சிறந்த இந்து சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டனின் சமீபத்திய மகத்தான பேருரை.
உலகெங்கும் உள்ள தமிழ் இந்துக்கள், குறிப்பாக முருகபக்தர்கள் அனைவரும் பார்த்து, கேட்டு, உள்வாங்க வேண்டிய அத்தனை முக்கியமான விஷயங்களும் இந்த ஒரு மணி நேர வீடியோவில் உள்ளன.
வேத வேர்களில் தொடங்கி அண்மைக் காலத்தில் வாரியார் சுவாமிகள் வரையிலும், அதற்கப்பாலும் தொடர்ந்து கொண்டிருக்கும் முருகன் எனும் ஆன்மீகப் பிரவாகத்தின் வீச்சை அற்புதமாக வெளிப்படுத்துகிறார் உரையாளர்.
“முப்பாட்டன் முருகன்” என்ற ரீதியிலான சமீபத்திய பொய்ப் பிரசாரங்களின் உண்மையான நோக்கத்தையும் சதித்திட்டத்தையும் மிகத் தெளிவாக விளக்குகிறார். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை நேர்த்தியாகப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள அழகிய ஓவியங்கள் இடையிடையே தோன்றி நெஞ்சை அள்ளுகின்றன.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).
