நவராத்திரிப் பாட்டு – பரிந்து வருவாளே பார்புகழும் அன்னை

இந்தின் இளம்பிறை தூங்க – அருள்
தந்தே மகிழ்விநா யகன்தாளைத் தாங்க;
முந்துமென் மனமென்னும் வீடு – அதில்
வந்தே வருள்செய அவனைநீ பாடு.

hindu-goddess

1.

கந்தங் கமழ்கூந்தல் வல்லி – அவள்
முந்தும் விழிக்கருணை பொழிகாம வல்லி.
சந்தத் திலேயவளைப் பாடி – அன்பு
சிந்தும் கவிஞர்கள் அநேக கோடி.

2.

கொன்றைச் சடைமுடி மீது – மதி
மின்னல் நதியோடு ஒளிவிடும் போது;
அன்னை நகைப்பிலே ஊடி; – மதி
தன்னுளம் வாடுமே தோல்விக்கு நாணி!

3.

தித்திமித் தீயென்றே யாடும் – சிவன்
தத்தை பதம்பற்றிக் கெஞ்சியும் நாடும்
உத்தமி பாதத்தைத் தேடும் – எந்தன்
சித்தத் திலேயருள் சிலிர்ப்புடன் கூடும்.

4.

இருவினை யாகின்ற விருட்டு – அவள்
திருமுகச் சோதியில் திகைத்தோடிப் போச்சு
மருவிலா முகச்செவ்வி நோக்கி – அந்தத்
திருமலர் தினங்காலை மலர்ந்தேபின் கவிழும்

5.

சம்சார மென்கின்ற கடலில் – அவள்
செம்பூம் பதங்களே புனையாக மாறும்
நம்புமுத் தமர்கள்தம் உள்ளம் – அவள்
சிந்தித் தருள்பொழிய விரைகின்ற பள்ளம்.

6.

எண்ணில் வரந்தரு மன்னை – அவள்
கண்ணசைய மூவரின் கரமசையு முண்மை
பண்ணில் கவித்தேனைக் குழைத்து – நாம்
கண்ணான தாயையே புகழ்வோம் பிழைத்து

7.

கொடுமைகள் தூர்ந்திடச் செய்வாள் – எங்கும்
தடையின்றி அறமெலாம் வளர்ந்தோங்கச் செய்வாள்
படுபாத கத்திலும் கனிந்து – நமை
விடுவிக்க விரைந்தோடி வருவாள் பரிந்து.

2 Replies to “நவராத்திரிப் பாட்டு – பரிந்து வருவாளே பார்புகழும் அன்னை”

  1. அருமையான பதிப்பு! நவராத்ரி கொண்டாடும்போது படித்து சொல்லி வணங்க நல்ல தமிழ்ப்பாட்டு.

  2. கவிதை அருமையாக இருக்கிறது. முதலில் வேறு யாரோ பெரியவர் இயற்றியது எடுத்து போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துவிட்டேன். இயற்றியது தாங்களா? அற்புதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *