வன்முறையே வரலாறாய்…- 32

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் எவரும், எந்தவொரு சூழ்நிலையிலும் மொத்த இந்தியாவையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை. இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இந்திய இந்துக்களை மதமாற்றத்திலிருந்து தப்ப வைக்க இயலவில்லை. அதற்கும் மேலாக தங்களில் கலாச்சாரத்திலும், மதத்திலும் கொண்ட பிடிப்பே இந்திய, இந்து சமூகம் ஒரு முழு முஸ்லிம் கூட்டமாக மாறுவதனை வெற்றிகரமாக எதிர்த்து வென்றது… 1947 பிரிவினைக்குப் பிறகு கிழக்குப் பாகிஸ்தானில் ஏறக்குறைய 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை இருந்த இந்துக்கள் இன்று வெறும் பத்து சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். அதுபோலவே மேற்கு பாகிஸ்தானில், பிரிவினைக்குப் பிறகு பத்து சதவீதமாக இருந்த இந்துக்கள் இன்றைக்கு (1998 கணக்கு) வெறும் 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். இன்றைய பாகிஸ்தானில் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டு, முஸ்லிம்களுக்கு மணம் செய்விக்கப்பட்டுப் பின் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்…

View More வன்முறையே வரலாறாய்…- 32

வன்முறையே வரலாறாய்…- 31

“இஸ்லாமின் வருகை இந்தியப் பெண்களின் சுதந்திரத்தை மிகவும் பாதித்தது” எனக்கூறும் ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் பெண்களைப் போலவே இந்துப் பெண்களும் முகத்தை மூடும் பர்தா அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்கிறார்… பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட சுதந்திரமும், மதச் சார்பற்ற கல்வியும், பொது சட்ட நடைமுறைகளும், ஜனநாயகமும், தனி மனித சுதந்திரமும் இந்திய முஸ்லிம்கள் அல்லாதோரால் முழு ஏற்புடன் வரவேற்கப்பட்டன. குறிப்பாக வங்காள இந்துக்கள் பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய மேற்கத்திய கல்விமுறைய திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு பயில முயன்றார்கள். அதே நேரம் முஸ்லிம்கள் அது போன்ற கல்விமுறையை ஏற்காமல் விலகி நின்றார்கள். இந்திய முஸ்லிம்கள் மதச் சார்பற்ற கல்விமுறையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர்களில்லை என்பதுவே வரலாறு… முஸ்லிம்கள் மாறி வரும் உலகின் முன்னேற்றங்களிலிருந்து விலகி நிற்க, இந்துக்கள் தங்களுக்கு இத்தனை காலம் மறுக்கப்பட்ட கல்வியையும், அதனால் உண்டாகிய முன்னேற்றத்தையும் முழு அளவில் ஏற்றுக் கொண்டு முன்னேறினார்கள்.

View More வன்முறையே வரலாறாய்…- 31

லவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்

மணக்கள் இருவருமே இஸ்லாமியர்களாக இருந்தால் ஒழிய அது இஸ்லாமிய நிக்காஹாக கருதப் படாது. ஆகவே மணப் பெண் முதலில் மதம் மாறிய பின்னரே ஷரியா சட்டப் படி திருமணம் நடைபெறுகிறது. இதையே பதிவு திருமணச் சட்டப் படி செய்திருந்தால் மணப் பெண் மதம் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது, ஆனால் முஸ்லிம்கள் அவ்வாறு திருமணம் செய்வது அனேகமாக இல்லை. எனவே, இங்கு திருமணத்தின் முக்கிய நோக்கமே மதம் மாற்றுவது என்பதாகிறது. அதனாலேயே இது லவ் ஜிஹாத் என்று வழங்கப் படுகிறது… இந்து அல்லது பதிவுச் திருமணச் சட்டப் படி உரிமைகளும் கடமைகளும் அனேகமாக கணவன் மனைவி இருவருக்குமே பொதுவானவை. ஆனால் ஷரியா சட்டப் படி அப்படி அல்ல; ஒரு பெண்ணின் உரிமைகள் வெகுவாக, முழுவதுமாக குறைக்கப் படுகின்றன. ஒரு இந்துப் பெண் ஷரியா சட்டப் படி இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொள்ளும் பொழுது தன் அடிப்படை உரிமைகளைத் தானே இழந்து விடுகிறாள்… கலப்பு மதத் திருமணங்களைத் தடை செய்வது என்பது முட்டாள்த்தனமான ஒரு காரியமாக அமைந்து விடும். அது சரியல்ல, ஆனால், ஷரியா சட்டப் படி முஸ்லீமாக மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் அனைவருக்கும் தாங்கள் எந்தவிதமான உரிமைகளை இழக்கப் போகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அதைப் படித்துப் பார்த்து கையொப்பம் இடச் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும்…

View More லவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்

வன்முறையே வரலாறாய்…- 30

முகமது பின் காசிம் தொடங்கி அனைத்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் கடைப் பிடித்த இந்த குரூர நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்… உடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை. எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்….

View More வன்முறையே வரலாறாய்…- 30

இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்

ஹாமஸ் துவங்கப்பட்ட போது, அதன் நோக்கம் தெளிவாக சொல்லப்பட்டது – முதலாவதாக, மேற்குக் கரை, காஸா உட்பட இஸ்ரேலின் வசம் இருக்கும் பாலஸ்தீனிய நிலப்பரப்பு முழுவதையும் வென்றெடுப்பது, இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிப்பது. இரண்டாவதாக, தப்பித்தவறி பாலஸ்தீன் என்றாவது ஒரு நாள் மதச்சார்பற்ற தனியொரு தேசமாக அறியப்பட வேண்டி வருமானால், அதை எதிர்த்தும் போராடுவது, பாலஸ்தீனை ஒரு முழுமையான இஸ்லாமிய தேசமாக மாற்றுவது… துப்பாக்கி தூக்குவதற்கும், கார் வெடி குண்டுகள், சொந்த ராக்கெட் என அதிநவீனத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. பதினொரு வழிகளில் ஹமாஸூக்கு தேவையான நிதி ஆதராங்கள் கிடைத்துக் கொண்டிருப்பதாக பல்வேறு நாடுகளில் உள்ள உளவுத் துறையினர் தெரிவிக்கிறார்கள்….இவ்வாறு கூச்சல் போடும் இஸ்லாமியர்கள், முஸ்லீம்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் இதுவரை, சிரியாவில் 1,50,000 சன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டது இவர்கள் கண்களில் படவில்லை….

View More இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்

வன்முறையே வரலாறாய்…- 29

“பொதுவில் இந்திய சாதிய அமைப்பு மிகவும் இளகும் தன்மையுடைய ஒன்றாகவே இருந்துவந்தது.. இந்தியாவிற்குள் நுழைந்த இஸ்லாம் இந்த இளகும் தன்மையை நீக்கி, சாதிய அமைப்பை இறுக்கியதுடன் அதனை நிரந்தரமாக்கவும் செய்தது” என்கிறார் ஜவகர்லால் நேரு… டெல்லிக்கருகில் இருக்கும் டோவாப் பகுதி கடுமையான வரி விதிப்பு காரணமாகவும், இஸ்லாமியப்படைகள் நடத்திய வெறியாட்டங்கள் காரணமாகவும் முற்றிலும் அழிந்தது. அங்கிருந்து தப்ப முடிந்த இந்துக்கள் காடுகளுக்கு ஓடித் தப்பினார்கள். அங்கும் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கோபமடைந்த சுல்தான் ஒரு பெரும் படையணியை அனுப்பி அங்கிருந்த இந்துக்களைப் பிடித்துவர உத்தரவிடுகிறான்…. பல இலட்சக்கணக்கான, இந்துக்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கொடுமைகளுக்கு அஞ்சிக் காடுகளில் ஒளிந்து வாழ்ந்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளான. அவ்வாறு காடுகளிள் வாழ்ந்தவர்களில் எல்லா சாதியைச் சார்ந்தவர்களும் கலந்து வாழ்ந்ததுடன், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கலகங்களிலும் பங்கெடுத்திருக்கிறார்கள்….

View More வன்முறையே வரலாறாய்…- 29

வன்முறையே வரலாறாய்…- 27

இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏறக்குறைய ஆறு லட்சத்திலிருந்து இருபது லட்சம் பேர் வரை மரணமடைந்திருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு லட்சம் இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் மேலான இந்து, சீக்கியப் பெண்கள் முஸ்லிம்களினால் கடத்திச் செல்லப்பட்டார்கள்…. சுருக்கமாகச் சொல்வதென்றால், பஞ்சாப் பகுதியில் கலவரங்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும் கட்டவிழ்த்துவிட்டு இந்து, சீக்கியர்களை விரட்டியடித்து அவர்களின் வீடுகளையும், உடைமைகளையும் கைப்பற்றிய ஒவ்வொரு முஸ்லிமும் ‘தான் பஞ்சாபின் நவாபாக மாறியதாக’ சந்தோஷம் கொண்டான்.

View More வன்முறையே வரலாறாய்…- 27

வன்முறையே வரலாறாய்…- 26

“1947 பிரிவினையின் போது, இந்து மற்றும் சீக்கியர்களின் முகவரிகள் தாங்கிய ஆயிரக்கணக்கான கடிதங்களும், தந்திகளும் லாகூரின் மத்திய தபால் தந்தி அலுவலகத்திற்கு வந்து குவிந்தன. படுகொலை செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் கற்பழிக்கப்பட்ட பெண்களின் படங்கள் அந்தக் கடிதங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அப்படங்களின் பின்புறம் எழுதப்பட்டிருந்த செய்தி, ‘முஸ்லிம்கள் உங்களின் நிலத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர்களின் கையால் இந்து, சீக்கிய சகோதரர்களுக்கு நடந்த இந்த நிலைமையே உங்களுக்கும் காத்திருக்கிறது’ என்றது. இந்துக்களின் மனோபலத்தைக் குறைத்து அவர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கும் விதமாக முஸ்லிம் லீகினால் அனுப்பி வைக்கப்பட்டவையே அந்தக் கடிதங்கள்.. முஸ்லிம்களல்லாதவர்களை பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்க முஸ்லிம் லீக் மிகுந்த கவனத்துடன் திட்டங்களைத் தீட்டியதுடன் அதனை மிகத் திறமையாகச் செயல்படுத்தவும் துவங்கியது” என விளக்குகின்றனர் காலின்ஸ் மற்றும் ல-பியேர்…

View More வன்முறையே வரலாறாய்…- 26

நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்

முஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். நாலந்தா கொஞ்ச காலத்திற்கு அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே வந்து அதையும் அழித்தார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் தெளிவாக விவரிக்கப்படுகிறது…. ஆனால் “திபெத்திய நூல் ஒன்று நாலந்தா சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுவதாக” மார்க்சிய வரலாற்றாசிரியர் டி.என்.ஜா பதிவு செய்கிறார்…. இரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா?… மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை முழுவதுமாக திரிப்பதும் முடிந்தால் உண்மையை பொய்யாக்குவதும் நடைமுறையில் இருப்பது என்பதால் இது எந்த விதமான ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் யாருமே மூலத்தையோ அல்லது மேற்கோள் காட்டப்பட்ட நூலையோ சரிபார்க்கவில்லை என்பது தான்… (மூலம்: அருண் ஷோரி, தமிழில்: ராஜசங்கர்)

View More நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்

வன்முறையே வரலாறாய்…- 25

இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு சிறிது காலம் முன்பு நடந்த வன்முறைகள் பயங்கரமானவை.. ராவல்பிண்டியைச் சூழ்ந்திருந்த ஒரு கிராமத்தில், மதம் மாற மறுத்த ஒரு கிராமத்திலிருந்த அத்தனை இந்து மற்றும் சீக்கியர்கள், கிராமத்தின் மத்தியில் குடும்பத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களைச் சுற்றிலும் விறகுகளை அடுக்கிய முஸ்லிம் வெறியர்கள் உயிருடன் அவர்களை எரித்துக் கொன்றார்கள். இளம்பெண்களைத் தூக்கி கொண்டு ஓடிய முஸ்லிம் காலிகள் அவர்களைத் திறந்த வெளியிலேயே கற்பழித்தார்கள். இதனைக் கண்டு மனம் வெதும்பிய பல இந்து, சீக்கியப் பெண்கள் உடனடியாகத் தற்கொலை செய்து கொண்டார்கள்… பிரிவினை அங்கீகரிக்கப்பட்ட பல மாதங்களுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் அங்கிருந்த இந்து மற்றும் சீக்கியர்களின் மீது சிறிதும் மனிதத்தன்மையற்ற பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். குர்பச்சன் சிங் தாலிப் அவரது Muslim League Attacks on Sikhs and Hindus in the Punjab 1947 என்னும் புத்தகத்தில் பஞ்சாப் பகுதியில் மட்டும் நடந்த இதுபோன்ற 592 சம்பவங்களைப் பட்டியலிடுகிறார். அவை அத்தனையும் முஸ்லிம்களால் “மட்டுமே” நடத்தப்பட்ட தாக்குதல்கள். ஒரு இடத்திலும் இந்து/சீக்கியர்கள் இது போன்ற வன்முறைச் சம்பவங்களைத் தாங்களாக முன்னெடுத்து நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….

View More வன்முறையே வரலாறாய்…- 25