யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத்…

View More யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

வன்முறையே வரலாறாய்… – 16

இந்தியா வந்த சூஃபிக்கள் ஏராளமான காஃபிர் இந்துக்களை தங்களின் பிரச்சாரங்கள் மூலம் “அமைதியான” முறையில் முஸ்லிம்களாக மதம் மாற்றினார்கள் என்பதற்கு வரலாற்றில் எவ்விதமான ஆதாரங்களும் இல்லை. அதையும் விட, பல சூஃபிக்கள் பிற மதத்தவர்களை அடியோடு வெறுத்ததுடன், ஜிகாதி மனோபாவமுடையவர்களாக, ஏன், அவர்களே ஜிகாதிகளாக இருந்ததாகத்தான் வரலாறு நமக்கு எடுத்துக் கூறும் உண்மை. இது அவர்கள் (சூஃபிக்கள்) வாழ்ந்த காலத்தில் இருந்த இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட வரலாறு. அவர்களின் மொழியில் சொல்வதானால், காஃபிரி இந்துக்களால் அல்ல.

View More வன்முறையே வரலாறாய்… – 16

வன்முறையே வரலாறாய்… – 15

இந்திய இஸ்லாம் சூஃபிக்களால் “அமைதியான” முறையில் பரப்பப்பட்டதாகத் இஸ்லமியக் கல்வியாளர்கள் எனப்படுவோர் தொடர்ந்து கூக்குரலிடுவதனைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிற்கு வந்த சூஃபிக்கள் அனைவரும் இந்து காஃபிர்கள் மீது புனிதப் போர் (ஜிகாத்) செய்வதற்காக வந்த படுபயங்கர ஜிகாதிகள் என்பதே வரலாறு நமக்குக் கூறும் உண்மை. எனவே அவர்களைப் பற்றி (இந்திய சூஃபிக்களை) இனி சிறிது ஆராய்வோம்.

View More வன்முறையே வரலாறாய்… – 15

வன்முறையே வரலாறாய்… – 14

எதிர்பாராத நேரத்தில் கிருஷ்ண ராயரின் படைகளைத் தாக்கிய முஸ்லிம் படைகள், கிருஷ்ண ராயரின் 10,000 படைவீரர்களைக் கொன்றார்கள். அதன்பிறகும் ரத்தம் குடிக்கும் வெறியடங்காத சுல்தான், விஜய நகரத்திலிருக்கும் அத்தனை குடிமக்களையும் பிடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான். இதனைக் கேள்விப்பட்டுப் பதறிய கிருஷ்ண ராயர், சுல்தானுடன் சமாதானம் பேச தூதுவர்களை அனுப்பி வைக்கிறார். அதனை ஃபெரிஸ்டா இவ்வாறு பதிகிறார் – “அரசர் தவறு செய்தால் ஒன்றுமறியாத அப்பாவிக் குடிமக்கள் என்ன செய்வாரகள்? என்று தூதுவர்கள் கேட்கிறார்கள். அதற்கு சுல்தான், அல்லா எல்லா சிலைவழிபாட்டார்களையும் கொன்றழிக்கச் சொல்லி (குரான் 9:5) உத்தரவிட்டிருக்கிறான். எனவே அதன்படி செய்யவேண்டியது எதுவோ அது செய்யப்படும். உலகின் எந்த சக்தியாலும் அதனை மாற்ற முடியாது என்று பதிலளித்தான்.”…

View More வன்முறையே வரலாறாய்… – 14

காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி

1959ம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோவின் பானுமதிக்கு அளித்த பேட்டியில் சேகுவேரா “லத்தீன் அமெரிக்காவில் மக்கள் கடும் ஏழ்மையால் துன்பபடுகிரார்கள். உங்கள் ஊரில் காந்தி இருந்தது போல் எங்கள் ஊரில் அவர்களை நல்ல வழிக்கு கொன்டுவர தலைவர்கள் இல்லை. அதனால் நான் ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது” என்றார். காந்தியின் சத்தியாகிரகம், அகிம்சை அனைத்தும் அவருக்கு பிடித்ததாக கூறினார். ஊருக்கு திரும்பியதும் காஸ்ட்ரோவுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு பதில் இப்போது ரஷ்யா மூன்றாம் உலகநாடுகளை சுரண்டுவதை லேட்டாக புரிந்துகொண்டார். ரஷ்யா அவருக்கு உதவ மறுத்துவிட்டது. காங்கோவில் நடந்த போராட்டம் தோற்று, பொலிவியா திரும்பினார்…

View More காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி

வன்முறையே வரலாறாய்… – 13

இந்தியாவில் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு மத்திய ஆசியா நோக்கி நடத்திச் செல்லப்பட்ட பெருவாரியான ஹிந்துக்கள் ஆஃப்கானிஸ்தானத்தின் மலைகளைக் கடக்கையில் குளிர் தாளாமால் இறந்து போனார்கள். அதன் காரணமாகவே ஆஃப்கானிஸ்தானத்து மலைகள் “ஹிந்து குஷ் (hindu killers or slayer of hindus) என்று பெயரிடப்பட்டன. இதனைக் குறித்து எழுதும் இப்ன்-பதூதா, “இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைச் சிறுவர்களும், சிறுமிகளும் அந்த மலைகளைக் கடக்கையில் பனியிலும், குளிரிலும் சிக்கி இறந்து போனார்கள்” என்கிறார்… திப்புசுல்தானின் ஜெனரலான மொபிபுல் ஹசன் எழுதிய திப்புவின் வாழ்க்கைக் குறிப்பில் (பின்னால் திப்புவின் மகனால் அது சரிபார்த்துச் செப்பனிடப்பட்டது), திப்புசுல்தான் திருவாங்கூர் போரில் ஏறக்குறைய 10,000 ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்றதுடன், 7000 பேர்களை அடிமைகளாகப் பிடித்தான் என்று குறிப்பிடுகிறான். இவ்வாறு அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் (பெரும்பாலோனோர் இந்துக்கள்) ஸ்ரீரங்கபட்டணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டுப் பின்னர் மாட்டிறைச்சியை உண்ணும்படி செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டார்கள்….

View More வன்முறையே வரலாறாய்… – 13

திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?

அறிவு சார், வரலாற்று சார் பண்பாட்டு அறிவு ஓட்டத்தில் மிகப்பெரிய அகழியை வெட்டி தமிழ் மக்களை கலாச்சார, பண்பாட்டு அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட அரசியல்.தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு வரை அனைத்திலும் ஊழல் செய்தும் திருடியும் சொத்து சேர்ப்பது மட்டுமே பெருமை என மக்களை மழுங்கடித்தது, சொரணை என்பதும், வெட்கம் , மானம் என்பதெல்லாம் ஏதோ அயல் கிரக வாசிகளின் மொழி என்பதாக மக்களை நம்ப செய்தது… திராவிட இயக்கத்திற்கு ஆள் சேர்க்க அவர்கள் விரித்த தூண்டில் எதிர்கலாச்சாரம் எனும் கேடு. எந்த ஒழுக்க விதியையும் மீறலாம். யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம். அம்மா, அக்கா, தங்கை, அடுத்தவன் மனைவி,மகள் என்பதெல்லாம் சமூகம் நம் மேல் இட்ட குறியீடு தான் பாலியல் சிந்தனைகளுக்கும் செய்கைகளுக்கும் அது தடையாக இருக்க கூடாது. என்பதாக துவங்கி சாராயம் குடிப்பது எப்போதும் நல்லது. குடித்து விட்டு வந்து பெண்டாட்டி பிள்ளைகளை உதைப்பது நாகரீகம். முட்டாள்கள் தான் படிக்க வேண்டும். யாரையும் மதிக்க வேண்டியதில்லை.ஆபாச வசை சொல் தான் இயல்பானது, நாகரீக மொழியில் மரியாதையாக பேசுவது பெரும் பாவம். குடும்பம் குழந்தை குட்டிகள் என சமூகத்தோடு இணைந்து வாழ்வது தண்டனைக்குரிய செயலாக முன்வைத்தது இந்த எதிர் கலாச்சாரமே பாமரர்களையும் சில அறிவுள்ளவர்களையும் ஈர்த்து….

View More திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?

வன்முறையே வரலாறாய்… – 12

அவுரங்கசீப்பின் வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லும் மா-அசிர்-இ ஆலம்கிரி, 1669-ஆம் வருடக் குறிப்பொன்றில், “முட்டாள் பிராமணர்கள் தங்களுடைய கேவலமான புத்தகங்களை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு – இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு – சொல்லித் தருகிறார்கள். அவர்களிடம் படிக்க தூர, தூரப் பிரதேசங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் இவர்களின் கேவலமான அறிவியலைப் படிக்க வருவதாக அவுரங்கசீப்பிற்குத் தெரியவந்தது. இதனால் கடும் சினம் கொண்ட அவுரங்கசீப், எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் காஃபிர்களின் கோவில்களையும், அவர்களின் பள்ளிகளையும் தயக்கமின்றி இடித்துத் தள்ளும்படி அவரது ஆட்சியின் கீழிருந்த அத்தனை உயர் அதிகாரிகளுக்கும் (கவர்னர்கள்) உத்தரவிட்டதுடன், இனி ஒருபோதும் காஃபிர்கள் தங்களின் வேதங்களை ஓதுவதையும், ஆலயங்களில் பிரார்த்தனை செய்வதையும் அனுமதிக்கவே கூடாது” என உத்தரவிட்டதாகக் கூறுகிறது.

View More வன்முறையே வரலாறாய்… – 12

வன்முறையே வரலாறாய்… – 11

இந்தியாவை வந்தடைந்த சூஃபிக்கள் இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். பெரும்பாலான இந்திய சூஃபிக்கள், இந்து காஃபிர்களுக்கு எதிராக ஜிகாத் செய்யவதற்காக இந்தியா வந்தவர்கள். வேறு சில இந்திய சூஃபிக்களோ தாங்களை இறை தூதர்களாக அழைத்துக் கொண்டவர்கள். அதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லவும் பட்டவர்கள். […] காலம் செல்லச் செல்ல ஜிகாதிப் போர்கள் குறைந்தன. எனவே ஜிகாதினை தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் (காஜிக்கள்) துறவிகளைப் போல அலைந்து திரிந்தார்கள். அல்லாவின் சுவனத்திற்குச் செல்ல எளீய நுழைவுச் சீட்டான ஜிகாது செய்யும் வாய்ப்பினைத் தேடியலைந்த பல முஸ்லிம்களும் இவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். காஜிக்கள் அல்லது முராபத்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், ஜிகாது செய்யும் வாய்ப்பு குறைந்து போன காலகட்டத்தில் மெதுவாக வன்முறையற்ற வாழ்க்கை முறைக்குத் தங்களை திருப்பிக்கொண்டார்கள். கிறிஸ்தவ மற்றும் பவுத்த மடாலயங்களைப் போலவே இவர்களும் தங்களுக்கென ஆஸ்ரமங்களை அமைத்துக் கொண்டார்கள் எனக் கூறுகிறார் சர் ஹாமில்டன் கிப் என்னும் மேற்கத்திய வரலாற்றாசிரியர்.

பின்னாட்களில் சூஃபிக்கள் என்று அழைக்கப்பட்ட மேற்படி காஜிக்கள் உலக வாழ்க்கையின்பங்களைத் துறந்து, பிச்சைக்காரர்களாக (பக்கிர்), மருத்துவம் செய்பவர்களாகவும் மாறி புகழ், பொருள், விருந்து, பெண்கள், நட்பு என அனைத்தையும் துறந்து எளிய வாழ்க்கை வாழத் தலைப்பட்டார்கள்.

View More வன்முறையே வரலாறாய்… – 11

வன்முறையே வரலாறாய்… – 10

எந்தவொரு பகுத்தறிவுள்ள, சிந்திக்கும் திறனுள்ள மனிதனும் சூஃபிக்களின் அற்புத சக்திகளைப் பற்றிய கட்டுக்கதைகளை நம்பவே மாட்டான். அது நம்பிக்கையாளர்களின் கற்பனையில் உதித்த வெறும் புனைகதைகளேயன்றி வேறோன்றுமில்லை என்பதால். இந்த சூஃபிகளின் “அற்புத சக்தி” பற்றி ஆராய்ந்த பேராசிரியர் மொஹ்மத் ஹபீப் அவர்கள் இவையத்தனையும் பின்னாட்களில் இட்டுத் திரிக்கப்பட்ட புனைவுகளே என்னும் முடிவினை நம் முன் வைக்கிறார். இன்றைக்குக் கிடைக்கும் ஆதாரங்களின்படியும், இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சூழ்நிலைகளையும் அறிந்த் எவரும் சூஃபிக்கள் இந்துக்களை அமைதியான வழிமுறைகள் மூலம் மதம் மாற்றினார்கள் என்பது வெறும் புளுகுகள் என்பதினைத் தெளிவாக்குகின்றன. சூஃபிகளில் புகழ் வாய்ந்தவரான அமீர்-குஸ்ரு (பதினான்காம் நூற்றாண்டு) அவரது குறிப்புகளில் எவ்வாறு காஃபிர் இந்துக்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டு வாள் முனையில் பெருவாரியாக மதமாற்றம் செய்யப்படார்கள் என்பதனை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் எந்தவொரு இடத்திலும் காஃபிர் இந்துக்கள் அமைதியான முறையில் மதமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு சிறு குறிப்பு கூட இல்லை என்பதினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

View More வன்முறையே வரலாறாய்… – 10