மனதுக்குப் பிடித்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள தனி நபராக ஒருவருக்கு உரிமை இருப்பதுபோலவே அவர் சார்ந்த சமூகத்துக்கு விசுவாசமானவராக இருக்கவேண்டிய பொறுப்பும் இருக்கிறது. மனிதர் முழுக்கவும் தனி நபர் அல்ல. முழுக்கவும் சமூகக் குழுவைச் சார்ந்துஇருக்கவேண்டியவரும் அல்ல. இரண்டுக்கும் இடையில் சம நிலை இருக்கவேண்டும்… தம்மைவிட உயர்ந்த ஜாதியாகக் கருதுபவர்களின் பெண்ணைத் திருமணம் செய்வது ஜாதியை ஒழிக்கும் வழி என்று சொல்பவர்கள் அனைவருமே, தம்மைவிடத் தாழ்வாகக் கருதும் ஜாதியைச்சேர்ந்த பையனுக்கு தன் ஜாதியில் இருந்து பெண்களைத் திருமணம் செய்துவைத்துக் காட்டவேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்கும்வரை நாடகக் காதல் என்ற விமர்சனம் இருந்துகொண்டே இருக்கும்….
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 19புதிய பொற்காலத்தை நோக்கி – 18
பிரிட்டிஷாருக்கும் கிறிஸ்தவத்துக்குமான பிணைப்பு இதுவென்றால், இந்தியாவில் இருந்தவர்கள் ஒரு மண்வெட்டி செய்வதாக இருந்தாலும் வயலில் நாற்று நடுவதாக இருந்தாலும் வான் ஆராய்ச்சி செய்வதாக இருந்தாலும் அம்மை நோய்க்கு மருந்து தயாரிப்பதாக இருந்தாலும் அனைத்தையும் தெய்வ நம்பிக்கையோடு பக்தியோடு இறைவனைக் கும்பிட்டுவிட்டே செய்திருக்கிறார்கள். பிரிட்டிஷாரின் அராஜகத்தை கிறிஸ்தவத்தோடு இணைத்துப் பேசாமல் இருந்ததில் என்ன அரசியல் இருந்ததோ அதுவே இந்துஸ்தானத்தில் இருந்தவர்களின் மேன்மையை இந்து மதத்தோடு இணைத்துச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். இந்தியாவில் அனைத்து ஜாதியினருக்கும் தரப்பட்ட கல்வி பற்றிய ஆவணத்தில் அந்தப் பள்ளிகள் சரஸ்வதி வணக்கத்துடன் தான் ஆரம்பித்தது என்ற குறிப்பு எங்குமே இல்லை…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 18ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்
ஐந்து மாநிலங்களிலும் ஐந்து விதமான தீர்ப்புகள். இந்தத் தேர்தல் முடிவுகளில் ஒவ்வொரு கட்சியும் மகிழ்ச்சி அடையவும் வருத்தம் கொள்ளவும் பல முடிவுகளை அளித்திருக்கிறது எனில் மிகையில்லை.. பல தசாப்தங்களாக இக்கட்சிகளின் பிடியில் இருந்த மேற்கு வங்கத்தில் பாஜக இப்போது இரண்டாவது பிரதானக் கட்சியாகி இருக்கிறது. அந்த வகையில் பாஜகவுக்கு சோகத்திலும் ஆறுதல்… தமிழகத்தில் கருணாநிதியின் நேரடி வாரிசான ஸ்டாலின் தனது அரசியல் தலைமையை நிரூபிக்கும் கட்டாயமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் அடுத்த தலைமை தானே என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தன. இந்தச் சோதனையில் இருவருமே வென்றுள்ளனர்…
View More ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்புதிய பொற்காலத்தை நோக்கி – 17
சாக்கடைகளை சுத்தம் செய்தல், வீட்டுக் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் இவற்றைக் கையாளவும் பல நவீன எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இவற்றை நம் நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் போதிய கவனமும் வேகமும் காட்டப்படவே இல்லை… என் தேசத்தில் கையால் கழிவுகளைக் கையாளும் என் சகோதரர் ஒருவர் கூட இருக்கமாட்டார். என் தேசத்தில் எந்த மழைக்கும் இனி சாலைகளில் நீர் தேங்காது. என் தேசத்தின் ஆறுகளில் நன்னீர் மட்டுமே ஓடும். என் தேசத்தின் ஆறுகளில் நன்னீர் மட்டுமே ஓடும்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 17புதிய பொற்காலத்தை நோக்கி – 16
உலக நாடுகள் தாம் தயாரிக்கும் மருந்துகளுக்கு கொள்ளை விலை வைக்கிறார்கள். ஜன் ஆயுஷில் அதே மருந்தை நாலில் ஒரு பங்குக்கும் குறைவான விலையில் தயாரித்து வழங்குகிறார்கள். இது அற்புதமான இந்திய அணுகுமுறை… இந்த நடமாடும் இருதய பரிசோதனைக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதனால்தான் இந்த சிகிச்சை சாத்தியமானது. இந்தக் கருவியின் விலையானது பெரு நகர மருத்துவமனையில் இருக்கும் பரிசோதனைக் கருவியின் விலையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை… பாரதம் இதை தனது ஆன்மிகக் கடமையாக முன்னெடுத்துச் செய்யவேண்டும். மிகக் குறைந்த விலைக்கு நாகரிக மாமிசத்தை உற்பத்தி செய்து உயிர்களையெல்லாம் கொடூரத்தில் இருந்து காப்பாற்றவேண்டும்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 16புதிய பொற்காலத்தை நோக்கி – 15
மேற்கத்திய உலகம் தயாரித்த ஏ.ஸி. 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிறதென்றால் இந்த இந்திய ஏஸி பத்தாயிரம் ரூபாய்க்குள் முடிந்துவிடுகிறது. ஒரு கிராமத்து நபர் கண்டுபிடித்த கருவி இது. எந்த பல்கலைக்கழக பேராசிரியரும் விஞ்ஞானியும் இதைச் செய்யவில்லை… சைக்கிள்களின் பயன்பாடு அதிகரித்தாகவேண்டியது காலத்தின் கட்டாயம். எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சுற்ற்ச் சூழல் மாசை அது கணிசமாகக் குறைக்கவும் செய்யும். இந்த எண்ணம் நமக்கு இதுவரை இருந்திருக்கவில்லை. இதனால் நமது சாலைகளில் சைக்கிள்களுக்கென்று தனி லேன் அமைக்க வழியில்லை…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 15புதிய பொற்காலத்தை நோக்கி – 14
சொந்த கலாசாரம், தேச பக்தி, உயர் மதிப்பீடுகள் போன்றவை கல்வியின் அடிப்படையாக இருக்கவேண்டும். பொருளாதார, சர்வதேச அம்சங்கள் இரண்டாம்பட்சமானதாக இருக்கவேண்டும்.. இணையம் என்பது அனைவரையும் அருகே கொண்டுவந்து விட்டிருக்கிறது. இணைய வழி வகுப்புகள், கருத்தரங்குகள், சந்திப்புகள் போல் இணைய வழி குடும்ப நிகழ்ச்சிகள் மாதம்தோறும் நடத்தப்படலாம்…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 14கோவிட்: தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும்
மருத்துவமனைகளின் ஆக்ஸிஜன் வினியோகக் குளறுபடியை அரசின் மீது சுமத்துகையில் ஒரு முக்கிய உண்மையையும் மறைக்கப் படிகிறது… மத்திய அரசு ஆக்ஸிஜன் வழங்குவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டும், பல அரசு மருத்துவமனைகள் கூட அவர்கள் இடத்திலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி வசதிகளுக்கான அரசின் திட்டத்தை முறியடித்தன… தற்போதைய கோவிட் சுனாமி பழையது அல்ல, மாறாக முற்றிலும் எதிர்பாராத வேகத்தில் தாக்குகிறது. வரலாறு காணாத இந்த சுனாமியை எதிர்கொள்ள எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. உண்மைகளை மறைக்காமல், விவாதங்களை திசை திருப்பாமல், பிற மீது பழி போடாமல், ஒட்டு மொத்தமாக எல்லோரும் உறுதியுடன் செயல்பட வேண்டிய தருணம் இது…
View More கோவிட்: தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும்அஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணி
வெ.சாமிநாத சர்மா அவர்கள் மணி அய்யாவிடம் தனது வாழ்நாளில் பேர் சொல்லும்படி 100 புத்தகங்களாவது எழுதி விடு என்றாராம். அதனை தாரக மந்திரமாக கொண்டு தரமான ஆய்வு புத்தகங்களை மட்டும் எழுதி வருபவர். சுமார் 80 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். பெ.சு.மணி ஐயா பல்கலை கழக வளாகங்களில் பேராசிரியராக பணிபுரிந்து கை நிறைய சம்பளம் வாங்கி வேலை செய்பவருமல்ல. அஞ்சல் துறையில் இரவு முழுவதும் கடிதங்கள் பிரிக்கும் வேலையை செய்து கொண்டு பகல் முழுவதும் சைக்கிள் மிதித்து நூலகம் தோறும் சென்று தேனீ போன்று உழைத்து கொண்டு வந்த புத்தகங்கள் பல கல்லூரி பேராசிரியர்களுக்கு முன்னேறுவதற்கு இவரது புத்தகங்கள் படிக்கல்லாய் திகழ்ந்தது…
View More அஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணிபுதிய பொற்காலத்தை நோக்கி – 13
கிறிஸ்தவ மதம் உலக மக்கள் அனைவரையும் கிறிஸ்தவராக மாற்றத் துடிப்பதுபோல் கிறிஸ்தவ தேசப் பொருளாதார சக்திகள் தமது கார்ப்பரேட் பொருளாதார வடிவத்தையே உலகம் முழுவதிலும் திணிக்கத் துடிக்கின்றன. கிறிஸ்தவ தேச குளிர்பான நிறுவனங்கள் உலகம் முழுவதும் தாகத்துக்கு தனது பானத்தை மட்டுமே அருந்தவேண்டும் என்று நினைக்கின்றன. கிறிஸ்தவ தேசக் கல்வி அமைப்புகள் உலகம் முழுவதும் தனது கலாசாரம், வரலாறு, விஞ்ஞானம் இவை மட்டுமே இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறது. கிறிஸ்தவ தேச அரசியல் சக்திகள் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை மலரச் செய்யும் பெரும் சிலுவையைக் கஷ்டப்பட்டுத் தானே தோளில் சுமந்துகொண்டு தமது கைப்பாவைகளையே உலகம் முழுவதிலும் நியமித்துவருகின்றன…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 13