காஜியானாவர், ஜிஸியா வரி வசூல் முறைகளைக் கூறிவிட்டு அதற்கும் மேலாக, “வரி கொடுக்கும் காஃபிர் வாய் திறந்து எதுவும் சொன்னால், வரி வசூலிக்கும் அதிகாரி அவன் வாயிலே எச்சிலைத் துப்ப வேண்டும். இவ்வாறு செய்வதனால் அந்த காஃபிர் தான் எத்தனை கீழான அடிமை என்பது, இஸ்லாம் எத்தனை மேலான மார்க்கம் என்பதுவும், பொய்யான கடவுள்களை அவன் வணங்கும் கேவலமும் அவனுக்கு விளங்கும்” என சுல்தானுக்கு எடுத்துக் கொடுக்கிறார்… துன்புற்ற காஷ்மீரி பண்டிட்டுகள் அன்றைய சீக்கிய குருவான தேஜ்பகதூர் சிங்கிடம் தஞ்சமடைந்து, அவரின் உதவியை வேண்டி நின்றார்கள். குரு தேஜ்பகதூர் அவுரங்கசீப்பின் அரசவையை அடைந்து அவனிடம் எடுத்துரைக்கிறார். சினமடைந்த அவுரங்கசீப் தேஜ்பகதூரைச் சிறையிலைடைத்து, வாரக்கணக்கில் துன்புறுத்திப் பின்னர் அவரையும் இஸ்லாமியராக மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தான். இதனை ஏற்க மறுத்த குரு தேஜ்பகதூரும் அவரது இரண்டு சீடர்களும் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்….
View More வன்முறையே வரலாறாய்… – 4Category: பயங்கரவாதம்
வன்முறையே வரலாறாய்… – 3
1761ம் வருடம் அகமது ஷா அப்தாலி மூன்றாம் பானிபட்டுப் போரில் வெற்றி பெற்ற பிறகு உணவும், நீருமின்றித் தவித்த ஒரு பெருந்திரளான காஃபிர்களை (ஹிந்துக்கள்) நீண்ட தூரம் வரிசையில் நடத்திச் சென்றதாகவும், பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்கள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டு, அவர்களின் தலைகள் வாளால் துண்டிக்கப் பட்டதாகவும் இந்த நூல் சொல்கிறது. பின்னர் அங்கிருந்த பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாகக் கொண்டு செல்லப் பட்டனர்… அடிமைகளாகப் பிடிக்கப் பட்டவர்களின் குழந்தைகளும், அந்தப் புரத்திற்குப் பிடித்துச் செல்லப் பட்ட ஹிந்துப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளும் முஸ்லிம்களாக வளர்க்கப் பட்டார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம்களின் தொகை இந்தியாவில் பல்கிப் பெருகியது… ” ஒவ்வொரு புதுவருடம் துவங்குகையில், ஒவ்வொரு கிறிஸ்தவ ஆணும் ஒரு தினார் ஜிஸியா வரியைக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும். அந்த வரியைச் செலுத்தாதவரை நீங்கள் நகரத்தை விட்டுச் செல்ல உங்களுக்கு அனுமதியில்லை”…
View More வன்முறையே வரலாறாய்… – 3பாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.
சென்ற திங்கள் கிழமை 11ம் தேதி செய்தி தாள்களில் தலைப்பு செய்தி பாட்னா…
View More பாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21
முந்தைய பகுதிகள் : தொடர்ச்சி… சென்ற கட்டுரையில் பங்களா தேஷ்…
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்
பிகார் மாநிலம், பாட்னாவில், அக். 27-இல் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஹூங்காரப்…
View More மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்
எல்லாவிதமான தடுப்பு முயற்சிகளும் வேலை செய்யாத கடைசி நிலையில் மோடியின் பிருமாண்டமான கூட்டத்தை நிறுத்தும் கடைசி முயற்சியாக இஸ்லாமிய பயங்கரவாதத்தின் துணையை நாடியிருக்கிறார் நிதிஷ். பீஹார் மாநில போலீஸ் இப்படி அலட்சியமாக இருந்திருக்க நியாயமில்லை. எந்தவிதமான குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அளிக்க பிடிவாதமாக மறுக்கச் சொல்லி உத்தரவு இருந்திருக்கிறது….. அன்று மோதியும் பிற பா ஜ க தலைவர்கள் அவர்களுக்கு மேலாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் காட்டிய பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்தின் மீதும் அதன் மக்களின் மனப்பக்குவம் மீதும் மாபெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டன… மக்கள் எந்தவிதமான வன்முறையும் கலவரமும் இல்லாமல் அமைதியாக எவருக்கும் இடையூறு விளைவிக்காமல் பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என்று அக்கறையுடன் அவர் அன்று விடுத்த கோரிக்கை இந்தியாவுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்துள்ள ஒரு கொடை அவர் என்பது உறுதியானது. அவரையும் இந்தியா தவற விடுமானால் அதற்கு மன்னிப்பே இல்லாமல் போய் விடும். ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னும் வாராது போல வந்த மாமணியைத் தோற்பதற்கு இந்தியாவுக்கு நேரமும் வளமும் கிடையாது…
View More பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!
இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளின் கொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய மூன்று…
View More பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!இந்திய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் – 01
இந்தியன் முஜாஹிதீன் சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா ஷகீல்…
View More இந்திய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் – 01முஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்
கலவரத்திற்கு ஆன விதை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல , முஸ்லீம்கள் 39%க்கும் மேல் வாழும் முஸாபர் நகர் மாவட்டத்தில் பல முக்கியமான பகுதிகளில் இஸ்லாமிய அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும், சட்ட மன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வாக்கு வங்கி அரசியலை கொண்டு தங்கள் பயங்கரவாத எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு நகரின் பகுதிகளில் இஸ்லாமிய ஆக்ரமிப்பை துவங்குகிறார்கள்… காஸியாபாத்தில் இந்து தலித் இளம் பெண் ஒருவர் 6 இஸ்லாமியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்பகுதிகளில் இஸ்லாமிய வெறியர்கள் தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வு செயல்களை செய்கிறார்கள். ஜீன் மாதத்தில் 15 வயது பச்சிளம் பெண்ணை கடத்தி சென்று சில நாட்கள் பிணையக்கைதியாகவும் வைத்து கொண்டு கற்பழிக்கிறார்கள் கயவர்கள் சீராஜ்தீனும் அவன் கூட்டாளிகளும். தன் உடன் பிறந்த தங்கையின் உடல் உறுப்புகளை சீண்டிய ஷானவாஸை அறைந்து விடுகிறார் சச்சின். அங்கிருந்து ஓடிப்போன ஷானவாஸ் தன் நண்பர்களை அழைத்து கொண்டு வருகிறார். 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் இணைந்து சச்சினையும், கெளரவையும் முதலில் அடித்து நொறுக்குகிறார்கள். பின்னர் கறி வெட்டும் அரிவாளை கொண்டு இருவரையும் கண்டந்துண்டமாக வெட்டி வீசி எறிகிறார்கள். ஜாட்களின் பஞ்சாயத்தினர் ஷானவாஸை விசாரணைக்கு அழைக்க, வந்தவர்களை இஸ்லாமியர்கள் ஈவிரக்கம் இன்றி அடித்து கொன்ற காட்சிகளை , அவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட உயிர் பிச்சை கேட்ட காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வைத்து கொண்டு அதை பார்த்து ரசித்ததாகவும் சொல்லப்படுகிறது… முல்லா முலாயமின் மகன் அகிலேஷ் குல்லாயோடு வந்து இஸ்லாமியர்களை யார் தாக்கினாலும் சுட்டு தள்ளுங்கள் என்று உத்தரவிடுகிறார். மேலும் சில கூட்டு வன்புணர்வுக்கும், கொலைகளுக்கும் பதில் நடவடிக்கை யாரும் எடுக்க கூடாது என்று கோருகிறார்… இதை காஷ்மீர் மாடல் பிரிவினை என்கிறார்கள். இந்தியாவின் 300 நகரங்களில் மிக அபாயகரமாக வெடிக்க காத்திருக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை வெடிகுண்டு பற்றிய விழிப்புணர்வு நம்மில் யாருக்குமே இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு தமிழகத்தின் வ.களத்தூர், முத்துப்பேட்டை, கோவை, மேலப்பாளையம், காயல் பட்டிணம், இந்திய அளவில் ஹைதராபாத், மீரட், உள்ளிட்ட இடங்களில் நடக்கும் வன்முறைகளை பாருங்கள்…
View More முஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்ரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்
சேலம் மாநகர் மக்கள் அனைவரும் கலங்கி நின்ற தினம் ஜூலை 20-ஆம் தேதி. அன்று தான் மிக நல்ல மனிதன் என்று ஒட்டுமொத்த சேலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் பூதஉடல் மயானத்தில் தீ மூட்டப்பட்டது… உடல் பெறப்பட்டதும் சிறு சலசலப்பு – அதுவும் காவல்துறை மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டதால் – முடிந்து உடல் நகர வீதிகள் வழியாக எடுத்துவரப் படுகிறது. மக்களின் கண்களில் தன்னிச்சையாக வழியும் கண்ணீர் அஞ்சலி. கடையடைப்புக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. சொல்லாமல் சேலம் நகரெங்கும் கடைகள் அடைக்கப் படுகின்றன. கைகள் தொழுகின்றன. கால்கள் தொய்ந்து பின் செல்கின்றன… “ஸ்ரீ ராமனுக்கு பூர்வபாஷி என்ற பெயர் உண்டு. எவரிடமும் முதலில் தான் முன் சென்று அறிமுகப்படுத்திப் பேசும் நல்ல குணத்தினால், அவருக்கு அப்படி ஒரு பெயர். அதேபோல எந்த அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் பார்க்கும் பொழுது முதலில் தானாக முன்வந்து பேசும் குணம் உடையவர் ரமேஷ்ஜி.” என்கிறார் ஒரு தொண்டர்..
View More ரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்