ஒரு முஸ்லிம் அவனால் கைப்பற்றப்பட்ட எந்தவொரு காஃபிர் அடிமைப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளலாம். அவள் திருமணமானவளாக இருந்தாலும் கூட.. நம்பிக்கையாளன் அடிமைகளைப் பிடிக்கவும், அவர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ளவும் அல்லா அவனுக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்குகிறான்… 1070-ஆம் வருடம் பஞ்சாபின் மீது படையெடுத்த இன்னொரு கஜ்னாவி சுல்தானான இப்ராஹிம் ஏராளமான செல்வங்களைக் கொள்ளையிட்டதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளைப் பிடித்து அவர்களை கஜினிக்குக் கொண்டு சென்றான் என தாரிக்-இ-அல்ஃபி மற்றும் தபாகத்-இ-அக்பாரி புகழ்ந்துரைக்கிறது… 1398ம் வருடத்திய தில்லிப் படையெடுப்பைத் தொடர்ந்து தைமூரின் படைகள் வட இந்தியா முழுவதும் கொலை வெறியாட்டமிட்டன.. தைமூர் ஏறக்குறைய 25 இலட்சம் வரையிலான இந்து அடிமைப் பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து மத்திய ஆசியாவிற்குக் கொண்டு சென்றான் என்று வரலாற்று ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள்..
View More வன்முறையே வரலாறாய்…- 33Category: பயங்கரவாதம்
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் தென்னகமும்
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, ஜாகீர் உசைன், அருண் செல்வராஜ் ஆகிய மூவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலால் பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு பார்த்த்தாக தெரிவித்தார்கள். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமே இயங்கி வந்த ஐ.எஸ்.ஐ., இலங்கையில் தனது அலுவலகத்தை துவக்கி, இலங்கை வி.ஐ.பிகள் இருவர் மூலமாக கள்ள நோட்டு, ஆயுதக் கடத்தல், ஸ்லீப்பர் செல்லுக்கான ஆட்களை பிடிப்பது போன்ற நாசகர வேலைகளை செய்ய துவங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா குறிப்பாக தென்னக பகுதிகள். உளவு பார்த்தது மட்டுமில்லாமல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதற்கும் வந்ததாகவும் தெரிவித்தார்கள்… தமிழகத்தில் குறிப்பாக குமரி மற்றும் ராமநாதபுரத்தில் கள்ள நோட்டு மாற்றியதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிட தக்கது…
View More பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் தென்னகமும்வன்முறையே வரலாறாய்…- 32
இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் எவரும், எந்தவொரு சூழ்நிலையிலும் மொத்த இந்தியாவையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை. இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இந்திய இந்துக்களை மதமாற்றத்திலிருந்து தப்ப வைக்க இயலவில்லை. அதற்கும் மேலாக தங்களில் கலாச்சாரத்திலும், மதத்திலும் கொண்ட பிடிப்பே இந்திய, இந்து சமூகம் ஒரு முழு முஸ்லிம் கூட்டமாக மாறுவதனை வெற்றிகரமாக எதிர்த்து வென்றது… 1947 பிரிவினைக்குப் பிறகு கிழக்குப் பாகிஸ்தானில் ஏறக்குறைய 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை இருந்த இந்துக்கள் இன்று வெறும் பத்து சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். அதுபோலவே மேற்கு பாகிஸ்தானில், பிரிவினைக்குப் பிறகு பத்து சதவீதமாக இருந்த இந்துக்கள் இன்றைக்கு (1998 கணக்கு) வெறும் 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். இன்றைய பாகிஸ்தானில் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டு, முஸ்லிம்களுக்கு மணம் செய்விக்கப்பட்டுப் பின் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்…
View More வன்முறையே வரலாறாய்…- 32தலைதூக்கும் அல்-காய்தா பயங்கரவாதம்
இந்தியாவில் அல்-காயிதாவின் அமைப்பு துவங்கப் படவில்லை என்பது உண்மையாகும். ஆனால், அல்-காயிதாவினால் பயிற்சி பெற்றவர்கள் ஏற்கனவே அதிக அளவில் உள்ளார்கள். இந்தியாவில் உள்ள ஜிகாதி அமைப்பான, லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன், சிமி, ஜெய்-இ-முகமது போன்ற அமைப்புகளும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்குகின்ற பிரிவினைவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது…. இந்தியன் முஜாஹிதீன் மீது தேசிய புலனாய்வு பிரிவினர் தாக்கல் செய்த 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையில், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், மகாராஷ்டரா மற்றும் கோவாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயனிகளை தாக்கும் நோக்கத்தில், ராஜஸ்தானில் புதிதாக இஸ்லாமியர்களை சேர்க்கும் பொறுப்பை அல்-காயிதாவினர் யாசின் பட்கலுக்கு உத்திரவிட்டதாக தெரிவித்தார்கள். இந்த தகவல்கள் 2500 இன்டர்நெட் செய்தி பரிமாற்றங்களை ஆய்வு செய்த்ததில் கிடைத்தாக குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்….
View More தலைதூக்கும் அல்-காய்தா பயங்கரவாதம்வன்முறையே வரலாறாய்…- 31
“இஸ்லாமின் வருகை இந்தியப் பெண்களின் சுதந்திரத்தை மிகவும் பாதித்தது” எனக்கூறும் ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் பெண்களைப் போலவே இந்துப் பெண்களும் முகத்தை மூடும் பர்தா அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்கிறார்… பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட சுதந்திரமும், மதச் சார்பற்ற கல்வியும், பொது சட்ட நடைமுறைகளும், ஜனநாயகமும், தனி மனித சுதந்திரமும் இந்திய முஸ்லிம்கள் அல்லாதோரால் முழு ஏற்புடன் வரவேற்கப்பட்டன. குறிப்பாக வங்காள இந்துக்கள் பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய மேற்கத்திய கல்விமுறைய திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு பயில முயன்றார்கள். அதே நேரம் முஸ்லிம்கள் அது போன்ற கல்விமுறையை ஏற்காமல் விலகி நின்றார்கள். இந்திய முஸ்லிம்கள் மதச் சார்பற்ற கல்விமுறையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர்களில்லை என்பதுவே வரலாறு… முஸ்லிம்கள் மாறி வரும் உலகின் முன்னேற்றங்களிலிருந்து விலகி நிற்க, இந்துக்கள் தங்களுக்கு இத்தனை காலம் மறுக்கப்பட்ட கல்வியையும், அதனால் உண்டாகிய முன்னேற்றத்தையும் முழு அளவில் ஏற்றுக் கொண்டு முன்னேறினார்கள்.
View More வன்முறையே வரலாறாய்…- 31வன்முறையே வரலாறாய்…- 30
முகமது பின் காசிம் தொடங்கி அனைத்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் கடைப் பிடித்த இந்த குரூர நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்… உடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை. எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்….
View More வன்முறையே வரலாறாய்…- 30இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்
ஹாமஸ் துவங்கப்பட்ட போது, அதன் நோக்கம் தெளிவாக சொல்லப்பட்டது – முதலாவதாக, மேற்குக் கரை, காஸா உட்பட இஸ்ரேலின் வசம் இருக்கும் பாலஸ்தீனிய நிலப்பரப்பு முழுவதையும் வென்றெடுப்பது, இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிப்பது. இரண்டாவதாக, தப்பித்தவறி பாலஸ்தீன் என்றாவது ஒரு நாள் மதச்சார்பற்ற தனியொரு தேசமாக அறியப்பட வேண்டி வருமானால், அதை எதிர்த்தும் போராடுவது, பாலஸ்தீனை ஒரு முழுமையான இஸ்லாமிய தேசமாக மாற்றுவது… துப்பாக்கி தூக்குவதற்கும், கார் வெடி குண்டுகள், சொந்த ராக்கெட் என அதிநவீனத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. பதினொரு வழிகளில் ஹமாஸூக்கு தேவையான நிதி ஆதராங்கள் கிடைத்துக் கொண்டிருப்பதாக பல்வேறு நாடுகளில் உள்ள உளவுத் துறையினர் தெரிவிக்கிறார்கள்….இவ்வாறு கூச்சல் போடும் இஸ்லாமியர்கள், முஸ்லீம்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் இதுவரை, சிரியாவில் 1,50,000 சன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டது இவர்கள் கண்களில் படவில்லை….
View More இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்வன்முறையே வரலாறாய்…- 29
“பொதுவில் இந்திய சாதிய அமைப்பு மிகவும் இளகும் தன்மையுடைய ஒன்றாகவே இருந்துவந்தது.. இந்தியாவிற்குள் நுழைந்த இஸ்லாம் இந்த இளகும் தன்மையை நீக்கி, சாதிய அமைப்பை இறுக்கியதுடன் அதனை நிரந்தரமாக்கவும் செய்தது” என்கிறார் ஜவகர்லால் நேரு… டெல்லிக்கருகில் இருக்கும் டோவாப் பகுதி கடுமையான வரி விதிப்பு காரணமாகவும், இஸ்லாமியப்படைகள் நடத்திய வெறியாட்டங்கள் காரணமாகவும் முற்றிலும் அழிந்தது. அங்கிருந்து தப்ப முடிந்த இந்துக்கள் காடுகளுக்கு ஓடித் தப்பினார்கள். அங்கும் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கோபமடைந்த சுல்தான் ஒரு பெரும் படையணியை அனுப்பி அங்கிருந்த இந்துக்களைப் பிடித்துவர உத்தரவிடுகிறான்…. பல இலட்சக்கணக்கான, இந்துக்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கொடுமைகளுக்கு அஞ்சிக் காடுகளில் ஒளிந்து வாழ்ந்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளான. அவ்வாறு காடுகளிள் வாழ்ந்தவர்களில் எல்லா சாதியைச் சார்ந்தவர்களும் கலந்து வாழ்ந்ததுடன், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கலகங்களிலும் பங்கெடுத்திருக்கிறார்கள்….
View More வன்முறையே வரலாறாய்…- 29வன்முறையே வரலாறாய்…- 28
அதனையும் விட இந்திய அரசியல்வாதிகள் இத்தகைய கொடூரங்களை இந்தியர்களிடமிருந்து மறைத்ததுடன், ஜவஹர்லால் சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.
View More வன்முறையே வரலாறாய்…- 28வன்முறையே வரலாறாய்…- 27
இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏறக்குறைய ஆறு லட்சத்திலிருந்து இருபது லட்சம் பேர் வரை மரணமடைந்திருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு லட்சம் இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் மேலான இந்து, சீக்கியப் பெண்கள் முஸ்லிம்களினால் கடத்திச் செல்லப்பட்டார்கள்…. சுருக்கமாகச் சொல்வதென்றால், பஞ்சாப் பகுதியில் கலவரங்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும் கட்டவிழ்த்துவிட்டு இந்து, சீக்கியர்களை விரட்டியடித்து அவர்களின் வீடுகளையும், உடைமைகளையும் கைப்பற்றிய ஒவ்வொரு முஸ்லிமும் ‘தான் பஞ்சாபின் நவாபாக மாறியதாக’ சந்தோஷம் கொண்டான்.
View More வன்முறையே வரலாறாய்…- 27