நம்பிக்கை – 8: பக்தி

“பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் தரும் அடித்தளச் செய்தியே ‘தீயதைச் சகித்துக்கொள்ளாதே’ என்பது தான். ஒரு போர் வீரன் செய்ய வேண்டிய காரியமான போர் புரிதலைக் கைவிட்டு ஓட முயன்ற அர்ஜுனனை, அவனுடைய கடமையான போர் புரிதலை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறார் கிருஷ்ணர். உண்மையில், தன் கடமையிலிருந்து நழுவப்பார்க்கும் அர்ஜுனனைப் பரிகசிக்கிறார். தீயவர்களைக் கொல்லுமாறு அர்ஜுனனை உந்துகிறார்; அது வெறுப்பினால் அல்ல; தீமைகளை, தீய செயல்களைத் தடுப்பதற்காகவே!”… “கிருஷ்ணர் இருந்தார் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது? கீதை வயதானவர்களுக்காகத்தான் என்று தான் நான் எப்போதும் நினைத்திருந்தேன்”. என்றான் கௌசிக்…

View More நம்பிக்கை – 8: பக்தி

நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்

நாம் ஈடுபடும் எந்த வேலையாக இருந்தாலும், புத்தக அலமாரியைச் சுத்தம் செய்வது, அறையை மெழுகிச் சுத்தம் செய்வது, சமைப்பது, தோட்ட வேலை, படிப்பது, என்று எந்த வேலையாக இருந்தாலும், அதை ஆண்டவனுக்குச் செய்யும் ஒரு அர்ப்பணிப்பாகக் கருதிச் செய்வதாக இருந்தால், அதைச் சரியாகவும், சுத்தமாகவும், எந்தக் குறையுமின்றி நிறைவாகச் செய்வதற்கும் அதிகப்படியான அக்கறை எடுத்துக்கொள்வாயா, இல்லையா?.. வெற்றி என்பது வேறு. உன் முழுத்திறமையையும் வெளிப்படுத்துவது என்பது வேறு. நம் யாராலும் வாழ்வின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால், விளைவுகளைப் பற்றிக் கவலையில்லாமல், நம்மால் நம் முழுத்திறமையையும் கண்டிப்பாகக் காட்ட முடியும். என்ன, ஒத்துக்கொள்கிறாயா?…

View More நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்

நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக?

பள்ளிக்கூடத்துக்கும் தியேட்டருக்கும் வருபவர்கள் ஒரே நோக்கத்துடன் வருகிறார்கள். அவர்கள் அனைவரின் கவனமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும். ஆகவே, அவ்விடங்களுக்கும் நமக்கும் ஒருவிதமான தொடர்பு இருக்கின்ற உணர்வு ஏற்படும்; நம்முடைய கவனம் சிதறுவது குறைவாக இருக்கும்; அந்த இடங்கள் அளவில் மிகவும் பெரியதாக, குறிப்பிட்ட நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன், நம்முடைய கவனம் அதிகமாகக் குவிகின்ற இடங்களாக இருக்கும். அங்கு வருகின்ற அனைவரும் சேர்ந்து இருக்கின்றபோது, நம் செயல்பாடு ஒரு குழுமச் செயல்பாடாக, மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கும்… உண்மையில் அந்த அதியுயர்ந்த சக்திக்குப் பெயரோ உருவமோ கிடையாது. இந்தப் பெயரற்ற, உருவமற்ற, அதியுயர்ந்த சக்தியைக் கண்கள் மூடிய நிலையில் உன்னால் சில நிமிடங்களாவது நினைத்துப்பார்க்க முடியுமா?..

View More நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக?

நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்?

நான் ஆரம்பத்திலிருந்தே, எப்போதும், பிரார்த்தனை என்பது ஒரு பயனைப் பெறுவதற்கு என்று நம்பியிருந்தால்? அதை நான் எப்படி மாற்றிக்கொள்வது?… நல்ல கேள்வி. நீ தேடியது கிடைப்பதற்கு உனக்குப் பிரார்த்தனை உதவியதா என்கிற கேள்வியை நீ உன்னிடத்திலேயே கேட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு சில முறை நடந்திருக்கலாம். அனால் எப்போதும் அப்படி நடந்திருக்காது. விதிவிலக்கை விதியாக்க முடியாது. உண்மியிலேயே கடவுள் நீ கேட்கும் பயன்களையெல்லாம் தந்துகொண்டிருந்தால் இவ்வுலகில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரிந்தது தானே! ப்ரூஸ் அல்மைட்டி (Bruce Almighty) திரைப்படம் ஞாபகம் இருக்கிறதல்லவா?…. “அண்ணா! இந்தக் காலத்துக் குழந்தைகள் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கிறார்கள். நான் எப்படிப் பதில் சொல்வது?” என்று தன் கவலையைத் தெரிவித்தாள் சௌம்யா. இந்த நவீன காலத்துக் குழந்தைகள் தான் ஆதாரம் கேட்கின்றன என்று நீ உண்மையிலேயே நினைக்கிறாயா? பண்டையகாலம் தொன்றுதொட்டு, மனித இனம் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து, இதே கதைதான். உண்மையில் சொல்லப்போனால், நம்முடைய சமய / ஆன்மிக நூல்களில் பெரும்பான்மையானவை குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் போலவும், கேள்வி பதில் பகுதிகளாகவும் தான் இருக்கின்றன…

View More நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்?

நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன?

ஒரு செடியைக் கற்பனை செய்துகொள். தான் வளர்வதற்கும், வலிமை பெறுவதற்கும், உயரமாக நிற்பதற்கும், அது சூரியனைச் சார்ந்து இருக்கின்றது. அது எவ்வளவு அதிகமாக சூரியனைச் சார்ந்து இருக்கிறதோ, அவ்வளவு வலிமையாக வளர்கிறது. செடி வலிமையாக வளர்வதில் சூரியனுக்குத் தானாக எந்த ஈடுபாடும் கிடையாது. ஆனால், சூரியன் கொடுக்கும் ஒளியையும் சக்தியையும் வேண்டி, அந்தச் செடியானது சூரியனைத் தீவிரமாகச் சார்ந்து இருக்கும்போது, பெரிதும் வளர்ந்து மரமாகின்றது. ஒளியும், சக்தியும் கொடுக்கும் நற்பண்பின் மூலம் சூரியன் தன்னுடைய சக்தியைக் குறைத்துக்கொள்வதில்லை… அது விளக்கெண்ணை என்று உனக்குத் தெரியாது. தேன் என்று நினைத்தாய். குடித்த பிறகு உன் எதிர்வினையானது, நீ அதை என்னவென்று நம்பினாயோ அந்த நம்பிக்கையைச் சார்ந்ததா, அல்லது, விளக்கெண்ணை தனது வேலையைக் காண்பித்துவிட்டு வெளியே வந்ததா?…

View More நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன?

நின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்

மலைமேல் பெய்த மழைநீர் ஆறாக சமதளத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும் நதிகளிற் சில நேரே கடலிற் புகும்; வளைந்து வளைந்து தடைபட்டுப் பட்டுப் பாயும் நதிகளும் இறுதியில் கடலில்தான் சங்கமம் ஆகும். அதுபோன்றே சமய உலகில் வேதாந்தம்., சாங்கியம்,யோகம், பாசுபதம் , வைணவம் எனப் பல சமயநெறிகள் உள்ளன. அவை தம்முள் வேறுபட்ட கொள்கைகளும் அனுட்டானங்களும் உடையன. ஒவ்வொன்றும் அபிமானத்தாலே தன்னுடைய கொள்கையே பெருமையுடையது, மேன்மையது என்று கூறிக் கொண்டாலும் , நேராகச் செல்லும் நதியும் வளைந்து செல்லும் நதியும் இறுதியில் கடலைச் சேர்ந்தே முடிவதுபோல எச்சமயத்தாரும் இறுதியில் சிவனைச் சேர்ந்தே முத்தி பெறுவர்… சிவாபராதத்திலிருந்து உய்யவும் மீண்டும் கந்தர்வ நிலைபெற்று ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றல் பெறவும் சிவபெருமானின் பெருமைகளைப் பாடித் தோத்தரிக்க விரும்பினார் புட்பதந்தர். ஆனால் பெருமானின் பெருமைகளை எடுத்துப் புகழும் ஆற்றல் தனக்கு இல்லையே எனவும் வருந்தினார். இறைவன் அருள் புரிந்தார். சிவனின் மகிமைகளை எடுத்தோதிப் போற்றும் நூலாதலின் இது ‘சிவமஹிம்ந ஸ்தோத்திரம்’ எனப் பெயருடையதாயிற்று….

View More நின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்

பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை

தீ வளர்த்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. அன்பு, அறிவு ,அருள், இன்பம் ஆகியவை வேண்டும் கனலாகும் அக்னி தத்துவத்தில் அவனுக்கு பெருமதிப்பு இருந்ததால்தான் வழிபாட்டு அம்சங்களில் மட்டுமின்றி, கவிதைநயம் வெளிப்படும் இடங்களிலெல்லாம் தீ, நெருப்புச்சுவை, சுடர் சோதி, கனல், அக்னிக்குஞ்சு போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறான்.
அக்னியின் பல்வேறு வடிவங்கள் குறியீடுகளாகவும், நேர்முகக் கருத்துக்களாகவும், அமைகின்றன. அறியாமை உறக்கத்திலிருந்து ஆத்மாவை எழுப்பும் விடியலாக வைகறை வேதங்களில் காட்டப்படுகிறாள்.

View More பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை

காசி[நன்னகர்]க் கலம்பகம்

முக்தி தரும் முத்தலங்களுள் ஒன்றான காசித்தலத்தின் மகிமையைக் காசிக் கலம்பகம் என்ற பிரபந்தத்தின் மூலம் தெரிவிக்கிறார் குமரகுருபரர். பல வகை மலர்கள் கலந்த மாலை கதம்பம் எனப்படுவது போல பலவகையான பொருட்களும் அகம் சார்ந்த பாடல்களும், பல வகையான செய்யுட்களும் இக்கலம்பகத்தில் விரவியிருக் கின்றன… குருகே! இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணிவதை விட்டுவிட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதேபோல சுகத்தை விடுத்தாள் என்றும் சொல் (சுகம் என்றால் கிளி என்றும் பொருள்). பால் பருகும் அன்னமே! நீ சென்று என் ஐயனிடம், இவள் அன்னத்தையும் உன்பொருட்டு விடுத்தாள் என்று சொல் என்கிறாள். இவளுக்கு உண்ணும் உணவும் தேவையில்லை (அன்னம் என்றால் உண்ணும் உணவு என்றும் பொருள்)…

View More காசி[நன்னகர்]க் கலம்பகம்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8

விஷ்ணுவால் அதிகம் விரும்பப்படும் எட்டு மலர்கள் யாவை? அவற்றை நாம் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா? இல்லை! அகத்திலேயே அவற்றை நீரூற்றி வளர்க்கலாம் என்பது பெரியோர்களின் கொள்கை. அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்…. திருமாலின் இயல்பு, மேன்மை, நீர்மை ஆகியவற்றைக் காட்டும் ‘ஸ்வரூப-குணங்களை’ விவரிக்கும் பல பகுதிகள் சங்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன…”நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள, நின் தண்மையும் சாயலும் திங்கள் உள” – சூரியனின் வெம்மை, சந்திரனின் குளுமை இரண்டும் பூமிக்கு இன்றியமையாதது போல, சர்வேசுவரனாகிய வாசுதேவன் உயிர்களிடத்துக் காட்டும் அன்பு, வன்மை இரண்டுமே உலக நடப்புக்கும் அவ்வுயிர்களின் ஆன்ம வளர்ச்சிக்கும் அவசியம்…

View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8

[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

ருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்…. அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்… யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் – ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே…

View More [பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்