ஆபிரஹாமியத்தின் ஆதார அறப்பிழை.

ஆபிரஹாமியம் என்பது ஆபிரஹாம் என்பவரில் தொடங்கி ஓரிறைக் கொள்கையை மையமான நம்பிக்கையாக வைத்த யூதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களைக் குறிக்கும். இந்த மூன்று மதங்களுக்கும் கடவுளின் செய்தி இறைத்தூதர் ஒருவர் வழியாக வந்து சேர்கிறது. யூத மதத்துக்கு மோசஸ் இறைத்தூதர்; கிறித்துவத்துக்கு ஏசு; இஸ்லாத்துக்கு முஹமது. மூன்று மதங்களுக்கும் புனித நூல் வெவ்வேறு. யூதத்துக்கு டோரா, கிறித்துவத்துக்கு விவிலியம், இஸ்லாத்துக்கு குர்-ஆன்.

ஆபிரஹாமிய மதங்களின் வரலாறு என்பது உண்மையில் போர்களின் வரலாறுதான். மனித வரலாறெங்கும் போர்கள் நிறைந்துள்ளன.

போர்கள், போர்களின் அழிவுகள் ஆகியவை வழியாக, தொடர்ந்து மானுடப் பண்பாடும் நாகரிகமும் உருமாறிக்கொண்டே வந்துள்ளன. பழங்குடிப் போர்கள் எல்லாம் எதிர்த்தரப்பை முற்றாக அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டவை அல்ல. பழங்குடிப் போர்கள் புதிய விளைநிலங்கள், மேய்ச்சல் வெளிகள் ஆகியவற்றை நோக்கியே பெரும்பாலும் இருந்தன. அரசுகள் உருவான காலத்திலும் போரின் நோக்கம் அரசனின் ஆதிக்க விரிவாக்கத்தை நோக்கியே அமைந்திருந்தது. இன்னும் நுட்பமாகப் பார்த்தால் போரின் நோக்கம் அரசின் நிலைத்தன்மையை அதிகரிப்பது என்பதாகவே பெரும்பாலும் இருந்தது.

போர்களற்ற நீண்டகால அமைதி செல்வப் பெருக்கத்திற்கு முதல் அவசியம் எனும்போது, அவ்வாறான அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எல்லைப் பகுதிகளை வென்று கட்டுக்குள் கொணர்வதும், எதிரிகள் வளரவிடாமல் பார்த்துக்கொள்வதும் அரசுகளுக்கு அவசியமாக இருந்தன. அதே சமயம் தங்கள் பிரதேசங்களின் செல்வ வளம் பெருக்கவும் (கொள்ளை மூலம் அல்ல) வியாபார விரிவாக்கத்திற்காகவும், தம்முடன் பூசல்களற்ற பிரதேசங்களைக்கூட படையெடுத்து கையகப்படுத்திய வரலாறும் உண்டு. நம் நாட்டைப் பொருத்தவரை பெரும்பான்மையான அரசுப் போர்கள் இந்த இரண்டு காரணத்துக்காகத்தான் நிகழ்ந்தன.

இதைச் சொல்வதில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது– போர் முடிந்து அமைதி திரும்பிய பின்னும் தோற்ற நாட்டின் மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருப்பது என்பது, மேற்சொன்ன இரண்டு நோக்கங்களுக்கும் எதிராகத் திரும்பி விடும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இதனால்தான் போரில் அழிவு நேரிட்டாலும், வென்றபின் அந்தந்த நாட்டு மக்களின் நம்பிக்கைகளை மதிப்பது, கோயில்களைப் புதுப்பித்துத் தருவது போன்ற பணிகளில் அரசர்கள் ஈடுபடவும் செய்தார்கள். ஏனென்றால் போரின் ஆதார நோக்கம் அந்த நாட்டு மக்களின் கலாசாரத்தையோ மதநம்பிக்கைகளையோ வென்றெடுப்பதாக இல்லை. இது நம் நாட்டில் மட்டுமன்று, கிரேக்கத்திலும், ரோமப் பேரரசிலும் கூட இதைப் பார்க்கலாம். வென்ற நாடுகளின் கடவுள்களும் மத நம்பிக்கைகளும் அழிக்கப்படவில்லை. கிரேக்கம் தோற்றபின் கூட ரோமப் பேரரசில் கிரேக்கக் கடவுள்களும் மதக்கூறுகளும் ஏற்கப்பட்டன. இங்கிலாந்தின் கெல்டியக் கடவுள்கள் ரோம நம்பிக்கைகளுக்குள் உள்வாங்கப்பட்டு ஏற்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் பேரரசு என்பதன் விரிவு அதிகரிக்க அதிகரிக்க மேற்சொன்ன அணுகுமுறைக்கான சவால்களும் அதிகரிக்கின்றன. விரிவடைந்துகொண்டே போகும் பேரரசில் பூசல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக தொலைதூர எல்லைப் பகுதிகளை மேலாண்மை செய்வதும் கட்டுக்குள் வைத்திருப்பதும் எந்த அளவுக்கு பேரரசு விரிவடைறதோ அந்த அளவுக்கு சவால் நிறைந்ததாகிறது. பேரரசில் உருவாகும் இத்தகைய இடைவிடாத பூசல்கள், தொடர்ந்த போர்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட முடியும் என்கிற நிலை, ஒரு கட்டத்தில் போர்களின் மூலம் நீண்ட கால அமைதியை உருவாக்குவது என்கிற ஆதார நோக்கத்திற்கே எதிராகப்போய் விடுகிறது.

பேரரசின் விரிவாக்கமும் அதன் நீடிக்கக்கூடிய தன்மையும் மைய நோக்கு மைய விலக்கு சக்திகளைப் போன்றவை. இவை சமநிலையில் இருக்கும்வரை பேரரசுகளின் பொற்காலம் நீடிக்கிறது. பேரரசு அமைக்கவென்றே போர் செய்வதும் நாடுபிடித்து வென்று விரிவாக்குவதும் நெடுங்காலநோக்கில் அமைதியையோ செல்வத்தையோ உருவாக்குவதில் அவ்வளவு உபயோகமான விஷயமாக இருந்ததில்லை. இது கண்கூடாகத் தெரிவது பேரரசன் அலெக்ஸாண்டர் விஷயத்தில். அலெக்ஸாண்டருக்குப்பின் கிரேக்கப் பேரரசு அடைந்ததெல்லாமே வீழ்ச்சிதான்.

கிரேக்கப்பேரரசைத் தொடர்ந்த ரோமப்பேரரசும் இதே பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தது. ரோமப் பேரரசின் பல பகுதிகளில் இத்தகைய பூசல்களின் மையத்தில் இருந்தவர்கள் யூதர்கள். யூத மதம் ஆபிரஹாமிய மதங்களில் மூத்த மதம். ஆபிரஹாமியக் கடவுள் யாஹ்வா ஆபிரஹாமிய மக்களுக்கென்று ஒரு நிலப்பகுதியை வாக்களிக்கிறார். மட்டுமன்றி, பல இனத்தவர்களின் நிலங்களை போர்மூலம் வசப்படுத்துவதை இறையாணையாக ஆபிரஹாமுக்கு அளிக்கிறார். இந்தக் கதைகளின் உண்மைத்தனத்தை ஆராய்வதல்ல இக்கட்டுரையின் நோக்கம். ஆனால் இந்தக் கதைகள் ஆபிரஹாமிய மதக்குழுக்களின் ஆழ்மனதில் பல நூற்றாண்டு காலமாக உருவேற்றிய உளவியல் கூறு ஆராயப்பட வேண்டிய ஒன்று.

குறிப்பாக, ஆபிரஹாமிய மதங்கள் நாடுபிடிப்பதற்கு செல்வ வளம் பெருக்குதலைத்தாண்டிய ஒரு நோக்கத்தை ஒரே இறைவனின் ஆணையாக வடித்துத் தந்தன. இது போர்களின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாக ஆனது. ”அழிவும் நாசமும் போர்களின் விளைவு” என்பதை ”அழிவும் நாசமும் கடவுளின் விருப்பம்” என்று ஆபிரஹாமியம் மாற்றியமைத்தது.

கடவுளை போருக்குத் துணைக்கழைப்பது பாகன் மதங்களிலும் காணப்பட்ட ஒன்றுதான். ஆனால் அந்தக் கடவுள் போர்க்காலக் கடவுள் மட்டுமே, அமைதிக்காலத்துக்கு வேறு கடவுள்கள் வந்து விடுவார்கள். போரின் கொடூரங்களை ஆற்றுப்படுத்தும் சக்தியாக பல கடவுளர்கள் கைகொடுத்தனர். ஆனால் ஆபிரஹாமிய ஒரே கடவுள் தத்துவத்திலோ இப்படிப்பட்ட ஆற்றுப்படுத்தலுக்கான இடம் நிராகரிக்கப்பட்டது. ஒரே புனித நூல் என்பது அதனை மேலும் இறுக்கி மாற்ற முடியா இறைவார்த்தையாகக் கட்டமைத்தது. போரும் அழிவும் கடவுளுக்கு விருப்பமான ஒன்றாக புனித பீடம் ஏற்றப்பட்டது. போர்களின் வரலாற்றிலும் போரின் உளவியலிலும் இது ஏற்படுத்திய மாற்றம் முக்கியமானது.

 

இந்த உளவியல் இன்றும் உயிரோடு தொடரும் உளவியல். விவிலியத்தில் ”கானன்” என்கிற இனக்குழுவின் நிலம் ஆபிரஹாமியர்களுக்கு வாக்களிப்பட்ட நிலங்களில் ஒன்று. அமெரிக்கக் கண்டம்தான் இந்த நிலமென்றும் பூர்வீக அமெரிக்கர்கள்தான் (”செவ்விந்தியர்கள்”) விவிலியம் சொன்ன கானன் இனக்குழு– எனவே அவர்கள் வென்றொழிக்கப்பட வேண்டியது கடவுளின் விருப்பம்- என்றும் அன்றைய கிறித்துவ இறையியல் அறிவுறுத்தியது. இது ஏதோ 17-ஆம் நூற்றாண்டு விஷயம் என்று எண்ண வேண்டாம். ”பூர்வீக அமெரிக்கர்கள் விவிலியத்தில் சொல்லப்படும் கானன்கள் போல மூட நம்பிக்கையாளர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் காமப்பித்தர்களாகவும் இருந்த காரணத்தால்தால் அமெரிக்காவின் மீது ஆட்சி செலுத்த அருகதையற்றவர்களானார்கள்…. கிறித்துவர்களாக மாறுவதே அவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி” என்று இந்த வருடம் முழங்கியிருப்பவர் ‘அமெரிக்கக் குடும்பக் கூட்டமைப்பு’ என்கிற கிறித்துவ அமைப்பின் புகழ்பெற்ற தலைவர் ப்ரையன் ஃபிக்ஷர்.

அவரை முழுவதும் குற்றம் சொல்ல முடியாது. உரிமையையும் உடைமையையும் இழந்து நின்ற பூர்வீக அமெரிக்கர்களைப் பார்த்து ஜார்ஜ் வாஷிங்டன் ’எங்கள் வழிகளையும், கலைகளையும் ஏசு கிறித்துவின் மதத்தையும் ஏற்பதே நீங்கள் வாழ வழி’ என்று அன்று அறிவுறுத்தியதைத்தான் இவர் இன்றும் சொல்கிறார். ஜார்ஜ் வாஷிங்டனையும் குற்றம் சொல்ல முடியாது. விவிலியக் கடவுளானவர் தன்மேல் விசுவாசம் வைத்தவருக்கு வாக்களித்த நிலங்களில் இதுவும் ஒன்று என்று அவர் மனதார நம்பினார். விவிலியக் கடவுளானவர் தெளிவாக அப்படிப்பட்ட ஆணையை அறிவுறுத்தியிக்கிறார். நூற்றாண்டு காலமாக அது அழுத்தமானதொரு அற விழுமியமாக ஐரோப்பிய மனதில் தன்னை நிறுவிக்கொண்டுள்ளது. விவிலியத்தை முழுமனதோடு கடவுளின் வாக்கு என நம்பும் ஒருவருக்கு அமெரிக்கா என்பது தமக்கான நிலமாகவும் அங்குள்ள பூர்வீகர்கள் ஒரே இறைவனுக்கு எதிராக அந்நிலத்தை ஆக்ரமித்துக்கொண்டிருப்பவர்களாகவும் தோன்றியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

ஏனெனில் பிற கடவுளர்களையும் பிற புனித நூல்களையும் நிராகரித்துத்தான் ஆபிரஹாமியம் தன்னை நிறுவிக்கொண்டது. வேறு வகையில் சொல்லப்போனால், பிற கடவுள் வழிபாடும் பிற புனித நூல்களும் இருப்பதே ஆபிரஹாமியத்தின்முன் வைக்கப்பட்ட இருத்தலியல் சவால். அவற்றை அழிப்பதும் மாற்றி தன் வழிக்குக் கொணர்வதும் ஏதோ லௌகீக வளம், மானுட அமைதி சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. லௌகீக வளமும் மானுட அமைதியும் கேளிக்கையும் முக்கியமே கிடையாது. சொல்லப்போனால் தன்னை ஏற்காத பகுதிகளில் இருந்த வளமும் நிலவிய அமைதியும் குடும்ப ஒற்றுமையும் கேளிக்கைகளும் ஏன் குழந்தைகளும் கூட ஆபிரஹாமியக் கடவுளுக்கு ஒவ்வாதவை. அவற்றை அழிப்பதும் அவருக்கு உகந்ததே. அத்தகைய குடும்பங்களை உடைப்பதும் அவசியமே.

ரோமப்பேரரசன் கான்ஸ்டன்டைனுக்குப்பின், ஆபிரஹாமியத்தின் வேரூன்றலும் பரவலும் போரின் வரலாற்றையும் அதன் வழியாக ஒட்டுமொத்த சமூக உளவியலையுமே மாற்றியமைத்தது. பேரரசுகளை இனி செல்வ வளம், நிலைத்த அமைதி ஆகியவற்றை அடிப்படையாய்க்கொண்டு மட்டுமே நிறுவ வேண்டியதில்லை. அவற்றிற்கும் மேலாய் ஆபிரஹாமியக் கடவுளின் சாம்ராஜ்யத்தை நிறுவுதல் என்கிற புனிதக்கடமை வைக்கப்பட்டது.

மதத்தை நிறுவுதல் என்பது பேரரசின் நோக்கமாக ஆனதில், பேரரசின் விரிவாக்கம் என்கிற மைய விலக்கு சக்திக்கு மேலும் வலு சேர்ந்தது. கண்காணா தேசங்களையெல்லாம் ஐரோப்பிய எல்லைக்குள்ளிருந்து மத விசுவாசம் கொண்டு கட்டுப்படுத்த முடிந்தது. புனித விசாரணைகள் என்கிற பயங்கரவாதங்கள் அதற்கு உதவுமென்றால் தாராளமாக அதையும் நடத்திக்கொள்ளலாம். போரின் அழிவு ஆபிரஹாமிய ஒரே இறைவனின் செயலானதில் கடைசியாக ஒருவழியாக பேரரசர்கள் அந்தப் பொறுப்பின் மனச்சுமை நீங்கி ஆசுவாசப் பெருமூச்சு விட முடிந்தது- அதாவது சில நூற்றாண்டுகளில் அவர்களின் அதிகாரத்துக்கு எதிராக அதே மத நிறுவனங்கள் திரும்பும் வரை.

இதில் இஸ்லாம் கொண்டு வந்த இன்னொரு பாட நீட்சி என்னவென்றால், முஹம்மதுவின் வாழ்க்கையையே அது புனித உதாரணமாக்கியது. இறைதூதராக இல்லாத பாகன் முஹம்மது வெற்றிகரமான அரேபியப் பேரரசொன்றைத் தோற்றுவித்த மன்னராக மட்டுமே ஆகியிருப்பார். கோயில்களை எரிப்பதும் தோற்றவர்களை அடிமைப்படுத்துவதும் பெண்டாள்வதும் மற்ற பேரரசுகள் போல பேரரசின் உருவாக்கத்தில் விளைந்த அழிவுகள் என்று மட்டுமே காணப்பட்டிருக்கும். ஆனால் நபியாகிய முஹமது கோவில்களைச் சிதைத்ததும், தோற்றவர்களை அடிமை கொண்டதும் கொன்றழித்ததும் ஏக இறைவனின் புனிதக் கட்டளையின் பகுதியாகிப் போனது. இடம், காலம் ஆகிய வரையறைகளைத் தாண்டிய ஒரு புனித பீடம் கொடுஞ்செயல்களுக்குக் கிடைத்தது.

அடுத்தடுத்து வந்த இஸ்லாமிய மன்னர்களுக்கெல்லாம் கோயில் அழிப்பு வெறுமனே போரில் நிகழும் பாதிப்பு இல்லை. அது ஏக இறைவனின் விருப்பம். கோவில் அழிப்புக்காகவே படையெடுக்கலாம். ஏக இறைவனின் விருப்ப நிறைவேற்றம் அது. கொள்ளையடித்தல் அவன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் இன்னொரு பங்கு. சூறையாடுவதும் பெண்டாள்வதும் ஏக இறைவனின் விருப்பத்தைச் செயல்படுத்துவதற்குக் கிடைக்கும் கூலிகள், அவ்வளவே. வென்ற இடங்களில் வளமும் அமைதியும் முக்கியமல்ல, ஏக இறைவனின் பெயரைப் பரப்புவதே முக்கியம். இந்தப் பேரரசுக்கான சவால் பெர்ஷியாவை வெல்ல வேண்டும் என்றோ, இந்தியாவை வெல்ல வேண்டுமென்றோ அலெக்ஸாண்டருக்கு முன் இருந்த சவால் போன்ற ஒன்றில்லை. ஏக இறைவனை ஒப்புக்கொள்ளாதவர்களின் இருப்பே அதன் முன்னுள்ள சவால்.

எதிரிகளின் மீதான வன்முறைக்கும் எதிரிகளை அழித்தொழிப்பதற்கும் இறைபீடம் தந்ததன் வழியாக மட்டும் அல்ல, எதிரிகள் என்ற தரப்பு எதன் அடிப்படையில் கட்டப்பட வேண்டும் என்று காட்டித் தந்ததில்தான் ஆபிரஹாமியத்தின் ஆதார அறப்பிழை அடங்கியுள்ளது. எதிர்த் தரப்பை ஒரே இறைவனின் புனித நூல்களின் வழியாக எதிரிகளாகக் காட்டித் தந்ததன் மூலம் ஆன்மிகத்தின் உளவியலை ஆபிரஹாமியம் எதிர்மறையாய் மடைமாற்றியது. இறைவனுக்கு எதிரான இருத்தலியல் சவாலாக எதிர்த்தரப்பை காட்டித் தந்ததில் போர்களின் வரையறையை ஆபிரஹாமியம் புதிதாய் எழுதியது.

பிற கடவுளர்களை இழிவுறுத்தல், பிற மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்தல், அவர்களது பண்பாட்டு அம்சங்களை கேவலப்படுத்துதல், வழிபாட்டுத்தலங்கள் உடைத்தெறியப்படுதல் ஆகியவை இறைவனுக்கான புனிதக் கடமை என்கிற பெயரில், அற விழுமியங்களாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கைமாற்றித்தரப்பட்டு மதப்பரவல் முயற்சிகளால் பரவிக்கொண்டே செல்கின்றன. இதன் நீண்ட கால விளைவு ஒட்டு மொத்த மானுடத்தையும் நிரந்தரப் பூசல் குழிக்குள் தள்ளி விடக்கூடியது.

ஆபிரஹாமியப் பரவல் குறித்துப் பேசும்போது அது விளைவிக்கும் உளவியல் சீர்கேட்டையும், அதற்கு மூல காரணமாக விளங்கும் ஆபிரஹாமிய அடிப்படைவாதத்தின் தனித்தன்மை குறித்தும் கட்டாயம் பேசியே ஆக வேண்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

93 Replies to “ஆபிரஹாமியத்தின் ஆதார அறப்பிழை.”

  1. மிகச்சிறந்த சிந்தனை. எதிர் வினைகளை பற்றி சிந்திக்காமல் உருவாக்கப்பட்ட உபதேசத்தை சிந்திக்காமல் பின்பற்ற கூடாது என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

  2. எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயாரான் அவனது ஒரே வேதத்தினை, ஒரே தூதனை எல்லோரும் ஏற்கச்செய்ய போர் செய், கொலை செய், கற்பழி(போர்காலத்தில் மட்டுமல்ல அமைதியான காலத்திலும் கூடத்தான்). அப்படிசெய்தால் உனக்கு சொர்கத்தில் உறுதியாக இடம் கிடைக்கும். அஹா இது தான் ஆபிராகாமியம். இது ஆபிராகாமின் வழிவந்த அனைவருக்கும் பொதுவானது என்று இந்தக்கட்டுரை தெளிவாக்குகிறது. மனித வரலாற்றில் போர்களின் போக்கையே மாற்றிவிட்டது அபிராஹாமியம் என்ற ஸ்ரீ அருணகிரி அவர்களின் கருத்து சத்தியம் அன்றி வேறென்ன. இதில் பெருங்கொடுமை இன்று உலகில் அமைதியின்மைக்கு காரணமான அமெரிக்காவின் சித்தாந்தம் கூட ஆபிராஹாமியம் தான் என்பதே.

  3. திரு.அருணகிரி, அட்டகாசமான கட்டுரை. வாழ்த்துக்கள்.

    //இதில் இஸ்லாம் கொண்டு வந்த இன்னொரு பாட நீட்சி என்னவென்றால், முஹம்மதுவின் வாழ்க்கையையே அது புனித உதாரணமாக்கியது. இறைதூதராக இல்லாத பாகன் முஹம்மது வெற்றிகரமான அரேபியப் பேரரசொன்றைத் தோற்றுவித்த மன்னராக மட்டுமே ஆகியிருப்பார். கோயில்களை எரிப்பதும் தோற்றவர்களை அடிமைப்படுத்துவதும் பெண்டாள்வதும் மற்ற பேரரசுகள் போல பேரரசின் உருவாக்கத்தில் விளைந்த அழிவுகள் என்று மட்டுமே காணப்பட்டிருக்கும். ஆனால் நபியாகிய முஹமது கோவில்களைச் சிதைத்ததும், தோற்றவர்களை அடிமை கொண்டதும் கொன்றழித்ததும் ஏக இறைவனின் புனிதக் கட்டளையின் பகுதியாகிப் போனது. இடம், காலம் ஆகிய வரையறைகளைத் தாண்டிய ஒரு புனித பீடம் கொடுஞ்செயல்களுக்குக் கிடைத்தது.//

    ஒரு எழுத்துக்கூட மாற்றப்பட முடியாத இறை வசனங்களும், அவ்வாறே வாழ்ந்துகாட்டிய தேவ தூதர்களும், அப்படித் தான் வாழ்ந்தாக வேண்டும் என்று ஆனையிடும் ஒரே மத நூல்களும் எவ்வாறு கொடூரங்கள் புரிவதை மிகப் புனிதமான, இயல்பாகச் செய்ய வேண்டிய மதக்கடமையாக்குகின்றன என்பதை மிகச் சுருக்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்தி விட்டீர்கள். இதை மறுப்பவர்கள் ஒரே இறைவனின் வாக்கை மீறிய பாவியாகிறார்கள் என்று உளவியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் பிறமதத்தவரை அழித்து மாற்றும் கொடுஞ்செயலை குற்ற உணர்ச்சியே இல்லாமல் விரும்பிச் செய்ய வைக்கும் உத்தியைத் தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

    //எதிரிகளின் மீதான வன்முறைக்கும் எதிரிகளை அழித்தொழிப்பதற்கும் இறைபீடம் தந்ததன் வழியாக மட்டும் அல்ல, எதிரிகள் என்ற தரப்பு எதன் அடிப்படையில் கட்டப்பட வேண்டும் என்று காட்டித் தந்ததில்தான் ஆபிரஹாமியத்தின் ஆதார அறப்பிழை அடங்கியுள்ளது. எதிர்த் தரப்பை ஒரே இறைவனின் புனித நூல்களின் வழியாக எதிரிகளாகக் காட்டித் தந்ததன் மூலம் ஆன்மிகத்தின் உளவியலை ஆபிரஹாமியம் எதிர்மறையாய் மடைமாற்றியது.//

    மொத்த்க் கட்டுரையின் சாரத்தை ரத்தினச் சுருக்கமாக வெளிப்படுத்தும் வரிகள் இவை.

    நன்றிகள்!

  4. ஆபிரகாமிய மதங்களில் கடவுள் நம்பிக்கை என்பதே உண்மையில் கிடையாது. எனவே தான் , கடவுள் நியாயம் வழங்குவார் என்ற எண்ணம் இல்லாததால், வெடிகுண்டு, துப்பாக்கி, கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களையும், கடவுள் நம்பிக்கை உள்ள பிற மதத்தினரையும் கொலை செய்தல், இறுதியாக ஷியா, அகமதியா, சுபி என்று இஸ்லாத்துக்குள்ளேயே படுகொலைகள் என்று திரிகிறார்கள். பெண்ணடிமையும், பிறர் மீதான வன்முறையுமே அவர்களின் அடிப்படை. எல்லாம் வல்ல இறைவன் இந்த அயோக்கிய சிகாமணிகளை பூண்டோடு ஒழித்து முடிப்பான். இது காலத்தின் கட்டளை.

  5. கட்டுரை, சரியான கோணத்தில் சிந்தித்து எழுதப் பட்டுள்ளது. சலனமற்ற மனத்துடன் இதைப் படிப்பவர்கள் உண்மையின் பக்கம் வருவார்கள்.

    இறைவனுக்கு ‘ஏக இறைவன்’ என்று பெயரிடுவது ‘வேறு இறைவன்’ இருக்கிறான் என்று பொருள்படுகிறது. ‘அவனுக்கு எதிரி ஒருவன் உண்டு’ என்று கற்பனை செய்வது, அவனுடைய ‘எங்கும் நிறைந்த தன்மை’யைச் சந்தேகத்துக்கு உள்ளாக்குகிறது. இல்லாத பகையைத் தேடி ‘முடிப்பது’ என்று துவங்கி எல்லோரையும் அழிக்க முனைவது எப்படி நீதியாகும் ?

    ‘ஏக இறைவன்’, ‘எதிரி’ என்கிற சிந்தனைகளெல்லாம் இறைவனுக்குரிய உருவத்தின் உறுதியை நோக்கி மனிதரை இழுத்துச் செல்கின்றன. பிறகு எங்கிருந்து ‘உருவமற்ற இறைவன்’ வருவான்?

    ‘முரண்பாடுகளின் மொத்த உருவம்’ என்று சொல்வார்களே… அதுதான் இதுவோ என்னவோ ! இம்மாதிரிக் கொள்கைகள்?! எல்லாம் ‘அறிஞர்கள்’ எனப்படுவோர் நிறைந்த தேசங்களில் இன்னும் உயிரோடு உலவுவதுதான் புரியாப் புதிராக இருக்கிறது.

  6. இந்த கட்டுரையை படித்துவிட்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. கட்டுரையாரளுருக்கு இந்த மதங்களைப் பற்றி அடிப்படை விவரங்கள் கூட தெரியவில்லை.ஐந்தாம் வகுப்பு மாணவனின் சமுக புத்தகத்தில் மதங்களைப் பற்றி உள்ள விவரங்களை படித்தால் கூட இந்தக் கட்டுரையின் உள்ள விவரங்கள் அனைத்தும் பொய் என்று விளங்கும்.

    உதாணரமாக நபிகள் நாயகத்தை ஒரு முகலாய அரசர் போல் கற்பனை செய்து மிக பெரிய அரண்மனை, கோட்டை கொத்தளங்கள், அழகிய பெண்கள் என்று வாழ்ந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார் – பாவம்.

    ஐயா இந்த மதங்களின் வேத நூல்களை ஒரு சில பக்கமேனும் படித்திருக்கிறீர்களா? இந்த மதங்கள் ஆபிரகாமில் இருந்து ஆரம்பம் ஆகிறது என்றால் – ஆதாம், நோவா போன்றவர்கள் எல்லாம் யார்?

    போர் என்பது நமக்கு கிடைத்த ஆவணங்களின் படி பண்டைய எகிப்திய, சுமேரிய, சிந்து சமவெளி நாகரீக மன்னர் காலம் முதல் தொடங்கி இன்றைய பாரக் ஒபாமா முதல் தொடர்ந்து கொண்டே இருப்பது. மதங்களுக்காக சில போர்கள் நடந்து இருக்கலாம். எல்லா போர்களுமே மதங்களுக்காக நடந்தது இல்லை. கீதை கூட போர்முனையில் சொல்லப்பட்டது தான். இராமாயணமும், மகாபாரதமும் போர்களையே கருவாக கொண்டவை என்பதை கட்டுரையாளர் மறந்துவிட்டார் போல.

    இதற்கு ஆகா ஓஹோ என்று பின்னூட்டம் வேறு! அய்யா, அம்மாக்களுக்கு இன்னும் பலவருடங்கள் கவலை இல்லை.

  7. பாகிஸ்தானில், பஸ்ஸில் பயணம் செய்த 18 ஷியா முஸ்லீம்களை, கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஜர்பன் கிராமத்துக்கு அருகே சன்னி முஸ்லீம் தீவிர வாதிகள் , வரிசையாக நிற்கச்சொல்லி சுட்டுக்கொன்றனர். இறந்த பதினெட்டு பேரை தவிர மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, கவலைக்கிடமாக உள்ளனர். -( தினமணி பக்கம் 12 / 29.02.2012. புதன்கிழமை )

    இதுபோன்ற கொலைகள் வாராவாரம் ஒருமுறை பல இஸ்லாமிய நாடுகளிலும், ஷியா முஸ்லீம்களும் , சன்னி முஸ்லீம்களும் சேர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிற மதங்களை பின்பற்றுவோர் தவறு செய்யலாம், ஆனால் இங்கோ மதநூல் என்றும், இறைவனின் வாக்கு என்று இவர்கள் நம்புகிற நூலிலேயே , பிறரை கொல்லுமாறு கட்டளைகள் உள்ளன. இன்டர்நெட்டில், ஏராளமான வலைத்தளங்களில் , இவர்களின் புனித நூலில் எவ்வளவு இடங்களில் பிறரை கொல்லுமாறு கட்டளைகள் உள்ளன என்பதை அத்தியாய எண், சுறா எண் , என்றெல்லாம் முழு விவரத்துடன் பட்டியலிட்டுள்ளனர்.) இது அமைதி மார்க்கம் என்று இவர்கள் பொய் சொல்லலாம். ஆனால், எந்த கேனையனும் கூட இதனை நம்பமாட்டான்.

  8. மும்மீங்களை நாம இன்னும் சரியா புரிஞ்சுக்கவே இல்லை. இப்படி எல்லாம் சமத்தா கட்டுரை எழுதினா திருந்திடுவாங்களா? இங்கே உள்ள எல்லா கேள்விகளுக்கும் டவ்ஹீத் அண்ணன் பதில் சொல்லுவார். முக்கியமா ஒன்னு கடவுளின் அற சிந்தனையை ஒரு மனிதனின் அற சிந்தனை வாயிலாக பார்க்கக் கூடாது. காபிர்களை நாய் மாதிரி கொள்வது மனித சிந்தனைக்கு தவறானதாக இருக்கலாம் ஆனால் ஏக இறைவன் எல்லாம் அறிந்தவன் மிக்க கருணை கொண்டவன். அவனுக்கு காபீரை கொள்வதே சரி. கடவுள் இப்படி சிந்திக்கும் பொழுது கட்டுரைகளை எழுதி தள்ளி சுவனப்ரியங்களை மாற்றி விடலாம் ஏற எண்ணம் மட்டும் வேண்டாம். நாம் நமது சந்தோசத்திற்காக கடமை என்று எண்ணி எழுதுவோம். மும்மீனாய் பார்த்து திருந்தாவிட்டால் கொலைவெறியை ஒழிக்க முடியாது என்று நினைவில் கொண்டால் நல்லது.

  9. சிக்கந்தர்

    குரானை பற்றி மும்மீங்களை விட காபிர்களுக்கே அதிகம் தெரியும். முகம்மதுவை பற்றியும் தான்
    நீங்கள் இஸ்லாத்தை மதம் என்று கூறியது எனக்கு பெரும் வருத்தம் அளிக்கிறது. அது மதமல்ல மார்கமல்லவோ.

    நபிகள் முதில் ஒரு டரிட்ரனாக இருந்து, ஏற்கனவே இருமுறை மனமானவரை (கதீஜா) காசுக்காக மணந்தார். காசு வந்தவுடன் அவர் போட்ட ஆட்டம் தாங்காமல் ஊர் காரர்கள் துரத்தி விட மெக்கா பறந்தார். மறுபடியும் தரித்ரம். அப்புறம் கொஞ்ச ஜெப்படிகளை வைத்துக் கொண்டு போற வரவனைஎல்லாம் அல்லாவின் பேரை சொல்லி கொள்ளை அடித்தார். வீரப்பனுக்கு ஜனங்க பயப்படுவது போல நபிகளுக்கு பயந்தார்கள். நபிகள் கில்லாடித்தனமாக அல்லாவையும் பார்ட்னெர் ஆகினதால் மக்கள் பாவம் ரெம்ப ஏமாந்தார்கள். இன்று ஒரு பில்லியன் முட்டாள்கள் ஒரு கொள்ளை காரனின் பின்னால்.

    நபிகள் சின்ன வயதில் சண்டையில் தான் கேட்ட பைபிள் கதைகளை புரட்டிப் போட்டு உளறி வைக்க அதுவே குரான் ஆனது. வெறும் அபத்தங்கள் கொண்டது. குரானை ஹடீத்துக்கள் இல்லாமல் புரிந்து கொள்ள முடியுமா. உதாரணத்திற்கு அல்லா நபிகளை பார்த்து நபியே உங்களுக்கு விருப்பமானதை ஏன் தடை செய்துகொள்கிறீர்கள் (மரியாவை பற்றி). மரியாவினால் தனுக்கு ஏற்பட்ட சங்கடம் தீர ஒரு மாத கால மனிவிகளை பிரிந்திருக்க வேண்டியதாயிற்று,. அதை சமாளிக்க அல்லா முஹம்மடுவிர்க்கு சகாயம் செய்கிறார் வஹியை இறக்கி.

    இப்படி முஹம்மதுவின் ஒவ்வொரு ஆசைக்கும் ஒரு வஹி. ஜைனபிர்க்கு ஒன்று, ஆயிஷாகொன்று என்று லிஸ்டு பெருசு. இப்படி வஹிக்கள் பொதுவாக எல்லோருக்கும் உதவும்படி இல்லாமால் நபிகளின் வாழ்கையில் நடந்த சம்பவங்களுடன் தொடர்புடயடாக அதுவும் எப்போவெல்லாம் நபிகள் கேவலாமாக மாட்டிக் கொண்டாரோ அப்போவெல்லா அல்லா வந்த உதவ நேர்ந்துள்ளது. இதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே போதும் குரான் நபிகளின் சொந்த சரக்கு என்று.

    குர்ஆனில் எக்கா சக்க எழுத்து பிழை, இலக்கண பிழைகள். அபத்தங்கள் – உலகம் தட்டை. சூரியன் அர்ஷுக்கு போய் அல்லாவுக்கு சலாம் வைக்கிறது. வண்டுகள் பழங்களை சாப்பிடுவது. ஆளா ஆயிரம் ஒழி வருடங்களுக்கு அப்பால் இருப்பது. சூரியனை படைத்த அல்லவே சூரியனி மேல் ஆணையாக என்று சத்ய பிராமாணம் செய்வது… என்று ஏக்கக் சகலக அபத்தங்கள். ஒரு கடவுளால் நிச்சயமாக அபத்தம் செய்ய முடியாது. மனிதனே குர்ஆனில் உள்ளது போல அல்பத்தனமாக எழுத மாட்டான். அது நபிகளால் மட்டுமே முடியும்.

  10. ஐந்தாம் வகுப்புப் புத்தகங்களை என்ன… முதுகலைப் பட்டப் புத்தகங்களைப் படித்தால் கூட இக்கட்டுரை உரைப்பது பொய் என்றுதான் தோன்றும். அப்படித் தோன்றவேண்டும் என்பதற்காகவே தயாரிக்கப்பட்டவை அவை.

    தன் வழியை ஏற்காதவர்களைத் தீர்த்துக் கட்டும்படி இம்மறை நூல்களில், குறிப்பாக இஸ்லாமிய மறை நூல்களில், சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ? எழுத இந்த வலைத் தளத்தில் இடம் இல்லை.

    ஸ்ரீ ராமாயணத்தில் தன் பெண்டை ஆள நினைத்தவனை எதிர்த்து, பலமுறைகள் எச்சரிக்கை செய்து, இராவணனின் தரப்பே எடுத்துச் சொல்லியும் கேட்காமல், தான் அழியப் போவதை அறிந்தே, வீண் போருக்குக் காரணமான, போர்க் களத்துக்கு வரும் ஒருவனை, எதிர்த்து நிற்பது பற்றி வருகிறது.

    மகா பாரதத்திலும், அதனுள் அடங்கிய ஸ்ரீ மத் பகவத் கீதையிலும், போர்க்களத்தில் தன்னை எதிர்த்து நிற்பவர்களை எதிர்க்காமல் தயக்கம் காட்டிய ஒருவன் கொள்ள வேண்டிய வீர எழுச்சி பற்றிக் கூறப்பட்டுள்ளது.

    இதில் எதுவும் தன் மதத்தை ஏற்காதவர்கள் மீது தூண்டப்படும் வன்முறை ஆகாது. பல அன்பர்கள் இவ்விஷயங்களை எல்லாம் இவ்வலைத் தளத்தில் நிறைய விளக்கியிருக்கிறார்கள்.

    இக்கட்டுரைக்கு ஆகா ஓகோ என்று பின்னூட்டம் தருவது தவறு என்றால், தாங்கள் குறிப்பிடுபவற்றை மறை நூல்கள் என்று சொல்லுவதே அபத்தமாகி விடும்.

    தன் மதத்தினருக்குள் எதையும் செய்து கொள்ளச் சொல்ல அம் மறை நூல்களுக்கு உரிமை இருக்கலாம். பிறரை அழிக்கச் சொல்ல என்ன உரிமை அவற்றுக்கு இருக்கிறது?

    நீங்கள், “எங்கள் மறை நூல்களில் இப்படிப்பட்ட எந்தக் கருத்தும் இல்லை” என்று சொல்ல வருகிறீர்களா?

  11. வள்ளி மணாளன்

    //தன் வழியை ஏற்காதவர்களைத் தீர்த்துக் கட்டும்படி இம்மறை நூல்களில், குறிப்பாக இஸ்லாமிய மறை நூல்களில், சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ? எழுத இந்த வலைத் தளத்தில் இடம் இல்லை. //

    இஸ்லாமிய மறை நூல்களில் எங்கு “தன் வழியை ஏற்காதவர்களைத் தீர்த்துக் கட்டும்படி” எங்கு கூறப்பட்டு உள்ளது?

    //இதில் எதுவும் தன் மதத்தை ஏற்காதவர்கள் மீது தூண்டப்படும் வன்முறை ஆகாது. பல அன்பர்கள் இவ்விஷயங்களை எல்லாம் இவ்வலைத் தளத்தில் நிறைய விளக்கியிருக்கிறார்கள்.//

    இந்த மதங்களில் நீங்கள் குறிப்பிடும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதைப் பற்றி இந்த மதங்களை பின்பற்றும் ஒரு சிலராவது கேட்காமலா இருந்திருப்பார்கள்? அதனைக் குறித்து விளக்கங்கள் இல்லாமலா இருந்திருக்கும்?

    இது எதையுமே தெரிந்து கொள்ளாமல் வெறுமனே சாணியை வாரியிறைப்பது என்ன நியாயம்?

  12. \\\\\\\\இஸ்லாமிய மறை நூல்களில் எங்கு “தன் வழியை ஏற்காதவர்களைத் தீர்த்துக் கட்டும்படி” எங்கு கூறப்பட்டு உள்ளது?\\\\\

    இல்லையென்றால் ஏன் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உலகமுழுதும் ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவிகளை குண்டு வைத்து கொல்கிறார்கள்.

  13. அப்படிப்பட்ட ஆபிரஹாமியத்தின் ஆதார அறப்பிழைதான் சரித்திரகால யூதர்கள்,கிறித்தவர்கள், இஸ்லாமியர்களின் அவர்களுக்குள்ளேயான அடி,தடி,ரகளை,கொலை,குத்து,கொள்ளை,வன்முறை, பாரதம் வரை பரவி, இந்துக்களை சின்னாபின்னமாக ஆக்கியதுபோலவே, இன்றும் இஸ்லாமிய அல்கொயிட போன்ற தனிமனித வக்ரங்களாகவும், சி ஐ எ போன்ற கிறித்தவ அரசாங்க வக்ரங்களாகவும் மாறி,அதே அடி,தடி,ரகளை,கொலை,குத்து,கொள்ளை,வன்முறை,போதைப்பொருள் வணிகம்,கருப்புப்பண பதுக்கல் மற்றும் வங்கிகளாக, பாரத மக்களை அழிக்க முற்படுகின்றன.

  14. புனித மோசடி அல்லது வேண்டுமென்றே ஏமாற்றுதல் ’தக்கியா’ (Taqiyyah) — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் – எழுதியவர்: நல்லான்
    “ உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் ’”
    “ தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச்சுடும் “
    “எல்லாவிளக்கும் விளக்கல்ல, சான்றோர்க்குப் பொய்யாவிளக்கே விளக்கு. “
    மேற்கூறிய செய்யுள்களில் பொதிந்த கருத்துப்படி, ‘இஸ்லாமியர் ஒருவர் தன் நெஞ்சறிய பொய்சொன்னாலும், அப்பொய் அவருடைய இஸ்லாமிய நெஞ்சைச் சுடாது, பொய்யாவிளக்கே இஸ்லாமில் கிடையாது. ஆகவே, இஸ்லாமில் சான்றோர்கள்…………..? என கேள்வியும் ஒருங்கே எழுகிறது
    உலகிலுள்ள மற்ற ஒவ்வொரு நல்ல மரபிலும், மதத்திலும் நல்லொழுக்கம்
    போதிக்கப்படுகிறது. அனுசரிக்கப்படுகிறது. ஆனால், இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக
    மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது. இஸ்லாமியத்தில்
    நல்லொழுக்கம் பற்றி அதன் புனித நூல்களிலிருந்து இருப்பதையே இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. படித்தறியவும். மேலும் பொய்களும் ஷரியா சட்டப்படி குற்றமும் ஆகாது. மேலே படியுங்கள் புரியும்.
    இஸ்லாமிய புனித மோசடி ’தக்கியா’என்பது, (Taqiyyah), இஸ்லாமின் காரணங்களுக்காக அல்லது இஸ்லாமின் நன்மைக்காக, எல்லாவித பொய்களையும் எவரிடமும், எந்த நிலையிலும் சொல்லிக்கொள்ள, இஸ்லாமிய புனித நூல்களே முஸ்லிம்களுக்கு
    அனுமதி அளித்திருக்கின்றன. இஸ்லாமை நிருவிய முகம்மதுவே ஒரு முன்னுதாரணமாக தன் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் அவ்வாறே ஒழுகி, வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார். அப்பொய்கள், ’இஸ்லாமின் காரணங்களுக்காக / நன்மைக்காக’ என்ற போது, அப்பொய்களும் தனக்குத்தானே (automatic) புனிதத்தன்மையை அடைந்து கொண்டு விட்டன போலும்!!?
    இதனால், முஸ்லிமில்லாத மக்களின் விசுவாசத்தைப் பெற்று, அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு, அவர்களுடைய பலவீனமான தருணத்தில், அவர்களை மடக்கி தோற்கடித்து,
    குரானில் உள்ளது உள்ளபடி, உலகத்தையே இஸ்லாமிய மயமாக்க, தேவைப்பட்டால்
    அல்லாவின் நாமத்தைச் சொல்லி, ‘அல்லாஹூ அக்பர்’ என்ற ’ஜிஹாத் புனித போர் ஒலி’யை உரக்கப் பரக்கக் கூவிக்கொண்டே குறுக்கே வரும் எவரையும் கொன்றுபோடலாம். [போட்டுத்தள்ளலாம்!!!]. முஸ்லிம்களுக்கு, நம் நாடு (patriotism), தம் மக்கள் (Blood relations can be killed for honour killing), தன் நண்பர்கள் (friends), என்று எவரும் முக்கியமல்ல, இஸ்லாம் என்ற மத இயக்கம் ஒன்றே ஒன்று தான் மிக முக்கியம். (Islam is most important than anything else) இதனால் தான் அன்றும், இன்றும், என்றும் மெக்கா இருக்கும் மேற்கு திசையை நோக்கியே (ஸலாத் / நமாஸ் – தொழுகை) செய்கின்றனர். ‘எல்லா புகழும் அல்லாவுக்கே’ என மேற்கே
    இருக்கும் மெக்காவில் அவதரித்த முகம்மதுவால் தொடக்கப்பட்ட இஸ்லாமின் அல்லாவுக்கே
    போய் சேர வேண்டும். இக்கட்டுரையில், முகம்மதுவைப் பற்றிய சரித்திரத்திலிருந்தும், குரான் (இறைச்செய்தி), ஹதிஸ்-சுன்னா (முகம்மது நபி தன் வாழ்க்கையில் நடத்திக்காட்டிய மரபு, பழக்க வழக்கங்கள்), சிராத்(வாழ்க்கை வரலாறு), ஆகியவற்றிலிருந்து சில உதாரண ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் இஸ்லாம் புனித நூல்களில் உள்ளது உள்ளபடியே தான் கொடுக்கப்பட்டுள்ளது.

  15. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் காலப்போக்கில் இப்பொய்களும் உண்மை என ஒப்புக்கொள்ளப்படும் என ஜெர்மனியின் கோயபல்ஸ் (நாஸி ஹிட்லரின் கொள்கைப் பிரசார மந்திரி) அன்று சொன்னான். அந்த வற்றாத ஊற்றான ஒழுங்கில்லா முறையை பல மத இயக்கங்களும், தமிழ் நாட்டுக் கழகங்களும், பெதுவுடமைக் கட்சிகளும் (கம்பூனிஸ்ட்), தங்கள் ஜேபிக்குள் தயாராக வைத்து, உபயோகித்து பிழைத்துக் கொண்டுதான் இன்றும் இருக்கின்றன. நாஸி ஹிட்லருக்கு இஸ்லாமை நிருவிய முகம்மது தான் ஒருவேளை முதல் ஆசானோ! இக்கழகங்களுக்கும், கம்பூனிஸ்ட்களுக்கும் ஹிட்லர் தான் முக்கிய ஆசானோ!!
    அந்த காலத்தில் காந்தியை, காமாந்தகாரர், வடக்கத்திய பனியா, தலித்துகளின்
    எதிரி, இந்திய நாட்டுக்கு சுதந்திரமா – வெங்காயம், வெள்ளைக்காரனே! இந்தியாவுக்கு
    சுதந்திரம் கொடுத்துவிட்டு, நீ இந்தியாவை விட்டு எங்கேயோ ஓடிப்போனாலும் போ!
    பரவாயில்லை, ஆனால் மெட்ராஸ் மாகாணத்தை யாவது உன் கஸ்டடியில் வைத்து, காட்டுமிராண்டி மொழியான தமிழைக்காட்டிலும், ஆங்கிலத்தை முதன் மொழியாக வைத்து விடு, இங்குள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திரம் அளித்து விடாதே!! என ஒப்பாரி வைத்து கூவிய கூட்டம், அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என கூக்குரலிட்ட முன்னேற்றமோ அல்லது முன்னேற்றமடையாத கழகமோ, இன்று அண்ணல்-காந்தி
    என அவர்கள் வாயிலிருந்து புது திரு அவதாரம் எடுத்துள்ளார். ஒருகாலத்தில் நேரு, இந்திரா
    காந்தியை தூஷித்த கழகம் இன்று இவர்கள் நினைவாக மலர், மாலை, புகழாரம் சூட்டி
    மகிழ்கின்றனர். இவர்களும், ஹிட்லரின் ’தக்கியா’வை ‘இஸ்லாத்திலிருந்து’ தான் கற்றனரோ!!?
    cont…..

  16. இதைத்தான் ’இனம் இனத்தோடு சேரும்’ என சொல்கிறார்களோ!! (ஒரே மாதிரியான இறகைக்கொண்ட பறவைகள் – birds of the same feather flock together) இஸ்லாம், இடதுசாரிகள், நாஸிகள், (Islam, Leftist parties, Nazis) இம்மூன்று இயக்கங்களும் ஒரே மாதிரியான அடிப்படை கொள்கைகளைக் கொண்டவைகள். இம்மூவருக்கும் முக்கியத்வம் உள்ளவை: சர்வாதிகாரம், ஜனநாயகத்திற்கு எதிர்ப்பு, காரியத்தை சாதித்துக்கொள்ள சந்தர்ப்பவாதம், (எல்லாவிதமான பொய்கள் உள்பட) அகில உலக பரவுதல், ஓரினக் கொலைகள், அரசியலில் ஆர்வம், எல்லாமே அரசாங்கவுடமை, சொல்லிலும் செயலிலும் முழு வேற்றுமை, தங்களையாரும் அடிமையாக்கிக் கொள்ளக்கூடாது, ஆனால், மற்றவர்களைத் தாங்கள் அடிமை களாக்கலாம், போன்ற மிக மகத்தான கொள்கைகள்!!?
    ’எதற்காக இவைகள் இக்கட்டுரையில்’ என கேட்பவர்களுக்கு எனது பதில் — ஒரே விதமான பல கொள்கைகளுடன் இம் மூன்று இயக்கங்களும் உள்ளன, இவைகளில், ‘இஸ்லாமிய தக்கியா’ போன்ற சந்தர்ப்பவாதக் கொள்கையும் சேர்ந்தேதான் உள்ளது என ஒரு ஒப்புதலுக்குக் காட்டத்தான் இம்மூன்றைப்பற்றியும் எழுதியுள்ளேன்.
    அஃதே போல ‘இஸ்லாம்’ என்பதன் பொருளே, ’அமைதி’ என (Islam means peace!!?) வெற்றியுடன் எட்டு திக்கெட்டும் எட்ட முஸ்லிம்கள் முரசொலிக்கின்றனர். ’இஸ்லாம்’ என இட்டுக்கொண்ட
    பெயரிலும் ஒரு ‘தக்கியாவா’? என கேட்கத் தோன்றுகிறதல்லவா! ஆரம்பத்திலேயே தக்கியா துவங்கி விட்டது.

    cont….

  17. @ //சிகந்தர் on March 3, 2012 at 7:55 am//

    மஹரிஷி தயானந்த சரஸ்வதி அருளிய ‘சத்ய அர்த்தப் பிரகாசம்’ என்னும் நூல் ஆரிய சமாஜம் (சென்ட்ரல்) மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியச் சமயங்கள் உட்பட உலகச் சமயங்களைப் பற்றி எல்லாமும் அவற்றின் மறை நூல்களைப் பற்றி எல்லாமும் அலசப்பட்டுள்ளது.

    அந்நூலின் பதினான்காம் பாகத்தில் குர் ஆனை ஆதாரமாக வைத்தும், அரபு மொழியிலுள்ள அந்நூலை மௌலவிகள் உருதுவில் மொழி பெயர்க்க, அதனை தேவநாகரி எழுத்தில், ஆரிய பாஷையில் ஆக்கி, அரபுப் புலவர் சரிபார்த்துத் திருத்தி எழுதப் பட்டதாக முன்னுரை உள்ளது.

    அதன் மொழி பெயர்ப்பினை நீங்கள் மறுப்பதானால், மௌல்விகளின் மொழி பெயர்ப்பை முதலில் மறுக்க வேண்டும் என்றும் அந்த முன்னோட்டம் கூறுகிறது. அந்நூலில் எண்ணிலடங்காத பிற மத தூஷணைகள் அடுக்கப்பட்டுள்ளன.

    நான் திருக் குர் ஆனை மொழி பெயர்ப்பின்றிப் படிக்க முடியாது. மேற்படி நூலை ஆதாரமாக வைத்தே என் கருத்தைப் பதிவு செய்தேன்.

    Sample இதோ:

    142 (1) காபிரிகளைக் கண்டதும் கழுத்தை வெட்டுங்கள். அவர்களைக் கட்டிக் கொன்று குவியுங்கள்.

    144. போர்க்கோலத்தில் தன மதத்திற்காகப் போராடுவோர் அல்லாஹ்வுக்குப் பிரியமானவராவார்.

    146. ஓ நபியே, காபிரிகளைத் தாக்குங்கள்; பகைவருக்குக் கொடுமை செய்யுங்கள்.

    79. கடவுள் காபிரிகளின் வேரைச் சிதைப்பார்…அறுங்கள் கழுத்தை; வெட்டுங்கள் விரல்களை.

    நண்பரே…

    எனக்குப் புரிந்ததெல்லாம், தன் வழியை ஏற்காதவர்களைத்தான் ‘காபிரிகள்’ என்று குறிப்பிடுகிறார்கள் என்றுதான். ஒரு வேளை இது முகமது அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரபுப் பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நீங்கள் மறுமொழி தந்தால், இங்கே இந்தியாவில், இன்றைய தேதியில், அம்மறை நூல் தரும் செய்தி Edit பண்ணப்பட வேண்டுமல்லவா?

    என் கூற்றில் தவறு இருந்தால், Sample- க்காக நான் தந்துள்ளது போன்ற எண்ணில்லாத வசனங்களுக்கு வேறு பொருள் தரவேண்டியிருக்கும்.

    தேவையில்லாமல் நான் பிற மத நூல்களைப் பற்றியோ மதத்தினர் பற்றியோ எழுதுவது கிடையாது. வெறும் போரைப் பற்றி இங்கு நான் மறுமொழி தரவில்லை. பிற மதத்தினருக்கு எதிரான போர் பற்றி இக்கட்டுரை பேசியுள்ளது. அதற்குப் பாராட்டுத் தந்த மறுமொழியாளர்களை நீங்கள் கேலி பேசியிருக்கிறீர்கள். அதனால்தான் மறுமொழிகள் மீண்டும் மீண்டும் தர வேண்டியுள்ளது.

    எனது முந்தைய மறுமொழியில் நான் குறிப்பிட்டுள்ளது போல, எத்தனையோ அன்பர்கள் எத்தனையோ மறுமொழிகளில், நீங்கள் குறிப்பிடும் மறை நூல்களில் வரும் பிற மதத்தினர் மீதான வன்முறைத் தூண்டல் வசனங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

    நாங்கள் உங்கள் மறை நூலைப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் நீங்கள், முதலில் இவ்வலைத்தளத்தில் வந்துள்ள, இது பற்றிய அனைத்துக் கருத்துக்களையும் படியுங்கள். பிறகு, பதில் இருந்தால், எழுதுங்கள்.

    எம்மதமாயினும் அதில் நல்லதுதான் இருக்கிறது என்றால், மாறுவதற்கும் மாற்றுவதற்கும் என்ன இருக்கிறது? சகிப்புத் தன்மையில்லாமல் பிறரைத் தாக்க என்ன இருக்கிறது?

  18. வேணுகோபால்
    இஸ்லாத்தில் அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது என்று சொல்கிறீர்களே தவிர எங்கே சொல்லப்பட்டு இருக்கிறது அதரத்தொடு நிருபியுங்கள் பார்க்கலாம்.

    குர்ஆனில் இருந்து சில வரிகளை உருவி போடாமல், இஸ்லாம் அல்லாதவர்களை கண்ட இடத்தில் போட்டு தள்ளுங்கள் என்று சொல்லும் வரிகள், அதன் முந்தய வரிகள், பின் உள்ள வரிகள், அந்த வரிகளுக்கான ஹதீஷ்களில் இருந்து விளக்கம், அதை ஆமோதிக்கும் இஸ்லாமிய சுபிகளின் புத்தகங்கள் என்று ஆதரங்கள் காட்டுங்கள் பார்க்கலாம்.

  19. கீழே கொடுத்தவைகளை ஒரு முறை படித்தபின் முஸ்லிம்கள் கூற்று சரிதானா என உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பகுத்தறிவாளர்களுக்கும் பதில் கிடைக்கலாம்.
    (உண்மையாகவே பகுத்து ஆராயும் அறிவு என ஒன்று அவர்களுக்குக் கூட இருந்தால்!! தமிழ்
    நாட்டுக் கழகங்களுக்கும், இடதுசாரிகள், பொதுவுடமைக்காரர்களுக்கும் சேர்ந்தே
    கூறுகிறேன்.).
    ஒரு நண்பர் கூறுவது போல ”ஜிஹாதும் தக்கியாவும் இஸ்லாமின் இரு கண்கள். ஜிஹாத் மட்டும் இல்லாதிருந்தால் இன்று இஸ்லாம் இருந்த இடமே இல்லாது என்றோ மறைந்து போயிருக்கும்” என்பார். இதைப்பற்றி சற்று சிந்தியுங்கள்.
    பல மிதவாதி முஸ்லிம்கள் (moderate Muslims) , தாங்களும் (அதாவது 99.999 % என பெரும்பான்மை முஸ்லிம்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு) இஸ்லாமிய
    வன்முறைகளைக் கண்டிக்கிறோம் என குளியலறைப் பாடகர்களாக (Bath room singers) ஆலாபனையுடன் சங்கீத நிகழ்ச்சி ஒன்றை நடத்தி நாடகமாடுவார்கள். தங்களை பெரும்பான்மை முஸ்லிம்கள் என (பீற்றி) சொல்லிக்கொண்டும், இஸ்லாமிய தீவிரவாதிகளை மிகச் சிறுபான்மையினரான (Miniscule minority) எனவும் சுலபமகச் சொல்லிச் சொல்லி, தீவிர
    வாதத்தையே ஒரு நமுத்துப்போன பட்டாசாக்கி சித்தரித்து விடுவார்கள். இந்த
    முழக்கத்தையே, வெட்டொன்று துண்டுரெண்டாக, மிகச் சிறுபான்மையினர் என (Miniscule minority) சித்தரிக்கப்படும் அதி திவிரவாத முஸ்லிம்களின் முகத்திற்கெதிரே, அல்லது இஸ்லாமிய பொது மேடைகளில் ஏறி, இஸ்லாமிய புனித நூல்களில் உள்ள உண்மைகளை வெளியில் கூறி, அல்லது போட்டுடைக்க மாட்டார்கள். காரணம், ஒன்று, உயிருக்கு உத்திரவாதமில்லை, இரண்டு, மிதவாதிகளும் முஸ்லிம்களாதலால், இப்படி ’தக்கியா’ சொன்னால் தான், பெரும்பான்மையினரான முஸ்லிம்களுக்கு, இன்னும் வருங்காலத்தில் ‘தக்கியா’ செய்து இஸ்லாமிய அடிப்படை கொள்கையான ‘உலக இஸ்லாம்’ நிருவ உதவும். மேலும் மிதவாதிகளும் தீவிர வாதிகளுக்கு உடந்தையாக பணிபுரிந்துதவமுடியும்

    cont…..

  20. இப்படி வாய்கொப்பளித்தால் மட்டும் தீவிரவாத தாக்குதல்கள் நின்றுவிடாது. இப்படி ஆணுமல்ல, பெண்ணுமல்ல என நபும்ஸகராக இருப்பதைக் காட்டிலும், உண்மைக்காக போடாடி, ஒன்று சிறுபான்மையினரை வென்று, அல்லது வெல்ல முடியாவிடின், இஸ்லாமிலிருந்து வெளியேறலாமே!. அனேக முஸ்லிம்கள் இன்று மிகத் துணிவு பூண்டு, மனசாட்சிக்கு விரோதமில்லாமல், முன்னாள் முஸ்லிம்களாக ஆகவில்லையா? அதற்கென முதுகுத் தண்டில் சற்று கூடுதல் சக்தி வேண்டுமையா!! மண்புழுவாக இருந்து கொண்டு வாயாடிவிட்டால் மட்டும் உங்கள் வன்முறை கண்டிப்புக்கு எவ்வித விடிவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆக மிதவாதி 99.999 % கோழைகளும், தீவிரவாத வன்முறைக்குத் துணைபோகும் கூட்டாளிகளே. மற்றொரு இடத்திலும் இக்கட்டுரையில் இம்மிதவாதிகளைப்பற்றி கூறியிருக்கிறேன். தீவிரவாதிகள், மிதவாதிகள் இவ்விருவருக்கும் வேற்றுமையே கிடையாது. ஒருவன் குண்டு வீசுவாவான். மற்றொருவன் அதைப்பற்றி அந்தரங்கமாக கண்டிக்கிறேன் என குசு குசு மொழியில் கதை விட்டு ரீல் சுத்துவான். (பொய் சொல்வான்). ஆனால் குற்றமற்ற நிரபராதி மக்கள் மடிந்தாலும் பகிரங்கமாக கண்டிக்க மாட்டான். ஆக விளைவு ஒன்றுதான். மிதவாதிகளும் அடிப்படையில் முஸ்லிம்கள்
    தானே! குருடனுக்கு ராஜபார்வை வந்துவிடுமா என்ன?
    (அல்லது தீவிர வாதிகள் மிகச் சிறுபான்மையோர் (Miniscule minority) என சொல்வதும் ஒரு பொய்யா? ‘தக்கியா’வா? ஆக மொத்தம் மிதவாதிகள், தீவிரவாதிகள் இவர்களில் வேற்றுமையே கிடையாதல்லவா!!).

  21. முகவுரை முடிந்து இப்போது ’தக்கியா’ தலைப்புக்குச் செல்வோம்.
    ””வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு””
    நம்மையே கொல்லவரும் பகைவரின் வாளையும் கண்டு கூட நீ பயப்பட
    வேண்டாம். ஆனால், நண்பன்போல நடித்து உன்னை அடுத்துக் கெடுக்க வரும் நண்பன என சொல்பவனுடைய நட்பைக் கண்டு அஞ்சு.. இஸ்லாமிய நட்பும் அவ்வகையே.
    பொய்சொல்வது, ஏமாற்றுவது, என உலகத்தாரால் குற்றங்களாகக் கருதப்பட்டவைகளை
    நிகழ்த்திக்கொள்ள, இவைகளை இஸ்லாமிய புனித நூல்கள் வாயிலாக ’தக்கியா’ என புனித
    பெயரிட்டுப் புகுத்தி, இவைகளையும் முஸ்லிம்கள் கட்டாய புனித (ஷரியா) சட்டமாக்கி /
    புனித பட்டயமாக்கி, தனதாக்கிக் கொண்டுவிட்டனர். ஆக, பொய்சொல்வது, ஏமாற்றுவது, இவைகளின் விளைவு, மாபெரும் குற்றங்களான கொள்ளை யடிப்பது, திடீர்த்தாக்குதல் நிகழ்த்துவது, கற்பழிப்பது, வலுச்சண்டைக்குப் போவது, சித்திரவதை செய்வது, ஓரினக்கொலை புரிவது, வஞ்சனையாக திட்டமிட்டுக் கொலை செய்வது, ஆகியவற்றில்தான் (இஸ்லாமில்) கடைசியில் முடிவடைகிறது. இவைகள் அனைத்தையும் காஃபிகளுக்கெதிராக (முஸ்லிமல்லாதவர்களுக் கெதிராக) நிகழ்த்தினால், இஸ்லாமிய புனித ஷரியா சட்டப்படி குற்றமில்லை. அல்லாவும் பரிசாக சுவன (சுவர்க) சுகமளித்து தானும் மகிழ்ந்து ஜிஹாதிகளையும் மகிழ்விப்பார். இதில் ஒரே ஒரு முக்கிய நிபந்தனை, சுவனசுகமடைய, முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத கள்ளமில்லாத காஃபிகளைக் கொன்று, அந்த வெடிகுண்டு விபத்தில் தன் இன்னுயிரையும் தந்து அல்லாவாகிய முகம்மதுவை (?) அல்லது முகம்மதுவாகிய அல்லாவை மகிழ்விக்கவேண்டும். அவ்வளவேதான். மிக சுலபம்.
    cont…….

  22. அபிரஹாமிய முதல் கோணல் முற்றும் கோணல் அதாவது ஆதார அறபிழை என்பது இஸ்லாத்தில் வெளிப்படையாக புனித நூலில் எழுதிவைத்து பின்பற்றுகிறார்கள். இதையே கிருஸ்துவ பாதரிமார்கள் வாடிகனால் ரகசியமாக வெளி உலகத்திற்கு தெரியாத பதவி பிராமாணமான (ஜேசூட் ஓத்) என்பதில் குறிபிட்டுள்ளார்கள். இரண்டும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.
    26.3.2000 ஆண்டு வாட்டிகனால் வெளியிடப்பட்ட (Jesuit oath) ஜிசஸ் பிரமாணம் என்ன சொல்கிறது என்பதை பார்போம்

    கத்தோலிக ஜிசஸ் பிரமாணம்

    (கிருஸ்துவத்தின் குறிக்கோள் உலக கிருஸ்துவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவது)

    (நான் இதை சத்தியமாக அறிவிக்கிறேன்)

    1. நான் சந்தர்பம் நேரும்பொழுதெல்லாம் கருணை பாராட்டாமல் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ வேறுமாற்ற கருத்து கொண்டவர்களை, புரோடெஸ்டன் மற்றும் பொதுவுடமை பேசுபவர்களிடம் போர் குணம் கொண்டு அணுகுவேன். நான் அதற்காகவே தூண்டப்பட்டிருப்பதால் அவர்களை வேருடன் அழிக்கவும் அவர்களது வாடையே உலகில் இல்லாமல் செய்ய கடமைபட்டிருக்கிறேன்.
    2. இந்த குறிக்கோளை அடைய நான் வயது, பால், இனம், சூழ்நிலை இவற்றை பற்றி எல்லாம் யோசிக்க மாட்டேன்.
    3. மாற்று கருத்துகொண்டவர்களை தூக்கில் இடவும், கொதிக்கும் தண்ணீரில் தோல் உரிக்கவும், கழுத்தைநெறித்து உயிரோடு புதைக்கவும், அவர்களது கர்பமான பெண்களின் வயிற்றை கிழித்து எடுத்து சிசுவை தலையை சுற்றி சுவற்றில் அரைவேன் அதனால் அவர்களது இனம் தொடர்ந்து வருவதை முற்றிலுமாக தடுப்பேன்.
    4. இவற்றை செய்ய இயலாமல் நேரும் பொழுது அவர்கள் சமூகத்தின் உயர் பதவி, அந்தஸ்து, அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் மறைமுகமாக அவர்களுக்கு விஷம் கொடுப்பது, கயிற்றினால் தூக்கில இடுவது, துப்பாக்கி முனையில உள்ள கத்தியால் குத்தி கொல்வது போன்ற காரியங்களில், சமயோசித புத்தியுடன் போப்பினால் ஆணையிடப்பட்டோ அல்லது அவரது மேல் அதிகாரிகளான ஜிசஸ் பிரமாணிகளான புனித நம்பிக்கை சகோதரர்களின் ஆணையின் பேரில் செய்து முடிப்பேன்.

  23. இங்கிலாந்தில் வைக்ளிப் என்ற பாதரி இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தார். அவர் பைபிளை முதன் முதல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இவர் போப்பை விமரிசித்த குற்றத்திற்காக ரோம் அரசால் கடுமையாக தண்டிக்கப்பட இருந்தார். ஆனால் இவர் சாமர்தியமாக அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து வாழ்ந்து பிறகு இயற்கை மரணம் எய்தினார். இவரை தண்டிக்கமுடியாமல் போனதினால் இவர் இறந்தபின் 31 ஆண்டுகள் கழித்து அவரது கல்லறைகளிலிருந்து எலும்புகளை தோண்டி எடுத்து எரிக்க உத்தரவிட்டது வாடிகன். அவ்வாறே செய்தனர் இதுதான் கர்த்தர் கூட்டத்தின் கருணை.
    இப்படி அபிரஹாமிய மதங்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை நிறுவ வஞ்சனைகள் செய்வது வஞ்சத் தீர்பது என்பதை பரம்பரையாக பின்பற்றி வருகிறார்கள். இது உடம்புடன் ஒட்டி பிறந்த குசு நாற்றம்.

  24. வள்ளி மணாளன்

    நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் தர வில்லையே?

    //தேவையில்லாமல் நான் பிற மத நூல்களைப் பற்றியோ மதத்தினர் பற்றியோ எழுதுவது கிடையாது. வெறும் போரைப் பற்றி இங்கு நான் மறுமொழி தரவில்லை. பிற மதத்தினருக்கு எதிரான போர் பற்றி இக்கட்டுரை பேசியுள்ளது. அதற்குப் பாராட்டுத் தந்த மறுமொழியாளர்களை நீங்கள் கேலி பேசியிருக்கிறீர்கள். அதனால்தான் மறுமொழிகள் மீண்டும் மீண்டும் தர வேண்டியுள்ளது.//

    இஸ்லாத்தை பரப்புவதற்காக பிற மதத்தினருக்கு எதிராக போர் புரிந்து அப்பாவி மக்களை கண்ட இடத்தில கொள்ளுங்கள் என்று எங்கே சொல்லப்பட்டு உள்ளது?

    அதுதான் ஆதாரம் கொடுத்து இருக்கிறேனே என்று சொல்கிறீர்களா?

    //142 (1) காபிரிகளைக் கண்டதும் கழுத்தை வெட்டுங்கள். அவர்களைக் கட்டிக் கொன்று குவியுங்கள்.
    144. போர்க்கோலத்தில் தன மதத்திற்காகப் போராடுவோர் அல்லாஹ்வுக்குப் பிரியமானவராவார்.

    146. ஓ நபியே, காபிரிகளைத் தாக்குங்கள்; பகைவருக்குக் கொடுமை செய்யுங்கள்.

    79. கடவுள் காபிரிகளின் வேரைச் சிதைப்பார்…அறுங்கள் கழுத்தை; வெட்டுங்கள் விரல்களை. //

    நான் முன்பு கூறியதைப்போல் குர்ஆனில் இருந்து அடியும் இல்லாமல் முடிவும் இல்லாமல் ஒரு வசனத்தின் சிறிய பகுதியை இப்படி காட்டுவதை விடுத்து இதற்கு முன்பு உள்ள வசனங்களையும் இதற்கு பின்பு உள்ள வசனங்களையும், அதற்கு இஸ்லாமிய விறிவுரையாளர்கள் எழுதிய விறிவுறையையும் ஆதாரம் காட்டுங்கள்.

    வள்ளி மணாளன் நீங்கள் இஸ்லாமை புரிந்து கொண்டது இஸ்லாத்தைப் பற்றி, இஸ்லாத்தை அறியாதவர்கள் தந்துள்ள விமர்சனங்களையும்,அவதூர்களை படித்து மட்டுமே. நீங்கள் சொல்வது போல் மற்ற மதத்தவர்களை கண்ட இடத்தில் வெட்டிக் கொள்ளுங்கள் என்று இருந்தால் இஸ்லாம் வேகமாக வளரும் ஒரு மார்க்கமாக இருக்காது. இன்றைய நவீன உலகில் இஸ்லாத்தை நன்றாக புரிந்து, இஸ்லாமிய நூல்களை படித்து ஆராய்ந்துவிட்டு எத்தனையோ பேர் இஸ்லாத்தில் இணைகிறார்கள். நீங்கள் சொல்வதுபோல் இருந்தால் இஸ்லாம் ௧௪௦௦ வருடங்களாக நீடித்து இருக்காது. எப்போதோ அழிந்து போயிருக்கும்.

    நாங்கள் இஸ்லாமியராக இருந்தும், கண்ணை மூடிக் கொண்டு இஸ்லாத்தை பின்பற்ற வில்லை. குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களையும் தர்க்க ரீதியாக ஆராய்ந்து பின்புதான் ஏற்று கொண்டிருக்கிறோம். நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை எல்லாம் நாங்களும் கேட்டு அதற்கான பதில்களை அறிந்து அவை நியாயம்தான என அறிந்து, அவை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் இருந்ததால் தான் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

    இஸ்லாத்தை விடுங்கள். நம் நடைமுறை வாழ்க்கையில் கூட கேட்டது செய்த ஒருவன் இயற்கையாக தண்டனை அடைவதைப் பார்க்கிறோம். எங்களுக்கும் குடும்பம் , குழந்தைகள் உள்ளன. அப்படி இருக்கையில் எப்படி அப்பாவிகளாக இருக்கும் ஒரு மனிதனை ஒரு மார்க்கம் கொன்று குவிக்கச் சொல்லும்? அதையும் கண்ணை மூடிக் கொண்டு கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றுவர்? சிந்தியுங்கள் நண்பரே.

  25. தமிழ் ஹிந்து வாசகர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…
    “கட்டு”ரை குறித்து சொல்வதற்கு ஏதாவது உண்டென்றால் அது இதுதான். அடிப்படை ஆதாரமற்ற, ஆசிரியரின் சிந்தையில் விழைந்த இட்டுக்கட்டல்கள் தான் இந்த கட்டு-ரை .. தட்ஸால்….

    பின்னூட்டங்களை பார்க்கும் போது தக்கியா குறித்து வேதம் கோபால் சிலாகிக்கிறார்… அவர் குர்ஆனை அரைத்துக் கரைத்துக் குடிக்காமல் பேச வாய்ப்பில்லை..அப்படி இல்லாமல் அவர் பொது இடத்தில் பொய் புரளிகளை அள்ளி விடமாட்டார் என நம்புகிறேன்…இது குறித்து என்ன ஏதுன்னு தெரியாமல் விசில் அடிப்பவர்கள் ஏதும் கேட்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கலாம்.ஆனால் விமர்சிக்கப்படும் மார்க்கத்தை எனதாக்கிக் கொண்டதால், அதை அறிந்து கொள்ளும் தார்மீக உரிமை எனக்குண்டு.. எனவே அது குறித்த குர்ஆன் வசனங்களை கோபால் அவர்கள் வெளியிடுவார் என நம்புகிறேன்.

    வள்ளி மணாளன் அவர்களே..
    //அந்நூலின் பதினான்காம் பாகத்தில் குர் ஆனை ஆதாரமாக வைத்தும், அரபு மொழியிலுள்ள அந்நூலை மௌலவிகள் உருதுவில் மொழி பெயர்க்க, அதனை தேவநாகரி எழுத்தில், ஆரிய பாஷையில் ஆக்கி, அரபுப் புலவர் சரிபார்த்துத் திருத்தி எழுதப் பட்டதாக முன்னுரை உள்ளது.//

    குரான் வசன மேற்கோள் கேட்டால் குர்ஆனில் சொல்லப்பட்டதாக யாரோ சொன்னதை யாரோ மாற்றி எழுதி அதை யாரோ எதோ எழுத்தில் இருந்து எதோ எழுத்திற்கு மாற்றிக்கொடுக்க அதை யாரோ சரிபார்த்து யாரோ வெளியிட அதை தாங்கள் படித்து குரானை புரிந்துகொண்டது போல் வியாக்கியானம் செய்வது கொஞ்சம் ஓவர்தான்…

    என்ன குரானே இல்லாமலா போய்விட்டது ..? நீங்க அங்க தொட்டு இங்க தொட்டு யார்யாரோ டிங்கரிங் பாத்த கதைகளை இங்க அளந்துவிட? ம்ம்…

    இப்போ உதரணமா.. பகவத் கீதை பத்தி நான் பேசுறேன்னு வச்சுகோங்களேன்..விமர்சனம் பண்ணிட்டு நான் சொல்றேன்…இது வந்து முட்டு சந்துல பச்ச தொப்பி போட்ட முல்லா ஒருத்தரு எழுதுனாரு அத சிவப்பு துணி போட்ட சாமி ஒருத்தரு சரிபாத்தாருன்னு… இத இத கேக்கவே காமெடியா இருக்குல்ல….கேக்கும்போது சிரிச்சுட்டு… அடுத்து என்னைய நல்லா நாலு வார்த்த கேக்க மாடீங்க?? இந்தா இருக்குக்குற தெரு மொனைல பகவத் கீத கெடைக்குதே அத்த விட்டுட்டு என்னமோ பேசுறியேன்னு???? ….

    நீங்க கொடுத்த அந்த புத்தகம் குரான் இல்ல இல்லையா? குரான் இருக்க அதுபத்தி பேச வேறு புத்தகம் தேவையும் இல்ல இல்லையா??? அதனால சமத்தா குரான்ல இருந்து வசன மேற்கோள்கள கொடுங்க … சரியா ……

    நீங்க கொடுத்தத கொண்டு என்னால மட்டுமில்ல யாராலையும் சரிபார்க்க முடியாது…

    பிறகு இந்த கட்டுரை பிற மதங்கள் குறித்து பேசுவதால், அதை ஆக்கிய ஆசிரியர் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருக்க வேண்டும்… ஒற்றை மேற்கோள் கூட இல்லாமல் அடிப்படை ஆதாரமில்லாத இந்த கட்டுரையே… ஆதார அறப்பிழை கொண்டுள்ளது …

    அதை சிலாகிக்கும் முன் அதற்கான ஆதாரங்களை, கொடுக்க நெஜமாவே மறந்து போன ஆசிரியரிடம் கேட்டு வாங்கி அதையும் நீங்களே கொடுத்திருக்கலாம் … அதை செய்யுங்களேன்… அப்புறம் பேசுவோம் …

    அன்புடன்
    ரஜின்

  26. சிகந்தர் ,

    உங்கள் நூலில் உள்ளவற்றை முதலில் நன்றாக படித்துவிட்டு , இதுபோன்ற தளங்களில் கடிதம் எழுதவும். சுவாமி தயானந்தர் ( 1824- 1883) இன்றைக்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே , எல்லா மத நூல்களையும் கற்று , விமரிசன நூல்கள் எழுதியவர். உங்களுக்கு நேரம் இருந்தால் , வாங்கிப்படித்துவிட்டு, அவர் எழுப்பியுள்ள வினாக்களுக்கு பதில் அளிக்க முயலவும். ஆனால் உங்களால் முடியாது. ஏனெனில் ,மதம் என்ற பெயரால், அறிவியலுக்கு எதிராக , பூமி தட்டையானது என்று உளறியவை தான் பல மத நூல்கள். பூமி உருண்டை வடிவானது என்று சொன்ன பல விஞ்ஞானிகளை உயிருடன் கொன்றும், தீயிட்டு கொளுத்தியும் படுகொலை செய்தவர்கள் தான் மேலைநாடுகளின் மதவாதிகள்.

    ஒரு ஆண் இரண்டு பெண்களுக்கு சமம் என்று கடவுள் சொன்னார் என்று பொய் சொல்லும் , இழிபிறவிகளை என்ன சொல்வது? நவீன விஞ்ஞானம் ஆணைவிட பெண்ணே அறிவில் உயர்ந்தவள் என்று நிரூபித்துள்ளது. ஆனால் உங்கள் மதநூல்கள் பெண்ணை படிக்கவிடாமலும், வீட்டில் சமையற்கட்டை விட்டு வெளியே வராமலும் , உடல் முழுவதும் முக்காடு போட்டு கொடுமைப்படுத்துபவர்கள். காரோட்டினால் சவுக்கடி என்று சவூதி அரேபியாவில்
    பெண்களை கொடுமைப்படுத்தியதை உலகே அறியும். இஸ்லாமிய நாடுகளில் தற்போது பெரும் புரட்சி ஏற்பட்டு அங்குள்ள அரசுகள் தூக்கி எறியப்படும் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.

    ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்தவர்கள் பெண்களை இறைவழிபாட்டு கூடங்களுக்கு அனுமதிக்காமல் தடுத்தனர். இனிமேல் பெண்கள் போராடி ,இந்த மதவாதிகளை விரட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆணும், பெண்ணும் சமமில்லை , ஆணுக்கு பெண் அடிமை என்று சொல்லும் அயோக்கிய சிகாமணிகளை மக்கள் அனைவரும் ஒன்று கூடி விரைவில் கழுவில் ஏற்றுவர். இது நிச்சயம் நடக்கும்.

    மதங்களின் பெயரால் மனித சமுதாயத்தை துயரப்படுத்தும் மதங்கள் விரைவில் ஒழிந்துபோகும்.

  27. அன்புள்ள சிக்கந்தருக்கு…

    எனது முந்தைய மறுமொழியில் குறிப்பிட்டுள்ளவாறு, தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களின் ஆதாரத்தைத்தான் என்னால் காட்ட முடியும். இஸ்லாம் இப்படியெல்லாம் கூறவில்லை என்பது உண்மையானால் எனக்கும் மகிழ்ச்சியே..!

    மேலும் நான் இஸ்லாத்தை அறியாதவர்கள் சொல்லும் அவதூறுகளைப் படித்துக் குறை கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நான் குறிப்பிட்டுள்ள நூல், உருவ வழிபாட்டைக் கடுமையாகக் கண்டிக்கிற நூல். இந்தியச் (ஆரிய) சமயங்களையும் கண்டிக்கும் நூல், பௌத்தம், சமணம் உட்பட! உருவமற்ற இறைவனையே போற்றும் நூல்.

    அதில் குர் ஆனின் மொழி பெயர்ப்புப் பற்றி எழுதப் பட்டுள்ள முன்னோட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். ‘மௌல்விகளின் மொழி பெயர்ப்புத்தான் அது’ எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வரிகளை வெட்டுவதும் ஒட்டுவதும் ‘அவதூறு’ பேசுபவர்களின் செயல்தான் என்பதை நானும் ஒப்புகிறேன். ஆனால், இப்படிச் சொல்லிக்கொண்டு போனால், முழு நூலையும் எழுதித்தான் விமர்சனம் செய்ய வேண்டும். பொதுவாக இது எங்கும் நடக்காதது.

    தாங்கள் மட்டும் ஸ்ரீ ராமாயணத்தையும் மஹாபாரதத்தில் அடங்கியுள்ள ஸ்ரீமத் பகவத் கீதையையும் போர் நூல்களாகப் புரிந்து கொண்டு மறுமொழியிட்டிருப்பது, இறை நம்பிக்கை கொண்டவர்களால் எழுதப்பட்ட ஸ்ரீ ராமாயணத்தையும் ஸ்ரீமத் பகவத் கீதையையும் படித்துப் புரிந்துகொண்டபின்தானா என்று வினவுகிறேன். (நாஸ்திகர்கள் எழுதும் நூல்கள் நிறைய உண்டு. அதனால்தான் இப்படி எழுதுகிறேன்.)

    இறை மறுப்பாளர்களைத் துன்புறுத்திக் கொலைபுரியும்படி, திருக்குர் ஆனில் இல்லை என்றால் சந்தோஷம்தான். ஆனால், இந்த வலைத் தளத்தில், பல கட்டுரைகளில், நிறைய மேற்கோள்களை அன்பர்கள் இது குறித்துக் காட்டியிருக்கிறார்கள். அவற்றை நான் இன்றைய நிலையில் ஏற்கிறேன்.

    அவற்றின் முந்தைய, பிந்தைய பகுதிகளையெல்லாம் எடுத்து, அவற்றுக்கு வேறு பொருள் சொல்ல நீங்கள்தான் முன்வரவேண்டுமேயொழிய, அது என் வேலையல்ல. ஒருவேளை காபிர்களைக் கொலை செய்யவோ தாக்கவோ அந்நூலில் சொல்லியிருந்தாலும், பிற சமயத்தினர் காபிர்களாகமாட்டார்களே..! அவர்கள் இறை மறுப்பாளர்கள் அல்லரே !அவர்களும் இஸ்லாமியர்களைப் போலவே இறைவனை வேறு ஒரு வகையில் ஏற்றுக் கொண்டவர்கள்தாமே?

    (இஸ்லாம்) மதத்தின் பெயரால் தொடர்ந்து வன்முறை, பயங்கர வாதச் செயல்கள் நடக்கும்போதெல்லாம் வெளியில் வராமல், வாய் திறக்காமல் இருக்கும் செயல்தான் இப்படிப்பட்ட வாதங்களை ஞாயப்படுத்துகிறது.

    தாங்கள் பிள்ளை குட்டிகளுடன் மகிழ்ச்சிபொங்க வாழ்வதில்தான் எங்களுக்கு (ஹிந்துக்களுக்கு)ம் பெருமை. உலகம் வாசுதேவனின் (இறைவனின்) குடும்பம் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். இதில் இஸ்லாமியரும் விலக்கல்ல. வேறு எந்த மதத்தவரும் விலக்கல்ல. ஒருவரை அவர் மதம் வேறு என்பதற்காகவே வெறுப்பது அல்லது ஒதுக்குவது ஹிந்து சமயமல்ல.

    என்னால், என் சமூகத்தினர் அறியத் தொழுகைக்கு வர முடியும். கோயில்களுக்குச் செல்வதையும் தொடரத் தடை இருக்காது. உங்களால், உங்கள் சமுதாயம் ஏற்க, பகிரங்கமாக, எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் வந்துகொண்டு (வழிபாட்டுக்கு), ஒரு இஸ்லாமியராகவும் தொடர முடியுமா?

    கேள்விகள்:
    1. இஸ்லாம் தனக்கு (நபிகளுக்கு) முன்னால் தோன்றிய மறை நூல்களை மறுப்பது உண்மையா பொய்யா?
    2. ‘ஜிஹாத்’ என்பதற்கு விளக்கம் என்ன?
    3. ‘காபிர்கள்’ என்போர் யாவர்?
    4. புனிதப் போர் என்று சொல்லி இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் உயிர்க் கொலைகளை இஸ்லாமின் பெயரால் பலர் செய்யவில்லையா?

    நிறைவாக ஒரு வசனம்:

    81. போடுங்கள் சண்டை; எதிரிகள் யாரும் எஞ்சாதவரையில், காபிரிகளின் பலம் ஒடுங்கி அல்லாஹ் நம்பிகளே எஞ்சுமட்டும் போடுங்கள் சண்டை. நீங்கள் அடிக்கும் கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் ஆகும்.
    மன்ஸில் 2; சிபாரா 9; சூரத் 8; ஆ 39,41.

    இவையெல்லாம் என்ன?

    மீண்டும் பதிவு செய்கிறேன். எனக்குப் பிற மதத்தினர் மீது எந்தக் காழ்ப்புணர்வும் இல்லை. மத ரீதியாக அரசு பிளவுகளை ஏற்படுத்தவும் சலுகைகளைத் தரவும் செய்வது எவ்வகையில் ஞாயம்? மனிதர்களின் பொருளாதாரத்துக்கும் அவர் பின்பற்றும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்?

    இன்றைக்கு ஹிந்துவாக இருப்பவர் நாளையே இஸ்லாமியராக மாறிவிட்டால், அவருக்கு இட ஒதுக்கீடு என்பது, மத மாற்றத்தை ஊக்குவிக்காதா? இது அரசிடம் கேட்க வேண்டிய கேள்வி என்று நீங்கள் நழுவிக்கொள்ள நினைத்தால், என பதில் இதுதான்: இட ஒதுக்கீட்டை மத ரீதியாகக் கேட்கும் இஸ்லாமியருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவரா நீங்கள்?

    வழிபடும்போது ஒருவர் எவராக இருந்தால் என்ன? அதைவைத்து இட ஒதுக்கீடு என்றால், அது பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகாதா? தங்கள் மறை நூல்களின் வழி, தாங்கள் ஒரு தனி இனம் என இஸ்லாமியர் பிரிந்து இருப்பது தானே இட ஒதுக்கீடு கேட்க வகை செய்கிறது?

    ஒரு நாட்டில் வாழும் வேற்று நாட்டவர்தாம் சிறுபான்மையோர் என அழைக்கப்படுவது பொருந்தும். நீங்களும் நானும் இந்த மண்ணுக்கே உரியவர்களானால், நம்மில் நீங்கள் சிறுபான்மை நான் பெரும்பான்மை என்பதெல்லாம் எப்படிப் பொருந்தும்?

    என் மறுமொழி நீளமாகிவிட்டதற்காக வருந்துகிறேன். உங்கள் தரப்பு விளக்கங்களைப் பார்த்துத் தொடரலாம்.

  28. மார்க்க சகோ சிக்கந்தர்

    வஹீ, சுறா, ஹதீசு எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து பதில் சொல்ல சொல்கிறார். உங்களுக்கு நபிகள் (அவர்கள் மீது அமைதி உண்டாகட்டும்) மீதும், அல்லா (அவர் மீது நபி உண்டாகட்டும்), மீதும் என்ன அத்தனை கடுப்பு.

    அல்லா தான் குரான்ல [..] குரானை தான் மிக தெளிவாக அழகான அரபிக்கில் எழுதி வைத்துள்ளதாக [சொல்லி இருக்கிறாரே]. குரான் தான் தெளிவா இருக்கே, அப்புறம் என்னத்துக்கு ஹடீசுகளுக்குள் ஆதாரம் தேடி ஓடறீங்க.
    ஹதீஸ் இல்லாமல் குரானை விளங்கிக் கொள்ள முடியுமா ? சத்தியமா முடியாது. ஹதீஸ் என்பது என்ன. முழுசும் நபியின் வாழ்கை குறிப்பு [..]. ஹதீசும் குரானும் ஒன்னுக்கொன்னு ஏன் ஒத்து போவுது ரெண்டுமே ஒரே ஆள் அவுத்து உட்டது. இதிலிருந்து நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது ஏன்னா. குரான் வேறு ஹதீஸ் வேறல்ல. அல்லா வேறு நபிகள் (அவர்கள் மீது அமைதி உண்டாகட்டும்) வேறல்ல.

    இதற்க்கு எக்க சக்க அத்தாட்சிகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா

  29. //@ RAZIN on March 4, 2012 at 5:54 pm //

    தங்கள் மறுமொழியில் தங்களின் கோபம் வெளிப்பட்டுள்ளது. அது ஒருபுறம் இருக்கட்டும். ஸ்வாமி தயானந்தரை (ஆர்ய சமாஜம் கண்டவர்) ‘யாரோ தெருவில் போகும் ஒருவராக’ என்னால் பார்க்க முடியவில்லை.

    மேலும் ‘திருக் குர் ஆனை’ மூல மொழியில் நான் எங்ஙனம் படிக்க முடியும்? அது குறித்து வந்துள்ள தமிழ் மொழி பெயர்ப்பினை அடிப்படையாகக் கொண்டுதானே?

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன். குறிப்பிட்ட மறை வசனங்களின் எண்களைக் கொடுத்து அனேகம் வசனங்களை (இக்கட்டுரையில் மட்டுமல்ல) இந்த வலைத் தளத்தின் பல்வேறு கட்டுரைகளில் அன்பர்கள் மேற்கோளிட்டிருக்கிறார்கள்.

    அவை தவறு எனில், படித்துப் பார்த்து, எங்களுக்கு விளக்க முன்வாருங்கள். இது அன்பான வேண்டுகோள்தான்.

    புத்தர் சிலைகளைச் சின்னாபின்னப் படுத்தியது உட்படப் பல அறிவீனச் செயலகளுக்கும் சகிப்புத் தன்மையற்ற செயல்களுக்கும் தங்கள் மறை நூல் உபதேசம் காரணம் அல்ல; அது இஸ்லாமியரல்லாத வேறு யாரோ செய்வது என்று சொல்லவந்தால் நான் ஒப்புகிறேன். வேறு என்ன செய்வது?

    (இந்திய) வேதங்களில் இருப்பவற்றை எந்த மேலைச் சமயத்தினர் நன்கு படித்தறிந்து, அதன்பின் தங்கள் மதங்களுக்கு இந்தியரை மாற்றுகின்றனர்? மாறுபவர்களும் மாற்றுபவர்களும் (இந்திய) வேதங்கள் பற்றிச் சரியாக எதுவும் தெரிந்துகொள்ளாமல்தானே செயல்படுகின்றனர்?

    ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். குறிப்பிடும் வசனங்கள் இன்ன பொருளில் இல்லை; அவற்றுக்கு வேறு பொருள் உண்டு. ‘அது இதுதான்’ என்று விளக்கப்பட்டால், நிறுவப்பட்டால், எனது விமர்சனங்களை நான் பின்னெடுத்துக்கொள்வதில் தயங்கமாட்டேன்.

    குர் ஆன் வசன மேற்கோள்களை, இன்றைய மனிதர்களின் ஆக்கத்திலிருந்து அல்லாது, இறைவனிடமிருந்து நேரடியாக எப்படிப் பெறுவது? நான் குறிப்பிட்டுள்ள நூல் பற்றிய நம்பகத் தன்மையை நீங்கள் சந்தேகித்தால், எது சரியான நூல் என்பதை எனக்குத் தெரிவியுங்கள்.

    சந்திப்போம்.

  30. ஹ்ம்ம். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு? நான் இதை ஆதரிக்கிறேன். அவர்களுக்கு கட்டாயமாக பாரத எல்லைக்கு வெளியே இடம் ஒதுக்க வேண்டும். அவர்களும் வாழவேண்டாமா? அதற்கு இடம் அவசியம் தேவை. எனவே இந்தியாவுக்கு வெளியே அவர்களுக்கு கட்டாயம் இடம் ஒதுக்கித்தந்து அங்கே அவர்களை நல்லமுறையில் குடிஅமர்த்தவேண்டும்.

  31. பிரதாப்,
    குர்ஆனில் பூமி தட்டையானது, ஒரு ஆண் இரு பெண்களுக்கு சமம் என்று எங்கு உள்ளது?

    முஸ்லிம் பெண்களை முக்காடிட்டு கொடுமை படுத்துவதாக சொல்கிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையை ஐயாயிரத்திக்கும் மேலான ஹதீஸ்கள் மூலம் அறிவித்தது ஒருபெண் என்று அறிவீர்களா? இந்த ஹதீஸ்கள் தான் இஸ்லாமிய சட்ட நூல்களுக்கு ஆதாரமாக உள்ளது என்பதை அறிவீர்களா? நீங்கள் கூறுவது போல் இஸ்லாம் பெண்களை அடிமை படுத்துகிறது என்றால், இஸ்லாமியர்கள் இந்த ஹதீஸ்களை எல்லாம் தூக்கி வீசியிருப்பார்கள். அதை கொண்டு சட்ட நூல் இயற்றி இருக்க மாட்டார்கள்.

    சவுதி அரேபியாவில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசாதீர்கள்.
    சவுதி தவிர மற்ற அரபு நாட்டில் எல்லாம் ஓட்டத்தனே செய்கிறார்கள். இதிலிருந்து இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரியவில்லையா?

    இஸ்லாத்தில் உள்ள பெண் உரிமையை பற்றி பேச வெறும் பின்னூட்டங்கள் போதாது. பின்பு வைத்து கொள்ளலாம்.

    தணிகை செல்வனுக்கு,
    மஹரிஷி தயானந்த சரஸ்வதி அருளியதாக சில செய்திகளை தந்தீர்கள். அதற்கு இஸ்லாமிய தரப்பு என்ன கூறுகிறது என்று அறிய முயன்றீர்களா? ஒரு தரப்பு வாதத்தை மட்டும் வைத்து எப்படி முடிவுசெய்வீர்கள்? இரு தரப்பு வாதங்களையும் கேட்டு பின்பு முடிவு செய்வது தானே சரியாக இருக்கும்?
    இணையத்தில் இஸ்லாமிய நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும்க் கொட்டி கிடக்கின்றன. இஸ்லாத்தை பற்றிய விமர்சனங்களும் சற்று அதிகமாகவே கிடைகின்றது. நீங்கள் படித்து எது சரி, எது தவறு முடிவு செய்து கொள்ளுங்கள். அதுதான் சரியாக இருக்கும்.
    //என்னால், என் சமூகத்தினர் அறியத் தொழுகைக்கு வர முடியும். கோயில்களுக்குச் செல்வதையும் தொடரத் தடை இருக்காது. உங்களால், உங்கள் சமுதாயம் ஏற்க, பகிரங்கமாக, எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் வந்துகொண்டு (வழிபாட்டுக்கு), ஒரு இஸ்லாமியராகவும் தொடர முடியுமா? //
    இஸ்லாமிய அடிப்படை கோட்பாடே ஓரிறை கொள்கைதான். இந்த அடிப்படை கொள்கையையே விட்டு விட்டு எப்படி வேறு சமுதாய வழிபட்டு தளங்களுக்கு வரமுடியும்? ஒருவன் அசைவம் சாப்பிடுவது இல்லை என்று கொள்கை வைத்திருக்கும் பொழுது, இல்லை நீ நல்லிணத்திற்காக அசைவம் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்துவது எவ்விதத்தில் நியாயம்?
    //1. இஸ்லாம் தனக்கு (நபிகளுக்கு) முன்னால் தோன்றிய மறை நூல்களை மறுப்பது உண்மையா பொய்யா? //
    இந்த கேள்வியை எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள மறைகள் நான்கு. மோசசிற்கு அருளப்பட்ட தோரா. டேவிடிற்கு அருளப்பட்ட சபூர், ஏசுவிற்கு அருளப்பட்ட இன்ஜீல், நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்ட குர்ஆன். இவைதான் இஸ்லாம் சொல்லும் நான்கு மறைகள்.
    //2. ‘ஜிஹாத்’ என்பதற்கு விளக்கம் என்ன?//
    ஜிஹாத் என்றால் ஆங்கிலத்தில் “struggle” என பொருள்படும். தமிழில் போராட்டம் எனலாம். புனிதப்போர் என்று நீங்கள் நினைத்தால் அதுவல்ல உண்மை.
    குர்ஆனில் ஜிஹாத் என்றால் புனிதப்போர் என்று பொருள்படும் எந்த வசனங்களும் இல்லை. மாறாக “கித்தல்” என்ற அரபு சொல்லே போரிடுதல் பற்றி வருகிறது. தீய எண்ணங்களிலிருந்து மனதை கட்டுப்படுத்துவது கூட ஜிஹாதுதான். தன்னைக் காத்துக் கொள்ள எதிரியுடன் சண்டையிடுவதும் ஜிஹாதுதான். பரிட்சையில் நல்ல மதிப்பெண் பெற முயன்று படிப்பதும் ஜிஹாதுதான்.
    //3. ‘காபிர்கள்’ என்போர் யாவர்? //
    முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். காபிர் என்றல் வசை சொல் இல்லை. ஒருவரை கேவலமாக திட்ட காபிர் என்ற சொல் பயன் பட்டதில்லை. காபிர் என்ற சொல்லின் வேர்ச்சொல் “கபரா” என்பதாகும்.கபரா என்றால் மறைத்தல் என்று பொருள். இதுவே பின்னர் காபிர் என ஆயிற்று. இஸ்லாமிய உலகில் ஓர் இரையை வணங்குவோர்களை முஸ்லிம்கள் என்றும் மற்றவர்களை காபிர் என்றும் அலைகிறார்கள். காபிர் என்று அழைத்தல் கேவலம் இல்லை.
    //4. புனிதப் போர் என்று சொல்லி இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் உயிர்க் கொலைகளை இஸ்லாமின் பெயரால் பலர் செய்யவில்லையா?//
    புனிதப்போர் என்று எதை சொல்கிறீர்கள்? இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் செய்ததையா? அவைகள் இந்துக்கள்ளுடன் மட்டுமல்ல இஸ்லாமியர்கள் மேலும் தான் போர் புரிந்துள்ளனர். உதாரணம் பாபர் இப்ராகிம் லோடி என்ற இஸ்லாமிய மன்னரைத்தான் பானிபட் என்ற இடத்தில் வென்று டில்லியை கைப்பற்றினார்.
    //81. போடுங்கள் சண்டை; எதிரிகள் யாரும் எஞ்சாதவரையில், காபிரிகளின் பலம் ஒடுங்கி அல்லாஹ் நம்பிகளே எஞ்சுமட்டும் போடுங்கள் சண்டை. நீங்கள் அடிக்கும் கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் ஆகும்.
    மன்ஸில் 2; சிபாரா 9; சூரத் 8; ஆ 39,41.//

    நீங்கள் தந்துள்ள வசனங்களை சரியான வரிசையில் கீழே தந்திருக்கிறேன்.

    8:38. நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்: இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)

    8:39. (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

    8:40. அவர்கள் மாறு செய்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் – அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.

    8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

    இந்த வசனங்களை படித்தால் இந்த வசனங்கள் எது எதோ ஒரு சம்பவத்தின் தொடர்ச்சி போல் தோன்றுகிறதா அல்லது கண்ணில் கண்ட காபிர்களை எல்லாம் வெட்டி சாய்க்க சொல்லும் ஆணை போல் தோன்றுகிறதா? இந்த வசனங்களின் பின்புலம் பற்றி தங்களுக்கு தெரியுமா?

    இடஒதுக்கீடு என்பது ஒரு சமுகம் தான் வாழும் சமுகத்தில் தக்க பிரதிநிதித்துவம் கிடைப்பதிற்காக வழங்கபடுவது. இதைப் பற்றி ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கும். இது ஒரு சமுதாயத்தின் மொத்த நிலையை கணக்கில் கொண்டு அதன்படி வழங்கப்படுவது. தனி நபர் மதம் மாறினால் அந்த சமுதாயத்தின் நிலை மாறி விடாது. இது தேவையா இல்லையா என்பது இந்தக் கட்டுரையைப் பற்றின விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட விசயம்.

  32. தணிகை செல்வன்,

    சிகந்தர் என்ன காபீரான நானே இதற்கெல்லாம் தக்க அடி கொடுக்க முடியும். உங்கள் கேள்விக் கோட்டையை தகர்தெரிகிறேன் பாருங்கள் ஏக இறைவனின் அருளால்.

    கேள்விகள்:
    1. இஸ்லாம் தனக்கு (நபிகளுக்கு) முன்னால் தோன்றிய மறை நூல்களை மறுப்பது உண்மையா பொய்யா?

    நீங்கள் ஒருமுறையாவது குரானை முழுவது படித்துப்பார்ததுண்டா. அல்லா தெளிவா சொல்லிருக்கிறாரே, பழய ஏற்பாடும், விவில்யமும் அவர் செய்ததே என்று. அதை மக்கள் பாதுகாக்க தவறி அதில் இடை சொருகலை சேர்த்து விட்டார்கள். அதனால் அமுது பொங்கும் அரபியில் இறுதியாக இறுதி தூதர் மூலமாக அல்லா இறக்கியது தான் குர் ஆண். ஆக குரான் பழைய ஏற்பாடுகளை மறுக்கவில்லை. புதுசா ஒரு நபியை ஏற்பாடு செய்துள்ளது அவ்வளவு தான். பாக்கப் போனால் குர்ஆனில் நபிகளை விட ஏசுவை பற்றி தான் நிறைய விஷயங்கள் நல்ல மாதிரியாக சொல்லப்பட்டிருக்கு, குரான் படிச்ச இயேசு போல நல்லவர் கிடையாது என்று நிச்சயமா சொல்ல முடியும். அதே சமயம் குரான் படிச்சா நபிகள் ஏசுவுக்கு நேர் மாறு என்றும் சொல்ல முடியும்.

    2. ‘ஜிஹாத்’ என்பதற்கு விளக்கம் என்ன?

    ஜிஹாத் என்பது அல்லாவின் ஆனால் முஸ்லிம்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளா தொடுக்கும் அறப் போர். இதை பற்றி நீங்கள் இனிமேல் அடிக்காதீர்கள் அக்கப் போர். நபி கூட்டத்திற்கு காசு தேவை படும் போதெல்லாம் போர வர (வியாபாரிகளின்) மீது போர் தொடுத்து முஸ்லிம்கள் வயிராரசெயததை குர்ஆனில் விளக்கி உள்ளதை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா

    3. ‘காபிர்கள்’ என்போர் யாவர்?

    அல்லாவிற்கு அடிபநியாதவர்கள். ஏக இறைவனை ஏற்றுக் கொள்ளாதவர்கள்

    4. புனிதப் போர் என்று சொல்லி இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் உயிர்க் கொலைகளை இஸ்லாமின் பெயரால் பலர் செய்யவில்லையா?

    பலர் என்றால் யார் யார் என்று ஆதாரம் தர முடியுமா. ஆதாரம் தேவை சகோ ஆதாரம் தேவை.

    நீங்கள் சிக்கந்தரிடம் இது போல (ஐஸ் குச்சி) கேள்விகளெல்லாம் கேட்டு பிரயோஜனம் இல்லை. அவர்கள் இறை அருளால் எதை எதையோ தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் எம்மாத்திரம்,.

    குரானையும் ஹடீசுக்களையும் படித்து விட்டு வாருங்கள் சகோ.

    நீங்கள் எப்படி மடக்கி கேள்வி கேட்டாலும் விடாமல் பதில் சொல்லுவார்கள் . இதற்காக டவ்ஹீத் என்ற ஒரு அமைப்பே அண்ணன் பீஜெ தலைமையில் இயங்கிகொண்டு இருக்கிறது. [..] படித்துபாருங்கள் தலை சுத்தல் உத்திரவாதம். தெற்கே பீ ஜெ என்றால் வடக்கே அல்லேலக்க அன்னான் ஜாகிர் நாயக் சும்மா போடு போடுன்னு போட்டுத் தாக்குறார்,.

    [Edited and Published]

  33. அட மெத்த படிச்ச மேதாவிங்களா…..ஒருவன் செய்யும் தவறுக்கு காரணம்…அவன் சார்ந்த மதம் அவனுக்கு அவ்வாறு போதிகின்றது என்று கூறுகின்றிர்கள்…ஒரளவு அது சரிதான்…..நீங்கள் வரலாற்றையெல்லாம்..திருப்பி பார்ப்பது இருக்கட்டும்….நிகழ்கால நடவுகளை பாருங்கள்…
    தினசரி நாளிதல்களை பாருங்கள்…எந்த மதம் சார்ந்தவர்கள் அதிக அளவில் கொலை, கொள்ளை, கற்பளிப்பு, ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று… பின் சொல்லுங்கள்…உங்களுடைய கருத்தை…
    மக்கள் தொகையில் வேறுபாடு என்று தப்பிக்க முடியாது…சதவீத அடிபடையிலேயே பாருஙகள் உங்கள் கூற்றை……..

    தவறு செய்யும் அனைவருக்கும் தண்டனை கிடைத்தே தீரும்…அது உலக வாழ்வில் தப்பினாலும்..பின் நரகத்தில் …அவன் எந்த மததை பின்பற்றினாலும்….

    நிறைய நண்பர்கள் தங்களுடைய கருத்தில் அல்லாஹ் என்று ஒன்று இல்லை… என்று..சொல்கிறீர்கள்….அவர்கள்..கடவுளை மறுப்பவர்களா இல்லை அர்த்தம் புரியாமலா… தமிழ் மொழியில் இறைவன், கடவுள் போல அரபி மொழியில் அல்லாஹ்… எப்படி ஆங்கிலத்தில்..GOD…. என்பது போலத்தான்….

    நண்பர்களே…சும்மா எதிர்க்க வேண்டும்…என்பதற்காக..எதையாவது எழுதுவதொ அதற்க்கு பின்னுட்டம் என்ற பெயரில் கண்டதையும் எழுதுமுன் சற்றேனும் சிந்திக்க வேண்டும்… இன்றைய நம் காலத்தில் எவர்கள் அநியாயத்திலும் கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று….நம் சமுதாயம் எங்கு சென்று கொன்டிருக்கிறது என்றும் சிந்தியுங்கள்…..

  34. அன்பு நண்பர்களுக்கு….கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்…..

    நாம் அனைவருக்கும் தெரிந்த விசயம்…. தன்னிலும் தான் சார்ந்தவைகளிலும் தவறுகள் இருப்பின் ,,,மற்றவைகளை…பார்த்து நீ தவறு…உன்னில் தவறு… என்று கூறிக்கொன்டே இருப்பான் இருப்பார்கள்…. நீங்கள் ஏண் மற்ற மதங்களையும்..அது சார்ந்ததையும்…சாடுகிறீர்கள்… உங்களுடையதைப் பற்றி மட்டும்… உயர்வாக… எவ்வளவு உயர்வாக வேண்டுமானாலும்..நம்மை படைத்த கடவுளுக்கு பயந்து…பேசுங்கள்…எழுதுங்கள்…அதுவே உங்களது தரத்தை உயர்த்தும்…. மற்ற சமுதாயத்தவர்கள்…. 95% தங்களுடையதை உயர்த்திதான் பேசுகிறர்கள்…. நீஙள்..அதற்க்கு எதிர்பதமாய் இருக்கிறீர்கள்… சிந்தித்து செயல்படுஙள்….

    அடுத்தவர்களை தூற்றுவதை விட தன்னிடமுள்ள நல்லவைகளை மக்களுக்கு எத்தி வையுங்கள்….

  35. ரொம்ப நாள் கழித்து தமிழ் இந்து பக்கம் வந்துருக்கேன் ….காரசார கட்டுரை …சனாப் சிக்கந்தர் மற்றும் மதமல்ல மார்க்க சகோ ரஜினின் அறிவியல் சார் கேள்விகளக்கு இந்த காபீரால் முடிந்த பதில்கள் ……

    2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.2:179. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்…

    உலகம் முழுவதும் மார்க்க அறிவியல் மற்றும் மார்க்க தாவா மூலம் தலைகளை பெருக்கினும் ,இஸ்லாத்தை முழுமையாக ஏற்ற எத்தனையோ நாடுகள் இன்னும் பின்னிலையில் இருப்பது ஏனோ? மார்க்கம்/மதம் என்ன கூறினாலும் அதை பின் பற்றுவர்களின் நடத்தையே அதன் வெற்றியை தீர்மானிக்கிறது.(Like relation between management functions and market results)சாகிர் நாய்க்’கு அறிவை அள்ளி அடுத்த அல்லா ஏன் எனது சோமாலிய இஸ்லாமிய சகோதர்களை கடத்தல் தொழிலுக்கு தள்ளினான் …??இஸ்லாமில் அவ்வாறு கூறவில்லை என கூறினால் பத்ரு போரில் காபிர்களை அல்லா கொல்ல சொன்னதையும் ,கொள்ளை அடிப்பவற்றில் ஐந்தில் ஒரு பங்கை அல்லாகும்,இன்னொரு பங்கை தூதருக்கும் அளிக்க சொல்லி வஹி இறங்கியது பற்றி எல்லாம் நான் பேச மாட்டேன் …இந்துக்களை பற்றி பேச வேண்டும் எனில் உடனே இந்தியா பற்றி பேசுற சகோதர்களே உலகில் 90 கும் நாடுகளில் இந்து மதம் இருக்கின்றது..நான் பிறந்த இலங்கையில் இந்து மதம் ஜாதிகளை கருத்தில் கொண்டதாக தெரியவில்ல்லை(இந்த செய்திய கொஞ்சம் சுவனபிரியனுக்கு சொல்லுங்க ப்ளீஸ்)…..இந்து மதம் பற்றிய பிழையான புரிதலை நிக்கி விட்டு அனைவரும் அவர் அவர் வழியில் இறைவனை பிரார்த்திப்போம் …

    அனைவருக்கும் பொதுவான இறைவன் என்றுமே நல்லவன்

    கட்டுரைக்கு சம்ம்பந்தம் இல்லாம மறுமொழி இட்டுருந்தா மன்னிக்கவும் ….

  36. இக்காரணத்திற்காகவே, செப்டம்பர் 11, 2001ல், தற்கொலைவெடிகுண்டுப் படையினரான 19 முஸ்லிம்கள், இஸ்லாமிய புனித நூல்கள் துண்டிக்கொடுத்தபடியே, அல்லாவின் மேன்மையை பறைசாற்ற, ‘அல்லாஹூ அக்பர்’ எனக்க் கூச்சலிட்டுக்கொண்டு, அமெரிக்க வியாபாரமையம்,
    மற்ற கட்டிடங்களில் மீது கடத்திய விமானத்துடன், தாங்களும் அழிந்து, உலக
    அமைதியையும் அழித்து, இஸ்லாமிய வன்முறையும் உலக மக்களுக்கு ஊர்ஜிதப்படுத்தினர். அமெரிககாவில் 9/11 விமானக் கடத்தலைப் புரிய (ஹைஜாக்) செய்து, வெடுகுண்டு தற்கொலைப் படையினரால், இஸ்லாமிய உத்தியான, ‘தக்கியா’ வை செயலாற்றி, விமானத்திற்குள் புகுந்து, — ‘தங்கள் உரிமைகளைக் கொடுக்காவிடில், விமானத்தைத் தகர்த்துவிடுவதாக’ சூளுறைத்தனர். இது, விமான பறத்தல், 93இன் (Flight
    No. 93) தானியங்கும் குறிபேடுகளில் (logs) பதிவாகி உள்ளது. இச்செய்கைகள், குரான்,
    ஹதீஸ்ஸுகளின் நற்போதனைகளால் (!) தான் நடத்தப்படுகிறது.
    அமெரிக்க வர்த்தக மையம், நாசா கட்டிடம் முதலிய இன்னும் மற்ற இடங்களில் 9/11 விமான குண்டு வெடிப்பில், உயிர் தியாகம் புரிந்த தீவிரவாதி ஒருவன் தன்ஆண்குறியைச் சுற்றி பத்திரமாக மிக மிக மெல்லிய தாள் போன்ற அலுமினியம் உலோக தகடை (Aluminum foil – ரேக்கை) சுற்றிக்கொண்டு இறந்தான். ஏனெனில், குரான் படி, இவனுக்கு சுவர்க்கம்
    கிடைக்கபோகிறது என எண்ணிக்கொண்டு, சுவர்க்கம் சென்றபின்னர், ஆங்கே, இதே ஆண்குறியை வெடிகுண்டு விளைவினால் சேதப்படாமல் வைத்துக்கொள்ள, அல்லாவின் வெகுமதியான 72 பளிங்குபோன்ற சுவன சுந்தரிகளிடமும், 28 தக்க பருவடையாத இளம் பாலகர்களுடனும் ஓரினச்சேர்க்கைக்கும் சேர்த்து உடனுக்குடன் நலுங்காமல், நசுங்காமல், உபயோகிக் கலாமல்லவா!!. [அங்குதான் ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் உடலுறவுக்கான வலிமையை அல்லாவே அருள்வாரே!! அங்கு மல மூத்திரமில்லை, கபம், சளி இல்லை, உடல் வேர்வை, துர்நாற்றம் கிடையாது, மதுபான ஆறு பெருக்கெடுத்து ஓடும், மொண்டு மொண்டு குடிக்கலாம். (ஆனால், மண்ணுலகில்,
    மதுவுக்கு தடை உத்தரவு இஸ்லாம் பிறப்பித்திருக்கிறது!)].
    இம்மாதிரி ’தக்கியா’ குயுக்திகளாலும், ஜிஹாதின் நடைமுறைகளாலும், இஸ்லாம் இயக்கத்தை அரசியலாக்கி உலகம் முழுதும் இஸ்லாமிய மயமாக்க முஸ்லிம்கள் எத்தனிக்கின்றனர். ஆக, இஸ்லாமின் முதல் அடிப்படை குறிக்கோள்: உலகமனைத்தையும் இஸ்லாமாக்கி, இஸ்லாமிய ஏகாதிபத்திய அரசியலை நிறுவவே தான்!!

    cont…

  37. (குரான் சுரா: 8:39: எதிர்ப்பு நீங்கி, உலகில் எல்லாமே அல்லாவுக்கென்று ஆகும் வரை போர் புரியுங்கள்”) ஓர் இயக்க மரபுபை, ’இஸ்லாம்’ மதம் என பெயரிட்டுக்கொண்டு ஏன், எதற்கு உலவவேண்டும்? நல்ல மதம் என்பதற்கு நல்லொழுக்கம் வேண்டுமே. இவ்வியக்கத்தில் அதுதான் கிடையாதே! ஆகையால் இது ஒரு மதமா? மரபு இயக்கமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இத் தக்கியாவைத் தான் முகம்மது அன்றே குரானிலும் புகுத்தி
    அதையும் இஸ்லாமிய வரலாறு ஆசிரியர்கள் ஹடிஸ் சுன்னா, சிராவிலும் எழுதி வைத்து, அன்றும் இன்றும் இஸ்லாமிய ஷரியா சட்டமாக்கி விட்டார்கள். இவ்வாறே நடத்திக் கொண்டு 1400 வருடங்களாக ஒரு மத இயக்கமாக இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இக்காரியங்கள் செய்கையில் மனசாட்சி என்பதே தேவையில்லை. இதற்குமேல் கூற என்ன இருக்கிறது. கெட்டகாரியம் எதையுமே மனசாட்சி யின்றி, மதத்தின் பேரால் செய்லாம் என இஸ்லாம் உலகுக்கு முன்னோடியாக இன்றும் வழிகாட்டுகிறது.
    ஒரு ஊரில் ஒரு முரட்டு தாதா இருந்தால், அவனைக்கண்டு, ஊரில்
    உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பயப்பட்டு ஒதுங்கி விடுவார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமாய் ஒன்றுசேர்ந்து ஒரு முகமாக தாதாவை ஒருவழிப்படுத்தினால், அப்போது தெரியும். அஃதேபோல், உலக மக்கள் சக்தி. மக்களை விழிப்படையச் செய்ய இக்காரியத்தை இனி உலகமக்கள் ஒன்று சேர்ந்து இஸ்லாமியத்துக்கு செய்யத்தான் போகிறார்கள். நாட்கள் வெகு தூரத்திலில்லை.

    cont,…….

  38. Dear Sikandar,

    Geetha is given in war time. But, concept of Geetha is not like Kur-on. Donot compare Geetha and Kur-on.Geetha never preach forced conversion, breaking idols like that.

    Lord Krishna clearly told to Arjuna,” you take as your wish after analysing all my views” . but ,Kur-on treat all human being as slaves and forcely told to accept its views and also Mohammed as final prophet. Who accept it.

  39. I read tamil version of Kur-on .It is comes in green color label .In this Translation, translator clearly told,Muslims will four wives and many sex slaves(non muslim ladies).

    Its meaning that, if hard-core muslims have power , then they keep so many sex slaves of other religons.none can ask them.

  40. சகோதரர் வள்ளி மணாளன் அவர்களே
    எனது பதிலில் சற்றே கோவம் இருப்பது உண்மைதான்.ஆனால் அதற்காக உங்களின் மதிப்பு மிக்க பெரியார்களை தவறாக ஒப்பீடு செய்து பதில் எழுதியது தவறுதான். அதை சுட்டி உணர்த்தியதற்கு நன்றி.மன்னித்துக்கொள்ளுங்கள்.இனி அதுபோல் தவறு ஏற்படாமல் சிரத்தை எடுத்துக்கொள்கிறேன்.

    கோவம் நிழலாடக்காரணம், குரான் வசனங்களாக தாங்கள் மேற்கோளிட்டது தான் சகோதரரே. அது அப்படியே குரானில் இருந்தால் அதை மறுக்க வேலை இல்லை. மாறாக அதை விளக்க கடமைப்பட்டுள்ளேன்.அந்தப் பெரியார் எழுதியது விமர்சனமாக இருக்கலாம். மொழிபெயற்பல்ல. பொதுவாக மற்ற நூல்களின் மொழிபெயற்புகள் போலல்லாமல்,குரானின் மொழிபெயற்பானது முஸ்லிம்கள் அனைவராலும் உற்று நோக்கப்படும் ஒன்று.ஒருவர் மொழிபெயற்தால் அதை பிறர் சரிபார்ப்பதும்,ஒருவேலை தவறு இருப்பின் சுட்டிக்காட்டுவதும் குரானை பொருத்தவரை இன்றியமையாது நடக்கும் ஒன்று.ஆக தாங்கள் எந்த மொழிபெயற்பை கொண்டு மேற்கோளிட்டாலும் பிரச்சனை இல்லை.தாங்கள் நூலாக வாங்கித்தான் ஆகவேண்டியதில்லை. இலவசமாக வலையில் இருந்தும் மின் நூலாக பதிவிறக்கிக் கொள்ளலாம். அதைக்கொண்டு வசன எண்களை மேற்கோளிட்டு விவாதித்தால் ஆரோக்கியமாக இருக்கும்.

    அப்படி மேற்கோளிட்டுக்காட்டும் ஒவ்வொரு வசனத்திற்கும் விளக்கம் அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

    //இந்த வலைத் தளத்தின் பல்வேறு கட்டுரைகளில் அன்பர்கள் மேற்கோளிட்டிருக்கிறார்கள்.//
    இந்த கட்டுரை குறித்து விவாதிக்க இங்கு இருக்கிறோம்.மொத்த வலைதல கட்டுரைகளையும் பார்த்து விளக்கம் சொல்ல சொன்னால் அது இயலாத காரியம்.அந்தந்த இழைகளில் முடிந்த அளவு விளக்கம் சொல்லியே இருக்கிறோம்(நானல்லாவிட்டாலும் வேறு இஸ்லாமிய சகோதரர்கள்).

    //எங்களுக்கு விளக்க முன்வாருங்கள். இது அன்பான வேண்டுகோள்தான்.//

    நான் பின்பற்றும் மார்க்கம் குறித்து மாற்றுக்கருத்தும் விமர்சனமும் நாகரீகமான முறையில் முன்வைக்கப்பட்டால் அதை வரவேற்று,என்னால் இயன்ற அளவு பதில்தருவதை எனக்கு கடமையாக்கிக் கொண்டேன்.அதனால் அப்படி தாங்கள் கொடுக்கும் மேற்கோள்களுக்கு இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) பதில் தருகிறேன் சகோ.

    அன்புடன்
    ரஜின்

  41. அன்பு சிக்கந்தரே..!

    கடவுள் ஒருவர் தான் உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளார் என்னும் ஹிந்துத் தரப்பு வாதத்துக்கு ‘சைவம், அசைவம்’ என்பதெல்லாம் ‘சப்பை’ வாதங்கள். இறைவன் ஒருவன் தான். அதில் ஐயமே இல்லை. இறைவனால் நிரம்பாத எதுவும் இவ்வுலகில் இல்லை. இந்த நிலையில் வேறு மத வழிபாடு, தன் மத வழி பாடு என்பதெல்லாம் புற வேற்றுமைகள்தானே? கோயிலுக்கு வந்தால், அந்த இடம் ‘அல்லாஹ்’ வினும், ‘அல்லாஹ்’வின் இடத்தினும் வேறானதா?

    தாங்கள் குறிப்பிட்டுள்ள நான்கு வேதப் பெயர்களுக்கு அப்பால்தான் ரிக், யஜுஸ், சாம, அதர்வ வேதங்கள் உள்ளன. நீங்கள் குர் ஆன் மறுப்பதாகவோ ஏற்பதாகவோ கூறும் வேதங்களின் பெயர்களுக்கு அப்பாற்பட்ட இவ்வேதங்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள் ? நான் கேட்டதெல்லாம் இவற்றைத் திருக் குர் ஆன் மறுக்கிறதா அல்லது ஏற்கிறதா என்று தான்.

    காபிர் என்று அழைத்தல் கேவலம் என நான் குறிப்பிடவில்லை. ‘காபிர்களைக் கொல்லுங்கள்; கைகளை வெட்டுங்கள்; விரல்களை வெட்டுங்கள்’ என்பன போன்ற வசனங்களைப் பற்றி பதில் இல்லையே. ஏக இறைவனை இந்தியச் சமயம் எதுவும் மறுக்கவில்லையே. பின் ஏன் இந்தியாவில் பயங்கரவாதம்?

    இந்தியாவில் வழங்கும் எந்தச் சமய உட்பிரிவை எடுத்துக் கொண்டாலும், ‘இறைவன் ஒருவனே’ என அவை சொல்லுவது புரியும். இங்குள்ள சமய உட்பிரிவுகள் எப்படித் ‘தாம் கூறுவதே இறைவனின் தத்துவம் (உண்மை நிலை)’ எனத் துணிகின்றனவோ, அப்படியே (கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கின்றது) இஸ்லாம் கூறும் இறைவனும்.

    இந்திய மறைகளில் சொல்லப்பட்டுள்ள இறைவன் ஒருவனே. ‘Ekam Sath. Vibra bahutha vadhanthi. ‘இறைவன் ஒருவனே.’ அவனை அறிந்தவர்கள், அறிந்த வகையில், பலவாறாகக் கூறியுள்ளார்கள்’. இதுதான் இந்தியச் சமயம். இதில் இஸ்லாமிய முறையிலான வழிபாடும் அடக்கம்.

    வரலாற்றில் இப்ராஹிம் லோடி காலத்துப் போரை எவரும் ‘புனிதப் போர்’ என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை, இன்றைக்கு, யார் எதிரி, இவருக்கும் நமக்கும் உள்ள பகை என்ன, என்கிற வரைமுறை எல்லாம் இல்லாமல், கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்படும் அப்பாவி மனிதர்களுக்கு எதிரான சில்லாண்டுக்காலக் கோழைப் போர் முறைகளைப் பற்றியே நான் குறிப்பிடுகிறேன். இவற்றுக்கு உங்கள் பதில் வேண்டும்.

    இட ஒதுக்கீடு என்பது இக்கட்டுரையின் மையக்கருத்துக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாகத் தோன்றுவது இயற்கையே. சமுதாயம் மற்றும் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் என்பது தங்கள் வழிபாட்டு நம்பிக்கையின் அடிப்படையிலானால், இதில் ‘இஸ்லாமியர்’ என்கிற சிறப்பு அந்தஸ்து வருவதற்கு முன்னால், இந்தியாவில் உள்ள எண்ணிலடங்காத வழிபாட்டு முறைகளுக்கு உரியவர்களுக்கு எல்லாம் சரியான் பிரதிநிதித்துவம் வேண்டும்.

    அப்படி இல்லாமல், அவை வரையறை செய்யப் படாமல், இஸ்லாமியர்களுக்கு என்ன தனித் துவம்? வழிபாட்டின் அடிப்படையில் அல்லாமல் வேறு என்ன வழியில் இஸ்லாமியர்கள் இந்திய நீரோட்டத்திலிருந்து தனிப்படுகிறார்கள்?

    மறை மொழிகளின் வழி நாம் ஒருவரே. மறைகள்தாம் வேறு வேறு. மத ரீதியான இட ஒதுக்கீடு என்பது மிகத் தவறானது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டு, அதற்கான இயக்கம் நடத்துவதற்குத் தயார் நிலையில் உங்களை வைத்துக் கொண்டால், நாட்டுக்கு நல்லது. எனக்கோ உங்களுக்கோ மட்டுமல்ல.

    ஆனால், இட ஒதுக்கீடு பற்றிய பதிவுகள் இக்கட்டுரைத் தலைப்புக்கு அப்பாற்பட்டவைதாம் என்பதை நானும் ஒப்புகிறேன்.

  42. //சிகந்தர் on March 5, 2012 at 4:32 pm //

    தாங்கள்,
    இணையத்தில் உள்ளவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளச் சொன்னால், எனக்குப் புரிந்த ‘சரி’யைச் சரி என்றும் ‘சரியல்லதை’ச் சரியல்லது என்றும் தான் என்னால் சொல்ல முடியும்.
    ஆனால்,
    இங்கு நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்? திருக் குர் ஆனை உள்ளது உள்ளபடியே (அரபுவில்) சொல்லவேண்டும் என்கிறார்கள். அதற்கு எங்கே நான் போக?

    எனக்கோ மறை மொழி?! தெரியாது. ஆனால், என்னையோ நீங்கள் ‘காபிர்’ என்கிறீர்கள். நான் என்ன செய்ய? மதம் மாறி விடவா?

    அரபு தெரியாத தமிழனுக்கு நபிகள் நாயகம் யாரைச் சரியான மொழிபெயர்ப்பாளனாக அனுப்பியிருக்கிறார்? ஒவ்வொரு மொழியிலும் இவர தான் மொழி பெயர்ப்பாளர் என எதுவும் திருக் குர் ஆனில் இருக்கிறதா?தமிழருக்கு எது குர் ஆனிய வேத மொழி பெயர்ப்பு ?

  43. ‘உங்களின் மதிப்பு மிக்க பெரியார்களை’… என்பதில்தான் நமக்கு ‘முரண்’ உருவாகிறது. இந்தியாவுக்குள் தோன்றிய ‘பெரியோர்’ பற்றி நான் கூறும்போது, ‘அயல் நாட்டினர்’ பற்றிய உங்கள் அங்கலாய்ப்பு அவசியமற்றதே (நபிகள் உட்பட). என்னால் மேற்கோ ளிடப்பட்டவை ‘திருமறை வசனங்கள்’ என்றும், அதனால்தான் உங்களுக்குக் ‘கோபம்வந்தது’ என்றும் சொல்லியுள்ளீர்கள். அதே நேரம்,’குர் ஆனி’லிருந்து மேற்கோள் தராமல், ‘எவர் சொன்னதையோ (ரோட்டில் செல்பவர்) மேற்கோளாகத் தருகிறீர்களே’ என்றும் கேட்டிருக்கிறீர்கள். இவற்றில் எது உண்மை? என் மேற்கோள்கள் ரோட்டில் போபவருடையவையா அல்லது திருக்குர் ஆனா?

  44. //@ S.Jainul Obtheen on March 5, 2012 at 4:43 pm //

    இவருக்கு, சதவித அடிப்படையிலே பார்க்க வேண்டுமாம். இதுவரை உலகில் நடந்துள்ள கொலை, கற்பழிப்பு, மத மாற்றம், பயங்கரவாதம்… உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டால்… திருவாளர் ஜெயினுலாபுதீன் பரிதாபமாகிவிடுவார். இறைவன் அவருடைய மதத்தைக் காக்கட்டும். வம்புக்காக எதையாவது எழுதச் சொல்லி இஸ்லாம் சொல்லியுள்ளதா அன்பரே?

  45. இந்தியச் சமயங்களில் இல்லாத எது இஸ்லாத்தில் உள்ளது என்று விளக்குவீரா அன்பரே?

  46. நல்லாக் கேட்டீர்கள் திருமால் வளவனாரே..,.

    இந்தியச் சமயங்களில் இல்லாத ஏதாவது ஒரு நல்லதை இவர்கள் இஸ்லாத்திலிருந்து சொல்லட்டுமே பார்ப்போம்.

  47. பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், தன்னைக் காத்துக் கொள்ள எதிரிகளுடனும்தான் இஸ்லாமியர்கள் போராடுகிறார்கள். பாவம்… ‘சர்வ பாப ஹரே தேவி மஹா லக்ஷ்மி நமோஸ்துதே ! சர்வ துக்க ஹரே தேவி மஹா லக்ஷ்மி நமோஸ்துதே !’ என்கிற வசனங்களெல்லாம் அவர்கள் கண்களுக்கு ‘அல்லாஹ்’ காட்டாமல் போனதால்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறிவிட்டார்கள்.

  48. சகோதரர் வள்ளிமணாளன்/தணிகைச் செல்வன்/இந்தியன்/இந்தியக் குரங்கு/திருமால் வளவன்/வைகைக் கரையான்/பெருந்துறைப் பேராளன்…..etc,,etc….

    அப்பப்பா…. இன்னும் உங்களுக்கு எத்துனை பேர் இருக்கு…எத்தன பேருலதா வந்து மாத்தி மாத்தி கமெண்ட் பண்ணுவீர்….

    இதுல என்ன பெரிய காமெடின்னா,,,,

    //திருமால் வளவன் on March 6, 2012 at 10:59 pm
    இந்தியச் சமயங்களில் இல்லாத எது இஸ்லாத்தில் உள்ளது என்று விளக்குவீரா அன்பரே?//

    //வைகைக் கரையான் on March 6, 2012 at 11:04 pm
    நல்லாக் கேட்டீர்கள் திருமால் வளவனாரே..,.//

    இதுதான்.முன்னாடி நீங்க போட்ட கமெண்டுக்கு வேர பேறுல வந்து ஷபாஷ் போடுரீங்க..பெரியாளுதான்…:)

    சரி..மேட்டருக்கு வர்ரேன்…

    //‘உங்களின் மதிப்பு மிக்க பெரியார்களை’… என்பதில்தான் நமக்கு ‘முரண்’ உருவாகிறது.//
    உங்களுக்கு தானெ மதிப்பு மிக்கவர்ன்னு சொன்னேன்.அதுல என்ன முரண்?? ஏன் அவரு உங்களுக்கு மதிப்பு மிக்கவர் இல்லயா?.எனக்கு அவர் யாருன்னே தெரியாது.. அதனால என்னளவில் அவர அவர்ங்கிர ரீதியில் பொதுப்படையாக வைத்திருக்கிறேன்.

    //இந்தியாவுக்குள் தோன்றிய ‘பெரியோர்’ பற்றி நான் கூறும்போது, ‘அயல் நாட்டினர்’ பற்றிய உங்கள் அங்கலாய்ப்பு அவசியமற்றதே (நபிகள் உட்பட).//

    பெரியார்களுக்கும் அறிஞர்களுக்கும் அவர்களது கருத்துக்களுக்கும் பூலோக எல்லைகளை வகுத்து நீங்களே பிரித்துக்கொள்ளுங்கள்… No Comments

    //என்னால் மேற்கோ ளிடப்பட்டவை ‘திருமறை வசனங்கள்’ என்றும், அதனால்தான் உங்களுக்குக் ‘கோபம்வந்தது’ என்றும் சொல்லியுள்ளீர்கள்.//

    ஏன் இந்த திரிபு? நான் அப்டி சொன்னேனா? ம்ம்.. சரியா படிக்கலைன்னா படிச்சுட்டு பதில் எழுதுங்க…

    நான் சொன்னது:
    கோவம் நிழலாடக்காரணம், ”குரான் வசனங்களாக” தாங்கள் மேற்கோளிட்டது தான் சகோதரரே.அது அப்படியே குரானில் இருந்தால் அதை மறுக்க வேலை இல்லை. மாறாக அதை விளக்க கடமைப்பட்டுள்ளேன்.அந்தப் பெரியார் எழுதியது விமர்சனமாக இருக்கலாம். மொழிபெயற்பல்ல.// – என்று

    அதாவது குரான் வசனம் என நீங்கள் சொன்னது, என்றேன்.அப்டீன்னா நான் ஒப்புக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.எளிமையான தமிழில் தானெ சொன்னேன்…

    //அதே நேரம்,’குர் ஆனி’லிருந்து மேற்கோள் தராமல், ‘எவர் சொன்னதையோ (ரோட்டில் செல்பவர்) மேற்கோளாகத் தருகிறீர்களே’ என்றும் கேட்டிருக்கிறீர்கள்.//
    //இவற்றில் எது உண்மை? என் மேற்கோள்கள் ரோட்டில் போபவருடையவையா அல்லது திருக்குர் ஆனா?//

    இதுக்கப்பரமும் எது உண்மைன்னு எனது பதிலே விளக்கி நிற்க. அதை கொண்டு அறிந்துகொள்ளுங்கள்…

    அதற்கு முன் சொந்தப்பெயரில் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்…பல பெயர்களில் வந்து பலமுகம் காட்டாதீர்கள்… இப்படியானவர்களுடன் நான் விவாதிப்பதில்லை….

    அன்புடன்
    ரஜின்

  49. சிகந்தர் on March 5, 2012 at 4:32 pm//

    சகோதரர் சிக்கந்தர் அவர்களது இந்த பின்னூட்டம் நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு போதுமானது…

    அருமையாக அழகாக பதிலளித்த சகோதரர் சிக்கந்தர் அவர்களுக்கு நன்றி..

    அன்புடன்
    ரஜின்

  50. @ கொழும்பு தமிழன்:

    தாங்கள் அளித்த 2:178,2:179 வசனங்கள் குறித்து ஏதும் நான் விளக்கம் சொல்லவேண்டியதில்லை..அருமையாக தன்னிலை விளக்கி நிற்க்கிறது அந்த வசனம்.. இன்னும் சொல்லப்போனால் நீதி வழங்கல் குறித்து சிறுவயதில் படித்த மனுநீதி சோழனின் கதையைக்காட்டிலும்(மாட்டிற்கு பதில் மனிதன் என்றால் நீதியாக ஏற்றுக்கொள்ளும் நாம் இதை ஏற்க மறுக்கிறோம் ) சிறப்பான நீதியையும் அதைத்தாண்டிய மன்னிக்கும் போக்கை அழகிய முறையில் எடுத்துச்சொல்லும் குரான் வசனத்தை எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள்… நன்றியும் வாழ்த்தும்…

    அன்புடன்
    ரஜின்

  51. @ரஜின்,
    வாவ் , மனுநீதி சோழன்=அல்லா(முகமது).
    சரி இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப்பார்ப்போம்.
    இளவரசன் பசுங்கன்றை கொன்றான்= இளவரசன் கொல்லப்பட்டான்.
    இங்கே உள்ள நீதி அனைத்து உயிர்களும் ஒன்றே. தவறு செய்தவன் இளவரசனாக இருந்தாலும் அவன் தண்டிக்கப்படுவான்.
    இதுவே அல்லாவின் நீதியாக இருந்திருந்தால் அரண்மனையில் இருக்கும் ஒரு பசுங்கன்று பதிலுக்கு கொல்லப்பட்டிருக்கும்.
    இப்போ பாலைவன நீதியைப்பார்ப்போம்
    1.சுதந்திரமானவன்(மூமின்)
    2.பெண்கள்.
    3.அடிமை
    இந்த விதத்தில் பாகுபடுத்தப்பட்டுள்ளது.
    அல்லாவின் நீதிப்படி , இரண்டாம் தரத்தில் இருக்கும் பெண்ணுக்கு பெண் என்பது. நான் உனது மனைவியை கொன்றால் நீ எனது மனைவியைக்கொல்லவேண்டும் (எனது மனைவி கொல்லப்படவேண்டும்), நான் உனது மகளை கொன்றால் எனது மகள் கொல்லப்படவேண்டும். ( எனக்கு, என் மனைவியைக்கொல்லவேண்டும் என்ற எண்ணம் வந்தால் , என்னுடைய விரோதியின் மனைவியைப்போட்டுத்தள்ளினால் போதும் இந்த நீதியின் படி எனது மனைவி பதிலுக்கு கொல்லப்படுவாள்!!!!!- நான் 9வயது உள்ள சிறுமியை மறுமணம் முடித்து மகிழ்ச்சியாக இருக்கலாம்!!!)
    அது மட்டுமா? நான் உனது அடிமையைக்கொன்றால் , எனது அடிமை கொல்லப்படவேண்டும்.
    இப்போ இதில் இருக்கும் சிக்கல்களைப்பார்ப்போமா? நான் ஒருவனின் மனைவியைக்கொன்று விடுகிறேன், நான் ஒரு அனாதை எனக்கு திருமணம் ஆகவில்லை. அப்போ என்ன செய்ய வேண்டும். எனக்கு ஒரு சிறுமியை கட்டிவைத்து அவளை நான் அனுபவித்தபின் அவள் கொல்லப்படவேண்டும்!!!!!!!!!
    அதே மாதிரி ஒருவனின் அடிமையைக்கொன்றால் , என்னிடம் அடிமை இல்லை என்றால் என்ன செய்வது? நான் போருக்கு போய் அடிமையை பிடித்து வரும் வரை நீதிக்காக காத்திருக்கவேண்டும்… ம்ம்ம்ம்ம்ம்ம்.
    இப்படிப்பார்ப்போம். எனக்கு எனது அண்ணனை போட்டுத்தள்ள வேண்டும் (சொத்துக்காக) , அதனால் பக்கத்து விட்டு பணக்காரனுடன் ஒரு டீல் போட்டு எனது அண்ணனை அவனைவைத்து கொன்றுவிட்டு , அவன் செய்த கொலையை மன்னித்து அவனிடம் இருந்து ரத்தப்பணம் வாங்கினால் போதும் பிரச்சனை தீர்ந்தது. நீதியும் கிடைத்துவிடும். இந்த அண்டத்தை படைத்த கடவுள் மனிதனுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாமல் ஒரு சட்டத்தைக்குடுப்பானா? இதில் எதாவது ஒரு அர்த்தம் இருக்கும் மனிதர்களாகிய நமக்குத்தான் இது புரியவில்லை , தெரியவில்லை.

    சூப்பர் நீதி.

  52. உலகம் முழுமையும் இஸ்லாம் கீழ் வந்த பிறகு,உலகம் சுன்னி பிரிவின் கட்டுப்பாட்டில் இருக்குமா அல்லது ஷியா பிரிவின் கட்டுப்பாட்டிலா? முதலில் ஏக கடவுள் அல்லாவின் சீடர்கள் அதை முடிவு செய்து கொள்ளவேண்டும் .இல்லை என்றால் பேரழிவுதான்.

  53. Dear Razin & Sikandar,
    Stil you are not answering for referenceed quotations from kur-on.

    I ask you directly, why Islam forbids converting people from Islam to Non-Islam religions. Even chirstainty did not do any harm those people converting people from chirstainty to other religions.
    then, it is like mafia gang. Am I right.

    Next, All countries(non-Islam) countries allow preaching religons in their respective countries. Then,why saudi-Arabia ban non-Islam religions.are u have any afraid. ha ha

  54. /////2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.2:179. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்//////
    @ கொழும்பு தமிழன்:

    தாங்கள் அளித்த 2:178,2:179 வசனங்கள் குறித்து ஏதும் நான் விளக்கம் சொல்லவேண்டியதில்லை..அருமையாக தன்னிலை விளக்கி நிற்க்கிறது அந்த வசனம்.. இன்னும் சொல்லப்போனால் நீதி வழங்கல் குறித்து சிறுவயதில் படித்த மனுநீதி சோழனின் கதையைக்காட்டிலும்(மாட்டிற்கு பதில் மனிதன் என்றால் நீதியாக ஏற்றுக்கொள்ளும் நாம் இதை ஏற்க மறுக்கிறோம் ) சிறப்பான நீதியையும் அதைத்தாண்டிய மன்னிக்கும் போக்கை அழகிய முறையில் எடுத்துச்சொல்லும் குரான் வசனத்தை எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள்… நன்றியும் வாழ்த்தும்…

    அன்புடன்
    ரஜின்/////////
    ரஜின் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இது இக்காலத்துக்கு ஏற்ற ஒரு வசனமா?
    கொலை செய்தவரின் மனைவி அடிமை மகன் தம்பி என்று பதிலுக்கு கொலை செய்வது (பழி தீர்ப்பது) எவ்விதத்தில் நியாயமாகும்?
    தமிழ் பட வில்லன் பேசும் டயலாக் ரேஞ்சுக்கு உள்ளது, (என் தம்பி செத்து நான் வருத்தபடுற மாதிரி அவன் தம்பி சாகனும் அவனும் வருத்தப்படனும் என்று வில்லன் சொல்வது போல உள்ளது.)
    இதில் எங்கு ஐயா நீதி உள்ளது? தவறு செய்தவன் தண்டிக்க பட வேண்டுமே அல்லாது அவனின் மனைவியோ தம்பியோ மற்ற பிறரோ அல்ல,
    உங்கள் தந்தை தவறு செய்தால் நீங்கள் தண்டனை அனுபவிக்க கூடாது.

  55. மேலும் ஒருவரின் தந்தை ஒருவரால் துன்பமடைந்து இறந்தால் அவருக்குதான் அவ்வேதனை புரியும் இவ்விசயத்தில் மன்னிப்பு என்பது துடிதுடித்து இறந்த அந்த ஆத்மா தான் தரவேண்டுமே அல்லாது. பணத்தை வாங்கி கொண்டு அவரின் மகன் மன்னிக்க கூடாது.
    அடிபட்டு செத்தவன் ஒருவன் அதை வைத்து பணத்தை பெற்று கொண்டு மன்னிப்பவன் ஒருவனா?

  56. 3:90. எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா – மன்னிப்புக்கோரல் – ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.
    3:91. எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு; இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்

    no permisson to come out from islaam

    4:89. (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் – அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.//////////
    அருமையான வரிகள் பிற மதத்தினரை கொள்ள சொல்லும் பொன் மொழிகள்.முமின்கள் இதை பின்பற்றியே ஆகணும். எனவே காபிர்கலாகிய நாம் யாருமே ராஜின் போன்றோருக்கு நண்பர்கள் ஆக ஏற்று கொள்ள முடியாது.
    /////8:69. ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான – ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்//////
    இது எப்டி இருக்கு? போரில் வென்று அவர்களின் உடமைகளை பிடுங்கி கொள்வது ஹலாலாம்,இது வழிப்பறி அன்றி வேறு என்ன?
    ஒரு நாட்டு மன்னனும் இன்னோர் நாட்டு மன்னனும் போர் செய்தால் இவ்வாறு செய்வதில்லை தன நாட்டுடன் தான் வெற்றி பெற்ற நாட்டை இணைத்து அதையும் தன நாடாக கருதி அந்நாட்டு மக்களும் தம் பிரஜைகள் என்று போற்றி அவர்களையும் பாதுகாத்து அரசாட்சி செய்வது போர் செய்யும் மன்னனின் இயல்பு, இதுவே இங்கு வரலாறு. ஆனால் மேலுள்ள செய்தி வழி பரி என்பது விளங்குகிறது அல்லவா?

  57. ////9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
    //////////////
    இது தண்டல் வசூல்.

    மதமல்ல மார்க்க மேதை ஆகிவிட்ட திரு சாரங் அவர்கள் மேலும் விளக்கலாம்

  58. ரசின் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியது.

    ‘புனை பெயர்களில் எழுதுவது தவறு’ என்று நான் கருதவில்லை. இந்த வலைத் தளத்தில் மட்டுமல்ல; பொதுவாக ஊடகங்களில் பலர் மேற்கொள்ளும் முறைதான் இது. உங்களைப் பொறுத்தவரை ஒரு மனிதனுக்குப் பல பெயர்கள் இருப்பது பிடிக்காதுதான். ஏன் பெயர் இருப்பதே கூடப் பிடிக்காதுதான்.

    //இப்படிப்பட்டவர்களுடன் நான் விவாதிப்பதில்லை//

    சொல்லும் கருத்துப் பற்றி விவாதிப்பதில் பின்வாங்குவதும் தொடர்வதும் உங்கள் விருப்பம். சொல்பவனின் பெயர் பற்றிய வருத்தம் தங்களுக்கு வேண்டாம். ‘எண்ணில் அடங்காத திருவுருவங்களும் திருநாமங்களும் கொண்டவன் இறைவன்’ என்னும் என் கருத்துக்கு முரணாக நான் எதையும் (பதிவு) செய்யவில்லை.

    இந்தியாவில் ஆரிய சமாஜம் கண்ட ஸ்வாமி தயானந்தரையே தங்களுக்குத் தெரியாமல் இருப்பதுபோல், கோடானு கோடி இந்தியர்களுக்கு அவர்களின் தேசத்தில் தோன்றிய பல பெரியவர்களையும் தெரியாது; அவர்களின் உபதேசமும் தெரியாது. வருந்தத் தக்க இந்த நிலையில், இந்தியச் சமயங்களில் என்ன குறையைக் கண்டு, அவற்றில் இல்லாத எந்த உயர்வுக்காக, இந்திய எல்லை கடந்த மற்றொரு சமயத்தை அவர்கள் தழுவியிருப்பார்கள்?

    வரலாறு என்று எது கற்றுத் தரப்பட்டதோ எது கற்றுத் தரப்படுகிறதோ அதுதானே பல இந்தியர்களுக்குத் தெரியும்?

    //அதுல என்ன முரண்?//

    ‘எனக்கு இந்தியாவில் தோன்றிய பெரியோர்களைப் பற்றியே தெரியாது. ஆனால் நான் வேற்று நாட்டினரை ‘தேசம் கடந்தவர்’ என்று பார்ப்பேன்’ என்னும் இந்த நிலை என் மன நிலையினும் முரண்பட்டதுதான்.

    குர் ஆன் வசனம் என நான் குறிப்பிட்டவை குர் ஆன் வசனங்களே இல்லை என்றால், விவாதிக்க ஒன்றும் இல்லை.

    //ஐந்தாம் வகுப்புப் புத்தகங்களை என்ன… முதுகலைப் பட்டப் புத்தகங்களைப் படித்தால் கூட இக்கட்டுரை உரைப்பது பொய் என்றுதான் தோன்றும். அப்படித் தோன்றவேண்டும் என்பதற்காகவே தயாரிக்கப்பட்டவை அவை.//

    //இந்தியச் சமயங்களில் இல்லாத எது இஸ்லாத்தில் உள்ளது?//

    //பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், தன்னைக் காத்துக் கொள்ளஎதிரிகளுடனும்தான் இஸ்லாமியர்கள் போராடுகிறார்கள். பாவம்//

    //இதுவரை உலகில் நடந்துள்ள கொலை,கற்பழிப்பு, மத மாற்றம், பயங்கரவாதம்… உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டால்…//

    //‘ஏக இறைவன்’, ‘எதிரி’ என்கிற சிந்தனைகளெல்லாம் இறைவனுக்குரிய உருவத்தின் உறுதியை நோக்கி மனிதரை இழுத்துச் செல்கின்றன. பிறகு எங்கிருந்து ‘உருவமற்ற இறைவன்’ வருவான்?//

    //அரபு தெரியாத தமிழனுக்கு நபிகள் நாயகம் அவர்கள் யாரைச் சரியான மொழிபெயர்ப்பாளனாக அனுப்பியிருக்கிறார்கள்?//

    இந்தக் கடைசிக் கேள்விக்காவது சரியான பதில் கிடைத்தால்தானே அந்த அரபுத் திருக் குர் ஆனைத் தமிழர் புரிந்துகொண்டு எவை சரியான வசனங்கள் என்று முடிவுக்கு வரமுடியும்? இல்லையென்றால் எப்பேர்க்கு ஒத்த பெரியோர் எழுத்துக்களையும் ‘பொய்’ என மறுத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

    மொத்தத்தில் இங்கு எழுப்பப்பட்டுள்ள பல கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. உங்களை பதில் எழுதவும் நான் கேட்கவில்லை. என் எண்ணத்தைப் பதிவு செய்துள்ளேன். அவ்வளவே.

    எவர் போக்கில் அர்த்தம் இருக்கிறது என்பதும் எவர் போக்கில் அனர்த்தம் இருக்கிறது என்பதும் படிப்போருக்குப் புரியும். நன்றிகள்.

  59. பேச்சைத்தான் மாற்றக் கூடாது; பேரை மாற்றுவதில் தவறில்லை.

  60. /////பிரதாப்,
    குர்ஆனில் பூமி தட்டையானது, ஒரு ஆண் இரு பெண்களுக்கு சமம் என்று எங்கு உள்ளது?///////
    பிரதாப் ஈகள் சொன்னது தவறு, ஒரு ஆ இரு பெண்களுக்கு சமம் எட்று ஹதீஸில் தான் உள்ளது.

    அபூ ஸயீதுல் குத்ரீ அறிவித்தார்.
    ‘ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, ‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! ஏன்’ என்று அப்பெண்கள் கேட்டதற்கு, ‘நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கத்திலும் அறிவிலும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை’ என்று இறைத்தூதர் அவர்கள் கூறியபோது ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கமும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன’ என்று பெண்கள் கேட்டனர். ‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி அவர்கள் கேட்டதற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?’ என்று நபி அவர்கள் கேட்டதற்கும் ‘ஆம்!’ எனப் பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் பெண்கள் மார்க்கத்தில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி கூறினார்கள்”. [Bukhari Volume 1, Book 6, Number 301]

  61. The Quran in Sura 2:228 says:

    . . . Wives have the same rights as the husbands have on them in accordance with the generally known principles. Of course, men are a degree above them in status.

    ஆண்கள் பெண்களைவிட ஒரு டிகிரி அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் என்கிறது. சுறா 2:228

  62. The Quran in Sura 4:34 says:

    Men are managers of the affairs of women because Allah has made the one superior to the other.

    The Qur´an says, “…if the two be not men, then one man and two women, such witnesses as you approve of, that if one of the two women errs the other will remind her…” (Sura al-Baqara 2:282).

  63. /////குர்ஆனில் பூமி தட்டையானது, ஒரு ஆண் இரு பெண்களுக்கு சமம் என்று எங்கு உள்ளது?///////
    Qur’an 15:19 والارض مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل شئ موزون
    Waal-arda madadnahawaalqayna feeha rawasiya waanbatnafeeha min kulli shay-in mawzoonin

    And the earth We have spread out (like a carpet); set thereon mountains firm and immovable; and produced therein all kinds of things in due balance.

    Qur’an 15:19
    مَدَدْ = madad = protract , reach , elongate , extend , draw out , lengthen, stretch out , spread out , sprawl , dilate , reach , range , unwind , outstretch , pervade.

    [edit] Qur’an 20:53 الذي جعل لكم الارض مهدا وسلك لكم فيها سبلا وانزل من السماء ماء فاخرجنا به ازواجا من نبات شتى
    Allathee jaAAala lakumu al-ardamahdan wasalaka lakum feeha subulan waanzala mina alssama-imaan faakhrajna bihi azwajan min nabatinshatta

    He Who has, made for you the earth like a carpet spread out; has enabled you to go about therein by roads (and channels); and has sent down water from the sky.” With it have We produced diverse pairs of plants each separate from the others.

    Qur’an 20:53
    مَهْدًا = mahdan = (Noun) cradle or bed, (verb) flatten, smoothen, smooth, level, cement, grade, ram, plane, roll, flat, level off.

    [edit] Qur’an 43:10 الذي جعل لكم الارض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون
    Allathee jaAAala lakumu al-ardamahdan wajaAAala lakum feeha subulan laAAallakum tahtadoona

    (Yea, the same that) has made for you the earth (like a carpet) spread out, and has made for you roads (and channels) therein, in order that ye may find guidance (on the way);

    Qur’an 43:10
    مَهْدًا = mahdan = (Noun) cradle.or bed, (verb) flatten , smoothen , smooth , level , cement , grade , ram , plane , roll , flat , level off

    [edit] Qur’an 50:7 والارض مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل زوج بهيج
    Waal-arda madadnahawaalqayna feeha rawasiya waanbatnafeeha min kulli zawjin baheejin

    And the earth- We have spread it out, and set thereon mountains standing firm, and produced therein every kind of beautiful growth (in pairs)-

    Qur’an 50:7
    مَدَدْ = madad = protract , reach , elongate , extend , draw out , lengthen, stretch out , spread out , sprawl , dilate , reach , range , unwind , outstretch , pervade , lengthen

    [edit] Qur’an 51:48 والارض فرشناها فنعم الماهدون
    Waal-arda farashnahafaniAAma almahidoona

    And We have spread out the (spacious) earth: How excellently We do spread out!

    Qur’an 51:48
    فَرَشَْ = farasha = provide with furniture , flatten , outspread , pervade , circulate , cement , grade , unwind , stretch , expand , flat , range , reach , ram , spread out , lengthen , sprawl , unfold , level off , roll out , level

    الْمَهِدُونَ from مَهِدُ = flatten , smoothen , smooth , level , cement , grade , ram , plane , roll , flat , level off

    [edit] Qur’an 71:19 والله جعل لكم الارض بساطا
    WaAllahu jaAAala lakumu al-ardabisatan

    And Allah has made the earth for you as a carpet (spread out),

    Qur’an 71:19
    بِسَاطًا = bisaatan = drugget , carpet , rug from the verb بسط = outspread , flatten , flat , even , ram , grade , level off , outstretch , pave , level , smoothen , roll , cement

    [edit] Qur’an 78:6 الم نجعل الارض مهادا
    Alam najAAali al-arda mihadan

    Have We not made the earth as a wide expanse,

    Qur’an 78:6
    مهاد = flat land , flat , plain , ramming .

    Arabic: والارض بعد ذلك دحاها
    Transliteration: Waal-arda baAAda thalika dahaha

    Literal: And the earth/Planet Earth after that He blew and stretched/spread it. [7]

  64. தணிகைச் செல்வன்,
    இறைவன் ஒருவன்தான் என்று எந்த வித ஐயமும் இல்லாமல் நம்புவதாக சொல்லிருக்கிறீர்கள். ஆனால் அந்த ஓர் இறைவனை நீங்கள் அணுகும் விதமும் நாங்கள் அணுகும் விதமும் முற்றிலும் வேறு. உங்கள் மதத்தில் நீங்கள் காணும் எல்லா பொருளும் இறைவனின் அம்சமே. எல்லா பொருளிலும் இறைவன் இருக்கிறான். உதாரணம் சூரியன், சந்திரன், பசு போன்றவை. அனால் நாங்கள் நம்புவதோ இறைவன் வேறு அவன் படைத்தவை வேறு. அப்படித்தான் எங்கள் வேதத்தில் சொல்லப்பட்டு உள்ளது. இறைவன் இந்த உலகினையும் அதன் பொருள்களையும் படைத்து சிலதை மனிதனுக்குப் பயன் தருமாறு செய்திருக்கிறான். உதாரணம் எங்கள் வேதத்தில் இறைவன் கால்நடைகளை படைத்து சிலதை உங்களுக்காக பயன்படுமாறு செய்திருக்கிறேன். அதனிடமிருந்து பயன்பெற்றுக் கொள்ளுங்கள், அதற்க்கான நன்றியை எனக்கு செலுத்துங்கள் என்று கூறுகிறான். மேலும் மனிதனுக்கும், மனித சமூகத்திற்கும் ஷரியத் சட்டத்தை தந்திருப்பது போல் தன்னை எப்படி வணங்க வேண்டும் என்றும் குர்ஆனில் தெரிவித்து உள்ளான். அகவே முஸ்லிம்களுக்கு அதன் படி வணங்குவது கடமையாகிறது. இந்த அடிப்படை கொள்கை தான் முஸ்லீம்களின் வணக்க வழிபாட்டை தனி தன்மை வாய்ந்ததாக மாற்றுகிறது. இந்த வேறுபாட்டைத்தான் எனது முந்தைய பதிவில் ஒரு உதாரணம் கொண்டு சொன்னேன்.

    ரிக், யஜூர், சம, அதர்வண வேதங்களை பற்றி இஸ்லாத்தில் ஏதும் இல்லை.

    அனால் குர்ஆனில் இறைவன் இந்த உலகில் எந்த ஒரு சமுதயத்திற்கும் தூதரும், வழிகாட்டுதலும் அனுப்பாமல் விட்டதில்லை என்று கூறுகிறான். எனவே ஹிந்து மதமும் ஆரம்பத்தில் தூய்மையாக தான் இருந்திருக்கும். நாள்பட பல்வேறு கொள்கைகளும், பழக்க வழக்கங்களும் அதனுள் நுழைந்து அதன் பரிசுத்த வடிவம் மாறியிருக்கும்.இது என் தனிப்பட்ட கருத்து.
    இந்தியாவை ஆண்ட முஸ்லிம் அரசர்களை பரம விரோதிகளாக பாவித்து இன்று அவர்களை பழிவாங்க போவதாக கட்டுரை எழுதி வருபவர்கள் மத்தியில் உங்கள் பதில் ஒரு புரட்சி. மற்றபடி நீங்கள் கூறியபடி யார் எதிரி, பகை என்ன என்று தெரியாமல் இஸ்லாத்தின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று வருபவர்களுக்கு இஸ்லாமிய மக்களிடத்தில் எந்த இடமும் இல்லை. இஸ்லாமும் அப்படி கூறவில்லை. சரியான வழிகாட்டுதல் இல்லாமல், வழிதவறி சென்று ஒன்றும் அறியாத அப்பாவிகளை கொள்ளும் எவருக்கும் இஸ்லாத்தில் இடமில்லை. எந்த இஸ்லாமியரும் இதை ஆதரிக்கவில்லை.
    எந்த எந்த சமுதாயங்கள் சராசரிக்கும் கீழாக பின்தங்கி உள்ளதோ அவற்றுக்கெல்லாம் ஒரு சம நிலை சமுதாயம் உருவாகும் வரையில் இட ஒதுக்கீடு தேவை. இஸ்லாமியருக்கு மட்டுமில்லை அதைபோல் பின்தங்கி உள்ள அனைத்து சமுதாயத்திற்கும் ஒதுக்கீடு தேவை.

    @இந்தியன்
    நான் முன்பே கூறியபடி, இணையத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் இஸ்லாமிய நூல்கள் கொட்டிக்கிடக்கின்றன. நீங்கள் படித்து எது சரி, எது தவறு என்று அறிந்து கொள்வது உங்கள் பொறுப்பு. நீங்கள் நடுநிலையுடன் ஆராய்ந்தால் உண்மை புலப்படும்.
    இஸ்லாம் பெண்களை அடிமைகளாகவும், ஆண்களைவிட தகுதியில் குறைந்தவர்களாகவும் நடத்துவதாக கூறப்படும் கொற்றச்சாட்டுகள் புதிதில்லை. சில குர்ஆன் வசனங்களையும், ஹதீதுகளையும் பார்த்தால் முதலில் அவ்வாறு தெரிவது உண்மை. அனால் இஸ்லாம் ஆண், பெண் உடல்-உள்ள கூறுகளை நுணுக்கமாக ஆராய்ந்து அதன்படி தான் சட்டங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதை சற்று ஆழ்ந்து கவனித்தால் விளங்கும். சில குணங்கள் ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இருவருக்கும் பொதுவாக அமைந்து உள்ளன. அதுபோன்ற விசயங்களுக்கு பொதுவான சட்டங்களும், வேறுபாடு உள்ள குணங்களுக்கு தனித்தனியான சட்டங்களும் உள்ளன.
    எனது முந்தய பின்னூட்டத்தில் பெண்களை பற்றிய இஸ்லாமிய கொள்கைகளுக்கு பின்னூட்டம் சரியான இடமில்லை என்று கூறியிருந்தேன். இதுபோன்ற சிறு குறிப்புக்களை எழுதி இதை முழுதும் புரியவைத்து விடமுடியாது. இதை பற்றிய விரிவான வழக்கத்தை நிச்சயம் தருவோம்.

    @பெருந்துறைப் பேராளன்,
    உங்களின் ஒரே மாதரியான பல கேள்விகளுக்கு ஒரேபதிலாக தந்திருக்கிறோம். வரிக்கு வரி பதில் வேண்டுமானாலும் தருவோம்.
    //ஐந்தாம் வகுப்புப் புத்தகங்களை என்ன… முதுகலைப் பட்டப் புத்தகங்களைப் படித்தால் கூட இக்கட்டுரை உரைப்பது பொய் என்றுதான் தோன்றும். அப்படித் தோன்றவேண்டும் என்பதற்காகவே தயாரிக்கப்பட்டவை அவை.//
    இந்திய பாட திட்டங்களை இஸ்லாமியரா வகுத்தனர்? ஒரு நிபுணர் குழு அல்லவா தயாரித்ததாக நங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? இவர்கள் வகுத்ததில் இஸ்லாமியர்களை பற்றி மட்டும் பொய்யாக சேர்த்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைப்பது இந்திய பாட திட்டங்களையே கேலிக்கு உரியதாக ஆக்குகிறது.
    //இந்தியச் சமயங்களில் இல்லாத எது இஸ்லாத்தில் உள்ளது?//
    என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல், ஹிந்து மதம் பிறப்பால் மனிதர்களை வேறுபடுத்துகிறது. மாறாக இஸ்லாம் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் என்கிறது. இதை போல் எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம்.
    //பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், தன்னைக் காத்துக் கொள்ளஎதிரிகளுடனும்தான் இஸ்லாமியர்கள் போராடுகிறார்கள். பாவம்//
    “நோ comments”. இன்றைக்கு இஸ்லாமியர்கள் இந்த உலகில் படுகிறபாட்டை பார்த்தாலே தெரியும்.
    //இதுவரை உலகில் நடந்துள்ள கொலை,கற்பழிப்பு, மத மாற்றம், பயங்கரவாதம்… உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டால்…//
    கணக்கிடுங்கள் பார்க்கலாம்.
    //‘ஏக இறைவன்’, ‘எதிரி’ என்கிற சிந்தனைகளெல்லாம் இறைவனுக்குரிய உருவத்தின் உறுதியை நோக்கி மனிதரை இழுத்துச் செல்கின்றன. பிறகு எங்கிருந்து ‘உருவமற்ற இறைவன்’ வருவான்?//
    இந்த கூற்றை புரிந்து கொள்ள தலையை பியித்து கொண்டதுதான் மிச்சம். இதை எழுதியவர் தான் இதற்க்கு விளக்கம் தர வேண்டும்.
    //அரபு தெரியாத தமிழனுக்கு நபிகள் நாயகம் அவர்கள் யாரைச் சரியான மொழிபெயர்ப்பாளனாக அனுப்பியிருக்கிறார்கள்?//
    இது என்ன வகையான வாதம் என்று தெரியவில்லை. உங்கள் கண்ணன்னும், ஹிந்து வேதங்கள் எழுதியவர்களும் கூடவே அனைத்து மொழிகளுக்கும் “translator” களை கூடவே அனுப்பி இருக்கிறார்களா என்ன?

  65. அன்பின் சகோதரர்களே! உங்களனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

    வசனம் 2:178 குறித்து,உங்கள்களின் கருத்து முற்றிலும் பிழையான புரிதல்.இது குறித்து முதலில் விமர்சனத்தை வெளியிட்டவரது சிந்தனை விளைச்சல் குறித்து No Comments…

    அதே கருத்தை சகோதரர் திராவிடன் அவர்களும் சொல்லி, அது எப்படி நீதியாகும் என கேட்டிருக்கிறார்.

    ஆம் நீங்கள் அதற்கு உதாரணப்படுத்தி சொல்லி இருக்கும் விடயம் அநீதிதான் அதாவது அந்த வசனம் குறித்து உங்களது புரிதலின்படி – (பெண்ணுக்கு பெண் – இதில் முந்தியதை ஒரு தரப்பாகவும்,பிந்தியதை எதிர்தரப்பாகவும் சித்தரித்து கருத்துக்கூறியது) தூறும் தெரியாமல் தலைப்பும் தெரியாமல் அலசியதன் விளைவுதான் உங்களது புரிதல்.

    சரி…அந்த வசனத்தை பார்ப்போம்.முதலில் – //கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது//
    பழி தீர்ப்பது குறித்து ஆரம்பிக்கும் இந்த வசனம் கொலை செய்தவன் குறித்து பேசுகிறது.முதல் தரப்பு கொலை செய்யப்பட்டவர். கொல்லப்பட்டுவிட்டார்.இனி அவர் வரப்போவதில்லை.தண்டிக்கவோ மன்னிக்கவோ அவரால் முடியாது.ஆனால் கொலை செய்தவர்? தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பது நியதி.அதனால்தான் இந்த வசனம் இரண்டாம் தரப்பை பழிதீர்ப்பது குறித்து ஆரம்பிக்கிறது.

    சரி எப்படி பழிதீர்ப்பது? பாரபட்சம் இன்றி,யார் கொலை செய்தாரோ அவரே கொல்லப்பட வேண்டும். இல்லையா? இதுதானே நீதி.
    ஆம்!!!
    ஆனால் இஸ்லாத்திற்கு முந்தைய அக்காலத்தில் நடந்தது அதுவல்ல. பெண்களின் மற்றும் அடிமைகளின் உயிரானது மதிப்பற்றதாக கருத்தப்பட்டது. ஒரு எஜமான் ஒருவனை கொலை செய்துவிட்டால்,பழிதீர்க்க அவன் தனது அடிமையை முன்னிருத்துவதும்.பெண்களை ஆண் கொலை செய்தால் அவனை கொல்லாமல் விடுவதும்.சுதந்திரமானவன் அடிமையை கொன்றால் அதற்கு பகரமாக நஷ்ட ஈடு தருவதும் பெண்ணை பெண் கொன்றால் கொன்றவளது உயிர் அத்தனை மதிப்பில்லாதது என அவர்கள் கருதியதால் கொன்றவள் ஈட்டுத்தொகையுடன் விடுதலை பெருவதுமான பாரபட்ச அநீதிகளை உடைக்கவே மேற்கண்ட வசனம் இறங்கியது.

    முன்னமே சொன்னது போல் இரண்டாம் தரப்பான, அதாவது கொலை செய்தவன் குறித்து இவ்வசனங்கள் பேசுகிறது. கொலை செய்த சுதந்திரமானவனுக்கு பகரமாக அடிமையை பழிகொடுக்கும் வழக்கம் உடைக்கப்பட்டு அதே சுதந்திரமானவன் எவனாக இருந்தாலும் கொல்லப்படவேண்டும்.அவன் அடிமையையோ, பெண்ணையோ கொன்றால் ஈட்டுத்தொகை கொடுத்து தப்பிக்கும் வழக்கம் ஆகாது.ஆக சுதந்திரமான அந்த கொலையாளிக்கு எதுவும் ஈடாகாமல் அந்த சுதந்திரமானவனே பழிதீர்க்கப்படவேண்டும் என்றும்

    அடிமைக்கு அடிமை – அதாவது அடிமை இன்னொரு அடிமையை கொன்றால் ஈட்டுத்தொகை,ஏனெனில் கொல்லப்பட்டவனும் அடிமை.அவனது உயிர் மதிப்பில்லாது கருதப்பட்டதால்.ஆனால் இனி அது நடக்காது.கொலைசெய்த அடிமைக்கு பகரமாக ஈட்டுத்தொகை இல்லை,அதே அடிமையே பழிதீர்க்கப்பட வேண்டும்.

    இதே போல் பெண்ணுக்கு பெண் என்பது, கொலை செய்த பெண்ணுக்கு ஈட்டுத்தொகை பகரம் இன்றி அவளே பழிதீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்த வசனத்தின் சாராம்சம்.

    ஆக இறுதியாக கொலை செய்த யாராக இருந்தாலும் அவரவருக்கு தக்க பகரங்களை கொடுத்து தப்பித்துக்கொள்வது ஆகாது.யாராக இருந்தாலும் அதாவது சுதந்திரமானவனுக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)சுதந்திரமானவனும்,அடிமைக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)அடிமையும், பெண்ணுக்கு (பகரமாக ஏதும் இல்லாமல், அதே)பெண்ணும் பழிவாங்கப்படவேண்டும்.எனும் நீதியை இந்த வசனம் எடுத்துரைக்கிறது.

    இப்படி பாரபட்சம் இன்றி பழிதீர்க்கப்பட்டால் அடுத்து யாரும் கொலை செய்வது குறித்து சிந்திப்பார்களா? அதனால் அடுத்த வசனம் சொல்வது போல…
    //நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.//
    என்ற நிலையும் உண்டாகும் என்பது நிதர்சனம்.

    அதனாலே நான், சகோதரர் கொழும்புத்தமிழ்ன் இதை எடுத்துக்காட்டியதற்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தேன்.

    ஒரு சராசரி மனிதனுக்கும் விளங்கும் இந்த எளிய வசனத்தை 100 % திருப்பிப்படிக்க உங்களால்தான் முடிகிறது.

    அன்புடன்
    ரஜின்

  66. @பெருந்துறைப் பேராளன் அவர்களுக்கு,,,
    புனைப்பெயர் குறித்து எனக்கொன்றும் மாற்றுக்கருத்து கிடையாது சகோ…புனைபெயர் வைக்கலாம். எழுதலாம்.. இன்னும் ஒன்றுக்கும் மேல் பெயர் வைத்துக் கொள்ளலாம்.ஆனால் அதில் ஒரு ஒழுங்கு இருக்கவேண்டும்.. ஆனால் ஒரே மனிதரே பல புனைபெயர்களில் வருவதும்,ஒரு பெயரில் கேள்வி கேட்டு மறு பெயரில் வந்து பதில் அளிப்பதும் மலிவான அரசியலாகவே படுகிறது…

    //திருமால் வளவன் on March 6, 2012 at 10:59 pm
    இந்தியச் சமயங்களில் இல்லாத எது இஸ்லாத்தில் உள்ளது என்று விளக்குவீரா அன்பரே?//

    //வைகைக் கரையான் on March 6, 2012 at 11:04 pm
    நல்லாக் கேட்டீர்கள் திருமால் வளவனாரே..,.//

    இதையும் நியாயப் படுத்தினால்… நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை….

    நீங்கள் உரையாடுவது ஒரு போது தளம்..அங்கு இப்படியான வேலைகள் மெனக்கெட்டு பதிலளிப்பவர்களை சலிப்படைய செய்யும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

    மற்றபடி உங்களது கேள்விகளுக்கு சகோ சிக்கந்தரின் பதில் போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்..

    அன்புடன்
    ரஜின்

  67. @Razin,

    we appreicate your comments. From this comment, we come to know you read every article of Tamil hindu.But , I think you miss one article regarding Srilankan Tamils lands occupied by Srilankan muslims.

    Please read that article and comment.

    Also, please read main.faithfreedom.org started by Great Ali Sina who knew kur-on in its orginal (Arabic) and show your talent there.

  68. we saw all agreements of muslims with non-muslims even from Mohammed period to Akbar period.

    Whenever muslims became weaker ,then they have agreement with non-muslims.

    Non-muslims always doing great mistake, when they defeated muslims, they also do like what muslims doing when they get victory.

  69. When Tamil hindus gained upper hand in Elem war, most of mosques and Buddist viharas spared.
    But, by treachery of Indian side. Singlese got victory over Tamils. Now, Muslims got couregous and destorying all tamil sites

    What is worry that , here why lefists and some secularists won’t understand this bitter fact..

  70. ஐயா ரஜின் அவர்களே,
    சராசரி மனிதனுக்கு நேரடியான பொருள் என்ன என்பது தெளிவாய் விளங்கும் நீங்கள் தான் 100 % திருப்பி அர்த்தம் கூறி கொண்டு உள்ளீர்கள்.
    என்னதான் குழப்பி குழப்பி எழுதினாலும் உண்மையை நீங்கள் மாற்றமுடியாது.
    நீங்கள் மாற்றி சொன்னால் உங்கள் நபியே ஏற்கமாட்டார்

  71. சகோ திராவிடன் அவர்களே!

    ஒரு வசனத்தை முன்னிறுத்தி அதை பிழை என வாதிட்டீர்கள்… நாம் அதன் சரியான கோணத்தை முன்வைத்தோம்..
    சொல்வது மட்டுமே எனது வேலை…. அதை ஏற்ப்பதும் ஏற்காததும் உங்களது புறம்…. I am not going to bother about that.

    Thanks

    அன்புடன்
    ரஜின்

    சகோதரர் மணி அவர்களே! புதிய தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி… என்னோட டேலன்ட்’அ வேறொரு தளத்துல காட்ட சொல்லி இருக்கீங்க,,,

    தமிழ்ஹிந்து,ஹிந்து மதம் பற்றி மட்டும் எழுதுனா, நா ஏன் இங்க வந்து குர்ஆனுக்கு விளக்கம் சொல்லப்போறேன்… என்ன சொல்றீங்க.

    அப்புறம் இலங்கை பிரச்சனை குறித்து, எதோ சொல்லிகொண்டிருகிரீர்கள்.. அங்குள்ள முஸ்லிம்களின் நிலை என்னவாக இருந்தது (காத்தான்குடி, ஓட்டமாவடி பள்ளிவாசல் படுகொலைகள்,மற்றும் வட மாகாணத்திலுள்ள 80000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை குறுகிய கால இடைவெளியில் உடுத்திய உடைகளுடன் வெளியேற்றிய சம்பவங்கள் ),அவர்களின் நிலை இன்று எப்படி இருக்கிறது என்பது ஊரறிந்த உண்மை…ஸோ..உங்களது வதந்திகளுக்கு பதில் சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை சகோதரரே….

  72. @ //RAZIN on March 15, 2012 at 1:16 pm//

    My replies quoted in your above criticism is regretted. But nothing is answered through Mr Sikkanthar’s words, as you have told. Again and again, I ask “Which is the correct translation for a Tamil or Who is the Tamil Prophet to explain everything (of Thiruk Kurron)in Tamil?”. At least this question is not answered by the said person.Then how will it be enough for all my doubts?!

    Because the Tamil typing is not available to me , I have typed these in English.

    Thank You.

  73. //ஹிந்து மதம் பிறப்பால் மனிதர்களை வேறுபடுத்துகிறது. மாறாக இஸ்லாம் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் என்கிறது. இதை போல் எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம்//

    This is a baseless charge.You have also accepted that Hinduism was GOOD in ancient days. I think in these days is also it is GOOD. That’s the difference.

    //பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், தன்னைக் காத்துக் கொள்ளஎதிரிகளுடனும்தான் இஸ்லாமியர்கள் போராடுகிறார்கள்.//

    I think,this was not entered by me, but my counter-part.I only criticized that statement by adding ‘PAAVAM’.

    //அரபு தெரியாத தமிழனுக்கு நபிகள் நாயகம் அவர்கள் யாரைச் சரியான மொழிபெயர்ப்பாளனாக அனுப்பியிருக்கிறார்கள்?//

    This question is raised because of your repeated reply as “…குரான் வசன மேற்கோள் கேட்டால் குர்ஆனில் சொல்லப்பட்டதாக யாரோ சொன்னதை…”

    Due to non availability of Tamil typing facility, I type this in English.

    Thank You.

  74. @Brother Razin,

    Now , you talk about Srilankan Muslims. ok ,let me answer one question.In Independence, muslim population in India is about 10 % and hindu population in pakistan is 20% and Bangladesh in 25%. Now , muslim population in India is 14% but hindu population in pakistan is just 2% and Hindu population in Bangladesh is just 10%. Muslim population is increasing in Hindu India.but, why hindu population steadly decreasing in Muslim pakistan and Muslim Bangladesh.
    Have you gone through rediffmail, even sister of pakistan president accusing Jihadis in pakistan forcibly conerting hindu girls and other minority religion girls.

  75. what about Kashmir pandits Brother, there are 10 lakhs kashmir pandits driven away from their land by your peaceful religion followers.

  76. @brother Razin,

    i think you are not reading that article about Srilankan muslims properly. we know about muslims nature how they destroyed more than 3000 HIndu temples and also illegally occupied indian holy sites madura , kasi and ayodhi.

    If any hindu or chirstian illegally occupied mecca , madina mosques, what about your feelling. you start Jihad(meaning holy way) against them.

    we are ready to give numerious quotations from kur-on. But are all only translations .That’s why, I said like that. Mr.Ali sina is from Iran near to Arabia having more than knowledge than you also myself because we both from India and showing references from orginal Arabic only.Here we people only rely upon translations.
    They are peaceful verses and hard verses in kur-on.But, peaceful versons bring down when Mohammed is weak and hard verses came later when Mohammed getting stronger. That’s why hard verses nullified peaceful verses in kur-on.

  77. 90,000 srilankan Muslims driven away from their land by LTTE .This organisation is announced by Hindu majority India as terroist organisation and banned their activites really not like by pakistan and Bangladesh ie formality banning.

    Even when LTTE was strong, any damage came to mosques or vihars in srilanka?but,why now Srilankan muslims destroying Tamil sites. That’s my question.

  78. நமது தளத்தில் ஒரு இஸ்லாமிய பெயரில் கருத்து தெரிவித்திருக்கும் ஒரு அன்பர், வேறொரு அன்பருக்கு பதில் அளிக்கும் போது, ஒரே நபர் பல்வேறு பெயர்களில் எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார். அது உண்மை என்று வாதத்திற்காக ஒத்துக்கொண்டாலும் , அது ஒன்றும் தவறல்ல. நம் நாட்டின் கலாசாரம் அறியாத அரைவேக்காடு என்பதை அந்த நண்பர் நிரூபித்துள்ளார். நமது நாட்டில் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு ஒரு பெயர் கொடுப்பதும், வீட்டில் வேறொரு பெயரில் கூப்பிடுவதும் வழக்கம். மேலும் , பள்ளியில் உடன் பயிலும் மாணவர்கள் வேறொரு செல்லப்பெயரில் அழைப்பதும் உண்டு. இதுதான் யதார்த்தம். பெயர்கள் பல இருப்பது மிக மிக இயல்பானதே. இந்த தளத்தில் விவாதத்தின் கருப்பொருளும், விவாதப்பாங்கும் தான் முக்கியமே தவிர பெயர்கள் அல்ல.

    இந்த நண்பர் இஸ்லாமியரா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. இவரும் புனைபெயர்களில் எழுதுகிறாரோ? ஏனெனில், “அல்லாவின் அழகிய ஆயிரம் திருநாமங்கள் ” என்று மறைந்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியும், இறைப்பேரருளாளருமான ஜனாப் எம் எம் இஸ்மாயில் அவர்கள் மிக அற்புதமாக தொகுத்து இறைவனின் திருப்பெயர்களை எழுதியுள்ளார். இறைவனுக்கு அல்லா என்பது மட்டுமே பெயரல்ல.

    கருத்து சரியா தவறா என்பதை அழகாக சுட்டிக்காட்டுங்கள். அதை விடுத்து என்ன பெயரில் எழுதுகிறார் என்பதை ஆராய்வதால், உங்கள் தரப்பில் தக்க பதில் இல்லை என்றே அனைவரும் கொள்வார்கள்.

    முக்கியமாக இறைவன் என்பவன் சொர்க்கத்தில் மட்டும் உள்ளவன் அல்ல. எங்கும் நிறைந்தவன்.
    இறைவன் சொர்க்கத்தில் மட்டும் உள்ளான் என்று சொல்வோர் யாராயினும் , இறைவனின் எல்லைகளை குறுக்கி அவனை கேலி, மற்றும் அவமரியாதை செய்கிறார்கள்.

    இறைவன் நீதிவழங்கமாட்டான் என்று கருதி இறைவன் மேல் அவநம்பிக்கை உடையவர்கள் தான் ,தாங்களே வெடிகுண்டு , துப்பாக்கி, தற்கொலைப்படை என்று மாறி தானும் அழிந்து , மற்றவர்களையும் பாதிப்பு அடைய செய்கிறார்கள். உங்கள் வழி உயர்ந்ததாக இருந்தால், உலகமே அந்த வழியை தேர்ந்தெடுக்கும். இந்த உலகம் உள்ளவரை, உலகம் முழுவதற்கும் ஏற்ற வழி என்று ஒன்றும் கிடையாது. அப்படி யாராவது சொன்னால் அவர்கள் முழு அயோக்கியர்கள் ஆவார்கள். ஒரு நோய்க்கு மருந்து கொடுக்கும் போதுகூட , சிறு குழந்தைக்கு ஒரு மருந்தும், பெரியவர்களுக்கு ஒரு மருந்தும் கொடுப்பவர்தான் உண்மையான மருத்துவர்.

    உலகு முழுதும், ஒருநாளும் பச்சை அல்லது மஞ்சள் அல்லது நீல நிறமாக ஆகாது. பல நிறங்களும் இருந்து கொண்டு தான் இருக்கும். வெள்ளையர்கள் கருப்பர்களை அழித்துவிட்டு , இந்த பூமியில் வாழமுடியாது. அதுபோலவே, நிறம், மனம், இனம் , மொழி, மதம் எல்லாமே , உணவுப்பழக்கம் உட்பட , எந்த நாளும் ஒரே மாதிரி இருக்காது. வேறுபாடுகள் தேவை என்பதால் தான் கடவுள் வேறுபட படைத்துள்ளார். கடவுள் முட்டாளல்ல. எல்லோரையும் ஒரே மாதிரி ஆக்கவேண்டும் என்று நினைப்பவன் ஒரு வாலறுந்த நரி போலத்தான்.

  79. அன்புச் சகோதரர்கள் சிக்கந்தர் மற்றும் ரசினுக்கு…

    இனி உங்களுடன் இந்தப் பெயரிலேயே (பெருந்துறையான்) மொழியாடுகிறேன். போதுமா?

    இந்தியச் சமயங்களின்படி, ஒரே ஒரு மறை நூல், ஒரே ஒரு தூதர், ஒரே ஒரு மொழி… என்பனவெல்லாம் அங்கீகரிக்கப்படவில்லை. அப்படி இந்தியர்கள் (நீங்களும்தாம்) அங்கீகரித்திருந்தால், இங்கு திருமறைக்கெல்லாம் வேலை இருந்திருக்காது. இஸ்லாமும் நுழைந்திருக்காது.

    மூலக் கட்டுரை ஹிந்து சமயம் பற்றி எழுதாமல் பிற மதங்களைப் பற்றி எழுதியிருப்பதாகவும் கருத்துப் பதிவாகியுள்ளது. இக்கட்டுரை வன்முறை, பயங்கர வாதம் உள்ளிட்டவற்றால் மனித சமுதாயம் அனுபவித்துவிட்ட/ அனுபவித்து வரும் பேரிழப்புக்களைப் பற்றிப் பேசுகிறது. அவற்றுக்கு மத உபதேசங்கள் எந்த அளவிலோ காரணமாகி நிற்பதையும் கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள எந்த இழப்புக்கு இந்தியச் சமயங்களைக் காரணமாகக் கூறுவது? அது இயலாதே..!

    அபாண்டமாக, ஹிந்து சமயம் பிறப்பிலேயே வேறுபாடுகளைக் கற்பிப்பதாக, எந்த மறை நூலை அல்லது ரிஷி முனிவரை ஆதாரமாக்கி, இங்கு கருத்துப் பதிவு செய்கிறீர்கள்? மனிதர்களிடையே உயர்வு தாழ்வு ஒரு சாராரால் பார்க்கப்பட்டால், அதை எதிர்த்துக் குரல் கொடுத்த பலரை நீங்கள் ஏன் கணக்கில் கொள்ளக்கூடாது? காந்தியடிகள், மஹா கவி பாரதியார், ஸ்வாமி விவேகானந்தர்… என்று இவர்களெல்லாம் ஹிந்துக்களும் ஹிந்து சமயம் சொன்னதைச் சொன்னவர்களும் தானே?

    பிறவி ஏற்றத் தாழ்வு பாராட்டுபவர்களை இந்தியர்களிலேயே இவ்வளவு பெரியவர்கள் எதிர்த்துள்ள அளவுக்கு, மத ரீதியானதாகச் செய்யப்பட்டு வரும் பயங்கர வாதச் செயல்களைக் கண்டித்த, தடுப்பதற்குத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள, உங்கள் மதத்தினரைக் கூறுங்களேன். அதை விடுத்து, ‘அவை எங்கள் மதம் சொல்லாதவை’ என்று ஒதுங்குவதேன்?

    சரித்திரப் பாடங்கள் வல்லுனர்களைக் கொண்டு எழுதப் பட்டவையா என்பது என் கேள்வியல்ல. அவை சொல்பவை உண்மையா என்பதே என் கேள்வி. இஸ்லாமியர்களைப் பற்றிய பல பொய்கள் அவற்றில் இடம் பெற்றுள்ளதாக மட்டும் நான் குறிப்பிடவில்லை. இந்தியர்களைப் பற்றிய உண்மை வரலாறும் அவற்றில் இல்லை என்பதை நான் பதிவு செய்கிறேன். அதில் கொஞ்சம் இஸ்லாமியம் பற்றியும் இருக்கலாம், இருக்கும். ஏனெனில், அவர்கள் இந்தியர்களே.

    திரும்பத் திரும்பத் திருமறையிலிருந்து மேற்கோள் காட்டச் சொல்லி உங்கள் தரப்புச் சொல்லி வந்ததால், நான், ‘அதிகாரப் பூர்வத் திருமறை மொழி பெயர்ப்பு எது?’ என்று கேட்டுள்ளேன். நான் மேற்கோள் எடுத்தாண்ட (விமரிசன) நூலின்படி, ‘எதிரி’யை அழிப்பது பற்றிய கருத்து வந்தது. எனவே, ‘இறைவன்’, ‘எதிரி’ என்பவை எல்லாம் உருவமே இல்லாமல் தீர்மானமாவது எப்படி என்கிற கேள்வி வந்து, இவை இறைவனின் உருவத்தை நோக்கி மனித மனத்தை இழுத்துச் செல்கின்றன எனப் பதிவு செய்தேன். இதில் உங்களுக்குத் ‘தலை சுற்ற’ ஒன்றும் இல்லை.

    நாங்கள் பதிலிறுக்க பகவத் கீதையையும் தேடலாம். அது தெரியாதவர்களுக்கு மணிவாசகத்தையும் தரலாம். அதுவும் போதாதென்றால் பாரதியையும் விவேகானந்தரையும் கொண்டு வரலாம். எங்களுக்கு மொழி தடையல்ல. நூல்கள் தடைகளல்ல. வழிபடும் முறைகளும் தடைகளல்ல. கண்ணனும் மாணிக்க வாசகரும் எனக்கு வேறுவேறானவர்கள் அல்லர்.

    எண்ணில்லாத மொழிகளைத் தந்துள்ள இறைவன்தான் பல நல்லோர்களையும் நமக்கு வழிகாட்ட அனுப்பியுள்ளான். சமூகத்தின் ஒரு தளத்திலுள்ள ஒருசிலர் எதிர் மறையான சில செயல்களைச் செய்தால், அவை அப்படியே ஹிந்து சமயம் சொன்னதாகாது. இங்குள்ள எவரும் தவறைச் சரி என்று சொன்னாலும் நாங்கள் அவர் சொன்னார் என்பதற்காக ஏற்பதுமில்லை. முதலில் இந்தச் சுதந்திரமுள்ள ஒரு சமயம் எங்குள்ளது?

    ‘ஹிந்து சமயம் பற்றிய எதைத் தெரிந்துகொண்டு பிற மதங்களுக்கு இந்தியர்கள் மாறியுள்ளார்கள்?’ என்னும் என் கேள்வியிலிருந்து நான் பிறழவோ பின் வாங்கவோ இல்லை. இந்தச் சமயம் பற்றி ஒன்றும் தெரியாத பலர்தான் இதை எதிர்க்கவும் செய்து, இதை விட்டு விலகிவிட்டதாகவும் நினைக்கிறார்கள். ‘ஹிந்து சமயத்தில் இல்லாத் எது இஸ்லாத்தில் இருக்கிறது?’ என்னும் என் கேள்விக்குத் தாங்கள் தந்துள்ள பதிலே இக்கருத்துக்குச் சான்றாக நிற்கிறது.

    கற்றது கைம்மண் அளவு. கல்லாதது உலகளவு.

  80. @நாறும்பூ நாதன் அவர்களே…

    உங்களது கேள்விக்கு முன்னமே,அந்த புனை பெயருக்கு சொந்தக்காரரிடம் விரிவாக பதில் கொடுத்தாயிற்று…நீங்கள் கவனிக்க தவறியிருப்பின்,,,இதோ உங்களுக்காக..

    //புனைப்பெயர் குறித்து எனக்கொன்றும் மாற்றுக்கருத்து கிடையாது சகோ…புனைபெயர் வைக்கலாம். எழுதலாம்.. இன்னும் ஒன்றுக்கும் மேல் பெயர் வைத்துக் கொள்ளலாம்.ஆனால் அதில் ஒரு ஒழுங்கு இருக்கவேண்டும்.. ஆனால் ஒரே மனிதரே பல புனைபெயர்களில் வருவதும்,ஒரு பெயரில் கேள்வி கேட்டு மறு பெயரில் வந்து பதில் அளிப்பதும் மலிவான அரசியலாகவே படுகிறது…

    //திருமால் வளவன் on March 6, 2012 at 10:59 pm
    இந்தியச் சமயங்களில் இல்லாத எது இஸ்லாத்தில் உள்ளது என்று விளக்குவீரா அன்பரே?//

    //வைகைக் கரையான் on March 6, 2012 at 11:04 pm
    நல்லாக் கேட்டீர்கள் திருமால் வளவனாரே..,.//

    இதையும் நியாயப் படுத்தினால்… நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை….//

    இத நியாயப்படுத்த இந்தியப்பாரம்பரியத்த தேவையில்லாம இழுத்து அத கேவலப்படுத்தாதீர்…ஒருவேள இதத்தா இந்திய பாரம்பரியமா நீங்க தெரிஞ்சு வசுருகீகளோ எனவோ…

    என்மேலவேற சந்தேகமா… போச்சுடா..கம்யுனிட்டி சர்டிபிகேட் காட்டுனா ஒத்துப்பீங்களா?… பேர மாத்தி எழுதி எனக்கென்ன ஆவப்போவுது.. இந்த பேருல எழுதீட்டு இன்னொரு பேருல வந்து சபாஷ் போடவேண்டிய அவசியம் உள்ளவங்க அத பண்ணுறாங்க…

    //”நமது” தளத்தில் “ஒரு” இஸ்லாமிய பெயரில் கருத்து தெரிவித்திருக்கும் “ஒரு” அன்பர், “வேறொரு” அன்பருக்கு//
    ரொம்ப ஜாக்கிரதையா தா எழுதீர்கிங்க..ம்ம்..இப்டி உங்கள மாதிரி வேற வேற மெயில் ஐடில வந்து கேக்கலாம்ல…

    //அது உண்மை என்று வாதத்திற்காக ஒத்துக்கொண்டாலும்//
    இனிமே நீங்க வேற தனியா ஒத்துக்கிடனுமா? எழுதுனவரே வழியில்லாம ஒத்துக்கிட்டார்…ஒத்துக்கிட்டுதான் ஆகணும்.வேறே வேற பெயர்ல வேறே வேற கட்டுரைகள்ல வாரும்..ஒரே கட்டுரைல வேற வேற பேருல வர்றதும்..ஒரு பேருல எழுதி..அதுக்கு மறு பேருல வந்து பேஷ் பேஷ் போடுறதும்… உங்களுக்கு அழகா இருந்தா…எனக்கு அதுல உடன்பாடில்ல…

    //உங்கள் தரப்பில் தக்க பதில் இல்லை என்றே அனைவரும் கொள்வார்கள்.//
    ஏன்? என தரப்பு விரிவான பதிலை தமிழ் ஹிந்து தளம் அனுமதித்தும் உங்கள் கண்களில் சிக்கவில்லையா?

    அதுக்கு நான் பொறுப்பல்ல…

    அன்புடன்
    ரஜின்

  81. My dear Mr Rajin and co
    The following video is specifically for people like you who have abandoned their ancestors Dharmic religion.
    We beg you to return to your roots, to Sanatana Dharma.
    This video is sort of a wake up call for you all..
    Thank you Mr Perinthurian and Mr Narimbu Nathan. Fantastic comments. Please note that your questions are not answered by Mr Rajin!! I am sorry to say this but Mr Rajin , you are is just being evasive.
    Regards
    Rama
    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=CkjlAZ2qjHU

  82. @பெருந்துறையான் :-
    //இந்தியச் சமயங்களின்படி, ஒரே ஒரு மறை நூல், ஒரே ஒரு தூதர், ஒரே ஒரு மொழி… என்பனவெல்லாம் அங்கீகரிக்கப்படவில்லை.//

    மாற்றுக்கருத்தில்லை.
    இந்திய ”சமயங்கள்” என பல சமயங்கள் ஆரம்பத்திலேயே இருக்க எப்படி ஒன்று மட்டும் அங்கிகாரத்தில் இருந்திருக்க முடியும்? இந்திய மக்கள் என்றுமே ஒற்றை சமயத்தை பின்பற்றியவர்களாக வரலாறு இல்லை.பல்வேறு புதிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றி இருக்கிறது.பல்வேறு மதங்களை இந்தியர்கள் வரவேற்றுள்ளனர்.வாழ்வியலாக்கியுள்ளனர்.

    எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது நான் பின்பற்றுகிறேன்.உங்களுக்கு ஹிந்துமதம் பிடித்திருக்கிறது அதில் இருக்கிறீர்.ஆண்டனிக்கு கிருஸ்தவமதம் பிடித்திருக்கிறது அதில் அவர் இருக்கிறார்…

    //மூலக் கட்டுரை ஹிந்து சமயம் பற்றி எழுதாமல் பிற மதங்களைப் பற்றி எழுதியிருப்பதாகவும் கருத்துப் பதிவாகியுள்ளது.//
    இந்தக் கருத்து எதற்காக பதிவானது? என்னை ஏன் இங்கு வந்து பேசுகிறீர்கள்.வேரொரு தளம் இருக்கிறது அங்கு போய் திறம் காட்டுங்கள் என மணி என்பவர் சொன்னதாலே.நான் சொன்னேன்.. இந்த தளம் ஹிந்துமதம் பற்றி பேசினால் நான் ஏன் இங்கு குரானுக்கு விளக்கம் தரப்போகிறேன் என்று.

    உங்களிடம் குரான் மொழி பெயர்ப்பு இல்லை என்றால்,உங்களது மெயில் ஐடி தாருங்கள்,நான் உங்களுக்கு அனுப்பித்தருகிறேன்…
    நீங்கள் தவறாக எண்ணவில்லை என்றால்.அதிகாரப்பூர்வ குரான் பதிப்பை கொண்டு மொழிபெயற்கப்பட்டதால் அதை நம்பலாம். அதையே முஸ்லிம்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம்…

    மொழிபெயற்பு குறித்து திரும்பத்திரும்ப கேட்பதால்,உங்கள் பணியை எளிதாக்க நான் குரான் தருகிறேன் என்று சொல்கிறேன். .. இதை மதமாற்றம் அது இதுன்னு எண்ணினால், பொருட்படுத்த வேண்டாம்…விட்டுவிடலாம்…

    அன்புடன்
    ரஜின்

  83. @RAZIN, பாவம் இந்த முஸ்லிம் அல்லாவின் அறிவைப்பற்றி தெரியாமல் விளக்கம் கூறியுள்ளார்.
    Asbab Al-Nuzul by Al-Wahidi

    [2:178]
    (O ye who believe! Retaliation is prescribed for you in the matter of the murdered…) [2:178]. Said al-Sha‘bi:
    “Fighting took place between two Arab tribes. One tribe had more power than the other and, therefore, they said: ‘For every slave of ours that you kill, we will kill a free man of yours, and for every woman of ours a man of yours’. And then this verse was revealed”.

    இதன் படி நான் சொன்னது தான் சரி ….

  84. அன்பு நண்பர் ரசின் அவர்களே..!

    உங்களுக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது; பின்பற்றுகிறீர்கள். மற்றொருவருக்குக் கிறிஸ்துவம் பிடித்திருக்கிறது; பின்பற்றுகிறார். இதை நான் தவறெனக் கூறவே இல்லை. ஆனால், ஹிந்து சமயத்தின் கதை வேறு. அது எல்லா வழிமுறைகளையும் அங்கீகரிப்பது; எதையும் மறுப்பதில்லை. அதனால் எந்த மதத்தைப் பின்பற்றுபவரும் ‘தன் வழியைத் தவிரப் பிற வழிகளும் உண்டு’ என்று ஏற்றாலே போதும். அப்படிப்பட்டவர் ஹிந்துவே. பிற மதங்களுக்கு மாறும்போது ஹிந்து சமய உண்மைகளைப் புரிந்துகொண்டு எவரும் மாறியதில்லை என்கிற என் ஆணித்தரமான கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

    நான் கொடுத்துள்ளவை குர் ஆன் மேற்கோள்கள் இல்லை என்று நீங்கள் கருதுவதால், சரியான, அங்கீகரிக்கப்பட்ட, தமிழ் மொழி பெயர்ப்பைக் கேட்டேன். அதனை refer செய்து, பின்னர் தானே என் கருத்தை வெளிப்படுத்த முடியும்? நீங்கள் ஏற்காத நூல்களின் மேற்கோளை வைத்து விவாதிப்பது சரியல்ல என்பதால்தான் அப்படிக் கேட்டுள்ளேன்.

    என் e-mail i/d உண்மையில் உங்களுக்குத் தெரியாமலா ஒரே e-mail i/d யிலிருந்து பல பதில்கள், பல பெயர்களில் வந்துள்ளன என்றீர்கள்?

    எனக்கு உங்கள் மறை நூலைக் கொடுத்துவிடுவதால் மட்டுமல்ல, அதை நான் முழுதும் படித்துவிட்டாலும் கூட, நீங்கள் என்னை மதம் மாற்றியவராக முடியாது. நான் நம்பிச் சொன்னவை சரிதாமா என்று பார்த்துக்கொள்ள அது உதவலாம். அவ்வளவுதான்.

  85. @பெருந்துறையான்:
    //நான் கொடுத்துள்ளவை குர் ஆன் மேற்கோள்கள் இல்லை என்று நீங்கள் கருதுவதால்,//
    நான் கருதுவதால் அது ஆமாம் இல்லை என ஆகிவிடப்போவதில்லை சகோ..அது குரான் வசனமாக இருந்திருந்தால், நான் மறுக்க ஒன்றும் இல்லை… வசனம் ஒன்றை குறிக்கும் போது வசன எண் மேற்கோளாக கொடுப்பது,6000க்கும் மேற்பட்ட வசனங்களில் சரிபார்க்க, எனது பணியை எளிதாக்கும்.. அதனால் தான் அப்படி சொன்னேன்..
    //என் e-mail i/d உண்மையில் உங்களுக்குத் தெரியாமலா ஒரே e-mail i/d யிலிருந்து பல பதில்கள், பல பெயர்களில் வந்துள்ளன என்றீர்கள்?//
    சகோ உங்களுக்கு தெரியவில்லை என நினைக்கிறேன்.இங்குள்ள யாருடைய மெயில் ஐடியும் யாருக்கும் தெரியாது.ஒரே மெயிலில் இருந்து பேசுவது அந்தந்த பின்னூட்டத்தில் வரும் படங்களை வைத்து அறிந்து கொள்ள முடியும்…அதை வைத்து சொன்னேன்..

    //உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.//
    இது தமிழ்ஹிந்து தளம் கொடுக்கும் உத்திரவாதம்.அதனால் உங்கள் மெயில் ஐடி எனக்கு தெரியாது.

    //எனக்கு உங்கள் மறை நூலைக் கொடுத்துவிடுவதால் மட்டுமல்ல, அதை நான் முழுதும் படித்துவிட்டாலும் கூட, நீங்கள் என்னை மதம் மாற்றியவராக முடியாது.//

    உணமை. நீங்கள் சொல்வதில் முற்றும் உடன்படுகிறேன்.நான் அந்த விஷயத்தை முக்கியத்துவப்படுத்தி சொல்லக்காரணம்,பொதுவாக குரான் தருகிறேன் என்றால்,ஆரம்புச்சுட்டானுகடா இவனுக மதமாத்த.அப்டீன்னு தான் எண்ணம் வரும்..குறிப்பா இங்கு அந்த எண்ணம் பிறறது பேச்சிலேயே தெரிகிறது.அதனால் எனது நிலையை தெளிவுபடுத்த நான் அதை சொன்னேன்…

    மற்றபடி நீங்க்ள் சொல்வது போல் நான் நம்பிக்கொண்டு இல்லை.ஆகா இவருக்கு குரான் கொடுத்தாச்சு,மதம் மாத்திடலாம் அப்டீன்னு… எனது வேலை எடுத்து சொல்வது மட்டுமே…. ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம்…

    எனது நிலை அவ்வளவே!

    அன்புடன்
    ரஜின்

  86. பெருந்துறையான்,

    தெளிவான கடிதம். பாராட்டுக்கள். வழிகள் பல உள்ளன. எல்லோருக்கும் ஒரே வழி சரிப்பட்டு வராது. அதனால் தான் இறைவன் பல்வேறு வழிகளை படைத்துள்ளார்.

    இரண்டு பேருக்கு கண்ணில் புரை (cataract) உள்ளது. டாக்டரிடம் காண்பித்து அறுவை சிகிச்சை செய்ய அழைத்து செல்கிறோம். இரண்டு பேருக்கும் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, இரண்டு பேருக்குமே ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன்பு , இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு ( blood pressure and sugar level) பரிசோதனை செய்து ரிசல்ட் வாங்கி வாருங்கள் என்கிறார். அவர் சொன்னவாறே வாங்கி வந்தோம். இருவரில் ஒருவருக்கு எல்லாம் நார்மலாக இருந்தது. அவருக்கு மட்டும் அடுத்த நாளே கேடராக்ட் ஆபரேஷன் செய்தார். இரண்டாமவருக்கு, இரத்த அழுத்தத்தை குறைக்கவும், சர்க்கரை அளவை குறைக்கவும் தேவையான மருந்துகளை எழுதிக்கொடுத்து ஒரு மாதம் சாப்பிட்டு வருமாறும் , அதன் பிறகு மீண்டும் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, நார்மலாகிவிட்டால் , அதன் பிறகே கண் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று சொல்லிவிட்டார்.

    இதுபோலவே, உணவு, உடை, இருப்பிடம், வாழ்க்கை முறை , இறைவழிபாடு அல்லது இறைவழிபாடு இன்மை என்று எதுவாயினும், மனிதர்கள் தங்கள் சூழ்நிலைகள் கொடுக்கும் நிர்பந்தங்களுக்கு ஏற்றவாறு , தேவையானவற்றை தேர்ந்தெடுக்கிறார்கள். இவை எந்தக்காலத்திலும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது.

    இந்து மதம் இறைவனால் படைக்கப்பட்டது.மற்றவையும் இறைவனால் அருளப்பட்டவை என்று நம்புவதற்கு, ஒரே தடையாக இருப்பது, ஆபிரகாமிய மதங்களின் , பிற வழிமுறைகளையும் அதே கடவுள் தான் படைத்தார் என்ற உண்மையை ஏற்காத குறுகிய புத்தி தான். மேலும் ஆணுக்கு பெண் சமமில்லை என்று சொல்லி, ஒரு ஆண் சொல்லும் சாட்சியத்துக்கு இரண்டு பெண்கள் சொல்லும் சாட்சியம் தான் சமம் என்று சொல்லி, ஒரு பெண் அரை ஆணுக்கு மட்டுமே சமம் என்று சொல்லி பெண்களை இழிவு படுத்துவோரை கடவுள் மன்னிக்க மாட்டார்.பெண்ணுக்கு முகத்திரை இட்டு, அடிமையாக நடத்துவோருக்கும் நரகமே கொடுப்பார் கடவுள். இவர்கள் திருந்த மறுத்தால், இந்த ஆணாதிக்க மதங்கள் இறைவனால் விரைவில் அழிக்கப்படும்.

  87. @ RAZIN on March 20, 2012 at 10:59 pm

    //142 (1) காபிரிகளைக் கண்டதும் கழுத்தை வெட்டுங்கள். அவர்களைக் கட்டிக் கொன்று குவியுங்கள்.

    144. போர்க்கோலத்தில் தன மதத்திற்காகப் போராடுவோர் அல்லாஹ்வுக்குப் பிரியமானவராவார்.

    146. ஓ நபியே, காபிரிகளைத் தாக்குங்கள்; பகைவருக்குக் கொடுமை செய்யுங்கள்.

    79. கடவுள் காபிரிகளின் வேரைச் சிதைப்பார்…அறுங்கள் கழுத்தை; வெட்டுங்கள் விரல்களை.//

    நண்பரே…

    இவையெல்லாம் என்னால் எண்களோடுதாம் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை ‘குர் ஆன்’ சொன்னதாக ‘யாரோ’ சொன்னவை என்று மறுமொழியிட்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் ஏற்கும் சரியான மொழிபெயர்ப்பைக் கேட்டேன்.

    ஒரு கட்டுரை சொல்லியுள்ள விஷயங்களிலிருந்து நாம் விலகிப்போகாமல் மறுமொழிகளிடுவது அவசியம். அநேகமாக நாம் (இரு தரப்புமே) விலகிவிடுகிறோம். யார் முதலில் இந்த விலக்கத்தைத் தொடங்கினார்கள் என்று வேண்டுமானால் நாம் தேடிக்கொண்டு நேரத்தை வீணடிக்கலாம்.

    ‘அச்சம் காட்டி மதம் மாற்றியது’ என்று ‘இஸ்லாம்’ பற்றி இக்கட்டுரை கூறியுள்ளது. அதற்கு அம்மத நூலும் காரணமாகி நிற்கிறது என்றும் இது கூறியுள்ளது.

    இதனைப் படித்து ஒரு நண்பர், ‘இக்கட்டுரையைப் படித்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை’ என்று சொல்லி, ‘நீங்களெல்லாம் (நாங்களெல்லாம்) அம்மறை நூல்களைப் படித்ததுண்டா’ என்று கேட்டிருந்தார்.

    அதனால்தான் எனக்குத் தெரிந்த, நான் நம்பிய நூலிலிருந்து அம்மறை நூலின் வசனங்களின் மொழி பெயர்ப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்த சில வசனங்களை எண்களுடன் மேற்கோளிட்டேன்.

    இன்னதுதான் சரியான மொழி பெயர்ப்பு எனக் குறிப்பிடப்படாதவரை இவ்விவாதம் பயனற்றது.

    ஹிந்து சமயத்தின் ஏற்றத் தாழ்வுகளால்தான் தம் முன்னோர் மதம் மாறிவிட்டதாக இங்கு ஒரு கருத்துப் பதிவாகியுள்ளது. என்றைக்கும் ஏழ்மை மற்றும் அறியாமை ஆகிய இரண்டு காரணிகள்தாம் மத மாற்றத்துக்குக் காரணம் என்பது என் முடிபு.

    சமயமும் சமுதாயமும் வேறு வேறானவை. சமுதாய வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளுக்குச் சமயத்தைக் காரணமாக்குபவர் என்னைப் பொறுத்தவரை அறியாதோரே.

    இந்த மறுமொழிக்குப் பிறகாவது மூலக் கட்டுரையை ஒட்டியும் அதன் மையக் கருத்தை ஒட்டியும் மட்டும் நம் விவாதங்கள் இருக்கட்டும். இரு தரப்பு விலக்கங்களும் இத்துடன் நிற்கட்டும்.

  88. இஸ்லாமிய மார்கத்த முழுசா தெரிஞ்சிக்காம சில நண்பர்கள் முட்டாள் தனமான கருத்து தெரிவிக்றாங்க.. தெரிஞ்சவங்க சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்றாங்க.. வருத்தமா இருக்கு.. உங்க வேதத்த முழுசா படிச்சுட்டு வாங்க… இல்ல இந்த உலகத்துக்கே அருளப்பட்ட குரான் இதையாவது முழுசா படிங்க… உங்க வேதத்தோட உண்மையான கருத்து ஒரே இறைவன்தான்.. அவனுக்கு நிகராக எதுவுமில்லை.. இந்த பொது அறிவு கூட இல்லாம எந்த வேதத்தையும் குற்றம் சொல்ல கூடாது.. பசு மாட்டையும் சிலையையும் வணங்க்ன அறிவு எப்படி வளரும்.. ஒரே இறைவன்தான்.. avandhan உங்களையும் படட்சான்.. அவன் தேவை இல்லாம எந்த மனிதனையும் கொள்ள சொல்லல.. பாகிஸ்தான் ல தீவிரவாதிங்க இருக்காங்கன அவங்க வேதத புரிஞ்சிகாததுதான் அவங்களோட தப்பு.. நீங்களும் அந்த தப்ப பண்ணிடாதிங்க..

  89. வாருங்கள் மதமல்ல மார்க்க சகோ யாசீர்

    இன்ஷா அல்லா உங்கள் தாவ பனி தொடரட்டும்.
    என்னது நீங்களும் இப்படி குரானை படிக்காமல் உளறுகிறீர்கள். உலகை கடவுள் படைத்தார் என்றால் அப்புறம் நபிகள் யாரு.
    குரான் சொல்வதை தான் வேடமும் சொல்கிறது என்று சொல்லி அல்லாவுக்கும் அவரது தூதர் நபிகளுக்கும் ஏன் இப்படி ஆப்பு வைக்கிறீர்கள். அல்லாவா குரானை மட்டுமே பாதுகாப்பேன் என்று சொல்லியுள்ளான், வேதத்தை பாதுகாப்பேன் என்று சொல்லவே இல்லையே. மேலும் அரபு மொழியே புனித மொழி, சமஸ்க்ரிதம் எப்படி புனித மொழியாகும்.

    வேதம் காபிர்களின் புத்தகம் அதும் குரானும் ஒன்று என்று சொல்லி அல்லாவுக்கு நீங்கள் இணை வைக்கலாமா. இதற்காக உங்களை அல்லா மன்னிப்பானா. போச்சே யாசிருக்கு எண்ணெய் சட்டி ரெடியாயிருச்சே என்று எனக்கு கவலையா இருக்கு. மேலும் அல்லா நிச்சயமாக அன்பானவன்.

  90. @ //yasir on April 9, 2012 at 11:03 pm//

    ‘இஸ்லாமியத்தை முழுதாகத் தெரிந்து கொள்ளாத முட்டாள்கள்’ என்று ஹிந்துக்களைக் குறிப்பிடும் நீங்கள் என்ன இந்திய வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவரா? ஹிந்துக்களே தங்கள் வேதங்களை முழுதும் அறிந்திராதபோது, நீங்கள் என்ன கண்டுவிட்டீர்கள் இதில்?

    ‘குரானே உலகுக்கான வேதம்’ என்று குறிப்பிடும் நீங்கள், உலகில் இத்தனை மொழிகளைப் படைத்துவிட்ட இறைவன், ஏன் மொழிக்கு ஒரு மறை நூலையும் தனித் தூதரையும் அனுப்பவில்லை என்று உங்களால் கூற முடியுமா?

    ‘பசு மாட்டையும் சிலையையும் வணங்கினால் அறிவு வளருமா?’ என்று கேட்கும் அறிவாளியே..! பசு மாட்டைத் தின்பதால் மட்டும்தான் அறிவு வளருமோ?

    உங்களுக்கு வேதம் தெரிந்திருந்தால், சிலை வணக்கத்தைக் குறித்து எதிர் மறையாக எதுவும் சொல்ல மாட்டீர்கள்.

    உலகில் பாகிஸ்தானில் மட்டும் வன்முறை நடந்துவந்தால் அவர்கள் வேதத்தைப் புரிந்துகொள்ளாதது காரணமாகலாம். ஆனால், உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் (இஸ்லாம்) மதத்தின் பெயரால் பயங்கரவாதக் கொலைகள், சொத்து நாசங்கள் நடந்து வருகின்றனவே..!

    முதலில் பயங்கரவாதச் செயல்களைப் புரியும் கொடுமதியாளர்களுக்கு ‘நீங்கள் மதத்தின் பெயரைச் சொல்லாதீர்கள்’ என்று அறிவுரை வழங்கிவிட்டு, அதன் பின் வேதம் வழங்கும் அறிவு என்ன என்பதை ஆய்வு செய்ய வாருங்கள்.

  91. அன்புள்ள பெருந்துறையான்,

    இறைநம்பிக்கை, இறை வழிபாடு ஆகியவை அன்பு, அஹிம்சை , பிற உயிர்களிடம் கருணை, இன்னலில் தவிப்போருக்கு உதவுதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பழங்காலத்தில் உருவானவை. ஆனால் மதங்கள் என்றபெயரில் , ஆபிரகாமிய மதங்களான கிறித்துவமும், அரேபிய இஸ்லாமும் உருவானபின்னரே, பிறமதங்களை அழிக்கும் வன்முறை போக்கு ஆரம்பித்தது. பிற மதத்தினரை ( காபிர்களை ) கொல்லும் படியான கட்டளைகள் இஸ்லாமியர்களின் நூல்களில் ஏராளம் உள்ளன. அதனை படிக்கும் இஸ்லாமிய மக்கள் வன்முறையில் ஈடுபட்டு வெடிகுண்டு, துப்பாக்கி, தற்கொலைப்படை என்று அலைகின்றனர். மேலும் பிறமதங்களை சேர்ந்தவர்களை தங்கள் மதத்துக்கு மாற்ற பேயாக அலைகின்றனர்.

    மனித இனம் அமைதியாக வாழவேண்டுமானால், மதமாற்ற வியாபாரிகளான ஆபிரகாமிய மதங்கள் தங்கள் போக்கை திருத்திக்கொள்ளவேண்டும். அவர்களில் திருந்த நினைப்போரை, வஹாபி பிரிவினர் கொன்றுவிடுவார்கள். எனவே, உலகில் உள்ள மக்கள் அனைவரும் இஸ்லாமிய , கிறித்துவ மதங்களை விட்டு விலகி, கடவுள் நம்பிக்கையே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தால், இந்த மதங்களால் ஏற்பட்ட தீமைகள் சிறிதாவது குறையும்.

    கடவுள் நம்பிக்கையால் ஏற்பட்ட நல்ல பலன்களை விடவும், ஆபிரகாமிய மதங்களின் மதமாற்ற வியாபாரத்தினால் ஏற்பட்ட தீமைகளே அதிகம். எனவே, உலக நலன் கருதி எழுநூறு கோடி மக்களும் தங்கள் கடவுள் நம்பிக்கைகளை கைவிட்டு , ஆபிரகாமிய மதங்களை விட்டு விலகினால் தான், அனைவரும் நிம்மதியாக வாழலாம். ஆபிரகாமிய மதங்கள் இருக்கும் வரை, உலகில் அமைதியும் , மகிழ்ச்சியும் இருக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *