ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

மிழ்த் திரைப்படங்களின் மூலம் வெகுஜன அளவில் பரவலாக அறியப்பட்ட திரைப்பாடலாசிரியர் வைரமுத்து. சமீபத்தில் இராஜபாளையத்தில் இவர் ஆற்றிய “தமிழை ஆண்டாள்” என்ற உரையின் கட்டுரை வடிவம் தினமணியில் வந்துள்ளது. வைரமுத்து இதில் முன்வைத்துள்ள கருத்துக்கள் பண்பாடுள்ள தமிழ்நாட்டு இந்துக்கள் அனைவருக்கும் அருவருப்பையும் கோபத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.  ஆனால், அவர் அப்படி எழுதியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவரது “பாரம்பரியம்” அப்படி. ஆண்டாளின் பாசுர வரிகளைப் போட்டு “தெருப்பாவை” என்று வக்கிரமான பாலியல் கிளுகிளுப்புகளோடு எழுதிய அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் அடிவருடியாகவும் துதிபாடியாகவும் தனது வாழ்க்கை முழுவதும் இருந்து வந்துள்ள வணிக எழுத்தாளரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்கள் தங்கள் வழக்கமான பாணியில் சொன்னதை, தற்போது தான் அவசரமாக அணியத் துடிக்கும் இலக்கிய மோஸ்தருடன் கலந்து வைரமுத்து. “கட்டுரை”க்கிறார். அதுதான் வித்தியாசம்.

‘திருமால் வழிபாடு தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு இருக்கிறது, அடியார்களிடத்தே சாதிபேதம் கிடையாது’ என்று அதில் வைரமுத்து. சரியாக சொல்லியிருக்கும் சில விஷயங்கள் ஏற்கனவே பரவலாகப் பேசப்பட்டவை தான்.  ஆனால் அவற்றையும் தனக்கேயுரிய திரிபுகளோடும் அரைகுறைப் புரிதல்களோடும் தான் அவர் எழுதுகிறார். அதைத் தவிர்த்து இந்தக் கட்டுரை முழுவதுமாகவே அபத்தங்களும் திரிபுகளும் விஷத்தன்மை கொண்ட கருத்தாக்கங்களும் நிறைந்தது.

ஆண்டாளின் பிறப்பையும் குலத்தையும் குறித்து “Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple” என்ற ஏதோ ஒரு அமெரிக்கப் பல்கலைப் பேராசிரியரின் உளறலை ஏதோ ஒரு தீர்மானமான வரலாற்று முடிபு போல மரியாதையுடன் வைரமுத்து கூறுவது காலனிய அடிமைப்புத்தி எந்த அளவுக்கு அவரது திராவிட சிந்தனையில் ஊறியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதற்கு முன்பே தோழர் டி.செல்வராஜ் என்ற மூன்றாந்தர இடதுசாரி எழுத்தாளர் இதே கருத்தை வைத்து ‘நோன்பு’ என்ற மலம்தோய்ந்த சிறுகதையை எழுதியிருக்கிறார். 2012-13ம் கல்வியாண்டில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக தமிழ் பாடத்திட்டத்தில் இந்தச்  சிறுகதை சேர்க்கப்பட சில இந்து விரோத விஷமிகளால் திட்டமிட்டு முயற்சி செய்யப்பட்டது. அப்போது அதை எதிர்த்து பேரா. என்.சுப்பிரமணியம் எழுதிய ஆண்டாள் மீது வக்கிர அவதூறு என்ற கட்டுரை தமிழ்ஹிந்துவில் வெளிவந்தது. பின்பு தொடர் எதிர்ப்புகளால், அந்த சிறுகதை சேர்க்கப் படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. பல்கலைக் கழகம் கழித்து ஒதுக்கிய அதே கருத்தைத் தான் மறுசுழற்சி செய்து இப்போது நீட்டி முழக்கி வைரமுத்து பேசியிருக்கிறார்.

“அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்” என்று தனது கூற்றுக்கான “வாதங்களை” அடுக்குகிறார் வைரமுத்து. இந்த வாதங்கள் அனைத்துமே அபத்தமானவை.

ஆண்டாளின் பாசுரங்களில் மிகத் தெளிவாக “பட்டர்பிரான் கோதை”, “வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை” என்று பலவாறாக கோதையின் சுய அடையாளம் மீண்டும் மீண்டும் சொல்லப் படுகிறது. எந்த ஒரு கறாரான ஆய்வாளரும் இந்த அகச்சான்றையே மிக முக்கியமானதாகக் கொள்வார். அவள் பெரியாழ்வாரால் கண்டெடுத்து வளர்க்கப் பட்டவள் என்பது ஸ்ரீவைஷ்ணவ பாரம்பரியத்தில் கூடுதலாகக் கூறப்படும் செய்தி. ஆய்வாளர்களைப் பொறுத்தவரையில் அது இரண்டாம் நிலைத் தரவு (secondary source) மட்டுமே. ஆயினும், ஆண்டாளின் அருளிச்செயல்களைப் போற்றிப் பாதுகாத்து வரும் மரபு அவளது சரித்திரமாகக் குறிப்பிடும் செய்திகள் ஆய்வுநோக்கிலும் மதிப்புடனேயே அணுகப்பட வேண்டும். அவற்றையெல்லாம் ஒரு “சூழ்ச்சி” என்பதாகக் கருதும் கண்ணோட்டம் காழ்ப்புணர்வன்றி வேறில்லை.   ஒரு பேச்சுக்காக, வைணவ ஆச்சாரியார்கள் நினைத்திருந்தால் ஆண்டாளுக்கு ஒரு குலத்தைக் கற்பித்து இந்த சரித்திரத்தை எழுதியிருக்க முடியாதா என்ன? அவ்வாறு இல்லை என்பதே ஸ்ரீஆண்டாளின் திருஅவதாரத்தின் தன்மையினை உள்ளதை உள்ளபடி பதிவுசெய்திருக்கும் உண்மைத்தன்மையைக் காட்டுகிறது. “குலசேகரப் பெருமாள் தமது புத்ரி சோழவல்லியை ஸ்ரீதனமாகக் கொடுத்தார்” என்ற செய்தியை கோயிலொழுகில் ஆவணப் படுத்தியிருப்பதைச் சுட்டிவிட்டு, அதே வீச்சில் ஆண்டாள் விஷயத்தில் மரபை முற்றிலுமாக மறுதலித்து  “குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள” என்றெல்லாம் இஷ்டத்துக்கு ஊகங்களை வளர்த்துச் செல்வது ஆய்வு முறைமைக்கு முற்றிலும் விரோதமானது.

ஸ்ரீரங்கம் கோயிலில் தேவதாசிகளுக்குரிய இடமும், பல காலகட்டங்களில் தேவதாசிகள் அளித்த பங்களிப்புகளும் ஊர், பெயர், கொடைகள் குறித்த விவரங்களுடன் வரலாற்றில் தெளிவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் தொகுத்துள்ள ‘கோயிலொழுகு’ நூலின் பிந்தைய பாகங்களில் இவற்றைக் கொடுத்திருக்கிறார். மேலும், 8-9-10ம் நூற்றாண்டுகள் என்ற அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவதாசி என்ற பட்டம் மிகுந்த கௌரவத்திற்கும், சமூக அந்தஸ்திற்கும் உரிய ஒன்றாக இருந்தது என்பதைக் கூட வைரமுத்து அறிந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. அவரது கீழ்த்தரக் கற்பனைகளில் உலவும் ‘தாசி’ போன்றதல்ல அது. வழிபாட்டுக்காகக் கோயிலுக்குப் போய்வந்து கொண்டிருக்கும் பெண்களை ‘தாசி’ என்று விளித்து கேலிசெய்ய வேண்டும் என்று பொறுக்கித்தனமான அறிவுரையை வழங்கிய ஈவெராவின் சீடரான அவருக்கு இந்த நுட்பமான வேறுபாடெல்லாம் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை தான். ஆனால், ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு  “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அத்தகைய நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்த தினமணி & ராம்கோ குழுமங்களுக்கு புத்தி எங்கே போயிற்று? தமிழ்நாட்டில் ஆண்டாளைக் குறித்துப் பேச வேறு நல்ல அறிஞர்களா கிடைக்கவில்லை?

ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து சில அரைகுறை அறிவுஜீவிகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. சில வருடங்கள் முன்பு 2009ல் எழுத்தாளர் பா.ராகவன் ‘ஆண்டாளின் காமச்சித்தரிப்பு ஒரு soft porn’ என்ற ரீதியில் எழுதினார். அதற்கு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய காட்டமான எதிர்வினை தமிழ்ஹிந்துவில் வெளிவந்தது. 2010ல் ஆபாச பொய்யர் கமல்ஹாசன் வரலட்சுமி விரதத்தை அவதூறு செய்து தான் எழுதிய திரைப்பாடலில் ஆண்டாளின் பாசுரங்களை இதேபோல மலினப்படுத்தியிருந்தார். அப்போதும் அதற்கான எதிர்வினை அரவிந்தன் நீலகண்டன் எழுதி வெளிவந்தது. பின்பு விழிப்புணர்வு கொண்ட இந்துமுன்னணி செயல்வீரரின்  பாராட்டுக்குரிய சமயோசித முயற்சியால் அப்பாடல் படத்திலிருந்து நீக்கப்பட்டது. இப்போது, இந்த 2018ம் ஆண்டு அதே அபத்தக் கருத்தை “சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும்” என்று  வைரமுத்து எழுதிக் கொண்டு போகிறார்.

சாரமில்லாமல் அடுக்கு மொழிகளையும் எதுகை மோனைகளையும் அலங்கார வார்த்தைகளையும் பயன்படுத்துவது தான் தமிழ்ப் புலமை என்று நம்பவைக்கப் பட்டு அதிலிருந்து வெளிவராத ‘மந்தை’ மனநிலையிலேயே தமிழ்நாட்டின் பெரும்பாலான வெகுஜன மக்கள் உள்ளனர்.  அத்தகைய “ரசனை”க்குத் தீனிபோடும் வகையிலேயே வைரமுத்துவின் அனைத்து உரைகளும் (இந்தக் கட்டுரை உட்பட) சமைக்கப் படுகின்றன.  “பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே” என்ற சிலேடையில் உள்ள ஆபாசத்தைக்கூட புரிந்து கொள்ளாமல் அதையும் கைதட்டி ரசிக்கும் பரிதாபகரமான நிலையிலேயே  தமிழ் மக்கள்  உள்ளனர் என்பது தான் வேதனை.

ஆண்டாளின் பாசுரங்களில் உள்ளது கட்டற்ற பெண்மொழியின் வீச்சு என்பதை ஏதோ புதிதாகக் கண்டுபிடித்துவந்தது போல சொல்வதே வேடிக்கையானது. உண்மையில் ஸ்ரீவைஷ்ணவ பாரம்பரியத்தில் முன்பே சொல்லிவிட்ட விஷயம் தான் அது. ‘குத்துவிளக்கெரிய’ போன்ற பாசுரங்களுக்கான வியாக்யானங்களில், அதன் சிருங்கார ரசம் சார்ந்த பொருள் ஒருபோதும் மறைக்கப்படுவதோ விலக்கப்படுவதோ இல்லை. முதல்தளத்தில் அது கூறப்பட்டு, பின்பு அதன் தத்வார்த்தமான உள்ளுறைப் பொருள் உபதேசிக்கப் படுகிறது. நாச்சியார் திருமொழி குறித்த எனது கட்டுரையில் இதனை விரிவாக எழுதியிருக்கிறேன். அதிலிருந்து ஒரு ரசமான பத்தியை மட்டும் கீழே தருகிறேன் –

“மோவாய் எழுந்த முருடர் கேட்கைக்கு அதிகாரிகளல்லர். முலையெழுந்தார் கேட்க வேணும்” என்கிறது வியாக்யானம். அதாவது, மோவாயில் முடி வளர்ந்த, முரட்டாண்மை (machismo) கொண்டவர்கள் நாச்சியார் திருமொழியைக் கேட்பதற்குத் தகுதியில்லாதர்கள். “முலை எழுந்தவர்களே”கேட்க வேண்டும். அதாவது ஆண், பெண் என்று சொல்லாமல், இந்த அருளிச்செயலைக் கற்பதற்கு எப்பேர்ப்பட்ட மனநிலை வேண்டும் என்பதை எவ்வளவு நுட்பமாக வியாக்யானம் கூறுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஆண்டாளை சரியாக ஆன்மீகமாக உணர்வுபூர்மாக அறிந்து கொண்ட அபூர்வமான நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர் காலஞ்சென்ற கவிஞர் சாதாரா மாலதி. பெண்மொழியையும் பெண்ணியக் கருத்தாக்கங்களையும் நன்கறிந்த அவர் தனது “உயர்பாவை” என்ற நூலில் ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானகாரர்கள் எந்த அளவுக்கு ஆழமாகவும் நுட்பமாகவும் ஆண்டாள் என்ற மகத்தான கவிதாயினியை விமர்சித்து அனுபவித்து ரசித்துள்ளார்கள் என்று சிலிர்ப்புடனும் வியப்புடனும் பதிவு செய்கிறார். அத்தகைய  நுட்பமான இலக்கிய விமர்சனங்களுக்குப் பிறகும், வைரமுத்து கூறும் அரைவேக்காட்டுத் தனமான, முதிர்ச்சியற்ற, தவறான கருத்துக்களே பொதுத்தளத்தில் முன்னிறுத்தப் படுவது நமது சூழலின் துரதிர்ஷ்டம். வேறென்ன சொல்ல?

“சமண பௌத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம்” என்று வைரமுத்து கூறும் கருத்து முற்றிலும் ஆதாரமற்றது. ரிக்வேதப் பாடல்களிலேயே சிருஷ்டியின் விதையாக, பிரபஞ்ச இயக்கத்தின் விசையாக காமம் கூறப்படுகிறது. வேறுசில வேதப் பாடல்களில் கலவியின் வர்ணனை கூட உள்ளது. உபநிஷதங்களில் கலவி தத்துவம் சார்ந்த குறியீடாக வருகிறது. தர்மம், அர்த்தம், காமம் என்று மூன்று பேறுகளில் (புருஷார்த்தம்) ஒன்றாகவே காமத்தை வேதமரபு வரையறுக்கிறது. “உயிர்களில், தர்மத்திற்கு விரோதமில்லாத காமமாக நானே இருக்கிறேன்” என்று கீதையில் பகவான் கூறுகிறார். தொன்மையான நூலான பரத முனிவரின் நாட்ய சாஸ்திரம், ரசங்களிலேயே மிக உயர்ந்ததாக சிருங்காரத்தை முன்வைக்கிறது. காளிதாசரின் காவியங்களும், ஹரிவம்சம், ஸ்ரீமத்பாகவதம் போன்ற புராணங்களில் வரும் கண்ணன் கோபியர் காதல் வர்ணனைகளும் இதைத் தொடர்ந்து வருகின்றன. சங்க இலக்கியங்களின் அகத்துறைப் பாடல்களும் இது சார்ந்தவையே. எனவே, ஆண்டாளுக்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே வேதநெறி சார்ந்த இந்து மரபில் தெய்வீகக் காதல் உணர்வுகள் தொடர்ந்து ஒரு பேசுபெருளாக இருந்து வந்துள்ளன. ஆண்டாளின் பாசுரங்கள் இதன் இயல்பான நீட்சியே அன்றி, எந்த விதத்திலும் சமண, பௌத்த சமயங்களுக்கான எதிர்வினை அல்ல.

*********

உண்மையில் வைரமுத்துவின் இத்தகைய திரிபுவாதங்கள் தனிப்பட்ட ஒரு விஷயம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் இலக்கியங்களின் மீதும் தமிழ்நாட்டின் இந்து சமய மரபுகளின் மீதும் திராவிட, இடதுசாரி இயக்கங்கள் கடந்த பல பத்தாண்டுகளாக நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இவற்றைக் காண முடியும்.

ஏற்கனவே திருக்குறளை திரிபுபடுத்த முயன்று அதில் சிறு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். மிச்சமிருப்பது தமிழ் பக்தி இலக்கியங்களையும் கூட அவற்றின் தெய்வீகம் சார்ந்த மற்றும் புனிதமான பின்னணியிலிருந்து பிரித்தெடுப்பது. அதாவது அவற்றின் இந்துத்தன்மையை மறுதலித்து, வெறும் தமிழ் மொழியழகு சார்நதவையாக மட்டுமே முன்வைப்பது. காலப்போக்கில் இதுவே நிலைபெற்று அவற்றின் ஆன்மீக உயிர்த்துடிப்பு முற்றிலுமாக அடக்கப்பட்டு விடும். அப்போது அவை ஜீவனற்று ‘அருங்காட்சியகப் பொருட்கள் போல ஆகிவிடும். அதுவே இவர்களது எண்ணமும் விருப்பமும். “Now let us talk about the Erotic Tamil Poetess Andal of the 8th century” (எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் பாலுணர்வுக் கவிஞர் ஆண்டாளைப் பற்றிப் பேசுவோம்) என்று ஒரு பல்கலைக்கழக பேராசியர் சகஜமாகப் பேசக்கூடிய நிலையை நோக்கிச் செல்வது தான் குறிக்கோள். அண்மையில் ஒரு மாநாட்டில் Dehinduization of Tamil Literature என்று இந்த விஷயத்தைக் குறித்துத் தான் நான் உரையாற்றினேன். இந்தக் கருத்தாக்கம் எப்படி இயங்குகிறதென்று பார்ப்போம்.

தமிழ்ப்பண்பாட்டில் தெய்வப்புலவர் இயற்றிய உத்தரவேதம் (பின்னால் தோன்றிய வேதம்) என்று புனிதநூலாகக் கருதப்பட்ட ஒரு தர்மசாஸ்திரம் திருக்குறள். சைவர் வைணவர் சமணர் என இந்திய சமயங்களின் நெறிகளைப் பின்பற்றியவர்கள் அனைவரும் அதைப் போற்றினர். பரிமேலழகர் உட்பட எல்லா உரையாசிரியர்களும் அவ்வாறே அதைக் கண்டுள்ளனர். ஆனால், திராவிட இயக்கத்தவர்கள் தங்கள் தொடர் பிரசாரங்கள் மூலமாக பல்வேறு குறட்பாக்களுக்கு வினோதமான நகைப்புக்குரிய விளக்கங்களை அளித்து, இப்போது அது ஒரு “மதச்சார்பற்ற, பொதுவுடைமை, பகுத்தறிவு கொள்கைகளைக் கொண்ட” நூல் என்பதாகவே அறியப்படுகிறது. இவ்விஷயத்தில் வையாபுரிப்பிள்ளை போன்ற பெரும் தமிழறிஞர்களின் கருத்துக்கள் முற்றிலுமாகப் பின்னடைந்து திருக்குறளை “சுத்திகரித்து” வெற்றிகரமாக நீர்த்துப் போகவும் வைத்துவிட்டனர்.

கம்பராமாயணத்தைப் பொறுத்த வரையில் முதலில் “தீ பரவட்டும்” என்று நூல் எழுதி அதைக் கொளுத்தி அழிக்கவேண்டும் என்றார்கள். அது எடுபடாது என்று தெரிந்ததும், அதனை மலினப்படுத்தி கம்பரசம் என்று நூல்கள் எழுதினார்கள். அதற்குப் பிறகும் அது அழியாமல் நிற்பதைக் கண்டு இப்போது அதிலுள்ள அறம், ராமனின் அவதார தத்துவம், வேதநெறி சார்ந்த கோட்பாடுகள் ஆகிய உயிர்நாடியான விஷயங்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு “தமிழுக்காக” அதைப் படிக்க வேண்டும் என்று வந்து நிற்கிறது. அதாவது கம்பனின் பெருமை என்பது நற்குணக்கடலான ஸ்ரீராமனின் சரிதத்தில் மூழ்கி ஈடுபட்டு அதைப் பாடியது அல்ல, மாறாக ஆயிரக்கணக்கான விதவிதமான தமிழ்ச் சொற்களை அழகாக உபயோகித்து யாப்பிலக்கணம் தவறாமல் விருத்தப்பாடல்கள் எழுதியிருக்கிறானே அதுதான் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்கள். உயிரைக் கொன்றுவிட்டு வெறும் எலும்புக்கூடை வைத்துக் கொண்டாடுவது போன்றது இது.

“தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பே அதைத் தான் குறிக்கிறது. “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்று எம்பெருமானுடைய திருவடிகளையே ஆட்சி செய்தவளுக்கு  தமிழ் என்ற மொழியிலே கவித்துவ சக்தியை வெளிப்படுத்துவது தான் பெரிய விஷயமா? மிகச் சாதாரண விஷயம் அல்லவா அது? ஆனால் இவர்களைப் பொறுத்தவரை, ஆண்டாளுடைய தெய்வீகத்தையும் பகவத்விஷய அனுபூதியையும் எல்லாம் தூக்கிப்போட்டு விட்டு அதிலுள்ள தமிழ்க் கவிதை என்ற வெளித்தோற்றத்தை மட்டுமே பிரித்தெடுத்து கொண்டாட வேண்டும் !  இந்தப்பாணியில் தான் சைவத்திருமுறைகளையும் அவற்றின் தெய்வீகப் பின்னணியிலிருந்து பிய்த்தெடுத்து “தமிழ்” அடையாளங்களாக மட்டும் முன்னிறுத்த முயல்கிறார்கள்.  இதற்கு முன்பு திருமூலரைப் பற்றியும் வைரமுத்து இவ்வாறு “கட்டுரை”யாற்றியிருக்கிறாராம். அதைப் பார்த்தால் அங்கும் இதற்கான தடயங்கள் கட்டாயம் கிடைக்கக்கூடும்.

இதே கட்டுரையில் “கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற “மெய்ஞ்ஞானம்’ வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி (வைதீக மதம்) இறங்கி வந்தது” என்கிறார் வைரமுத்து. இந்த வரியில் உள்ள பாமரத்தனமான அறிவீனம் ஒரு சாதாரண வாசகனுக்குக் கூடப் புரியும்.  வேத உபநிஷதங்களிலும், அதைத் தொடர்ந்து கீதையிலும்  மீண்டும் மீண்டும் கூறப்படுவது மானுடம், தெய்வீகம், இயற்கை, பிரபஞ்சம் இவை அனைத்திற்கும் இடையே உள்ள உறவுப் பிணைப்பன்றி வேறென்ன?  “யாகம் – யக்ஞம் – தவம் – வேள்வி – விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டுக் கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்பட்ட வாத்சல்யம் – காருண்யம் – சௌலப்பியம் முதலியவற்றை முன்னிறுத்தியே முக்தியுற முடியும் என்ற புதிய சலுகை மக்களிடம் போதிக்கப்பட்டது” என்று இதற்கு முந்தைய வரியில் வைரமுத்து எழுதுவது தான் இன்னும் பெரிய வேடிக்கை. இதிலே இவர் முதலில் குறிப்பிடும் யாகம், யக்ஞம், தவம், வேள்வி இவை எல்லாம் மனிதர்களைச் சார்ந்தது அல்லாமல் வேற்றுக்கிரக வாசிகளைச் சார்ந்ததா என்ன?  மேலும், வாத்சல்யம் போன்ற பகவானுடைய கல்யாண குணங்கள் எல்லாம் ஏதோ திடீரென்று எட்டாம் நூற்றாண்டில் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டவையா? வேத உபநிஷதங்களே அவற்றுக்கு மூலம் என்பதை ஆண்டாள் உட்பட சகல ஆழ்வார்களின் அருளிச்செயல்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன. இந்த அடிப்படை விஷயம் பற்றிய புரிதல் கூட இந்த நபரிடம் இல்லை.

வைரமுத்து போன்ற வெகுஜன பிராபல்யம் கொண்டவர்கள் இத்தகைய கருத்துக்களைத் தொடர்ந்து பேசுவதில் உள்ள அபாயம் என்னவென்றால், அவை  ஊடகங்கள் மூலம் மிகப் பரவலாக மக்களைச் சென்றடைந்து அவர்களது மனதில் குழப்பத்தை விளைவிக்கும் என்பது தான். எனவே, இத்தகைய திரிபுவாதங்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் இந்து அறிஞர்கள், சைவ வைணவப் பெரியோர்கள் தீர்க்கமாகவும், தெளிவாகவும் இதற்கான மறுப்பையும், எதிர்வினையையும் தெரிவிக்க வேண்டும். அது அவர்களது தார்மீகக் கடமையும் ஆகிறது. இதுவே நான் அவர்களுக்கு பணிவன்புடன் விடுக்கும் வேண்டுகோள்.

*******

67 Replies to “ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்”

  1. மிக அருமையாக தொகுத்தளித்திருக்கிறீர்கள். வைரமுத்து அவர்களின் கட்டுரை தினமணியில் படித்த பின்னர் இதைப் படித்ததால் விஷயத்தின் வீர்யம், அதிலுள்ள நுண் விஷயங்கள் தெளிவாகப் புரிபடுகிறது. மிக்க நன்றி.

  2. அருமை! அருமை ! உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகளே வரவில்லை.
    இனியும் இதுபோன்ற கயவர்களை விட்டுவைத்தால், ஆன்மீகத்திற்கே ஆபத்தாய் முடியும்.
    சுருங்கக்றின், பல நபர்களுடைய கண்களைத் திறந்த, திறக்கும் ஆழ்ந்த கருத்துக்கள்.
    இருகரம் கூப்பி நன்றி எனக் கூறுவதைவிட, தங்களுக்கு எங்களால் என்ன செய்துவிட முடியும். கண்ணீருடன் நன்றி! நன்றி!
    தாஸன்
    சுரேஷ்

  3. வைரமுத்து அவர்களுக்கு,
    .
    எனக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை. தமிழ் நிறைய பிடிக்கும். ஆனால் என் தமிழ் எனக்கு என் கடவுளை துதி செய்யவும் உதவும். உங்களுக்கு நிதி செய்ய மட்டும்.
    .
    சபை நாகரிகம் என்று ஒன்றுள்ளது அன்பரே. அது, சபையில் உள்ளோரை மட்டும் மரியாதை செய்ய வேண்டும் ,என்ற வரையறை இல்லை.இல்லாதவரையும் மதிக்க வேண்டும். அதுவே ஒரு ஆழ்வார் என மதித்து போற்றப்படும் தமிழர்களின் பெருமையாம் ஆண்டாளைப் பற்றி பேசும்போது? இன்னும் கவனம் வேண்டாமா? இல்லை இது கவன ஈர்ப்பு முயற்சியா?
    .
    “பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்” என்று ஆண்டாளை குறிப்பிடும்பொது உங்கள் ஆணாதிக்க அரிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தி உங்கள் “உயர்வு” இவ்வளவுதான் என்பதை தெளிவாக்கியதற்கு நன்றி.
    .
    உங்கள் தாயாரை யாருக்காவது அறிமுகம் செய்யும் போது “இவள் என் தகப்பனுக்கு முந்தி விரித்தவள்” என்பீரோ? உங்கள் தாய்க்கும் தகப்பனுக்கும் “அது” நடந்தது என்றாலும், உங்கள் தாயைப் பார்க்கும் போது “அது” ஒன்றைத்தான் உங்கள் மனம் நினைக்குமா? எத்தனை இழிவான மன நிலை, உங்களுக்கு.
    .
    “திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங்கு இல்”
    என்றான் வள்ளுவன். நீங்கள் இப்படி தரம் இழந்த சொல்லை சொல்லக் காரணம் என்னவோ?
    .
    “அமெரிக்காவின் indiana Universityயில்” என்று பயமுறுத்த வேண்டாம். எல்லாவற்றுக்கும் “american research” ஒரு முன்னோடி என்னும் slavery mind இன்னும் வைரமுத்துவுக்கு நீங்கவில்லை என்பது வியப்பொன்றும் இல்லை. நம் உயரம் என்ன என்று தெரிந்துகொள்ள ஒரு அமெரிக்க ஆராய்ச்சி தேவை இல்லை. இதை நான் ஒரு பக்தனாகவும், இந்தியனாகவும் சொல்கிறேன். மற்றபடி நீங்கள் சொல்வது போல் நீங்கள் ஒன்றும் “ஆணாதிக்க எதிர்ப்பாளர்” கிடையாது. வெறும் திராவிட கூலியே.
    .
    உங்களைப்போன்ற திராவிட கூலிகளுக்கு ஒரு சராசரி தமிழனுக்குரிய அளவு வீரம் இல்லை என்பது ஊரறிந்த ஒன்று. இங்கே அது மறுபடி நிரூபணம் ஆயிற்று. முடிந்தால், இவ்வளவு பேசும் நீங்கள் ஒரே ஒரு பகுத்தறிவு கேள்வியை மட்டும் டிசம்பர் மாதம் கடைசி வாரம் கேளுங்கள்.
    .
    நீங்கள் பீற்றிக்கொள்ளும் “சமய சமூக மறுப்பாளர்” பட்டம் துவைத்து எடுக்கப்படும்.
    உங்கள் பகுத்தறிவுவாத “டப்பா” dance ஆடும்.
    .
    நா காக்க.

  4. As the article says Hindu scholars should give fitting reply and expose the obscure writers like vairamuthu

  5. Andal is our goddess. How dare you write and present such a worst article dear dinamani ? வைரமுத்து அலைகள் ஓய்வதில்லை பாடல்களில் காமம் கப்பி கிடப்பதாலே அவருக்கு விலைமாதர்கள் தொடரபு உண்டு. மற்றும் காமம் என்பது பரம்பரை தொடர்பு என்பதால் அவரது தாய்க்கும் தந்தைக்கும் காம வெறி அதிகமுண்டு . ஊர் முழுக்க எல்லாரையும் புணர்ந்தவர் அவர் தம் பெற்றோர் என்று 2067 இல் ஐரோப்பாவில் கோலிக் என்பவர் கட்டுரை எழுதி வாசிக்கலாம். யார் கண்டது. அந்த கட்டுரையை கபிலனும் கார்க்கியும் படித்து மனம் புண்படலாம் . எதிர்காலம் பற்றி யார் அறிவர் ? இந்த செய்தியை சொன்னவர் பின்பு மனம் புண் பட்டிருந்தால் மன்னிக்கவும் என்று போன போக்கில் சொல்லலாம்

  6. ஜடாயு, வைரமுத்து ஆண்டாள் தேவதாசியாக இருக்கலாம் என்று சொல்வதில் உங்களைப் போலவே எனக்கும் ஒப்புதல் இல்லைதான். ஆனால் முகாந்திரம் இல்லாத ஊகம் என்று நான் கருதுவதால் எனக்கு ஒப்புதல் இல்லை. முகாந்திரம் இல்லாத அவதூறு என்று நீங்கள் கருதுவதால் உங்களுக்கு ஒப்புதல் இல்லை.

    ‘தேவதாசி’ என்பது உங்களைப் பொறுத்த வரையில் அவதூறா? இன்னும் காட்டமான வார்த்தைகளில் கேட்கிறேன், ஆண்டாள் வேசையாக இருந்திருந்தால் ஆண்டாளை நிராகரித்துவிடுவீர்களா? ஆண்டாளை ஆழ்வார் என்று போற்ற மாட்டீர்களா? குருபரம்பரைக் கதைகளில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை மயக்கியதாக சொல்லப்படும் தேவதேவி திருமால் அடியார் ஆகத் தகுதி அற்றவரா? திருடன் என்று சொல்லப்படும் திருமங்கை ஆழ்வாருக்கும் இதே அளவுகோல்தானா? திருமங்கை ஆழ்வார் ஆண் என்பதால் உங்கள் அளவுகோல்கள் வேறுபடுகின்றனவா? இல்லை அவர் செய்த தொழில் உங்களைப் பொறுத்த வரையில் அவ்வளவு மோசம் இல்லையா?

  7. It is not surprising that Vairamuthu has spoken like this. As stated, the lyrics in the film “periyar” bear testimony to this.

    Also, it is to be noted that vairamuthu wrote some controversial lyrics about Jesus for the film “Neer Paravai”.

    When some Christian missionaries protested, he quietly removed those lyrics from the song.

    Primarily, it is the mistake of the organisers to have invited a third rate writer for speaking on such a topic.

  8. ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு சுக்கும் அறியாது உளறுவது என்பது மண்டு முத்து அளவில் மட்டுமின்றி தமிழகமெங்கும் பொங்கிப்பெருகும் புளகம். தமிழ் ஹிந்து கருத்துப்பகிரலில் கூட விதிவிலக்கு இல்லாமல் அங்கிங்கெனாத படி எங்கும் ப்ரகாசமாய் ஒளிவீசும் செயற்பாடு. இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே என்ற படிக்கு சொல்நயம் இலக்கிய நயம் என கிவிதையெழுதும் மாண்புடைய இந்த மண்டு முத்து மட்டுமின்றி இந்த நபரை அழைத்து வெத்திலை பாக்கு கொடுத்து பேச மேடை போட்டுக்கொடுத்த தினமணி எனும் மஞ்சள் பத்திரிக்கையும் அதை ஸ்பான்ஸார் செய்த ராம்கோ கும்பினியும் ஜடாயுவால் விமர்சிக்கப்பட்டுள்ளது. தேவையே.

  9. Primarily, it is the mistake of the organisers to have invited a third rate writer for speaking on such a topic.

    Dinamani is to be accused of
    I request you all to read ” SANE SEX ORDER’ AUTHOR PITRIM A.SOROKIN – PUB.BY BHARATIYA VIDYA BHAVAN.

  10. திரு ஆர்.வி…

    //‘தேவதாசி’ என்பது உங்களைப் பொறுத்த வரையில் அவதூறா? இன்னும் காட்டமான வார்த்தைகளில் கேட்கிறேன், ஆண்டாள் வேசையாக இருந்திருந்தால் ஆண்டாளை நிராகரித்துவிடுவீர்களா? ஆண்டாளை ஆழ்வார் என்று போற்ற மாட்டீர்களா? ……..//

    நீங்கள் கூறியது போலவே, தேவதேவி, திருமங்கை ஆழ்வார் போன்றோர்களை இன்னார்தான் என அறிமுகம் செய்து வாய்த்த குரு பரம்பரையினரால், ஆண்டாள் தேவதாசி என்றோ, வேசை என்றோ கூறி அறிமுகப்படுத்த எவ்வளவு நேரம் ஆகி இருக்கும். ஆகவே, எந்த முகாந்திரமும் இல்லாமல் யூகத்தின் அடைப்படையில் வைரமுத்து பேசியது மிகவும் தவறான ஒன்று தான்.

    அதிலும், அவர்கள் தேவதாசி என்று கூறியதை காட்டிலும், எதை அளவுகோளாக வைத்து இவ்வாறு பேசி இருக்கிறார்கள் என்பதை தான் கவனிக்க வேண்டும். ஆண்டாள் எழுதிய, திரு பாடல்களை வைத்து தான் இவர்கள் இந்த முடிவிற்கு வருகிறார்கள். தினமணியில் அவர் தெளிவாக மேற்கோள் காட்டுவதும் இதனைத்தான்.

    19 ஆவது பாடல் குத்து விளக்கெரிய என்னும் பாடல். அதிலே ஒரு வரி வருகிறது

    “குத்துவிளக் கெரியக்
    கோட்டுக்கால் கட்டில்மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறி
    கொத்தலர் பூங்குழல்
    நப்பின்னை கொங்கைமேல்
    வைத்துக் கிடந்த
    மலர்மார்பா வாய்திறவாய்.”

    மேலும்,

    “முத்தன்ன வெண் முறுவல்
    செவ்வாயும் முலையும்
    அழகழிந்தேன் நான்
    புணர்வதோர் ஆசையினால்
    என் கொங்கை கிளர்ந்தது”

    அவரைப் பிராயம் தொடங்கி
    ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
    துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
    தொழுதேன்…

    சாயுடைவயிறும் என் தடமுலையும்
    திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
    தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
    பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
    புணர்வதோர் ஆசையினால்
    கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
    ஆவியை ஆகுலம் செய்யும்…
    என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
    பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ”

    இவை அனைத்துமே சிருங்கார ரசம் சொட்டும் பாடல்கள் தான், அதற்கென்று ஒரு கவித்துவ அழகு இருக்கிறது. ஆனால், இதனை ஒரு பெண் பாடி இருக்கின்றாள் என்றால், இந்த அளவிற்கு காம ரசம் சொட்ட சொட்ட பாட இவளுக்கு தைரியம் இருக்கிறது என்றால், நிச்சயம் இவள் பிஞ்சிலேயே பழுத்த தே….. வாகத் தான் இருக்க வேண்டும் என்பதை தான் வைரமுத்து போன்றவர்கள் நீட்டி முழக்கி பேசுவதெல்லாம். இப்போது இதனை பற்றி பேச வைரமுத்துவிற்கு என்ன அவசியம் வேண்டி கிடக்கிறது. ஆக, இவர்கள் தேவரடியார் என்று ஆண்டாளை விளிப்பது ஆண்டவனுக்கு சேவை செய்ப்பவள் என்கிற உயர்வு நவிற்சிக்காக அன்று. மாறாக, தேவரடியாள் என்பதற்கு இன்றைய காலகட்டத்தில் கருதப்படும் கொச்சை தனமாக அர்த்தம் கொண்டு தான் என்பது உள்ளங்கை நெல்லி கனியாக விளங்குகின்றது. அதனால் தான் வை.மு தான் பேசிய அடாத பேச்சுக்கு மன்னிப்பும் கேட்டு விட்டார்..

    இது அல்லாமல், இன்னொன்றை நான் கேட்கிறேன்.. ஆண்களாக இருக்கும் எத்தனையோ ஞானிகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் சமற்கிருத புலவர்கள் இறைவனை குறித்து எவ்வளவோ பாடல்கள் நாயக நாயகி பாவத்தில் எழுதி இருக்கிறார்கள் அதற்காக அவர்களை எல்லாம் ஓரின சேர்க்கையில் ஆர்வம் உள்ளவர்கள் என்று கூறிவிட முடியுமா. ஆகவே, ஒருவரின் படைப்புக்களை கொண்டு, இவர் இன்னவாக தான் இருக்க முடியும் என்று மதிப்பிடுவது, அறிவற்ற தரம் தாழ்ந்த செயலாகும்.. நன்றி..

  11. ஆர்.வி,

    அவதூறு என்பது அந்த ஒரு விஷயம் மட்டுமல்ல. ஆண்டாள் குறித்த இந்த ஒட்டுமொத்த அணுகுமுறையுமே அவதூறு தான் என்பதைத் தான் கட்டுரை பேசுகிறது. நீங்கள் முழுதும் வாசித்தீர்களா என்றே தெரியவில்லை.

    வரலாற்றின்படி தேவதாசிகளின் நிலை அக்காலகட்டத்தில் உயர்ந்ததாக இருந்தது என்று நான் கூறியிருப்பதைக் கவனிக்கவும். எனவே உங்கள் மற்ற கேள்விகள் எல்லாமே அர்த்தமற்றதாகின்றன. குலத்திலே கீழானவராக அறியப்பட்ட திருப்பாணாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக இன்றும் வணங்கப்படுகிறார்.

  12. ‘மானிடவர்க்கு என்றும் பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்று உலகியிலை தாண்டியது வேயர் குல மங்கை ஆண்டாளின் பிரேமை.அவள் தன்னை தானே நேர்ந்து வீட்டுக் கொண்டாள் என்பதும் உண்மை.ஆண்டாள் என்பவள் நம் வாழ்விலும் உணர்விலும் ஒன்றியவள். பிஞ்சிலே பழுத்தவள் எனினும் ஆறு வயது பாலகி.. உடையவர் திருப்பாவையை மூன்று வேளையும் சேவித்து திருப்பாவை ஜீயர் ஆனார். கோதாவிற்கு கோதா ஸ்துதி பாடியவர் சுவாமி தேசிகன். கிருஷ்ண தேவராயன் ஆமுக்த மால்யதா போற்றிப்பாடியதும் இவளைத்தான். தயையே உருவானவள் நம் கோதை..நாம் யாரையும் சாபம் விடுவது நம் மரபு இல்லை. நஞ்சிட்டவனை நூற்றந்தாதி பாடும் அளவிற்கு திருத்தி பணிக் கொண்ட காரேய்க்கருணை இராமானுஜன் வழி வந்தவர்கள் . கண்ணை பிடுங்கியவனுக்கும் நற்கதி வேண்டும் என்றாரே நம் கூரேசன் அவர் வழி ஒற்றி நடப்போம்.
    கண்காணாத ஆண்டாளை இகழ்ந்தார் என்று புறம் தள்ள முடியாது ஏன்யென்றால் ஆண்டாள் கோஷ்டி என்ற பெருமை வைணவ பெண்களுக்கு உண்டு. வைரமுத்து நாத்திகம் பேசவில்லை. ஆண்டாளை இகழ்வதன் மூலம் அவளது இருப்பை உறுதி செய்கிறார். அவளின் இருப்பை மறுக்க முடியவும் முடியாது. அவள்தான் எழுத்தில் வாழ்கிறாளே .”முற்றத்தூடு புகுந்து உன் முகம் காட்டி சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்க டவியோ’ கோவிந்தா என்பது போன்ற எண்ணற்ற இலக்கிய ஓவியம் அவர் தீட்டியுள்ளாரா? ஏதேனும் ஒன்றைக் கூறுக.
    புதுவை பெருமாள் கோவிலில் பாரதிதாசனுக்கு அஞ்சி திருப்பாவை ஒலி பரப்பை அடக்கி வாசித்தபோது அதை பழையபடி உரக்க ஒலிக்கச்செய்தவர் என்பதையும் நினைவு கூற வேண்டியுள்ளது. ஒரு சக கவிஞரை , ஒரு முன்னோடியை இழிவுபடுத்தியது கண்டு அவர் தாய் உயிரோடு இருந்தால் அவரிடமும், மனைவி, மருமகள்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் வீட்டு பாலகி ஹைக்கூ பேர்த்திஇடமும் மன்னிப்பு கோரினால் போதும்.இதற்கு முன்னர் நடிகைகளை இழிவாகப்பேசி சுஹாசினி பிடிவாதமாக அவரிடம் மாப்பை வாங்கினார்..
    வைரமுத்து தன்னிலை விளக்கம் கொடுத்தாலும் அவரை விடக்கூடாது. குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்திய வெள்ளையனுக்கு ஏன் வைரமுத்து? நமக்கான வரலாற்றை எவனோ எழுதி ஆரியன் வந்தேறி என்று என்று இகழ்வது இன்றும் தொடர்கிறது. இவர்கள் ஏற்படுத்தும் கருத்தாக்கம் ஆழஊடுருவி நிற்பது இன்றும் நம்மை இன்னலுக்கு ஆளாக்குகிறது. நெருக்கமான உறவிலும் இத்தகைய கருத்தாக்கம் போகிறபோக்கில் முகத்தில் அடிக்கிறது. இதற்கு முற்று புள்ளி வைக்க இவர்களை வாதுக்கு அழைப்போம்
    யார் கண்டது ஒரு ஆண்டாளின் அடியார் கூட கிடைக்கக்கூடும். நேய நிலைக்கதவம் திறப்போம். ‘

  13. அற்புதமான, நிதானமான மறுதலிப்புக் கட்டுரை.. ஒரு விவாதம் எந்த முறையில் செய்யப்படவேண்டும் என்பதற்கான உயர் மட்ட அளவில் அமைந்த இழை… இலக்கியக் குறியீடுகளையும், நம்முடைய கலை வெளிப்பாடுகளையும் சரியாகப் புரியாத அரைகுறை இலக்கியவாத்(ந்)திகளின் ஆர்வக்கோளாறான பேச்சுகளுக்கு பதிலிறுக்கத் தேவையில்லை என்றாலும், சினிமா என்னும் ஊடகத்தின் வழியாகப் பெரும்பாலும் காமரசப் பாடல்களையே எழுதிப் பெரும் பேரும் புகழும், பணமும் அடைந்திருக்கிற வைரமுத்து போன்றோர் பேசும் போதும் எழுதும்போதும் விஷமே மெதுவாக ஆனால் உறுதியாக சமூகத்தில் பரப்பப்படுகிறது.. இந்த விஷத்தை ஊடுறுவும் முயற்சிகளுக்கு முறிவு ஏற்படுத்தவில்லையென்றால் புரையோடுவது சமூகம்தான்… ஆனால் என்ன! ஜடாயுவின் கட்டுரையை மற்ற பத்திரிக்கைகள் பிரசுரிக்குமா? குறைந்த பட்சம் தினமணிதான் செய்யுமா? இவ்வாறு உரத்த கண்டனங்களால், அரைகுறையாக மற்ற ஊடகங்கள் வழியாக “வைரமுத்துவின் பேச்சுக்கு/எழுத்துக்கு தீவிரவாதிகளின் கண்டனம்/எதிர்ப்பு” என்று எதிர்மறை விளம்பரமும் கிடைத்துவிடும்…

  14. ஜடாயு, என் வாசிப்பு தவறாக இருக்கலாம். ஆனால் படித்தபோது ஆண்டாளை தேவதாசி என்பது உளறல் என்பதாக நீங்கள் சொல்வதாகத் தெரியவில்லை. தேவதாசி என்பது கேவலம், ஆண்டாளை எப்படி இந்த மாதிரி கேவலப்படுத்தப் போயிற்று என்று நீங்கள் சொல்வதாகத்தான் தெரிகிறது. தேவதாசி என்பதில் எந்தக் கேவலமும் இல்லை, அதுவும் பத்து பனிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த தேவதாசி என்பதில் எந்தக் கேவலமும் இல்லை என்பதுதான் என் கட்சி. தேவதாசியாக இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, ஆண்டாள் ஆண்டாள்தான், ஆழ்வார்தான், கவிதை கவிதைதான் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.

    உளறலுக்கும் அவதூறுக்கும் சின்ன வித்தியாசம்தான். என் வாசிப்பு தவறாக இருக்கலாம்…

  15. RV
    This is 21st century and devadasi has a convoluted meaning today unlike its meaning in 8th century. Any utterance in todays world should be treated with the meaning it has today and not the way it was in 8th century. So Jatayu’s anger is justified.

  16. நம்மைச் சுற்றி நடப்பனவற்றை எல்லாம் நாம் கூர்ந்து கவனித்து அதற்குரிய எதிர்வினைகளை உடன்ஆற்றி இருந்திருப்பின் நாம் இன்று கூக்குரல் இடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

    வீதிகளில் நடக்கும் மறியல் போராட்டங்களைப் பாருங்கள். அவர்கள் நெற்றியிலும் உடம்பிலும் பெரிதாக நாமம் போட்டுக்கொண்டு ஏன் ஓலம் இடுகிறார்கள். இந்த நாமத்திற்கும் வைஷ்ணவ நாமத்திற்கும் ஒற்றுமை இல்லையா. இதனை ஏன் வைஷ்ணவர்கள் அனுமதிக்கின்றார்கள்.அனுமதிப்பதன் மூலம் தமது சமயத்தையே இழிவுபடுத்துவதற்கு ஒத்து உழைக்கின்றார்களா.

    கள்வர்களை கந்து வட்டிக்காரர்களை குடிகாரர்களை பெண்களைக் கெடுப்பவர்களை கடத்தல்காரர்களை போதைப்பொருள் விற்பவர்களை ஆட்கடத்தல் செய்வோரை கொலை செய்பவர்களை எல்லாம் எப்படி அடையாளம் காண்பீர்கள்.இவர்களுக்கென பொது அடையாளம் ஒன்று இருப்பதை தினசரிநீங்கள் பார்க்கும் நாடகங்களிலும் சினிமா படங்களிலும் அவதானித்துள்ளீர்களா. எல்லோருமே பெரிதான திருநீறு பூச்சோடு குங்குமம் சந்தனம் பூசி வாழ்க வளமுடன் அல்லது அன்பே சிவம் என அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார்கள். இதுதான் அப் பொது அடையாளம். கமல்ஹாசன் வடிவேலு போன்ற நடிகர்கள் சிவனாகவும் முருகனாகவும் படங்களில் வந்து எம் கடவுளரை பரிகசிப்பதை பார்த்திருக்கவில்லையா. இவ்வாறெல்லாம் எமது சமயம் இழிவுபடுத்துவதை பொறுத்துக்கொண்டு நாம்இருக்கும்போது இந்தக் கவிப் பேரரசுக்கு தானும் ஒரு கை பார்ப்போம் எனத் தோன்றாதா. கண்டவன் நின்றவன் எல்லாம் ஏறி மிதித்துக் கொண்டுபோகையில், பல்லாயிரம் ஈழத் தமிழர்களை கொள்வதற்குத் துணைபோன கருணாநிதியின் வால்பிடியான வைரமுத்து சும்மாவா இருப்பார். ஆமாம் இவருக்கு கவிப்பேரரசு என பட்டம் கொடுத்தது யார்.

    மேற்கத்தையவர்களை மேற்கோள் காட்டுவதும் அவர்கள் எழுதுவதை அப்படியே நம்புவதும் ஓர் colonial mentality. இந்த மேட்கத்தையவர்கள் யாரை திருப்திபடுத்த எழுதுகின்றார்கள், எந்த நோக்கங்களை வைத்து செயல்படுகின்றார்கள், யார் இவர்களுக்கு நிதி உதவி செய்கின்றார்கள்,என்பனபோன்ற பலவிடயங்களை உணராமல் கீழை நாட்டில் உள்ளவர்கள் அவர்கள் எழுதுவதை அப்படியே விழுங்குவது நகைப்பிற்குரியது. வைரமுத்து இனிமேலாவது யோசிக்கட்டும்.திருந்தட்டும்.

  17. அப்படி அமெரிக்க பேராசிரியரோ வெளிநாட்டுப் பல்கலையோ எதனையும் வெளியிடவில்லை என்பதை அ.நீ புட்டுப்புட்டு வைத்துவிட்டார்.சிம்லாவைச்சேர்ந்த சிறுக்கன் எழுதியது அது. முழு விவரங்களுக்கு அ நீ பதிவில் பார்க்கவும்.

  18. நமது பக்தி இலக்கியங்களில் நிறைய ஆபாசங்கள் நிறைந்து காணப்படுகின்றது.கல்சிலைகளில் வக்கிரமான கற்பனையான நடைமுறையில் சாத்தியமற்ற பாலியல்உறவுமுறைகள் செதுக்கப்பட்டுள்ளன.ஆனால் நாம் இதை சிருங்காரம் என்று நயவஞ்சகமாக அதன் நஞ்சுத் தன்மையை மறைத்து வருகின்றோம். ஒரு சித்தா் பறைச்சி போகம் வேறா பனத்தி போகம் வேறா. பார்பண பெண்ணோடு பால்உறவு கொண்டாலும் பறச்சி பெண்ணை –அன்று கீழ்சாதி பெண் என்று இழிவுக்கு ஆளான பெண்ணை- உறவுகொண்டாலும் ஒன்றுதான் என்று பாடுகின்றாா்.
    நான் ஆண்டாள் பாடல்களை படிப்பதில்லை.மார்கழி பஜனையில் திருவெம்பாவை மற்றும் பள்ளி எழுச்சிப்பாடல்கள்தான் பாடுவோம்.சைவம் வைணம் என்ற பேதங்கள் நான் பார்ப்பதில்லை.
    கலாச்சார சீரழிவு காரணமாக தவறான இலக்கிய கொள்கைகள் ஒரு காலத்தில் மலிந்து ஆபாசமான இலக்கியங்கள் பெருகிவிட்டன. மா.பொ.சிவஞானம் அவா்கள் எழுதிய ” திருக்குறளில் கலையைப் பற்றி கூறாதது ஏன் ” என்ற புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். முன்பு புலவா்கள் எல்லாம் வீரம் மானம் ரோசம் கொடை அன்பு போன்ற நற்பண்புகளை கருப்பொருளாக கொண்டு கவிதைகள் காவியங்கள் இயற்றினாா்கள்.ஆனால் வருவாய் போதிய அளவு கிடைக்கவில்லை.எனவே சிருங்கார சுவையுடன் கவிதைகள் யாத்தார்களாம்.பொது மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது.பொதுமக்களை ஏமாற்றி மோசம் செய்ய “குறிஞ்சி நாயகம் முருகன் வள்ளியை காதல் செய்தார் என்று ஒரு பெண்துறவியின் வாழ்க்கையை காதல் கதை ஆக்கி தோட்டத்தின் காவலுக்கு வள்ளி சென்றாள் முருகன் அவளைக் காண சென்றான். …..என்று சிருங்கார சுவைபட கட்டுக்கதை இயற்றி பக்தியின் பெயரால் காமசுவை இலக்கியத்திற்கு ஏற்பட்ட எதிா்ப்பை சமாளித்து நிறைய காமசுவை இலக்கியங்களை எழுதித்தள்ளி பணம் குவித்தார்கள்.என்றிறாரா். பாம்பன் சுவாமிகள் என்ற முருக பக்தா் முருகனை வள்ளியோடு வணங்கமாட்டார் என்ற செய்தி அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.கம்பனும் சிருங்காரம் என்ற பேரில் அத்து மீறி இருக்கின்றான். பிரம்மச்சாரியம் என்ற சீலம் நமது சமுதாயத்தில் முற்றிலும் அழிந்து போனது. சுவாமி விவேகானந்தா் “ பிரம்மச்சரியம் ஒழுக்கம் குன்றியதாலே இந்தியா வலிமை இழந்து ஒருவருக்கொருவா் பகை மலிந்து சமூக ஒற்றுமை குறைந்து இந்தியா படை யெடுப்புகளை எதிர்க்கும் வலிமையை திரட்ட முடியாமல் விழ்ந்தது” என்ற கருத்தை நாம் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். பிரம்மச்சாரியம் குறித்து நாம் போதிய விழிப்புணா்சை ஏற்படுத்த வேண்டும். ஆபாசமான திரைப்படங்கள் கிட்டத்தட்ட அம்மணமாக வரும் கதாநாயகிகள் விவேகானந்தாின் ஆசையை நிறைவேற்றுமா ? எப்படி பிரம்மச்சாரிய ஆஸ்ரமத்தை உயிர்ப்பிப்பது ? விவாதிப்போமே!

  19. எவனே ஒருவன் மனம் போல் பாலியல் உணா்ச்சியைத் துண்டும் கவிதைகளை யாத்து அதை ஆண்டாள் பெயாரில் வெளியிட்டுவிட்டான் என்பதே என் முடிவு.

    கம்பராமாயாணத்தில் கலப்படங்கள் உள்ளன திருமந்திரத்தில் கலப்படங்கள் உள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன இலக்கியங்களில் இடைச் செறுகல்கள் என்ற சேட்டைகள் நிறைய நடந்துள்ளது என்பதை பொதுவாக மறுப்பதற்கில்லை

  20. தினமணியில் இன்று வாசகர்களி கடிதம் பகுதியில் தினமணியை வெளுத்து வாங்கியிருக்கின்றார்கள்.படித்தீா்களா. தினமணியும் மன்னிப்பு கேட்டுள்ளது.
    பாரதிய ஜனதாக் கட்சி தலைவா் திரு.ராஜா அவா்கள் பிடித்த பிடி இருக்கின்றதே! துவைத்துஎடுத்து விட்டார் போங்கள். ஒருவனின் தாயை வேசி என்று மற்றவன் சொன்னால் ” எனது அம்மா குறித்து இப்படியும் ஒரு செய்தி இருக்கிறது என்று எந்த மடையனாவது ஒரு பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு செய்வானா ? வைரமுத்துவிற்கு அது உடன்பாடுதானா ? சாப்பிடும்போது மலத்தைப் பற்றி பேசுவானேன் ? வைரமுத்துவிற்கு பணக் கொளுப்பு வித்யா கொளுப்பு ஆணவம் கன்மம் மமதை மமகாரம் அகங்காரம் அனைத்தும் பிடித்துள்ளது.

  21. //எவனே ஒருவன் மனம் போல் பாலியல் உணா்ச்சியைத் துண்டும் கவிதைகளை யாத்து அதை ஆண்டாள் பெயாரில் வெளியிட்டுவிட்டான் என்பதே என் முடிவு.//

    இது இராஜாஜியின் முடிவும் ஆகும். ஆண்டாள் என்ற பெண் பெயரில் ஓர் ஆண் எழுதியவையே திருப்பாவையென்றார். ஒரு பெண்ணிடமிருந்து எதிர்பார்க்க முடியா சில விரச வரிகளே அவரின் முடிவுக்குக் காரணம். அவரின் பேச்சு வைணவ ஆச்சாரியார்களிடையே பெரிய சலனத்தை உருவாக்கியது அவர்கள் இராஜாஜியைக் கடிந்து பேசினார்கள். பொதுமக்கள் கண்டு கொள்ளவில்லை. இராஜாஜியின் ஆளுமை பெரியது. என் முடிவும் இதே. ஒரு பெண் இப்படி எழுதியிருக்க முடியாது.

    தாயுமானவன் சுட்டிக்காட்டிய ஆண்டாள் கவிதை வரிகளை ‘சிருங்காரம்’ அதுவும் பக்திவகைகளுள் ஒன்று என்றெடுக்க நன்கு ஆன்மிக முதிர்ச்சி வேண்டும். அது அரவிந்தன் நீலகண்டனுக்கு இருக்கலாம், ஜடாயுக்கு இருக்கலாம். தங்களை ஆண்டாள் கோஷ்டி என்று சொல்ல்லும் ஹரிப்பிரியாவுக்கு இருக்கலாம். இராமனுஜர், தேசிகன், கிருஸ்ண்தேவராயர், பாரதிதாசன் இவர்களுக்கு இருக்கலாம்.

    ஆனால் தாயுமானவன் பதிவில் காட்டப்படும் வரிகள் விரசமே மற்றவருக்கு. இலைமறைவாகக் கூட அவையில்லை. அப்பட்டமாக இருக்கின்றன். அன்புராஜ் சொல்வதைப்போல, இப்படிப்பட்ட வரிகள் இன்று தேவையில்லை. தேவதாசி என்ற குலம் போற்றத்தக்கதாக அன்று விளங்கியது என்று ஜடாயு சொல்கிறார். எனினும் இன்று அச்சொல் என்ன பொருளில் எடுக்கப்படுகிறதோ அதை வைத்தே நாம் கணிக்க வேண்டுமென்கிறார் கே டி ஜே என்பவரிங்கே. அவர் சொல்கிறார்:

    ”This is 21st century and devadasi has a convoluted meaning today unlike its meaning in 8th century. Any utterance in todays world should be treated with the meaning it has today and not the way it was in 8th century”

    இதையே நாமும் தாயுமானவன் காட்டிய வரிகளுக்கும் வைக்கலாம். This is 21st century and certain words used in 7-8 century have ”convoluted” meanings far different from the ones at the time of Andal. (KTJ to note: she is not from 18th century)

    நாலாயிரத்திவ்யபிரபந்தத்தில் இவ்வரிகள் நீக்கப்படவேண்டும். இதே போல, சமணர்கள் தலைகளைக் கொய்ய எனக்கு வரம் தா என்ற அரங்கனை இறைஞ்சும் தொண்டரடிப்பொடியாழ்வாரின் வரிகளும் நீக்கப்படவேண்டும்.

  22. மன்னிப்பு கேட்டுவிட்டால் முடிந்ததா கதை? முடியவே முடியாது. ஏனெனில் இது தொடர்கதை. வைரமுத்து, மனங்கள் புண்பட்டிருப்பின் வருந்துகிறேன் என்றுதான் அறிக்கை விட்டிருக்கிறார். தான் பேசியவற்றைத் திருப்பி வாங்கவில்லை. தினமணி மன்னிப்பு கேட்டிருப்பது அது ஒரு பிசினஸ் ஹவுஸ். எப்படி பென்குவின் வெண்டி டோனிகரின் நூல்களையெல்லாம் திரும்பபெற்று அழித்துவிட்டு பின்னர் மறுபிரசுரமே செய்யாமல் ஆசிரியையிடமே உரிமையைத் திருப்பிக்கொடுத்துவிட, அதைப்போல தினமணி செய்கிறது. பிசினஸ். ஏராள்மான தினமணி வாசகர்கள் இந்துக்கள்.

    வைரமுத்து தன் வரிகளைத் திரும்ப்பெற்று மன்னிப்பே கேட்டாலும் சிலகாலம் கழித்து இன்னொருவர் இதையே சொல்வார். எவ்வளவு காலம் இராஜா மிரட்டல் விடுவார்? இசுலாமியர் போல சிரச்சேதம் செய்வோம் என்று சொல்லலாம். ஆனால் இசுலாமுக்கு எதிராக வெள்ளைக்காரர்கள் பேசியும் எழுதியும் வரத்தான் செய்கிறார்கள். உலக முழுக்க சுற்றி எல்லாரையும் ஐ எஸ் எஸ் ஐ அழிக்கமுடியுமா? சல்மான் ருஸ்டி இன்னும் வசதியாகத்தான் வாழ்கிறார்.

    //இதற்கு முற்று புள்ளி வைக்க இவர்களை வாதுக்கு அழைப்போம்// அழைப்பது ஹரிப்பிரியா.

    ஒரு நாத்திகவாதியை வாதத்துக்கு அழைக்க முடியாது. ஏனென்றால் நாத்திகத்தின் அடிப்படையும் உங்களடிப்ப்டையும் வெவ்வெறு. நேர் கோடுகள் சந்திக்கா. எல்லாமே நம்பிக்கை உங்களுக்கு, ஒரு சிலவற்றைத் தவிர, ஆழ்வார்கள் காலமே இன்றும் உறுதியாகவில்லை. குருபரம்பரை நூல் ஒன்றே அடிப்படை.. அதை வெறும் ஹேக்யோக்ராஃபி என்று தள்ளிவிடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். தொல்லியல் அறிஞர் நாகசாமி, இராமானுஜர் என்பவரே வெறும் கற்பனை. அப்படி ஒரு நபர் வாழ்ந்ததாக வரலாற்றாதாரம் இல்லை என்று நூலே வெளியிட்டிருக்கிறார். இராஜாவால் மிரட்ட முடியுமா? அவர் தொல்லியல் அறிஞர். எங்கள் நம்பிக்கை கதியே இராமானுஜ முனியே. எங்கள் ந்ம்பிக்கையைப்புண்படுத்திவிட்டாய்; மன்னிப்பு கேள் என்று எவருமே பேசவில்லை.

    ஆக, மன்னிப்பு கேட்க வைத்தாலோ, மிரட்டினாலோ ஒன்றும் முடியாது. உயிருக்குப் பயந்தவன் ஓய்ந்திருப்பான். மற்றவன்? வாதத்துக்கும் அழைக்க முடியாது. அவர்கள் நிலை அவர்களுக்கு மாறாது. உங்களால் எதையுமே நிரூபிக்க முடியாது.

    ஒரே வழி: தாயுமானவன் காட்டிய வரிகளை நீக்குக இன்னொரு வழி: விளம்பரமாகாமல் பார்த்துக்கொள்ளல். எனக்கு எதிர்க்கிறார்கள் என்று செய்திதான் தெரியும். இங்கு ஜ்டாயு கொடுத்த இணைப்பின் மூலம் முழுக்கட்டுரையை வாசிக்க முடிகிறது. ஆக, விளம்பரம் செய்வதை நிறுத்தலாம்.

  23. பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரிஷி ஐயா

    \\\\ வீதிகளில் நடக்கும் மறியல் போராட்டங்களைப் பாருங்கள். அவர்கள் நெற்றியிலும் உடம்பிலும் பெரிதாக நாமம் போட்டுக்கொண்டு ஏன் ஓலம் இடுகிறார்கள். இந்த நாமத்திற்கும் வைஷ்ணவ நாமத்திற்கும் ஒற்றுமை இல்லையா. இதனை ஏன் வைஷ்ணவர்கள் அனுமதிக்கின்றார்கள்.அனுமதிப்பதன் மூலம் தமது சமயத்தையே இழிவுபடுத்துவதற்கு ஒத்து உழைக்கின்றார்களா. \\

    வைஷ்ணவர்கள் தங்களது சமய ஒழுக்கத்தின் பாற்பட்டு ஒழுக தங்கள் திருமேனியில் நாமம் இட்டுக்கொள்ளுகிறார்கள். “நாமம்” என்பதை கேலிப்பொருளாக சொல்லாடல்களிலும் போலிப்போராட்டங்களிலும் மற்றையவர்கள் எகத்தாளம் செய்வதை ஸ்ரீ வைஷ்ணவர்கள் ந்யாயாலயத்தில் வழக்குப் பதிவு செய்து எதிர்கொள்ள இருக்கிறார்கள். திருநாடேகிவிட்ட புத்தூர் ஸ்வாமி ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு எதிராக யார் எந்த தரப்பிலிருந்து பிழையான கருத்து தெரிவித்தாலும் எங்கெல்லாம் தேவையோ அதை ந்யாயாலயத்தில் எதிர்கொள்ளத் தவறியதில்லை. பிழையான கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்தை தமது சஞ்சிகையில் சண்டமாருதமாக பதிவு செய்வதற்கும் தயங்கியதில்லை அஞ்சியதில்லை.

    தமிழகத்தில் சித்தாந்த பூர்வமகவும் சட்ட பூர்வமாகவும் சமயத்துக்கு எதிராகத் தொடரப்படும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மிகவும் தீர்க்கமாகவும் அச்சமில்லாமலும் எதிர்கொள்ளும் மாண்பு ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தினருக்கு உண்டு. அதைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

  24. Copy of mail sent to Dinamani
    Vairamuthu knew very well that his comments will hurt bakthas. He himself mentioned in his write up Yet he included the comments which shows his intentions clearly. Moreover on many occasions he distorted the works of Andal by attributing cheap and vulgar meanings to Andal works. The whole article deserves condemnation
    Extract—
    அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட
    Indian Movement: some aspects of dissent, protest and reform
    என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :
    Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple.
    – பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாடார்கள்.
    ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்.

    I am surprised to know that the reputed daily like Dinamani allowed such a write up in your daily
    Pl be more careful in future

  25. BSV,

    Your post is amusing. Any work must be read/interpreted according to the situation/meaning at the time in which is was written. Interpreting it according to today’s circumstance is not only incorrect but also unjustified.

    If that is the case, then history has to be completely rewritten.

    Just because Rajaji expressed his opinion, it cannot be taken as gospel. When you say that there is no evidence that a person like Aandal ever existed, what is the evidence you have that the paasurams were not written by her?

    For that matter, what is the evidence Thiruvalluvar existed? What about Avvaiyar? Was it one person or several persons? The same applies to Jesus as well.

    This argument can go on & it is meaningless.

    Vairamuthu has wronged absolutely & he must be punished.

  26. // நாலாயிரத்திவ்யபிரபந்தத்தில் இவ்வரிகள் நீக்கப்படவேண்டும் //

    ஆமாமாம். BSV என்ற அரைவேக்காட்டு நபரின் கிறிஸ்தவ விக்டோரிய மதிப்பீடுகளுக்கு ஒத்துவராததும் “அருவருப்பாக” தோன்றுவதும் எல்லாம் நீக்கப்பட வேண்டும். என்ன ஒரு மலினமான சிந்தனையும் ஆணவமும் இருந்தால் இப்படி கூறத் தோன்றும்!

    // பதிவில் காட்டப்படும் வரிகள் விரசமே மற்றவருக்கு. இலைமறைவாகக் கூட அவையில்லை. அப்பட்டமாக இருக்கின்றன // என்பது வைரமுத்து ஆண்டாளின் பாசுரங்களை அணுகும் அதே முதிர்ச்சியற்ற மனநிலை. கோளாறு அதில் தான் இருக்கிறதே அன்றி அவ்வரிகளில் இல்லை.

    // இப்படிப்பட்ட வரிகள் இன்று தேவையில்லை // என்று தீர்ப்புக் கூறுவதற்கு BSVன் தகுதி என்ன?

    பல நூற்றாண்டுகளாக பரம பக்தியுடனும் ஆன்மீக உணர்வுடனும் இந்த பாசுரங்களையும், இதே போன்ற குறியீடுகள் அமைந்த லலிதா சகஸ்ரநாமம், சௌந்தரியலஹரி ஆகிய நூல்களையும் எண்ணற்ற இந்துக்கள் ஓதியும் பயின்றும் வருகிறார்கள். இந்த வகையான உபாசனை தங்களுக்கு ஏற்றவை அல்ல என்று கருதுபவர்கள் அவற்றைத் தவிர்த்து வேறு உபாசனைகளை மேற்கொள்வார்களே அன்றி தங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களையும் கருத்தாக்கங்களை நீக்கவேண்டும் என்று கூறமாட்டார்கள். ஏனென்றால் இவை சாதாரண புத்தகங்கள் அல்ல இஷ்டத்துக்கு சென்சார் செய்வதற்கு. இவை மகான்களும் அருளாளர்களும் அருளிய மறைநூல்களாகவே இந்துக்களால் கருதப்படுகின்றன.

    இது எதைப் பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் வந்து இப்படி ஒரு அபத்தக் கருத்தை BSV கூறுவதற்கு அவருக்கு ஒரு தீய உள்நோக்கம் உள்ளது என்றே கருத வேண்டும்.

  27. ஆர்வி

    கண்யமான முறையில் உங்களுடன் சம்வாதம் செய்ய முடியும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. மற்றவர்களிடம் கண்யக்குறைவாக நீங்களும் ஆனால் மற்றையவர்கள் கண்யத்துடன் உங்களுடன் சம்வாதம் செய்யவேண்டும் என்பது உமது எதிர்பார்ப்பு.

    ஜடாயு அவர்கள் உங்களுக்கு முழுமையாக பதில் கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன். மழுப்பி விட்டார். ஆகையாலும், மிகவும் தரங்கெட்ட முறையில் நீங்கள் கருத்துப்பகிர்ந்துள்ளதை வெளிப்படையாகக் கண்டிப்பது உசிதமென்பதாலும் இதை எழுத நேர்கிறது.

    \\ ‘தேவதாசி’ என்பது உங்களைப் பொறுத்த வரையில் அவதூறா? இன்னும் காட்டமான வார்த்தைகளில் கேட்கிறேன், ஆண்டாள் வேசையாக இருந்திருந்தால் ஆண்டாளை நிராகரித்துவிடுவீர்களா? ஆண்டாளை ஆழ்வார் என்று போற்ற மாட்டீர்களா? \\

    \\ ஆண்டாளை தேவதாசி என்பது உளறல் என்பதாக நீங்கள் சொல்வதாகத் தெரியவில்லை. தேவதாசி என்பது கேவலம், ஆண்டாளை எப்படி இந்த மாதிரி கேவலப்படுத்தப் போயிற்று என்று நீங்கள் சொல்வதாகத்தான் தெரிகிறது. \\

    Fools rush in where angels fear to tread என்பது ஆங்க்ல பழமொழி. ஒரு முறை ஒரு கருத்தை சகட்டு மேனிக்கு வீசி விட்டு அதை மழுப்புவதற்கு சகட்டுமேனிக்கு பொருளற்று இன்னொரு கருத்து என்று ப்ரலாபம் செய்திருக்கிறீர்கள் என்றால் மிகையாகாது. இப்படி சகட்டு மேனிக்கு கருத்திடுவது உங்கள் பக்ஷத்திலிருந்து இது முதல்முறையும் கிடையாது.

    தேவதாசி என்ற சொல்லை ஜடாயு எங்குமே கேவலம் என்று சொல்லவில்லை. மாறாக

    \\ மேலும், 8-9-10ம் நூற்றாண்டுகள் என்ற அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவதாசி என்ற பட்டம் மிகுந்த கௌரவத்திற்கும், சமூக அந்தஸ்திற்கும் உரிய ஒன்றாக இருந்தது \\ என்று மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

    \\ ஆண்டாளை தேவதாசி என்பது உளறல் என்பதாக நீங்கள் சொல்வதாகத் தெரியவில்லை. \\

    இப்படி முன்னுக்குப்பின் முரணாக எழுதுவது கடுஞ்சினத்தைக் கொடுக்கிறது என்றால் மிகையாகாது. மாறாக

    \\ ஆண்டாளின் பிறப்பையும் குலத்தையும் குறித்து “Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple” என்ற ஏதோ ஒரு அமெரிக்கப் பல்கலைப் பேராசிரியரின் உளறலை \\

    ஆண்டாளம்மை தேவதாசி என்று குறிப்பிடுவதற்கோ ஸ்ரீவில்லிப்புத்தூர் விட்டுசித்தர் வியன் கோதை ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பதற்கும் எந்த முகாந்தரமும் இல்லாத பக்ஷத்தில் “ஆய்” வு என்ற போர்வையில் ஒரு ம்லேச்சன் ஆண்டாளை தேவதாசி என்று குறுகிய தரங்கெட்ட எண்ணத்துடன் பதிவு செய்தமையை …………….

    மிக மிக மிக மிகத் தெளிவாக ஜடாயு உளரல் என்றே சொல்லியிருக்கிறார்.

    தேவதாசி மற்றும் வேசி என்ற இரண்டு சொற்களும் வேறுபாடு உண்டு என்று உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். காலப்போக்கில் வயிற்றுக்கு வழியிலாமற் போக தேவதாசிகளுள் பலர் வேச்யாவ்ருத்தியில் விழுந்தமை சரித்ரம். அதேபடி காலப்போக்கில் பொதுஜனங்களின் பொதுப்புரிதலில் இரண்டு சொற்களுக்குமான வேறுபாடு கிட்டத்தட்ட இல்லாமற் போயிற்று. ஆயினும் மொழியறிவு உள்ளவர்களுக்கு இரண்டு சொற்களுக்கும் உள்ள வித்யாசம் தெளிவாகத் தெரியும்.

    மிக சமீபத்தில் பூரி ஜகன்னாத ஸ்வாமி ஆலயத்தில் கடைசீ தேவதாசியாகப் பணியாற்றிய பூஜ்ய மாதா ஒருவர் வைகுண்டமேகி விட்டார். ஜகன்னாத ஸ்வாமிக்கு கைங்கர்யம் செய்வதற்கு தீக்ஷாநியமமேற்று அதையொட்டி கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் முழுதும் ஒரு துறவி போல வாழ்ந்து ஜகன்னாதனுக்கு மட்டுமே தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார். ஒட்டுமொத்த பூரி நகர வாசிகளாலும் மந்திரத்தில் தர்சனத்திற்கு வரும் அனைத்து தர்சனார்த்திகளாலும் மிகுந்த பஹுமானத்துடன் நடத்தப்பட்டிருக்கிறார்.

    ஆண்டாளம்மை கண்ணனைப்போன்று அவதாரம். நீங்கள் பயன்படுத்திய இரண்டு வெவ்வேறு சொற்களிலும் ஆண்டாளம்மை இருந்ததற்கு எந்த விதமான அகச்சான்றுகளோ புறச்சான்றுகளோ இல்லாதிருக்க……………. நீங்கள்……………

    அப்படி இருந்தால் ஆண்டாளை ஆழ்வார் என்று எண்ணாது புறக்கணிப்பீர்களோ என்று சொல்லுவது மிக மிக மிக மிக கீழ்த்தரமான வாய்த்துடுக்கான மிக வன்மையாகக் கண்டிக்கத் தக்க கருத்து. ஜடாயு முறையாக உத்தரமிட்டிருந்தால் நான் இந்தக் கருத்துப் பதிய அவச்யமே இல்லை. ஆனால் அவர் மழுப்பியிருப்பதால் விஷயம் தெளிவு படுத்தப்படுதல் முறை என்பதற்காக நான் இதை எழுத நேர்ந்திருக்கிறது.

    திருவையாற்றில் த்யாகராஜர் ஸமாதிஸ்தலத்தை கட்டிய நாகரத்னம்மா தன்னை மிகப் பெருமையாகவே தேவதாசி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். கல்வி கலைகளில் ஈடிணையற்ற பாரங்கதம் பெற்றிருக்கிறார். ஈடிணையற்ற ப்ரக்யாதியைப் பெற்றிருக்கிறார். இப்படி பேறு பெற்ற கல்வி கேள்விகளிற் சிறந்த தேவதாசிகள் ஹிந்துஸ்தானமுழுதுமிருந்திருக்கின்றனர். சமய ரீதியாக இவர்கள் கைங்கர்யபரர்களகவே போற்றப்பட்டிருக்கின்றனர்.

    சமூஹ ரீதியில் இரு வேறு கருத்துக்கள் இருந்தாலும் வேச்யாவ்ருத்தி சமயரீதியாக பாபமாகவே கருதப்பட்டிருக்கிறது. ஆனால் சமய நூற்களில் இப்படிப்பட்ட பாபவ்ருத்தியில் ஈடுபட்டவர்கள் ராமசாமிநாயக்கத்தனமாக முற்று முழுதாக வில்லிகளாகவும் ரோகத்தைப் பரப்புபவர்களாக மட்டிலும் சித்தரிக்கப்படவில்லை. மாறாக ஸ்ரீமத் பாகவதத்தில் அவதூத கீதையில் அவதூதர் தமது குருவாகச் சுட்டும் பலவற்றினுள் ஒன்றாக பிங்களா என்ற வேசியைச் சொல்லியிருக்கிறார். அவளது வ்ருத்தி பாபகரமான வ்ருத்தியாக இருந்த பக்ஷத்திலும் அவளது மற்றைய செயற்பாடுகள் போற்றத்தக்கதாக பின்பற்றத் தக்கதாக இருந்தது விதந்தோதப்பட்டுள்ளது.

    பிதற்ற வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் பிதற்றலாம் தான். எவனாவது ஒரு பரங்கியன் ஆண்டாளை மாம்ச விக்ரயம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூட எழுதிவிடலாம். நீங்கள் உடனே ஆண்டாள் மாம்ச விக்ரயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால் ஆழ்வாராகக் கருத மாட்டீர்களா? என்று கேட்கலாம். கேழ்வரகுல நெய் வடியுதுன்னு சொன்னா கேக்கறவனுக்கு மதி எங்க போச்சுங்கற சொலவடை நினைவுக்கு வராமற் போகவில்லை.

  28. பீ எசு

    கந்தர்வன் அவர்களும் சாரங்க் அவர்களும் இந்த சமயத்தில் இல்லாமற் போனது எனக்கு மிகுந்த மனவேதனையளிக்கிறது.

    ராஜாஜி மூதறிஞராக இருக்கலாம். சுஜாதா எழுத்தாளராக இருக்கலாம். இவர்கள் சமய அறிஞர்கள் கிடையாது. சமய நூற்களைப் பற்றிய சமய விவாதத்தில் மிகத்துல்லியமான சமயக்கருத்துக்களை விமர்சனம் செய்து கொண்டே நேம் ட்ராப்பிங்க் யுக்தி மூலமாக உமது நயவஞ்சகக் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறீர்.

    தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன சேவயா என்று முறையாக ஒரு குருவினிடம் அவர் தாள்பணிந்து முறையாகக் கற்ற கல்விக்கும் விதண்டாவாதம் செய்வதற்கும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற முனைப்புடன் வைஷ்ணவத்தை ஸ்வயமாகக் கற்பதற்கும் உள்ள வேறுபாடு பூஜ்ய ஸ்ரீ டி ஏ ஜோஸஃப் ஸ்வாமின் அவர்கள் கற்ற கல்விக்கும் முன்னாட்களில் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற பெயரில் க்ருத்ரிமமாகக் கருத்துப்பதிந்த தங்களுடைய கல்விக்கும் இருப்பதாகப் புலனாகிறது வெள்ளிடைமலை.

    பேசிற்றே பேசலல்லால் என கண்ணன் கழலிணை நண்ண வேண்டி ஆசார்ய ச்ரேஷ்டர்களான முக்கூர் லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யார் திருமலாசார்யார் ஸ்வாமி போன்றோரிடமும் பிற்காலத்தில் பூஜ்ய ஸ்ரீ டி ஏ ஜோஸஃப் ஸ்வாமின் போன்ற பெரியோர்களிடமும் வேண்டிய வேதங்களைக் காலக்ஷேபம் கேழ்க்கும் பேறு எனக்கு கிட்டியுள்ளது. வெட்டி விதண்டாவதம் செய்வதற்கு என்னிடம் நிச்சயம் சரக்கு இல்லை. ஆனால் வைஷ்ணவத்தைச் சிதைப்பதான விஷயம் எது என்பதைப் புரிந்து கொள்ளும் சக்தியை ஸர்வநிச்சயமாக கண்ணனெம்பெருமானும் நான் காலக்ஷேபம் கேட்ட பெரியோர்களும் எனக்கு தெள்ளெனத் தெளிவாகப் புரியவைத்துள்ளனர்.

    ச்ருதி எனப்படும் வேதத்தில் தடியெடுத்த தண்டல்காரர்கள் கைவைக்க முடியாது. உள்ளது உள்ளபடிக்கு தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அப்படியே நாலாயிரமும். நாலாயிரத்திலும் திருப்பாவை என்பதற்கான ஸ்தான விசேஷம் ஸ்ரீவைஷ்ணவர்களிடையே எந்தளவு என்பது வைஷ்ணவர்கள் மட்டிலுமல்ல ஸாமான்யர்களாகிய நாமும் உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிவோம்.

    எத்தனையெத்தனை வ்யாக்யானங்கள் திருப்பவைக்கு. எத்தனையெத்தனை ஆசார்யர்கள் இந்த உயர்ந்த க்ரந்தத்திற்கு முடிவிலாது வ்யாக்யானமெழுதியிருக்கிறார்கள். திருப்பாவையிலுள்ள பாசுரங்களையென்ன அதில் உள்ள ஒரு சொல்லைஎன்ன ஒரு எழுத்தினை கைவைப்பதற்கு ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் தன் கனவிலும் கூட நினைத்துவிடுவானோ? கிடையவே கிடையாது.

    என்ன ஒரு நயவஞ்சகம் உமது எழுத்துக்களில். எத்தனை விஷம் அதில் இருந்தால் வைஷ்ணவர்கள் தம் சிரமேற்கொள்ளும் திருப்பாவையிலிருந்தும் நாலாயிரத்திலிருந்தும் இத்தை விலக்க வேண்டும் அத்தை விலக்க வேண்டும் என்று சொல்லத் துணிவீர்கள்? மலர்மன்னன் உமது வ்யக்திவிசேஷத்தை விமர்சித்தது பலநூறு முறை என் மனதில் ஓடுகிறது.

    எந்த ஒரு கருத்தை முன்வைப்பதற்கும் உமக்கு ஸ்வதந்த்ரம் உண்டு தான். மறுக்கவில்லை. ஆனால் ஸ்ரீ வைஷ்ணவனுடைய கருத்து என்னவாக இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற உளப்பாடுடைய ஒரு வ்யக்தியின் கருத்து என்னவாக இருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உம்மைப்போன்ற நயவஞ்சக எண்ணத்தையும் செயற்பாடுகளையும் கொண்டோரை மீறியே ஸ்ரீ வைஷ்ணவம் காப்பாற்றப்பட்டு வருகிறது என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

    கந்தர்வன் அவர்களும் சாரங்க் அவர்களும் சொல்லொணா மனவேதனை அளிக்கும் இப்படியான இவரது கருத்திற்கு ஸம்ப்ரதாய ரீதியாக மறுப்பு எழுத வேண்டும் என்று மிகவும் புண்பட்ட மனதுடன் இதைப் பதிவு செய்கிறேன். தயவு செய்து ஸம்ப்ரதாய ரீதியாக இப்படிப்பட்ட கீழ்த்தரமான கருத்திற்கு மாற்றுக்கருத்து முன் வையுங்கள் ஐயன்மீர்.

  29. பீ எசு

    சில்சாமிடம் வாக்குதத்தம் செய்த நீர் விவிலியத்தில் உள்ள கந்தறகோளாதிகளை அதில் உள்ள பாலியல் சார்ந்த விஷயங்களை நீக்கச் சொல்லலாமே. உங்களது விவிலியத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தும் நீங்கள் இங்கு விமர்சித்த அலகீட்டுக்கு உட்படாதவையா? உங்களத் விவிலியத்தை மாற்றுவதைப் பற்றி முதலில் சிந்தியுங்கள். அதைப் பற்றிக் கருத்துப்பதியுங்கள். எங்களது நாலாயிரத்தை அதற்குப் பிறகு விமர்சிக்கலாம்.

    அல்லது கணபதிராமய்யர் அவதாரத்தில் குரான்-ஏ-ஷெரீஃபுக்கு வக்காலத்து வாங்கிய நீர் அதில் உள்ள பாலியல் சார்ந்த விஷயத்தை நீக்கச்சொல்லி முனைந்துவிடுவீரோ.

    இத்துடன் முடிந்ததா கதை என்று நீங்கள் எழுதியது முன்னர் எழுதிய நயவஞ்சக விஷத்திற்கு மாற்றோ என்று ஒரு க்ஷணம் நினைத்து விட்டேன். விஷத்திற்கு மேல் விஷம். க்ரிப்டோ க்றைஸ்தவ விஷம். உங்களுடைய நயவஞ்சகமான எண்ணத்தின் பாற்பட்டு திருப்பாவைப் பாசுரங்களை நீக்குவதற்கு தாயுமானவனை எதற்கு இழுக்கிறீர்கள்.

    சைவ சமய நூற்களில் நாயிகாநாயக பாவத்தை ப்ரதிபலிக்கும் பாசுரங்களை அடுத்த லிஸ்டில் வைத்திருக்கிறீர்களோ ஆதரவு தேடுவதற்கு. எப்படி கீழ்த்தரமான செயற்பாடு எவ்வளவு நயவஞ்சகம்.

    அன்பின் ஸ்ரீ தாயுமானவன், இதற்கு முன்னால் ரேபேக்கு மேரியம்மா என்றொரு சஹோதரி மிக வெளிப்படையாக உங்களது தமிழ்ப்பற்றை வ்யாஜமாக வைத்து க்றைஸ்தவத்துக்கு தூண்டில் போட்டது நினைவுக்கு வருகிறது. ஜாக்ரதை. மலர் மன்னன் ஐயா அவர்களால் க்ரிப்டோ க்றைஸ்தவர் என்று தமிழ் ஹிந்து தளத்தில் அடையாளப்படுத்தப்பட்டவர் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ. திருப்பாவையில் கைவைத்த இந்த நபருக்கு திருமுறைகளில் கைவைக்க வ்யாஜத்தைத் தேடிக்கொண்டிருப்பார். நிச்சயமாக அதையும் முன்வைப்பார். படுகுழியில் விழ வேண்டா.

    நாலாயிரமும் திருமுறைகளும் பொழுதுபோகாதவர்கள் எழுதிய பனுவல்கள் இல்லை கண்டவரும் கைவைக்க. அருளாளர்களது அருளிச்செயல்கள் அவை.

  30. //// நாலாயிரத்திவ்யபிரபந்தத்தில் இவ்வரிகள் நீக்கப்படவேண்டும் //

    ஆமாமாம். BSV என்ற அரைவேக்காட்டு நபரின் கிறிஸ்தவ விக்டோரிய மதிப்பீடுகளுக்கு ஒத்துவராததும் “அருவருப்பாக” தோன்றுவதும் எல்லாம் நீக்கப்பட வேண்டும். என்ன ஒரு மலினமான சிந்தனையும் ஆணவமும் இருந்தால் இப்படி கூறத் தோன்றும்!

    // பதிவில் காட்டப்படும் வரிகள் விரசமே மற்றவருக்கு. இலைமறைவாகக் கூட அவையில்லை. அப்பட்டமாக இருக்கின்றன // என்பது வைரமுத்து ஆண்டாளின் பாசுரங்களை அணுகும் அதே முதிர்ச்சியற்ற மனநிலை. கோளாறு அதில் தான் இருக்கிறதே அன்றி அவ்வரிகளில் இல்லை.

    // இப்படிப்பட்ட வரிகள் இன்று தேவையில்லை // என்று தீர்ப்புக் கூறுவதற்கு BSVன் தகுதி என்ன?//

    நீக்கப்படவேண்டுமென்பது ஒரு தனிநபரின் அவா. ஏனெனின், ஒரு தனிநபராக அவை எனக்கு விரசமாகத் தெரிகின்றன. எனக்கு மட்டுமன்று: இராஜாஜிக்கு, அன்புராஜிக்கு. அவர்களை விட்டுத்தள்ளுங்கள் என்னை மட்டுமே எடுங்கள். எனக்குப் பக்தி ஆண்டாளில் இவ்வரிகளைப்படிக்கும் போது வரவேயில்லை. இதைச்சொல்ல என்ன தகுதி வேண்டும்? அதான் சொல்லி விட்டேனே: அரவிந்தன் நீலகண்டனுக்கு, ஜடாயுக்கு, ஹரிப்பிரியாவுக்கு மற்றும் பலருக்கு இருக்கும் ஆன்மிக முதிர்ச்சி எல்லாருக்கும் இருக்குமா? அவரவருக்குப் பிடித்ததை, அல்லது புரியும் தகுதிக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்வதுதான் இந்துமதம் என்ற அடிப்படை கூட தெரியாதா? ஜடாயுக்கு புரிந்தமாதிரியே எல்லாருக்குமா?

    நான் திரும்பதிரும்ப க்ருஷ்ணகுமாரிடம் சொன்னதுதான்: என் வீட்டுக்கு வாருங்கள்; எங்களோடு பழகுங்கள். நாங்கள் இந்துவா கிருத்துவரா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கிருத்துவன் என்ற அவதூறை நிறுத்துங்க்ள். ஜடாயுயை நான் நேராகப் பார்த்துப்பேசுவது ஒன்றும் பெரிய விசயமில்லை. க்ருஸ்ணகுமார் என்ற மர்மமனிதரைப் பார்க்க முடியாது.

    எல்லா மதங்களிலும் அருவருப்பான விசயங்கள் உண்டு. மற்ற மதங்கள் அவற்றை கட்டாயப்படுத்தும் . இந்துமதம் அப்படி செய்யாது. எனவே நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் எது வேண்டுமோ அதை எடுத்து, எது வேண்டாமோ, அதை விடுத்து எவருமே படிக்கலாம். பக்தியைப் பெருக்கிக்கொள்ளலாம். நான் தொண்டரிப்பொடியாழ்வாரின் கடுஞ்சொற்கள் நிறைந்த் அப்பாசுரத்தையும் ஆண்டாளில் விரசவரிகளை விலக்கியே படிக்கிறேன். இச்சுதந்திரத்தை இந்துமதம் எனக்கு அளிக்கிறது. இது மலினமான சிந்தனை, ஆணவம் என்பது இந்துமதத்தை அவமதிப்பதாகும்.

  31. வல்லமை கூகுள் தமிழ்க்குழுமத்துக்கு எழுதியது. தமிழ் ஹிந்து வாசகர்களுடன் பகிரத் தக்கது என்பதனால் இங்கும் பகிர விழைகிறேன்.

    தமிழகமே வைரமுத்து இழிவாகப் பதிந்த கருத்தினை விவாதிக்கையில் கூகுள் தமிழ்க்குழுமங்கள் கமுக்கமாக இருந்துள்ளதே என்று நினைத்தேன். சிவபெருமானையே தமிழ்க்கடவுள் இல்லை ஆரிய வந்தேறி என்பது போன்ற கருத்துக்களை தமிழ்க்குழுமங்களில் வாசித்து இவற்றிலிருந்து விலகியிருப்பது நல்லது என்று கருத்துடையவன். மேலும் வரைமுறையில்லாமல் தேசப்பிரிவினையை பரப்புரை செய்வதையும் தமிழ்க்குழுமங்களில் வாசித்துக் கண்டனமும் செய்திருக்கிறேன்.

    கால அவகாசம் எடுத்துக்கொண்டு ஆனாலும் சரி………….இந்த இழிவினை கண்யமாக விமர்சித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா கண்ணன். பல தமிழ்க்குழுமங்களில் தமிழை ஆண்டாளை இழிவு படுத்தியது ஒரு பொருட்டாகக் கூட கருதப்படவில்லை என்பதையும் கவனிக்கிறேன். இதற்குக் காரணம் என்ன என்றும் அறிவேன். வைரமுத்து தேவதாசி என்ற அளவில் நின்றுவிடவில்லை தமிழிலக்கியம் மற்றும் பாரதத்தின் மற்றைய அனைத்து பாஷைகளிலும் இயற்றப்பட்ட இலக்கியங்களின் அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் மேற்கத்திய ஆப்ரஹாமிய நிலைப்பாடுகளின் அடிப்படையில் விஷயத்தை அணுக முயற்சித்திருக்கிறார்.

    வைரமுத்துவைக் கடுமையாகக் கண்டனம் செய்வது ஏற்புடையதே. ஆனால் அதிலும் வரைமுறை மீறப்பட்டிருப்தைக் கண்ணுற்றேன். கழகத்தினர் கருத்தியலும் அவர்களது செயற்பாடுகளும் தரக்குறைவானது என்று எடுத்துக்காட்டுகளுடன் விமர்சனம் செய்யும் எதிர்த்தரப்பு அதே தரக்குறைவான முறையில் மாற்றுக்கருத்தினரை விமர்சனம் செய்வது அறவே ஏற்கப்படக்கூடியது இல்லை. சங்கபரிவாரத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எமது தரப்பிலிருந்து பரப்புரை செய்யப்பட்ட தரம் தாழ்ந்த கண்டனங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ஹிந்து மத நூற்களை ( தமிழில் எழுதப்பட்ட சைவ வைஷ்ணவ நூற்களும் அடக்கம்) தமிழ்க் குழுமங்கள் இழிவாகச் சித்தரிப்பதை தொடர்ந்து அவதானித்து வருகிறேன். இதே அலகீட்டை ஆப்ரஹாமிய மத நூற்களுக்கு தமிழ்க்குழுமங்கள் முன்னெடுப்பதில்லை. இக்குறைபாட்டை சுட்டிக்காண்பிப்பவர்களை கட்டபஞ்சாயத்து மூலம் பஞ்சாயத்து செய்து தள்ளிவைக்கும் சகிப்புத்தன்மையையும் கண்கொண்டு பார்த்திருக்கிறேன். இந்த லக்ஷணத்தில் சகிப்புத்தன்மையைப் பற்றி பக்கம் பக்கமாக விவாதிப்பதில் (முழு பக்ஷபாதத்துடன்) குறைவு இருக்காது.

    ஒரே ஒரு வித்யாசம். முன்னால் ஹிந்து மதத்தை யார் இழிவு செய்தாலும் அதற்கு எதிர்க்குரலிருக்காது. இப்போதெல்லாம் மிக மிக உரத்த எதிர்க்குரலிருக்கிறது.

    ஹிந்து” என்ற சொல்லை முனைந்து திரிப்பது “ஹிந்து” என்ற சொல்லின் மீது காழ்ப்புணர்ச்சியை வரைமுறையற்று பரப்புரை செய்வது ஹிந்து மத நூற்களை வரைமுறையன்றி திரிக்க முனைவது அப்படி திரிக்க முனைபவர்களை விதந்தோதுவது அதற்கு மாற்றுக்கருத்து முன்வைக்க விழைபவர்களை முனைந்து எத்தையாவது காரணத்தை சொல்லி தள்ளிவைக்க முனைவது இவையெல்லாம் தமிழ்க்குழுமங்களின் எழுதப்படா விதி..

    தமிழகத்தில் ஹிந்துத்வ இயக்கங்கள் பெருமளவில் வளர்வதற்கு கழகத்தினர், கழகத்திற்கும் இடதுசாரிகளுக்கும் வித்யாசமில்லாத படிக்கு இயங்கும் இடதுசாரி மற்றும் நக்ஸல்வாத இயக்கங்கள் மற்றும் தமிழ்க்குழுமங்களின் மட்டில்லாத ஹிந்து மதக் காழ்ப்பு, அதே வேகத்தில் மட்டில்லாத ஆப்ரஹாமிய சார்பு போன்றவை நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவும் என்பதில் எனக்கு லவலேசமும் சம்சயமில்லை.

    வெற்றிவேல்”

  32. Dear Sanjay,

    //Any work must be read/interpreted according to the situation/meaning at the time in which is was written. Interpreting it according to today’s circumstance is not only incorrect but also unjustified.//

    Sanjay, you’ve not read my message closely. It was a commenter by name KTJ who has written the above. Not I. Assuming your rule of interpreting the Nalayira Divya Prabandam in today’s circumstances, the book will collapse. Because a lot of paasurams can be understood only in their context. You’ve therefore to apply your rule only selectively as you are doing it here. I wonder whether you’ve read the all paasurams. I’m reading them daily, esp Periya Thirummozhi as it is the prescribed text (detailed) for me.

    //Just because Rajaji expressed his opinion, it cannot be taken as gospel. When you say that there is no evidence that a person like Aandal ever existed, what is the evidence you have that the paasurams were not written by her?//

    I cited Rajaji only to say that his view is shared by many like me. I felt sure that such passurams as quoted by Thaumananvan must not have come from a woman. Tamil women won’t express their sensuality openly – even to their husbands. I did not at all mean to say that – because Rajaji said so, it is a gospel truth. Never. I, for one, never take anyone as my hero to follow. I felt that which he has felt, so it must be true from my perspective.

    As for evidences of Andal, the only proof is Guruparambara Prabahvam. As a matter of fact, it is the original source on which the life histories of all Azvaars came to be written. However, this book is hagiography. It does not adduce any historical evidences.

    The belief of Vaishanvas about this book and the histories of Azvaars are not under debate here: that’s different. If, for you, it is not hagiography, it is well and good. You’re a believer. Lucky. The unlucky are those like me.

    Jesus is fiction. I agree. What is Alwars to you, Jesus is for Christians – He lived. For me, Jesus may have lived either as an insignificant citizen who was hanged with other robbers for a crime, or a fiction. Jesus was a very common name given to children in Jewish society of that time. Please read some books on Jewish history, you know.

    Tiruvalluvar’s history is not proved at all: all conjectures only. Whether he wrote all kurals or not is all conjecture. Whether he was one person or many with similar names, just like Avvayars of Sangam, and later author of Kondrai Vendan. If you have any proof, I shall be thankful. The parayar commmunity of TN claim his as their man as Valluvan is one of the SC castes in TN. Can we accept that? It’s their belief.

    Why didn’t you say even a single word about Nagasamy’s denial of existence of Ramajunjar?

    //Vairamuthu has wronged absolutely & he must be punished.//

    What is the kind of punishment would you wish to inflict on him? Like the Kerala Muslims chopped off the hand of Prof Joseph?

  33. க்ருஷ்ணகுமார், உங்கள் நீளமான பதிலில் கருத்தில் கொள்ள வேண்டியது ஒன்றுதான். சமஸ்கிருத வார்த்தைகள் குறைந்திருக்கின்றன. வாழ்த்துக்கள்!

    ஜடாயு மற்றும் மற்றவர்களுக்கு; மீண்டும் படித்துப் பார்த்தேன். தினமும் பாண்ட் ஷர்ட்தான் அணிந்திருந்தார், தினமும் பிட்சா பர்கர் சாப்பிட்டார் என்று வைரமுத்து சொல்லி இருந்தால் அது உளறல் என்றுதான் நீங்களும் வகைப்படுத்துவீர்கள், அவதூறு என்று அல்ல. தேவதாசி என்று அவர் சொன்னது ஏன் உங்களுக்கு அவதூறாகத் தோன்றுகிறது என்று யோசித்துக் கொள்ளுங்கள். தேவதாசி என்பதில் எந்தத் தாழ்வும் இல்லை, // வரலாற்றின்படி தேவதாசிகளின் நிலை அக்காலகட்டத்தில் உயர்ந்ததாக இருந்தது // என்று நீங்கள் உண்மையாகவே நினைத்தால், வைரமுத்து அவறூறு செய்துவிட்டார் என்று ஏன் குமுற வேண்டும்? ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரின் ராணியாக இருந்தார் – அதாவது உயர்ந்த நிலையில் இருந்தார் என்று வைரமுத்து சொல்லி இருந்தாலும் அதுவும் உளறல்தான். அதற்கும் இப்படித்தான் பொங்கி இருப்பீர்களா? உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்…

  34. RV,

    Vairamuthu attributed the devadasi lineage to Aandal in the current usage only. Are we so naïve to believe that he has not maligned her?

    I will ask one more question. What is the need to quote a txt from a so called “research work” from a American university?

    What standing does that work have?

    There are hundreds of trash published as books. Can I simply quote from them & justify my actions?

    If as you say, you do not really believe what is written in that book, why quote it in the first place?

    Vairamuthu’s actions can never be justified.

    BSV,

    It is immaterial whether you believe Aandal existed or not. NO one is bothered about that. It is a belief held by a majority of the people & that counts.

    For you, rajaji’s word may be gospel, so be it.

    There is historical evidence of Ramanujar having existed, so the nagasamys & kuppusamys can take a walk.

    Vairamuthu must be hauled up in court & made to apologize & also put in jail.

    The question is not only about Vairamuthu.

    All along, hindu religion/Gods & Goddesses are being tarnished by these so called intellectuals & supported in the garb of “freedom of expression” by so called “secularists” like you.

    His punishment would be lesson to everyone.

    BTW, I did not suggested bt me, that is done nby yoiur “nmuslim” brethren.

  35. BSV,

    The irony is that after saying all these, you say you read the divya prabhandams everyday. You are doing it for what? Publicity?

    “Enga veettukaararum velaikku poraar” type?

  36. What is the kind of punishment would you wish to inflict on him? Like the Kerala Muslims chopped off the hand of Prof Joseph?

    BSV,

    This is not what I suggest. This was done by your muslim brethren. Question them, (if you have the guts). You are a secularist, correct?

  37. RV, your response to Mr KK is simply what we in Australia call a cop out.Respond with solid counterpoint rather than worry about his Sanskrit Tamil, thank you. You very well know that when VM writes Devadasi, he means a prostitute. He is calling Aandal a prostitute. Period and no beating around the bush on that. All the liberal bleeding hearts can stop pretending. This is the topic of discussion and controversy here. There’s no question of denigration of Aandal by VM and all your hollow counters simply suck. How devadasi were treated in the past is irrelevant because we all know that this half baked DMK stooge MEANT it when he said what he said. Oh, you are so witty with Jadayu wears pants and shirts stuff!! And that’s supposed to be one of your counters! Pathetic
    The problem with Tamil Hindus is their passion and worship for anything and everything that has to with the silver screen and their wholesale swallowing of DK,DMK propaganda.They have traded their brains for the glamour of cinema screen. Pity, thier slavish minds are still rooted in the colonial, church propaganda of Aryan/ Dravidian division. Add the Tamil parochialism to this brain dead mixture and then you get A COMPLETE picture on the state of Tamils in general and Hindus in particular in TN.

  38. ஆர்வி

    உங்களது ரத்னச் சுருக்கமான பதிலில் புரிந்து கொள்ள வேண்டியது நீங்கள் சொதப்பி மழுப்பிய விஷயங்களை சாவகாசமாக சாய்ஸில் விட்டு விட்டு கீழே விழுந்து மண் மூடிய மனிதன் ஆஹாஹா என்னுடைய மீசையில் மண்ணே ஒட்டவில்லையே என்ற படிக்கு அலப்பரை செய்வது தான். வாசிப்பவர்களுக்கு நீங்கள் என்னென்ன சொன்னீர்கள். எப்படியெப்படி சொதப்பினீர்கள் என்பது தெளிவாகப்புரியும். நான் செய்ததெல்லாம் கைப்புண்ணுக்கு கண்ணாடி காட்டியது மட்டிலும் தான்.

    உளறுவது உங்களுக்கு மட்டிலுமான தனியுரிமை. இது முதலும் கிடையாது. கடைசியும் கிடையாது.

    ரொம்ப சமத்காரமாக பதிலிறுத்த தொனி தெரிகிறது. மொழியறிவு உள்ளவர்களுக்கு தேவதாசி என்ற சொல்லிற்கும் வேசி என்ற சொல்லிற்கும் வேறுபாடு தெரியும் என்றும் பொதுப்புரிதலில் அந்த வேறுபாடு அற்றுப் போய் விட்டது என்று நான் பதிந்ததை நீங்கள் படிக்காத மாதிரி நடிப்பீர்கள். உங்களது உளறலுக்கு முட்டுக்கொடுத்தாக வேண்டுமில்லையா. அதற்காகப் பதிவு செய்யப்பட்டது உங்கள் உத்தரம்.

    சமய நம்பிக்கையுள்ளவர்கள் பொங்குவது பொருள் மங்கிப்போன சொல் சுட்ட வரும் பொருளை பொதுமக்கள் எப்படி ஏற்பார்கள் என்பது மிக மிகத் தெளிவாகத் தெரிந்த விஷயம் என்பதனால் தான். த்ராவிடக்கழிசடையாகிய மண்டுமுத்து அந்த சொல்லினால் சுட்டவரும் பொருள் தான் அவதூறு. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பவே முடியாது.

    THE AGGRESSION IS NOT PER SE IN THE FORM OF THE WORD BUT THE CONTENT AND THE COMMON PERCEPTION. YOU KNOW THIS VERY WELL. ஆனா நீங்க புடிச்ச புலிவாலை விட முடியாதில்லையா.

    பாஷைக்கலப்பு பற்றிப் பேச உங்களிடம் மட்டிலும் அளவுமானியில்லை. என்னிடமும் கூட உண்டு. ஆனால் டேக்கேதாரி உங்களிடம் மட்டிலும் என்னிடம் இல்லை.

  39. அன்பின் பீ எசு.

    \\ நான் திரும்பதிரும்ப க்ருஷ்ணகுமாரிடம் சொன்னதுதான்: என் வீட்டுக்கு வாருங்கள்; எங்களோடு பழகுங்கள். நாங்கள் இந்துவா கிருத்துவரா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கிருத்துவன் என்ற அவதூறை நிறுத்துங்க்ள். \\

    க்றைஸ்தவன் என்று இங்கு எங்கே சொல்லியுள்ளேன். பீ எசு. என்று தானே சொல்லியிருக்கிறேன். எசு உங்களுக்கு ஏசு என்று தோன்றினால் நான் என்ன செய்ய?

    நீங்கள் மனிதன் அது போதும் எனக்கு. நிறைய வாசிப்பிருக்கிறது உங்களுக்கு. பலமுறை சொல்லியிருக்கிறேன். விதந்தோதியிருக்கிறேன். மலர்மன்னன் மஹாசயர் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவை க்ரிப்டோ க்றைஸ்தவர் என்று சுட்டியிருக்கிறார். அது நீங்கள் தானா இல்லையா என்பதைத் தெளிவு செய்யுங்களேன். ஜோ எழுதியது எல்லாம் சுட்டி சுட்டியாக நான் குறித்து வைத்திருக்கிறேன். நீங்கள் ஹிந்துவாக இருந்தாலும் சரி க்றைஸ்தவராக இருந்தாலும் சரி உங்கள் மீது எனக்கு என்றென்றும் அன்பும் மரியாதையும் உண்டு.

    எனக்கு ஹிந்துக்களின் மீதும் க்றைஸ்தவர்கள் மீதும் இஸ்லாமியர் மீதும் ஹிந்துப்பெயரில் இங்கு கருத்துப்பதிந்த அசோக் குமார் கணேசன் போன்ற க்ரிப்டோ க்றைஸ்தவர்கள் மீதும் அன்பும் மரியாதையும் உண்டு. நீங்கள் யாரை வழிபட்டாலும் பண்பாட்டால் ஹிந்து என்பதை சங்கம் எனக்குப் போதித்துள்ளது.

    யாகூப் மேமன் போன்ற பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் முற்போக்குடைய நீங்கள் எந்த விதத்தில் மதங்களிடையே உயர்வு தாழ்வு பார்க்கிறீர்கள் என்பது தான் மர்மம். அதுவும் ஆப்ரஹாமியத்துக்கு முட்டுக்கொடுத்து ஹிந்து மதத்தை இழிவு செய்வது, மட்டில்லாத நாசித்தனமான ஜாதிக்காழ்ப்பில் ஈடுபடுவது. என்ன கருத்தையும் நீங்கள் முன்வைப்பதற்கு உங்களுக்கு பரிபூர்ண ஸ்வதந்த்ரம் உண்டு என்பது என் நம்பிக்கை. ஆனால் உங்கள் கருத்துக்கள் நிழலாக உங்களைப் பின் தொடராது என்று நீங்கள் நினைத்தால் அது மடமை.

    விபூதி எட்டுக்கொண்டுள்ள படி ராவணன் சைவன் தான். ஆனால் யாரும் அவனுடைய சீதாபஹரணத்தை ஆதரிக்க மாட்டார்கள்.

    உங்களை வைஷ்ணவன் என்று சுட்ட விழைகிறீர்கள். எம்பெருமானார் உங்களுக்குத் துச்சம். மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் வைஷ்ணவ ச்ரேஷ்டர்கள் ஆகி…. கலைவித்யாசமன்னியில் இருகலையினைச் சேர்ந்த ஜீயர் ஆசார்யாதிகளாலும் கொண்டாடப்படும்…. பூஜ்ய டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் போன்றோரை நீங்கள் இழிவு செய்வீர்கள். ஆனால் ஜாதி ஒழிப்பு வஜனம் பேசுவீர்கள். ஆழ்வார்களை இழிவு செய்வீர்கள். இப்போது நாலாயிரத்தையும் வைஷ்ணவர்களின் சிரோபூஷணமான திருப்பாவையில் எது ஏற்கப்பட வேண்டும் எது விலக்கப்பட வேண்டும் என்று கட்டபஞ்சாயத்து செய்வீர்கள். சாரங்க் சொல்லிய படி உங்களது கருத்துக்களை விஸர்ஜனம் செய்வது உசிதம் என்று தான் நினைக்கிறேன். ஆனால் வைஷ்ணவன் என்று சொல்லிக்கொண்டே திருப்பாவையை இழிவு செய்வது கொதிக்க வைக்கிறது. நிச்சயமாக ஸ்வயமாசார்யனாகத் தான் நீங்கள் இருக்க வேண்டும். இன்னாரிடம் வைஷ்ணவ டிகிரி வாங்கப் படித்தேன் என்று சொல்லிவிடாதீர்கள். நாரோடு சேந்து பூவும் நாறிப்போய்விடும்.

    \\ ஜடாயுயை நான் நேராகப் பார்த்துப்பேசுவது ஒன்றும் பெரிய விசயமில்லை. க்ருஸ்ணகுமார் என்ற மர்மமனிதரைப் பார்க்க முடியாது. \\

    ஹாஹா. இங்கு கருத்துப்பதியும் பலருடன் தொடர்ந்து நான் தொடர்பில் இருக்கிறேன். தூர்பாஷியில் பேசிக்கொள்கிறோம் கூட. வைஷ்ணவக்காழ்ப்பு ஆப்ரஹாமிய பயங்கரவாத ஆதரவு இத்யாதியெல்லாம் நேர்ல வேற சொல்லி இம்சை செய்யணுமோ தேவரீர். உங்கள் அரைவேக்காட்டுக் கருத்துக்களின் கசடு நீங்க ஆழ்வார்களின் அருளிச்செயல்களை வாசித்தேன். ப்ராயஸ்சித்தமாக. அகலகில்லேனென்று கண்ணனெம்பெருமானை ஹ்ருதயாகாசத்தில் ப்ரதிஷ்டை செய்து விடுகிறார்கள். ஆணவமோ அஹங்காரமோ அரைவேக்காட்டுத்தனமோ ஆப்ரஹாமிய சார்போ உங்கள் பக்ஷம் எதுவாக இருந்தாலும் இதற்காக நான் தலையல்லால் கைம்மாறறியேன்.

    நீங்கள் வணங்குவது எந்த தெய்வமாக இருந்தாலும் த்வேஷம் விடுத்து சாரத்தைப் பேசுங்கள். அதுவே கற்ற கல்விக்கழகு.

  40. Thanks for releasing all my comments here, esp. the rejoinder to Jatayu.

    I have written a lot in Badri Seshadri’s FB on the same subject and am continuing there because of the freedom of expression he gives there. I’ve responded to Prof MA Venkatakrishanan’s article in Geethacharyan.

    I’ve also responded to Aravindan Neelakantan in swarajyamag (they too give fantastic freedom of expression).

    Krishankumar can see my responses to him in my Tamil blog as the same won’t be allowed here as per my experiences, many of my responses to Krishnakumar were blocked. You’re free to write anything there in comments. It’s open to all – foes and friends alike.

    Thanks for reading

    Bala Sundara Vinayagam (Vinayagam Pa (FB)
    websites: https://throughalookingalaymanreflects.wordpress.com (English)
    https://freeflowofthoughts.blogspot.in (Tamil)

  41. பயனுள்ள எந்த கருத்தும் வரவில்லை. வைரடுமுத்துவிற்கு ஏற்கனவே வந்திருப்பது படித்தவன் என்ற ஆணவம், பணம் பெற்றவன் என்ன அகம்பாவம் , புகழ் படைத்தவன் என்ற மமகாரம் பலரால்கொண்டாடப்படுபவன் என்ற இறுமாப்பு விருதுகள் பல பெற்றவன் என்ற கொக்கரிப்பு – இவரின் திருமந்திர உரையில் நாத்திக வாதத்தை கலந்தார்.ஒரு ஊா் அறிந்த நாத்திக வாதியை ஆண்டாள் குறித்து பேச தினமணி அழைத்ததே முட்டாள்தனம். அதை ரசிக்க கூடிய ராஜபாளையத்து மக்கள் முட்டாள்கள்.இவரது உரையில் இலக்கிய ருசியும் இருப்பதில்லை.வார்த்தை ஜாலம் இருக்கும். பத்திரிகையில் விளம்பரம் வந்ததை நான் வெறுப்போடு படித்தேன். வால் இல்லாக் குரங்கு அனைவரையும் அசிங்கப்டுத்தி விட்டது.வேதனையில் ஆழ்த்தி விட்டது.

  42. ஜடாயு,
    1) RVயின் ஐயமே எனக்கும் ஏற்படுகிறது. அதற்கு நீங்கள் இன்னமும் பதில் அளிக்கவில்லை. {மேலும், 8-9-10ம் நூற்றாண்டுகள் என்ற அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவதாசி என்ற பட்டம் மிகுந்த கௌரவத்திற்கும், சமூக அந்தஸ்திற்கும் உரிய ஒன்றாக இருந்தது என்பதைக் கூட வைரமுத்து அறிந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது.} தேவதாசி என்ற நிலை உயர்வாக மதிக்கப்பட்டது என்பதை நன்கு அறிந்ததால்தான் வைரமுத்து அந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். (தேவதாசி முறையை ஒழித்தது நீதிக்கட்சி என்பதையும், ஒழிக்கத்தடையாக இருந்தது சனாதனவாதிகள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். அந்தப்பரம்பரையில் வந்த வைரமுத்து இழிவான பொருளில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பார் என்று நினைப்பதே தவறு)

    2) ஆண்டாளைத் தேவதாசி என்று கூறியது மட்டுமே இங்குப் பதிலிடும் பெரும்பபாலானோருக்குப் பெருந்தவறாகத் தெரிகிறதா? அப்படியானால் பேர் தெரியாத நூற்றுக்கணக்கான பெண்கள் தேவதாசிகளாக இருந்ததைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? தேவதாசி என்ற சொல்லே இழிவானது என்றால் தேவதாசி முறையை வளர்த்துச் செழுமைப்படுத்திய ஒரு மதம் எப்படிச் சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    3) வெள்ளைக்காரனின் மேற்கோளை ஏற்காத நீங்கள் அவர்கள் உருவாக்கிய ‘Hindu’ என்னும் அடையாளத்தையும், ‘India’ அரசியல் கட்டமைப்பையும் ஏற்றுக்கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன?

  43. //ஹாஹா. இங்கு கருத்துப்பதியும் பலருடன் தொடர்ந்து நான் தொடர்பில் இருக்கிறேன். //

    என்னிடம் சொல்லுங்கள். நீங்கள் யார்? ஏன் என்னை நேரில் பார்த்து நான் இந்துவா, கிறுத்துவனா என்று தெரிந்து எழுதக்கூடாது? தெரியாமல் ஏன் கிருத்துவன் என்று பொய் சொல்ல வேண்டும்?

    You are living in NCT of Delhi; I know that. தில்லி மலை மந்திர் முருகன் கோயிலிலேயே சந்திக்கலாமே? ரெடியா? அல்லது என் சேம்பரில் சந்திக்கலாமா? மாலை ஆறுமணிக்கு மேல் எனக்கு நேரம் கிடைக்கும்.

  44. //பயனுள்ள எந்த கருத்தும் வரவில்லை. வைரடுமுத்துவிற்கு ஏற்கனவே வந்திருப்பது படித்தவன் என்ற ஆணவம், பணம் பெற்றவன் என்ன அகம்பாவம் , புகழ் படைத்தவன் என்ற மமகாரம் பலரால்கொண்டாடப்படுபவன் என்ற இறுமாப்பு விருதுகள் பல பெற்றவன் என்ற கொக்கரிப்பு – இவரின் திருமந்திர உரையில் நாத்திக வாதத்தை கலந்தார்.ஒரு ஊா் அறிந்த நாத்திக வாதியை ஆண்டாள் குறித்து பேச தினமணி அழைத்ததே முட்டாள்தனம். அதை ரசிக்க கூடிய ராஜபாளையத்து மக்கள் முட்டாள்கள்.இவரது உரையில் இலக்கிய ருசியும் இருப்பதில்லை.வார்த்தை ஜாலம் இருக்கும். பத்திரிகையில் விளம்பரம் வந்ததை நான் வெறுப்போடு படித்தேன். வால் இல்லாக் குரங்கு அனைவரையும் அசிங்கப்டுத்தி விட்டது.வேதனையில் ஆழ்த்தி விட்டது.//

    வைரமுத்துவுக்கு சரியான பதில் இதுவா? நீங்களே நேரடியாக இராஜபாளைய்ம் சென்று மேடை போட்டு, அல்லது உங்களைப்போன்ற பலரும் சேர்ந்து மேடையமைத்து, வைரமுத்துவின் உரை எவ்வளவு தவறானது என்று காட்டலாமே? இராஜபாளைய மக்கள் அனைவரையும் முட்டாள்கள் எனக் குறிப்பிட்டதற்கும் இராஜா வைரமுத்துவின் தாயின் கற்பை நகையாடியதற்கும் வேறுபாடில்லை. கொஞ்சம் சிந்தித்து சொற்களை விடுங்கள். நாலாந்திர எழுத்தாளர் என்றால் சிந்திக்க வேண்டியதில்லை. அரசியல்வாதியென்றாலும் தேவையில்லை.

  45. //The irony is that after saying all these, you say you read the divya prabhandams everyday. You are doing it for what? Publicity?

    “Enga veettukaararum velaikku poraar” type?//

    The compilation of the hymns of all Alvaars are a common property of all Tamil-knowing population anywhere in the world. It’s untruth to say it belongs to Hindus only. A Tamil Christian, a Tamil Hindu, a Tamil Muslim – and even atheists, can read the hymns – for its Tamil and the way and manner the poets handled their devotion to their Lord. Like Kambaramayanam. Many Kambaramayana scholars are non-Hindus: for e.g. M M Ismail. All devotional poetry in Tamil is part and parcel of Tamil literary heritage. It is impossible, rather mischievous, to straitjacket the poetry as Hindu scriptures out of bounds for non-Hindus.

    So, it is for personal reason many read the book. My personal reasons go beyond mere Tamil love, and it is none of your business to know the reasons. Because I don’t want to ask why you are reading certain book.

  46. RV, BSV ..now Bala. You must read this Article, all your questions are answered here 🙂
    (ref in by Sri Jeyamohan’s web site) https://www.jeyamohan.in/105764

    We must understand when, where and who talked about this subject and then the why question can be easily answered. Connect the dots between the speaker and publisher (editor who approved) and you will know new dimensional truths!!

    If you want behind the scene “fine but undetectable forces” acting..
    Read below 2 urls
    https://www.hindupost.in/society-culture/distorting-tamil-culture-ethos-certainty-harvard-tamil-chair/
    https://rajivmalhotra.com/library/articles/harvard-indian-billionaires/

    At least India is slowly waking up now..

  47. அன்புள்ள பாலா மற்றும் பிஎஸ்வி
    தங்களது கடிதங்கள் என்ன கருத்தை வலியுருத்துகின்றன?.பட்டவா்த்தமாக எழுதுங்களேன். ஒவ்வொரு சமூகத்திலும் வாழ்வும் தாழ்வும் ஏற்பட்டு வருகின்றது. இந்தியாவிலும் அது ஏற்பட்டுள்ளது. யோகா என்ற அற்புத கலையை உலகிற்கு அளித்தவனும் இந்து இந்தியன்தான். சுஸ்ருதா் என்ற மருத்துவ மேதைதான் உலகின் முதல் அறுவை சிகிட்சை நிபுணா் என்று உலகம் போற்றி வருகின்றது. வானவியல் கணிதம் கட்டட பொறியியல் என்று நமது முன்னோர்கள் பல துறைகளில் அரிய சாதனைகள் செய்துள்ளார்கள். அதுதான் நமக்கு தேவை. கம்போடியாவை கப்பல் பயணம் செய்து மிகப்பொரிய கோவிலை கட்டியவனும் நமது முன்னோர்கள்தாம். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும் நமது முன்னோரதாம்.இப்படி நமதுசாதனை பட்டியல் வெகு நீளம். இந்த சாதனைகளுக்கு வாரிசுகள் நாம் தான்.அதை நினைத்துதாங்களும் நானும் பெருமைப் படவேண்டும்.சமூகத்தில் பண்டைய காலத்தில் ஏற்பட்ட ஒரு கலாச்சார சமூக சீரழிவுதான் தேவதாசி முறை. பணக்காரம் ஏழைகளை ஏய்பதும் படித்தவன் படிக்காதவனை ஏய்பதும் பலசாலி நோஞ்சானை ஏய்பதும் அதிகாரம் படைத்தவன் பிறனை ஏய்பதும் செல்வாக்கு உள்ளவன் மற்றவா்களை ஏய்பதும் இன்று அல்ல அன்றும் சமூக அவலமாக இருந்தது உண்மை. நாம் ஏன் எதிர்மறை கருத்துக்களையே நமது முதாதையா்கள் பற்றியோ நமது கழிந்த சமூக வாழவு குறித்து பதிவு செய்கின்றோம். பெருமைப்பட வேறு ஏதும் இல்லையா ?
    தேவதாசி முறை பெண்களுக்கு நமது நாட்டில் செய்யப்பட்ட அநீதி. தன் பெண்டுகளுக்கு ஒரு நியாயம் மற்ற பெண்டுகளுக்கு அநியாயம் என்பது ஒரு சமூக அநீதி. உயா்ந்த நோக்கத்தோடு தேவதாசி முறை ஒருவேளை துவக்கப்பட்டிருக்கலாம். அதன் விபரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் பெரும் சமூக அநீதியாகவே அது தொடா்ந்து வந்தது என்பது உண்மை. ஆண்டாளை தேசதாசி என்ற விமா்சனம் சபை பண்பாட்டுக்கு அழகா ? ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று நீண்ட பாராட்டுரையில் மலம் கலப்பதுபோல் ஆண்டாள் தேவதாசி என்ற விமா்சனம் தங்களுக்கு தவறானதாக படவில்லையே ஏன் ? ஆண்டாள் ஒரு தேசதாசி என்று தலைப்பிட்டிருந்தால் ஒரு காக்கா கூட அரங்கத்தில் கூடியிருக்குமா ?
    சதா பிறாமண எதிரப்பு என்பதும் தேவையற்றது. இந்தியாவின் தமிழ்நாட்டின் வளத்திற்கு பிறாமணா்கள் அரும் பெரும் தியாகங்கள் தொண்டுகள் செய்துள்ளார்கள் என்பதை மறக்க வேண்டாம். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் 99 சதம் பார்ப்பனா்கள் அல்லாதவா்கள்தான். ஏன் அரசு நிர்வாகம் இவ்வளவு சீரழிந்து காணப்படுகின்றது.இமயமலையை தாண்டி நிமா்ந்து நிற்கும் லஞ்ச லாவண்யங்கள்.இதற்கு தாங்கள் பிற்பட்ட சாதி மக்களை குறை சொல்லவில்லை. ” பிறாமணா்களின் நல்ல பழக்க வழக்கங்களை மற்ற சாதி மக்கள் கைகொண்டு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது சுவாமி விவேகானந்தாரின் விவேக மொழி.அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் என்பது திருவாசகம். மனிதனை அந்தணன் ஆக்குவதே சமய வாழ்வின் நோக்கம். ஆயிரம் குறைகள் இருப்பினும் இந்தியாவின் ஆன்மீகம் நல்ல நோக்கங்கள் கொண்டது.அற்புதமாக மாமனிதா்களை உலகிற்கு அளித்துள்ளது. திருமந்திரம் தாயுமானவா்கள் கருத்துக்களை படித்திருப்பீா்கள். அதையே தாங்கள் ஏன் முன்னிலைப்படுத்தக் கூடாது.உன்தாய் ஒரு வேசி என்று ஒரு குழந்தையை திட்டி வளா்த்தால் அதன் வளா்ச்சி வில்லங்கமாக மாறும். தன் நம்பிக்கை குலைந்து நொந்து போக வாய்ப்பு அதிகம். நமது நாட்டை நாமே பழிக்க வேண்டுமா ?

  48. Please watch in full, this video about Tamizh Chair.
    https://www.youtube.com/watch?v=7W-9-z8F2gA

    Virus M, EvanAngles, etc.. are the low level (mostly innocent) forces that will be fed (fame, money, US university attestation etc) to create an “Scholar” impression by a 2nd level (usually funding agent or media in US and/or India (NGO)) to climb up

    After You & I are gone, next generation, uses this “Tamizh Chair” to legitimize Virus M’s Talk and it will included as Dravidian voice against Aryan Brahmins.
    All such (seems sudden incidents, but not really) have to be analyzed (also) thru these lenses.
    *Pakistan & Khalistan etc are created by these same techniques..*
    Regards.

  49. அன்புராஜ் அவர்களுக்கு,

    தேவதாசி முறை எப்போதுமே இழிவாகத்தான் இருந்தது என்று நீங்கள் கருதுவீர்களானால் நீங்கள் ஜடாயுடுவின் கருத்தோடு முரண்படுகிறீர்கள் என்று பொருள். தேவதாசி முறை ஒருகாலத்தில் உயர்வாக மதிக்கப்பட்டது. அப்படி உயர்வாக மதிக்கப்பட்ட காலத்திய தேவதாசியாக ஆண்டாள் இருந்திருக்கலாம் என்ற கருத்திலேயே வைரமுத்து அந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம். எனவே அவரைச் சாடுவது தேவையற்றது என்றே எண்ணுகிறேன்.

    மற்றபடி உங்கள் மற்றைய கருத்துகள் இந்த விவாதத்திற்குத் தேவையற்றவை. இந்தியப் பாரம்பரியம், பெருமைகளைப் பற்றி நீங்கள் உயர்வாக எண்ணுகிறீர்கள். அதேபோலத் தமிழரின் பாரம்பரியம், பெருமைகளைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். எங்கள் தமிழையும், தமிழ்ப்பண்பாட்டையும் இழிவுபடுத்தியதற்கு எதிர்வினையாகத்தான் தமிழிக்கம் உருப்பெற்றது. இந்தப்போராட்டத்தில் யார் எந்தப்பக்கம் இருக்கிறோம் என்பது தெளிவு.எனவே, இந்தியா என்னும் சிமிழுக்குள் எங்களையும் சேர்த்து அடைக்க வேண்டாம். எங்களுக்குச் சம உரிமை இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை?

    மற்றபடி ஊழலுக்கும் சாதிக்கும் முடிச்சுப்போடுவது பொருத்தமற்றது.

  50. வைரமுத்து பேச்சை கேட்டேன். அவர் கொச்சைப்படுத்தி பேசவில்லை. “தேவதாசி” என்று குறிப்பிட்டார். ஆனால் தேவதாசி என்றால் வேசி என்ற அர்த்தம் அல்ல.
    அதே சமயம் எல்லா தேவதாசிகளும் வேசிகள் அல்லவே!

  51. அன்பின் அன்புராஜ்

    பொங்கலன்று இந்த இழையில் நீங்கள் பகிர்ந்த பெரும்பான்மையானவை அருமையான கருத்துக்கள். பகிர்ந்த விதம் அருமை. வாழ்த்துக்கள்.

  52. Tamizhai Andal – A rejoinder and critique

    M S Narasimhan

    Thiru. Vairamuthu wrote an article titled “Tamizhai Andal” in Dinamani dated 8th January 2018. The title of the article gives an impression that he is going to discuss the beauty of Tamil language used by Andal in her poems (pasurams). Of course, he did discuss this but at a superficial level and devoted little space for the same. A significant part of his article is not related to Tamil language in Andal’s pasurams but something else. At the end of the piece, he started discussing about the end of Andal’s life that led controversy. Since everyone has the freedom to express their views, I respect his rights and hence disagree with others on staging protest or giving threatening message. The best course of action by those who are agitated by his writing, which includes me, is to write a rejoinder.

    By deviating significantly from the title of the article, which actually connotes a positive view on Andal, my first observation is he doesn’t have the basic skill of writing a focused essay. It is more of random thoughts like his movie songs. In the first paragraph of the article, he talked about the importance of Margazhi. The second paragraph is his imagination and the fourth and fifth sentences are just words without any meaning. How can ponds sleep by hitting the banks? You need to figure out what he wants to say in the last sentence. He arrived to the topic of Andal in his third paragraph. Fourth and fifth paragraphs are narratives about the different kinds of ‘knonbu’ though there is some contradiction on personal welfare vs. social welfare. In paragraph 6, he gets to bit more focussed and concluded Andal’s ‘knobu’ is mainly for welfare for everyone. Except the article is written in Tamil, he is yet to discuss anything on the language of Tamil in Andal’s pasurams. In paragraph 8, he connects Vaishnavism and Thirupavai but completely lost track. First, he said Thirupavai gained its importance because of Vaishnavism. Probably he was not sure whether he is right and hence speculated the reverse. This is simply a hypothesis without any meaning. In any case, this hypothesis is nothing to do with the title of his essay. In paragraph 9 and 10, he is completely off the topic and moved to history of religion. Building on set of disjoint hypothesis, he nicely concluded that religions need people and hence witnessed inclusiveness in religious practices. In paragraphs 11, he quoted Thondaradipodi Azhwar pasuram to support his argument. Then, in para 12, he jumped to sociology and concluded that such inclusiveness is short-lived. In paragraphs 13 through 15, he proved that Vaishnavism is something not new to Tamil people by quoting literature that is older than Tirupavai period. In paragraph 16, he got a brilliant idea of differentiating two terms “daivam” and “kadavul” which common man sees no difference. Can he give a reference for the difference of the two different statements or agrees that it is simply his imagination? Anyway, it is not relevant to the topic. He concluded the paragraph by saying Andal showed that one can reach God through love with determination. Later he questioned his own statement.

    In paragraph 17, he raised an indecent issue about Andal’s birth. He wanted to know who are her parents and what is her caste. It gives a suspicion that through this question, he is building a case for his subsequent nasty conclusion about Andal. In paragraph 18 and 19, he has gone back to history and trying to figure out when Andal lived. He referred 18th December 731 and it is not clear what this date refers to. He concluded that she lived in 8th Century. We thought he is going to discuss how the Tamil language was flourishing around that time and hence creating a base for such insightful discussion. Alas, his crooked thought is coming out in the next paragraph. In para 20, he questions how females who are unprivileged and orthodox start writing about God. In paragraph 21 and 22, he narrates the known story of Andal and Periyazhwar. In paragraph 23, he quotes few lines of Andal’s Nachiyar Thirumozhi to show the determination of Andal in marrying the God. In paragraph 24, he expressed his surprise on how a girl makes such statement during that period where girls have no freedom to express themselves. Has he done any research to conclude that girls during that period have no freedom to express themselves? In paragraph, 25, he appreciates and agrees Andal’s Tamil expression and the way she handled Tamil are far superior to other male dominated Alwars. Some silver lining in a junk piece. But his crooked mind fails to take it as given and ends the paragraph by raising a question – what is the reason for this?

    In the next three paragraphs (26 to 28), he narrates three other Alwars and compare Andal with them. He agrees with Vaishnava Acharyas on how Andal’s feelings are different from other Alwars. In paragraph 29, he wrongly compares Andal’s approach against other but nothing on negative side. It is more of unfounded analysis. In paragraph 30, he compares Thirupavai and Nachiyar Thirumozhi. According to him, in Thirupavai, Andal wants everyone with her whereas Nachiyar Thirumozhi was an outcome of her love on God. Though a bit of narrow and superfluous analysis and conclusion, it is fair to give credit on his observation. In paragraph 31, he describes Andal’s love and determination of marrying God by picking up few lines of her Pasruam. This is good part of the entire piece but he is getting ready for the next onslaught on Andal.

    Paragraph 32 is the most controversial part of the piece. He picked up 19th pasuram of Thirupavai and asks who gave her right to write such piece or whether she violated the discipline. He slammed Vaishnava Acharyars explanation in paragraph 33 and somewhat agrees that it is a good poetic sense in the next paragraph. After picking up this pasuram, he questioned Andal’s in her line of thinking but subsequently say it is a ‘kavithai nayam’. His confusion is whether to appreciate Andal or criticize her. It is clear that he sees the pasuram with eyes of vulgarity. He fails to recognize the fact that Andal wrote Thirupavai when she was young girl who may not know anything about the husband and wife relationship. For a little girl, the God Kannan is also little boy. She listens her father Periyazhvar pasurams. In one of the Pasurams, Periyazvar describes how child Kannan takes milk from her mother. This description is something we all see when a mother breastfeeds her child. Periyazhvar says Kannan keeps his mouth on one breast and presses another breast with his fingers. This is what she knows and she as a small kid would have observed. For her, Kannan is small child and this verse is simply the outcome of her understanding of mother and her child even though it happens to be Krishna and his wife. We often see when a child takes breastfeeding, both mother and child sleeps and many times child keeps his/her mouth on the breast while sleeping. It is more of half sleep and continues take milk at periodical interval without lifting her mouth from the breast. Andal imagines this way only and not the way Thiru. Vairamuth thinks. I am really sorry for what I am going to write next but rather forced to write in defense of Andal. How is it possible for an adult to keep his mouth on the breast of his wife and still sleeps? It is not natural for an adult but it is natural for a kid. Andal imagines the relationship between mother and kid holds good even between husband and wife and Periyazhvar knows about her line of thinking. Naturally, Periyazhvar would have attempted to correct it but would have failed to get a right phrase. How he knows that the little girl’s Thirupavai will be part of sacred Divyaprabhandam and someone like Thiru. Vairamuthu will examine the pasuram after several centuries? Thiru. Vairamuthu should have picked up this pasuram to demonstrate how Andal beautifully handled the Tamil language and picked up words which is otherwise offensive in nature. Throughout Thirupavai, Andal shows her tenderness and there is no way for her to think like what Thiru. Vairamuthu thinks at this age of his life. Acharyars see deeper and inner meaning of Prabhandam and they wrote what they see through their lens. They spent their lives in researching Prabhandam. They were not writing songs for movies and occasionally paid literacy writing. Don’t dismiss someone’s work without giving a proper counter. I am curious to know what is the meaning of ‘indiran thoutathu mundiri’. How he knows Indiran has garden where he grows cashew? I can understand ‘Indiran sabayil sundari’. Many of you wrote songs describing the parts of bodies of women and earned money and that too knowingly. Otherwise, how would one rate your writing as adult ‘nuni viral thoutae en edayam pathariyathe, azhangal thoda ennagum en ueraye sethariathe’. We seek bhakthi in Andal’s pasuram and in yours nothing other than lust. Please don’t create controversy on innocent Andal’s expression of husband and wife through the lens of mother and child. Just see the beauty of the Tamil and choice of words. Periyazhvar would have amazed to see how his little daughter played with words and creating a master piece and allowed the flow to continue instead of stopping her.

    In the next two paragraphs (35 and 36), he expressed his surprise on how Andal was able to express her love with God in an unusual way and wants others to research. Nachiyar Thirumozhi consists of 113 pasurams and Andal used the language amazingly to communicate her love with God in several ways. Probably, Thiru. Vairamuthu was looking for pasurams that he wants and in that process he missed out the beauty of the language which is the topic for his essay. In his view, Andal violated the norms that were prevailing at that time. At some point of time, everyone knew that she is not a normal human but incarnation of Poomadevi. While every Alwar aspires no rebirth and curse themselves for living in earth, Andal never aspired for no rebirth but wants to live with God. How can Poomadevi talks negative about earth? They were seeing her love with the God and her expression through pasurams. Thiru. Vairamuthu is trying to harass a female Tamil poet by saying Andal had violated the norms without knowing whether there were norms like that in her period. He missed an opportunity given by the Dinamani to write a master piece on how Andal used Tamil language in Nachiyar Thirumozhi. She connects well with the nature through her poems, which we can’t describe in English and that too in a rejoinder.

    In the next two paragraphs (37 and 38), he describes the development of how she came to Srirangam and disappeared inside the inner sanctum. The next five paragraphs (39 to 43) are complete deviation of the essay topic. There is no compulsion for him to believe that Andal disappeared inside the inner sanctum. No one knows whether it has happened or not. One section of people including myself believe that it has happened. Many others may have different view. In the absence of any evidence on either side, the basic decency is to respect each other’s view. The historian observation that she lived rest of her life inside the temple as Devadasi is not based on any historical evidence but only a conjecture. This is offensive particularly when we know that Devadasi is not a term that is used in a sense that Thiru. Vairamuthu wants to describe now. In the history, oral history is well recognized and hence what we heard has more basis of acceptance as evidence than the alternative claims who neither has oral evidence nor documented evidence. Since we have not seen anyone like Andal today, we can’t conclude that it would not be possible. Thiru. Vairamuthu can write a separate piece investigating Andals last few days. It should be based on historical evidence but not through conjecture. He crossed the limits of basic decency by attributing the same to an outsider who might have drawn the conclusion in a different context and showed his cowardliness. We have been trying to catch hold of the so-called research paper that missed our attention but in vain. When millions of people believe that she is incarnation of boomadevi, the statement that questions her caste demonstrates his casteist sentiment. Why he should bother about her caste after several centuries? More importantly, by bringing up an issue which is not related to the topic of the essay, Thiru. Vairamuthu demonstrated his poor scholarship.

    In the next paragraph (44), he appreciates Andal’s Tamil without giving any support to justify the title of the essay. Paragraph 45 is again some random thoughts. In the last three paragraphs, he acknowledges Andal’s faith on God and say that it holds good in several contexts. He concludes that is the lesson from Andal’s life history. Again, he forgot the title of the essay and what far he is commissioned to talk/write.

    To conclude, it is better Thiru. Vairamuthu stops writing long essays because he demonstrated his inability to focus on a simple issue which is suppose to be his domain area. He should restrict himself in writing songs for movies where songs are short, words need not have meaning, and no one cares for anything.

    The Dinamani Editor is equally at fault in allowing this publication. The article completely deviates from the title of essay and it should be rejected at the desk level. One option for Dinamani is commission someone who is good in Tamil literature to write an essay on the same title and publish it.

  53. BSV, This is an opinion piece, not a research article. So it is silly to expect the author to keep giving links for every damn thing said in the article. In this internet era, a resourceful person like you can always find things with not so much difficulty, instead of screaming.

    // Thirumalai’s complaint against the Harvard Tamil Chair and the names of those who asked for his apology //

    Phew. He wrote this opinion in his Facebook page, and those who asked for apology were the commenters. This is not a legal case or something. Cool down.

    // Karunanidhi’s speech or article insulting Andaal //

    It was a vulgar short story titled குப்பைத் தொட்டி. Why the $%#$& would Tamilhindu publish or quote such piece of crap here? BTW, Thirumalai had put some excerpts from that story in his FB page.

    // Thangkapandian’s speech or article insulting U.Ve.Sa //

    This has been documented in these blog posts written by Aravindan Kannaiyan, not really a friend of Hindutva folks 🙂

    https://contrarianworld.blogspot.in/2012/07/thamizhachis-fetna-speeches-uvesa.html

    https://contrarianworld.blogspot.in/2012/07/thamizhachi-thangapandiyans-slander-on.html

  54. Well I am still expecting citation for quotable quotes of dear friend Joe Amalan Rayen Fernando……….. stating that Arunagirinathar composed kanda sashti kavacham……..his newly invented 1331th thirukkural……..his tall claim regarding 5000 year old shastra (whats that ….. name of that and age)…….endless…strong competitor for raul vinci 🙂

  55. Ok thanks. You’ve given all I’d wanted. At least he could’ve said that he wrote it in his FB. But you’re informing that on his behalf. Why couldn’t he have at least told the readers he wrote it all in his FB?

    Anyway, thanks a lot to your help.

    (Edited and published)

  56. ‘தமிழ் ஹிந்து’ என்று பெயர் வைத்துக்கொண்டு ஏன் விரிவான ஆங்கில பின்னூட்டங்களை அனுமதிக்கிறீர்கள்? எங்களைப் போன்றவர்கள் புரிந்துகொள்ள இயலவில்லை!.

  57. So, it is for personal reason many read the book. My personal reasons go beyond mere Tamil love, and it is none of your business to know the reasons. Because I don’t want to ask why you are reading certain book.

    BSV,

    I am not bothered about why you read/not read the book. My point is that U tom tommed that U read it everyday & then went ahead criticising the same without understanding the essence. As usual, you have missed the wood for the tress.

  58. வைரமுத்துவிற்காக வாய் கிழியக் கத்தும் பாரதிராஜா சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்குமுன் ஈழத்திற்குப் போய் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து ஈழப் போராட்டம் பற்றி ஒரு படம் எடுப்பேன் என உறுதியளித்து இந்தியா திரும்பினார்.இன்றுவரை இவ்வாக்குறுதியை நிறைவேற்றாத இந்தப் போலி தமிழ் தேசியவாதி, வைரமுத்துவை போற்றிப் புகழ்வதைப் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கிதில்லையே இந்த நிலைகெட்ட …….என்ற பாடல்தான் நினைவிற்கு வருகின்றது.

    இந்தப் போலிகளின் கூட்டத்தில் தற்பொழுது கருணாநிதியின் காலில் வீழும் வை கோ ,திருமாவளவன் போன்றவர்களையும் சேர்க்கலாம். இவர்களையும் வைரமுத்துவையும் ஈழத் தமிழர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்பிகின்றேன். தமிழ் மொழியையும் இனத்தையும் வைத்துப் பிழைக்கும் இவர்கள் தமிழர்களின் சரித்திரத்தில் துரோகிகளாகவே பார்க்கப் படுவார்கள்.

    வைரமுத்து ஓர் சினிமாக் கவிஞர் என்றரீதியில் தமிழ்நாட்டில் இதுவரை மதிக்கப் பட்டிருக்கலாம். மற்றும்படி இலக்கியவாதிகளிடையே தரம்மிகு கவிஞராக ஈழத்தவர்கள் மதிப்பதில்லை. தமிழ்நாட்டில் எப்படியோ?

    ஆமாம் இவர் ஈழத்தவர்களின் போராட்டம் பற்றியதான ஓர் மாபெரும் காப்பியம் ஒன்றை எழுதப்போவதாக ச்விச்தர்லாந்தில் ஈழத்து மக்களின் கூட்டமொன்றில் கூறியிருந்தாரே. அதுவும் ஓர் எமாற்றுவித்தைதானே. மக்களை முட்டாள்களாக வைத்திருக்க இந்த போலிகள் எங்கு கற்றுக் கொண்டார்கள்? எத்தனை நாளைக்குத்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…………

  59. //‘தமிழ் ஹிந்து’ என்று பெயர் வைத்துக்கொண்டு ஏன் விரிவான ஆங்கில பின்னூட்டங்களை அனுமதிக்கிறீர்கள்? எங்களைப் போன்றவர்கள் புரிந்துகொள்ள இயலவில்லை!.//
    தமிழ் இந்து உயர் திரு செஷகிரி தெரிவித்த குற்றசாட்டை தமிழ் ஹிந்து தளமும் கருத்து தெரிவிப்பவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.திராவிடர்கள் தமது அரசியலுக்காக தமிழ் பேசினாலும் அவர்கள் எஜமான் மொழி தான் ஆங்கிலம்.
    தமிழ் இந்துக்கள் தமிழில் எழுத முயற்சிப்போம்.

  60. இப்போது, இந்த 2018ம் ஆண்டு அதே அபத்தக் கருத்தை “சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும்” என்று வைரமுத்து எழுதிக் கொண்டு போகிறார். —>

    In the above content, it’s meant to be Male or Female. But here the author of this article got it in a wrong way that fuels the angry against another human. I’m trying to understand what’s wrong in the above sentence. I guess recent media march changed the recipients’ perception and additional talk towards the wrong content fuel the issue unnecessarily.

  61. தமிழ்சி சினிமா ஒன்றில் சிவபெருமானின் வேடம் அணிந்து கமல் ஹாசன் நக்கல் அடிப்பதை நேற்று தமிழ்நாட்டு தொலைக் காட்சியில் பார்த்தேன். இதுதான் அவர் கூறும் முற்போக்கு அரசியலா? இவர் முஹம்மது நபி போன்றோ ஏசுநாதர் போன்றோ வேடம் அணிந்து சினிமாவில் வருவாரா? இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றும் யாராவது கேட்ப்பார்களா? அவரை குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. சோம்பேறிகளாய் செவிடர்களாய் குருடர்களாய் ஊமையர்களாய் வாழும் இந்துக்களைத்தான் நான் திட்டவேண்டும்.

    அட போங்கடா நம்மவர்களுக்கு சினிமாக்காரிகளைப் பார்த்து வீணி ஊத்தவே நேரம் இல்லாமல் இருக்கும்போது இவர் கேள்வி கேட்கச் சொல்கிறாராக்கும்.

  62. அன்னைக்கு இன்னலெனில் முதலில் ஜடாயு வருகிறார். இராமாயணம் உட்பட!

    அருமையான கட்டுரை ஜடாயு சார்! மிக்க நன்றி!

  63. திரு அண்ணாதுரையை எனக்குப் பிடிக்காதிருக்கலாம். அனால், அவர் பிறந்த நாளில் என்னைப் பேசச்சொன்னால், ஒன்று நான் நாகரிகமாக மறுக்க வேண்டும் அல்லது அவருடைய சில நல்ல செயல்களைப்பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அமர வேண்டும்.

    அதை விடுத்து, அண்ணதுரையின் சாதியைக்குறித்து இழிவாகவும், அவருடைய தமக்கையின் மகள் மற்றும் அவருடைய தாயார் பற்றி கேவலமாகவும், அண்ணாதுரை செய்பவை அரசியல் சூழ்ச்சிகள் என்றும் திராவிடர் கழகத்தினரே போற்றும் திரு பாரதிதாசன் தன்னுடைய குயில் பத்திரிகையில் கடுமையாக எழுதி இருப்பதை அந்த பிறந்த நாள் விழா கூட்டத்தில் நான் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டினால், என்னுடைய நோக்கம் என்ன? வாய்ப்பைப் பயன்படுத்தி, பலர் போற்றும் அண்ணாதுரையை இழிவுபடுத்தவேண்டும் என்ற தீய நோக்கம்தான்.

    அது போன்ற ஒரு இழிசெயலைத்தான் செய்திருக்கிறார் திரு வைரமுத்து. அதற்கு, ஒரு அமெரிக்க போர்வையையும் கொடுத்திருக்கிறார். தன் விளக்கத்தில் மேலும் மேலும் பொய்களை அடுக்குகிறார். இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரைத்
    தொகுப்புப் புத்தகத்தில் காணப்படும் ஒரிரண்டு வரிகளை வைத்துக்கொண்டு, மூன்று பத்திகள் புனைந்து தள்ளியிருக்கிறார்.

    ஆண்டாள் கற்பனைப் பாத்திரமாகவே இருக்கட்டும்; அவள் பாடல்களில் வயதுக்கு ஒவ்வாத சிருங்கார ரசம் இருக்கட்டும்; அவற்றை விடுத்து, ஆண்டாளின் தமிழ் ஆளுகையைப் பற்றியும், நயத்தைப் பற்றியும், சமுதாய உணர்வைப்பற்றியுமே அந்தக் கட்டுரையில் எழுதியிருக்க வேண்டும். அவளுடைய பிறப்பைப்பற்றி தவறான சான்றுகளுடன் எழுதியது மட்டுமல்லாமல், அதை நியாயப்படுத்துவது கயமைத்தனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *