உள்பொருள் என்பது என்றும் எவ்வகையாலும் மாறத பொருள். அதனைச் ‘சத்’தென்றும் ‘மெய்ப்பொருள்’ என்றும் கூறுவர். அது தோற்றக் கேடுகளில்லாத நித்தியப்பொருள் அதுவே ‘பிரமம்’ என்று வேதாந்திகளும் சிவம் என்று சித்தாந்திகளும் கூறுவர்.. பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சிவமே குருவாக எழுந்தருளி வந்து, ‘அது நீ” எனும் உபதேசத்தை அருளி உய்விப்பதைக் கூறுகின்றது. குருபரம்பரை அவர் வழியே மானிடத்தை உய்விக்க வந்தருளுகின்றது. கேவலாத்துவித, சுத்தாத்துவித மரபுக ளெல்லாம் அவர் வழி வந்தனவே… மகாவாக்கியம் ‘சர்வ துக்க நிவிர்த்தி பரமானந்த ப்ராப்தி” அளிப்பதால் ‘இனிய உபதேசம் ஆயிற்று. சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம் மகாவாக்கியத்தினைப் “பெரும்பெயர்” என்று கூறுகின்றது…
View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 3ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10
இயக்கம் என்றாலே வெளிப்படுவது, அல்லது சக்தியின் தொழில் என்றாகிவிடுகிறது. அதனால் சக்தியிடம் சரண் புகுவதே சரியான வழி. சரணடைந்ததால் சக்தி போல் ஆகி ‘சித்’தாகிய இறைவனை அடைந்து, பேரின்பப் பெருவெள்ளமாகிய ஆனந்தத்தை அறிவுடன் இருக்கும் நிலையில் உணரலாம்… அருள் தரும் பராசக்தி ஒன்றே என்றாலும் காணப்படும் இயற்கைத் தோற்றங்களை ஒட்டி, பெண் தெய்வங்களையும் அந்த முனிவர்கள் கண்டார்கள். தன்னை அறிவதே அறியப்படும் அனைத்திலும் முதன்மையானது என்பதால் அறிவை வழங்கும் பரம்பொருளாகச் சரஸ்வதியைக் கருதினார்கள்…
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்
சோம்பலும், பயமும், தூக்கமும் தாமச குணத்தினின்று பிறப்பவை. பல மனிதர்களுக்கும் வாழ்க்கையில் பல சமயங்களில் தமோகுணத்தின் ஆளுகைக்குக் கீழ் சென்று மீளமுடியாதபடி அதில் உழலும் நிலை ஏற்படுகிறது. அதை உடைத்துக் கொண்டு வெளிவருவதற்கான உறுதியும் அருளும் தெய்வம் தரவேண்டும் என்று இங்கே வேண்டுகிறார்… சத்வ குணத்தால் தூண்டப்பட்டு நிகழும் செயல்கள் அனைத்தும் சாதாரணத் தளத்திலிருந்து உயர்ந்து யக்ஞமாக, வேள்வியாக, தெய்வத்தின் செய்கைகளாக, கர்மயோகமாக ஆகிவிடுகின்றன… மகாமாயையாகிய பராசக்தி. இவ்வுலகனைத்தும் அவள் விளையாட்டன்றி வேறில்லை. அவளே இப்பாடலில் பாரதி போற்றும் கண்ணம்மா…
View More பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 4
கழுதைக்கட்சி ஆளுங்க நிறைய இருக்கற ஊரிலே குறைச்சலான வாக்குச் சாவடிங்களை வச்சா, நிறையப்பேரு ஓட்டுப்போட முடியாதுல்ல?[i] வரிசைலே நிறையப்பேரு இருப்பாங்க, வேலைக்கும் போகணும், மணிக்கணக்குலே நின்னு ஓட்டுப்போடவும் முடியாது. அதுனால கூட்டத்தைப் பார்த்துட்டு, வரிசைலே நிக்காம போயிடுவாங்க. இப்படி எதிர்க்கட்சி ஓட்டு அதிகமா விழாமப் பார்த்துக்கலாம், இல்லையா?இது என்ன அநியாயமா இருக்குன்னு வருத்தப்படாதீங்க. இதெல்லாம் அரசியல்ல சகஜம். இதைவிடத் தில்லாலங்கடி வேலையெல்லாம் நிறைய நடக்குது. அதைப்பத்தி நம்ப பேசக்கூடாது. ஆனா, எதுவும் சட்டத்துக்குப் புறம்பானதில்லே. பெரிய இடத்து விவகாரம் விட்டுடங்க.
View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 4அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 3
ஒரொரு மாநிலத்துக்கும் அங்கே இருக்கற மாநிலச் செயலர்தான் (Secretary of State) வாக்குச் சீட்டுகளை எண்ணி, பட்டியலிட்டு, முடிவுகளுக்குச் சான்றளிக்கவேண்டும். ஒவ்வொரு கவுன்ட்டியிலேயும் – அதுதாங்க, இந்தியா மாவட்டம் மாதிரி — ஒரு பதிவாளர் இருப்பார். வாக்குகளைச் சேகரித்து, அதை எண்ணி, பட்டியல்போட்டு, அதுக்குச் சான்றளித்து, மாநிலச் செயலருக்கு அனுப்பவேண்டியது அவர் பொறுப்பு. ஒரு மாநிலத்திலே (டெக்ஸாஸ்) 254 கவுன்ட்டிகள், வாஷிங்டன் டி.சி.லே ஒரே ஒரு கவுன்ட்டிதான்.
View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 3அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 2
டெமாகிரடிக் பார்ட்டி, குடியரசுக் கட்சியைவிட (ரிபப்ளிகன் பார்ட்டி) நிறையச் செலவு செஞ்சிருக்காங்க.[iii] மொத்தம் $14 பில்லியன் (லட்சத்து நாற்பதாயிரம் கோடி டாலர் – ஒருகோடியே, எழுலட்சம் கோடி ரூபாய்) செலவு. உடனே இத்தனை பணமான்னு வாயைப் பிளக்காதீங்க, கூட்டிக் கழிச்சுப்பார்த்தார், அமெரிக்காவுலே ஓட்டுப்போட்ட ஒருத்தொருத்தருக்கும் சுமாரா $88.61தான் (ரூ.6378.20தான்!) செலவு பண்ணியிருக்காங்க. இந்தப்பணத்திலே நாலுபேரு உள்ள ஒரு குடும்பம் சுமாரான ஓட்டலுக்குப் போயிச் சாப்பிட்டா ஒருவேளை சாப்பிடலாம். அங்கே அம்மா உணவகம்மாதிரி இங்கே இருக்கற மக்டானல்ஸ்ல சாப்பிட்டா ரெண்டுவேளை — அவ்வளவுதான்!
View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 2அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்!
அமெரிக்காவில் அப்படியல்ல. நாடு முழுவதற்கும் ஒரு தேர்தல் கமிஷன் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மாநிலமும் அங்கு நடக்கும் தேர்தலுக்குப் பொறுப்பேற்கிறது.
அரிசோனாவிலே, நோயாளிங்க மட்டுமில்லாம, உல்லாசமா புகைக்கிறவங்களும் கஞ்சா வாங்க அனுமதிக்கலாமான்னு கேட்டு ஒரு பிரேரேபணை — அரசியல்வாதிங்க கருத்துச்சொல்லாம நழுவிட்டாங்க. வேணும்னாலும் தப்பு, வேணாம்னாலும் தப்பு. ஆக, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு விட்டுட்டாங்க. அனுமதி கிடைச்சாலும், கிடைக்காட்டாலும் அரசியல்வாதிங்க மாட்டிக்கமாட்டாங்க.
மேதா ஸூக்தம் – தமிழில்
வேதங்களில் வரும் மேதா என்ற என்ற பெண்பாற்சொல் உள்ளுணர்வு (intuition), அறிவு (intelligence), மன ஆற்றல் (mental vigor) ஆகியவற்றைக் குறிக்கிறது. இதிலிருந்தே தமிழில் மேதை, மேதைமை ஆகிய சொற்கள் வருகின்றன. அறிவையும் அதனால் விளையும் ஆற்றலையும் ஒரு சக்தியாக, தேவியாக போற்றுகிறது இந்த அழகிய வேதப்பாடல். வேதங்களில் இவ்வாறு போற்றப்படும் மேதா தேவி என்னும் தெய்வீக சக்தியே சரஸ்வதி, கலைமகள், பாரதி என்று ஒவ்வொரு இந்து இல்லங்களிலும் உள்ளங்களிலும் வழிபடப் பெறுகிறாள்…
View More மேதா ஸூக்தம் – தமிழில்வீடுபெறச் செல்!
“சுயநலமிகளே, நீங்கள் நல்லாயிருக்க மாட்டீர்கள்!” என்று சபித்தார், சிங்காரவேலனர். அவரை யாரும் கவனிக்கவில்லை. ஏனோ, அவரைத் தூக்கிவிட மற்றவருக்கு இரக்கம் வரவில்லை. அந்தக் கூட்டத்தில் அவரைக் குனிந்து தூக்கினால் தம்மை மற்றவர்கள் மிதித்துத் தள்ளிவிட்டால் என்ன ஆகும் என்பதே அவர்கள் மனதில் தோன்றித் தடுத்தது. சிங்காரவேலன் கீழே கிடப்பதைக் கவனிக்காமல் அவரை மிதித்துத் தள்ளியவாறே பலரும் செல்லக் கண்டனர். அதைப் பார்க்கச் சகிக்காமல் மற்றவர் ஸ்ரீநிவாஸைப் பின்தொடர்ந்தனர்.
View More வீடுபெறச் செல்!சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய ஸ்தோத்திரங்களில் உன்னத இடத்தை வகிப்பவை சுவாமி விவேகாநந்தர் அருளியவை. கேட்பதற்கே மிகவும் எழுச்சியூட்டும் துதியாக அமைந்தது ‘கண்டன பவ பந்தன’ என்னும் துதி. பெரும் சமுத்திர அலைகளின் அணி போல் திரண்டு எழும் நாத அலை போன்றே பாடுங்கால் அமைவது… வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவருக்கு நீஞ்சிக் கரை சேரும் படியாக ஒரு புணை ஒன்றைக் கொடுத்தால் அதைக் கொண்டு கரையை நோக்கி நீஞ்சாமல் அடித்துப் போகும் வெள்ளத்தின் ஓட்டத்தின் வழியிலேயே போவது சுலபமாக இருக்கிறது என்று கொண்டு அப்படியே கடலில் போய் மூழ்கிவிடும் அபத்தமாகத்தான் இந்த ஜீவன் தனக்கு இயற்கையில் கொடுக்கப்பட்ட திறமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது…
View More சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்