வன்முறையே வரலாறாய்…- 25

இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு சிறிது காலம் முன்பு நடந்த வன்முறைகள் பயங்கரமானவை.. ராவல்பிண்டியைச் சூழ்ந்திருந்த ஒரு கிராமத்தில், மதம் மாற மறுத்த ஒரு கிராமத்திலிருந்த அத்தனை இந்து மற்றும் சீக்கியர்கள், கிராமத்தின் மத்தியில் குடும்பத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களைச் சுற்றிலும் விறகுகளை அடுக்கிய முஸ்லிம் வெறியர்கள் உயிருடன் அவர்களை எரித்துக் கொன்றார்கள். இளம்பெண்களைத் தூக்கி கொண்டு ஓடிய முஸ்லிம் காலிகள் அவர்களைத் திறந்த வெளியிலேயே கற்பழித்தார்கள். இதனைக் கண்டு மனம் வெதும்பிய பல இந்து, சீக்கியப் பெண்கள் உடனடியாகத் தற்கொலை செய்து கொண்டார்கள்… பிரிவினை அங்கீகரிக்கப்பட்ட பல மாதங்களுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் அங்கிருந்த இந்து மற்றும் சீக்கியர்களின் மீது சிறிதும் மனிதத்தன்மையற்ற பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். குர்பச்சன் சிங் தாலிப் அவரது Muslim League Attacks on Sikhs and Hindus in the Punjab 1947 என்னும் புத்தகத்தில் பஞ்சாப் பகுதியில் மட்டும் நடந்த இதுபோன்ற 592 சம்பவங்களைப் பட்டியலிடுகிறார். அவை அத்தனையும் முஸ்லிம்களால் “மட்டுமே” நடத்தப்பட்ட தாக்குதல்கள். ஒரு இடத்திலும் இந்து/சீக்கியர்கள் இது போன்ற வன்முறைச் சம்பவங்களைத் தாங்களாக முன்னெடுத்து நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….

View More வன்முறையே வரலாறாய்…- 25

வன்முறையே வரலாறாய்…- 24

1947 மார்ச் 6-ஆம் தேதி அம்ரித்சருக்கு அருகில் ஷரிஃபுரா பகுதியில் ஒரு ரயிலை நிறுத்தி அதில் பயணத்துக் கொண்டிருந்த இந்து மற்றும் சீக்கியர்களைக் கொன்றார்கள். கொல்லப்பட்ட இந்து/சீக்கியர்களின் பிணங்களுடன் அந்த ரயில் அமிர்த்சர் ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது. முஸ்லிம்களின் கொலை வெறியாட்டம் அமிர்த்சரிலும் தொடங்கியது. அமிர்த்சர் மருத்துவமனை பிணங்களால் நிரம்பி வழிந்தது… மார்ச் 7, 8 தேதிகளில் முஸ்லிம் லீக், பதினொன்று இந்து மற்றும் சீக்கியப் பிரதி நிதிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியே ஏற்படுத்துவது அந்தப் பேச்சு வார்த்தைகளின் நோக்கம். ஆனால் அந்தப் பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்க வந்த பிரதி நிதிகளில் ஏழு பேர்களைப் பிடித்த முஸ்லிம் கும்பலொன்று அவர்களை அந்த இடத்திலேயே படுகொலை செய்தது. அங்கிருந்து இரண்டு பிரதிநிதிகள் மட்டுமே தப்பிச் சென்றார்கள்….

View More வன்முறையே வரலாறாய்…- 24

வன்முறையே வரலாறாய்…- 23

தேசப் பிரிவினையின் போது, நவகாளி காங்கிரஸ் அங்கத்தினர்களால் கல்கத்தா காங்கிரஸ் அலுவலகத்திற்கு அக்டோபர் 15, 1946-இல் அனுப்பப்பட்ட ஒரு தந்தி நடந்த பயங்கரங்களுக்கு சான்றாக உள்ளது.. நான்கு இலட்சம் இந்துக்கள் வாழ்ந்த நவகாளியில், ஏறக்குறைய 95 சதவீதம் பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம்களாக்கப் பட்டார்கள். மறுத்தவர்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்… ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் மனைவிகளும் மகள்களும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு முஸ்லிம் குண்டர்களுக்கு மணம் செய்விக்கப்பட்டார்கள். இந்துக்கள் வசித்த பல கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்தன. இந்துக் கோவில்கள் உடைத்தெறியப்பட்டன.. பீகார் முஸ்லிம் லீக் வெளியிட்ட இன்னொரு சுற்றறிக்கை முகமதலி ஜின்னாவிடம், “இந்து காஃபிர்களுக்கு இத்தனை வருடங்கள் நேரம் கொடுத்தோம். இருண்ட காஃபிரி மதமான இந்துமதத்தை அழித்து, உலகிற்கு ஒளியூட்டும் இஸ்லாத்தை நிறுவ நமக்கு நேரம் வந்துவிட்டது. அரேபியாவில் இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்தது போல இந்தியாவிலும் காஃப்ரி இந்துக்களைக் கொன்று இந்த உன்னத காரியத்தைச் செய்வோம்” என வலியுறுத்துகிறது…

View More வன்முறையே வரலாறாய்…- 23

வன்முறையே வரலாறாய்…- 22

1946 ஆகஸ்ட்: முகமது அலி ஜின்னா வாளுடன் இருக்கும் படத்துடன் “…உங்களது வாட்களை எடுக்கத் தயாராகுங்கள்….ஓ காஃபிர், நீ ஒன்றும் பெருமிதப்பட்டுக் கொள்ளாதே. உனது அழிவு காலம் நெருங்கி விட்டது; படுகொலைகள் இனித் துவங்கவிருக்கிறது” என்ற செய்தி தாங்கிய சுற்றறிக்கை ஒன்று கல்கத்தா மேயரால் வெளியிடப்பட்டது. கிரிமினல்களையும், கொலைகாரர்களையும் ஒன்று திரட்டிய முஸ்லிம் லீக், அவர்களுக்குச் சகலவிதமான பயங்கர ஆயுதங்களையும் வழங்கியது… இந்தச் சம்பவங்களை நினைவு கூறும் லாகூர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி கோஸ்லா, “தெருக்களெங்கும் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன….இந்துக் குழந்தைகள் கூரைகளின் மீதிருந்து தூக்கியெறியப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்…பல குழந்தைகளும், மற்றவர்களும் கொதிக்கும் எண்ணை ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டார்கள். இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுப் பின்னர் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள்” என்கிறார்…

View More வன்முறையே வரலாறாய்…- 22

வன்முறையே வரலாறாய்… – 21

முஸ்லிம்களுக்கென தனியாக பாகிஸ்தான் பெற வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைக்கும் கவிஞர் அல்லமா இக்பால், இஸ்லாமிய மதத்திற்கும், மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கும் ஒருபோதும் ஒத்துவராது என விளக்குகிறார்.. 1947-ஆம் வருடம், முஸ்லிம் லீக் கட்சி முஸ்லிம்களிடையே வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையானது, “ஒவ்வொரு முஸல்மானும் ஐந்து இந்துக்களுக்கான உரிமையைப் பெற வேண்டும்; ஏனென்றால் ஒவ்வொரு முஸல்மானும் ஐந்து இந்துக்களுக்குச் சமமானவன்” என்றது… “நேரடிப் போராட்டம்” (Direct Action) என்பது வன்முறையானதா அல்லது வன்முறையற்றதா எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் நழுவும் முகமதலி ஜின்னா, “நான் யாருக்கும் அறத்தைக் குறித்துப் போதிக்கப் போவதில்லை” என்று சொல்லுகிறார்…

View More வன்முறையே வரலாறாய்… – 21

சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்

சென்னையில் இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைதாகியுள்ள நிலையில், மீதமுள்ள சக பயங்கரவாதிகளைக் காப்பாற்ற, காவல்துறையை திசைதிருப்புவதற்காக இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது… மே 1 முதல் மூன்று நாட்களுக்கு ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்வதைக் கணக்கிட்டு, மோடியின் சுற்றுப்பயணத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கலாம்… கைதாகியுள்ள ஜாகீர் ஹுசேன் அளித்துள்ள தகவல்களின்படி பார்த்தால், நாட்டின் கிழக்கு கடற்கரை முழுவதிலுமே பயங்கரவாதிகள் திட்டமிட்ட முறையில் காலூன்றி இருப்பது தெரிகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம், பூம்புகார், வேதாரண்யம், காயல்குடி, கோடியக்கரை, சென்னை, எண்ணூர் பகுதிகளில் சத்தமின்றிச் செயல்படும் பயங்கரவாத ஆதரவுக் குழுக்கள் இயங்குவதாக மத்திய புலனாய்வுத் துறையே தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி கள்ளநோட்டுப் புழக்கம், தங்கக் கடத்தல், மர்ம நபர்கள் நடமாட்டம் போன்ற சமூகவிரோத நிகழ்வுகள் நடப்பதைக் கணக்கிட்டால், நம்மைச் சூழ்ந்துள்ள பயங்கர ஆபத்தின் பரிமாணம் விளங்கும்…

View More சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்

வன்முறையே வரலாறாய்… – 16

இந்தியா வந்த சூஃபிக்கள் ஏராளமான காஃபிர் இந்துக்களை தங்களின் பிரச்சாரங்கள் மூலம் “அமைதியான” முறையில் முஸ்லிம்களாக மதம் மாற்றினார்கள் என்பதற்கு வரலாற்றில் எவ்விதமான ஆதாரங்களும் இல்லை. அதையும் விட, பல சூஃபிக்கள் பிற மதத்தவர்களை அடியோடு வெறுத்ததுடன், ஜிகாதி மனோபாவமுடையவர்களாக, ஏன், அவர்களே ஜிகாதிகளாக இருந்ததாகத்தான் வரலாறு நமக்கு எடுத்துக் கூறும் உண்மை. இது அவர்கள் (சூஃபிக்கள்) வாழ்ந்த காலத்தில் இருந்த இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட வரலாறு. அவர்களின் மொழியில் சொல்வதானால், காஃபிரி இந்துக்களால் அல்ல.

View More வன்முறையே வரலாறாய்… – 16

வன்முறையே வரலாறாய்… – 15

இந்திய இஸ்லாம் சூஃபிக்களால் “அமைதியான” முறையில் பரப்பப்பட்டதாகத் இஸ்லமியக் கல்வியாளர்கள் எனப்படுவோர் தொடர்ந்து கூக்குரலிடுவதனைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிற்கு வந்த சூஃபிக்கள் அனைவரும் இந்து காஃபிர்கள் மீது புனிதப் போர் (ஜிகாத்) செய்வதற்காக வந்த படுபயங்கர ஜிகாதிகள் என்பதே வரலாறு நமக்குக் கூறும் உண்மை. எனவே அவர்களைப் பற்றி (இந்திய சூஃபிக்களை) இனி சிறிது ஆராய்வோம்.

View More வன்முறையே வரலாறாய்… – 15

வன்முறையே வரலாறாய்… – 14

எதிர்பாராத நேரத்தில் கிருஷ்ண ராயரின் படைகளைத் தாக்கிய முஸ்லிம் படைகள், கிருஷ்ண ராயரின் 10,000 படைவீரர்களைக் கொன்றார்கள். அதன்பிறகும் ரத்தம் குடிக்கும் வெறியடங்காத சுல்தான், விஜய நகரத்திலிருக்கும் அத்தனை குடிமக்களையும் பிடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான். இதனைக் கேள்விப்பட்டுப் பதறிய கிருஷ்ண ராயர், சுல்தானுடன் சமாதானம் பேச தூதுவர்களை அனுப்பி வைக்கிறார். அதனை ஃபெரிஸ்டா இவ்வாறு பதிகிறார் – “அரசர் தவறு செய்தால் ஒன்றுமறியாத அப்பாவிக் குடிமக்கள் என்ன செய்வாரகள்? என்று தூதுவர்கள் கேட்கிறார்கள். அதற்கு சுல்தான், அல்லா எல்லா சிலைவழிபாட்டார்களையும் கொன்றழிக்கச் சொல்லி (குரான் 9:5) உத்தரவிட்டிருக்கிறான். எனவே அதன்படி செய்யவேண்டியது எதுவோ அது செய்யப்படும். உலகின் எந்த சக்தியாலும் அதனை மாற்ற முடியாது என்று பதிலளித்தான்.”…

View More வன்முறையே வரலாறாய்… – 14

வன்முறையே வரலாறாய்… – 13

இந்தியாவில் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு மத்திய ஆசியா நோக்கி நடத்திச் செல்லப்பட்ட பெருவாரியான ஹிந்துக்கள் ஆஃப்கானிஸ்தானத்தின் மலைகளைக் கடக்கையில் குளிர் தாளாமால் இறந்து போனார்கள். அதன் காரணமாகவே ஆஃப்கானிஸ்தானத்து மலைகள் “ஹிந்து குஷ் (hindu killers or slayer of hindus) என்று பெயரிடப்பட்டன. இதனைக் குறித்து எழுதும் இப்ன்-பதூதா, “இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைச் சிறுவர்களும், சிறுமிகளும் அந்த மலைகளைக் கடக்கையில் பனியிலும், குளிரிலும் சிக்கி இறந்து போனார்கள்” என்கிறார்… திப்புசுல்தானின் ஜெனரலான மொபிபுல் ஹசன் எழுதிய திப்புவின் வாழ்க்கைக் குறிப்பில் (பின்னால் திப்புவின் மகனால் அது சரிபார்த்துச் செப்பனிடப்பட்டது), திப்புசுல்தான் திருவாங்கூர் போரில் ஏறக்குறைய 10,000 ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்றதுடன், 7000 பேர்களை அடிமைகளாகப் பிடித்தான் என்று குறிப்பிடுகிறான். இவ்வாறு அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் (பெரும்பாலோனோர் இந்துக்கள்) ஸ்ரீரங்கபட்டணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டுப் பின்னர் மாட்டிறைச்சியை உண்ணும்படி செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டார்கள்….

View More வன்முறையே வரலாறாய்… – 13