இந்து தியாக வீரர் குமார் பாண்டியன் குடும்பத்து வாரிசு எதிரணியில்: வேதனை

அண்மையில் மிகவும் பாதித்து மிகவும் மனத்தளர்ச்சியில் தள்ளிய விடயம் – குழந்தை ருத்ராவின் வீடியோ. அவளுக்கு நம் மீது எத்தனை கோபம் இருந்தாலும். எந்த மேடையில் ஏறி எத்தனை வசை மொழி பொழிந்தாலும் – அவள் என்றும் நம் வீட்டு குழந்தைதான். ஏனெனில் அவள் தந்தையும் அவள் சகோதரர்களும் அந்த குடும்பமும் செய்த தியாகம் அத்தகையது.. அந்த குழந்தையின் மீதும் அவள் குடும்பத்தின் மீதும் உள்ள அளப்பரிய அன்பாலும் மதிப்பினாலும் மட்டுமே, அவள் சொல்வதில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது…

View More இந்து தியாக வீரர் குமார் பாண்டியன் குடும்பத்து வாரிசு எதிரணியில்: வேதனை

திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண் சர்ச்சை : சில எண்ணங்கள்

திருப்பரங்குன்றம் என்பது ஒற்றை விசயமல்ல. இங்கு தமிழ்நாட்டில் மண்டைக்காடு, வி.களத்தூர், திண்டுக்கல் பெருமாள்பட்டி என்று ஒவ்வொரு ஊர்களிலும் நிகழ்கின்ற, வெளிப்பார்வைக்கு தெரியாமல் அழிக்கப்படும் இந்துக்களின் புனித நிலப்பரப்பின் ஒருங்கிணைந்த அடையாளம் அது.. இங்கு நடப்பது பெரும் பண்பாட்டு போர். இந்துக்களுக்கு இன்றைய தேவை தற்காலிக உணர்ச்சிகர ஒற்றுமை மட்டும் அல்ல. அதிலிருந்து உருவாக வேண்டிய உண்மையான நீடித்த இந்து ஒற்றுமை…

View More திருப்பரங்குன்றத்தின் தீபத்தூண் சர்ச்சை : சில எண்ணங்கள்

‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

திரைப்படத்தை பார்த்து முடிக்கும் எவருக்கும் ஏற்படுவது பெரும் உன்னத உணர்வு.  புனித நதியில், கங்கையில் அல்லது காவேரியில், அதன் புனிதத்தை உணர்ந்து நீராடினால் ஏற்படும் மனத்தூய்மை உணர்வு… மாரி செல்வராஜ் சத்தியமாக கீதை படிக்கவில்லை. அவருக்கு அதில் ஆர்வமும் இருக்க அவசியமில்லை. அப்படி ஒரு வேலியை நாம் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் மேலே மதுராபுரி மாட்டிடையன் கீதையில் சொன்னவற்றை தம் திரைப்படத்தில் காட்சிப்படுத்திவிட்டார் அவர்… சங்கிகள் என்று தம்மை சொல்லிக் கொள்கிறவர்களில் பலர் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் அப்படி செய்வது உங்கள் தலைவரான கோல்வல்கரையே கேலி செய்வதுதான்… எவ்வித மலின வணிக சமாச்சாரமும் இல்லாத, மலினங்கள் விடயத்தில் துளி சமரசமும் இல்லாத திரைப்படம் ஒன்றை தமிழ் சமுதாயம் வெற்றி பெற வைக்குமென்பதைக் காட்டியிருக்கிறது பைசன்…

View More ‘பைசன்’ படத்தை முன்வைத்து அவர்ண சிந்தனைகளும் கேள்விகளும்

இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் இருமுறை தலைவர் பதவியில் திறம்பட செயல்பட்டவர் ம.வெ. அத்துடன் சிறந்த சமூக வரலாற்று அறிஞரும் ஆவார். அவருடைய உரை நேரடி அனுபவத்திலிருந்து வருவது. தூய்மைப் பணியாளர்கள் குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நேரடியாக உரையாடியது, கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் செய்த தொண்டு, தமிழ்நாடு உட்பல பல மாநிலங்களில் மாநில அரசு அமைப்புகளின் மெத்தனம், ஒப்பந்தக் காரர்களின் சுரண்டல்கள், அராஜகங்கள், பாலியல் அத்துமீறல்கள், தனது பணிக்காலத்தில் அவர் எடுத்த அதிரடி சட்ட நடவடிக்கைகள், பட்டியல் சமுதாயத்தினரே மிக அதிக அளவில் இந்தப் பணிகளுக்கு வரும் நிலைமை தொடர்வது சரியானதா என்று பல முக்கியமான விஷயங்களைத் தொட்டுச்செல்வதாக அவரது உரை அமைந்திருந்தது. உரையின் வீடியோ பதிவுகளை இங்கே காணலாம்…

View More இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களின் நிலை – ம.வெங்கடேசன்

தொடரும் “தோமா வழி கிறித்தவம்” மோசடி, நடிகர் ராஜேஷ், உறக்கத்தில் இந்துக்கள்

சீமானும் விஜயும் இந்த மோசடி வலையின் பல்வேறு சரடுகளில் (pun intended) அறிந்தோ அறியாமலோ இயக்கப்படுகிறவர்கள். திராவிடம், தனித்தமிழ் இயக்கம், வேத மறுப்பு போலி சைவம் அனைத்துமே இந்த பெரும் மோசடியின் அங்கங்கள்.. நடிகர் ராஜேஷ் இதைப் பரப்பும் ‘ஐந்தவித்தான்’ என்கிற பிரச்சார திரைப்படத்தில் நடித்தார். தவறு, அவரது மதம் பரப்ப ஊழியம் புரிந்தார். அதில் வரும் எளிய ஃபார்முலா ஒன்றுதான்.. அவர்கள் பொய்மையில் வலிமையடைந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களோ உண்மையினை காக்கவும் பரப்பவும் திராணியின்றி, சோம்பலால் சுயநலத்தால் அந்த பொய்மை பரவ துணை போகிறீர்கள்…

View More தொடரும் “தோமா வழி கிறித்தவம்” மோசடி, நடிகர் ராஜேஷ், உறக்கத்தில் இந்துக்கள்

அயோத்தி ஶ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு: சில எண்ணங்கள்

அயோத்தி ஸ்ரீராமஜன்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை வைபவம் நம் காலத்தில் நாம் கண்களால் காண நிகழ்ந்த ராம பட்டாபிஷேகம்… ராம் லாலா என்ற குழந்தை ராமர் வழிபாடு அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப் படவில்லை, அதற்கு குறைந்தபட்சம் 500 ஆண்டு பாரம்பரியம் உண்டு… தமிழ்நாட்டில் ராமாயணத்தை எரித்த இந்து விரோத அரசியல் கயவர் கூட்டத்தின் அதர்ம கொள்கைகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. இவை தான் தமிழ்நாட்டின் அவமானச் சின்னங்கள். இவற்றை சுயமரியாதையுள்ள தமிழ் இந்துக்கள் எப்போது அகற்றப் போகிறோம்?…

View More அயோத்தி ஶ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு: சில எண்ணங்கள்

ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை

பெண்விடுதலை என்பது ஈவெராவால் முன்னெடுக்கப்படவில்லை. அதை முன்னெடுத்தவர்கள் வேறு பலர்.. ஈவெரா கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய இடம் கீழ்வெண்மணி விஷயத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை. பொதுவாக அவரிடம் இருந்த சாதியம். ஈவெரா குறித்து எவ்வித மலினமும் ஆபாசமும் இல்லாமல் காத்திரமானதோர் விமர்சனத்தை முன்வைத்தவர் தேசிய சுகாதார தொழிலாளர் துறை தலைவராக இருக்கும் ம.வெங்கடேசன், இந்துத்துவ இயக்கத்திலிருந்து வந்தவர்..

View More ஈ.வே.ரா குறித்த விவாதங்கள் – யாருக்கும் வெட்கமில்லை

திருப்பரங்குன்றம்: ஜிஹாதி தாக்குதலும், ஆக்கிரமிப்பு சதிகளும்

திருப்பரங்குன்றம் மலையின் பெயரை சிக்கந்தர் பாஷா மலை என பெயர் மாற்றம் செய்து, 2025 பிப்ரவரி 18 அன்று முருகன் சந்நிதிக்கு மேல் ஆடு மாடு கோழியை வெட்டி விருந்து வைக்கிறோம், முடிஞ்சா தடுங்கடா சும்பைகளா என சவால் விட்டிருக்கின்றன இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள். இந்த ஜிஹாதிய கனவுகள், சிறுபான்மை அதிகார உறுதிப்படுத்தல் எனும் அரசியல் சதி, அதன் மூலம் இந்து இன ஒழிப்பு – இது ஒவ்வொரு கட்டமாக, படிப்படியாக எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு இது.

View More திருப்பரங்குன்றம்: ஜிஹாதி தாக்குதலும், ஆக்கிரமிப்பு சதிகளும்

இந்திய குற்றவியல் சட்டங்களில் மோதி அரசு கொண்டுவரும் மாபெரும் சீர்திருத்தங்கள்

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதே மூன்று புதிய சட்டங்களின் ஆன்மாவாக இருக்கும், அவற்றின் நோக்கம் தண்டிப்பது அல்ல, நீதி வழங்குவது.. இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் பரவலான மாற்றத்தைக் கொண்டுவரும் இந்தச் சட்டத்தின்படி அதிகபட்சமாக எந்த வழக்கிலும் 3 ஆண்டுகளுக்குள் எவரும் நீதியைப் பெற முடியும்… பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் காவல்துறை தங்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முடியாது… நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜீரோ எஃப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படும். வழக்கு குறிப்பேடு, குற்றப் பத்திரிகை முதல் தீர்ப்பு வரை முழு செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது…

View More இந்திய குற்றவியல் சட்டங்களில் மோதி அரசு கொண்டுவரும் மாபெரும் சீர்திருத்தங்கள்

தமிழில் சம்ஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள்: ஒரு பார்வை

சில சம்ஸ்க்ருதச் சொற்கள் தமிழில் வருகையில் வேறு பொருளில் கையாளப்படுகின்றன. “தனது” என்ற பொருள் கொண்ட “நிஜம்” என்ற சம்ஸ்கிருதச் சொல்லை “உண்மை” என்பதற்குத் தமிழன் கையாள்கிறானே, அவன் ஆன்மாவையே உண்மை என்று புரிந்துக்கொண்டவன் என்று தெரிகிறது.. அரசிகளுக்கும், இளவரசிகளுக்கும் பேடிகள் தோழிகளாய் இருந்ததால் “அலி ” (சம்ஸ்கிருதத்தில் தோழி) என்ற சொல்லாடல். அதீதக் காம விகாரத்தை வெறும் புரத்தோற்றமாகக் கருதியதால் “ஆபாஸம்” (தோற்றம்). தமிழகத்தின் வைதீகர்களுக்கிடையே சில பரிபாஷைகள் உள்ளன. “த்ராபை” என்றால் வீணானவன் என்று பொருள். இது வேதமந்திரத்திலிருந்து வருகிறது..

View More தமிழில் சம்ஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள்: ஒரு பார்வை