கம்பராமாயணம் – 8 (Kamba Ramayana – 8)
கம்ப ராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம் பாடல்கள் (21-25), கோசல நாட்டு வர்ணனை.
இளம்பெண்களின் ஒளிபொருந்திய முகத்தில் அமைந்துள்ள வடிவான, மையிட்ட கண்ணை நோக்கி, ‘இது ஒளிமிக்க பெண்வண்டு’ என்று நினைத்த வண்டுகள், அதன்மீது மையலும் அன்பும் கொண்டு, மருதநிலப் பகுதியிலேயே தங்கிவிட்டன…
கம்பராமாயணம் – 7 (Kamba Ramayanam – 7)
கோபம் கொண்ட இடிகளே இந்த உருவத்தில் வந்திருக்கின்றன‘ என்று நினைக்கும்படியாகவும்; விரிந்து திரண்டிருக்கும் இருட்டு, இரண்டாகப் பிரிந்து, இரண்டு கூறுகளாக மாறி ஒன்றை ஒன்று முறைமுறையாக (மாறிமாறி) நெருக்கி முட்டித் தள்ளி எருமைக் கடாக்கள் பொருதுநிற்க,(கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம் பாடல்கள் 16-20. கோசல நாட்டு வர்ணனை)
View More கம்பராமாயணம் – 7 (Kamba Ramayanam – 7)வேதங்களே இந்துக்களின் பிரமாண நூல்கள் – மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி
ஒரு கொலை நடந்தால் அதைக் கண்ட ஒரு சாட்சி இருந்தால் அந்த சாட்சியின் வார்த்தையையே நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அவ்வாறின்றி, ஆயிரம் பேர் அதைக் காணவில்லை என்று சொல்வதை ஒரு நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில்லை. வேதம் என்பது ஒரு ரிஷியின் அனுபவம் மட்டுமல்ல. மெய்ப்பொருளை அறிந்த பல ரிஷிகளின் அனுபவமாகும்…
கம்பராமாயணம் – 6 (Kamba Ramayanam – 6)
கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம் பாடல்கள் 11-15. கோசல நாட்டு வர்ணனை.
கரிய நிறத்ததான கடல் அலைகளில் (கூட) சரயு நதியில் பெருகிவரும் புதிய நீரில் முங்கிக் குளிக்கும் பெண்கள் சூடியிருக்கும் பூவும், பூசியிருக்கும் கஸ்தூரியும் கலந்து அந்த மணமே வீசுகிறது என்றால், தேன்போன்ற இனிமையான மழலைச் சொல் பேசுவதும் (கொஞ்சிப் பேசுவதும்); கூர்மை மிகுந்த கடைக்கண் பார்வையை வீசுவதுமாக, அங்கே (கரைகளில்) நிற்கும் இளைஞர்கள் விருப்பத்துடன் (மனமார்ந்த காதலுடன்) பார்த்தபடி நிற்கும் (நீராடும்) பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா?
யானை இறைத்த சோறு!
“நானும் என் மனைவியும் சேர்ந்து மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறோம். அதை அனுபவிப்பதில் தவறென்ன?” நியாயமான கேள்விதான். நீங்கள் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் ஒவ்வொரு பொருளும், அது தேவையான மற்றொருவருக்கு விலையை ஏற்றிவிடுகிறது. உதாரணமாக, யாருக்காவது வேண்டுமோ இல்லையோ சில வீடுகளில் டி.வி, மின்விசிறி இவை ஓடியவண்ணம் இருக்கும்…
View More யானை இறைத்த சோறு!நல்வாழ்வு வேண்டுவோம்!
தேவர்களே!
காதுகளால் நாங்கள் நல்லனவற்றைக் கேட்க வேண்டும்.
பூஜைக்குரியவர்களே!
கண்களால் நாங்கள் நல்லனவற்றைக் காணவேண்டும்.
உறுதியான அங்கங்களுடன் கூடிய நல் உடலுடன்
ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்கவேண்டும்.
உலகிற்கு நன்மை செய்தவண்ணம் வாழவேண்டும்.
கம்பராமாயணம் – 5 (Kamba Ramayanam – 5)
கம்பராமாயணம், பால காண்டம், நாட்டுப் படலம், பாடல்கள் 6 – 10. இதில் கோசல நாட்டின் வளம் பேசப்படுகிறது.
ஆலைகளில் பிழியப்படும் கருப்பஞ் சாறும், தென்னை முதலிய மரங்களில் பாளையை அரிந்து வடிக்கப்படும் சாறும், சோலைகளில் கனிந்து உதிரும் பழங்களின் சாறும், தேன்கூட்டிலிருந்து தொடர்ந்து ஒழுகிக்கொண்டிருக்கும் தேனும், மாலைகளில் இருந்து விழும் தேனும் ஒன்றாகி…
கம்பராமாயணம் – 4
கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படலம், பாடல்கள் 1-5.
வயல் வரப்புகளில் எல்லாம் முத்துக்கள் மண்டியிருக்கும். நீர் ஓடும் மடைகளில் எல்லாம் சங்குகள். நிரம்பிய வெள்ளம் ஓடும் கால்வாய்களின் கரையெல்லாம் செம்பொன்னால் ஆனவை; எருமைகள் படுத்ததனால் ஏற்பட்ட குழிகளில் தேங்கிய நீரில் செங்கழுநீர் மலர்கள் பெருங்கூட்டமாகப் பூத்துள்ளன; சமப்படுத்திய வயல்களிலோ பவளமணிகள் பரவியுள்ளன. சாலி என்னும் உயர்வகை நெல் நிரம்பிய வயல்களில் அன்னப் பறவைகள் உலவுகின்றன; அருகிலுள்ள கரும்பு வயல்களில் கருப்பங்கழிகளுக்கு இடையிலிருக்கும் கூடுகளிலிருந்து செந்தேன் பொழிகின்றது…
கம்பராமாயணம் – 3
கம்பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலத்தின் 3 ஆம் மற்றும் இறுதிப் பகுதி.
இந்தப் பாடலில் நதி, யானையாகச் சித்திரிக்கப்படுகிறது.
மதகின் கதவுகளை நதி முட்டுகிறது; யானையோ கோட்டைகளின் கதவுகளை முட்டிப் பெயர்க்கக் கூடியது. நதி ஓடிவரும் வேகத்தைக் கண்டு உழவர்கள் கைகளை உயரத் தூக்கியபடி கதறுகிறார்கள்; யானை ஓடிவரும்போதும் அப்படித்தான் மக்கள் கதறுவார்கள். நீர்த்தேக்கங்களின் முன்புறம் உள்ள ஓடைகள் நிரம்பிப் பொங்கி வழியுமாறு ஆற்றின் வெள்ளம் பெருகுகிறது; யானைக்கோ மத்தகத்தின் மீது அணிவிக்கப்பட்ட அணிகலனின் ஒளி வெள்ளம் பொங்கிக் கொண்டு இருக்கும். நதியிலும் வண்டுகள் மொய்க்கின்றன; யானையின் மதநீரின் மேலும் வண்டுகள் மொய்க்கும். நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ள மணிகள் அறுந்து போகுமாறு நதி ஓடுகிறது; யானையும் ஓடும்போது அதனை அலங்கரிக்கக் கட்டியுள்ள மணிகள் அறுந்துபோகுமாறு ஓடக்கூடியது. நதியின் கரையெங்கிலும் அதன் வெள்ளம் பெருகி…
View More கம்பராமாயணம் – 3