அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்

தி.மு.க ஆட்சி அரியணையில் அமர்ந்ததில் இருந்து இந்து ஆலயங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பதும், ஆகம விதி மீறல்கள், ஆலயச்சொத்துக்களை திருடி விற்றல், தெய்வ விக்கிரகங்கள் கடத்தல் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இந்து பண்பாட்டு அடையாள அழிப்புகள் தொடர்ந்து வருகின்றன. தங்களின் அந்நிய முதலாளிகள், மாற்று மத, மத மாற்ற சக்திகளை தொடர்ந்து குஷிப்படுத்தி வரும் திராவிட அரசியல் கயவர்களின் அராஜகத்தில் அடுத்த அசிங்கம் அவினாசி ஆலயத்தில் நேற்று நடந்திருக்கிறது.

கொங்கு நாட்டின் ஏழு சிவஸ்தலங்களில் பிரதானமான கோவில் ‘திருப்புக்கொளியூர் அவிநாசி‘ என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடிப் புகழ் பெற்ற அவிநாசி திருத்தலம். தொன்மையும், புகழும் நிரம்பிய புனிதத்தலத்தில் மே-23 அன்று ஆலய கோபுர கலசங்கள் சேதப்படுத்தப்பட்டதும், இறை மூர்த்தங்களின் உடைமைகள் திருடப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் இருப்பது அதிர்ச்சிகரமான செயல். லட்சோப லட்சம் மக்களால் பக்தியுடன் வணங்கப்படும் பாடல் பெற்ற ஸதலத்தில் இது போன்ற திட்டமிட்ட தாக்குதல்கள் குறிப்பிட்ட கால இடை வெளியில் தொடர்ந்து நடைபெற்று வருவது பக்தர்களை நம்பிக்கை இழக்க செய்யும் செயல்.

மே 23 ம் தேதி அதிகாலை பூஜைகள் செய்வதற்காக 4.30 மணிக்கு கோவிலை திறந்த அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடையும் வண்ணம் கோவிலின் பலிபீடம், உண்டியல்கள் முன் அலங்கோலப்படுத்தப்பட்டும், திருச்சுற்று பிரகாரத்தில் இருக்கும் 63 நாயன்மார்கள் சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டும், அந்த சன்னதிகளுக்கு மேல் உள்ள கோபுர கலசங்கள் சுக்கு நூறாக உடைத்து நிர்மூலமாக்கப்பட்ட காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அற நிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அற நிலையத்துறையினர் மிகவும் தாமதமாக வந்து சேர்வதற்குள் பக்தர்களிடம் செய்தி பரவி கோவில் முன் குழுமத்துவங்கினார்கள்.

அற நிலையத்துறை சார்பாக எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல் விடப்பட்டுள்ள ஆலயத்திற்கு பக்தர்கள் சார்பாக ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர் முழு போதையில் சுய நினைவின்றி இருந்ததால் அர்ச்சகர்களும், பக்தர்களும் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். காவல் துறை அதிகாரிகள் வருவதற்குள் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல் , ஆர் எஸ் எஸ் கோட்ட அமைப்பு செயலாளர் ஆர்ம்ஸ்றாங் பழனிசாமி, இந்து முண்ணனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மற்றும் அவினாசி பாஜக மற்றும் இந்து இயக்க தொண்டர்கள் அதிகப்படியாக குழுமி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரினர்.

காவல்துறை கடைசியில் கோவிலில் ஒளிந்திருந்த நபரை கைது செய்தனர். நன்கு ட்ரிம் செய்யப்பட்ட தாடி மற்றும் உடலில் அங்கங்கே டாட்டூ குத்திக்கொண்டு முழு ஆரோக்கியத்தோடு திட்டமிட்டு கோவில் கதவை திறந்து இறை மூர்த்தங்களை சேதப்படுத்திய “மனநலம் குன்றியதாக” அறிவிக்கப்பட இருக்கும் கூலி சமூக விரோதியான அந்த நபரை காவல் துறையினர் பத்திரமாக பாதுகாத்து அழைத்து சென்றனர்.

கோவில் வருமானத்தை உண்டு கொழுக்கும் அற நிலையத்துறையினர் இது பற்றி அலட்டிக்கொள்ளாமல், கோவிலை கழுவி விட்டுட்டு அடுத்த வேலையை பாருங்கள் என்ற மனநிலையில் இருந்தனர். வரும் பக்தர்களிடம் சிறப்பு தரிசன கட்டண சீட்டுக்கள் விற்கும் தங்களின் வருவாய் பெருக்கும் செயல் பற்றி கதவை சாத்திக்கொண்டு விவாதித்து கொண்டிருந்தார்கள்.

அவிநாசி வாழ் வியாபார பெருமக்களும், பொது மக்களும் திமுக ஆட்சியில் இதெல்லாம் எதிர் பார்க்க கூடியது தானே? கோவில் திருக்குளத்தை ஆக்ரமித்து கட்டியிருக்கும் பெந்த கோஸ்தே சர்ச்சிற்கு சொந்தமானது தான் கோவில் . கோவிலுக்கு வந்தால் வழக்கு போடுவேன், அல்லது சுட்டு கொல்லுவேன் என்று இன்னும் சொல்லாமல் இருக்கிறார்களே என்று பெரு மகிழ்ச்சியோடு தங்களின் அன்றாட பணிகளை எருமை மாட்டின் மீது பெய்த மழை போல எந்த பாதிப்பும் இன்றி தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

“மூத்த ஓளரங்கசீப்” ஆட்சியின் போது கோவில் தேர் தீ வைக்கப்பட்டதும், இப்போது “இளைய ஓளரங்கசீப்” ஆட்சியில் கோவில் கோபுர கலசங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை திராவிட இயக்கத்தவர்களும் மத மாற்ற வெறியர்கள் தங்களின் வெற்றியாகவும், அப்பாவி பக்தர்கள் வேதனையோடும் கண்ணீரோடும் கையறு நிலையில் நின்றதை பார்க்க மிகவும் ஆயாசமாக இருந்தது. மாவட்ட நிர்வாகம் , காவல்துறையினர் இந்து ஆலயம் மீதான தாக்குதல் தானே என்ற வழக்கமான அசட்டையோடு இருந்ததை காண முடிந்தது.

காசிக்கு நிகரான அவினாசியில் முன்னர் திமுக ஆட்சியின் போது கோவிலின் பிரமாண்ட தேர் பாஸ்பரஸ் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டு விடிய விடிய எரிய வைக்கப்பட்டு பக்தர்களுக்கு பயத்தை ஊட்டினர். 1990 களில் நடைபெற்ற தேர் எரிப்பிற்கு இப்போது வரை உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது திமுகவும் அதன் ஏவல் துறையாக செயல்படும் காவல் துறையும்.

பல நூற்றாண்டுகள் வெயிலும், மழையிலும் கிடந்து பாறை போல இறுகி இருக்கும் புராதான சின்னமான அவினாசியப்பரின் தேர் பீடி குடித்து விட்டு எறிந்த துண்டு பீடியில் எரிந்து சாம்பலாகிப்போனதாக திமுக அரசின் உத்தரவிற்கிணங்க காவல்துறை பொய்யாக ஒரு புனைவை சொல்லி வழக்கை மூடினார்கள்.

பின்னர் ஆலய வளாகத்தில் புதிய ஏற்பாடு நூலோடு புகுந்து தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட, பெயர் வைக்கப்படாத “மன நலம் பாதிக்கப்பட்ட” நபர். திமுக ஆட்சி வந்த உடன் திருக்கோவிலின் திருக்குளத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டு வெற்றிகரமாக மத மாற்ற பணிகளை ஆலயத்திற்குள்ளேயே செய்யும் பெந்த கோஸ்தே சர்ச்சின் அடாவடிகள். அதற்கு துணை போகும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அற நிலையத்துறை அதிகாரிகள் என்று அலங்கோல நிலையில் இருக்கிறது உண்மை நிலை.

நகர் மத்தியில் இருக்கும் திருத்தலத்திலேயே, ஒரு திராவிட சமூக விரோதி சர்வ சாதாரணமாக உள்ளே இருக்கும் மூர்த்தங்களை சேதப்படுத்த முடிகிறது என்றால், நிர்வாகம் என்ற ஒன்று சுத்தமாக இல்லை என்றே கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அதோடு திராவிட அஜெண்டா பத்திரிக்கைகள் கோவில் சொத்துக்கள் (temple property) என்று பம்மாத்து நியூஸ் போடுவதை பாருங்கள். அந்த மூர்த்தங்கள் வெறும் “சொத்துக்கள்” அல்ல. நாங்கள் வணங்கும் தெய்வ சிலா மூர்த்திகள், Deities! புரியவில்லை என்றால் போய் மீண்டும் ஒருமுறை ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்துவிட்டு இந்த வேலைக்கு வாருங்கள் என்றெல்லாம் அப்பாவி பக்தர்கள் பொறுமுகிறார்கள். ஆன்மாவை அடகு வைத்து வாழும் பத்திரிக்கையாளர்களை இதெல்லாம் பாதிக்கவா போகிறது. இது கூட தெரியாமல் புலம்பும் அப்பாவி பக்தர்களை என்ன சொல்லி தேற்றுவது.

தினமலர் நாளிதழ் மட்டுமே இந்த குற்றச் செய்தி பற்றி உண்மையாக, சரியாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

திமுக கும்பல் ஆட்சியில் திட்டமிட்டு பாடல் பெற்ற ஆலயங்களில் சிறுபான்மையினரை கொண்டு தொடர்ச்சியாக மாட்டுக்கறி சாப்பிட வைப்பது, தெய்வங்களை இழித்தும் பழித்தும் ஊடகங்களில் , திரைப்படங்களில் தொடர்ச்சியாக செய்தி வர வைப்பது. ஆகம நடைமுறைகளை அலட்சியப்படுத்தி ஆபாசமாக சித்தரிப்பது, ஆலய அமைப்பிற்கு பாதுகாவலாய் இருக்கும் பிராமணர்கள் மீது தொடர்ந்து நாசிச இனவெறியோடு வெறுப்பை உமிழ்ந்து இன ஒழிப்பிற்கு அடித்தளமிடுவது – இப்படி திமுகவின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்து ஆலயங்கள் மீது நிகழும் தொடர் தாக்குதல்களை எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் – வெள்ளிக்கிழமை (மே-26)

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்றெல்லாம் அறம் பாடும் அப்பாவி பக்தர்களின் கண்ணீருக்கு எதேனும் மதிப்பிருக்கிறதா? என்று காலம் பதில் சொல்லட்டும்.


(கட்டுரையாசிரியர் வீர.ராஜமாணிக்கம் கட்டுமான பொறியாளர். சிற்பங்கள், பண்பாட்டு அசைவுகள், இலக்கியம், இந்து பண்பாடு, சைவம், மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்டவர். இவை குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்).

7 Replies to “அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்”

  1. இது போன்று செய்தல் மாற்று மதத்தினர் மற்றும் திராவிட கழகத்தினர் பணம் தரலாம் இதை கொஞ்சம் கண்காணிக்க வேண்டும்

  2. யானை கொடுத்து தானே தலையில் மண்ணை வாரி போட்டுக்குமாம். திமுக வின் அழிவு காலம் வந்து விட்டது

  3. “எம்மதமும் சம்மதம்” – தமிழ் தவிர வேறு எந்த ஒரு மொழியிலும் இப்படி ஒரு சொற்றொடர் இருப்பதாகத் தெரியவில்லை –

    கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இந்தச் சொற்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக இந்துக்கள் தான் –

    ஆம், இது தமிழக இந்துக்களுக்காக மட்டுமே, அதிலும் நடுநிலை பேசித் திரியும் நாதாரிகளுக்காகவே உருவாக்கப்பட்டது-

    ஆனால், இங்கே இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் இதை ஏற்பதில்லை அவர்கள் “எம்” மதம் மட்டுமே முக்கியம் என்று நினைப்பதால்தான் இங்கே பல பிரச்சினைகள் உருவாகின்றன என்பதுதான் உண்மை –

    இங்கே, மதசார்பற்ற ஒரு இஸ்லாமியன் கிடையாது, மதசார்பற்ற ஒரு சிறிஸ்தவன் கூடக் கிடையாது-

    ஆனால், இந்துக்கள் மட்டும் மதசார்பற்றவர்களாக இருக்கவேண்டும் –

    அதுவும் எந்த மாதிரியான மதசார்பின்மை என்றால்?-

    இவர்கள் மேடை போட்டு காலம் காலமான நமது நம்பிக்கைகளையெல்லாம் படு கேவலமாகப் பேசும்பொழுதும் சிரித்துக் கொண்டே மதசார்பின்மை பேசவேண்டும் –

    நமது கோவில்களை இடித்துத் தள்ள வேண்டும் என்று பேசும்பொழுதும் சிரித்துக் கொண்டே மதசார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டும் –

    நமது புராணங்கள், இலக்கியங்கியங்கள், மந்திரங்களை இழிவுபடுத்தும் பொழுதெல்லாம் இளித்துக்கொண்டே இருக்கவேண்டும், அப்பொழுதுதான் நீங்கள் மதசார்பற்றவர் –

    நம்முடைய தெய்வங்களையெல்லாம் சாத்தான்கள் என்று கூறி மதம் மாற்ற வரும் பொழுதும் பொருத்துக்கொண்டிருக்க வேண்டும் –

    இந்துமதப் பெண்கள் எல்லாம் பரத்தைகள் என்று எவனாவது சொன்னால் இளித்துக்கொண்டிருக்க வேண்டும் –

    அப்பொழுதுதான் நீங்கள் மதசார்பற்றவர்கள் –

    இவற்றில் எதற்காகவாவது கோபப்பட்டு நீங்கள் எதிர்வினையாற்றினால் நீங்கள் மதவாதி, சங்கிப் பட்டம் –

    நல்லா இருக்குடா உங்க மதசார்பின்மை –

    இதுவரை எம்மதமும் சம்மதம் என்று கூறி என் மதத்தின் அழிவிற்குக் காரணமாக இருந்தது போதும்-

    இனி என் மதம் மட்டுமே சம்மதம்_

    இது மதவாதமாகவும், நான் சங்கியாகவும் உங்களுக்குத் தெரிந்தால் –

    ஆமாம், இஸ்லாமிய கிறிஸ்தவர்களைப் போலவே நானும் மதவாதிதான், ஜிகாதிதான்-

    இனிமேலும் கருப்பர் கூட்டங்களும், திருமாவளவன்களும் எங்கள் மதத்தை அசிங்கப்படுத்தத் துணிந்தால் –

    நாங்கள் புனிதப்போர் புரியவும் தயாராக இருக்கிறோம் –

    ஆமாம் நானும் சங்கிதான் –

    தேசப்பணியில் என்றும் –

  4. நேற்று News18 தொல்லைக்காட்சியில், ஆளுநரின் வள்ளலார் பற்றி பேச்சிற்கு பதிலடியோ, விளக்கமோ ஏதோ ஒன்று கொடுக்கிறார் என்று திருநீற்றுப் பட்டை வேடத்துடன் ஆகம அறிஞன் என்ற பெயரில் ஒருவனிடம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனர், அதைப்பார்த்த எனது மனைவி என்னங்க இவன் பேசறான், பாத்தா பக்திமான் மாதிரி இருக்கான் பேசறதெல்லாம் நம்ம தர்மத்துக்கு எதிரா இருக்கே, சனாதன தர்மம்னு ஒன்னு இல்லவே இல்லைன்றான், சனாதனம்னா அது நிலையான தர்மம்னுதான அர்த்தம் அதச்சொல்லாம ஏன் இவன் இப்படி உளறிகிட்டிருக்கான்னு கேள்வி கேட்டாங்க-

    நேற்று முன்தினமும் அதே TV -ல் பட்டை போட்ட கலையரசி என்ற ஒரு பேய்மணி இதேபோன்றுதான் பிதற்றிக்கொண்டிருந்தார், அப்பொழுது எனது மனைவிடம் நான், பாரு, இவளும் ஒரு மதம் மாறின கிரிப்டோதான் ஆனால் ஹிந்து வேடத்தில் இதுமாதிரி வந்து குழப்பியடிப்பார்கள் அதையும் நம்பும் அப்பாவி ஹிந்துக்கள் இங்கே அதிகம் வித்யா என்றேன், அவளுக்குப் புரியவேயில்லை, எப்படி இப்படி புனிதமான விபூதியைப் பூசிக்கொண்டே இப்படி விபூதிபூதிய வள்ளலாரை ஹிந்து இல்லை என்று கூறுகிறார்கள் என்று அங்கலாய்த்தார்-

    சரி, இன்னும் கொஞ்சம் எளிமையாகப் புரியவைக்கலாம் என்று சீமான் என்ற செபஸ்டியன் சைமன் பேசிய பழைய காணொளிகளைக் காண்பித்தேன், அதில் அவன் அப்பொழுது சிவனை ஆண்குறி என்றும், பிள்ளையாரை பார்வதியின் உடலில் இருந்து வந்த அழுக்கு என்றும், திருநீரு பூசுபவனைக் கேவலமாகவும் இன்னும் முருகனையும், இராமனையும் கேவலமாகவும் பேசிய பல காணொளிகளையும் போட்டுக்காண்பித்துவிட்டு, பிறகு தற்காலங்களில் சீமான் பேசிய முருகன் என் முப்பாட்டன், மாயோன் என் கடவுள் என்று நெற்றியில் விபூதியுடன் பேசிய வீடியோக்களையும் போட்டுக் காண்பித்தேன்-

    என்னங்க, இப்படி அப்பட்டமா மாத்தி மாத்தி பேசறாங்க ஏன்?, நாமெல்லாம் சாமி கும்படறம், சாப்படறம், வாழ்றோம் எதுக்கு இப்படி ஒரு பொழைப்புப் பொழைக்கறானுங்கன்னு கேட்டா-

    இதுதான் மிஷநரியோட முழுநேரவேலை வித்யா, நாலு மாடு ஒரு சிங்கம், ஒரு நரி கதை தெரியுமா?-

    நாலு மாடும் ஒற்றுமையா எதிர்த்தவரைக்கும் அந்தச் சிங்கத்தால அதுங்கள எதிர்க்க முடியல, ஒரு நரி வந்து ஒவ்வொரு மாட்டையும் தனித்தனியாப் பேசி சதி செஞ்சு பிரிச்சப்பறம் சிங்கம் ஈஸியா ஒவ்வொரு மாட்டையும் ஆகாரமாக்கிடிச்சின்னு படிச்சோம் இல்லையா? அதுதான் நடக்குது இங்க-

    முதல்ல நரி எப்படி மாடுங்களப் பிரிச்சது? –

    ஒரு மாட்டுகிட்டப் போய், ஏய் மாடே நீ கருப்பா அழகா இருக்க, மத்த மாடுங்கள்லாம் பாரேன் ஒன்னு வெள்ளையா அசிங்கமா இருக்கு, இன்னொன்னு செவளையா கேவலமா இருக்கு, அதப்பாரு உடம்பெல்லாம் புள்ளிப்புள்ளியா அருவருப்பா இருக்குன்னு ஒவ்வொருமாட்டுக்கும் தனித்தனியா இதேமாதிரி பிரச்சாரம் பண்ணி நம்ப வெச்சிப் பிரிச்சதாம் சிங்கம் ஈஸியா ஒவ்வொரு மாட்டையும் கொன்னு அந்த இனத்தையே அழிச்சிடிச்சாம் –

    இந்தக் கதைல வர்ற சிங்கம்தான் கிறிஸ்டியானிடி, நரிதான் பாதிரியார், பலிமாடுகள்தான் ஹிந்துக்கள்-

    ஒரு பாதிரி நரி வந்து நீ ஹிந்து இல்ல தமிழன்னுவான், ஒரு பாதிரி நரி வந்து நீ ஹிந்து இல்ல சைவம்னுவான், இன்னொரு பாதிரி வந்து நீ ஹிந்து இல்ல சூத்திரன் பாரு ஹிந்துமதம் எப்படியெல்லாம் உன்ன அசிங்கப்படுத்துதுன்னு கதை கதையா அளந்துவிடுவான் –

    இப்படியேதான் நீ ஹிந்து இல்ல நாடார், நீ ஹிந்து இல்ல தேவர், நீ ஹிந்து இல்ல பறையர், நீ ஹிந்து இல்ல பௌத்தர்னு ஆயிரம் பாகுபாடு சொல்லுவான், ஆனால் நிறங்கள் வேறு, தோற்றங்கள் வேறுன்னாலும் கூட நாமெல்லாரும் ஹிந்துக்கள்தானே நாம் ஒற்றுமையாக இருந்தால்தானே அந்தக் கிறிஸ்துவ சிங்கத்தை எதிர்க்கலாம், நமக்குச் சம்பந்தமே இல்லாத இந்த வெளிநாட்டு வெள்ளை நரி ஏன் நமது பாஷை கற்றுக்கொண்டுவந்து நமக்கு அறிவுரை கூறுகிறது என்றெல்லாம் ஒரே ஒரு மாடுகூடச் சிந்திக்காது இதுதான் உண்மை –

    அதனால்தான் சில நேரங்களில் இதுபோன்ற நரிகள் பட்டை நாமத்துடன் பசுத்தோல் போர்த்தியும் வந்து நம்மைப்போன்ற அப்பாவிப் பசுக்களிடம் நானும் உன் இனம்தான் உனக்காகத்தான் பேசுகிறேன் என்று நம்பவைக்கும், இதில் சீமான் போல பல பசுத்தோல் போர்த்திய பாதிரி நரிகள் இருக்கின்றன நாம்தான் கிறிஸ்தவ சிங்கத்திடம் பலியாகிவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் –

    புரிந்ததுபோல் தலையாட்டினாள், உங்களுக்குப் புரிகிறதா? –

  5. உலகத்திலேயே இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் நாடு எது?- இந்தியா-

    உலகத்திலேயே இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்கும் நாடு எது?- இந்தியா-

    உலகத்திலேயே இஸ்லாமியர்கள் வெறுக்கும் நாடு எது?- இந்தியா-

    என்ன காரணம்னு தெரியல ஆனா, இந்திய இஸ்லாமியர்கள் எல்லோருமே இந்தியாவை வெறுக்கிறார்கள் –

    உள்ளிருந்து கொல்லும் கொரோனா இவர்கள் –

    இவர்களை இந்த நாடு 70 வருடங்களாகத் தாஜா செய்து வந்துள்ளது –

    அப்படியிருந்தும் கூட கோவை குண்டுவெடிப்பு முதல், மும்பை கொடூரத் தாக்குதல் வரை இவர்களின் வன்மம் அப்பாவிகளின் மீது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது –

    டெல்லியில் திட்டமிடப்பட்டு நடந்த CAA போராட்டங்களும், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளும், போலீஸ் அதிகாரி அங்கிட் சர்மாவின் கொடூரக்கொலையும் கூட இங்கே மறைக்கப்பட்டு இஸ்லாமியகள் மீது பெரும் கொந்தளிப்பு வந்துவிடக்கூடாதென்று மோடி அரசுமே கூட மறைத்து வருகிறது-

    உண்மையில், அண்ணனின் பாதுகைகளை வைத்து அரசாண்ட பரதனுக்கும் –

    பதவிக்காக தாய், தந்தை, உடன்பிறந்தவர்களைக் கொன்ற கில்ஜிக்களுக்கும் இங்கே கலாச்சார ரீதியாக, தர்மத்தின் வழியாகக் கூட போர்கள் நடந்துகொண்டே இருக்கின்றன –

    போர்தர்மத்தை மீறக் கூடாது என்ற நம் முன்னோர்களின் வாக்கினாளேயே நாம் 1000 வருடங்கள் அடிமையாக இருந்திருக்கிறோம் –

    இந்தக் கலியுகத்தில் இதுவே அதிகம்_

    யுத்த தர்மத்தை மீறிய, போரில் தோற்ற கௌரவர்களாலும், அஸ்வத்தாமனாலுமே பாண்டவர் வம்சம் அழிக்கப்பட்டது-

    ஆயிரம் வருடம் அடிமையாய் வாழ்ந்த பிறகும் நமக்கு மட்டும் யுத்த தர்மம் தேவையா மோடி ஜி?

    ஆயுதங்கள் வைத்திருந்தாலும் உபயோகிக்கக்கூடாது என்பது பழைய நேருமாமா கால உடன்படிக்கை-

    ஆனால், வெறும் கம்பிகளாலும், கட்டைகளாலும் நமது வீரர்களைத் தாக்கியிருக்கிறார்கள், பதிலடி இருமடங்கு என்றாலும்கூட –

    இதை என் மனம் ஏற்க மறுக்கிறது,_

    எனது வீட்டில் ஒரு இராணுவ வீரர் எனது அண்ணன் இருக்கிறார்-

    வீரமாகச் சாவது வேறு வீம்பிற்காக பழைய யுத்ததர்மம் என்று சாவது வீனே –

    ஒட்டுமொத்த பாரதமும் அரிதிப் பெரும்பான்மை கொடுத்துத் தங்களை பிரதமராக நம்புகிறார்கள் என்றால் –

    அவர்களுக்காக மட்டுமே முடிவுகளை எடுங்கள்-

    தோற்றுப்போன கட்சித் தலைவர்களைக் கூட்டி வைத்து வெட்டி ஞாயம் வேண்டாம்_

    இங்கிருக்கும் 23 எதிர்க்கட்சிகளும் தங்களை வீழ்த பாகிஸ்தானையும், சைனாவையும் ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள்-

    பாரதம் பிழைக்க,

    நீங்களும் கொஞ்சம் சர்வாதிகாரியாக மாறுங்கள் மோடி ஜி-

    யுத்த தர்மம் எல்லாம்-

    வேலைக்கே ஆவாது-

  6. தமிழ் உயிரெழுத்துக்கள் 12-ல் ஒள-என்ற எழுத்து இருக்கா?, இல்லையா? –

    இருக்குன்னா எதுக்காக இந்த ஊடகங்கள் திரௌபதிய திரவுபதின்னு எழுதறாங்க? அதே மாதிரிதான் “ஐ”-ன்ற எழுத்தையும் சிதைச்சு “அய்”னு எழுதறாங்க, எதுக்காக இருக்கற எழுத்துக்களச் சிதைச்சு புதுசா ஒரு எழுத்த உருவாக்கனும்-

    என்னோட அண்ணன் Army – ல இருக்கும்போது எங்கப்பா அவருக்கு லெட்டர் போடுவார், அதுல சிலது இன்னும் இருக்கு, அவர் 1940-ல பொறந்தவர் வெறும் 5-ம் வகுப்புதான் படிச்சிருந்தார், ஆனா தமிழ்ல ஒரே ஒரு எழுத்துப்பிழைகூட இருக்காது, தமிழ்ல கொம்பு வெச்ச எழுத்துதான் எழுதுவார், எனக்கு அந்த எழுத்துக்கள் தெரியும் அதனால என்னால இப்பவும் அந்த லெட்டர்லாம் படிக்க முடியுது, ஆனா நாளைக்கி என்னோட மகனால அதப்படிக்க முடியுமா? இப்ப இருக்கற தமிழ் எழுத்துக்களையே படிக்கத் தினறக்கூடிய ஒரு தலைமுறை உருவாகிடிச்சு, வெறும் 30, 40 வருஷத்துலயே ஒரு தாத்தா எழுதின தமிழப்படிக்க முடியாத பேரன் இது எவ்வளவு கொடுமை தெரியுமா?-

    யார் இந்த மொழி அழிப்பைச் செய்கிறார்கள்? ஏன்?-

    இதுக்கும் நான் மிஷநரிகள்னு சொன்னா உங்கள்ல பலபேரு இந்த சங்கிப் பயலுக்கு வேற வேலையில்லைனு சொல்லுவீங்க. ஆனா அதுதான் நிஜம் –

    தங்களுக்குன்னு சொந்தமா எந்த வரலாறும், கலாச்சாரமும், பெருமைகளும் இல்லாத கிறிஸ்தவ ஆள்சேர்க்கும் கூட்டம் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின், மண்ணின் கலாச்சாரங்களை அழிப்பதற்கு முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் மொழி, ஒரு மொழிய அழிச்சிட்டா அந்த மொழில இருக்கற இலக்கியங்களை அழித்துவிடலாம், அடையாளங்களை அழித்துவிடலாம் பிறகு அடையாளமில்லாத மனிதர்களை எளிதில் மதம் மாற்றலாம், இதுதான் மிஷநரிகளின் கணக்கு –

    இதற்கான விதை250 வருடங்களுக்கு முன்பே பித்தலாட்டப் பாதிரி கால்டுவெல்லால் போடப்பட்டது, அவன் வகுத்துக்கொடுத்த திட்டங்களை அதற்குப்பிறகு ஈவேராவும் அவன் சீடர்களான அண்ணா, கருணா தொடங்கி இன்று ஸ்டாலின்வரை தொடர்கிறது, இடையில் பலமுறை ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவும் இதை மாற்ற முயலவில்லை என்பதுதான் நிஜம் –

    முதலில் வடமொழி உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்துக்களான “ஸ”, “ஷ”, “ஹ”, “ஜ” போன்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்று கூறி அழித்தார்கள், பிறகு வந்தேறி பார்ப்பணரின் மொழி சமஸ்கிருத எழுத்துக்கள் என்று கூறி “ஸ்ரீ” போன்ற எழுத்துக்களை மாற்றவேண்டும் என்று கூறி ஸ்ரீரங்கத்தை திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூரை திருவில்லிபுத்தூர் என்று மாற்றினார்கள், –

    அவ்வளவு ஏன் தமிழ் மாமன்னர் ராஜராஜ சோழன் பெயரையே ராசராசசோழன் என்று மாற்றினார்கள், அவருடைய கல்வெட்டுக்களில் கூட ராஜராஜன் என்றே இருக்கும் பொழுது இவர்கள் யார் மாற்றுவதற்கு?-

    நினைத்தாலே ரத்தம் கொதிக்கும் அளவிற்கு இவர்களின் தமிழ் அழிப்பு நடந்திருக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது, அதைவிடக் கொடுமை இவர்கள்தான் தமிழைக் காக்க வந்த தேவதூதர்கள் என்று அப்பாவித் தமிழர்கள் இன்றும் நம்புவதுதான் –

    இறுதியாக, நம்முடைய தமிழ்மொழியை மீட்டால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு நமது தமிழ் இலக்கியங்களையும், தெய்வீகப் பாடல்களையும் கொண்டு சேர்க்க முடியும், இல்லையென்றால் தேவாரம், திருவாசகம் படிக்கும் கடைசித் தலைமுறை நாமாகத்தான் இருக்கும் –

  7. வடக்கே ராமானுஜரையும், சங்கரரையும் தங்களில் ஒருவராக இந்துக்கள் ஏற்றுகொண்டார்கள், அன்றும் இன்றும் என்றும் இவர்கள் வணத்துகுரியவர்கள், மகான்கள் வழிகாட்டிகள் என கொண்டாடுகின்றார்கள்

    இவர்கள் இருவரும் தமிழகத்தவர்கள், ஆதிசங்கரர் கேரளம் என்றாலும் சேரநாட்டவரே

    இப்போதும் திருகுறளை இந்திய நூல் என்றே மோடி கொண்டாடுகின்றார்

    ஆக தமிழர்களில் மகான்களை ஆன்றோரை ஏற்றுகொள்ள அவர்களுக்கு தயக்கமில்லை ஆனால் வள்ளலாரை விடமாட்டோம் வள்ளலார் தமிழர் மகான் என சொல்லும் குறுகிய புத்தி இவர்களுக்குத்தான் இருக்கின்றது

    கேட்டால் ஆளுநருக்கு தமிழ் தெரியாதாம் வள்ளலாரை அவர் படித்திருக்கமுடியாதாம்

    ஏனப்பா, நீங்களெல்லாம் சமஸ்கிருதம் கற்றுத்தான் மனுநீதி பேசினீர்களா? வர்னாசிரம கொடுமை என சொன்னீர்களா, சமஸ்கிருதம் கற்றுத்தான் இந்துஞான நூல்களை குறை சொன்னீர்களா என்றால் யாரிடமும் பதிலே இல்லை

    மகான்கள் எல்லாருக்கும் உரியவர்கள், வள்ளலார் அன்னசாலை நிறுவியதில் வடநாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கும் உணவளிக்கும் நோக்கம் இருந்தது

    வடக்கே குருநாணக் செய்ததைத்தான் வள்ளலார் இங்கே செய்தார்

    இந்த தேசம் சங்கரரையும் , ராமானுஜரையும் தங்களில் ஒருவர் என கொண்டாடும் நேரம், வள்ளலார் தமிழருக்கு தமிழ்படித்தோருக்கு என கிளம்புவதெல்லாம் வறட்டு அரசியல், அறியாமையின் வெளிப்பாடு, கொஞ்சமும் ஆன்மீகம் அறியா அறம் அறியா வெற்று சத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *