நீட் தேர்வு மூலம் அதிக சமூகநீதி, அதிக வாய்ப்புகள்

மருத்துவப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ’நீட்’ என்று சொல்லப்படும் நுழைவுத் தேர்வினை…

View More நீட் தேர்வு மூலம் அதிக சமூகநீதி, அதிக வாய்ப்புகள்

நீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன?

தமிழகத்தில் மாணவர்கள் கேட்ட மையங்கள் ஒதுக்கப்படவில்லை எனவும், மையங்களின் எண்ணிக்கை விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டிருந்ததை விட குறைக்கப்பட்டதாகவும் பங்கெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மையங்களின் எண்ணிக்கை அமையவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இது குறித்து தகவல்களை திரட்ட தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தோம். கிடைத்த விவரங்கள் இக்கட்டுரையில்…. சராசரியாக எத்தனை மாணவர்களுக்கு ஒரு மையமும் ஒரு மையமும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால், 615 மாணவர்களுக்கு ஒரு மையம என்ற விகிதத்துடன் கர்நாடகா முதலிடத்திலும் 668 மாணவர்களுக்கு ஒரு மையம் என்ற விகிதத்துடன் உத்தரப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன. தமிழ் நாடு 631 மாணவர்களுக்கு ஒரு மையம் என்ற விகிதத்துடன் நான்காம் இடத்தில் உள்ளது…

View More நீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன?

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3

உயர் கல்வியை பொறுத்தவரையில் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுவதே சரியானது. இன்று அத்தனை மாணாக்கர்களும் ஒன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்களே – என்பது உண்மைதான். ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. 20 வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று 6-7ம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். காரணம்? சமூகம் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவற்றை மட்டுமே சிறப்பான தொழில்களாக காண்கிறது. ஏனைய துறைகளில் ஆர்வம் உடைய குழந்தைகள் கூட இந்த இரண்டு துறைகளை நோக்கி பயணப்பட வேண்டி உள்ளது. இத்துறைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவோ, செவிலியர்களாகவோ வருவார்கள் எனில் அது சமூகத்திற்கும் நல்லது இல்லை. எனவே பொருளாதார அடிப்படைகளை கணக்கில் கொள்ளாமல், சமூக மதிப்பை பற்றி கவலைப்படாமல் ஒரு குழந்தை தனது ஆர்வத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தனக்கான பாதையை உருவாக்க நாம் வழி செய்ய வேண்டும்…..

View More நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2

”பின்தங்கியவர்கள் நகரத்திலும் உண்டு, கிராமத்திலும் உண்டு. எனவே நகரம் கிராமம் என்று பிரித்து கிராமத்தவருக்கு தனி ஒதுக்கீடு கொடுப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி தீர்ப்பளித்துள்ளனர் நீதி அரசர்கள். இந்த தீர்ப்பை தொடர்ந்து தான் தமிழக அரசு ஒரே அடியாக நுழைவு தேர்வை ரத்து செய்யும் வரலாற்று முடிவை எடுக்கிறது. அதன் விளைவைத்தான் இன்று கண்டுகொண்டு இருக்கிறோம்… பெங்களூரில் கர்நாடாகாவின் பல்வேறு ஜாதிகளுக்கு சொந்தமான மாணவர் /மாணவியர் விடுதிகள் உள்ளன. மூவேந்தர்களும் தங்கள் ஜாதி என்று நிரூபிக்க கம்பு சுற்றும் நண்பர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.உங்கள் ஜாதியை சேர்ந்த மாணவி ஒருவர் கலந்தாய்விற்காகவோ, எதாவது ஆய்வரங்கில் கலந்து கொள்ளவோ சென்னைக்கு வந்தால், அவர் தங்குவதற்கு, சரி விடுங்கள், ஓய்வெடுப்பதற்கு 100 சதுரஅடி இடத்தையாவது தயார் செய்து வைத்திருக்கிறீர்களா?…

View More நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1

தங்கள் சமூகத்தில் நவீன கல்வி கல்வி பெற்றவர்களது எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று எண்ணும் அனைவரும் தமது ஜாதி அமைப்புகள் வாயிலாக கல்வி நிறுவனங்கள் தொடங்குவதை குறித்து யோசிக்க வேண்டும்… ஒரு கல்வி நிறுவனத்தின் சிறப்பு அதன் கட்டிடங்களிலோ, பேருந்துகளிலோ இல்லை. அந்நிறுவனத்தின் மனிதவளத்தில் தான் உள்ளது. உங்கள் ஜாதியை சேர்ந்த ஒருவனுக்கு வேலை கொடுத்தால் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அவ்வளவு தான். ஆனால் திறமையான ஆசிரியர் ஒருவருக்கு வேலை கொடுத்தால் ஒரு தலைமுறை மாணவர்கள் நல்வாழ்வு பெறுவார்கள். சென்ற தலைமுறையில் இந்த விஷயத்தில் மிக தெளிவாகி இருந்தார்கள். பல கிறிஸ்தவ நிறுவனங்கள் குடுமி வைத்த அந்தணர்களை வேலைக்கு வைப்பதில் எந்த தயக்கமும் கொள்ளவில்லை. திறமை இருந்தால் போதும். அதே போல வைதீக அந்தணர்கள் ஆங்கிலேயரிடம் சென்று ஆங்கிலம் கற்கவும் தயங்கவில்லை. இதனை புரிந்து கொண்டு சர்தார்ஜி ஆனாலும் பார்சியானாலும் திறமை உள்ளவர்களுக்கு வேலை கொடுங்கள்….

View More நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1

நீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்

கண்டிப்பாக இது அனிதாவே முடிவு செய்திருக்க முடியாது. அவரை மூளைச் சலவை செய்திருக்கலாம். அல்லது இது ‘கொலை’யாக கூட இருக்கலாம். இன்று அனிதாவிற்காக குரல் கொடுக்கும் அத்தனை தமிழக கட்சிகளும் நினைத்தால் நீட்டில் தேர்வெழுதிய அத்தனை தலித் மாணவர்களுக்கும் தங்கள் சொந்த செலவிலேயே மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்திருக்க முடியும். அவ்வளவு மெடிக்கல் கல்லூரிகளையும், அவ்வளவு பணபலத்தையும் இந்த அரசியல்வாதிகள்தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்ய இவர்கள் என்ன தியாகிகளா? நீட் தேர்வில் பாதிக்கப்பட்டது இந்த திராவிட அரசியல்வாதிகள்தான். அதனால் திட்டம்போட்டு அனிதாவை பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வர பாஜக தமிழ்நாட்டில் முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதனால் பாஜகவை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடாக கூட இது இருக்கலாம். அதனால் அனிதா தற்கொலையில் சிபிஐ நீதிவிசாரணை வேண்டும். முதலில் திமுகவை விசாரித்தால் உண்மை வெளிவரலாம். வெளிவரும்… அனிதா சாவுக்கு ‘ஒரு தரப்பை’ கைநீட்டி வசைபாடும் முன் தயவுசெய்து இந்த
10 கேள்விகளுக்கு விடை தேட முயற்சி செய்யுங்கள்..

View More நீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்