காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்

தேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான் அடிபணியும் நிலை… பொதுமக்களோடு சற்றும் தொடர்பில்லாத, அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும் புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா…எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது. காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர்… ” உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல, தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை பயங்கரவாதமே இந்தியாவிற்கு ஆபத்து ” என ஜிகாதிகளுக்கு நற்சான்று வழங்கி ஹிந்துமக்களை பயங்கரவாதியாக சித்தரித்த ராகுல்…..

View More காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்

ஹைதராபாத் குண்டுவெடி​ப்புகளின் பிண்ணனி: ஒரு பார்வை

ஏதோ ஹைதராபாத் நகரில் நடந்த முதல் குண்டு வெடிப்பு சம்பவம் இது கிடையாது.
2002-ல் நவம்பர் மாதம் 21ந் தேதி தில்சுக் நகர் சாயிபாபா கோவில் அருகில் குண்டு வெடித்து ஒருவர் பலியானார். 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இரண்டாவது 2005-ல் அக்டேபார் மாதம் 1ந் தேதி ஹைதராபாத் காவல் துறையின் அதிரடிப் படை அலுவலகம் அருகே குண்டு வெடித்து இருவர் பலியானர்கள்.
மூன்றாவதாக 2007-ல் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி இரண்டு இடங்களில் மோசமான வகையில் குண்டு வெடித்தது. ஒன்று லும்பினி பார்க்கில் வெடித்தது. இரண்டாவது கோகுல்சாட் என்ற உணவு விடுதியில் வெடித்ததில் 32 பேர்கள் பலியானார்கள்.
தற்போது தில்சுக் நகரில் நடந்துள்ள தாக்குதல் நான்காவது தாக்குதலாகும்.
2012-ம் வருடம் ஏப்ரல் மாதம் 27ந் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த ஒருவரிடம் சோதனை செய்த போது 4மில்லியன் கள்ள நோட்டு கிடைத்தது. இது மிகப் பெரிய தொகையாகும். இவனிடம் நடத்திய விசாரனையில் இது போல் பல முறை நான் கடத்தி வந்ததாகவும், இஸ்லாமியர்களுக்காக இது நடத்தியதாகவும் தெரிவித்த பின்னும், இவனைப் பற்றிய உண்மை செய்திகளை அரசு வெளியிடவில்லை என்பதும், இது சம்பந்தமாக யாரையும் கைது செய்யக்கூட இல்லை என்பது ஆந்திர அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. இவ்வாறு கொண்டு வருகின்ற பணம் அனைத்தும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு கொடுப்பதற்கு என்பதை அரசு தெரிந்தும், தெரியாமல் செயல்படுகிறது.
ஆந்திர காவல் துறையினர் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய்த பின்னர் கூட முறையான விசாரணையை நடத்தியிருந்தால் கூட 2013 பிப்ரவரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

View More ஹைதராபாத் குண்டுவெடி​ப்புகளின் பிண்ணனி: ஒரு பார்வை