பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்

கோலி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கோவிந்த் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உழைத்தவர் இன்று நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிக்க இருக்கிறார். இந்திய குடிமை பணியில் வெற்றி பெற்றவர் தான் விரும்பிய துறை கிடைக்காததால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர். அரசியல் சாசன சட்டத்தில் மிக தேர்ச்சி உள்ளவர் என்று சொல்லப்படுகிறது அதோடு பெரும் அறிஞர். இந்திய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர்…. அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, இப்போது ராம்நாத் கோவிந்த் – பாஜக அடுத்தடுத்து சிறுபான்மையினர் மற்றும் தலித்களையே உயர்பதவிகளுக்கு முன்நிறுத்துகிறது. இது சந்தர்ப்பவாத , தாஜா அரசியல் அல்லவா என்று நம்மவர்களே சிலர் கேட்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு இன்னும் நம் தேச அரசியல் பிடிபடவே இல்லை….

View More பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்

குடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்

உலகையே உறைய வைத்த இந்திய ஜன நாயகத்தின் கறுப்பு பக்கமாக வர்ணிக்க படும் எமர்ஜென்சியின் முக்கிய சதிகாரர் தான் நம் குடியரசுத் தலைவர் – ஜன நாயகத்தின் உச்சமான நாடு என மதிக்கப்படும் ஒரு நாட்டின் முதல் குடிமகன்… 1980,82 வாக்கில் வர்த்தக துறை & உருக்கு, சுரங்க அமைச்சராக இந்திய கனிம வளங்களை சூறையாட அனுமதிக்கிறார் பிரணாப்.. சத்பால் மிட்டல் நிறுவனத்தின் நலனுக்காக இந்திய தொலை தொடர்பு துறையின் வளர்ச்சியையே முடக்கி வைத்தார்… பாதுகாப்புதுறை அமைச்சராக ஸ்கார்பென் நீர்மூழ்கி பேரத்தில் பெரும் தொகையை கமிஷனாக பெறுகிறார். வெளியுறவு அமைச்சராக மிக ஆபத்தான 123 ஷரத்தில்,இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் முற்றிலும் அமெரிக்க சார்பாக நடந்து கொண்டார்..

View More குடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்