லாவண்யா மரணமும் “நடுநிலை” பாசாங்குகளும்

கிறிஸ்தவ மதமாற்ற அழுத்தத்தால் தனது உயிரையே மாய்த்துக்கொண்ட மாணவி லாவண்யாவின் மரணம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகையில், தமிழ்நாட்டின் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் “நடுநிலை” என்ற பெயரில் இந்தப் பிரசினையை முன்வைத்து கூறப்படும் கருத்துக்களின் வக்கிரமும் போலித்தனமும் குமட்டலை ஏற்படுத்துகிறது.

அரட்டை என்ற சொல்லையே தனது சுய அறிமுகமாகக் கொண்டுள்ள Sowmya Ragavan என்ற இந்த ஃபேஸ்புக்கருக்கு, ஒரு இந்து மாணவியின் உயிரோ, அந்தக் குடும்பத்தின் பெருந்துயரமோ, அந்த மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டிய கிறிஸ்தவ மதமாற்ற வெறியின் கொடுங்கரங்களோ எதுவுமே ஒரு பொருட்டாக இல்லாதிருக்கலாம்… லாம். ஆனால், இப்படிப் பட்ட ஒரு “ஜோக்”கை உருவாக்கி ஏளனம் செய்து மகிழும் மனநிலை எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்ள முயல்கிறேன்.

இதற்குப் பின்னால் எத்தனை அடுக்குகள் பொய்மையும், Dumbo தன்மையும், கடும் இந்துமத வெறுப்பும், அதை உருவாக்கிய மூளைச்சலவையும் இருந்திருக்கிறது என்று யோசித்தால் மூச்சடைக்கிறது.

அதாவது, “எங்கள படிக்க வேண்டாம்” என்பதற்காகத் தான், நாகர்கோவிலிலும், திருநெல்வேலியிலும், சென்னை பட்டாபிராமிலும் திருவல்லிக்கேணியிலும் இன்னும் பற்பல ஊர்களிலும் இந்து காலேஜ், இந்து ஹை ஸ்கூல், நேஷனல் காலேஜ் மேலும் பற்பல பெயர்களில் இந்த மண்ணின் குப்பனும், சுப்பனும் கருப்பாயியும் மீனாட்சியும் கல்வி கற்பதற்காக உயிரையும் உழைப்பையும் நிதியையும் கொடுத்து ஏகப்பட்ட கல்வி நிலையங்களை உருவாக்கினார்கள். அவர்கள் எல்லாம் “சங்கிகள்”.

பிரிட்டிஷ் காலனியம் வருவதற்கு முன்பே இங்கிருந்த சுதேசிக்கல்வி குறித்து, காந்தியர் (“சங்கி” அல்ல) தரம்பால் எழுதிய “அழகிய மரம்” முதலான புத்தகங்களை மாங்கு மாங்கென்று B. R.மகாதேவன் உயிரைக் கொடுத்து மொழிபெயர்த்து, அவை கிழக்கு பதிப்பகம் போன்ற பிரபல பதிப்பகம் மூலமே வெளிவந்துள்ளன. இதெல்லாம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு சிறுபரப்பில் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை என்று தோன்றுகிறது. காந்தியரான ராஜாஜி (“சங்கி” அல்ல) கொண்டுவந்த “குலக்கல்வி” திட்டம் என்பதும் உண்மையில் எளிய மக்களை நசுக்குவதற்காக அல்ல, மாறாக அவர்களது பள்ளிக்கல்வியை நீடித்ததாக, துரிதமாக்குவதற்காக உருவாக்கப்பட்டது என்று பல ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

இந்த வரலாற்று பிரக்ஞை எல்லாம் அந்தக் குருவி மண்டைக்கு ரொம்பப் பெரிதாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்தவ பள்ளிகளில் நடக்கும் மதமாற்ற “டார்ச்சர்” என்பது தமிழ்நாட்டின் சமூக யதார்த்தம், சாதாரண அரட்டையர்களுக்குக் கூட புலப்படும் அந்த விஷயத்தைக் கூட இருட்டடிப்பதன், மூடி மறைப்பதன் உள்நோக்கம் என்ன?

ஒரு பாவமும் அறியாத #லாவண்யா மரணத்திற்கு நீதிகேட்டு இன்று தேசம் முழுவதும் குரல்கள் வலுத்து வருகையில், தமிழ் ஊடகங்கள் இதைப்பேச மறுத்து கள்ள மௌனத்தில் ஆழ்ந்துள்ளன என்பதை எப்படி எடுத்துக்கொள்வது? இந்த “ஜோக்கை” எழுதியவர் ஒரு திமுக கொத்தடிமையாக, இந்து முகமூடியில் உலவும் ஒரு கிறிஸ்தவ வெறியராக, எப்படியும் இருக்கக் கூடும். ஆனால் இந்த பிரசினையில் ஒரு கணிசமான தரப்பின் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்றால், தமிழ்நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகிறது.

பி.கு: லாவண்யாவின் தந்தை ஒரு திமுக கட்சி அபிமானியாக இருந்தவர், “சங்கி” அல்ல.


“மதம் மாறாமல் இருக்கும் லட்சக்கணக்கான கான்வெண்ட் மாணவிகளில் ஒருத்தி” – Kirthika Tharan என்பவர் எழுதிய பதிவின் கடைசிவரி. இதே போன்று “இன்னும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கும் இரவு நேரத்தில் பேருந்தில் பயணிக்கும் லட்சக்கணக்கான பெண்களில் ஒருத்தி” என்ற வாசகத்தை நிர்ப்பயா வன்புணர்வு என்னும் குரூர சம்பவத்திற்குப் பின்பு ஒரு பெண் எழுதினால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதற்குச் சற்றும் குறையாத உணர்வின்மை இந்த வரிகளில் உள்ளது என்பதையாவது இப்பதிவர் உணர்கிறாரா?

லாவண்யா என்ற இந்து மாணவியிடம் இருந்தது ஒரு vulnerability. அதைக் குறிவைத்துத் தான் அவர்மீதான உளவியல் சித்ரவதைகள், மதமாற்ற அழுத்தங்கள் சம்பந்தப்பட்ட கிறிஸ்தப் பள்ளியால் தரப்பட்டன. இந்த அடிப்படை புரிதல் கூட ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள இந்தப் பதிவருக்கு இல்லையா அல்லது வேண்டுமென்றே விஷயத்தின் தீவிரத்தை trivialize செய்கிறாரா?

லாவண்யாவின் மரணத்தை முன்வைத்து ஒரு உண்மையான சீரியசான மக்கள் பிரசினையைப் பேசிக்கொண்டிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் கசப்புகளை “மத அரசியலை” கொண்டுவருகிறதாம். எப்படியெல்லாம் சீன் போடுகிறார்கள் பாருங்கள். உண்மை என்னவென்றால், இவ்வளவு நாள் இங்கு நடந்துவரும் மத அரசியலில் இந்துவெறுப்பு, இந்து எதிர்ப்பு கொடிகட்டிப்பறந்து கொண்டிருக்கிறது. அது தரும் தெனாவட்டில் தான் கிறிஸ்தவ மதமாற்ற வல்லூறுகள் இங்கு திரிந்துகொண்டிருக்கின்றன. ஒரு மாற்றமாக, இந்து வாழ்வுரிமைப் பிரசினையை ஒரு கட்சி அழுத்தமாக பேச ஆரம்பித்த உடனேயே திமுக என்ற கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் ஏற்படும் பதற்றத்தையே இது காட்டுகிறது.

கட்சியும் அரசியலும் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு பெண்ணாக, ஒரு மனிதராக, தற்கொலை செய்துகொண்ட மாணவி மீது ஒரு குறைந்தபட்ச பரிவு காட்டும் மனசாட்சி கூடவா மரத்துப் போய்விட்டது? 🙁


அரியலூர் மாணவி விவகாரம்: `பாஜக-வினர் கிராமத்துக்குள் வரக் கூடாது!’ – மைக்கேல்பட்டி மக்கள் மனு என்கிறது விகடன் செய்தி.

திமுக அரசு இந்த விவகாரத்தில் தனது வழக்கமான குயுக்திகள் எல்லாவற்றையும் ஏற்கனவே பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த அரசில் அதீத செல்வாக்கு செலுத்தும் கிறிஸ்தவ மிஷநரி மாஃபியாவும் இதில் முழுமூச்சாக இறங்கியுள்ளது. அதில் முக்கியமான புள்ளி – மாணவியின் மரணத்தை முற்றிலுமாகக் குறுக்கி “உள்ளூர்” லோக்கல் விவகாரம் போலக் காண்பிக்க முயற்சிப்பது. அதன் ஒரு பகுதி தான் மைக்கேல்பட்டி என்ற ஊர்மக்கள் எல்லாரும் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைப்பது என்ற திட்டமிடப்பட்ட நாடகம். அதாவது ஊர்மக்களே அந்த இடம் ஒரு “அமைதி பூங்கா” என்றும் அங்கு “முழு மத நல்லிணக்கம் நிலவுகிறது” என்றும் “கிறிஸ்தவ மதமாற்ற பிரசினை எதுவும் இல்லை” என்றும் “தூய இருதய பள்ளி மக்களுக்கு மாபெரும் சேவை செய்து வருகிறது” என்றும் ஆட்சியருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கிறார்களாம். அதுவும் எப்படி? அங்கு அதிக எண்ணிக்கையில் வாழும் “இந்துக்கள்” இப்படி கூறுகிறார்களாம். இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி “அமைதிப்பூங்கா”வில் அனாவசியமாக பாஜக காரர்களும் இந்து இயக்கங்களும் பிரசினை செய்கிறார்கள் என்ற பிம்பத்தை உண்டாக்குவது தான் இதன் நோக்கம்.

இப்படித்தான் தமிழ்நாடும் ஒரே “அமைதிப்பூங்கா”வாக இருக்கிறது என்று வழக்கமாகக் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் உருவாக்கியுள்ள அகராதியில் “அமைதிப்பூங்கா” என்றால் அங்கு கிறிஸ்தவ மதமாற்றமும், கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு அராஜகங்களும், இஸ்லாமிய மதவெறி – ஜிகாதி பிரசாரங்களும் ஜகஜ்ஜோதியாக எந்த இடையூறுமில்லாமல் அரசு ஆதரவுடன் ஏகபோகமாக நடக்கும் என்று பொருள். எப்போதும் அசட்டையாகவும் திராவிட கட்சி கொத்தடிமைகளாகவுமே இந்துக்களை வைத்திருந்து பழக்கிவிட்ட இந்த மாநிலத்தில் இந்தக் கொடுமைகளையும் அராஜகங்களையும் எதிர்த்து இந்துத் தரப்பிலிருந்து திடீரென்று ஒரு சிறு குரல் எழுந்தால் கூட “அமைதி” குலைந்து விட்டது ஐயோ குய்யோ முறையோ என்று அலறுகிறார்கள்.

தமிழ்நாடு பாஜகவும், அதன் தொண்டர்களும் இந்தப் பொறியில் சிக்கிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பிரசினையை வைத்து இப்போது எழுந்திருக்கும் இந்து அறச்சீற்றக் கனல் அணையாமல், இந்த பிரசினையின் அனைத்து பரிமாணங்களையும் பேசுவதற்கான களமாக இதை மாற்றவேண்டும். கீழ்க்கண்ட விஷயங்கள் அனைத்தும் பேசப்பட வேண்டும்.

  • கிறிஸ்தவ கல்வி நிலையங்களின் மதமாற்ற அழுத்தத்தால் ஏற்கனவே நிகழ்ந்த “மர்ம” மரணங்களை தமிழக காவல்துறை ஊத்திமூடியது எப்படி – உசிலம்பட்டி சிவசக்தி (2015), சென்னை ரஞ்சிதா (2009), ஓமலூர் சுகன்யா ஆகியோர் மரணங்களுக்கான நீதி.
  • தமிழ்நாடு மாநில அரசின் கல்வித் துறையை கிறிஸ்தவர்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ள கொடுமை, அதற்கான தீர்வு
  • அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் என்ற வகையில் ஏன் மிக அதிக % நிதி கிறிஸ்தவ பள்ளி, கல்லூரிகளுக்கு போகிறது, ஏன் அவை இந்துக்கள் சிறப்பாக சேவை மனப்பான்மையுடன் நடத்தும் கல்வி நிலையங்களுக்குப் போவதில்லை என்று அரசுக்கு கோரிக்கை
  • அப்பாவி இந்து, கிறிஸ்தவ பெண்கள், சிறார்கள் மீதான கிறிஸ்தவ சர்ச்கள், கூடுகைகள், மதப்பிரசார அமைப்புகளின் பாலியல் அத்துமீறல்கள்
  • தமிழ்நாட்டில் இந்திய தேசிய விரோதத்தையும், இந்துமத வெறுப்பையும், பிரிவினைவாதத்தையும் தூபம் போட்டு வளர்க்கும் கிறிஸ்தவ மத அமைப்புகளின் மீது நடவடிக்கை
  • கிறிஸ்தவத்திற்கு மாறியபின்னரும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இந்து என்று பொய் கூறி சாதிச்சான்றிழ் பெற்று சட்டவிரோதமாக இடஒதுக்கீடை பெறும் “முகமூடி கிறிஸ்தவர்கள்” மீதான நடவடிக்கை

இந்த அனைத்து விஷயங்களையும் முன்வைத்து பாஜக தனது போராட்டத்தை முன் எடுத்துச்செல்ல வேண்டும்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

4 Replies to “லாவண்யா மரணமும் “நடுநிலை” பாசாங்குகளும்”

  1. Importantly we are all forgetting the elephant in the room. Our temples and religious institutions and money generated are under government control. If Hindu temples are freed, the enormous revenue comes into the hands of Hindus, we can then start hundreds of schools, hospitals and charities. The brain dead girl wants to know why Hindus don’t go to their own schools. My dear, We will send our children to Hindu schools provided our temples are freed. Another point, Christian schools are partially funded from tax money and as tax paying Hindus, we do have our rights in the way these Christian schools are run. No preaching and conversion should be allowed in these schools.

  2. லாவண்யா மரணத்திற்கு காரணமாக கூறப்பட்ட பள்ளி வார்டன் சகாய மேரி நேற்று பெயிலில் வெளியே வந்துள்ளார் . அவரை திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சால்வை அணிவித்து வரவேற்றுள்ளார்.

    சால்வை அணிவித்து வரவேற்கும் அளவிற்கு இவர் என்ன தியாகம் செய்து சிறை சென்றாராம்?

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி இதனை கண்டித்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி உள்ளனர்.

    அத்தனை பேரையும் போலீஸ் கைது செய்துள்ளது.3 பேர் மைனர் என்பதால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    மீதம் உள்ள 29 பேரையும் பிப்ரவரி 28 வரை காவலில் வைக்க சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

    குற்றம் செய்தவருக்கு சால்வை மரியாதை, நீதி கேட்டவர்களுக்கு சிறை சாலை, என்ன நீதியோ என்ன நியாயமோ …

    இந்த கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லி ஏபிவிபி அமைப்பினர் தமிழ் நாடு இல்லம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

    என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? ஒரு மாணவி தனது சாவுக்கு இவர்தான் காரணம் என்று ஒருவரை சுட்டி காட்டி மரண வாக்குமூலம் வழங்கிவிட்டு இறந்திருக்கிறார்.

    அந்த குழந்தையின் மரணத்திற்கு மதமாற்றம் காரணமா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். ஆனால் இவர்தான்,இந்த பெண்தான் காரணம் என்று கை நீட்டி மரண வாக்குமூலம் வழங்கியது உண்மைதானே?

    என்ன காரணமாக இருந்தாலும் ஒரு குழந்தையின் சாவுக்கு காரணமான குற்றவாளிதான் அந்த சகாய மெரி. ஒரு கொலை குற்றத்திற்கு காரணமான ஒரு ஒரு குற்றவாளியை ஒரு மக்கள் பிரதிநிதியான எம்எல்ஏ ஒருவர் நேரில் சென்று பார்ப்பதே தவறு.

    அதுவும் அந்த கொலை குற்றவாளியை ஏதோ வீரச்செயல் புரிந்த தியாக செம்மலை வரவேற்பது போல சால்வை அணிவித்து வரவேற்பது போன்ற கேடு கெட்டதனம் வேறு உண்டா?

    இதிலிருந்தே தெரியவில்லையா அரசுக்கும் அந்த பள்ளி நிர்வாகத்திற்கும் உள்ள கள்ள உறவு. அரசு ஏன் இவ்வளவு தூரம் இதில் மெனக்கெட வேண்டும்?அரசு ஏன் இவர்கள் குற்றத்தை மூடி மறைக்க இவ்வளவு தூரம் கஷ்டப்படுகிறார்கள்?

    சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டபோது அவசர அவசரமாக தடை கேட்டு தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

    ஒரு அரசுக்கு மக்கள் அனைவரும் சமம் தானே. ஒரு குழந்தையின் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று மக்களும் சம்பந்தபட்டவர்களும் கோரும் நேர்வில் அதற்கு அனுமதி வழங்குவதில் அரசுக்கு என்ன நஷ்டம்?

    இவர்கள் பதபதைப்பிலேயே ஏதோ விஷயம் உள்ளது என்பது தெளிவாகிறதே. இதன் பின்புலம் அதிர்ச்சிகரமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    இந்த பிரச்சனை இந்த ஒரு நிகழ்வோடு மட்டும் சம்பந்தபட்டிருக்கும் என்று நம்பிக்கையில்லை. தோண்ட தோண்ட இன்னும் பல அதிர்ச்சிகள் புதையுண்டு கிடக்கும் என்ற சந்தேகம் மிக பலமாக ஏற்படுகிறது.

    திருடனுக்கு தேள் கொட்டியது போல அரசின் படபடப்பும், அவசர செயல்களும் அப்படித்தான் எண்ண செய்கிறது.

    நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்து சிபிஐ விசாரணையை தொடர உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் இந்த சிபிஐ விசாரணைக்கு காரணமான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதனை தொடர்ந்து கண்காணிப்பது நல்லது. விசாரணையின் கோணம் திசை மாறிடாமல் கண்காணிப்பது மிக மிக அவசியம்…
    #Justice_for_lavanya

  3. 1998ல் கோவையில் குண்டுவைத்து 58 தமிழர்கள் உடல் சிதற காரணமான #அல்_உம்மா இயக்க தலைவன் #பாஷா வின் புகைப்படத்தை வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துகொண்டு திரியும் தமிழக தொப்பிள் கொடி உறவுகள் !!!

    கோவை காந்திபுரம் , கிராஸ்கட் ரோடு , அரசு மருத்துவமனை , உக்கடம் போன்ற பகுதிகளுக்கு இப்போது போய்ப்பாருங்கள்…எல்லா இடங்களிலும். ” அவர்கள் ” ( பெண்கள் , குழந்தைகள் உட்பட) சகஜமாக நடமாடிக்கொண்டிருப்பார்கள் …

    ஆனால்,குண்டு வெடித்த அந்த நாளன்று இவர்களெல்லாம் எங்கே போனார்கள் ???

    11 இடங்களில் , 12 கி.மீ சுற்றளவில் , மொத்தம் 13 குண்டுகள் வெடித்தன…அரசு சொன்ன கணக்குப்படி 35 ஆண்கள் , 10 பெண்கள் , ஒரு குழந்தை உட்பட 46 பேர் பலியானார்கள்…2000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்…

    அதில் ஒருவர் கூட இவர்களில்லையே ? சொல்லிவைத்த மாதிரி இவர்கள் எப்படி அந்த நாளன்று குறிப்பிட்ட இடங்களைத் தவிர்த்தார்கள் ?

    இந்த நாளில் , இத்தனை மணிக்கு , இன்னின்ன இடங்களில் இதெல்லாம் நடக்கும்…அந்த இடங்களுக்கு நீங்கள் போகாதீர்கள் என்று முன்கூட்டியே எச்சரிக்கப்படாமல் இது சாத்தியமா ??

    எனில் , இது பற்றிய முழுவிபரமும் அவர்களுக்கு ( கடைசி குஞ்சு , குளுவான் வரை ) முன்பே எச்சரிக்கப்பட்டிருக்கிறது….98 ல் வாட்சப் உள்ளிட்ட இத்தனை தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லை…செல்போன்களும் மிக அரிதாகவே புழக்கத்தில் இருந்தன..எனில் இந்த எச்சரிக்கை அவ்வளவு பெரிய நகரில் , அத்தனை பேருக்கும் வாய்மொழியாகவே இந்தத் தகவல் பரப்பப்பட்டிருக்கிறது..

    ஒருவர் கூட மூச்சுவிடவில்லை….நாங்களும் அவர்களும் அண்ணன் – தம்பி , மாமன் – மச்சானாக பழகுகிறோம் என்று இடதுகளும் , கழகங்களும் , நடுநிலை நக்கிகளும் அவ்வப்போது அடித்துவிடுவார்கள் . .அப்படிப்பட்ட பாசப்பறவைகள் ஒன்றுக்குக்கூட மாற்று மதத்தவனை எச்சரிக்கவேண்டுமென்று தோன்றவில்லை…

    அதுகூட வேண்டாம்…இப்படி ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது…இதில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளும் , குழந்தைகளும் கொல்லப்படக்கூடும்…குறைந்தபட்சம் அநாமதேயமாக போலீசுக்கு தகவல் சொல்லிவிடுவோம் என்று அவர்களில் ஒருவர் கூட நினைக்கவில்லை…

    அதுதான் அவர்கள்….

    அவர்களின் உலகில் பிற நம்பிக்கையாளர்களுக்கு இடமே இல்லை….உன் வழி உனக்கு , என் வழி எனக்கு என்பதெல்லாம் வெறும் ஜல்லியடி…அவர்கள் சிறுபான்மையினராக இருக்கும்வரை தான் இந்த வார்த்தை ஜாலங்களெல்லாம்..எண்ணிக்கையில் பெருகிவிட்டால் அவர்களின் கடவுளை நம்பாதவன் கொல்லப்படவேண்டியவன்…அவ்வளவுதான்…

    இதைத்தான் வரலாறு முழுக்கவும் பார்த்தோம்…சமகாலத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்…இனியும் பார்ப்போம்..

    மண்டையில் இதுவரை ஏறவில்லை…இனியும் ஏறுமென்ற நம்பிக்கையும் இல்லை…

    வலிமை உள்ளது பிழைக்கும்…வேறென்ன சொல்ல?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *