திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்

யார் போற்றப்பட வேண்டும்?

யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்?

தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்!

பெருமையும் உரனும் ஆடூஉ மேன

அச்சமும் மடனும் நாணும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப
(தொல்காப்பியம்)

ஆடவரின் பெருமையையும், உரத்தன்மையையும், பெண்டிரின் அச்சம், மடம், நாணம் ஆகியவையும் புகழப்பட வேண்டும் என்பது தொல்காப்பியம் வகுத்த தமிழ் மரபு. அப்படிப் புகழப்பட வேண்டிய ஆடவர் யார்?

மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் திரு அஸ்லாம் பாஷா கோரிக்கையை ஏற்று ஹைதர் அலிக்கும், கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் திரு. அ.சவுந்தரராசன் மற்றும் செல்வி.பால.பாரதியின் கோரிக்கையை ஏற்று திப்புசுல்தானுக்கும் திண்டுக்கல்லில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று மே மாதம் 15 ஆம் நாள், தமிழக சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அறிவித்தார்.

எதற்காக இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது?

முதல்வர் சொல்கிறார்!

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்த்தெழுந்து, தன்னுயிரையும் துச்சமென மதித்துப் போராடிய …….

இதில் கவனிக்கப் படவேண்டியது ”ஏகாதிபத்தியத்திற்கும், அடிமைத்தனத்திற்கும் எதிரான போராட்டம்”

அந்த போராட்டம் என்ன? அடிமைத்தனம் என்ன?

 

வரலாறு என்ன சொல்கிறது? முதலில் கிறிஸ்தவப் பாதிரியாரின் குறிப்பிலிருந்து தொடங்குவோம். கிறிஸ்தவ, முஸ்லீம்கள் சொன்னால் நமக்கு அது வேத வாக்கு ஆயிற்றே! அதுவும் வெள்ளைக்கார பாதிரியென்றால் கேட்கவே வேண்டம்! சூரியன் மேற்கே உதிக்கிறது என்றாலும் அது சரியே!. அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற அக்மார்க் வெள்ளைக்கார ஐரோப்பிய பாதிரி பார்தலோமாகொ (Fra Bartolomaco) தனது கிழக்கிந்தியப் பயணம் ( Voyage to East India) என்ற புத்தகத்தில் திப்புவின் கொடுமைகளை எப்படி விவரிக்கிறார்?

Tipu_Sultan_BL”முதலில் 30000 காட்டுமிராண்டிகள் கொண்ட ஒரு படை கண்ணில் கண்ட அனைவரையும் கொன்று குவித்தது. அதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்சு கமாண்டர் M. Lally தலைமையின் கீழ் ஒரு field gun unit வந்தது. திப்பு சுல்தான் ஒரு யானை மீது அமர்ந்து வந்தான், அவனைத் தொடர்ந்து மேலும் 30000 பேர்கள் கொண்ட ஒரு படை தொடர்ந்தது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் கோழிக்கோட்டில் தூக்கில் தொங்க விடப்பட்டனர். முதலில் தாய்மார்கள் தூக்கிலிடப்பட்டார்கள், அவர்கள் கழுத்துகளில் குழந்தைகள் தொங்க விடப்பட்டனர். காட்டுமிராண்டியான திப்பு சுல்தான் நிர்வாணமான கிறிஸ்தவர்களையும், ஹிந்துக்களையும் யானையின் கால்களில் கட்டி, அந்த யானைகளை நகரச் செய்யும் போது, ஆதரவற்ற அந்த அபலைகள், கடைசியில் சின்னாபின்னமானார்கள். கோயில்களும் சர்ச்சுகளும் எரிக்கப்பட்டன, அசுத்தப்படுத்தப் பட்டு, அழிக்கப்பட்டன. கிறிஸ்தவ மற்றும் ஹிந்துப் பெண்கள் முகம்மதியர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர், அதே போல அவர்களும் முகம்மதியப் பெண்டிரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டனர். எந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்தார்களோ, அவர்கள் அந்த இடத்தி லேயே தூக்கிலாடினார்கள். மேற்கூறிய சோக நிகழ்வுகள் பற்றிய சேதிகள் எல்லாம், திப்புவின் படையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், ஆலுவாவுக்கு(Aluva) அருகே இருக்கும் வரப்புழாவுக்கு வந்த போது, தெரிவித்தவை; இது தான் Carmichael Christian Missionனின் தலைமையிடம். நானே கூட படகுகள் மூலம் பல அபலைகள் தப்ப உதவினேன்.

(K.P. Padmanabha menonனின் cochin history பக்கம் 573)

 

பாதிரி பார்தலோமாகொ (Fra Bartolomaco)  பயணக் குறிப்பு எழுதுபவர். அவர் அங்கி மாட்டினாரா?, பாவ மன்னிப்பு கொடுத்தாரா என்றெல்லாம் நம் பாவிகள் கேட்கக் கூடும். அதனால் மேலும் இரண்டு பாதிரிகளின் குறிப்பை பார்ப்போம். அப்படியாவது இந்தப் பாவிகள் நம்புவார்களா? அல்லது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகம் என்பதால் பாதிரிகளை திட்டுவார்களா? பாதிரிகளை திட்டினால் ரோமானிய கடாட்சம் கிடைக்காது என்று அஞ்சுவார்களா? அங்கியுடன் மதமாற்றம் செய்ய வந்த ஜெர்மென் மிஷனரி கண்டெஸ்ட் (Guntest) என்ன சொல்கிறார்:

“60000 பேர்கள் கொண்ட படையோடு திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து  அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது”

இதையே மற்றொரு கிறிஸ்தவரான பார்க்ஹர்ஸ்ட் (CA Parkhurst ) உறுதி செய்கிறார்.

“கிட்டத்தட்ட மொத்த கோழிக்கோடும் தரை மட்டமாக்கப்பட்டது”

ஆமேன் சொன்ன பின் அப்பீல் உண்டா? கிறிஸ்தவர்களே சொல்லிவிட்டார்கள்! இன்னுமா சந்தேகம்? இருப்பினும் மதச்சார்பற்ற வரலாற்றாளர்களின் கருத்தையும் கொஞ்சம் படித்துப் பார்ப்போமே!

 

Gazetteer of Keralaவின் முன்னாள் ஆசிரியரும், பிரபலமான வரலாற்று ஆசிரியருமான திரு.ஸ்ரீதர மேனோன் (A. Sreedhara Menon) , திப்புவின் கேரளப் படையெடுப்பின் பெரு நாசம் பற்றி துல்லியமாக வர்ணித்திருக்கிறார். அவை என்ன ? படித்த பின் அவரையும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆக்கி விடாதீர்கள் தோழர்களே! பாவம் பொழச்சுப் போட்டும்!

”ஹிந்துக்கள், குறிப்பாக இஸ்லாமிய கொடுமைகளை எதிர்த்த நாயர்களும், தளபதிகளும், திப்புவின் கோபத்திற்கு பிரதான இலக்கானார்கள். நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள், அவர்களின் பாரம்பரியமான சமுதாய சலுகைகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், நாயர்களும், ஹிந்துக்களின் மேல்தட்டு மக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, அவர்களின் முன்னோர் இல்லங்களிலிருந்து விரட்டப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தஞ்சம் புகுந்தார்கள், நூற்றுக்கணக்கானோர் திப்புவின் கொடுமைகளிலிருந்து தப்ப காடுகளிலும் மலைகளிலும் தஞ்சம் புகுந்தார்கள், இது அவர்களின் பாதுகாப்பு உணர்வை முழுவதுமாக உலுக்கி விட்டது”.

 

இங்கிலீஷ்காரன் வரலாறும், கால்டுவெல்லும், மெக்காலேயையும் குரு முதல்வராகக் கொண்டு, இந்திய சிந்தனைகளையும், வரலாற்றுப் பதிவுகளையும் புறம் தள்ளும் சிந்தனைச் சிற்பிகளுக்கு,  மங்களூரில் நிறுத்தப்பட்டிருந்த ப்ரிட்டிஷ் ராணுவத்தின் கர்னல் புல்லர்டன் (fullarton) என்ற ஆங்கிலேயரின் அதிகாரபூர்வமான அறிக்கை:

”ஜாமோரின் அரசனாலும், அவரது ஹிந்து படை வீரர்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்த பாலக்காடு கோட்டை முற்றுகையின் போது, 1783ம் ஆண்டு மிக கொடூரமான செயல்களை பிராமணர்கள் மீது கட்டவிழ்த்து விட்டான் திப்பு சுல்தான். திப்புவின் படை வீரர்கள் தினமும், அப்பாவி பிராமணர்களின் தலைகளை, ஜாமோரின் கோட்டையில் உள்ளவர்கள் பார்வையில் படுமாறு பிளந்தார்கள். அந்த கோரங்களை காணச் சகியாமலும், அப்பாவி பிராமணர்களின் படுகொலையை தடுக்கும் வண்ணமும் ஜாமோரின் பாலக்கோடு கோட்டையை கைவிட நேர்ந்தது”.

 

சொன்னால் நம்பமாட்டோம். ஆவணம் இருக்கிறதா என்று ஆணவமாகக் கேட்பார்கள் நம் உண்மை விரும்பி தோழர்களும், பகுத்தறிவுப் பெட்டகங்களும். பல்வேறு ராணுவ பிரிவுகளுக்கு திப்பு அனுப்பிய முதன்மை ஆணை, பாலக்கோடு கோட்டையை ஆங்கிலேயக் கம்பெனி 1790ல் கைப்பற்றிய போது ஆவணங்களில் கண்டெடுக்கப்பட்டது. இது malabar manualன் பக்கம் 510ல் அடிக்குறிப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

“இது அனைத்து ராணுவப் பிரிவுகளுக்கும் என்ன அறிவுறுத்தியது என்றால், மாவட்டத்தில் உள்ள அனைவரும் இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும், அவர்கள் மறைவிடங்களிலிருந்து அவர்களை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் அனைவரையும் இஸ்லாத்துக்கு மாற்ற, உண்மையோ, பொய்யோ, ஏய்ப்போ, பலப் பிரயோகமோ, எதை வேண்டுமானாலும் கையாள வேண்டும்”.

 

திப்புவுக்கு மணிமண்டபம் வைக்க ஒரு தகுதி உள்ளது என்று நம் திப்புவின் பிரஜைகள் வாதிட ஒரு காரணம் இருக்கிறது.  பார்ப்பானை கொன்றான் ! தீபாவளியை ஒழித்தான்! சமஸ்கிருத கல்விச் சாலையை அழித்தான்! இதைவிட வேறு என்ன வேண்டும் ? இத்தகவலை எனது நண்பரும், மூத்த ஆராய்ச்சியாளருமான திருமதி.ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள் எனக்கு அனுப்பினார். அதை  இந்த இணைப்பில் காணலாம் (https://groups.yahoo.com/group/ramanuja/message/4857).

tipu_villain_or_hero“அண்மைக்கால வரலாற்றில், யதுராயர் நிறுவிய வம்சத்தவரால் மேல்கோட்டை  ஆளப்பட்டு வந்தது. அவரது வம்ஸத்தவர் பல நீர் நிலைகளை ஏற்படுத்தினார்கள் – கல்யாணிகள் – அவைமிக திறன் மிக்கவையாகவும் அழகாகவும் இருந்தன. அங்கே ஒரு சிறிய அளவிலான பண்டித குழுவினர் தழைத்தார்கள். 19ம் நூற்றாண்டின் முற்பகுதில், திப்பு சுல்தானின் படை ஒரு தீபாவளி நன்னாளில் அங்கே சூறையாடி 800 குடிமக்களை கொன்று குவித்தது, அவர்களில் பெரும்பாலானோர், மாண்டயம் ஐயங்கார்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். சம்ஸ்க்ருத பாண்டித்யம்தான் அவர்களின் பலமாக இருந்தது. (இன்று வரை மேல்கோட்டையில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.) அந்த நரவேட்டை மேல்கோட்டையை ஒரு பிசாசு நகரமாக மாற்றியது. சுற்றுச் சூழலோடு இயைந்த இதன் வாழ்க்கை அறுந்து போனது, கல்யாணிகள் நாசமாகின, நீர் பற்றாக்குறை பீடித்தது, குன்றுகள் வறண்டன, சம்ஸ்க்ருதம் தனது இல்லங்களில் ஒன்றை இழந்தது.”

அப்பாடா! இதற்காகவாவது மணிமண்டபம் கட்ட வேண்டாமா? வீரமணி மண்டபத்தில் விருந்து வைப்பார்! கவலை வேண்டாம்!

 

மயக்கமற்ற நிலையில் ஒரு மனிதனாகப் பார்த்தால், இப்படி, ஆண், பெண், பச்சிளங்குழந்தைகள் என்று பாகுபாடில்லாமல் மக்களை சித்திரவதை செய்து கொன்று குவித்து, சொத்துக்களை சூறையாடி, வாள் முனையில் லட்சக்கணக்கானோரை மதமாற்றிய  திப்பு மற்றும் ஹைதர் அலியின் கொடுமைகளை ஏகாதிபத்திய அடிமைத்தள எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்ல முடியுமா?

 

வரலாறு என்பது, ஆதிக்க வர்க்கம் அவர்களுக்கு சாதகமாக எழுதுவது என்று பாடம் சொல்லும் கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையில் உதித்த மணிமண்டபமாயிற்றே? அதனால் இதை பூஷ்வாக்களின் ஒப்பாரி என்று கூடச்சொல்வார்கள். அப்படியென்றால் முஸ்லீம்களின் வரலாற்றுக் குறிப்பு ஏதேனும் உள்ளதா? முஸ்லீம்கள் சொன்னால் இந்த நாட்டில் எதை வேண்டுமென்றாலும் நம்பலாமே! அவுரங்கசீபின் கொடுமைகளை சித்தரிக்கும் கண்காட்சி, முஸ்லீம்கள் அவுரங்கசீப் ’நல்லவன்’ – னு சொன்னதால் தானே மார்ச்சு 6, 2008 அன்று சென்னையில் நிறுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் முஸ்லீம்களின் குறிப்பை இந்த அறிவை தின்று உயிர் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

 

மைசூர் ராணுவத்தின் ஒரு இஸ்லாமிய அதிகாரி  இஸ்லாமிய கொடுமைகளை தனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார், அதனை திப்புவின் 11வது மகனும் உயிர் தப்பிய ஒரே வாரிசுமான குலாம் முகம்மது சுருக்கமாக எழுதியுள்ளார். (இந்த இளவரசர் குலாம் முகம்மது, திப்பு சுல்தான் 1799ல் இறந்த  பின்னர் ப்ரிட்டிஷாரால் கொல்கொத்தாவுக்கு நாடுகடத்தப்பட்டார்) இதோ அந்தப் பொன் எழுத்துக்கள் உங்கள் பார்வைக்கு…

“4 காத தொலைவு வரை தெருக்களில் எதையும் காணவில்லை, ஹிந்துக்களின் சிதறிய உறுப்புகளையும், சிதைவடைந்த உடல்களையும் தவிர எதையும் பார்க்க முடியவில்லை. நாயர்களின் (ஹிந்துக்கள்) நாடு, பொதுவான கிலியால் பீடிக்கப்பட்டிருந்தது, அதனை ஹைதர் அலிகானின் படையெடுக்கும் குதிரைப்படையின் பின்னே வந்த மாப்பிள்ளைகளின் கொடூரம் மிகவும் அதிகப்படுத்தியது; அவர்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட எல்லோரையும் படுகொலை செய்தனர்; கொந்தளித்து வரும் இந்த மாப்பிள்ளைகளின் பெரும்படையின் நடத்தை காரணமாக எந்த எதிர்ப்பும் இல்லாதது மட்டுமல்லாமல், கிராமங்கள், கோட்டைகள், கோவில்கள், மக்களின் அனைத்து வசிப்பிடங்கள் என எல்லாமே ஆளரவமற்று இருந்தன. (பக்கம் 461)

திரும்பிய பக்கமெல்லாம் ஹைதர் அலி கானுக்கு எதிர்ப்பே காணப்படவில்லை; ஒவ்வொரு வசிப்பிடமும் கைவிடப்பட்டு, அதில் வசித்து வந்த பொது மக்கள் பாவம், காடுகளுக்கும், மலைகளுக்கும் தப்பிச் சென்றனர்; அங்கும் அவர்களின் துரதிர்ஷ்டம் துரத்தி வந்தது. பிராமண தூதுவர்களை ஹைதர் அலி கான் காடுகளுக்கு அனுப்பி வைத்து, தான் ஓடிப் போன ஹிந்துக்களை மன்னிப்பதாக வாக்களித்தான். ஆனால் கருணை, மன்னிப்பு என்ற வாக்குக்கு செவி சாய்த்து திரும்பி வந்த அந்த அபலைகளை, வட இந்தியாவின் இஸ்லாமிய கொடுங்கோலனைப் போலவே தூக்கிலிட்டான், அவர்களின் பெண்டிரும், குழந்தைகளும் அடிமைகளாக்கப்பட்டனர் (ப.468)

கேரளத்தை விட்டு அகலும் முன்பாக ஹைதர் அலி கான், நாயர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சமுதாய, அரசியல் உரிமைகளைப் பறிப்பதாக பிரகடனப்படுத்தினான், அவர்கள் ஆயுதங்களை தாங்க முடியாது. இந்த பிரகடனத்தினால், தன்மானம் உள்ள நாயர்களை தலை வணங்கச் செய்ய முடியவில்லை, ஏனென்றால், இத்தகைய அவமானங்களையும், சீர்கேட்டையும் விட மரணமே மேல் என்று நினைத்திருக்கலாம். அதனால் ஹைதர் அலி கான் வேறு ஒரு பிரகடனத்தை பிறப்பித்தான், அதன்படி, எந்த நாயர்கள் இஸ்லாத்தை தழுவ முன் வருகிறார்களோ, அவர்களுக்கு சமுதாய, அரசியல் உரிமைகள் மீட்கப்படுவதோடு, அவர்கள் ஆயுதங்களும் தாங்கலாம் என்று அறிவித்தான். பல பிரபுக்கள் இஸ்லாத்தை தழுவ வேண்டி இருந்தது; ஆனால் கணிசமான பெரும்பகுதியினர் (நாயர்கள், பிரபுக்கள், பிராம்மணர்கள்) இந்த கடைசி பிரகடனத்திற்கு தலைவணங்குவதைக் காட்டிலும், தெற்குப் பகுதியில் இருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் தஞ்சம் புகுவதையே மேல் என்று கருதினார்கள்”. (பக்கம் 469)

 

1782 முடிவு வாக்கில் திப்பு மைசூரின் சுல்தானான போது, வடக்கு மலபாரின் அனைத்து ராஜாக்களும், தளபதிகளும் புரட்சி செய்து, சுதந்திரப் பிரகடனம் செய்தார்கள். பிரிட்டிஷாரும் வல்லமை அதிகம் பெற்றவர்களாக இருந்தார்கள். மலபாரை விட்டு ஹைதர் அலி கான் சென்ற பிறகு, மைசூரின் ஆளுமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்திய சமஸ்தானங்களை மீண்டும் அடக்கி, மீட்டெடுப்பதே திப்புவின் முற்கால ராணுவ செயல்பாடாக இருந்தது. இதுவரை மிகவும் அமைதியான, நேர்மையான பிராமணர்களே, உயர் இடங்களுக்கு தூதுவர்களாக அனுப்பப்பட்டு வந்தார்கள். ஆனால் திப்புவின் ஆணைக்குட்பட்டு, “அவர்கள் பிடிக்கப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டு, இஸ்லாத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டார்கள்” அதனால் அவர்கள் திப்புவுக்கு தூதுவர்களாக செயல்படுவதை ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க வாக்களித்த பிரிட்டிஷாருடைய தூதுகளையும் ஏற்று மலபாருக்கு செல்ல மறுத்தார்கள். கோழிக்கோட்டிலிருந்து உறுதியாக தெரிய வந்த தகவல் என்னவென்றால், அங்கே 200 பிராமணர்கள் பிடிக்கப்பட்டு, அடைக்கப்பட்டு, இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு, மாட்டிறைச்சி புகட்டப்பட்டார்கள், அவர்கள் பாரம்பரியத்துக்கு எதிரான விஷயங்களை செய்ய வைக்கப்பட்டார்கள்” (பக்கம் 507).

 

இப்படி எழுதிய திப்புவின் மகன், ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டவன். ஆங்கிலேயர்கள் அவனை இப்படி எழுதச் சொல்லியிருப்பார்கள். எழுதிய பேனாவின் மை தொழிலாளர்களின் இரத்தத்தால் உருவானது அதை மார்க்ஸ்தான் முதலில் கண்டுபிடித்தார் என்று கூட ஒரு வாதத்தை இந்த சுல்தான்களின் அடிவருடிகள் முன்வைக்கலாம். அதிர்ஷ்டவசமாக திப்புவின் திருக்கரங்களால் எழுதப்பட்ட சில கடிதங்கள் கிடைத்துள்ளன. மலையாள பஞ்சாங்கப்படி சிங்கம் 1099ம் ஆண்டு, அதாவது ஆகஸ்ட் மாதம் 1923ம் ஆண்டு பாஷா போஷினி பத்திரிக்கையில் சர்தார் கே.எம்.பணிக்கர் (Sardar K.M Panicker) வெளியிட்ட சில ஆய்வுக் கட்டுரைகள் திப்புவை தோலுரித்துக் காட்டுகிறது. கேரள வரலாறு பற்றிய அவரது ஆழ்ந்த ஆய்வுக்காக அவர் அவற்றை லண்டனில் இருக்கும் The India Office Libraryயிலிருந்து கொணர்ந்தார் என்பதும் மேற்கோளில் காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகளை சுல்தான் – உத் – தவரிக் (Sultan-ut Tawarikh) மற்றும் தரிக் – இ – குடடாடி ( Tarikh-i-Khudadadi) என்ற இந்த காட்டுமிராண்டிகளின் சுய சரிதத்திலிருந்து பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைசூர் இறுதிப் போர் - திப்புவின் மரணம்
மைசூர் இறுதிப் போர் – திப்புவின் மரணம்

ஜனவரி மாதம் 19ம் தேதி 1790ம் ஆண்டு, திப்பு, பேக்கலின் (Beakel) ஆளுநர் புட்ருஸ் சுமான் கான் க்கு ( Badroos Saman Khan ) எழுதியது.

“நான் மலபாரில் பெரிய ஒரு வெற்றியை அடைந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியாதா, அதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டார்கள். நான் திருவாங்கூர் மன்னனான நாசமாய் போன இராமன் நாயருக்கு எதிராக போர் தொடுக்க தீர்மானம் செய்திருக்கிறேன். (அவன் இங்கே குறிப்பது திருவாங்கூர் சமஸ்தான ராஜா ராம வர்மா, அவர் மலபாரிலிருந்து தப்பி ஓடி வந்த அனைவருக்கும் கருணையோடு தஞ்சம் அளித்ததால், அவர் தர்ம ராஜா என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்).அவரையும் அவர் குடிமக்களையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்ற துடியாய் துடிக்கிறேன், நான் தற்போதைக்கு ஸ்ரீ ரங்க பட்டினத்துக்கு திரும்பும் என்ணத்தை கை விட்டிருக்கிறேன்.”

 

1788ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அப்துல் காதிருக்கு ( Abdul Kadir) எழுதிய கடிதம்:

“12,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாத்தால் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களில் பல நம்பூதிரி பிராம்மணர்களும் அடக்கம். இந்த சாதனை ஹிந்துக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும். அங்கே இருக்கும் உள்ளூர் ஹிந்துக்கள் உங்கள் முன்னே கொண்டு வரப்பட்டு, இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும். எந்த ஒரு நம்பூதிரியையும் விட்டு வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல், அவர்கள் போட்டுக் கொள்ள வேண்டிய உடைகள் உங்களை வந்து அடையும் வரை அவர்களை அடைத்து வைக்க வேண்டும்.”

 

1788ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதியிட்ட, கோழிக்கோட்டில் இருந்த அவனது ராணுவத் தளபதிக்கு வரையப்பட்ட கடிதம்:

“நான் மீர் ஹுஸேன் அலியுடன் ( Mir Hussain Ali ) எனது 2 தொண்டர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உதவியோடு, நீங்கள் அனைத்து ஹிந்துக்களையும் கைப்பற்றி கொல்ல வேண்டும். 20 வயதுக்கு உட்பட்டோர் சிறையில் வைக்கப்படலாம், மற்றவர்கள் எல்லாம் மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும், இவை என் ஆணைகள்”.

ஷேக் குதுப்புக்கு (Sheik Kutub ) டிசம்பர் 21ம் தேதி 1788ம் ஆண்டு வரைந்த கடிதம்:

“242 நாயர்கள் கைதிகளாக அனுப்பப்படுகிறார்கள். அவர்களை சமுதாய, குடும்ப அந்தஸ்துப்படி வகைப்படுத்துங்கள். அவர்களை இஸ்லாத்தால் கௌரவித்த பின்னர், ஆண்களுக்கும் அவர்களின் பெண்டிருக்கும் போதுமான துணி வகைகளை அளிக்கவும்”.

 

1790ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி சயீத் அப்துல் துலாயிக்கு ( Syed Abdul Dulai)  எழுதிய கடிதம்:

”நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வின் அருளினால் கிட்டத்தட்ட கோழிக்கோட்டில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு விட்டார்கள். கொச்சி மாநிலத்தின் எல்லைப்புறங்களில் தான் மதம் மாற்றப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்களையும் நான் விரைவில் மதம் மாற்றி விடுவேன். நான் இதை ஜிஹாத்தாக கருதுகிறேன், அந்த இலக்கை விரைவில் அடைவேன்”.

 

இதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தப் புத்தகங்கள் கூட ஏகாதிபத்திய, அடக்குமுறையாளர்களின் நூலகத்திலிருந்தது எடுக்கப்பட்டது தானே! என்று நம் புரட்சியாளர்கள் வாதிடலாம்.இதை அன்றே திப்பு அறிந்திருந்தான். இந்த பிரச்சினை நாளை நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் வாளிலேயே தன் எண்ணத்தை வடித்து வைத்திருந்தான். இஸ்லாத்தை நிலை நிறுத்தவும். பிற சமயங்களை அழிக்கவும் தன் வாளுக்குள் புகுந்து துணை புரிய அல்லாவை கூவி கூப்பிட்டது, திப்பு மார்கஸ் வெல்லஸ்லிக்கு ( Marquess Wellesley) பரிசளித்த வாளின் கைப்பிடியில்  பொறிக்கப்பட்டுள்ளது.

“நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என் வெற்றிவாள் மின்னல் போன்றது. விசுவாசிகளின் தலைவனான அலி, எனக்கு சாதகமாக வெற்றிகளை வழங்குகிறார், மேலும் அவர் விசுவாசம் இல்லாத தீய இனத்தை அழித்தார். இறைவா போற்றி, நீயே உலகங்களுக்கெல்லாம் தலைவன். நீயே எங்கள் அனைவருக்கும் தலைவன், நீ தான் விசுவாசிகள் அல்லாத நபர்களிடம் இருந்து எங்களை ஆதரிக்கிறீர். யாருக்கு இறைவன் வெற்றியை அளிக்கிறாரோ, அவரே மனித குலத்தின் தலைவன் ஆகிறான். இறைவா, முகம்மதுவின் சமயத்தை யார் ஒருவர் பரப்புகிறாரோ அவருக்கே வெற்றியை அளியும். முகம்மதின் சமயத்தை யார் ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை நாசம் செய்யுங்கள்; அத்தகைய நபர்களிடமிருந்து எங்களை விலக்கியே வையுங்கள். தனது செயல்களில் இறைவனே மேலோங்கி நிற்கிறான். வெற்றியும், படையெடுப்பும் இறைவனிடமிருந்தே. ஓ முகம்மதுவே!, விசுவாசிகளுக்கு மங்கலங்களை அளியுங்கள், கடவுள் அன்பே உருவான ரட்சகன், அளப்பரிய கருணை கொண்டவர். கடவுள் உங்களுக்கு உதவி செய்தால், நீங்கள் வளம் பெறுவீர்கள். கடவுள் மகத்தான வெற்றியை அளித்து, உங்களுக்கு உதவி செய்யட்டும், ஓ முகம்மதுவே.!”

tipu-no-heroஒரு இனம் எப்படி அழியவேண்டும் என்பதை ஈவு இரக்கமில்லாத கொடுமைக்காரன் எப்படி அனுபவித்து வருணிப்பான்! கொஞ்சம் கற்பனை செய்து பார்த்து விட்டு இதை படியுங்கள். இந்த வாசகம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில், கோட்டையின் மிக முக்கியமான இடத்தில் 1780ல் நடைபெற்ற போரின் நினைவாக பொறிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு 1795 ல் கண்டெடுக்கப்பட்டது.

”ஓ சர்வவல்லமை பொருந்திய இறைவா! விசுவாசிகள் அல்லாதவர்களின் உடலை ஒழித்து விடு! அவர்கள் இனத்தை சின்னாபின்னமாக்கு! அவர்கள் கால்களை தடுமாறச் செய்! அவர்கள் சபைகளை தூக்கியெறி! அவர்கள் நாட்டை மாற்று, அவர்களை வேரடி மண்ணோடு நிர்மூலமாக்கு! அவர்களுக்கு பிரியமானவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்து! உயிர் வாழும் வழிகளை அழித்து விடு! அவர்கள் வாழ்நாளை குறைத்து விடு! மரணம் அவர்களை நிழலைப் போலத் தொடரட்டும்! அவர்கள் உடலை நோய் பீடிக்குமாறு செய்! அவர்கள் கண்பார்வையை மங்கச் செய்!, அவர்கள் முகத்தில் கரியை பூசு (அவமானத்தை உரித்தாக்கு)”

இந்த ஸ்ரீரங்கபட்டினக் கோட்டையில் சில  தங்கப் பதக்கங்கள் கண்டெடுக்கப்பட்டன; அதில் ஒரு பக்கத்தில் பாரசீக மொழியில், :”ஆசிகளை நல்குவது கடவுள் ”, என்றும், மறு பக்கத்தில் “வெற்றியும் படையெடுப்பும் இறைவனிடமிருந்தே வருகின்றன”. என்றும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மதமாற்றம் இதெல்லாம் அல்லாவின் ஆணைப்படி செய்தேன்! இஸ்லாத்தின் அடிப்படையே இந்த ஜிஹாத் என்ற கொலை வெறி என்பதை அரங்கேற்றிய திப்பு சுல்தானே ஒப்புக் கொண்டுவிட்டான் ஆனால் மைனாரிட்டிகளுக்கு ஷாம்பூ போடும் இடதுசாரிகள், இத்தாலி சாரிகள், கழகக் கண்மணிகள், மற்றும் அறிவைமட்டுமே தின்று உயிர் வாழும் அறிவுஜீவிகள் ஒத்துக்கொள்வார்களா?

இப்படி வெறியாட்டம் ஆடிய ரத்தக்காட்டேரிகள் ஆலயங்களை விட்டு வைத்திருப்பார்களா என்ன? ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

 

Mysore Gazetteer, சூறையாடும் திப்பு சுல்தானின் படை, தென்னிந்தியாவின் 8000த்திற்கும் மேற்பட்ட கோயில்களை அழித்ததாக கூறுகிறது. மலபார், கொச்சின் சமஸ்தானங்கள் தான் இந்த கொள்ளை மற்றும் நாச வேலையின் பெரும் பகுதியை ஏற்க வேண்டியிருந்தது என்று பதிவு செய்துள்ளது.

 

திரு கே.பி.பத்மநாப மேனோன் (K.P. Padmanabha memon) அவர்கள் எழுதிய History of Cochin, திரு ஏ.ஸ்ரீதர மேனோன் (A Sreedhara Menon) எழுதிய History of Keralaஆகிய நூல்கள், திப்புவால் தரைமட்டமாக்கப்பட்ட கோயில்களை பட்டியலிடுகின்றன.

 

மலையாள ஆண்டு, சிங்கம் 952, அதாவது ஆகஸ்ட் 1786ல், திப்புவின் படை பிரபலமான பெருமனம் கோயிலின் விக்ரகங்களை அழித்து, திரிசூர் மற்றும் கருவனூர் ஆறுகளுக்கு இடையே இருந்த அனைத்து கோயில்களையும் நாசம் செய்தது. ”இரிஞ்சாலக்குடா, திருவஞ்சிக்குளம் கோயில்களும் திப்புவின் படையினரால், அசுத்தம் செய்யப்பட்டு நாசம் செய்யப்பட்டன.”

அவர்கள் சூறையாடி நாசம் செய்த பிரபலமான கோயில்களில் சில: த்ரிப்ராங்கோட், த்ரிச்செம்பரம், திருநாவாய், திருவன்னூர், கோழிக்கோடு தளி ஹேமாம்பிகா கோயில், பாலக்கோட்டில் உள்ள சமண கோயில், மம்மியூர், பரம்படலி, வெங்கிதாங்கு, பெம்மாயநாடு, திருவஞ்சிக்குளம், தெருமனம், திருசூரின் வடக்கநாதன் கோயில், பேலூர் சிவன் கோயில், ஸ்ரீ வெலியானட்டுக்கவா, வரக்கல், புது, கோவிந்தபுரம், கேரளாதீச்வரா, த்ரிகண்டியூர், சுகபுரம், ஆல்வன்சேரி தம்ரக்கால், ஆரநாடின் வெங்கார கோவில்,  ராமநாதக்கரா, அழிஞ்சாலம் இந்தியன்னூர், மன்னூர் நாராயண கன்னியார், மாடை வடுகுந்த சிவன் கோயில்.

 

கோயில்களை இடிப்பதை ஒரு இறை பணியாகக் கொண்டிருந்தான் திப்பு என்பதை சர்தார் பணிக்கைகர் தனது புத்தகமான  Freedom Struggle ல் குறிப்பிடுகிறார்.

திப்பு சுல்தானின் சில தனிப்பட்ட நாட்குறிப்புகளின் படி, சிரக்கல் ராஜா அவனுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தையும் வெள்ளியையும் அளித்து, திப்புவின் படை உள்ளூர் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் இருக்க வாக்குத்தர வேண்டினாராம். ஆனால், தனது இயல்புக்கு ஏற்றபடியே, “உலகமே எனக்கு அளிக்கப்பட்டாலும், நான் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் விடுவதில்லை” என்று திப்பு பதில் அளித்தானாம்.

 

இப்படிப்பட்ட வன்கொடுமையாளனை மத நல்லிணக்கவாதியாக சித்தரித்து திப்புவின் வாள் (sword of Tippu Sulthan)  என்ற தொலைக்காட்சித் தொடர் நம் நாட்டின் அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனால் ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, திப்பு எப்படி அனைத்து மதத்தவரையும் அரவணைத்து ஆட்சி நடத்தினான் என்று சில அறிவு ஜீவிகள் கட்டுரைகளும், தொலைக்காட்சிப் பெட்டியில் பேட்டிகளும் கொடுத்து முஸ்லீம்கள் அருள் வேண்டி மண்டியிட்டனர். உண்மையிலேயே இந்துக்கள் மீது திப்பு மதிப்பு வைத்திருந்தானா? இதோ முனைவர். எம். கங்காதரன் மாத்ருபூமி வார இதழில் ஜனவரி 14-20, 1990ல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி

“திப்புவின் காலத்தில் மைசூரில் நிலவிய சமுதாய, சமய, அரசியல் நிலைகளை வைத்துப் பார்க்கும் போது, இது போன்றவற்றை தவிர்க்க முடியாது. ச்ருங்கேரி மடத்துக்கு கெட்ட ஆவிகளை விரட்ட நிதி உதவி கொடுக்கப்படுவது பற்றிய தகவலும், திப்பு சுல்தான் எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவே ஹிந்து சமயத்தை திப்பு மதித்தான் என்பதற்கு சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது.”

tipu sultan_elephant

மேலும் திப்புவின் போலி மத சகிப்புத்தன்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார் லூயிஸ் ரைஸ் (Lewis Rice)

ஸ்ரீரங்கப்பட்டினக் கோட்டைக்குள்ளே 2 ஹிந்துக் கோயில்களின் பூஜைகள் நடைபெற்று வந்தன, மற்ற கோயில்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிர்வாக விஷயங்களிலும் கூட இஸ்லாமியர்களுக்கு வெளிப்படையாக பாரபட்சம் காட்டப்பட்டது, குறிப்பாக வரிவிதிப்பு கொள்கையில். இஸ்லாமியர்கள் அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு பெற்றிருந்தார்கள். இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது என்கிறார் கோபால் ராவ். வேலை வாய்ப்பு விஷயத்தில், ஹிந்துக்கள் முடிந்த வரை விலக்கி வைக்கப்பட்டார்கள். திப்பு சுல்தானின் மொத்த 16 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில், முக்கியமான பதவி வகித்த ஒரே ஹிந்து அதிகாரி பூர்ணைய்யா தான்.

 

இந்த திப்பு மற்றும் ஹைதர் அலியின் கொடுமைகளும், கோர தாண்டவங்களும் இன்றளவும் கூட கேரள மக்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுல்தான்களின் காலத்திலும் சரி, சுதந்திரப் போராட்ட காலத்திலும் சரி, மதமாறிய முஸ்லீம்கள், எல்லைதாண்டிய இஸ்லாமிய விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர் என்ற செய்தியை நாடறிந்த சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு. கே.மாதவன் நாயர் எப்படி பதிவு செய்கிறார்? இதோ அந்தப் பதிவு…

“கொடூரமான மாப்பிள்ளை லஹலா (1921ல் மலபாரில் நடந்த கிலாஃபத் கலவரத்தின்) தோற்றுவாயை, திப்பு சுல்தான் நிகழ்த்திய படயோட்டக்கலத்தின் பரவலான, கட்டாயமான மதமாற்றம் மற்றும் கொடுமைகளின் பின் விளைவுகளில் காண முடியும்.”

 

இந்திய வரலாறு! ஏன், உலக வரலாற்றிலேயே நாகரீகமான எந்த சமுதாயமும் வெட்கித் தலை குனியும் அளவுக்கு அரங்கேறிய மாப்பிளா கலகத்தின் தோற்றுவாய் என்று சுமார் 150 ஆண்டுகளுக்குப் பின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அளவுக்கு மேற்கோள் காட்டப்பட்ட கொடுமை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த கொலைகார, கொள்ளைக்கார, காட்டுமிராண்டிகளுக்கு முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் மண்ணிலும், மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் மண்ணிலும்.அறம் வளர்த்த ஒளவையும் வள்ளுவனும் வாழ்ந்த மண்ணில் மணிமண்டபமா?

சங்க இலக்கியமான புறநானூறு பெருங்குற்றங்களாக எவைகளை சுட்டிக் காட்டுகிறது?

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்

பார்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வடுவாய் முழுங்கிற் கழுவாயு முளவென

நிலம்புடை பெயர்வ கொடுமை யோர்க்கும்

செய்தி கொன்றோர்க்குய்தி யில்லென

புறநானூறு (34 : 1-6)

நன்றி மறப்பது தான் பெரிய குற்றம் என்பதை சொல்ல, மகா பாதகங்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.  காறாம் பசுவின் மடுவை அறுத்தல், வேத அந்தணரை கொலை செய்தல் மற்றும் கர்ப்பிணிப் பெண்ணின் கருவைச் சிதைத்தல் சங்கத் தமிழர்களால் மகா பாதகங்களாக கருதப்பட்டுள்ளது. இந்தப் பெரும் குற்றங்கள் அனைத்தையும் செய்த ஈனப் பிறவிகளுக்கு, தமிழ்தாய் சிலையும், வள்ளுவர் சிலையும் வைத்து, நான் தான் ‘ஒரிஜினல்’ தமிழன் என்று மார்தட்டும் தமிழர்கள் மணிமண்டபம் எழுப்பப் போகிறார்களாம்! முஸ்லீம் ஓட்டுக்காக இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவைதானா? தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா?

39 Replies to “திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்”

  1. இந்த அக்கிரமத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்தச் செய்தி ஒவ்வொரு தமிழனுக்கும் சென்றடைய வேண்டும். இதில் உள்ள மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால் எதிர் காலத்தில் இது இஸ்லாமியத் தீவிரவாதத்தின் கருவாக அமையும் ,

  2. கட்டுரை நன்று ஆனால் வோட்டு பொறுக்கும் திராவிடக் கட்சிகளுக்கு உண்மையை பற்றி என்ன கவலை. பயங்கரவாதம் மனித நேயம் என்று பெயர் வைத்துக்கொண்டு கூட்டணியில் உள்ளது. கூட்டணி தர்மத்தைக் கைவிடலாமா? கருணா அல்லது ஜெயா யாராகவிருந்தாலும் சிறுபான்மையை அரவணைப்பர் என்பது அரிச்சுவடி பாடம். ஹிந்துக்கள் கீதையை வாழ்க்கை நெறி முறை என உணர்ந்துள்ளனர் (படிக்காமலே) எனவே தான் எது நடந்தாலும் நல்லதை நடந்தது என வாளாஇருக்கின்றனர். பின் லேடனுக்கு மணி மண்டபம் அமைந்தாலும் அமையும்.

  3. வெள்ளையனை வெளியேற்றிவிட்டோம் என்று மார்ததட்டிக்கொள்ளும் காங்கிரசார் கொள்ளையனுடன் (கோவிலில் கொள்ளை அடித்தவர்கள் ) மட்டும் கொஞ்சி குலவுவது ஏன்? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி நின்றேன் என்ற வள்ளலார் எங்கே? வாளால் உயிரை கொன்றுகுவித்த பேடி பையன் திப்பு சுல்தான் எங்கே? எது அமைதி மதம்? இந்து மதமா? முஸ்லிம் மதமா?
    நம்மை அடிமைபடுத்தி ஆண்ட திப்புவுக்கு மனிமண்டபமாம்! நம்மை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க போராடி உயிர் துறந்த வ ஊ சி யின் பேத்தி மேற்கொண்டு படிக்கமுடியாமல் மணி (=money )க்கு திண்டாட்டம்.(இது 2 நாட்களுக்கு முன் வந்த டிவி செய்தி) நாடு எங்கே போகிறது என்றே தெரியவில்லை.
    மனிதாபிமானம் என்பதே இல்லாத ஒரு அரக்கனுக்கு மணி மண்டபம் வேண்டுமென்று மனித நேய(?!?!?!) கட்சி கேட்கிறது அது சரி. அவன் அப்படிதான் கேட்பான். ஆனால் இந்த கம்யூனிஸ்ட் கம்னேட்டிகளுக்கு என்ன நேர்ந்தது? இவனுங்க முஸ்லிம் அப்பனுக்கோ அல்லது அம்மாவுக்கோ பிறந்தான்களா? இந்த கட்டுரையினை print எடுத்து CM மற்றும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
    நாட்டில் 1000 பிரச்சனைகள் உள்ளன. அதைபற்றி சட்டசபையில் பேசாமல் மனித நேயமற்ற ஒரு murderer க்கு மணிமண்டபம் வேண்டுமாம். Minority ஓட்டுக்காக எந்த ஒரு கீழ் நிலைக்கும் இவனுங்க இறங்குவார்கள் போல் தெரிகிறதே!
    90 வயதாகியும் கருணாநிதிக்கு புத்தி வரவில்லை. Church ல்தான் நாட்டின் பல சர்ச்சைகளுக்கு வித்திடபடுகிறது. அமைதி மதம் என்ற MASK னை அணிந்துகொண்டு நாட்டின் அமைதியின்மைக்கு mosque இல்தான் சதி திட்டம் தீட்டப்படுகிறது. இவை எல்லாம் தெரிந்தும் இந்து மதத்தை இளக்காரமாக பேசுவது எழுதுவது.கருணாநிதியின் வாடிக்கையாக ஆகிவிட்டது. நாம் யார் மீதும் குற்றம் சொல்லி பயனில்லை. இந்துக்களாகிய நாம் சாதி மற்றும் மொழிவேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டால் மட்டுமே இந்துகளுக்கு விமோர்சனம் உண்டு.
    மானங்கெட்ட காங்கிரஸ் தான் சுல்தான் பற்றி அரசு தொலை காட்சியில் ஒளி பரப்புகிறது. என்றால் நடிகர் ரஜினி மகள் வேறு அவனைப்பற்றி படம் எடுக்கிறார். இவர்கள் யாரும் உண்மையான சரித்திரத்தை படிக்கமாட்டர்களோ? எப்படித்தான் இவர்களை திருத்துவது?

    A விஸ்வநாதன்

  4. ஓட்டுப்பிட்சைக்காரர் காதில் ஓதிப்பயன் இல்லை-இந்துவே
    ஓட்டுப்போடும் நாளில் ஒன்றுபட்டு ஓங்கியறை!

  5. கேரளாவில் திப்பு எல்லா இந்துக்களையும் இஸ்லாமியராக மதம் மாற்றினான். அந்த கொடுங்கோலனுக்கு நினைவு சின்னமா ? இது ஒரு மன்னிக்க முடியாத குற்றம். கேரளாவில் இஸ்லாமியர்களால் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட இந்துக்களை நாம் மீண்டும் தாய் மதம் திரும்ப ஆவன செய்வோம்.

  6. தேவையான ஒரு பதிவு.

    தமிழக அரசு இந்த மணிமண்டப அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாத காலம் ஆகிறது. ஆனால், இந்து இயக்கங்களிடம் இருந்து சரியான எதிர்ப்பு அறிக்கையோ, போராட்ட அறிவிப்போ வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

    திப்பு சுல்தான் செய்த அட்டூழியங்களை, VOI.ORGயின் இணையதள புத்தகம் ஆதாரத்துடன் பட்டியலிடுகிறது. அதை ஜெ_க்கு யாராவது அனுப்பி வைத்தால் நன்று.

    திப்பு சுல்தானை பாரத சுதந்திர போராட்ட வீரன் என்று கூறும் அறிவு ஜீவிகள், பாரத சுதந்திரம் என்றால் என்ன என்று விளக்க வேண்டும்.

    எப்படி நம் தேசத்திற்கு பிரிடீஷ் அரசு அன்னியமானதோ, அதே போன்று தான் திப்பு சுல்தான் அரசும்.

    நம் தேசத்திலேயே, பிரிடீஷ் அரசுக்கு எதிராக டச்சுகாரன் போரிட்டுள்ளான். போர்துகீசியன் போரிட்டுள்ளான். பிரன்சுகாரன் போரிட்டுள்ளான். அப்படியானால், இவர்கள்
    அனைவரும் சுதந்திர போராட்ட வீரர்களா? இவர்களுக்கும் மணிமண்டபாம் கட்டலாமா?

    இதை தாண்டி, திப்பு சுல்தான்
    21-4-1797 அன்று பிரன்சு எழுதிய கடிதத்தில், பிரன்சு அரசு பாரத தேசத்தை கைபற்ற வேண்டும் என்று எழுதுகிறான்.

    இது என்ன வகை சுதந்திர போராட்டம் என்று இடதுசாரி வரலாற்றாசிரியர்களும், போலி மதசார்பற்ற வரலாற்றாசிரியர்களும் கூற வேண்டும்.

    திப்புக்கு தேச பற்றோ, மக்கள் பற்றோ கிடையாது. தான் ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க எத்தகைய கீழ்தரமான செயலிலும் இறங்கும் ஒரு காட்டுமிராண்டி முட்டாள் தான் திப்பு சுல்தான்.

  7. கொலைகாரர்களுக்கு மணிமண்டபமா? அ நியாயம் அக்ரமம். திப்பு சுல்தானின் அராஜகங்களை அனைத்து ஹிந்துக்களும் புரிந்து கொள்ளும்வகையில் பிரச்சாரம்செய்யவேண்டும். இன்னும் தமிழ்கத்தில் திப்பு செய்த அராஜகங்களையும் வெளியிடவேண்டுகிறேன்.
    சிவஸ்ரீ

  8. Coming from JJ, this is regrettable, but not surprising.

    We have seen how JJ reverted the anti conversion law & sided with muslims during the “Viswaroopam” release.

    Now, with parliamentary elections approaching, she is eyeing the muslim vote.

    Also, why has the tamil nadu unit of the BJP not raised a word of protest?

  9. Does anybody have the mailing address to which a protest email or letter can be sent?

  10. கேவலத்திலும் மகா கேவலமான செயல் இது. வெறும் ஓட்டுப்பிச்சைக்காக செய்யப் படும் மகா கேவலமான செயல் இது.

  11. ஜெ க்கு இப்போது பிடித்திருக்கும் ஒட்டு வெறியில் அடுத்ததாக பின்லேடனுக்கு நினைவு மண்டபம் அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை……

    அப்சல் குரு , அஜ்மல் கசாப் போன்ற தியாகிகளுக்கும் , தமிழக அரசு செலவில் மணிமண்டபம் அமைத்துவிட்டால் , மதச்சார்பின்மை பட்டொளி வீசிப்பறக்கும்……

    விதியே , விதியே என் செய நினைத்தாய் என் தமிழ்ச்சாதியை?

  12. ADMK Hindukalin maanathai vaangi kondirukkirathu. BJP nandraaga thoongi kondirukkirathu. ennai pondra ullangal mattumay Engi kondirukkindrana. TAMILHINDU mattum konjam avargalai thaangi kondirukkirathu. Keduketta arasialvaathigal inthukalai arppa janthukalaaga paarkiraargalay andri nam banthukalaaga paarppathu aniyaayam.
    Endru varunthumo Hindu samuthaayam? Endru thirunthumo avargal ithayam?

  13. katturai arumai islamiyargal yarume india suthanthirathirku poradavillaya, ottu motha islamiyargalaiyum kurai sollirukkirirgale

  14. //Shankar’s question:
    Does anybody have the mailing address to which a protest email or letter can be sent?//

    Yes, please try this:
    https://cmcell.tn.gov.in
    அவரைப் போல மறுப்புகள் எழுத முயல்வோர், இந்த வலைதளத்தை பயன்படுத்திப் பார்க்கலாம்.

  15. போலி மதச்சர்ரபின்மைவாதிகளுக்கு என்னுடைய கேள்வி பட்டியல்கள்:-
    இந்து மதம் ஒரு மோசமான மதம் என்று அதை எவ்வளவு கேவல படுத்தமுடியுமோ அவ்வளவு கேவலபடுதுகிறீர்கள் மற்ற மதங்களை போற்றி புகழ்கிறீர்கள். கீழே உள்ள விஷயங்களை படித்து பாருங்கள் அவை போற்றுதலுக்குரிய மதங்கள்தானா என்று! ஒட்டு பொருக்கிதனத்திலிருந்து மாறுங்கள்.

    1. பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவளிப்பது அல்லாவின் பொருப்பிலுள்ளது ( குர் ஆன்::அத்தியாயம் 11 வசனம் 6)———->அப்படியானால் சோமாலியாவில் பட்டினி சாவிற்கு யார் காரணம்?
    2. வானத்திலிருந்து உணவை அல்லா இறக்குகின்றான் (40:13 மற்றும் 51:22)====>
    அப்படியானால் நமது ரேஷன் கடைகளில் இருக்கும் சரக்குகள் வானத்திலிருந்து வந்தவைதானா? சிலநேரங்களில் அரிசி கெட்ட வாசனை அடிக்கிறது. ஆகவே இனிமேல் வானத்திலிருந்து அனுப்பும்போது நல்ல அரிசியாக பார்த்து அனுப்புங்கள் அல்லாவே! உனக்கு புண்ணியமாக போகட்டும்!
    3.அல்லாவை விடுத்து நீங்கள் அழைக்கும் இணைகடவுல்களுக்கு கால்கள் இருக்கின்றனவா நடப்பதற்கு? கரங்கள் இருக்கின்றனவ பிடிப்பதற்கு? கண்கள் இருக்கின்றனவா பார்பதற்கு காதுகள் உள்ளனவா கேட்பதற்கு? (7:195)———->
    அப்படியானால் இவையெல்லாம் அல்லாவிற்கு இர்க்கின்றதா? ஆம் எனில் அவர் உருவமில்லாதவர் என்று சொல்வதேன்? இல்லை என்றால் இவருக்கும் இணைகடவுல்களுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்றுதானே!
    4. மனிதன் எது ஒன்றை செய்தாலும் மலக்குகள் (=வானவர்கள்) அவற்றை எழுதி கொண்டிருக்கிறார்கள். (45 : 28)—————-> உலகில் எத்தனைகோடி ஜனங்கள் இருக்கின்றனர். இவர்கள் செய்வதை எல்லாம் எழுத எத்தனை கோடி பேர் தேவை? அத்தனைகோடி பேர் அங்கே உள்ளனாரா? அப்ப இந்துக்கள் முப்பத்து முக்கோடிதேவர்கள் என்று சொன்னல்மட்டும் கிண்டல் அடிப்பதேன்?
    5. சொர்கலோகத்தில் தாழ்ந்த பார்வைகொண்ட அழகிய பெண்கள் (houri – VIRGINS ) இருப்பார்கள்.(37 : 41-49) அவர்களின் BREASTS மீது 2 பெயர்கள் எழுதப்பட்டிருக்கும், ஒன்று அல்லாவின் பெயர் மற்றொன்று அந்த பெண்களின் கணவன் பெயர். SOURCE : The Shorter Encyclopedia of Islam பக்கம் 141) — இதற்கு கேள்வி இல்லை. கேள்வி கேட்டால் கேட்பவர்கே அசிங்கம்
    6.வட்டி வாங்குவோர் நரகவாசிகளாவார்கள் (2 : 274 -278)=========> அப்படியானால் அரசு பணியிலிருக்கும் முஸ்லிம்கள் செலுத்தும் General Provident Fund க்கு 8% வட்டி வாங்குகிறார்களே அவர்களும் நரகத்திற்குத்தான் போவார்களோ? குறைந்த வட்டியானாலும் வட்டி வட்டிதானே? கந்து வட்டி வாங்கினால் மட்டும்தான் தப்பா?
    7. மற்றவர்களின் தெய்வங்களை திட்டாதிர்கள் (6 : 108) =======> அல்லா சொல்படிதான் இவர்கள் நடக்கிறார்களா?
    8. பெண்கள் அந்நிய ஆண்களை விட்டு பார்வையினை பாதுகாத்துகொள்ளட்டும் தம்முடைய மர்ம ஸ்தலங்களையும் பாதுகத்துகொள்ளட்டும்.(24 : 30,31) =======>அப்படியானால் குஷ்பூ, ஷபனா ஆஷ்மி, மும்தாஜ் போன்ற (ஆ)பாச நடிகைகள் அப்படிதான் பாதுகாத்துகொள்கிறார்களா?
    9. பலவந்தபடுத்தி ஒருவரை முஸ்லிமாக ஆக்கக்கூடாது.(10 : 99)==========>இதுபடிதான் ஔரங்கஷிப் போன்ற முஸ்லிம்கள் நடந்தார்களா? இப்போதும் அவரின் வாரிசுகள் நடக்கிறார்களா?
    10. முகமது(ஸல்) பின்பற்றி வாழ்வதற்கான ஒரு மிக சிறந்த முன்மாதிரி. (33 : 21)====>
    அதாவது அவரை போலவே 13 WIVES கட்டிக்கொள்ளலாம். அவர்தான் ஒரு ரோல் மாடல் ஆச்சே! அதுமட்டுமல்ல இன்னும் கேளுங்கள். ஆயிஷா உடன் TUB இல் ஒன்றாக குளிக்கும்போது அவரை FONDLE செய்வாராம்! (புகாரி 6:298) DIVINE INSPIRATION DO NOT COME TO ME (=அதாவது முகமது நபிக்கு) ON ANY OF THE BEDS EXCEPT THAT OF AYISHA (புகாரி 47:755)======> எவ்வளவு கேவலம் பார்த்தீர்களா? மேலும் பாருங்கள்: மனைவியருள் ஒருத்தியின் பக்கமே சாய்ந்துவிடாதிர்கள் நீதத்துடன் நடந்துகொள்ளுங்கள். (4 : 129) ===============> ஆனால் இவர் அதுபோல் நடந்தாரா?
    11. நபி (ஸல்) அவர்களின் மனைவியர் முஸ்லிம்களின் அன்னையர் ஆவர்.(33 : 6)
    ======> அப்படியானால் ஆயிஷா வின் அப்பா கூட (அவர் முஸ்லிம்தானே) அவளுக்கு அன்னையா? மகள் கிடையாதா?ஆனால் தன வளர்ப்பு மகனின் மனைவி மட்டும் (விவாகரத்துக்கு பிறகு)தனக்கு மனைவி ஆகிவிடுவாள். இது என்ன நியாயமப்பா?
    12. குர் ஆன் அரபு மொழியில் இறக்கி அருளப்பட்டது. நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக! (43 :3,4)=======> உலகத்தில் அரபு மொழி மட்டும்தான் இருந்ததா? தமிழ் தோன்றியது எப்போது என்றே தெரியாத நிலை உள்ளது. அரபு மொழி பின்னர்தான் தோன்றி இருக்கவேண்டும். “நீங்கள் புரிந்துகொள்ள” என்றால் தமிழன் எப்படி புரிந்துகொள்வான்? ( TRANSLATION பற்றி இங்கே சொல்லகூடாது)
    13. பெண்களை அடிக்க அல்லா அனுமதி கொடுக்கிறான் ( 4 : 34) ——————> பெண் உரிமை பேசுவோர் நன்றாக கவனிக்கவேண்டிய வசனமிது..
    14. இயேசு தனது 12 சீடர்களில் சிலர் உயிருடன் இருக்கும்போதே பூமிக்கு மீண்டும் வருவார் ( ஆதாரம்: jOSHUA 10: 12-14) ==========> 12 பேரும் செத்து இப்போது 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் வந்தபாடில்லை.
    15. தினமும் 5 முறை ஒவ்வொரு முஸ்லிமும் முகமது பிறந்த இடத்தை (அதாவது மெக்கா ) நோக்கி தொழவேண்டும் =========> மகா அறிவாளி முகமது பூமி உருண்டையானது என்று அறியாதவர் கலிலியோ பிறப்பதற்கு முன்னாடியே பிறந்து தொலைத்துவிட்டார் நம்ம தீர்க்கதரிசி முகமது. நபி. என்ன செய்ய! (ஆமாம் தீர்கதரிசி என்றல் என்ன அர்த்தம்?)
    இந்த 15 கேள்விகளுக்கு போலி மத சார்பின்மைவாதிகள் நேர்மையான கிறுக்குதனமில்லாத பதில் சொல்வார்களா? பதில் சொல்லமுடியாவிட்டல் இனிமேலாவது இந்து மதத்தை இகழ்ந்து மற்ற மதங்களை புகழ்ந்து பேசுவதையாவது நிறுத்தவேண்டும். 10 மாதம் சுமந்து பெற்ற தாயை தூற்றி எதிர்வீட்டு பொம்பிளையினை போற்றி புகழ்வதற்கு சமம் இது

  16. திப்பு செய்தது மொத்தம் தப்பு என்று மிக நன்றாக தெரிந்தும் தமிழ்நாட்டில் கோலோச்சும் ( இந்த மண்ணின் உப்பு சாப்பிட்ட) ஒரு கப்பு மற்றும் டெல்லியில் இருக்கும் இன்னொரு இத்தாலி கப்பு ஆகிய இரண்டும் சேர்ந்து அந்த படுபாதக கொலைகாரனை கௌரவித்து அதன்மூலம் முஸ்லிம்களின் ஓட்டுகளை ஒட்டுமொத்தமாக பெற முயன்றுவருகின்றன. இங்கே தமிழ்நாட்டில் மாணிக்கம் ஒத்த அந்த மனிதனுக்கு(?!!) மணிமண்டபம் என்றால் மத்தியில் அதைவிட மணிமணியான திட்டங்களை தீட்டிகொண்டிருக்கின்றனர். அதாவது முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மட்டும் ஆறு central universities களை அமைக்கபோகிரார்களாம். அதிலே “அவர்களுக்கு” 50% reservation உண்டு என்றும் ஒரு university க்கு மட்டும் “Tipu Sultan” பெயர் வைக்க போகின்றார்களாம். அதுமட்டுமின்றி unaided madrasas க்கு மதிய உணவு திட்டம் விச்தரிக்கப்படுமாம்.இன்னும் எத்தனையோ! (இந்தியன் எக்ஸ்பிரஸ்:- தேதி 9.6.2013)
    பாகிஸ்தானில் இந்துக்களை அங்கிருந்து விரட்டி அடிக்கின்றனர்.இந்து பெண்களை கற்பழித்து மதம் மாற்றி கல்யாணம் செய்துகொண்டு பிறகு தலாக் சொல்லி கைகழுவி விடுவது. நமது காஷ்மீரில் இந்து பண்டிட்கள் (நான்கு லட்சம் பேர்) விரட்டி அடிக்கப்பட்டு வீடு வாசல் இழந்து அகதிகளாக சொந்த நாட்டிலயே வாழ்கின்றனர். இலங்கையில் (இந்து) தமிழர்களை கொன்று குவித்தனர். சாவது இந்துக்கள் தானே (என்று கிறிஸ்தவ சோனியா காந்தி) சாகட்டும் சாகட்டும் என்று சந்தோஷமாக இருந்தார். மலேசியாவில் இந்துக்களை கொடுமைபடுதுகின்றனர். பங்களா தேஷில் 1947இல் 30% ஆக இருந்த இந்துகளை இப்போது வெறும் 7% ஆக ஆக்கிவிட்டு அதோடு இல்லாமல் இப்போது அங்கிருக்கும் முஸ்லிம்களை அஸ்ஸாமுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து அனுப்பிகொண்டிருக்கின்றனர். கேட்பார் மேய்ப்பார் என்பதே சிறிதும் இல்லை. இது ஒரு நாடுதானா? சௌதி அரேபியாவிலுள்ள இந்தியர்களை வேலையை விட்டு விரட்டி அடிக்கின்றனர். இவ்வளவு அக்கிரமங்கள் நடக்கின்றன. ஆனால் இந்துக்கள் தறிகெட்டுபோன கிரிக்கெட்டை பார்ப்பதும் இந்து கடவுள்களை கேலி செய்யும் படங்களை (=குட்டிபுலி) பார்த்து ரசித்து சிரிப்பதும் இந்துக்களை திருடன் என்று சொல்வோருக்கு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பதுமாக இந்த நாடு முஸ்லிம்களின் கையில்சிக்கினால் நமது எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயம் கிஞ்சித்துமில்லாமல் குறட்டை விட்டு உறங்கிகொண்டிருக்கும் இந்துக்களை என்னவென்று சொல்வது? ரோஷம் என்பதே இல்லையே! அவன் சோத்துக்கு உப்பு போட்டு சாபிடுவதில்லையா?
    இந்துக்கள்தான் இப்படி இருக்கின்றனர் என்றால் இந்துக்களை காப்பாற்ற வந்த கண்ணபரமாத்மா என்று சொல்லிகொள்ளும் BJP நீயா நானா என்று அடித்து கொள்கிறார்கள் ஊழலில் ஊறியுள்ள காங்கிரஸ் கட்சியினை தோற்கடிப்பது இப்போது ரொம்ப ஈசி. அதை பயன்படுத்தி கொள்ள BJP தவரிவிடும்போல் தெரிகிறது. நமது தமிழ்நாட்டு BJP யோ கும்பகர்ணனுக்கு அண்ணன் நம் மனசிலுள்ள இந்த வேதனையினை தமில்ஹிண்டுவில்தான் கொட்ட முடியும் வேறு யாரிடம் பொய் சொல்ல? ஆனால் அதை ஒரு 1000 பேர் படிப்பார்கள் அவ்வளவுதான். முடிந்தது கதை. பொதுவாக இந்த உலகம் குறிப்பாக இந்தியா அராஜக முஸ்லிம்களின் கையில் சிக்கி குண்டு போட்டு அழியவேண்டும் என்று தலைவிதி ஒன்று இருந்தால் அதை யாரும் மாற்றமுடியாது. மக்கள் மாண்டு தொலையட்டும். உலகம் அழிந்து தொலையட்டும். அவ்வளவுதான். .

  17. இத்தனை நாளும் திப்புவை ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டை போட்டதுக்காக மட்டும், ஒரு தேசியவாதியாக சித்தரித்து எல்லோரையும் முட்டளாகிவிட்டார்கள்.எல்லோரையும் போல் ஸ்ரிரங்கபட்டினதிர்க்கு போனபோது அங்கு காணப்பட்ட கோட்டை மற்றும் நினைவுசின்னங்கள் ஆகிவற்றை பார்த்து ஏமாந்து விட்டேன்.நல்ல வேளை உங்கள் கட்டுரை ஒரு மிகப்பெரிய செய்தியை தகுந்த ஆதாரத்தோடு வெளியிட்டு ஏன் போன்றோரின் முட்டாள்தனத்தை நீக்கியதற்கு நன்றி .ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவெரி ஒப் இந்தியாவிலும் இந்த கொடூரனை ஒரு நாயகனாக சித்திரித்து இருப்பார் .டிடி யில் வெளி வந்த பாரத் ஏக் கோஜிஇல் ”ஜெய் ஸ்ரீரங்கா” என்று திப்பு சண்டை இட்டு மரிப்பதாக காட்டுவார்கள் ..இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ஆதாரங்களோடு பெரிய பெரிய பேநேர்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வைத்தும் , டிவி சீரியல்கள் எடுத்தும் பிரபலபடுத்த வேண்டும் ..திப்பு என்று ஒரு சீரியல் வந்தது அதை டைரக்ட் செய்தது ஒரு முஸ்லிம் எழுதியது ஒரு ”செகுலர் ” ஹிந்து பகவான், என்ன செய்ய அதில் இதை எல்லாம் சொல்லவில்லை ..மிகவும் நன்றி.. நம்முடைய பாட புத்தகங்களை திருத்தி எழுத சமயம் வந்து விட்டது ..இல்லை என்றால் இந்த நேரு -காந்தி குடும்பம் இந்தியாவை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் ..

  18. அண்மைய வரலாறுகள் கூட திரிக்கப்படுவதை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது.

    கேரளத்தில் திப்பு இழைத்த கொடுமைகளுக்கு சிறிதும் குறையாதவண்ணம் மணிமண்டபம் கட்டப்படவிருக்கும் திண்டுக்கல்லிலேயே இஸ்லாமியர்களால் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கல் ஏராளம், ஏராளம் . இவற்றையும் முறையாக ஆய்வுசெய்து ஆதாரப்பூர்வமாக பதிவுசெய்தல் மிகவும் அவசியமான ஒன்று. தமிழ் ஹிந்து இப்பணியை முன்னெடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

  19. தேவையான ஒரு பதிவு.

    தமிழக அரசு இந்த மணிமண்டப அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாத காலம் ஆகிறது. ஆனால், இந்து இயக்கங்களிடம் இருந்து சரியான எதிர்ப்பு அறிக்கையோ, போராட்ட அறிவிப்போ வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

    திப்பு சுல்தான் செய்த அட்டூழியங்களை, VOI.ORGயின் இணையதள புத்தகம் ஆதாரத்துடன் பட்டியலிடுகிறது. அதை ஜெ_க்கு யாராவது அனுப்பி வைத்தால் நன்று.

    திப்பு சுல்தானை பாரத சுதந்திர போராட்ட வீரன் என்று கூறும் அறிவு ஜீவிகள், பாரத சுதந்திரம் என்றால் என்ன என்று விளக்க வேண்டும்.

    எப்படி நம் தேசத்திற்கு பிரிடீஷ் அரசு அன்னியமானதோ, அதே போன்று தான் திப்பு சுல்தான் அரசும்.

    நம் தேசத்திலேயே, பிரிடீஷ் அரசுக்கு எதிராக டச்சுகாரன் போரிட்டுள்ளான். போர்துகீசியன் போரிட்டுள்ளான். பிரன்சுகாரன் போரிட்டுள்ளான். அப்படியானால், இவர்கள்
    அனைவரும் சுதந்திர போராட்ட வீரர்களா? இவர்களுக்கும் மணிமண்டபாம் கட்டலாமா?

    இதை தாண்டி, திப்பு சுல்தான்
    21-4-1797 அன்று பிரன்சு எழுதிய கடிதத்தில், பிரன்சு அரசு பாரத தேசத்தை கைபற்ற வேண்டும் என்று எழுதுகிறான்.

    இது என்ன வகை சுதந்திர போராட்டம் என்று இடதுசாரி வரலாற்றாசிரியர்களும், போலி மதசார்பற்ற வரலாற்றாசிரியர்களும் கூற வேண்டும்.

    திப்புக்கு தேச பற்றோ, மக்கள் பற்றோ கிடையாது. தான் ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க எத்தகைய கீழ்தரமான செயலிலும் இறங்கும் ஒரு காட்டுமிராண்டி முட்டாள் தான் திப்பு சுல்தான்.-naan melkooriyavatrai aamothikiren

  20. திப்பு சுல்தான்
    ‘பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்’ என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான். ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்தியாவின் சரிபாதி பகுதிகளை தன் சாம்ராஜ்யத்தில் இணைத்தார். இவர்தான் இந்தியாவில் மதுவிலக்கு கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தியவர். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடி என அப்துல் கலாம் போன்றவர்களே வியந்து போற்றும் விஞ்ஞானி. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தனது அரண் மனையில் பிரம்மாண்ட நூலகத்தை வைத்திருந்த ஒரே மன்னனும் திப்பு சுல்தான் தான்.

    ஆங்கிலேயர்களை வீழ்த்த அவர்களின் படைகளை ஐரோப்பாவில் குலைநடுங்கச் செய்த பிரெஞ்ச் மன்னர் நெப்போலியனுடனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்த ராஜதந்திரியும் கூட. இந்துக்களின் உரிமைகளைப் பெரிதும் மதித்த பண்பாளர். இவரது வீர வாள் சுழலும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகள் வீழ்ந்தன. இவரது குதிரைப் படைகள் முன்னேறும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் பின்வாங்கின. இறுதியில் காட்டிக் கொடுக்கும் துரோகிகளால் திப்பு கொல்லப்பட்டார். ஆனால் வரலாற்றில் இன்றும் எழுந்து நிற்கிறார் தியாகியாக! அவர் 4.5.1799 அன்று கொல்லப்பட்டார்.

    திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806-ஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார்கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.

  21. அன்பிற்குரிய சகோதரர் அஹமது “நாய் பற்றியும் சிங்கம்” பற்றியும் சொல்லி இருக்கிறார்.. நாய் ஒரு நன்றி உள்ள விலங்கு நாய் என்றும் சிங்கம் போல மிருகங்களை மட்டுமே வேட்டை ஆடி அடித்துகொன்று சாப்பிடுவதில்லை. சில தலைவர்கள் கூட சிங்கத்துடன் கம்பீரமாக pose (Flex board விளம்பரங்களில் தான்) கொடுப்பார்கள். ஆனால் சிங்கம் அதுவும் பெண் சிங்கம்தான் வேட்டைக்கு இரவில் செல்லுமாம். அது அந்த தலைவர்களுக்கு தெரியாது போலும் . அவர் நாயாக இருக்க விரும்பாததால்தான் நன்றி அற்றவராக சிங்கம் போல மக்களை வேட்டை ஆடினார் என்பது புரிகிறதா?
    இந்தியாவில் முதல் முதலாக மதுவிலக்கைஅமுல்படுத்தியவராம்!
    வேலூரில் ஜூலை 14 ஆம் தேதி ரகசியமாக செய்யவிருந்த “சிப்பாய்கள் புரட்சியி”னை பற்றி குடி போதையில் இருந்த “முஸ்தபா பேக்” என்ற முஸ்லிம் உளறிவிட்டான். இதை தெரிந்துகொண்ட ஆங்கில அரசு விழித்துக்கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியது. பலர் மாண்டனர். இன்னொன்றையும் சொல்கிறேன்
    கேளுங்கள். Prophet மற்றும் அவரது நண்பர் Monk Sergius ஆகிய இருவரும் ஒரு முறை நன்றாக குடித்துவிட்டு மயங்கி நன்றாக தூங்கிவிட்டனர், ஒரு soldier அந்த Monk ஐ கொன்றுவிட்டு அந்த வாளை தூங்கி கொண்டிருந்த நபியின் கையில் வைத்துவிட்டார். நபி எழுந்ததும் அந்த soldier நபியை பார்த்து “குடி போதையில் நீ monk ஐ கொன்றுவிட்டாய்” என்று கூறினான். அதனை நம்பிவிட்ட அவர் அதற்கு பிறகுதான் தனது follower களை குடிக்ககூடாது என்று அறிவுரை கூறினார். ஆக, நபியும் ஒரு drunkard தான். அதனால் தான் ஒரு drunkard கூறிய அறிவுரையினை முஸ்லிம்கள் கேட்பதில்லை போலும். ராக்கெட் விஞ்ஞான அறிவின் முன்னோடி திப்பு ஒரு தியாகியா அல்லது துரோகியா என்பது ஒழுங்காக சரித்திரம் படித்தவர்களுக்கு நன்றாக தெரியும். 4.5.1799 அன்று கொல்லபட்டாராம்! கத்தியை பிடித்தவன் கத்தியால் சாவானாம்.அதுபோல மற்றவர்கள் சாகடித்தவன் மற்றவர்கலாலேயே சாவான். என்பது உறுதியாகிவிட்டது. திப்புவின் வாரிசுகள் ரத்தம் கோட்டையில் கொட்டி கிடக்கிறதாம்! இவர்கள் கொலை செய்த இந்துக்களின் ரத்தம் பாரத தேசம் எங்கும் கொட்டி கிடக்கிரதப்பா.
    இப்போது திப்புக்கு மணிமண்டபம் வேண்டும் என்பீர்கள் பிறகு ஒசாமா பின் லேடனுக்கு வேண்டும் என்பீர்கள். ஔரங்கஷீப்புக்கு வேண்டும் என்பீர்கள் பாபருக்கு வேண்டும் என்பீர்கள். இப்படியே பட்டியல் நீளும். So , we must nib in the bud

  22. I DO NOT KNOW TIPPU’S HISTORY.
    HERE AND THERE SOME INFORMATION IS THERE.
    I WANT TO ASK JANAB AHMED IBRAHIM FOLLOWING DOUBTS.
    1. WHETHER TIPPU MADE AN AGREEMENT WITH BRITISH PEOPLE AND LEFT MALABAR?
    WHAT WAS THE NECESSITY?
    2. WHETHER TIPPU GAVE ANY CASH/ORNAMENTS TO BRITISH FOR PEACE AGREEMENT?
    3. WHETHER BRITISH TOOK TIPPU’S SON AS A PRISONER AS THE AMOUNT WAS NOT PAID IN FULL? HOW HIS SELF RESPECT ALLOWED IT?
    4. WHETHER TIPPU KILLED SO MANY CHRISTIANS AND MUSLIMS?
    5. WHETHER TIPPU GOT HUGE AMOUNT FROM SRIRANGAM TEMPLE FOR NOT ATTACKING THE TEMPLE?
    6. HOW HYDER ALI BECAME THE KING?
    7. WHETHER TIPPU LOOTED ALL THE PROPERTIES OF HINDUS IN MALABAR REGION AND HANDED OVER TO MAPLAS?
    8. WHAT IS THE PURPOSE OF WRITING A LETTER TO TURKEY KING?
    WHAT TIPPU ROARED IS NOT IMPORTANT. WHAT HE DID IS IMPORTANT.
    IT APPEARS TIPPU WAS A CRUEL, POWER MONGER WITHOUT ANY RELIGIOUS TOLERANCE.
    IS IT CORRECT?

  23. திப்புவை விடுங்கள். இதற்கெல்லாமே மூல காரணம் குர் ஆன் என்ற நூலே!
    நண்பர் அகமது குர் ஆனில் ( 4-24, 23-6, 70-30 பல பல‌) போரில் அப்பாவி பெண்களை கைப்பற்றி பாலியலில் ஈடுபடுத்தலாம் என்று எப்படி கூறலாம் இப்படி கூறுவது ஒரு கடவுளாக இருக்கும் என்பது முட்டாள்தனம் இல்லையா? மேலும் 8-41 ல் லூட்டி அடிக்கலாம் என்றும் 2-178ல் அப்பாவி அடிமையை கொல்லலாம் என்றும் 65-4 ல் இளம் பெண்ணை வயதுக்கும் வாராத பெண்ணை எந்தப் பெண்ணையும் (3 அல்லது 4 வயதானாலும் சரி!) ஆண்கள் மணந்து பாலியலிலும் தொடர்பு கொள்ளலாம் என்பதும் கடவுள் கூறியதாக கூறுவது முழு முட்டாள்தனம் இல்லையா?
    இந்த குர் ஆனை பின் பற்றி மைசூர் அரசர் புதல்வியை கடத்திய திப்புவின் மேல் அரசர் புகார் கொடுத்து ஆங்கிலேயனை நாடியதால் திப்பு கவிழ்ந்தான். பாவம் திப்பு அவன் செய்தது தப்பு! குர் ஆனை பின் பற்றியதால் வந்த கொடுமைகள்
    மேலும் பல கேள்விகள். இப்போதைக்கு இது போதும்!

    பதில் வருமா? தவா செய்வாரா?

  24. ஸ்ரீ விஸ்வநாதன்
    “ஆக, நபியும் ஒரு drunkard தான்”. என்ன பெரிய குண்டாய்தூக்கிப்போடுகிறீர்கள். இஸ்லாத்தின் புனித நூலான குர் ஆன் மது அருந்தக்கூடாது என்று தடைசெய்கிறது என்று அல்லவா பள்ளிக்கூட பாடம் சொல்கிறது. நீங்கள் சொல்லுகிற செய்திக்கு நிச்சயம் ஆதாரத்தினை க்காட்டவேண்டுகிறேன்.
    சிவஸ்ரீ.

  25. இங்கே பார்க்கவும்:

    https://islaminitsownwords.blogspot.ca/2009/04/did-muhammad-ever-drink-alcohol.html

    ஒயின் அவர்கள் கூறும் சுவர்க்கத்தில் கிடைக்குமாம். 72 மாதுகளுடன் ஒயின் கிடைக்கும் அல்லாவுக்காக போர் புரிந்து மாண்டால்!! சுவர்க்கத்தில் மது மாது இரண்டும் உண்டு!! அல்லா ஒயின் கடை!

  26. அருமை ஸ்ரீ நேசமணி. உங்கள் பின்னூட்டம் சுட்டிய ப்ளாகிற்கு சென்றுவந்தேன். புட்டுப்புட்டுவைத்திருக்கிறார்கள். அந்தக்கட்டுரைகளுக்கு ப்பின்னூட்டம் இட்டவர்களால் மறுக்க இயலவில்லை. அந்த அளவுக்கு ஆதாரங்கள். நபிகள் நாயகமும் மது அருந்தியவர்தான். குர் ஆன் மது அருந்துவதை தடைசெய்யவில்லை இன்னும் சொர்கத்தில் மது அளிக்கப்படும் என்பவற்றிற்கு ப்பல ஆதாரங்கள். நன்றி!
    சிவஸ்ரீ.

  27. இந்து சகோதரர் சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்கள் கேட்ட ஆதாரத்தை தேடி தேடி பார்த்து கிடைக்காத சோகத்தில் இருந்தபோது இன்னொரு இந்து சகோதரர் திரு நேசமணி அவர்கள் நேசக்கரம் நீட்டினார். எனவே அவரும் ஆதாரம் கிடைத்து திருப்தி அடைத்துவிட்டார். எனக்கும் சந்தோஷம். முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்லாம்) என்பவர் ஒரு drunkard மட்டுமல்ல. அவர் ஒரு சுதமில்லதவர் கூட Hadith பிரகாரம் அவர் தன பேன் நிறைந்த தலையை இன்னொருவனுடைய மனைவியின் (=Anas Ubn Maliks’ AUNT) மடி மீது வைத்து பேன் பார்க்க சொல்வாராம்! (குறிப்பு: இவருக்கு 11 மனைவிகள் உள்ளனர் அவர்களை பார்க்கசொல்லாமல் அடுத்தவன் மனைவியிடம் அதுவும் அவர் வீட்டில் இல்லாத நேரம்பார்த்து) பேன் பார்ப்பது மட்டுமல்ல அவள் வீட்டில் சாப்பிடுவார் அவளது apartment ல் உறங்குவார் Physician AL -RAZI என்பவர் “அபூர்வமாக குளிக்கும் நபர்களுக்கு பேன் தொல்லை இருக்கும்”கிறார். அல்லாவோடு இவ்வளவு நெருக்கமாக உள்ள ஒருவருக்கு கேவலம் பேனை ஒழிக்கமுடியவில்லை. ஒருவேளை எல்லாம் வல்ல அல்லாவிடமிருந்து அந்த தூதர் GABRIEL மூலம் தொற்றிகொண்டதோ?

    இஸ்லாமில் Gambling தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேலில் Jericho அருகில் ஒரு பெரிய Casino சொந்தமாக கட்டி இருந்தார். அரபாத். சில டிவி களில் சிலர் கூறும் கருத்துக்கள் என்னை பெரிய அளவில் பாதிப்படைவதால் அதற்கு பதில் கூறும் வகையில் இங்கே எழுத வேண்டியதாகிறது. நேற்று 24.6.13) சன் நியூஸ் டிவி யில் “விவாத மேடை” யில் பீட்டர் அல்போன்ஸ் “பேரழிவு நடந்து இருக்கும் ஒரு மாநிலத்தில் PM ஆகும் ஆசையில் அதற்கான விளம்பரம் தேடும் கெட்ட நோக்கத்தில் உத்தரகாந்த் மாநிலத்தில் பந்தா பண்ணிவிட்டு வந்தார்” எத்தனை கார் வந்தன எத்தனை IAS அதிகாரிகள் வந்தனர் இது போன்ற விவரங்களை Media விற்கு இவர்களே கொடுத்து விளம்பரம் தேடுகிறது ரொம்ப கேவலம்” என்று பேசினார், இன்று 5.6.2013) இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் (பேஜ் 16) அரை பக்க விளம்பரம் கொடுத்திருக்கிறது. அதில் சோனியா படம் உள்ளது. உத்தரகாந்த் மாநிலம் கொடுத்திருக்கும் அந்த விளம்பரத்தில் ” Govt is providing Rs. 2000 cash to yatris returning from the affected areas” “PM and Sonia did an aeria survey of the affected areas ” So far 6000 mt. tons of foodgrains and packets have been distributed among the affected people” என்ற 3 முக்கிய விஷயங்கள் அதில் உள்ளன. நம்ம ஜெயா டிவியில் “அம்மா காப்பதினாங்கோ அவங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தாங்கோ” என்று அந்த அல்லல்பட்ட மக்கள் கூறுகிறார்களே. ஆனால் மேற்படி விளம்பரத்தில் தலைக்கு 2000 தருகிறோம் என்று உத்தகாந்த் CM கூறுகிறாரே! உண்மையில் யார் அவர்கள் பயணத்திற்கு பணம் செலவழிப்பது? வான்சிவிகை (=ஹெலிகாப்ட்டர்) மூலம் இவர்கள் பார்வை இடுவார்கள். அது தவறில்லை ஆனால் காரில் வந்து பார்வை இட்ட மோடி விளம்பரம் தேட வந்த விட்டாராம்! இங்கே ஜெயலலிதா தனது டிவி யில் விளம்பரம் தேடுவது அந்த கம்யூனிஸ்ட் நபருக்கு தெரியாது போலும். அல்லது ராஜிய சபா சீட்டு கண்ணை மறைகிறதா? அரை பக்க விளம்பரம் கொடுத்தது தவறில்லையாம்! ஊடகத்தினர் மோடி பற்றி paid news போடஏற்பாடு செய்துள்ளனராம்! அப்படியானால் மேற்படி விளம்பரதிருக்கு காசு தரவில்லையோ? யாரை ஏமாற்ற பார்கிறார் இந்த பீட்டர்? மேலும் 6000 மெற்றிக் டன் உணவு பொருள்களை பற்றி கூறப்பட்டுள்ளது, Parmarth Niketan Ashram chief SWAMI CHIDANAND SARASWATHI launched ‘project hope’ by flagging off a fleet 25 buses containing blankets food and medicines to the affected areas” அந்த சுவாமி தனது சொந்த முயற்சியில் அவற்றை அனுப்புகிறார். அதனால் flagging off செய்வதிலே அர்த்தம் உள்ளது. அதேபோல மதிய அரசு அனுப்பும் உணவு முதலான பொருட்கள் கொண்ட வண்டிகளை கொடி அசைத்து பிரதமர் அனுப்பினால் அது correct ஆனால் சோனியா அனுப்பினால் (யார் இவர்? டெபுடி பிரதமரா அல்லது சூப்பர் பிரதமரா? அதற்கு விளம்பரம் என்று பெயரில்லையா? “மோடிவந்த இடத்தில் ராணுவ வீரர் தலை எடுக்கப்பட்ட விஷயத்தை பேசலாமா?” என்று அறிவு கொழுந்து பீட்டர் கேட்கிறார்.ஆனால் பேசியது வேறு இடம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். வீரர்கள் செய்த செயல்களை இவர் திருடிவிட்டார் என்று வேறு குற்றசாட்டு நேற்று சோனியா வர கூடாது என்று காஷ்மீர் தீவிரவாதிகள் 5 ஜவான்களை கொன்று 14 பேரை காயபடுத்தி உள்ளனர். இதைகூட அந்த பேரழிவு ஏற்பட்டமாநிலம் முழுமையாக சரியாகும் வரை பேசக்கூடாது என்று சொல்வார் போல இருக்கிறது. சிக்கிகொண்ட யாத்திரிகரர்களை தங்கள் உயிர் கொடுத்து வீரர்கள் காப்பாற்றுகின்றனர் அப்படிப்பட்ட அவர்களின் உயிர்களை முஸ்லிம் தீவிரவாதிகள் வாங்குவது கண்டிக்கத்தக்கது என்று பேசக்கூடாதாம்! ரொம்ப தப்பாம்! பீட்டர் மற்றும் அவரது அன்னை(!!!) சோனியா காந்தி மட்டும்தான் இந்த துனியாவில் உத்தமர்கள் மற்ற எல்லாரும் குறிப்பாக இந்துக்கள் அதிலும் குறப்பாக மோடி அயோக்கியர்கள் அவர்கள் வாய் திறந்து எதுவும் பேசவே கூடாது.
    மீடியா க்கள் தெவையற்ற விளம்பரத்தை மோடிக்கு தருகின்றன என்று ஒரு பட்டிமன்றம் போட்டு பேசவைக்கும் சன் நியூஸ் கூட ஒரு மீடியா தானே?

  28. உங்களுக்கு ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபை பற்றி தெரிமா ?இந்திய முஸ்லிம்களுக்கு இப்போது அவரை போல அமீர் ஒருவர் தான் தேவை . அவரை பற்றி முழுமையாக முஸ்லிம்களிடத்தில் கேட்டுபாருங்கள் .அவர் யார் என்று தெரியும் ?

  29. முஸ்லிம்கள், இந்துக்களுக்கும் நம் நாட்டிற்கும் செய்த மஹா கொடூரங்களையும் நன்கு அறிந்தும், முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்துக்கொண்டே அநியாயமாக இந்துக்களை மிதிக்கிறார்கள் மதச்சார்பின்மை பேசும் கீழ்தர அரசியல்வாதிகள். முஸ்லிம்களுக்கும் நம்மை ஆளும் அரசியல்வாதிகளுக்கும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் முழு இந்தியாவையும் கொடுத்தாலும், அவர்களுக்கு இந்துக்களின் மேல் உள்ள கொலைவெறி என்றும் தீராது. நமது அரசியல்வாதிகள், வன்முறையையும் அராஜகங்களையும் மட்டுமே விரும்பும் சுயநல ஊழல் பச்சோந்திகள். நாடு எக்கேடு கெட்டு போனாலும் அவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. முஸ்லிம்களை திருப்திப்படுத்தவே வரலாற்றை மாற்றும் கேடுடைய இழிபிறவிகள். அநியாயமாக இந்துக்களை ஒரு மதவாதிகள் போல் சித்தரிக்க விழையும் இந்த சீர்கெட்ட அரசியல்வாதிகள், நம் நாட்டிற்கு ஒரு பெருங்கேடு. எந்த ஒரு உண்மையான இந்துவும், சுய நல அரசியல்வாதியை தவிர, மற்ற மதத்தவர் போல் கொலைவெறியுடன் மதமாற்றம் போன்ற அராஜகங்கள் செய்யாமல் அமைதியுடனே, தெய்வ நல் நம்பிக்கையுடனே, தர்மத்துடனே பிற உயிர்க்கும் அன்பு செய்தே வாழ்கிறான். உலக வரலாற்றிலேயே, இந்துக்கள்தாம் எப்பொழுதும் என்றென்றும் தியாகிகள். அவர்கள் கடந்த காலங்களிலும் நிகழ் காலத்திலும் மத மாற்றம் என்ற போர்வையில் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இருந்தும் நாம், நம்மை இந்நிலைக்கு தள்ளிய அன்னியர்களின் துதி பாடும் முறையிலேயே வரலாற்றை அமைக்க இடம் கொடுக்கிறோம். வெட்க கேடான அரசியல் கூட்டங்கள் அத்தகு வரலாற்றை நமக்கு வழங்குகின்றன. இப்பொழுது, கொடுங்கோலன் திப்பு சுல்தானுக்கும் ஹைதர் அலிக்கும் மணி மண்டபம் கட்ட என்ன அவசியம் நேர்ந்தது? இம் மணிமண்டபம் கீழ்நிலையை அடைந்துவிட்ட நம் நாட்டுப்பற்றின் அவலத்தை பறை சாய்க்க அமையும் மண்டபம் என்பது தமிழர்களாகிய நமக்கு பெரும் வெட்கக்கேடு. இந்துக்களுக்கும் தமிழ் சமுதாயத்துக்கும் இழைக்கப்படும் பெரும் வரலாற்று அநீதி. இந்திய நாட்டு நலம் விரும்பும் ஒரு அரசு இத்தகைய பிழையைச் செய்யாது. தெய்வம் நாட்டையும் நம்மையும் மதச்சார்பின்மை போலி அரசியல்வாதிகளிடமிருந்து காக்கட்டும். வந்தே மாதரம்!

  30. முஸ்லிம்கள், இந்துக்களுக்கும் நம் நாட்டிற்கும் செய்த மஹா கொடூரங்களையும் நன்கு அறிந்தும், முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்துக்கொண்டே அநியாயமாக இந்துக்களை மிதிக்கிறார்கள் மதச்சார்பின்மை பேசும் கீழ்தர அரசியல்வாதிகள். முஸ்லிம்களுக்கும் நம்மை ஆளும் அரசியல்வாதிகளுக்கும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் முழு இந்தியாவையும் கொடுத்தாலும், அவர்களுக்கு இந்துக்களின் மேல் உள்ள கொலைவெறி என்றும் தீராது. நமது அரசியல்வாதிகள், வன்முறையையும் அராஜகங்களையும் மட்டுமே விரும்பும் சுயநல ஊழல் பச்சோந்திகள். நாடு எக்கேடு கெட்டு போனாலும் அவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. முஸ்லிம்களை திருப்திப்படுத்தவே வரலாற்றை மாற்றும் கேடுடைய இழிபிறவிகள். அநியாயமாக இந்துக்களை ஒரு மதவாதிகள் போல் சித்தரிக்க விழையும் இந்த சீர்கெட்ட அரசியல்வாதிகள், நம் நாட்டிற்கு ஒரு பெருங்கேடு. எந்த ஒரு உண்மையான இந்துவும், சுய நல அரசியல்வாதியை தவிர, மற்ற மதத்தவர் போல் கொலைவெறியுடன் மதமாற்றம் போன்ற அராஜகங்கள் செய்யாமல் அமைதியுடனே, தெய்வ நல் நம்பிக்கையுடனே, தர்மத்துடனே பிற உயிர்க்கும் அன்பு செய்தே வாழ்கிறான். உலக வரலாற்றிலேயே, இந்துக்கள்தாம் எப்பொழுதும் என்றென்றும் தியாகிகள். அவர்கள் கடந்த காலங்களிலும் நிகழ் காலத்திலும் மத மாற்றம் என்ற போர்வையில் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இருந்தும் நாம், நம்மை இந்நிலைக்கு தள்ளிய அன்னியர்களின் துதி பாடும் முறையிலேயே வரலாற்றை அமைக்க இடம் கொடுக்கிறோம். வெட்க கேடான அரசியல் கூட்டங்கள் அத்தகு வரலாற்றை நமக்கு வழங்குகின்றன. இப்பொழுது, கொடுங்கோலன் திப்பு சுல்தானுக்கும் ஹைதர் அலிக்கும் மணி மண்டபம் கட்ட என்ன அவசியம் நேர்ந்தது? இம் மணிமண்டபம் கீழ்நிலையை அடைந்துவிட்ட நம் நாட்டுப்பற்றின் அவலத்தை பறை சாய்க்க அமையும் மண்டபம் என்பது தமிழர்களாகிய நமக்கு பெரும் வெட்கக்கேடு. இந்துக்களுக்கும் தமிழ் சமுதாயத்துக்கும் இழைக்கப்படும் பெரும் வரலாற்று அநீதி. இந்திய நாட்டு நலம் விரும்பும் ஒரு அரசு இத்தகைய பிழையைச் செய்யாது. தெய்வம் நாட்டையும் நம்மையும் மதச்சார்பின்மை போலி அரசியல்வாதிகளிடமிருந்து காக்கட்டும். வந்தே மாதரம்!

  31. திப்புக்கு மணி மண்டபம் இல்லைணா வாழ முடியாதா?
    பேடி அரசாங்கம்! ஓட்டிற்காக இவர்கள் எதுவும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

    இந்து மதத்தை குறை கூறும் கருணாநியின் அரசியல் நாடகம் இத்துடன் முடிவடையும்

    கிறிஸ்தவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள். முஸ்லிம்கள் இந்துக்களை கொலைசெய்கிறார்கள் ….என்ன பண்ணலாம்? இந்துக்களே ஓன்றுபடுங்கள் ……திராவிட கட்சிகளைத் தூக்கி எறியுங்கள் …பாரதீய ஜனதாவை ஆதரிப்போம்!

  32. Tippu destroyed or deface most of temples in Kongu region. ex; Udiyoor Uddanda Velayudha Sami, etc..,

    He renamed places with ‘Islamic’ names. Ex: Salamabad for Satyamangalam

    He even changed Tamil month names with his own ‘Islamic’ Persian ones.

    He raped and chopped off the breasts of all the women he came across

    He hanged all men who opposed him by chopping of their penis and hanging them along-with their whole village

    ALL KONGU PPL WERE DEAD AGAINST TIPPU. DHEERAN CHINNAMALAI FOUGHT TIPPU.

  33. திரு விஸ்வநாதன் அவர்களே திப்பு எனும் கொடிய மிருகத்தின் வரலாறை சினிமாவாக எடுக்க போவது ரஜினி மகள் அல்ல. கமல் எனும் காமகொடூரன் தான்

  34. திப்புசுல்தான் ஆட்சியில், பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டபடியான விசாரணையும், தண்டனையும் அமையவேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்

  35. Tipu Sultan’s treasurer was Krishna Rao, Shamaiya Iyengar was his Minister of Post and Police, his brother Ranga Iyengar was also an officer, and Purnaiya held the very important post of “Mir Asaf”. Moolchand and Sujan Rai were his chief agents at the Mughal court, and his chief “Peshkar”, Suba Rao, was also a Hindu.[53] Editor of Mysore Gazettes Srikantaiah has listed 156 temples to which Tipu regularly paid annual grants. There is such evidence as grant deeds, and correspondence between his court and temples, and his having donated jewellery and deeded land grants to several temples, which some claim he was compelled to do to make alliances with Hindu rulers. Between 1782 and 1799 Tipu Sultan issued 34 “Sanads” (deeds) of endowment to temples in his domain, while also presenting many of them with gifts of silver and gold plate. The Srikanteswara Temple in Nanjangud still possesses a jewelled cup presented by the Sultan.[54] He also gave a greenish linga; to Ranganatha temple at Srirangapatna he donated seven silver cups and a silver camphor burner. This temple was hardly a stone’s throw from his palace from where he would listen with equal respect to the ringing of temple bells and the muezzin’s call from the mosque;[55] to the Lakshmikanta Temple at Kalale he gifted four cups, a plate and Spitoon in silver.[56][57]

    Sringeri incident Edit
    In 1791, Maratha army raided the temple and matha of Sringeri Shankaracharya, killing and wounding many, and plundering the monastery of all its valuable possessions.[58] The incumbent Shankaracharya petitioned Tipu Sultan for help. A bunch of about 30 letters written in Kannada, which were exchanged between Tipu Sultan’s court and the Sringeri Shankaracharya were discovered in 1916 by the Director of Archaeology in Mysore. Tipu Sultan expressed his indignation and grief at the news of the raid:

    “People who have sinned against such a holy place are sure to suffer the consequences of their misdeeds at no distant date in this Kali age in accordance with the verse: “Hasadbhih kriyate karma rudadbhir-anubhuyate” (People do [evil] deeds smilingly but suffer the consequences crying).”[59]

    He immediately ordered the Asaf of Bednur to supply the Swami with 200 rahatis (fanams) in cash and other gifts and articles. Tipu Sultan’s interest in the Sringeri temple continued for many years, and he was still writing to the Swami in the 1790s CE.[60]

    Controversial figure Edit
    In light of this and other events, B.A. Saletare has described Tipu Sultan as a defender of the Hindu dharma, who also patronised other temples including one at Melkote, for which he issued a Kannada decree that the Shrivaishnava invocatory verses there should be recited in the traditional form. The temple at Melkote still has gold and silver vessels with inscriptions indicating that they were presented by the Sultan. Tipu Sultan also presented four silver cups to the Lakshmikanta Temple at Kalale.[61] Tipu Sultan does seem to have repossessed unauthorised grants of land made to Brahmins and temples, but those which had proper sanads (certificates) were not. It was a normal practice for any ruler, Muslim or Hindu, on his accession or on the conquest of new territory. The portrayal of Tipu Sultan as a secular leader is disputed, and some sources,[which?] largely left-leaning scholars from the 20th century, suggest that he in fact often embraced religious pluralism.

    Historian C. Hayavadana Rao wrote about Tipu in his encyclopaedic court history of Mysore. He asserted that Tipu’s “religious fanaticism and the excesses committed in the name of religion, both in Mysore and in the provinces, stand condemned for all time. His bigotry, indeed, was so great that it precluded all ideas of toleration”. He further asserts that the acts of Tipu that were constructive towards Hindus were largely political and ostentatious rather than an indication of genuine tolerance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *