திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்

அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் இன்றும் குழப்பம் தொடர்கிறது. திருவள்ளுவரின் காலம், ஜாதி, சமயம், பல்வேறு குறட்பாக்கள் எடுத்தாளும் நூல்கள், கருத்துகள், சர்ச்சைகள் என பல கோணங்களிலிருந்தும் வள்ளுவனையும் குறளையும் ஆராய்ந்து தொகுத்து எழுதப்பட்டுள்ள நூல் இது. நூலாசிரியர் ஜனனி ரமேஷ் மிகுந்த முயற்சியெடுத்து, பாடுபட்டு இதை உருவாக்கியிருக்கிறார். திருக்குறள் ஆர்வலர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நூல் இது.

View More திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்

அஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணி

வெ.சாமிநாத சர்மா அவர்கள் மணி அய்யாவிடம் தனது வாழ்நாளில் பேர் சொல்லும்படி 100 புத்தகங்களாவது எழுதி விடு என்றாராம். அதனை தாரக மந்திரமாக கொண்டு தரமான ஆய்வு புத்தகங்களை மட்டும் எழுதி வருபவர். சுமார் 80 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். பெ.சு.மணி ஐயா பல்கலை கழக வளாகங்களில் பேராசிரியராக பணிபுரிந்து கை நிறைய சம்பளம் வாங்கி வேலை செய்பவருமல்ல. அஞ்சல் துறையில் இரவு முழுவதும் கடிதங்கள் பிரிக்கும் வேலையை செய்து கொண்டு பகல் முழுவதும் சைக்கிள் மிதித்து நூலகம் தோறும் சென்று தேனீ போன்று உழைத்து கொண்டு வந்த புத்தகங்கள் பல கல்லூரி பேராசிரியர்களுக்கு முன்னேறுவதற்கு இவரது புத்தகங்கள் படிக்கல்லாய் திகழ்ந்தது…

View More அஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணி

புதிய பொற்காலத்தை நோக்கி – 13

கிறிஸ்தவ மதம் உலக மக்கள் அனைவரையும் கிறிஸ்தவராக மாற்றத் துடிப்பதுபோல் கிறிஸ்தவ தேசப் பொருளாதார சக்திகள் தமது கார்ப்பரேட் பொருளாதார வடிவத்தையே உலகம் முழுவதிலும் திணிக்கத் துடிக்கின்றன. கிறிஸ்தவ தேச குளிர்பான நிறுவனங்கள் உலகம் முழுவதும் தாகத்துக்கு தனது பானத்தை மட்டுமே அருந்தவேண்டும் என்று நினைக்கின்றன. கிறிஸ்தவ தேசக் கல்வி அமைப்புகள் உலகம் முழுவதும் தனது கலாசாரம், வரலாறு, விஞ்ஞானம் இவை மட்டுமே இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறது. கிறிஸ்தவ தேச அரசியல் சக்திகள் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை மலரச் செய்யும் பெரும் சிலுவையைக் கஷ்டப்பட்டுத் தானே தோளில் சுமந்துகொண்டு தமது கைப்பாவைகளையே உலகம் முழுவதிலும் நியமித்துவருகின்றன…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 13

புதிய பொற்காலத்தை நோக்கி – 12

ஆங்கிலம், கார், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், அலோபதி மருத்துவம், அறுவை சிகிச்சைகள், மின் விளக்குகள், ஃப்ரிட்ஜ், டி.வி, செல்போன், குளிர்பானங்கள் என எதையும் பயன்படுத்தக்கூடாது. மேற்குலகின் கண்டுபிடிப்புகள் வேண்டும். மேற்குலகைப் பழிக்கவும் வேண்டும் என்றால் எப்படி நியாயம் என்று ஒரு கேள்வி இங்கு எழுகிறது. மேற்குலகினர் நம்மை முடக்கினார்கள் என்பதைச் சொல்லும் தார்மிகத் தகுதியை அரை மேற்கத்தியராக ஆகிவிட்டிருக்கும் நாம் இழந்துவிட்டிருக் கிறோம். அந்த உண்மையைச் சொல்லவேண்டுமானால் நாம் நம் கடந்த காலத்துக்குத் திரும்பியாகவேண்டும். மாட்டுவண்டி, திண்ணைப் பள்ளி, பாட்டி வைத்தியம், ஓட்டு வீடு, அரிக்கேன் விளக்கு, அரை ஆடை, பிரசவ கால மரணங்கள், மண் ரோடு, கமலை ஏற்றம், ராட்டை, கிட்டிப்புள், கபடி, மரத்தடி பஞ்சாயத்து எனத் திரும்பியாகவேண்டும். இது சாத்தியமா?…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 12

புதிய பொற்காலத்தை நோக்கி – 11

உலகம் முழுவதுமே எல்லாத் தொழில்களும் பரம்பரை வழியிலேயே கைமாற்றித் தரப்பட்டபோதிலும் பாரதத்தில் மட்டுமே அப்படி இருந்ததாகவே மெக்காலே கல்வி முத்திரை குத்தியது. ஐரோப்பாவிலும் நவீன பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகே கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்றாலும் பாரதத்தில் மட்டுமே கல்வி அனைவருக்கும் மறுக்கப்பட்டதாக அவர்கள் நம் வரலாற்றை எழுதிக் கொடுத்தார்கள். அதுவே இன்றைய அறிவுஜீவி, அரசியல் ஜீவி மட்டங்களில் மனனம் செய்யப்பட்டு முழங்கப்படுகிறது…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 11

புதிய பொற்காலத்தை நோக்கி – 10

எல்லாரும் எல்லா தொழிலையும் கற்றுக் கொண்டு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய பள்ளிக் கல்வி முறை அன்று உலகில் யாராலும் நினைத்துப் பார்க்கவே பட்டிருக்கவில்லை. எனவே இந்தியாவிலும் அது இருந்திருக்கவில்லை… அக மண முறையும், குல பந்தி – குல விருந்து முறையும் இயல்பான தேர்வாகவே இருந்திருக்கிறது. இந்துசமூகத்தில் மட்டும் கடைநிலையில் இருந்தவர்களும் இழிவான தொழிலைச் செய்தவர்களும் மேலேற முடியாமல் போய்விட்டது என்ற வாதத்தில் அர்த்தமே இல்லை. அவர்களுக்கான வெளிகள், உரிமைகள், அதிகாரங்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்திருக்கின்றன…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 10

புதிய பொற்காலத்தை நோக்கி – 9

மொழி, மதம், நிறம், இனம் போன்ற உலகெங்கும் நிலவிய குழு அடையாளம் போன்றதுதான் ஜாதி. பிற அடையாளங்கள் பெருமளவுக்குப் பெற்றோரிடமிருந்து கைமாறித் தரப்பட்டது போலவேதான் ஜாதியும் கைமாற்றித் தரப்பட்டிருக்கிறது. தொழில் புரட்சி நடப்பதற்கு முன்பு வரை உலகம் முழுவதுமே ஒருவரின் தொழில் என்பது பெற்றோரின் தொழிலாகவே அதாவது குலத் தொழிலாகவே இருந்திருக்கிறது… காலனிய அடிமைத்தனத்தில் இருந்து நாம் மீள வேண்டுமென்றால் நமது ஜாதி சமூகம் என்பது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு அவரவர் பணியை அவரவர் திறம்படச் செய்துவந்ததுதான் என்ற புரிதல் நமக்கு வேண்டும்..

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 9

புதிய பொற்காலத்தை நோக்கி – 8

அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்வதானால், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்பவர்கள் மூடரைப் பேரறிஞர் என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்களைக் கொல்ல உதவிய கருணாநிதியைத் தமிழினத் தலைவர் என்று மதிப்பார்கள். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் அவர்களுடைய அருமை பெருமைகளைப் பட்டியலிடும்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப் படுபவர்கள் எல்லாருமே திமுகவினர் என்று புரிந்துகொண்டால் அது எவ்வளவு தவறாக இருக்கும். அது போன்றதுதான் சூத்திரர் எல்லாம் வேசி மகன்கள் என்று சொல்வதும்….

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 8

புதிய பொற்காலத்தை நோக்கி – 7

பரந்து விரிந்து கிடக்கும் பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து ஓர் உண்மை தெரியவருகிறது. இந்திய கிராமப்புறங்களின் வருமானத்தில் உள்ளூர் காவல், நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றைப் போலவே கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இந்த வருமானமே உயர் கல்விக்கு மட்டுமல்லாமல் ஆரம்பக் கல்விக்கும் செலவிடப்பட்டு இருப்பதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன… ஆசிரியர்கள் எல்லாம் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். காயஸ்தர்கள், பிராமணர்கள், சதகோப், அகுரி பிரிவினர் அதிகமாக இருக்கிறார்கள். எனினும் 30 பிற ஜாதிகளில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையினர் இருந்திருக்கிறார்கள். சந்தால் ஜாதியைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் கூட இருந்திருக்கிறார்கள்…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 7

புதிய பொற்காலத்தை நோக்கி – 6

பொதுவாக நம் நாட்டில் அனைவருக்கும் கல்வியை பிரிட்டிஷார்தான் கொண்டுவந்தார்கள் என்று ஒரு பொய்யுரை பரப்பப்பட்டிருக்கிறது. சங்க காலம் தொடங்கி பிரிட்டிஷார் வருவதற்கு முன்புவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில் 70 சதவிகிதத்துக்கு மேற்பட்டவை பிராமணரல்லாதவர்களால் எழுதப்பட்டவையே… பிரிட்டிஷ் கல்வியாளர் டோப்ஸ் எழுதுகிறார் – பள்ளிக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த நிலையில் இருந்த 1822–25 காலகட்டத்தில்கூட மதராஸ் பிரஸிடென்ஸியில் படித்தவர்களின் எண்ணிக்கையானது 1800களின் இங்கிலாந்து பள்ளிகளோடு ஒப்பிடும்போது பலமடங்கு அதிகமாகவே இருந்திருக்கிறது…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 6