பாரத தேசியத்தின் சவால்கள்: போரும் வியூகமும்

மதத்தை மாற்றிக்கொள்ளும் ஒருவர் தனது விசுவாசத்தை மாற்றிக்கொண்டுவிடுகிறார் என்பது உண்மையே. ஆனால், அவரை எதிரியாகவே நடத்த வேண்டுமா? அவர் இந்து மதத்துக்கு இந்து கலாசாரத்துக்கு திரும்பியாகவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடத்தவேண்டுமா?.. நம் நாட்டில் இருந்தே நம் தேசியத்துக்கு தர்மத்துக்கு கலாசாரத்துக்கு எதிராகப் பேசுபவர்களை உருவாக்கும் எதிரியின் சாமர்த்தியத்தில் ஆயிரத்தில் ஒருபங்கையாவது அயல் நாட்டினரில் நம் கலாசாரத்தை மதிக்கும் நபர்களை முன்னிலைப்படுத்துவதில் காட்டியிருக்கிறோமா?…

View More பாரத தேசியத்தின் சவால்கள்: போரும் வியூகமும்

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3

இதுவரை 11,400க்கும் அதிகமாக மிக்-21 விமானங்கள் உற்பத்திசெய்யப்பட்டிருக்கின்றன. இருபதுக்கும் மேற்பட்ட வகைகளும் உண்டு. சீனா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதைப் பயன்படுத்திவருகின்றன. சீனா இதை ஜே-7 என்ற பெயரில் உற்பத்திசெய்து பல நாடுகளுக்கும் விற்றுவருகிறது.[3] இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மிக்-21எம் [MiG-21M] வகையை வடிவமைத்து உருவாக்குகிறது.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2

விமானத்தாக்குதல் வரலாற்றிலேயே, ஒரு நாட்டை மண்டியிடச்செய்த விமானம் மிக்-21ஆகத்தான் இருக்கும் எனலாம். பாரதம் தனது மிக்-21 விமானங்களை அப்பொழுதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பியது. 1971 டிசம்பர் 14ல் காலை 11 மணி அளவில் டாக்காவில் கவர்னர் மாளிகையச் சுற்றி வட்டமிட்ட அவ்விமானங்கள் குண்டுமாரி பொழியவே, கவர்னர் ஐக்கிய நாட்டு விமானத் தாக்குதல் பாதுகாப்பிடத்திற்கு ஓடி ஒளிந்துகொண்டார்.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2

ராமாயணத்தில் சரணாகதி

குகன் தனது படகோட்டி ஒருவரை அழைக்க, அவன் வருகிறான். கரையோரமாக நங்கூரமிட்டு நிறுத்தியுள்ள படகில் ராமர் ஏறுவதற்கு எத்தனிக்கையில், “ஐயா ஒரு நிமிஷம்” என்று படகோட்டி கைகூப்பிக் கொண்டு முன்னால் வந்து தடுக்கிறான்… “வானரரே, நல்லவர்களானாலும் பொல்லாதவர்களானாலும் வதைக்குரியவர்களானாலும் கூட, அவர்களிடம் சான்றோர்கள் காட்டும் குணம் கருணையே. குற்றம் செய்யாதவர்கள் இந்த உலகில் யாருண்டு? ” என்கிறாள் சீதை. அனுமன் அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று ஆணையிடுகிறாள்..

View More ராமாயணத்தில் சரணாகதி

கொலைகாரக் கிறிஸ்தவம் – 13

ஏறக்குறைய 300 ஹிந்து பேராலயங்களும், சிறிய ஆலயங்களும் கோவா பகுதியில் இடித்துத் தகர்க்கப்பட்டன. இந்த ஆலயங்களைக் குறித்தான அத்தனை தகவல்களும் போர்ச்சுக்கீசியர்களாலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் இன்னும் ஆறுமாதகாலத்திற்குள் மதம்மாறாவிட்டால் உடனடியாக கோவா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் மிரட்டிவைக்க வேண்டுகிறேன். இவ்வாறுசெய்யும் பட்சத்தில், மேலும்பல வழிதவறிய ஆடுகளை ஆன்ம அறுவடை செய்வது எளிதாக இருக்கும் என மேன்மைதங்கிய அரசரிடம் கூறிக்கொள்கிறேன்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 13

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1

அணு ஆயுதப்போர் இருநாட்டிற்குமே மாபெரும் கேட்டையும், அழிவையும், பல இலட்சக்கணக்கான உயிர்ச்சேதத்தையும், அணுக்கதிர்வீச்சினால் பல்லாண்டுகள் எவரும் அணுகமுடியாத நிலமையையும் விளைவிக்கும் [mutually assured destruction]. அரசு சரியாகச் செயல்பட முடியாத நிலையும் உண்டாகும். பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்க பாகிஸ்தான் காரணமாகக்கூடும் என்று டேனியல் பைமன் எழுதியுள்ளார்.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1

கொலைகாரக் கிறிஸ்தவம் – 12

……போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் செய்த சதிவேலைகளுக்காகவும், துரோகத்திற்காகவும், கோவாவின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவும் மிக அவசியமானது என நினைத்த அல்ஃபோன்ஸோ டி அல்புகர்க்கி , தனது கேப்டன்களை அழைத்து, கோவா தீவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களையும் — அவர்கள் ஆண், பெண், குழந்தைகள் என யாராக இருந்தாலும் — கண்ட இடத்திலேயே கொல்லும்படி உத்தரவிட்டான். இதனைத் தொடர்ந்து, அடுத்த நான்கு நாட்கள் கோவாவில் வசித்த முஸ்லிம்களின் ரத்தம் தெருவெங்கும் ஓடியது.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 12

கொலைகாரக் கிறிஸ்தவம் – 11

அடில்ஷாவின் ஆட்சியின்கீழ் ஹிந்துக்கள் துருக்கியர்களிடமும் அவர்களது ரூமஸ் அலுவலகர்களிடமும் தாங்கவொன்னாத் துயரம் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். எனவே கோவா ஹிந்துக்கள் அவர்களின் அருகாமை நாடான ஹொனாவர் நாட்டின் கப்பல்படையை அனுப்பி துருக்கர்களை அடக்குமாறு அந்த நாட்டின் அரசனான டிமோஜா (Timoja) என்பவனை வேண்டுகின்றனர். தன்னால் தனியாக துருக்கர்களை அடக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட தமோஜா போர்ச்சுகீசிய தளபதி அல்பர்கர்க்கை உதவிக்கு அழைக்கிறான்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 11

கொலைகாரக் கிறிஸ்தவம் – 10

“இதே ஊர்வலங்களும், மதமாற்றங்களும் ஒவ்வொரு வருடமும் பலமுறைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்துமஸ் நாட்களில் பலமுறை ஃப்ரான்ஸிஸ்கன் சர்ச்சில் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் கட்டாய, ஏமாற்ற மதமாற்றம் செய்யப்பட்டதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.”
அவ்வாறு மதம் மாறியவர்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து மதம் மாறிக் கொண்டார்கள் என்பது ஒரு பெரும் பொய்யே. டாக்டர் நூரன்ஹா இதனை இன்னொரு விதமாக விளக்குகிறார்.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 10

கொலைகாரக் கிறிஸ்தவம் – 9

டாக்டர் டெல்லோன் இன்குசிஷன் அதிகாரிகளால் 1674-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இன்குசிஷன் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த கோவாவில் இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் போர்ச்சுகலுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு பாதாளச் சிறையில் ஐந்து வருடங்கள் சிறத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 9