வன்முறையே வரலாறாய்…- 28

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

jinnahஇந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த மானுட குல அழிவிற்கும், வன்முறைக்கும் முஸ்லிம்களே காரணமாக அமைந்தார்கள். இந்தியாவைப் பிரித்து தனிநாடு அமைக்கும் கோரிக்கை அவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதனை விரைந்து அடையும் வழியாகவே வன்முறை அவர்களால் முன்னெடுத்து நடத்தப்பட்டது.

பாகிஸ்தானை அடையும் நோக்கத்தைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடன் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்ட வன்முறையானது, நாடு துண்டாடப்பட்ட பின்னரும்  தொடர்ந்து நடந்தது.

முகமதலி ஜின்னாவால் துவங்கப்பட்ட நேரடிப் போராட்ட கூக்குரலும், மசூதிகளின் வாயிலாக பரப்பப்பட்ட பொய்த் தகவல்களும், புனிதப் போருக்கான (ஜிகாத்) அறைகூவல்களும், முகமது நபி “பாதர் போரில்” (Battle of Badr) பெற்றதாகக் கூறப்பட்ட வெற்றியைப் பற்றிய பிரசாரங்களும் முஸ்லிம்களிடையே ஆவேசத்தைத் தூண்டின என்பது எவரும் மறுக்கவியலாத உண்மை.

பிரிவினைக்குப் பிறகு பெற்ற தங்களின் புதிய இஸ்லாமிய  ‘புனித நாடான’ (Land of Pure) பாகிஸ்தானிலிருந்து அசுத்தமான காஃபிர்களை விரட்டியடிக்கும் வெறியும் முஸ்லிம்களின் வன்முறைக்குப் பின்னணியில் இருந்தது.  ‘இறைதூதர்’ முகமது நபி அரேபியாவின் குடிகளான யூதர்களையும், சிலை வழிபாட்டாளர்களான காஃபிர்களையும் கொன்றழித்து இஸ்லாமிய நாட்டையை அரேபியாவில் நிர்மாணித்ததற்கு இணையாகவும் இது முஸ்லிம்களால் நோக்கப்பட்டது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் 1947 பிரிவினையின் போது மேற்கு பாகிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் இந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடந்தது. கிழக்கு பாகிஸ்தானில் (கிழக்கு வங்காளம்) பிரிவினையின் போது வன்முறை பெருமளவில் தடுக்கப்பட்டாலும், இந்துக்களுக்கு எதிரான முஸ்லிம்களின் வன்முறை மீண்டும் பிப்ரவரி 1950-இல் மீண்டும் அரங்கேறியது. அதன் பின்னணியில், தோல்வியில் முடிந்த பாகிஸ்தானின் காஷ்மீரைக் கைப்பற்றும் முயற்சி இருந்தது. தோல்வியில் அவமானமடைந்த பாகிஸ்தானிய பத்திரிகைகளும், வானொலியும், ஆட்சியாளர்களும் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களை  ‘தேச துரோகிகள், எதிரியின் ஏஜெண்டுகள், ஐந்தாம்படையினர்…’ எனப் பல்வேறு பெயரிட்டு அழைத்துப் பொய்ப்பிரசாரத்தை ஆரம்பித்தார்கள்.

3BattleofBadr624A.D. பிப்ரவரி 6, 7 தேதிகளில் பாகிஸ்தானி ரேடியோ பாகிஸ்தானியர்களிடையே,  “மேற்கு வங்காளத்தில் (இந்தியப் பகுதி) முஸ்லிம்கள் இந்துக்களால் மிகவும் கொடுமையாக நடத்தப்படுகிறார்கள். அதனை முஸ்லிம்கள் எதிர்த்துப் போராட வேண்டும்” எனவும் அறிவித்தது. அது போன்ற பொய்ச் செய்திகள் கிழக்கு பாகிஸ்தானியப் பத்திரிகைகளால் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டன. பாகிஸ்தானி ரேடியோ  ‘கல்கத்தாவில் பத்தாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக’ அறிவித்த செய்தியை வெளியிட்ட கிழக்கு வங்காளப் பத்திரிகையான  ‘பஸ்பன் (Pashban)’,  ‘கல்கத்தாவில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக’ பொய்யாகத் திரித்து வெளியிட்டது.

எதிர்பார்த்தது போலவே இதுபோன்ற செய்திகள் கிழக்கு வங்காள முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து மிகவும் பயங்கரமான வன்முறை கிழக்கு பாகிஸ்தானின் இந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.  பெருமளவிலான படுகொலைகளும், கற்பழிப்புகளும், பெண்களைத் தூக்கிச் செல்லுதலும், கூட்டம் கூட்டமான மதமாற்றங்களும், கொள்ளையும்,  தீவைப்புகளும் துவங்கின. அங்கு நிகழ்ந்த அத்தனை கொடூரங்களைப் பற்றியும் இங்கு எழுதிவிட இயலாது.

Partition of Indiaஅதனையும் விட இந்திய அரசியல்வாதிகள் இத்தகைய கொடூரங்களை இந்தியர்களிடமிருந்து மறைத்ததுடன், ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் நடந்த சம்பவங்களைப் பற்றிய பொய்த் தகவல்களையும் அள்ளி வீசினர். உதாரணமாக, கிழக்கு வங்காளத் தலைநகரான டாக்காவில் வெறும் 600-லிருந்து ஆயிரம் இந்துக்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகத் இந்தியர்களிடையே அறிவிக்கிறார். ஆனால் உண்மை நிலவரமோ அதற்கும் பலமடங்கு மேலானது.

ராஜாபூர் பகுதியைச் சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த 150 இந்துக்கள் கொல்லப்பட்டு, தப்பியவர்கள் உடனடியாக மதமாற்றம் செய்யப்பட்டனர். அதே ஜவஹர்லால் நேரு, இந்தக் கலவரங்களின் காரணமாக ஏறக்குறைய 1.5 மில்லியன் இந்துக்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார். இதுவும் ஒரு குறைத்துக் கூறப்பட்ட ஒரு தகவலே.

இந்துக்களோ அல்லது சீக்கியர்களோ தாங்களாகவே ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தக் கலவரத்தையும் முன்னின்று நடத்தவில்லை. அது இந்தியப் பிரிவினைக்கு முன்னராக இருந்தாலும் சரி, பிரிவினைக்குப் பின்னரானாலும் சரி, அதுவே மறுக்கவியலாத உண்மை. ஆனால் தங்கள் மீது முஸ்லிம்களால் திணிக்கப்பட்ட கலவரத்தை வேறு வழியின்றி எதிர்த்துப் போராடினார்கள். அதுபோன்ற எதிர்க்கலவரங்கள் கிழக்கு பஞ்சாப், டெல்லி, அல்வார் பகுதிகளில் மட்டுமே நடந்தன. இந்தியாவில் பிற பகுதிகளில் இந்துக்கள் பெரும்பாலராக இருக்கும் பகுதிகளில் கூட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் எவையும்  நடத்தப்படவே இல்லை என்பதும் மறுக்கவியலாத உண்மையே.

partition_women_20060703ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இந்தக் கொடூரம் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டிருந்ததைக் காண்கிறோம். வெல்லப்பட்ட காஃபிர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து, அவன் மனைவி, மக்களை அடிமைகளாகப் பிடித்துச் செல்லவதற்கு அல்லாவே அல்லவா அனுமதியளித்திருக்கிறார்? சிறிதும் மானுடத்தன்மையின்றி முஸ்லிம்கள் இதனையே திரும்பத் திரும்பச் செய்தார்கள்.  உதாரணமாக, இளம் இந்துப் பெண்களை காஷ்மீரில் கைப்பற்றிய பதான் முஸ்லிம்கள், அவர்களை தூக்கிச் சென்று பாகிஸ்தானின் ஜீலம் மாவட்டத்துச் சந்தையில் வைத்து விற்பனை செய்தார்கள். ஆனால் எந்த இடத்திலும் ஒரு சீக்கியனோ அல்லது இந்துவோ அவ்வாறு செய்ததற்கான தடயங்கள் எதுவுமில்லை.

பொதுவில் இந்துக்களும், சீக்கியர்களும் இந்தக் கலவரங்களின் போது மிகவும் கட்டுப்பாட்டுடனேயே நடந்து கொண்டிருப்பது காணக் கிடைக்கிறது.  இந்துக்களும், சீக்கியர்களும் கொடூரமாக கொல்லப்படுகையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இல்லாத இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவிய அமைதியே இதற்கு உதாரணம். எனவே இத்தனை கொடூரங்களுக்கும் சந்தேகத்திற்கிடமின்றி முஸ்லிம்களே காரணகர்த்தர்கள்.

*

இன்றைக்கும் இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் பகுதிகளிலிருந்து இந்துக்களை விரட்டியடிப்பதை முஸ்லிம்கள் வழக்கமாகக் கொண்டிருருப்பதனைக் காண்கிறோம். தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்னெப்போதையும் விட இந்தியா ஒரு பெரும் ரத்தக்களறியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்பது மிகையான கூற்றல்ல என்றே கூறலாம்.

இதனைக் குறித்து பிறிதொரு சமயம் விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)

 

122 Replies to “வன்முறையே வரலாறாய்…- 28”

  1. இந்த மனிதர் தூய்மையானவிஷத்தை தவிர வேறு எதையுமே பேனாவில் நிரப்புவதில்லை போல.மாதக்கணக்கில் எழுதிக்கொண்டு வருகிறார்.ஆரம்பத்தில் மனம்முழுக்க புழுங்கி வேகும்.இப்போது பழகி விட்டது.ஒரு மனிதரால் எந்த அளவிற்கு வெறிகக்க முடியும் என்று அறிந்து வருகிறேன்.இன்றைக்கு ஒரு அற்புதமான வெறியை கக்கியிருக்கிறார்.”முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் பகுதிகளிலிருந்து ஹிந்துக்களை விரட்டியிருக்கிரார்கலாம் தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கில்லையாம்”.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் இது நடந்தது?நடக்கிறது?ஆனால் ஒரு எதார்த்தம் ஒன்று உண்டு.சென்னை போன்ற நகரங்களில்தான் பிழைப்பிற்காக எல்லோரும் ஒன்றாய் ஒரே கட்டிடத்தில் இருக்கிறார்கள்.கிராமங்களில் தனித்தனியாஇதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.எல்லோருமே.எல்லா இனமுமே.என் ஊர் திருநெல்வேலி மாவட்டம் ஏறுவாடி.முஸ்லிகள் மட்டும் ஒரு பகுதியில் வசிக்கிறோம்.பிள்ளைமார்கள் தனியாக இருக்கிறார்கள்.ஆசாரிமார்க்கென்று தனிபகுதி.தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு பகுதியென்று தனித்தனியாகவே வாழ்கிறோம்.இது காலகாலமாகவே இருக்கிற நடைமுறை.நான் சிறுவனாக இருக்கும்பொழுது இரண்டு பெரிய மளிகை கடைகள் இருந்தது.ஒன்று சொரிமுத்துசெட்டியார்கடை பீர்மனாகடை இதில் பீர்மனாகடை முஸ்லிம் கடை.நாங்கள் செட்டியார் கடையில்தான் வாங்குவோம்.முஸ்லிம் கடையில் வெளியூர் பகுதியில் உள்ள வியாபாரிகளின் கூட்டம்தான் அதிகமாக இருக்கும்.அந்த சின்னசின்ன வியாபாரிகள் அனைவரும் ஹிந்துக்கள்தான்.எங்கள் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் வீட்டு கல்யாணம் அனைத்திலும் செட்டியாரை பார்க்கலாம்.பெரும்பாலான மரண வீடுகளிலும் செட்டியார் இருப்பார்.எப்போதுமே சட்டை போடாத செட்டியார் இங்கு வரும்போது மட்டும்தான் ஒரு வெள்ளை சட்டை அணிந்து வருவார்.எங்கள் ஊரின் அடையாளங்களில் ஒருவர்.எப்போது ஹிந்து மத அடையாளங்களோடுதான் அவர் இருப்பார்.எங்களுக்குள் எந்த மாச்சரியங்களும் இருந்ததில்லை.ஏன் இன்றைக்குகூட எங்கள் ஊர் மெயின் ரோட்டில் அனுரோஜா என்றொரு பேன்சி கடை .நாடார் சகோதரர்கள் வைத்திருக்கிறார்கள்.அதற்கு நான்கு கடை தள்ளி என் சொந்த மச்சான் அதே பொருட்களோடு கடை வைத்திருக்கிறார்.ஆனால் பெரும்பாலான முஸ்லிகள் நாடார் கடையில்தான் வாங்குகிறார்கள்.அவர்கள் மூன்று சகோதரர்கள் ஒற்றுமையாய் இருந்து நல்ல உழைக்கிறார்கள் மலிவான விலையில் விற்கிறார்கள்.இன்முகத்தோடு பேசுவார்கள் மக்கள் அதைதான் பார்கிறார்கள்.உங்களைப்போன்ற வெறி கிளப்பக்கூடியவர்களிடமிருந்து எங்களையும் எங்கள் மக்களையும் எங்கள் ஒற்றுமையும் இறைவன் காப்பாற்ற வேண்டும்.உங்கள் பணிதொடரட்டும்.மறக்காமல் கான் என்ற வரலாற்று ஆசிரியன்தான் இந்த விஷத்தை கக்கினான் என்றும் நாம் திரும்ப அதை வாந்தி எடுக்கிறேன் என்றும் குறிப்பிட மறக்காதீர்கள்.

  2. இன்னும் சில நல்லிணக்க உதாரணங்களை சொல்கிறேன்.முழுக்கமுழுக்க முஸ்லிம்களாய் இருக்கிற எங்கள் தெருவில் ஒரு கிறிஸ்துவ நாடார் பெரிய ஆஸ்பத்திரி கட்டியிருக்கிறார்.இது 5 வருங்களுக்கு முன் நடந்தது.அது ஒரு முஸ்லிம் குடும்பத்தின் வீடு.அவர்கள் கஷ்டத்தால் விற்றார்கள்.அதை வாங்குவதற்கு முஸ்லிம்களிலேயே வசதி படைத்தவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அந்த டாக்டரின் மேல் உள்ள நல்ல அபிப்பிராயத்தால் அவருக்கே கொடுக்க சம்மதித்தார்கள்.அதே நேரத்தில் நாமாக மட்டுமே இருக்கிற ஒரு பகுதியில் வேறு இனத்தவர் வந்துவிட்டால் அவர்களை வேறு மாதிரியாக பார்க்கிற இயல்பு நிறைய மனிதர்களிடம் இருக்கத்தான் செய்கிறது.இது முஸ்லிம்களிடம் மட்டும்தான?இது நாய் குணம்.ஒருகூட்டத்தில் புது நாய் வந்தால் அனைத்து நாய்களும் சேர்ந்து விரட்டுவதில்லையா?எல்லா மனிதனிடமும் கொஞ்சம் மிருக குணம் இருக்கத்தானே செய்கிறது.இதை களைவதற்கு நாம் ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்.

  3. நமது தளத்தில் மறுமொழி எழுதிய திரு சுபி அவர்கள் ஷியா முஸ்லீமான முஹம்மது அலி ஜின்னா தான் பாகிஸ்தான் பிரிவினைக்கு போராடினார் என்றும் மற்ற சன்னி முஸ்லீம்கள் இந்தியாவைப் பிரிக்க விரும்பவில்லை என்றும் எழுதியிருந்தார்.

    காயிதே மில்லத் திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் 1941- மார்ச்சில் பேசும்போது, மத அடிப்படையில் இந்தியா துண்டாடப்படவேண்டும் என்று பேசியுள்ளார்.

    அதே காயிதே மில்லத் 1946- ஏப்ரலில் டெல்லியில் நடந்த லீக் லெஜிஸ்லேச்சர் கன்வென்ஷனில் பேசும்போதும் பாகிஸ்தான் ஒன்றே தீர்வு என்று பேசினார்.

    அதே காயிதே மில்லத் 1946- ஆகஸ்ட் 16- அன்று வாலாஜா மசூதியில் பேசும்போது, பாகிஸ்தானுக்காக எங்கள் குழந்தைகளுடன் உயிர்த்தியாகம் செய்வோம் என்று முழங்கினார்.

    காயிதே மில்லத் என்ன ஷியா முஸ்லீமா என்று சுபி சிறிதாவது சிந்திப்பாரா ? தேசப்பிரிவினைக்கு ஷியா சன்னி என்று எல்லா இஸ்லாமியருமே முயன்று போராடினார்கள். பொய்களை எவ்வளவு காலம் தான் சொல்லிப் பிழைப்பார்களோ ?

  4. அன்பின் ஜெனாப் மீரான் சாஹிப்

    மத நல்லிணக்கம் பற்றிய அக்கரை உயர்வானது தான். நீங்கள் பகிர முனைந்த ஓரிரு விஷயங்கள் மனதிற்கு நிறைவையும் தருகின்றன.

    வரலாற்றில் மொகலாய காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இஸ்லாமிய வன்முறையைத் தவிர்த்து ஹிந்து முஸ்லீம் இணக்கப்பக்கங்களும் உள்ளனவா என்றால் நிச்சயமாக ஆம் என்று சொல்லுவேன். தெரிந்தவரை அதைப் பகிர முனைகிறேன். ஆனால் வரலாற்றில் மொகலாய ரத்தக்கரை படிந்த பக்கங்களை வரலாற்றுப்பார்வையில் நான் பார்க்கவே மாட்டேன் என்று ஹடம் பிடிப்பது அறிவு பூர்வமான செயல்பாடாக ஆகாது.

    ஜெனாப் சுவனப்ரியன் அவர்களுக்கு சொன்னதே உங்களுக்கும். ஜெனாப் எம் ஏ கான் சாஹேப் தன் சொந்தக்கதை எதையும் எழுதவில்லை. மொகலாய காலத்தைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள் ஃபார்ஸி உர்தூ மொழிகளில் எழுதிய விஷயத்தின் மொழியாக்கமே அவர் பகிர்ந்தது. இஸ்லாமிய மதவெறியால் ஹிந்துஸ்தானம் துண்டாக்கப்பட்டு ஹிந்துக்கள் பெருமளவு படுகொலை செய்யப்பட்டது சமீபத்திய வரலாறு. முஸல்மாணிய சஹோதரர்களும் கூட படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஹிந்துக்கள் பாதிக்கப்பட்ட அளவிற்கு இல்லை என்பது நிதர்சனம்.

    உண்மையான வரலாறு பகிரப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீ ரூபன் முதல் நான் நீங்கள் இந்த தளத்து மற்றைய வாசகர்கள் யாருக்கும் எந்த அபிப்ராய பேதமும் இருக்காது. உங்களுக்கு இந்த மொழிகள் தெரியுமானால் குறிப்பிட்ட புஸ்தகங்கள் சொல்வதிலிருந்து ஸ்ரீ ரூபன் முன்வைத்த விஷயங்கள் எப்படி மாறுபடுகிறது என்று குறிப்பாகச் சொன்னால் எல்லோரும் ஏற்றுக்கொள்வோம்.

    அதை அறவே செய்யாது விஷத்தையே மசியாக்கி கான் சாஹேப் எழுதியிருக்கிறார் என்று புலம்புவது எப்படி சரியாக இருக்கும்? குறிப்பிட்ட தரப்புகளால் உங்கள் மறுப்பை ஆதார பூர்வமாக செய்ய விழையுங்கள். வெற்றுப்புலம்பல்கள் அறிவு பூர்வமான செயல்பாடு ஆகாது.

    \\\\ ”முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் பகுதிகளிலிருந்து ஹிந்துக்களை விரட்டியிருக்கிரார்கலாம் தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கில்லையாம்”.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் இது நடந்தது? \\\

    ஒரு உதாஹரணம்.

    மேல் விஷாரம்.

    மேல் விஷாரத்தை கபளீகரம் செய்து ஹிந்துக்களை கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்ற படியாக்கி கோவில்களை கோடௌன் களாக ஆக்கியது போதாது என்று கீழ் விஷாரத்து ஹிந்துக்களை முஸல்மாணியர் அடக்க முனைந்து இந்த விவகாரம் ஹிந்துஸ்தானத்தின் உச்ச ந்யாயாலயம் வரை சென்று விசாரிக்கப்பட்டது.

    இதே தளத்தில் ஹிந்துக்களது மத ஊர்வலத்தினை அடாவடித் தனமாக முஸல்மாணிய குண்டர் குழாம் எப்படி தடுக்க முனைந்தது என்பதும் பகிரப்பட்டுள்ளது. அந்த அக்ரமத்தை சஹோதரர் ஜெனாப் சுவனப்ரியன் கூட கண்டனம் செய்திருக்கிறார்.

    எமது ஹிந்து இயக்கத்து சஹோதரர்களெல்லாம் மிகக் கொடுமையான முறையில் தமிழகத்தில் ஜிஹாத் என்ற வன்முறையால் கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகின்றனர். ஸ்ரீ அ.நீ முழு வ்யாசமாகப் பகிர்ந்துள்ளார்.

    ஸ்ரீமான் ரூபன் ……… ஒரு புறம் பலத்த ஆதரவு ……… ஒரு புறம் வெற்றுப்புலம்பல்களால் ஆன ஆதாரமிலா bla bla bla வெறுப்பு……. இதிலெல்லாம் நேரத்தை வீணாக்காது உங்கள் இலக்கான கான் சாஹேபின் புஸ்தக மொழியாக்கத்தை முழு நேர்மையுடன் பகிர முனையும் உங்கள் செயல்பாட்டுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் வேலும் மயிலும் சேவலும் உங்களுக்கு துணையிருப்பதாக.

  5. மீரான் பாய்

    நீங்கள் சொல்லும் விஷயங்கள் எங்கள் ஊரிலும் தான் நடக்கிறது. எங்கள் கிராமத்தில் உள்ள இஸ்லாமிய அன்பர்களும் மற்றவர்களும் நண்பர்களாகத்தான் இருக்கின்றோம். ஆனால் தீவிரவாதமும் இந்த நாட்டில் தலை விரித்து ஆடுகின்றது என்பது உண்மை. நீங்கள் சொல்கின்ற விஷயங்கள் பாகிஸ்தானில் நடகின்றது என்று உங்களால் சொல்ல முடியுமா ? தற்போது இஸ்லாத்தின் பெயரால் உலகெங்கும் தீவிரவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. அதைப் பற்றி தங்கள் மதத்தினர் ஒரு வார்த்தை கூட கண்டித்து பேசுவது இல்லை என்பது எங்கள் கவலை. அதை விட இந்து அரசியல் தலைவர்கள் குறி வைத்து கொல்லப்படுவது மிக மிகக் கவலைப் பட வேண்டிய விஷயம். சிறுபான்மையினர் என்ற அடையாளத்திலிருந்து வெளிய வந்து எங்களுடன் சரி சமமாக பயங்கரவாதிகளைக் கண்டிக்க நீங்களும், முக்கியமாக உங்கள் அரசியல் தலைவர்கள் முன் வரவேண்டும்.

  6. திரு. மீரான் சாஹிப்…

    மிக அற்புதமான பார்வை.. திருநெல்வேலியில் இசுலாமியர்கள் எவ்வளவு இணக்கமாக வாழ்கிறார்கள் என்பது நான் அறிந்ததே. ஆர்.எஸ்.எஸ் மற்றும் T.N.T.J போன்ற மத அடிப்படை வாத இயக்கங்களின் வெறியை தூண்டும் பேச்சினால் தங்களின் ஒற்றுமை எவ்வித பங்கமும் இல்லாமல் எப்பொழுதும் போல் இப்படியே இருக்க இறைவன் அருள்வானாக.

  7. ஆர் எஸ் எஸ் மத அடிப்படைவாத அமைப்பு அல்ல. TNTJ – அமைப்பு மத அடிப்படை வாத அமைப்பு மட்டுமே. ஆர் எஸ் எஸ் நம் நாட்டை நேசிக்கும் ஒரு அமைப்பு. அதில் இந்து, முஸ்லீம், பார்சி, கிறித்தவரின் பல்வேறு பிரிவுகள், இஸ்லாத்தின் பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றை சேர்ந்த யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம், ஆனால் முஸ்லீம் லீக்கிலோ, TNTJ – விலோ இஸ்லாமியரில் ஒரு பிரிவினர் மட்டுமே உறுப்பினர் ஆக முடியும். ஷியாக்கள், அஹமதியாக்களுக்கு அனுமதி இல்லை.மற்ற மதத்தினரைப் பற்றி பேச்சுக்கே இடம் இல்லை.

    ஆர் எஸ் எஸ்ஸில் வீரமணி கும்பல் கூட உறுப்பினர் ஆகமுடியும். ஏனெனில் ஆர் எஸ் எஸ்ஸில் உள்ளவர்களுக்கு கடவுள் நம்பிக்கை எதுவுமே கட்டாயமாக்கப் படவில்லை. எனவே தாயுமானவரின் கருத்து நியாயமற்றது.

  8. இந்த புத்தகத்தை எழுதிய எம் ஏ கான் ஒரு முஸ்லிமே அல்ல. பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி தன்னை நாத்திகனாக அறிவித்துக் கொண்டுள்ளவர். இவர் பார்வையில் இஸ்லாத்தையும் மொகலாயர்களையும் முஸ்லிம்களையும் எவ்வாறு பார்த்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. இவர் உண்மையாளராக இருந்தால் தனது இஸ்லாமிய பெயரை நீக்கி விட்டு புத்தகத்தை வெளியிட்டிருக்க வேண்டும். படிப்பவர்கள் ‘ஒரு முஸ்லிமே எழுதியதால் இதில் உண்மைதானே இருக்கும்’ என்று நினைப்பார்கள் என்ற நச்சு எண்ணத்தில் தனது பெயரை இன்னும் மாற்றவில்லை. க்ருஷ்ண குமார் கூட ஒரு முஸ்லிமே தவறாக எழுதுவாரா என்று முன்பு சொன்னதையும் நாம் பார்க்க வேண்டும்.

    ஆனால் இந்த புரட்டுகளை எல்லாம் இந்துக்களே ஒதுக்கி விட்டு முஸ்லிம்களோடு அண்ணன் தம்பிகளாக பழகி வருகின்றனர். எனவே சிண்டு முடியும் வேலை இனியும் செல்லாது. அந்த சிண்டை அவிழ்க்கும் திறன் இணையத்துக்கு அதிகமாகவே உண்டு.

    https://bookstore.iuniverse.com/Products/SKU-000115284/Islamic-Jihad.aspx

    முஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்!

    விஜய நகர அரச சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு பிஜப்பூர் காரர்கள் கர்நாடகத்தை வென்று தெற்கிலிருந்து முன்னேறி வருவதையும் கோல்கொண்டா தளபதிகள் வடக்கிலிருந்து முன்னேறி வருவதையும் கண்டு தன்னுடைய ராஜ்ஜியம் தனது கரங்களிலிருந்து நழவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தக்காண சுல்தான்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டி ராமராவ் என்ற பிரதிநிதியை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இதில் தலையிட ஒளரங்கஜேப் விரும்பவில்லை.

    ரங்கராயலுக்கு போர் நெருக்கடிகள் இன்னும் அதிகமானபோது ஸ்ரீனிவாஸ் என்ற பிராமணத் தூதுவரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ‘இரண்டரை கோடி ரூபாயும், இருநூறு யானைகளும், தன்னிடமுள்ள ஆபரணங்களையும் தருவதுடன் வருடாந்திர வரியைத் தொடர்ந்து கட்டிடவும் தனது ராஜ்ஜியத்தை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்து விட்டு பின் தனது பகுதியை ஒரு ஜாகீராகத் தனக்குத் திரும்பக் கொடுப்பதற்கும் சம்மதம்’ என்று ஸ்ரீரங்க ராயலு தெரிவித்தார்.

    மேலும் ‘தானும் தனது உற்றார் உறவினர்களும் குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாகவும்’ சொல்லி அனுப்பியவர் ஸ்ரீரங்கராயலு.

    “….the Raja promised tp turn Muslim with all his relatives and dependents!……”

    உள்ளத்தில் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி போகிறதே என்ற பயத்தினால் இஸ்லாமாவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஒளரங்கஜேப் அந்த அரசரின் கோரிக்கையை நிராகரித்தார்.

    Sir Jadunath Sarkar, History Of Aurangzib, Calcutta, 1912 vol. 1, Page 248, 249

    இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் போது ‘இந்தக் கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்தியாவில் முகலாயர்கால ஆட்சியின் பண்பைப்பற்றி நல்ல விளக்கத்தைத் தருகிறது.’என்கிறார் ஜாதுநாத் சர்க்கார்.

    History Of Aurangzeb, Page 249.

  9. தாயுமானவன் அவர்களுக்கு மிக்க நன்றி.இந்த நடுநிலையைதான் எதிர்பார்கிறேன்.”எங்கள் தலைவர்களை கொன்றார்கள் எங்களோடு சண்டையிட வந்தார்கள்”என்று நீங்கள் சொன்னால் அவன் அவன்தரப்பிலிருந்து நான்கு காரணங்களை அடுக்குவான்.இது ஆரோகியமா?இவர்கள் போல் உள்ளவர்களை தனிமை படுதுவதுதானே நம்மைபோன்று வாசிப்பு ஆர்வமும் அதை பகிர்ந்துகொள்ளும் தன்மையும் உள்ளவர்களின் கடமையாக இருக்கவேண்டும்.அடுத்தது இங்கிருக்கும் முஸ்லிமிடம் பாகிஸ்தானையே உதாரணம் காட்டுவது.பாகிஸ்தானுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்.அது சண்டையிலேயே பிறந்து சண்டையிலேயே வளர்ந்து சண்டையோடு வாழ்ந்து கொண்டிருக்கிற நாடு.கிருஷ்ணகுமார் அவர்கள் முகலாயர் காலத்துக்கு போய்விடுகிறார்கள்.முகலாயர் யார்?நாடு பிடிக்க வந்தவர்கள்.நாடு பிடிக்க வந்த அத்தனை மன்னனும் அராஜகம் பண்ணியவர்கள்தான்.”ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்த்தின் வரலாறு”என்றொரு சினிமா பாடல் வரி ஒன்று உண்டு.அதுதான் உண்மை.எல்லா அரசர்களும் ரத்தத்தை ஓட்டித்தான் தங்கள் வீரத்தை பறைசாற்றினார்கள்.அதிலும் முகலாயமன்னன் எவனுமே இஸ்லாமிய சமயத்தை ஒழுகி வாழ்ந்தவர்களும் இல்லை.குடி கும்மாளம் ஆடம்பரம் என்றுதான் அவர்களின் காலம் கழிந்தது.பொது மக்களின் வரிப்பணத்தில் தன் மனைவிக்கு சமாதியை தாஜ்மகால் என்ற பெயரில் கட்டிவைத்து அழகு பார்பானா?இதுவே இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான செயல்.இஸ்லாத்தின் அயிந்தாவது கடமையான ஹஜ்ஜை ஒரு பயலும் செய்யவே இல்லை.இவர்களுக்கெல்லாம் இஸ்லாமிய சாயம் பூசுவதா மன்னர்களை மன்னர்களாக பாருங்கள்.மத ஆதொரிட்டி-யாக பார்க்காதீர்கள்.அதுமட்டுமில்லாமல் இன்று நாம் அரசியல் நாகரிகமிக்க காலத்தில் ஜனநாயம் தழுவிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.வலியவனே வாழ்வான் என்ற நிலையிருந்த காலத்திய வரலாற்றை இன்றைய காலத்தில் பொருத்தி ரத்த ஆற்றை வோட்டுவதா நாகரீகம்.

  10. அன்பின் ஜெனாப் சுவனப்ரியன், ஜெனாப் மீரான் சாஹிப்

    நேர்மையான மத நல்லிணக்கத்தில் தமிழ் ஹிந்துதளத்தினர் அனைவருக்கும் ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கும் என்றும் ஈடுபாடு உண்டு. முஸல்மாணிய சஹோதரர்களுடன் இந்த விஷயத்திற்காக முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற இயக்கத்தின் வாயிலாக ஹிந்துத்வ இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அறிவு பூர்வமாக எப்போது கருத்துத் தெரிவிக்க முனைவீர்கள்?

    அன்பு சஹோதரர்களாகிய நீங்கள் சரித்ரத்தை மறுதலிக்க விழைந்தால் செய்ய வேண்டிய செயற்பாடு மூல நூற்களை ஆராய்ந்து அதிலிருந்து ஸ்ரீமான் ரூபன் அவர்களது மொழியாக்கம் எப்படி மாறுபடுகிறது என்பதை நிர்த்தாரணம் செய்ய விழைவது.

    இணையத்தை மேய்ந்து உரலாயுதங்களை காபி பேஸ்ட் செய்வது விடலைகளின் பொழுது போக்கு.

    யார் முஸ்லீம் யார் முஸ்லீம் இல்லை என்று உங்கள் அலகீடுகளின் படி முடிவெடுக்க ஆரம்பித்தால் ஜெனாப்-ஏ-அலி சுவனப்ரியனைத் தவிர்த்து வேறு யாரும் முஸ்லீமாக மிஞ்ச மாட்டார்கள்.

    உங்கள் அலகீடுகளின் படி முற்று முழுதாக அஹ்மதியாக்கள், பரேல்வி சுன்னி முஸல்மாணியர், ஷியா முஸல்மாணியர், ஷியா உட்பிரிவினரான போஹ்ரா சமுதாயத்தினர், ஸூஃபிகள் ………… இவர்கள் யாரும் இஸ்லாமியர் இல்லை என்று சான்றிதழ் அளிப்பீர்கள்.

    நமக் ஹராமி நிலப்பரப்பான மிச்சம் மிஞ்சிய பாக்கி ஸ்தானத்தில் அஹ்மதியாக்கள் சட்ட ரீதியாக இஸ்லாமியர் கிடையாது. ஹிந்துஸ்தானத்தில் அஹ்மதியாக்கள் சட்ட ரீதியாக முஸ்லீம்கள். மற்ற அனைத்து இஸ்லாமியப் பிரிவினர்களும் சட்ட ரீதியாக இஸ்லாமியர்.

    \\ நாடு பிடிக்க வந்தவர்கள்.நாடு பிடிக்க வந்த அத்தனை மன்னனும் அராஜகம் பண்ணியவர்கள்தான்.” \\

    இதைப் பிறகு தனியாக விசாரிக்கிறேன்.

    \\\ ரத்த ஆற்றை வோட்டுவதா நாகரீகம். \\\

    அன்பின் ஜெனாப் மீரான் சாஹிப்…… இதை நீங்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு ………எமது ஹிந்துத்வ இயக்க சஹோதரர்களை ஒரே மாதிரியாக கொடுமையான ஆயுதங்களால் படுகொலை செய்த இழிவைக் கண்டித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    படுகொலை செய்யப்படுவது ஹிந்துவாக இருந்தாலும் முஸ்லீமாக இருந்தாலும் மானுடத்திற்கு இழுக்கு. இன்றைய திகதியில் தமிழகத்தில் ஜிஹாத் படுகொலைகளுக்கு தமிழக ஹிந்துக்கள் இலக்குகளாக இருப்பதை கண்டனம் செய்வதே நேர்மையான செயல்பாடு.

    ஸ்வதந்த்ர ஹிந்துஸ்தானத்தில் படுகொலையில் ஈடுபட்ட முஸ்லீம் மற்றும் ஹிந்துக்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுத்த மாண்பு ஹிந்து ஹ்ருதய சாம்ராட் ஆன ஸ்ரீ நரேந்த்ர பாய் மோதி அவர்களது சர்க்காருக்கு மட்டிலும் உண்டு.

    வெற்று கோஷங்களால் அல்லாமல் தத்யங்களை சட்ட ஆவணங்களை முறையாக ஆராய்ந்த முஸல்மாணிய சஹோதரர்களும் இதை பொது தளத்தில் தெளிவாக விதந்தோதியிருக்கிறார்கள்.

  11. ஜெனாப்-ஏ-அலி

    \\\\ இவர் உண்மையாளராக இருந்தால் தனது இஸ்லாமிய பெயரை நீக்கி விட்டு புத்தகத்தை வெளியிட்டிருக்க வேண்டும். படிப்பவர்கள் ‘ஒரு முஸ்லிமே எழுதியதால் இதில் உண்மைதானே இருக்கும்’ என்று நினைப்பார்கள் \\\

    எழுதியவர் ஒரு முஸ்லீம் என்பதும் கூட ஒரு தத்யமே அன்றி ………… தத்யம் அதிலேயே ஆரம்பித்து அதிலேயே முடிந்து விடுவதில்லை.

    படிப்பவர்கள் எல்லாம் வெள்ளந்திகள் என்று ஏன் முடிவெடுக்கிறீர்கள்?

    எழுதப்பட்ட விஷயத்தில் மூல நூற்கள் சார்ந்து தத்யம் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பது அறிவுடைமை.

    மற்றவையெல்லாம் பயங்கொள்ளி விதண்டாவாதங்கள்.

    அறிவுபூர்வமாக மூல நூற்களை ஆராய்ந்து அதில் சொல்லப்பட்ட விஷயங்களிலிருந்து ஸ்ரீமான் ரூபன் அவர்களது மொழியாக்கம் எப்படி மாறுபடுகிறது என்பதை விட்டு விட்டு இந்தப்புஸ்தகத்தில் இப்படியிருக்கிறது அந்தப்புஸ்தகத்தில் இப்படியிருக்கிறது என்று ஏன் பகிர முனைகிறீர்கள்.

    கான் சாஹேப் பட்டியலிட்ட இஸ்லாமியரால் எழுதப்பட்ட ஃபார்ஸி மற்றும் உர்தூ மூல நூற்களை ஏன் ஆராய விழைய முயலவில்லை? அதிலிருந்து மிகக் குறிப்பாக இங்கு பகிரப்படும் கருத்துக்களில் பிழைகள் என்ன என்று ஏன் பகிர முனையவில்லை.

    ஸ்ரீமான் அரிசோனன் மற்றும் ஸ்ரீமான் பாலா (தற்போதைய ரெவ ரெண்டு பாலா இல்லை) அவர்களும் ………. கான் சாஹேபின் மூல ஆங்க்ல நூலில் இருந்து ஸ்ரீ ரூபன் அவர்களது மொழியாக்கம் வித்யாசப்படுவதை சுட்டியபடிக்கு…….இப்படியான நேர்மையான செயல்பாட்டில் ஈடுபட்டு ஒரு விஷயத்தில் பிழை துலக்கியதை ஸ்ரீமான் ரூபன் அவர்களும் ஏற்றார்கள்.

  12. பிரதாப் அவர்கள் முருங்கைமரம் ஏறிவிட்டார்.இதுதான் பிரச்சனை.ஆளுக்கொரு இயக்க முகமூடியை அணிந்துகொண்டால் எப்படி உங்கள் வார்த்தைகளில் நேர்மையும் நடுநிலைத்தன்மையும் இருக்கும்.நீ யோக்கியனா நான் யோக்கியனா என்ற போட்டியும் மல்லுக்கட்டலும்தான் இருக்கும்.ஆர்.எஸ்.எஸ் சிலோ T N T J விலோ நாம் ஏன் சேரனும் அவர்கள் ஏன் சேர்க்கணும் இதில் சேராமல் இருந்தால் நாம் உண்மையான ஹிந்துவாகவோ முஸ்லிமாகவோ இருக்கவே முடியாதா?இன்னும் சொல்லப்போனால் இவர்களோடு சேராமல் இருந்தால்தான் மனிதனாக ஒற்றுமையாகவே இருக்க முடியும்.இவர்களின் எண்ணிக்கை என்று அதிகமானதோ அன்றிலிருந்துதான் மக்களின் விரிசலும் அதிகமானது.இயக்கங்கள் தங்கள் சமுதாய மக்களுக்கு நலன் விளைவிப்பயாக இருக்கவேண்டுமே அல்லாமல் பிற சமுதாய மக்களை தூற்றக்கூடியதாகவோ வம்பிற்க்கிழுப்பவயாகவோ இருத்தலாகாது.அப்படி எந்த இயக்கத்தில் அடுத்த மக்களை காழ்ப்புணர்வோடு பார்க்க போதிக்கப்படுகிறதோ அந்த இயக்கத்தை காறி துப்பிவிட்டு வெளியேறுங்கள்
    நாம் சகோதரை இருப்போம்.

  13. ஹிந்துமத ஊர்வலத்தில் முசல்மானியர்கள் குழப்பம் விளைவிப்பதாக திரு கிருஷ்ணகுமார் அவர்கள் ஆதங்கப்பட்டார்.உண்மையில் கண்டிக்க தண்டிக்கபடவேண்டிய செயல்.ஆனால் இது எங்கோ சில தடியன்களால் நிகழ்த்தப்படுகிறது.இதைப்போல தடியன்கள் அந்தப்பக்கமும் இருப்பான்.நாம்தான் அவங்களை ஒதுக்கவேண்டும்.சார் நான் இருக்கும் பாரிமுனை பகுதியில் என் தெருவில் முழுக்கமுழுக்க முஸ்லிம்கள்தான் சார்.ஒவ்வொரு வாரமும் இரவில் சுவாமிஊர்வலம் அலங்கரித்து வெடி முழக்கத்தொடும் மங்கள வாத்தியங்களோடும் வரும் சார்.எண்ணி நான்கைந்து குடும்பங்கள்தான் அந்த தெருவில்.அவர்களின் வீட்டு வாசல்களில் சற்று நேரம் நின்று சடங்குகள் நடக்கும்.அந்த தெரு அகலம் குறைந்த தெரு.சாமி எதிரில் வந்துவிட்டால் கார் கடந்து போக முடியாது.நாங்கள் காத்திருப்போம்.எங்களுக்கு எந்த எரிச்சலும் வந்ததில்லை.யாரும் எந்த முணுமுணுப்பும் செய்வதில்லை.இது காலகாலமாக மிகச்சாதரணமாக நடந்து கொண்டிருக்கின்றது.அந்த காலத்தில் இந்த தெருவில் முழுக்க ஹிந்துக்களாக இருந்திருப்பார்கள் போல.இன்று முஸ்லிம்கள் அந்த பகுதியில் வியாபாரிகளாக வந்தப்பிறகு அவர்கள் இவர்களிடம் வீடுகளை விற்றுவிட்டு வேறு பகுதிகளுக்கு சென்று விட்டார்கள்.ஆனாலும் முந்தைய நடைமுறையில் சாமி வருகிறது.சொற்பமான இந்துக்கள் தங்கள் வழிபாட்டை தொடர்கிறார்கள்.பெரும்பான்மையான முஸ்லிகளுக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.வேண்டுமானால் நீங்கள் வந்து பார்க்கலாம்.இது மாதிரியான காட்சிகள் தமிழ்நாடு முழுக்க மிகச்சாதாரணமாய் நடந்து கொண்டேதான் இருக்கின்றது.உங்களுக்கு எங்கோ நடக்கின்ற சில காலிகளின் ரவுடித்தனம் மட்டும் தெரிகின்றது.

  14. ஆயிரம் முறை ஒரே பொய்யைச் சொன்னாலும் பொய் பொய்தான் மிஸ்டர் சுவனம்.

    அதாகப்பட்டது, சுவனத்தின் அகராதியின்படி முஸ்லிம்களுக்கு எதிராக எழுதும் எந்த முஸ்லிமும் முஸ்லிமே அல்ல.

    அதே அளவுகோலின்படி “ஜாதுநாத் சர்க்கார்” ஒரு இந்துவே அல்ல என்கிறேன் நான்.

  15. நானும் திரு .மீராபாய் கருத்தை ஆதரிக்கிறேன் .

  16. எனக்கும் இந்த தொடர் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது .
    தவறுகள் , கொடூர வெரியாட்டம் எப்போதும் வரலாற்றில் நடந்த படியே உள்ளது .
    அதையே பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?
    எனக்கு தெரிந்த பல முஸ்லிம் குடும்ப திருமணங்களில் மாட்டு இறைச்சி போடுவது இல்லை . இந்துக்கள் வருவார்கள் என்ற எண்ணம் தான் காரணம் .
    என் முஸ்லிம் நண்பனின் தாயார் என்னையும் தன் மகனுக்கு நிகராகவே நினைப்பவர் . எனது கஷ்டமான காலங்களில் எனக்காகவும் பிரார்த்தனைகள் செய்தவர் .
    என் மதம் என் நம்பிக்கைகள் தனி .. அவர்களது நம்பிக்கைகள் தனி. ஆனால் சமூகத்தில் ஒன்றாக , ஆதரவாக இருப்பது தானே நமது கலாச்சாரம் ?
    தீவிரவாத வெறியர்கல் இந்து,முஸ்லிம் அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தலே ..!
    சந்தேகம் கொண்டு வெறுத்து சராசரி மக்களை தீவிரவாதிகள் பக்கம் சாய்த்து விடாது அரவணைப்பது ஒன்றே சரியான வழி.
    ஒரேயொரு கேள்வி .. ஒரு சராசரி கடமைகள் உள்ள எளிய மனிதன் ,சர்வ பலம்வாய்ந்த ஒரு மிருக நிகர் வெறியனை ( அவன் தன் மதம்,சாதி சார்ந்தவனாகவே இருந்தாலும்) எவ்வாறு பகிரங்கமாக எதிர்க்க முடியும் ? அத்தகைய கொடியோரை அழிப்பது
    அரசாங்கம் ,ஆட்சியாளர்கள் செய்ய வேண்டிய கடமை.
    நமது கடமை நல்ல அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு ஆதரிப்பது ..

  17. This from ” Thiinai” copy pasted. Self explanatory on the mindset of Islamists and nature of the violent manual called Koran.
    “கீழே உள்ள வாசகங்கள் ஹமாஸின் 1988-ம் ஆண்டு வெளியிடப் பட்ட நிறுவன கொள்கை விளக்க அறிக்கையிலிருந்து எடுக்கப் பட்டது.
    “இஸ்லாம் மற்றவரைக் கொன்றழித்தது போலவே இஸ்ரேலையும் அழிக்கும்.”
    “ஹமாஸின் கோஷம் : அல்லாவே எங்கள் குறிக்கோள், இறைத்தூதுவரே வழிகாட்டி, குரானே சட்ட அமைப்பு. அல்லாவிற்ககாக மரணம் அடைதலே பெருவிருப்பம்.”
    “அல்லாவின் ஆணையை நிறைவேற்றுவதே ஹமாஸின் கடமை. எத்தனை காலமானாலும் சரி. இறைத் தூதுவர் சொன்னார் ” முஸ்லிம்கள் யூதர்களைக் கொன்றழிக்கும் வரையில் நற்காலம் வராது. கல்லிலும், மரத்திலும் யூதர்கள் மறைந்திருந்தால்- முஸ்லிம்களே அவர்களைக் கண்டுபிடித்துக் கொல்லுங்கள்
    Can Mr SP and now, the new addition Mr meeransahib, declare openly, preferably from their mosques, that the Hindus are not “Kaffirs” and Hinduism deserve RESPECT FROM ISLAM? Until they do this, all these goody goody stories about brotherly love between Muslims and Hindus in their village and towns are simply a hogwash. Action speaks louder than words.Get back to us ONLY after this.

  18. //இந்த புத்தகத்தை எழுதிய எம் ஏ கான் ஒரு முஸ்லிமே அல்ல. பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி தன்னை நாத்திகனாக அறிவித்துக் கொண்டுள்ளவர். இவர் பார்வையில் இஸ்லாத்தையும் மொகலாயர்களையும் முஸ்லிம்களையும் எவ்வாறு பார்த்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. இவர் உண்மையாளராக இருந்தால் தனது இஸ்லாமிய பெயரை நீக்கி விட்டு புத்தகத்தை வெளியிட்டிருக்க வேண்டும். படிப்பவர்கள் ///

    அய்யோ பாவம் திண்ணையில் நகைச்சுவை பகுதி என்று ஒன்று இருக்கின்றது. தமிழ்ஹிந்துவில் அப்படி ஒரு பத்தி ஆரம்பிக்கும் என்னம் ஆசிரியர் குழுவிக்கு இருக்கின்றதா? ஹிந்து நாஸ்திகர் யாரையும் நாம் பேரை, ஊரை, மதத்தை மார்ரு என்று ஊளையிடுவது இல்லை. இப்பொழுது புரிகின்றதா — “”வன்முறையே வரலாறாய்”” என்றால் என்ன என்று?

  19. //இஸ்லாத்தின் அயிந்தாவது கடமையான ஹஜ்ஜை ஒரு பயலும் செய்யவே இல்லை//

    இப்பொழுது மட்டும் என்ன வாழுகின்றதாம். அரசாங்க பணத்தில் அடுத்தவன் வயிறு எறிய போயி வந்தால் மட்டும் அவர்கள் கடமை முடிந்து விடுமா என்ன? சினிமாக்கு மௌன்ட்ரோduvil இல் அக்கப்போரு கூட்டும் கூட்டம், வரிப்பணத்தில் போகமாட்டோம் என்று அக்கப்போரு கூட்டவேண்டியதான?

  20. ஜாதுநாத் சர்க்கார்.– ஒரு குடிதாங்கி. அவரை பற்ரி பேசாதீர்கள். இப்படியும் பதிலடி தரமுடியும் !!!!!!

  21. முதலில் ஹிந்துக்கள் முஸ்லிம் அன்பர்களை பாய் என்று அழைபதை நிறுத்தவேண்டும். முஸ்லிம் பிரமத்ததவராய் இருப்பவரை சஹோதர் என்று ஒப்புகொள்ளமட்டர்கள்.

  22. திரு. ரங்கன் அவர்களுக்கு நன்றி.

    # இந்து அரசியல் தலைவர்கள் குறி வைத்து கொல்லப்படுவது மிக மிகக் கவலைப் பட வேண்டிய விஷயம். சிறுபான்மையினர் என்ற அடையாளத்திலிருந்து வெளிய வந்து எங்களுடன் சரி சமமாக பயங்கரவாதிகளைக் கண்டிக்க நீங்களும், முக்கியமாக உங்கள் அரசியல் தலைவர்கள் முன் வரவேண்டும்.#

    இம்மொழிபெயர்ப்பு இக்கட்டுரையை குறை சொல்லும் நண்பர்களே!

    #தென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்# என்ற இந்த தளத்தில் வந்துள்ள கட்டுரையை படியுங்கள்.

    எவ்வளவு பேர் எம் இந்து சமூக சகோதரர்கள் இன்று வரையில் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார்கள். கடைசியாக கொலை செய்யப்பட்ட திருவள்ளுவர் மாவட்டஇந்து முன்னணி செயலாளர் சுரேஷ் குமார் வரை. இதற்கு உள்ளூர் ஆதரவு இல்லாமல் இத்தகைய படு பாதக கொலைகளை செய்யமுடியுமா?

    யாரும் அணைத்து முஸ்லிம்களும் மோசமானவர்கள் என்று சொல்லவில்லை. அப்படி சொல்லவும் முடியாது. நிறையபேர் நல்லவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தற்போது உள்ள இளைஞர்கள் அப்படி இருக்கிறார்களா என்பதை நீங்களே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்? அவர்களை யார் நல்வழி படுத்துவது? அது உங்கள் தலையாய கடமை அல்லவா? அதை நீங்கள் உணரவேண்டாமா?

    4.8.2014 – ல் வந்துள்ள கீழ்கண்ட செய்தியை படியுங்கள்.

    https://www.deccanchronicle.com/140804/nation-current-affairs/article/cops-quiz-youth-isis-t-shirts

    https://www.thehindu.com/news/national/tamil-nadu/muslim-youths-sporting-isis-tshirts-cause-a-flutter/article6278285.ece

    ஈராக்கில் உள்ள ISIS பற்றி நம் தாய் நாடு தமிழகத்தில் கொண்டாடும் ஒரு புகைப்படம் தான் அது.

  23. ரூபன் இன்னும் ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டும். சுவனப்பிரியனுக்கு இராக் ல் கொல்லப்படும் ஷியாக்கள் முக்கியமில்லை, கொன்று குவிக்கும் பொறுக்கிகள், போராளிகள்? இப்படிப்பட்ட உத்தமர்தான் இங்கு புளுகுமூட்டைகளை சுமந்து குரானை நமக்கு கற்றுத் தருகின்றார்?

  24. //முதலில் ஹிந்துக்கள் முஸ்லிம் அன்பர்களை பாய் என்று அழைப்பதை //

    நூறு சதவீதம் உண்மை.

  25. திரு கிருஷ்ணகுமார் அவர்களின் கருத்துக்கள் வெறும் வம்பு வளர்க்கத்தானோ என்றுதான் சந்தேகம் வருகிறது.நான் தெளிவாகவே சொல்கிறேன் மிகச்சிறு கூட்டம்தான் நமக்கிடையே பூசல் வளர்க்க தூபம் போட்டுக்கொண்டே வருகின்றது.அது இரண்டு தரப்பிலும் இருக்கின்றது.இவர்கள் எண்ணிக்கையில் மிக மிக சிறுபான்மையினர்.இவர்கள் நமக்குள் கலந்து பெரும்பான்மையினராக ஆகிவிடக்கூடாது என்பதுதான் நம் கவலையாக இருக்க வேண்டும்.ஆனால் நீங்கள் தொடர்ந்து,” இந்து தலைவர்களை கொன்றார்கள் இந்து தலைவர்களை கொன்றார்கள்”என்றுதான் கோஷமிடுகிறீர்கள்.இதே படுகொலைகள் இந்தப்பக்கமும் நடந்துருக்கின்றது.கொலைகளில் யார் யாரை விஞ்சினார்கள் என்று கணக்கு பார்த்துக்கொண்டிருந்தால் என்ன மிஞ்சும்.இன்று இயக்கத்தவர்கள் ஒருவருக்கொருவர் சாவது நாளை பொதுமக்களாகிய நமக்குள்ளும் பரவிடக்கூடாதே என்ற ஆதங்கம்தான் எனக்கு.இன்றைய காலம் எப்படி இருக்கிறதென்றால் சாதாரணமாக சாலையில் இருவர் வாகனங்களில் வந்து மோதிக்கொண்டாலும் அது பெரும்மதக்கலவரமாக மாறிவிடுமோ என்று அச்சப்படும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதற்கு இரண்டு தரப்பிலும் உள்ள இயக்கங்களும் முக்கிய காரணம்.சாதாரண மனித குணங்களுகேல்லாம் மதம் இனம் என்று காரணம் கூறி இவர்களே இப்படித்தான் என்று திருப்பிவிட்டு பெரிய மோதலை உருவாக்கி தங்களை வளர்த்துக்கொள்ள நினைக்கிறார்கள்.நீங்களும் இயக்கங்களைத்தான் தூக்கிபிடிக்க பார்கிறீர்கள்.என்ன தலைப்பில் நாம் உரையாடினாலும் உங்கள் கவனம் சன்னி அகமதிய ஷியா என்றுதான் போகின்றது.இது ஒரு மதத்தின் உள் விவகாரம் இல்லையா.எல்லா மதங்களிலும் பிரிவுகளும் அதற்குள் மோதல்களும் இருக்கத்தானே செய்கின்றது.நாத்திகர்கள் என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை மிக மோசமாக விமர்சிக்கிற வீரமணியும் வீரபாண்டியனும் இன்னும் ஜாதி ரீதியாக பிரிந்து கொண்டு அடித்துக்கொள்ளும் பல்வேறு ஜாதி பிரிவினரும் இந்துக்கள்தானே.நான் இதை விமர்சிக்கலாமா?நானும் இந்துவாக இருந்து வெளியேறிவிட்டேன்.இனி எனக்கு அந்த மதத்தில் எந்த அதிகாரமும் கிடையாது.நான் இருக்கும் மதத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அநியாயம் நடந்தால் நாந்தான் கவலைப்படவேண்டும்.ஷியாவும் அஹமதியாவும் உங்களிடம் வந்து கலங்கிநார்களா?”அவர்களிடம் சொல்லுங்கள் ஏன் இந்த காட்டுமிராண்டி மதத்தில் இருக்கிறீர்கள் வெளியேறிவிடுங்கள்”என்று.உண்மையில் நீங்கள் சொல்கிற வஹாபி பிரிவு மிக சிறுபான்மை.அடிக்கடி அறிவுப்பூர்மையாய் உரையாடுமாறு வேறு நான் என்ன முட்டாள்தனமாய் பேசுகிறேன் என்பதை நீங்கள்தான் விளக்கவேண்டும்.

  26. திரு SunnyGreen அவர்களே .

    “முதலில் ஹிந்துக்கள் முஸ்லிம் அன்பர்களை பாய் என்று அழைபதை நிறுத்தவேண்டும்.”

    நீங்களே “முஸ்லிம் அன்பர்களை” என்றுதான் சொல்லுகிறிர்கள். ஒன்றும் தவறில்லை. அவர்கள் நம்மை சகோதரர்கள் என்று அழைக்கவேண்டாம். அதற்காக அவர்களை நாம் தற்போது வழக்கமாக கூப்பிட்டு வரும் பாய் என்று அழைப்பதை நிறுத்தவேண்டாம். ஒரே அடியாக ஒட்டு மொத்த சமூகத்தை புறக்கணிப்பது ஞாயம் அல்ல.

    அவர்களில் சிலர் நம் இந்து சமூகத்தவர்களுக்கு எதிராக செய்து வரும் கொலை பாதக செயலைதான் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். தவிர, அத்தகைய செயல்களுக்கு உள்ளுரில் வசிக்கும் சில பிரமுகர்கள் ஆதரவு கொடுக்ககூடாது என்பதுதான் நமது கோரிக்கை. லோக்கல் சப்போர்ட் இல்லாமல் எந்த தீவிரவாதியும் கொடுஞ்செயல்களை நிறைவேற்றி விடமுடியாது. பல கடந்த கால சம்பவங்கள் மற்றும் புலனாய்வு அறிக்கைகள் இவற்றை கண்ணுறுங்கால் தெரியவருகிறது.

  27. பாண்டியன்,சன்னிகிரீன் போன்ற சகோதரர்களுக்கு இஸ்லாம் என்ற மதத்தின் மேல் அறியாமையால் தவறான எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் சரியான புரிதல் ஏற்படலாமே என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.ஒருபோதும் இஸ்லாம் தன்னை நம்பாத பின்பற்றாத மக்களை துன்புருத்துமாறு கொல்லுமாறு சொல்லவேயில்லை.உதாரணத்திற்கு சில குரான் வசனங்களை மேற்கோள் காட்டுகிறேன். ‘நீங்கள் ஒரு சமுதாயத்தை விட மிகைத்திருக்கிறீர்கள் என்ற காரணத்தால் வரம்பு மீறிவிடாதீர்கள்.வரம்பு மீறுபவர்களை அல்லா நேசிப்பதில்லை. ‘நீதி செலுத்துங்கள் அது உங்களை சார்ந்தவர்களுக்கு எதிராக இருந்தாலும் சரியே இறைவன் கண்காணிப்பவனாகவும் சூழ்ந்து அறிபவனாகவும் இருக்கிறான்.
    இது போன்ற வசனங்கள் குரான் நெடுக இருக்கின்றது.இது போக சில வரலாற்று தரவுகளை சொல்கிறேன்.இப்ராகிம் என்றொரு இறைத்தூதர் இருந்தார்.அவர் இறைவன் ஒருவனே அவனுக்கு இணை கற்பிக்கவோ உருவம் கொடுப்பதோ பாவம் என்றார்.ஆனால் அவர் தந்தைதான் அந்த சமுதாயத்திற்கு கடவுள் சிலைகளை செய்து கொடுக்கும் சிற்பி.இது எப்படி இருக்கும்?மிகப்பெரிய பிரளயம் வாக்குவாதம்.குரான் மகனுக்கு கட்டளைப்பிரப்பிக்கின்றது.”இப்ராகிமே இறைவனுக்கு இணைவைத்தல் என்ற விஷயத்தில் உன் தந்தைக்கு கட்டுப்படாதே அதே வேளை மற்ற உலக விவகாரங்களில் ஒரு மகனாக உனக்கு கடமைகள் இருக்கின்றன.அவரை நோவினை செய்து விடாதே”. இதுபோல கடைசி இறைத்தூதரான முஹம்மத்நபிக்கு பிறக்குமுன்னே தந்தை இறந்துவிட்டார்.ஐந்து வயதில் தாயும் இறந்து விட்டார்.அவருடைய சிறிய தந்தையார்தான் அவரை வளர்த்தார்.இவர் ஏகதெய்வ கொள்கையை ஊர்முழுக்க பரப்பிக்கொண்டிருந்தார் ஆனால் தன் சிறிய தந்தையை மாற்ற முடியவில்லை.அவர் பல தெய்வ வழிபாட்டில்தான் கடைசி வரை இருந்து இறந்தார்.இறக்கும் தருவாயில் கூட அருகில் இருந்து ஒரு மகனாக தன் கொள்கைக்கு வருமாறு கெஞ்சினார்.அவர் வரவே இல்லை.கொள்கை வேறாக இருந்தாலும் அவர்கள் இருவருக்குமான உறவில் எந்த சேதாரமும் இல்லை.அதைப்போல மதீனா என்ற ஊரையே தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்து அதற்கு அதிபராகவும் ஆகி தான் இறக்கும் தருவாயில் முஹம்மத்நபி அவர்கள் தன் கவச உடையை ஒரு யூத செல்வந்தரிடம்தான் அடகு வைத்து கோதுமை வாங்கிஇருந்தார்.அதை மீட்காமலேயே இறந்தார்.ஒரு யூதர் இவருடைய ஆட்சியின் கீழ் எவ்வளவு சுதந்திரமாக இருந்திருக்கிறார் பாருங்கள்.அது போல் உமர் என்ற இஸ்லாமிய பிரதேசத்தின் முக்கிய ஜனாதிபதி அவருடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு வேலையாக போகிறார்.அங்கு நாங்கள் மதிய வேளையில் தொழுகிற லுஹர் என்ற தொழுகை நேரம் நெருங்குகிறது.அதன் அருகில் ஒரு சர்ச்.அங்குள்ள பாதிரியார் சர்ச்சிக்கு உள்ளே ஒரு பகுதியில் தொழுமாறு பணிக்கிறார்.உமர் மறுத்து விடுகிறார்கள்.இன்று நான் தொழுதால் அது நாளை பிரச்சினையாக மாறலாம்.ஜனாதிபதி தொழுதுவிட்டார் இனி அது பள்ளிவாசல்தான் என்று கிளபினால் என்னாவது ஏனெனில் அது இவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதி.அது ஜனநாயக ஆட்சியல்ல மன்னராட்சி.எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது.இது போன்று பல உதாரணங்களை காட்டமுடியும்.இவைதான் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி இவைகள்தான் இஸ்லாமிய சட்டம்.ஒருவன் முஸ்லிமானப்பிறகு அவனிடம் எந்த சமரசமும் இல்லாத கொள்கை உறுதியை எதிர்பார்கிறது.ஆனால் அதை தழுவாத மக்கள் மேல் எந்த நிர்பந்தத்தையும் அது ஏற்படுத்துவதில்லை.நாங்கள் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டிய சகாதிலும் வழிபோக்கர்கள் அகதிகள் என்ற பிரிவில் எல்லா மக்களும்தான் வருவார்கள்.முஸ்லிகளுக்கு மட்டும் என்றெல்லாம் இல்லை. நான் மதப்பிரச்சாரம் செய்வதாக எண்ணவேண்டாம்.நீங்கள் தனிமனிதன் செய்வதயல்லாம் இஸ்லாத்தோடு முடிச்சி போடுவதால்தான். உண்மையாக இஸ்லாத்தை புரிந்து தெளிந்து ஒழுகினால் நல்லிணக்கம் ஒருபோதும் கெடாது.வேற்றுமையிலும் ஒட்ற்றுமைதான் காண்போம்.

  28. முஸ்லிம்கள் அரசாங்க செலவில் ஹஜ்ஜிற்கு செல்கிறார்களாம்.அதிலும் அடுத்தவன் வயிறு எரிய போகிறார்களாம்- பாண்டியன் சொல்கிறார்.எந்த அரசாங்க அதிகாரி சொன்னார் பாண்டியன் அவர்களே. நீங்கள் அறியாமல் சொல்லி இருந்தால் விசாரித்து கேட்டு தெளிவு பெறமுடியும்.ஆனால் அடுத்த சமயத்தவனை பார்த்தாலே வயிறு எரியக்கூடியவராக இருந்தால் உங்களை ஒன்றும் செய்யமுடியாது.

  29. சன்னிகிரீன் ….இஸ்லாத்தில் எங்களுக்கு சொல்லித்தருகிற பாலபாடமே உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒருதாய் ஒருதந்தைக்கு பிறந்தவர்கள் என்பதே.பிறகு எப்படி நீங்கள் எனக்கு சகோதரராய் இல்லாமல் இருக்க முடியும்.உங்கள் ஆதி தாயும் எனது ஆதி தாயும் ஒருத்திதான்.எனது ஆதி தந்தையும் உங்களது ஆதி தந்தையும் ஒருவர்தான்.வாருங்கள் என் வீட்டிற்கு உங்களோடு ஒரே தட்டில் நான் உண்ணுகிறேன் ஒரே படுக்கையில் படுக்கிறேன்.நீங்கள் நீங்களாகவே இருந்து கொள்ளலாம்.நீங்கள் என்ன கொள்கையில் இருந்தாலும் மேற்சொன்ன படைப்புத்தத்துவத்தின்படி நீங்களும் நானும் சகோதரரே என்று இறைவன் மேல் ஆணையிட்டு கூறுகிறேன்.

  30. meeransahib
    நான் சொன்னதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசியல் வியாதி போல அல்லது இங்கு மற்றவர்கள் போல உங்களை வாழ்த்தி, அஸ் ஸலாம் என்று ஜால்ரா போடுபவன் நான் இல்லை. உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்று இருப்பவன் நான். வரிப்பணத்தில் ஹஜ் வேண்டாம் என்று பார்லிமெண்டில் சொன்னது ரகுமான்கன் என்பவர்தான். அப்படி போகவும்கூடாது என்று சொன்னார். என்னுடன் மோதுவதை விட இப்படி போவது தவறு என்று முஸ்லிம் மதத்தை திருத்த பாருங்கள். திரும்ப சொல்லுகின்றேன், அரசியல் வியாதி போல கருத்தை மாற்றுபவன் நான் இல்லை. நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.

  31. //இஸ்லாத்தில் எங்களுக்கு சொல்லித்தருகிற பாலபாடமே உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒருதாய் ஒருதந்தைக்கு பிறந்தவர்கள் என்பதே.பிறகு எப்படி நீங்கள் எனக்கு சகோதரராய் இல்லாமல் இருக்க முடியும்//

    பாவம், இந்த தத்துவம் புரியாமல் தான் சன்னி, ஷியாவை தூக்கி போட்டு மிதி மிதி என்று மிதித்து கொல்லுகிறான் போல Iraq இல். அவன்தான் போராளி!!!

    உங்கள் சண்டையை நிறுத்தி, உலகம் முழுவதும், சன்னி- ஷியா ஒற்றுமையாக சகோதரராக இருங்கள். பின்பு வாருங்கள் உங்கள் உலக தத்துவத்தோடு அடுத்த மதத்திற்கு

  32. //இந்து மதத்தை மிக மோசமாக விமர்சிக்கிற வீரமணியும் வீரபாண்டியனும் இன்னும் ஜாதி ரீதியாக பிரிந்து கொண்டு அடித்துக்கொள்ளும் பல்வேறு ஜாதி பிரிவினரும் இந்துக்கள்தானே.நான் இதை விமர்சிக்கலாமா?///

    என்னவோ நாஸ்திகம் என்பதே கிபி கிமூ மாதிரி வீரமணி பெரியாருக்கு பின்பு என்று நீங்கள் படித்து குழம்பி இருப்பதால், அப்பொழுது இதை கொண்டுவந்து நகைச்சுவை ஆக்குகின்றீர்கள். மகாபாரதம், ராமாயணம் பேசாத நாஸ்திக விசயமா என்ன. புரியாமல் விவாதம் வேண்டாம் இங்கு.

  33. இந்து தலைவர்கள் கொல்லப்படுவதற்கு உள்ளூர் பிரமுகர்கள் ஆதரவு கொடுப்பதாக சொல்லும் வெங்கட் அவர்களே பிரமுகர்கள் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்?உள்ளூர் பணக்காரர்களையா?புரிந்துகொள்ளுங்கள் வெங்கட் அவர்களே பணக்காரன் எல்லா மதப்பணக்காரனும் ஒரே மாதிரிதான்.அவன் பணக்காரனோடு சிநேகிதம் வைத்திருப்பான்.தன் பணத்தை இன்னும் இன்னும் பெருக்குவதற்கு யாரோடு கூட்டு சேரவேண்டுமோ சேருவான்.நல்ல பணக்காரராக ஒரு பக்திமானாக இருந்தால் நீங்கள் சொல்வது போல சில்லித்தனமான ஆட்களோடெல்லாம் கூட்டு சேர மாட்டார்கள்.கண்ணியமாக மரியாதையாகத்தான் இருப்பார்கள்.இது போல அரசியல் பிரமுகன் இருப்பான் கடத்தல் செய்பவன் இருப்பான் வேலைவெட்டி இல்லாத சோம்பேறி இருப்பான்.தெருவோரம் கடை வைத்திருப்பவன் இருப்பான்.குடும்பத்தை விட்டு விட்டு தன் வாழ்கையே வெளிநாட்டில் தொலைத்தவன் இருப்பான்.துவேஷம் தலைக்கேறி எந்த நேரமும் எவனாவது கிடைக்கமாட்டானா என்று அலைகிற வெறி பிடித்தவனும் இருப்பான்.இது எல்லா சமுதாயத்திற்கும் பொதுதானே வெங்கட்.முஸ்லிம்கள் மட்டும் பயங்கரவாதிகளுக்கு அடைகலம் கொடுப்பவர்கள் அல்லது கணிசமானவர்கள் அடைக்கலம் கொடுப்பவர்கள்தான் என்ற முடிவிற்கு எப்படி வருகிறீர்கள் வெங்கட்?

  34. கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,முஸ்லிம்களிடத்தில் உள்ள தனித்தனி பிரிவுகளாய் உள்ள ஷியா சன்னி வஹாபி அகமதியா பற்றி அடிக்கடி கேள்வி எழுப்புகிறீர்கள்.இதல்லாத இன்னும் பல உட்பிரிவுகளும் முஸ்லிம்களிடத்தில் உள்ளன.கவனிக்கவும் இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை.ஒரே இறைவன் ஒரே வேதம்தான் இஸ்லாம் சொல்வது.முஸ்லிகளிடத்தில்தான் பிரிவு. இது பல காரணங்களால் உண்டானது.அரசியல் இதில் முக்கிய பங்காற்றியது.ஷியா என்ற பெரும்பிளவு அரசியலால் உண்டானதுதான்.இது போக குரானை நபிகளின் கட்டளைகளை புரிந்து கொள்வதில் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளும் சில பிரிவுகளுக்கு காரணமானது.மத பீடங்களின் அதிகார மையத்திற்கு ஆசைப்பட்டு மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காக நான் இறைத்தூதன்,நான் இறைநேசன் என்று கூறிக்கொண்டும் சிலர் புதுப்புது கருத்துக்களை உருவாக்கி பிரிவுகளை உண்டாக்கினார்கள்.ஒரு உலகளாவிய சமயத்தில் இவையல்லாம் தவிர்க்கமுடியாததுதான்.ஆனால் ஒருவருக்கொருவர் மிக மோசமாக மோதிக்கொள்வது வழிபாட்டு தளத்திலேயே குண்டுகள் வைத்து சாவதெல்லாம் சகிக்கவே முடியாதது.ஆனால் இந்த கொடுரங்களுக்கு பின்னால் கொடிய அரசியல்தான் இருக்கின்றது.இதில் அமெரிக்க வல்லாதிக்க எண்ணை அரசியல் பெரும்பங்காற்றுகிறது.இராக் ஆப்கான் பாலஸ்தீன் என்று மத்திய கிழக்கு முழுக்க அமெரிக்க சூழ்ச்சியால் எப்போதும் கொந்தளிப்புகள்தான்.இவற்றிற்கு மதமோ மதக்கொள்கைகளோ காரணமே அல்ல.அமெரிக்க அத்துமீறலுக்கு கிறிஸ்துவம் காரணமல்ல.சுன்னிகள் ஷியாக்களோடு மோதிக்கொள்ள இஸ்லாம் காரணமல்ல.அவன் தன் வல்லாதிக்க பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ள இவர்களை பிரித்து மோத விடுகிறான்.இவர்கள் தங்கள் பலத்தை பெருக்கிக்கொள்ள இனவுணர்வை தூண்டி பக்தி வேஷம் போடுகிறார்கள்.இதில் எங்கே மதம் உள்ளது.சத்தியத்திற்காக அநீதியை எதிர்ப்பதற்காக போராட தூண்டுகிற குரான் வசனங்களையல்லாம் தங்களின் சுயநல வெறிக்கு பயன்படுத்துகிறார்கள்.அதே நேரத்தில் பாலஸ்தீனத்தில் நடக்கிற அநியாயங்கள் கொடுமையானது.இதில் ஹமாஸை விட்டுவிடுங்கள்.அது அரசியல் கட்சி.எல்லா அரசியல் கட்சிக்கும் உள்ள குணம்தான் அதற்கும்.இப்போது ரூபன் எழுதுவதையே எடுத்துகொள்ளுங்கள் அவர் ஆரம்பத்திலிருந்து அரசியல் ரீதியான வன்முறையைத்தான் சொல்கிறார்.இதோ இந்த தொடர்கூட ஜின்னா படம் போட்டு அரசியல் வன்முறைதான்.அதனால்தான் நான் திரும்ப திரும்ப சொல்வது இயக்கங்களின் சார்பில் பேசாதீர்கள் இயக்கவாதிகளை மேற்கோள் காட்டாதீர்கள்.அவர்கள் நம்மை மோதவிட்டுத்தான் பார்ப்பார்கள்.சார் இந்த காலத்திலேயே ஜனநாயகம் பேசுகிற நிலையிலேயே அரசியல் வாதிகள் என்னென்ன தகிடுதித்த்த்தங்கள் காட்டுகிறார்கள்.அந்த காலத்தில் மன்னனாக இருந்தவனை கேட்கவா வேண்டும்.தயவுசெய்து மதத்தை அரசியலோடு கலக்காதீர்கள் சார்.மதப்பற்றுள்ள மக்கள் இறைநம்பிக்கையுள்ள மக்கள் ஒருபோதும் வன்முறை வெறியோடு அலய மாட்டார்கள் சார்.அது எந்த மதத்தினராக இருந்தாலும் சரியே.

  35. மீரான்
    //
    சன்னிகிரீன் ….இஸ்லாத்தில் எங்களுக்கு சொல்லித்தருகிற பாலபாடமே உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒருதாய் ஒருதந்தைக்கு பிறந்தவர்கள் என்பதே.
    //

    அப்படி என்றால் நீங்கள் நிச்சயமாக ஒரு பெயர் தாங்கி முஸ்லிம் தான். உண்மையான இஸ்லாமியன் கல்லை கும்பிடுபவனை பார்த்தவுடன் வெட்ட வேண்டும். நீங்க செய்யலேன்ன நீங்க பெயர் தாங்கி தான்.

  36. பெருமதிப்பிற்கு உரிய சாரங் அவர்களே,

    //உண்மையான இஸ்லாமியன் கல்லை கும்பிடுபவனை பார்த்தவுடன் வெட்ட வேண்டும். நீங்க செய்யலேன்ன நீங்க பெயர் தாங்கி தான்.//

    அருள்கூர்ந்து இவ்வாறு எழுதுவதை விட்டுவிடுங்கள். மத நல்லிணக்கம் வேண்டுவோர் அனைவரையும் நாம் மதிக்கவேண்டும். காலத்தை மதிக்காது, சமய நூல்கள் சொல்லும் அனைத்தையும் சொல்லுக்குச் சொல் சரியென்று எண்ணி,அதன்படி நடக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. நாம் இந்து சமயக் கோட்பாடுகளை முழுவதும் பின்பற்றுவதில்லை. இக்காலத்திற்கு வேண்டத்தகாததை நீக்குகிறோம். அதுபோல, இஸ்லாமியர்களும் நடந்து கொள்வதை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

    கிறித்தவர்கள் போற்றும் ஏசுவும், “Give unto Ceaser, what it is due unto him” என்றார். அதாவது, நாட்டு விதிமுறைகளைப் (laws of the land) பின்பற்றுங்கள் என்றார்.

    இந்தியாவில் இஸ்லாமியர்கள் நான்கு மனைவிகளை ஏற்கலாம். பலதாரம் ஏற்க அனுமதி உள்ள இந்துக்கள் இந்து சமயத்தின் தாயகமான இந்தியாவில்கூட, ஒரு மனைவிக்குமேல் ஏற்க இயலாது. அமெரிக்காவில் எந்த சமயத்தாரும் ஒருதாரமே கொள்ள முடியும் இது இந்த நாட்டு விதிமுறை.

    இஸ்லாமின் புனிதத் தலமான மெக்கா உள்ள சவூதி அரேபியாவிலும் மாற்று சமயத்தாரை, குறிப்பாக, “கல்லை கும்பிடுபவனை பார்த்தவுடன் வெட்ட” அனுமதி இல்லை. அப்படிச் செய்பவர் “உண்மையான இஸ்லாமியராக” இருந்தாலும் உடனே தண்டிக்கப் படுவார். இல்லாவிடில் அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வாழ்ந்து பொருளூட்ட இயலாது.

    நீங்கள் எழுதியிருப்பது நட்புக்கரம் நீட்டும் ஒருவரின் மனதைப் புண்படுத்துவதோடு மட்டுமின்றி, பொறுப்பற்றதாகவும் இருக்கிறது என்று சொல்லி நீங்குகிறேன்.

    தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஓம் நமச்சிவாய!!!

  37. உயர் திரு அறிசொணன்,

    நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் என்ன செய்வது இஸ்லாம் அப்படிப்பட்ட ஒரு மதம். ஒன்று மீரான் தெரியம் சொல்கிறார் இல்லை தக்கியா செய்கிறார். இவர்கள் குர்ஆனில் உள்ள மதினா வாக்கியங்களை மட்டுமே சொல்வர் அது வேறு 1 %. மெக்கா வாக்கியங்கள் தான் கலேவர வாக்கியங்கள்.

    உண்மையிலேயே மீரான் நல்ல குரானை பின்பற்றுகிறேன் என்றால் அவருக்கு வாழ்த்துக்கள். எனக்கு தெரிந்த மட்டில் குரானை வாசித்த புரிந்து கொண்ட ஒருவனும் ஒன்று முஸ்லீமாக இருக்க மாட்டன் (விட்டுவிடுவான்) இல்லையேல் குரான் சொன்னபடி முஸ்லீமாக மாறுவான்.

    நான் மீரானை குறை கூறவில்லை. அவர் குரான் சொல்லும் வாக்கியங்களை அறியாமல் சொல்கிறார் என்பதனாலேயே பெயர் தாங்கி முஸ்லிம் என்றேன். குரானை ஏற்கும் முஸ்லிம் என்பது நிச்சயமாக நல்ல விஷயம் அல்ல. அவர் சம்ப்ரடாயத்தால் முஸ்லீமாக இருக்கலாம், ஐந்து வேலை தொழுவது, நோன்பு இருப்பது போன்று. எனக்கு இப்படி பல நண்பர்கள் இருந்தனர்.

    நான் தங்கி படித்ததே ஒரு இசுலாமிய கல்லூரியில் தான்.

  38. அன்பிற்கினிய ஒருஅரிசொனன் அவர்களுக்கு மிக்க நன்றி.பாண்டியன் சாரங் போன்றவர்கள் முஸ்லிம்களோடு நெருக்கமாக பழகும் வாய்ப்பை பெறாதவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.கேடுகெட்ட மீடியாக்களும் தொடர்ந்து ஒரு சமுதாயத்திர்க்கேதிராக பொய் பிரச்சாரம் செய்வதும் ஒரு சில வன்முறை வெறியாட்டக்காரர்களும் இஸ்லாமிய அடையாளங்களோடு வலம் வருவதை பார்த்துவிட்டு முஸ்லிகள் அனைவருமே இப்படித்தான் என்ற பொதுபுத்தியில் உறைந்து விட்டார்கள்.பாண்டியன் பெயர் குறிப்பிட்டு நான் எழுதிய கடிதத்தில் கூட இப்ராகிம் என்ற இறைத்தூதரின் வரலாறை சொல்லும்போது அவரின் தந்தையார் சிலை வணங்குபவராக மட்டுமில்லை.சிலை செய்பவராகவே இருந்தார்.ஆனாலும் ஒரு மகனாக அவருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை நீ ஆற்றவேண்டும் என்றுதான் இறைவன் கட்டளை இடுகின்றான்.ஆனால் சாரங் இதை படிக்கவே இல்லை என்று நினைக்கின்றேன்.அல்லது எங்கள் மேல் உள்ள வெறுப்பு அவர் நிதானத்தையே தடுமாற செய்து விடுகின்றது.சிலை வணங்கிகளையல்லாம் கொன்று விடு என்று ஒருபோதும் குரான் சொல்லவில்லை சாரங்.அதுபோல் ஒரு வசனத்தை காட்டினால் நான் உடனே இந்த மார்க்கத்திலிருந்து என்னை விடுவித்து கொள்கின்றேன் சாரங்.இது போன்ற நச்சுகருத்துக்களை கூறினால் அது வேதமல்ல மனித குலத்திற்கு நாசம் விளைவிக்க வந்த புத்தகம்.இது உடனடியாக உலகம் முழுக்க தடைசெய்யபப்படவேண்டும்.உங்கள் முன்னாலே நான் எரித்து சாம்பலாக்குகிறேன்.இப்படி இருக்கவே இருக்காது சாரங்.அது எப்படி இவ்வளவு கொடூரமான ஒரு புத்தகத்தை உலகம் முழுக்க கணிசமான மக்கள் ஏற்று கொண்டிருப்பார்கள்.உங்க விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு நிதானமாய் படியுங்கள்.

  39. பாண்டியன் சாரங் வெங்கட் சன்னிகிரீன் சகோதரர்களுக்கு,நான் சில கருத்துகளை உங்களுக்கு விளக்க கடமைப்பட்டிருக்கிறேன்.நாங்கள் எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் என்ற கற்பனையை விரட்டிவிடுங்கள்.நாங்கள் உங்களைப்போன்ற தமிழர்களே.எங்களின் மூதாதையர்கள், ஒரு மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பாக இருக்கலாம்.இஸ்லாம் என்ற மார்க்கத்தால் கவரப்பட்டு அதை ஏற்றுக்கொண்டார்கள்.இதை தவிர்த்து எங்களின் உணவு பழக்கவழக்கம் பாரம்பரியம் அனைத்தும் தமிழருக்குரியதே.மற்றமற்ற மக்களைப்போலவே நாங்களும் அன்றாட வாழ்க்கைக்காக பாடுபடக்கூடியவர்களாகவே இருக்கிறோம்.இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம் அல்லாத மக்களைவிட முஸ்லிகள் அரசு வேலையுலோ அதற்க்கான முயற்ச்சியிலோ இருப்பது மிகமிகக்குறைவு.எங்கள் கையூன்றி நாங்கள் எந்திரிக்கும் நிலையில்தான் எங்கள் வாழ்கை.பத்தாம் வகுப்பு முடித்துவிட்டால் பாஸ்போர்ட் எடுத்து விடுவோம்.பதினெட்டு வயது தொட்டுவிட்டால் வெளிநாடு பறந்துவிடுவோம்.அங்கு கூலிகளாகவும் அடிமட்ட சிப்பந்திகளாகவும்தான் எங்கள் வாழ்கை.இது பல தலைமுறைகளாக தொடர்கிறது.எங்கள் தாத்தா பர்மாவில் இருந்தார்.பிறகு இலங்கையில் இருந்தார்.அங்கு வாங்கிய சொற்ப ஊதியத்தை மிச்சம் பிடித்து சென்னையில் ஒரு சின்ன ரெடிமேட் கடை ஆரம்பித்தார்.இன்று பேரன்களாகிய எங்கள் காலத்தில் அது மூன்று கடையாக மாறிஇருக்கின்றது.ஆனால் இந்த வளர்ச்சிக்கு எங்கள் வாழ்கையே அற்பநித்திருக்கிறோம்.ஒரு நாளின் பெரும்பகுதி கடையில்தான் கழியும்.விடுமுறை என்பதே கிடையாது.மார்கப்பற்றோடும் இஸ்லாமிய நெறிமுரையோடும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.யாரோடும் எங்களுக்கு வன்மமும் இல்லை.குரோதமும் இல்லை.இதுதான் பெரும்பாலான முஸ்லிம்களின் வாழ்கை முறை.வெளிநாடு சென்று பொருள் தேடும் சகோதரர்களின் வாழ்கை பெரும் சோகம்.பெண் பார்த்து பேசி முடித்து இரண்டு மாத விடுப்பில் வருவான்.திருமணம் முடித்த ஒரு மாதத்தில் கிளம்பிவிடுவான்.அவன் மனைவி கருவுருவாள் பிள்ளைசுமப்பாள் குழந்தை பெற்றும் விடுவாள்.இதையல்லாம் அவன் போனில் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.அந்தவகையில் இக்காலத்து தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது.அந்த காலத்தில் அதுவும் கிடையாது.குழந்தை ஒருவயது நிறைவடையும்போது திரும்ப வருவான்.பெற்ற பிள்ளை அப்பனைப்பார்த்து மிரண்டு முழிக்கும்.அப்பதான் தந்தையோடு நெருங்க ஆரம்பிக்கும் விடுப்பு முடிந்து பயணம் நெருங்கியிருக்கும்.அவன் பயணப்படும்போது அருகில் இருக்க வேண்டும்.கல்நெஞ்சும் கரைந்துவிடும் இன்றைய தலைமுறையில் படித்து குடும்பத்தோடு அங்கு போகிறவர்கள் சற்று கூடியிருக்கிறார்கள்.இதுதான் சகோதரர்களே பெரும்பாலான இஸ்லாமிய இளைஞ்சர்களின் வாழ்கை.இதில்
    குண்டு வைக்கவும் துணை போகவும் எங்கு நேரம்? வாழ்கையை விற்று வெளிநாடு போனதால்தான் தென் தமிழ்நாட்டு முஸ்லிகளை வெள்ளையும் சொள்ளையுமாய் பார்கிறீர்கள்.அதற்காக எல்லா முஸ்லிம்களும் கஷ்டப்பட கூடியவர்கள் யோக்கியர்கள் உத்தமர்கள் என்றெல்லாம் கூறவில்லை.வசதி படைத்தவர்கள் இருக்கிறார்கள்.படித்தவர்கள் இருக்கிறார்கள்.அரசியலில் பெரும்பதவியில் இருக்கிறார்கள்.ஏன் ஜனாதிபதியாகவே ஒரு முஸ்லிம் இருந்தாரே.அதைப்போல கள்ளன் இருப்பான் கடத்தல்காரன் இருப்பான் குடிகாரன் இருப்பான் பணத்திற்காக சகலமும் செய்கிற அயோக்கியன் இருப்பான் மதவெறிபிடித்து அலைபவனும் இருப்பான்.இது எல்லா சமுதாயத்திற்கும் பொது.இந்த முறையில் முஸ்லிகளை பாருங்கள்.எங்கள் மேலும் வெறுப்பு வராது எங்கள் மார்க்கத்தின் மேலும் வெறுப்பு வராது.அப்படி வெறுப்பை உமிழகூடியவர்களை நாம் எச்சை உமின்ழ்ந்து விரட்டுவோம்.

  40. திரு சன் கிரீன், பாண்டியன்!

    //முதலில் ஹிந்துக்கள் முஸ்லிம் அன்பர்களை பாய் என்று அழைபதை நிறுத்தவேண்டும்.//

    பல இந்துத்வாவாதிகளின் மனதில் உள்ள ஆற்றாமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். மனிதன் ஒரு மூலத்திலிருந்து பிறந்தவன் ஆனதால் உலக மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. இதனை உணர்ந்ததாலோ என்னவோ பெரும்பான்மையான இந்து சகோதரர்கள் இஸ்லாமியர்களாகிய எங்களை ‘பாய்’ அதாவது சகோதரரே என்று அழைக்கின்றனர். முஸ்லிம்களும் பதிலுக்கு அதனையே தமிழ்ப்படுத்தி ‘அண்ணன், தம்பி’ என்று அவர்களை அன்போடு அழைக்கின்றனர். தமிழக கிராமங்களில் இதனை அதிகமாக பார்க்கலாம். எங்கள் ஊருக்கு வரும் காவல் துறையினர் எப்போதாவது என்னைப் பார்த்தால் ‘என்னங்க…. பாய்? சௌக்கியமா? எப்போ ஊருக்கு வந்தீங்க..’ என்று அன்போடு அழைப்பார். மற்ற இனத்தவரோடு ‘டேய்… இங்க வாடா…’ என்று அதிகாரத்தோடு அழைக்கும் அதே காவல்துறை அன்பர் எங்களிடம் அன்பாக நடக்கக் காரணம் நாங்களும் அதே அளவு அன்பை அந்த சகோதரர்களிடம் காண்பிப்பதால்தான்.

    இதனை ஒரு இந்துத்வாவாதியான நீங்கள் எதிர்ப்பது எனக்கு ஆச்சரியமாக படவில்லை. ஏனெனில் அன்றைய அரபுலகமும் இதே மேட்டிமைத்தனத்தில்தான் திளைத்திருந்தது. நீங்கள் எப்படி சமஸ்கிரதம் தேவ பாஷை. மற்ற மொழிகள் நீச பாஷை’ என்கிறீர்களோ அது போலவே அன்றைய அரபிகளும் ‘எனது மொழியே உயர்ந்த மொழி. மற்றவர்கள் பேசும் மொழி ஊமை மொழி’ என்று கூறினான். அதாவது ஊமைகள் ‘பே..பே…’ என்றுதான் சப்தமிடுவார்கள். நீங்கள் அழகிய மொழியில் பேசினாலும் அவன் பார்வையில் உங்கள் மொழி ஊமை மொழிதான். அதே போல் இன்று பார்பனர்கள் எவ்வாறு தங்களை உயர்சாதியினராக கருதுகின்றனரோ அதே போல் அன்றைய அரபுகளில் குறைஷி இனத்தைச் சார்ந்தவன் உயர் சாதியினராக மதிக்கப்பட்டான். நீக்ரோக்களையும் மற்ற இனத்தவரையும் இழி பறவிகள் என்று ஒதுக்கினான். கிட்டத்தட்ட இன்றைய நம் நாட்டு நிலையை ஒத்திருந்தது அன்றைய அரபுலகம்.

    இஸ்லாம் வந்தது: நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு நீக்ரோ இறை வழிபாட்டுக்கு தலைமையாக நியமிக்கப்பட்டாலும் அவரை பின்பற்றி நீங்கள் தொழ வேண்டும் என்று மார்க்க கட்டளையாகவே இட்டார் நபிகள் நாயகம். அதனால் இன்றும் கூட மார்க்கத்தை படித்து பட்டம் வாங்காத என்னைப் போன்றவர்களெல்லாம் சவுதி பள்ளிகளில் தொழுகைக்கு தலைவராக நிற்க முடிகிறது.

    அதே நேரம் நமது தமிழ் நாட்டில் வேதம் படித்த பல பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பார்பன குலத்தில் பிறக்காததால் இன்று வரை கோவில்களில் குருக்களாக நியமிக்கப்படாத கொடுமை தொடர்கிறது. இதற்கு தடையாணையையும் வாங்கியுள்ளீர்கள். அந்த அளவு மேல் சாதிப் பற்று உங்களை ஆட்டிப் படைக்கிறது.

    இந்த சாதித் திமிரை தூரமாக்கி அன்போடு எங்களை ‘பாய்’ என்று அழைப்பது உங்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

    ஒரு முறை ஜூனியர் விகடனில் மதம் மாறிய தலித் இளைஞரை பேட்டி கண்டனர்.

    ‘மதம் மாறியதால் உங்கள் இழிவு நீங்கி விட்டதாக நினைக்கிறீகளா?’

    ‘என்னைவிட சிறுவர்களெல்லாம் முன்பு என்னை ‘டேய்… சரவணா…’ என்று தான் அழைப்பார்கள். ஆனால் இன்று நான் மதம் மாறியவுடன் அதே நண்பர்கள் ‘ரஹ்மான் பாய்…. சவுக்கியமா’ என்று கேட்கின்றனர். மற்ற இழிவுகள் நீங்குகிறதோ இல்லையோ… இந்த ஒரு இழிவு நீங்கினாலே என்னைப் பொருத்த வரை போதுமானது’ என்றார் அந்த இளைஞன்.

    ஆகவே ‘பாய்’ என்ற இந்த வார்த்தைக்கு அத்தனை சக்தி இருக்கிறது. நீங்கள் விரும்பா விட்டாலும் மத நல்லிணக்கத்தையும் உலக மனிதர்களையும் நேசிக்கும் பெரும்பான்மையான இந்துக்கள் எங்களை ‘பாய்’ என்றே அழைப்பர். அதை நாங்களும் விரும்புகிறோம். ஏனெனில் இந்த வார்த்தையின் பின்னால் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திரு மூலரின் திரு மந்திர வரிகளும் மறைந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்தில் இரண்டு சதவீதமே இருக்கும் உங்களைப் பொன்ற இந்துத்வாவாதிகளை நாங்களும் பொருட்படுத்துவதே இல்லை.

  41. பெருமைக்குரிய ஸ்ரீமதி கௌஹர் அஜீஸ் அவர்கள் ஆற்றும் அரும்பணிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    முருகனருளால் இந்த அம்மணியும் இவர்தம் குடும்பத்தாரும் அனைத்து வளங்களையும் பெற இறைஞ்சுகிறேன்.

    வாசகர்கள் இந்த உரலை அவச்யம் வாசிக்கவும்.

    https://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2014/08/02/ArticleHtmls/02082014013025.shtml?Mode=1

  42. //அன்றைய அரபுகளில் குறைஷி இனத்தைச் சார்ந்தவன் உயர் சாதியினராக மதிக்கப்பட்டான். நீக்ரோக்களையும் மற்ற இனத்தவரையும் இழி பறவிகள் என்று ஒதுக்கினான். கிட்டத்தட்ட இன்றைய நம் நாட்டு நிலையை ஒத்திருந்தது அன்றைய அரபுலகம்.

    இஸ்லாம் வந்தது: நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு நீக்ரோ இறை வழிபாட்டுக்கு தலைமையாக நியமிக்கப்பட்டாலும் அவரை பின்பற்றி நீங்கள் தொழ வேண்டும் என்று மார்க்க கட்டளையாகவே இட்டார் நபிகள் நாயகம். அதனால் இன்றும் கூட மார்க்கத்தை படித்து பட்டம் வாங்காத என்னைப் போன்றவர்களெல்லாம் சவுதி பள்ளிகளில் தொழுகைக்கு தலைவராக நிற்க முடிகிறது
    //

    இஸ்லாம் வந்தது: நிலைமை தலைகீழாக மாறியது. — இது ஒரு வடி கட்டிய பொய். மூட்சுக்கு முன்னூறு தடவை குரான் பேசும் நீங்கள்தான் வாயி கூசாமல் பொய்யிகளயும் இங்கு ஆவுத்து விடுகின்றீர்கள். அல் அக்தம் எல்லாம் இங்கு ஏற்கனவே சொல்லப்பட்ட விசயம். திரும்ப பேஸ்ட் பண்னவா? ஒரு முஸ்லிம்யை பாய் என்று கூப்பிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் தேர்தலிலும் நிற்க போவது இல்லை!!!!

  43. //ஒட்டு மொத்த தமிழகத்தில் இரண்டு சதவீதமே இருக்கும் உங்களைப் பொன்ற இந்துத்வாவாதிகளை நாங்களும் பொருட்படுத்துவதே இல்லை.
    //
    அதற்க்க இப்படி கால் கிலோவிர்க்கு கமென்ட் போட்டு இருக்கின்றீர்கள். என்ன ஒரு ஆட்சரியம்…

  44. ungal matha lattchanam idhuthaan.

    மதம் மாற்றம், சொத்துக்களை எழுதி தர வேண்டும்: துர்கேஸ்வரிக்கு ஆசிக் மீரா மிரட்டல்

    திருச்சி: இளம்பெண் துர்கேஸ்வரியை திருமணம் செய்வதற்கு அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும். அவரது தாயார் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதித்தர வேண்டும் என திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா நிபந்தனை விதித்துள்ளார்.திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா (30). இவர் மீது சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி (29) என்பவர், தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஆசிக் மீரா பலாத்காரம் செய்ததாகவும், இதனால் பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன்சரிபா (56), பாலக்கரையைச் சேர்ந்த சந்திரபாபு (54), சங்கிலி யாண்டபுரத்தைச் சேர்ந்த சரவணன் (35) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இவர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத் துக்கு அனுப்பி நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்தில் சமரச தீர்வாளர் எஸ்.மோகன்தாஸ் முன் ஆசிக் மீரா மற்றும் 3 மாத கைக்குழந்தையுடன் துர்கேஸ்வரியும் திங்கள்கிழமை ஆஜராகினர்.அவர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இருவரையும் ஆக. 21-ல் மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.இது குறித்து துர்கேஸ்வரியின் வழக்கறிஞர்கள் பானுமதி, பழனியாண்டி ஆகியோர் கூறியது:மதம் மாற உத்தரவுதுர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும், இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு என சில சம்பிரதாயங்கள் உள்ளன. அவற்றைக் கடுமையாகப் பின்பற்றி துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அவரை ஏற்பதாகவும், துர்கேஸ்வரி தாயாரின் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்றும் ஆசிக்மீரா நிபந்தனை விதித்தார்.சொத்துக்களை மாற்ற வேண்டும்துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறத் தயாராக உள்ளார். தாயாரின் பெயரிலுள்ள சொத்தை பொருத்தவரை ஆசிக் மீராவை பாதுகாவலராக பதிவு செய்து குழந்தையின் பெயருக்கு மாற்றித்தருவதாகக் கூறினோம். அதை ஆசிக் மீரா ஏற்கவில்லை. தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆசிக் மீரா கூறினார்.கொலை மிரட்டல்கள்துர்கேஸ்வரிக்கு தினமும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார் என்றும் அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.சமரசம் ஏற்படவில்லைசமரச தீர்வாளர் மோகன்தாஸ் கூறும்போது, திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பு இடையே உடன்பாடு ஏற்படவில்லை.ஆக. 21-ம் தேதி மீண்டும் இருதரப்பினரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் திருச்சியில் இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்படுவதற்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது என்றார்.

  45. சாரங் அவர்களே நான் பாண்டியனை விட்டுவிடுகிறேன்.அவரிடம் துளியும் நேர்மை இருப்பதாக தெரியவில்லை.ஒரு பத்திரிகை செய்தியை வைத்துக்கொண்டு அதில் ஒரு அயோக்கியன் ஒரு அபலை பெண்ணை ஏமாற்றி மதம் மாற சொல்லுவதையும் அவள் சொத்துக்களை பறிக்க திட்டமிடுவதையும் கொஞ்சம் கூட நியாயம் இல்லாமல் இதுதான் இஸ்லாம் மதம் என்கிறார்.உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மையாயிருந்தால் இஸ்லாத்தின் பார்வையில் அவனுக்கு என்ன தண்டனை தெரியுமா?அவன் ஏற்கனவே திருமணம் முடிததவனாயிருந்தால் வேறொரு பெண்ணோடு விபச்சாரம் செய்த குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும்.திருமணம் ஆகாமல் இந்த பெண்ணோடு உறவு வைத்து குழந்தை கொடுத்த குற்றத்திற்கு பொதுமக்களின் முன் 100 கசையடிகள் கொடுக்கப்படவேண்டும்.இது குர்ஆனில் உள்ள குற்றவியல் சட்டம்.நம் நாட்டில் அதிகாரமும் பணமும் இருப்பதால் துணிந்து இதுபோல் செய்துவிட்டு தெம்பாக நடமாடுகிறார்கள்.பாண்டியனுக்கு இந்த விளக்கமெல்லாம் தேவையே இல்லை.அவர் மூளை வன்முறை துருவேறி இருக்கிறது.முஸ்லிகளை பாய் என்று சொல்லமாட்டாராம்.அவர் அரசியலில் நிற்க போவதில்லையாம்.சக மனிதரை அண் ணன் என்றோ தம்பி என்றோ உறவு சொல்லி அழைப்பதற்கு அரசியலில்தான் நிற்க வேண்டுமா?எவ்வளவு திமிரான வாதம் பாருங்கள். சாரங் அவர்களே குர்ஆனில் நல்ல குரான் கெட்ட குரான் என்றா இருக்கிறது.உலகம் முழுக்க ஒரே குரான்தான் சகோதரரே.குரான்னுடைய எல்லா அத்தியாயங்களையும் நாங்கள் படித்தே ஆகவேண்டும் சகோதரரே.எல்லா முஸ்லிம்களிடத்திலும் குரானும் குரான்மொழிபெயர்ப்பும் கண்டிப்பாக இருக்கும்.நீங்கள் சொல்வதுபோல ஒரு வசனத்தயேனும் காட்டமுடியாது.நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் குரான் மொழிபெயர்ப்பை கொண்டுவாருங்கள்.யாரை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்.நீங்கள் சொல்வது போல், சாதாரண மக்களை அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதற்காக அவர்களை கொல்லச்சொல்லும் வசனம் இருந்தால் நான் குடுபத்தோடு இஸ்லாத்தை விட்டுவிலகுகிறேன்.

  46. சாரங் எனக்கு ஒன்று புரியவில்லை! பொன்ராதாகிருஷ்ணன் நோன்பு விருந்து பற்றிய செய்தி இதே தளத்தில் வந்தது.அரசியல்வாதிகள் ஆன்மீக விழாக்களில் கலந்து கொள்வது நல்லதில்லை.என்ற அடிப்படையில் நான் கருத்து தெரிவித்திருந்தேன்
    என் கருத்தில் எங்கேயும் மதம் பற்றியோ மதக்கொள்கைகள் பற்றியோ எந்த வாசகமும் இருந்ததில்லை.ஆனால் உங்கள் தரப்பிலிருந்துதான் இஸ்லாம் வன்முறை மார்க்கம் குரான் வன்முறையை தூண்டுகிறது.என்ற கருத்துப்பட பதிவுகள் வந்தது.இதில் இன்னும் வேடிக்கை ஷியா சன்னி அஹமதியா என்று இஸ்லாத்தின் உட்பிரிவுகளை பற்றியல்லாம் கேள்வியெழுப்பி இருந்தார்கள்.இதெல்லாம் எதற்கு பொன்னார் இப்தார் விருந்து வைத்ததற்கு.ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?சரி இப்போ இந்த “வன்முறையே வரலாறாய்”தொடரையே எடுத்துக்கொள்வோம்.அதில் ஒரு வரி வந்தது”.தமிழ் நாட்டில்கூட முஸ்லிம்கள் அதிகமாய் இருக்கும் பகுதிகளிலிருந்து இந்துக்களை விரட்டி விடுகிறார்கள்”என்று.அதற்கும் நான் என் ஊரிலிருந்தே ஆதாரங்களை காட்டி அப்படி பெரும்பாலும் நடப்பதில்லை நாங்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறோம் என்று காட்டியிருந்தேன்.இதிலும் நான் எந்த மதக்கருத்துகளையும் முதலில் தெரிக்கவில்லை.இதற்கும் உங்கள் தரப்பிலிருந்துதான் இஸ்லாம் குரான் வன்முறை ஷியா சன்னி அஹமதியா என்று திசை திருப்பல் நடந்தது.குரானையும் இஸ்லாத்தையும் குறிப்பிட்டு நீங்கள் கூறும்போது அதிலிருந்துதான் நான் ஆதாரங்களையும் காட்டமுடியும்.பிறகு தக்கிய அது இது என்று அதற்கும் உள்நோக்கம் கற்பிக்கிறீர்கள்.குரான் என்பது எனக்கான வேதம்.அதை நித்தம் நித்தம் வாசித்து அதனோடு நேரடி தொடர்பில் இருப்பவன் நான்.ஆனால் என் வேதத்தைபற்றி எனக்கே பாடம் நடத்துகிறீர்கள்.

  47. சாரங் …குர்ஆனில் மக்கா வசனம் மதீனா வசனம் என்று சொல்லவரும்போது.மாற்றி சொல்கிறீர்கள்.மக்கா வசனங்களில் போர் பற்றிய உபதேசங்கள் இருக்காது.மதீனா வசனங்களில்தான் போர் குறித்த செய்திகள் இருக்கும்.நான்” தாக்கிய “செய்யவில்லை.இது குறித்த பேச்சை நீங்கள்தான் துவக்கினீர்கள்.அது என்ன மக்கா வசனம்-மதீனா வசனம்?முஹம்மத் நபி மக்கா என்ற ஊரில் பிறந்தார்.தன் 40ஆதாவது வயதில் தனக்கு இறைவனிடமிருந்து செய்தி வந்ததாகவும் தான் இறைதூதராய் தேர்ந்தெடுக்க பட்டதாகவும் கூறினார்.ஒரே கடவுள்.அவனுக்கு இணையாய் யாரும் இல்லை எதுவும் இல்லை அவன் ஆணுமில்லை பெண்ணுமில்லை அவன் நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன்.நம்மால் பார்க்க முடியாத அவனுக்கு எந்த உருவத்தையும் கொடுக்காதீர்கள்.என்பதுதான் ஆரம்பகட்ட பிரச்சாரம்.இதில் கூட அந்த சமுதாய மக்களுக்கு பெரிய பிணக்கு இல்லை.லேசாக முனுமுணுத்து விட்டு விட்டுவிட்டார்கள்.ஆனால் அடிமைகளாய் இருந்த மக்களையலாம் எல்லோரும் சமம் என்று சொல்லி பெரிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.இதைதான் அவர்களால் தாங்க முடியவில்லை.ஊரைவிட்டே விரட்டப்பட்டார்கள்.முதலில் அபிசீனியா என்ற ஊரில் தஞ்சமடைந்தார்கள்.அங்கு நஜ்ஜாஷி என்ற கிறிஸ்துவ மன்னர் அடைக்கலம் கொடுத்தார்.பிறகுதான் மதீனா என்ற ஊரில் சேர்ந்தார்கள்.மதீனா என்ற ஊரில் முஹம்மத் நபி இருக்கும்பொழுது இறங்கிய வசனங்களைத்தான் மதினா வசனம் என்று சொல்வார்கள்.இந்த வசனங்களின் மொத்த தொகுப்பே திர்க்குஆன்.இதில் மக்காவில் இறங்கிய குரான் வேறு மதினாவில் இறங்கியது வேறு என்றெல்லாம் நினைக்காதீர்கள்.23 வருடங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தேவைகளுக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிய வேதவரிகளே குஆன்.முஹம்மத் நபிக்கு எழுத படிக்கத்தெரியாது.அவருடைய தோழர்கள் அவர் சொல்லசொல்ல குறித்துக்கொள்வார்கள்.இவையல்லாம் எங்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்.ஆனால் குரான் வன்முறையை தூண்டுகிறது என்று சொன்னால் அதை நிரூபிக்கவேண்டும்.அவதூறு பெரும்பாவம் நீங்கள் கடவுள் நம்பிக்கையாளராக இருந்தால் பயன்துகொல்லுங்கள்.

  48. #‎பிஜேபி‬ யின் சதியை முஸ்லிம்களுடன் இணைந்து முறியடித்த இந்துக்கள்.

    தேனியில் இந்து ‪#‎சகோதரர்கள்‬ விற்பனைக்காக வளர்த்த மாடுகளை சங் பரிவாரக் கும்பலின் வழிகாட்டுதலின் பேரில் புளு கிராஸ் மூலம் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

    கம்பத்தில் ‪#‎இந்து‬ சகோதரர்கள் வைத்திருந்த 132 மாடுகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைகப்பட்டன. (சிரிக்க வேண்டாம். செய்தி உண்மையான செய்தி) அந்த மாடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    சங் பரிவார் மற்றும் புளு கிராஸ் மிருகங்களால் பாதிக்கப்பட்ட இந்து சகோதரர்கள் ‪#‎தவ்ஹீத்‬ ஜமாஅத்திடம் முறையிடவே இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.

    ‪#‎சங்பரிவார்‬ + புளு கிராஸ் ஆசியோடு காவல்துறை தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்திற்கு தடை போட்டது. தடைகளை தகர்த்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்திக்காட்டியுள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.

    நாம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியாக இந்து சகோதரர்கள் கலந்து கொண்டு சங் பரிவார வெறியர்களுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

    நாம் நடத்திய போராட்டத்தின் விளைவு கைது செய்யப்பட்ட 132 மாடுகளும் பாதிக்கப்பட்ட இந்து மக்களிடத்தில் திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்….

    தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய நம்மை போலீசார் கைது செய்யவில்லை.

    இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து சங் பரிவாரின் சதியை முறியடித்த சம்பவம் சங் பரிவாரர்களின் வயிற்றில் புளி கரைத்துள்ளது.

    P Jainulabideen – பீ ஜே ( Islamic Scholar)

  49. மீரான் சாயபு,

    போனால் போகிறது என்று பார்த்தால் நிறுத்த மாட்டீர்கள் போலிருக்கிறதே!

    இந்த நெஞ்சை தொடுகிற கதையை எல்லாம் நாங்கள் நிறையக் கேட்டாகிவிட்டது மீரான் சாயபு. இஸ்லாம் அன்பு மார்க்கமாம். முகமது நபி அப்படியே மனிதரில் மாணிக்கமாம். குரானில் வன்முறையைப் பற்றி சொல்லவே இல்லையாம். காஃபிரைக் கொல்லு என்று எந்த இடத்திலும் சொல்லப்படவே இல்லையாம். அதைக் காட்டினால் மீரான் சாயபு மதத்தை விட்டுவிடுவாராம். இதுக்குப் பேருதான் “தக்கியா” மீரான் சாயபு. இந்தக் காதில் பூ சுற்றுகிறதையெல்லாம் வேறே எங்கேயாவது வைத்துக் கொள்ளுங்கள். சுவனப் புளுகன் என்று ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்டால் இன்னும் நன்றாகக் கதை சொல்வார். நாங்களும் கேட்டுக் கேட்டு வாயில் விரலை வைத்து சூப்பிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம். நீங்களும் அடிக்கடி வந்து எங்களை புல்லரிக்க வைக்கிறீர்கள்.

    இங்கு நான் எழுதுவது எங்கள் வரலாறு. எங்களிடமிருந்து இத்தனை காலம் மறைக்கப்பட்ட எங்கள் வரலாறு. எங்கோ ஒரு பாலைவனத்தில் எவனோ ஒருவன் சொன்னது, அவனுக்கு நடந்தது உங்களுக்கு வரலாறென்றால், அதனைக் குறித்து நீங்கள் பேசலாமென்றால் எங்கள் வரலாறு குறித்து நாங்கள் தெரிந்து கொள்ளக்கூடாதா என்ன? நான் இனிமேலும் எழுதுவேன். யாரும் உங்களைப் படிக்கும்படி வற்புறுத்தவில்லை.

    [Edited].

  50. Waiting for an answer from all these peace loving Muslims, Meeranshaib, SP etc. Do not evade
    Repeating what I have said earlier
    “Can Mr SP and now, the new addition Mr meeransahib, declare openly, preferably from their mosques, that the Hindus are not “Kaffirs” and Hinduism deserve RESPECT FROM ISLAM? Until they do this, all these goody goody stories about brotherly love between Muslims and Hindus in their village and towns are simply a hogwash. Action speaks louder than words.Get back to us ONLY after this.”

  51. Mr meeransahib,
    I am disgusted with you. You state here that you converted from Hinduism to Islam due to castes and other unsavory stuff. This is a disgrace. Hinduism is you mother religion, the religion of your ancestors. Instead of staying in and do your best to change it for the better, you have, like a coward, abandoned it. If your mother had made some mistakes, would you abandon her for an Arabic mother? On top of that, you are batting for this savage cult against your ancestral way of life.

  52. //நானும் திரு .மீராபாய் கருத்தை ஆதரிக்கிறேன் .//

    விவேக்!

    மீராபாய் என்பது ஒரு ஹிந்து செயின்ட்டின் பெயர். இராஜஸ்தான் இளவரசி. கிருஸ்ணன் பக்தை.

    மீரான்பாய் என்றெழுதவும்.

    //சுவனத்தின் அகராதியின்படி முஸ்லிம்களுக்கு எதிராக எழுதும் எந்த முஸ்லிமும் முஸ்லிமே அல்ல. அதே அளவுகோலின்படி “ஜாதுநாத் சர்க்கார்” ஒரு இந்துவே அல்ல என்கிறேன் நான்.
    //
    இஃதெல்லா மதங்களிலும் உண்டு. ஒரு மதத்தவர் தன் மதத்தில் பிடிக்கா கருத்துக்களை பாமர மனிதனாக இருந்தாலும் அவர் வசிக்குமிடத்தில் தனிநபர் கருத்துக்களுக்கு உயிரை இழக்க வேண்டியது இருந்தாலும், அவர் மனத்திற்குள் வைத்து பூட்டிவிடுவார். சுதந்திரம் இருந்தாலும் அவர் ஒரு எழுத்தாளராக இருந்தாலும் நூலாக வெளிட்டுவிடுவார். இப்படிச்செய்தோர்கள் நிறைய. கான் செய்தது இந்தியாவில் அவருக்குக் கிடைத்த சுதந்திரம். அவர் பாகிஸ்தானில் வசித்தால் எழுத முடியாது.

    இந்துக்களில் காலம்காலமாக இப்படிப்பட்டோர் இருந்தே வந்திருக்கிறார்கள். தற்காலத்தில்தான் அவர்கள் உயிருக்கு மிரட்டல் விடப்படுகிறது. இராமானுஜனின் இராமாயணம் தடைசெய்யப்படவேண்டுமென்ற ஆர்ப்பாட்டம் வெற்றிபெற்று தில்லிப்பலகலைக்கழகம் தன் பாடத்திட்டத்திலிருந்து அதை நீக்கியது. பட்ராவின் கோர்ட் கேஸ் வெற்றிபெற்று வென்டி டோனியரின் நூல் தடை செய்யப்பட்டது போன்றவை நல்ல எடுத்துக்காட்டுக்கள். முன்பெல்லாம் இப்படி இல்லை. கிருத்துவத்தில் இந்தியா போன்ற நாடுகளில்தான் ஆபத்து. கேரளாவில் ஒரு நாடகத்தையே (இயேசுவின் இரண்டாம் முறி) தடை செய்துவிட்டார்கள்.

  53. மீரான் சாஹிபு

    பயந்துட்டேன் போங்கள். எப்போ ஆட்டோ வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். நான் இருக்கும் ஊர்ல ஆட்டோவே கிடையாது என்பது தான் பிரச்சனையை.

    எங்களை இன்னும் என்ன அத்தனை பெரிய இல்லிச்சவாயங்கள் என்று எண்ணுகிறீர்களா. குர்ஆனில் வன்முறை உண்டு என்று நிரூபிக்க ஒண்ணுமே செய்ய வேணாம், கொஞ்சமா பாகிஸ்தானுக்கு மேற்படி உள்ள செய்திகளை படித்தாலே போதும். கை வெட்டுக்கு கண்ணாடி எதுக்கு,. புண்ணெல்லாம் இஸ்லாத்தில் ஒரு பொருட்டே கிடையாது குறைஞ்சது கை வெட்டு தான் என்பதனால் அப்படி சொன்னேன்.

    சகோ எத்தனை பேரு தினமும் குண்டு வெச்சு செத்து சாகடிக்கிரானுங்க. என்னமோ ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசறீங்க. குர்ஆனில் வன்முறை இருக்கு என்று நான் நிரூபணம் செய்தால் இஸ்லாத்தை விடுவீரோ நீங்கள். குரான் வசனமெல்லாம் சொன்னவுடன் எ ஸ்ஸாகிடுவீங்க. இத எம்முட்டு தரம் பாத்திருக்கோமுங்கன்ன.
    நாங்க முஸ்லிமு காலேஜுலத்தான் தங்கி படிச்சோம் அல்லோலப்பட்டு போயிருக்கேன். என்ன அழிச்சாட்டியம் பண்ணுவானுங்க.

  54. // Instead of staying in and do your best to change it for the better, you have, like a coward, abandoned it. If your mother had made some mistakes, would you abandon her for an Arabic mother?//

    RAMA

    I understand your feelings expressed as a Hindu when you have to see a fellow Hindu crosseing over to other religion merely because he felt hurt over certain things in the parent religion. You want such a person to fight from within – and win – rather than abandoning the religion. This is exactly what Aravindan advised a dalit in the anmiika kankatchi, which advice was under servere criticism in Vinavu Blog.

    In my view – a view from the above all, the advice is not sound as it is not realistic. To fight is not easy for a single man in any social issue. It requires a strong group. Even if it is strong, if the opposing group is stronger, then the fight will be one-sided. The losers will naturally be driven out; drive themselves out.

    As for single man, in history, many have suffered the onslaught of orthodox group and left the battle in uter frustration. The few, who persevered, needed the help of non-hindus, as the social reformers like Mohan Roy could achieve his dreams only with the help of British rulers.

    Among Tamils, the conversions took place not among the Brahmins or upper castes, but among the low classes. Even so, when the upper castes converted, for e.g. the Kannada brahmins of Tiruchi converted en masse to Catholicism, they did so for quid pro quo – i.e. exchange of benefits. The Tiruchi bishop asssured them good returns. He even helped make one a businessman: the Vincent drinks owner was a Brahman.

    Caldwell poached only among the so called Sanars, now known as Nadars who were poor toddy toppers of that area.

    For dalits and lower castes, if some of them are very sensitive to the issue of dignity, your advice will fall on deaf ears only. Why to fight from within long and vain? What is wrong if I go to other religion which gives me dignity and bury the matter once for all, to concentrate on my other pursuits? Moreover, when castes are legitimised by such animeeka kankaatchi as happened in Thiruvaanmiyur, and this forum writers of present and past, like Sarangan, Krishnakumar and Malarmannan want castes to say and, as a sop, the dalits need not be discirimated within the accepted the system of caste, the question of fight within will never arise. Your advice or Aravindan advise to fight within, is like an advice to a hungry man to eat cakes, if he does not get bread !

    Religion, Mr Rama, is, for millions, a matter for occasions. They don’t cling to it 24/7. They also don’t have much expectations other than making prayers for this or that and going to temples. Religion is deeply spiritual only for people of greater consciousness. If you are of higher consciousness, you can even become a saint. It depends upon the degrees of consciousness or the capacity to draw much from out of the relgion for your spiritual health. Common masses don’t bother about the nitty-gritty of religion. Dalits for e.g. You may cite this or that dalit who is a Saint; but he has higher consciousness. Thani maram thoppaakumaa? I am also frustrated with my efforts: all my efforts to show that this religion do care, even value, the dalits more and it is a happy and contented place to live in, it is met with sarcasm and ridicule from the orthodox lobby sitting here, or anywhere. They want dalits to be contented with their lowest status in the religion. In today terms, they won’t accept it. The fight is naturally with the strong orthodoxy which gets tremendous support; witness they can arrange a public meeting for caste groups under the cloak of relgion. How will dalits stay here? Why should they take your advice seriously? A majority of Muslims today were once dalits.Are you a doctor? If so, read Dr Kenneth Walker’s Diagnosis of Man. It is about religious consciousness in man.Come with an intelligent solution for stopping conversion through persuasion if you want to succeed.

  55. என் அன்பிற்கினிய இந்து சகோதரர்களே என் கருத்துக்கள் அனைத்தையும் நீங்கள் படித்திருப்பீர்கள்.என்னை என்னை இந்த பத்தியில் எழுத தூண்டியது,திரு ரூபன் அவர்களின் கட்டுரையின் கடைசி பத்தியில் இருந்த”தமிழ் நாட்டில் இந்துக்கள் விரட்டப்படுகிறார்கள்”என்ற செய்திதான்.அதற்குத்தான் என் சொந்த ஊரின் நிகழ்வுகளையும் சென்னையில் நான் வசிக்கும் பகுதிகளில் இந்து முஸ்லிம் மக்கள் இணக்கமாய் வாழ்வதையும் எடுத்துகாட்டியிருந்தேன்.இன்றைய நடைமுறை வாழ்கையை குறிப்பிட்டு இருந்தனே அல்லாது எந்த இடத்திலும் என் மதம் புனிதம் என் வேதம் புனிதம் என்று சுயபுராணம் பாடவேயில்லை.ஆனால் இங்கு கருத்து பதிந்தவர்கள்தான் திரும்ப திரும்ப குரான் இஸ்லாம் ஷியா சன்னி என்று தேவையே இல்லாமல் இழுத்தார்கள்.இப்படி அவர்கள் குறிப்பிட்டு எழுதும்போது எங்கள் குர்ஆனில் அவ்வாறு இல்லை இஸ்லாம் அப்படி சொல்லவில்லைஎன்று அவற்றிலிருந்து தானைய்யா நான் விளக்க முடியும்.அப்படி விளக்கும்பொழுது அதை” தாக்கிய “என்று அதையும் திருப்புகிறார்கள்.பொன்ராதா கிருஷ்ணன் அவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பற்றிய கருத்திலும் இதே அணுகுமுறைதான் இருந்தது.ஆக இவர்களின் நோக்கம் தெளிவாகிறது.நான் உன்னை பயங்கரவாதி என்பேன்.உன் மதம் பயங்கரவாதம் என்பேன் நீ ஒத்துக்கொண்டாக வேண்டும்.அது இல்லை என்ற உன் ஆதாரங்களெல்லாம் எனக்கு தேவையில்லை.ஆக நான் பயங்கரவாதியாக இருப்பதில்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி.அதைதான் அவர்கள் விரும்பவும் செய்கிறார்கள்.ரவுடிகள் இருந்து கொண்டே இருக்கவேண்டும் என்று போலீஸ் காரர்கள் விரும்புவதைப்போல.நடுநிலையான இந்து சகோதரர்களே இதுவரைக்குமான என் பதிவுகளையும் அதற்கான பதில்களையும் காய்தல் உவத்தலின்றி படியுங்கள் புரியுங்கள்.ஒரு எழுத்த்தாலரே இவ்வளவு காட்டமாகவும் வேகமாகவும் இருந்தால் இவர்களுக்கு பலியான சாதாரண மக்களை என்ன சொல்ல? சாரங் என்ற சகோதரர் சற்று கடுமையாக பேசியதற்கு உடனடியாக அறிசொணன் அண்ணன் மறுப்பு தெரிவித்துவிட்டு நான் நீங்குகிறேன் என்று சொன்னார்.அவர் பக்திமான்.அவரைப்போல்தான் இருப்பார்கள் எந்த நல்லவரும்.இவர் எழுதியே தீருவாராம் அவருடைய உண்மை வரலாற்றை.எழுதுங்கள் சகோதரரே உங்களின் உண்மை வரலாற்றை.எழுதி உங்களின் உண்மை முகத்தை தெளிவாக அடையாளம் காட்டுங்கள்.நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.”கெடுவான் கேடு நினைப்பான்”எவன் கெட்டழியபோகிறானோ அவனே கேட்டை நினைப்பான்.யங்களைப்போன்றவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

  56. அன்பின் ஸ்ரீ ரூபன், ஒரு சிறிய திருத்தம்

    \\\ இங்கு நான் எழுதுவது எங்கள் வரலாறு \\\

    இங்கு எழுதப்பட்டு வருவது வரலாறு.

    ஹிந்துஸ்தானத்தின் வரலாறு.

    ஹிந்துஸ்தானத்தின் இன்றைய ஹிந்துக்கள் மற்றும் முன்னாளைய ஹிந்துக்களின் (இன்றைய முஸ்லீம்கள்) வரலாறு.

    இது ஜெனாப்-ஏ-அலி மீரான் சாஹிப் அவர்களது முன்னோர்களின் வரலாறும் கூடத் தான். ஆகவே எங்கள் என்ற பதத்தை விலக்கியிருக்கிறேன்.

    முன்னோர்கள் என்ற படிக்கு அராபிய பயங்கரவாத மொகலாயரின் வாளுக்கு இறையாகாது இன்று வரை ஹிந்துக்களாகவே தொடரும் அவர்களது முன்னோர்கள் அல்லது அல்லது அராபிய பயங்கரவாத மொகலாயரின் வாளுக்கு இறையான ஹிந்துக்களின் அல்லது அராபிய பயங்கரவாத மொகலாயரின் வாளுக்கு இறையாவதில் இருந்து தப்பிப்பிழைத்த ஹிந்துக்களின் வரலாறு.

  57. திரு ராமா!

    //“Can Mr SP and now, the new addition Mr meeransahib, declare openly, preferably from their mosques, that the Hindus are not “Kaffirs”//

    அதாவது நானும், மீரான் சாஹிபும் பள்ளி வாசல்களில் ‘இந்துக்கள் அனைவரும் காஃபிர்கள் இல்லை’ என்று அறிவித்து விட வேண்டும். இதுதானே உங்கள் கோரிக்கை.

    முதலில் ‘காஃபிர்’ என்ற அரபு பதத்திற்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம். ‘குஃப்ர்’ என்ற மூலச் சொலிலிருந்து பிறந்ததே ‘காஃபிர்’ என்ற வார்த்தை. அதற்கு நேரிடையான தமிழ் மொழி பெயர்ப்பு ‘இறை மறுப்பாளர்’ கண்ணில் கண்டதை எல்லாம் கடவுள் என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை ‘காஃபிர்கள்’ என்று அழைக்கிறோம். இது ஏதோ ஒரு அவமானச் சொல் என்ற ரீதியில் உங்கள் கேள்வியை வைத்துள்ளீர்கள்.

    ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திரு மூலரின் திருமந்திரம் தமிழருக்கு சொந்தமானது. நமது முன்னோர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்துள்ளனர். இந்த பல தெய்வ வணக்கம் என்பதே இடைக்காலத்தில் கலாசார மாற்றங்களினால் புகுத்தப்பட்டது. இடையில் வந்த இந்த பழக்கத்தை விட்டு விட்டு தமிழர்கள் நாம் அனைவரும் ஏக இறைவனையே வணங்க ஆரம்பித்து விட்டால் தமிழகம் என்ன…… உலக மசூதிகள் அனைத்திலும் ‘தமிழர்கள் காஃபிர்கள் அல்ல’ என்று அறிவித்து விடுவோம்.

    ஆதி கால தமிழர்களின் மார்க்கமும் இஸ்லாமிய மார்க்கமும் ஏறத்தாழ ஒன்றே. இந்து மத வேதங்களும் கூட ஏக இறைவனையே வணங்கச் சொல்லி இந்துக்களுக்கு கட்டளையிடுகிறது.

  58. /////தமிழர்கள் நாம் அனைவரும் ஏக இறைவனையே வணங்க ஆரம்பித்து விட்டால் தமிழகம் என்ன……//////
    ஏக இறைவன் யாரு? “அல்லா”வா? அதாவது “” நாம் அனைவரும் அல்லாவை வணங்க ஆரம்பித்துவிட்டால்”” என்று சொல்வதின் மூலம் எல்லாரும் முஸ்லிம்களாக மாறுங்கள் என்று மறைமுகமாக சொல்கிறீர். சபாஷ்!

    ////////இந்த பல தெய்வ வணக்கம் பழக்கத்தை விட்டு விட்டு///////
    நாங்கள் பல தெய்வங்களை வணங்குவதால் உங்களுக்கு என்னப்பா கஷ்டம்? அல்லா சொல்வதை கேளும்.

    மற்றவர்கள் வணங்கும் தெய்வங்களை திட்டாதீர்கள் (பிற மதத்தினர் மனதை புண்படுத்துவதை தவிர்க்க வேண்டும்) ஆதாரம் 6 : 108

    பலவந்தபடுத்தி ஒருவரை முஸ்லிமாய் ஆக்கக்கூடாது (10 : 99)

    முஸ்லிம் அல்லாதோரை திருமணம் செய்து கொள்வது ஆகாது (2 : 221)

    Can you say with your hand on your heart that nobody is forcefully converted as Muslim??? You should not pledge your conscience in pawn broker shop. Say honestly.

    முஸ்லிம் அல்லாதோரை திருமணம் செய்துகொண்டால் அவ்வாறு செய்து கொண்டவரும் செய்யப்பட்டவரும் மனிதர்கள் இல்லையா? எத்தனையோ முஸ்லிம்கள் (ஆண்கள்) இந்து பெண்களை திருமணம் செய்து கொண்டனரே அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு பிள்ளை குட்டிகள் பிறக்கவில்லையா? அவர்களுக்கு பிள்ளை குட்டி பிறக்க விடாமல் அல்லா செய்யவேண்டியதுதானே! ஏனென்றால் குரான் கூறுகிறது . (((((நித்திய ஜீவன். பேரண்டத்தை நிர்வகிப்பவன். அன்னையின் கருப்பையில் வடிவமைக்க கூடியவன்—–3 : 3-6))

  59. பாகிஸ்தானில் ஒரு ஹிந்து சடலத்தில் காஃபிர் என்று இருந்ததே , அதன் அர்த்தம் இதான்பா????

    ‘இறை மறுப்பாளர்’ கண்ணில் கண்டதை எல்லாம் கடவுள் என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை ‘காஃபிர்கள்’

  60. அன்பின் ஜெனாப் மீரன் சாஹிப்

    ஸ்ரீமான் அரிசோனன் அவர்கள் உங்கள் இறைக்கோட்பாட்டை மறுப்பு ஏதும் இல்லாது ஏற்றுக்கொண்டதால் அவரை பக்திமான் என்றும் தளத்தின் மற்றைய அனைத்து ஹிந்து சஹோதரர்களையும் ஹிந்து மத வெறியர்கள் என்றும் சுட்ட விழைவீர்கள் போலும்.

    தெளிவாக சில விஷயங்கள்

    ஆப்ரஹாமிய இறைக்கோட்பாடு என்பது அசூயை மிகுந்த ஒரு கோட்பாடு. எம்மால் இறைக்கோட்பாடு என்று ஏற்க இயலாது. இறையியல் அறிந்த எமது தளத்து வாசகர்கள் யாராலும் இறைக்கோட்பாடு என்று ஏற்க இயலாக் கோட்பாடு. இது இறையியல் சார்ந்த விஷயம்.

    இந்த தளத்தில் யாரும் முஸ்லீம் சஹோதரர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று சொன்னதில்லை. சொல்லவும் மாட்டார்கள்.

    இதே தளத்தில் ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் என்ற முஸ்லீம் சஹோதரரின் செயல்பாட்டை நான் விதந்தோதி எழுதியிருக்கிறேன். வாசித்துப்பார்க்கவும்.

    அதே போன்று இந்த தேசத்தின் கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் பங்களித்துள்ள அனைத்து முஸ்லீம் சஹோதரர்களையும் நானும் இந்த தளத்து அனைத்து வாசகர்களும் போற்றுகிறோம்.

    நூற்றாண்டுகளுக்கு முந்தி குருநானக் தேவருடன் இணைந்து பணியாற்றிய பாய் மர்தானா முதல் தற்போது ஹிந்துஸ்தானியர் அனைவரும் மதித்துப்போற்றும் அப்துல்கலாம் வரை நானும் ஸ்ரீமான் ரூபனும் தள வாசகர்கள் அனைவரும் போற்றும் அன்பரகள்.

    ஹிந்துக்களொடு கரம் கோர்த்து தேச வளர்ச்சிக்கு பாடுபட விழையும் அனைத்து முஸ்லீம் சஹோதரர்களும் எமது போற்றுதலுக்கு உரியவர்களே.

    ஆனால் ஜிஹாத் வன்முறைச் செயல்பாடுகளில் இறங்கி ஹிந்துக்களை படுகொலை செய்யும் எவரையும் எமது சஹோதரர்களாக எப்படி ஏற்க முடியும்? எப்படி ஏற்க முடியும்?

    குஜராத்தில் 2002 மதக்கலஹத்திற்காக மோதி சர்க்கார் முறையான ந்யாயாலய விசாரணைகள் மூலம் கலஹத்தில் ஈடுபட்ட அனைத்து ஹிந்து மற்றும் முஸ்லீம் சஹோதரர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளது.

    ஆனால் தமிழகத்தில் ஹிந்து இயக்க சஹோதரர்களை வெறித்தனமாக ஜிஹாத் வன்முறையில் கொன்ற பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த தமிழக சர்க்கார் என்ன செய்திருக்கிறது.

    ஜிஹாதி பயங்கரவாத வன்முறையில் இறந்த ஹிந்து இயக்க சஹோதரர்கள் அனைவரையும் கந்து வட்டிக்காரர்கள், நடத்தை கெட்டவர்கள் என்று இழித்துப்பழிப்பது மத நல்லிணக்கம் ஆகாது. ஆகவே ஆகது.

    மதக்கலஹங்களில் கொல்லப்பட்ட இஸ்லாமிய சஹோதரர்களையும் அதே மாதிரி ஹிந்துக்களாலும் இழிவு செய்திருக்க முடியும். ஆனால் மோதி சர்க்கார் அப்படிச் செய்யவில்லை. தவறிழைத்தவர் யாராக இருந்திருந்தாலும் ஹிந்துவாக இருப்பினும் சரி முஸ்லீமாக இருப்பினும் சரி, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளுங்கள்.

    முஸ்லீம் படுகொலை செய்யப்பட்டால் சிந்துவது ரத்தம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டால் வருவது தக்காளி சட்னி என்று நினைப்பதை முதலில் விட்டு விடுங்கள்.

  61. படிப்பவன் கண்ணில் இரத்தம் வரும் இந்த ரொவ்டீகளையும் நாம் அரசாங்கத்தின் கையாலாகத்தனதும் பார்த்து. நீங்கள் நாசமாக போகும் காலம் ஒரு நாள் வரும்…

    https://www.jeyamohan.in/?p=58732
    https://www.jeyamohan.in/?p=58783

    இவர்கள் நாம் வரிப்பணத்தில் ஹஜ் போகும்போது நாம் அப்படி பண்ணிணால் என்ன? யோசியுங்கள் ஹிந்துக்களே

  62. //முஸ்லிகளை பாய் என்று சொல்லமாட்டாராம்//
    முஸ்லிகளை பாய் தலையனை என்று சொல்ல எனக்கு என்ன பைத்தியமா என்ன?

  63. அன்பின் ஜெனாப் சுவனப்ரியன்,

    \\\\ கண்ணில் கண்டதை எல்லாம் கடவுள் என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை ‘காஃபிர்கள்’ என்று அழைக்கிறோம் \\\\

    இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் அம்சங்களே என்பதால் கண்ணில் கண்டதை எல்லாம் கடவுளின் வடிவங்கள் என்று ஹிந்துக்கள் நிச்சயம் சொல்வர்.

    \\\\ ஆதி கால தமிழர்களின் மார்க்கமும் இஸ்லாமிய மார்க்கமும் ஏறத்தாழ ஒன்றே. \\\\\\

    இப்படி தமிழ் ஜல்லி அடித்து விட்டால் உடனேயே ஒரு கும்பல் சேர்ந்து உங்களுடன் ஒத்துப்போய் விட்டால் நீங்கள் சொல்வதே தமிழ்க்கலாசாரம் என்று ஆகிவிடும் என்று நினைத்துவிடுவீர்கள் போலும்?

    ஆதி தமிழனின் கலாசாரம் — ஏக இறைவன் — புளுகுவதற்கும் ஒரு அளவு வேண்டாம்?

    தமிழ் நீங்கள் மட்டிலும் பள்ளிக்கூடத்தில் படித்ததில்லை இந்த தளத்து வாசகர்கள் அனைவரும் படித்திருக்கிறார்கள்.

    ஐந்து வகை நிலங்களும் ஐந்து வழிபடு தெய்வங்களையும் பகிரும் சங்க நூற்கள் என்ன அரபியில் எழுதப்பட்டதா? அல்லது நீங்கள் அரேபியாவுக்கு தொண்டூழியம் செய்வதால் மறக்கப்பட வேண்டியதா?

    என்னை வணங்காதவனை நான் மீளா நரகத்தில் தள்ளி விடுவேன் என்று பூச்சாண்டி காட்டும் இழிவான ஆப்ரஹாமியக்கோட்பாட்டை தமிழர் தம் கோட்பாடு என்று சொல்லி தமிழர்களை இழிவு செய்யாதீர்கள்.

  64. அன்பின் மீரான் சாஹேப்

    \\ எழுதுங்கள் சகோதரரே உங்களின் உண்மை வரலாற்றை.எழுதி உங்களின் உண்மை முகத்தை தெளிவாக அடையாளம் காட்டுங்கள். \\\

    ஸ்ரீமான் ரூபன் எழுதுவது உண்மை வரலாறு. உண்மை வரலாறு தான். இல்லையென்றால் உர்தூ ஃபார்ஸி மூல நூற்களில் எழுதப்பட்ட வரலாற்றுக்கும் ரூபன் எழுதும் வரலாற்றுக்கும் என்ன வித்யாசம் என்று பகிருங்கள் என்று சவாலே இந்த தளத்தில் விடப்பட்டுள்ளது. அதை முதலில் செய்ய விழையுங்கள்.

    இந்த வரலாற்றில் பகிரப்படும் உண்மை முகம் ஸ்ரீமான் ரூபன் அவர்களுடையது இல்லை. பயங்கரவாதத்தை துணைக்க்கொண்டு வன்முறையால் மதத்தைப் பரப்ப முனைந்த இஸ்லாத்தின் உண்மை முகம் தெளிவாக அடையாளம் காட்டப்படுகிறது.

    இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தின் முகம் வன்முறை பொதிந்தது மட்டிலும் தானா? இதற்கு வேறு முகம் இல்லையா என்றால்………….

    வன்முறை அன்றிய இஸ்லாத்தின் பன்முகத்தையும் வேறு முகத்தையும் கூட நான் எமது இஸ்லாமிய சஹோதரர்கள் வாயிலாக அறிவேன்.

    அதை விரைவில் பகிருகிறேன். பார்க்கலாம். அப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று.

    \\\\\ நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.”கெடுவான் கேடு நினைப்பான்”எவன் கெட்டழியபோகிறானோ அவனே கேட்டை நினைப்பான். \\\

    நாங்கள் யாரும் கேட்டை நினைக்கவேயில்லையே.

    நீங்களும், முகமூடி சுவிசேஷ கூலிக்கு மாரடிக்கும் ப்ரசாரகரும், சஹோதரி ரெபெக்கா மேரியும், தோமஸ் என்றொரு க்றைஸ்த்வ சஹோதரரும், ஜெனாப்-ஏ-அலி சுவனப்ரியரும் தான் கேடு நினைக்கிறீர்கள் ஐயன்மீர். ஏற்கனவே புஸ்தமகமாக ப்ரசுரிக்கப்பட்ட இந்த வரலாறு இன்னொரு முறை புஸ்தகமாகப் பதிப்பிக்கப்பட்டால் மதக்கலஹம் பெருகும் என்று கேடு நினைக்கிறீர்கள்.

    நாங்கள் யாரும் அப்படி கேடு நினைக்கவில்லை. வன்முறை விடுத்து இஸ்லாமிய சஹோதரர்கள் அனைவரும் ஹிந்துக்களொடு சஹோதரத்துவம் பேண வேண்டும் என்றே நினைக்கிறோம்.

  65. அதை அந்த “ஏக” இறைவனே நேரில் வந்து சொல்லட்டுமே மிஸ்டர் சுவனம்.

    “ஏக” இறைவனை நாங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வீர்களாம்? வெடிகுண்டு வைப்பீர்களோ? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் கிறுக்கர்களைப் போல வரிசையாக நிற்க வைத்து சுட்டுத் தள்ளுவீர்களோ?

    உங்களைப் போன்ற வஹாபிகள் என்னைப் புல்லரிக்க வைக்கிறார்கள். இஸ்லாம் என்னும் மனோவியாதியை தொடர்ந்து எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதனை சுவனம் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  66. சுபி

    //
    ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திரு மூலரின் திருமந்திரம் தமிழருக்கு சொந்தமானது.
    //

    திருமூலர் சொல்லும் ஒரு தேவன் நல்லவர் அல்லா போன்று அடுத்தவர் மீது கொலைவெறி தாக்குதல்களை நடத்தும் ஆதங்கவாதி இல்லை.

  67. சுபி

    //
    ஆதி கால தமிழர்களின் மார்க்கமும் இஸ்லாமிய மார்க்கமும் ஏறத்தாழ ஒன்றே. இந்து மத வேதங்களும் கூட ஏக இறைவனையே வணங்கச் சொல்லி இந்துக்களுக்கு கட்டளையிடுகிறது.
    //

    எப்பா எப்படிப்பா. இரண்டு மதங்களுக்கும் முடிச்சி போடா முடியாது. இஸ்லாம் என்பது ஒரு primitive மதம். காட்டுமிராண்டி அரபுகளை கொஞ்சமேனும் சீர் படுத்தும் (குடிக்காதே, பக்கிர பொன்னை எலாம் தூக்காதே, நாலு தான் லிமிட்டு, இப்படி உச்ச போகணும், உச்சா போனா கழுவனும் இத்யாதிகள்).

    உபநிஷத்துக்களின் நோக்கமே மிகவும் வித்யாசமானது. எல்லா உயிர்களையும் கடவுளின் தரத்திற்கு படிப் படியாக உயர்த்துவதே ஹிந்து மதத்தின் கொள்கை. இஸ்லாம் மனிதனை என்றுமே அடிமையாக்கி வைக்கும். அல்ப இன்பங்கள் (சுவனத்தில் 72 பெண்கள், சரக்கு ஆறு, ஒரே கும்மாளம்) தான் இஸ்லாத்தின் குறிக்கோள். இதை அடைய அடுத்தவனை கொன்று குவிக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

    ஹிந்து மதத்தின் குறிக்கோள் தர்மம், இஸ்லாத்தின் குறிக்கோள் அதர்மம். ஹிந்து மதத்தின் குறிக்கோள் விஷ்வ ஷாந்தி இஸ்லாத்தின் குர்க்கோல் உலகெங்கும் ரத்த ஆறு அதை செய்பணைக்கு சுவனத்தில் சரக்கு ஆறு.
    ஹிந்து மதத்தின் குறிக்கோள் மனிதனை ஞான வளர்ச்சி. இஸ்லாத்தின் குறிக்கோள் மனிதன் அஞான இருளில் எப்பொழுதும் உழன்று கொண்டு காட்டுமிராண்டியாக இருக்கவேண்டும்
    இஸ்லாத்தின் குறிக்கோள் மரணம், ஹிந்து மதத்தின் குறிக்கோள் நிலையா வாழ்வு

    அசதோ மா சத் கமய
    தமசோ மா ஜ்யோதிர் கமய
    ம்ருத்யோ மா அம்ருதம் கமய

  68. ரெவ ரெண்டு பாசுக்……….@ ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

    \\\\\ Moreover, when castes are legitimised by such animeeka kankaatchi as happened in Thiruvaanmiyur, and this forum writers of present and past, like Sarangan, Krishnakumar and Malarmannan want castes to say and, as a sop, the dalits need not be discirimated within the accepted the system of caste, the question of fight within will never arise. Your advice or Aravindan advise to fight within, is like an advice to a hungry man to eat cakes, if he does not get bread ! \\\\

    ரெவ ரெண்டு பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவுக்கு ஆங்க்லத்திலேயே அதிகமாகப் பேத்த வேண்டும் என்று வாக்கு தத்தம் கொடுத்துள்ளீரோ

    நீங்கள் தமிழை இழிவு செய்வதற்காக பலப்பல அவதாரங்கள் எடுத்து முகமூடிகள் அணிந்து சுவிசேஷ அதிக ப்ரசங்கம் செய்து வருகிறீர் என்பது யாருக்கும் தெரியாது என நினைக்கலாம்.

    முகமூடிகள் போட்டு புதுப்புதுப் பெயரில் ஊரை ஏமாத்துவதற்கு தேவரீருக்கு சாமர்த்யம் இருந்தால் ஒவ்வொரு அவதாரத்திலும் அவதார ப்ரகடனமாகி தேவரீர் நாலு வாசகம் பேத்திய உடனேயே முகமூடிக்குப்பின் இருக்கும் மிஷ நரியை அடையாளமும் கண்டு முகமூடியைக் கிழித்து த்வம்சம் செய்வோம் என்பது தெரியாது போலும்.

    அரைகுறை, க்ரிப்டோ க்றைஸ்தவன் என்றெல்லாம் மறைந்த அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயரால் பட்டாபிஷிக்தாரன தேவரீர் அவர் இருந்த வரைக்கும் அவர் சொல்லாததையெல்லாம் சொன்னதாக விதண்டாவாதம் செய்தது போதாது என்று அவர் திருநாடு ஏகிய பின்னரும் இப்படி புளுகுமூட்டைகளாகக் கொட்டி விதண்டாவாத த்வேஷம் கொள்வது தகுமோ?

    ஸ்ரீ வெ.சா மஹாசயரிடம் நான் கடலை போடுவேன் ……….. நீ பொறுக்கு என்று என்ற வினம்ரதை பூர்வம் கொண்டு Tamil அவதாரத்தில் இந்த தளத்தில் பேத்தி……………. (தப்புத் தப்பான தமிழ் வாசகங்களுடன்)…….திண்ணை தளத்தில் அய் அய் எம் கணபதி ராமன் என்ற முகமூடி அவதாரத்தில்………….வெ.சா உமக்கு வலிக்க வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன் என்று தேவரீர் பினாத்தியதும்……….. இரண்டு தளங்களிலும் முகமூடி கிழித்தெறியப்பட்டதும் பல வாசகர்களும் அறிவரே…………

    அமரர் மலர்மன்னன் மஹாசயரிலிருந்து ஸ்ரீமான் சாரங்கனிலிருந்து க்ருஷ்ணகுமார் வரை இந்த தளத்தில் யாரும் தலித் சஹோதரர்களது உரிமைகளுக்கு எதிராகப் பேசியதில்லை என்பது தெரிந்தும் நயவஞ்சக சுவிசேஷ மிஷ நரி குதர்க்க ப்ரசாரத்தை வீர தீர சூர ப்ரதாப முகமூடியார் எப்போது கைவிடுவார்?

    சிங்கமுத்து என்ற தலித் சஹோதரர் வேதம் கற்க வேதியர் மறுத்தனர் என்ற உடனேயே வேத க்ளாசுக்கு சேர்த்து விட உடனே தயார் என்று பொதுதளத்தில் இதே தமிழ் ஹிந்து தளத்தில் பகிர்ந்தவர் ஸ்ரீ சாரங்கன். அவருடைய ஆவலை உடனேயே ஆதரித்து உத்தர பாரதத்தில் இருக்கும்படிக்கு எங்கெங்கு எல்லோரும் வேதம் கற்க வாய்ப்புகள் உள்ளன என்றும் பகிர்ந்தது க்ருஷ்ணகுமார்.

    இந்த அவதாரம் மலையேறட்டும். புளுகு மூட்டை மிஷ நரி நயவஞ்சக ப்ரசாரம் தொடர்ந்தால் தேவரீரை தமிழகத்து இணைய ஜாம்பவான் கள் மங்களாசாஸனம் செய்த உரலாயுதம் ப்ரயோகிக்கப்படும். அதை செய்யுமுன் இந்த அவதாரத்திலிருந்து மலையேறவும் முகமூடியார்.

    அடுத்த அவதாரத்திலாவது ஜாதி த்வேஷத்தை விடுத்து தமிழ் ஹிந்து தளத்தில் வேறு முகமூடியில் ப்ரவேசிக்கவும். இழிவான நயவஞ்சக செயல்பாடுகளை விட்டொழிக்க முயற்சியாவது செய்யத்துவங்கவும்.

    கடையைக் கட்டவும்.

    மாற்றுக் கருத்தே பகிர்ந்தாலும் சரி திண்மையுடன் ஒரே பெயரில் கருத்துப்பகிரும் ஜெனாப் சுவனப்ரியன், ஜெனாப் மீரான் சாஹிப், சஹோதரி ரெபெக்கா மேரி போன்றோருடைய அடிப்படை நேர்மையை நானும் இந்த தளத்து அனைத்து வாசகர்களும் விதந்தோதுகிறோம். விதண்டாவாதம் புரிவதற்காகவே வேண்டி பலப்பல அவதாரம் எடுக்கும் நயவஞ்சக மிஷ நரிகளின் முகமூடிகளை கிழித்தெறியாது ஓயமாட்டோம் அன்பின் ஜோ.

    உமது பரலோகத்து பரமபிதா உமக்கு சத்புத்தி அளிக்கக்கடவாராக.

    ஷலோம்.

    கனபூசை கொளும் காளியோடனைவரும்…….
    விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
    கொள்ளிவாய்ப்பேய்களும் குறளைப்பேய்களும்…………..
    இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்…….
    எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அன்னரும்
    அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட…….

  69. சுபி

    //
    அதற்கு நேரிடையான தமிழ் மொழி பெயர்ப்பு ‘இறை மறுப்பாளர்’ கண்ணில் கண்டதை எல்லாம் கடவுள் என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை ‘காஃபிர்கள்’ என்று அழைக்கிறோம்
    //
    அப்படி என்றால் அது நாங்கள் தான். எங்களுக்கு கண்ணில் கண்டதெல்லாம் கடவுள் தான். சர்வம் பிரம்ஹ மயம் கடவுள் எங்கும் வியாபித்து இருக்கிறார் என்பதே ஹிந்துக்களின் கொள்கை. ஹிந்துக்களின் கடவுள் எங்கோ ஒரு இடத்தில் மேடை போட்டு அதுல வாடகைக்கு எடுத்த சோபாவா போட்டிக்கிட்டு உக்காந்துகிட்டு இருக்கல. அதனால் தான் ஒரு ஹிந்து மரத்திலும், குரங்கிலும், கல்லிலும் கூட தெய்வ தன்மையை பார்கிறான். அப்படி பார்ப்பதால் தான் இஸ்லாமிச்ட்டை கூட அவன் மத்திக்கிரன் அடேய் இவன் இஸ்லாமிச்டா இருந்துட்டு போகட்டும். இவனுள்ளும் இறைவன் இருக்கிறாரே என்று. கடவுள் என்ற பத்திற்கு இது தான் அர்த்தம்.

    நாங்க என்ன வெண்ண செஞ்சிகிட்டு போகிறோம் இத பாத்து எதுக்கு அல்லாவுக்கு கடுப்பு. எல்லாம் அவரது சொத்து எல்லாம் அறிந்தவர் என்றால் எங்கோ ஒரு கேணப் பயல் அல்லாவை கும்பிடாமல் கல்லை கும்பிட்ட அவருக்கு என்ன எரிச்சல், அவனை விடாதே, கைய்ய வெட்டு, கால வெட்டு அவன் பொண்டாட்டிய தூக்கு.

    இதெல்லாம் கடவுள் செய்வாரா காங்கு லீடர் செய்வானா

  70. “வன்முறையே வரலாறாய்” ஈராக்கில் மீண்டும் அரங்கேறுகிறது. இரண்டு இலட்சம் கிரித்தவர்கள், ஷியா முஸ்லிம்கள், யேசீதிகள் தனிப்படுத்தப்பட்டு போனார்கள். ஆயிரக்கணக்கான கிறித்தவப் பெண்கள் ISISஆல் அடிமையாக்கப்பட்டார்கள். மதப் பெயரால் இக்கொடுமை இப்பொழுது நடைபெறுகிறது.

    இஸ்லாமிய நண்பர்களே! இதை அமெரிக்க நாடகம் என்று வழக்கம் போலத் தள்ளி விடாதீர்கள். இக் கொடுமையை TVயில் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். அருள்கூர்ந்து, இக்கொடுமையைக் கண்டனம் செய்யுங்கள்.

    புலம் பெயர்க்கப்பட்ட கொடுமையைப் புகைப்படத்தில் காணுங்கள். உங்கள் தாய்மார்களுக்கு, உடன்பிறப்புகளுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் சும்மா இருப்பீர்களா?
    https://www.nytimes.com/2014/08/08/world/middleeast/isis-forces-in-iraq.html?hp&action=click&pgtype=Homepage&version=HpSum&module=b-lede-package-region&region=lede-package&WT.nav=lede-package&_r=0
    https://www.cnn.com/2014/08/04/world/meast/iraq-crisis/index.html
    https://www.cnn.com/2014/08/06/opinion/ghitis-yazidi-islamic-state-genocide-iraq/index.html?hpt=hp_t1
    https://www.nbcnews.com/storyline/iraq-turmoil/u-s-begins-humanitarian-mission-refugees-iraq-officials-n175201
    https://www.nbcnews.com/storyline/iraq-turmoil/isis-militants-video-warns-iraqi-soldiers-they-face-execution-n167536

  71. @ சுவனப்பிரியன்,

    //முதலில் ‘காஃபிர்’ என்ற அரபு பதத்திற்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம். ‘குஃப்ர்’ என்ற மூலச் சொலிலிருந்து பிறந்ததே ‘காஃபிர்’ என்ற வார்த்தை. அதற்கு நேரிடையான தமிழ் மொழி பெயர்ப்பு ‘இறை மறுப்பாளர்’ கண்ணில் கண்டதை எல்லாம் கடவுள் என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை ‘காஃபிர்கள்’ என்று அழைக்கிறோம்.//

    கண்ணில் கண்டது எல்லாம் கடவுள் என்று ஹிந்துக்கள் சொல்கிறார்கள். இது அவர்களது நம்பிக்கை. அவர்களை பொருத்தவரை அவை கடவுள்தான். இதற்காக அவர்களை இறைமறுப்பாளர்கள் என்று அழைக்க முஸ்லிம்களுக்கு யார் அனுமதி வழங்கியது. முஹம்மது அப்படி கூறினார்; அவரது கற்பனை பாத்திரம் அல்லாஹ் அப்படி குர்ஆனில் கூறுகிறான், அதனால் நாங்கள் அப்படி கூறுகிறோம் என்பது எங்களுக்கு ஏற்புடைய பதில் இல்லை. எங்களை இறைமறுப்பாளர்கள் என்று சொல்ல முகம்மதுவுக்கும் அதிகாரம் இல்லை, முஸ்லிம்கள் இறைவன் என்று கூறும் அந்த அல்லாஹ்வுக்கும் உரிமையோ அதிகாரமோ இல்லை.

    எங்களை பொருத்தவரை முஸ்லிம்கள்தான் உண்மையான இறைமறுப்பாளர்கள்.

    // இது ஏதோ ஒரு அவமானச் சொல் என்ற ரீதியில் உங்கள் கேள்வியை வைத்துள்ளீர்கள்.//

    ஆமாம். மற்ற மதத்தினரை அவமதிக்கவே முஸ்லிம்கள் காபிர் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் அவர்கள்தான் காபிர்கள்.

  72. @சுவனப்பிரியன்,

    //ஆதி கால தமிழர்களின் மார்க்கமும் இஸ்லாமிய மார்க்கமும் ஏறத்தாழ ஒன்றே.//

    நல்ல நகைச்சுவை. இப்படியே நகைச்சுவையை தொடர்ந்து வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்! எங்களுக்கும் பொழுதுபோக்கு தேவைப்படுது இல்லையா!

  73. மீண்டும் மீண்டும் தலைப்பை தாண்டித்தான் கருத்து பதிகிறீர்கள்.நானும் என்னால் இயன்ற அளவிற்கு விளக்கியாகிவிட்டது.விளங்கிய மாதிரியும் தெரியவில்லை.என் கருத்துகளுக்கு பதிலும் இல்லை.கிருஷ்ணகுமார் அவர்கள் புது உண்மையை கண்டுபிடித்து இருக்கிறார்.அரிசொணன் அவர்கள் எங்கள் இறைகோட்பாட்டை மறுப்பேதும் இல்லாது ஏற்று கொண்டாராம்.அவர் எப்போது அப்படி சொன்னார்.காட்டமான ஒரு கருத்தை நடுநிலையோடு அவர் கண்டித்தார் என்றுதானே நான் சொன்னேன்.ஒருவரின் மத கோட்பாட்டிற்குள் இன்னொருவர் மூக்கு நுழைத்தல் மிகப்பெரிய ஆபத்து.தங்களுடைய மத மேன்மையை சொல்லிக்கொள்வது அவர்களுடைய உரிமை.நான் எந்த மத விஷயங்களையும் பற்றி பேசவே இல்லை.இஸ்லாத்தை பற்றி பேச வேண்டிய கட்டாயத்தையும் நீங்கள்தான் உருவாக்கினீர்கள்.ஆனால் உங்களுடைய கருத்துக்களை பாருங்கள் எவ்வளவு தூரம் எல்லை தாண்டி போயிருக்கிறீர்கள்?நாம் இந்த விவாதம் துவக்கி,நீங்கள் ஷியா அஹ்மதியா குரான் பயங்கரவாதம் என்றெல்லாம் திசைதிருப்பி அதற்கு நான் விளக்கமும் அளித்தப்பிறகுதான் சுவனப்பிரியன் உள்ளே நுழைந்தார்.அவர் உங்கள் பசிக்கு சரியான தீனி போடுபவராக இருக்கிறார்.நீங்களும் அதைத்தானே எதிர்பார்குறீர்கள்.என் போன்றவர்களை சொரணை இல்லாதவன் என்றுதான் நினைப்பீர்கள் போல.என்ன ஆயுதத்தை போட்டாலும் அதை கூர்மழுக்கிவிட்டு எருமைமாடுபோல போகிறானே.என்று சுவனப்பிரியனை பிடித்து விட்டீர்கள்.இப்போது காபிர் என்றொரு வார்த்தையை பிடித்துக்கொண்டு தொங்குதொங்கென்று தொங்குகிறீர்கள்.என் பார்வையில் நீங்கள் காபிர்தான் உங்கள் பார்வையில் நான் காபிர்தான்.நான் இறைவன் என்று சொல்கிற ஒன்றை நீங்கள் இல்லையன்றால் எனக்கு நீங்கள் காபிர்தான்..உங்கள் கடவுளர்களை நான்மறுத்தால் உங்களுக்கு நான் காபிர்தான்.இருவரும் ஒரேமாதிரி ஏற்றுக்கொண்டால் நாம் ஏன்
    இந்து என்றும் முஸ்லிம் என்றும் பிரிந்தோம்?

  74. அரிசொனன் அவர்களே ஈராக் வன்முறையை கண்டிக்குமாறு அறிவுறுத்துகிறீர்கள்.அதை கண்டிக்கவில்லை என்றும் அது சரிதான் என்றும் நாங்கள் கருதுவதாக எப்படி கருதினீர்கள்.அந்த காட்டுமிராண்டித்தனம் நிச்சயம் கண்டிக்கப்படவேண்டியதே.ஆனால் அதை அமெரிக்க நாடகம் இல்லை என்று எப்படி மறுக்க முடியும்.உங்களுக்கு தெரியாததல்ல.இராக் என்ற வளமான பூமியை பண்டைய மெசபடோமியா என்று கூறுவார்கள்.சதாம்ஹுசைன் என்பவன் ஆண்டுகொண்டிருந்தான்.அவன் அப்படி ஒன்றும் இஸ்லாமிய நெறிமுறையில் ஆட்சி செய்தவனும் இல்லை.கம்யுனிச சார்புள்ளவன் என்றும் கூறுவார்கள்.உலகிலேயே முதன் முறையாக அமெரிக்க டாலரை விடுத்து யுரோ கரன்சியில் வர்த்தகம் செய்தவன் அவன்தான்.கேட்கவா வேண்டும் அமெரிக்காவிற்கு,அணுகுண்டு இருக்கு ஆட்டுக்குட்டி இருக்கு என்று சொல்லி அத்துமீறி நுழைந்து அந்த நாட்டையே சல்லடையாக்கி கடைசியில் அணுகுண்டும் இல்லை ஆட்டுக்குட்டியும் இல்லை.சதாம்ஹுசனைத்தான் பதுங்கு குழியிலிருந்து தூக்கினார்கள்.அவனை தூக்கிலும் போட்டார்கள்.பிறகு அவர்களே ஒரு பொம்மையை நியமித்தார்கள்.அந்த நாட்டை முழுக்க சுரண்டிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.இன்று பல பிரிவினராக அந்தமக்களே அடித்துகொள்கிறார்கள்.அடித்துக்கொள்கிறவன் தன் பலத்தை கூட்ட மதப்போர்வையை போர்த்திக்கொள்கிறான்.இதை கண்டிப்பாக கண்டிக்கிறோம்.அதே வேளை இது அத்தனைக்கும் அமெரிக்க வல்லாதிக்க அரசியல்தான் இதில் மதம் என்பது ஒரு துருப்புசீட்டுதான் என்பதை மறக்காதீர்கள்.

  75. கிருஷ்ணகுமார் அவர்களே உங்கள் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.நான் இந்த தளத்திற்கு வந்தது தற்செயலானதுதான்.ஹிந்து பத்திரிகையை வாசிப்பதற்க்காக போகும்பொழுது இந்த தளம் கண்ணில் பட்டது.உண்மையில் ஹிந்து மத தத்துவங்களையும் தெரிந்து கொள்ளலாமே என்றுதான் உள்ளே நுழைந்தேன்.ஆனால் பெரும்பாலும் கண்ணில் பட்டது.இஸ்லாமிய வெறுப்புதான்.அதிலும் வன்முறையே வரலாறாய் தொடர் உறைய வைத்துவிட்டது.இஸ்லாமிய பெயர் தாங்கிகளின் செயல்களையல்லாம் இஸ்லாத்தின் போதனையன்றும் குரானின் கட்ட்ளைஎன்றும் அறியாமல் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றுதான் கருத்தெழுத ஆரம்பித்தேன்.என் கருத்து பதிவான உடன் நீங்கள்தான் முதன்முதலாக என் பெயரை குறிப்பிட்டு அதிலும் ஜனாப் என்ற மரியாதையோடு மறு மொழியிட்டீர்கள்.அது என்னை கைபிடித்து வாயார அழைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.நான் உங்கள் பெயரை குறிப்பிட்டுத்தான் நிறைய பதிவுகளை இட்டிருக்கிறேன்.ஷியா சன்னி அஹமதியா போன்ற பிரிவுகளும் அதன் மோதல்களும் பற்றி நீங்கள்தான் கேட்டிருந்தீர்கள்.தலைப்பிற்கு தொடர்பில்லாத கேள்வியாக இது இருந்தாலும் பிறகு உங்கள் எண்ணத்தை புரிந்து அதையும் நான் விளக்கி இருந்தேன்.ஏனெனில் ஒரே மார்க்கம் ஒரே கடவுள் என்று சொல்லிக்கொண்டு பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாக மோதிக்கொள்கிறார்கள் என்ற சந்தேகம் யாருக்கும் வரும்.சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் மக்கள் மத்தியில் எந்த சண்டைகளும் இல்லையன்றும் இவை அரசியல் சூழ்சியாளர்கலால்தான் உண்டாகிறது என்றும் விளக்கியிருந்தேன்.இது ஒருபுறம் இருக்க.தமிழக அளவிலாவது இது போன்ற சூழ்சிகளிளிருந்து நாம் தெளிவடைந்து இருக்கவேண்டும் என்பதுதான் என் எண்ணம்”.இல்லை உங்கள் மதம் அதற்கெல்லாம் அனுமதிக்காது தமிழ்நாட்டிற்குள்ளும் வந்து அது தன் கோர முகத்தை காட்டிவிடும்”என்று நீங்கள் சந்தேகித்தால் இவ்வளவு கொடூரமான அந்த மதம் என்னதான் சொல்கிறது என்று அதன் உள் நுழைந்து பார்க்கவேண்டும்.அல்லது இந்த தமிழ் நாட்டு முஸ்லிம் மக்களை அவர்களின் வரலாறை இன்று அவர்கள் வாழும் நிலையை தயை கூர்ந்து அருகில் வந்து கவனிக்க வேண்டும்.பல காரணங்களால் தவறான புரிதலுக்கும் கற்பனையான எண்ணங்களுக்கும் நாங்களும் எங்கள் மார்க்கமும் உள்ளாகி இருக்கிறோம்.முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ள முயர்ச்சித்தீர்களானால் நிச்சயமாக சொல்கிறேன் சகோதரரே எங்களை பற்றிய உங்களின் பார்வையே வேறுமாதிரி ஆகிவிடும்.

  76. //கனபூசை கொளும் காளியோடனைவரும்…….
    விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
    கொள்ளிவாய்ப்பேய்களும் குறளைப்பேய்களும்…………..
    இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்…….
    எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அன்னரும்
    அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட……//

    சூப்பர். திருப்புகழை வைத்து தீவிரவாதச்செயlலைக்கூட பண்ணலாம் போலிருக்கிறதே! அல்லாஹோ அக்பர் என்று கூவிக்கொண்டுதான் குண்டு போடுகிறார்கள். அதைப்போல அருணகிரிநாதரும் இவருக்கு உதவுகிறார்.

    பாடல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாலதேவராயர் எழுதியது. தமிழ் பக்தி இலக்கியத்தில் ஆழ அறிவு தேவை இல்லை. மிக அடிப்படையான சாதாரண தமிழ் ஹிந்து பக்தனுக்கு தெரிந்த இந்த விஷயம் இத்தனை எழுதுகிற இவருக்கு தெரியாமல் கந்தர் சஷ்டி கவசத்தை திருப்புகழ் என்று கூறி அருணகிரிநாதரை வசவு கூறியதிலிருந்து இந்த பெயரில் எழுதுபவரின் இந்து மதம் குறித்த ’அறிவு’ வெளிப்பட்டிருக்கிறது. – ஆசிரியர் குழு.

    நீங்கள், மலர்மன்னன், சாரங்கன் – மூவரும் சாதிகள், சாதிஅமைப்பு இருக்கவேண்டும் என்கிறீர்கள். மலர்மன்னனிடம் ‘அப்படி இருந்தால் உயர் ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று கண்டிப்பாக வரும். வரலாறு அப்படி காட்டுகிறது. வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்றதற்கு விடாப்பிடியாக தன் வாணாளில்l சாதிகளுக்காக குரல்கொடுத்துவிட்டுத்தான் போனார். ஒரு தலித்தாக இருந்தால் செய்வாரா? உயர்ஜாதித்தனத்தை தக்க வைக்க‌ ஜாதிகள் வேண்டுமென்கிறார்கள்.

    இன்றைய தமிழகத்தில் அனைத்து சாதிகளும் ஒரு புறம்; தலித்துகள் இன்னொரு புறம் என்று ஆகி விட்டது. இதை நீயா நானா நிகழ்ச்சியில் பலர் சுட்டிக்காட்டினர்கள். சிலர், தலித்தின் நாயுடன் கூட தங்கள் நாயைப்பழக விட மாட்டார்கள். அந்த நாயோடு இவர்கள் நாய் கூட்டு சேர்ந்து குட்டிகள் போட்டுவிட்டால்? என்ற பயம்தான். அவ்வளவு தூரம் தலித்துகள் வெறுக்கப்படுகிறார்கள். தீண்டாமைக்குள்ளாக்கப்படுகிறார்கள். தலித்து இன்னொரு ஜாதிப்பெண்ணைக் காதலித்தால், அவளும் காதலித்தால், ஊரையையே எரிக்கிறார்கள். மற்ற ஜாதிப்பையனைக்காதலித்தால், இழுத்துப்போட்டு வெட்டிக்கொல்வதில்லை. மனோஜ் குமார், அரவிந்தனிடம் கோயில் சப்பரம் வரும்போது நாங்கள் அங்கு செல்லக்கூட தடை என்றார். மதுரை கிராமங்களில் செருப்பணிந்து செல்லக்கூடாது. இதுதான் இன்றைய தமிழகம்.

    மதமாறியோரில் மெஜாரிட்டி, தலித்துகள் எனலாம்.இச்சூழ்நிலையில் சாதிகள் இந்துமதம் சொல்லவில்லை என்றும் இருப்பதாகச்சொல்வது பொய்பிரச்சாரம் என்றும் ஒரு நூலே இத்தளத்தார் போட்டிருக்கிறார்கள். தலித்துகள் அருகில் சென்று அவர்களை எல்லாரும் சமம் எனறுதான் இறைவன் சொல்கிறான் எனபதுதான் இந்துத்வா பிரச்சாரம்.

    40 வருடங்கள் ஆர் எஸ் எஸ் சில் இருந்ததாகச் சொல்லும் கிருஸ்ணகுமார் எப்படி இப்பிரச்சாரத்துக்கு எதிராகப்பேசுகிறார்? தலித்துக்கு வடமொழி சொல்லிக்கொடுத்தால் போதாது. அவனை உம் வீட்டுக்குள் விட வேண்டும். ஆனால், நாங்கள் நெருஙக விடமாட்டோம் என சாரங்கன் சொல்கிறார். ஆச்சாரங்கள் பேணப்படும் அப்போதுதான் என்கிறார். மனு வேண்டுமென்கிறார். கிருஸ்ணகுமார், மனுவைப்படிக்காமலே மனு நல்ல கருத்துக்களை வைக்கிறது. விஷமிகள் இடைச்செருகல்கள் போட்டார்கள் என்கிறார். கிருஸ்ணகுமார், அச்செருகல்கள் இப்போது வரவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கின்றன எனபதை நோக்க மறுக்கிறார். வேதமோதுமிடத்தில் தலித்து வந்து கேட்டால் அவன் காதில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்று ஒரு எ.கா. தீண்டாமைக்கொடுமைக்கு மனுவின் இப்பேச்சுக்களும் காரணம். என்ன இருந்தென்ன என்ன இலாபம்? மனு என்றாலே தலித்துகள் அலற, நீங்கள் மனுவை ஆதரிக்கிறீர்களே? தலித்துக்களின் எதிரி நீங்கள். எனவே இந்துமத்துக்கும் துரோஹம் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவுதான் குட்டிக்கரணம் போட்டாலும் என் வேலை இத்துரோஹச்செயலை வெளிக்காட்டுவது. அதாவது இந்துமதத்தின் எதிரி உள்ளேயும் இருக்கிறான். வெளியே இருப்பவனை உள்ளேயிருப்பவன் மிகவும் ஆபத்தானவன்.

    Annilhilate Castes என்றார் அம்பேத்கர். தனிமையில் உங்கள் மனசாட்சியோடு உறவாடுங்கள். உங்களுக்கு பல உண்மைகளைக்காட்டும். திரும்பி வரும்போது திருந்திய மனிதனாக வர வாய்ப்புண்டு. Good luck to you.

  77. “வன்முறையே வரலாறாக” சிரியாவிலும், ஈராக்கிலும் நடந்து வருகிறது. குற்றமற்ற பழைய சமயத்தைச் சேர்ந்த, ஏக இறைவனை நம்பும், அதே சமயம் நல்வினை, தீவினை, சொர்க்கம், நரகத்தில் நம்பிக்கை இல்லாத யசீதிகளும், கிறித்தவர்களும், சுன்னி பிரிவைச் சேராத மற்ற இஸ்லாமியர்களும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

    இறைவனின் பெயராலும், இறை தூதரின் பெயராலும், இறைநூலின் பெயராலும் வன்முறையும், மற்றவர்களுக்கு இழைக்கும் அநீதியும் எப்பொழுதான் ஒழியும்?

    தினமும் நான் தொலைக்காட்சியில் பார்க்கும் இந்த அவலத்திற்கு என்றுதான் முடிவு ஏற்படும்? இலட்சக்கணக்கான மக்களைப் புலம் பெயரவைப்பது, ஆண்களைக்கொன்று, அவர்களின் மனைவியரை வன்புணர்ச்சிக்கு அடிமையாக்குவது — அதுவும் சமயத்தின் பெயரால் — மீண்டும் இஸ்லாமியக் காலிபேட்டை நிறுவவேண்டி — அடங்காக் கொடுமைகளைச் செய்வது என்று நிறுத்தப்படும்?

    அமைதியை விரும்பும் இஸ்லாமிய நண்பர்கள் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக என்று குரல் கொடுப்பார்கள்? பாரதத்தில் இக்காட்சிகள் தொலைக்காட்சியில் காட்டப்படுவதில்லை. அதனாலா? இல்லை, இக்கொடுமையைச் செய்பவர்கள் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்கமுடியாது என்ற நினைப்பினாலா? கொடுமை எங்கு நடந்தாலும் அதைக் கண்டனம் செய்யத்தானே வேண்டும்? கொடுமைக்கு ஆலனாவர்கள் மீளவேண்டும் என்று இறைவினை, அவனது திருக்கோவில்களில் — அது கோவிலானாலும், சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் வேண்டக்கூடாதா?

    //https://www.cnn.com/2014/08/08/world/meast/iraq-ethnic-groups-under-threat-isis/index.html?hpt=hp_t1//

  78. இஸ்லாம் ஒரு அமைதி மார்கம் என்று ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மயாகிவிடாது. இறைவன் ஒருவன் என்றால் இஸ்லாமியனை படைத்த அதே கடவுள் தான் ஒரு இந்துவையும் படைத்திருக்க வேண்டும், அப்படி படைத்தவனை நீங்கள் அல்லாஹ் என்று கும்பிட்டால் நாங்கள் அதே கடவுளுக்கு ஆயிரம் உருவம் கொடுத்து ஆயிரம் வழிகளில் வணங்குகின்றோம். இந்த ஒரு பகுத்தறிவு கூட இல்லாமல் நான்தான் கடவுளின் தூதன் என்று ஒருவர் எழுதிவைத்து போனதை மூர்க்க தனமாக எடுத்துக்கொண்டு லட்சோப லட்சம் உயிர்களை கொன்று இன்னும் வேட்கை அடங்காமல் வெறி பிடித்து திரிபவர்கள் தான் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள்(Radicals). Liberals அதாவது மதத்தை பற்றி பெரிதும் கண்டுகொள்ளாத சில நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களை இஸ்லாமியர் என்று கூறினால் அவர்கள் இந்த அடிப்படைவாதிகளுக்குள் அடங்கிப்போவார்கள், ஆகையால் நல்ல மனிதர்கள் என்றே கூறுவோம்.

    ஒரு காலத்தில் மதத்தை பற்றி எதுவும் கண்டுகொள்ளாத நான் இன்று எனது இந்து மதத்தை பெரிதும் மதிக்க காரணம் இரண்டு இஸ்லாமிய பெண்கள்.

    1) “Wafa Sultana” இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு சவால் விட்ட ஸிரிய’வை சேர்ந்த ஒரு சராசரி பெண், “THE GOD WHO HATES” என்ற புத்தகத்தின் மூலம் இஸ்லாத்தை தோலுரித்து காட்டியவர். இந்த புத்தகத்தை படிக்கும்போது நமது இந்து கலாச்சாரத்தில் தீண்டாமை போன்ற பிழைகள் இருந்தாலும், இஸ்லாத்தை விட பல மடங்கு நல்ல மதம் என்பது அனைவருக்கும் புலப்படும்.

    2) “Lajja” என்ற நூலை எழுதிய ‘Taslima Nasrin’.

    இந்த இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது, இருவர் மீதும் ‘fatwa’ அறிவித்து அவர்களை கொள்வதற்க்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது இந்த அமைதி மார்கம்.

  79. உயர்திரு பாலா சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    சாதி, சமய நல்லிணக்கத்திற்கு எனக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் எனது தாய்வழிப் பாட்டனாரும், பாட்டியாரும். அந்தக்காலத்தில் அது ஒரு புரட்சி என்றுகூடச் சொல்லலாம். அதைக் கட்டுரையாக வடித்து தமிழ் இந்துவில் வலையேற்றம் செய்ய வேண்டும் என்பது எனது அவா. அது நிறைவேறினால், நான் கதை மாதிரி எழுதும் அக்கட்டுரைகளைப் படித்துப் பார்த்துவிட்டு, உங்கள் கருத்தை எழுதுங்கள்.

    வணக்கம்.

  80. அன்பார்ந்த ஜெனாப் மீரான்சாஹிப்,

    கருத்துக்கள் வேறுபட்டால் அன்பில் குறைவு இருக்க வேண்டும் என்று எங்கும் உள்ளதா என்ன சொல்லுங்கள்?

    உத்தர பாரதத்தில் இரண்டரை தசாப்தம் புழங்கிய எனக்கு எண்ணிறந்த இஸ்லாமிய சஹோதரர்களுடன் பழக்கம் உண்டு.

    பழக்கம் பரஸ்பர புரிதலில். ஒத்த கருத்துக்களை ஏற்றலில். மாறுபட்ட கருத்துக்களை தயங்காது கண்யமாக பகிர்ந்து கொள்வதில்.

    இஸ்லாம் என்ற மதத்தை ஒழுகி அதன்மூலம் இறையனுபவம் என்ற ஒன்றை அடைய விழையும் அன்பர்கள் பால் எமக்கு பிணக்கேதும் இல்லை.

    அதே சமயம் ஹிந்துஸ்தானத்தில் தழைத்த ஹிந்துமதத்தின் பல கூறுகளான பற்பல சமயங்களில் காணக்கிட்டும் ஆழ்ந்த ஆன்மீகக் கருத்துக்கள் ஏதுமின்றி…….. மிரட்டலை மட்டிலும் அடிப்படையாகக் கொண்ட ஆப்ரஹாமிய இறைக்கோட்பாடு (யஹூதிய + இஸ்லாமிய + க்றைஸ்தவ ) என்பதில் ………சாரம் ஏதும் இல்லை என்பதிலும் எமக்கு சம்சயமும் ஏதும் இல்லை. இந்த தளத்தில் மட்டுமின்றி நான் கருத்துப் பகிரும் எந்த தளத்திலும் இந்த விஷயத்தை மறைத்ததில்லை.

    ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் பகிரும் இறைக்கோட்பாடில் எமக்கு மிகவும் கடுமையான கருத்து வேறுபாடு உண்டு. அடிப்படைவாத இஸ்லாம் பற்றி சமரசம் ஏதும் இல்லாமல் நேர்மையாகக் கருத்துப் பகிர்கிறார் என்ற மதிப்பும் உண்டு. உதாஹரணத்துக்கு தர்காஹ் ஷெரீஃபுகள் குண்டு வைத்து தகர்க்கப்படத் தக்கவை என்று அவர் பகிர்ந்த கருத்து. இஸ்லாம் சொல்லும் ஏக இறைவனை ஏற்காதவர்கள் நரகம் போவார் என்ற கருத்து.

    இவை அன்பர் அவர்கள் பகிர்ந்த நேர்மையான கருத்துக்கள் என்றாலும் எமது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகும் கருத்துக்கள்.

    ஆனால் ஹைந்தவ இஸ்லாம் என்று நான் எமது மித்ரர்களின் வாயிலாக அறியும்……. ஹிந்துஸ்தானத்திய இஸ்லாத்தின்…… பன்முக இஸ்லாமிய சமயங்கள்……. வெறும் புஸ்தகத்தில் உறைவது அல்ல என்றும் அறிவேன். ஹிந்துஸ்தானத்தில் வன்முறை மூலமாக மட்டிலும் நுழைந்த இஸ்லாம் ஹிந்துஸ்தானத்து தொன்மையான கலாசாரத்துடன் உறவாடியதன் மூலம் குரான்-ஏ-கரீம் என்ற புஸ்தகத்தில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு மேற்பட்டும் இறைத்தேடல் உண்டு என்று புரிந்தும் கொண்டது; அதை தன் செயல்பாடுகளிலும் வெளிப்படுத்தியது. வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறது.

    எமது தேசத்தின் கலை, இலக்கியம், கலாசாரம், இசை போன்ற கூறுகளுக்கு எமது இஸ்லாமிய சஹோதரர்களும் க்றைஸ்தவ சஹோதரர்களும் அளித்த பங்கு……. ஹிந்து மதத்தின் அங்கமாகிய சைவ வைஷ்ணவ சீக்கிய பௌத்த ஜைன மற்றும் எண்ணிறந்த நாட்டார் வழிபாட்டு முறைகள்………. இவற்றைப்பேணும் சஹோதரர்களது பங்கிற்குக் குறையில்லாதது என்று அறிவேன்.

    இதில் இஸ்லாமிய சஹோதரர்களின் பங்களிப்பு என்பது அடிப்படை வாத இஸ்லாம் சொல்லும் இறைக்கோட்பாடு மற்றும் கட்டுப்பட்டி சட்டதிட்டங்களை பன்மடங்கு மீறிச் சென்று பகிரப்பட்ட ஒப்புயர்வற்ற பங்களிப்பு என்பதனையும் அறிவேன்.

  81. அன்பின் ஜெனாப் மீரான் சாஹேப்,

    ஒரு சில விஷயங்களில் தெளிவு பகிர்தல் அவச்யமானது என்று நினைக்கிறேன்

    \\\ ஆனால் பெரும்பாலும் கண்ணில் பட்டது.இஸ்லாமிய வெறுப்புதான்.அதிலும் வன்முறையே வரலாறாய் தொடர் உறைய வைத்துவிட்டது.இஸ்லாமிய பெயர் தாங்கிகளின் செயல்களையல்லாம் \\\\

    இதே தளத்தில் நான் இரண்டு வ்யாசத் தொடர்கள் சமர்ப்பித்திருக்கிறேன்.

    காஷ்மீரத்தைச் சார்ந்த ஸ்ரீமான் ஆயாஸ் ரஸுல் நஸ்கி சாஹேப் அவர்கள் எமக்கும் உங்களுக்கும் அவருக்கும் பொதுவான முன்னோர்களுடைய …………. கல்விக்காதாரமாக இருந்த …………. இப்போது வடவெல்லைக்கோட்டிற்கு அப்பால் இருக்கும்……… சாரதா பீடம் என்ற ………… ஸ்தலத்திற்கு பற்பல சோதனைகளைத் தாண்டி தான் பெற்ற சொல்லில் வடிக்கவியலா அனுபவத்தைப் பகிர்ந்த விஷயம் மாற்று மதத்தைச் சார்ந்த அன்பர்களைப் பற்றி நான் பகிர்ந்த முதல் வ்யாசத் தொடர்.

    அடுத்தது………. மோதி சர்க்கார் …………. முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள் அபிலாஷைகள்……… என்ற மூன்று பாகங்களாலான வ்யாசத் தொடர்……….

    வன்முறையே வரலாறு என்பது எப்படி நிதர்சனமோ……….. அப்படியே நிதர்சனம் நான் பகிர்ந்த இந்த இரு வ்யாசத் தொடர்களும்…….இந்த இரு தொடர்களிலும் இஸ்லாமிய வெறுப்பு என்பது எங்காவது தென்படுகிறாதா என்று தாங்கள் வாசித்துக் கருத்துப் பகிர்ந்தீர்களானால்……….. சிறியேன் நிச்சயமாக என்னை மேம்படுத்திக்கொள்வேன்.

    நமது தளத்தின் முகப்பின் தோரணத்தில் எழுத்தாளர்கள் என்று தென்படும் சப் மெனுவில் க்ளிக் செய்தால் சிறியேனது வ்யாசத்தொடர்கள் தென்படும். அதில் இந்த இரண்டு வ்யாசங்களை வாசித்து நான் இதில் இஸ்லாமிய வெறுப்பை எந்த வாசகங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்று பகிரவும்.

    \\\\ ஷியா சன்னி அஹமதியா போன்ற பிரிவுகளும் அதன் மோதல்களும் பற்றி நீங்கள்தான் கேட்டிருந்தீர்கள்.தலைப்பிற்கு தொடர்பில்லாத கேள்வியாக இது இருந்தாலும் \\\\

    சட்ட ரீதியாக ஹிந்துஸ்தானத்தில் இஸ்லாமியர்களாக இருக்கும் எமது அஹ்மதியா இஸ்லாமிய சஹோதரர்களை ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் இஸ்லாமியரே இல்லை என்று சொல்வது வன்முறைக்கு அழைப்பு விடுப்பதன்றி வேறெப்படியாம்?

    எப்படித் தலைப்பிற்கு தொடர்பில்லாத கேழ்வியாக இந்த விஷயம் இருக்கவியலும்

    தமிழகத்தில் வேண்டுமானால் ஷியா சுன்னி பிரிவு வித்யாசங்கள் இல்லாமல் இருக்கலாம்.

    அவை கனஜோராக இருக்கும் லக்னௌ கான்பூர் ப்ரதேசப் பகுதிகளில் மொஹர்ரம் சமயத்தில் நாங்கள் செல்லும் போதெல்லாம் ஷியா சுன்னி பிரிவினரிடையே எப்போதும் கலஹம் நிகழலாம் என்ற சூழல் அங்கு புழங்கிய எங்களுக்கு உளத்தில் உறைந்து போன சமாசாரம்.

    அவ்வளவு ஏன் நடந்து முடிந்த ஈத்-உல்-ஃபித்ர் அன்று யார் முதலில் மஸ்ஜிதில் நமாஸ் வாசிப்பது என்பதில் குரைஷி மற்றும் ஷேக் சமுதாயத்தினரிடையே உத்தரப்ரதேசத்தில் கலஹம் நிகழ்ந்தது.

    கண்ணெதிரில் நிகழும் வன்முறையை எப்படி மறுதலிக்க முடியும்?

    ஹிந்துஸ்தானத்தின் தொன்மையான கலாசாரக்கூறு பன்மை பேணுதல். சைவம் என்றால் அதில் சித்தாந்த வேறுபாடுகளுடன் பல வகை. வைஷ்ணவம் என்றால் சித்தாந்த வேறுபாடுகளுடன் பல வகை. அப்படியே ஜைனமும். அப்படியே பௌத்தமும். அப்படியே சீக்கியமும்………….

    என்றால் ஹிந்துஸ்தானத்தில் புழங்கும் இஸ்லாமும் க்றைஸ்தவமும் மட்டிலும் இதிலிருந்து எப்படித் தப்ப முடியும்.

    ஹிந்துஸ்தானத்தில் இவை ஒரே இஸ்லாம் அறவே இல்லை. ஒரே க்றைஸ்தவம் அறவே இல்லை. உலகத்திலும் அப்படி அறவே இல்லை. அதையே இந்த சமய உட்பிரிவினரிடையே நிகழும் கோலைவெறியுடன் கூடிய வன்முறைகள் உலகிற்கு காட்டுகின்றன. உலக அளவில் முஸ்லீம்கள் பெருமளவில் கொல்லப்படுவது முஸ்லீம் சஹோதரர்களாலேயே என்பதை இஸ்லாமியர் முதலில் உணரட்டும்.

    மனிதன் ஒன்றும் தனித்தீவில் வாழ்வதில்லை. ஒருவருடனொருவர் புழங்குகையில் நிச்சயம் கொள்வதும் கொடுப்பதும் நிகழ்ந்தே தீரும். ஒரே இஸ்லாம் ஒரே க்றைஸ்த்வம் ஒரே யஹூதியம் என்பதெல்லாம் நிதர்சனத்தில் அறவே இல்லாத கற்பனைகள் மட்டிலுமே.

    சித்தாந்த வேறுபாடுகள் இருப்பதால் ஒரு பிரிவினைச் சார்ந்த சைவர்கள் மற்றொரு பிரிவைச் சார்ந்த சைவர்களை இவர்கள் சைவர்களே இல்லை எனும் அவலமோ அப்படியே ஒரு பிரிவைச் சார்ந்த வைஷ்ணவர்கள் மற்றொரு பிரிவைச் சார்ந்த வைஷ்ணவர்களை இவர்கள் வைஷ்ணவர்களே இல்லை எனும் அவலமோ………. அப்படியே பௌத்தம்,ஜைனம், சீக்கியம் போன்ற சமயங்களிலும் இல்லை.

    ஆனால் சித்தாந்த வேறுபாடுகளை முன்னிறுத்தி மாறுபடும் சமயப்பிரிவுகளை இஸ்லாமே இல்லை என்று ஃபத்வா விதிப்பதும் அவற்றை வன்முறை மூலம் அழித்தொழிக்கும் அவலமும் இஸ்லாத்தில் உலகமெங்கும் நிகழ்ந்து வருகிறது. அது ஹிந்துஸ்தானத்தில் நிகழக்கூடாது என்று கருத்துத் தெரிவிப்பது எப்படி மத நல்லிணக்கத்துக்கு விரோதமாகும்.

    வஹாபிய / ஸலாஃபி சுன்னி இஸ்லாத்தை முன்னிறுத்தும் ஜெனாப்-ஏ-அலி சுவனப்ரியன் அவர்களது கருத்து விசித்ரமானது……. அஹ்மதியாக்கள் வெகுகாலம் வரை சிந்த் பலோசிஸ்தான் மேற்கு பஞ்சாப் பக்டூன்கவா ப்ரதேசங்களில் இஸ்லாமியராகவே புழங்கி வந்திருக்கின்றனர்.

    மர்த்-ஏ-மோமீன் என்று அழைக்கப்படும் காலம் சென்ற ஜெனாப் ஜியா உல் ஹக் மேற்கண்ட நிலப்பரப்பின் வஸீர்-ஏ-ஆஸம் ஆன பின்னர் ……….. அஹ்மதியாக்கள் முஸல்மாணியர் இல்லை……… அவர்கள் வழிபடும் வழிபாட்டு ஸ்தலங்கள் மஸ்ஜித் ஆகாது……… என்று சட்டமே இயற்றிய பின்னர்…………. தொடர்ந்து அழிவின் பாதையில் மட்டும் செல்லும் அந்த மதவெறி நிலப்பரப்பில் மட்டிலுமே உலகில் அஹ்மதியாக்கள் இஸ்லாமியர் இல்லை என்றானது.

    இதை ஜெனாப்-ஏ-அலி சுவனப்ரியன் விதந்தோதுகிறார்.அப்படி ஒரு கருத்தை ஹிந்துஸ்தானத்தில் பரப்புரை செய்வது சட்ட விரோதமானது. நிர்தாக்ஷண்யமாக மிகக் கடுமையுடன் எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் எமக்கு எந்த சம்சயமும் இல்லை.

    சட்ட விரோதமான மற்றும் வன்முறைக்கு வித்திடும் கருத்தை அவர் பகிர்வது எப்படி சரியாகும் ……… அதை நான் நிர்தாக்ஷண்யமாக எதிர்ப்பது எப்படி தவறாகும்?

    மதநல்லிணக்கத்தில் எமக்கு நிச்சயம் ஆர்ஜவம் உண்டு. ஆனால் அது சமரசமில்லாது மற்றும் மானுடம் சார்ந்த எமது கொள்கைகளை புறந்தள்ளாது என்பதில் எமக்கு எந்த சம்சயமும் இல்லை.

    \\\\ என் பார்வையில் நீங்கள் காபிர்தான் உங்கள் பார்வையில் நான் காபிர்தான்.நான் இறைவன் என்று சொல்கிற ஒன்றை நீங்கள் இல்லையன்றால் எனக்கு நீங்கள் காபிர்தான்..உங்கள் கடவுளர்களை நான்மறுத்தால் உங்களுக்கு நான் காபிர்தான். \\\\

    ஜெனாப்-ஏ-அலி,

    பிழையான கருத்து. உங்களது பார்வையில் வேண்டுமானால் நாங்கள் காஃபிராக இருக்கலாம்.

    தாங்கள் எங்களது பார்வையில் காஃபிர் இல்லை. அறவே இல்லை.

    எங்களது மதப்படி யார் எந்த தெய்வத்தை தொழுகிறார் என்பதைப் பொறுத்து சொர்க்க நரகங்களோ அல்லது மோக்ஷமோ நிர்ணயமாவதில்லை. எங்களது மதப்பார்வையின் படி உங்களை நாங்கள் காஃபிராகக் கருதுவதில்லை. எங்களது மதப்பார்வையின் படி மாற்று மதத்தவரை காஃபிராகக் கருதுகிறோம் என்பது சித்தாந்த ரீதியாக தவறு.

  82. //மிக அடிப்படையான சாதாரண தமிழ் ஹிந்து பக்தனுக்கு தெரிந்த இந்த விஷயம்//

    Dear Admn! This is a wild guess on your part. Because, such a name as Bala Devarayar, among Tamil poets, is totally obscure and unknown.

    12ம் நூற்றாண்டில் பாலதேவராயர் என்ற ஒரு கவிஞர் இருந்தார் என்று தெரிய சாதாரண அறிவு பத்தாது. ஏனென்றால். அப்பெயரே பள்ளி, கல்லூரி மாணாவர்களுக்கும் (அவரின் கவிதைகள் பள்ளிநூல்களில் கிடையா எப்போதுமே) பொதுமக்களுக்கும் சாதாரண இந்துபக்தனுக்கும் தெரியாது. பண்டிதர்களுக்கு மட்டுமே தெரியும்.

    நீங்கள் எதிர்பார்க்கும் அறிவு என்னிடம் மட்டுமல்ல, ஏராளம் இந்துக்களிடம் இல்லை ஆசிரியர் குழுவே. அளவுக்கு மீறி எதிர்பார்க்கிறீர்கள். நடாதூர் அம்மாளைத் தெரியாத சாதாரண ஹிந்து பக்தனே கிடையாது என்பீர்களோ? வைணவர்களிடம் கேட்டுப்பாருங்கள். தெரிந்தவர்கள் பண்டிதர்கள் மட்டுமே. மற்றெல்லாரும் அப்படிப்பட்ட பெண்ணைப்பற்றித் தெரியாதென்பர். அவர் பெண்ணில்லை. ஆண்.

    இந்த அறியாமையைப் போக்க பாலதேவராயரைப்பற்றி மட்டுமன்றி, இப்படி தெரியா பலர் இருப்பர் அவர்களைப்பற்றியும் ஒரு கட்டுரை சீரீஸ் தொடங்கலாமே ? எல்லாரும் அறிய வாய்ப்பாகுமே? செய்வீர்களா என்று கேட்க மாட்டேன். செய்வது இத்தளத்தின் கடமை.

    BTW: The harsh lines from the poet named Baladevarayar do not credit him well. Under whatsoever circumstances, a true devotee of God won’t use such words. People look up to religious saints and seers for good and kind words. It is quite disappointing. Hopefully, you will put up more of his good words in an essay. Won’t you? In other words, you will retrieve his name spoilt by Krishnakumar, for readers here.

    வழக்கம் போல பொய்யை மறைக்க மேலும் பொய்களையும் சால்ஜாப்புகளையும் ’பால சுந்தரம் கிருஷ்ணா’ எனும் பெயரில் எழுதுகிறவர் அவிழ்த்துவிடுகிறார். கந்தர் சஷ்டி கவசம் ஏறத்தாழ அனைத்து இந்துக்களுக்கும் -படித்தவரோ பாமரரோ- தெரியும். அதிலேயே ‘பாலதேவராயன் பகர்ந்ததை’ என வரும். ஆனால் தன் அறியாமையை மறைக்க ஏதேதோ உளறவும் ‘பாலசுந்தரம் கிருஷ்ணா’ எனும் பெயரில் எழுதுகிறவருக்கு இந்த தளம் சுதந்திரம் அளிக்கிறது.-ஆசிரியர் குழு

  83. //// அவன் ஆணுமில்லை பெண்ணுமில்லை.////
    If He is neither male nor female, is He an eunuch?

    ஒருவரின் மத கோட்பாட்டிற்குள் இன்னொருவர் மூக்கு நுழைத்தல் மிகப்பெரிய ஆபத்து.//////
    If so, please read the Quran’s verses “7 : 195” in which your Allah asks whether these Gods (worshiped by non-Muslims ) have got legs, hands,eyes and ears? Why should your Allah poke his nose into other religion’s matter? MY NEXT QUESTION: We, (for an argument) agree that our Gods have no legs, hands etc. But has your Allah got them? If not, why should He raise these silly questions ?

    Will Mr Meeran respond to my questions?

  84. தமிழுக்காக பொய்க்கூச்சல் மட்டிலும் போட்டு ஆனால் தமது பெயரை முந்தைய அவதார வழக்கம் போல்………..

    BALA SUNDARAM KRISHNA

    என்று பகிரும் அன்பருக்கு………..

    \\\\ நீங்கள், மலர்மன்னன், சாரங்கன் – மூவரும் சாதிகள், சாதிஅமைப்பு இருக்கவேண்டும் என்கிறீர்கள். \\\\

    முதலில் இறைவனடி ஏகிய …………. நானும் இந்த தளத்து எமது வாசகர்கள் பலரும் மதிக்கும் அமரர் ஸ்ரீ மலர் மன்னன் மஹாசயர் அவர்களைப் பற்றிய துஷ்ப்ரசாரத்தை …………… தரங்கெட்ட இந்த செயல்பாட்டை நீங்கள் விட்டொழிப்பது நன்று. அவரைப் பற்றி நீங்கள் சொல்லும் கருத்துக்களுக்கு பதில் சொல்ல அவர் நம்மிடையே இல்லை. அவர் எழுத்துக்கள் அவரது கருத்துக்கள் பற்றி ஏதாவது குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அவர் எழுதிய விஷயங்களை மிகக் குறிப்பாக அவரது புத்தகத் தலைப்பு, பக்க எண், வாசகங்கள் அல்லது குறிப்பிட்ட உரல் ……… வாசகங்கள் சார்ந்து பகிர முனையவும்.

    க்ருஷ்ணகுமார் எங்கும்ஜாதி அமைப்பு இருக்க வேண்டும் என்று சொன்னதில்லை. க்ருஷ்ணகுமார் ஆகிய நான் தமிழ் ஹிந்து, தமிழ் பேப்பர், திண்ணை என்ற மூன்று தளங்களிலும் விஜயவாணியிலும் ஒத்திசைவு தளத்திலும் ஒரே பெயரில் இயங்குகிறேன். பேடித்தனமாக ஒரே தளத்தில் இரண்டு மூன்று பெயரிலோ அல்லது ஒரே சமயத்தில் ஒவ்வொரு தளத்தில் வெவ்வேறு பெயரிலும் புழங்க வேண்டிய சிறுமையோ கீழ்மையையோ எமது செயல்பாடாகக் கொண்டவன் இல்லை அடியேன்.

    நான் புஸ்தகமெல்லாம் எழுதியதில்லை.

    க்ருஷ்ணகுமார் ஆகிய நான் எங்கு ஜாதி அமைப்பு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன் என்று நீங்கள் மிகக் குறிப்பாக உரல் விபரம் கொடுத்து குறிப்பிட்ட வாசகத்தைப் பகிரவும். வாய் புளித்ததா மாங்காய் புளித்ததோ என்று பிறிதொரு தள வாசகர் சொல்லாக் கருத்தை சொல்லியதாக பேத்துவது வெட்டிப்பேச்சு. தரங்கெட்டப் பேச்சு. குதர்க்க வாதம்.

    \\\\ சாதிகள் இந்துமதம் சொல்லவில்லை என்றும் இருப்பதாகச்சொல்வது பொய்பிரச்சாரம் என்றும் ஒரு நூலே இத்தளத்தார் போட்டிருக்கிறார்கள். தலித்துகள் அருகில் சென்று அவர்களை எல்லாரும் சமம் எனறுதான் இறைவன் சொல்கிறான் எனபதுதான் இந்துத்வா பிரச்சாரம்.40 வருடங்கள் ஆர் எஸ் எஸ் சில் இருந்ததாகச் சொல்லும் கிருஸ்ணகுமார் எப்படி இப்பிரச்சாரத்துக்கு எதிராகப்பேசுகிறார்? \\\

    பொய்யான கருத்து. க்ருஷ்ணகுமார் எங்கு அப்படிப் பேசியிருக்கிறேன் என்று குறிப்பாகச் சொல்லவும்.

    ஜாதிகளை ஹிந்து மதம் சொல்லவில்லை என்பதற்கு எந்த புஸ்தகமும் தேவையேயில்லை. உபயுக்தமாக சாஸ்த்ராதிகளை வாசித்தறிந்த நான் எந்த சாஸ்த்ரங்களிலும்…………… ஐயர், ஐயங்கார், மள்ளர், வன்னியக்கவுண்டர், கொங்கு வேளாளக்கவுண்டர், தேவேந்த்ர வேளாளர், இசை வேளாளர் என்ற ஜாதி ஜாபிதாக்களையோ………. குர்மி ராஜ்புத், ஜாட், பனியா, காயஸ்த்………… இத்யாதி ஜாதி ஜாபிதாக்களையோ பார்த்ததில்லை. ஜாதிகள் மனிதர்களால் மனிதர்களுக்காக மட்டிலுமே ஏற்படுத்தப்பட்டவை. இஸ்லாம், க்றைஸ்தவம் போன்ற மதங்களிலும் இவை உண்டு என்றும் …………. அவற்றிலும் மேல் கீழ் என்றெல்லாமும் உண்டு என்றும்………… அங்கும் இவை மதநூல் சாராது சமூஹச் சட்ட திட்டங்களின் பாற்பட்டவை என்றும் அறிவேன்.

    கபீரையும், கமாலையும், ரஹீமையும் ரஸ்கானையும், சேனாநாயியையும், பன்னிரு ஆழ்வார்களையும் அறுபத்து மூவரையும் வணங்கும் நான்…………. இவர்கள் பெயரை நடிப்பதற்காகக் கூடச் சொல்பவர் திருவடிகளையும் தொழுவதை கொள்கையாகக் கொண்ட நான்………. ஜாதிய ப்ரசாரம் செய்கிறேன் என்று சொல்வது பேத்தல்.

    ஆனால் தாங்கள் இந்த தளத்து பெரும்பான்மை வாசகர்களின் பெருமதிப்பிற்குரிய ஸ்ரீமான் சாரங்கன் அவர்களை மாற்று மதத்திற்கு மதம் மாற பரிந்துரை செய்த ஏஜெண்டாக…….. ஜெனாப் சுவனப்ரியனுடைய மத ஏஜெண்டாக……..பொது தளத்தில் பரிந்துரை செய்த கீழ்மை நிச்சயமாக உங்களது ஹிந்து முகமூடிப் பெயரின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் நபர் யார் என்ற கேழ்வியை நிச்சயம் எழுப்பும்.

    இந்த தளம் இஸ்லாமிய / க்றைஸ்தவ மதமாற்ற ப்ரசாரத்திற்கான தளம் இல்லை என்பதிலும் எமக்கு எந்த சம்சயமும் இல்லை.

    அதே சமயம் மாற்றுக்கருத்துக்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் உறுதியான ஆர்ஜவம் உள்ள ஆசிரியர் குழுவினர் இது போன்ற கருத்துக்களை மட்டுறுத்தல் இல்லாது தளத்தில் பகிர அனுமதித்தன் மூலம்………. சமூஹத்தில் செய்யத்தகா கீழ்த்தரமான செயல்களை தரங்கெட்ட செயற்பாடுகள் மூலம் செய்யும் சமூஹ விரோதிகளைப் படம் பிடித்துக்காட்டவும் வகை செய்கிறது என்று புரிகிறது.

    அதிலும் கூட தராதரமும் தெரிகிறது.

    சஹோதரி ரெபேக்கா மேரி அவர்கள் எனது அன்பிற்குரிய சைவ சமயத்தில் ஒழுகும் அன்பரை மதம் மாற அழைப்பு விடுத்தமை ……. மாற்று மதத்திற்கு விலை பேச முயன்ற கீழ்மை………..எம்மால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் …….சஹோதரி அவர்கள் மாற்று மதத்தவரை பித்தலாட்டமாக மொழி வலை வீசி மதமாற்றம் செய்ய விழைந்தமை………. பின்னிட்டும் தன்னுடைய க்றைஸ்தவ அடையாளத்தை சஹோதரி அவர்கள் மறைக்காது செய்ய விழைந்த படிக்கு அதில் உள்ள மறுக்க முடியாத நேர்மையையும் கூடவே கவனிக்கிறேன்.

    ஆனால் இந்த தளத்தில் பெரும்பான்மையான தளத்து வாசகர்களின் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஸ்ரீமான் சாரங்கன் என்ற சஹோதரரை இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்ற விழைந்து…………. ஹிந்துப் பெயரில் ஒளிந்து கொண்டு……. ஒரு அன்பர் செய்ய விழைந்த செயற்பாடு……………. பேடித்தனமான……….தரங்கெட்ட …….ஒழுக்கங்கெட்ட……. கீழ்த்தரமான……. அதி நிந்தனீயமான செயற்பாடு இந்த தளத்தில் இது வரை யாரும் செய்யத்துணியாத செயற்பாடு.

    கருத்துச் சுதந்திரம் கருதி ஆசிரியர் குழுவினர் இந்த கருத்தை மட்டுறுத்தல் இல்லாது பதிந்திருந்தாலும்……. தனிப்பட்ட ஹிந்துவாக இந்த இரண்டு நிகழ்வுகளையும் இந்த தளத்தில் பகிரப்பட்ட மிகவும் கீழ்த்தரமான கருத்துக்களாக நான் கருதுவதை பதிவு செய்ய விழைகிறேன்.

    \\\\ மனு வேண்டுமென்கிறார். கிருஸ்ணகுமார், மனுவைப்படிக்காமலே மனு நல்ல கருத்துக்களை வைக்கிறது. \\\\

    மனு தர்ம சாஸ்த்ரம் த்வாபர யுகத்துடன் சமாப்தியான சாஸ்த்ரம் என்றே க்ருஷ்ணகுமார் ஆகிய நான் கருத்துப்பதிந்திருக்கிறேன். கலி ஆரம்பித்து த்வாபர யுகம் நிறைவு பெற்று கிட்டத்த்ட்ட 5000 வருஷங்கள் ஆகி விட்டது. ஆசரணத்தில் இல்லாத சாஸ்த்ரம்.

    மனு தர்ம சாஸ்த்ரத்தின் ஆங்க்ல மொழியாக்கத்தில் அதில் உள்ள சில ஏற்கத்தகுந்த கருத்துக்களையும் வாசித்திருக்கிறேன் என்றே பகிர்ந்துள்ளேன். தவிரவும் மூல சம்ஸ்க்ருத நூலை வாசிக்காமல் மொழியாக்கத்தை மட்டிலும் ஆதாரமாக வைக்க முயன்ற என் செய்கை தவறானது என்று க்ஷமா யாசனமும் பதிவு செய்திருக்கிறேன். ஆகவே படிக்காமலே என்ற படிக்கு………. மூல நூலைப் படிக்காமலே என்று………….. குறிப்பாக……. இடித்துறைக்க விழைவதில் எமக்கு எந்த ஆக்ஷேபமும் இல்லை.

  85. \\\ மனு என்றாலே தலித்துகள் அலற, நீங்கள் மனுவை ஆதரிக்கிறீர்களே? \\\\\

    அறிவு பூர்வமாக கருத்து எதையாவது முகமூடி அன்பரால் பகிர முடியும்?

    ஆசரணத்தில்………… புழக்கத்தில் இல்லாத சாஸ்த்ரத்தை ஆதரிப்பது என்ற கேழ்விக்கே இடம் இல்லை. இது பொய் ப்ரசாரமே.

    மனு தர்ம சாஸ்த்ரம் என்பது ஜாதிகளைப் பற்றி மட்டிலும் பேசும் ஒரு சாஸ்த்ரம் என்பது மட்டற்ற மதி ஹீனமே.

    மனு தர்ம சாஸ்த்ரத்தில் இன்றைய பொது சிவில் சட்டங்களில் காணப்படும் அனைவருக்கும் பொதுவான சட்டதிட்டங்களும் கூட இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

    Manu Dharma Shasthra was one of the ( not the only or the earliest) earliest codified laws of Hindusthan whereever ( It was not universal law throughout Hindusthan……… there were as many smruthis prevalent in various places) it was applied.

    Every single edict of the Shasthra did not always talked about castes.

    MUTATIS MUTANDIS Many of the edicts of Manu as given below have relevance even today in the modern law

    A few drops from the ocean in the form of buhler’s translation is given below :-

    But yes, I do not completely go by translations unless and until I go by verbatim text in Sanskrit to check up wheter something is lost in translation. To that extent, I completely accept the required rebuke.

    17.13.4 Against man or animals
    If a blow is struck against men or animals in order to (give them) pain, (the judge) shall inflict a fine in proportion to the amount of pain (caused). [v.8.286.]
    If a limb is injured, a wound (is caused), or blood (flows, the assailant) shall be made to pay (to the sufferer) the expenses of the cure, or the whole (both the usual amercement and the expenses of the cure as a) fine (to the king). [v.8.287.]

    17.13.5 Damage to goods
    He who damages the goods of another, be it intentionally or unintentionally, shall give satisfaction to the (owner) and pay to the king a fine equal to the (damage). [v.8.288.]
    In the case of (damage done to) leather, or to utensils of leather, of wood, or of clay, the fine (shall be) five times their value; likewise in the case of (damage to) flowers, roots, and fruit. [v.8.289.]

    The quantum of punishment / pardon may vary in the current jurisprudence

    \\\\ தலித்துக்களின் எதிரி நீங்கள். எனவே இந்துமத்துக்கும் துரோஹம் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். \\\\

    மேற்கண்ட பல விஷயங்கள் ஹிந்துஸ்தானத்தின் Indian Contract Act, Penal Code போன்றவற்றில் கூடக் காணப்படுகிறது.

    ஆகவே மனு தர்ம சாஸ்த்ரத்தில் காணப்படும் விஷயங்களை தன்னகத்தில் அடக்கிய ஹிந்துஸ்தானத்தில் பொது சிவில் சட்டங்கள் தலித் சஹோதரர்களுக்கு எதிரி என்பது எப்படி பேத்தலோ அப்படிப் பேத்தல் நீங்கள் போடும் வெற்றுக்கோஷங்கள்.

    அறிவு பூர்வமான வாதம் என்ற ஒன்றை முகமூடியில் ஒளிந்து கொண்டு கருத்துப்பதியும் அன்பரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

    ஷாகாக்களில் சங்க முகாம்களில் ஹிந்துக்கள் அனைவரும் எந்த ஜாதி வித்யாசமும் இல்லாமல் ஹிந்து என்ற அடிப்படையின் பாற்பட்டு மட்டிலும் ஒன்றாக உண்டு உறங்கி தேஹாப்யாசம் இத்யாதிகள் செய்து வருகிறோம். ஒரு வருஷம் இரு வருஷம் இல்லை. நாற்பது வருஷங்களாக. அடியேன் ஹிந்துஸ்தானத்தின் பல ப்ரதேசங்களில். ஸ்ரீமான் சாரங்கன் தமிழகத்தில். ஜாதிவித்யாசமின்மையை செயற்பாட்டில் உடைய அன்பர்களிடம் செயல்பாட்டில் மட்டற்ற ஜாதிக்காழ்ப்புகளை உடையவர்கள் ஜாதிவித்யாசமின்மையப் பற்றிப் பேச விழைவது வெற்றுக்கோஷமின்றி வேறென்னவாம்?

    வெறும் வசவே முன்வைக்கப்பட வேண்டுமென்றால் பதிலுக்கு முகமூடி அன்பரும் தலித் எதிரி என்று ஏட்டிக்குப்போட்டி வசவிடலாம். குதர்க்கமே செயல்பாட்டின் ஆதாரமெனில் எத்தை வேண்டுமானாலும் பேத்தலாமே.

  86. \\\\\ பாடல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாலதேவராயர் எழுதியது. தமிழ் பக்தி இலக்கியத்தில் ஆழ அறிவு தேவை இல்லை. மிக அடிப்படையான சாதாரண தமிழ் ஹிந்து பக்தனுக்கு தெரிந்த இந்த விஷயம் இத்தனை எழுதுகிற இவருக்கு தெரியாமல் கந்தர் சஷ்டி கவசத்தை திருப்புகழ் என்று கூறி அருணகிரிநாதரை வசவு கூறியதிலிருந்து இந்த பெயரில் எழுதுபவரின் இந்து மதம் குறித்த ’அறிவு’ வெளிப்பட்டிருக்கிறது. \\\\

    வெளிப்பட்டிருக்கிறது அன்பர் அவர்களின் இந்து மதம் குறித்த “அறிவு” மட்டுமல்ல அன்பர் அவர்களின் மட்டற்ற “மதம்” (செருக்கு, இறுமாப்பு) என்பதும்கூட……..

    கந்த சஷ்டி கவசத்திற்கும் திருப்புகழுக்கும் வித்யாசம் தெரியாத மதியிலி திருப்புகழைப்பற்றிப் பேச விழைவதும் எங்கள் வள்ளல் அருணகிரிநாதரை இழித்துப்பழிக்க முனைவதையும்………… எங்கோ எப்போதோ வாசித்த கருத்துக்களை கூகுள் சர்ச் செய்து காபி பேஸ்ட் செய்வதையே மேதா விலாஸம் என்று வலம் வருவதையும் என்னென்று சொல்வது………..

    அதுவும் ஆழ்வார் ஆசார்யாதிகளின் பெயரைச் சொல்லும் ஒருவரிடம்…….. வினம்ரதை என்பது அறவே இல்லாமலிருப்பதுவும்……. மட்டற்ற ஜாதிக்காழ்ப்பும் இனவெறியும் மொழிவெறியும் தேச விரோதக்கருத்துக்களும் பொங்கித் ததும்புவதை……….ஸ்ரீ வைஷ்ணவம் என்று பட்டம் பெற்ற ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பதையே பதிவு செய்கிறது……….இந்த லக்ஷணத்தில் இந்த வெறி சார்ந்த இழிவுக்கருத்துக்களை ஆழ்வார் ஆசார்யாதிகளின் கருத்துக்களாகப் பதிவு செய்ய முனையும் கீழ்மையை என்னென்று சொல்வது…………

    பூர்வ அவதாரத்தில்……….. சிரி வைணவம் என்று பகிர்ந்த அவலத்தையா……….. ஆழ்வாராதிகளின் பாசுரத்தில் ஸ்ரீ என்பது சிறீ என்ற வல்லினமுடைத்ததாகிய “றகாரம்” என்ற பாடத்தைப் இடித்துரைக்கப் பெற்றும்………. வேறு தளத்தில் வேறு பெயரில் அதே சிரி வைணவ அவலத்தைத் தொடர்ந்து முகமூடி கிழிக்கப்பட்ட அவலத்தையா…………பெருமாளுக்காகப் பாடிய ஆழ்வாராதிகளைத் தமிழர்களுக்காகப் பாடியவர் என்று பேத்தி…………சித்தாந்த ரீதியிலாக உருபு வேற்றுமைப் பாடங்களை போதனையாகப் பெற்று பொது தளத்தில் பரிபவமடைந்ததையா………….. சில்சாம் என்ற க்றைஸ்தவ அன்பரிடம் ரகசியமாகச் செய்த உடன்படிக்கை அம்பலமாகவும் கூடும் என்று அறியா வெள்ளந்தித் தனத்தையா………. எத்தைச் சொல்வது எத்தைச் சொல்லாமல் விடுவது……….

    தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன சேவயா………… என்ற படிக்கு………….

    தமது ஆசானிடம் இரண்டு தசாப்தங்கள் பணிவு மிக சம்ப்ரதாய சாஸ்தரங்களை வாசித்து………… தமிழும் சம்ஸ்க்ருதமும் கசடறக்கற்று………. உள்ள படிக்கு உபயவேதாந்தியாய்……….உலகோர் அனைவரின் அன்பிற்கும் பாத்ரமாகி ……………… கொக்கைப்போலிருப்பான் கோழியைப்போலிருப்பான் உப்பைப்போலிருப்பான் உம்மப்போலிருப்பான்……… என்ற வைஷ்ணவ லக்ஷணப்படி வாழ விழையும்…………. பூஜ்யரான வைணவச் சுடராழி என்று கொண்டாடப்படும்…………எமது வணக்கத்திற்குரிய ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமின் எங்கே…………

    வைஷ்ணவம் என்ற பட்டப்படிப்பை கற்றதனால் ஆய பயன்……… வைஷ்ணவர்களை ஆப்ரஹாமிய மதங்களுக்கு மதம் மாற்றும் எஜெண்டாகப் பணிசெய்தல்……. என்ற இழிவுச் செயல்பாட்டை முகமூடிப்பெயர் அணிந்து செய்யும் அன்பர் எங்கே………

    யாம் நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் ………….

    திருப்புகழ்………

    சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்றறிவோம் யாம்……….

    என்ற கருத்தையும் ஆணித்தரமாகப் பகிர்கிறது………

    என்ற கருத்து கோடி சூர்ய ப்ரகாசமாய் ஒளிர்வது உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெரிகிறது.

    இழிவுக்குணங்களை……… எங்கள் குலதெய்வம்…….. எங்கள் தமிழ்க்கடவுள்………. எங்கள் முருகப்பெருமான்……….. எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானுக்கு அடியெடுத்துக்கொடுத்த…… திருப்புகழ் நெருப்பென எரித்து சித்தத்தை சுத்தி செய்யும் என்று எமது ஆசான்கள் போதித்தது சத்யமாகுக.

    இந்த அவதாரத்திலாவது ………..ஆப்ரஹாமிய மதவெறி ஜாதிக்காழ்ப்பு இனவெறி மொழிவெறி போன்றவை அழிந்து………. ஆழ்வார் ஆசார்யாதிகளின் திருவடி சம்பந்தத்தை ஏட்டுச்சுரைக்காயாகப் பெற்ற அன்பர்……….யதோக்த வைஷ்ணவ லக்ஷணத்தைப் பெற வேண்டும் என்பதை………. வைஷ்ணவ லக்ஷணப்படி வாழ விழைவதில் உதாஹரணமாக இருக்கும்………. எமது சதா ஸ்மரணீய வைணவச்சுடராழி ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களது வ்யாக்யானாதிகளை மனதிலிறுத்தி …………. எங்கள் கருமாணிக்கப்பெருமாளை இறைஞ்சுகிறேன்………..எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் பாடித்துதிக்கும் எங்கள் வள்ளிக்குவாய்த்த பெருமானாகிய எங்கள் மால்மருகனை இறைஞ்சுகிறேன்.

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  87. மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களே,

    //எங்களது மதப்பார்வையின் படி மாற்று மதத்தவரை காஃபிராகக் கருதுகிறோம் என்பது சித்தாந்த ரீதியாக தவறு.//

    நமது சமயக் கருத்தை — அனைத்து சமயங்களும் ஒன்றாக வாழ்வதே நன்னெறி என்னும் கருத்தை — அழகாக,தெளிவாக, விவரித்து இருக்கிறீர்கள்.

  88. ஜனாப் மீரான் சாஹிப் அவர்களே,

    //அதை அமெரிக்க நாடகம் இல்லை என்று எப்படி மறுக்க முடியும்//

    இந்திரா காந்திக்கு ஒரு பிந்தரன்வாலா; அமெரிக்காவுக்கு ஒரு பின் லாடன். அமெரிக்க செய்த தவறுகளில் ஒன்று, புதை மண்ணான ஈராக்கிலும், வியட்நாமிலும் காலை நுழைத்தது. அது நாடகம் அல்ல. மாபெரும் தவறு. அதைச் செய்துவிட்டு, அமேரிக்கா பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை இழந்து தவித்துக்கொண்டு வருகிறது. அமெரிக்க மக்கள் வேண்டாம் என்று சொல்லித்தான், ஈராக்கிளிருந்து, அமெரிக்கப்படைகள் திரும்பப் பெறப்பட்டன.

    அமெரிக்க அரசு தவறு செய்தால், அமெரிக்க மக்கள் கண்டிக்கிறார்கள். அரசில் இருப்பவர்களைப் பதவி நீக்கம் செய்கிறார்கள். தேர்தல் நடக்கிறது.

    ஆகவே, தவறைச் சுட்டிக்கட்டுதலில் தவறில்லை. ஆனால், அமெரிக்காவைச் “சாத்தான்” என்று அழிப்பதில் நியாயமே இல்லை.

    இந்தியாவில், பல நூறு கோடி ரூபாய்களை மக்களிடம் இருந்து கொள்ளை அடித்த அரசியல்வாதிகள் இன்னும் உல்லாச வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் அப்படி இல்லை. மக்கள் பணத்தை ஏமாற்றிய அரசியல்வாதிகள், பணமுதலைகள், சமயத்தலைவர்கள் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களது செல்வம் பறிமுதலும் செய்யப்பட்டது. குற்றவாளி (criminal felon) தேர்தலில் நிற்க முடியாது. அப்படி ஒரு சட்டம் இந்தியாவில் இருந்தால், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தேர்தலில் நிற்கக்கூட முடியாது.

    அமெரிக்காவில் கால் நூற்றாண்டுகாலம் இருக்கும் தமிழ் அமெரிக்கனாக இதை நான் கூறுகிறேன்.

  89. ஹாநெஸ்ட் மேன் அவர்களுக்கு ஒரு இறைத்தூதர் அவருடைய சமுதாயத்திற்கு அழைப்பு விடுக்கிறார்.அதை அவர்கள் எதிர் கொள்கிறார்கள்.அவர்களுக்குள் நடக்கும் தர்கமே நீங்கள் சொன்ன வசனங்களில் விவரிக்கப்படுகிறது.7;187 வசனத்திலிருந்து பாருங்கள்.அந்த மக்கள் கேட்கிற கேள்வி அதற்கு நபி சொல்லவேண்டிய பதில்.பிறகு நம்பிக்கை தொடர்பான பல விஷயங்களை விவரிக்க சொல்லப்படுகிறார்.7;199 வசனத்தில்,” பெருந்தன்மையை மேற்கொள்வீராக நன்மையை ஏவுவீராக அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக” என்று முடிகிறது.இதில் அவர் யாரையும் கட்டாயபடுத்தவும் இல்லை.வந்துவிடு என்று மிரட்டவும் இல்லை கொல்லவும் இல்லை.நானே உங்களுக்கு நேரிடையாக அழைப்பு விடுக்கிறேன்.ஒன்று என்னை நீங்கள் அலட்சிய படுத்திவிட்டு போகலாம்.அல்லது என்னோடு தர்க்கம் செய்து வாதாடலாம்.இரண்டிற்குமே உங்களுக்கு உரிமை இருக்கின்றது.இது எப்போதென்றால் நாம் இருவருமே மனப்பூர்வமாய் ஒப்பி வாதாட துவங்கிய பிறகு.மற்றபடி அழைப்பு விடுத்தல் என்பது எல்லோருக்குமே உள்ள உரிமை.அது உங்களுக்கும் உண்டு.ஆனால் தரம் தாழ்ந்து ஆசை வார்த்தைகள் கூறி பணமோ இன்னபிற உதவிகளோ செய்து மிரட்டி.இதில் எந்த நன்மையையும் இல்லை.இஸ்லாம் இதை ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை.அத்தியாயம் 109 ல் உள்ள 6 வசனங்களும் இறை மறுப்பாளர்களையும் இணை வைப்பாளர்களையும் எப்படி அணுக வேண்டும் என்று தெளிவாக சொல்லிவிடுகிறது.

  90. திரு கிருஷ்ணகுமார் அவர்களே நீங்களும் திரு பாலசுந்தரம் கிருஷ்ணா அவர்களும் பகிர்ந்து கொள்வதை படிக்கிறேன்.ஆனால் நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.அந்த அதிகாரமும் எனக்கில்லை.அது எனக்கு தேவையும் இல்லை.உங்களுக்குள் பிரிவுகளும் இருக்கலாம்.மோதல்களும் இருக்கலாம்.வடகலை தென்கலை என்பது சினிமா வரைக்கும் வந்த நகைச்சுவை என்பதையும் நான் அறிவேன்”.தமிழ் நாட்டில் ஷியா சன்னி கலவரங்கள் இல்லை.ஆனால் வடநாட்டில் நடக்கின்றது.”என்று கூறியிருக்கிறீர்கள்.நடக்கவே இல்லையென்று கூறவே முடியாது.இவை கலவரமாய் ஆகி ஒருவரையொருவர் குத்திக்கொண்டு சாவதற்கு இஸ்லாம் பொறுப்பில்லை.நீங்கள் இஸ்லாத்தையே பயங்கரவாதம் என்றும் குரான் முழுக்க வன்முறையன்றும் கூறும்போழுதுதான் நான் காயமடைகிறேன்.இன்னொன்றையும் நான் குறிப்பிட வேண்டிஇருக்கின்றது.வடக்கத்தியர்கள் எல்லோருமே சற்று தடித்தவர்கள்தான்.குணத்தால் சொல்கிறேன்.இதற்கு மதம் காரணமல்ல.விநாயகர்ஊர்வலம் என்பது வடக்கத்திய இறக்குமுறைதான்.அது இங்கு வந்தபிறகுதான் போலீஸ் பதற்றம் வன்முறை என்பதெல்லாம் உண்டானது.இதற்கு முன்பெல்லாம் விநாயர்சதுர்த்தி நடக்கவில்லையா?மற்ற மற்ற சாமி ஊர்வலங்கலெல்லாம் பள்ளிவாசல்களின் வழியாகவே போகவில்லையா? நம் தமிழர்களின் மென்மை விட்டுக்கொடுத்தல் அரவணைத்தல் வடக்கத்தியர்களுக்கு சற்று குறைவுதான்.இதற்கு ஒரு உதாரணமாகவே ரயில்வேயை சொல்வார்கள்.டிக்கட்டும் எடுக்கமாட்டான்.அதிகாரிகளிடம் திமிராகவும் வாதாடுவான்.பதிவு செய்து நாம் அமர்ந்திருக்கிற இருக்கைகளிலும் நம்மை தள்ளிவிட்டு உட்காருவான்.நம் மக்களிடம் இந்த தடித்த சுபாவமெல்லாம் கிடையாது.என்ன! தமிழன் கேளிக்கையிலும் வெட்டி அரட்டையிலும் மூழ்கிப்போவான்.இப்போது குடியிலும் மூழ்கி சொரனையற்று திரிகிறான்.எல்லாவற்றையும் மத கண்கொண்டே பார்க்காதீர்கள்.

  91. Honestman அவர்களே “ஆணுமில்லை பெண்ணுமில்லை ” என்பது அவன் பாலினத்திற்கு அப்பாற்பட்டவன் என்பதை குறிக்கத்தான்.நம் மனம் கற்பனை செய்வதை விட்டும் அவன் தூய்மையானவன்.தமிழில் உயர்திணையை இரண்டு வகையில்தான் சுட்ட முடியும்.ஒன்று ன் விகுதி போட வேண்டும்.இலை ள் விகுதி போடவேண்டும்.தமிழ்ல் ன் விகுதியை பழக்க படுத்தி விட்டார்கள்.நாங்களும் அதையே செய்கிறோம்.அரபி மொழியில் இறைவனுக்கு மட்டுமே என்று சுட்டக்கூடிய வார்த்தை உள்ளது.அவர்கள் அதை வேறு யாருக்கும் எதற்கும் பயன்படுத்துவதில்லை.நமக்கு தமிழில் வேறு வழி இல்லை.

  92. திரு அரிசொணன் அவர்களே இந்து மதம் வரையறுக்கபட்ட மதக்கொள்கையை சொல்லவில்லை.திரு ஜெயமோகன் சொல்வார்” இந்து மதம் என்பது பல பலங்குடிமதங்களின் தொகுப்பு.பல்வேறு சிந்தனைகளின் சாரம்.அது யாரையும் திட்டவட்டமான கொள்கைகளோடு க்ட்டுபடுத்துவதில்லை.இஸ்லாம் என்பது அப்படியல்ல.ஒரு திட்டவட்டமான நெறியை இப்படித்தான் என்று வரையறுக்கிறது.அது தன் போதனை நெடுக கீழ்படி என்று கட்டளை இடுகிறது.வெளியிலிருந்து எது வேண்டுமானாலும் கேட்டுக்கொள்.உள்
    நுழைந்துவிட்டால் உன்னை கொடுத்துவிடு.நான் இதை விரும்பி ஏற்றேன்.நீங்கள் அதில் இருக்கிறீர்கள்.முற்றிலும் முரண்பட்ட நிலைதான் இது.ஆனாலும் நீங்களும் நானும் மோதிக்கொள்ள வேண்டியதில்லை.ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.நானும் ஒரு பிராமணரும் நெருங்கிய நண்பர்கள்.நான் அவரை என் வீட்டு விருந்திற்கு அழைக்கிறேன்.நான் பிரியாணியையும் மாட்டுக்கறி கபாபையும் அவருக்கு வைப்பேனா?வைத்தால் நான் நண்பனா?சைவ உணவைத்தான் பரிமாறுவேன்.இதேபோல் அவர் எனக்கு விருந்தளிக்கிறார்.அவரிடம் நான் பிரியாணியை எதிர் பார்க்கலாமா?அவர் எதை உண்னமாட்டாரோ அதை எனக்கும் தரமாட்டார்.தரக்கூடாது.அவர் பாவம் என்று நினைப்பதை அடுத்தவருக்கு பரிமாறக்கூடாது.நான் இரண்டையும் உண்பேன்.ஆகவே அவர் வீட்டு சைவ உணவை நிறைவோடு உண்டுவிட்டு வருவேன்.இதில் எங்களுக்குள் என்ன பிரச்சனை என்ன மோதல்.ஆனால் அவர் நட்போடு என்னிடம் உரையாடலாம்.”டேய் அநியாயமா ஆட்டை மாட்டை அறுத்து திண்ணாதடா பாவம்டா”என்று.அதற்கு நானும் “போடா எல்லாமே நமக்குதாண்டா படைக்கப்பட்டிருக்கு.மனுசனுக்கு மேல என்னடா எல்லாம் நமக்குதாண்டா என்று.எவரும் அவரவர் மதக்கொள்கைகளை பிசகாமல் பின்பற்றி யாரோடும் இணக்கமாக இருக்க mudiyum

  93. அன்பின் ஜெனாப் மீரான் சாஹேப்

    \\\\ நீங்கள் இஸ்லாத்தையே பயங்கரவாதம் என்றும் குரான் முழுக்க வன்முறையன்றும் கூறும்போழுதுதான் நான் காயமடைகிறேன். \\\

    இல்லை ஐயன்மீர். இஸ்லாத்தையே பயங்கரவாதம் என்று நான் எங்கு சொல்லியிருக்கிறேன்? ஆனால் இஸ்லாம் மட்டுமின்றி ஒட்டுமொத்தமான ஆப்ரஹாமிய இறைக்கோட்பாடு என்பது எமக்கு ஏற்புடையதன்று என்றுதான் சொல்லியிருக்கிறேன் ஜெனாப்.

    இஸ்லாத்தில் வன்முறைக்கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று இங்கு பல அன்பர்கள் கருத்துப் பகிர்ந்திருக்கின்றனரே. ஆயினும் ஹிந்துஸ்தானத்தில் இஸ்லாம் என்ற மதம் வன்முறையின் மூலமே நுழைந்தது என்பது வரலாறே. அதே காலகட்டத்தில் அதற்கு வேறு முகமும் உண்டு என்பதனையும் அறிவேன். விரைவில் நான் அறியும் இஸ்லாத்தின் வேறு முகத்தைப் பகிர விழைகிறேன் ஜெனாப். ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் அவர்கள் பற்றிய நான் பகிர்ந்த வ்யாசத்தை தாங்கள் வாசித்திருந்தால் நான் இந்த சமயத்தவரின் போற்றத்தகுந்த செயற்பாடுகளையும் விதந்தோதுபவன் என்று அறிவீர்கள். இந்த கேழ்வியைக்கூட நீங்கள் என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள்.

    \\\\\ திரு கிருஷ்ணகுமார் அவர்களே நீங்களும் திரு பாலசுந்தரம் கிருஷ்ணா அவர்களும் பகிர்ந்து கொள்வதை படிக்கிறேன். ஆனால் நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.அந்த அதிகாரமும் எனக்கில்லை. \\\

    ஐயன்மீர், மாற்றுக்கருத்துக்கள் பகிரப்படுவதையும் அர்த்தமுள்ள கருத்துப் பரிமாற்றத்தையும் எப்போதும் நான் வரவேற்கிறேன்.

    இந்த அன்பர் தொடர்ந்து இந்த அவதாரத்திலும் தனது முந்தைய அவதாரங்களிலும் ஒவ்வொரு விவாதத்தையும் தடம் புரளச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டும்……………. தன்னுடைய வயதில் பன்மடங்கு மூத்தவர்களான ஸ்ரீ வெ.சா மஹாசயர் மற்றும் அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் போன்றோரை இழித்துப் பழித்தும் உள்ளார். பொது தளத்தில் ஹிந்துப்பெயரில் ஒளிந்து இஸ்லாத்துக்கு ஒரு வைஷ்ணவரை மதமாற்ற விழைந்து கருத்துப் பகிர்ந்தமை என்னால் அறவே ஜீரணிக்க இயலவில்லை. இந்த அன்பர் வாசிப்பனுபவம் உள்ளவர் என்று அறிவேன். வாசிப்பனுபவம் கொடுக்கும் உயர்ந்த குணம் வினயம். வித்யா ததாதி வினயம். அதை இவர் பெறவில்லையே. தொடர்ந்து குதர்க்கம் செய்கிறாரே. அடுத்தவர் சொல்லாத கருத்துக்களை சொன்னதாகப் பொய்யாக சாதித்து எதைப்பெறுவார் என்று சலிப்பு ஏற்படுகிறது. அறம் பாடத் தூண்டி விட்டது.

    ஆம். இந்த அன்பரிடம் கூட அன்பு குறையாது நான் சம்வாதம் செய்யவேண்டும் என்று நீங்கள் சொன்னால் அதில் தத்யம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்வேன். அறச்சீற்றம் என்பதில் கூட சீற்றம் என்பது தவிர்க்கப்பட வேண்டிய குணம் என்று அறிந்தவனே. ஒவ்வொரு முறையும் அன்பிலிருந்து நான் பிறழும் போதும் எங்கள் முருகப்பெருமான் யார் மூலமாவது அதை சுட்டிக்காட்டுவான். இம்முறை உங்கள் மூலம் சுட்டிக்காட்டி விட்டான் போலும்.

    நான் மிக உயர்வாகப் போற்றும் வைஷ்ணவம் சமூஹ ஒற்றுமையை போதிக்கிறது. கபீர், கமால், ரஹீம் மற்றும் ரஸ்கான் கூட நான் வணங்கும் வைஷ்ணவோத்தமர்களே ஆவர் ஜெனாப். ஆம். நீங்கள் சொல்வது போல் வடகலை தென் கலை என்ற சித்தாந்த பேதங்கள் உண்டு தான். ஆனால் கலை வித்யாசப்படுகிறது என்பதற்காக ஒரு கலையினர் இன்னொரு கலையினரை வைஷ்ணவரே இல்லை என்று சொல்லியதெல்லாம் கிடையாது ஐயா. அது போன்ற ஒரு செயற்பாட்டை நான் எமது இஸ்லாமிய சஹோதரர்களிடம் எதிர்பார்ப்பது தவறா சொல்லுங்கள்.

    ஹிந்துஸ்தானத்தின் எல்லைப்பகுதியிலேயே எமது வாழ்நாளின் பெரும்பகுதியைக்கழித்திருக்கிறேன். எத்தனை ஊரடங்குச் சட்டங்கள். எவ்வளவு விடுமுறைகள் எமக்கு வீணாகப்போயிருக்கிறது.

    ம்………….. வன்முறை மிக இழிவானது ஜெனாப்.

    \\\ விநாயகர்ஊர்வலம் என்பது வடக்கத்திய இறக்குமுறைதான்.அது இங்கு வந்தபிறகுதான் போலீஸ் பதற்றம் வன்முறை என்பதெல்லாம் உண்டானது. \\\\

    ஹிந்துஸ்தானத்தை வடக்கு தெற்கு என்று பிரித்து அவர்கள் அப்படி இவர்கள் இப்படி என்று சொல்வதை நான் அனுபவ பூர்வமாக மறுக்கிறேன். உணவு, உடை, பாஷைகள் வேறு என்று அறிவேன். கலாசாரத்தால் ஹிந்துக்கள், முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றே என்றும் அறிவேன்.

    \\\\ வடக்கத்தியர்கள் எல்லோருமே சற்று தடித்தவர்கள்தான்.குணத்தால் சொல்கிறேன். \\\

    அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். எமக்குப் பழக்கமான ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதம் பகிரும் எமது அனைத்து முஸல்மாணிய மித்ரர்களும் உத்தரபாரதத்தைச் சார்ந்தவர்.

    Tameez மற்றும் Tehzeeb என்று சொல்லப்படும் குணங்களுக்கு இலக்கணமாகத் திகழும் அன்பர்கள். எமது ஆத்மகுணங்களை இந்த அன்பர்களுடன் பழகுவதன் மூலம் நான் மேம்படுத்திக்கொண்டு இருக்கிறேன்.

    மட்டில்லா வன்முறை நிகழும் காஷ்மீரத்தைச் சார்ந்தவர் தான் ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப். அவர் தகப்பனாரான ஸ்ரீமான் மீர் குலாம் ரஸூல் நஸ்கி சாஹேப் அவர்களும் குணபரிபூர்ணராக தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்று அறிவேன்.

    \\\ எல்லாவற்றையும் மத கண்கொண்டே பார்க்காதீர்கள். \\\\

    எனது இரு வ்யாசத் தொடர்களையும் நீங்கள் வாசித்தால் இப்படிக் கருத்துப்பகிர மாட்டீர்கள். மாற்று மதத்தினரின் சரியான செயற்பாட்டை நான் விதந்தோதத் தயங்குவதில்லை ஜெனாப். தவறான செயற்பாடுகளை இடித்துரைப்பதில் எமக்கு தயக்கமும் அறவே இல்லை.

  94. ஜனாப் மீரான் சாஹிப் அவர்களே,

    //திரு அரிசொணன் அவர்களே இந்து மதம் வரையறுக்கபட்ட மதக்கொள்கையை சொல்லவில்லை….//

    நீங்கள் இந்தப்பதிவை என்னுடைய எந்தக் கருத்துக்கு மறுமொழியாக எழுதினீர்கள் என்று தெரிவித்தால் நலமாக இருக்கும்.

    //.திரு ஜெயமோகன் சொல்வார்” இந்து மதம் என்பது பல பலங்குடிமதங்களின் தொகுப்பு.பல்வேறு சிந்தனைகளின் சாரம்.அது யாரையும் திட்டவட்டமான கொள்கைகளோடு க்ட்டுபடுத்துவதில்லை//

    அது திரு ஜெயமோகனின் கருத்து. எனக்கு அதனுடன் உடன்பாடு இல்லை. இந்து சமயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ சமயப் பெரியார்கள் இருக்கிறார்கள். அவர்களை அணுகினாலோ, அவர்களின் நல்மொழிகளைப் படித்தாலோ அதைப்பற்றித் தெரிந்து கொள்ளலாம். அறிமுகம் வேண்டும் என்றால் நான் கீழே கொடுத்துள்ள வலையத்திற்குச் செல்லுங்கள்.

    https://www.himalayanacademy.com/readlearn/basics

    அதில் What is Hinduism? என்ற புத்தகத்தின் பிடிஎப் ஆவணத்தை இறக்கம் செய்து படித்துப் பாருங்கள். படங்களுடன் எளிய ஆங்கிலத்தில் விளக்கப்பட்டு இருக்கிறது. யார் யாரோ சொன்னதை வைத்து தவறான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

    நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நான் சாதி, சமய நல்லிணக்கத்தை எப்பொழுதும் விரும்புகிறேன். அதில் ஒருபொழுதும் ஐயமே இல்லை. அப்படி இல்லாவிட்டால் எனக்குத் தற்போழுது இருக்கும் அனைத்துச் சாதி, சமய, நண்பர்கள் (நாத்திகர்கள் உள்பட) இருந்திருக்கமாட்டார்கள்.

    வணக்கம்.

  95. எளிய தமிழில், படங்களுடன் இந்து சமயத்தைப்பற்றி விளக்கம் தரும் புத்தகம் கீழ்கண்ட லின்க்கில் உள்ளது. அங்கேயே புரட்டியும் படிக்கலாம். அல்லது கீழிறக்கம் செய்தும் படிக்கலாம். மாற்றுச் சமயத்தார் அவர்களின் கண்நோக்குடன் இந்து சமயத்தைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு எப்படிப் பதில் அளிக்கவேண்டும் என்று இந்தப் நூல் கூறுகிறது. கவ்வையில் உள்ள (அமேரிக்கா, ஹவாய் தீவுகளில் ஒன்று) சைவ ஆதினம் வெளியிட்ட புத்தகம் இது.

    https://www.himalayanacademy.com/view/ten-questions-and-answers-in-tamil_ta

  96. திரு பால சுந்தரம் கிருஷ்ணா தவறான தகவலை மீண்டும் நீண்டும் சொல்வது சரியல்ல. திருப்பித் திருப்பி இப்படிப் பொய் சொல்லி அருணகிரினாதர்தான் கந்த சஷ்டிக் கவசம் எழுதினார் என்ற ஒரு புரளியை உருவாக்குகிறார். தவறாக எழுதிவிட்டால் அது தவறு என்று ஒப்புக் கொள்வதுதான் நன்னடத்தை.

    கந்த சஷ்டிக் கவசம் எழுதியவர் தேவராய சுவாமிகள். பால தேவ ராயர் அல்ல.
    பாடலில் வருகிற வரிகள் இதோ:
    ///பாலன் தேவ ராயேன் பகர்ந்ததைக்
    கலையில் மாலையில் கருத்துடன், நாளும்
    ஆசாரத்துடன் அங்கம் துலக்கி,
    நேசமுடன் ஒரு நினைவது ஆகிக்
    கந்தர் சஷ்டி கவசம் இதனைச்///

    அவர் தம்மைப் பாலன் என்று சிறியோனாய்ச் சுட்டிக் கொண்டு எளிமையை நிறுவுகிறார். அவர் பெயர் தேவராயன் மட்டுமே.

    கவசம் பாடப்பட்டது திருச்செந்தூரில் என்பர். அவர் பனிரண்டாம் அல்லது பதினாறாம் நூற்றாண்டினர் அல்லர். அவரது காலம் 19 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.

  97. பால சுந்தரம் கிருஷ்ணா தாம் மட்டுமே அன்பு வடிவானவர் போலவும் முருக பக்தரான தேவராய சுவாமிகள் வெறி பிடித்தவர் போலவும் உரைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    அதே கந்த சஷ்டிக் கவசத்தில் வரும் வரிகள் இதோ:

    /// புலியும் , நரியும், புன்னரி நாயும்
    எலியும் , கரடியும், இனித்தொடர்ந்து ஒடத்,

    தேளும், பாம்பும், செய்யான் பூரான்,
    கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
    ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க,
    ஒளிப்பும் சுளுக்கும், ஒருதலை நோயும்
    வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்

    சுலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
    குடைச்சல் சிலந்தி குடல் விப்புருதி
    பகக்ப் பிளவை, படர் தொடை வாழை,
    கடுவன் , படுவன், கைதாள் சிலந்தி,
    பற்குத்து , அரணை, பரு அரையாப்பும்,

    எல்லாப் பிணியும், ஏன்றனை கண்டல்
    நில்லாது ஓட, நீ எனக்கு அருள்வாய்!
    ஈரேழ் உலகமும், எனக்கு உறவாக
    ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா,
    மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்,///

    மனிதர்கள் அமைதியாக வாழ்வதற்கு இடைஞ்சலாக இருக்கும் மிருகங்கள் ஓடவேண்டும்” என்று நினைப்பதில் பாடுவதில் என்ன தவறு?

    அவர் என்ன காபிர்களைக் கொல் என்று சொன்ன குரான் போலவா எழுதி விட்டார்?
    ஒருவேளை பால சுந்தரம் கிருஷ்ணா பார்வையில் அதுதான் நன்முறையோ?

    இல்லை தொன்றுதொட்டு இதே மண்ணில் பிறந்து வாழ்ந்து வரும் “பார்ப்பனக் கூட்டம் பயந்து நடுங்கி ஓடவேண்டும்” என்று சுதந்திர இந்தியாவில் முதலமைச்சராக இருந்துகொண்டே சொன்ன கருணா நிதி போலப் பேசினாரா?

    ஒருவேளை பால சுந்தரம் கிருஷ்ணா பார்வையில் அதுதான் நன்முறையோ?

    அது தவிரவும், சமுதாயத்தில் வாழும் அனைவரும் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் என்ற தேவராயரின் ஆசையும் அன்பும்தான் தவறா?

    அறியாமையால் எழுதினால் அதை ஒப்புக் கொண்டு அடுத்த விஷயத்துக்குச் செல்வதே பொது இடத்தில் வாதம் செய்ய வருபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம். அதைப் பால சுந்தரம் கிருஷ்ணா கடைப்பிடிக்க வேண்டும்.

  98. திரு அரிசொணன் அவர்களே.. காபிர் என்ற பதத்தைப்பற்றி நாம் விவாதித்துக்கொண்டிருக்கும்போது திரு கிருஷ்ணகுமார் அவர்கள்,இந்து மத சித்தாந்தப்படி “யாரையும் காபிர் என்று கருதுவது தவறு” என்று கூறியிருந்தார்கள்.அதை நீங்களும் பாராட்டி ஏற்று கொண்டிருந்தீர்கள்.அதற்காகத்தான் நான் உங்களுக்கு அந்த கருத்தை தெரிவித்திருந்தேன். ஜெயமோகனை நானும் இந்து மத ஆதொரிட்டி-யாக கருதவில்லை.”ஒன்றே குலம் ஒருவனே தேவன்”என்று திருமூலரும் “அருட்பெரும்ஜோதி தனிபெரும் கருணை என்று வள்ளலாரும் கடவுள் பல மனித அவதாரங்கள் எடுத்து வந்ததாக பல புராணங்களும் நாத்திகத்தையே இந்து மதம் ஏற்று கொள்வதாக சிலரும் சொல்ல கேட்டிருக்கிறேன்.ஆக தீர்மானமான கடவுள் கொள்கை எதையும் இந்து மதம் வரையறுக்குவில்லை என்றே நான் புரிந்து கொள்கிறேன்.இஸ்லாம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு விடுகிறது.வள்ளலாருடைய கொள்கை மட்டும் இஸ்லாத்தோடு ஒட்டி வருகிறது.கடவுள் கொள்கை மட்டுமில்லாமல் வாழ்கை நெறிகளிலும் அறுதியிட்டுத்தான் இஸ்லாம் கொள்கை வகுக்கிறது.மனித வாழ்வின் அன்றாட செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் இஸ்லாத்தின் தலையீடு இருக்கிறது.இந்து மதம் இவ்வளவு நெருக்குதலை உங்களுக்கு கொடுப்பதில்லை.இந்த அடிப்படையில் நீங்கள் எங்களை இறைநிராகரிப்பாளர்கள்(காபிர்)என்று அழைக்க வேண்டிய கட்டாயத்தை இந்து மதம் கொடுக்க வேண்டிய தேவை இல்லையன்றாகிறது.ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் பாருங்கள்,இறைதன்மைக்கென்று ஒரு இலக்கணத்தை வகுத்து அதில் எந்த சமரசத்தையும் இஸ்லாம் செய்ய சம்மதிப்பதில்லை.
    .

  99. திரு கிருஷ்ணகுமார் அவர்களே நம்முடைய மாறுபட்ட மத கோட்பாடுகளை ஆரோக்கியமான முறையில் பகிர்ந்து கொள்வதற்கும்,என்னைப்பற்றி நீங்களும் உங்களைப்பற்றி நானும் எவ்வாறெல்லாம் கசப்புணர்வு கொண்டிருக்கிறோம் என்று கண்டு அவற்றை களைந்து கொள்வதற்கும் களம் அமைத்து கொடுத்த “தமிழ் ஹிந்து தமிழரின் தாய்மதம்”என்ற இந்த தளத்திற்கு நாம் நன்றி கூற கடமைபட்டிருக்கிறோம். ” இஸ்லாம் என்ற மதம் வன்முறையின் மூலமே பறவியது என்பது வரலாறு”என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.இதை முற்றிலுமாய் மறுதலிக்கிறேன் கிருஷ்ணகுமார் அவர்களே. இந்தியாவில் இஸ்லாம் என்பது முகலாயர்களின் மூலமாகத்தான் என்றே நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.கிடையவே கிடையாது.அவர்கள் இங்கு வருவதற்கு முன்பே இஸ்லாம் அரபி கடல் வழியாக கேரளத்திற்குள் நுழைந்து விட்டது.அரபி வணிகர்கள் மூலமே இஸ்லாம் எங்கள் மூதாதையர்களால் அறியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.அது எங்களுக்கு தந்த முதல் கொடை, நாங்கள் யார் என்பதையே அதாவது ஜாதீய ரீதியாக நாங்கள் என்ன படித்தரத்தில் இருக்கிறோம் என்பதையே மறக்க செய்தது.உண்மையில் நான் என்ன ஜாதியில் இருந்து வந்தேன் என்று எனக்கு தெரியாது.என் பக்கத்து வீட்டுக்காரர் என்ன ஜாதியிலிருந்து வந்தார் என்பதும் எனக்கு தெரியாது.ஏன் அவருக்கே தெரியாது. “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதி பாடி பல வருடங்கள் உருண்டு விட்டது.சுதந்திர இந்தியாவில் பல சட்டங்கள் இயற்றி ஆகிவிட்டது.இன்னும் ஜாதியை ஒழிக்க முடியவில்லை.இது போக அதனுடைய எளிமையான கடவுள் கொள்கை அமைதியான வழிபாட்டு முறை,இவயெல்லாம் போக அந்த வணிகர்கள் வியாபாரத்தில் காட்டிய நேர்மை அவர்களின் ஒழுக்கம்.இன்றைய அரபுக்களோடு அவர்களை ஒப்பிட்டு விடாதீர்கள்.இன்று உலகத்திலேயே ஒன்னாம் நம்பர் அயோக்கியர்கள் சுகவாசிகள் இன்றய அரபுககள்தான்.ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டிய பள்ளிவாசல் இன்றைக்கும் கேரளத்தில் இருக்கின்றது. முகலாய சோம்பேறிகள் மதம் பரப்பவா வந்தார்கள்.இங்குள்ள செல்வங்களையல்லாம் சுரண்டி தின்று கொழுத்து ஆடம்பரத்திலும் சுகபோகத்திலும் திளைத்து,மற்றவர்களெல்லாம் தங்களுடைய சிலைகளை ஊர்முழுக்க நட்டு வைப்பார்கள்.இவர்கள் அதை செய்ய வில்லை.கோட்டை கொத்தளங்களையும் சமாதிகளையும் ஒரு சில பள்ளிவாசல்களையும் கட்டிவைத்து இறந்தார்கள். சார்,நான் தர்க்கரீதியாக் கேட்கிறேன்.ஒருவனுடைய மிரட்டலால் தன் பெயரை மாற்றலாம்.வெளிஅடையாளங்களை மாற்றலாம்.காலகாலமான தன் கொள்கையை மாற்றுவானா? மாற்ற முடியுமா?அவன் எவ்வளவு துடித்திருப்பான்?உண்மையிலேயே அது நல்ல கொள்கையாகவே இருந்தாலும் கூட இப்படி ஒருவன் நிர்பந்திக்கும்போது எப்படி சார் அதை ஏற்க மனம் வரும்?இஸ்லாம் என்றில்லை எந்த ஒரு சித்தாந்தமும் வன்முறையால் பரவியிருக்க வாய்ப்பே இல்லை சார்.பதவிக்கும் அதிகாரத்திற்கும் உலகாதாயத்திற்கும் சிலர் கொள்கையை விடலாம்.அவர்களையலாம் ஒரு கணக்காக எடுத்துகொள்ள முடியாது.நான் மீண்டும் சொல்கிறேன் வன்முறையால் இஸ்லாம் பரவவில்லை.அவ்வாறு பரவியிருந்தால் நாங்கள் இவ்வளவு கொள்கை உறுதியோடும் மார்க்க தெளிவோடும் இருக்கவே முடியாது.

  100. இங்கு ஒரு விஷயம் தெளிவாக எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாம் என்பது ஒரு வியாதி. வெறி நாய் கடியைப்போல. முற்றிய நோயாளிகள் தண்ணீர் எவ்வளவு தீமையானது என்று ஹிந்துக்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள்.

    1. இஸ்லாம் ஒரு நோய்.
    2. முஸ்லிம்கள் அந்நோய் தீர்ந்ததும் அதை மறக்கவே விரும்புவார்கள். (குறிப்பாக பெண்கள்)
    3. இஸ்லாமியர் மனிதர்கள். சக மனிதர் மேல் வெறுப்பு இல்லை. நோயுற்றவரை எப்படி பார்க்க முடியுமோ அப்படித்தான் உலகம் முஸ்லிம்களை பார்க்கின்றது.
    4. உலகம் முழுவதுமே மற்றவர்களோடு இயல்பாக கலந்து பழக முடியாதவர்கள்.
    5. கொலை/வன்புணர்வு/வன்முறை செய்யும் போது அவர்கள் கடவுள் அல்லா பெயரை சொல்லும் நோயுற்ற மனிதர்கள்.
    6. கீழே உள்ள தளத்தில் குரான் எவ்வாறு மனிதரை கட்டற்ற வன்முறைக்கு தள்ளும் என்பதை விதம் விதமாய் தோலுரித்து காட்டியாயிற்று. வெறும் குரான், குரான்+ஹதீஸ், குரான்+நிகழ்வுகள்/இடம் என்று.
    7. இந்த தொடரும் ஒரு முஸ்லிமால் பதிவு செய்யப்பட வன்முறைகளின் தொகுப்பு.
    8. இஸ்லாம் (அ) குரான் = வன்முறை பரப்பும் நச்சு.

    https://www.faithfreedom.org/index.htm

    மீரன்சாஹிப் தக்கியா செய்யவில்லை என்றால் அவருக்கு குரான் தெரியவில்லை என்று அர்த்தம். கொஞ்சம் இனிப்பு கலந்து விஷம் உள்ளே போயிருக்கிறது. மனிதர்கள் நல்லவர்களே. இஸ்லாத்தில் இருந்து வெளியே வாருங்கள். அப்புறம் ஹிந்து மதத்தைப் பற்றி பேசலாம். முஸ்லிம்களின் பெருந்தன்மையை சிலாகிக்கலாம். கடும் நோயில் இருந்து எழுந்தவுடன் 100 மீட்டர் ஓட முடியாது. எவ்வாறு வெளியே வருவது. அதன் தாக்கம் என்ன என்பது பற்றி விரிவாகவே மேலே உள்ள தளத்தில் இருக்கிறது.

    அப்புறம் இன்னொன்று உலகத்தில் உள்ள எல்லா முஸ்லிமும் அமெரிக்க சதி, இஸ்ரேலிய சதி என்று உளறுவது. ஆனால் பாகிஸ்தான் முஸ்லிம் தன் தாயை விற்றாவது அமெரிக்கா போக துடித்து கொண்டு இருப்பான்.

    ஒரு பாகிஸ்தானிய அகமதியா குடும்பம் என்னிடம் விரிவாகவே பகிர்ந்திருக்கிறார்கள். கொலை செய்வது, வெள்ளிகிழமை ஒலிபெருக்கியில் கொலை செய், வன்புணர்வு செய், கொள்ளை அடி என்று கட்டளைகள் வருவது எல்லாம் சாதாரண நிகழ்வு. செய்தார்கள். 30 வருடம் நெருங்கிய தோழன் பணப்பெட்டியையும், பெண்களையும் காட்டி கொடுத்த உண்மை சம்பவங்கள் உண்டு. பாகிஸ்தானில் அகமதியா அஸ்லாமு அலைக்கும் என்று சொல்வது சட்டப்படி குற்றம். இங்கே வந்து சப்பைக்கட்டு கட்டாதீர்கள். கண்களை திறந்து உலகத்தை பாருங்கள். மூளையை திறந்து குரான் படியுங்கள். நோயிலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவி துணை புரிக.

  101. ஜானாப் மீரான்சாஹிப் அவர்களே,
    என்னை அரிசோனன் என்று குறிப்பிடுங்கள். தமிழில் அச்சடிக்க இயலாவிட்டால், ஆங்கிலத்தில் Arizonan என்று எழுதலாம். நான் தவறாக நினைக்கமாட்டேன். வேறு விதமாக எழுதப்பட்டிருப்பதைப் பார்ப்பது என்னவோ போலிருக்கிறது.
    நன்றி. வணக்கம்.

  102. ஜனாப் மீரான்சாஹிப் அவர்களே,
    என்னை அரிசோனன் என்று குறிப்பிடுங்கள். தமிழில் அச்சடிக்க இயலாவிட்டால், ஆங்கிலத்தில் Arizonan என்று எழுதலாம். நான் தவறாக நினைக்கமாட்டேன். வேறு விதமாக எழுதப்பட்டிருப்பதைப் பார்ப்பது என்னவோ போலிருக்கிறது.
    நன்றி. வணக்கம்.

  103. உயர்திரு கணேஷ்,

    அருள்கூர்ந்து மற்ற சமயத்தைப் பற்றி இழிவாகக் குறிப்பிட வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படிச் செய்வது அவர்களுக்கு நம் சமயத்தின்பால் வெறுப்பைத் தோற்றுவிக்கும். கருத்துக்களைக் கண்டனம் செய்வது வேறு, ஒருவரது சமய உணர்வைக் கண்டனம் செய்வது வேறு. நட்புக்கரம் நீட்டும் ஒருவர் கன்னத்தில் அறிவதற்கு ஈடான செயலை நாம் செய்ய வேண்டாமே!

    நன்றி, வணக்கம்!

  104. மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களே,

    //கலாசாரத்தால் ஹிந்துக்கள், முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றே என்றும் அறிவேன்.//

    நீங்கள் சுட்டியது இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்களையே என்று நம்புகிறேன். நான் இப்தார் விருந்துக்குச் சென்றபோது, அதைக்கொடுத்த எனது தமிழ் இஸ்லாமிய நண்பரும் அதையே என்னிடம் கூறினார்.

    இந்தியாவை இந்துஸ்தானம் என்றுதான் மற்றவர்கள் அறிவார்கள், எனவே இந்தியாவில் பல தலைமுறைகளாகப் பிறந்து வளர்ந்த தானும் ஒருவிதத்தில் இந்துவே என்றும், ஒரு சில சமயக் கோட்பாடுகளில் தாங்கள் மாறி இருந்தாலும், இராமன், கிருஷ்ணன், திருமூலர் போன்ற பலரை இறைத்தூதுவர்கள் என்று தான் ஒப்புக்கொள்வதாகவும் என்னிடம் சொன்னார். இந்து சமயத்திற்கும், இஸ்லாமுக்கும் உள்ள ஒற்றுமைகளையே தான் போற்றுவதாகவும், வேறு மாற்றுக் கருத்துக்கள் தனிப்பட்டவை, அதைக்கொண்டு நாம் பிரிவு பாராட்டவேண்டாம் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

    இதுபோலவே, நான் பிரயாகை, கயா, காசியில் நீத்தார் சடங்குகளைச் செய்துவிட்டு, இராமேஸ்வரம் சென்று திரும்பும்போது ஒரு இஸ்லாமியக் குடும்பமும் வண்டி ஏறியது. அவர் தனது ஹஜ் அனுபவத்தையும், மற்றும் தனது குடும்பச் செய்திகளையும் பகிர்ந்து கொண்டார். இருவரும் மற்றவர்களின் புனித்தல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். அங்கு எங்களிடம் நட்பே நிலவியது. இராமேஸ்வரத்தில் இருக்கும் அந்த முஸ்லிம் பெரியவர், அங்கு வரும் இந்துக்களால்தான் தனது பிழைப்பு நடக்கிறது, அதனால் தான் மிகவும் நல்ல நிலைமையில் இருப்பதாகவும் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

    அதை இங்கு நினைவு கூர்வது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது.

  105. மரியாதைக்குரிய சகோதரர்களே இது வரைக்குமான என் கருத்துக்களை படித்ததற்கும் பதில் பதிந்ததற்கும் மிக்க நன்றி.இடையில் கணேஷ் போன்ற “நல்ல உள்ளங்களும்” வருகிறார்கள்.இவர்கள்தான் நாம் அடையாளம் காண வேண்டிய முக்கிய நபர்கள்.என் பக்கமும் இது போன்ற நான்கு கணேஷ்கள் இருப்பார்கள்.நாங்களும் இவர்களைத்தான் முதலில் அடையாளம் காண வேண்டும்.இவர்களை அடையாளம் காணுவதில்தான் இருக்கிறது,நம்முடைய ஒற்றுமை ,நல்லிணக்கம்,இந்த நாட்டின் முன்னேற்றம். இவர்களால் மனதிற்கு மிகப்பெரிய சோர்வும் அயர்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது.என்ன செய்ய இவர்களும் சேர்ந்ததுதான் சமுதாயம். விடைபெறுகிறேன் சகோதரர்களே. நம் அனைவரின் உள்ளமும் அமைதியாலும் சமாதானத்தாலும் நிறைந்திருக்க இறைவன் அருள்வானாக.

  106. மீரான் சாஹிப்

    //
    பல புராணங்களும் நாத்திகத்தையே இந்து மதம் ஏற்று கொள்வதாக சிலரும் சொல்ல கேட்டிருக்கிறேன்.ஆக தீர்மானமான கடவுள் கொள்கை எதையும் இந்து மதம் வரையறுக்குவில்லை என்றே நான் புரிந்து கொள்கிறேன்
    //

    இதை உங்களுக்கு யார் சொன்னார்.

    இஸ்லாத்தின் கடவுள் கிடையாது. கட தான் இருக்கிறார். அவர் சுவனத்தில் இருக்கிறார் உள்ளில் இல்லை. ஹிந்து மதத்தில் மட்டுமே கடவுள் என்ற கோட்பாடு உள்ளது. கடந்தும் இருக்கிறார் உள்ளேயும் இருக்கிறார். இஸ்லாமிய கடவுள் கடந்து கூட இல்லை, அவர் milky way galaxy மத்தில் தான் இருக்கிறார் (குரான் வசனப்படி). இதை பற்றி சிடிசென் ஒரு கட்டுரை போட்டுள்ளார் அவர் தளத்தில்.

    ஹிந்து மதம் எல்லா கருத்துக்களையும் கேட்கும், அடித்து விரட்டாது. அதலால் நாத்திகம் பேசலா, ஆத்திகம் பேசலாம், ஒரே கடவுள் என்று சொல்லலாம், பல கடவுள்கள் என்று சொல்லலாம்.

    ஹிந்துத்வம் சொல்வது உலகம் முழுவதும் இருப்பது கடவுளே. அதில் நாமும் ஒரு பங்கு. அதனால் தான் ஒரு ஹிந்துவானவன் பிறக்கும் பொழுது எப்படி இருந்தாலும் ஞான தேடல் பக்தியின் மூலம் நற்கதி அடைகிறான். நல்ல ஹிந்துக்களின் முகத்தை பாருங்கள் ஒரு வித பிரகாஷம் மற்றும் ஷாந்தி தெரியும், கண்களில் அமைதி நிலவும்.

    இஸ்லாம் சொல்லும் கொள்கை சாமி மேலே இருக்கார் அவர் கீழே இறங்கி வரமாட்டார் என்பது. ஏன் என்றால் அவர் ரொம்ப பெரியவர். இது தர்கத்திர்க்குள் அடங்காது. சிறியதை அதைவிட சிறிய வஸ்துவால் தான் அழிக்க முடியம். அதாவது சிறிய வச்துவிர்க்கு தான் வலிமை அதிகம், ஔர் பெரிய பாரங்கல்லை அதை விட பெரிய பாரங்கள் வைத்தா உடைக்கிறார்கள். ஒரு முல்லை அதை விட சிறிய குண்டூசி வைத்து தான் எடுப்பார்கள். ஓகே வா.

    ஹிந்துத்வம் சொல்வதும் ஒரே கடவுள் அடங்கிய பிரபஞ்சம், அதில் இருக்கும் ஆன்மாக்கள் தெய்வ ஆன்மீக நிலையை அடைய முடியும். அதனால் தான் அவதாரங்கள். ஹிந்து கடவுள் என்றுமே நான் பெரியவன் நீ தான்தவன் நான் உன்னிடம் வரமாட்டேன் என்று சொல்ல மாட்டார். அவர் மீனகாவும், குதிராயகவும் கூட தோன்றுவார். அவர் சாமன்ய பக்தனின் வீட்டில் வேலைகாரனாக இருப்பார். அவனுக்கு துணி துவைத்து போடுவார். மாடு மேய்ப்பார், பிரம்படி படுவார், பிரசவம் பார்பார். தன்னை விரும்பும் பாகதனே அவருக்கு எல்லாம். பக்தன் இல்லாட்டி கடவுள் இல்லை பாருங்கள்.

    ஒரு விண்கல் அரபு நாட்டில் விழுந்து விழுந்த இடத்தை பொசுக்கியது என்று அறியாமல் ஒருவர் இட்டுக்கட்டி அல்லா தான் கீழே இறங்க முயன்றார் அவரால் இங்கு வர முடியவில்லை, வர நினைத்த இடம் கருப்பகியது என்றார்.

    சரி ஒரு கேள்வி, நீங்கள் பேனாவால் எழுதுகிறீர்கள் அது உங்களை அறியுமா. நீங்கள் அதை அறிவீர்களா. அதே போல குரான் என்ற புத்தகத்தால் எப்படி கடவுளை அறிந்து கொள்ள முடியும். அறிந்தால் தானே தெளிவாக சொல்ல முடியும். குரானால் கடவுளை அறிய முடியும் என்றால் குரான் கடவுளை விட பெரியது என்றாகிவிடும். ஓகே வா. கடவுள் குரானை விட பெரியவர் என்றால் குரானால் கடவுள் யார் என்று தெளிவாக சொல்ல முடியாமல் போகும். நீங்கள் குரான் கடவுளை பற்றி தெளிவாக சொல்கிறது என்று ஒப்புக் கொண்டால் அதை விட அல்லா சிறியவர் என்றாகி விடுவார்.

    இப்பொழுது புரிகிறதா ஹிந்து மதம் எவ்வளவு practical என்று. சுத்தமா குழப்புகிறதா. குழப்பம் நல்லதே, குழமினால் தான் தெளிவு பிறக்கும்.

    இதற்க்கு பதில் தாருங்கள் மேலே பேசுவோம். குரானை அல்ல தான் இயற்றினார் அதனால் அது சரி என்ற பதிலில் பல ஓட்டைகள் உண்டு அதனால் அந்த பதிலை தந்தாள் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். வேற ஏதாவது பதிலை தேடவும்.

    இப்படி தான் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தை கூட ஆராய்ந்து, புரிந்துகொண்ட முன்னே வந்துள்ளது ஹிந்து மதம். ஹிந்துக்கள் என்றால் சும்மா தேங்காய் உடைக்கிற , தோப்புகரணம் பட்டை நாமம் போடுகிற கூட்டம் என்று லேசாக எடை போடாதீர்கள். தத்துவம் என்று வந்தால் யாரும் கிட்டே நெருங்க முடியாது. எங்கள் அருகே வந்து சென்ற மதங்கள் என்றால் அது பவுத்தமும், சாங்கியமும் தான்.

    நீங்கள் தலைகுப்புற நினாலும் தத்துவ ரீதியில் இஸ்லாத்தை நிலை நிறுத்த முடியாது. அதனால் தான் அடி உதை பழகுகிறீர்கள். உங்களுக்குள்ளே உள்ள இரு பிரிவுகளை தத்து ரீதியில் விவாதித்து தீர்த்துக் கொள்ள அல்லது இரண்டுமே இருக்கட்டுமே என்று ஏற்றுக் கொள்ள உங்களுக்கு திராணி இருக்கிறது. அடிச்சிகிட்டு சாகிரீர்களே அய்யா. கடவுளின் பூமியில் தேவை இன்றி ரத்த ஆற்றை ஓட விடுகிறீர்களே. கடவுள் வேதனை பட மாட்டாரா. அவரே தான் இப்படி செய்யச்சொன்னார் என்றால் அவர் ரத்தம் விரும்பிகிறார் என்று அர்த்தம்.

  107. அன்பின் ஜெனாப் மீரான்சாஹிப்

    \\ ” இஸ்லாம் என்ற மதம் வன்முறையின் மூலமே பறவியது என்பது வரலாறு”என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.இதை முற்றிலுமாய் மறுதலிக்கிறேன் கிருஷ்ணகுமார் அவர்களே. \\\

    வன்முறையின் மூலமே பரவியது — என் கருத்து இல்லை

    பெரும்பாலும் வன்முறையின் மூலம் தான் பரவியது – இது என் கருத்து.

    இது தெளிவான என் கருத்து. ****வன்முறையின் மூலமே இஸ்லாம் பரவியது**** என்று நான் கருத்துப்பகிர்ந்திருந்தால் அது தவறு. ஏனென்றால் எனக்குத் தெரிந்தே சில விதிவிலக்குகள் இருக்கின்றன.

    ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் அவர்கள் பற்றிய வ்யாசத்தில்…… வன்முறைகளல்லாது இஸ்லாத்தை ஏற்ற சம்பவங்கள்…… விதிவிலக்கான சரித்ரம் சார்ந்த சம்பவங்கள் சில ……என்னால் பகிரப்பட்டுள்ளன. சரித்ரத்தில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்களை உள்ளது உள்ள படி ஏற்பதற்கு எனக்குத் தயக்கமில்லை.

    \\\ இந்தியாவில் இஸ்லாம் என்பது முகலாயர்களின் மூலமாகத்தான் என்றே நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.\\\

    ஹிந்துஸ்தானத்தில் இஸ்லாம் பெருமளவு மொகலாயர்களின் மூலமாகத்தான் பரவியது என்பது வெறும் நம்பிக்கை இல்லை. வரலாறு.

    மொகலாயர்கள் அன்றியும் இஸ்லாம் ஹிந்துஸ்தானத்தில் பரவியிருக்கலாம் தான். அது சொற்பமே. மிகக் குறிப்பான சம்பவங்கள் சரித்ர பூர்வமாக பகிரப்பட்டால் ஏற்கத்தகுந்ததே.

    சமீபத்தில் தமிழகத்தில் *யாதும்* என்ற காணொளியில் அப்படியொரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என அறிந்தேன். இஸ்லாமியர்களின் தமிழகத்து வேர்கள் தேடியபடிக்கான ஒரு குறும்படம் என அறிகிறேன். இயன்றால் பார்க்க விழைவேன்.

    உத்தரபாரதத்து சரித்ரம் மொகலாயர்களான பாபர், மஹம்மத் கோரி, மஹம்மத் கஜ்னவி போன்ற மதவெறி பிடித்த மொகலாயர்கள் ஹிந்துஸ்தானத்தில் நிகழ்த்திய கொடுமைகளால் வடிக்கப்பட்டது. இந்த வ்யாசம் அந்தக் கொடுமைகளை…… அந்த காலத்திய மொகலாயர்களின் பயங்கரவாத வன்முறை வெறிகளை……. வரலாற்று பூர்வமாக பதிவு செய்துள்ளது. அதுவும் அக்காலத்திய மொகலாயர்களே எழுதிய ஃபார்ஸி, உர்தூ க்ரந்தங்கள் சார்ந்து.

    இதை மறுக்க வேண்டுமானால் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திவரும்……. மூல நூற்களைச் சார்ந்து அதில் உள்ளது வேறு இந்த வ்யாசம் சொல்வது வேறு என்று பகிர வேண்டும். அது ஒரு அறிவு பூர்வமான செயற்பாடு ஆகும். அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?

    இது மட்டுமின்றி சீக்கியர்களின் சரித்ரத்தை ஆராயுங்காலும் மொகலாயர்களின் மட்டுமீறிய இஸ்லாமிய மதவெறி பரவலாகக் காணக்கிட்டுகிறது.

    \\\ நாங்கள் யார் என்பதையே அதாவது ஜாதீய ரீதியாக நாங்கள் என்ன படித்தரத்தில் இருக்கிறோம் என்பதையே மறக்க செய்தது. \\\

    உத்தர பாரதத்தில் மிகப்பெரும்பான்மையான பகுதிகளில் ……….. முஸல்மாணியரின் ஹிந்துப்பாரம்பர்யம் இன்னமும் உறுதியாக பற்பல பெரும் குழுக்களால் தனித்துவத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    \\\ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டிய பள்ளிவாசல் இன்றைக்கும் கேரளத்தில் இருக்கின்றது. \\\\

    இருக்கலாம். ஹிந்துஸ்தானத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ****கலைச் சின்னமாக***** அதைக்கருதுகிறேன். நிச்சயம் அவற்றைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஹிந்துஸ்தானியரின் கடமையும் கூட.

    எனதன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன் அறியாமையால் கோவில்களைக் கலைச்சின்னமாக தன் கருத்தில் பகிர்ந்திருந்தார். அக்கருத்தை வாசித்து நான் உள்ளபடி மிகவும் விசனப்பட்டேன். எமது ஆலயங்கள் வெறும் கலைச்சின்னங்கள் இல்லை. உயிரூட்டம் உள்ள ……இறைவன் உறையும் ஸ்தலங்கள் அவை.

    \\ முகலாய சோம்பேறிகள் மதம் பரப்பவா வந்தார்கள்.இங்குள்ள செல்வங்களையல்லாம் சுரண்டி தின்று கொழுத்து ஆடம்பரத்திலும் சுகபோகத்திலும் திளைத்து,மற்றவர்களெல்லாம் தங்களுடைய சிலைகளை ஊர்முழுக்க நட்டு வைப்பார்கள். \\\

    மொகலாய அரசர்களுடைய சிலைகள் நான் எங்கும் பார்த்தது இல்லை. அப்படி நட்டதாக சரித்ரமும் எனக்குத் தெரிந்து கிடையாது. சான்றுகளுடன் மாற்றுக்கருத்துப் பகிர்ந்தால் அதை உள்ளபடி அறிய விழைவேன்.

    இரண்டாவது வாசகத்தை முற்றாக ஒப்புக்கொள்கிறேன். ஆயினும் அந்த வாசகத்தினை ஆழ்ந்து ஆராய்கையில் அதைச் சார்ந்து பாதகங்கள் மட்டிலும் இல்லை. சாதகங்களும் இருக்கின்றன. அவை சரித்ரத்தின் அம்சமே.

    முதல் வாசகத்தின் படி மதம் பரப்பவும் அதையொட்டி ஹிந்துஸ்தான ஆலயங்களை கொள்ளையடிக்கவும் மொகலாயர்கள் ஹிந்துஸ்தானத்தின் மீது பலமுறை படையெடுத்தனர் என்பது வரலாறு. இது சரித்ர பூர்வமாக அக்காலத்து இஸ்லாமியர்கள் எழுதிய பல நூற்களில் தெளிவாகப் பகிரப்பட்டுள்ளது.

    \\\\ தர்க்கரீதியாக் கேட்கிறேன்.ஒருவனுடைய மிரட்டலால் தன் பெயரை மாற்றலாம்.வெளிஅடையாளங்களை மாற்றலாம்.காலகாலமான தன் கொள்கையை மாற்றுவானா? மாற்ற முடியுமா?அவன் எவ்வளவு துடித்திருப்பான்?உண்மையிலேயே அது நல்ல கொள்கையாகவே இருந்தாலும் கூட இப்படி ஒருவன் நிர்பந்திக்கும்போது எப்படி சார் அதை ஏற்க மனம் வரும்? \\\\

    மிக நல்ல கேழ்வி. இக்கேழ்வியையே நானும் என் வ்யாசத்தில் விசாரிக்க முனைந்து ………..

    ஹிந்துஸ்தானத்தில் இஸ்லாமியர்கள் வன்முறை மிக பயங்கரவாதம் தலையெடுத்து இஸ்லாத்தை பரப்பிய போது……. வேறு வழியில்லாது *மஜ்பூரியுடன்* இந்த மதத்தை ஏற்றவர்கள்…….. இதை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என பகிர்ந்திருக்கிறேன். சில தினங்களில் வ்யாசத்தைப் பகிர்ந்து விடுகிறேன். உங்களது கேழ்விகளுக்கு அதில் பதில் கிட்டலாம்.

    \\\ இஸ்லாம் என்றில்லை எந்த ஒரு சித்தாந்தமும் வன்முறையால் பரவியிருக்க வாய்ப்பே இல்லை சார். \\\\

    உலகமெங்கும் இஸ்லாம் ……… மிகப்பெருமளவில் வன்முறை மூலம் தான் பரவியது என்பது மறுக்க முடியாத சரித்ரம்.

    க்றைஸ்தவம் பரப்புவதற்காக க்றைஸ்தவர்கள் கைக்கொண்ட ஒரு வழிமுறைக்கு சிலுவைப்போர் – crusade என்றே பெயர்.

    விதிவிலக்குகளாக ஆங்காங்கு இஸ்லாம் வன்முறை இல்லாமலும் பரவியது என்று சரித்ரம் இருந்தால் …………. தகுந்த சான்றாதாரங்கள் பகிரப்பட்டால் எமக்கு அதை உள்ள படி ஏற்பதில் எந்த தயக்கமும் கிடையாது……….

    அது போலவே………… சரித்ர ஆவணங்கள் சார்ந்து இஸ்லாம் வன்முறை மூலம் பரவியது என்ற கருத்து பகிரப்பட்டால் அதை சரித்ர ஆவணங்கள் சார்ந்து ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறீர்கள்?

  108. அன்பின் ஸ்ரீ அரிசோனன்,

    மத நல்லிணக்கம் என்பதில் எமக்கும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.

    நான் கருதும்…… விதந்தோதும்…… மத நல்லிணக்கத்தை என் பார்வையில் பகிர விழைகிறேன்.

  109. மீரான் சாஹிப்

    //
    ர்க்கரீதியாக் கேட்கிறேன்.ஒருவனுடைய மிரட்டலால் தன் பெயரை மாற்றலாம்.வெளிஅடையாளங்களை மாற்றலாம்.காலகாலமான தன் கொள்கையை மாற்றுவானா? மாற்ற முடியுமா?அவன் எவ்வளவு துடித்திருப்பான்?உண்மையிலேயே அது நல்ல கொள்கையாகவே இருந்தாலும் கூட இப்படி ஒருவன் நிர்பந்திக்கும்போது எப்படி சார் அதை ஏற்க மனம் வரும்? \\\\
    //

    இப்படி எல்லாம் உங்களை நம்ப வெச்சிருக்காங்க. தர்க்க ரீதியாக பாருங்கள், ஹிட்லர் அவ்வளவு கொடுமை காரன் என்றால் அவனது அரசில் இருந்தவர்கள் அனைவரும் அவன் சொன்னதை எப்படி கேட்டிருப்பார்கள். எவ்வளவு யோசித்திருப்பார்கள். அவனை எதிர்த்திருக்க மாட்டார்களா. அவன் சொன்னது சரி என்று நம்பி லட்சோபலட்சம் பேரை எப்படி கொன்றார்கள்.

    தர்க்க ரீதியாக பாருங்கள், ஒரே மதத்தை சார்ந்தவர்கள் இரு பிரிவினர் அடித்து கொள்வார்களா. அதுவும் அவ்வளவு வேரியோடவா. தொலைகாட்சியில் ISIS காரர்கள் செய்யும் கொலைகள் மார்பிங் தானே. ஒரே மதத்துக்காரன் இன்னொருத்தன் தற்காக்கும், பள்ளிவாசலுக்கும் குண்டு வெப்பானா. பாகிஸ்தான்ல இதெல்லாம் நடக்குதா என்ன அதெல்லாம் வெளிநாட்டு சிலை வணங்கிளின் மற்றும் யூதர்களின் சதி.
    இன்று கூட தர்க்க ரீதியாக பாருங்கள் ISIS க்கு பயந்து எவ்வளவு பேர் மதம் மாறுகிறார்கள் மாறாதவர்கள் சுடப்படுகிறார்கள். உசுரோடு இருந்து மதம் மாரினவனின் வாரிசு முஸ்லிமாகவே பிறக்கும், முஸ்லிம் பள்ளிக் கூடம் போகும், முஸ்லிம் விஷயங்களை கற்கும், காபிரை எதிர்க்கும். பலவந்தமாக மாற்றப்படும் முதல் இரண்டு தலைமுறைக்கு அந்த துக்கம் இருக்கும், மூன்றாவது தலைமுறை முழுவதும் அடையாளம் மாறி விடும். நீங்கள் வேண்டுமானால் மறுபடியும் ஹிந்துவாக மாறுங்கள், உங்களது பேரபிள்ளைங்க தெளிவான ஹிந்துக்களாக இருப்பார்கள்.

    இந்தியாவில் இஸ்லாமியர்கள் கலவரம் செய்துவிட்டு கற்பழித்துவிட்டு சொந்த ஊருக்கு போயிரல. இங்கேயா நாட்டை ஆண்டார்கள், இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சியை கொண்டுவந்தார்கள். கொடூரமான அரசன் இருந்தால் மக்கள் வெதும்பி தான் போவார்கள். அவ்வரசன் அவனது வம்சம் என்று வரிசையாக இஸ்லாமிய அரசு வரும் பொது, மதம் மாரியவனின் கொள்ளு பேரன் கொள்ளுத்தாத்தாவின் கஷ்டத்தை அறிவானா. மாட்டான். அவனுக்கு அரசவையில் போட்டி தூக்கும் வேலை கிடைத்தால் சந்தோசமா படி அலப்பான்.

    சரி pant அணிவது, கண்டபடி திரிவது கண்டதை எல்லாம் தின்பதை இந்தியன் கேவலமாக நினைத்தான் முன்னே. ஆங்கில ஆட்சி வந்து ஒரு மூன்று பரம்பரை கடந்தவுடன் மேற்கத்திய மோகம் இங்கும் தொத்திக்கொள்ளவில்லையா.

  110. சாரங்கன்!

    //நீங்கள் அதை அறிவீர்களா. அதே போல குரான் என்ற புத்தகத்தால் எப்படி கடவுளை அறிந்து கொள்ள முடியும். அறிந்தால் தானே தெளிவாக சொல்ல முடியும். குரானால் கடவுளை அறிய முடியும் என்றால் குரான் கடவுளை விட பெரியது என்றாகிவிடும். ஓகே வா.//

    ரொம்பவும் குழம்பிட்டேள்…..

    குர்ஆனை முகமது நபி தனது சுயத்தில் எழுதியிருந்தால் உங்கள் வாதத்தை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த குர்ஆனானது வானவர் கேப்ரயீல் மூலமாக முகமது நபிக்கு அருளப்பட்டது. அது ஒரு புத்தமாக கொடுக்கப்படவில்லை. ஒலி வடிவமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சன்னம் சன்னமாக நபிக்கு அருளப்பட்டது. அருகில் இருந்த அவரது தோழர்கள் தோல்களிலும் மரப்பட்டைகளிலும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இன்று நமது வசதிக்காக அதனை புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளோம். எனவே குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகளே!

    //இப்படி தான் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தை கூட ஆராய்ந்து, புரிந்துகொண்ட முன்னே வந்துள்ளது ஹிந்து மதம். ஹிந்துக்கள் என்றால் சும்மா தேங்காய் உடைக்கிற , தோப்புகரணம் பட்டை நாமம் போடுகிற கூட்டம் என்று லேசாக எடை போடாதீர்கள்.//

    உங்களைப் படைத்த கடவுளைப் பற்றியே தெளிவடையவில்லையே! உங்களைக் கேட்டால் நீங்கள் ஒரு கடவுளையும் அவர் பரிணமித்த விதத்தையும் சொல்வீர்கள். க்ருஷ்ணகுமாரிடம் கேட்டால் அவர் கடவுளுக்கு மணிப்பிரவாளய மொழியில் ஒரு புது விளக்கம் தருவார். அரவிந்தன் அவர் ஒரு தனி விளக்கத்தை கடவுளுக்கு தருவார்.

    ஆனால் உலகில் எந்த மொழி எந்த நாடாக இருந்தாலும் அந்த முஸ்லிமிடமும் கடவுளின் இலக்கணத்தைக் கேட்டால் அனைவரும் ஒரே மாதிரியான பதிலையே சொல்வர். ஏனெனில் உலகம் மழவதும் உள்ளது ஒரே குர்ஆன்தான். எனவே தான் இந்த ஒற்றுமை.

    //கடவுளின் பூமியில் தேவை இன்றி ரத்த ஆற்றை ஓட விடுகிறீர்களே. கடவுள் வேதனை பட மாட்டாரா. அவரே தான் இப்படி செய்யச்சொன்னார் என்றால் அவர் ரத்தம் விரும்பிகிறார் என்று அர்த்தம்.//

    கடவுள் எங்குமே ரத்த ஆறை ஓட் டச் சொல்லவில்லை. மனிதன் செய்யும் தவறுக்கு இறைவன் எப்படி பொறுப்பாக முடியும். இன்று கூட அமெரிக்காவில் பெரும் கலவரம். ஒரு கருப்பு இன இளைஞனை கொன்றதால் கலவரம் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. இதற்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும்.

    ஒரு உயிரைக் கொன்றால் முழு சமூகத்தையும் கொன்ற பாவம் உன்னை வந்து சேரும் என்று குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறதே!

  111. உயர்திரு அரிசோனன்,

    தங்கள் அறிவுரையை மிகவும் மதிக்கிறேன். ஆனால், மனிதர்கள் மேல் அன்பிருந்தால் நான் சொல்வதை புரிந்து கொள்வீர்கள். மத நல்லிணக்க கருப்பு துணியை கண்களில் கட்டிக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு மனித நல்லிணக்கம் முக்கியம். மத நல்லிணக்கம் அல்ல. இஸ்லாம், குரானை அறிவுபூர்வமாக, உளவியல்பூர்வமாக அணுகினால் நான் சொல்வது இங்கு எழுதும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு புரியும்.

    முஸ்லிம்கள் இஸ்லாம் விஷ தாக்குதலுக்கு ஆளானவர்கள். மிகக் கீழே இறங்கி அவர்களோடு வாதம் புரிகிறீர்கள். அறிவுக்கு ஒவ்வாத இடத்தில நின்று. மிக மிக அற்பத்தனமான, மூடத்தனமான காரணங்களுக்காக (பயம், சுவன விருப்பம் etc) அவர்கள் தங்களை சுற்றி இறுக்கமாய் முள்வேலி போட்டுகொண்டிருக்கிறார்கள். வலியில், பயத்தில் இருக்கும் மனிதர்கள். அற்ப பயம்களையும், மூடத்தனத்தையும் நாம் குறைவாக எடை போடக்கூடாது. இந்திய முஸ்லிம்களை ஹிந்து பண்பாடு/கலாச்சாரம் மென்மைபடுத்தி இருக்கிறது. ஆனால் விஷம் அதன் வேலையை செய்யும். இந்த தொடர் அதையே சொல்கிறது.

    ஒரு வசனம் உண்டு. முஸ்லிமின் உடல் தங்கத்தாலேயே ஆகி இருந்தாலும் புட்டம் நெருப்பால் ஆனது என்று.

    1. குரானில்/ஹதீஸில் யூதர்களை பற்றி சொன்னதை படிக்கவும். யோசிக்கவும்.
    2. குரானில் உள்ள ‘அறிவியல்’ படியுங்கள். சிரியுங்கள்.
    3. முகமது உலக அழிவுக்கு எப்போது நாள் குறித்தார் என்பதையும் தேடி படியுங்கள்.

    உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான சூழல் மெல்ல உருவாகி வருகிறது. முஸ்லிம்கள் வெளியேறினால் கொலை செய்யப்பட முடியாது என்ற நிலையில் பெரும் எண்ணிக்கையில் வெளியே வருவார்கள். நெருப்புக்கு தப்பியவர்களை, நோயிலிருந்து மீண்டவர்களை நெஞ்சாரத் தழுவி வரவேற்போம். அதுவரை விவேகிகளாய் இருப்போம்.

  112. சுவன பிரியரே

    //
    உங்களைப் படைத்த கடவுளைப் பற்றியே தெளிவடையவில்லையே!
    //

    நீங்கள் தெளிவு அடைந்து விட்டதாக நினைத்தால் நீர் மிகப் பெரியவர்.

    //
    ஒரு உயிரைக் கொன்றால் முழு சமூகத்தையும் கொன்ற பாவம் உன்னை வந்து சேரும் என்று குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறதே!
    //
    இது குரான் சொல்லவில்லை. talmud என்பதிலிருந்து காபி அடிக்கப்பட்டது. இது அறியாமல் முகம்மத்து உளறிக் கொட்டினார்.

    அல்ல ரத்தகிலரியை கிளப்பினார் என்பதற்கான ஆதாரம் காட்டினால் அதற்க்கு என்றுமே நீங்கள் பதில் தர மாட்டீர். ஒரு வாரம் கப் சிப் அப்புறம் மறுக்க வந்து மல்லாக்க படுத்துகிட்டு கத்துவீர். பல தரவ பாத்தாச்சு சகோ.

    ஒவ்வொரு ஹிந்துவும் கடவுளை பற்றி ஒவ்வொரு மாதிரியாக சொல்வான் என் என்றால் கடவுள் என்பது ஏட்டு சுரைக்காய் கிடையாது . படித்ததை வாந்தி எடுக்கும் பழக்கம் ஹிந்ட்துவுக்கு இருக்காது. ஹிந்து அன்பாவத்தில் கடவுளை காண்கிறான். ஒரே சத்தியமாக இருப்பினும் அனுபவம் எப்பொழுதுமே வேறுபாடும். அதனால் தான் ஒவ்வொரு ஹிந்துவுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு. நீங்களோ tare recorder, mike set போட்டு கத்தத்தான் செய்வீர்கள்.

    // ஆகா குரானின் வசனங்கள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகளே //

    இதை தான் சொல்லி மாட்டிக் கொள்ளாதீர்கள் என்றேன். சரி விடுங்கள் இப்பொழு தான் நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள் தெளிவு பிறந்தால் சரி. தர்க்கம் தர்க்கம் என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே, நான் முன்வைத்த கேள்வி மெய்யாலுமே தர்க்கம் சார்ந்த கேள்வி. முதலில் அதை விளங்கிக் கொள்ள முயலுங்கள். for that you need to unlearn the semetic way of thinking first

  113. சுவனப்பிரியன்,

    //குர்ஆனை முகமது நபி தனது சுயத்தில் எழுதியிருந்தால் உங்கள் வாதத்தை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த குர்ஆனானது வானவர் கேப்ரயீல் மூலமாக முகமது நபிக்கு அருளப்பட்டது. அது ஒரு புத்தமாக கொடுக்கப்படவில்லை. ஒலி வடிவமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சன்னம் சன்னமாக நபிக்கு அருளப்பட்டது. அருகில் இருந்த அவரது தோழர்கள் தோல்களிலும் மரப்பட்டைகளிலும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இன்று நமது வசதிக்காக அதனை புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளோம். எனவே குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகளே!//

    யூதர்கள், கிறிஸ்தவர்கள் அரேபியர்களிடமிருந்து தான் கேள்விப்பட்டதையும் தன் சொந்த கற்பனைகளையும் 23 வருடங்களாக ஜிப்ரீல் மூலம் வஹி வருகிறது என்று சொல்லி மூடர்களை ஏமாற்றி முஹம்மது தேவைக்கு ஏற்ப அல்லாஹ் சொல்கிறான் என்று கதைவிட்டுக்கொண்டு இருந்தார். அதற்கு குரான் என்று பெயரும் வைத்தார். குரான் அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல, அது வெறும் முஹம்மதின் பொய்கள் அடங்கிய புத்தகம். பெண்களும், செல்வங்களும் அதிகாரமும் அடைவதற்காக அவர் அப்படி செய்தார்.

    //உங்களைப் படைத்த கடவுளைப் பற்றியே தெளிவடையவில்லையே! உங்களைக் கேட்டால் நீங்கள் ஒரு கடவுளையும் அவர் பரிணமித்த விதத்தையும் சொல்வீர்கள். க்ருஷ்ணகுமாரிடம் கேட்டால் அவர் கடவுளுக்கு மணிப்பிரவாளய மொழியில் ஒரு புது விளக்கம் தருவார். அரவிந்தன் அவர் ஒரு தனி விளக்கத்தை கடவுளுக்கு தருவார். //

    கடவுளை புரிந்து கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட அனுபவம். தாங்கள் புரிந்து கொண்டதை ஹிந்துக்கள் கூறுகின்றனர். அதுதான் சரியானது.

    //ஆனால் உலகில் எந்த மொழி எந்த நாடாக இருந்தாலும் அந்த முஸ்லிமிடமும் கடவுளின் இலக்கணத்தைக் கேட்டால் அனைவரும் ஒரே மாதிரியான பதிலையே சொல்வர். ஏனெனில் உலகம் மழவதும் உள்ளது ஒரே குர்ஆன்தான். எனவே தான் இந்த ஒற்றுமை.//

    எவனோ ஒரு காட்டுமிராண்டி அறிவில்லாமல் உளறியதை எக்காலத்துக்கும் பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பது ஹிந்துவின் வழிமுறை அல்ல.

    //கடவுள் எங்குமே ரத்த ஆறை ஓட் டச் சொல்லவில்லை. //

    உண்மைதான். ஆனால் அல்லாஹ் குர்ஆனில் ரத்த ஆறை ஓட விடும்படி முஸ்லிம்களுக்கு பல வசனங்களில் கட்டளை இடுகிறான். ரத்தத்தை பூமியில் சிந்தாமல் எவரையும் சிறை பிடிப்பது நபிக்கு ஆகுமானதல்ல என்று ஒரு குரான் வசனம் கூறுகிறது. முஹம்மது சொன்ன அல்லாஹ் இறைவன் அல்ல என்பது உண்மைதான்.

    //ஒரு உயிரைக் கொன்றால் முழு சமூகத்தையும் கொன்ற பாவம் உன்னை வந்து சேரும் என்று குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறதே!//

    இது யூதர்களின் வேத வசனம். அதை முஹம்மது அப்படியே காப்பி அடித்து குர்ஆனில் கூறினார். இதற்கு ஆதாரம் வேண்டுமானால் தருகிறேன். தனக்கு அதிகாரம் இல்லாதபோது தன்னை நல்லவனாக காட்டிக்கொள அவர் இப்படி கூறினார். இது அறிவுக்கு பொருந்தாத வசனம். ஒரு உயிரை கொல்வது எப்படி மனித இனத்தையே கொல்வதற்கு சமமாகும்?

  114. நண்பர் மீரான் சாஹீப் சொல்கிறார் ” நாங்கள் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டிய சகாதிலும் வழிபோக்கர்கள் அகதிகள் என்ற பிரிவில் எல்லா மக்களும்தான் வருவார்கள்.முஸ்லிகளுக்கு மட்டும் என்றெல்லாம் இல்லை”.

    இது ஒரு கடைந்தெடுத்த பொய் அல்லது சவுதி அரேபியர்கள் இதை சரியானபடி கடைபிடிப்பதில்லை. எந்த சவுதிஅரேபியனும், முஸ்லிமும் சகாது பணத்தை வேற்று மதத்தினருக்கு எக்காரணம் கொண்டும் கொடுப்பதில்லை, எனது அலுவலகத்தில் பணிபுரிந்த முஸ்லிம் அல்லாத கடைநிலை ஊழியர்கள் இதை மனம் வெதும்பி பல முறை என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்,

    நான் சவுதியில் பார்த்தவரை, கேட்டவரை, படித்தவரை, சகாது பணம் ஒரு முஸ்லிமால் இன்னொரு முஸ்லிமுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். இது ஒன்றும் சம தர்ம சமுதாயம் காண்பதற்கான ஒரு உபாயம் அல்ல,

    என்றெண்டும் அன்புடன்,
    பா. முரளி தரன்.

  115. ஜெனாப் சுவனப்ரியன்,

    \\\\ ஒலி வடிவமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக சன்னம் சன்னமாக நபிக்கு அருளப்பட்டது. அருகில் இருந்த அவரது தோழர்கள் தோல்களிலும் மரப்பட்டைகளிலும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இன்று நமது வசதிக்காக அதனை புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளோம். எனவே குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகளே! \\\

    இது அனைத்தும் இஸ்லாமியர்களின் நம்பிக்கை. உங்களது நம்பிக்கைகளை நீங்கள் உயர்வாகக்கொள்வது என்பது எமக்கு விவாதத்துக்குறியதன்று. எத்தை வேண்டுமானாலும் நீங்கள் நம்பிக்கொள்ளுங்கள்.

    வெறும் நம்பிக்கைகளை வாதத்திற்கு முன் வைப்பது ஹாஸ்யபூர்வமானது.

    ஹிந்துஸ்தானத்தில் தழைத்த சமயங்கள் அனைத்திலும் கடவுள் வெறும் நம்பிக்கையின் பாற்பட்டு ஏற்கப்படவில்லை. ஒரே சமயத்தின் பற்பல கிளைச் சமயங்களிலும் பற்பல சமயங்களினூடேயும் கடவுளைப் பற்றி பெரும் வாத விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.

    நம்பிக்கையின் பாற்பட்ட ஒரு புஸ்தகத்தினுள் மட்டிலும் உறைந்து போயுள்ள ஒரு மதத்தில் விவாதம் என்பதற்கு எங்கு சாத்யக்கூறு உள்ளது. இஸ்லாத்தில் விவாதம் எப்போதெல்லாம் எழுந்ததோ அப்போதெல்லாம் என்னென்ன அரங்கேறியது உலகமெங்கும் என்பது சரித்ரம்.

    \\\\\ ஆனால் உலகில் எந்த மொழி எந்த நாடாக இருந்தாலும் அந்த முஸ்லிமிடமும் கடவுளின் இலக்கணத்தைக் கேட்டால் அனைவரும் ஒரே மாதிரியான பதிலையே சொல்வர். ஏனெனில் உலகம் மழவதும் உள்ளது ஒரே குர்ஆன்தான். எனவே தான் இந்த ஒற்றுமை.\\\\கடவுள் எங்குமே ரத்த ஆறை ஓட் டச் சொல்லவில்லை. மனிதன் செய்யும் தவறுக்கு இறைவன் எப்படி பொறுப்பாக முடியும்\\\ஒரு உயிரைக் கொன்றால் முழு சமூகத்தையும் கொன்ற பாவம் உன்னை வந்து சேரும் என்று குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறதே!\\\\

    ஐ எஸ் ஐ எஸ் காரர்கள் / வஹாபியர்கள் அனைவரும் கொடும்பாவிகள் என்று சொல்லிவிடுங்களேன். ரத்த ஆறை வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடச் செய்வது இவர்கள் தானே. ஒருவேளை இவர்களது இறைவனும் இஸ்லாமிய இறைவனும் வேறோ?

    என்னே ஒற்றுமை ஐயன்மீர். உலகத்தில் முஸ்லீம்கள் மிக அதிகமாகக் கொல்லப்படுவது தமது சொந்த முஸ்லீம் சஹோதரர்களாலேயே………. என்ற சுட்டெரிக்கும் உண்மையானது நீங்கள் சொல்லும் ஒற்றுமை எம்மாம் பெரிய நீர்க்குமிழி என்று புரிய வைக்கிறது.

    \\\ இன்று கூட அமெரிக்காவில் பெரும் கலவரம். ஒரு கருப்பு இன இளைஞனை கொன்றதால் கலவரம் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. இதற்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும். \\\

    இந்த அமேரிக்காவே சுத்த மோசம். ஆனால் உலகம் முழுதும் இஸ்லாமிய சஹோதரர்கள்……….. வஹாபி சுன்னி முஸல்மாணியர்………… தாலிபானி தேவ்பந்தி சுன்னி முஸல்மாணியர் ……………..இத்யாதி இத்யாதிகள்…………………. ஷியாக்களை மற்றும் அஹ்மதியாக்களை போட்டுத் தள்ளுவதற்கு…………… ஒருவரை ஒருவர் பரஸ்பரம் போட்டுத் தள்ளுவதற்கு…………… சவூதி ராஜாங்கத்திடம் காசு வாங்கி…………… க்ரயம் செய்யும் தளவாடங்கள் அனைத்தும்…………………அந்தக்காசில் அமேரிக்கர் சந்தோஷமாக முஸல்மாணியரைப் போட்டுத்தள்ள ரகம் ரகமாகக் கொடுக்கும் ஆயுதங்களே. வாழ்க இஸ்லாமிய ஒற்றுமை. வளர்க இஸ்லாமியரின் அமேரிக்க வெறுப்பு.

  116. ஒரு தத்துவ கருத்து ஆழமானதாக , இருந்தால் அதன் மேல் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கும். Ba Ba Black sheep , happy birth day to you உலகம் பூர ஒரே மாதிரின் தான் பாடுவார்கள், ஆஹா என்ன ஒற்றுமை என்ன ஒற்றுமை,

    ஒரு அற்புதத்தை பார்த்தல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் வரும். கடவுள் ஒரு அற்புதம். ஒரே மாதிரி இருந்தால் அதற்கு பெயர் mechanical. சட்டி பானையை பார்த்தால் தான் அனைவருக்கும் ஒரே அனுபவம் வரும்.

    கடவுள் என்பது வெறும் பொருள் அல்ல அறிந்து கொள்வதற்கு. ஒரு மொழியால் ஒருவரை வர்ணித்து/அறிந்து விட முடியுமென்றால் அம்மொழியை விட அவர் சக்தி குறைந்தவர் தானே. கடவுள் என்பது ஒரு மிக பெரிய தத்துவம் அதை உங்களால் எம்மொழியை கொண்டும் விளக்க முடியாமல் போக வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் எப்படி எல்லாவற்றையும் கடந்து இருப்பார். எல்லாவற்றையும் கடந்து இருப்பவரை மொழியோ, பார்வையோ, கேல்திரனோ, மனதோ ஆண்ட முடியாது.

  117. //Ba Ba Black sheep , happy birth day to you உலகம் பூர ஒரே மாதிரின் தான் பாடுவார்கள்//

    அருமை. 🙂 இதே போல் யோசித்தால், உலகத்தில் ஏப்பம், அபான வாயு வெளியேற்றங்கள் ஒரே மாதிரி சப்தமிடுவதாக கேள்வி. உலகில் யாரை கேட்டாலும் அச்சு பிசகாமல் ஒரே மாதிரி விட்டு காட்டுவார்கள். மொழிச்சிக்கலும் கிடையாது. ஒருவேளை அல்லா இந்த புர்ரான்-ஐ காலம் காலமாக அனுப்பியும் யாரும் குறித்து வைத்துக்கொள்ளாமல் விட்டதை நினைத்தால் எனக்கும் இப்போது வஹி வருவது போல இருக்கிறது.

  118. ONE MORE FEATHER ON S.P’S CAP. TODAY TIMES OF INDIA; 80 YAZIDIS WERE KILLED BY ISIS. IN COMING DAYS ALSO. SO MANY MASSACRES WILL BE DONE BY THAT GROUP AND S.P MAY REMAIN PROUD ALWAYS.

  119. கருணா நிதியின் Facebook பக்கத்திலிருந்து எடுத்தது!

    மதரசா சார்புடைமையே மதச் சார்பின்மை!
    மதர் தெரசா சார்புடைமையும் மதச்சார்பின்மை!!
    தமிழ் மரபு, பாரத மரபு ஆகிய
    மரபுசார்புடைமை, மதச்சார்பின்மை ஆகாது!

  120. பதிவுகள் மிகவும் சிறிய font size ல் ( 6 ) தெரிவதால், படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பெரிதாகத் தெரிவதற்கு என்ன செய்ய வேண்டும் ?

  121. குமார் , நீங்கள் பயன்படுத்தும் பக்கத்தில் எந்த ஆப்ஷனில் zoom – என்று ஒரு வாய்ப்பு உள்ளது என்று பார்த்து, அந்த zoom – இல் போய் உங்களுக்கு தேவையான சதவீதம் எழுத்து அளவை கூட்டிக்கொண்டு படித்தால் பெரியதாக தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *