எப்படி சீக்கியர்கள் தங்கள் குருக்களின் பலிதானங்களை தம் வீரர்களின் தியாகங்களை நினைவு கொள்கிறார்களோ அப்படியே தியாகி குமார பாண்டியனையும், பேராசிரியர் பரமசிவத்தையும், ஆடிட்டர் ரமெஷையும் பலிதானி வெள்ளையப்பனையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் பலிதான தினங்கள் இந்து ஒற்றுமைக்கும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும் நாம் பிரதிக்ஞை எடுக்கும் தினங்கள் ஆக வேண்டும். இந்நிலையில் நாம் மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது இதைத்தான். காவல்துறை செய்யும் கைதுகளுக்கு அப்பால் இந்துக்களாகிய நமக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்து இயக்கங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்த வழக்குகளின் போக்குகள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும். அரசியல் நிர்ப்பந்தங்களால் இங்கு ஜிகாதி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்தால் நிச்சயமாக இந்து இயக்கங்கள் அந்த வழக்குகளை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு எடுத்து சென்று விசாரிக்க அழுத்தங்கள் அளிக்க வேண்டும்.
View More தென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்Category: பயங்கரவாதம்
வன்முறையே வரலாறாய்…- 26
“1947 பிரிவினையின் போது, இந்து மற்றும் சீக்கியர்களின் முகவரிகள் தாங்கிய ஆயிரக்கணக்கான கடிதங்களும், தந்திகளும் லாகூரின் மத்திய தபால் தந்தி அலுவலகத்திற்கு வந்து குவிந்தன. படுகொலை செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் கற்பழிக்கப்பட்ட பெண்களின் படங்கள் அந்தக் கடிதங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அப்படங்களின் பின்புறம் எழுதப்பட்டிருந்த செய்தி, ‘முஸ்லிம்கள் உங்களின் நிலத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர்களின் கையால் இந்து, சீக்கிய சகோதரர்களுக்கு நடந்த இந்த நிலைமையே உங்களுக்கும் காத்திருக்கிறது’ என்றது. இந்துக்களின் மனோபலத்தைக் குறைத்து அவர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கும் விதமாக முஸ்லிம் லீகினால் அனுப்பி வைக்கப்பட்டவையே அந்தக் கடிதங்கள்.. முஸ்லிம்களல்லாதவர்களை பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்க முஸ்லிம் லீக் மிகுந்த கவனத்துடன் திட்டங்களைத் தீட்டியதுடன் அதனை மிகத் திறமையாகச் செயல்படுத்தவும் துவங்கியது” என விளக்குகின்றனர் காலின்ஸ் மற்றும் ல-பியேர்…
View More வன்முறையே வரலாறாய்…- 26முடிவல்ல தொடக்கம்
பொதுவாக இந்திய அரசுக்கு ஒரு ‘நல்ல பெயர்’ உண்டு. வெளிநாட்டில் இந்தியர்கள் இன்னல்கள் படும் போது அது கண்டு கொள்ளாது என்பதுதான் அது. இந்திய அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் என்பது உலக பிரசித்தி பெற்றது. … வெளியே தெரியும் காட்சிகளுக்கு அப்பால் பல விஷயங்கள் மோதி அரசால் நிகழ்த்தப்பட்டன. இந்திய ஊடகங்களில் அதிகம் கண்ணைக்கவராத ஒரு செய்தி உண்டு. பாரசீக வளைகுடாவிலும் ஏமன் வளைகுடாவிலும் விமானங்கள் தாங்கிய இந்திய போர்கப்பல்கள், ஐ.என்.எஸ்.மைசூர், ஐ.என்.எஸ்.தர்காஷ் ஆகியவை நிறுத்தப்பட்டன. … வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இந்திய அரசு இப்போது அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக இயங்குகிறது என்பது நம் 67 ஆண்டுகள் இந்திய அரசு வரலாற்றில் ஒரு நல்ல மாற்றம். ஒரு ஆறுதலான மாற்றம். அதை உருவாக்கி அளித்தமைக்காக மோதியின் அரசுக்கு என்றென்றும் தேசபக்தி கொண்ட இந்தியர்களின் நன்றி இருக்கும்.
View More முடிவல்ல தொடக்கம்கிலாபத் கனவுகள்…
இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நபர் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி. இவர் 2007 இல் கடலூரில் பயிற்சி ஒன்றுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலூர்? நினைவிருக்கலாம் 2004 இல் கடலூரில்தான் மனிதநீதி பாசறையின் அடிப்படைவாத முகாம்களை காவல்துறை வெளிக்கொண்டு வந்தது. … சென்னை கல்லூரி இளைஞர்கள் கிலாபத் கனவுகளுடன் மூளை சலவை செய்து வெளிநாட்டு ஜிகாத்களுக்கு அனுப்பப்படுவதும் அவர்கள் பயிற்சி பெற்ற ‘முஜாகிதீன்களாக’ இந்தியா திரும்பி இங்கே ஜிகாதி கிலாபத் வைரஸ்களை பரப்புவதும் மிகவும் சீரான நெடுநாள் திட்டத்தின் பகுதியாகும்.
View More கிலாபத் கனவுகள்…வன்முறையே வரலாறாய்…- 23
தேசப் பிரிவினையின் போது, நவகாளி காங்கிரஸ் அங்கத்தினர்களால் கல்கத்தா காங்கிரஸ் அலுவலகத்திற்கு அக்டோபர் 15, 1946-இல் அனுப்பப்பட்ட ஒரு தந்தி நடந்த பயங்கரங்களுக்கு சான்றாக உள்ளது.. நான்கு இலட்சம் இந்துக்கள் வாழ்ந்த நவகாளியில், ஏறக்குறைய 95 சதவீதம் பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம்களாக்கப் பட்டார்கள். மறுத்தவர்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்… ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் மனைவிகளும் மகள்களும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு முஸ்லிம் குண்டர்களுக்கு மணம் செய்விக்கப்பட்டார்கள். இந்துக்கள் வசித்த பல கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்தன. இந்துக் கோவில்கள் உடைத்தெறியப்பட்டன.. பீகார் முஸ்லிம் லீக் வெளியிட்ட இன்னொரு சுற்றறிக்கை முகமதலி ஜின்னாவிடம், “இந்து காஃபிர்களுக்கு இத்தனை வருடங்கள் நேரம் கொடுத்தோம். இருண்ட காஃபிரி மதமான இந்துமதத்தை அழித்து, உலகிற்கு ஒளியூட்டும் இஸ்லாத்தை நிறுவ நமக்கு நேரம் வந்துவிட்டது. அரேபியாவில் இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்தது போல இந்தியாவிலும் காஃப்ரி இந்துக்களைக் கொன்று இந்த உன்னத காரியத்தைச் செய்வோம்” என வலியுறுத்துகிறது…
View More வன்முறையே வரலாறாய்…- 23சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்
சென்னையில் இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைதாகியுள்ள நிலையில், மீதமுள்ள சக பயங்கரவாதிகளைக் காப்பாற்ற, காவல்துறையை திசைதிருப்புவதற்காக இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது… மே 1 முதல் மூன்று நாட்களுக்கு ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்வதைக் கணக்கிட்டு, மோடியின் சுற்றுப்பயணத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கலாம்… கைதாகியுள்ள ஜாகீர் ஹுசேன் அளித்துள்ள தகவல்களின்படி பார்த்தால், நாட்டின் கிழக்கு கடற்கரை முழுவதிலுமே பயங்கரவாதிகள் திட்டமிட்ட முறையில் காலூன்றி இருப்பது தெரிகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம், பூம்புகார், வேதாரண்யம், காயல்குடி, கோடியக்கரை, சென்னை, எண்ணூர் பகுதிகளில் சத்தமின்றிச் செயல்படும் பயங்கரவாத ஆதரவுக் குழுக்கள் இயங்குவதாக மத்திய புலனாய்வுத் துறையே தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி கள்ளநோட்டுப் புழக்கம், தங்கக் கடத்தல், மர்ம நபர்கள் நடமாட்டம் போன்ற சமூகவிரோத நிகழ்வுகள் நடப்பதைக் கணக்கிட்டால், நம்மைச் சூழ்ந்துள்ள பயங்கர ஆபத்தின் பரிமாணம் விளங்கும்…
View More சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்வன்முறையே வரலாறாய்… – 17
அன்பு வழியில் மதமாற்றம் செய்ய விரும்பும் எந்த ஒரு சூஃபியும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக்களை கூட்டம், கூட்டமாகக் கொல்வதினைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கமாட்டார். ஆனால் சூஃபிக்கள் அதற்கு நேரதிரான முறையில்தான் நடந்து கொண்டதாக ஒவ்வொரு இஸ்லாமிய வரலாற்றாசிரியனும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறான். இன்றைக்கு இந்திய இந்துக்களால் பெரு விருப்பத்துடன் வணங்கப்படும் க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி, நிஜாமுதீன் அவுலியா, ஷேக் ஷா ஜலால் போன்ற சூஃபிக்களும் இப்படிப் பட்டவர்கள் தான், இந்துக்களை வென்று அவர்களை அடிமைப்படுத்துவதனையும், கொள்ளையடிப்பதினையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கே வந்தவர்கள் தான். இதை இந்திய இந்துக்கள் இன்றைக்கு மறந்து விட்டார்கள். காலத்தின் கோலம் என்பதினைத் தவிர வேறென்ன சொல்ல? அவர்களால் கொல்லப்பட்ட அல்லது அவர்களின் தூண்டுதலால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்துக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனோ இது?….
View More வன்முறையே வரலாறாய்… – 17தஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்
நேற்று தமிழ்ப் புத்தாண்டு அன்று தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது பயங்கரவாதிகளால் கல்வீசி தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான பின்னணி நாளிதழ்களில் வெளிவரவில்லை… தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல்துறை மருத்ததால், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் சதியை கண்டறியக்கோரியும் பா.ஜ.க தொண்டர்கள் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்….
View More தஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்வன்முறையே வரலாறாய்… – 8
பாபா சாகேப் அம்பேத்கர் எழுதுகிறார் – “மாப்ளாக்களின் கையில் சிக்கிய இந்துக்கள் கொடூரமான முடிவைச் சந்தித்தார்கள். படுகொலைகள், கட்டாய மதமாற்றங்கள், இந்துக் கோவில்களின் மீதான தாக்குதல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவினைச் சிதைத்தல், கொள்ளை, தீ வைத்தல், பொது இடங்களை இடித்துத் தகர்த்தல்…. என வன் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். சுருங்கச் சொன்னால் மனிதர்கள் அறிந்த எல்லாவிதமான காட்டுமிராண்டித்தனமான செயல்களும் இந்துக்களுக்கு முஸ்லிம் மாப்ளாக்களால் செய்யப்பட்டது. இன்றுவரை அங்கு எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர்கள் காயம் பட்டார்கள் என்பதே அறியப்படவில்லை”… 1921 மாப்ளா கலவரம் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரானதாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் வாழும் பகுதியில் பிரிட்டிஷ்காரர்கள் எவரும் இல்லாததால், காலம் காலமாக தங்களுடன் வாழ்ந்த தங்களின் அண்டை வீட்டார்களான அப்பாவி இந்துக்களின் மீது மாப்ளா முஸ்லிம்களின் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது…
View More வன்முறையே வரலாறாய்… – 8வன்முறையே வரலாறாய்… – 4
காஜியானாவர், ஜிஸியா வரி வசூல் முறைகளைக் கூறிவிட்டு அதற்கும் மேலாக, “வரி கொடுக்கும் காஃபிர் வாய் திறந்து எதுவும் சொன்னால், வரி வசூலிக்கும் அதிகாரி அவன் வாயிலே எச்சிலைத் துப்ப வேண்டும். இவ்வாறு செய்வதனால் அந்த காஃபிர் தான் எத்தனை கீழான அடிமை என்பது, இஸ்லாம் எத்தனை மேலான மார்க்கம் என்பதுவும், பொய்யான கடவுள்களை அவன் வணங்கும் கேவலமும் அவனுக்கு விளங்கும்” என சுல்தானுக்கு எடுத்துக் கொடுக்கிறார்… துன்புற்ற காஷ்மீரி பண்டிட்டுகள் அன்றைய சீக்கிய குருவான தேஜ்பகதூர் சிங்கிடம் தஞ்சமடைந்து, அவரின் உதவியை வேண்டி நின்றார்கள். குரு தேஜ்பகதூர் அவுரங்கசீப்பின் அரசவையை அடைந்து அவனிடம் எடுத்துரைக்கிறார். சினமடைந்த அவுரங்கசீப் தேஜ்பகதூரைச் சிறையிலைடைத்து, வாரக்கணக்கில் துன்புறுத்திப் பின்னர் அவரையும் இஸ்லாமியராக மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தான். இதனை ஏற்க மறுத்த குரு தேஜ்பகதூரும் அவரது இரண்டு சீடர்களும் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்….
View More வன்முறையே வரலாறாய்… – 4