லாவண்யா மரணமும் “நடுநிலை” பாசாங்குகளும்

லாவண்யாவின் மரணத்தை முன்வைத்து ஒரு உண்மையான சீரியசான மக்கள் பிரசினையைப் பேசிக்கொண்டிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் கசப்புகளை “மத அரசியலை” கொண்டுவருகிறதாம். எப்படியெல்லாம் சீன் போடுகிறார்கள் பாருங்கள்… இப்படித்தான் தமிழ்நாடும் ஒரே “அமைதிப்பூங்கா”வாக இருக்கிறது என்று வழக்கமாகக் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் உருவாக்கியுள்ள அகராதியில் “அமைதிப்பூங்கா” என்றால் அங்கு கிறிஸ்தவ மதமாற்றமும், கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு அராஜகங்களும், இஸ்லாமிய மதவெறி – ஜிகாதி பிரசாரங்களும் ஜகஜ்ஜோதியாக எந்த இடையூறுமில்லாமல் அரசு ஆதரவுடன் ஏகபோகமாக நடக்கும் என்று பொருள்…

View More லாவண்யா மரணமும் “நடுநிலை” பாசாங்குகளும்

லாவண்யா: கிறிஸ்தவ மதமாற்ற வெறிக்கு பலியான இன்னொரு இந்து மாணவி

லாவண்யாவின் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்று நடப்பது முதன்முறையல்ல. 2006ல் ஓமலூர் சுகன்யா, சென்னையில் 2009ல் ரஞ்சிதா, 2011ல் ரம்யா, 2015ல் உசிலம்பட்டியில் சிவசக்தி ஆகிய மாணவிகள் தாங்கள் படிக்கும் கிறிஸ்தவ பள்ளிகளில் தரப்பட்ட மதமாற்ற அழுத்தம் மற்றும் உளவியல் சித்ரவதைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இவை செய்திகளில் பரவலாக வந்து விவாதிக்கப்பட்டவை. இதுபோக இன்னும் எத்தனையோ? இவற்றை முன்பே “ஏசுவுக்கான இந்து நரபலிகள்” என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்… கிறிஸ்தவ மதமாற்ற வெறி என்பது இன்றைக்கு தமிழகத்தின் தலையாய பிரச்சினையாகி வருகிறது . அரசியல் கட்சி பேதமின்றி தமிழ்நாட்டின் அனைத்து இந்துக்களும் இந்தப் பிரசினையில் மரணமடைந்த இந்துக் குழந்தைக்கு நீதி கேட்டுப் போராட வேண்டும்.

View More லாவண்யா: கிறிஸ்தவ மதமாற்ற வெறிக்கு பலியான இன்னொரு இந்து மாணவி

கொலைகாரக் கிறிஸ்தவம் – 29

தமிழகத்தில் பள்ளிகளைத் மதமாற்றக் கருவிகளாகத் துவங்கி, படிக்கவரும் இளம் சிறுவர்களை மனதைத் திருப்பியும், மெதுவான அணுகுமுறைகளாலும் தமிழக ஹிந்துக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுப் பலரை புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதில் வெற்றி பெற்றார்கள், டேனிஷ் மிஷனரிகள். புதுச்சேரியில் மதம்மாறிய ஹிந்துக்களுக்குப் பதவிகளும், பட்டங்களும் அளிக்கப்பட்டன. ஹிந்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள் என்பதற்கான பல ஆதாரங்களும் இருக்கின்றன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 29