்ற வெள்ளைக்காரன் நமது முன்னோனான மாபெரும் வீரன் சத்ரபதி சிவாஜியைப் பற்றி இழிவாக எழுதியுள்ள புத்தகத்துக்கு
    விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதி மன்றம் நீக்குகிறது
    ஆனால் தஸ்லிமா நசரீன் என்ற பங்களாதேஷ் பெண் எழுத்தாளர் எழுதிய ‘ லஜ்ஜா ‘( வெட்கம்) என்ற புத்தகத்துக்குத் தடை
    ஏனென்றால் அதில் பங்களாதேஷில் ஹிந்துக்கள் எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்று விளக்குவதால்
    அதே போல் மும்பையில் ஆர்ர் வீ .பாசின் என்ற வழக்கறிஞர் இஸ்லாம் பற்றி எழுதிய புத்தகத்துக்கு விதித்த தடையை உச்ச நீதி மன்றம் சரி என்கிறது.

    கேரள சட்ட சபையில் முஸ்லிம் உறுப்பினர்கள் அல்லா மீது பதவிப் பிரமாணம் எடுத்த வழக்கில் நீதி மன்றம் அது தவறல்ல என்று ‘பெருந்தன்மையுடன்’ கூறுகிறது
    ஆனால் அதே நீதி மன்றம் ராமர் சேது எந்த விதத்தில் புனிதத்துவம் வாய்ந்தது என்று மேதாவித்தனமாகக் கேட்கிறது
    ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் ‘லிவ் இன் ‘ பற்றிய வழக்கில் மிகப் பெரிய அறிவாளியாக உச்ச நீதி மன்ற நீதிபதி ‘ கிருஷ்ணரும் கோபிகைகளும் கூட இப்படி இருந்திருக்கின்றனர் ‘ என்று திருவாய் மலர்ந்தருளுகிறார்.

    குஜராத் கலவரம் தொடர்பான மோடிக்கு எதிரான வழக்கில் அதற்கு எந்த தொடர்பும் இல்லாத டீஸ்டா செடல்வாட் என்ற பெண்ணை அந்த வழக்குடன் இணைத்துக் கொள்ள உச்ச நீதி மன்றம் அனுமதிக்கிறது
    அனால் சங்கராச்சாரியார் கைது வழக்கில் பீ பீ சிங்கால் என்பவர் தன்னையும் இணைத்துக் கொள்ள சமர்ப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது .
    இந்த நாடும் ,சர்க்காரும்,சட்டமும் என்ன ஹிந்துக்கள் வாழக் கூடாது என்பதற்காகவே உள்ளனவா?

  84. your liberty ends when the other person’s nose begins” was a decion of an english court when a person argued he had the right or liberty to use his sticck and twirl when walking.Liberty is not unbounded or unfettered.

  85. If any body can approach and tell what ever they believe then Why Chillsam banned the IP from that Poster and anybody can visit- tamilchristians.com and see how they abused me from posting from Bible and renowned biblical scholars.

    There is no God in Bible and God if he just wishes He would have made by Birth all in his religion and Converters work against God’s Wish.

  86. இம்மண்ணில் பிறந்த குழந்தை கருவுற்று வளர்ந்த தாயை என்றும் மாற்ற முடியாது. அதை போல் தான் மதமும். சில அற்ப விடயங்களுக்காக மாறும் மனிதன் அவன் தன் தாயினை மாற்றுவது போன்றதாகும். அது தன் தாயின் கற்பினை கேள்விக்குறி ஆக்கிவிடுகிறது.

    இந்து மதம் என்பது என்று தோன்றிற்று என்று யாராலும் குறிப்பிட்டு சொல்லமுடியாதது. மற்ற மதங்கள் அதனை தோற்றிவித்தவர் மூலம் இவ்வுலத்தில் ஆரம்பமானது. ஆனால் மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து இருக்கும் ஒரே மதம் இந்து மதம்.

    இன்னும் சொல்லபோனால் மதங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்க்கையின் நெறிமுறை என்றே சொல்லலாம்.

    இறைவனை உருவமாய், அரு உருவமாய், செருவமாய், அருவமாய் கானும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே.

    குடும்பமாய் காட்சியளிக்கும் தெய்வங்கள் இந்து மதத்தில் மட்டுமே உண்டு.

    இன்று தன்னை இந்த மதத்தினை சார்ந்தவன் என்று சொல்லிகொள்ளும் யாராயினும் பல்லாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட அவன் மூதாயர் என்ன மதத்தினை சார்ந்தவர் என்று கேட்டால் நிச்சியம் அவர்கள் இந்து மதத்தின் வம்ச வழியாக தான் இருப்பர். இது தெரியாமல் அவர்கள் இன்று சொல்லும் கூற்றுகள் அவர்களின் அறியாமையின் வெளிப்பாடாக தான் பிரதிபலிக்கிறது.

    யாரையும் மதம் மாற சொல்லாத மதம் இந்து மதம். ஏன், அது இந்து மதத்திற்கு தேவையும் அற்றது.

    சில அற்பங்களுக்காக மற்ற மதம் மாறும் அற்பங்களால் இந்து மதத்தின் நுனியை கூட தொட முடியாது.

    காம சுகத்திற்க்காக பல ஆண்களுடன் படுக்கும் பெண்ணை விபச்சாரி என்று எல்லா மதமும் சொல்கிறது,

    கண்ணுக்கு தெரியாத நிலையற்ற சுகத்திற்க்காக பல மதம் மாறும் மனிதனின் பெயர் என்னவோ?

    நன்றியுடன்

    ரமேஷ்

  87. திரு.ரமேஷ் உங்களது கருத்துக்கள் முழுஉண்மை. அன்னிய மதத்தில் அறியாமல் சேர்ந்தவர்கள் மனம்மாறி தாய்மதம் திரும்பி பாரத தாய்க்கு பெருமை சேர்க இறைவனை வேண்டுகிறேன்.
    If the freedom to propagate ones religion infringes others freedom to practice their respective religions, can that be called religious freedom?

    Freedom one enjoys will be directly proportional to the freedom he gives to others. Freedom absued is freedom lost forever !!!! (by K.Prabhakar)

    ஒருவருக்கு தன்மதத்தை பரப்புவதற்க்கு அளிக்கப்பட்ட சுதந்திரமானது மற்ற மதகாரர்கள் தங்கள் மத பழக்கவழக்கங்களை பின்பற்றுகின்ற தங்க்ள் மத சுதந்திர உரிமையில் ஊடுருமானால் அது மத சுதந்திரம் ஆகுமா?

    ஒருவர் அனுபவிக்கும் சுதந்திரமானது சரிசமமாக அவரும் மற்றவர்களுக்கு அளிக்கவேண்டும். எனவே ஒருவரது மத சுதந்திரத்தை பழிப்பது என்பது அவரது மத சுதந்திரத்தை பறிப்பதேயாகும் !!!

  88. #
    Devapriya Solomon
    17 August 2010 at 3:45 pm
    // If any body can approach and tell what ever they believe then Why Chillsam banned the IP from that Poster and anybody can visit- tamilchristians.com and see how they abused me from posting from Bible and renowned biblical scholars.

    There is no God in Bible and God if he just wishes He would have made by Birth all in his religion and Converters work against God’s Wish. //

    திரு.தேவிப்ரியா சாலமன் தவறான தகவலை இங்கே பதித்துள்ளார்; கட்டுரைக்கு சம்பந்தமில்லாத இந்த பின்னூட்டத்தினை தமிழ்ஹிந்து ஏன் அனுமதித்தது என்று தெரியவில்லை;

    அவர் நமது “யௌவன ஜனம்” தளத்திலிருந்து நீக்கப்படவில்லை; அவர் தனது பெயரில் தன்னுடைய கருத்தினைப் பதிக்கத் தடையில்லை;

    ஆனால் “அனானி” யாக உண்மைக்கு மாறாக உள்நோக்கத்துடன் சம்பந்தமில்லாத திரியில் சம்பந்தமில்லாத கருத்துக்களைப் (and Spam’s) பதித்ததாலேயே அந்த “அனானி”களைத் தடைசெய்தோம்;
    https://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37546748

    எமது பார்வை நேராக இருக்கும்போது எதற்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை.

  89. தலித்துகள், சிறுபான்மையினர், மதசார்பின்மை, மதவாதம் என ஏதோதோ
    சொல்லி ஓட்டு பிச்சை எடுக்கும் அரசியல் அயோக்கியர்கள் ஒழியும்வரை
    நம் நாடு ஒருநாளும் உருப்படபோவதில்லை.
    ஜாதிகளே இல்லை என சொல்லும் அரசும் அரசியல்வாதிகளும் இன்று
    ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்கிறார்கள்.
    மதசார்பின்மை என்று கூறிக்கொண்டு பொட்டு வைப்பதையும் தீமிதிப்பதையும் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லிவிட்டு நோன்பு திறக்கவும் திருப்பலி கூட்டத்திற்கும் விளம்பரத்தோடு போகிறார்கள்.
    தலித்துகளின் உரிமைக்காக போராடுவேன் உயிரைவிடுவேன் என்று முழங்கிவிட்டு தனது மகன் மகளுக்கு பெரிய தொழிலதிபர் வீட்டில் சம்பந்தம் செய்வார்கள்.
    இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை இப்படிப்பட்ட சம்பவங்கள் கண்டிப்பாக தொடரும்,
    முதலில் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் இடஒதுக்கீட்டு முறையை விடுத்து சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் எந்த இனத்தை சேர்ந்த குழந்தையாக இருந்தாலும் அதன் கல்வி உணவு உடை முதலியவற்றை அரசே ஏற்க்கவேண்டும் பாரபட்சம் இல்லாமல் .
    எந்த ஒரு அரசுப்பனியாக இருந்தாலும் கண்டிப்பாக தகுதி மட்டுமே பார்க்கப்படவேண்டும், அரசியல் வாதிகளுக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டும்.
    இதெல்லாம் விட்டுவிட்டு எப்போது பார்த்தாலும் தலித் பாதிக்கபடுகிறான் அதனால் உருட்டுக்கட்டை எடுக்கிறான் என்று சிறுபிள்ளைதனமான வாதங்களை விடுங்கள்.
    இன்று விவசாய நிலம் வைத்திருப்பவன் கடனாளி அங்கே வயல்வேலை செய்யும் தொழிலாளி மாதம் பத்தயிரத்திர்க்குமேல் சம்பாரிக்கிறான் ஆனால் ? அவன் ஏழையாகவே இருக்க யார் காரணம் ?

  90. நம் நண்பர் அத்தளத்திற்கு வந்து பதிவுகள் போட்டிட முதலில் பதிவுகள் வந்தன, பின் மேலும் பதில் கொடுக்க அந்த்தித ஐபியே தடை செய்யப்பட்டது, அத்தனையும் சில்சாம் தளத்தில் தடை செய்தது அனைத்தயும் புகைப்பட ஆதாரங்களோடே தரப் பட்டுள்ளது.
    https://saintthomasfables.wordpress.com/2010/08/14/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa/

    அடுத்தவரிடம் ஆதாரமே இல்லாத பொய்களைக் கொண்டு அதுவும் மனம் பாதிக்கும் வகையில் பிரச்சாரம் செய்வதை தடுத்தபோது- ஆயுதங்களோடு பாதிரிகள் வந்தது ஏன்?

    பைபிளைக் கொண்டு கட்டுக்கதைகளை பரப்புகிறிர்களெ அதை விவாதிக்க வந்தால் தடை போடும் நீங்கள் பேச தகுதி இல்லை.

    இந்தியாவில் உள்ள மக்கள் தெய்வ நம்பிகை கொண்டு இறை ஆசியுடன் வாழ்ந்து வருகின்றனர். அரேபிய பாலைவனத்தில் இஸ்ரேலியருக்கான ஒரு சிறு எல்லை தெய்வம் யவ பெயரில் பல பொய்யான அரசியல் கட்டுக் கதைகளை பழைய ஏற்பாடு என்றும் வரலாற்று சான்றே இல்லாத ஏசு என்பவர் பற்றி பிரச்சாரமே இங்கே தேவையே இல்லை. அடுத்தவரிடம் நீ பாவி – நாங்கள் சொர்கம் தருகிறோம் என ஒரு பொய்யான கதை கொண்டு பரப்புவது சரியல்ல.

    நான் பைபிள் அடிப்படையில், அகழ்வாய்வு உண்மைகளை.
    பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்? என்னும் பெயரில் பதிதுள்ளேன், சில்சாமோ- கிலாடியோ வந்து விவாதிக்கட்டும்.
    https://devapriyaji.wordpress.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/
    கிறிஸ்தவ மத்தைதை நன்கு கற்ற அறிஞர்கள் எழுதிய நூல்களில் இருந்து தான் அந்த தகவல்கள் எடுக்கப்பட்டன. பல வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. அவற்றை தவறு என்று உங்களிடம் ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள். இல்லாவிட்டால் இப்படி அவதூறு செய்வதை விட்டு விட்டு உங்கள் அறியாமையை ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை அறிந்து வைத்திருப்பவை ஏன் தவறாக இருக்க முடியாது? நீங்கள் அறிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கின்றன.

  91. வடிவேலு பாணியில் சொல்வதானால்: “அவனா நீயி”. chilsam என்பவரும் glady என்பவரும் ஒருவரேயா? ஒருவரைப் பற்றி புகார் தெரிவித்தால் இன்னொருவர் பதில் சொல்கிறாரே?

  92. ///வடிவேலு பாணியில் சொல்வதானால்: “அவனா நீயி”. chilsam என்பவரும் glady என்பவரும் ஒருவரேயா? ஒருவரைப் பற்றி புகார் தெரிவித்தால் இன்னொருவர் பதில் சொல்கிறாரே?///

    கவுண்டமணி பாணியில் சொல்வதானால்:

    அரசியல்ல (கிறிஸ்துவத்துல / வலைத்தளத்துல ) இதெல்லாம் சாதாரணமப்பா …………..

    அவரேதான் இவரு, இவரேதான் அவரு.
    இவர் சொல்லப் போயித்தான் அந்த வலைப்பக்கம் போய்ப் பார்த்தேன். மேரியாம்மாவுலேயே இந்த மேரியா, அந்த மேரியான்னு ஒரேடியா யாருன்னே புரியலியேன்னு எழுதியிருந்துச்சி, மேரியம்மா நிலையே ஒரு மேரி இருக்கறப்போ மத்தவங்க யார் யாருன்னு எப்பிடித் தெரியும்? எல்லாம் கொழப்பந்தான்.

  93. //கட்டுரைக்கு சம்பந்தமில்லாத இந்த பின்னூட்டத்தினை தமிழ்ஹிந்து ஏன் அனுமதித்தது என்று தெரியவில்லை// கிளாடி

    மாமூ, இது கொஞ்சம் ஓவரா இல்ல?

    பைபிள்ல உள்ள கதைகளை எல்லாம் ஒங்கள மாதிரி டுபாக்குர்கள் இங்கே பதிவு பண்ண அனுமதிக்கணும். ஆனா உண்மையை சொல்ற ஒருத்தர் கருத்த அனுமதிச்சா ஒங்களுக்கு வலிக்குதோ?

    பிராடுகளுக்கு, பல முகங்கள்.

    ஹரிஜன்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பிராடுகளின் முகத்திரையை கிழித்தெறிவோம். எங்கள் பெயரைச் சொல்லி இனி எவனும் வயிர் வளர்க்க கூடாது.” மதம் மாற மறு. மாற்ற முயல்பவனுக்கு மரண அடி கொடு”.

    மாசான முத்து

  94. இங்கே வாதங்களில் பங்கேற்கும் “கிளாடி” தளத்துக்கு புதியவரல்ல; அவர் ஆணா,பெண்ணா என்பது முக்கியமல்ல;அவர் சொல்லும் கருத்துக்கு மதிப்பளித்து அதற்குரிய பதிலைக் கொடுத்தாலே சிறப்பாக இருக்கும்;

    அவர் பெண்ணானால் அதை வைத்து கீழ்த்தரமாகப் பேசுவதும் பெண்ணல்ல என்றால் அவனா நீயி என்று தூஷிப்பதும் நாகரிக சமுதாயத்துக்குரியதுதானா என்பதை நண்பர்களே சிந்திக்கட்டும்;

    நான் சொல்லும் எந்தவொரு கருத்துக்கும் நானே பொறுப்பேற்று எனது பெயரிலேயே வெளியிட்டு வருகிறேன்;இரண்டுக்கும் முடிச்சு போடுவது வேண்டாத வேலையாகப் படுகிறது;நண்பர்களிடம் நியாயமான பதில் இருந்தால் தாராளமாக இங்கே வாதிக்கலாம்;

    இணையதளம் அனைத்துலகுக்கும் பொதுவானது தானே, அதனாலேயே இன்றைக்கு பைபிள் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கும் சென்று அது அநேகரால் விவாதிக்கப்படுகிறது; அதன் பலன் விரைவில் தெரியவரும்; என்னிடம் உள்ளது உயர்தர சரக்கு எனில் அதைக் குறித்தும் அதன் அனுபவங்களையும் பேசுவதில் என்ன தவறு?

    இன்றைக்கு உலகிலேயே இணையதளத்தில் இலவசமாக வாசிக்கவும் தரமிறக்கவும் கூடியதானதொரு சிறந்த புத்தகம் இருக்குமானால் அது பைபிளைத் தவிர வேறில்லை;

    இதோ இங்கே பதிக்கப்படும் இந்து மதப் பெருமை பேசும் கட்டுரைகளையும் நான் தவறாமல் படிக்கிறேன்; அதனால் நான் மதம் மாறுவதோ தாய் மதம் திரும்புவதோ நடைபெறப்போவதில்லை;

    தேவப்ரியா போன்ற அதிபுத்திசாலிகள் சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று வைத்துக்கொள்ளுவோம்;அதற்கு அடுத்த மாற்றுவழி என்ன என்பதையும் அவரே சொல்லட்டும்; அதைவிட்டுவிட்டு தடாலடியாகப் பொத்தாம் பொதுவில்
    ஒரு மார்க்கத்தை இடித்துவிட்டு அவர் அதன் மீது எதைக் கட்டப்போகிறார் என்பதையும் கொஞ்சம் தெரிவித்தால் நலம்..!

  95. அன்பர் திரு chillsam அவர்களே,

    திரு என்னுடைய மறுமொழிகள் ஆணென்றும் பெண்ணென்றும் பார்த்து எழுதப்பட்டவை அல்ல. இது போல ஒருவரே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்களில் மறுமொழிகள் எழுதுவது வலைத்தளங்களில் சாதாரணமாக நடப்பதுதான் என்ற கருத்தில் எழுதப்பட்டது. எனது மறுமொழியில் மேரியன்னையைப் பற்றிக் குறிப்பிட்டது கூடத் தங்கள் தொடுப்பில் உள்ள பக்கத்தைப் படித்ததால் வந்த விளைவே. எனது வழக்கத்தில் என் நிலையிலிருந்து நான் இறங்கிவந்த ஒரு மறுமொழியாகவே அதை கருதுகிறேன். இதன் காரணம் அந்தப் பக்கத்தில் இருந்த ஹிந்து மதம் குறித்த தரம் தாழ்ந்த வர்ணனைகளே. அத்தகு தளங்களைத் தாங்களோ அல்லது Ms. glady அவர்களோ அல்லது திரு அசோக் குமார் கணேசன் அவர்களோ நடத்துவதை யாரும் தடுத்துவிட முடியாது. ஆனால், அப்படிப்பட்ட தளத்தை ஒருபுறம் நடத்திக்கொண்டு மறுபுறம் இந்தத்தளத்தில் வந்து ஏதோ ‘சகிப்புத்தன்மையின் சிகரம்’ போல மறுமொழி செய்வதால் வந்த உணர்வில்தான் தங்கள் தளத்தில் உள்ள வர்ணனைகளின் அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறிதளவு இறங்கியே நான் சென்ற மறுமொழியைச் செய்தேன்.

  96. தமிழ் ஹிந்துக்களே!

    எனக்கு Glady மற்றும் அவரை போன்ற உயர் ஜாதி மதம் மாறியவர்களை பற்றி ஒரு சிறிய புரிந்து கொள்ளல் சில நாட்களுக்கு முன்னாள் நடந்தது. அவர்களுக்கு ஜாதி ஒழிதலில் அத்தனை நம்பிக்கை இருப்பதாக எனக்கு படவில்லை. ஆனால் கிறிஸ்தவம் நாட்டின் பெரும்பான்மை மதம் ஆனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ள இடஓதுக்கிடு சட்டங்களை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்பதில் முழுமையான நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றே படுகிறது !!

  97. நண்பர் ந.உமாசங்கர் அவர்களின் இதமான மறுமொழி எனக்கு சற்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறது; எனது எழுத்துக்கள் தங்களது மனம் புண்படக்காரணமாக இருந்திருப்பின் தயவாக பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்; கருத்தின் தாக்கமும் கருத்தாக்கமுமே அனைத்துக்கும் காரணமாக இருக்கும்; தாக்கம் தாக்குதலாக அல்லாமல் தாக்குபிடித்தலாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  98. //கிறிஸ்தவம் நாட்டின் பெரும்பான்மை மதம் ஆனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ள இடஓதுக்கிடு சட்டங்களை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்பதில் முழுமையான நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றே படுகிறது !! //

    திரு.பிரதீப் பெருமாள் அவர்கள் புரட்சிகரமானதொரு கருத்தினை முன்வைத்திருக்கிறார்கள்; இதுபோன்ற கருத்து சமூக அக்கறையுடன் ஆழ்ந்து சிந்திப்பவருக்கே தோன்றும்..!

  99. #
    பிரதீப் பெருமாள்
    21 August 2010 at 4:30 pm

    //தமிழ் ஹிந்துக்களே!

    எனக்கு Glady மற்றும் அவரை போன்ற உயர் ஜாதி மதம் மாறியவர்களை பற்றி ஒரு சிறிய புரிந்து கொள்ளல் சில நாட்களுக்கு முன்னாள் நடந்தது. அவர்களுக்கு ஜாதி ஒழிதலில் அத்தனை நம்பிக்கை இருப்பதாக எனக்கு படவில்லை. ஆனால் கிறிஸ்தவம் நாட்டின் பெரும்பான்மை மதம் ஆனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ள இடஓதுக்கிடு சட்டங்களை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்பதில் முழுமையான நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றே படுகிறது !!//

    அவர்கள் போன்ற சிலரின் சுய நலத்துக்காக இந்தியாவை கிறிஸ்துவ பெரும்பான்மை நாடாக மாற்ற அனுமதிக்க முடியாது. கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிக்க முடியாது.இருக்கும் நிலவரத்திற்கு இட ஒதுக்கிடுகளை சரியாக நியாயமாக கொடுத்தால் போதும். இதற்காக அவர்கள் பெரும்பான்மை ஆவதை அதற்காக மதம் மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் அவர்களின் உரிமைகளை தாரளமாக பெறட்டும்.நம்மை துற்ற வேண்டாம்,நாமும் அவர்களை துற்ற வேண்டாம். அவர்கள் மஜாரிட்டி ஆக நினைப்பதே ஆதிக்க மனோபவமகவே படுகிறது. அவர்கள் எல்லையில் அவர்கள் இருக்கட்டும்,நம் எல்லையில் நாம் இருப்போம் நட்புடனேயே.

    அனால் ஒன்று நண்பர் பிரதீப் அவர்களே, அவர்கள் மட்டும் மஜாரிட்டி ஆகிவிட்டால் இந்த அளவு கருத்து சுதந்திரம் கூட நமக்கு கொடுக்காமல் அவர்கள் நம்மை நசுக்கி விடுவார்கள்.இப்படி minority ஆக இருக்கும் போதே இவர்களின் ஆட்டம் தங்க முடியவில்லை. ஒருசமயம் அவர்கள் மஜாரிட்டி ஆனால் நம் நிலை யோசிக்கவே கொடூரமாக இருக்கிறது.
    இன்று சிங்களர்கள்,முஸ்லிம்கள் தமிழ் இந்துக்களை இலங்கையில் படுத்தும் கொடுமை, அடக்குமுறை என்னவென்று யாரவது இலங்கை தமிழ் இந்து நண்பர்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.அந்த நிலை தான் நமக்கும் நேரும் இவர்கள் மஜாரிட்டி ஆகிவிட்டால்.

  100. கிலாடி போன்ற சில சுயநலத்திற்காக மதம் மாறுபவர் செய்வதை ஒரு சமூக பிரச்சனையின் வாயிலாக பார்க்க முயல்வது சரி யல்ல

    இன்றைக்கு சாதிவாரியாக Quota வைப்பது ஹிந்துக்கள் அல்ல – இதை முன்வைத்தது secular வாதிகலானவர்களும் பாதி கிறிஸ்தவர்களும், சோனியா போன்ற முழு கிறிஸ்தவர்களும் தான் – கிலாடி எதோ அவருக்கு மெடிக்கல் சீட் கிடைகாததர்க்கு ஹிந்துக்கள் தான் காரணம் என்று வருந்தி கிறிஸ்தவத்திற்கு மாறுவதெல்லாம் வெறும் அசட்டு தனம் – இந்த ஜாதி வெறியை நெய் விட்டு எரிய விட்டது கிறிஸ்தவனான ஆங்கிலேயர்களே

    இந்தி பூர புத்த மதத்திற்கு மாறினாலும் ,இஸ்லாமிற்கு,கிறிஸ்தவத்திற்கு மாறினாலும் இந்த Quota system இந்தியாவை விட்டு போகப் போவது இல்லை – அது முக்கால் வாசி அரசியல் சாயம் பூசப்பட்டே உயிருடன் இருக்கிறது – இந்த அரசியல் வாதிகள் இருக்கும் வரை அதுவும் இருக்கும், இரடாவதாக உண்மையிலேயே பின் தங்கியவருக்கு வாய்ப்பளிக்க Quota சிஸ்டம் நிச்சயமாக உதவுகிறது

    சட்டம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும் திடீர் என்று 12th முடித்ததும் ஐயோ மெடிகல் கிடைக்கலையே என்னோட அம்பது மார்க் குறைச்சு வாங்கினவனுக்கு கிடைக்குதேன்னு கிலாடி போன்றவர்கள் வருத்தபடுவது வேடிக்கை தான் – இந்த விஷயம் தான் முன்னாலேயே தெரியும் – தெரிந்திருப்பதால் ஒன்று இன்னும் நன்றாக படித்திருக்க வேண்டும் அல்லது வேறு ஒரு துறையில் முயற்சி செய்திருக்க வேண்டும் இன்றைக்கு முன்னுக்கு வந்துள்ள அத்தனை உயர் ஜாதியினர் என்று அழைக்கப்படும் அனைவரும் இந்த முறையே கையாண்டு உள்ளனர்.

    கிறிஸ்தவத்திற்கு மாறின சகோதரி கிலாடி அங்கு பெண்களுக்கு உரிமையே இல்லை என்பதை புரிந்துகொள்ள வில்லை – பெண்களை பன்றிக்கு இணையாக கருதிகிறது கிறிஸ்தவம் – witch hunt என்பது யார் நடத்தி பல்லாயிரம் பெண்களை கொன்று குவித்தது? கிறிஸ்தவர்கள் தான்

    ஆபிராமிய மதம் மனிதாபிமானமே இல்லாத ஒன்று – அதைக் கொண்டு என்றைக்குமே சமூக நீதி கிடைக்காது – அமெரிக்காவில் இருபது கிறிஸ்தவத்தால் வந்ததல்ல

    ஆகா பிரதீப் பெருமாள் அவர்கள் இந்தியாவின் சமூக நிலையையும் கிறிஸ்தவம் என்ன சொல்கிறது என்பதையும் கொஞ்சம் குழப்பி விட்டார் என்றே நினைக்கிறேன்

    மேலும் கிலாடி போன்றவர்கள் இவ்வளவு நாள் ஹிந்துவா இருந்தேன் , இப்போ கிறிஸ்தவத்திற்கு மாறிட்டேன் நிம்மதியா இருக்கேன் என்கிறார் – இதையே தான் குடிகாரனும், கஞ்ச அடிப்பவனும் சொல்றான்

    most christians reach a temoporary state of peace through hynosis process – i can reveal the entire set of practices followed by churches right fromt the kind of music beat they play to the lightings they arrange during congregations – they set the music beat to match the heart beat and the rythm gives some kind of temporary peace.

    The likes of Glady and Chillisam are never going to understand what pure conciousness is and means –

    having taken a detour they do not want to agree that they might be wrong on top of that they want to argue that the path they took leads to heaven, whereas in reality it only takes them to a burial ground where already 100 fresh bodies are already burried.

  101. சில்சம் அவர்களே
    “அவனா நீயி” என்று நகைச்சுவையாக (வடிவேலு பாஷை என்று குறிப்பிட்டு) சொல்லப்பட்டது. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அதைப் புரிந்துக்கொண்டு நகைத்துவிட்டுப் போவார்கள்.
    Have a sense of humour!

  102. Babu:
    // அனால் ஒன்று நண்பர் பிரதீப் அவர்களே, அவர்கள் மட்டும் மஜாரிட்டி ஆகிவிட்டால் இந்த அளவு கருத்து சுதந்திரம் கூட நமக்கு கொடுக்காமல் அவர்கள் நம்மை நசுக்கி விடுவார்கள்.இப்படி minority ஆக இருக்கும் போதே இவர்களின் ஆட்டம் தங்க முடியவில்லை. ஒருசமயம் அவர்கள் மஜாரிட்டி ஆனால் நம் நிலை யோசிக்கவே கொடூரமாக இருக்கிறது. //

    நீங்கள் தவறாக சிந்திக்கிறீர்கள், நண்பரே;
    அமெரிக்காவில் மெஜாரிட்டியாக உள்ள கிறித்தவர்களால் அந்த சாம்ராஜ்யம் ஆளப்பட்டாலும் அங்குள்ள சுதந்தரம் நம் அருகிலுள்ள மலேஷியாவிலோ சிங்கப்பூரிலோ கிடையாது;

    இன்னும் சொல்லப்போனால் எந்த முஸ்லிம் தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதோ அதே இடத்தில் அவர்க‌ளுடைய வழிபாட்டு தலம் அமையப்போகிறது;

    மேலும் எந்த ஒரு பள்ளியிலோ தொழிற்கூடத்திலோ அலுவலகத்திலோ யாரும் எந்த மத நம்பிக்கையையும் குறித்து பேசுவது தடைசெய்யப்பட்டுள்ளது;

    ஆம், நான் விரும்புவது அதே மனப்பான்மையைத் தான்; இதெல்லாம் அரசியல் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள்;

    ஆனால் கிறித்தவ மார்க்க நம்பிக்கை என்பது முற்றிலும் வேறானது; இதில் ஏகாதிபத்தியம்,மெஜாரிட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை;

    கிறித்தவம் தோன்றிய இடத்திலேயே அது வீழும் காரணமென்ன, அதனை ஒரு அரசாங்கமோ சமுதாயமோ எடுத்து வளர்த்துவிட முடியாது;

    இதே நிலைமை பௌத்தத்துக்கும் ஏற்பட்டது;முதல் நூற்றாண்டில் உலகில் புகழ்பெற்ற மார்க்கமாக விளங்கிய பௌத்தத்தின் இன்றைய நிலை என்ன? காரணம் அதன் ஆரம்ப நோக்கங்களைவிட்டு அது விலகிச் செல்லும்போது தானாகவே அதன் அடையாளத்தை இழந்துவிடும் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை;

    ஆனாலும் அதன் தத்துவங்களும் போதனைகளும் இன்றைக்கும் அநேகரை ஈர்த்துக் கொண்டுதானிருக்கிறது;

    அதுபோலவே கிறித்தவத்தை தயவுகூர்ந்து அரசியல் மற்றும் ஏகாபத்திய சக்திகளுடன் இணைத்துப்பார்க்காமல் அதனை ஒரு தத்துவமாக மட்டுமே பார்த்தால் நலம்;

    ஏனெனில் மதம் மாற்றுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் குழுக்கள் கிறித்தவ சமுதாயத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்களல்ல;

    உதாரணமாக சேவைகளினாலேயே மக்களைக் கவரும் வழிமுறையினை கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றிவரும் கத்தோலிக்க மார்க்கம் மதமாற்றத்தை ஊக்குவிக்கிறதில்லை;

    இதற்கு ஆதாரமாக இன்றைக்கும் கிராமங்களில் நாட்டுப்புறங்களில் திருமணம் மற்றும் திருவிழா போன்ற சமயங்களில் சமய சார்பில்லாமல் பங்கேற்கின்றனர்;

    தன் இனத்துப் பெண் இந்துவாகவோ கத்தோலிக்கராகவோ இருந்தாலும் அங்கே மதத்தைப் பொருட்படுத்தாமல் சம்பந்தம் கலக்கின்றனர்;

    இது கடந்த ஆயிரம் ஆண்டுகளாகவே நமது சமூகத்தில் நடைபெற்று வருகிறது; இதில் யார் எதிலிருந்து மாறி, யார் மெஜாரிட்டி ஆகிவிட்டார்கள் என்பதை யாரும் சொல்லமுடியாது;

    யோசியுங்கள்..!

  103. அன்பர் திரு chillsam அவர்களே

    தங்கள் புரிதலுக்கு நன்றி. எனக்கு யாரையும் எப்போதும் மனம் நோகப் பேசுவதிலோ எழுதுவதிலோ நடப்பதிலோ உடன்பாடில்லை. உங்களுக்குள்ளே இருக்கும் பரம்பொருள்தான் எனக்குள்ளும் இருக்கிறார். எனவே உங்கள் மனம் நோகப்பண்ணினால் எனக்குள்ளே இருக்கும் பரமன் என் மன வலியை எனக்குக் காட்டுவார்.

    நீங்கள் இங்கே எழுதியது என்னை சிறிதே அசைத்தாலும், தாங்கள் நிரலி இட்ட தங்கள் தளத்தில் எழுதியிருப்பதுவும், எழுத அனுமதித்திருப்பதும் நிச்சயமாக எனது மனம் மிகவும் நோகப் பண்ணுகிறது. அத்தகைய எழுத்துக்களைத் தாங்கள் தொடருவதா என்பதைச் சிந்தியுங்கள். அவ்வளவே.

    மதம் மாற்ற நீங்கள் முயற்சிப்பதும், நாங்கள் அதை எதிர்ப்பதும் நீங்களோ நானோ நிறுத்திவிட முடியாது. அது போப், காண்டர்பரி ஆர்ச்பிஷப், இன்னபிற கிறிஸ்தவத் தலைமை மதகுருமார்கள் கையில் உள்ளது. ஒருபக்கம் interfaith மாநாடுகளை நடத்திக்கொண்டு, மறுபக்கம் தொடர்ந்து மூன்றாம் உலக, வளராத, வளரும் நாடுகளில் பணத்தைப் பாதாளம் வரைப் பாய்ச்சி மதமாற்றம் செய்து வரும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மனம் மாறுதல் நீங்களோ நானோ கொண்டுவர முடியாது. அவர்களது தரம் அவ்வளவே.

    ஆனால் நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும் குறைந்த பட்சம் நீங்கள் குறிப்பிட்ட உங்கள் தளத்தில் தரம் தாழ்ந்து எழுதுவதைக் கைவிடலாம். எனது கோரிக்கை அவ்வளவே.

  104. சில்சாம்,

    //
    இணையதளம் அனைத்துலகுக்கும் பொதுவானது தானே, அதனாலேயே இன்றைக்கு பைபிள் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கும் சென்று அது அநேகரால் விவாதிக்கப்படுகிறது; அதன் பலன் விரைவில் தெரியவரும்; என்னிடம் உள்ளது உயர்தர சரக்கு எனில் அதைக் குறித்தும் அதன் அனுபவங்களையும் பேசுவதில் என்ன தவறு?
    //

    இது வெறும் நேர்மையற்ற கண்துடைப்பு மற்றும் sugar-coated wordings என்பதும் உம்போன்ற ஹிந்து விரோதிகளுக்கு நன்றாகத் தெரியும்.

    கிறித்தவர்கள் தாங்கள் கும்பிடும் சாமியைப் பற்றி பெரிதாகப் பேசிக்கொள்வதை யாரும் எதிர்க்கவில்லை.

    ஆனால், பொது ஊடகங்களை திராவிட இன வெறியினர் – மார்க்சிஸ்ட்களின் உதவியுடன் கைப்பற்றி, ஹிந்துக்களின் மனம் புண்படும்படி அவர்கள் மதக்கொள்கைகளைக் கண்டபடி தூஷிப்பதும், defamation செய்வதும், miracle என்று சொல்லி மக்களை ஏமாற்றுவதும், ஹிந்துக்களின் தெய்வங்களை இகழ்த்துரைப்பதும் முதலிய அநாகரீகச் செயல்களைத் தொடர்ந்து செய்து வருவதும், அத்தகு செயல்களுக்குரிய சட்டரீதியான தண்டனையிலிருந்து சட்டத்தில் loopholes கண்டுபிடித்து பொய்கள் கூறி minority politics என்னும் போங்காட்டம் ஆடி தப்பிப்பதும் பரம சாதுக்களுக்கும் கடும் கோபம் அளிக்கவல்லவையே.

    நீங்கள் நேர்மையானவராக இருந்தால், Da Vinci Code திரைப்படம் வெளிவரும்பொழுது உமது கிறித்தவ சகோதர-சகோதரிகள் சட்டத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அத்திரைப்படத்தைத் தடை செய்து பொதுமக்களிடமிருந்து மறைப்பதற்கு எடுத்து வந்த முயற்சிகளைக் கண்டித்திருப்பீர்கள். Da Vinci Code sequel 2 திரைப்படம் வந்தால், அப்பொழுது உமது தளத்தில், “எனது கிறித்தவ நண்பர்களுக்கு ஒரு அறைகூவல்” என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்புப் போட்டு “நீங்கள் இத்திரைப்படத்தைத் தடை செய்ய முயற்சி எடுப்பதைக் கண்டிக்கிறேன். பைபிள் இன்று பரவுவதற்கு freedom of expression நமக்கு சாதகமாக இருக்க, நமக்கு வேண்டாத பொழுது அந்த பேச்சு சுதந்திரத்தைக் காலில் இடற்றி நசுக்குவது மிக மிகத் தவறானது” என்று எழுதுங்கள் பார்ப்போம்.

    //
    இன்றைக்கு உலகிலேயே இணையதளத்தில் இலவசமாக வாசிக்கவும் தரமிறக்கவும் கூடியதானதொரு சிறந்த புத்தகம் இருக்குமானால் அது பைபிளைத் தவிர வேறில்லை;
    //

    இணையதளத்தில் இன்று இளைஞர்கள் எதைஎதையோ படிக்கிறார்கள், பார்க்கிறார்கள் — அதை விடுங்கள்.

    https://www.skepticsannotatedbible.com/ – இதில் பைபிளில் உள்ள வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் உருட்டி விட்டிருக்கிறார்கள் (இந்துக்களுக்கு — இத்தளத்தில் பைபிளைப் பற்றிக் கூறியதைப் படித்துப் பயன்பெற்று, கிறித்தவ மதமாற்றிகள் வாயை அடைப்போம்).

    Emerson, Thoreau, Huxley முதலிய சிந்தனையாளர்கள் பகவத் கீதையை (நீங்கள் “கிருஷ்ணன் போரில் உளறியது” என்று உமது blog-இல் வெறுப்புடன் தூற்றியதை) பலவாறு புகழ்ந்துள்ளனர். ஏன், பல கிறித்தவ மதத்தலைவர்கள் கூட “இம்மாதிரி ஒரு புத்தகம் நம்மிடம் இல்லையே” என்று ஏங்கி, வேறு வழியில்லாமல் கீதையைப் புகழ்ந்துள்ளனர்.

    //
    இதோ இங்கே பதிக்கப்படும் இந்து மதப் பெருமை பேசும் கட்டுரைகளையும் நான் தவறாமல் படிக்கிறேன்; அதனால் நான் மதம் மாறுவதோ தாய் மதம் திரும்புவதோ நடைபெறப்போவதில்லை;
    //

    ஆனால் இங்கு யாரும் (கிறித்தவ உந்துதல் இல்லாமல்) யேசுவையோ போப்பையோ கண்டித்து எழுதியதில்லை. நீங்களோ பொதுவிடங்களில் வாய்க்கு வந்தபடி பொய்கூறி பிரச்சாரம் செய்து ஹிந்து தருமத்தைத் தகர்க்கப் பார்க்கிறீர்.

    உங்கள் கையாலேயே ஹிந்து மதத்தைத் “தாய் மதம்” என்று எழுதி ஒப்புக்கொண்டு விட்டீர்கள். சோறுபோட்ட அன்னையைக் கால் அணாவுக்காகத் “தூற்றும்” மகனை ஒத்தவர் ஆகிவிட்டீர்கள்.

  105. ந. உமாசங்கர்
    23 August 2010 at 10:21 pm

    அன்பர் திரு chillsam அவர்களே
    நீங்கள் இங்கே எழுதியது என்னை சிறிதே அசைத்தாலும், தாங்கள் நிரலி இட்ட தங்கள் தளத்தில் எழுதியிருப்பதுவும், எழுத அனுமதித்திருப்பதும் நிச்சயமாக எனது மனம் மிகவும் நோகப் பண்ணுகிறது. அத்தகைய எழுத்துக்களைத் தாங்கள் தொடருவதா என்பதைச் சிந்தியுங்கள். அவ்வளவே.

    https://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37546748
    // நீங்கள் இங்கே எழுதியது என்னை சிறிதே அசைத்தாலும், தாங்கள் நிரலி இட்ட தங்கள் தளத்தில் எழுதியிருப்பதுவும், எழுத அனுமதித்திருப்பதும் நிச்சயமாக எனது மனம் மிகவும் நோகப் பண்ணுகிறது. அத்தகைய எழுத்துக்களைத் தாங்கள் தொடருவதா என்பதைச் சிந்தியுங்கள். அவ்வளவே. //

    நண்பரே தங்களது கூற்றை நான் முழுவதும் ஏற்றுக்கொள்ளுகிறேன்;ஆனாலும் தாங்கள் ஒரு காரியத்தை கவனிக்கவும்,நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த புனிதர்களையோ மகான்களையோ நாம் தூஷித்து பேசுகிறோமா?

    அகத்திய மாமுனி துவங்கி சிவவாக்கியர் ஔவை பாட்டியார் ஏன் விவேகானந்தர் ஆகட்டும் புத்தராகட்டும் நாம் அவர்களைக் குறித்து இதுவரை எதுவும் சொன்னதில்லை;

    அது புத்த மார்க்கமாகட்டும் ஆதிசங்கரராகட்டும் ஏன் விவேகானந்தரும்கூட தமது பிரச்சார பலத்தினாலேயே இத்துணை புகழடைந்தனர்;

    இவர்களெல்லாம் சீர்திருத்தவாதிகளும் புரட்சியாளர்களுமாக இருந்தனரல்லவா?

    ஆனால் நாம் இவர்களையும் ஒருபுறம் புகழ்ந்துகொண்டு மறுபுறம் அவர்கள் கண்டித்த காரியங்களையும் விட்டுவந்தோமில்லை;மாறாக இவர்களை தொழுவதினாலேயே இவர்கள் அடைந்த உன்னத நிலையினை அடைந்துவிடமுடியும் என்று தவறாக எண்ணுகிறோம்;

    இதுவே உமக்கும் எமக்கும் வித்தியாசம்; உதாரணமாக விஷ்ணு பகவானையும் ஜலேந்திரன் என்று அரக்கனையும் குறித்து வேதம் என்ன சொல்லுகிறதோ அதையே எனது தள நண்பர் குறிப்பிடுகிறார்;எமது சொந்த கருத்தையோ சொந்த விளக்கத்தையோ தரவில்லையே..?

  106. //
    இவர்களை தொழுவதினாலேயே இவர்கள் அடைந்த உன்னத நிலையினை அடைந்துவிடமுடியும் என்று தவறாக எண்ணுகிறோம்
    //

    Look who is saying this 🙂 – the great one’s you mentioned did not acclaim to fame just beause they had the Prachara balam – it is because they had truth behind them and they were speaking the truth – and not once did they try to cheat or talk non sense or try to cajole people through debasing means or gave money to listen to them – they did not say – listen to me you will get eyes, you will get 10 hands etc…. they only wanted to take people from truth to more truth….

    Just because you seek Pava the pardon of the lord, you think all your sins are gettind erased and you can go back and do the same – you consider all as sinners none of the greats you talked about said so…

    How many christians put to practice what is in the Bible – they go to churchevery sunday thats all – only a few follow – most of them think if they raise their hands up Jesus will cath their hands and be with it.

    Most international christians however follow what is said in the old testament fully – creating havoc in the world and they also divert money earned through immoral ways to build churches and convert people in the developing nations.

    on the contrary a majority of Hindus follow a good part of the dharmas prescribed

  107. சில்சாம்,

    உமது ஆழமான ‘ஆராய்ச்சியையும்’, ‘புலமையையும்’ மேலே காட்டியுள்ளீர்கள். கிறித்தவ ‘அன்பு வழி’ எத்தகையது என்பதை நீங்கள் கூறியிருப்பதை analyse செய்து பார்த்து புரிந்துக் கொள்வோம்…

    //
    விஷ்ணு பகவானையும் ஜலேந்திரன் என்று அரக்கனையும் குறித்து வேதம் என்ன சொல்லுகிறதோ அதையே எனது தள நண்பர் குறிப்பிடுகிறார்
    //

    வேதத்திற்கும், புராணங்களுக்கும், ஸ்மிருதிகளுக்கும் உள்ள வித்தியாசமே உமக்குத் தெரியவில்லை… ‘ஜலந்தரன்’ என்ற பெயரை ‘ஜலேந்திரன்’ என்று திரித்து எழுதுவதிலிருந்து உமது அரைகுறைத்தனம் தெரிய வருகிறது. வேதமே மூலம் என்று எல்லா ஹிந்துக்களும் அறிவர். வேதத்தை முன்னிறுத்திக்கொண்டு புராணங்களுக்கு எப்படி பொருள் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பல அறிவியல் ரீதியான பதில் உள்ளது. குறிப்பாக, நீர் காட்டும் புராணக்கதையைக் குறிப்பாக எந்த பண்டைய மதத்தலைவரும், குறிப்பாக துளசிக்கு முக்கியத்துவம் தரும் வைணவ ஆச்சாரியார்களும், எடுத்துக் கையாண்டதில்லை; இக்கதையை கதைகளை அவர்கள் authoritative-ஆக ஒத்துக்கொண்டதும் இல்லை. ஆகையால் நீர் கூறியதை வைத்து அறிவாளிகளான ஹிந்துக்கள் (குறிப்பாக விஷ்ணுபக்தர்கள்) கலங்கமாட்டர். இதை எல்லாம் தெரியாமல் நம்மிடமே விஷ்ணுவைக் குறித்து உபன்யாசம் செய்ய வந்துவிட்டீர்…. த்த்த்த்தூ!

    //
    அது புத்த மார்க்கமாகட்டும் ஆதிசங்கரராகட்டும் ஏன் விவேகானந்தரும்கூட தமது பிரச்சார பலத்தினாலேயே இத்துணை புகழடைந்தனர்;
    //

    பரமாத்மாவை செவிசுடும் அளவிற்குக் கண்டபடி தூற்றிவிட்டு, ஆதிசங்கரர் பெயரை வைத்து ஏமாற்றப் பார்க்கிறீர்! ஆதி சங்கரர் பல இடங்களில் “விஷ்ணு பரமாத்மா, பகவான், பரப்பிரம்மம், சர்வேச்வரன்” என்று கூறியிருக்கிறார். நீங்கள் பழித்த கீதைக்கு (இப்போது கிடைக்கும் பாஷ்யங்களில்) முதன்முதல் பாஷ்யம் எழுதியுள்ளார்.

    இறுதியாக, “நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?” (பரிபாடல்-15) என்று சங்கத்தமிழர் வியந்தனர். திருமாலைத் தூற்றியதோடன்றி, அவன்மார்பில் திருத்துழாய் மாலையாக எப்பொழுதும் வாசம் செய்து கொண்டிருக்கும் துளசி தேவியைத் தூற்றியதால் உமக்கு சங்கத்தமிழர் கூற்றுபடி நரகம் தான்.

  108. அன்பர் chillsam அவர்களே

    ///இதுவே உமக்கும் எமக்கும் வித்தியாசம்///

    நான் நேசக்கரத்தை நீட்டினாலும், ஏற்காமல், பூசி மழுப்புவது நீங்கள். இதுதான் மிக மிக முக்கியமான வித்தியாசம்.

    நீங்கள் உங்கள் தளத்தில் எழுதுவதும், எழுத வைப்பதும் அல்லது எழுத அனுமதிப்பதுமான முறை எனது மனதைப் புண்படுத்துகிறது என்று ஏன் எழுதினேன்? அதற்கு முன்பாக்க ஒரு மறுமொழியில் நீங்களாகவே முன்வந்து “எனது எழுத்துக்கள் தங்களது மனம் புண்படக்காரணமாக இருந்திருப்பின் தயவாக பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்” என்று எழுதியதுதானே காரணம்?

    இப்போது நீங்கள் எழுதுவது என்ன? எதனால் இந்த மாற்றம்? “தரம் தாழ்ந்து எழுதுவதைக் கைவிடுங்கள்” என்று நான் சொன்னதைக் கேட்க உங்களுக்கு மனமில்லாததால் அதற்கு சாக்குப் போக்கு சொல்கிறீர்கள். உங்கள் தரத்தை நான் உயர்த்த முயற்சி செய்தாலும், நீங்கள் எப்படியாவது என்னை provoke செய்து உங்கள் தரத்துக்கு என்னைக் கீழிறக்க முயர்ச்சி செய்கிறீர்கள். அன்பரே, அது நடக்காது. நீங்கள் பிரலாபிக்கும் “ஏசுவுக்கு உடன்பாடாகாது” என்றால் நான் “அவ்வாறு தரம் தாழ்ந்து எழுதாதீர்கள், எழுத அனுமதிக்காதீர்கள்” என்று கோர மாட்டேன். எனது கோரிக்கையை மீறி நீங்கள் தரக் குறைவாக எமது கடவுளரைப் பற்றி எழுதுவதன் காரணம், “ஏசு எங்களை அப்படியெல்லாம் எழுதவும் பிரச்சாரம் செய்யவும் பணித்திருக்கிறார்” என்று சொல்லுங்கள், நான் கோருவதை விட்டு விடுகிறேன். அப்படி ஏசு சொல்லவில்லை, “தரக் குறைவாக பிற மதத்தவர்களின் மனம் நோகப் பேசவும் எழுதவும் ஏசு ஆணை இடவில்லை” என்றால் அதை என் நீங்கள் செய்யவேண்டும்? எப்படிச் செய்யலாம்? செய்யக் கூடாதில்லையா? அப்படியானால் அதை நிறுத்துங்கள்.

    நீங்கள் உங்கள் நடவடிக்கைகளை ஏசு சொன்ன எந்த அளவுக்கு சீர் திருத்தியிருக்கிறீர்கள் என்று முதலில் பாருங்கள். பிறகு அகத்திய முனிவரோ, பகவத்பாத ஆதிசங்கரரோ, சுவாமி விவேகானந்தரோ சொன்ன விஷயங்களுக்கு வரலாம்.

  109. சில்லிசாம்,

    விஷ்ணுவையும், விநாயகரையும், முருகரையும் தூற்றி எங்களுக்கு சவால் விடுவதற்கு முன், உமது “பரிசுத்த” ஆவியின் லீலைகளை இங்கு சற்று அம்பலப்படுத்தலாம்… (இதைப் படித்தபிறகு, ‘பரிசுத்த’ ஆவி இருக்க, சாத்தான் என்று இரண்டாவதாக ஒருவர் தேவையா என்று அனைவரும் வியப்பர்!– When these folks have a ‘God’ like this one, who needs Satan?)

    நன்றி: https://www.skepticsannotatedbible.com/

    God is angry at David for having Uriah killed. As a punishment, he will have David’s wives raped by his neighbor while everyone else watches. It turns out that the “neighbor” that God sends to do his dirty work is David’s own son, Absalom (Samuel: 16:22). Samuel: 12:11-12

    God compares the destruction of Jerusalem to the rape of a woman who deserves to be raped because she has sinned. Jeremiah: 13:22

    God will kill the Egyptian children to show that he puts “a difference between the Egyptians and Israel.”
    11:7

    God orders Saul to kill all of the Amalekites: men, women, infants, sucklings, ox, sheep, camels, and asses. Why? Because God remembers what Amalek did hundreds of years ago. 15:2-3

    முக்கியமாகப் பெண்களுக்கு:

    # “In sorrow thou shalt bring forth children. … Thy husband … shall rule over thee.”
    God punishes Eve, and all women after her, with the pains of childbirth and subjection to men. (Genesis 3:16)

    [“ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும்…” என்னும் திருக்குறள் கூறிய தமிழரின் ஹிந்துக் கலாச்சாரத்திற்கும், பெண்களையும் தாய்மார்களையும் வெறுக்கும் பைபிளுக்கும் எத்தனை தூரம் என்பதை யோசித்துப் பாருங்கள்.]

    “Thou shalt not suffer a witch to live.” Thousands of innocent women have suffered excruciating deaths because of this
    verse. Exodus: 22:18

  110. ஏசு சொன்னதை விஷத்தை குடித்து காட்டுங்கள் என்று சில்சாமிடமும் கிளாடியிடமும், ஏசுவை விற்கும் கிறிஸ்துவ பிரச்சாரகர்களிடமும் கேட்கிறேன். யாருமே விஷத்தை குடித்து காட்ட தயங்குகிறார்கள். அவர்களுக்கே ஏசு சொன்னதில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாமல், ஏதோ சேல்ஸ்மேன் மாதிரி விற்பவர்களிடம் இப்படி நோண்டுவது நியாயமா? ஏதோ காசுகொடுக்கும் வெளிநாட்டு முதலாளி விற்கச்சொல்கிறார். இவர்கள் விற்கிறார்கள். பாவம் விட்டுவிடுங்கள்.

  111. விட்டுதொலையுங்கள் சொந்தங்களே , இவர்களெல்லாம் காசுக்காகவும் அதிகாரத்திக்காகவும் கீழ்த்தரமானமுறையில் தன்னைபெற்ற தாய் ஏழை என்பதற்காக மற்றொரு வசதியான பெண்ணை தாயாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள். இவர்களுக்கெல்லாம் மரியாதை கொடுத்து பதில் போடுவது நமது தகுதிக்கும் இழுக்கு நேரத்திற்கும் கேடு

  112. இத்தனை நாள் வைத்திருந்துவிட்டு தள்ளிவிடுவதுதான் கருத்து சுதந்தரமா…ஜனநாயகமா..?

  113. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள மண்டைக்காடு என்ற இடத்தில ஒரு சம்பவம் நடந்தது.
    அங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் திருவிழா நடக்கும்
    அந்தக் கோயிலுக்குப் போகும் வழி முழுக்க கிறிஸ்தவர்கள் இருப்பிடமாகும்.
    ஒவ்வொரு வருடமும் கடலில் குளித்து விட்டு கோயிலுக்குச் செல்லும் ஹிந்துக்களை கிறிஸ்தவர்கள் தாக்குவது,அவர்களிடம் வேண்டுமென்றே தகராறு செய்வது,என்று செய்து கொண்டிருந்தனர்.
    மிகக் கேவலமாக ஈர ஆடைகளுடன் கோயிலுக்குச் செல்லும் ஹிந்து சகோதரிகள் மற்றும் தாய்மார்களை தரங் கெட்ட முறையில் கேலி செய்வது என்று அக்கிரமம் செய்து கொண்டிருந்தனர்.
    இதை தட்டிக் கேட்க அப்போது ஒரு நாதியும் இல்லை.
    ஹிந்துக்கள் புழுங்கிக் கொண்டிருந்தனர்.
    பிறகு ஹிந்துக்கள் ஆர்ர் எஸ் எஸ் மற்றும் ஹிந்து முன்னணியை அணுகினர்.
    கிறிஸ்தவர்களின் இந்த அராஜகத்தை ஒழிப்பது என்று முடிவெடுத்தனர்
    அதன்படி அந்த ஆண்டு ஹிந்துக்கள் தற்காப்புக்காக தர்குப்பகாக திருப்பி தாக்கினர் .

    அதற்குப் பிறகு கிறிஸ்தவர்களின் கொட்டம் அடங்கியது.

  114. ONE OF MY CHRISIAN FRIEND WANTED TO CONVERT ME FOR WHICH I TOLD ONLY ONE THING ” IN YOUR CHURCH, MORNING PRAYER 8 AM, AROUND 10 AM BIRTH DAY PARTY, EVENING MARRIAGE BUT IN THE AFTERNOON, DEAD BODIES ARE BROUGHT TO CHURCH FOR PLACING IN THE PRAYER HALL BEFORE JESUS , THE DYING GOD BLEEDING WITH BLOOD. SO CHURCH IS THE CEMETRY, MARRAIGE HALL, BIRTH DAY PARTY HOSTING CENTER. WE HINDUS WILL TAKE BATH ONCE WE STEP IN THE PLACE OF MOURNING ONCE SOMEONE DIE. ALSO PASTERS IN CHURCH WILL CALL US AS ”SINNER ” (PAVAIGALE ” ). NOW POOR HINDUS MUST REALISE THAT CHRISTIANITY IS THE FALSE AND EXPENSIVE RELIGION AS ONE HAS TO RESERVE A PLACE, LAND FOR BURIAL FOR WHICH HE HAS TO BUILD A GRANIT TOME AND THE COST OF COFFIN IS EXPENSIVE. SO TOTALLY IT WOULD COST RS 1,00,000 IF A POOR HINDU WITHOUT ANY KNOWLEDGE GETS CONVERTED IN THIS FALSE SINNERS RELIGION. LET HINDUS EDUCATE THE IGNORANT HINDUS. FOR HINDUS, OUR GOD IS PRESENT IN OUR HEART AS ”ANTHARYAMI’ AND EVERY WHERE BUT FOR JESUS, THE SON OF GOD, IS NOT PRESENT ANYWHERE BUT FAR AWAY IN HEAVEN ACCORDING TO THEM. TILL HE RESURRECT AGAIN, THE SOULS WHO ARE BURIED IN GRANIT TOMB HAS TO STAY IN EARTH . HINDUS JUST BURN THE DEAD BODIES LIKE THEY JUST THROW OUT THE ROTTEN VEGITABLES OUT OF FRIDGE. HINDUISM IS FULL OF SCIENCE. CHRISTIANITY BELIEVE THAT EARTH IS A FLAT, SUN IS REVOLVING AROUND THE EARTH- PL READ THE BIBLE AND REALISE THEY ARE FULL OF FALSE.

  115. ஹிந்துக்களாக இருக்கும் வரை நமக்கு முழு சமூக,மத சுதந்திரம் உண்டு
    ஆனால் கிறிஸ்தவதுக்கோ , இஸ்லா முக்கோ மாறினால் நாம் பாஸ்டரிடமோ ,முல்லாவிடமோ அடிமையாக வேண்டும்
    கல்யாணம், சாவு,பிறப்பு,பிறப்பு சான்றிதழ் எல்லாவருக்கும் அவர்களை நம்பி இருக்க வேண்டும் .
    ஆகவே எல்லோரும் ஹிந்துவாக இருப்போம். சுதந்திரமாக iruppom

  116. வணக்கம்

    ////அதனை ஒரு தத்துவமாக மட்டுமே பார்த்தால் நலம்;////

    நல்ல ஜோக் சொல்லி இருக்கிறீர்கள், பூதக்க் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

  117. இனி எவனாவது என்னிடமோ அல்லது என் வீட்டிற்கு வந்து கிருத்துவத்தை பற்றி கூறினால் andru அவன் sethan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *