ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

ன்றைய தேதியில் ஒருவன் தமிழ்நாட்டில் தன்னை வீரனாக, பகுத்தறிவாளனாகக் காட்டிக்கொள்ள மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. இந்து தருமத்தை பழிப்பது; இந்து நம்பிக்கைகளை, சடங்குகளைக் கிண்டல் செய்வது என்பதுதான் அது. இதில் புதிதாக இணைந்திருப்பவர் ஒரு திரைப்பட நடிகர். உலக திரைப்படங்களை உல்டா செய்து தமிழில் எடுப்பதால் தன்னை உலக நாயகனாக நினைப்பவர்.

இந்து சமுதாயத்தில் சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் கணவன் நலனுக்காக அல்லது நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்.

இந்து இயக்கங்கள் கொதித்தெழுந்து இதனை விமர்சிக்கும். ஆனால் இதில் ஆபத்து கிடையாது; விளம்பரம்தான் உண்டு. கலை சுதந்திரத்துக்காக எதற்கும் தயாராகும் தியாகி என்று தன்னை காட்டிக் கொள்ளவும் இதில் வழி உண்டு. எந்த ஆபத்தும் இல்லாமலே தியாகி பட்டம் வேண்டுமா? தாக்குங்கள் இந்து நம்பிக்கைகளை. ஆபாசத்தை கலையாக சந்தையில் விற்க வேண்டுமா? போடுங்கள் பகுத்தறிவு முகமூடியை. மனசாட்சியை விற்ற இந்த ஆபாசக் கூத்தடிப்பில் உலகநாயகனே தான் நம்மவர்.

andalஆனால் இங்கு கேள்வி அதுவல்ல. இது ஆபாசம் என தெரிகிறது. ஆனால் இந்த ஆபாசத்தை வரலட்சுமி நோன்புடன் இணைக்கும் போது என்னவித சால்ஜாப்பு சொல்லப் படுகிறது என்பதுதான் பார்க்கப்பட வேண்டும். ‘ஆண்டாள் பாடியதில் இல்லாததையா நான் சொல்லிவிட்டேன்?’ ‘கோவில் சிற்பங்களில் ஆபாசம் இல்லையா?’ எனவே இந்த ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் உண்மையில் இந்து மதத்தை புரிந்து கொண்டவர்கள் இல்லை. அவர்கள் வெறுமனே மதவெறியர்கள். இந்து தலிபான்கள்!

ஒரு சராசரி தமிழன் இந்த வாதத்தில் உள்ள மோசடி 2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடிக்கு சற்றும் குறையாத மோசடி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?

இதைப் புரிந்துகொள்வதற்கு முன், ஆபாச எழுத்து என்பது வேறு; காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னது வாலிப வயதின் எழுச்சிக்கோ அல்லது வாலிப-வயோதிகத்தின் இயலாமைக்கோ ஒரு வடிகால். பின்னது காமம் எனும் அடிப்படை மானுட உணர்ச்சியின் வீச்சையும் ஆழத்தையும் ஆதாரத்தன்மையையும் அறிந்து கொண்டு, அதனை பிரபஞ்சமெங்கும் கவியும் ஓர் உன்னத உணர்வாக உயர்த்துவது.

காதலிகளின் காதலனாக இறைவனைக் கூறும் முதல் உலக இலக்கியமாக ரிக் வேதத்தை சொல்ல முடியும்.

“காதல் மிகுந்த மனைவி அவளது கணவனைத் தொடுவது போல இறைவனது இதயத்தை என் பாடல் தொடட்டும்” (ரிக்: 10.91.13)

“மணமகன் மணமகளிடம் சுகம் பெறுவது போல எனது பாடலால் இறைவன் சுகம் அடையட்டும்.” (ரிக் 3.62.8)

மனைவி கணவனது மேனியைத் தீண்டுவது போல அல்லது முத்தமிடுவது போல, தமது மந்திரங்கள் இறைவனைத் தீண்டுவதாக ரிக் வேத கவிதைகள் தம்மைத் தாமே வர்ணிக்கின்றன (ரிக். 3.41.5) வேத மந்திர ரிஷிகள் ஆதி கவிஞர்கள். மனதாலும் இதயத்தாலும் பரம்பொருளுக்காக ஏங்குகின்றனர். வேத மந்திரங்களே இறைவனின் காதலிகளாகக் காட்டப்படுகின்றன. வேத இலக்கியம் தரும் ஒரு முக்கியமான சித்திரம் இது: காதலிகளின் தீண்டுதலாக வேதக் கவிதைகளும், மந்திரங்களும் பிரார்த்தனைகளும் சித்தரிக்கப்படுகின்றன (ரிக் 1.62.11; 1.82.5-6; 1.186.7; 1.32.3; 4.32.16; 1.9.4; 3.39.1)

இவையெல்லாம் ஞானத்தேடலின், இறை அனுபவத்தேடலின் கவித்துவ வெளிப்பாடுகள். இம்மரபின் நீட்சியே ஆண்டாளின் பாசுரங்கள். இம்மரபு மானுடப் பண்பாடெங்கும் உள்ளது. யூத ஞானப்பாடல்களில் நாம் இதை காணலாம்; அவ்லோனின் தெரசா (St. Teresa of Avlon) எனும் கிறிஸ்தவ மறைஞானியின் பாடல்களில் காணலாம். பாஸ்ரா பட்டணத்து சூஃபி ஞானி ரபியாவின் பாடல்களில் காணலாம். ஆனால் அந்த பண்பாடுகளில் இந்த மறைஞான மரபு ஒதுக்கப்பட்டது அல்லது ஒடுக்கப்பட்டது, எனவே வளராமல் அழிந்து விட்டது. இந்து பண்பாட்டில்தான் அது தழைத்து வளர்ந்தது.

இன்றைக்கு உலக இலக்கிய மரபிலும் சரி, மதங்கள் கடந்த ஆன்மிக மரபுகளிலும் சரி, ஆண்டாளுக்கும், ரபியாவுக்கும், அவ்லோனின் தெரசாவுக்குமான இடம் முக்கியமானது. ஆனால் நாயகி-நாயக ஆன்மிக உணர்வு நிறுவன மதத்தால் ஒடுக்கப்பட்ட அந்த பண்பாடுகளில் கூட, இன்று ரபியாவோ அவ்லோனின் தெரசாவோ ஆபாச சினிமா பாடல்களுக்கு சால்ஜாப்பாக பயன்படுத்தப் படுவதில்லை.

அடுத்ததாக கோவில் சிற்பங்களை எடுத்துக்கொள்வோம்.

khajuraho_sculptures_20070528கோவில் தூண்களிலும் சுற்றுச் சுவர்களிலும் இருக்கும் சில சிற்பங்களைத் தனியாக எடுத்துக் கொண்டால், மேலோட்டமான பார்வையில் அவை ஆபாசம் என கருதத் தக்கவையாக இருக்கும். ஆனால் கோவில் சிற்பங்களின் முழுமையான ஒட்டுமொத்த உருவாக்கத்தில் இந்த சிற்பங்கள் ஒருவித வழுவமைதி பெற்றுவிடுவதை நாம் காணலாம். காமம், ஏன் பிறழ்நிலை காமமாக இன்றைய ஒழுக்க விதிகளால் நாம் கருதும் காமமும் கூட, இந்தச் சிற்பங்களில் தங்கு தடையின்றி காட்டப்படுகின்றன. ஆனால் அவற்றுடன் கூடவே யோகியரும், முனிவர்களும், உழவர்களும், குறவர்களும், அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் காட்டப்படுகின்றன. ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் வக்கிர விகாரமாக காமத்தைக் காட்டும் சிலைகள் தமிழரின் கோவில்களில் அமைந்திடவில்லை. மாறாக, காமத்தை முழுதாக அறிந்து அதனை அச்சமின்றி வாழ்வின் ஒரு பாகமாக எதிர்நோக்கும் வாழ்க்கைப் பார்வை தான் அங்கு தெரிகிறது.

நம் திரைப்படங்களில் இத்தகைய ஒரு வாழ்க்கைப் பார்வை இல்லை என்பதுடன், பெண்களை வெறும் பாலியல் மலினப் பொருளாக, அஃறிணையாக காட்டும் காட்சிகளே நிரம்பி வழிகின்றன என்பதுதான் உண்மை. மேற்படி நடிகரே நடித்த பல திரைப்படங்களில் பெண்கள் மிகவும் கீழாக சித்தரிக்கப் பட்டுள்ளார்கள். பெண்களைக் கேலி செய்யும் பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்களில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் அந்த நடிகர் புரட்சி செய்யவில்லை. நடித்திருக்கிறார். தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதிய வெறியை தூண்டிவிட்ட பாடலை இவர் நடித்த படமே தாங்கி வந்தது.

முழுக்க முழுக்க வர்த்தக நோக்கங்களுக்காக காமத்தை மலின வியாபாரம் செய்து வயிறு கழுவ இந்தியாவில் எவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் எவருக்கும் மறுக்க முடியாது. அப்படிப் பிழைக்கும் நிலையில் வாழும் ஏழை ஜன்மங்களுக்காக நாம் நிச்சயமாக பரிதாபமும் பட வேண்டும். ஆனால், கோடிகளில் புரளும் நடிகன் ஒருவன் – ஆண்டாளையும், கோவில் சிற்பங்களையும், நம் வருங்கால சந்ததிகளுக்கும் ஏன் மானுடம் முழுமைக்கும் இந்த மண்ணின் மரபு அளித்த அருட்கொடைகளையும் தன்னுடைய வர்த்தக மலின கூத்தடிப்புக்கு நாணமின்றி, கேடயமாக, மோசடித்தனமாக பயன்படுத்தும் போது, நாம் என்ன செய்ய வேண்டும்?

ஹிந்து அமைப்புகள் இந்த ஆபாச தாக்குதலையும் ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும். இதன் மூலம் ஹிந்து ஞானத்தை, ஹிந்து கலைகளின் உன்னதத்தை பொது மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலை வெளிப்படுத்த வேண்டும்.

இப்படத்தை நாம் நிராகரிக்கலாம். இப்படம் காண்பிக்கப்படும் திரையரங்குகளில் உண்மையைக் கூறும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கலாம். தன் தனி வாழ்க்கையிலும் சரி, தொழில்முறை வாழ்க்கையிலும் சரி, எப்படி வாழக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒருவர், தன்னைப் பண்பாட்டின் அடுத்தக்கட்ட பெருநாயகனாக காட்டிக்கொள்ளும் அவல மோசடியை வெளிக்காட்டலாம். பொது விவாதங்கள், தொலைகாட்சி விவாதங்களுக்கு அழைத்து, சவால் விடுத்து, இவர்களின் பொய்களை தோலுரிக்கலாம்.

என்ன செய்யக் கூடாது? உணர்ச்சிகரமான நிலையில் மோசமான எதிர்வினைகளை செய்வதன் மூலம், இந்த ஆபாச வியாபாரிகள் நினைக்கும் விளம்பரத்தை அளித்துவிடும் தவறை மட்டும் செய்யவே கூடாது.

102 Replies to “ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்”

  1. This is not at all surprising.

    Kamal is renowned for his vulgar comments on hinduism.

    Also he is a true EVR follower. He has a live-in relationship, decries only hinduism, placates whoever is in power, autocratic, pure non vegetarian etc.,

    When he recited this “poem” on stage during the audio release function, the audience clapped & cheered without even understanding what he said.

  2. கோவிலில் காமத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள் இருப்பதற்கு காரணம் உண்டு – இது போன்ற சிற்பங்கள் வெளி பிரகாரங்களில் மட்டும் தான் இருக்கும் – இவை இயல்பான உலக வாழ்வை குறிக்கும் விஷயமாக அமைகின்றன – இந்த்ரிய ஜெயத்தின் மூலம் நாம் வாழ்வின் ஆழ் அனுபவத்தை அடைய இந்த வெளி விஷயங்களை விட்டு, எங்கிருந்து பிறந்தோமோ அந்த கர்பக்ருஹம் நோக்கி செல்ல வேண்டும்

  3. இனியாவது கமல் படங்களுக்குப் போக மாட்டோம் என்று நம்மவர்கள் உறுதி பூண வேண்டும்.

    அல்லது ஒருவேளை, “கமல் ஒரு திறமைபடைத்த நடிகன். அவனுக்குத் தெரியாத நடனக் கலையே இல்லை. அவன் கூறும் கருத்துடன் உடன்பாடில்லை என்றாலும் அவன் நடிப்புத் திறமையைப் பாராட்டலாமே” என்று சப்பைக்கட்டு கட்டி விட்டு, பத்து வினாடி பலான சீன் பார்க்க நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு சினிமா அரங்கத்திற்கு வெட்கமில்லாமல் போவார்களோ?

  4. இடுப்புக்குக் கீழே இருப்பவை எல்லாம் முகம் சுளிக்கும் மூடத்தனமல்ல, வாழ்வின் பகுதி என்று எடுத்துசொல்வது இன்றியமையாதது. சபரி மலைக்குச் சென்ற போது உடன் வந்த ஒருவர் பாதையின் ஓரமாக மலத்தைப் பார்த்துவிட்டு “சரணமய்யப்பா! இந்தக் கேவலத்தைப் பார்த்துடேனே… சீஈஈ என்றார்.” எங்களுடன் இருந்த வயதான குருசாமி ஒருவர் “அது உன்ன மாதிரி ஒரு மனுஷன்கிட்டருந்து வந்தது தான் சாமி. உனக்குள்ளயும் இருக்கு. வெளியிலே வந்ததும் சீ தூன்னு சொல்றியே சாமி. நீ வக்கணையா தின்னதோட எச்சம் அது. அது கூடதுன்னா நீ சாப்பாட்டில ரொம்ப கண்ட்ரோலா இருக்கணும். காரணத்தை விடமாட்டேன், காரியமும் கூடாதுன்னா வாழ்க்கை ஓடாது சாமி.” என்றார். அந்த குருசாமி தான் எனக்குச் சொன்னார் காமம் தவறில்லை. அது கட்டுப்பாட்டுக்குள்ளே இருப்பது நலம். எல்லை மீறினால் கட்டுக்குள் கொண்டுவர விரதம் போன்றவை உதவும்.

    அராபியப் படையெடுப்பு பார்க்கும் பெண்ணெல்லாம் வலியோனுக்குச் சொந்தம் என்ற வரம்பு மீறலைக் கொணர்ந்தது. ஐரோப்பிய படையெடுப்பு காமம் அசிங்கம் என்று போதித்தது. ஆனால் கள்ளத்தனமாய் மறைத்து அனுபவிக்கப்படும் வரம்பு கடந்த காமம் ஐரோபியரிடமே இன்னும் அதிகமாய் இருக்கிறது.

    காமம் என்பது குற்றம், வெறுக்கத்தக்கது என்பது ஐரோப்பியர் கொள்கை. அது வாழ்வின் ஒரு பகுதி என்பது நம் பாரம்பரியம். அது சற்றே மிகுதியாக இருப்போர் ஆற்றிக் கொள்ளவே ஊருக்கொரு பகுதியில் விலைமகளிர் இருந்தனர். அவர்களுக்கும் வரம்பு மீறி குடும்ப வாழ்வைக் கெடுக்கும் செயல்கள் தவறு என்று வலியுறுத்தினர் நம் முன்னோர். சமுதாயத்தின் ஒரு பகுதியாக அவர்களையும் பார்த்த பக்குவம் நம்மில் இருந்தது. இதை எதிர்த்து நேரத்தை வீணாக்குவதை விட இதை ஒரு வாய்ப்பாக்கி ஹிந்து தர்மம் போதித்த அடிப்படைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

  5. வயதிற்கும் அறிவு முதிர்ச்சிக்கும் கொஞ்சம் கூட தொடர்பில்லை என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு கமல் மற்றும் மு.க.

  6. கமலின் பேச்சுக்கு கிடைக்கும் அதிகமான முக்கியத்துவம் தான் அவரது வெற்றி. இது அவரது அறிவு ஜீவி பிம்பத்துக்கு கிடைக்கும் சுலபமான விளம்பரம். அவரது பேச்சு ஏற்புடையதாய் இல்லை என்றால் அதை தவிர்த்து விட்டாலே போதும். அதற்கு எதிர் விமர்சனம் வருவதால் ஊடகங்கள் அதை பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக விஜையில் வந்த தீபாவளி நிகழ்ச்சி. அவரது நாத்திகப் பேச்சை திரும்பத் திரும்ப விளம்பரப் படுத்திக் கொண்டே இருந்தார்கள். அன்றைய நாள் தீபாவளி என்பதும் அது இந்துக்களின் மிகப் பெரிய பண்டிகை என்பதும் விஜய் தொ.கா. க்கு தெரியாதா என்ன. அதற்கு முந்தைய வாரங்களில் தனி தீபாவளி நிகழ்சிகள் நடத்தியவர்கள் அவர்கள். வியாபாரிகள் விற்பதைத் தான் வியாபாரம் செய்வார்கள். அதனால் எதை வாங்க வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நமக்குத் தேவையில்லாத பொருளை தெரிந்தே வாங்கி விட்டு திட்டி என்ன பயன் ?
    பொதுவாக ஆன்மிகப் படங்கள் என்ற பெயரில் காட்டப் படும் அபத்தங்களை விட கமல் படங்கள் ஆன்மிகத்தை இது வரை அழகாகவே காட்டி வந்தன.
    வியாபாரமாகிப் போய் கொண்டிருக்கும் ஆன்மிகத் தலங்களை நேராக்க நமது நேரத்தை செலவிடலாம். இவர் போன்ற ஆட்களை சும்மா விட்டாலே போதும்.

  7. கமல் போன்றவர்களை பற்றி நாம் விமர்சிக்க தேவையில்லை. அழுக்குகளைபற்றியும், மனவியாதிகளைபற்றியும் மருத்துவர்கள் ஆராயட்டும். கமல் போன்ற வீணாக போனவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி வேண்டுமானால் செலுத்தலாம். அவரை பெற்ற தாய், தந்தையரை நினைத்து வருந்துகிறோம்.

  8. அரவிந்தன் சார், தினமலர் வலைதளத்தில் இந்த காமக்கொடூரனின் காம வாந்தியை ஒருவர் விமர்சித்து எழுதியதை படித்து கலங்கினேன். அதையும் விட, இந்த கீழ்தனமானவுக்காக சிலர் பரிந்துபேசியதைக் கண்டு மனம் கொதித்தேன். ஆனால் என்ன செய்ய முடியும்? நான் என்ன கோடீஸ்வரனா? என்னை எதிர்த்துப் பேசுபவர்களின் நாக்கை துண்டிக்கும் அடியாட்களை உடைய அண்டர்கிரவுண்டு தாதாவா? பதவி பலமுள்ள அரசியல் வாதியா? எதுவுமே இல்லை, இந்து மதத்திற்கு எவ்விதத்திலும் உதவாத உதவாக்கரை மகன், அவ்வளவே! என்னால் கமல் போன்ற மிருகங்களுடன் போட்டி போடமுடியாது. அவனின் மானம்கெட்ட ரசிகர்களுடன் வாதம் செய்து வெல்லமுடியாது. என்ன தான் செய்ய முடியும்! ஒன்றுமில்லை!

    உங்களை என் சகோதரனாக நினைத்துச் சொல்கிறேன்:- இதுபோன்ற கட்டுரைகளை எழுதுவதை எந்நாளும் நிறுத்தாதீர்கள். தொடரட்டும் உங்கள் பணி…

    வாழ்க பாரதம்!!

  9. இந்து சமய பழக்க வழக்கங்கள் எதையும் கீழ்மைபபடுத்தும் செயல் பெற்ற தாயை பாலியல் பலாத்காரம் செய்யும் செயலாகும். அதை செவ்வனே செய்பவர்கள் தமிழ் நாட்டில் மலிந்து கிடக்கிறார்கள். அதனால் தான், தமிழ் நாட்டில் இவ்வளவு மகான்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் தோன்ற வேண்டி இருக்கின்றது, இவ்வளவு திவ்ய தேசங்களும், பாடல் பெற்ற ஸ்தலங்களும் இருக்கின்றன. வக்கிர புத்தி படைத்த மனிதனுக்கு, வக்கிரமான வாழ்க்கையே அமைந்தும் வேட்கை தீரவில்லை.

  10. தன்னை யோக்கியன் என்று காட்டிக்கொள்ளும் ஒரு அயோக்கியப்பயல், இந்த கமல்.. இந்த கமல் என்ற கேன்சர நாம் இவ்ளோ நாளா கண்டுக்காம விட்டது தான் தப்பு.. இந்து அமைப்புகளின் இயலாததனத்தால்தான் கமல் மாதிரி ஆள்களின் துணிச்சலை காட்டுது.

    நாய்க்காதல் மட்டுமே தெரிந்த கமலுக்கு மனிதக் காதல்னா என்னன்னு தெரியாது.. அவனுக்கு தெரிந்ததெல்லாம் வேண்டியவரையில் உபயோகப்படுத்திவிட்டு பொண்டாட்டியானாலும் தூக்கி எறிய தயங்காத அயோக்கியத்தனத்த முற்போக்கு எண்ணம்ன்னு பிரச்சாரம் பண்ணுவது.. கன்னி மேரிய பத்தி ஆபாசமா ஏண்டா எழுதலன்னு முதல்ல அவன கேட்கனும்.. அல்லது, கன்னிமேரிக்கிட்ட இப்படி வேண்டி ஒரு பாட்டு எழுதிட்டு அவன் சினிமாவ ரிலீஸ் பண்ணுவானான்னு கேட்கனும்?

    கடைசியா காமத்துக்கும் ஆபாசத்துக்கும் என்ன வித்தியாசம்னு எனக்கு தெரிந்த வரையில் சொல்றேன்..

    கமல் என்னும் நடிகர், தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இப்போது கௌதமி என்னும் நடிகையோடு மன்மத லீலையில் ஈடுபடுகிறார்…. இது நாகரீகமாக சொல்லப்பட்ட ஒரு விமர்சனம்.. அல்லது செய்தி..
    இதையே, கொஞ்சம் விலாவாரியாக கேவலமாகவும் சொல்ல முடியும்.. ( நாகரிகம் கருதி நான் அவ்வாறு செய்யவில்லை.. ).. அப்படி சொன்னார் அதுக்கு பேர் ஆபாசம் மட்டுமல்ல.. அது ஒரு போர்னோ புத்தகமா மாறிடும்..

    கோவில் சிலைகள், ஆண்டாள் பாடியது என்று சப்பை கட்டு கட்டுகிறார்களே.. அவர் என்ன, இவனுகள மாதிரி சினிமா எடுத்து ஊருக்கேல்லாம் போட்டு காட்டவா பாடினார்? இல்ல எல்லாரையும் கூட்டி வைத்து இப்படி பாடினாரா?

    சரி.. அப்படியே அவர் ஆபாசமா பாடியிருந்தாலும் அத காரணம் காட்டி கமல் என்ன வேணும்னாலும் பண்ணுவானா? பத்து பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், அவர்களின் மனது புண்படுகிறது என்ற காமன் சென்ஸ் கூட இந்த நாய்க்கு இல்லை.. இல்ல இவன் என்ன செஞ்சாலும் மக்கள் சகிச்சிகிட்டு போகனும்னு முடிவு செஞ்சுட்டானா?

  11. அன்புள்ள அரவிந்தன் – கமக்கசட்டு வரிகள் மற்றும் பகுத்தறிவு கோமாளித்தனத்தை சாடுவதோடு மட்டும் நில்லாமல்… நமது பரம்பரியதினை விளக்கி கூறும் உங்கள் எழுத்துக்கு பாராட்டுகள்…

    வாழ்க உங்கள் பணி…

  12. அவன் நம்மவன்.. ..அவன் நம்மவன்…

    அகங்காரத்தை நடிப்பில் மறைக்கும் காமுகன்
    அவலமே வாழ்க்கையாகக் கொண்டவன்.
    அவனை நம்பிவந்த பெண்கள் அபலைகள்.
    இனியும் நம்பும் ரசிகர்களும் கோமாளிகள்.
    அவன் நம்மவன்.. ..அவன் நம்மவன்…
    பகுத்தறிவுத் தாத்தாவின் பேரனின் கணவன்.
    முற்போக்குத் திலகத்தின் பேரனின் கணவன்…

    மனம் முழுவதும் காமம் வழிபவனிடம்
    மலரினும் மெல்லிய குறள் எடுபடுமோ?
    அழகிய மலரிலும் காம்பே பிடிக்கும்
    உன்மத்தனுக்கு விருது கிடைக்குமோ?
    மனமே வக்கரித்துப்போன வயசாளியிடம்
    வக்கனை மட்டுமே கவியாய் விடைக்குமோ?
    என்ன இருந்தாலும் அவன் நம்மவன்..

    ‘தான்திருடி’ மற்றோரை இகழ்தலும் இயல்பே.
    இல்லறம் கெட்டவர் கழிசடையாவதும் இயல்பே.
    நாய் வாலை நிமிர்த்துதல் இலமே.
    ஆயினும் அவன் நம்மவன்.
    அவன் வாலை அறிதலும் இலமே.
    அவன் வாலை அரிதலும் இலமே.

    – ‘ரதி அன்பு’ படப்பாடல்.

  13. கமலுக்கு ஒரே ஒரு கேள்விதான் . வரலட்சுமியிடம் ரங்கராஜன் எப்படின்னு கேட்ட கேள்வியை ராஜலட்சுமியிடம் ஸ்ரீனிவாசன் எப்படின்னு கேட்ப்பீர்களா.

  14. அந்த பாட்டுக்கு இதைவிட better ஆன பதிலடியை தமிழ் இந்துவிடமிருந்து எதிர்பார்த்தேன். ரொம்ப சாஃப்டான கட்டுரை. நமது எதிர்ப்பு முழுமையாக சென்றடைய கொஞ்சம் மசாலா கலந்தால் தப்பில்லை என்பது என் அபிப்ராயம்.

  15. திரு ஆநீ அவர்களே
    உங்களின் விமர்சன சவுக்கடி இவர்களை போன்ற ஜீவாத்மாவை தன்னிலை உணரச்செய்து பரமாத்மாவிடம் சேர்க்கட்டும்

  16. “உலக நாயகன்” என்று சொல்லப் படுபவரைப் பற்றி நான் அதிகம் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. அவர் தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான நடிகர், அவருடைய படங்களில் நெருக்கமான காட்சிகள் இடம் பெறுவதை மக்கள் அறிவார்கள். அவரிடம் நாம் ஆன்மீக கோட்பாட்டை எதிர்பார்க்கவில்லை. யார் மக்கள் மனதிலே புலன் இச்சையை தூண்டும் கருத்தை பரப்பினாலும், அதற்க்கு மருந்து அமைதியான ஆன்மீகத்தை மக்கள மனதில் புகுத்துவதே.

    இந்தக் கட்டுரையில் கூறப் பட்டுள்ள பல கருத்துக்கள் எனக்கு திகைப்பை அளிப்பதாக உள்ளது.

    //இதைப் புரிந்துகொள்வதற்கு முன், ஆபாச எழுத்து என்பது வேறு; காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னது வாலிப வயதின் எழுச்சிக்கோ அல்லது வாலிப-வயோதிகத்தின் இயலாமைக்கோ ஒரு வடிகால். பின்னது காமம் எனும் அடிப்படை மானுட உணர்ச்சியின் வீச்சையும் ஆழத்தையும் ஆதாரத்தன்மையையும் அறிந்து கொண்டு, அதனை பிரபஞ்சமெங்கும் கவியும் ஓர் உன்னத உணர்வாக உயர்த்துவது.//

    “காமத்தையும் ஆன்மீகத்தையும் இணைப்பது” – இந்தக் கோட்பாடு யாருடைய கோட்பாடு? இந்து மதத்தின் கோட்பாடா? உபநிடதத்திலோ, கீதையிலோ இப்படி காமத்தையும் ஆன்மீகத்தையும் இணைப்பது பற்றி இருக்கிறதா? (நமக்கு தெரிந்த வரையில் இல்லை). காமத்தின் முடிவுதான் ஆன்மீகத்தின் ஆரம்பம் , எந்த அளவுக்கு காமம் குறைக்கிறதோ அந்த அளவுக்கு ஆன்மீக உயர்வு கிட்டுகிறது என கருதலாம்.

    ரிக் வேதத்தில் சொல்லப் பட்டு இருப்பது ஒரு உவமையாகவே உள்ளது. அது காமத்தையும் ஆன்மீகத்தையும் இணைப்பது அல்ல.

    //அடுத்ததாக கோவில் சிற்பங்களை எடுத்துக்கொள்வோம்.

    கோவில் தூண்களிலும் சுற்றுச் சுவர்களிலும் இருக்கும் சில சிற்பங்களைத் தனியாக எடுத்துக் கொண்டால், மேலோட்டமான பார்வையில் அவை ஆபாசம் என கருதத் தக்கவையாக இருக்கும். ஆனால் கோவில் சிற்பங்களின் முழுமையான ஒட்டுமொத்த உருவாக்கத்தில் இந்த சிற்பங்கள் ஒருவித வழுவமைதி பெற்றுவிடுவதை நாம் காணலாம். காமம், ஏன் பிறழ்நிலை காமமாக இன்றைய ஒழுக்க விதிகளால் நாம் கருதும் காமமும் கூட, இந்தச் சிற்பங்களில் தங்கு தடையின்றி காட்டப்படுகின்றன.//

    தமிழ் நாட்டில் , தென் இந்தியாவில் எந்த எந்த கோவில்களில் காம சிறபங்கள் அதாவது புணர்ச்சி சிறபங்கள் உள்ளன என்று பட்டியல் தர முடியுமா? நானும் சிறு வயது முதல் பல கோவில்களுக்கு சென்று இருக்கிறேன். சமீபத்தில் கூட மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று சுற்றி சுற்றி பார்த்தேன், புணர்ச்சி சிற்பம் எங்கும் இல்லை. சிறுவனாக இருந்த போது அரியலூர் பெருமாள் கோவிலுக்கு பலமுறை சென்று இருக்கிறேன், ஒரு புணர்ச்சி சிற்பமும் இல்லை.
    ஒரிசாவுக்கு தெற்க்கே எங்கேயும் புணர்ச்சி சிற்பங்கள் இல்லை. (ஒரு வேலை எனக்கு பார்வைக் கோளாறா?) ! கொனாரக் கோவிலில் அப்படியான சிறபங்கள உள்ளன. கஜூராஹோவில் உள்ளன. அவை எல்லாம் வீழ்ச்சி அடைந்த புத்த மதத்தில் இருந்து உருவானவை. இதைப் பற்றி சுவாமி விவேகானந்தர் தெளிவாக விளக்கி உள்ளார். இவற்றில் இருந்து எல்லாம் இந்திய சமுதாயத்தை மீட்டு பரிசுத்தமான இந்து மதத்தை நிலை நிறுத்தும் பணி இன்று வரை தொடர்கிறது என்கிறார் அவர்.

    எனவே இந்து மதம் பற்றி குழப்பமான தகவல்களை தரும்படியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கோரிக் கொள்ளுகிறேன்.

    இந்துக்கள் வழிபடும் கோவிலகளில்- இந்துக்களே இந்து மதத்திற்காக கட்டிய கோவில்களில் – புணர்ச்சி சிறபங்கள் இருந்தால் அதை போட்டோ ஆதாரத்துடன் தெளிவு படுத்துங்கள். குறிப்பாக தென் இந்திய கோவில்களில் இருக்கிறதா என்பதை சொன்னால் போய் உண்மையை உறுதி செய்து கொள்ள எளிதாக இருக்கும். கோனார்க், கஜூராஹோவை வைத்துக் கொண்டு எழுத வேண்டாம் . அவை இந்து மதத்திற்காக கட்டப்பட்ட கோவில்கள் இல்லை. அவை புத்த மத வீழ்ச்சி காலத்தில் கட்டப்பட்ட புத்த மதக் கோவில்கள். அவற்றை கட்டிய பவுத்தர்கள் தங்கள் தாய் மதத்திற்கு திரும்பியவுட அதே கோவில்களை அப்படியே வைத்து இந்து தெய்வங்களை வழிபட ஆரமித்து விட்டனர் எனபதே வரலாற்று உண்மை.

    தயவு செய்து இந்த “காம ஆன்மீக இணைப்பு” சப்ஜெக்டை விடவும்- அல்லது அது இந்து மதக் கோட்பாடா என்பதை தெளிவு படுத்தவும. அதே போல இந்து கோவில்களில் புணர்ச்சி சிறபங்கள் இருப்பது போல எழுதினால் – அதற்க்கு ஆதாரம் கொடுங்கள்.

    “உலக நாயகன்” ஒரு பக்கம் இடித்தால், இங்கே இன்னொரு பக்கம் இடிப்பது போல உள்ளது. ஆனாலும் இந்து மதம் இமய மலை போல அசையாமல் உள்ளது.

    உண்மையான ஆன்மீகத்தை புரிந்து கொள்ளுவோம். மனிதனின் ஆசைகளும், இன்பங்களும் மயக்கத்தால், அறியாமையால் உருவானவை. வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு மயக்கங்கள். ஆண் பெண் உறவு இன்ப ஆசை எப்போதும் இருப்பது இல்லை. பத்து வயதுக்கு முன் அந்த ஆசை வருவது இல்லை. எண்பது வயதில் நோய் வாய்ப் பட்டால், அந்த நோயில் இருந்து விடுபட்டால் போதும், சோறு தண்ணி கூட வேண்டாம் என்கிறான்.

    மயக்கத்தில் இருந்து விடுதலை (மோஹ முத்கரம்) அடைவதே ஆன்மீகம். அதை ஒரே நாளில் அடைய முடியாது அது வரையில் மோஹ வலையில் சிக்கினாலும், அதை முறையாக அடுத்தவருக்கு பாதிப்பில்லாமல், சமூகத்திற்கு பாதிப்பிலாமல் குடும்ப வாழ்க்கை வாழ்வதே இல்லறம்.படிப்படியாக மோஹத்தில் இருந்து விடுதலை பெறுவதே ஆன்மீகம். மோஹத்தையும் ஆன்மீகத்தையும் இணைக்க முடியாது. சிகரெட் பிடிக்காமல் இருப்பதே உடல் நலம். உடல் நலத்தையும் , சிகரெட் பிடிப்பதையும் இணைக்க முடியாது. உடல் கேடு அடைவதையும் சிகரெட் பிடிப்பதையும் வேண்டுமானால் இணைக்கலாம்.

    கடைசியாக ஒன்று இந்து மதமே பகுத்தறிவு மதம்தான். இந்து மதத்தின் பெரும்பாலான முனிவர்கள் பகுத்தறிவு சிந்தனையாளர்கள் தான். ஆனால் தமிழ் நாட்டில் பகுத்தறிவு என்பது தவறாகப் புரிதல் செய்யப் பட்டு விட்டது. அதற்காக அந்த பகுத்தறிவு என்கிற வார்த்தையை நாம் புறக்கணிக்க வேண்டியதில்லை. உண்மையான பகுத்தறிவாளர், சிரிப்பு பகுத்தறிவாளர்களைப் பார்த்து விலக முடியாது, வேண்டுமானால் சிரித்து விட்டு போகலாம்.

  17. ஆன்மீகத் தலங்கள் ‘கொள்ளைக் கூடங்களா’கப் போய்விட்டதும் ஆன்மீகப் படங்கள் ‘அபத்தங்களா’னதும் உண்மையே! ஆனால், அவ்வகைக் கொள்ளைகளையும் அபத்தங்களையும் தடுக்கவா கமலஹாசன் படம் எடுக்கிறார்?

    ஒரு தவறைக் காட்டி இன்னொரு தவறை ஞாயப்படுத்த வேண்டாமே! கடந்த பல ஆண்டுகள் அவரது ‘கலைத் திறனை?’ மெச்சிய ஒரு ரசிகனாக இருந்து, கமல ஹாசன் ‘கமல்’ ஹாசனான பகுத்தறிவைக்கண்டும் ஹிந்து சமயத்தை இத்துணை அபத்தமாகப் புரிந்து வைத்திருக்கிற அவரது மெகா மேதாவித்தனத்தை உணர்ந்தும் ‘அவரது ரசிகன்’ என்னும் பேரழுக்கை/பேரிழுக்கை விட்டு நான் ஒதுங்கியவனாகிப் பல்லாண்டுகள் ஆகின்றன.

    நண்பர்கள் சிலர் சொல்லியுள்ளதுபோல, ‘சரியான சமயத்’தை நமது மக்களிடம் கொண்டு செல்ல இவர் (கமல்) போன்றவர் தரும் வாய்ப்புக்களை நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சரியான சமயம் தெரியாததால் தான் இவர்களால் இப்படிப்பட்ட விபரீதங்களில் இறங்க முடிகிறது.

    எக்காரணம்கொண்டும் இவருக்கு விளம்பரம் தேடித் தரும் எந்தச் செயலையும் நாம் செய்துவிடக் கூடாது.

  18. i fully concure with the feelings of mr.Balaji. yesterday i have also read the comments supporting the dirty Actor’s poem and felt restless throughout the day. It is better to ignore those nasty fellows. I feel very sorry for late Mr. Srinivasan and Mrs Rajalakshmi

  19. Pingback: Indli.com
  20. ஸ்ரீதரன் அவர்களே, கவலை படவேண்டாம்!

    காமனின் அம்பை வைத்து இந்து மதத்தை கேலி செய்பவர்க்கு, ராமனின் அம்பு எப்படி என்று கூடிய சீக்கிரம் தெரியவரும்…

  21. //தயவு செய்து இந்த “காம ஆன்மீக இணைப்பு” சப்ஜெக்டை விடவும்- அல்லது அது இந்து மதக் கோட்பாடா என்பதை தெளிவு படுத்தவும. //

    காமத்தின் மூலமாக ஆன்மீகம் நம் பாரம்பரியத்தின் பகுதி, பெண்ணை நிர்வாணமாகப் பார்த்தாலும் மனம் காமத்தில் மயங்காதிருக்க ஒரு பயிற்சி செய்யப்படும். அது வாமாசாரம் என்ற வழியில் வந்தது. மேலதிக விவராங்களுக்கு பாரதியின் சாக்தம் தொடரின் முதல்பாகத்தைப் படிக்கவும். (https://tamilhindu.com/2010/10/bharathi-shaktham-1/)

  22. கமலகாசன் மாதிரி கூத்தாடிப்பய சொல்றதுக்கெல்லாம் வெயிட்டுக் குடுத்துக் குடுத்தே இந்துக்க பொழப்பு பெருங்கூத்தாப் போச்சுய்யா. மருதநாயகம் படத்துக்கு மெழுகுவத்தி ஏத்தி வெக்க பிரிட்டிஷ் மகாராணி வர்றப்ப இந்தப் பயபுள்ள என்ன பேசுச்சுன்னு மறந்து போச்சாய்யா? மருத நாயகம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு விசுவாசி. அவனப்பத்தி எடுக்குற படத்துக்கு நீங்க பெரிய மனசு பண்ணிக் காசு குடுங்கன்னு கேட்டபய தானே கமலகாசன்? துபாயிலருந்து காசு கேட்டா வரும்னு யாரோ சொல்லவும் மருதநாயகம் இசுலாமிய வீரன்னு பேசுன பயபுள்ள தானே இந்தக் கூத்தாடி? அமெரிக்காவுலருந்து ஹாலிவுட் காசு வரும்னு கெளப்பி விட்டதும் அசோக் அமிர்தராசுக்குப் பின்னாடியே இந்தப்பய கொஞ்சநாளு நாக்க தொங்கப்போட்டுக்கிட்டு அலஞ்ச கூத்து மறந்துருச்சாய்யா ஒங்களுக்கு?

    காசு குடுக்குற எசமானர போற்றிப் புகழ்ந்து ஆடிப்பாடுறது தானேய்யா கூத்தாடி மக்களுக்கு பொழப்பே? இப்ப ஆரு காசு குடுத்தாகளோ கிருஷ்ணர தாக்கி பாடுது பயபுள்ள. எறிஞ்சவன் யாருன்னு பாத்து அவஞ்சட்டயப் புடிங்கப்பா! கல்லப் போட்டு திட்டுனா அதுக்கென்ன புரியவா போகுது!!

  23. தமிழ் நாட்டில் , தென் இந்தியாவில் எந்த எந்த கோவில்களில் காம சிறபங்கள் அதாவது புணர்ச்சி சிறபங்கள் உள்ளன என்று பட்டியல் தர முடியுமா?//

    Plenty..

    How far Kumbakonam is from Trichy by the way?
    https://www.travelpod.com/travel-blog-entries/benabroad/se-asia2007/1198730880/tpod.html#pbrowser/benabroad/se-asia2007/1198730880/filename=picture_003.jpg

  24. KAMAL IS THE KAMAN AS HE DIVERSED TWO WIFES ALREADY AND HAVING AFFAIRS WITH GAUTHAMI BY KEEPING HER AT HOME INCLUDING HER DAUGHTER. HE HAS NO SENSE AND HE IS MOST JEALOUS AND ENVEY WITH RAJINI WHICH WE WERE ABLE TO WITNESS IN VALLS 1000TH MOVIE FUNCTION HELD TWO MONTHS BEFORE IN CHENNAI.
    KAMAL WAS SITTING FOR LONG TIME BUT RAJINI CAME VERY LATE AS HE ATTENDED SOME FUNCTION BUT ONLY RAJINI WAS ASKED TO RENDER HIS SPEECH FIRST IGNORING KAMAL. EVERYONE CLAPPED RAJINIS SPEECH EXCEPT KAMAL WHOSE FACE WAS DARK. SO KAMAL NOW AND THEN TRY TO SHOW CINE LOVERS THAT HE IS ALIVE AND IN THE RACE. KAMAL WILL MEET HIS DOWN FALL SOONST ONCE HIS KARUNANIDHI IS OUT OF POWER. THIS DIRTY MOVIE OF DIRTY FELLOW MUST BE IGNORED BY ALL HINDUS TO TEACH A LESSON TO THIS ANTI HINDU FELLOW.

  25. //தமிழ் நாட்டில் , தென் இந்தியாவில் எந்த எந்த கோவில்களில் காம சிறபங்கள் அதாவது புணர்ச்சி சிறபங்கள் உள்ளன என்று பட்டியல் தர முடியுமா? //

    I think krishnapuram temple in tirunelveli district has similar sculptures.

  26. அ.நீ. சார் …. ஏன் பொழுது போகலயா ??? நல்ல கட்டுரைகள் தானே எழுதிகிட்டு இருந்தீங்க. இந்த சினிமா கன்றாவிய ஏங்க இங்க கொண்டு வரீங்க? இதுனால என்ன யூஸ்? சூரியனை பார்த்து நாய் கொலைக்கலாம்…. சூரியன் அதற்காக தொயந்துவிடுமா? அது போலவே இந்த பரமக்குடிகார ஆளு, மஞ்சா துண்டு இவனுங்க எல்லாம் நம் சனாதன தர்மமான இந்து மதத்தை பற்றி இவனுங்க சொல்றது எல்லாம் கேட்டுகிட்டு ……. இதை போன்ற தரம் கெட்ட சினிமாக்களை பார்க்கவே வேண்டாமே …. பரபரப்புக்கு அலையும் பண்ணா…. கள் !!!!

  27. Kamalahasan has become Kamahasan long ,long back. His escapades with almost all his film heroines is well known. He can write only what he knows. So leave him alone. Like many others I am also really sorry for his mother and father. Lucky that they are no more alive. Otherwise they would have committed the sin of suicide. I am only sorry for his daughters.

  28. Hindu Atheist will mock Hindi gods | Christian Atheist will say no Christian God! so on…. But a real Atheist on my research: Will not talk about god of any religion nor will mock the customs of those religions. Atheism has reference in Sri Math Bagavatham and upanishads. Many mock just because they are half baked and fully don’t understand the meaning of Atheism. For a Christian – a Hindu or a Muslim or a Sikh is a Atheist as they don’t follow their belief and against those beliefs! Adi Sankara Charya was a Atheist! Surprised!! Yes, he was ! he was against beliefs and started a new simplified system called Advitha principle. Vir Savarkar is a Atheist but he stood for Hindus and founded RSS! He proudly called himself as a ‘ HINDU ATHEIST’ : To be honest I too was one! Later changed my mind on seeing the real position.

    Dhinakar

  29. // Kindly educate yourself a little about Advaita Vedanta and Adi Sankaracharya before writing nonsense. //

    I should have added the following…

    I understand the intent of your post, it is good. But it pains me to hear such things about Adi Sankaracharya and Advaita Vedanta, claiming him as “Atheist”.

  30. Arjun Sampath’s response. Courtesy: https://srivaishnavasri.wordpress.com/2010/12/08/arjun-sampaths-nethiyadi-kavithai-reply-to-pseudosecular-kaamaanthakan-kamal/

    “கமலஹாசன் எழுதிய அதே கவிதை நடையில் இக்கண்டன கவிதை எழுதப்பட்டுள்ளது.

    காமம் மட்டுமே வாழ்க்கையாய் நினைக்கும்
    கமலஹாசனுக்கு எச்சரிக்கை!
    தாய்க்கும் தாரத்திற்கும் பேதம் தெரியாத
    தரங்கெட்டோருக்கு எச்சரிக்கை!
    கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்!
    என்றே வாழும் கற்புடை மகளிர் சார்பில் எச்சரிக்கை!
    ஒருவில்! ஒரு சொல்! ஒரு இல்! என்றே
    ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு காக்கும்
    பண்டைத் தமிழர் சார்பில் எச்சரிக்கை!
    உடலில் பாதியை மங்கைக்குத் தந்த உமையொரு
    பாகனின் அடியார்கள் சார்பில் எச்சரிக்கை!
    திருமகள் வாழ மார்பினைத் தந்த
    பெருமாள் அடியார்கள் சார்பில் எச்சரிக்கை!
    தாய்ப்பாலோடு முப்பால் பருகும்
    தமிழ் குலத்தில் சார்பில் எச்சரிக்கை !
    காம தகனமும் இங்கேதான் !
    காமசூத்திரமும் இங்கேதான் !
    மனித குலத்தின் நன்மைக்கே
    மனைவியைத் தவிர மற்ற மங்கையரை
    தாயாய் நினைக்கும் பூமியது
    மரத்துக்குச் சேலை கட்டினால் கூட
    மயங்கிக் செல்லும் மடையன் நீ
    கதையை நம்பி படமெடுக்காமல்
    சதையை நம்பி பிழைப்பவன் நீ
    ஆணும் பெண்ணும் சேரும் வாழ்வை
    முன்னும் பின்னும் யோசிக்காமல்
    ஆண் பெண் உறவை அசிங்கப்படுத்தும்
    குறுக்கு புத்தி கிறுக்கன் நீ
    காமதாகம் தீர்ந்த பின்பு
    கட்டிய பெண்ணை துரத்தியவன் நீ!
    பெண்களுக்கு எதிராய் பொய்யுரை பரப்பும்
    உனக்குச் சொல்கிறோம் கேட்டுக் கொள்
    கமலஹாசன் : துணிச்சல் இல்லா கோழை நான்
    தூய்மை இல்லா மனிதன் நான்
    தனியே வர பயந்துதானே
    தரங்கெட்டவரோடு அணி சேர்ந்துள்ளேன்.
    பெண் : நல்வழிக்கு நீ வரமாட்டாய்;
    நிச்சயம் நரகம் சென்றிடுவாய்!
    கமல் : Guilty As Accused
    பெண் : அப்போ ஜட்ஜ்மெண்ட் சொல்றேன்
    கமல் : ம் சொல்லுங்க
    பெண் : உலகத் தமிழர் ஒன்று சேர்ந்து உளறல் நாயகன்
    உன்னை ஒரு நாள் துரத்திடுவோம்.
    அதற்கு முன்னால் உனது மகள்கள் இருவர் முன்பு
    நீ எழுதிய கவிதையை சொல்லிடு
    அதுதான் உனக்கு சரியான தண்டனை
    கமல் : யாருக்குத் தண்டனை
    பெண் : சந்தேகமென்ன உனக்கேதான்
    கமல் : நான் பக்தியுமில்லை! புத்தியுமில்லை!
    பெண் : உனக்கு பக்தியுமில்லை புத்தியுமில்லை !
    கௌதமி புத்திமட்டுமே உள்ளது
    என்பதும் எங்களுக்குத் தெரியும்!
    இந்து மக்கள் கட்சி : இந்து தெய்வங்களை மட்டுமே இழிவு படுத்தும்
    இவர்களின் கொள்கை
    இஸ்லாம், கிறிஸ்துவ நம்பிக்கையை
    எதிர்த்து எழுதும் துணிச்சல் உண்டா?
    காமம் பற்றியே பேசி திரியும்
    கயவர் பல்லை உடைத்திடவே
    கனமான ஒரு தடி வேண்டும் !
    காம வெறியார்கள் ஒழிந்திட வேண்டும்
    கூடி நின்று நாம் எதிர்த்திட வேண்டும்!
    இளைஞர் நெஞ்சில் நஞ்சைக் கலக்கும்
    நரகல் கவிதைக்கெதிராக
    கொள்ளை முழக்கும் செய்திடுவோம்!
    வீசி எறியும் எலும்புக்காக
    வாலை ஆட்டும் நாயாம் வாலி
    வக்காலத்து வாங்கினாலும்
    கருணாநிதியும் உதயநிதியும்
    உதவி செய்து காத்து நின்றாலும்
    காமக்கொடூரன் கமலஹாசனுக்கு
    கடும் பாடம் புகட்டிட வேண்டும்.
    உள் ஒரு வாழ்க்கை! புறம் ஒரு வாழ்க்கை !
    பகல்வேசம் போடும் மேதாவிலாசம் !
    நாத்தீகம் பேசும் பகுத்தறிவு போர்வை!
    நாயன்மார்களும் ஆழ்வார்களும்
    நயம்பட உரைத்த நல்லுரைகளை
    திரித்து பேசித் திரியும் உன்னை
    நாங்கள் எதிர்த்து நின்றிடுவோம்.
    அடுத்தவர் வீட்டு குளியல் அறையை
    எட்டி பார்க்கும் வழக்கம் எமக்கு
    எப்போதும் இருந்ததில்லை
    அரங்கநாதனை அவதூறு செய்ய துணிந்த
    உந்தன் முகத்திரையை கொஞ்சம் கிழிக்க முயல்கின்றோம்.
    கட்டிய மனைவி வாணி இருக்கையில்
    மாதவியோடு சுற்றித் திரிந்தாய்
    சரிகாவோடு சல்லாபம் செய்தாய்
    நடிக்க வரும் பெண்களையெல்லாம்
    படுக்கைக்கு அழைத்து பாழாக்கினாய்
    மகள் வயது பெண்களுடனே
    மானங்கெட்டு சுற்றித் திரிந்தாய்
    சத்தியவானின் உயிரை மீட்க
    சாவித்திரி கொண்டது வரலட்சுமி நோன்பு!
    ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
    கற்புக்கரசியர் நோற்கும் வரலட்சுமி நோன்பு!

    அந்தரங்கம் யாவும்அறிந்து
    அரிதுயில் கொள்ளும் அரங்கநாதன்
    உன்னை யொழிக்க சுதர்சனமாய், சாரங்கமாய்
    எம்மை இங்கே படைத்துள்ளான்
    உன்னை போன்ற அயோக்கியர்களை
    அழித்தொழிக்க வந்துள்ளோம்
    எங்கள் கூட்டம் சிங்கம் போல
    எழுந்து நின்று கர்ஜிக்கும்
    சீனிவாசனும் இராஜலட்சுமியும்
    சேர்ந்து பெற்ற பிள்ளையா நீ?
    சீனிவாசனின் தேசியமும்
    இராஜலட்சுமியின் தெய்வீகமும்
    உன்னைப்போல் ஓர் பிள்ளை பெற்றது
    எம்மைப்போன்றோர்க்கு ஆச்சரியமே!
    வரலட்சுமியின் மகிமை தெரிந்திட
    உன்தாய் ராஜலட்சுமியை வணங்கி நின்றிடு!
    அரங்கநாதனின் அருமை தெரிய
    உன் தந்தை சீனிவாசனை தொழுது நின்றிடு!
    அனுமன் சேனை! ஸ்ரீ ராம் சேனை!
    பாரத சேனை! சிவ சேனை!
    ஒன்றாய் சேர்ந்து உன் கருத்தை முறிப்போம்.”

  31. அன்புக்குரிய திரு. நரசிம்மன் அவர்களே,

    உங்களின் பதிலுக்கு நன்றி.

    கும்பகோணம் திருச்சியில் இருந்து அதிக தூரம் இல்லை.

    Plenty என்று எழுதி மூன்று சுட்டிகளை தந்து இருக்கிறீர்கள். மூன்று சுட்டிகளிலும் ஒரே கோவிலின் புகைப் படங்களே உள்ளன. அவற்றிலும் புணர்ச்சி என்ற வகையிலே கருதப் படக் கூடியது ஒரே ஒரு சிற்ப்பம் மாத்திரமே. இப்படி எக்செப்சனாக ஒரு சில இருக்க கூடும். தமிழ் நாட்டுக்கு வரும் வெளி நாட்டினர் கோவிலுக்கு செல்லும்போது கோவில் மதில் சுவரில் ஒரு சிறுவன் சிறுநீர் கழிப்பதைப் பார்த்து, இந்துக்கள் கோவிலின் மதில் சுவரில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக உடையவர்கள் என்று எழுதினால் அது சரியாக இருக்குமா?

    எப்படியாகிலும் விளக்கம் அளித்தற்கு நன்றி. ஒரே ஒரு புணர்ச்சி சிற்பத்தை தந்து இருக்கிறீர்கள். Plenty என்று சொல்லும்படியாக உண்மையிலேயே இருக்கிறதா? விநாயகர் மடியில் சித்தி புத்தி உட்கார்ந்து இருப்பதை எல்லாம் புணர்ச்சி சிற்பமாக கருத இயலாது.

  32. அன்புக்குரிய திரு. அருண் பிரபு அவர்களே,

    காமத்தையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் கான்செப்ட் எங்கே இருக்கிறது என்று கேட்டால், பதிலாக நீங்கள் – கீதையில் இருப்பதாக காட்டவில்லை, உபநிடதங்களில் இருப்பதாக காட்டவில்லை, சித்தர் பாடல்களில் காட்டவில்லை- மாறாக தமில்ஹிந்து கட்டுரையில் இருக்கிறது என்று சுட்டியைக் கொடுக்கிறீர்கள்.

    இந்து மதம் இல்லற வாழ்க்கையை அங்கீகரிக்கிறது. கணவன் மனைவி நேர்மையுடன் வாழ்ந்து அன்பு செலுத்துவது மிகச் சிறந்த வாழ்க்கை, இதுவே நமது பாரம்பரியம். காம(உடல் உறவு) காலம் முடிந்த நிலையிலும் அந்த அன்பு உறவு தொடர்கிறது. அந்த நேர்மையான அன்பே நமது பாரம்பரியம்.

    காமத்தை (உடல் உறவை) வைத்து ஆன்மீக உயர்வை அடைய முடியும் என்பதாக இந்து மதத்தில் இல்லை. இருந்தால் மேற்கோள் காட்டுங்கள். மார்க்கண்டேயன் சென்ற வழி என்ன, துருவன் வழி என்ன, சபரி வழி என்ன? போகர் வழி என்ன? இந்து மதத்தின் கோட்பாடுகளிலும் காமம் மூலமாக ஆன்மீக உயர்வு அடைவது பற்றி இல்லை, முக்கிய இந்துமத பிரமுகர்கள் யாரும் அப்படி செய்தது போலவும் இல்லை.

    வாமாசாரம் போன்ற வார்த்தைகளை சொல்லி அனாச்சாரங்களை இந்து மத்தில் திணிக்க வேண்டுமா?

    இந்து குளித்து முழுகி கடவுளை எண்ணி வணங்குவது ஆன்மீகமா? இல்லை பப்புக்கு போய் தண்ணி போட்டு விட்டு (அல்லது தண்ணி போடாமலே) பெண்ணுடன் காம் புணர்ச்சி செய்வது ஆன்மீகமா?

    இந்து மதத்தை தவறான வழியில் கொண்டு செல்ல பலர் முயற்சி செய்கின்றனர் . இதை நாம் உணர்வது அவசியம்.

  33. @ கந்தர்வன் : I have my views on that. I mean he is a Atheist on a different sense and not on god believing. Pl read my point again. He was against the rituals and customs and philosophies of his era so he quit them created a new philosophy. Even Bharathy in a sense a Atheist. That does not mean he was not liking god. He was very much god loving and a theist but he was against the bad things of Hinduism. My point of contention is Atheism is wrongly understood and wrongly propagated & followed by many. And : I am not person to blindly post my views. On surface my points may show a questionable angle. But if you read it properly, you’ll get the context. In my research Atheism: I never found a reference on what present day Atheists follow or say! Atheism is a umbrella word on my context for many things against a fallowing! Muslims say Christians as non believers. For them they are Atheists, although Christians follow a god for their own! Hope you agree now!

  34. அருமை கந்தர்வன் – நல்ல சொற்றொடர்

  35. ஆண்டாள் பாசுரங்களைப் பற்றிப் பேச இந்த நடிகருக்கு என்ன யோக்யதை இருக்கிறது? தான் தடம்மாறிப் போனதை நியாயப்படுத்த தாய் வீட்டின்மீதே கல்லெறிகிறார். இது போன்ற ஆட்களை அலட்சியம் செய்வதே நமக்கு நல்லது. இவரது ‘அறிவுஜீவி’த் தனத்துக்கு விளம்பரம் தராதிருப்பது நல்லது. இல்லையென்றால் தன்னை ஒரு மேதாவி என்று நினைத்துக்கொண்டு ‘முத்துக்களை’ உதிர்த்துக்கொண்டிருப்பார்.

  36. Dhinakar,

    I knew exactly what you were saying.

    // He was against the rituals and customs and philosophies of his era so he quit them created a new philosophy. //

    Totally incorrect… He totally affirmed to Vedas, Upanishads, Itihasas, Puranas, and other philosophers before him. He completely agreed with Upasana, Samskaras, Dharmasastra, and Smritis. Even a tiny bit of reading will reveal this.

    Some people have a vested interest in showing Sri Sankara as some sort of revolutionary. On the contrary, he totally stuck to the Vedanta tradition. He only questioned non-Vedantic schools which were not in the spirit of Bhagavad Gita and Mahabharata.

    Why even look that far? His guru was Govinda Bhagavatpada, and his paramaguru was Sri Gaudapada. He salutes both many times in his work.

  37. // My point of contention is Atheism is wrongly understood and wrongly propagated & followed by many. //

    Atheism etymologically means “belief against a God”. It is like the Lokayata system which Sri Sankara ridiculed vehemently. Anyway, we’re sidetracking from the main point of the article. Let’s us stop it here.

  38. ஹிந்துக்களிடமும் சொரணை இல்லை. இது போல் இந்து மதத்தை இழிவுபடு்த்தும் சொறிநாய்களின் படத்தை பார்க்காமல் தோல்வி அடைய வைத்தால் போதும். இந்த நாய்கள் இப்படி படம் எடுக்க துணியாது. அல்லாவையோ 6வயது சிறுமியை மணந்த முகமது நபியையோ தன் திரைப்படத்தில் தைரியமிருந்தால் கேவலப்படுத்திப் பார்க்கட்டும். இனிய இஸ்லாம் மார்க்கம் அவன் உடலில் தலை இல்லாமல் எடு்த்துவிடும். இவனுக்கு இறைவன் தான் தண்டனை கொடுக்க வேண்டும்.

  39. இன்று காலை சனிக்கிழமை வாராவாரம் வரும் வழக்கமான செய்தியை முதல் பக்கத்தில் மற்றும் முக்கிய பக்கங்களில் காணவில்லை. தினமணியின் பன்னிரெண்டாம் பக்கத்தில் முதல் பத்தியில் செய்தி வந்துள்ளது.வடமேற்கு பாகிஸ்தானிலுள்ள ஹன்கு பகுதியில் ஷியா முஸ்லீம்கள் கட்டியுள்ள ஹசாரா மருத்துவமனையில் நேற்று வெள்ளிக்கிழமை வெடிபொருட்கள் அடங்கிய லாரியை கொண்டுவந்து மோதி சன்னி முஸ்லிம் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தியதில் பதினைந்து மனித உயிர்கள் பலி.பத்துக்கும் மேற்பட்டோர் காயம். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று எதிபார்க்கப்படுகிறது. மீட்புப்பணிகள் தீவிரமாக நடை பெறுகிறது.

    மதத்தீவிரவாதம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் மீதும் பாய்கிறது. மருத்துவமனை கட்டிடம் முழுவதும் இடிந்து தரை மட்டமாகிவிட்டது. இந்த செய்திகள் வாராவாரம் சனிக்கிழமை பேப்பர்களில் தவறுவதே இல்லை. கடவுள் பெயரை சொல்லி பிற மனித உயிர்களை கொள்ளும் இவர்கள் மனிதப்பிரவிகளே இல்லை என்பது தெளிவு. நம் தமிழ் நாட்டில் மனித நேயம் என்று பொய் சொல்லி திரிகிற மஞ்சள் மற்றும் கருப்பு நிற உடை அணிவோர் இது போன்ற மனிதாபிமான மில்லாத செயல்களை கண்டித்து வாய் திறப்பதில்லை. அவர்கள் வாய்க்கு அடைத்துக்கொள்ள ஒரு டஜன் கொழுக்கட்டைகள் செய்து அனுப்பினால் தவறில்லை.பாவம் இவர்கள்.

  40. சு பாலச்சந்திரன்

    இறைவணக்கத்தில் மனிதர்கள் ஈடுபடுவதால் இறைச்சக்திக்கு ஒரு லாபமோ, பெருமையோ கிடையாது. ஆனால் மனிதர்கள் இறைவழிபாட்டில் ஈடுபடுவதால், அவர்களுக்கு நிறைவான ஆத்ம சுகம் கிடைப்பது, அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். அனுபவிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஏதாவது சொல்வதை நாம் பொருட்படுத்தக்கூடாது.

    அதே சமயம், பகுத்தறிவு என்று சொல்லி வாழும் பொய்யர்கள் நமது இந்து மதத்தின் ஒரு அம்சமே என்பதை நாம் என்றும் மனதில் கொள்ள வேண்டும். மாணிக்க வாசகர் திருவாசகத்தில் “நாத்திகம் பேசி நாத்தழும்பேறி ” என்று பாடியுள்ளார். இந்த நண்பர்களுக்கு ஆதிகாலத்தில் சார்வாகம் என்ற பெயரில் நாம் மதிப்பு கொடுத்து வந்தோம். இராமபிரானின் காலத்திலேயே காட்டுக்கு செல்ல தயாராக இருந்த இராமபிரானிடம் சார்வாக தத்துவத்தை பின்பற்றும் அழுக்கு ஒன்று, ” ஏய் ராமா, உன் தந்தை தசரதன் ஒரு வயதான கிழவன் . அவன் ஆண்டு அனுபவித்தவன், நீயோ இளைஞன். நீ அவனுடன் போரிட்டு அவனை கொன்றோ, சிறைப்பிடித்தோ, உடனடியாக ஆட்சியை கைப்பற்று வாயாக, மூடனைப்போல கானகம் செல்லாதே என்று அறிவுரை வழங்கினார். அந்த சார்வாக அழுக்கின் அறிவுரையை புறக்கணித்த இராமபிரான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற மூதுரைக்கு ஏற்ப கானகம் சென்று மனித வரலாறில் இமயத்தைவிட உயர்ந்தான். கமல் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் அறுபது வயது பைத்தியம் . மகான் புத்தர் சொன்னதை நினைவு கூர்வோம். கமல் சொன்ன அழுக்கான வார்த்தைகள் அவரிடமே இருக்கட்டும். நாம் அவரை பொருட்படுத்தவேண்டாம். விநாசகாலே விபரீத புத்தி என்று பெரியோர் சொல்லி உள்ளனர். கமலை பெற்றோர் பாவம்,

  41. கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்!
    என்றே வாழும் கற்புடை மகளிர் சார்பில் எச்சரிக்கை!

    What is the ilakkanam for Karpudai aangal? They don’t need to have karpu? Why there is no mention of Karpudai aangal anywhere?

  42. இந்து மத இழிவு படுத்துதல் என்பதில் இது முதல் தடவை இல்லை. கிறுத்துவப் பாதிரிகள் தெருவோரங்களில் செய்துவந்த வேலையை, ஈனவேராவிற்குக் கூலி கொடுத்துச் செய்ய வைத்தார்கள். ஈனவெராவிற்குப் பின்னர் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவர்கள் இந்த விபச்சாரத்தைத் தொடர்கிறார்கள். லாபமான தொழில்.

    இதை எதிர்த்து நாகரீகமான முறையில் கேள்வி கேட்காவிட்டால் இது பரவலாகும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதைச் செய்வதற்கு கொஞ்சமாவது சுயமரியாதை மனத்தில் இருக்க வேண்டும். உடம்பில் சுரணை இருக்க வேண்டும். வீட்டுப் பெண்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    இந்தப் படம் ஓடும் தியேட்டர் வாசல்களில் போய் இந்தக் கட்டுரையின் பிரதியை நோட்டிஸாக மக்களுக்கு விநியோகிக்கலாம். அது ஜனநாயக முறையிலமைந்த, இந்துக்களுக்கே உரித்தான சாத்வீகப் போராட்டமாக அமையும்.

    இதைப் போல நோட்டிஸ் விநியோகத்திற்கு என்று நாம்கூட நமது நேரத்தைச் செலவழித்துப் போக வேண்டாம். இதைச் செய்வதற்கு என்றே இப்போதெல்லாம் தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. பார்ட் டைம் வேலை செய்து சுயமரியாதையுடன் வாழும் இளைஞர்களும், இளைஞிகளும் இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷமாக இதைச் செய்வார்கள்.

    இந்தக் கட்டுரையை ஒவ்வொருவரும் தனது நண்பர்கள் உறவினர்களுக்கு மெயிலில் அனுப்பலாம். கேவலப்படுத்தப்படுவது நம் வீட்டுப் பெண்கள் என்ற புரிதல் யாருக்காவது தப்பித் தவறி யாருக்காவது ஏற்பட்டாலும் ஏற்படும்.

    சுரணையுள்ளவர்கள், தங்கள் வீட்டுப் பெண்களை மதிப்பவர்கள் உலகில் எங்காவது இருக்கலாம்தானே.

  43. திரு பாலசந்த்ரன், தாங்கள் முன்னம் சொன்ன இறை ம்றுப்பு நாஸ்திகம். பின்னர் ராமாயணத்திலிருந்து எடுத்து சொன்னது அதை விடவும் கீழான கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற போக்கில் ம்ருகங்களுக்கு ஸமானமாக மனிதனை கீழே தள்ளும் லோகாயதம். ஆங்கிலத்தில் materialism.

    ஸ்ரீ திருச்சிக்காரன், கோவில் சிற்பங்கள் பற்றியும் காமம் பற்றியும் ஞாயமான சில வினாக்கள் எழுப்பியுள்ளீர்கள். widely believed fact that கோவில் சிற்பங்களில் காமத்தை விளக்கும் சிற்பங்கள் உள்ளன என்பது. கோவிலுக்குப் போவோர் மிகப்பலபேர் ஆர்த்தர்களாகவோ அல்லது சொற்பமான மிககச்சிலர் இறையன்பின் வெளிப்பாடாகவோ ஆலய தரிசனத்திற்கு செல்கின்றனர். இதில் எந்த வகையினரும் சிற்பங்களை பார்த்திருப்பார்களா என்பதே கேள்விக்கான விஷயம். ஆனால் எம்.எஃப்.ஹுஸைன் போன்ற ராக்ஷஸப் ப்ரக்ருதிகள் கோவில் சிற்பங்களை சுட்டிக்காட்டி தங்கள் ஆபாச ஓவியங்களை ஞாயப்படுத்துவது மிக கேவலம்.

    ஆனால் காமம் என்பது ஹிந்து மதத்தில் முக்யமாக கருதப்படும் விஷயம் என்பதை மறக்காதீர்கள். தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் என்று சொல்லப்படும் சதுர்வித புருஷார்த்தங்களில் ஒன்று காமம். வேதம் மற்றும் உபநிஷதங்களில் காமம் பற்றி சொல்லப்பட்டுள்ளதா என்று வினவி உள்ளீர்கள். ஸ்ருதி என்று அற்யப்படும் எழுதாக்கிளவியின் உத்தரபாகமான உபநிஷதம் நான் காவது புருஷார்த்தமான் வீடுபேறை ப்ரதானமாக விசாரிக்கும் சாஸ்த்ரம். மற்றும் வேதம் என்று நாம் புரிந்து கொள்ளும் பூர்வ பாகம் கர்ம ப்ரதானமான பாகம்.காமத்தை ப்ரத்யேகமாக வாத்ஸ்யாயனர் தமது காம சூத்ரத்தில் எழுதியுள்ளார். அப்படியானால் காமம் பற்றி வேறு எந்த ரிஷி முனிகளும் எழுதவில்லையா?

    இது ஒரு புருஷார்த்தமாக இருப்பதால் நிச்சயம் எழுதி இருக்கிறார்கள். மனிதர்கள் மிருகம் போல் காமத்தில் இறங்காமல் இருப்பதற்காக எது சரி எது தவறு எப்போது கூட வேண்டும் எப்போது கூட கூடாது. கூடாத வேளையில் கூடினால் எப்படிப்பட்ட மகவுகள் பிறக்கும் என்பதையெல்லாம் எழுதி வைத்து இருக்கிறார்கள். ஆனால் இவை அச்சிட்டு பொஸ்தகம் போட வேண்டி இல்லை. வாழ்க்கையை நேராக நடத்த வேண்டியவர்கள் பணிவுடன் கற்றறிந்த பெரியோர்களிடம் அறிய வேண்டிய விஷயங்களில் ஒரு விஷயம்.

    அஷ்டாதச புராணங்களை எழுதிய வ்யாசர் தன் புராணங்களில் காட்டிய ரஸங்களில் ஒரு முக்யமான ரஸம் ஸ்ருங்கார ரஸம்.நாயிகா நாயக – தலைவன் தலைவி பாவங்கள் பரிணமிக்க ரஸம் பொருந்த பல காவ்யங்கள் எழுதியுள்ளார்கள் பல ப்ரக்யாதி வாய்ந்த கவிஞர்கள். கண்ணன் ராதை, கண்ணன் நப்பிண்ணை இந்த திவ்ய தம்பதிகளைப் பற்றி ஸ்ருங்கார ரஸம் பொருந்த தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் கொட்டி தீர்த்திருக்கிறார்கள். இதில் முக்யமாக கவனிக்க வேண்டியது ரஸம் பொருந்த. காவ்யங்களில் உள்ளது ரஸம். பணம் பண்ண கூத்தாடிகள் எழுதுவது அப்பட்டமான விரஸம். இது fact. பின் மரபு என்ன? மிக நுட்பமான மற்றும் புருஷார்த்தங்களில் ஒன்றாக அறியப்படும் இது பற்றி யாரும் பொத்தாம் பொதுவாக கண்டிப்பக பேச மாட்டார்கள். so, இதை த்த்தகா பித்தக்கா என்று விரஸமாக பேசுவோர்களின் போக்கு Fools rush in where angels fear to tread என்ற வசனத்திற்கு ஏற்ற போக்கு.

  44. //இதில் புதிதாக இணைந்திருப்பவர் ஒரு திரைப்பட நடிகர்.// இவர் புதிதாக இணைந்தவர் இல்லை. ரொம்பகாலமாகவே இதைச் செய்கிறார். ஆட்சியாளர்களைப் பொறுத்து பக்திமானாகவும் , பக்தியை பழிப்பவராகவும் வேஷம் மாறுபவர். நிஜ வாழ்விலும் நடிக்கும் நிஜ நடிகர். தனக்கு அரசியலே தெரியாது வராது என்று ஊர்மக்களை ஏமாற்றும் மத அரசியல் வாதி இவர்.

  45. //வாமாசாரம் போன்ற வார்த்தைகளை சொல்லி அனாச்சாரங்களை இந்து மத்தில் திணிக்க வேண்டுமா?//

    வாமாசாரம் அனாசாரம் இல்லை. ஸ்ரீ நவாவரண பூஜை பரார்த்த பூஜை, பராபரா பூஜை , ஸபர்யா நியாஸ பூஜை , தக்ஷணாச்சாரம், வாமாசாரம் போன்ற பல்வேறு முறைகளில் பல்வேறு இடங்களில் செய்யப்படுகின்றது.

    வாமாசாரம் என்பது தாந்திரீக வழிமுறை. ஆகவே பகவத்கீதையில் அதுபற்றி எதுவும் இருக்காது. சநாதன தர்மத்துக்கு இந்த நூல் தான் அதாரிட்டி என்று கிடையாது. பகவத் கீதை வேதங்களின் சாரம் என்று சொல்லப்படுகிறது. சாரமான நூல் சாராம்சங்களைக் கொண்டிருக்கும். முழுமை சாராம்சத்தில் முழுதாகக் கிடைக்காது.

    நாவலின் பின் அட்டையில் இருக்க gistஐப் படித்து விட்டு இது தான் கதை என்று சொல்வது போன்றதே பகவத் கீதையைப் படித்துவிட்டு இதுவே சநாதனத்தின் முழுமை என்பது.

    தாந்த்ரீக மரபு என்பது மனவோட்டங்களையே பிரதானமாகக் கொள்கிறது. மனத்தின் வெளிப்பாடுகளை ஒவ்வொன்றாகப் புரிந்து தெளிந்து வென்று கடந்துசெல்லுதல் தாந்திரீக வழிமுறை. காமத்தை வெல்ல காமத்தையே பழகுவது. அச்சத்தை வெல்ல அச்சமூட்டும் விஷயங்களில் நுழைந்து அதைப் புரிந்து கொள்வது. மரணத்தை அஞ்சாது தெளிய சுடுகாட்டில் பிணத்தின் மீதமர்ந்து தியானம் செய்வது போன்ற ஒரு பயங்கரமான ஆனால் முறையான வழிகாட்டுதலோடு இறங்கினால் effectiveஆன வழி அது. இதுவே வாமாச்சாரம்.

    காமம், கோபம், அச்சம் முதலிய அனைத்தினின்றும் விலகி நின்று வழிபட்டு அது என் மட்டில் இல்லாத்து என்னைவிட உயர்ந்தது என்று போற்றிக் கடந்துசெல்லலாம். சடங்குகள், பூஜைவிதிகள், ஓவியம், சிற்பம் முதற்கொண்டு இசை, நாட்டியம் வரை அதற்கு பல வழிகள் உள்ளன. கோவில் சிற்பங்கள், காமம் சார்ந்த குறியீடுகள் கூறும் உட்கருத்தும் இதுவே. முறையான வழிகாட்டுதல் இருப்பின் மிகச்சுலபமான வழி. இது தக்ஷிணாசாரம்.

    கிருஷ்ணன் பல பெண்களோடு கூடினான் ஆனால் அவன் நித்ய பிரம்மசாரி என்பது வாமாசாரப் பார்வை. அவன் கூடினான் என்பது மனித மனத்தில் எழும் காமம் அல்ல அது மனதோடு மனம் இணையும்
    தெய்வீக ஐக்கியமே என்பது தக்ஷிணாசாரப் பார்வை.

    காமத்தை அடக்குவது என்பது முடியாத காரியம். எதை அடக்கினாலும் அது சீறிக்கொண்டு எழும். காமத்தை அறிந்துக்கொள்வதோ அல்லது அலட்சியப்படுத்துவதோ தான் அதை வெல்ல ஏற்ற வழிகள். அறிந்துகொள்ளப்போய் தடுமாறித் திரிந்தவர்கள் ஏராளம்.

    அலட்சியப்படுத்தி நிமிர்ந்து நின்றவர்கள் இந்து மதப் பிரமுகர்கள் என்று நீங்கள் விளிக்கும் பெரியோர். அவர்களும் வாமாசாரம் அனாசாரம் என்று சொன்னதில்லை. சிக்கல் மிகுந்த வழி அது. சிக்கலில்லாத வழியில் செல்லுங்கள் என்றே உபதேசித்தனர். சிக்கல் இருப்பதனால் வழியைப் பழிப்பது தவறு.

    தமிழ் ஹிந்துவில் வந்த பாரதியின் சாக்தம் கட்டுரையை மேற்கோள் காட்டியதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பல தொன்மை நூல்களை அடிப்படையாகக் கொண்டுதானே அது எழுதப்பட்டது?

  46. திருமிகு கிருஷ்ணகுமார் ஐயா ! உங்கள் எழுத்துக்களில் முழுக்க முழுக்க இறைவன் குடிகொண்டிருக்கிறான். தொடர்ந்து ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கு’ங்கள்.

  47. கமலஹாசனுக்கு பல்வேறு மனநோய்கள் பீடித்துள்ளன. இவரது தனி வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளினால் மனம் பிறழ்ந்து இது போன்று பேசியும் எழுதியும் பாடியும் வருகிறார். இவரது பிராமண அடையாளத்தை அழிக்க கடுமையாக முயற்சி செய்வது இரண்டாவது பிரச்சினை. மூன்றாவது இவருக்கு தன்னை எப்படியாவது ஒரு அறிவி ஜீவியாக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது. சமீப காலங்களில் தொ பரமசிவம் என்றொரு இந்து காழ்ப்பாளன், போலித் தமிழ் அறிஞரை பெரிய அறிஞர் என்று நினைத்துக் கொண்டு அவர் பின்னால் திரிந்தால் தனக்கும் பெரிய அறிஞர் என்று பெயர் கிட்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த ஆள் உளறிக் கொட்டும் பிரிவினைவாதங்களைப் பிடித்துக் கொண்டு தானும் பெரும் தெய்வம் சிறு தெய்வம் என்று அவை பற்றி எதுவும் தெரியாமலேயே லூசு மாதிரி உளறிக் கொண்டு திரிகிறார். தொ ப போன்றவர்களுக்கு இந்துக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் அஜெண்டா உள்ளது. அந்த ஆள் தண்ணி அடித்து விட்டு உளறுவதில் பாதி விஷயம் அடிப்படை அறிவு கூட இல்லாதவன் எழுதுவது என்பதை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கிழித்துள்ளார். ஏற்கனவே தொ ப போன்ற இன வெறிக் கும்பலின் அறிவு நாறடிக்கப் பட்டிருப்பது தெரியாமல் பின்னால் அலையும் கமலுக்கு நிச்சயம் அறிவு ஜீவி பட்டம் கிடைக்காது. வெறி பிடித்து அலையும் நாய் பட்டம் வேண்டுமானால் கிட்டலாம். முதலில் தன் பிராமண அடையாளத்தை அழிக்க வேண்டி ஈ வெ ராமசாமி நாயக்கன் பின்னால் திரிந்த கமலஹாசன் இப்பொழுது தனக்கு ஒரு அறிவு ஜீவி பிம்பம் வேண்டி தொ ப போன்ற டுபாக்கூர் தமிழறிஞர்கள் பின்னால் அலைகிறார். ஐப்பசி மாச நாய் போல ஒன்று பெண்களின் பின்னால் அலைவது அல்லது போலிகளின் பின்னால் அலைவது அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இப்படி ஆபாசமாக நடிப்பதே இவருடைய பிழைப்பாய் போய் விட்டது. இவருக்கு என்றும் ஞானம் மட்டும் கிட்டப் போவதில்லை. போலியான அருவருப்பான ஒரு மனிதன் கமலஹாசன்.

  48. //சிக்கலில்லாத வழியில் செல்லுங்கள். சிக்கல் இருப்பதனால் வழியைப் பழிப்பது தவறு. //

    குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை நினைவு படுத்தும் அற்புதமான வரிகள்.

  49. அன்புக்குரிய திரு. கிருஷ்ண குமார்,

    வணக்கம். உங்களுடைய விளக்கத்துக்கு நன்றி. ஆனால் அவை கன்வின்சிங்க்காக இல்லை. //widely believed fact that கோவில் சிற்பங்களில் காமத்தை விளக்கும் சிற்பங்கள் உள்ளன// என்று எழுதி இருக்கிறீர்கள். இது கிட்டத் தட்ட கழக பிரச்சார பாணி போல, உள்ளது. fact என்றால் ஆதாரம் இருக்கிறதா? மேளம் வாசிப்பவர், நாதஸ்வரம் வாசிப்பவர் , திருமண வூர்வலம், முனிவர்கள் போன்ற சிற்பங்கள் உள்ளன. புணர்சி சிற்பம் இருக்கிறதா என்று கேட்டால் திரு. நரசிம்மன் இது வரையில் ஒன்றை காட்டி இருக்கிறார்.

    ஒரு பக்கம் பாமா, இன்னொரு பக்கம் ருக்மணி இவர்கள் நிற்க கிருஷ்ணர் இருப்பதை எல்லாம் புணர்சி சிறப்மாக கருத இயலாது. விநாயகர் சித்தி, புத்தியை மடியில் வைத்தவாறு இருப்பது எல்லாம் புணர்ச்சி சிற்பமாக கருத இயலாது.

    அடுத்து காமம் என்பது இந்து மதத்தின் இன்னொரு முக்கியமான விடயம் என்று கிட்டத் தட்ட தலிவரு பாணியிலே அதிரடியாக சொல்லி விட்டீர்கள். காமம் என்பது (அதாவது ஆண் பெண் உடலுறவு) மனித வாழ்க்கையில் முக்கியமான ஒரு விடயம் என்பதை சொன்னால் அதை புரிந்து கொள்ளலாம். சிறுவனாக இருக்கும் போது விளையாட்டு பொருட்களில் ஆசை வைக்கிறான், வாலிப பருவத்தில் மங்கையின் மேல் ஆசை வைக்கிறான், பிறகு பணம் சொத்து, புகழ் மீது ஆசை வைக்கிறான்…. இவ்வாறாக வெவ்வேறான ஆசைகள் வெவ்வேறு காலத்துக்கு ஏற்ப மாறக் கூடியவை. அதிலே நாட்டம் போவதால், தன்னுடைய உண்மை இயல்பை அறியாமல் விட்டு விடுகிறான். எனவே காமம் என்பது ஆன்மீக முயற்ச்சிக்கு தடையே. இதை நான் சொல்லவில்லை. இந்து மதக் கோட்பாடு சொல்லுகிறது, புத்த , சமண மதங்களின் கோட்பாடும் இதுதான்.

    ஆனால் இந்து மதம் ஒரே நாளில் எல்லோரும் துறவியாகி புத்தனாக முடியாது என்பதை புரிந்து வைத்துள்ளது. அதனால் மனிதன் காமத்தில் மயங்கும் பாதையில் சென்றாலும் நெறியான வகையிலே காமத்தை அனுபவித்து, சிறிது சிறிதாக அதில் இருந்து விடுபட்டு ஆன்மீக பாதையில் முன்னேறும் வழியாக இல்லறத்தை அங்கீகரித்து, பக்தி மார்க்கத்தையும் தந்து உள்ளது. இந்தப் பாதையும் கடைசியில் காமத்தில் இருந்து விடு பட்டு , தன்னை உணர்ந்து விடுதலை பெறும் பாதைதான். ஆனால் இதை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு காமம் என்பது இந்து மத்தில் முக்கிய விடயம் என்று சேம் சைடு கோல் அடிக்கின்றனர், ஆனால் உண்மை அதுவல்ல.

    நானும் பல முறை எழுதி விட்டேன், பகவத் கீதையில் சொல்லி இருக்கிறதா, ஆமை தன் அங்கங்களை உள்ளிழுப்பது போல புலன்களை பொறிகளில் இருந்து இழுத்து ஆன்மாவில் வைக்கிறான் ஞாநி என்று சொல்லி இருக்கிறதா இல்லையா? கீதையில் இல்லை, உப நிடதங்களில் இல்லை. வேதத்தில் (கர்ம பாகத்தில்) இருக்கிறதா, அஸ்வமேத யாகம் செய்யும் போது அழகிகளை ஆட வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறதா?

    ஆனால், “காமத்தில் இருந்து விடுபடவதே ஆன்மீக முன்னேற்றம்” என்று எழுதினால் நம்மில் பலர் மனம் வருத்தப் படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் காமத்தில் ஈடுபடுவது தவறோ என்ற குற்ற உணர்ச்சி வந்து விடுகிறது. கணவன் மனைவி உறவு கொள்வதை இந்து மதம் தடுக்கவில்லை, அது குற்றமும் அல்ல. மனிவியோடு உறவு வைப்பதை யாரும் குறை சொல்லவோ, ஏளனம் செய்யவோ பரிகசிக்கவோ இல்லை. அதனால் குற்ற உணர்வு தேவை இல்லை. ஆனால் அதன் மூலம் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியும் என்பதாக எனக்கு தெரிந்த வரையில் இந்து மதக் கோட்பாடுகள் எதிலும் இல்லை.

    இல்லறத்தில் இருந்த எத்தனையோ இந்து மகான்களை நாம் சொல்லலாம். ஜனகர், கவுதமர் , இராமானுஜர், தியாகராசர்… இப்படி பலர் கிரிஹஸ்தராகவும் இருந்து கொண்டு மஹானாகவும் இருந்துள்ளனர். ஆனால் யாராவது காமம் என்பது இந்து மதத்தின் முக்கிய விடயம் என்று சொல்லி இருக்கிறார்களா. தயவு செய்து இந்து மதத்திலே தேவை இல்லாமல் பாலிலே கள்ளைக் கலப்பது போல, நம்மை அறியாமலே கலந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    வியாசரின் ஸ்ரிங்கார ரசம் என்றால், ஒரு புராணத்தை பாடும் போது நாயகி நாயக பாவத்தை எழுத வேண்டியது கடமை தானே. அதை செய்தார். இராமர் கூட சீதையைக் காதலித்தார். அது உலகுக்கே தெரிந்த விடயம். அதனால் என்ன? சீதையும் இராமரும் காதலித்தது எல்லோரின் வாழ்க்கையிலும் நடப்பது. தன்னுடைய அன்புக்குரிய கணவன் காட்டில் தனியாக கஷ்டப் படுவானோ என்று நினைத்து அந்த நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் சீதாஅம்மா, இராமருக்காக வனம் சென்றது, அந்த அன்பு தான் ஆன்மீகம், அது தியாகம், அது இணையற்ற அன்பு, அது தான் ஆன்மீகம்.

    இதற்க்கு மேலும் என்ன தெளிவு படுத்த முடியும் என்று தெரியவில்லை. வூத வேண்டிய சங்கை வூதி விட்டோம். தேவைப் படும் போதெல்லாம் தொடர்ந்து வூதுவோம்.

  50. @ thiruchchikkaaran,
    காமம் என்பது காதலின் வெளிப்பாடு எனவும், காதல் என்பது குறிப்பிட்டவரின் மேல் உள்ள அன்பின் வெளிப்பாடாகவும் உணர முயற்சி செய்யுங்கள். உங்கள் எரிச்சல் குறையும். பகவத் கீதையில் எங்கு ‘காமம் இருந்தால் என்னை அடைய முடியாது’ என்று பகவான் குறிப்பிடுகிறார் ? சொல்லுங்களேன்.

  51. நல்லது, பகவத் கீதை ஒரு gist போன்றதுதான் என்கிறார்கள். வேதங்களிலும் காமத்தின் மூலமாக ஆன்மீக உயர்வு பற்றி இருப்பதாக தெரியவில்லை. கீதையையும், வேதங்களையும் தண்டி கூட சிந்திக்கலாம். ஆனால் வேறு வழிகளில் முயற்சி செய்து வெற்றி பெற்று இருக்கிறார்களா? கீதை சொன்ன வழிகளில் முயன்று வெற்றி பெற்ற பலரைக் காட்டலாம். பக்திக்கு மார்க்கண்டேயன், தியாகராசர்… துறவில் பட்டினத்தார், விவேகானந்தர் … இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    தாந்திரீகத்தின் (ஆண் பெண் உறவின் ) மூலம் ஆன்மீக விடுதலை பெற்றவர்கள் இருந்தால் சொல்லுங்களேன். காமத்தில் ஈடுபடுவதன் மூலமே காமத்தை வென்றவர்களாக இந்தியாவில், இந்து மதத்தில் யாரையாவது காட்டுங்களேன்.

    மேலும் தாந்திரீகத்தை (ஆண் பெண் உறவை ) யாரிடம் பயிற்சி செய்வது? மற்ற ஆன்மீக முறைகளை மனக் குவிப்போ, பக்தியோ, தவமோ, கர்ம யோகமோ, கர்ம பலத் தியாகமோ ஒருவன் செய்ய பிரச்சினை இல்லை. ஆனால் இந்த காம புணர்ச்சி முறைக்கு ஆணுக்கு, பெண் தேவை. அது யார்? கிரகஸ்தராக இருந்தால் மனைவியோடு உடல் உறவு வைத்துக் கொள்ளலாம். ஆனால் உடல் உறவின் மூலமாக ஆன்மீக உயர்வை அடையலாம் என்றால், இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கிரகஸ்தர்கள். அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாமே. எந்த கிரகஸ்தராவது தாந்திரீக பயிற்சி செய்கிறாரா? அப்படியானால் தாந்திரீக பயிற்சி செய்பவர் யார்?

    பிரம்மச்சாரி, துறவி, ஆகியோர் தாந்திரீக முறையை யார் மூலமாக முயல்வது?அவருக்கு அந்தப் பயிற்சியில் உதவும் பெண் யார்? இது எந்த வகையான சமுதாய முறை?

    புத்த மதம் வீழ்ச்சியுற்ற கால கட்டத்திலே தான் ஆபாசம், அநாகரீகம் என்ற பெயரிலே இந்தியாவிற்குள் வளர்ச்சி இல்லாத பிற நாட்டவரால் திணிக்கப் பட்டு விட்டன. சுவாமி விவேகானந்தர் இவற்றை பற்றிக் குறிப்பிட்டு, நாகரிக மனிதனின் சிந்தனையில் நினைத்து கூட பார்க்க முடியாத ஆபாசங்கள் எல்லாம், ஆன்மீகம் என்ற பெயராலே திணிக்கப் பட்டு விட்டன என்கிறார். அவற்றை எல்லாம் எல்லாம் ஆன்மீகமாக கருதி மரியாதை செய்து அழகு பார்க்க இயலுமா?

  52. எனக்கு ஒரு விடயம் புரியவில்லை. இந்தக் கட்டுரையிலே காமத்தையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் கவித்துவ முயற்சியை என்பதாக குறிப்பிட்டுள்ளனர். கஜுராஹோ சிற்பங்களை காட்டுகின்றனர். காமத்தை விடுவது ஆன்மீக உயர்வுக்கு வழி என்றால், பல நண்பர்கள் தாந்திரீகம், வாமச்சாரம், இந்து மத்தில் காமம் முக்கியமான விடயம் என்று எல்லாம் எழுதி இந்து மதத்தில் காமம் மூலமாக ஆன்மீக உயர்வு அடையலாம் என்கிற கோட்பாடு உள்ளது போல எழுதுகின்றனர். அப்படியானால் இவங்க உண்மையிலேயே கமலை எதிர்க்கிறார்களா? ஆதரிக்கிறார்களா?

    இவங்களுக்கும் கமலுக்கும் இடையிலே என்ன பிரச்சினை? எல்லோருமே காமம் மூலமாக கவித்துவ உயர்வை அடைய முயற்ச்சிக்கும் கோட்பாடை வைத்து இருக்கிறார்கள். எங்களைப் போல ஆட்கள காமம் ஆன்மீக முயற்சிக்கு தடை என்று நினைப்பவர்கள் கமலோடு கோட்பாடு ரீதியாக வேறுபட்டு இருக்கிறோம். ஆனால் இவர்கள் கிட்டத் தட்ட ஒரே கொள்கை போலதான் இருக்கிறது.

    இந்தக் கட்டுரையையும் , இதற்க்கு வரும் பின்னூட்டங்களையும் படிப்பவர்கள் கமல் பேரில் தவறு இல்லை எனக் கருதினால் ஆச்சரியம் இல்லை. அட இவங்க மட்டும் காமத்தையும், ஆன்மீகத்தையும் கவித்துவமா இணைக்கலாமா, கமல் மட்டும் இணைக்க கூடாதா? இவங்க இணைத்தால் கவித்துவம், கமல் இணைத்தால் வக்கிரமா என்று எண்ணினால் ஆச்சரியம் இல்லை.

    நம்மை பொறுத்தவரயில் மக்களின் புலன் உணர்வைத் தூண்டும் வகையிலான காட்சியோ, பிரச்சாரமோ அதனால் மக்களின் மனதில் உருவாகும் பதிப்புக்கு மாற்றாக அமைதியான ஆன்மீகம், பகுத்தறிவு ரீதியிலான வாழ்க்கை ஆராய்ச்சி, அமைதியான டிவோசன் இவற்றையே நிவாரணமாக முன் வைக்கிறோம். எனவே அதை செய்வதில் நாம் கவனம் செலுத்துவோம். இங்கே இவ்வளவு நேரம் வாய்ப்பு அளித்தற்கு நன்றி.

  53. You see the problem is unlike Rajini, Kamal isn’t a media darling. So he will do anything to get attention just to promote his movie. All Hindus just avoid this movie. Don’t watch it.

  54. அன்புள்ள அருண் பிரபு,

    //
    கிருஷ்ணன் பல பெண்களோடு கூடினான் ஆனால் அவன் நித்ய பிரம்மசாரி என்பது வாமாசாரப் பார்வை. அவன் கூடினான் என்பது மனித மனத்தில் எழும் காமம் அல்ல அது மனதோடு மனம் இணையும்
    தெய்வீக ஐக்கியமே என்பது தக்ஷிணாசாரப் பார்வை.
    //

    கிருஷ்ணன் கோபிகைகளுடன் ராசக் கிரீடை பண்ணியதற்கும் ஜீவாத்மாக்கலாகிய நம்முடைய பிராக்ருதமான காமத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து அதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். கோபிகைகள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பரமாத்மாவினிடையே செலுத்தினர். இதில் எந்த விதமான அனாச்சாரமும் இல்லை.

    வங்க தேசத்தில் காமுகர்கள் சிலர் சேர்ந்து ராதா-கிருஷ்ண லீலையைக் காரணம் காட்டி ‘சஹாஜ மார்க்கம்’ என்று ஒன்று இருந்து வந்தது. ஸ்ரீ சைதன்யரைப் பின்பற்றி வந்தவர்கள் நல்ல வேளையாக இதைக் கண்டித்ததனால் இந்த அலங்கோலம் இன்று பெருமளவும் நின்றுவிட்டது. இது தவிர, “கோபிகைகள் ராசக் கிரீடை பண்ணினார்கள்” என்று காரணம் காட்டி எந்த கிருஷ்ண பக்தர்களாவது கட்டுப்பாடின்றி நடந்துக் கொண்டுள்ளதாக இல்லையே. மாறாக, கண்ணனை வாழ்த்தியும் பாடியும் சென்றவர்கள் யார்? சங்கரர், ராமானுஜர், மத்வர், மதுசூதன சரஸ்வதி முதலான துறவிகளே.

    பாகவதத்தில் சுகப்பிரம்மம் இவ்வாறு கூறுகிறாரே:

    “இந்த ராசக் கிரீடையைப் பற்றி எவன் பக்தியுடன் செவியுருகிரானோ, அவன் காமமாகிய மன நோயிலிருந்து விடுபடுகிறான்” (பாகவதம், 10.33.39)

    இது ஸ்ரீமத் பாகவதத்தின் எல்லாப் பதிப்புகளிலும் உண்டு. பிராசீனராகிய பலர் பாஷ்யம் இட்டுள்ளமையால் இவ்வரி இடைச்செருகல் என்று கூற முடியாது.

    இதிலிருந்தே தெரியவில்லையா, ராச லீலைக்கும் பிராக்ருத காமத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று?

  55. அன்புள்ள அருண் பிரபு,

    // காமத்தை அடக்குவது என்பது முடியாத காரியம். எதை அடக்கினாலும் அது சீறிக்கொண்டு எழும். //

    கண்டிப்பாகச் செய்யலாம். எவ்வளவு ஞானிகள், எவ்வளவு யோகிகள் செய்து காட்டியுள்ளனர்!

    உணவுக் கட்டுப்பாடுகளையும் சாத்வீகமான வழிபாட்டையும் வாழ்க்கை முறைகளையும் பின்பற்றினாலே தானாகவே வரும்.

    அன்புள்ள kargil_jay,

    // பகவத் கீதையில் எங்கு ‘காமம் இருந்தால் என்னை அடைய முடியாது’ என்று பகவான் குறிப்பிடுகிறார் ? சொல்லுங்களேன். //

    16.1 The Blessed Lord said — Fearlessness, purity of mind, persistence in knowledge and yoga, charity and control of the external organs, sacrifice, (scriptural) study, austerity and recititude;

    16.2 Non-injury, truthfulness, absence of anger, renunciation, control of the internal organ, absence of vilification, kindness to creatures, non-covetousness, gentleness, modesty, freedom from restlessness;

    16.3 Vigour, forgiveness, fortitude, purity, freedom from malice, absence of haughtiness-these, O scion of the Bharata dynasty, are (the qualties) of one born destined to have the divine nature.

    16.5 The divine nature is the Liberation, the demoniacal is considered to be for inevitable bondage. Do not grieve, O son of Pandu! You are destined to have the divine nature.

    The Lord proceeds to describe the demonical ones:

    16.10 Giving themselves up to insatiable lust, filled with vanity, pride and arrogance, adopting bad abjectives due to delusion, and having impure resolves, they engage in actions.

    16.12 Bound by hundreds of shackles in the form of hope, giving themselves wholly to lust and anger, they endeavour to amass wealth through foul means for the enjoyment of desirable objects.

    16.21 This door of hell, which is the destroyer of the soul, is of three kinds: lust, anger and also greed. Therefore one should forsake these three.

    16.22 O son of Kunti, a person who is free from these three doors to darkness strives for the good of the soul. Thereby he attains the highest Goal.

    16.23 Ignoring the precept of the scriptures, he who acts under the impulsion of lust,-he does not attain perfection, nor happiness, nor the supreme Goal.

    இது போதுமே!

  56. // பகவத் கீதையில் எங்கு ‘காமம் இருந்தால் என்னை அடைய முடியாது’ என்று பகவான் குறிப்பிடுகிறார் ? சொல்லுங்களேன். //

    திருமணமாகிய கணவன்-மனைவிக்கு இடையிலான காதலைத் தான் காமம் என்பீர்களானால் அது சாஸ்திர சம்மதமானதே.

  57. திருச்சிகாரர் அவர்களே

    எனது ஊர் மன்னார்குடி அருகில் உள்ளது – அங்கு இருக்கும் குட்டி கோவிலில் கூட காமத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள் உள்ளன – இப்படிப்பட்ட சிற்பங்கள் இல்லாத கோவில்களை விரல் விட்டு என்னிவிடலாம்

    ராமானுஜர் அவரது 32 அவது வயதில் சந்யாசம் ஏற்றுகொண்டார் – அவருக்கும் ஜனகர் போன்றவருக்கும் இந்தவகையில் வித்யாசம் உள்ளது

  58. சாரங் அவர்களே,

    காமத்தை “காமத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள்” என்றால் என்ன அர்த்தம்? தெளிவாக சொல்லுங்கள்!

    அப்படிப் பார்த்தால் பெண் சிலைகள் எல்லாமே காமத்தை வெளிப் படுத்துகின்றன என்று சொல்லி விடலாம். தெருவிலே எத்தனையோ பெண்கள் வருகிரார்கள போகிறார்கள். அவர்கள் காமத்தை வெளிப் படுத்துகிறார்கள் என்று சொல்வீர்களா? காமத்தை வெளிப் படுத்துகினர்வா என்பது அவரவர் மனதைப் பொறுத்த விடயம். மனம் தான் காமத்தை எண்ணுகிறது. அண்ணி அழகாக இருக்கிறார். மரியாதை வருகிறதா, அல்லது காமம் வருகிறதா?

    கோவிலில் அர்ச்சகர் அம்மன் சிலையைத் துதிக்கிறார். மரியாதை வருகிறதா, காமம் வருகிறதா?

    நமது தமக்கையுடன் , அண்ணான் அண்ணியுடன், நண்பர், நண்பர் மனைவியுடன் வட்டார் பார்க் போகிறோம். அவர்கள் ஸ்விம் சூட் போட்டுக் கொண்டு நீந்துகிறார்கள். அது காமத்தை வெளிப்படுத்துகிறதா?

    புணர்ச்சியை சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளனவா என்பதுதான் கேள்வி!
    மன்னார் குடியில் உள்ள கோவில்களில் புணர்ச்சியை சித்தரிக்கும் சிறபங்கள் உள்ளனவா, இருந்தால் போட்டோ எடுத்து அனுப்புங்கள். தெரிந்து கொள்கிறேன்.

    இராமனுஜர் சந்நியாசம் ஏற்றார் மறுக்கவில்லை. ஆனால் அவர் கிரஹச்தராக இருந்த போதும் ஆன்மீகப் பணியில் ஈடுபட்டாரா இல்லையா?

  59. வணக்கம் சகோதரர்களே,

    இதிலிருந்து நாம் செய்ய வேண்டிய ஒரு நல்ல காரியம் என்ன என்றால் கமல் என்ற நபருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை ஒரு பெரிய ஆளாக்காமல் அவரை கண்டு கொள்ளாமல் விட்டு விடுதல் நலம்.

    அதாவது அவரை எதிர்க்கவும் வேண்டாம், அவரது படங்களை பார்த்து அவரை ஆதரிக்கவும் வேண்டாம், நாட்டாமை பாணியில் சொன்னால் அவரை தள்ளி வைத்து விடுவது. சரிதானே?

    சரி எதோ பகுத்தறிவு என்று பீற்றிக்கொள்ளும் பச்சோந்திகள் சொன்னார்கள் என்பதற்காக கோவில் சிலைகளை எல்லாம் ஆராய்ச்சி பண்ணக் கிளம்பி இந்த கட்டுரையின் பாதையே கொஞ்சம் திசைமாறுகிறது.

    கோவில்கள் என்றால் பெரும்பாலும் அங்கே இது போன்ற சிலைகள் இருக்கும், வெளிப் பிரகாரத்திலே. அதன் அர்த்தம் நாம்தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர வெறுமனை குழப்பிக் கொள்வதில் எந்த பலனும் இல்லை.

  60. //
    புணர்ச்சியை சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளனவா என்பதுதான் கேள்வி!
    //
    அமாம் – இதை இப்படி விளக்கி சொன்னால் தான் புரிந்து கொள்வீர்களா?

    போடோவேல்லாம் எடுத்து அனுப்ப இயலாது 🙂 – இதென்ன வம்பாக இருக்கிறது? இதற்காக நான் 600 ருபாய் செலவழித்து மண்னார்குடி போய் வர முடியுமா? 🙂

    இருக்கு என்று நான் சொல்கிறேன் – நீங்கள் வேண்டுமென்றால் ஒரு விசிட் செய்யலாம் – இல்லையேல் உங்களக்கு நண்பர்கள் இருந்தால் அவர்களை கண்டுவர (மன்னார்குடி மட்டுமில்லை தமிழகமெங்கும்) சொல்லலாம்

    மற்றபடி காமம் பற்றி நீங்கள் கூறிய உங்களது கருத்தை நானும் ஏற்கிறேன் – என்னை பொறுத்த மட்டில் காமத்தை தொலைத்தால் தான் உள்ளே சத்யா லோகம் (கோவிலில் கர்ப க்ருஹத்தை அடுத்து உள்ள திருச்சுற்று) செல்ல முடியும் அதையும் தாண்டினால் (த்ரி குணத்தை கடத்தல்) தான் கர்ப க்ருஹமான பகவானின் இருப்பிடம் சென்று முக்தி பெற முடியும் – இதை எடுத்துக் காட்டவே கோவில் கட்டமைப்புகள் உள்ளன.

    ராமானுஜர் பற்றி நான் உங்களுடன் வேறுபடுகிறேன் என்று சொல்லவில்லை – அவரூக்கு மேன்மையே அவர் எதி ராஜன் என்பதில் தான் அதனால் தான் 32 வயதில் சந்யாசம் ஏற்றார் என்று குறிப்பிட்டு சொன்னேன் அப்படி என்றால் அதற்க்கு முன் க்ருஹஸ்தராக தான் இருந்திருக்க வேண்டும் அல்லவா

    மேலும் //கிரஹச்தராக// இல்லை க்ருஹஸ்தராக இருந்தார் – இது ஓர் வேண்டுகோள் தான்

  61. சாரங் அவர்களே,

    நீங்கள் 600 ரூபாய் செலவழிப்பீர்களோ, இல்லை வசதியாக மகிழ்வூர்தியில் செல்வீர்களோ, ஒரு வேளை நாளை உங்களுக்கு வசதி வாய்ப்பு பெருகினால் ஹெலிகாப்டரில் கூட செல்லாலாம், வாழ்த்துகிறேன். இது ஒரு விடயம்.

    ஆனால் ஒன்றை சொல்லி விட்டு வேணும்னா நீ போய் பார்த்துக்கோ என்றால் எப்படி.

    என்னுடைய தளத்திலே இது பற்றி விவாதம் வந்த போது, நான் இதற்காகவே மயிலை கபாலீசவரர் கோவில் சென்று கோபுரம் முதல் குளம் வரை எல்லா இடத்தையும் சுற்றி பார்த்தேன், ஒரு புணர்ச்சி சிற்பத்தையும் காணோம். நான் அதை போட்டோவும் வைத்திருக்கிறேன். அந்த நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அனுப்ப தயார். அரியலூர் பெருமாள் கோவிலில் புணர்ச்சி சிற்பங்கள் இல்லை, திருச்சி மலைக் கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு சென்றேன். அங்கேயும் புணர்ச்சி சிற்பம் இல்லை. எனவே நான் பார்த்த கோவில்களில் புணர்ச்சி சிறபங்கள் இல்லை.

    நீங்கள் சும்மா, இருக்கு போய் பார்த்துக்கோ என்று சொல்கிறீர்கள். நான் ஆதாரம் குடுங்கள் என்று கட்டாயப் படுத்தவில்லை. இது என்ன பார்லிமெண்டா? .ஆனால் அடித்து சொல்வது சரியா?

    காமத்தை விடுவது ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவும் என்கிற கருத்தை வலுப்படுத்தும் உங்களுக்கு நன்றி. நம்முடைய கோட்பாடு இந்த பாயிண்டிலாவது ஒத்துப் போவது எனக்கு மகிழ்ச்சியே.
    இதே கருத்து விடயமாக விளக்கிய திரு. கந்தர்வன் அவர்களுக்கும் நன்றி.

    மற்றபடி நான் பார்த்த கோவில்களில் எந்த சுற்றிலும் காம தூண்டல் இருந்ததாக எனக்கு தெரியவில்லை.

  62. அன்புக்குரிய திரு. பாஸ்கர் அவர்களே, பகுத்தறிவு என்றால் அலர்ஜி கொள்ள வேண்டியதில்லை. உண்மையான பகுத்தறிவு உண்மையைத் தேடுவது, உண்மையை அடைவது, அதை நாம் செய்கிறோம்.

    நான் வருத்ததோடு குறிப்பிடுவது என்னவென்றால், இந்தக் கட்டுரையும் அதை ஒட்டி வந்த பல பின்னூட்டங்களும் கிட்டத்தட்ட ஒரு உலக நாயகன் கவிதை போல, “ஆமாம், காமம் இருக்குதான்யா, காமம் மூலமா இறைவனை அடைவது இந்து மதத்தின் ஒரு வழி” என்பது போல கருத்தை வெளிப்படுத்துகின்றன.

    இதை உலக நாயகன் படித்தால் , ”மொத்தத்திலே காமம் முக்கியம். அதுக்கு ஆன்மீகத்தோடு சம்பந்தம் இருக்கு. நீங்க காமம் மூலமா ஆன்மீகத்தை பாக்கிறீங்க, நான் ஆன்மீகம் மூலமா காமத்தை பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டால் என்ன செய்வார்கள? உலக நாயகன் படம் என்றால் அதிலே காம வக்கிரங்களுக்கு பஞ்சம் இருக்காது என்றே நண்பர்கள் சொல்லி விட்டு படம் பார்க்க செல்கின்றனர். அதே நண்பன் காலையிலே எழுந்து குளித்து விட்டு ஏதோ ஆன்மீகத்தை பற்றி நினைக்கலாம் என்று வந்தால் அப்போதும் “காமம் மூலமாக ஆன்மீகம் அண்ணே” என்று ஆரம்பித்தால், அது உண்மையிலே கொடுமை பாஸ்கரன் சார். உலக நாயகன் படத்துக்கு யாரும் ஆன்மீகத்தை எதிர் பார்த்து போகவில்லை. ஆனால் ஆன்மீக தலங்களுக்கு, தளங்களுக்கு ஆன்மீகத்தை எதிர்பார்த்துதான் வருகின்றனர்.

  63. @ கந்தர்வன்
    your points did not prove anything against what i told execpt this one : “Giving themselves up to insatiable lust” — and this is different from what I told here… I did not mean ‘insatiable’ ..

  64. கார்கில் ஜெய் அவர்களே

    ஏழாம் அத்யாயம் காமைஹி என்று தொடங்கும் 20 ஆம் ஸ்லோகம் – இதில் மிக தெளிவாக காமத்தால் என்னை விட்டு மற்றவற்றை அடைகிறார்கள் என்று சொல்கிறார்
    25 – நான் எல்லோருக்கும் ப்ராகசிப்பதில்லை (பக்தனான ஞானிக்கு மட்டுமே)
    27 – இச்சா த்வேஷ என்ற ஸ்லோகத்தில் – தன்னை அடைவதில் காமம் என்னும் தடை இருப்பதை சொல்கிறார்

  65. நண்பர் திருச்சிகரரே

    முதலில் – வேணம்னு நீ போய் பார்த்துக்கோ என்று நான் சொல்லவில்லை – வேண்டும் என்றால் நீங்கள் போய் பார்த்துக்கலாம் என்று தான் சொன்னேன் 🙂

    நீங்கள் என்னை என்ன செய்ய சொன்னீர்கள் என்று ஒருமுறை யோசனை செய்யுங்கள் உங்களுக்கே சிரிப்பு வரணும்? வரவில்லையா பரவாஇல்லை ?

    உங்களோடு ஒத்துபோகாமல் இருக்க வேண்டும் என்பது எனது கொள்கை அல்ல – உண்மையை சொன்னேன் அவ்வளவு தான் – அதாரம் கேட்டது நீங்கள் என்பதால் அதை தேடிக் கொள்ளும் வழியை சொன்னேன் அவ்வளவு தான்

    நான் முடியாது என்று சொன்னதற்கு நிறைய காரணம் உண்டு

    முதலில் நான் 600 செலவு செய்ய வேண்டும்
    என்னிடம் கேமரா இல்லை – ஒன்று வாங்க வேண்டும் – இந்த புண்ணிய காரணத்திர்க்காக வாங்க வேண்டுமா என்று ஒரு மனப் பட்டி மன்றம் நடத்த வேண்டும்
    நான் கோவிலுக்குள் போட்டோ எடுப்பது இல்லை
    நான் கோவிலுக்கு போட்டோ எடுப்பதற்காக போவதில்லை

    ஆன்மிகம் என்பது தன்னை தவிர எல்லாவற்றையும் விடுவவ்பது தான். தன்னை தவிர எதில் ஆசை வைத்தாலும் அது காமாகிவிடுகிறது அப்புறம் சுக துக்க இரட்டைகள் பிடித்துக்கொள்கின்றன – இதில் காமம் மூலமாக மோக்ஷம் அடைகிறேன் என்பது நிச்சயம் பிதற்றலே

  66. //உணவுக் கட்டுப்பாடுகளையும் சாத்வீகமான வழிபாட்டையும் வாழ்க்கை முறைகளையும் பின்பற்றினாலே தானாகவே வரும்.//

    எத்தனை பேர் செய்கிறார்கள் என்பது கேள்வி. உணவுக் கட்டுப்பாடு இல்லாவிடில் மரணம் என்று மருத்துவர்கள் உரைத்தபின்னும் கைவரவில்லை பலருக்கு, காமம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். புலன் அடங்கினாலும் மனம் அடங்காதிருப்பதுவே வயது முதிர்ந்த காலத்திலும் காமம் பற்றிப் பேசித்திரியும் பலர் இருப்பதற்குக் காரணம். காமம் மனம் சம்பந்தப்பட்டது என்பதால் தான் அதை வெல் என்று சொல்லாது ஒதுக்கு என்றும் அது தெய்வீகம் வழிபடு என்றும் பெரியோர் சொன்னார்கள். மனத்தை அதனின்றும் திசை திருப்பிவிடும் செயல் அது.

    இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறை வெங்காயம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பக்தர் ஒருவர் சந்நியாசிகளுக்கு மட்டுமல்ல சில சம்சாரிகளுக்கே மறுக்கப்படுவதாயிற்றே வெங்காயம், வெள்ளைப் பூடு. அதை நீங்கள் சாப்பிடுகிறீர்களே என்று கேட்டார். அதற்கு இராமகிருஷ்ண பரமஹம்ஸர் எனக்கு இதை எப்படிச் சீரணிக்க வேண்டுமென்று தெரியும். என் இறைத்தேடலுக்கு இவை இழுக்கு செய்யாது நான் பார்த்துக்கொள்வேன், உன் மனமும் அந்தப் பக்குவத்தை எட்டியிருந்தால் நீயும் சாப்பிடலாம் என்றாராம்.

    ஞானிகள் உணவுக் கட்டுப்பாடால் மட்டும் காமத்தை வென்றுவிடவில்லை. மனம் வேறு விஷயங்களைத் தேடியதால் உணவு, காமம் முதலியவற்றை அவர்கள் மனம் தேடவில்லை. இந்த விஷயத்தில் பொதுவாக நம்மக்கள் குழப்பிக் கொள்வது போலவே நீங்களும் குழப்பிக் கொள்ளாதீர்கள். துர்வாசர் நன்றாக ருசித்துச் சாப்பிடுவார். ஆனால் அவர் நித்ய விரதி என்பர். காரணம் அவர் மனதைச் சாப்பாட்டில் பறிகொடுக்கவில்லை. சப்பிட்டு முடித்ததும் “அந்த பாயசம் வெச்சிருந்தான் பாரு….ஆஹ்ஹா ஆஹ்ஹா ஆஹ்ஹா” என்று நம்மில் பலர் போலச் சப்புக் கொட்டிக் கொண்டிருக்க மாட்டார். அது போலத்தான் இராசக்கிரீடையும். பெண்களோடு ஆடினாலும் ஆட்டத்தில் மூழ்கிவிடாது மனத்தை தெளிவாகத் தன் வசம் வைத்திருந்தவர் கிருஷ்ணர் அதனால்தான் அவர் பரமாத்மா. அது முடியாதவர்கள் கிருஷ்ணர் செய்தது தெய்வீகம் என்று கையெடுத்துக் கும்பிட்டு மனத்தைக் காப்பாற்றிக் கொள்வது தான் சிறந்த வழி.

    உணவுக் கட்டுப்பாட்டால் மனத்தை வெல்லலாம் என்பது மனப்பால். May be for psychological support காமத்தை உணவுக் கட்டுப்பாட்டால் அடக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் மனதை அடக்க எண்ணங்களை கவனித்து நெறிப்படுத்துவதே வழி. அதற்குப் பெயர் தியானம். வருடத்தில் பாதி உபவாசமிருந்தாலும் மனதில் காமம் மிகுந்த எண்ணங்கள் குடிகொண்டிருந்தால் அத்தகைய கட்டுப்பாடு பைசா கூடப் பெறாது.

  67. //இதை உலக நாயகன் படித்தால் , ”மொத்தத்திலே காமம் முக்கியம். அதுக்கு ஆன்மீகத்தோடு சம்பந்தம் இருக்கு. நீங்க காமம் மூலமா ஆன்மீகத்தை பாக்கிறீங்க, நான் ஆன்மீகம் மூலமா காமத்தை பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டால் என்ன செய்வார்கள? //

    ஸ்த்ரீ ஸ்வபாவான் மகாதேவி என்பது வேதவாக்கு. மனைவியைத் தாயாகப் பார்ப்பது தவறில்லை. உல்டாவாக்கிப் பார்ப்பது மாபாதகம். பெண்களைத் தாயாகப் பார்ப்பதற்கும் தாயைப் பெண்ணாகப் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் காமம் மூலம் ஆன்மீகத்தைப் பார்ப்பதற்கும் ஆன்மீகம் மூலம் காமத்தைப் பார்ப்பதற்கும் என்று நான் சொல்வேன்.

  68. வணக்கம் சகோதரர்களே,

    திருச்சி சகோதரர் அவர்களுக்கு,

    பகுத்தறிவு என்பதற்கு நான் அலர்ஜி அடைய வில்லை, பகுத்தறிவு என்று பீற்றிக் கொள்வோரை போலிகள் என்பதாகவே குறிப்பிட்டுள்ளேன்.

    ஒரு மாபெரும் பிழையை பின்னூட்டங்களில் காண்கிறேன், தங்களின் கேள்வியும் அவ்வாறே, என்னவெனில்

    ////“ஆமாம், காமம் இருக்குதான்யா, காமம் மூலமா இறைவனை அடைவது இந்து மதத்தின் ஒரு வழி” என்பது போல கருத்தை வெளிப்படுத்துகின்றன. ////

    உண்மைதான் என்பதை தயவு செய்து உணருங்கள். ஆனால் காமம் என்ற சொல்லுக்கான பொருளை (அர்த்தம்) தவறாக புரிந்த காரணத்தால் இவ்வாறு எண்ணத் தோனுகிறது, அந்த வகையான ஆபாச பார்வை போலிப் பகுத்தறிவு வாதிகளுக்கு சொந்தமானது. எனவே அதை ஆன்மிகத்தோடு கலக்க வேண்டிய அவசியம் இல்லை, மாறாக காமத்தின் உண்மை என்னவென்று சகோதரர்கள் உணர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    காமம் ஆபாசம் என்று எண்ணுவீர்களானால் நம்மால் எந்த பெண் குழந்தைக்கும் காமாட்சி, சிவகாமி என்று பெயர் சூட்ட முடியாது, சிவனை காமிப்பவள் ஆகையால் அன்னை சிவகாமி என்றும் காம+அட்சி= காமாச்சி அதாவது காம பார்வை உடையவள் காமாட்சி. உண்மையில் காமம் என்பது அருவருப்பான செயல் எனில் எவரும் தன்குழந்தைக்கு இந்த பெயர்களை சூட்ட விரும்ப மாட்டார்கள் , இவ்வளவு ஏன் அப்பெயருடைய இரு அன்னை தெய்வங்களையும் நம்மால் பக்தியோடு அணுக முடியுமா? காமம் என்பதற்கு ஆன்மீக அர்த்தம் வேறு,

    எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை நான் இதை பதிக்கிறேன்,

    பக்தி, பாசம், காதல், அன்பு, மரியாதை, விசுவாசம் என்று அனைத்தும் ஒரே உணர்வின் வெளிப்பாடு. இடத்திற்கும், அது செலுத்தும், செலுத்தப் படும் நபருக்கும் உள்ள தொடர்பு.

    அன்பால் உந்தப்பட்டு அது மிகுதியாகி பாசமாக மலர்வது பல இடங்களில் நிகழும், அது நட்பு, சகோதரத்துவம், வம்சாவளி உறவுகள் என்று இருக்கலாம்.

    அன்பு கொண்டு பின்னர் நம்பிக்கைக்கு பாத்திரமாகி தன்னை ஒருவருக்கு உண்மையாக இருப்பது நட்பு, எஜமான, தொழிலாளர் தொடர்பாக இருக்கும்.அதாவது விசுவாசம். இது ஒரு சில நேரங்களில் நாம் நன்றிக் கடன் பெறும்போதும் நிகழும்.

    அன்பால் இணைந்து காதலால் பிணைந்து அதுவே பின்னர் பாசமாக மலர்வது கணவன் மனைவி உணர்வு, இங்கே அன்பே காதலாகவும் பாசமாகவும் உயர்வு பெறுகிறது, இந்த இடத்தில் மட்டுமே அன்பின் உச்சகட்ட பரிமாணமாக காமம் சொல்லப் படுகிறது, (இந்த காமம் வேறு, இது சரீர தொடர்பானது ) மேலும் இது அந்தரங்க விஷயமாக, இருவருக்கு மட்டுமே அதாவது தலைவனுக்கும் தலைவிக்கும் மட்டுமான உச்சகட்ட அன்பின் வெளிப்பாடாக அமைகிறது.

    அன்பு, மரியாதை, காதல், பாசம்,விசுவாசம் என்ற அனைத்தும் இதனுள் அடக்கம். அதாவது அன்பின் பூரண வெளிப்பாடு. அத்தகைய காமத்தை கடைச்சரக்கு ஆக்கியதன் விளைவே இன்று காமம் என்பது அறுவறுக்க வைக்கும் ஆபாசமாகிப் போனது.

    எப்படி ஒரு கணவனும் மனைவியும் ” ஒருவருக்கு ஒருவர்” அன்பின் உச்சமாக காமத்தில் தம்மை மறந்து திளைப்பார்களோ
    அவ்வாறே பக்தர்களும் அடியார்களும் இறைவனோடு இரண்டற கலக்கும் போதும் பேரின்பத்தை அடைகிறார்கள். (இந்த காமம் சூக்கும தொடர்பானது)

    பல அடியார்களே கூட தம்மை பெண்ணாகவும் இறைவனை ஆணாகவும் உருவகித்துக் கொண்டு பாடல்கள் சொல்லியதை நாம் கண்டுள்ளோமே? அப்படியானால் அதை ஹோமோ செக்சில் சேர்த்து விட முடியுமா? அப்படி தம்மை பாவனை செய்து கொள்வது பாவனா சொரூபம் என்று சொல்வார்கள்.

    அத்தகைய பாடல்களை ஆன்மிக தேடல்களில் மெய்கண்டார்களே
    உணர்வார்கள்.

    காமத்தை தூலத்தில் தேடுவது சிற்றின்பம், சூக்குமத்தில் தேடுவதே பேரின்பம்.

    இப்படி ஒரு சொல்லுக்கே பல விஷயங்கள் இருப்பதில் உண்மை காண்பதுவே பகுத்தறிவு என்பதையும் நான் இங்கே கூற விழைகிறேன்.

  69. வணக்கம்,

    ஆண்டாள், அடியார் பாடல்களில் பொதிந்து இருப்பது காமம் எனில் அது பெருமைக்கு உரியது, ஆனால் சர்ச்சைக்கு உரிய கலஹாசனின் பாடலில் இருப்பதை காமம் என சொல்லி காமத்தை கொச்சைப் படுத்தாதீர்கள். வேண்டுமானால் இப்படி சொல்லிக் கொள்வோமே?

    இறையடியார் பாடலில் இருப்பது காமம்,

    இன்றைய பாடல்களில் இருப்பது (வெறும்) பாலுணர்ச்சி!?

  70. புணர்ச்சி சிற்பங்கள் மதுரை, கீழ் வேலூர், ஸ்ரீரங்கம் உட்பட பல கோவில்களில் இருக்கின்றன. அந்த லிஸ்ட் வேடிக்கை பார்ப்பவர்கள் கைக்கு போகக்கூடாது என்று தான் லிஸ்ட் கொடுக்கவில்லை. ஹிந்து சமயத்திற்கு காமம் குறித்து சரியான புரிதல் என்றுமே உண்டு.

    நிற்க. இது போன்ற ஆட்கள் மீது வெறும் வழக்கு மட்டுமே தௌடுக்கப்பட்டுளது. கிரிமினல் பிர் பதிவு செய்ய முடியதா?

  71. சகோதரர் பாஸ்கர் அவர்களே,

    //காமம் என்பதற்கு ஆன்மீக அர்த்தம் வேறு,// இறைவன் பால் கொண்ட அன்பை (காதலாகி கசிந்துருகி ) காமமாக சொன்னால் அது வேறு விடயம். ஆனல் இங்கே காமம் என்றால், ஆண் பெண் உடல் உறவு என்கிற நோக்கிலே தான் விவாதம் நடை பெறுகிறது.

    என்னைப் பொறுத்தவரையில், காமாட்சி என்றால், காமத்தை ஆட்சி செய்பவர் , காமத்துக்கு தான் அடிமை ஆகாமல், காமத்தை தனக்கு அடிமை ஆக்கியவர், காமத்தை வென்றவர் என்று பொருள் செய்வேன்.

    சிவகாமி என்றால், சிவனைக் காமிப்பவள் என்றுதான் அர்த்தம். சீதை அம்மாவும், இராமரும் காதல் கொண்டவர்கள தான், இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஜானகியும் இராமரும் காதல் கொண்டவர்கள் என்று தெரிந்துதான் அனுமன் முதல் தியாகராசர் வரை அவரை பூசனை செய்கின்றனர்.

    இராமரின் சிறப்பு அவரின் விட்டுக் கொடுக்கும் தன்மை, மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் அனுபவிக்கும் தியாகம், எவ்வளவு கஷ்டம் வந்த போதிலும் தன்னுடைய கட்டுபாட்டை இழக்காத பொறுமை இதுதான்.

    இதிலே இராமரை விட இன்னும் ஒரு படி அதிகமானவர் சீதாம்மா. அதனாலேதான் சீதையின் கணவர் என்பதால் இராமருக்கு பெருமை – ஜகதானந்தகாரகா ஜெய ஜானகி பிராண நாதா – என்று தியாகராஜா சுவாமிகள் பாடியது என்னை விட உங்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும்.

    புலவர்கள், எழுத்தாளர்கள்… இவர்கள் இராமயணத்தை எடுத்தால், இராமரும், சீதையும் காதல் கொண்டது , அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினார் … இப்படியாக விஸ்தாரமாக விவரிப்பார்கள். இதில் தவறு இல்லை என்று ஆயிரம் முறை சொல்லுவேன். ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் இந்தியப் பண்பாடு. கருத்தொருமித்து கணவன் மனைவி இல்லற வாழக்கை வாழ்வதில் எந்த தவறும் இல்லை.

    ஆனால் ஆன்மீகம் என்பது அடுத்த படி. இராமதாசரோ, தியாகரசாரோ சீதா, இராமர் ஆகியோரின் கருணை,பொறுமை, நற்குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து புகழ்ந்து பாடி, கஷ்டங்கள் உள்ள உலக வாழ்க்கையில் இருந்து தம்மை மீட்குமாறு – சுலபமுகா கரை சேரனு, சூட்சுமுகளு தெளிய செயு- என்று பாடியதை காண்கிறோம்.

    இவர்கள் மட்டும் அல்ல, இந்தியாவில் இது வரை தோன்றிய அறிஞர்கள் யாராது காமத்தின் மூலம், (அதாவது ஆண் பெண் உடல் உறவின் மூலம்) ஆன்மீக முன்னேற்றம், விடுதலை அடைவது பற்றி சொல்லி இருக்கிறார்களா? இராம்கிரிஷ்ணரோ , மத்வரோ, இராமனுஜரோ, சங்கரரோ, குமாரில பட்டரோ, புத்தரோ, கிரிஷ்ணரோ,ஆர்த்ரேயரோ, … யாராவது சொல்லி இருக்கிறார்களா?

    குடும்ப வாழ்க்கையில் காமம் ஒரு அங்கம் தான். ஆனால் அதனால் முக்திக்கு மோட்சத்திற்கு விடுதலைக்கு இட்டு செல்ல முடியுமா என்பதை எண்ணிப் பாருங்கள்.

    நீங்கள் காமம் என்று சொல்லும் அர்த்தத்தில் இங்கே விவாதம் நடைபெறவில்லை. கஜூராஹோ சிற்பங்களை பார்க்கிறீர்கள்.

  72. இதை உலக நாயகன் படித்தால் , ”மொத்தத்திலே காமம் முக்கியம். அதுக்கு ஆன்மீகத்தோடு சம்பந்தம் இருக்கு. நீங்க காமம் மூலமா ஆன்மீகத்தை பாக்கிறீங்க, நான் ஆன்மீகம் மூலமா காமத்தை பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டால் என்ன செய்வார்கள? //

    ஸ்த்ரீ ஸ்வபாவான் மகாதேவி என்பது வேதவாக்கு. மனைவியைத் தாயாகப் பார்ப்பது தவறில்லை. உல்டாவாக்கிப் பார்ப்பது மாபாதகம். பெண்களைத் தாயாகப் பார்ப்பதற்கும் தாயைப் பெண்ணாகப் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் காமம் மூலம் ஆன்மீகத்தைப் பார்ப்பதற்கும் ஆன்மீகம் மூலம் காமத்தைப் பார்ப்பதற்கும் என்று நான் சொல்வேன்.//

    மனைவியைத் தவிர மற்ற எல்லா பெண்களையும் தாயாகப் பார்க்கும் மன நிலைக்கு ஒருவர் வந்து விட்டால், அவர் ஆன்மீகத்தில் முக்கிய கட்டத்துக்கு வந்து விட்டார் எனக் கருதலாம். அப்படிப்பட்டவர் காமத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்தவராகவே இருப்பார். அவருக்கு காமம் அடிமையாக இருக்கும். அவர் காமத்துக்கு அடிமை இல்லை. அவர் காமத்தை விலக்கி வேகமாக ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறுவார். இதே தமிழ் நாட்டில் முன்பு ஆசையை அடக்க முடியும் என்று கருத்து தெரிவித்து, அவ்வாறு வாழ்ந்து கட்டிய பல கிரஹஸ்தர், துறவிகளை நான் சிறுவனாக இருந்த போது சந்தித்தித்து இருக்கிறேன். இப்போது ஆசையை அடக்க முடியும் என்ற நமபிக்கையை இழந்த பலரை நாம் காண்கிறோம். சரியான் ஆன்மீகம் மக்களிடம் சேராததே இதற்க்கு காரணம். சரியான ஆன்மிகத்தை , பண்பாட்டை மக்களிடம் கொண்டு சொல்ல தமிழ் இந்து முயற்சி எடுக்க வேண்டும், அதை விடுத்து, வாலிப வயோதிக அன்பர்களே பாணியில் கட்டுரைகள் வருவது வேதனையே.

  73. உணவுக் கட்டுப்பாடு மனத்தைக் கட்டுப் படுத்த ஓரளவுக்கு உதவக் கூடியது.

    பாதாம், பிஸ்தா, முந்திரி போட்டு செய்யப்பட அல்வா போன்றவற்றை தொடர்ந்து உடகொண்டால், அதோடு பேரீச்சம் பழம் போனறவற்றையும் தொடர்ந்து உட்கொள்ளுவது , பிரம்மச்சரியம் காக்க விரும்புபவருக்கு கஷ்டத்தை உருவாக்கலாம். அதே நேரம் உணவுக் கட்டுப்பாடு மட்டும் போதும் என்று சொல்லவில்லை. சாத்வீகமான மனம் கட்டுப்பாட்டை தரும்.

    நம்முடைய வாழ்க்கை எந்த அளவுக்கு பரிதாபமானது, எந்த அளவுக்கு ரிஸ்க்கானது , நாம் எவ்வளவு அடிமையாக இருக்கிறோம், ஆபத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் அது வைராக்கியத்தை உருவாக்கும். சுவாமி விவேகானந்தர் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, தலையிலே எரி தணலை வைத்தால், ஒருவன் எவ்வளவு வேகமாக தலையை ஆட்டி அந்த தணலைக் கீழே தள்ளுவானோ அந்த அளவுக்கு வேகமாக ஒருவன் தன் ஆசைகளை உதறுவான் என்கிறான்.

    பட்டினத்தாரையே எடுத்துக் கொள்ளுங்கள். அக்கால பில்லியநேர், 600 கோடிப் பொன்னுக்கு சொந்தக்காரர், ஒரே நாளில் கட்டிய வேட்டியுடன் வெளியேறி விட்டார். இவை எல்லாம் கற்பனை இல்லை ஐயா. இது நடந்த நிகழ்வு. அவரும் இல்லறத்தின் இருந்து காம சுகம் கண்டவர் தான், அந்த நிலையிலே திடீரென அதை எல்லாம் நிறுத்திவிட்டு வைராக்கியம் பூண்டு விட்டார். . பின்னாளில் அவரின் பார்வை என்ன என்று பாருங்கள்:

    —–

    மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்;
    விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்,

    முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்
    உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும்
    வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால்
    துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும்

    தசையு மெலும்புந் தக்ககன் குறங்கை
    இசையுங் கதலித் தண்டென வியம்பும்
    நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத்
    துடிபிடி யென்று சொல்லித் துதித்தும்

    மலமும் சலமும் வழும்புந் திரையும்
    அலையும் வயிற்றை யாலிலை யென்றும்

    சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
    திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
    உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி
    நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
    முலையைப் பார்த்து முளரிமொட்டென்றும்
    குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்;

    வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
    பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
    வெப்பு மூத்தையு மேவிய வாயைத்
    துப்பு முருக்கின் தூய்மல ரென்றும்

    அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
    முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
    நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
    கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்

    நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
    ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25
    அங்கையைப் பார்த்துக் காந்தளென்றுரைத்தும்

    தண்ணீர் பீளை தவிரா தொழுகும்
    கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்

    உள்ளுங் குறும்பி யழுகுங் காதை
    வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்

    கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
    வெய்ய வதரும் பேனும் விளையத்
    தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
    சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்

    சொற்பல பேசித் துதித்து நீங்கள்
    நச்சிச் செல்லு நரக வாயில்

    தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும்
    காமப் பாழி, கருவிளை கழனி
    தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்
    எண்சாணுடம்பு மிழியும் பெருவழி,
    மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்,

    நச்சிக் காமுக நாய்தா னென்றும்
    இச்சித் திருக்கு மிடைகழி வாயில்;

    திங்கட் சடையோன் திருவரு ளில்லார்
    தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி
    புண்ணிது வென்று புடவையை மூடி
    உண்ணீர் பாயு மோசைச் செழும்புண்,

    மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி;
    நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி;
    தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
    செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
    பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி
    மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே
    சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில்

    இத்தை நீங்க ளினிதென வேண்டா
    பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி
    மெச்சிச் சிவபத வீடருள் பவனை
    முத்தி நாதனை மூவா முதல்வனை

    அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்
    கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை
    ஏக நாதனை, இணையடி யிறைஞ்சுமின்
    போக மாதரைப் போற்றுத லொழிந்தே!
    ——

    “அன்னமும் கறியும் அசைவிட்டிறக்கும் முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்”‘

    – கிரைண்டர் போல, மிக்சி போல சோற்றையும், கறியையும் அரைத்து உள்ளே தள்ளும் கூரிய பல்லை முத்து என்று வர்ணிக்கிறாங்க, பாரய்யா –
    என்று சாட்டையடி கொடுக்கிறார் பட்டினத்தார். கில்லாடிபா, இந்து மத ஆன்மீக வரலாற்றில், உலக ஆன்மீக வரலாற்றில் பட்டினத்தாருக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

    அதுக்குன்னு காமத்துல ரொம்ப இண்டரஸ்ட் காட்டரவங்களை இப்படியா விமரிக்கிறதுனு சில நண்பர்கள் சொல்லுறாங்க. (அதெல்லாம் பட்டினத்தார் சொன்னதுபா. என்னை ஒன்னும் திட்டாதீங்க.).

    உலக நாயகன் கூட பட்டினத்தார் இப்படி விமரிசிச்சதை படிச்சா என்னா தின்க் பண்ணுவாரோ தெரியாது.

    புலன் உணர்வு தூண்டி பிரச்சாரம் செய்யும் போது, அதுக்கு எதிரா பிரச்சாரம் செய்பவது தப்பா?

    உலக நாயகன் படம் பார்த்த ஒரு பேச்சிலர் காம உணர்வு தூண்டப் பட்டால் வடிகால் எங்கே தேடுவான்? ஆனால் பட்டினத்தார் பாடலைப் படித்தவனுக்கு பிரச்சினை இல்லை. அவன் தன்னை கண்டிரோல் செய்யும் படி மனசில புத்தி சொல்லுறாரு பட்டினத்தார். சரிதானே சகோதரர்களே!

  74. கமலஹாசன் என்ற நடிகர் தான் நினைத்த காரியத்தில் ஜெயித்து விட்டார்.
    நாம் பேசி கொண்டிருக்கிறோமே, அதை சொன்னேன்.
    சட்ட ரீதியாக இந்தபாடலை தடை செய்ய முடியாதா?
    இது ஒரு மிக மோசமான முன்னுதாரணமாக மாறி விடலாம். இது முடிவல்ல, ஆரம்பம் என்றாகி விடலாம்.
    இன்னும் எவ்வளவு புண் படுத்துவார்கள்.?
    எல்லாம் பொறுக்கும் வரை தான்.
    நாம் இப்போது என்ன செய்யலாம்?
    விஜய் டிவி மாலை அய்யப்ப பக்தர்களுக்கான நிகழ்ச்சியும் இரவு நீயா நானா என்ற இகழ்சசியுமாக பொய் கொண்டிருக்கிறது.
    சட்ட ரீதியாக இது வரை என்ன செய்ய ப்பட்டிருக்கிறது? யாராவது சொல்லுங்களேன்.
    வேதனையுடன்
    சரவணன்

  75. நண்பர்களுக்கு ,
    பின்னூட்டங்கள் மூலம் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி .
    திரு கந்தர்வன், திரு சாரங், மற்றும் திரு திருச்சிக்காரன் கருத்துக்களுடன் உடன் படுகிறேன்.
    காமம் தாண்டி தான் ஆன்மிக முன்னேற்றம்.
    ஆறு உட்பகைவர்களில் முதல் ஆள் இந்த காமம் தான். எதன் மேலும் வைக்கும் தனது என்ற அதீத ஆசை என்று கொள்ளலாம்.
    நடைமுறையில் காமம் என்பதில் ஆண் பெண் கவர்ச்சி என்ற அர்த்தம் பெரிதாக தெரிகிறது. ரொம்பவும் சக்தி வாய்ந்தது தான் காமம் -வெல்ல முடியாதது அல்ல. வென்றாக வேண்டும். நிச்சயம் முடியும் .

    சர்க்கரை வியாதிக்கு மருந்து, மட்டும் போதாது-உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் தேவை-அது போல் உணவு க்கட்டுபாடு மனக்கட்டுபாட்டுக்கு நிச்சயம் உதவும்.

    சரவணன்

  76. //பட்டினத்தாரையே எடுத்துக் கொள்ளுங்கள். அக்கால பில்லியநேர், 600 கோடிப் பொன்னுக்கு சொந்தக்காரர், ஒரே நாளில் கட்டிய வேட்டியுடன் வெளியேறி விட்டார். இவை எல்லாம் கற்பனை இல்லை ஐயா. இது நடந்த நிகழ்வு. அவரும் இல்லறத்தின் இருந்து காம சுகம் கண்டவர் தான், அந்த நிலையிலே திடீரென அதை எல்லாம் நிறுத்திவிட்டு வைராக்கியம் பூண்டு விட்டார்.//

    துறவு பூணுமுன் இல்லறத்திலிருந்த போது உணவில் மிகக் கட்டுப்பாட்டுடன் பட்டினத்தார் இருந்ததாக வரலாறு இல்லை. சட்டெனெ எல்லாம் உதறித் தள்ளிவிட்டார் என்றால் அந்த உதறல் உணவுக் கட்டுப்பாட்டினால் வந்ததா, மனம் விட்டு வெளியேறத் துணிந்ததில் வந்ததா? மனம் விட்டுப் போனபின் அவர் சொன்னது உபயோகமானது என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் சட்டென்று அவர் உதறியது உணவுக்கட்டுப்பாட்டால் இல்லை. மனம் விட்டுப் போனதனால் வந்தது அந்தத் துறவு.

    மீண்டும் சொல்கிறேன் திருச்சிகாரரே! தக்ஷிணாசாரக் கோணத்திலிருந்து வாமாசாரத்தைப் பார்ப்பது, Protestant கோணத்திலிருந்து பிற மதங்களைப் பார்த்து முகம் சுளிப்பதற்கு ஒப்பானது. நிற்க.

    கமலஹாசனை ஒதுக்குவது சாலச் சிறந்தது. நரகலைத் தின்பதும் நாகரிகமே என்று யாராவது காசு கொடுத்துப் பேசச் சொன்னால் பேசக் கூடிய ஆள் தான் கமலஹாசன். பலர் பாராட்ட வேண்டுமென அலையும் அந்தக் கூத்துக் கோமாளியை மதித்துப் பதில் சொல்வது காலவிரயம்.

  77. அருண் பிரபு அவர்களே,

    உடற் பயிற்சி செய்தால் சர்க்கரை நோய் பாதிப்பு குறையும் என்கிறார்கள். சர்க்கரை நோய் பாத்திப்பில் இருப்பவர்கள் எல்லோரும் உடற்பயிற்சி செய்கிறார்களா?

    உணவுக் கட்டுப்பாடு மனக் கட்டுப்பாடுக்கு ஓரளவு உதவி செய்யும் என்று சொல்கிறோம்.

    மனதிலே விடுதலை அடைய வேண்டும் என்கிற தீவிரமான உணர்ச்சி, இந்த உலகில் இருக்கும் எந்தப் பொருளும், உறவும் தனக்கு உதவிக்கு வராது என்பதை தீர்மானமாக உணர்ந்தவன், அவன் அது வரை எந்த உணவு உட்கொண்டாலும் அதனால் உண்டான பாதிப்புகளை மன வைராக்கியத்தால் நீக்கி ஆன்மீகத்தில் முன்னேறுகிறான்.

    உங்களை மீண்டும் மீண்டும் மறுக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. நான் இந்து மதத்தில் கரை கண்ட பண்டிதன் இல்லை.

    ஆனால் எனக்கு தெரிந்த வரையில் இந்து மதத்தில் காமத்தால் (ஆண் பெண் உறவால்) ஆன்மீக முன்னேற்றம் என்கிற கோட்பாடு கிடையாது.

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இந்து மதத்தை அணுகுகின்றனர். நான் பகவத் கீதை, உபநிடதங்கள், வாழ்க்கை பற்றிய என்னுடைய பகுத்தறிவு ஆராய்ச்சி, வாழ்க்கையில் நான் காண்பவை , சித்தர் பாடல்கள்….. ஆகியவற்றின் மூலம் இந்து மதத்தை அணுகுகிறேன். தமிழ் இந்து தளத்துக்கு வரும் வரை நான் வாமாச்சாரம் என்கிற சொல்லை கேட்டது கூட கிடையாது. என்னைப் பொறுத்தவரயில் இந்து மதத்தில் காம (ஆண் பெண் உறவின் மூலம்) ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு என்பதான கோட்பாடு இல்லவே இல்லை.

    நான் இந்து மதத்திற்கு ஒட்டு மொத்த அத்தாரிட்டி இல்லை. சுவாமி விவேகானந்தர், “நீங்கள் நினைப்பது போல இந்து மதக் கோவில்கள் விபச்சாரம் நடைபெறும் இடங்கள் இல்லை” என மேலை நாட்டில் விளக்க வேண்டிய அளவுக்கு இந்து மதத்தைப் பற்றிய தவறான புரிதல் பிறருக்கு இருந்திருக்கிறது. இந்து மதம் பரிசுத்தமானது.

    அதில் தெரிந்தோ தெரியாமலோ கலப்படம் நடை பெறுவதை எம்மால முடிந்த வரை ரெசிஸ்ட் செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்க்கிறது.

    மற்றபடி உங்கள் விருப்பம்.

  78. சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவின் ஒரு பகுதி:

    1897 , பிப்ரவரி 11 , விக்டோரியா ஹால், சென்னை.
    தலைப்பு: இந்திய ரிஷிகள்

    ——

    விலங்குகளிடம் கூட இரக்கம் காட்டம் வேண்டும் என்று உபதேசித்தும்,நல்லொழுக்கத்தை போதிக்கும் மகத்தான மதமாக இருந்தும், நிலையான ஆன்மா ஒன்று இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நுட்பமான ஆரய்ச்சிகள் செய்தும், புத்த மதம் சிதைந்து சின்ன பின்னமாகி விட்டது. அதனுடைய அழிவும் மிகக் கொடூரமாக உள்ளது.

    புத்த மதத்தின் எழுச்சியால் நேர்ந்த விபரீதங்களை விளக்குவதற்கு எனக்கு நேரமோ,விருப்பமோ இல்லை. மிகக் கொடூரமான சடங்குகளும் , எந்த மனிதனின் கைகளும் இதுவரை எழுதாத, எந்த மூளையும் இது வரை சிந்திக்காத மிகப் பயங்கரமான மிக ஆபாசமான நூலகளும், மதத்தின் பெயரால் இது வரை செய்யப் பட்ட சடங்க்குகளுள் சகிக்க முடியாத அளவுக்கு மோசமான சடங்குகளும் எல்லாம் வீழ்ச்சியுற்ற புத்த மதத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்டவைதான்.
    ………………

    ………………..

    தார்த்தர்களும், பலுசிஸ்தானியர்களும் மனித சமுதாயத்தின் மற்ற எல்லாக் காட்டுமிராண்டி இனங்களும் இந்தியாவிற்கு வந்து பவுத்தர்கள் ஆனார்கள். நம்மோடு கலந்தார்கள். அத்தோடு தங்கள் நாட்டுப் பழக்க வழக்கங்களையும் கொண்டு வந்து நமது தேசிய வாழ்வோடு கலந்தார்கள். விளைவு? நமது நாடு மிகப் பயங்கரமான, மிருகத்தனமான பழக்க வழக்கங்களால் நிறைந்தது. பவுத்தர்களிடம் இருந்து இந்த இளைங்கர் சங்கரர் பெற்ற பரம்பரைச் சொத்து இதுதான்.

    அவருடைய காலத்திலிருந்து இந்தியாவின் முழு வேலையும் புத்த மதம் ஏற்படுத்திய சீரழிவை வேதாந்தத்தின் மூலம் நீக்குவதாகவே இருக்கிறது.

    அந்த வேலை நடந்து கொண்டே இருக்கிறது. இன்னும் முடிவடையவில்லை.

    ——-

  79. அருண் பிரபு அவர்களே,

    என்னைப் பொறுத்த வரையில் உலக நாயகன் மட்டும் அல்ல, காம உணர்வை தூண்டும் வகயில், மக்களை புலன் இன்ப நுகர்ச்சியில் இழுத்து செல்லும் வகையில் செயல்படும் யாராக இருந்தாலும் சரி, நான் அவர்களை ஒன்றும் சொல்வது இல்லை.

    மாறாக சமூகத்தில் ஆன்மீகத்தை பரப்புவதே சரியான மருந்து என நான் கருதுகிறேன். என்னை எந்த ஒரு கெட் டுகெதர் நிகழ்ச்சிக்கு நண்பர்கள் அழைத்தாலும், அதில் குறைந்தது அரை மணி நேரமாவது மனக் குவிப்போ, கீர்த்தனைகள் பாடுவதோ இருக்குமாறு கேட்டுக் கொள்வேன். என்னுடைய நண்பர்களும் அதை வரவேற்கின்றனர். நான் அவர்களுடன் உரையாடும் போது உரையாடலின் டாபிக்கை தத்துவ சிந்தனைகளுக்கு, வாழ்க்கை ஆராய்ச்சி பற்றியதாக, ஆன்மீகத்தின் உதவி பற்றியதாக கொண்டு செல்கிறேன், இதில் தவறு இல்லை. நல்லதுதான். நாம் வேறு என்ன செய்ய முடியும்.

    டாஸ்மாக் கடை கூட திறந்து இருக்கிறது. பக்கத்திலே பால் வியாபாரம் செய்பவரும் செய்கிறார்.அவரவருக்கு தெரிந்ததை அவரவர் செய்கிறார்கள்.

  80. ராமாயணம் மகாபாரதத்தில் இல்லாத செக்ஸ்யா intha கமல் எழுதிட்டார் … வீனா ஏன் வம்பு.. ?

  81. ஸ்ரீ திருச்சிக்காரன், வணக்கம்.

    \\\\\\\\\\இதற்க்கு மேலும் என்ன தெளிவு படுத்த முடியும் என்று தெரியவில்லை. வூத வேண்டிய சங்கை வூதி விட்டோம். தேவைப் படும் போதெல்லாம் தொடர்ந்து வூதுவோம்.\\\\\\\\\\

    ஸ்ரீரங்கத்தின் அருகில் இருந்து நீங்கள் சங்கத்மானம் செய்வதால் அதில் ரங்கராஜாவின் பாஞ்சஜன்யத்தின் ப்ரபாவம் இருக்கத்தானே செய்யும். பகிர்வுகளில் தெளிவு. நன்று.

    காமம் பற்றிய பகிர்வுகளில் ஓரிரண்டு விஷயங்கள் விடுபட்டன. இங்கே பூர்த்தி செய்ய விழைகிறேன்.

    காமம் என்பதே ஒரு பாபச் செயல் (concept of first sin) என்ற ஆபிரஹாமிய கோட்பாட்டுக்கு மாறாக ப்ரஜனனத்திற்கு அவசியமான நேரான காமம் எது என்பதை அழகாக வகுத்து நேர்மையான கட்டுக்கோப்பான சமூஹத்திற்கு வழி செய்கிறது ஹிந்து சமயம். அதே சமயம் இது போன்ற புலன் இச்சைகளில் இருந்து மீண்டாலே ஆன்மீக முன்னேற்றம் என்பதை நண்பர்களின் கருத்து பகிர்வுகள் தெளிவாக பதிவு செய்துள்ளன.

    மத்ய (மது), மாம்ஸ (மாமிசம்) மத்ஸ்ய (மீன்) முத்ரா (விவித ந்யாஸங்களடங்கிய) மைதுன (ஸ்த்ரீ புருஷ ஸம்போஹம்) பஞ்ச மகர யுக்த வாமாசாரம் பாப பூர்வகம் என்று சான்றோர்களால் மற்றும் ஸ்ரீவித்யா உபாசகர்களால் தக்ஷிண பாரதத்தில் நிராகரிக்கப்பட்ட மார்க்கம். கடலங்குடி நடேச சாஸ்த்ரிகளின் சௌந்தர்யலஹரி உரையில் இது சம்பந்தமாக மேற்கொண்டு வாசிக்கலாம்.

    பொருந்தாக்காமம் பற்றி. கூத்தாடி போன்ற ப்ரக்ருதிகள் உடலில் முறுக்கம் இருக்கும் வரை இதுவும் பேசுவார்கள் இன்னமும் பேசுவார்கள். காம கழிவு பற்றி பேசும் ப்ரக்ருதிகளுக்கு நாளை கப வாத பித்தங்கள் imbalance ஆகி எதெது எப்பெப்படி ஒழுகும் யார் யார் என்னென்ன பேசுவார் என்று வள்ளல் அருணகிரி என்ன சொல்கிறார் பாருங்கள்.

    பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
    பீளைசாறிடா ஈளை மேலிடா
    வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
    வாடியூனெலாம் நாடி பேதமாய் மனையவள் மனம்வேறாய்
    மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
    மாதர் சீயெனா வாலர் சீயெனா
    கனவு தனி லிரதமொடு குதிரை வர நெடிய சுடு
    காடு வாவெனா வீடுபோவெனா
    வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
    வாயு மேலிடா ஆவிபோகுனாள் மனிதர்கள் பலபேச

    வயதாகி கப வாத பித்தங்கள் பிறழ நோய்கள் ஒன்றொன்றாய் சரீரத்தில் குடியேற சதை வற்றி புண்கள் மிக கண்களில் பீளை சேர வழ வழவென கோழை ஒழுக இருக்கும் நிலையில் மனையாளும் கூட ஏதாகுமோ என கலக்கமுற அருகில் போ என்று சொன்னாலும் பெண்களும் குழந்தைகளும் சீ சீ என அருவருப்பார்கள். இந்த துர்கதியில் க்ருஹவாசிகள் போ போ என ஸ்மசானம் வா வா என இருக்கையில் கனவில் குதிரை வருமாம் ரதம் வருமாம்.

    யாருக்கு? வாழ்க்கையில் இறவனைத்துதியாது இறைவனடியார்க்கு சேவை செயாது காமக் கிழத்திகளுடன் கூத்தாடுபவர்களுக்கு.

    அது சரி. பொதுவாக காமம் என்பது ப்ரதானமாக புணர்ச்சியை குறிக்கும் சொல்லாக ப்ரயோகிக்கப்பட்டாலும் Still on a broader platform, சமய உரையாடல்களில் காமம் என்பது வெறும் புணர்ச்சியை மட்டும் குறிக்காது ஒரு விஷயத்தை அடைய வேண்டும் என்ற ஆழ்ந்த ஆசைகளை குறிக்கும் சொல்லாகவும் ப்ரயோகிக்கப்பட்டுள்ளது.

    புத்ரனை அடைய வேண்டி தசரதன் புத்ரகாமனாய் புத்ரகாமேஷ்டி (புத்ர காம இஷ்டி – வேள்வி) செய்தான். ஆதிபத்ய காமனாய் மஹாபலி சக்ரவர்த்தி போன்றோர் அஸ்வமேதாதி யாகங்கள் செய்தனர்.பக்தி பரிபாஷையில் வைகுண்டம் ஏக வேண்டும் கைலாசம் ஏக வேண்டும் என்று பிடிப்புடன் செய்யப்படும் பக்தி பிறவி தளை அறுபட மோக்ஷகாமனாக செய்யப்படும் பக்தி என்ற்றியப்படுகிறது.

    இதில் ஆதிபத்ய காமம் அதி பயங்கரமான விஷயம். ஆதிபத்யத்திற்காக அன்று முதல் இன்று வரை மனிதர்கள் ஒருவரை ஒருவர் எந்த அளவு க்ரூரமாக ஹிமஸித்திருக்கிறார்கள் என்பது சரித்ரம். புராண கால தேவ தைத்ய யுத்தங்கள் அதி உக்ரமாய் நடந்துள்ளன. பிற்காலத்தில் Christian Inquisition, Islamic Jihaad பொன்ற மதாதிபத்ய க்ரூர ஹிம்சைகள், Jewish Holocost மற்றும் crusade by Stalin against Kulaks, Cultural Revolution of China போன்ற மனித குலத்திற்கே அவஹேளனமான ஹிம்ஸைகள் நடந்துள்ளன என்பது பெரிதல்ல. அவை ஒரு சாராரால் ஞாயப்படுத்தப்பட்டுளன என்பது பெரிது. இதில் ஸ்த்ரீ புருஷ பேதம் ஏதுமில்லை என்பது தற்போதைய சரித்ரம். ஸமீபத்தில் குமாரி ஜெயலலிதா இதே ஆதிபத்ய காமத்திற்காக செய்த அனர்த்தங்கள் சொல்லுக்கடங்காதவை. பதத்யாக பட்டம் சுமக்கும் இத்தாலிய அம்மணி, ஸ்ரீமதி கனிமொழி, நீரா ராடியா என்று லிஸ்ட் நீள்கிறது.

    பிறவி தளை அறுபட மோக்ஷகாமனாக செய்யப்படும் பக்தி என்ற விஷயத்தில் பக்தி செய்த சான்றோர்களில் வித்யாசங்கள். ஒசர்த்தி தாழ்த்தி என்று இல்லாது வித்யாசம் என்ன என்று மட்டும் பார்ப்போம்.

    ஆஜன்மம் துருதுருவென ஒயாது ஒழியாது இயங்கி உழைத்து ஆண்டு அனுபவித்து கடைசியில் சரீரம் அல்லலுற தவித்து உயிர் பிரிந்து திரும்ப பிறந்திறந்து இந்த மீளாச்சங்கிலியை பிளக்க பாடல் பாடலாக வள்ளல் அருணகிரி பிறவியை ரோகம் என்னுகிறார். ஆதலால் இந்த பவ ரோகத்திலிருந்து எங்களை மீட்பாய் என்று பன்னிருதோளனை இறைஞ்சுகிறார்.

    இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
    ஏக போகமாய் நீயு நானுமாய்
    இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
    ஏக நாயகா லோக நாயகா …… இமையவர் பெருமாளே.

    நல்வினை தீவினை மும்மலங்கள் ஜனன மரணம் இவையனைத்தும் அறுபட நீயும் நானும் ஒன்றாய் கலக்கும் சுகமதனை அருள்வாய் தேவர்களுக்கு நாயகனாகிய திருவிடை மருதூரில் உறையும் பெருமாளே என இறைஞ்சுகிறார்.

    இதே வ்ருத்ராஸுரன், காளியபத்னிகள் போன்றோர் ப்ரபோ உமது இணையடியே மேலானது. ஸத்யலோகம் பர்யந்தம் மேல்லோகங்களின் ஆளுமை கிடைத்தாலென்ன அதல விதல ரஸாதல பாதாலாதி லோகங்களீன் ஆளுமை கிடைத்தாலென்ன யோகஸித்திகள் கிடைத்தாலென்ன அபுனர்பவம் என்னும் பிறவித்தளைய்லிருந்து விடுதலையே கூட கிடைத்தாலென்ன உமது பாத தூளியே மேலானது என்னுகின்றனர்.

    na naka prustham na ca paramesthyam
    na sarva bhaumam na rasādhipatyam
    na yoga siddhīr apunarbhavam va

    samañjasa tva virahayya kankse (ஸ்ரீமத் பாகவதம் – 6-11-25) – வ்ருத்ராஸுரன்

    vañchanti yat pada rajah prapannah (ஸ்ரீமத் பாகவதம் – 10-16-37) – காளியபத்னிகள்

    இதே போல் இவர்களின் பின்னாளில் வந்த கோதையும் சொல்கிறாள். ஆனால் ஏன் இப்படி என்று காரணம் புரிகிறது.

    இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
    உந்தன்னோடே உற்றோமேயாவோம்
    உமக்கே நாம் ஆட்செய்வோம்
    மற்றை நம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்

    என்னுகிறாள்.

    அனேக ஜன்மம் எடுத்தாலும் ப்ரபோ நாங்கள் உமக்கே ஆட்செய்வோம். நீ எங்களை இது செய் அது செய் என்று குற்றேவல் செய்வாய். எங்களுடைய மற்றைய காமங்கள் எல்லாம் போக்குவாய் என்று இறஞ்சுகிறாள்.

    ஆக கண்ணனின் இணையடி தாமரையை பற்றியவரின் த்ருட விஸ்வாசத்தை பறை பெற்ற கோதை பறை சாற்றுகிறாள். எங்களுக்கு பிறவி கொடுப்பது இத்யாதியெல்லாம் உன்னிஷ்டம். எப்போது எங்களின் மற்ற காமங்களைப் போக்கி உனக்கு உற்றவர்களாக்கினாயோ பிறவி கொடுத்தால் உமக்கு குற்றேவல் செய்து உமக்கே ஆட்செய்வோம் என்ற நிலையிருந்தால் பிறவி கூட சுகமே அல்லவா?

    பெருத்த பாருளீர் வாருமே நீங்கள் வாருமே
    பன்னிருகரத்தனைப் பணிவோமே

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
    மற்றை நம் காமங்கள் போக்க
    மாலவனை பணிந்துய்வோம்

  82. //ராமாயணம் மகாபாரதத்தில் இல்லாத செக்ஸ்யா intha கமல் எழுதிட்டார் … வீனா ஏன் வம்பு.. //

    இதோ பாருடா வக்காலத்து! ஏன் சார், யார் வீண் வம்பு செய்கிறார்கள் என்று சற்று அலசிப்பார்த்தால் உங்கள் கேள்விக்கு உங்களுக்கே விடை கிடைக்கும். இராமாயணத்திலோ மகாபாரதத்திலோ காமம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஏனெனில், அவை தெய்வீக நூல்களாக இருந்தாலும் மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டவைதான். ஆனால், அதில் உண்டு என்பதற்காக இவர் திரைப்படத்தில் காட்டவேண்டும் என்றில்லை. சரி ஒரு கேள்வி, முன்னேற்றத்திற்கு மட்டும் அறிவியலைப் பார், விஞ்ஞானத்தை கவனி, இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் ‘நம்பக்கூடியவயாக’ எதுவும் இல்லை என்கிறீர்கள். ஆனால், காமத்திற்கு மட்டும், அறிவியலை விட்டுவிட்டு ‘நம்பமுடியாத’ இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பிடித்துத் தொங்குகிரீர்களே, ஏன் இந்த முரண்பாடு? என்னிடம் முக்கியமான பகுதி இருக்கிறது என்பதற்காக அம்மணமாகத் திரியவேண்டும் என்றில்லை! முதலில் அதைப் புரிந்துகொள்ளுங்கள்…

  83. Friends, the producer of the movie Udhayanidhi Stalin has decided to remove the song from the movie. Good Job, Hindu Makkal Katchi !!!!

    From Sify.com,
    //
    Producer Udhayanidhi Stalin has decided to delete the controversial song written and sung by Kamal Haasan from Manmadhan Ambu.
    The film is facing the wrath of the Hindu Makkal Katchi (HMK) for the song “Kannodu Kannai Kalandhal” which speaks much about woman’s desire and has also references to Hindu deities like Aranganathar and Sri Varalakshmi.On Sunday, Kamal had clarified at the promotional launch of the film in Kerala that “I do not think that the song offends Hindu sentiments. The Censor Board has passed the film with a ‘U’ certificate. The song will not be deleted”.
    Today after their was demonstrations outside Kamal Haasan’s office in Alwarpet by Hindu organizations, the producers agreed to remove the song.
    Udhayanidhi does not want any controversies at this stage to hamper the release of the film.
    Later Kamal Haasan in a press statement said that he would have retained the song on his own. But since he did not want in any way for the business of the film to be affected, he has agreed for the deletion of the song.
    \\

  84. திரு கிருஷ்ணா
    இந்த தகவல் நிம்மதி அளிக்கும் ஒன்று.அந்த பாடல் வெளியிட்ட நிகழ்ச்சியை சிரமப்பட்டு பொறுமையுடன் சில தினங்களுக்கு முன் விஜய் டீவீயில் பார்த்தேன். கமலஹாசன் அந்த சகிக்க முடியாத கடைசி வரிகளை பேசுகையில் அவர் முக பாவம் மற்றும் குரல் பாவம் -நக்கல் நிரம்பியதாக இருந்தது.
    மறுபடி இந்த பாடலை எந்த நிர்பந்தம் கருதியும் சேர்க்காமல் , இதை நீக்குவது என்ற நல்ல முடிவுக்கு தயாரிப்பாளர்கள் வந்தால் சந்தோஷமே. இது போல் மறுபடி நடக்காமல் இருக்க உதவும் .
    சரவணன்

  85. I think credit should also go to this website for bringing this to the notice of the public.

    It is time that these so called “rationalists” realise that hindus cannot be taken for granted.

    This is just the beginning, kamal.

    More is in store. Beware.

  86. Dear Mr. Aravindan Neela Kandan,

    Great, without mentioning the actor you have written this article, really you are great.

    It is right not to bother him, at the same time we should know wat is going around us.

    This actor always dig on HINDUIZM, it is right to get CDs and make people to view this via CDs instead of going to Theatre and make him income.

    It is necessary to give him blow financially.

    let us do it

  87. The good news is that the film has flopped miserably at the box office both in Tamilnadu & abroad.

  88. கஜுராஹோ : இந்த கோவிலை சுற்றி காம சிலைகள் உருவாக்கப்பட்டது உண்மை….ஆனால் இந்த ஏற்பாட்டின் பின் பெரிய தத்துவமே  அடங்கியிருக்கிறது,அதாவது கருவறைதான் மனம் ,மனதில் உள்ள இறைவனை நீ காண வேண்டும் என்றால், காமத்தை வெளியே விட்டு ஒதுங்கிவிடு ….. காமச் கிலைகள் வெளியே மட்டும் தான் அமைக்கப்பட்டன, கோவிலின் உள் பிரகாரத்தில் இல்லை …….

  89. கமல் போன்ற வீணாக போனவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி வேண்டுமானால் செலுத்தலாம்.

  90. கோவில் சுவற்றில் காமம், கோவில் உள்ளே இறை வணக்கமா???????????

  91. //….கோவில் சுவற்றில் காமம், கோவில் உள்ளே இறை வணக்கமா???????????…//

    ஆமாம் Rifa. கோவிலுக்கு வெளியே காமம். உள்ளே இறை. இப்படித்தான் இந்து மதம் இருக்கிறது.

    ஆபிரகாமிய மதங்களைப் போல வெளியே இறையை வைத்து உள்ளே காமத்தைத் தொழுவது இல்லை.

    அதனால்தான், கற்பனை சுவனத்துக் கன்னிப் பெண்களோடு காமவெறி தீர்த்துக் கொள்ள நடுத்தெருவில் குண்டு வைத்து, இந்துக்கள் மற்றவர்களைக் கொலை செய்வதில்லை.

    .

  92. வசதியாக எல்லோரும் ஒன்றை வசதியாக மறந்து விட்டோம். வாழ்க்கைக்கு அடிப்படை பிரம்மச்சாியம் என்கிறது இநது பண்பாடு. பிரம்மச்சாியம் பிதிபன்னம் வீாிய லாப என்கிறது யோக நூல். பிரம்மச்சாிய ஆஸ்ரமம் அழிந்துபோனதுதான் காரணம் – இந்தியா வீழ்ந்ததற்கு என்கிறாா் ஸ்ரீமத்சுவாமி விவேகாநந்தா். புலவா் கள் மிதமிஞ்சிய கற்பனைகளால் -தங்களது வயிற்றுப்பிழைப்புக்காக பல நூல்களை கண்ணன் மேல் எழுதி அந்த அன்புள்ளத்தின் வரலாற்றைப் பாழ்படுத்தி விட்டாா்கள்.எனவேதான் விவேகானந்தரும் நமக்கு தேவை கோகுல கண்ணன் அல்ல. கீதாச்சாா்யன் தான் என்று கூறியிருப்பது நினைவில் கொள்ளத்தக்கது. யுத்தக்களத்தில் வீழ்ந்து கிடக்கும் இராவணணைக்காண அழுது புரண்டு ஓடிவரும் மண்டோதாியை வா்னணைசெய்யும் கம்பன் ஒரு வம்பன். மண்டோதாியின் ”அலகுல்” சிறுத்து இருந்தது என்று கூறுகின்றாா். எனனே கொடுமை. பிறன் மனை நோக்கா பேராண்மை கொண்டவன் புகழ்பாடும் இராமாயாணத்தை தமிழில் பாடிய கம்பன் பிறன் மனைவியின் சேலைக்குள் தன் சிந்தையைச் செலுத்துகிறான்.வா்ணனை செய்கிறான். இது ஆபாசமே. காட்டுமிராண்டித்னமே. ஆபாசம் என்பதில் பழைய மரபு வழிச்சிந்தனையை உதவிவிட்டு புதிய சிந்தனை யை உடபடுத்த வேண்டும். ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திாிகையில் கோயில்களில் ஆபாச சிலைகள் இருப்பது தவறு.நீக்கப்பட வேண்டும் என்று கேள்வி பதிலில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. பிரம்மச்சாிய ஆஸ்ரமத்தை புதுப்பிக்கும் வகையில் கலைகளின் ஓட்டம் இருக்க வேண்டும்.

  93. தாந்திரீகத்தின் (ஆண் பெண் உறவின் ) மூலம் ஆன்மீக விடுதலை பெற்றவர்கள் இருந்தால் சொல்லுங்களேன். காமத்தில் ஈடுபடுவதன் மூலமே காமத்தை வென்றவர்களாக இந்தியாவில், இந்து மதத்தில் யாரையாவது காட்டுங்களேன். ஸ்ரீராமகிருஷ்ண மடம் தன்னை நிறுவி விவேகானந்தா் உரையாற்றும் போது ” தாந்திரப்பயிற்சிகள் இஙகே முற்றிலும் தடை செய்யப்படுகிறது”என்றாா். நினைவில் கொள்ள வேண்டும். பழைய நம்பிக்கைகளை நியாயப்படு்த்த வேண்டும் என்ற ஆா்வத்தில் மட்டும் கதை பேசக்கூடாது. பாரதீய வித்யா பவன் வெளியிட்ட sane sex order – என்ற புத்தகம் உள்ளது. இதை எழுதியவர் ஒரு ரஷ்யமானுடவியல் ஆய்வாளா் Pitrim A.Sorokin. ஆபாசம் என்ன என்பதை அறிய முயலுமுன் இதை அனைவரும் தவறாது படிக்க வேண்டும். மகாத்மா காந்தியின் Self -control or Self-indulgence என்ற புத்தகததில் உள்ள 0 Moral Bankrupcy எனற அத்தியாயமு்ம் அவசியம் அனைவரும் படிக்க வேண்டும்.

  94. நாம் ஏற்றுக் கொண்ட பண்பாடு கருத்துக்களுக்கு முரணாக அமைவதெல்லாம் ஆபாசமே.அசி்ங்கமே.சமூக விரோதமே. கோயில்களில் உடல்உறவுகாட்சிகள் நிா்வாணக் கோலங்கள் கூடாது.தக்க முறையில் மாற்ற வேண்டும். பிரம்மச்சரியம் என்ற ஒழுங்கு அழிந்து போனதால்தான் இந்தியா வீழ்ச்சியுற்றது என்ற சுவாமி விவேகானந்தரது கூற்று ஆழ்ந்து பாிசீலிக்கத்தக்கது.சதா காமத்தை -பெண்ணின் உடலை பிரதானப்படுத்தி -நினைவு படுத்தும் எந்த ஒரு பழக்கமும் மனித வளத்தை கெடுத்துவிடும். பழமையின் சிறப்புகள் நிா்வாக கோலத்தில் இல்லை.ஏன் மடங்களில் தபோவனங்களில் நிா்வாணச்சிலைகள் இல்லை ?

  95. ஆச்சாியம்.9.10.2014 க்கு பிறகு எந்த விமா்சகரும் தனது கருத்துக்களைப் பதியவில்லை.ஏன்? மபோசிவஞானம் என்ற தமிழ் அறிஞா் எழுதிய திருக்குறளில் கலையைப் பற்றிக் கூறாதது ஏன் ? என்ற புத்தகம் சிறு வயதில் அரசு நூலகத்தில் படித்தேன். வீரம் மற்றும் கொடை போன்ற பண்புகளை பற்றி எழுதிய புலவா்களுக்கு வருவாய் போதவில்லை.எனவே காமரசம் சொட்டும் கவிதைகளை எழுதி காசாக்க முயன்றனா்.பொது மக்கள் எதிாப்பு காட்டினாா்கள். எனவே அனைவரும் கூட்டாக சதி செய்து குறிஞ்சிக் கிழவன் முருகன் காதல் செய்தாா் என்று பாடல் -வள்ளி- முருகன் திருமணம் என்று கவிதையில் எழுதி மக்களின் உணா்ச்சியை மறக்கடித்தனா். இலக்கியத்தில் காமசுவை பெருகியது என்று கருத்து தொிவித்துள்ளாா். இதுதான் உண்மை.

    அா்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன் பிரம்மச்சாியம் பற்றி எழுதவில்லையே ஏன் ?? திரைப்படங்களில் பிரபல்யத்தை பாா்தது மலைக்கும் போது அதில் வரும் காமச்சுவை வருங்கால சந்ததியினரை ….. எனது மனம் நடுங்குகின்றது. 120 கோ டி மக்கள் வாழும் இந்தியாவில் குடும்பம் என்ற கூடு கலைந்துபோனால் மிகக் கடுமையான சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும். அதற்கான அறிகுறி ஏற்கனவே காணத்துவங்கி விட்டது.சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை ..அடிக்கடி செய்திகள் காணப்படுவதுதான் அது. ஈரான் ரஷ்யா போன்ற நாடுகளில் திரைப்படங்கள் பெண்களின் சதைப்பாிமாணங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. தமிழ்சினிமாவில் கதாநாயகன் முழுகால்சட்டை முழுகைவைத்து சட்டை ஷீ டை என தனது உடலை கழுத்து முதல் கணுக்கால் வரை மூடி காதல் விளையாட்டு விளையாடுவாா்.ஆனால் கதாயாயகிக்கும் அவள் பின் ஆடும் துணை நடிகைக்கும் தம்மாதுண்டு உடைகள்.சதையின்பாிணாமங்களைக் காட்டும் உடைகள் ஏன் ? ஆண்களுக்கும் விதவிதமாக அதுபோல் உடை உடுத்தலாமே ? ஏன் தயாாிப்பாளா்கள் செய்யவில்லை. காமஉணா்வைத்தூண வசுலை பெருக்குவதுதான் நயவஞசக திட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *