டாக்டர் ரங்கன்ஜி ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்ற சிறப்பான குறுஞ்சொற்பொழிவுத் தொடரைக் கடந்த சில மாதங்களாக நிகழ்த்தி வருகிறார். சங்க இலக்கியங்களில் வேதம், வேதியர், வேத தெய்வங்கள், வேத வேள்விகள், வேதாந்த தத்துவம், ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், முருகன், சிவபெருமான், திருமால், சக்தி எனப் பலவற்றையும் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களையெல்லாம் எளிமையாக, அழகாக, ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கிறார்…
View More வேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜிசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5
சூனியமே அதாவது ஒன்றுமிலாத பாழே இறுதி உண்மை என்பது இவர்கள் கொள்கை. இவர்கள் கோட்பாட்டின்படி, ஆன்மாவாகிய ‘நான் யார்” என்றால் ‘நீ ‘ என ஒரு பொருள் இல்லை; ஆன்மா என்பது சூனியமே. நீயும் இல்லை நானும் இல்லை கேட்பவன் என எவரும் இல்லை என்பது இவன் கொள்கை. இக்கொள்கையினை இவன் மெய்ப்பிக்க மேற்கொள்ளும் வாதமும் அவ்வாதத் தினையே மேற்கொண்டு அவனை வெல்லும் பகவத் பாதரின் வாதத் திறமையும் அருமையானவயாகும். இருவருமே தம்கொள்கையை நிறுவ ஆழ்ந்த நித்திரை எனும் சுழுத்தி அவத்தையை அடிப்படையாகக் கொள்கின்றனர்…
View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 4
ஒரு குடம். அதில் ஐந்து தொளைகள் (ஓட்டை) உள்ளன. குடத்தின் நடுவில் ஒரு தீபம் உள்ளது. நள்ளிரவில் தீபத்தினொளி ஐந்து தொளைகளின் வாயிலாக, ஐந்து பிரகாசமான கதிர் வீச்சுக்களாக (light beams) வெளிப்படுகிறது.. குடம் நம் உடல். குடத்திலுள்ள தொளைகள் ஐம்பொறிகள். அதிலிருந்து வெளிப்படும் கதிரொளி ஐம்புலன்கள் அவையாவன: சத்த பரிச ருப ரச கந்தங்கள். இவை வாயிலாகவே உயிரானது உலக போகத்தைத் துய்க்கின்றது; அறிவைப் பெறுகின்றது.
இவ்வுடலை ‘மாயா யந்திர தநு விளக்கு” என்று சிவஞான போதம் கூறுகின்றது…
மாயப்பெருநதி: புத்தக அறிமுகம்
ஒரு நல்ல நாவலை வாசிப்பது ஒரு நதிக்குள் மூழ்கித் திளைப்பதைப் போல. கொஞ்சம் மூழ்கித் திளைக்கையில் இன்னொரு உலகுக்கு நம்மை அழைத்துச்செல்லும். மாயப்பெருநதி நாவலில் இரண்டு உலகங்களுக்கு. வெவ்வேறு காலகட்டங்களில் நிகழும் இரு கதைகளின் அடிநாதமாக அவைகளை இணைக்கும் ஒரு சரடாக, தன் முன் நிகழும் சம்பவங்களின் சாட்சியாக, கதாபாத்திரங்களின் உணர்வலைகளை சுழற்றியடித்துக் கொண்டே தாமிரபரணி ஓடுகிறது.. ஹரன்பிரசன்னாவின் முதல் நாவல் இது. ஆனால் முதல் நாவலிலேயே நம்மைத் தன் எழுத்தால் கட்டிப் போடுகிறார்…
View More மாயப்பெருநதி: புத்தக அறிமுகம்சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 3
உள்பொருள் என்பது என்றும் எவ்வகையாலும் மாறத பொருள். அதனைச் ‘சத்’தென்றும் ‘மெய்ப்பொருள்’ என்றும் கூறுவர். அது தோற்றக் கேடுகளில்லாத நித்தியப்பொருள் அதுவே ‘பிரமம்’ என்று வேதாந்திகளும் சிவம் என்று சித்தாந்திகளும் கூறுவர்.. பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சிவமே குருவாக எழுந்தருளி வந்து, ‘அது நீ” எனும் உபதேசத்தை அருளி உய்விப்பதைக் கூறுகின்றது. குருபரம்பரை அவர் வழியே மானிடத்தை உய்விக்க வந்தருளுகின்றது. கேவலாத்துவித, சுத்தாத்துவித மரபுக ளெல்லாம் அவர் வழி வந்தனவே… மகாவாக்கியம் ‘சர்வ துக்க நிவிர்த்தி பரமானந்த ப்ராப்தி” அளிப்பதால் ‘இனிய உபதேசம் ஆயிற்று. சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம் மகாவாக்கியத்தினைப் “பெரும்பெயர்” என்று கூறுகின்றது…
View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 3ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10
இயக்கம் என்றாலே வெளிப்படுவது, அல்லது சக்தியின் தொழில் என்றாகிவிடுகிறது. அதனால் சக்தியிடம் சரண் புகுவதே சரியான வழி. சரணடைந்ததால் சக்தி போல் ஆகி ‘சித்’தாகிய இறைவனை அடைந்து, பேரின்பப் பெருவெள்ளமாகிய ஆனந்தத்தை அறிவுடன் இருக்கும் நிலையில் உணரலாம்… அருள் தரும் பராசக்தி ஒன்றே என்றாலும் காணப்படும் இயற்கைத் தோற்றங்களை ஒட்டி, பெண் தெய்வங்களையும் அந்த முனிவர்கள் கண்டார்கள். தன்னை அறிவதே அறியப்படும் அனைத்திலும் முதன்மையானது என்பதால் அறிவை வழங்கும் பரம்பொருளாகச் சரஸ்வதியைக் கருதினார்கள்…
View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்
சோம்பலும், பயமும், தூக்கமும் தாமச குணத்தினின்று பிறப்பவை. பல மனிதர்களுக்கும் வாழ்க்கையில் பல சமயங்களில் தமோகுணத்தின் ஆளுகைக்குக் கீழ் சென்று மீளமுடியாதபடி அதில் உழலும் நிலை ஏற்படுகிறது. அதை உடைத்துக் கொண்டு வெளிவருவதற்கான உறுதியும் அருளும் தெய்வம் தரவேண்டும் என்று இங்கே வேண்டுகிறார்… சத்வ குணத்தால் தூண்டப்பட்டு நிகழும் செயல்கள் அனைத்தும் சாதாரணத் தளத்திலிருந்து உயர்ந்து யக்ஞமாக, வேள்வியாக, தெய்வத்தின் செய்கைகளாக, கர்மயோகமாக ஆகிவிடுகின்றன… மகாமாயையாகிய பராசக்தி. இவ்வுலகனைத்தும் அவள் விளையாட்டன்றி வேறில்லை. அவளே இப்பாடலில் பாரதி போற்றும் கண்ணம்மா…
View More பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 4
கழுதைக்கட்சி ஆளுங்க நிறைய இருக்கற ஊரிலே குறைச்சலான வாக்குச் சாவடிங்களை வச்சா, நிறையப்பேரு ஓட்டுப்போட முடியாதுல்ல?[i] வரிசைலே நிறையப்பேரு இருப்பாங்க, வேலைக்கும் போகணும், மணிக்கணக்குலே நின்னு ஓட்டுப்போடவும் முடியாது. அதுனால கூட்டத்தைப் பார்த்துட்டு, வரிசைலே நிக்காம போயிடுவாங்க. இப்படி எதிர்க்கட்சி ஓட்டு அதிகமா விழாமப் பார்த்துக்கலாம், இல்லையா?இது என்ன அநியாயமா இருக்குன்னு வருத்தப்படாதீங்க. இதெல்லாம் அரசியல்ல சகஜம். இதைவிடத் தில்லாலங்கடி வேலையெல்லாம் நிறைய நடக்குது. அதைப்பத்தி நம்ப பேசக்கூடாது. ஆனா, எதுவும் சட்டத்துக்குப் புறம்பானதில்லே. பெரிய இடத்து விவகாரம் விட்டுடங்க.
View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 4அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 3
ஒரொரு மாநிலத்துக்கும் அங்கே இருக்கற மாநிலச் செயலர்தான் (Secretary of State) வாக்குச் சீட்டுகளை எண்ணி, பட்டியலிட்டு, முடிவுகளுக்குச் சான்றளிக்கவேண்டும். ஒவ்வொரு கவுன்ட்டியிலேயும் – அதுதாங்க, இந்தியா மாவட்டம் மாதிரி — ஒரு பதிவாளர் இருப்பார். வாக்குகளைச் சேகரித்து, அதை எண்ணி, பட்டியல்போட்டு, அதுக்குச் சான்றளித்து, மாநிலச் செயலருக்கு அனுப்பவேண்டியது அவர் பொறுப்பு. ஒரு மாநிலத்திலே (டெக்ஸாஸ்) 254 கவுன்ட்டிகள், வாஷிங்டன் டி.சி.லே ஒரே ஒரு கவுன்ட்டிதான்.
View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 3அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 2
டெமாகிரடிக் பார்ட்டி, குடியரசுக் கட்சியைவிட (ரிபப்ளிகன் பார்ட்டி) நிறையச் செலவு செஞ்சிருக்காங்க.[iii] மொத்தம் $14 பில்லியன் (லட்சத்து நாற்பதாயிரம் கோடி டாலர் – ஒருகோடியே, எழுலட்சம் கோடி ரூபாய்) செலவு. உடனே இத்தனை பணமான்னு வாயைப் பிளக்காதீங்க, கூட்டிக் கழிச்சுப்பார்த்தார், அமெரிக்காவுலே ஓட்டுப்போட்ட ஒருத்தொருத்தருக்கும் சுமாரா $88.61தான் (ரூ.6378.20தான்!) செலவு பண்ணியிருக்காங்க. இந்தப்பணத்திலே நாலுபேரு உள்ள ஒரு குடும்பம் சுமாரான ஓட்டலுக்குப் போயிச் சாப்பிட்டா ஒருவேளை சாப்பிடலாம். அங்கே அம்மா உணவகம்மாதிரி இங்கே இருக்கற மக்டானல்ஸ்ல சாப்பிட்டா ரெண்டுவேளை — அவ்வளவுதான்!
View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 2