ஏசுவுக்கான இந்து நரபலிகள்

“ஏண்டி, சிலுக்கு சுமிதா மாதிரி வந்திருக்க ? வெக்கமால்ல ?”

உங்கள் பெண் குழந்தையைப் பல பெண்களுக்கு முன் ‘யாரோ’  ஒருவர் இப்படிக் கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

சரி. அந்தப் பெண் குழந்தைக்கு எப்படி இருக்கும்?

அந்த ‘யாரோ’ ஒருவர் ஒரு பள்ளி ஆசிரியை என வைத்துக் கொள்ளுங்கள். வகுப்பில் சக தோழிகளுக்கு நடுவில் வைத்து ‘உங்கள் மகளிடம்’ இப்படிக் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது?

இனி இந்தச் செய்தியை வாசியுங்கள்:

சென்னை அம்பத்தூர்-பாடி-க்கு அருகே உள்ள புதூரில் இம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. அங்கே 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வி. ரம்யா. இவர் செப்டம்பர் 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குப்  பள்ளியிலிருந்து திரும்பியபோது அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் தாய் சுதா என்ன என்று விசாரித்துள்ளார். [செய்தி இங்கே.]

‘அனைவர் முன்னிலையிலும் என்னை அடித்து, என் காதைத் திருகி, இப்படி எல்லாம் சில்க் ஸ்மிதா மாதிரி வேஷம் போட்டுக்கிட்டுப் பள்ளிக்கு வருவியான்னு டீச்சர் திட்டினாங்க’ என்று சொல்லி இருக்கிறாள் ரம்யா.

“அந்த ஆசிரியை அப்படித்தான் மாணவிகளிடம் எப்போதும் மிக மோசமாக நடந்துகொள்வார்” என்கிறார் அந்தப் பெண்ணின் தாய் சுதா. ‘பள்ளியில் வகுப்பு மாணவிகள் அனைவர் முன்னிலையிலும் அடிக்கடி இப்படி அவமானப்படுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதைப் பலமுறை என்னிடம் சொல்லி அழுது புலம்பியிருக்கிறாள் ரம்யா. அன்றும் அப்படித்தான் என்று எண்ணினேன். வந்தவள் நேராக மாடியறைக்குச் சென்றாள். வழக்கம்போல் உடை மாற்றச் சென்றிருக்கிறாள் என்றே நினைத்தேன்…”

ஆனால், தன் தாயின் புடவையை எடுத்துத் தூக்குப் போட்டுக் கொண்டு அந்தப் பதினான்கு வயது மாணவி தற்கொலை செய்து கொண்டு இறந்திருந்தாள்.

******

இந்துச் சின்னங்களை அகற்றச் சொல்லிப் பெண் குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவது கிறிஸ்தவ பள்ளிகளில் – குறிப்பாக புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவ பள்ளிகளில்- வழக்கமாக இருந்து வருகிறது.

இது ஒரு அடிப்படையான பண்பாட்டு உரிமை மீறல். இத்துடன் மதமாற்ற துர்நோக்கமும் இருக்கிறது. இதனால் மன உளைச்சல்களுக்கு ஆளாகும் குழந்தைகள் –குறிப்பாகப் பெண் குழந்தைகள்- தற்கொலை செய்து கொள்வது தமிழ்நாட்டில் தொடர்கதையாகி விட்டது. ரம்யாவுக்கு முன்னால் ரஞ்சிதாவுக்கும் இதுதான் நடந்தது.

2009ல் சென்னையில் பன்னிரண்டே வயதான ரஞ்சிதா இந்தக் கொடும் தொடரின் முந்தைய கண்ணி. பிப்ரவரி 11ம் தேதி மாலை பாட்டியிடம் இனிப்பு வேண்டுமென கேட்டிருக்கிறாள். குழந்தை ஆசையாகக் கேட்கிறாளே என வாங்கித் தரப் பாட்டி வெளியே போயிருக்கிறார்.

அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பெப்ஸி பாட்டிலில் விட்டு வைத்திருந்த மண்ணெண்ணையைத் தன் பிஞ்சு உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டு, இனிப்புக் கேட்ட பேத்தி இறந்தே போய் விட்டாள்.

காவல்துறை பிணப் பரிசோதனை செய்துவிட்டு பரீட்சைகளில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறார்கள்.

“கராத்தே போட்டிகளில் பங்கு பெற்றுப் பரிசுகள் வென்ற என் மகள் மதிப்பெண் குறைவு என்பதற்காக நிச்சயம் இப்படி கோழைத்தனமான முடிவை எடுத்திருக்கமாட்டாள்” என்று சந்தேகித்தனர் பெண்ணைப் பறிகொடுத்த பெற்றோர்கள். அவளது தோழிகள் சிலரிடம் விசாரித்ததில் வெளிவந்த உண்மை வேறுவிதமானது.

சம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார். பிறகுத் தலைமை ஆசிரியையிடம் வேறு தண்டிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை என்று அந்தப் பெண்ணின் தோழிகள் சொல்லியிருக்கிறார்கள்.

கோவிலில் மந்திரித்துத் தன் மகள் கையில் கட்டியிருந்த கயிறைப் பள்ளி ஆசிரியை ஒருவர் அறுத்தெறிந்ததையும் ரஞ்சிதாவின் தாய் ராஜேஸ்வரி நினைவு கூர்கிறார். தொடர்ச்சியான சித்திரவதை, மதமாற்ற முயற்சியால் ஏற்பட்ட மன அழுத்தம், எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா மாணவிகள் முன்னாலும் பைபிளால் ஏற்பட்ட அவமானம் ….

எல்லாமாகச் சேர்ந்து ஒரு இந்து மாணவியின் உயிரைப் பறித்துவிட்டன.

“இனிப்பு வாங்கச் சொல்லிப் போன பேத்திக்குப் படையல் வைக்க நேர்ந்ததே…”

படையலுக்கு முன்னால் மாரில் அடித்துக்கொண்டு கதறுகிற ரஞ்சிதாவின் பாட்டிக்கு யார் என்ன ஆறுதல் சொல்ல முடியும்?

நேற்று ரஞ்சிதா. இன்று ரம்யா…

ஏன் இந்த நிலை?

போலி-மதச்சார்பின்மை பயிலும் காங்கிரஸ் அரசு இந்த நாட்டில் இந்து விரோத, மானுட விரோதக் கல்விச் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் பெரும்பான்மை இந்து மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு கல்வி நிறுவனங்களிலோ கல்வி நிலை படு மட்டமாக உள்ளது. அதனால், தரமான கல்வியைத் தெய்வமாகக் கருதும் எளிய இந்துக்கள் தங்கள் குழந்தைகளைக் கிறிஸ்தவப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம். கல்வித் தெய்வத்தைக் காணப் போகும் நம் வீட்டுக் குழந்தைகளோ ஆண்டவனின் பெயரால் நரக வேதனையில் தவிக்கிறார்கள். எரிந்து சாகிறார்கள்.

பார்க்க:

சிலுவையில் இந்தியக் கல்வி? கட்டுரை

மதச்சார்பின்மை எனும் பெயரில் உயிர் குடிக்கும் இரட்டை டம்ளர் தீண்டாமை இது. இது போக, சிறுபான்மை உரிமை என்கிற பெயரில் இந்துக்களின் வரிப்பணம்தான் கிறிஸ்தவக் கல்வி நிலையங்களுக்கும் அரசு உதவியாகக் கிடைக்கிறது. ஆனால், வரி செலுத்தும் பெற்றோரின் கதறலைத் தீர்க்க அரசு தலையிட முடியாது.

2006ல் சுகன்யா எனும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மாணவி மர்மமான முறையில் ஓமலூரில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில் இறந்து போனாள்.

காரணமான சிலரைப் பணிமாற்றமாவது செய்யப் பள்ளி நிர்வாகத்திடம் ஏறக்குறைய கெஞ்சலுடன் வேண்டுகோள் விடுத்தார் அன்றைய கல்வி அமைச்சர்.  நீதிக்காக இல்லை. அப்போதைய மக்கள் ஆத்திரத்திலிருந்து கிறிஸ்தவ நிர்வாகம் தப்பிக்க.

ஆனால், அதற்குக்கூட இணங்கக் கிறிஸ்தவ ஆதிக்க சக்திகள் தயாராக இல்லை.

மாறாக, “அமைச்சர் கூறியிருப்பது போல ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும் 86 பேரையும் இடமாற்றம் செய்யமுடியாது. இது அரசுப் பள்ளியல்ல. தனியார் கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் பள்ளி…” எனத் திமிருடன் பதிலளித்தார் அங்குள்ள பிஷப்.

அந்த மாணவி இறந்து ஆறுமாதமான பிறகு அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது பரிசோதனை முடிவுகளிலிருந்து தெரியவந்தது. இன்று வரை ஓமலூர் சுகன்யாவுக்கும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.

வெளியே தெரிந்து சுகன்யாவும், ரஞ்சிதாவும். இதோ இப்போது ரம்யாவும். வெளியே தெரியாமல் ?

இறுதியாக ரம்யா குறித்த செய்தியிலிருந்து:

“ஆறு மாதங்களுக்கு முன், எங்கள் குழந்தையை இவ்வாறு வேதனையூட்டும் வகையில் சித்ரவதை செய்த பள்ளி நிர்வாகத்திற்கு எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம். ஆனால், இம்மானுவேல் மெதாடிஸ்ட் பள்ளி இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார் ரம்யாவின் தாய் சுதா.

இம்மானுவேல்’ என்றால் தேவன் உடனிருக்கிறான் என்று பொருளாம். ஆம். மதம் மாறாவிட்டால் பிஞ்சுகளை உடனிருந்து கொல்லும் மரண தேவன்.

90 Replies to “ஏசுவுக்கான இந்து நரபலிகள்”

  1. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. இது போன்ற பள்ளிகளுக்குத்தான் தன் பிள்ளைகளை அனுப்புவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் இந்துப் பெற்றோர்களைத்தான் குறை சொல்ல வேண்டும், முன்பு போல இல்லாமல் இப்பொழுது ஏராளமான இந்து பள்ளிகள் வந்து கொண்டிருக்கின்றன, இருந்தாலும் ஒரு செயிண்ட் என்ற பெயரை முன்னால் வைத்துக் கொண்டால் இவை போன்ற பள்ளிகளுக்கு ஒரு அந்தஸ்து வந்து விடுகிறது. பெற்றோர்களிடத்து விழிப்புணர்வை இந்து அமைப்புகள்தான் கொண்டு வர வேண்டும். இந்தக் கட்டுரையை துண்டு பிரசுரமாக அடித்து கிறிஸ்துவ பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களிடம் விநியோகிக்க வேண்டும். நாம் தான் இந்தப் பள்ளிகளை வளர்த்து விடுகிறோம்

  2. Pingback: Indli.com
  3. பள்ளிக்கூடம் விதிக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டியது மாணவர் கடமை. பல மதத்தவர்களும் படிக்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் அடையாளங்களை முன்னிலைப்படுத்துவது தவறு. பள்ளியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க அந்தப் பெண்ணை பெற்றோர்கள் வலியுறுத்தி இருந்தால் இந்த நிலை அந்தப் பெண்களுக்கு ஏற்பட்டிருக்காது. அந்தப் பெண்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்களின் பெற்றோர்கள் மீட்பரை அடையாளம் காணவும் பிரார்த்திக்கிறேன்.

    .

  4. டி ஜே தோம்சன்,
    கிறித்தவர்களுக்கு மனசாட்சி மற்றும் இரக்கம் என்பதே இல்லை என்று சாட்சி கொடுத்துள்ளார்.
    ஏன் பல தரப்பினர் படிக்கும் பள்ளியில் கிறித்தவ முறைப்படி தான் வரவேண்டும் சொந்த அடையாளங்களை துறந்து என்று வற்புறுத்துகிறார்கள்.

    பைபிள் படிப்பது பலதரப்பினருக்கும் பொதுவான விசயமா?

    /////அந்தப் பெண்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்களின் பெற்றோர்கள் மீட்பரை அடையாளம் காணவும் பிரார்த்திக்கிறேன்////
    இதுதான் இழவு வீட்டிலும் ஆதாயம் தேடும் நரித்தனம்.
    எரிகிறவீட்டில் பிடுங்கும் வரை லாபம் என்பது தான் இந்த மிசநரிகளின் எண்ணம். எப்படி பிரதிபலிக்கிறது பாருங்கள்.

    அவமானத்தில் பிற சக மாணவர்கள் முன் கூனி குறுகி நின்ற அந்த ஆன்மா எப்படி ஐயா இதற்கு சப்பை கட்டு கட்டும் உங்களை எல்லாம் மன்னிக்கும்.
    உங்கள் மீட்பரின் பெயரால் நடந்த கொலை இது, அவரையும் இந்த ஆன்மா மன்னிக்காது.
    நம்ம ஆட்களை சொல்லணும் ஏன் கரண்ட்ல கைய வைக்கணும்? பிறகு சாக் அடிக்குதுன்னு கதறனும்.?
    இனியாவது புள்ள குட்டிகள கிறித்தவ பள்ளிகூடங்களில் சேர்க்காமல் நல்ல பள்ளிகளில் சேர்த்து படிக்க வையுங்கள்.

  5. டி. ஜே. தாம்சன் ,

    //
    பள்ளிக்கூடம் விதிக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டியது மாணவர் கடமை. பல மதத்தவர்களும் படிக்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் அடையாளங்களை முன்னிலைப்படுத்துவது தவறு. பள்ளியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க அந்தப் பெண்ணை பெற்றோர்கள் வலியுறுத்தி இருந்தால் இந்த நிலை அந்தப் பெண்களுக்கு ஏற்பட்டிருக்காது. அந்தப் பெண்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்களின் பெற்றோர்கள் மீட்பரை அடையாளம் காணவும் பிரார்த்திக்கிறேன்.
    //

    பொட்டும் பூவும் ‘ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின்’ அடையாளங்கள் அல்ல. இந்திய மண்ணின் உயிர்நாடியாகிய ஹிந்து மதத்தவர்கள் பெருமையுடன் தரிக்கும் சின்னங்கள்.

    அதே பள்ளிகளில் சிலுவையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளை “இந்த ‘ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின்’ சின்னங்களை அணியக் கூடாது” என்று தடை விதித்தார்களா?

    உங்கள் எழுத்தில் ஒரு இடத்தில் கூட அந்தச் சிறுமிகளைக் கேவலமாக நடத்திய காட்டுமிராண்டிகளுக்கு எதிரான கண்டனம் இல்லை. ஆனால் பெற்றோர்களுக்கு அறிவுரையும் அதற்கும் மேல் கிறிஸ்தவ விபச்சாரத்திற்கு அழைப்பும். காறித் துப்பலாம் போல இருக்கிறது. இந்த தளத்தில் என் மதிப்பிற்குரிய பலர் இருப்பதனால் மிகக் கடுமையாக உங்களை நான் திட்டவில்லை. பிழைத்தீர்கள்.

  6. // அந்தப் பெண்களின் ஆத்மா சாந்தி அடையவும்…//

    கொலை செய்துவிட்டு பிரார்த்திப்பது தான் கிறிஸ்தவம். தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

  7. குளவி அவர்களுக்கு…..

    கிறித்தவ பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பதை ஹிந்து இயக்கங்கள் கரடியாக கத்தினாலும் பெற்றோர் கேட்பதில்லை. தன பிள்ளை காண்வென்டில் படிக்கிறான் என்று சொல்லிகொள்வதில் ஒரு அல்பப்பெருமை. பிறகு புலம்பி என்ன பயன்?

    என் வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர் தன் குழந்தையை அருகில் உள்ள ஹிந்து பள்ளியில் சேர்க்காமல் தொலைவில் உள்ள கிறித்தவ பள்ளியில் சேர்த்தார்.ஏன் என்று கேட்டதற்கு அப்பத்தான் நல்லா இங்கிலீஷ் பேசுவான் சார் என்றார்.தலையில் அடித்துக்கொள்ள தோன்றியது.அடப்பாவிகளா ,ஆறு மாசம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போனா போதுமே?

    நம் மக்கள் திருந்துவது எப்போது?

  8. திரு தொம்சன் அவர்களே POTTU பூ வைக்கிறது இந்த தேசத்தோட கலாச்சாரம் அது ஒரு மத சின்னங்கள் என்று ஒதுக்கி விட முடியாது. அதனால கலாச்சார சின்னங்கள் அணிவது அவரவர் விருப்பம். கிறிஸ்தவ பள்ளிக்கூடம் என்றால், POTTU பூ வைக்ககூடாது என்று சொன்னால் அந்த நிர்வாகம் இது கிறிஸ்தவ பள்ளி கிறிஸ்தவர்கள் மட்டும் வந்து படித்தல் போதும் என்று ஒரு போர்ட் வைத்து விட வேண்டியதுதானே. எல்லா ஹிந்துக்களும் கட்டுகிற வரிபனதுல பள்ளிகூடத்தை நடத்தி விட்டு ஒரு ஹிந்து பொட்டு பூ வைத்து விட்டு பள்ளிக்கூடம் வரகூடாது என்று சொன்னால் நம்மளை எல்லாம் என்ன கெண என்று நினைத்து இருகிறர்கள. ஊர் எல்லாம் போஒய் கருணை மதம் என்று சொல்லி கொண்டிருகிறார்கள் ஒரு பெண் பூ வைத்ததை தங்கமுடியவில்லை இதுக்க பேர் கருணை மதமாம் யார் காதுல பூ சுதுகிரன்க இதை போலி மதச்சார்பின்மைவாதிகளும் என்ன சொல்ல புரங்க

  9. Thomson,

    Stop this nonsense. Forcing students to attend the morning prayer & asking them to recite bible, are these rules?

    Why are U guys so besotted with numbers?

    And to add insult to injury, U pray for the soul to rest in peace?

    Frankly, are U not ashamed?

  10. மிகவும் குக்க்ராமங்கள், போக்குவரத்து வசதி கூட இல்லாத கிராமங்களில் நம் மதத்தை சேர்ந்த செல்வ சீமான்களும்,நல்ல,தொண்டு உள்ளம் கொண்ட மக்களும் முன் வந்தால், எவ்வளவோ பல நல்ல கனிகளை நாட்டுக்கும் நாடு மக்களுக்கும் கொடுக்க முடியும். சென்னைக்கு சற்று தொலைவில் அல்லது காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் உள்ள பல குக்ராமங்கள் இன்னும் கல்வி வாசனை அவ்வளவாக பெற வில்லை என்பதை அறிந்ததுண்டா. என்னால் எந்த பத்திரிக்கை அல்லது மீடியாவின் சுட்டியையோ,இணைப்பையோ குடுக்க இயலாது. ஆனால் நேரில் கண்டு,அவர்களோடு இருந்த அனுபவம் உண்டு. நம்மாலும் தரமான கல்வியும், ஒழுக்கமான வாழ்க்கையையும் அவர்களுக்கு போதிக்க இயலாதா???
    மேலும் ஏன் பெற்றோர் அரசுக்கும், கல்வி துறைக்கும் சென்று அரசாங்க பள்ளிகளில் நடத்த கூடிய நல்ல மாற்றங்களையோ,முன்னேற்றங்கலையோ பரிந்துரைப்பது இல்லை?. இவர்கள் இதை போல் dress code இருக்கும் என்பது தெரியும் என்றால் ஒன்று சேர்க்க கூடாது அல்லது அப்போதே மீடிஆயவிற்கோ அல்லது கல்வி துறைக்கோ இதை பற்றி பலமான முறையில் கருத்து தெரிவித்து இருக்க வேண்டும் …. !!

  11. அய்யா தாம்சன். என்னையா இது ???

    //பல மதத்தவர்களும் படிக்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் அடையாளங்களை முன்னிலைப்படுத்துவது தவறு. //

    எந்த விதத்தில் தவறாகும். அப்போ கிறுத்துவர்கள் சிலுவையை கழுத்தில் மாட்டாமல் வீடு ஆணியில் மாட்டி வரவும் சொல்லலாமா??? ஏன்? இப்படிப்பட்ட வித்தியாசங்களை பார்க்காமல் உள்ள அரசாங்க பள்ளிகளிலோ அல்லது இந்துக்களால் நடத்தப்படும் பள்ளிகளிலோ வேற்றுமை பார்க்காமல் அவர் அவர் இஷ்டப்படி அவர் அவர் தெய்வங்களை கும்பிட அனுமதிக்கிறார்கள்? வேற்றுமை வந்துவிடும் என்று நீங்கள் செய்வதால் வேற்றுமை தோன்றுகிறதா? அல்லது இதனால் வருகிறதா?
    அடுத்தவர் நம்பிக்கையில் கை வைக்கும் அளவுக்கு மதம் ஆட்டுகிரதா? தமிழர் பண்பாடாம் இவற்றுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளதே !! அறிவியல் ரீதியாகவும்,ஞான மரபின் ரீதியாகவும். இவற்றை அழித்து பிடுங்கி எரிவதினால்,அவர்களை மனதளவில் துன்புருதுவதிநாலா தேவன் மகிழ்கிறார்???

  12. ஒரு இந்துவோ, சீக்கியனோ, பவுத்தனோ கிறிஸ்தவனாக மாறினால் போப் பை விட தீவிர மத பற்றும், தன் தாய் மதத்தை எவ்வாறாவது அடியோடு வேரறுக்கும் வெறியும் எப்படித்தான் வளர்கிறதோ ???

  13. இதைப் பார்த்த பின்னராவது நமக்கு புத்தி வரவேண்டும். ஒன்று மதமாற்றி மிசனரி பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பாமல் இருக்க வேண்டும். இரண்டு அவர்களை விட சிறந்த கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.
    சில கிறித்தவ அன்பிலிகள் பள்ளி யின் சட்டத்திட்டங்களை மாணவர்கள் மதிக்க வேண்டும். என்று அநியாயத்தை தற்கொலை தூண்டுதலை, சமய உரிமை மீறலை நியாயப்படுத்துகிறார். அவர்களுக்கு சரியான சாட்டையடி ஸ்ரீ கந்தர்வன் கொடுத்துவிட்டார்.

    எந்தப் பள்ளி சட்டமும் இந்திய அரசியல் அமைப்பை விஞ்சியதல்ல. சமயுரிமை அடிப்படை உரிமை அதைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
    கிறித்தவக் கல்வி நிறுவனங்கள் சமய உரிமையை ஹிந்து குழந்தைகளுக்கு மறுத்துவருகின்றன என்பது ஹிந்து இயக்கங்களின் கூச்சல் அல்ல உண்மை என்று நிருபிக்கப் பட்டுள்ளது. இன்னும் ஒன்று ஹிந்து இயக்கங்கள் எங்கெல்லாம் வலுவோடு இல்லையோ அங்கெல்லாம் இந்த மிசனரிகள் தங்கள் அராஜகத்தை வால்தனத்தை காட்டுகிறார்கள். அவர்களை தோலுரித்துக் காட்டுதல் அவசியம். ஹிந்து இயக்கங்கள் அதற்கே அவசியம். எந்த போலி மதச்சார்பின்மை வாதியும் இந்த மிஷனரிகளின் அராஜகத்தை நியப்படுத்தமுடியாது தீர்வும் சொல்ல முடியாது.
    நிறைவாக இந்த செல்வி ரம்யாவின் தற்கொலைக்கு காரணமானப் பள்ளி நிர்வாகம் மற்றும் காரணமான ஆசிரியர் ஆகியோர் சரியாக தண்டிக்கப்பட மக்கள் போராட்டம் அவசியம். அந்த அக்கிரம் இத்தோடு ஒழிய ஆணியடியுங்கள்.
    ஒன்று பட்ட ஹிந்து சக்தி என்றும் எங்கும் வெல்லும்

  14. \\\\\\\\\\பல மதத்தவர்களும் படிக்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் அடையாளங்களை முன்னிலைப்படுத்துவது தவறு.\\\\\\\

    நெற்றியில் பொட்டு வைப்பதும் தலையில் பூச்சூடுவதும் பாரதீய கலாசாரத்தின் அடையாளங்கள். ஹிந்து மதத்தை சாரத பல க்றைஸ்தவ முஸல்மாணியர்கள் நெற்றியில் விபூதி பூசுவது மற்றும் குங்குமம் மற்றும் சிந்தூரம் இடுவது ஒழுகும் மதத்தால் வேறாயினும் கலாசாரத்தால் ஹிந்துஸ்தானியர் அனைவரும் ஒன்றே என்ற மறுக்க முடியாத கலாசர ஒற்றுமையை பறைசாற்றவே. இதை ஹிந்து மதத்துடன் அடையாளப்படுத்தி அதை அழித்தொழிக்க முயல்வது போலி மதசார்பின்மைக்கு கொடிபிடிப்பவர் செய்யும் அக்ரமம்.

    மார்க்கரெட் ஆல்வா, அம்பிகா சோனி போன்ற க்றைஸ்தவர்கள் நெற்றியில் இடும் பொட்டு காலம் காலமாக ஹிந்துஸ்தானத்தில் பெண்கள் நெற்றியிலிடும் பொட்டை மங்கலமாக கருதுவதாலேயே அன்றி அது ஹிந்து மதத்தின் அடையாளச்சின்னம் என்பதால் அல்ல.

    முஸல்மான் ஆன பேகம் பர்வீன் சுல்தானா நெற்றியில் பெரிய மங்கலமான பொட்டுடன் தேவியின் கீர்த்தனங்களைப் பாடுவது தான் அந்த கலாசாரத்தின் ப்ரதிநிதி என்பதால் தான்.

    ஷேக் மஹபூப் ஸுபானி கலீஷாபீ மஹபூப் தம்பதியர் ப்ரஸித்தமான நாதஸ்வர கலைஞர்கள். கலீஷாபீ மஹபூப் அம்மையார் நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் மங்கலமாக குங்க்குமத்துடன் இருக்கும் படம் இதோ கீழ்க்கண்ட சுட்டியில்

    https://www.kutcheribuzz.com/features/interviews/sheik.asp

    பீஹாரிலும் பூர்வி உத்தரப்ரதேசத்திலும் பர்தாவே அணிந்தாலும் நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் குங்குமம் இடுவதை விடாது தொடரும் முஸல்மாணியர் லக்ஷக்கணக்கானவர்.

    ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தின் (ஹிந்து மதத்தின் அடையாளம்) அடையாளம் என நீங்கள் தனிமைப்படுத்தி விலக்க விழையும் அடையாளங்களை இவர்கள் போற்றுவதால் இவர்களை நீங்கள் சிறுமைப்படுத்துகிறீர்கள்?

    கள்ளமறியா குழந்தைகளின் மனத்தில் ஹிந்து மதவெறுப்பு என்ற பயத்தை ஆவேசத்துடன் விதைத்து க்றைஸ்தவ கெடுபிடிகளுக்கு உட்பட மறுக்கும் குழந்தைகளை தற்கொலை செய்வது வரை முடுக்குவது தான் மதசார்பின்மை அதுதான் க்றைஸ்தவம் என்று நிர்த்தாரணம் செய்கிறீர்களோ?

    ஒரு கொலைக்கு காரணமான க்றைஸ்தவ பள்ளி நிர்வாகத்தைக் கண்டிக்காது இறந்த குழந்தையையும் அவரது பெற்றோரையும் க்றைஸ்தவமயமாக்குவதில் மட்டும் ப்ரார்த்தனை செய்ய விழையும் உங்களது போக்கு எந்த கலாசாரத்தில் அடங்கும்.

  15. Graham Steins கொலை செய்யப்பட்டது பெரிய செய்தியானது. இந்த தலித் மாணவி தற்கொலை பற்றிய செய்தியெல்லாம் ஊடகங்களுக்கு கொட்டாவியை தான் ஏற்படுத்தியிருக்கிறது.

    என்ன செய்வது, Graham Steins ஒரு வெள்ளைத் தோல் – அதுவும் ‘பரிசுத்த மனிதநேய கருணை மார்க்கத்தைச்’ சேர்ந்தவராயிற்றே.

    அந்த தலித் மாணவியோ ஒரு பாகனிய சாத்தானிய பழங்குடிக் கிரிமினல் த்ரைபல் கல்ட்-ஐச் சேர்ந்தவள்.

    பாவம் ஊடகங்கள், இருவர்க்கும் இவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்க அவைகளைக் குற்றம் சொல்லலாமா?

    வசுதைவ குடும்பகமாவது லோகாஹ் சமஸ்த சுகினோ பவந்துவாவது – அதெல்லாமா முக்கியம்? பரிசுத்த மார்க்கம் உலகளாவப் பரவி அமைதியை நிலைநாட்டுவதற்கு இம்மாதிரி ஒரு சில உயிர்கள் பலியாகத் தான் தேவை. – இஸ்ரேலியக் குழந்தைகள் தங்களுக்கென்று ஒரு வீடு தேடிக் கொள்ள கனானிய, அமலேக்கிய சிசுக்கள் பலியானது போல.

    ஆமென்.

  16. புதிதாக மதம் மாறிவர்களின் மூர்க்கத்தனம் தாம்ஸனிடம் இருப்பது கொடூரமான விஷயம். தாம்சனின் முன்னோர்கள் ஒரு தலைமுறையில் இந்துக்களாக இருந்திருக்கவேண்டும். எதுவானாலும், பள்ளி விதிகளைச்சொல்லி இளம் உள்ளங்களை தற்கொலைக்குத் தூண்டுமளவுக்கு கொடுமைப் படுத்தியது அடிப்படையில் மனித் விரோதச் செயல். அந்த இளம் பெண்கள் ஒரு கொடுமையில் உயிர் மரித்ததற்கு சொட்டுக் கண்ணிர் கூடவிடாது, சட்டம் பேசும் மனம் தாம்சனது. தாம்சன், மதம் உங்களை இப்படிஆக்கியதா, இல்லை உங்கள் இரக்கமற்ற மனதுக்கு மதம் சாக்காகியதா? அல்லது இரண்டுமா?

    முடிந்தால் போய் பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் இரக்கமற்ற இதயத்தை இளகச் செய்ய. உஙகள் இது நாள் வரைய பாபங்களை மன்னிக்கக் கோரி.

  17. அந்த பெண்ணை பலர் முன்னிலையில் திட்டியவர்கள் மேல் கோபம் வருகிறது. ஆனால் அதை ஒரு மதத்தவர் மீது வெறுப்பு வரும் வகையில் வெளியிட்ட தமிழ்ஹிந்து மேல எரிச்சல் வருது. எப்போ பாரு அடுத்த மதத்தை குறை சொல்லிக்கிட்டு.ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு ட்ரஸ் கோட் இருக்குது. அந்தந்த இடத்துக்கு அதுக்கு தகுந்த மாதிரிதான் அணியணும். ஸ்கூலே சேரும்போதே அதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டு தானே சேருறாங்க. அப்புறம் அதை மீறுவது சரியல்ல. (அதற்காக பப்ளிக்கா திட்டுறதை ஆதரிக்கலை. அவங்க பேரன்ட்ஸ வரச்சொல்லி விஷயத்தை சொல்லியிருக்கலாம். ஒத்துக்கிட்டா அதே ஸ்கூலிலே கண்டினியூ பண்ணுறாங்க. அல்லது வேற ஸ்கூலிலே சேக்குறாங்க) சரி. இப்படி வெச்சுக்கலாம். வேத பாடசாலையிலே படிக்கிற பையன் குடுமியை எடுத்துட்டு ஃபங்க் வச்சுக்கிட்டு ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு வந்தா ஒத்துப்பாங்களா? அல்லது பஞ்சகச்சமும், குடுமியும் எங்க கலாச்சாரம்ன்னு சொல்லிட்டு மிலிட்டரியிலோ, போலீசிலோ பஞ்சகச்சம் போட்டுட்டு குடுமி வெச்சுட்டு போகமுடியுமா? அததுக்குன்னு ஒரு ட்ரஸ் கோட் இருக்குது. சரி அதுக்காக ஹிந்து ஸ்கூலிலே சேக்கலாமா? சேக்கலாம், ஆனா சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியை கொடுக்காதேன்னு சொல்ற புஸ்தகத்தை தலையிலே தூக்கி வெச்சுகிறவா எப்படி முழுமனசோட சொல்லிக்குடுப்பான்னு நம்புறது? இன்னிக்கு வேற வழி இல்லை, தான் சொல்லிக்கொடுக்கலைனா கிறிஸ்தவ ஸ்கூலிலே போயி படிச்சுடுவான்றதாலே சொல்லிக்குடுக்குறா. உண்மையிலே மத்தவாளுக்கு கல்வியை தரணும்னு மனசிருந்தா தன்கிட்டே அதிகாரமிருந்த காலகட்டத்திலே அல்லவா சொல்லிக்கொடுத்திருக்கணும்? கிறிஸ்தவ அல்லது நடுநிலையான பள்ளிகளுக்கு போனால் அந்தகாலத்திலே தான் பண்ணின விஷயங்கள் தெரிஞ்சுடுமேன்றதுக்காக கூட இவர்கள் ஸ்கூல் தொடங்கியிருக்கலாம். (உடனே மறுமொழியிலே “லார்டு” மெக்காலே பிரிட்டிஷ் பார்லிமென்ட்லே பேசினதுன்னு ஏதாவது ரிப்ளை போடாதீங்க. “லார்டு” மெக்காலே அப்படிப் பேசினார்ன்ன்றதுக்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர் என்ன கான்டெக்ஸ்ட்லே பேசினார்னு தெரியாது. ஆனா அவர்மேல பழியைப்போட்டு தான் செய்த தவறுகளை மறைத்துக்கொள்ளும் முயற்சி மட்டும் நடக்கிறது.) எங்களுக்கு நல்லது செய்த, ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் நினைக்காத சமணர்களை கொன்றது போல இப்போ கிறிஸ்தவர்களுக்கு எதிரா தூண்டிவிடலாம்னு பாக்குறீங்க. அது நடக்காது. ஒருசில ஆழ்வார்கள் உங்களுக்கு கிடைக்கலாம். ஆனா பெரும்பாலான பேர் கிறிஸ்தவர்களாலே கிடைத்த கல்வியை நன்றியோடு நினத்துப்பார்க்கிறோம். ஒரே கடவுளை கும்பிடுறதனாலே நீங்களும் நாங்களும் ஒன்றாகிட முடியாது. வேறு வேறு கடவுளை கும்பிட்டாலும் நாங்களும், கிறிஸ்தவர்களும் இணக்கமாக இருக்க முடியும். (அந்த பெண் பாதிரியாரின் நடுவிரல் புகைப்படம் உங்கள் சிந்தனையின் தரத்தைச் சொல்கிறது)

  18. நெஞ்சு பதறுகிறது அந்தக் குழந்தையின் அழகு முகம் பார்த்து. என்ன சொல்லித் தேற்றுவோம் அவள் பெற்றோர்களை?

    கிறிஸ்தவ மதவெறியின் கோரப் பற்கள் இந்தியாவின் இன்னொரு ஒரு மலரைக் கடித்துக் குதறிச் சித்திரவதை செய்திருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்களைக் காவு கொள்ளுமோ?

    கந்தர்வனின் மறுமொழி ஒவ்வொரு இந்து இதயமும் கொள்ளும் ஆற்றாமையின் வெளிப்பாடு.

  19. //சம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார்.// பகவத்(?) கீதையை படிக்காவிட்டால் நாட்டைவீடு வெளியேறவேண்டும் என்று சொன்னதைவிட இது பரவாயில்லை. தவறை நியாயப்படுத்தவில்லை. உங்க மேல அவ்வளவு அழுக்கை வச்சுக்கிட்டு அடுத்தவர் முதுகில் உள்ள தூசிக்கு குறை சொல்லக்கூடாது.

  20. கிறிஸ்தவப் பள்ளிகளை ஒரேயடியாக தூக்கி வைத்துக் கொண்டாடும் போக்கு ஒழிய வேண்டும், சரிதான்..

    ஆனால் இங்கு சில அன்பர்கள் சொல்வது போல ”கிறிஸ்தவ” பள்ளிகளை ஒரேயடியாகப் புறக்கணிப்பது என்பது ஒரு நல்ல லட்சியம் தான். ஆனால் நடைமுறையில் சாத்தியம் அல்ல. ஏனென்றால் கல்விச் சூழல் அப்படி ஆகிவிட்டது. இந்தியக் கல்வியின் மீது சிலுவை அறைந்த ஆணி சாதாரனமானதல்ல. நாகர்கோயில் போன்ற ஊர்களில் ஆர் எஸ் எஸ் காரர்களே தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவ பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கீறது. குறிப்பாக நடுத்தர,கீழ்நடுத்தர வர்க்கத்துக்கு மக்கள் வாழும் பகுதிகளில் கிறிஸ்தப் பள்ளிகள் தான் பரவலாக உள்ளது. இவற்றில் பல அரசு நிதியுதவி பெறுபவையும் கூட,

    எனவே, அரசு எல்லா கிறிஸ்தவப் பள்ளிகளையும் மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.. தனியார் பள்ளிகள் உட்பட, எல்லா கிறீஸ்தவ கல்வி நிலையங்களையும் தணிக்கை செய்ய வேண்டும். இதற்கென்று புதிய தணிக்கை அதிகாரிகளை உருவாக்குவது அரசின் உடனடி கடமை.

    பைபிளை படிக்க கட்டாயப் படுத்துவது, மாணவ மாணவர்களின் அடிப்படை மத சுதந்திரத்தை மறுப்பது, பூ,போட்டு, வளையல், குங்குமம் போன்ற தேசிய கலாசார அம்சங்களுக்கு தடை விதிப்பது ஆகிய விஷயங்கள் இருந்தால் அவை மனித் உரிமை மீறலாகக் கொள்ளப் பட்டு சம்பந்தப் பட்ட பள்ளிக்கு எச்சரிக்கையும், நடவடிக்கையும், தொடர்ந்து இப்படி நடந்தால் தண்டனைகளும் கொடுத்து, பள்ளி உரிமையை ரத்து செய்யவும் வேண்டும்.

    இவற்றை வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் தந்து தமிழகம் முழுவதிலும் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் போராட வேண்டும். சமூக அக்கறை கொண்ட எல்லா அமைபுகளின் ஆதரவும் கோர வேண்டும். ஆதரவு தராதவர்களின் போலி மதச்சார்பின்மை முகமூடி கிழிபட வேண்டும்.

    அது தான், ரஞ்சிதா, ரம்யா, சுக்ன்யா ஆகியோருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

  21. இந்தக் கட்டுரையையும் மறுமொழிகளையும் படிக்கிற போது பெருந்துயராக இருக்கிறது… இதற்கு வழி என்ன?

    யாழ்ப்பாணத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இதே பிரச்சினை மிகவும் மோசமாக இருந்தது.. இதற்கு மாற்று வழி என்ன? என்று யோசித்த ஆறுமுகநாவலர், போன்றவர்கள் கிறித்துவப் பள்ளிகளை விடத் தரம் மிகுந்த இந்துக்கல்லூரிகளை அமைப்பதே இதற்கு வழி என்று கண்டார்கள்..

    இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால்.. யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், பெரிய பெரிய இந்துப் பாடசாலைகளை காணலாம்.. இப்போதெல்லாம்.. கிறிஸ்துவர்களே தங்கள் பிள்ளைகளை இப்பாடசாலைகளுக்கு அனுப்பியே படிப்பிக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.. ( அந்தப் பிள்ளைகளெல்லாம் நன்றாகத் திருவாசகம் பாடும் என்பது சிறப்புச் செய்தி) …

    நிலைமை இப்படி இருப்பதால் கிறித்துவப் பாடசாலைகள் தங்கள் பாடசாலைகளுக்குள்ளேயே இந்துக் கோயில்கள் அமைத்து இந்துப் பிள்ளைகள் வழிபடுவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளன..

    ஆக, நான் சொல்வது என்ன என்றால் கிறித்துவ பள்ளிகளில் பெற்றோரும் மாணவரும் எதனை எதிர்பார்த்துச் செல்கிறார்களோ.. அவற்றை விஞ்சும ;வடிவில் அவற்றை வழங்குகிற இந்துக் கல்லூரிகளும ;பாடசாலைகளும் அமைக்கப்பெற வேண்டும்..

  22. இது எனக்கே நடந்துள்ளது. ‘St pauls HSS பள்ளியில் நான் +1 சேர்ந்த பொழுது சேர்ந்த பொழுது ஒரு பாட்டு போட்டு நடந்தது. அவர்கள் என் குரல் நன்றாக இருக்கிறது என்று கூறி என்னை பாட்டு போட்டிக்கு தேர்ந்தெடுத்தார்கள்… நான் கண்ணின் பாடலை பாடி காட்டினேன். ஆனால் இந்த பாடலை பாடக் கூடாது என்றும். கிறித்துவ பாடல் தான் பாட வேண்டும் என்று கூறினார்கள். அப்பொழுது எனக்கு மதம் சாதி என்பது பற்றிய எந்த ஒரு அறிவும் கிடையாது. அந்த வயதில் ஏசுவை பற்றிய பாடல் பாடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை. ஆனால் எனது கிருஷ்ணர் பாடலை பாடக் கூடாது என்று சொன்னவுடன் எனக்கு வந்த ஆத்திரம் மற்றும் கோபத்திற்கு அளவே இல்லை. அந்த வயதில் இதனால் அதிக மன உளைச்சளுக்கும் ஆளானேன்.

    காலாண்டுக்கு தேர்வுக்கு பிறகு நான் பள்ளிக்கே செல்லவில்லை. பையன் பள்ளிக்கு போகவில்லை என்றால் என்னென்ன நடக்குமோ அத்தனை அவமானங்களும் கஷ்டங்களும் நடந்தது. இதை படிப்பவர்களுக்கு காமெடியாக இருக்கலாம். என்னடா ஒரு பாடலை பாடக் கூடாது என்று சொன்னதற்காக பள்ளியை விட்டு நிற்பதா என்று.. இப்பொழுது நான் நினைத்தாளும் எனக்கே அது காமெடியாக தான் இருக்கிறது. ஆனால் அந்த சிறு வயதில் இது போன்ற அடக்கு முறைகள் அதிக மன உளைச்சலையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இறைவன் அருளால் மீண்டும் அடுத்த வருடம் ஒரு பள்ளியில் சேர்ந்தான். கடுமையாக படித்தேன். இன்று ஒரு நல்ல நிலையில் உள்ளேன்.

    ஆனால் எல்லோர் வாழ்கையும் அவ்வாறு இருப்பது இல்லை. எத்தனையோ பேரின் வாழக்கை வீணாகியுள்ளது. அந்த வயதில் இது போன்ற மன உளைச்சல்கள் கொடுமையானவை. வீட்டில் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணும் அளவுக்கு பக்குவம் இருப்பது இல்லை. பெற்றோர்கள் இதை ஒரு பெரிய விசயமாக எடுத்து கொள்வது கிடையாது. கிறித்துவ மிஷிநரிகளின் இந்த பயங்கரவாத போக்கு இந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. இதை நானே நேரடியாக உணர்ந்துள்ளேன் என்பதால் அந்த குழந்தை தற்கொலை செய்து கொண்டதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.

    ”ஊரா வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே”

    நமது நாட்டின் பணத்தை எடுத்து நம் மண்ணை ஆக்கிரமித்து நமக்கு கல்வி அறிவு போதிக்கிறேன் என்று கூறி கொண்டு நம்மவர்களை வேலைக்கும் வைத்து நம்மை அடிமை படுத்தும் கயவர்களை என்ன வென்று சொல்வது…

    இதற்கு காரணம் நம்மிடம் உள்ள வேற்றுமையோ சாதி சண்டையோ கிடையாது. நம்மை தொடர்ந்து முட்டாளாக்கி அதன் மூலம் நம்மை அடிமை படுத்தும் திட்டமிட்ட பயங்கரவாத கும்பலில் வேலை இது. வியட்னாம் மக்களை போன்று ஒன்று பட்ட போராட்டம் இதற்கான தீர்வாக அமையும். ஆம் கண்டிப்பாக அலெக்சாண்டருக்கு ஏற்பட்ட கதி இந்த மிஷி நரிகளுக்கு ஏற்படும். கொலை செய்யப்பட்ட பிணத்தின் அடிமைகளாக உள்ள நமது சகோதரர்களை மீட்க வேண்டுய நேரம் வந்துவிட்டது….

    இது சம்மந்தப்பட்ட மற்றொரு பதிவை சென்ற வாரம் எனது வலைப்பூவில எழுதி இருந்தேன்.

    நேபாளத்தில் விற்பனை செய்வதற்கு தமிழ் நாட்டில் சிறப்பு பயிற்சி

    https://gomathichetty.wordpress.com/2011/09/18/%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/

  23. இது குறித்து எந்த பகுத்தறிவு முட்டாளும் போலி மதச்சார்பின்மைவாதியும், காம்ரேடுகளும் வாய் திறக்க மாட்டார்கள். கேட்டால் விதிமுறைகளை மதிக்காவிட்டால் சாகத்தான் வேண்டும் என்பார்கள், கயவர்கள்.

  24. சந்திர சேகரன்,

    \\சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியை கொடுக்காதேன்னு சொல்ற புஸ்தகத்தை தலையிலே தூக்கி வெச்சுகிறவா எப்படி முழுமனசோட சொல்லிக்குடுப்பான்னு நம்புறது?\\

    பீமாராவ் எப்படி அம்பேடுகர் ஆனார் என்ற கதை உங்களுக்கு தெரியுமா?

    \\ஆனா பெரும்பாலான பேர் கிறிஸ்தவர்களாலே கிடைத்த கல்வியை நன்றியோடு நினத்துப்பார்க்கிறோம். ஒரே கடவுளை கும்பிடுறதனாலே நீங்களும் நாங்களும் ஒன்றாகிட முடியாது. வேறு வேறு கடவுளை கும்பிட்டாலும் நாங்களும், கிறிஸ்தவர்களும் இணக்கமாக இருக்க முடியும். \\

    கிறித்துவ கபோதிகளின் யோக்கியதை என்னவென்று தென் தமிழ் நாட்டில் உள்ள் சர்சுகளுக்கு சென்று பார்த்தால் தெரியும். என்ன கேனத்தனமான ஒரு பதில்.

    சீனா நம்மை விட பல மடங்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் சொல்லவே தேவையில்லை. இந்த நாடுகள் எல்லாம் என்ன கிறித்துவ மிஷினரிகள் வந்து தான் முன்னேறினவா? அங்கெல்லாம் சாதிகள் இல்லையா? இத்தனை வளங்கள் இருந்தும் இந்த நாடு சீரழிந்து கொண்டு இருப்பதற்கு கிறித்துவ பயங்கரவாதிகள் தான் காரணம்.

    வேதம் படித்து கொண்டு இருந்த பிராமணை யார் ஆங்கிலம் படிக்க வைத்தது அவர்களை வைத்து யார் சமுதாயத்தில் ஆரிய திராவிட விஷத்தை புகுத்தியது என்பது அறிவுள்ளோர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

    ருவாண்டாவின் இனப்படு கொலைகளை படியுங்கள் அப்பொழுது தெரியும் கிறித்துவ பயங்கரவாதிகளின் உண்மை முகம்.

    \\உண்மையிலே மத்தவாளுக்கு கல்வியை தரணும்னு மனசிருந்தா தன்கிட்டே அதிகாரமிருந்த காலகட்டத்திலே அல்லவா சொல்லிக்கொடுத்திருக்கணும்? \\

    300 வருடங்கள் முன்பு இருந்த கல்வி முறை அதற்கான இலக்கிய சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன். இதை தாங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.

    சங்க நூல்களில் வர்ணத்தவர் ஆதிக்கம்
    https://thamizhan-thiravidana.blogspot.com/2011/07/64.html

    நடந்த ஒரு கொடுரமான விசயத்தை திசை திருப்பக் கூடிய வகையில் சம்மந்தமே இல்லாத விசய்ங்களை பேசும் அறிவு ஜீவிகளை குறைந்த பட்சம் இது போன்ற பதிவிலாவது அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

    சந்திர சேகரன்,

    \\சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியை கொடுக்காதேன்னு சொல்ற புஸ்தகத்தை தலையிலே தூக்கி வெச்சுகிறவா எப்படி முழுமனசோட சொல்லிக்குடுப்பான்னு நம்புறது?\\

    ஹாஹா… அம்பேடுகர் என்ற பெயர் எவ்வாறு அவருக்கு எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

    \\ஆனா பெரும்பாலான பேர் கிறிஸ்தவர்களாலே கிடைத்த கல்வியை நன்றியோடு நினத்துப்பார்க்கிறோம். ஒரே கடவுளை கும்பிடுறதனாலே நீங்களும் நாங்களும் ஒன்றாகிட முடியாது. வேறு வேறு கடவுளை கும்பிட்டாலும் நாங்களும், கிறிஸ்தவர்களும் இணக்கமாக இருக்க முடியும். \\

    கிறித்துவ கபோதிகளின் யோக்கியதை என்னவென்று தென் தமிழ் நாட்டில் உள்ள் சர்சுகளுக்கு சென்று பார்த்தால் தெரியும். என்ன கேனத்தனமான ஒரு பதில்.

    சீனா நம்மை விட பல மடங்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் சொல்லவே தேவையில்லை. இந்த நாடுகள் எல்லாம் என்ன கிறித்துவ மிஷினரிகள் வந்து தான் முன்னேறினவா? அங்கெல்லாம் சாதிகள் இல்லையா? இத்தனை வளங்கள் இருந்தும் இந்த நாடு சீரழிந்து கொண்டு இருப்பதற்கு கிறித்துவ பயங்கரவாதிகள் தான் காரணம்.

    வேதம் படித்து கொண்டு இருந்த பிராமணை யார் ஆங்கிலம் படிக்க வைத்தது அவர்களை வைத்து யார் சமுதாயத்தில் ஆரிய திராவிட விஷத்தை புகுத்தியது என்பது அறிவுள்ளோர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

    ருவாண்டாவின் இனப்படு கொலைகளை படியுங்கள் அப்பொழுது தெரியும் கிறித்துவ பயங்கரவாதிகளின் உண்மை முகம்.

    \\உண்மையிலே மத்தவாளுக்கு கல்வியை தரணும்னு மனசிருந்தா தன்கிட்டே அதிகாரமிருந்த காலகட்டத்திலே அல்லவா சொல்லிக்கொடுத்திருக்கணும்? \\

    300 வருடங்கள் முன்பு இருந்த கல்வி முறை அதற்கான இலக்கிய சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன். இதை தாங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.

    சங்க நூல்களில் வர்ணத்தவர் ஆதிக்கம்
    https://thamizhan-thiravidana.blogspot.com/2011/07/64.html

    ஒரு குழந்தை கொல்லப்பட்டு இருக்கிறாள். இந்த கொடுமையான விசயத்தை பற்றி கருத்து தெரிவிக்காமல் கருத்தை திசை மாற்றும் பொழுதே தங்களின் நோக்கம் என்ன என்பதை நாம் புரிந்து கொண்டேன்.

  25. //எப்போ பாரு அடுத்த மதத்தை குறை சொல்லிக்கிட்டு.ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு ட்ரஸ் கோட் இருக்குது. அந்தந்த இடத்துக்கு அதுக்கு தகுந்த மாதிரிதான் அணியணும். ஸ்கூலே சேரும்போதே அதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டு தானே சேருறாங்க. அப்புறம் அதை மீறுவது சரியல்ல.//

    @சந்திரசேகரேந்திரன்
    பள்ளியில் சேரும்போது எதை ஒத்துக்கொண்டு சேருகிறார்கள்? பொட்டு வைக்க கூடாது என கையெழுத்து பொட்டு கொடுத்தார்களா? ஏன் தற்கொலைக்கு தூண்டிய ஒரு மதத்தை குறை சொல்லக் கூடாது? பள்ளிகளுக்கு அனுமதி வாங்கும் பொது “எல்லா மதத்தினரையும் பாரபட்சமின்றி, கட்டாயப்படுத்தாமல் நடத்துவோம்” என்று கையெழுத்துப் போட்டுதானே அனுமதி பெற்றார்கள்? அதை ஏன் மீறுகிறார்கள்?

  26. நெறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது! அனால் எதோ ஒரு தயக்கம். விவாதம் செய்து பழக்கம் இல்லை எனக்கு. அதனால்தான் என்னவோ! இருந்தாலும் சுருக்கமாக ஒன்று சொல்கிறேன்

    திரு தாம்சன் அவர்களின் கருத்துதான் என்னை போல கிறிஸ்துவனாக பிறந்தவனுக்கு கிருஸ்துவ மதத்தின் மீது வெறுப்பு உண்டாகிறது!. சிறுமியின் மரணத்திற்க்கு அனுதாபம் தெரிவிக்கும் சாக்கில் , சிறிதும் மனசாட்சி இல்லாமல், மத பிரசாரம் செய்கிறார் அவர்.

    ‘ அவர்களின் பெற்றோர்கள் மீட்பரை அடையாளம் காணவும் பிரார்த்திக்கிறேன்.’

    என்ன வார்த்தை இது? இந்த மீட்பர் பெயரை சொல்லிதான் , இங்கே ஒரு குழைந்தையின் உயிர் போய்விட்டது. உயிரை எடுத்தாவது அந்த மீட்பார் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தவியாய் தவிக்கிறார் .

    பரிசுத்த வேதாகமம் படித்தவரின் வாயில் இருந்து , நேர்மையற்ற , அசுத்தமான வார்த்தைகள் !

    திரு தாம்சன் அவர்களே, தறி கெட்டு வாழும் கிருஸ்துவர்களிடம் உங்கள் மீட்பாரை பற்றி முதலில் உபதேசம் செய்யுங்கள். அதன் பிறகு மற்றவர்களிடம் செய்யலாம்.

    உங்களை போல மனிதர்கள் இருப்பதால்தான், எனக்கு கிருஸ்துவ மதம் மீது வெறுப்பு உண்டாகிவிட்டது. வாழ்க உங்கள்… மீட்பார் செய்தி!

    எல்லாம் வல்ல ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா குழந்தை ரஞ்சிதாவின் ஆத்மாவை ஆசிர்வதிக்கத்தும் !

    திரு தாம்சன் அவர்களின் அறிவு கண்களை அதே பரமாத்மா திறக்கட்டும்.

  27. மன்னிக்கவும் .. குழந்தை ரம்யா என்பதை ரஞ்சிதா என்று எழுதிவிட்டேன். அனாலும், குழந்தைகள் ரம்யா, ரஞ்சிதா சுகன்யாவுக்கு திரு தாம்சன் போல அல்லாமல் , எனது நேர்மையான அஞ்சலிகள்.

  28. பலரும் கிறித்துவப் பள்ளிகளில் மாணவர்க்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றியும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார்கள் உண்மைதான்.. ஆனால் முக்கியமாக குழந்தைகளுக்கு மன தைரியமும் எந்த ஒரு சிக்கலிலும் போராடி வெல்லும் திறமையையும் வளர்க்க வேண்டும். இதில் பெற்றோர்களின் பங்களிப்பு பெரிதும் தேவை. எதற்க்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

  29. இங்கு சந்திரசேகரேந்திரன் ஒரு முகமூடிப் பெயர் என்று எனக்குத் தோன்றுகிறது. வேண்டுமென்றே யோசித்துத் தேர்ந்தெடுத்த பெயர். இந்தப் பெயரில் மறைந்திருக்கும் மனித ரூபமும் முகமூடி என்றே எனக்குத் தோன்றுகிறது. நேர்மையும் உண்மையும் இருந்தால் ஹிருதயம் இருக்கும். தன் முகத்தைக் காட்டும் தைரியமும் இருந்திருக்கும். இந்த சந்திரசேகரேந்திர் முக மூடிக்கு தாம்ப்ஸனே தேவலை.

  30. //கொலை செய்துவிட்டு பிரார்த்திப்பது தான் கிறிஸ்தவம். தெளிவுபடுத்தியதற்கு//

    அதே…

  31. Christianity is the silent killer and slow poison. one should realise this. All hindus must send their children only to hindu schools. Now many hindu schools are coming up in every towns and villages but it is pity that we have attraction only towards english convent which are run by missionaries. India has become a country of anti hindus run with people of hindus majority because of this convent education. christian missionaries work directly under the control of vatigan which appoints archbishops directly. So all archbishops become the citizen of vatigan country because they are appointed by them and hence they are given passport of italian vatigan . No indian court can sue the archbishops in india as they are not governed by indian laws. These archbishops are trained in madrid spain 3 years by oppusdei ,the intelligence operatives of vatigan school of thoughts and given silent novel methods to propogate their religion in countries like india and china which are their present target under joshuv project for which american government has sanctioned 2 billion dollars by previous presidents. so these archbisops give trainings to other bishops about the cunning method who appoint sales representatives like importer – whole salers- distributors- sales agents- retailers- hindu customers, a chain of operatives – archbishops- bishops- pastors – fathers – his assistants
    who collect money RS 135 per month for every member. So christianity is not a religion but a method of making entire human beings of world as slaves under pope to control by western countries mainly america. so there is no spiritual in christianity as one can see only the dead man in cross bleeding and show the sorrow ,pain and death. Cross is the symbol of death and hence it is both in church and also in cemetry where christians install the cross in tombs. they say christ will come in the second coming in sky so that all buried dead bodies will raise up to join with jesus for going to heaven. christnity has no answer – where was the soul lying when the body was buried ? what about the non believer bodies state ? whether souls are immortal or bodies are ?. So christainity has no scientifc concept like hinduism- hence many western people denounce and desert this man made religion and embrace to hinduism or buddhism now.

  32. வாசகர்களுக்கு…..

    சந்திர செகரேந்திரன் என்ற பெயரில் கருத்து பதிவு செய்துள்ள பேர்வழி யார் என்பதை புரிந்து கொள்வோம்……இந்த ஆசாமி தினமலர் தளத்திலும் மற்ற தளங்களிலும் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக விஷம் கக்கும் நாகரீகமற்ற காட்டுமிராண்டி….[ தனக்கு தேவை முட்டாள்களே என்று பகிரங்கமாக அறிவித்த ஈ .வெ ரா வின் காலை கழுவி குடிக்கும் ஜென்மங்கள் ] இது போன்ற ஆசாமிகள் வாந்தி எடுப்பதை வெளியிட வினவு போன்ற குப்பை தளங்கள் உள்ளன..

    // ஒரே கடவுளை கும்பிடுறதனாலே நீங்களும் நாங்களும் ஒன்றாகிட முடியாது. //

    முகத்தை மறைத்துகொள்ளும் இணைய தள வசதியை பயன்படுத்தாமல் உங்கள் உண்மையான பெயரையும் முகவரியையும் [ ஆதாரங்களுடன் ] வெளியிடுங்கள் பார்ப்போம் . அதன் பிறகு எந்த விதமான விவாதத்துக்கும் நான் தயார்.

  33. சந்திர சேகரன் போன்ற [..] தடை செய்வதை விட அவர்களின் உளறல்களை ரசிக்க கற்றுகொள்வோம். அவருக்கு பதில் அளிப்பதையும் ஒரு கடமையாக செய்வோம். அவருக்கு புரியாவிடினும், நிஜமான குழப்பத்தில் இருக்கும் சிலருக்கு பயன் தரும்.

    //வேத பாடசாலையிலே படிக்கிற பையன் குடுமியை எடுத்துட்டு ஃபங்க் வச்சுக்கிட்டு ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு வந்தா ஒத்துப்பாங்களா? //

    கண்டிப்பாக மாட்டார்கள், ஆனால் அங்கு அது தான் நடைமுறை என்பது அனைவருக்கும் தெரியும். பாடசாலை என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை போதிக்கும் ஒரு இடம். அது தன் விதிகளை கொண்டுள்ளது, ஆனால் பள்ளி என்பது அனைவரும் வரும் இடம், அதற்கான விதிகள் இருக்கலாம், அது தெளிவாக வரையறுக்க பட்டிருக்கவேண்டும்.

    //ஆனா சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியை கொடுக்காதேன்னு சொல்ற புஸ்தகத்தை தலையிலே தூக்கி வெச்சுகிறவா எப்படி முழுமனசோட சொல்லிக்குடுப்பான்னு நம்புறது//

    முழு [..] கூட இப்படி யோசிக்க முடியாது. இன்று எத்தனை கல்வி நிலையம் பிராமணர்களிடம் உள்ளது. எத்தனை பிராமணர்கள் ஆசிர்யர்களாக உள்ளனர்.

    //அந்த பெண் பாதிரியாரின் நடுவிரல் புகைப்படம் உங்கள் சிந்தனையின் தரத்தைச் சொல்கிறது//

    அது பெண் பாதிரியாரின் தரத்தை காட்டுகின்றது. கற்பழித்தவன் புகைபடத்தை வெளியிடுவது போல.

    [Edited and published]

  34. பொதுவாக இன்று காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் பெரும்பாலும் ஹிந்துக்களே. அப்படியிருக்கும்போது ஏன் ஹிந்துமதத்திற்கு எதிராகவே செயல்படுகிறார்கள் என்று யோசித்து பார்க்க வேண்டியுள்ளது. நாம் தான் secular என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்களா? ஐயோ பாவம்.

  35. அன்பு சகோதரர்களுக்கு வணக்கம்,

    முதலில் இறையடி சேர்ந்த இளம்பிஞ்சுகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலி,
    மேலும் பலமுறை இது போன்ற இடையூறுகள் இருந்தும் தனது இயல்பை (இந்து கலாசார அடையாளத்தை) மாற்றாது பள்ளிக்கு சென்று சற்றும் முடியாத போது தன்னுயிர் நீத்த குழந்தை ரம்யாவிற்கு எனது சிரம் தாழ்ந்த வீர வணக்கம்.

    இன்றும் எத்தனையோ ஹிந்துப் பள்ளிகள் இருப்பினும் கான்வெண்டே சிறந்த பாட சாலை என்று என்னும் பேதை ஹிந்துக்கள் இருக்கும் வரை இந்த அவலம் தொடரத்தான் செயும். முதலில் நாம் நமது பிள்ளைகளை நல்ல ஹிந்துப் பாட சாலையிலே சேர்க்கும் பணியை இனிமேலாவது துவங்குங்கள்.

    இறந்த இளம் மொட்டுகளுக்காக கொஞ்சமும் சலனப் படாமல் பிரார்த்திக்கும் தாம்சன். சிறப்பான செய்தி அய்யா உம்முடையது . பல நூற்றாண்டுகளாக இதுதான் தொடர்கிறதே,

    /////பள்ளிக்கூடம் விதிக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டியது மாணவர் கடமை. பல மதத்தவர்களும் படிக்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் அடையாளங்களை முன்னிலைப்படுத்துவது///////

    தவறுதான் ஆனால் அது மாணவர்களுக்கு மட்டுமா?

    ஒன்று செய்யும் நேராக ஒவ்வொரு கிறிஸ்துவ பள்ளிகளுக்கும் சென்று பாரும், அங்கே குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டு இருக்கும் கண்ணியாச்த்ரீகளிடம், மற்றும் டீச்சர்களிடமும் சொல்லுங்கள் கல்வி கற்க வரும் பல மதம் சார்ந்த மாணவர்களிடம் பாடம் நடத்த வேண்டும் எனவே நீங்கள் உங்கள் கலாசார சின்னங்கள் எதையும் அணியாதிருப்பீராக, என்று.

    பள்ளிக் கூடங்களில் மனித நேயம் போதிக்க ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும், அன்றி மனிதநேயம் என்றாலே எனது மதம்தான் என்று போதிக்கக் கூடாது.

    அப்புறம் சந்திர சேகரரே உமக்கெலாம் பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லை ஆனாலும் ……..

    *********(அந்த பெண் பாதிரியாரின் நடுவிரல் புகைப்படம் உங்கள் சிந்தனையின் தரத்தைச் சொல்கிறது)**********

    உண்மைதான் ஒரு இயல்பான இந்துவுக்கு தெரிய வேண்டியது அந்த அம்மையாருக்கு தெரிந்து இருப்பது ஆச்சர்யம், நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்பது உமது தரம், ஒரு ச்னாதாநியாக நான் எண்ணுவது எல்லாம் எமது தரம் ஆகாயத்தையும் விஞ்சியது என்பதுவே, இது ஒரு சனாதனிக்கு தெரியும் நீர் யார் என்பதுவே உமக்கு தெரியாதிருப்பதால் எனது விளக்கம்.

    பஞ்ச பூதங்களின் அடயாளம் நம் கைவிரல்கள், அதிலே அந்த அம்மையார் காட்டி சொல்வது அதாவது நடு விரலானது ஆகாயம் ஆகும், எமது தரத்திற்கு நாம் நினைத்துக் கொண்டோம், உமது தரம் கொண்டே உமது எண்ணம் இருக்கும் அல்லவா?

  36. இதை கண்டித்து நாளை (22/09/2011) காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளவும்.

    இடம்: Immanuvel Methodist Higher secondary school,
    Pudhoor, Ambattur (Near Puthoor Bus Stand)

  37. ஒரு கால் இல்லாதவன் , காலில் ஒரு விரல் இல்லாதவனை விமர்சிப்பது போல உள்ளது இந்த கட்டுரை
    ஒருவர் படிக்கும் அல்லது பணிபுரியும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டியது அவசியம் , நான் ஹிந்து அதனால் கிறிஸ்தவ நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்பவர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி தான் விரும்பும் மற்றொரு கல்விநிறுவனத்தில் கல்வியை தொடர்ந்திருக்கலாம் எதற்கும் தற்கொலை ஒரு தீர்வு அல்ல

  38. \\நான் ஹிந்து அதனால் கிறிஸ்தவ நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்பவர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி தான் விரும்பும் மற்றொரு கல்விநிறுவனத்தில் கல்வியை தொடர்ந்திருக்கலாம் \\

    இது ஹிந்துஸ்தானம். அதனால் அதற்குரிய விதிமுறைய்களை கடைபிடித்து தான் ஆக வேண்டும். நீங்கள் வேண்டுமானல் உங்களின் இது போன்ற நிபந்தனைகளை வாடிகனிலோ அல்லது ஐரோப்பாவிலோ வைத்து கொள்ளுங்கள். அதனால் ஹிந்து ஸ்தானத்தில் ஹிந்து விதிமுறைகளை கடைபிடித்து தான் ஆக வேண்டும். உங்களால் ஹிந்து முறைப்படி வாழ விருப்பம் இல்லை என்றால் வேறு நாட்டுக்கு செல்ல வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

  39. ///இதை கண்டித்து நாளை (22/09/2011) காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளவும்.

    இடம்: Immanuvel Methodist Higher secondary school,
    Pudhoor, Ambattur (Near Puthoor Bus Stand)///

    அனைத்து ஹிந்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

  40. Emmanuel Methodist Matriculation Higher Secondary School

    0 Reviews
    Address:
    Pudur,Ambattur,Chennai,600053
    Phone:
    +91-44-26864189

    நமது எதிர்ப்பை இங்கே பதிவு சேயிதால் மட்டும் போதாது .. கடிதம் மூலமாகவும் … தொலை பேசி வழியாகவும் .. நம் எதிர்ப்பை பதிய வேண்டும் …

  41. சில கிறுத்துவப் பெயர்தாங்கிகள் எழுதும் சில கமெண்டுகளை வைத்து ஒட்டுமொத்தமாக எங்கள் சமுதாயத்தைத் தாக்கும் போக்கு வருத்தம் தருகிறது. முதலில் செல்வி ரம்யாவுக்கு அஞ்சலி. எங்கள் தேவன் அன்புவடிவானவர். அவர் எந்தக் குழந்தையும் இப்படித் துயர்படுவதைப் பொறுக்க மாட்டார். ஆனாலும் என் சக கிறுத்துவர்கள் சிலர் இப்படி துன்மார்க்கர்களாய், வெறியர்களாய், ரத்தம் குடிக்கும் காட்டேரிகளாய் நடந்து கொள்வதைக் காணும் போதெல்லாம் என் இதயத்தில் குருதி வடிகிறது. தேவனே இவர்களுக்கு அன்பைப் போதியும் என்று வேண்டுவதைத் தவிர எனக்கு எதுவும் தோன்றவில்லை. என் இந்து சகோதரர்களின் கோபம் மிக நியாயமானது. அதுவும் இந்தச் சம்பவத்தில் இந்த அளவுக்குக் கொடுமை செய்திருக்கும் இம்மானுவேல் காட்டேரி பள்ளிக்கு என் கடுமையான கண்டனங்கள். கலகக்காரர்களில் சில பிரிவினர்களின் வெறித்தனத்தால் எங்கள் மதமே களங்கப்பட்டுப் போகிறது என்பதுதான் கொடுமை.

    சேவியர் தேவன்பு

  42. @கோமதி செட்டி //பீமாராவ் எப்படி அம்பேடுகர் ஆனார் என்ற கதை உங்களுக்கு தெரியுமா?//
    ஒரு சில பேர் விதிவிலக்காக இருந்திருக்கலாம். ஆனால் பொதுவான மனநிலையைத்தான் கருத்தில் கொள்ளவேண்டும். விதிவிலக்குகளை வைத்து பொதுவான விஷயங்களை அணுக முடியாது.

    //வேதம் படித்து கொண்டு இருந்த பிராமணை யார் ஆங்கிலம் படிக்க வைத்தது அவர்களை வைத்து யார் சமுதாயத்தில் ஆரிய திராவிட விஷத்தை புகுத்தியது என்பது அறிவுள்ளோர் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.// ஆங்கிலம் படிக்க விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தி ஆங்கிலம் படிக்க வைத்தனரா? தாங்கள் ஆங்கிலம் படித்து ஆங்கிலேயரிடம் வேலை பார்த்தபோது “இந்த ஆங்கில ஆட்சி கடவுள் அனுக்கிரகத்தால் ஏற்பட்டது, இதை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று உபதேசித்தவர்களும், அதே ஆங்கில ஆட்சி ஆனைத்து பிரிவினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, ஆட்சி அதிகாரத்தில் வாய்ப்பு தந்த பிறகு அதே ஆங்கில ஆட்சியை எதிர்த்தவர்களும் யார் என்பது அறிவுள்ளோர் மட்டுமல்ல பாமரனும் புரிந்துகொள்ளமுடியும்.

    //சீனா நம்மை விட பல மடங்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் சொல்லவே தேவையில்லை. இந்த நாடுகள் எல்லாம் என்ன கிறித்துவ மிஷினரிகள் வந்து தான் முன்னேறினவா? அங்கெல்லாம் சாதிகள் இல்லையா? // அங்கெல்லாம் பிறப்புவழி வருணாசிரமம் இல்லை. இங்கே பிறப்புவழி வருணாசிரமம் இருந்தது (which is not preached in Vedas).

    @Kargil Jay //ஏன் தற்கொலைக்கு தூண்டிய ஒரு மதத்தை குறை சொல்லக் கூடாது?// என்னுடைய மறு மொழியை கவனியுங்கள். தொடங்கும்போதே //அந்த பெண்ணை பலர் முன்னிலையில் திட்டியவர்கள் மேல் கோபம் வருகிறது.// என்றுதான் தொடங்கினேன். மேலும் //பப்ளிக்கா திட்டுறதை ஆதரிக்கலை. அவங்க பேரன்ட்ஸ வரச்சொல்லி விஷயத்தை சொல்லியிருக்கலாம். ஒத்துக்கிட்டா அதே ஸ்கூலிலே கண்டினியூ பண்ணுறாங்க. அல்லது வேற ஸ்கூலிலே சேக்குறாங்க// என்றும் குறிப்பிட்டிருந்தேன்.இது அந்த நிர்வாகம் விஷயத்தை தவறாக Handle பண்ணியது. இதிலே மதம் என்ன பண்ணிச்சு?
    //பள்ளிகளுக்கு அனுமதி வாங்கும் பொது “எல்லா மதத்தினரையும் பாரபட்சமின்றி, கட்டாயப்படுத்தாமல் நடத்துவோம்” என்று கையெழுத்துப் போட்டுதானே அனுமதி பெற்றார்கள்?// எல்லா மதத்தினரையும் பாரபட்சமில்லாமல் நடத்துவதென்பது சாத்தியம். ஆனால் கட்டாயப்படுத்தாமல் என்பது எப்படி சாத்தியம்ன்னு நீங்க கொஞ்சம் விளக்கினால் நல்லா இருக்கும். ஏன்னா யூனிஃபார்ம் அப்படின்றதே கட்டாயம் தான். அதே போலத்தான் ட்ரஸ் கோடும். இது வெளியில் பிறர் பார்வையில் படும்படியான விஷயத்துக்கு மட்டும்தான். கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கும் பிராமண மாணவர்களை யாரும் பூணூலை அகற்றச்சொல்வதில்லையே! இதிலேயே தெரியவில்லையா இதிலே மத பாரபட்சமில்லை, புறத்தோறத்திலே எல்லா மாணவர்களும் ஒரேமாதிரி இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் காரணமென்று.

    @வெங்கட் சாமிநாதன் //இங்கு சந்திரசேகரேந்திரன் ஒரு முகமூடிப் பெயர் என்று எனக்குத் தோன்றுகிறது. // உண்மையான பேரே அதுதாங்க. நாங்க சைவர்கள். சங்கரமடத்து பக்தர்கள். பக்தி இருக்கிறது. அதற்காக
    தேவாதீனம் ஜகத்சர்வம்
    மந்த்ராதீனம் துதேவதா
    தன்மந்த்ரம் பிராமணாதீனம்
    பிராமணா மமதேவதா
    என்று சொன்னால் ஒத்துக்கறது சரியல்ல.

    @saravana kumar //சந்திர செகரேந்திரன் என்ற பெயரில் கருத்து பதிவு செய்துள்ள பேர்வழி யார் என்பதை புரிந்து கொள்வோம்……இந்த ஆசாமி தினமலர் தளத்திலும் மற்ற தளங்களிலும் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக விஷம் கக்கும் நாகரீகமற்ற காட்டுமிராண்டி// பாராட்டுக்களுக்கு நன்றி. என்னுடைய கருத்துக்களில் ஹிந்துமதத்துக்கு எதிராக எந்த கருத்தும் கூறியதில்லை. மெஜாரிட்டியாக உள்ள ஹிந்துக்களை மைனாரிட்டிகளாக உள்ள ஹிந்துக்கள் அடிமைகளாக வைத்திருப்பதைத்தான் எதிர்த்திருக்கிறேன். வஹாபி ஹிந்து Ideology ஐ தான் எதிர்த்திருக்கிறேன். மதத்திலுள்ள சிறு சிறு குறைகளை சரிசெய்ய முயற்சிப்பவர்களின் கருத்துக்கள் மதத்தை வைத்து மற்றவர்களை கண்ட்ரோல் பண்ண நினைப்பவர்களுக்கு விஷமாகத்தான் இருக்கும். உங்களுக்கு எம்பெருமான் கயிலைநாதன் மனமாற்றத்தை அளிக்கட்டும்.

    @பாஞ்சஜன்யன் //பாடசாலை என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை போதிக்கும் ஒரு இடம். அது தன் விதிகளை கொண்டுள்ளது, ஆனால் பள்ளி என்பது அனைவரும் வரும் இடம், அதற்கான விதிகள் இருக்கலாம், அது தெளிவாக வரையறுக்க பட்டிருக்கவேண்டும்.// பாடசாலை வேறு, பள்ளிவேறா?பிரமாதம். அப்போ ஆரம்ப பாடசாலை என்றெல்லாம் எழுதுவது சொற்குற்றமா, பொருள் குற்றமா? வேதபாடசாலை போலத்தான் பள்ளிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள்.

    Sorry for repeatation: வேத பாடசாலையிலே படிக்கிற பையன் குடுமியை எடுத்துட்டு ஃபங்க் வச்சுக்கிட்டு ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு வந்தா ஒத்துப்பாங்களா? அல்லது பஞ்சகச்சமும், குடுமியும் எங்க கலாச்சாரம்ன்னு சொல்லிட்டு மிலிட்டரியிலோ, போலீசிலோ பஞ்சகச்சம் போட்டுட்டு குடுமி வெச்சுட்டு போகமுடியுமா? அததுக்குன்னு ஒரு ட்ரஸ் கோட் இருக்குது.

    //சம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார்.// பகவத்(?) கீதையை படிக்காவிட்டால் நாட்டைவீடு வெளியேறவேண்டும் என்று சொன்னதைவிட இது பரவாயில்லை. தவறை நியாயப்படுத்தவில்லை. உங்க மேல அவ்வளவு அழுக்கை வச்சுக்கிட்டு அடுத்தவர் முதுகில் உள்ள தூசிக்கு குறை சொல்லக்கூடாது.

  43. //தேவாதீனம் ஜகத்சர்வம்
    மந்த்ராதீனம் துதேவதா
    தன்மந்த்ரம் பிராமணாதீனம்
    பிராமணா மமதேவதா//

    இந்த ‘மந்திரம்’ எங்கே வருகிறது என சொல்ல முடியுமா?

    புறத்தோற்றத்தில் எல்லா மாணவர்களும் ஒன்று போல இருக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துவிட்டு வர சொல்வார்களோ அடுத்தது? பகவத் கீதையை படிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று எவரும் சொல்லவில்லை. பகவத் கீதையை மதிக்காதவர்கள் இந்த நாட்டின் பண்பாட்டுக்க் அன்னியமானவர்கள் என்றுதான் சொன்னார் ஒரு பாஜக தலைவர். அதுவும் கூட ஒரு தனிநபரின் கருத்துதானே ஒழிய ஒரு அமைப்பு அல்லது ஒரு கட்சியின் கருத்து கூட அல்ல. இரண்டாவதாக அது ஒரு சட்டமோ விதியோ அல்ல. இந்நிலையில் ஒரு சிறு குழந்தையை விவிலியம் படிக்க சொல்லி அப்பெண்ணின் காப்புக்கயிறை அறுத்தெறிந்து தற்கொலைக்கு தூண்டிய மதவெறியுடன் இதை ஒப்பிடுவது முழுக்க முழுக்க அயோக்கியத்தனமே அல்லாமல் வேறெதுவும் இல்லை. இந்த அயோக்கியத்தனத்துக்கு பெயர்தான் கிறிஸ்தவ அன்பு. ‘என் ஆட்சியை ஏற்காதவன் தலையை வெட்டி என் காலடியில் போடு’ என்று கதை சொல்லி வெறி வளர்க்கும் ஏசுவை அன்பானவன் என சொல்லி மதமும் வயிறும் வளர்க்கும் கும்பலிடம் வேறென்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

  44. நண்பர்களுக்கு முக்கிய செய்தி: அம்பத்தூர் (புதூர்) இம்மானுவேல் மெதாடிஸ்ட் பள்ளியின் வாசலில் ரம்யா எனும் இந்து மாணவியை அவமானப்படுத்தி தற்கொலை செய்யவைத்த ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகிகளைக் கண்டித்து ஆர்பாட்டம் செய்யச் சென்ற நம் நண்பர் கௌதமனும் மற்றும் 25 ஹிந்து போராளிகளும் கைது செய்யப்பட்டு பள்ளி அருகே ஒரு மண்டபத்தில் வைத்துள்ளனர் போலீசார்.

  45. // அதுவும் இந்தச் சம்பவத்தில் இந்த அளவுக்குக் கொடுமை செய்திருக்கும் இம்மானுவேல் காட்டேரி பள்ளிக்கு என் கடுமையான கண்டனங்கள். கலகக்காரர்களில் சில பிரிவினர்களின் வெறித்தனத்தால் எங்கள் மதமே களங்கப்பட்டுப் போகிறது என்பதுதான் கொடுமை.

    சேவியர் தேவன்பு //

    அன்பு சகோதரரே, கொடுமைக்கார கொள்ளைக்கார மிஷனரியான சேவியரின் பெயரைக் கொண்டிருந்தாலும், உங்கள் பரிந்துணர்வும், கண்டனமும் உண்மையானவை, இதயத்திலிருந்து வருபவை என்றே கொள்கிறேன்.

    மரித்துப் போன உயிரின் துயரத்தையும், உற்றாரின் பரிதவிப்பையும் ஒருசிலராவது உணர்ந்து வெளிப்படையாக உங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறீர்களே என்று ஆசுவாசம் கொள்கிறேன். மிக்க நன்றி.

  46. ஹிந்து மதத்தை புனருத்தாரணம் செய்ய அவதரித்திருக்கும் சந்திர செகரேந்திரனுக்கு……………

    // என்னுடைய கருத்துக்களில் ஹிந்துமதத்துக்கு எதிராக எந்த கருத்தும் கூறியதில்லை.//

    முழு பூசணிக்காயை அல்லாமல் முழு பூசணி தோட்டத்தையே இலை சோற்றில் மறைக்கப்பார்க்கிறீர்கள்…….

    இந்த தளத்தில் மட்டுமல்லாது பல இணைய தளங்களில் ஹிந்து மதத்துக்கு எதிரான பல அவதூறுகளை ,துவேஷப்பிரச்சாரங்களை நீங்கள் செய்வதை பார்த்த பின்பே உங்கள் வேஷத்தை தோலுரிக்க முயன்றேன்…..கேட்டால் சங்கர மட பக்தர்கள் என்று சொல்வீர்கள்…..சங்கர மடத்துக்கு இதைவிட வேறு அவதூறு தேவையில்லை….deology ஐ தான் எதிர்த்திருக்கிறேன்.

    ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதன் மூலமே வளர்க்க முடியும் என்ற உங்கள் அற்புதமான கண்டுபிடிப்பு எங்களை புல்லரிக்க வைக்கிறது…..நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்ட நினைக்கும் புத்திசாலிகள் எங்களுக்கு தேவையில்லை……எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக்கொள்வோம்…….

    // மதத்திலுள்ள சிறு சிறு குறைகளை சரிசெய்ய முயற்சிப்பவர்களின் கருத்துக்கறைகளை சரிசெய்ய முயற்சிப்பவர்களின் கருத்துக்கள் மதத்தை வைத்து மற்றவர்களை கண்ட்ரோல் பண்ண நினைப்பவர்களுக்கு விஷமாகத்தான் இருக்கும் //

    சுற்றி வளைத்து எங்கு வருகிறீர்கள் என்பது புரிகிறது…….உழக்கில் கிழக்கு மேற்கு வேண்டாம்…..இருப்பது ஒரேஒரு ஹிந்து நாடு……[ ஆனால் ஹிந்துக்கள் இரண்டாந்தர குடிமக்கள் ]

    ஜாபாலி, சிசுபாலன் முதல் இன்றைய மதமாற்ற சக்திகளின் அல்லக்கைகள் வரை பலரையும் பார்த்துவிட்டது எங்கள் மதம்…….சூரியனை பார்த்து குலைப்பதை தொடருங்கள்……..பிழைப்பு நடக்க வேண்டுமல்லவா?

  47. //பாடசாலை வேறு, பள்ளிவேறா?பிரமாதம். அப்போ ஆரம்ப பாடசாலை என்றெல்லாம் எழுதுவது சொற்குற்றமா, பொருள் குற்றமா? வேதபாடசாலை போலத்தான் பள்ளிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள்.// அய்யா அதி புத்திசாலி,ஆங்கிலத்தில் காண்டெக்ஸ்ட் என்று கூறுவார்கள் (தமிழில் சரியான வார்த்தை கிடைக்கவில்லை). நீங்கள் குறிப்பிட்டது வேதபாடசாலையை, அதே காண்டெக்ஸ்டில் குறிப்பட்டது அது. பொதுவாக பாடசாலை என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது வேத பாடசாலை. ஆரம்ப பாடசாலை என்பது எல்லாம் அரசு விளம்பர வாசகம்

    . //இந்த ‘மந்திரம்’ எங்கே வருகிறது என சொல்ல முடியுமா?// எதாவது அறைகுறை ஈ.வெ.ரா கும்பலின் நோட்டிசை கூறப் போகின்றார்.

    //விதிவிலக்குகளை வைத்து பொதுவான விஷயங்களை அணுக முடியாது.// சரிதான், விதிவிலக்குகள் ஒன்றிரண்டு இருந்தால் சரி, ஏராளமாக இருக்குமிடத்தில் என்ன செய்வது. அப்படி இருந்தால் அது விதிவிலக்கே அல்ல. ஏராளமான தலித்துகளும், பிராமணரல்லாதவரும் படித்து முன்னேறியுள்ளனர் எக்காலத்திலும்.

    //அங்கெல்லாம் பிறப்புவழி வருணாசிரமம் இல்லை. இங்கே பிறப்புவழி வருணாசிரமம் இருந்தது// அடைப்புகுறியில் டிஸ்கெளைமர் போட்டாலும் புளுகு புளுகுதான்.

    //மெஜாரிட்டியாக உள்ள ஹிந்துக்களை மைனாரிட்டிகளாக உள்ள ஹிந்துக்கள் அடிமைகளாக வைத்திருப்பதைத்தான் எதிர்த்திருக்கிறேன். // யார் யாரை அடிமைகளாக வைத்திருக்கின்றார்கள் புரியவில்லை, எந்த விதத்தில் அடிமைளாக உள்ளன்ர் என்றும் புரியவில்லை. பிராமணர்கள் மதம் சார்ந்த பங்கு என்கு உள்ளது, கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர், புரோகிதகர்களாக உள்ளனர். இது தான் அவர்கள் பங்கு. இதில் அடிமைத்தனம் எங்கு வந்தது. உங்களூக்கு என்று ஒரு கோவில் கட்டி அதில் நிங்களே கும்பாபிஷேகம் செய்து பூஜை செய்வதை யார் தடுத்தது. பல சாதியினர் திருமணத்திற்கு புரோகிதரும் கிடையாது ஐயரும் கிடையாது, அதை யாரவது தடுக்கின்றார்களா? பெரிய கோவில்களில்,ஆகம சட்டங்கள், முறைகள் அமல்படுத்தப்பட்ட கோவில்களில் பிராமணர்க்ள் அல்லாதவரை அர்ச்சகராக்க அனுமதிப்பதில்லை. இது அர்ச்சகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து வேலைகளுக்கும் சில சட்டங்களை வைத்துள்ளனர். //அந்தந்த இடத்துக்கு அதுக்கு தகுந்த மாதிரிதான் அணியணும். ஸ்கூலே சேரும்போதே அதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டு தானே சேருறாங்க. // ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சட்டம் உள்ளது, அதை மதித்துதான் ஆகவேண்டும். உங்களுக்கு ஒரு கோவிலின் சட்டம் பிடிக்கவில்லையென்றால் போகாதீர்கள். காளகஸ்தியில் உள்ளவர்களின் நடத்தையை பார்த்து அங்கு செல்வதில்லை என்று முடிவெடுத்தேன். அதனால் நான் இந்து அல்ல என்றாகுமா? வீட்டில் வழிபட்டால் இந்து இல்லையென்றாகுமா? எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் பிராமணரல்லாதவர்தான் பூஜை செய்கின்றார், அங்கு அனைத்து கடவுளர்களும் பிரதிஷ்டை செய்துள்ளனர். யாரும் போகமாலா இருக்கின்றார்கள். என் தந்தை கோவில் அர்ச்சகர், என் வீட்டில் அனைவரும் அங்கு செல்கின்றார்கள். உங்களைப் போன்ற சிலர்தான் விஷத்தை பரப்பி மக்களிடம் பெருகி வரும் ஒற்றுமையை கலைக்கின்றீர்கள். பிராமணர்கள் அனைவரையிம் மீறி அமர்ந்து கொண்டிருந்தனர், இப்போது அவர்கள் இறங்கி அனைவருடனும் கலக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் உங்களைப் போன்ற சிலர், அதை கெடுத்து குளிர் காய நினைக்கின்றீர்கள். உங்களுக்கு உண்மையில் இந்து மதம் மீது பக்தி இருக்குமானால், உங்களின் குற்றச்சாட்டு ஒரு சமூகத்தை சார்ந்து இருக்காது. சமுதாயத்தை சார்ந்து இருக்கும். இந்து மதம் என்றும் பிராமணர்களை சார்ந்து இருந்ததில்லை, அவர்களால் மட்டும் வளர்ந்தது இல்லை.

  48. இந்து மதத்தை காப்பது என்று முடிவு செய்து களத்தில் உள்ள சந்திர…., அதற்கு ஒரே வழி அதை கண்மூடித்தனமாக கேவலமாக பேசுவது என்றால், உங்கள் அறிவு சிறந்தது. நீங்கள் கூறுவது உண்மையான குறைகளும் அல்ல, வெறும் அவதூறு மட்டுமே. குறைகள் ஏதுமில்லாத முழுமையான, அனைவருக்கும் ஏற்ற கருத்துக்களை கூறும் இந்து மதம் நல்ல வேளையாக நீங்கள் வந்து சரிசெய்யும் நிலையில் இல்லை. 50 வருடம் முன்னால் சிலர் உளறியதை இன்னும் உளறும் உங்களுக்கு ஞானம் தர கைலாசனாதனையும், கூடவே கலைவாணியையும் வேண்டுவோம். இன்றைய நிலையில் இந்து மதத்தின் குறை, உங்களை போன்று போலித்தனமாக சீர்திருந்த வேஷம் போடும் நபர்கள்தான், உங்களுக்கு மததை உயர்த்தும் எண்ணம் இல்லை, அதில் குறை கூறி குழப்புவதில்தான் உள்ளது. நீங்கள் திராவிட கும்பலின் ஒரு பகுதி, கடவுள் இருப்பாரோ என்ற பயம் அதானால் கொஞ்சம் பக்தி ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரின் மீதான கோபம் அதனால் இந்து மதத்தின் மீதான வெறுப்பு. குழப்பம் தீர கடவுளை வேண்டுங்கள்.

  49. ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து இயக்கத்தினர் 28 கைது செய்யப்பட்டு பின்னர் 11.30 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் ரம்யாவின் பெற்றோர் சார்பில் உதவி ஆணையர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

  50. சூப்பர். பாலைவன மண்ணுக்காக இப்படி போட்டி கொண்டு எழுதுவதை பார்க்கும் பொழுது எந்த அளவுக்கு உங்கள் புத்தி கெட்டு போய் உள்ளது என்று தெரிகிறது.

    \\ஆங்கில ஆட்சி கடவுள் அனுக்கிரகத்தால் ஏற்பட்டது\\

    கிறித்துவத்திற்கும் ஆங்கிலத்திற்கும் என்ன சம்மந்தம். கிறித்துவத்தின் சொந்த மொழி என்று யூத மொழியை வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம்.

    ஒட்டு மொத்த ஐரோப்பாவும் பாகன் என்று சொல்லப்பட்டவர்களுக்கு சொந்தமானது. சொல்லப்போனால் அது பாகன் என்று சொல்லப்பட்ட்வர்களின் மொழி.

    உங்கள் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் அளித்துள்ளேன். இது ஹிந்து நாடு. இங்கு ஹிந்துக்கள் தங்கள் விருப்படி எந்த இடத்திலும் தங்கள் மத சமய அடையாளங்களை அணியலாம். அதனால் உங்களுக்கு பிடிக்காவிட்டால் நீங்கள் வெளியேறலாம்.

    நீங்கள் சொல்வது நியாய என்றால் நான் சொல்வதும் நியாயம்.

    \\அங்கெல்லாம் பிறப்புவழி வருணாசிரமம் இல்லை. இங்கே பிறப்புவழி வருணாசிரமம் இருந்தது (which is not preached in Vedas).\\

    உங்கள் வரலாற்று அறிவு என்ன வியக்க வைக்கிறது.

    https://en.wikipedia.org/wiki/Caste#China

    this is only for reference. when you explore further you will come to know the actual truth behind it….

    இங்கு சாதி உண்டு. சாதிக்குள் ஏற்ற தாழ்வு என்பது ஆப்ரகாமிய கயவர்களான அரேபியர்களும், கிறித்துவர்களும் வந்து தான் உருவானது.வர்ணம் வேறு சாதி வேறு என்ற அடிப்ப்டை அறிவு இல்லாது எழுதுவது நகைப்புக்கு உரியது.

    \\ஆங்கிலேயரிடம் வேலை பார்த்தபோது “இந்த ஆங்கில ஆட்சி கடவுள் அனுக்கிரகத்தால் ஏற்பட்டது, \\

    நான் அங்கிலேயரிடம் வேலை பார்க்கிறேன் என்று யார் சொன்னது. இப்படி லூசு தனமாக பேச வேண்டாம். அப்படியே நான் வெளி நாட்டு நிறுவனத்தில் வேலை செய்தாலும் என் அறிவை கொடுக்கிறேன். அதற்கு பணம் கிடைக்கிறது. இது ஒரு பண்ட மாற்று முறை. உங்கள் எழுத்தில் இருந்தே தெரிகிறது. கிறித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் மக்களின் ஆதிக்க / முதலாளித்துவ புத்தி….

    நாங்கள் கட்டும் வரிப்பணத்தில் பிச்சையாக கிடைத்த பணத்தில் கல்வி நிறுவனங்கள் என்று கூறி மதம் மாற்றும் குள்ள நரி தனத்தை என்ன வென்று சொல்வது….

    ஒரு 14 வயது பெண்ணை அத்தனை பேர் முன்பும் அவமானப்படுத்தி கொலை செய்துள்ள கயவர்களுக்கு நன்றாக வக்காளத்து வாங்குகிறீர்கள்.

  51. //இங்கு சந்திரசேகரேந்திரன் ஒரு முகமூடிப் பெயர் என்று எனக்குத் தோன்றுகிறது. வேண்டுமென்றே யோசித்துத் தேர்ந்தெடுத்த பெயர். இந்தப் பெயரில் மறைந்திருக்கும் மனித ரூபமும் முகமூடி என்றே எனக்குத் தோன்றுகிறது. நேர்மையும் உண்மையும் இருந்தால் ஹிருதயம் இருக்கும். தன் முகத்தைக் காட்டும் தைரியமும் இருந்திருக்கும். இந்த சந்திரசேகரேந்திர் முக மூடிக்கு தாம்ப்ஸனே தேவலை.////

    தொம்ஸன் என்ற பெயரும் போலியாகத்தான் தெரிகிறது. எவரும் இறப்பைக் குறைகூறிய பின் பிரார்த்திப்போம் என்று சொல்வது கிடையாது. இங்கு எழுதுபவர்களிடையே கிருத்துவர்கள் ஈவு இரக்கமற்றவர்கள் என்ற பிரச்சாரத்தைப் பண்ண தொம்ஸன் என்ற பெயரில் எழுதியிருக்கிறார் என்று தெரிகிற‌து.

    இப்போது க‌ட்டுரைக்குப்போவோம். ஜ‌டாய‌ சொல்கிறார் ஆர். எஸ். எஸ் கார‌ர்க‌ள்கூட‌ கிருத்துவ‌ப்ப‌ள்ளிக‌ளுக்கு அனுப்பும் நிலை. இது ச‌ப்பைக்க‌ட்டு. கன்யாகும‌ரி மாவ‌ட்ட‌த்தில் இன்துக்க‌ள் பெரும‌ள‌வில் இருக்கிறார்க‌ள். அனைவ‌ரும் சேர்ன்து ப‌ல‌ ப‌ள்ளிகளை உருவாக்கலாம்.

    கிருத்துவ‌ப்ப‌ள்ளிக‌ள் இப்ப‌ள்ளியில் ப‌டிக்க‌வரும் பெற்றோர்க‌ள் இப்ப‌ள்ளியின் ஒழுங்குமுறைக‌ளுக்குக் க‌ட்டுப‌ட்டாக‌னும். இல்லையென்றால் சேர்க்காதீர்க‌ள் என்று சொல்லி விட்டால் போச்சு. சேர்த்துவிட்டு முறையிடுவ‌து மீசைக்குமாசை, கூழுக்குமாசை என்ப‌தே.

    சிவ‌ விபூச‌ன் எழுதிய‌து ச‌ட்ட‌ப்ப‌டி ச‌ரிய‌ல்ல‌. நேற்று சுப்ரீம் கோர்டு ஜாமியா மிலியா இசுலாமியா ப‌ல்க‌லைக்க‌ழகம் ஒரு மைனாரிட்டி க‌ழ‌க‌ம் என்று தீர்ப்பு வ‌ழ‌ங்கிவிட்ட‌து. ம‌னுபோட்ட‌வ‌ர் அப்ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் முசுலீம் மாண‌வ‌ருக்கு இட‌ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது; அஃதொரு சென்டர‌ல் யுனிவ‌ர்சிட்டி என‌வே என்றார். கோர்ட்டு ம‌றுத்துவிட்ட‌து. மைனாரிட்டி க‌ல்வி நிலைய‌ங்க‌ளுக்கு என்று தனியுரிமைக‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. அவை எவ‌ரையும் சேர்க்கலாம். சேர்க்காமலுமிருக்கலாம். செயின்ட்ஸ் ஸ்டீப‌ன் க‌ல்லூரியில் கிருத்துவ‌ரைத்த‌விர வேறெவ‌ரும் பிரின்சிபாலாக‌ முடியாது. ஆனால் ஆசிரிய‌ர் வேலை பார்க்க‌லாம்.

    XLRI சீட்டுக்கிடைக்குமா ? முடியாது. XLRI லேப‌ர் மானேஜ்மென்டுக்கு. ஐ.ஐ.எம் கூட‌ இல்லை. இதுதான் இருக்கிற‌து. இது க‌த்தோலிக்க‌ பாத‌ர்க‌ளால் ந‌டாத்த‌ப்ப‌டுவ‌து. பார‌தீய‌ வித்யாப‌வ‌னும் எம்.பி.ஏ ந‌டத்துகிற‌து. ஈசியா சீட்டுக்கிடைக்கும். ஆனால் வேலை கிடைக்குமா ? XLRIல் ப‌ல‌ ல‌க்க‌ங்க‌ளில் வேலை ப‌டிக்கும்போதே தேடிவ‌ரும். என்ன‌ சொல்கிறீர்க‌ள் ?

    In the field of education, Christians have done susbtaially. They hav foreign money and a colonail reason. Ok. But now, it is 60 years passed. Hindus are a vaste majoriy in 80 million population. Why cant u build your own edu intns.

    This essay showcases the incompetency of Hindus in general. You are finding excuses to cover them up.

  52. \\\\\\\\\\@கோமதி செட்டி //பீமாராவ் எப்படி அம்பேடுகர் ஆனார் என்ற கதை உங்களுக்கு தெரியுமா?//
    ஒரு சில பேர் விதிவிலக்காக இருந்திருக்கலாம். ஆனால் பொதுவான மனநிலையைத்தான் கருத்தில் கொள்ளவேண்டும். விதிவிலக்குகளை வைத்து பொதுவான விஷயங்களை அணுக முடியாது.\\\\\\\\\

    பிந்தேஷ்வர் பாடக் என்ற உத்தரபாரதத்து ப்ராம்மணர் துப்புறவுத்தொழிலாளர்களின் துயர் துடைக்க உழைத்து வருகிறாரே. தலித் சமூஹ முன்னேற்றத்துக்காக பாடுபடும் அவர்களைப் புரிய முற்படும் அவர்களுக்கு உபகாரமாக இருக்கும் ப்ராம்மணர் எண்ணிலடங்காதவர். தலித் சஹோதரர்களுடன் இணைந்து வாழும் ப்ராம்மணர் விதியே அன்றி விதிவிலக்கு அல்ல. தமிழகமென்ன பாரதமெங்கும் தலித் சஹோதரர்களுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகள் எதுவும் ப்ராம்மணர் சம்பந்தப்பட்டவை அல்ல.

    மேலும் இந்த திரி ஆப்ரஹாமிய அடாவடித்தனங்கள் சம்பந்தப்பட்டது. அது பற்றி பேசாது விவாதத்தை திசை திருப்பும் நீங்கள் ஆப்ரஹாமிய மதங்களுடன் சம்பந்தப்பட்டவர் எனவும் அந்த அடாவடித்தனங்களை ஆதரிப்பவர் எனவும் ஏன் கருதக்கூடாது.

  53. @ ஆலந்தூர் மள்ளன்
    தேவாதீனம் ஜெகத் சர்வம்;
    மந்த்ராதீனம் துதேவதா;
    தன்மந்த்ரம் பிரமணாதீனம்;
    பிராமணா மமதேவதா;

    இது ரிக்வேதம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்;

    இந்தவுலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை, பிராமணர்களே நமது கடவுள், அவர்களைத் தான் நாம் வணங்க வேண்டும் என்பது இந்த சுலோகத்தின் பொருள்.
    இதே சுலோகத்துக்கு வேறு விதமான விளக்கம் சிலர் கொடுக்கலாம். நடக்கட்டும், நடக்கட்டும்.

    //பகவத் கீதையை படிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று எவரும் சொல்லவில்லை. பகவத் கீதையை மதிக்காதவர்கள் இந்த நாட்டின் பண்பாட்டுக்க் அன்னியமானவர்கள் என்றுதான் சொன்னார் ஒரு பாஜக தலைவர்.// அப்படியா? Let us see.

    //கோலாரில்நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காகேரி, பள்ளிகளில் பகவத் கீதையைப் படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை சிலர் எதிர்க்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் பேசாமல் நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று கூறியிருந்தார்.// https://thatstamil.oneindia.in/news/2011/07/19/karnataka-minister-criticised-his-comments-gita-abhiyan-aid0091.html

    //”No Indians who has values can oppose the Bhagavat Gita.Only those who love to adopt western culture can oppose the Gita. Such persons may well quit the country.”// https://www.ndtv.com/article/india/karnataka-debates-whether-to-teach-the-gita-in-schools-120571

    NDTV ஐ ஒத்துக்க மாட்டீங்கன்னா
    //Primary and Secondary Education Minister Vishweshwara Hegde Kageri’s statement in Kolar on Thursday — that those who oppose the Bhagavad Gita Abhiyan in schools should “leave the country” — has shocked various political parties and organisations and drawn condemnation.//
    https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article2231943.ece

    //அதுவும் கூட ஒரு தனிநபரின் கருத்துதானே ஒழிய ஒரு அமைப்பு அல்லது ஒரு கட்சியின் கருத்து கூட அல்ல.// இந்த விஷயமும் ஒரு தனிப்பட்ட நபரின் நிர்வாக ரீதியான தவறுதான்.தவறு தவறுதான், அதை நான் மறுக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட மனிதர்களின் தவறுகளை மதத்தோடு தொடர்புபடுத்தி பார்ப்பது சரியல்ல.

  54. \\\\\\\\\\\என் இந்து சகோதரர்களின் கோபம் மிக நியாயமானது. அதுவும் இந்தச் சம்பவத்தில் இந்த அளவுக்குக் கொடுமை செய்திருக்கும் இம்மானுவேல் காட்டேரி பள்ளிக்கு என் கடுமையான கண்டனங்கள். கலகக்காரர்களில் சில பிரிவினர்களின் வெறித்தனத்தால் எங்கள் மதமே களங்கப்பட்டுப் போகிறது என்பதுதான் கொடுமை.\\\\\\\\\\

    கண்டனங்கள் நன்றே. அன்பர் சேவியர் மேற்கொண்டு க்றைஸ்தவப்பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதிருக்க சஹ க்றைஸ்தவ அன்பர்களிடம் பேச வேண்டும். இது போன்ற அடாவடித்தன்ங்கள் நிகழ்தலை க்றைஸ்தவ பள்ளிக்கூடங்கள் நிறுத்த வேண்டும். க்றைஸதவ பள்ளிக்கூடங்களில் இது போன்ற செயல்கள் நிறுத்தப்படுவது தான் இறந்த குழந்தைக்கு செய்யப்படும் உண்மையான அஞ்சலி.

  55. தர்க்க ரீதியாக சப்பைகட்ட முயலும் சந்திரசெகறேந்திரனுக்குத் தர்க்க ரீதியிலேயே பதில் சொல்லலாம்…

    தற்கொலை செய்வது தவறு தான். இல்லை என்று யாரும் சொல்லவில்லை.

    பெற்றோர்கள் அந்தப் பெண்ணை வேறு பள்ளியில் சேர்த்திருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை.

    ஆனால் இக்கட்டுரையில் பேசப்படும் விஷயம் அதுவல்ல.

    சரி அந்த ஆசிரியையைக் கண்டிக்க வேண்டியது தான், இதெப்படி அந்நிய மத ஆதிக்கத்தால் வரும் பிரச்சனையாகும் என்று கேட்பவர்களுக்கு:

    தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அந்தப் பெண்ணுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கக் காரணமென்ன? மத ரீதியாக அம்மாணவியைப் புண்படுத்தியதால். இது தெளிவு.

    அப்படி இல்லை, dress code-ஐ ஒழுங்காகக் கடைப்பிடிக்கவேண்டியது தானே என்று சொல்பவர்கள் இந்தத் தகவலையும் கவனிக்க வேண்டும்: அதென்ன “சில்க் ஸ்மிதா மாதிரி”?? பூவும் போட்டும் வைத்தால் சில்க் ஸ்மிதாவா? இது தான் நம் நாட்டின் கலாச்சாரச் சின்னங்களுக்கு அந்த ஆசிரியை/பள்ளி கொடுக்கும் மரியாதையா? அந்தக் கிறித்தவப் பள்ளியின் சூழ்நிலையில் இந்துமதச் சின்னங்கள் மீது இவ்வளவு வெறுப்பு கற்பிக்கப்படுகிறது. அதனால் ஒரு குழந்தையைக் கேவலமாக ஆபாச்ச நடிகையின் பெயரைச் சொல்லித் திட்டுவதற்குக் கூட திட்டுவதற்கு அந்த ஆசிரியைக்குத் துணிவு வருகிறது.

    இந்து மதத்தைத் துச்சமாகச் சித்தரிப்பது தான் இத்தகைய பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

  56. மிசனரிகளின் மதமாற்றிகளின் ஆதரவாளர் திரு சந்திரசேகரேந்திரன் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த அன்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவரைப் பின்வாங்க வைத்துவிட்டீர்களே ஆகா அபாரம்.
    அவர் தம்மை சைவர் என்றும் சங்கர மடபக்தர் என்று கூறுகிறார்.
    நிச்சயம் இது பொய்தான். சங்கர மட பக்தர்கள் சைவர்கள் அல்ல ஸ்மார்த்தர்கள் என்பது உண்மை.
    திரு ஆலந்தூர் மள்ளன் அளித்துள்ள செய்தி
    “நம் நண்பர் கௌதமனும் மற்றும் 25 ஹிந்து போராளிகளும் கைது செய்யப்பட்டு பள்ளி அருகே ஒரு மண்டபத்தில் வைத்துள்ளனர் போலீசார்”.
    இவ்வளவு தானா நம் எதிர்ப்பு. இன்னும் நமக்கு உணர்வு எழவில்லையா. என்பது அடியேனின் வருத்தம்.
    அந்தப் போராட்டப் புகைப்படங்களை தமிழ் ஹிந்துவில் வெளியிட வேண்டுகிறேன்.
    திரு Arun
    Emmanuel Methodist Matriculation Higher Secondary School
    முகவரியை அளித்து கண்டனத்தை தெரிவிக்கும் படி கூறுகிறார். அதிலாவது பலர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஈமெயில் முகவரி இருந்தால் கண்டன மெயில் அனுப்பலாம். தொலைபேசி னிச்சய்ம் வேலைசெய்யாது அல்லவா.
    இதை இத்துடன் விட்டுவிடக்கூடாது
    தமிழக முழுதும் பூவைக்க பொட்டுவைக்க தடை சொல்லும் கல்வி நிறுவனங்களை கண்டறிந்து அவற்றை நாம் கண்டிக்க வேண்டும்.

  57. வேத பாடசாலையில் குடுமி வைப்பதோடு ஒப்பிடும் அறிவுஜீவித்தனம் சிரிக்க வைக்கிறது. வேத பாடசாலைகள் ஒரு போதும் ‘பொதுக்கல்வி அளிக்கிறோம்’ என்ற முகமூடிக்குப் பின்னால் ஒளிந்து மதப்பிரச்சார சில்மிஷம் செய்வதில்லை. பொதுக்கல்வி வேறு, மத ரீதியிலான கல்வி வேறு.

    இதுவே ஒரு catholic seminary ஆக இருந்தால் அங்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் ரூல் வைத்துக் கொள்ளட்டும். பொதுவரிப் பணத்தில் உதவி வாங்கிக் கொண்டு ஒரு கலாச்சாரத்தை இழிவுபடுத்தி மதப் பிரச்சாரம் செய்வது குற்றமே.

    அரசு வரிப்பணத்தை இனி இந்தப் பெருச்சாளிகள் தின்பதை எதிர்க்க வேண்டும். அரசு வரிப்பணத்தில் செயல்படவேண்டும் என்றால் அப்பள்ளி நிர்வாகம் உண்மையான மதச்சார்பின்மை வாதியாக இருக்க வேண்டும். உண்மையான மதச்சார்பின்மையாக இருந்தால் பைபிள் படிக்கவும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துக் கொள்வதையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அது தவிர dress code என்று ஒன்று வைத்தால் அது ஒரு சாராரை ஆதரிக்கும் வண்ணம் இருக்கக் கூடாது.

  58. இந்த சந்திரசெகறேந்திரன் ஒரு ஊடுருவி என்பது அவர் இதுவரை கூறியிருக்கும் மருமொழிகளிளிருந்து ஊர்ஜிதமாகிறது.

    முதலில், சங்கரமடத்துக் காரர்கள் எவரும் தங்களைச் ‘சைவர்கள்’ என்று அடையாளம் காட்டிக்கொள்வதில்லை.

    இரண்டாவதாக,

    // @ ஆலந்தூர் மள்ளன்
    தேவாதீனம் ஜெகத் சர்வம்;
    மந்த்ராதீனம் துதேவதா;
    தன்மந்த்ரம் பிரமணாதீனம்;
    பிராமணா மமதேவதா;

    இது ரிக்வேதம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்; //

    ரிக்வேதத்தில் இந்த சுலோகம் இல்லை. இந்த சுலோகத்தை இணையத்தில் எங்கு தேடினாலும் அந்த சுலோகத்திற்கும் ரிக்வேதத்திற்கும் சம்பந்தமிருப்பதாக எங்கும் இல்லை. ஏதாவது பாகிஸ்தானி forum-இல் இப்படி எவராவது கதை கட்டியிருக்கலாம்.

    ரிக்வேதத்தில் உள்ளவை மந்திரங்கள். சுலோகங்களல்ல. ரிக்வேதத்தில் ஒரு மந்திரத்தைச் சுட்டவேண்டுமேன்றால் மூன்று எண்ணிக்கைகளைக் கூற வேண்டும்: (1) மண்டலம், (2) அஷ்டகம் அல்லது சூக்தம், (3) மந்திரம்

    இப்படிக் கூறாமல் “62 ஆவது பிரிவு” என்று சொல்வதிலிருந்தே இவரது போலித்தனம் வெளிப்படுகிறது. ரிக்வேதத்தில் (சம்ஹிதையில்) மொத்தம் பத்தே பிரிவுகள். அவை மண்டலங்கள் எனப்படுபவை.

    அடுத்து, இவர் குறிப்பிடும் சுலோகம் முற்றிலும் இதிஹாச, புராண, ஸ்மிரிதி நடையில் உள்ளது.

    இறுதியாக, அந்த சுலோகத்தில் “பிராமணர்களே நமது கடவுள், அவர்களைத் தான் நாம் வணங்க வேண்டும் என்பது இந்த சுலோகத்தின் பொருள்.” என்ற கருத்து எங்குமே இல்லை. “பிராம்மணர்கள் (பிரம்மத்தை அறிந்தவர்கள்) நமக்கு தேவதைகள்” என்று தான் உள்ளது. ஏன், இது சங்க இலக்கியத்தில் கூட வருகிறது:

    “ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
    நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
    பாடும் வகையே” – பரிபாடல், 1

    ரிக்வேதத்தைத் திட்டுவதும், ரிக் வேதத்தில் இல்லாததை இருக்கிறது என்று கூறுவதும், வேத மந்திரங்களை சுலோகங்கள் என்று கூறுவதும், சுட்டிக் காட்டிய சுலோகத்தின் பொருளைத் திரித்துக் கூறுவதும் கவனித்தால், மாறு வேஷத்தில் கூட இவரது ஆராய்ச்சியின்மையே வெளிப்படுகிறது.

  59. சரவண குமாரின் வரி நல்ல நகைச்சுவை.

    சென்னையில் Soken English 6 மாச கோர்சுக்கு 5000 பீசு வசூலிக்கிறார்கள் என் உறவுக்காரப் பெண்ணைச் சேர்த்துவிட்டோம் பெண் அப்படியேதான் இருக்கிறாள். ஒரு மாற்றமுமில்லை.

  60. சந்திர சேகர், இப்படி அரை குறையாக ஒரு சில வரிகளை படித்து விட்டு மேற் கோள் காட்ட வேண்டாம். பிராமணன் என்பது சாதி கிடையாது அது வர்ணம். வர்ணம் செய்யும் தொழிலால் தான் வருகிறது. அதுவும் தவிர ஹிந்துக்களுக்கு முதல் தெய்வம் தாய் தான். அதனேலேயே மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொன்னார்கள். பிராமணம் என்பது தொழிலால் வருவது. வேதத்தை தொகுத்து எழுதிய வியாசரே மீனவக் குடும்பத்தை சேர்ந்தவர். அது சரி இதேல்லாம் உங்களுக்கு எங்கே தெரிய போகிறது. அதுவும் தவிர ஒரு புத்தகத்தை வைத்து உலகத்தையே அடைத்துவிட்டதாக ஊறுகாய் போடுபவர்கள் நாங்கள் அல்ல.

    நீங்கள் சொல்வது தமிழன் சிங்களம்னை கொன்றுவிட்டான். அதனால் சிங்கன் கொல்லும் பொழுது தமிழன் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்வது போல் உள்ளது.

    ஆப்பிரகாபிய புழுதியால் ஏற்பட்ட அழுக்கையும் துடைப்பதும் தற்பொழுது ஏற்பட்டு கொண்டு இருக்கும் அழுக்கை துடைப்பதும் எங்கள் கடமை எனபது எங்களுக்கு நன்றாக தெரியும்.

    1000 வருடங்களுக்கு முன்பே பல்கலை கழகம் வைத்து பாடம் நடத்தியர்கள் நமது மூதாதையர்கள்.. ஆப்ரகாமிய கயவர்களை நம்பினால என்ன நடந்தது என்பது LTTE மூலம் உலகிற்கு நன்றாக தெரிந்தது.

    \\those who oppose the Bhagavad Gita Abhiyan in schools should “leave the country”\\

    இது ஹிந்துஸ்தானம். இங்குஹிந்துக்களுக்கு முழு உரிமையும் உண்டு. இது போன்ற கட்டுபாடுகளை வாடிகனிலோ அல்லது கிறித்துவர்கள் பெரும்பானமையாக உள்ள இடத்திலேயோ வைத்து கொள்ளுங்கள் யார் கேட்டது. இது பாரத பூமி பாரத பண்பாட்டை மதிக்காத யாரும் இங்கு இருக்க தேவை இல்லை.இதை மதிப்பர்வர்கள் மட்டுமே இங்கு இருக்க அனுமதி உண்டு. அவர் சரியாக தான் சொல்லியிருக்கிறார். இதில் எந்த தவரும் இல்லை.

    அது மட்டும் இன்றி யார் பகவத் கீதையை எதிர்கிறார்களோ அவர்கள் வெளியேறலான் என்று சொன்னார்களே தவிர யார் பைபில் படிக்கிறார்களோ அவர்கள் வெளியேறலாம் என்று சொல்லவில்லை. இது தான் ஹிந்துக்களுக்கும், ஆப்பிரகாமிய மதங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

  61. ஒரு பெண் குழந்தை அநியாயமாக இறந்தது பெருவருத்தம் தருகிறது.

    நான் படித்த கிறித்தவப் பள்ளியில் காலையில் நடக்கும் பைபிள் வகுப்புக்குப் போகாததற்கு என்னை கிளமென்ட் வாத்தியார் ‘ஈனச் சாதி” என்று திட்டினார். எனது அப்பா மறுநாள் பள்ளிக்கு வந்து ஹெட்மாஸ்டரிடம் சண்டை போட்டு, அதன் பின்னர் கிறிஸ்தவர்களுக்கு பைபிள் வகுப்பும் மற்றவர்களுக்கு moral instruction வகுப்பும் கொண்டுவந்தார்கள். போரிடவேண்டியது அந்தப் பள்ளியில் பிள்ளையைச் சேர்த்த பெற்றோரே.

    ஆலந்தூர் மள்ளன் கேட்ட கேள்விக்கு விடை:

    https://arunabharathi.blogspot.com/2007/03/blog-post_7073.html
    என்பது க.அருணபாரதி என்பவரின் வலைப் பக்கம். அங்கிருந்துதான் ‘சந்திரசேகரேந்திரன்’ என்று தன்னை இங்கு அழைத்துக் கொள்பவர் இந்தப் பகுதியை எடுத்து இங்கே பதிந்திருக்கிறார் என்பது எனது சந்தேகம். அவரே அந்த அருனபாரதியாக இருக்கலாம். அப்படி இருந்தால், இந்த இந்தியத்திருனாட்டைத தனது திருப்பாதங்களால் நடந்தே இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டிலும் சென்றடைந்து மக்களுக்கு நல்வழி கட்டிய மிகப் பெரியவரின் பெயரை இப்படி பயன்படுத்துவது, இந்தக் குழந்தை இறந்தது கேட்டு மனம் வாடிய அளவுக்கு வாட்டுகிறது.

    தவறான அணுகுமுறை கருத்தின் நியாயத்தை அடித்துவிடும் என்பதை இந்த ‘சந்திரசேகரேந்திரன்’ என்று தன்னை அடையாள படுத்திக் கொள்பவர் உணரவேண்டும். அவரது கருத்துக்கள் அனைத்துமே தவறு அல்ல. அவரது கருத்துக்கள் அனைத்துமே சரியும் அல்ல. அவற்றில் பெரும்பான்மையானவை எனக்கும் உடன்பாடல்ல. ஆனால் அவர் உபயோகிக்கும் பெயர் அவர் சொல்லும் கருத்துக்களுக்கு சிறிதும் சேரவில்லை என்பது உண்மை.

    அன்பிற்குரிய மகாசயர் கிருஷ்ணகுமார், பெரியவர் மலர்மன்னன் அய்யா, சாரங், ஜடாயு, கந்தர்வன், அனைவரிலும் மேலாக பெரியவர் வே.சா. அவர்கள் அனைவருக்கும் நான் இங்கேதான் இருக்கிறேன். எங்கு போனாலும் கடுஞ்சொல் கேட்பது என் போன்றோருக்குப் பழக்கமானதே.

  62. நியாயத்திற்காக போராடும் வீரர்களே,
    கோவையில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் கலை அறிவியல் கல்லூரியில் கூட, பஜனையில் கலந்து கொண்டால் மட்டுமே அன்றைய நாளுக்கு attendance கிடைக்கும். ஒருவன் பஜனையில் கலந்து கொள்ளாமல் அங்கு படித்து பட்டமே வாங்க முடியாது. இதை போல பல இந்து கல்வி நிறுவங்கள் உள்ளன.
    கிறிஸ்துவ பள்ளிகளில் இத்தகைய அத்துமீறல்கள் இருப்பது உண்மையே. ஆனால், மற்றவரை குறை கூறி கொண்டிருப்பத்தில் எந்த பலனும் இல்லை என்று நம்புபவன் நான்.
    கொஞ்ச காலம் ஆசிரிய பணியில் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். விடலை பருவ மாணவர்களை கண்டிப்பதென்பது ஒரு சிக்கலான வேலை. எந்த காரணத்திற்க்காக தற்கொலை முயற்ச்சி நடக்கும் என்று தெரியாது.
    பைபிலால்தான் இந்த தற்கொலை என்பது நம்பும்படி இல்லை. இதே குழந்தை திருக்குறள் சரியாக சொல்லவில்லை என்று கண்டித்திருந்தால் கூட இப்படியே செய்திருக்க வாய்ப்புண்டு.
    மேலும் அந்த கண்ணியாச்த்ரீயின் படம் தமிழ் இந்து தளத்திற்கு அவப்பெயரே.
    ஆக்கபூர்வமான பல கட்டுரைகள் மத்தியில் இந்த கட்டுரையை நான் எதிர்பார்கவில்லை.

    சிங்கமுத்து

  63. @சிவஸ்ரீ. விபூதிபூஷண் – ஸ்மார்த்தா, வடமாள் என்று சொல்ல நான் பிராமணன் அல்ல. சங்கர மடத்துக்கு பிற ஜாதியினர் பக்தர்களாக இருக்கக்கூடாதா என்ன? சைவன் என்று சொன்னது சைவர், வைணவர் என்ற கான்டெக்ஸ்டில்.

    @கந்தர்வன் – //இந்த சுலோகத்தை இணையத்தில் எங்கு தேடினாலும் அந்த சுலோகத்திற்கும் ரிக்வேதத்திற்கும் சம்பந்தமிருப்பதாக எங்கும் இல்லை.// எங்கே இருக்குதுன்னு அஞ்சன்குமார் போட்டிருக்கிறார். நான் மற்றொரு சோர்ஸ் மூலமாக இதை அறிந்தேன். முன்னர் குறிப்பிட்டிருந்த மாதிரியே சமாளிபிகேஷனை தொடங்கிட்டீங்க. நடக்கட்டும், நடக்கட்டும்.

    //பிராம்மணர்கள் (பிரம்மத்தை அறிந்தவர்கள்) // அப்படினா இன்னைக்கு உள்ள எல்லா பிராமணர்களும் பிரம்மத்தை அறிந்தவர்களா? எல்லா பிராமணர்களும் பிராமண வர்ணமா? அப்படி இல்லையென்றால் அவர்கள் எதற்காக தங்களை பிராமணர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள்? அப்படி உண்டு என்றால் அவர்கள் தங்களை கடவுள்களாக போற்றுங்கள் என்று சொல்வது உண்மைதானே

    @கோமதி செட்டி – //இது ஹிந்துஸ்தானம். அதனால் அதற்குரிய விதிமுறைய்களை கடைபிடித்து தான் ஆக வேண்டும்.// இந்த பேச்சுதான் நிறைய ஹிந்துக்களை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் லிருந்து விலகிப்போக வைக்கிறது. இது மதச்சார்பற்ற நாடு சார். இது மதச்சார்பற்ற நாடாக இருக்கும் வரைதான் எல்லா ஜாதியினருக்கும் சமமான சட்டம் இருக்கும். இது ஹிந்துநாடாக மாறினால் அடுத்த நிமிடமே மனுநீதி அல்லவா தலைவிரித்து ஆடும். இந்த நாட்டிலே கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கும் வரைதான் மனுவாதம் அரியணை ஏறமுடியாது. அதனால்தான் ஹிந்துவாக இருந்தும், ஹிந்துமத பழக்க வழக்கங்களை கடைபிடித்தாலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை மக்கள் எதிர்ப்பதில்லை. அதே காரணத்துக்காகத்தான் நீங்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை எதிர்க்கிறீர்கள்.வெளிநாட்டுமதம்ன்னு சும்மா சொல்லாதீங்க சார். நீங்கள் பௌத்த, ஜைன மதங்களை எதிர்த்ததும் இதே காரணத்துக்காகத்தான். பௌத்தமும் ஜைனமும் வெளிநாட்டு மதமா? தவிர கடவுளுக்கு உள்நாட்டு மதம், வெளிநாட்டுமதம் என்று வித்தியாசமில்லை. அவருக்கு ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அவருடையதுதான்.

    ஹிந்துமதத்தின் விதிமுறைகள் இவைதான் என்று ஹிந்து மதத்தின் ஒரு சிறுபான்மை பிரிவினர் எப்படி சொல்லமுடியும்? ஹிந்துக்களில் உள்ள பெரும்பான்மையினர் அல்லவா அதை சொல்ல முடியும்! பகவத்(?) கீதை “எல்லா ஹிந்துக்களுக்கும் புனித நூல்” என்று நீங்கள் எப்படி கூறமுடியும்? அதை ஏற்காத ஹிந்துக்களும் உண்டே. அப்புறம் அல்லவா மற்ற மதத்தவர் பற்றி பேச வேண்டும். வியாசபாரதத்திலேயே பகவத்(?) கீதை கிடையாதே! “வருணாசிரமம் எங்கள் கலாச்சாரம்” என்று நீங்கள் சொன்னால் வெள்ளைக்காரன் “நிறவெறி எங்கள் கலாச்சாரம்” என்று சொல்லலாம் அல்லவா! கல்ச்சருக்கும் கல்ச்சுரல் ஷாவனிசத்துக்கும் வித்தியாசம் இருக்குது சார். வருணாசிரமத்தை காத்த ராமன் உங்களுக்கு ஹீரோன்னா அது உங்களுக்கு மட்டும்தான். வருணாசிரமத்தை ஏற்காத ஹிந்துக்களுக்கு ராமன் ஹீரோ அல்ல. உலகில் மெஜாரிட்டி கிறிஸ்தவம்தான் அதனால எல்லோரும் கிறிஸ்தவத்தை ஏற்கணும்னு சொன்னா ஒத்துக்க முடியுமா? முடியாது. உங்களுடைய சுதந்திரம் அடுத்தவருடைய மூக்கு வரைதான், மூக்கை தொடுவது அல்ல.

    @saravana kumar //இருப்பது ஒரேஒரு ஹிந்து நாடு……[ ஆனால் ஹிந்துக்கள் இரண்டாந்தர குடிமக்கள் ]// பாதிதாங்க உண்மை. மெஜாரிட்டி ஹிந்துக்கள் இரண்டாம்தர குடிமக்கள். மைனாரிட்டி ஹிந்துக்கள் முதல்தர குடிமக்கள். பலகாலமா அப்படித்தான் இருந்தது. இப்பவும் அதுக்குதான் பலபேர் முயற்சிபண்றாங்க.

  64. //கோவையில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் கலை அறிவியல் கல்லூரியில் கூட, பஜனையில் கலந்து கொண்டால் மட்டுமே அன்றைய நாளுக்கு attendance கிடைக்கும். ஒருவன் பஜனையில் கலந்து கொள்ளாமல் அங்கு படித்து பட்டமே வாங்க முடியாது. //

    சிங்கமுத்து,

    அது இந்து மாணவர்களுக்கு மட்டுமேயான கட்டாயம்.

    கிறுத்துவ, இசுலாமிய மாணவர்களுக்கு இந்தப் பிரார்த்தனைகளில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாவிட்டால், அவர்கள் கலந்துகொள்ளாமல் இருக்க இந்துக்கள் நடத்தும் பள்ளிகள் அனுமதிக்கின்றன்.

    மேலும், ராமகிருஷ்ண அமைப்புக்கள் ஏசுவையும், முகம்மதுவையும் ஒதுக்குவதில்லை. கிறிஸ்துமஸை மற்ற இந்துப் பண்டிகைகளோடு கொண்டாடும் வழக்கமும் உண்டு.

    காந்தியவாதிகள் நடத்தும் பள்ளிகளில் வெள்ளிக்கிழமைகள்தோறும் சர்வமத பிரார்த்தனை நடப்பது வழக்கம். கட்டாயம் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பது அவர்கள் வைக்கும் விதிகளில் ஒன்று.

    ஆனால், கிறுத்துவ இசுலாமிய மாணவர்கள் அவற்றில் கலந்துகொள்வதில்லை. இந்துக்கள் மட்டுமே “சர்வமத” பிரார்த்தனைகள் செய்துவிட்டு சுண்டல் சாப்பிட்டுக் கலைவர்.

    இதைக் கண்டுகொள்ளாமல் விடுபவர்கள் தங்களைக் காந்தியவாதி என்று அழைத்துக் கொள்கிறார்கள். இப்படி நடக்கிறது என்று சொல்பவர்கள் “இந்துத்துவவாதி” என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள் – அதே காந்தியவாதிகளால் !

    ஒரு பள்ளியில் அட்டெண்டன்ஸ் போடாமல் இருப்பதும், இன்னொரு பள்ளியில் அடித்து உதைத்துக் கேவலமாகப் பேசி தற்கொலைக்குத் தூண்டுவதும் ஒன்றே என்று எண்ணுகிறீர்களா ?

    I was born intelligent. Education ruined me என்று சொல்லும் ஒரு டிஷர்ட் வாசகம் பிரபலமானது. நீங்கள் நிறையவே படித்தவராக இருக்க வேண்டும். 🙂

    .

  65. ///இந்த சுலோகத்தை இணையத்தில் எங்கு தேடினாலும் அந்த சுலோகத்திற்கும் ரிக்வேதத்திற்கும் சம்பந்தமிருப்பதாக எங்கும் இல்லை.// எங்கே இருக்குதுன்னு அஞ்சன்குமார் போட்டிருக்கிறார். நான் மற்றொரு சோர்ஸ் மூலமாக இதை அறிந்தேன். முன்னர் குறிப்பிட்டிருந்த மாதிரியே சமாளிபிகேஷனை தொடங்கிட்டீங்க. நடக்கட்டும், நடக்கட்டும்.//

    அய்யா சந்திரசேகரேந்திரன் எனும் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் கருத்தியல் கோழையே, உமக்கு நேர்மைதான் கிடையாது. வெட்கமும் கிடையாதா?

    //இது ரிக்வேதம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்;// என்று சொன்னீரே..அது ரிக்வேதத்தில் இல்லை என கந்தர்வன் சுட்டிக்காட்டியதும் சொன்ன பொய்க்கு மன்னிப்பு கேட்கும் அடிப்படை நாக்ரிகம் கூட இல்லையே…அட இதுதான் க்ரிப்டோ கிறிஸ்தவ நேர்மையோ? பகவத் கீதை வியாச பாரதத்தில் இல்லையா எந்த மடையன் சொன்னான்? அது குறித்த ஆழமான பார்வையை ஜெயமோகன் முன்வைத்திருக்கிறார். அது ஒரு பார்வை மட்டுமே இன்னும் பல அறிஞர்கள் இது குறித்து கூறியுள்ளார்கள். ராமனை தெய்வமாக வணங்குவோர் இந்நாட்டில் அதிகம்…சமண பௌத்த மதங்கள் அழிந்தனவே ஒழிய அழிக்கப்படவில்லை. பல சமண பௌத்த ஆலயங்கள் நாலந்தா தொடங்கி நாகப்பட்டினம் விகாரம் வரை இந்து ராசாக்கள் கட்டி கொடுத்ததுதான். நாகப்பட்டினம் விகாரத்தை இடித்தவர்கள் ஜெசூட் பாதிரிகள் சந்தேகமிருந்தால் நாகப்பட்டினம் கெசட்டை பார்க்கவும்.

    ஆனால் இதற்கெல்லாவற்றுக்கும் இந்த பெண்களின் மரணத்துக்கும் என்ன தொடர்பு? இதுதான் typical கிறிஸ்தவ கோழைத்தனமான நயவஞ்சகம்,. பொய்கள் மூலம் பரப்பப்படும் மதமான கிறிஸ்தவம் பொய்களின் நாயகனான ஏசு இவர்களின் சரியான முகம் சந்திரசேகரேந்திரன் எனும் பெயரில் எழுதும் நேர்மையற்ற வெட்கம் கெட்ட கிறிஸ்தவனின் எழுத்துகளில் வெளீப்படுவதுதான். தமிழ்ஹிந்து இப்படிப்பட்ட பொய்யர்களை அனுமதிக்கக் கூடாது.

  66. சந்திரசேகரன் என்ற புனைபெயரில் எழுதியுள்ள ஊடுருவிக்கு,

    உங்களுக்கு தமிழாவது தெரியும் என்றால், அலைகள் வெளியீட்டகம் தமிழில் நான்கு வேதங்களையும் வெளியிட்டுள்ளது அவற்றை வாங்கி படிக்கவும் .

    நீங்கள் பொய்யாக குறிப்பிட்டுள்ள ரிக் வேத மேற்கோள் அதில் இல்லை.

    பகவத் கீதை மகா பாரதத்தில் இல்லை என்று சொல்லும் ஈனப்பிறவியை என்ன சொல்ல முடியும். இவர் மனிதர் தானா என்று சந்தேகமாக உள்ளது.

  67. \\கீதை “எல்லா ஹிந்துக்களுக்கும் புனித நூல்” என்று நீங்கள் எப்படி கூறமுடியும்? அதை ஏற்காத ஹிந்துக்களும் உண்டே\\

    இந்த புனித நூல் என்று ஊறுகாய் போடுவர்கள் நாங்கள் அல்ல. இயற்கையை வணங்குபவர்கள் நாங்கள். அனைத்து ஆன்மிக புத்தங்களும் மரியாதைக்குரியவையே.

    \\இது மதச்சார்பற்ற நாடு சார். \\

    இந்த மதசார்பற்ற நாட்டில் வேறு ஒரு மதத்தை சேர்ந்த பெண்ணின் மீது உங்கள் மதத்தை ஏன் திணிக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி. உங்களின் இந்த வரிகளுக்கு தான் இது போன்று எழுதினேன்.

    \\ வியாசபாரதத்திலேயே பகவத்(?) கீதை கிடையாதே! \\

    இப்படி அரை குறையாக் எதாவது படித்துவிட்டு உளற வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். எழுதுவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை சொல்லும் விசயங்கள் சரிதான் என்று யோசித்து எழுதுங்கள்… நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஒரு புத்தகத்தை வைத்து உலகமே அதில் அடங்கிவிட்டது என்று பொய் சொல்பவர்கள் நாங்கள் அல்ல.

    \\மனுவாதம் அரியணை ஏறமுடியாது\\

    மனு தர்மம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் பிதற்றும் உங்களிடம் என்ன என்று சொல்வது?

    \\“வருணாசிரமம் எங்கள் கலாச்சாரம்”\\

    வருணாசிரமம் கலாச்சாரம் என்று எந்த மடையன் சொன்னது.

    உங்கள் அறிவு எவ்வளவு என்பதை கந்தர்வன் எங்களுக்கு புரிய வைத்துவிட்டார்….

    \\பௌத்த, ஜைன மதங்களை எதிர்த்ததும் இதே காரணத்துக்காகத்தான். பௌத்தமும் ஜைனமும் வெளிநாட்டு மதமா? \\

    அரை குடம் தளும்புகிறது… இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

    ஒரு குழந்தையை கொன்றுவிட்டு அதற்கு சப்பை கட்டு கட்டும் உங்களை போன்றவர்களை உருவாக்கும் ஆப்ரகாமிய அடிவருடிகளை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும்…..

    \\உங்களுடைய சுதந்திரம் அடுத்தவருடைய மூக்கு வரைதான், மூக்கை தொடுவது அல்ல.\\

    இதை தான் நானும் சொல்கிறேன். அடுத்தவர் மீது பள்ளியில் உங்கள் மதத்தை திணிக்காதீர்கள் என்று…..

  68. சந்திர செகரேந்திரன் [ என்ற பெயரில் ஒளிந்துகொண்டிருக்கும் அறிவுக்கொழுந்து ] அவர்களுக்கு…

    // .வியாசபாரதத்திலேயே பகவத்(?) கீதை கிடையாதே! //

    ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சார்……

    இனிமேலும் இவரிடம் விவாதிப்பதில் ஏதும் பொருளுண்டா?

    கட்டுரைகளுக்கான பின்னூட்டங்கள் என்பது ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கான களம்……கொடுத்த காசுக்கு மேல் கூவும் குப்பைகளின் பிதற்றல்களை புறக்கணிக்குமாறு தமிழ் ஹிந்து தள நிர்வாகிகளை வேண்டுகிறேன்………

  69. \\\\\\\அன்பிற்குரிய மகாசயர் கிருஷ்ணகுமார், பெரியவர் மலர்மன்னன் அய்யா, சாரங், ஜடாயு, கந்தர்வன், அனைவரிலும் மேலாக பெரியவர் வே.சா. அவர்கள் அனைவருக்கும் நான் இங்கேதான் இருக்கிறேன். எங்கு போனாலும் கடுஞ்சொல் கேட்பது என் போன்றோருக்குப் பழக்கமானதே.\\\\\

    இன்று ஏகாதசி நன்னாள். என் அன்பு சஹோதரர் ஸ்ரீ அஞ்சன்குமார் அவர்களின் உத்தரம் படிப்பதற்கு மகிழ்வாக உள்ளது. நிந்தனை செய்யோம். சஹ ஹிந்துக்களின் நிந்தனைக்கு ப்ரத்யுத்தரம் அன்பான மொழிகள் என்பது சான்றோர் அளித்த பயிற்சி. முடிந்த வரை தாங்களும் இதை பின் பற்றவும். நிந்தையில் துவண்டு போவதும் கூடாது. கருத்துகளை உறுதி பட ஆனால் பண்புடன் பகிர்வோம்.

    \\\\அதன் பின்னர் கிறிஸ்தவர்களுக்கு பைபிள் வகுப்பும் மற்றவர்களுக்கு moral instruction வகுப்பும் கொண்டுவந்தார்கள். போரிடவேண்டியது அந்தப் பள்ளியில் பிள்ளையைச் சேர்த்த பெற்றோரே.\\\\

    ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் பகிர்ந்த யதார்த்தத்தை கருத்தில் கொண்டு ஹிந்துக்கள் உடன் செய்ய வேண்டிய காரியம் கிரிஸ்தவ பள்ளிகளில் ஹிந்து குழந்தைகளின் உரிமையை நிலை நாட்டல்.

  70. கட்டாய க்றைஸ்தவ கல்வியை வலியுறுத்தல் ஹிந்துக் குழந்தைகளை அவர்களது கலாசாரப்படி பொட்டிடுதல் பூச்சூட்டுதல் போன்றவற்றை விட்டுவிட வலியுறுத்தல் இவைகளையெல்லாம் க்றைஸ்தவ கல்வி ஸ்தாபனங்கள் பல காலமாக செய்து வருகின்றன. ஹிந்து திருவிழாக்களுக்கு விடுமுறை அளிக்காமை. விடுமுறை எடுக்கும் குழந்தைகளுக்கு வெய்யிலில் நிற்கவைத்தல் போன்ற கடுமையான தண்டனைகள் அளித்தல் போன்ற அடாவடிகள் தொடர்கதையே. ஆங்காங்கே தனித்தனியே இவற்றிற்கு போராடி ஆங்காங்கு ப்ரச்சினைகளை சரி செய்ய விழைகிறோம். அது போன்று இல்லாது பெரிய அளவில் இப்ப்ரச்சினைகள் பேசப்படவேண்டும். ஹிந்து பூமியில் ஹிந்துக்களுக்கு உரிமை மறுக்கப்படுவதை ந்யாயாலயங்களுக்காவது எடுத்து சென்று வழக்கிட்டு வாதிட வேண்டும். அகில பாரத அளவில் இது போன்ற ப்ரச்சினைகள் எழுப்பப்பட வேண்டும்.

  71. //கிரிஸ்தவ பள்ளிகளில் ஹிந்து குழந்தைகளின் உரிமையை நிலை நாட்டல்.

    //

    அதற்கு ஒன்று செய்யலாம். மைனாரிட்டி பள்ளிகள் கல்லூரிகளுக்கு என்று இருக்கும் தனியுரிமைகளை இரத்துசெய்யப்போராடலாம். அவை சட்டத்தில் இருக்கும்வரை அவர்களை கோர்ட்டுக்கு இழுக்க முடியாது.

  72. நான் மிகச்சிறப்பான ஹிந்துக் கல்லூரிகள் நமது மண்ணில் வேரூன்றி உயர்ந்து விளங்க வேண்டும்.. என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்..

    நான் கற்றது யாழ்ப்பாணம் ஹிந்துக் கல்லூரியில்.. இக் கல்லூரிக்கு ஸ்வாமிஜீ விவேகானந்தர், மஹாத்மா காந்திஜீ போன்றவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றிய பெருமை அமைந்திருக்கிறது.

    இக்கல்லூரிக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மாணவ அனுமதியே.. புலமைப் பரிசிலின் அடிப்படையில் வழங்கப்பெற்று வருகிறது.. க்றிஸ்தவ, இஸ்லாமியப் பெற்றோரும் இக்கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்று மிகவும் பிரயத்தனம் செய்கிறார்கள்.. அவ்வாறே சேர்க்கிறார்கள்.. ஆனால்,

    கல்லூரி வளவினுள் இன்று வரை கிறிஸ்தவ ஆராதனைக் கூடம் இல்லை.. ஹிந்துக்கள் தினமும காலையில் கல்லூரியிலுள்ள சிவபைரவர் ஆலயத்தில் பிரார்த்தனையிலீடுபடுவது கட்டாயமானது. மாற்று மதத்தவர்கள் பிரார்த்தனையில் கலந்து கொள்ள விரும்பா விடில் அதனைத் தவிர்தது வகுப்பறையில் இருக்கலாம்..

    எந்த ஒரு மாணவரும் மாமிச உணவைக் கொண்டு வந்து கல்லூரி வளவினுள் அருந்துவது தடை செய்யப்பெற்றிருக்கிறது.

    இவ்வாறாக மிகவும் கட்டமைப்புடன் ஹிந்து ஆசார மரபுகளைப் பேணி வருகிற நூறாண்டு காணும் கல்லூரியாக இது விளங்குகிறது.. யாழ்ப்பாணத்தில் மதமாற்றத்தைத் தடுப்பதில் இக்கல்லூரிக்கு பெரும் பங்கு உண்டு..

    இக்கல்லூரி பற்றிய ஒரு காணொளி Youtube இங்கு இணைத்திருக்கிறேன்..

    https://www.youtube.com/watch?v=6-GTmQ1UgiI&feature=share

    நம் ஹிந்துப் பிராந்தியம் எங்கணும் கல்வித் தரமும்.. ஒழுக்கக் கட்டுப்பாடும் நிறைந்த ஹிந்துக்கல்லூரிகளின் உருவாக்கத்திற்கு இக்கட்டுரை குறிப்பிடும் நிகழ்வு முக்கியமான உந்துசக்தியாக.. உணர்வெழுச்சியை உருவாக்க.. வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  73. பிறப்பொழுக்கம் உள்ள கிறிஸ்தவர்கள் கீழ்க்கண்ட வலைதளத்தை பாருங்கள். பிறகு கருத்து சொல்ல வாங்க. https://christianityindia.wordpress.com
    உண்மையான அன்பை தெரிந்தவனுக்குத்தான் உயிரின் மதிப்பு தெரியம்.

  74. @கந்தர்வன் – ரிக்வேதம் தொடர்பான மந்திரத்தை மற்றொரு நூலில் வாசித்ததைத்தான் குறிப்பிட்டேன். அதனுடைய ரிலையபிலிட்டி இந்த விவாதத்திற்கு அவசியமில்லாதது. சொல்லவந்த மையக்கருத்துக்கு ரிப்ளை பண்ணுங்க, உதாரணத்துக்கல்ல.

    கீதை:

    //As with almost every religious Indian text, it is difficult to pinpoint when exactly the Gita was written. Without a doubt, it was written over a period of centuries by many writers. From the contents of the Gita, it is abundantly clear that both the principal teachings of the Upanishads and of early Buddhism were familiar to the writers of the Gita. So, it has been approximated that the Gita was written during the period 500-200 BCE.//
    https://eawc.evansville.edu/essays/de.htm

    //Based on the differences in the poetic styles and supposed external influences such as Patanjali’s Yoga Sutra, some scholars have suggested that the Bhagavad Gita was added to the Mahabharata at a later period.//
    https://www.newworldencyclopedia.org/entry/Bhagavad_Gita

    //The Bhagavad Gita (500 – 200 BCE) is part of the Mahabharata, which relates the struggles between the Kuru and Pandu dynasties of India. It starts with a battle over a few villages.//
    https://www.humanistictexts.org/400-200bce.htm

    //The Gita was written over a period of years between the fifth and second centuries B.C.E. At a later date, it was inserted into the larger Mahabharata, the great epic volume of Indian history and lore.//
    https://www.encyclopedia.com/topic/Bhagavad-Gita.aspx

    //Some astrologers have calculated the Bhagavad Gita traditionally being revealed circa 3000 BCE “”based purely on Sri Krishna’s horoscope”” . Based on claims of differences in the poetic styles, some scholars like Jinarajadasa have argued that the Bhagavad Gītā was added to the Mahābhārata at a later date.//
    https://en.wikipedia.org/wiki/Bhagavad-Gita

    இப்படி கீதையின் காலம்பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் ஒன்றை நம்ப விரும்புகிறார்கள், வேறுசிலர் மற்றொன்றை நம்ப விரும்புகிறார்கள். கீதை வியாசபாரதத்தில் இல்லை என்பதை தி.க.காரர்கள் சொல்லவில்லை.
    @மக்கு மாக்கான் – //பகவத் கீதை வியாச பாரதத்தில் இல்லையா எந்த மடையன் சொன்னான்? // மேலே உள்ளதை வாசிச்சுருப்பீங்க. ப்ளஸ்
    கீதை மஹாபாரதத்தில் இடைச்சொருகலாக வந்தது என்பதை சிலவருடங்களுக்கு முன்னர் (8, 10 வருடங்களுக்கு முன்னர்) விகடனில் சுஜாதாவோ மதனோ தங்களுடைய கேள்விபதிலில் குறிப்பிட்டிருந்தனர். புரிஞ்சுண்டேளோ? அவா தி.க.காரா கிடையாது.

    நாகப்பட்டிணத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந்தது. அதனை ஆலி நாடர் (திரு-மங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்-கத்து மதில் செய்-வித்தார். அவர் அச்சமயத்தில் கடவுள் தன்மையராய் விளங்கினார். அவரைக் குற்றம் கூறுநர் ஒருவரும் இலர்
    சைவ சித்தாந்தப் பதிப்பகம் வெளி-யிட்ட தஞ்சைவாணன் கோவை (பக்கம் 7, வரிகள் 26_-30)

    @கோமதி செட்டி //\\பௌத்த, ஜைன மதங்களை எதிர்த்ததும் இதே காரணத்துக்காகத்தான். பௌத்தமும் ஜைனமும் வெளிநாட்டு மதமா? \\

    அரை குடம் தளும்புகிறது… இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.//

    கள்ளமுள்ள மனது உள்ளதை மறைக்குது… இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

    சரி. ரிக்வேதம், கீதை அவற்றின் சாராம்சம், காலம் இது இந்த விவாதத்திற்கு சம்பந்தமில்லாதது. என்னுடைய கேள்வி நேரானது.

    1.போலீசிலோ, மிலிட்டரியிலோ சேரும்போது பஞ்சகச்சமும் , குடுமியும் எங்க கலாச்சாரம். அதனால குடுமி வெச்சுப்போம், பங்சகச்சம் போட்டுப்போம்னு சொல்றதில்லை. ஆனா பிறமத்தவர் நடத்துற ஸ்கூலிலே அதைப்பண்ணுறீங்க. அப்படின்னா இது அவங்களோட சண்டைவலிக்கிறதுக்குதானே? அமைதிப்படை நாகராஜ சோழன் மாதிரி ரெண்டுபேருக்கும் சண்டைமூட்டிவிட்டு அதிலே குளிர்காயலாம் என்ற எண்ணம்தானே காரணம்?

    2.உங்களுக்கு அதிகாரம் இருக்கும்போது ஹிந்துமதத்துக்கு மாற மறுத்ததற்காக 8000 பேரை கழுவேற்றம் செய்தது சரி. அதை இன்றும் வருடாவருடம் மதுரையில் கழுவேற்றலீலையாக கொண்டாடுவது சரி. ஆனால் மேக்கப் போட்டதை கண்டித்தது மட்டும் தவறு. அப்படியா? (இந்த தவறை நியாயப்படுத்தவில்லை. ஆனால் கழுவேற்றத்தை ஆதரிப்பவர்கள் இதை கண்டிக்க என்ன தார்மீக நியாயம் இருக்கிறது?)

    3. கீதையை ஏற்காத ஹிந்துக்களே இருக்கும்போது அதை மற்ற மதத்தவரும் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டைவிட்டு வெளீயேறவேண்டும் என்று சொல்பவர்கள் இதை கண்டிக்க என்ன தார்மீக நியாயம் இருக்கிறது?

  75. I condemn Mr. Thomsan for his lapsided view. I am a Catholic Christian and I too believe that there is nothing wrong for a girl to have Pottum Poovum which is a Tamilian culture (local cuture) and nothing to do with Hindu religion. It is wrong to subscribe to the idea that these customs should be forbidden as related to Hindusism because it is followed who farm majority are Hindus (before conversion all were hindus) .

    Ignorance of people is very dangerous and lead to social problems. In this case the school authorities should be taken to task fot the atrocity committed on the girl.

    We catholics adopt these customs because we too Tamils like any of our Hindu brothers and Sisters. My wife and Daughter adopt these practices because we believe that it is Tamil culture and nothing to do with Hinduism.

    Some of the Protestants out of Ignorance and fanatism condemn this as Hindu practice. That is why we too keep a distance from them.

    As a Christian I am ashamed of this act of the School and the death of the girl. No civilised society can accept the norms of the School.

    We cannot say that other Hindu schools also practice this type of discrimination is a vald reason to be wrong.

    Those who really believe in Christ would not do these atrocities against other fellow human being. Christ preached love and compassion and the school authorities action are against this.

    As a Christian and a fellow Tamil I apologise to the socity and the breaved family for the mistake committed by the school authorities.

    My only request to my fellow Tqmils to keep in mind that the school authorites view is not the view of majority Christians in India atleast in Tamilnadu.

  76. I had heard about suicide of many children. Most of them or almost all of them are students from Christian schools. Particularly convent schools. Convent schools are run by people who have decided no to have children and they certainly do not understand the agony of children or parents. Their treatment may drive children to extreme ends. These christian schools are run by people who have no respect to Hindu religion and are always on the lookout for chances to convert. They may adopt any method for that. The least they can do is creating a shame in following Hindu/Tamil customs. When these children grow up even if they are not converted, they may adopt a lenient view towards Christian issues and at times act against Hindu religion if required. Most of today’s higher official and political decision makers are christian school products. That is why things like such suicides go unnoticed. In this case the parents knew her difficulty with that wretched school in advance and still they did not take any steps to change the school. There are many number of government run schools in which properly qualified teachers are there. Then why should parents admit children in such killing schools? Hindu organizations should take initiative to admit children in Hindu schools or government schools. This is good for even other community children.

  77. \\\\ஆனால், கிறுத்துவ இசுலாமிய மாணவர்கள் அவற்றில் கலந்துகொள்வதில்லை. இந்துக்கள் மட்டுமே “சர்வமத” பிரார்த்தனைகள் செய்துவிட்டு சுண்டல் சாப்பிட்டுக் கலைவர்.

    இதைக் கண்டுகொள்ளாமல் விடுபவர்கள் தங்களைக் காந்தியவாதி என்று அழைத்துக் கொள்கிறார்கள். இப்படி நடக்கிறது என்று சொல்பவர்கள் “இந்துத்துவவாதி” என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள் – அதே காந்தியவாதிகளால் !\\\\\

    ஸ்ரீ களிமிகு கணபதி, well articulated. பழக்க தோஷமாயிற்றே! “ஈஸ்வர அல்லா தேரோ நாம்” என்றே பஜனை செய்து பழக்கப்படுத்தப்பட்ட ஹிந்துக்கள், “ஈஸ்வர கேசவ தேரோ நாம்”என்று பஜனையைத் திருத்துபவர்களைக் கூட ஹிந்து ஸம்ப்ரதாயவாதிகள் என முத்திரை குத்தவே முயல்வார்கள்.

    எந்த வாதமாக இருந்தால் என்ன. ஹிந்து பூமியில் ஹிந்துக்கள் தலையில் மிளகாய் அரைத்து ஆப்ரஹாமிய பஜனை செய்ய வைப்பதும் ஆப்ரஹாமியர் இது போன்ற பஜனைகளில் இருந்து விலகுவதும் ஏற்கவியலா விஷயங்கள்.

    பரம்பூஜனீய ஸர்ஸங்கசாலக் மஹோதய் அவர்கள் தற்போது ஜம்மு விஜயத்திலிருக்கிறார். ஸ்வயம்சேவகர்களிடமும் இங்குள்ள ஹிந்துக்களிடமும் அளவளாவுகையில் இவர்கள் மதிக்கும் ஒரே ராஜநீதிக்ஞர் ஸ்ரீ ஜக்மோஹன் என்று தெரிய வருகிறது.

    \\\\அதற்கு ஒன்று செய்யலாம். மைனாரிட்டி பள்ளிகள் கல்லூரிகளுக்கு என்று இருக்கும் தனியுரிமைகளை இரத்துசெய்யப்போராடலாம்.\\\\

    Shri Agneya, although I do not have expertise in constitution, I strongly doubt as to what is called as minority rights could include infringement of fundamental rights of Hindus. It is understandable if they impose injunctions in their place of worship, viz., “Church”. But, School is a public institution, which, in many cases is run with funds provided by Government of the day out of tax payers money. There, one can not go to the extent of infringing upon fundamental rights of any citizen for that matter. Although not a court pronouncement, recently I heard of a elite judicial opinion that whereas minority rights include right to worship, preach et al it does not include a right which minorities tries to articulate viz., “right to convert”. And basically, it is this malice, which is behind the exploitation of innocent Hindu children studying in Minority Educational Institutions.

    பாரத வந்தே மாதரம்

  78. சந்த்ரஷேகறேன்தரன் கட்டயமாக ஒரு கைகூலித்தான் சந்தேகமே வேண்டாம்… அதுவும் பரிசுத்த கோழை…. இவர் கட்டயமாக மதவெறி தலைக்கேறிய, வஞ்சகம் செய்து பிழைப்பு நடத்தும் சராசரி கிருஸ்துவர் என்பதை யூகிக்க முகிறது. இந்த வலைத்தளத்தில் குழப்பத்தையும் பேதங்களை ஏற்படுத்துவது மட்டுமே இவரது வேலை.

    க. வ. கார்த்திகேயன்.

  79. //////@மக்கு மாக்கான் – //பகவத் கீதை வியாச பாரதத்தில் இல்லையா எந்த மடையன் சொன்னான்? // மேலே உள்ளதை வாசிச்சுருப்பீங்க. ப்ளஸ்
    கீதை மஹாபாரதத்தில் இடைச்சொருகலாக வந்தது என்பதை சிலவருடங்களுக்கு முன்னர் (8, 10 வருடங்களுக்கு முன்னர்) விகடனில் சுஜாதாவோ மதனோ தங்களுடைய கேள்விபதிலில் குறிப்பிட்டிருந்தனர். புரிஞ்சுண்டேளோ? அவா தி.க.காரா கிடையாது/////////
    பெரியவா ஏன் இத்தனை கோபம் படனும்? விகடனில் எழுதிய மேதாவி மதன் தான்.நீங்கள் திரு அரவிந்தன் நீலகண்டனின் அகப்பயணம் அல்லது. திரு ஜடாயு அவர்களின் தளத்தில் சென்று பாருங்கள் அங்கு மதனின் கட்டுரைக்கு சரியான ஆதரங்களுடன் பதில் அளித்துள்ளனர்.
    கண்ணனின் வழிபாடு மிக பழமையானது என்று சங்க நூல்களின் ஆதரங்களுடன் கந்தர்வன் கூட நிறுவியுள்ளார் என நினைக்கிறேன்,கண்ணன் எனும் தமிழ் கடவுள் என்றோர் கட்டுரை இத்தளத்தில் வெளிவந்தது.
    சமணர் கழுவேற்றமும் கூட சம்மந்தரின் சமுக மீட்சியும் கழுவேற்ற கற்பிதங்களும் என திரு ஜடாயு அவர்கள் ஒரு கட்டுரை அவர் தளத்தில் வெளியிட்டுள்ளார், அங்கே பொய் அதனையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    (அந்த சுட்டிகளை அவர்களின் அனுமதி இன்றி இங்கு தர நான் விரும்பவில்லை )
    நீங்கள் சைவர் அதனால் கிருஷ்ணரை ஓரங்கட்ட நினைக்கிறீர் என நினைத்தேன், நீங்கள் இப்போது சில்லி அல்லது அவர் கூட்டாளி என நிருபித்து விட்டீர்கள்.
    ரிக் வேதமா என்னவோ ஒரு வேதத்தில் ஒரு ஸ்லோகத்தை எங்கிருந்தோ பெற்றதாய் குறிப்பிடுகிறீர்களே நீங்கள் அதனை அக்னிவீர் தளத்தில் போய் கேளுங்கள் சரியான விளக்கம் கிடைக்கும். More on Caste System தலைப்புக்கு சென்று படியுங்கள்.
    ஆரிய சமாஜிகளை கண்டு ஆங்கிலேயேனே ஆடிபோயிருக்கிறான். மாக்ஸ் முல்லரின் பாட்சா பலிக்காமல்.

    ///////1.போலீசிலோ, மிலிட்டரியிலோ சேரும்போது பஞ்சகச்சமும் , குடுமியும் எங்க கலாச்சாரம். அதனால குடுமி வெச்சுப்போம், பங்சகச்சம் போட்டுப்போம்னு சொல்றதில்லை. ஆனா பிறமத்தவர் நடத்துற ஸ்கூலிலே அதைப்பண்ணுறீங்க. அப்படின்னா இது அவங்களோட சண்டைவலிக்கிறதுக்குதானே? அமைதிப்படை நாகராஜ சோழன் மாதிரி ரெண்டுபேருக்கும் சண்டைமூட்டிவிட்டு அதிலே குளிர்காயலாம் என்ற எண்ணம்தானே காரணம்?////////
    போலிசுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர் பள்ளி செல்லும் சிறார்கள் இரண்டும் ஒன்றா? எங்கள் பள்ளியில் சேர்ந்தால் பைபிள் படித்தே தீரவேண்டும் போட்டு பூ வைக்க கூடாது என்று பெற்றோரிடம் பள்ளி நிர்வாகங்கள் சொல்கின்றனவா? அப்படி சொன்னால் அப்பளியிலே சேர்க்கவே யோசிப்பார்கள். பொட்டும் பூவும் வைத்து பள்ளி போவதும் ஸ்ஸ்ஸ்ஸ் விடுங்கள்

    /////2.உங்களுக்கு அதிகாரம் இருக்கும்போது ஹிந்துமதத்துக்கு மாற மறுத்ததற்காக 8000 பேரை கழுவேற்றம் செய்தது சரி. அதை இன்றும் வருடாவருடம் மதுரையில் கழுவேற்றலீலையாக கொண்டாடுவது சரி. ஆனால் மேக்கப் போட்டதை கண்டித்தது மட்டும் தவறு. அப்படியா? (இந்த தவறை நியாயப்படுத்தவில்லை. ஆனால் கழுவேற்றத்தை ஆதரிப்பவர்கள் இதை கண்டிக்க என்ன தார்மீக நியாயம் இருக்கிறது?)//////
    ஜடாயுஜியின் தளத்தை பார்க்கவும்,எண்ணற்ற உலக கொலைகளை புனித கொலைகளை குருசேட் கொலைகளை புரிந்தவர்க்கு ஆதரவான உமக்கு இப்படிப்பட்ட கட்டு கதைகளை எங்கள் மேல் சுமத்தினால் தானே பிழைப்பு ஓடும்

    /////3. கீதையை ஏற்காத ஹிந்துக்களே இருக்கும்போது அதை மற்ற மதத்தவரும் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டைவிட்டு வெளீயேறவேண்டும் என்று சொல்பவர்கள் இதை கண்டிக்க என்ன தார்மீக நியாயம் இருக்கிறது?///////
    ஏற்காமல் யாரும் இருக்கவில்லை தெரியாமல்தான் இருக்கின்றனர், தெரியவிடாமல் வைத்திருப்பது தான் கலகக்காரர்களின் தந்திரம்.எல்லாரும் ஏற்கவேண்டும் என்று யாரும் இங்கு புனித போர் புரிவதுமில்லை.
    ஏனுங்க சாமி ஒரு அரசியல் வாதி கூறினார் அவர் கூறியதனால் எத்தனை பேர் இந்நாட்டை வீடு வெளியேற்ற பட்டு விட்டனர்.ஒரு பள்ளி நிர்வாகமோ அல்லது ஆசிரியரோ அவ்வாறு கூறினார்களா? அல்லது ஒரு உளறுவாயன் கூறியதால் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்? சும்மா வெட்டி ஜல்லி அடிக்காதீர்கள்.

    ஏன் வீரபாண்டிய கட்டபொம்மனை வீரவாஞ்ச்சியை கூட தேசபற்று இல்லாதவர் என்று எழுதும் கூட்டம் இருக்கிறது. அதனை அப்படியே நம்புவது உங்கள் விருப்பம். அதற்கான பதில் கட்டுரைகளையும் படியுங்கள்.உண்மை விளங்கும் அப்போது,சுதந்திரத்தை மல தினம் என்று எழுதியவரின் தளம் கூட இருக்கிறது.
    வேதங்களை கிறித்தவத்தின் தாக்கத்தால் எழுந்தவை என்று கூறும் தளங்களும் இருக்கிறது.

  80. மிஷநரிகள் மற்றும் மதமாற்றிகளின் ஆதரவாளரும் அவர்தம் சமய உரிமை மீறலுக்கு வக்காலத்து வாங்குபவருமான சந்திர சேகர்
    “போலீசிலோ, மிலிட்டரியிலோ சேரும்போது பஞ்சகச்சமும் , குடுமியும் எங்க கலாச்சாரம். அதனால குடுமி வெச்சுப்போம், பங்சகச்சம் போட்டுப்போம்னு சொல்றதில்லை. ஆனா பிறமத்தவர் நடத்துற ஸ்கூலிலே அதைப்பண்ணுறீங்க. அப்படின்னா இது அவங்களோட சண்டைவலிக்கிறதுக்குதானே?”
    கேட்டுள்ளார்.
    இது அவரது அறியாமையை அல்ல புரியாமையைக் காட்டுகிறது. பள்ளிக்கு செல்வது போலீசில் சேர்வதும் வேறென்று புரியாதது மடமை அன்றி வேறில்லை. நாங்கள் விபூதிபூசினால், பொட்டுவைத்தால் உனக்கேன்(மிசனரிக்கு) வயிற்றெரிச்சல் வரவேண்டும். எந்தக்கிறிஸ்தவப் பள்ளியாவது பொட்டுவைக்க, பூவைக்க விபூதி பூச தனது விதிமுறைகளில் எழுத்துப்பூர்வமாக த்தடை செய்துள்ளதா? அப்படியிருந்தால் காட்டுங்களேன். பார்க்கலாம்.
    திரு சந்திரசேகர் முதலில் பிராமணர், சைவர், ஸ்ரீவைணவர், ஸ்மார்த்தர், வடமாள் போன்றவற்றை விவரமாக அறிந்து விட்டு பொய் சொல்லக்கற்றுக் கொள்க. மனுஸ்மிருதி, பகவத் கீதை இவற்றைப் படித்துவிட்டு கருத்து சொல்லுக.

  81. \\\\\\\\\\\அல்லது பஞ்சகச்சமும், குடுமியும் எங்க கலாச்சாரம்ன்னு சொல்லிட்டு மிலிட்டரியிலோ, போலீசிலோ பஞ்சகச்சம் போட்டுட்டு குடுமி வெச்சுட்டு போகமுடியுமா? அததுக்குன்னு ஒரு ட்ரஸ் கோட் இருக்குது.\\\\\\\\

    ஹிந்துக்களை ஒன்றிணைக்க பெரும்பாடுபட்ட பழுத்த யதிவரரின் பெயரை வைத்துக்கொண்டு ஹிந்துக்கள் மீது கூசாமல் அவதூறு சொல்லும் சந்த்ரசேகர என்ற நபருக்கு ஹிந்து கலாசாரம் மற்றும் ராணுவ வழிமுறைகள் இரண்டிலும் புரிதல்கள் குறைவு என்பது தெரிகிறது.

    குடுமிவைப்பது என்பதில் பற்பல வகைகள். குடுமி என்பது ஏதோ பார்ப்பனர் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது கூட அதைவிட பெரிய அறியாமை. ஏன் சர்தார் என சொல்லப்படும் சீக்கியர் கூட பெருத்த சிகை வைத்துள்ளனர். ராணுவ துணை ராணுவங்களில் சனாதனி ஹிந்துவோ, சீக்கியரோ முஸல்மானோ யாரும் அவர்கள் கலாசார அடையாளங்களை பேணுவதில் தடைகளில்லை அவை ராணுவ பொது விதிமுறைகளுக்கு இடைஞ்சலில்லாத வரை. உதாரணத்திற்கு சர்தார்களின் அடையாளங்களான, கேஸ் (தலைமுடி), கங்கா (சீப்பு), கச்சா (லங்கோடு),கடா (கையில் அணியும் கங்கணம்), கிர்பான் (கத்தி) இவைகளுக்கு எந்த தடையும் இல்லை. கிர்பான் என்ற படிக்கு நாலைந்து அடி பெரிய தல்வாரும்(பட்டாகத்தியும்) வைத்துக் கொள்ளலாம் கைக்கு அடக்கமான சிறு கத்தியும் வைத்துக்கொள்ளலாம். தாடி என்ற படிக்கு வயிறு வரை தொங்கும் தாடியும் வைத்துக்கொள்ளலாம் அல்லது சரியாக பிசின் தடவி முறைப்படுத்தப்பட்ட தாடியும் வைத்துக்கொள்பவரும் உண்டு. திலகம் (பொட்டு – விபூதி – நாமம்), குடுமி, தாடி, கிர்பான் என்ற கத்தி மற்றும் சர்தார்கள் அணியும் பக்டி என்னும் தலைப்பாகை எல்லாம் ராணுவத்தில் அனுமதிக்கப்பட்டவை. அவற்றை அவர்கள் செய்யும் வேலைக்கு இடைஞ்சல் இல்லாது அணிய வேண்டும் என்பது தான் முக்யம். சனாதனி ஹிந்து, முஸல்மாணியர் மற்றும் சீக்கியர் எல்லோரும் தங்கள் கலாசார அடையாளங்களை ராணுவ துணைராணுவத்தில் பணி செய்யும் போதும் பேணுகிறார்கள் மற்றும் அவற்றை வேலைக்கு இடைஞ்சலில்லாத படிக்கு பேணுகிறார்கள் என்பதை அறிவது அவசியம்.

  82. சந்திரசேகரேந்திரர் என்பவரே,

    முதலில் அது வியாச பாரதம் இல்லை – வியாசர் எழுதியது ஜெய என்ற எட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்ட ஒரு நூல் – அது சஞ்சய திருரதுராஷ்டிரா சமவாதத்தில் தான் ஆரம்பமாகிறது – வியாசர் எழுதியது கீதையை உள்ளடக்கிய ஜெய என்ற நூல் – கடபயாதி சங்க்யா என்ற ஒரு முறை படி, ஜெய என்றால் பதினெட்டை குறிக்கும் – கீதையிலும் பதினெட்டு அத்யாயங்கள். இப்படி பதினெட்டு அத்யாயங்கள் கொண்ட கீதையை உள்ளடக்கிய ஜெய என்பது தான் வியாசர் எழுதியது. – இது கொஞ்சம் கீதையை பற்றி மகாபரத்ததை பற்றி அறிந்தவர் அனைவரும் அறிந்த விஷயமே.

    பாரதம் என்பது 24 ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்ட நூல் – சுகரால் ஜெய நூலை விரிவு படுத்தி சொல்லப்பட்டது

    மகாபாரதம் என்ற 1.2 லட்ச ஸ்லோகங்களை கொண்ட நூல் பலரால் கிளை கதைகளை கொண்டு விரிவு படுத்தப்பட்டது – வியாசர் செய்ததை போலவே பதினெட்டு அத்யாயங்கள் கொண்டதாக மகாபாரதம் வகுக்கப்பட்டுள்ளது.

    சங்கரர் கீதைக்கு பாஷ்யம் இட்டுள்ளார் – அவரது காலம் எட்டாம் நூற்றாண்டு. அவரது பாஷ்ய அவதரிகையில் அவரே சொல்கிறார் – கீதைக்கு பல ஆயிரம் பாஷ்யங்கள் எழுதப்பட்டுவிட்டன – எதுவுமே சரி இல்லை, அதலால் கீதைக்கு சரியான ஒரு பாஷ்யம் எழுத முற்படுகிறேன் என்று.

    கீதையின் காலம் 200 CE என்றிருந்தால் – 900 வருடங்களுக்குள் இவ்வளவு பாஷ்யங்கள் வர வாய்ப்பே இல்லை.

    பகவத் கீதையில் கிருஷ்ணர் ஜனக (சீதையின் அப்பா இல்லை ) சாம்ரட்டை பற்றி பேசுகிறார் – ஜனக சாம்ராட் என்பவர் யஞவல்கரின் சமகாலத்தவர் – இருவரும் கிருஷ்ணரின் அப்பாவான வசுதேவரின் காலத்தவர் (யஞவல்கர் வசுதேவருக்கு அசுவமேத யாகம் செய்ய உதவுவதாக ஆதாரங்கள் உள்ளன)

    ஜனகரை போல கர்மஞானிகள் இந்த பிரக்ரிதி தன்மையால் பீடிக்கப் படுவதில்லை என்று கீதையில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொல்வதாக வருகிறது.

    நீங்கள் இந்த ஜனகரை பற்றி கேள்விப் பட்டுள்ளீர்களா. எவ்வளவு பேருக்கு இந்த ஜனகரை தெரியும் – 200 ce அளவில் இந்த ஜனகர் ப்ராபல்யத்துடன் இருந்தாரா? இல்லை – இப்படி ஒரு சிலரே அறிந்த ஒருவரை பற்றி கிருஷ்ணர் பேசுவதாக யாரோ 200 CE யில் எழுதி வைக்க மாட்டார்கள் அல்லவா? நிச்சயமாக வைக்க மாட்டார்கள் – கீதை எழுதும் அளவிற்கு புத்திசாலிகளாக இருந்தால் நிச்சயமாக எழுதமாட்டார்கள்.

    கிருஷ்ணர் அவரது காலத்திற்கு சற்று முன் வாழ்ந்து பெரும் புகோழோடு கர்ம ஞானி என்று அனைவராலும் அங்கிகரிக்கப்பட்ட ஜனகரை பற்றி அர்ஜுனனுக்கு கூறுகிறார் – ஏன் அவர் தசரத்தை சொல்லி இருக்கலாமே (அவரும் ஒரு பெரிய கர்ம ஞானி), ராமனை சொல்லி இருக்கலாம் – என் சொல்லவில்லை?

    பீஷ்மர் விழுந்த நாளிலிருந்துதான் மகாபாரத போர் பற்றி சஞ்சயன் த் ருட்ருராஷ்டிரா மகாராஜாவிற்கு சொல்ல ஆரம்பிக்கிறார் – கீதையின் முதல் ஸ்லோகத்தில் த்ருட்ருராஷ்டிரர் பாண்டவர்களும், எனதவர்களும் குருக்ஷேற்றத்தில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று கேட்கிறார் (என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றல்ல) – சஞ்சயர் பத்து நாள் ப்ளாஷ் பாக் விஷயத்தை தான் சொல்கிறார்.

    இப்படி ஒரு கதையை 200 CE இல் கீதை எழுதியவர் புனைய அவசியமே இல்லை.

    கீதை 500 – 200 CE யில் எழுதப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை – கீதையில் வரும் சில ஸ்லோகங்கள் கட உபநிஷத்தை சார்ந்து இருக்கும் – கட உபநிஷத்திளிருந்து ஸ்ரீமான் பிளேடோ (320 BCE) அவர்கள் சுட்டு எழுதி இருக்கிறார் (phaedrus)

    அதுமட்டுமல்ல இவருக்கு முன்னாலேயே பார்மேண்டிஸ் என்று 500 BCE யில் வாழ்ந்த ஒரு கிரேக்கர் கட உபநிஷத்திளிருந்து சுட்டு எழுதி உள்ளார். இவர்கள் இருவரும் கனவினில் கூட இந்தியாவை பார்த்ததில்லை என்று வரலாறு கூறுகிறது

    கட உபநிஷத் 500 BCE இல் வட இந்தியாவில் எழுதப்பட்டிருக்க வைப்பே இல்லை – என் என்றால் அப்போது அங்கு கிருஷ்ணா யசுர் வேதம் தேய்ந்து விட்டிருந்தது – யாஞவல்கரின் காலத்திற்கு அப்புறம் சுக்ல யசுர் வேதம் வடக்கில் தலை எடுக்க , கிருஷ்ணா யசுர் வேதம் தெற்கில் தஞ்சம் அடைந்தது, தெற்கில் 70 % கிருஷ்ணா யசுர் வேதத்தவர் தான்.

    கட உபநிஷத் கிருஷ்ண யசுர் வேதத்தை சார்ந்தது.

    கீதையை பல பேர் எழுதி இருக்கவே வாய்ப்பில்லை – ஒழுங்காக கீதை படித்தவர்களுக்கு அதில் சூத்ரம் போல உள்ள தொடர்ச்சியை காண முடியும்.

    கிருஷ்ணர் எழுதியதால் கீதைக்கு பெருமை இல்லை – அது சொல்வதை கடைபிடிப்பதால் ஒருவன் மகான் ஆகிறான் அதனாலேயே அதற்க்கு சிறப்பு.

    கீதையை பொது நூலாக பாருங்கள் அது பஜனை நூலோ ஆராதனை நூலோ துதி நூலோ கதை நூலோ அல்ல.

    நீங்கள் கொடுத்த சுட்டியில் ஒன்றில் கூட வரலாற்று ரீதியாக சான்றுகள் வைக்கப்படவில்லை -அத்தனையும் மிசநரிகளின் வெத்து பேச்சு மாதிரியே அடுக்கப்பட்டுள்ளன.

    உதாரணத்திற்கு

    //
    Despite its universal appeal, the Gita is replete with contradictions both at the fundamental level and at the highest level of philosophical discourse. To the discerning eye, it would seem that what has been said in the previous chapter, is contradicted in the very next chapter. This is the fundamental complaint against the Gita
    //

    இதை படித்து சிரித்தே விட்டேன். யாருக்கு இந்த fundamental complaint இருக்கு – சங்கரருக்கோ ராமனுஜருக்கோ மத்வாருக்கொவா ?

    கீதை அழகாக கோர்க்கப்பட்ட ஒரு மணி மாலை போல – அதில் ஒவ்வொரு அத்யாத்திர்க்கும் தொடர்பு அழகாக உள்ளது. கீதை என்ன டிராமாவா நாவலா – அதில் ஒவ்வொருவருக்கும் ஏற்றார் போல ஒவ்வொரு அட்யாயத்திலும் விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. மக்களை நான்கு வகை படுத்தி (அர்த்தர்கள், ஜிஞாசர்கள், ஆர்த்திகள் ஞானிகள்) அவர்களுக்காக விஷயங்கள். கர்ம ஞான பக்தி மார்கத்தில் வகுத்து அவர்களுக்காக விஷயங்கள். என்று உள்ளன. கர்ம யோகம் படித்து விட்டு , ஞான யோகம் படித்தால் வித்யாசமா சொல்றமாடிரியே இருக்கும் ஆனா இரண்டும் வேற வேற target audience க்கு – எல்லோப்ரையும் ஒரு தூதனின் கீழ் கொண்டு வர வேண்டும் எல்லரோயும் ஒரு கொள்கையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் நினைத்து பழக்கப்பட்ட மனத்திற்கு கீதை சொல்வது வியப்பாகவே தான் இருக்கும்.

    சமணர்களை கழுவேற்றியது ஒரு போட்டி – ஹிந்துக்கள் தோற்றிருந்தால் ஹிந்துக்கள் கழுவேற்றப்பட்டிருப்பர் – இதை பற்றி முதலை கண்ணீர் விடுவது தீகா கார்கள் மட்டும் தான் – ஒரு ஜைனர் கூட இல்லை

    ஹாய் மதன் ஆனந்த விகடனில் சொல்வதை வைத்தெல்லாம் கீதை பற்றி முடிவு கட்டும் அளவிற்கா நீங்கள் புத்திசாலி

  83. அன்புள்ள ந்ண்பர்களுக்கு,

    இப்படி நீங்கள் எல்லாம் வரிந்து வரிந்து விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இது வரை யார் எந்த பிரசினைக்கு விளக்கம் கொடுத்து இவர் திருந்தி, நன்றி தங்கள் விளக்கத்திற்கு என்று சொல்லியிருக்கிறார்.மாறாக இன்னும் அபத்தமும் கடைத்தரமுமான இன்னும் எதையாவது குப்பையைக் கிளறிக்கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா? இவரைத் தான்” நம்ம குழந்தையல்லவா? என்று கேட்கிறார். மலர்மன்னன். அவர் சொல்லும் நம்ம குழந்தை எப்படியெலாம் நடந்து கொள்கிறது, என்னவெல்லாம் எப்படியெல்லாம் தன் துவேஷத்தைக் கொட்டுகிறது என்று பார்த்துக்கொள்ளட்டும். ஹிந்தியில் ஒரு பழமொழி: ‘ பைன்ஸ் கெ சாம்னே பீண் பஜானா” தான் இது.

  84. @ கோமதி செட்டி-same blood,
    நான் எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுது மாரியம்மன் கோவிலுக்கு முடி காணிக்கை செய்வதாக வேண்டியிருதேன். பள்ளியில் ஒருநாள் கணித ஆசிரியை என் தலைமுடியை பிடித்து “உசிர குடுத்த சாமிக்கு மசிர கொடுப்பியா வே” என்று கடிந்தார். மேலும், எனது காதுகளையோ அல்லது விரலையோ வெட்டி காணிக்கை கொடுக்க வேண்டியதுதானே என்றும் கேட்டார். பிரம்பினால் என் கைகளில் அடித்தார். எதிர்த்து பேச தோன்றவில்லை. வீட்டிலும் சொல்லவில்லை. அன்றே அதை மறந்தும் விட்டேன். இப்போது அது நினைவுக்கு வருகிறது. திருநீறு/குங்குமம் இட்டால் திட்டுவார். அவர் வகுப்புக்கு வரும்போது மாணவர்கள் நெற்றியை துடைத்துவிடுவார்கள். இல்லாவிட்டால் ஏதோ ஒரு காரணத்திற்காக பிரம்படி நிச்சயம். அவர் ஒரு கிறிஸ்தவர். நான் ஏன் அடி வாங்கினேன் என்று இப்போது புரிகிறது.

  85. சரி சரி

    உண்மையிலேயே நடக்கும் இந்த நரபலிகளை மக்கள் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக, கிறிஸ்துவர்களை இந்துக்கள் நரபலி கொடுப்பது மாதிரி ஒரு கதை எழுதிவிட வேண்டியதுதான்.

    அப்படி எழுதினால் இந்துக்களே ஆதரிப்பார்கள். இந்துக்களின் ஏமாளித்தனத்தில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.

    கிறிஸ்துவர்கள் செவ்விந்தியர்களை வயிற்றை கிழித்து குழந்தைகளை கொன்று புனித நீர் தெளித்து ஆசீர்வாதம் செய்தது எல்லாம் கொஞ்சம் அமுக்கி வாசிக்கணும். அதே மாதிரி, பச்சை பிள்ளைகளை நம்ம பாதிரியார்கள் கற்பழிப்பதையும் கொஞ்சம் அமுக்கி வைக்கணும்.

  86. Dear Friends, I was a similar victim. but lucky to have survived. Here are few suggestions that might help
    1. As far as possible avoid any missionary/convent schools
    2. If you still prefer to send your children to convent school, check the history of complaints on that school.. especially on rules that imply religion. Also, tell the principal by writing the rights of your child (pottu, kumkum, … especially during auspisious days)
    3. very important: talk to your children. Encourage them to tell you whats going on at school. Dont scold them or suppress them when they come home and complain. Be prepared: sometimes children may vent out or even use it as an excuse for not studying. But… please listen to them patiently. Talk to them.
    4. Very very important : Teach children to be strong in their heart. There will be people pushing their spirits down… if not at school .. it could be outside. If not at young age.. it will happen at later stages. Encourage them to be bold. This will not be taught at schools or playgrounds. Only we – as parents can do this.

  87. எங்க ஊருக்குப் பக்கத்துல மணக்கடவு,சாலைக்கடை ,கள்ளிமந்தயம் போன்ற ஊர்களில் ஹிந்து உணர்வுள்ள ஒரு அன்பர் கேஷவ வித்யாலயா,கிருஷ்ண வித்யாலயா என்ற பெயர்களில் பள்ளிக்கூடம் நடத்துகிறார்.அங்கே படிக்கும் மாணவர்கள் சரஸ்வதி வந்தனம்,போஜனமந்த்ரம் மற்றும் தேச பக்திப்பாடல்களை மனனம் செய்து கேட்பவர் கிரங்கும் விதம் கூறுவார்.இவற்றில் பயிலும் குழந்தைகள் தாய் தந்தையரிடம் மிக்க மரியாதையுடன் நடப்பதுடன் மிக்க ஒழுக்கம் மிகுந்தவர்களாகவும் திகழ்கின்றனர்.இப்போது இங்கே அருகிலுள்ள தாராபுரம் டவுனிலுள்ள கிறிஸ்துவப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பள்ளியில் படித்தால் மேற்ப்படிப்புக்கு வேறு பள்ளிகளில் இடம் கிடைக்காது என்று புரளியை கிளப்பிவிட்டு தங்களுடைய கிறித்துவப் பள்ளிக்கு ஆள் பிடித்து வருகின்றனர்.இப்படித்தான் சென்ற ஆண்டு நடந்தது. பள்ளிமாறிச் சென்ற குழந்தைகளின் ஒழுக்கமும் நடவடிக்கையும் முற்றிலும் மாறியுள்ளதை கண்ட பெற்றோர்கள் தங்களது தவறை உணர்ந்துள்ளனர் .இந்தவருடம் பள்ளியை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளனர் .நமது குழந்தைகளை எக்காரணம் கொண்டும் கிறிஸ்த்தவப் பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள் பெற்றோர்களே உஷார் ! நமது பண்பாட்டை போதிக்கும் கேசவ வித்யாலயா போன்ற நல்ல பள்ளிகளுக்கு நமது குழந்தையை அனுப்புவோம் . மற்றவர்களுக்கும் சொல்லிப் புரியவைப்போம்.
    ஈஸ்வரன்,பழனி.

  88. 1. அந்த மாணவியை பார்த்து சில்க் சுமிதா போல் சிங்காரித்து வந்து இருக்கியே என்று கடிந்து இருகிறார்கள். பூவும் பொட்டும் வைத்து நடித்த அந்த சில்க் நடிகை ஒரு கிறிஸ்தவ பெண் ஆவார்.
    2. கிறிஸ்தவர்கள் வெறி பிடித்தவர்கள் என்பது எல்லார்க்கும் தெரியும். அவர்கள் நடத்தும் பள்ளிகளில் அந்த வெறி இருக்கதானே செய்யும்! எனவே இந்துக்கள் புத்தியோடு அந்த பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க கூடாது. மயில்சாமி அண்ணாதுரை தமிழ் வழி கல்வி மூலம் படித்து விஞ்சானியாக ஆகவில்லையா?
    ஆகவே இந்து பள்ளிகள் இருந்தால் அதில் தாராளமாக சேருங்கள் இல்லை என்றால் அரசு பள்ளிகளில் சேருங்கள்.
    3, அவர் சந்திரசேகரன் அல்ல. சந்தேக சேகரன். சாதாரணமாக தெருக்களில் குலைக்கும் நாயை விரட்டினால் அது மேலும் மேலும் குறைக்கும். சூரியனை பார்த்து குறைகிறது என்று பேசாமல் விட்டு விட்டால் அது தானாக அடங்கிவிடும். சந்தேக பேர்வழிகளுக்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது.
    4.உசிரை கொடுத்த சாமிக்கு மசிரை கொடுப்பியா- முஸ்லிம்கள் ஹஜ் சென்றால் மொட்டை அடித்து கொள்கிறார்கள் . கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி சென்றால் மொட்டை அடித்து கொள்கிறார்கள். அப்படியானால் அவர்கள் அங்கே என்ன கொடுகிறார்கள்?
    5.இந்த நாடு மதசார்பற்ற நாடு. வாடா நாட்டு போலீஸ்காரர்கள் (அதாவது SINGH
    கள் TURBAN மற்றும் BEARD வைத்து கொண்டு இருகிரார்களே! யாரும் பார்த்ததில்லையா? எத்தனயோ அரசு அலுவலகங்களில் முஸ்லிம்கள் CAP போட்டு கொண்டு பணி புரிகிறார்களே அதையும் பார்த்ததில்லையா?
    6. இந்துக்கள் நடத்தும் பஸ் களில் 3 GOD களின் PHOTO களும் இணைந்த படத்தை FRAME போட்டு மாலை போட்டு வைத்து இருக்கிறார்கள். அது எம்மதமும் சம்மதம் என்பதை காட்டுகிறது ஆனால் எம்மதமே எனக்கு சம்மதம் என்று நினைக்கும் மற்ற மதத்தினர்தான் இது போன்று வெறி பிடித்து அலைகின்றனர்.
    7. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இந்துக்கள் ஒன்று படவேண்டும். எனவே ஒன்று பட்டால் உண்டு வாழ்வு . இவ்வளவு படிப்பினைகளுக்குபிறகும் ஒன்று படவில்லை என்றால் நாம் என்ன செய்வது?

  89. Please please please do not put your children in christian schools. There are lots that have suffered in otherschools worser than that., as they were lesser standard or were full if good. Just because they did not sucide in other school worser it does not mean children are abused lesser its just that they seek medical advices. Or have opted someother coping mechanisms of displacements terrible. And children should be equipped to give back if any teacher or authority is bad and complain. People bad even teach parents are bad in schools bad to abuse the children. Beware the world is wicked core.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *