கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

ஜி.யு.போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும்,  Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போலவும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார்.

போப் தாமும் தம்முடன் இருந்து மணிவாசகரும் கண்டு புத்துணர்வு பெற்றதாகக் கூறும் ஓவியங்களுள் கிறித்துவின் பிலாக்கணம் அல்லது ஒப்பாரி என்னும் இந்த ஓவியமும் ஒன்று. இதில் இயேசுகிறிஸ்து பிணமாகக் கிடக்கிறார்

img_6719_-_milano_-_s__giorgio_al_palazzo_-_b__luini_-_cappella_ss__sacramento_1516_-_foto_giovanni_dallorto_-_8-mar-2007சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த இயேசுகிறித்துவின் உடல் தரையில் கிடத்தப்பட்டுள்ளது. அவருடைய மரணத்துக்குத் துக்கப்படுவோர் ஒருவித நம்பமுடியாத குழப்பமான மனநிலையில் உள்ளனர். ஸ்நானகன் யோவான் தன் செயலற்ற நிலையில் கைகளை பரப்பி விரித்துக்கொண்டு நிற்கிறார். தாயாகிய கன்னி மேரி பிணமாகியுள்ள தன் மகனின் தலையை மடியில் கிடத்தி உயிரின் மிச்சம் ஏதேனும் உள்ளதா என மார்பைத் தடவிப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். மாகதலனா மேரி இயேசுவின் பாதங்களை வருடித் தேய்த்துக் கொண்டுள்ளாள் இந்த ஓவியம் ChapeLல் உள்ள கூக்குரல் மிக்க(most auditory) காட்சிகளில் ஒன்று. துக்கிப்பவர்களின் ஓலம் அந்த நிலப்பரப்பு முழுவதும் பரவுகின்றது. அந்த அவலப் புலம்பல் ஆகாயத்தில் சூழ்ந்துள்ள தேவதைகளின் கூக்குரலையும் ஊடுருவிச் சிதைக்கின்றது.

இந்த ஓவியத்தைப் போல இயேசு கிறித்துவின் மரணத்தைச் சித்திரிக்கும் ஓவியங்கள் பல உள்ளன.

இந்த ஓவியம் அன்புடையவர் ஒருவரை இழப்பதினால் நேரிடும் அவலத்தின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் அற்புதக் கலைப்படைப்பாக இருக்கலாம். ஓவியத்தில் உள்ள அவல உணர்வு அதனை ஒன்றிக் காணுவோரின் உள்ளத்திலும் தொற்றிப் படருகின்றது என்பதும் உண்மை எனலாம். அந்த ஓவியத்தில் உள்ளோர் போடுகின்ற கூக்குரல் நம்முடைய செவிக்கும் எட்டுகின்றது என்பதும் உண்மையே.

ஆனால் இந்த ஓவியத்தால் ஒருவன் அடையக் கூடிய ஆன்மலாபம் என்ன? இதனை மனத்திலிருத்திக் காண்பவருக்கு அவல உணர்வால் மனச்சோர்வும் திகைப்பும் உண்டாகுமே அன்றி ஆன்மநெறிக்கு வேண்டிய உறுதியும் மன எழுச்சியும் தோன்றாது. மணிவாசகர் மானசீகமாகத் தம்மோடு இருந்து இந்த ஓவியத்தை கண்டு மெய்யுணர்வு பெற்றார் எனப் போப் கருதுவது விந்தையாக உள்ளது. அந்தமில்லா ஆனந்தம் பெற்ற மணிவாசகப் பெருமானை இழிவு செய்வதாகவே தோன்றுகிறது.

நம்முடைய பெரியோர்கள் எத்தகைய மரணம் ஆகாதெனக் கூறினரோ அத்தகைய மரணத்தையே இயேசு கிறிஸ்து சந்தித்துள்ளார்.

தமிழ் இந்துக்கள் பாராயணம் செய்யும் சிறுநூல்களில் ஒன்று அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி. அதில், அருணகிரிப் பெருமான்,

“விண்ணுலகிற்குத் தலைவனாக இருக்கின்ற பெருமானே, என்னுடைய மனைவி, மக்கள் முதலிய சுற்றத்தார் ஒன்று சேர்ந்து கூ கா என்று ஓலமிட்டு அழும்படி, (இந்தப் பருவுடலை விட்டு எமனாலே எனது உயிர் பிரிக்கப்பட்டு) நான் சாகாமல் இருக்கும்படி எனக்கு மெய்யறிவை உபதேசித்தவனே! உனக்கு வணக்கம்.” எனப் பாடுகின்றார். அதாவது முருகனோடு அத்துவிதமாகக் கலத்தலினால் உண்டாகின்ற மெய்யறிவு பெற்றவர்கள் நமனுக்கு அஞ்சார், ஆளாகார் என்பது கருத்து.

“கூகா எனஎன் கிளைகூ டிஅழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகா சலவே லவநா லுகவி
த்யாகா சுரலோ கசிகா மணியே”

இந்த ஓவியத்தில் உள்ளது போன்றதொரு காட்சியை அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் வருணித்துவிட்டு இத்தகைய சாவு எனக்கு வாராமல் அருளவேண்டும் என முருகப்பெருமானிடம் வேண்டுகிறார்.

‘அறிவு அழியவும் , மயக்கம் பெருகவும், பேச்சு அடங்கவும் தாயும்  (ஓவியத்தில் கன்னிமேரி) மனைவியும் (மக்தலேன்மேரி – இயேசுவுடன் இந்த உறவு உண்டு எனக் கூறப்படுகிறது) பக்கத்திலேயே இருந்து அச்சமுற்று அழ, உறவினரும் அழ, நெருப்புக்கு ஒப்பான யமன் என்னை அழையாதபடி— உன் திருவடியில் அணுக எனக்கு வரம் தந்தருளுவாயாக!

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக            அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ உறவுமழ
அழலினிகர் மறலியெனை  யழையாதே

– பழநித்திருப்புகழ்

சிவஞானியர்களின் அந்திமக் காலத்தில் அவர்களுடைய உயிரை அழைத்துச் செல்ல சிவகணங்களே வருவர், எமதூதர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை.

“நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணமே”

எனத் திருமூலநாயனார் திருமந்திரம் 2968ஆவது பாடலில் கூறியருளியுள்ளார்.

மெய்ஞ்ஞானியர் சிவமே ஆனவர்கள். சிவம் எல்லா உயிர்களுடனும் கலந்து எங்கும் நிறைந்து (வியாபகமாக) உள்ளது. அதனால் சிவமேயான மெய்ஞ்ஞானியர்கள் அனைத்துயிருமாகவும் இருப்பார்கள். இந்தநிலை பாவனைக்கு எட்டாதது. இதனை, அருணகிரிநாதர்,

“எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீதம் அருள்வாயே”

எனக் குகப்பெருமானிடம் வேண்டுகிறார். இதனையே நக்கீரரும் திருமுருகாற்றுப்படையில், முருகப்பெருமானின் திருவருள் பெறுவதற்குப் பக்குவப்பட்ட தொண்டனை நோக்கி ‘உலகத் தொருநீ யாகித் தோன்ற விழுமிய, பெறலரும் பரிசில்” இதனை நீ பெறுவாய் என ஆற்றுப்படுத்தினார்.

‘எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதயபாவ னாதீதத்தை’ப் பற்றி இயேசுவும் அறிந்திருக்கக் கூடும். அதனால் தான், ‘அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும்’ ((யோவான் 6:56) எனக் கூறினார் போலும். ஆனால் அந்த நிலையை அவர் எய்தவில்லை.

எல்லா உயிர்களிலும் கலக்கும் நிலையைப் பெற்றிருந்தால் உடலை விட்டு அவருயிர் நீங்கி இறையுடன் கலக்கும்போது, இன்பானுபவம் இன்னதென்றறியா வகையில் எல்லா உயிர்களும் அனுபவித்திருக்கும். இது தமிழ் இந்து உணர்த்தும் உண்மை.

சைவசமயாசாரியர் நால்வரில் திருநாவுக்கரசர் பெருமான் தம் முதுமைக் காலம் வரை வாழ்ந்தவர்;. சிவமாகவே திகழ்ந்தார். தம்முடைய 85ஆம் அகவையில், “புண்ணியா ! உன்னடிக்கே போதுகின்றேன்” எனப் புகன்று உடலை நீத்து,”நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி, அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டவரசு அமர்ந்திருந்தார்” இதுதான் சைவம் கூறும் பரமுத்தி. அப்பரடிகள் இவ்வாறு பரமுத்தி இன்பப்பேறு அடையவே, “ விரிஞ்சன் முதல் யோனிகளா யினவெல்லாம் உள்நிறைந்த பெருமகிழ்ச்சி தானிறைந்த”ன என்று கூறுகிறார், சேக்கிழார் பெருமான்.

யோனிகள் என்றது எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம் என சைவ சாத்திரங்களில் வகுக்கப்பட்ட யோனி பேதங்களை உடைய உயிர்களை. யோனிகள் என்றது வகைகளையும் எல்லாம் என்றது தொகைகளையும் குறித்தன.

மெய்ஞ்ஞானியர் சிவத்தொடு கலக்கும்போது உயிர்களுக்குத் தோன்றும் இன்ன தென்றறிய வரா இன்பநிலையைச் சிவக்கவிமணி பின் வருமாறு விளக்குகின்றார்:

‘நீர் நிறைந்த வாவிக்குள் பல உயிர்களும் வாழ்வனவாக , அந்நீர் நிலையினுள் ஒரு முட்டை வெடிக்குமாயின், அதனால் நீர் அசைவுபெற, அந்த அசைவு கலந்து, அலை உருவமாக நீர்பரப்பு முழுமையும் உழக்க, அதனால் அங்குத் தங்கும் ஏனை உயிர்கள் யாவும் தாக்கப்படுதல் போல, நாயனார் சிவநிறைவுக்குள் எய்த, அதனால் அந்நிறைவினுட் கிடந்த எல்லா யோனிகளும் தாக்கப்பட்டு ஆனந்தம் அடைந்தன என்பதாம்.’

இயேசு கிறிஸ்துவின் இறுதி உயிர்களுக்கு இன்பம் விளைவிப்பதற்கு மாறாக அவலமே விளைத்ததால் அதனைத் தமிழ் இந்துக்கள் மதிக்காததில் வியப்பொன்றும் இல்லை. இது துர்மரணமே.

136 Replies to “கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை”

  1. //ஸ்நானகன் யோவான் தன் செயலற்ற நிலையில் கைகளை பரப்பி விரித்துக்கொண்டு நிற்கிறார்.//
    ஸ்நானகன் யோவான் ஏசுவுக்கு முன்பே இறந்தது தெரியாதா? ஸ்நானகன் யோவானுக்கும், சீடன் யோவானுக்கும் வித்தியாசம் தெரியாத இவர் கட்டுரையை எதைக்கொண்டு பாராட்டுவது?

    (Comment edited & published)

  2. “ஆலையில்லா வூருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை” என்பதை போல,

    மனித இனத்தையே அழிக்கும் அளவுக்கு காட்டு மிராண்டிக் கருத்துக்களையும், வெறுப்புக் கருத்துக்களையும் உருவாக்கிய பாலைவன பிரதேசத்தில், ஓரளவுக்கு நாகரீகக் கருத்துக்களை அறிமுகப் படுத்த முயன்றவர் என்ற வகையிலே தான் இயேசு கிறிஸ்துவை நோக்குகிரோமே அல்லாது அவர் பெரிய அளவிலே ஆன்மீக விடுதலைக்கான கருத்துக்கள் எதையும் கூறவில்லை.

    இயெசுவின் க‌ருத்துக்க‌ள் எல்லாம், மனித‌ன் அன்றாட‌ வாழ்க்கையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டிய‌தைக் குறித்த‌ அறிவுரைக‌ள். ஆர‌ம்ப‌ப் ப‌ள்ளியில் முத‌ல் வ‌குப்பில் சேர்ந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு ஆசிரியை, “ப‌க்க‌த்தில் இருக்கும் மாண‌வ‌னைக் கிள்ள‌க் கூடாது, தின‌மும் காலையில் ப‌ள்ளிக்கு வ‌ந்த‌தும் ஆசிரிய‌ருக்கு வ‌ண்க்க‌ம் செலுத்த‌ வேண்டும்” என்ப‌து போன்ற‌ அறிவுரைக‌ள்!

    பெரிய‌ ஆன்மீக‌ க‌ருத்துக்களை வெளிப்ப‌டுத்துத‌ற்க்கான‌ த‌ளம் அவ‌ருக்கு கிடைக்க‌வில்லை. புத்தர் வெளியிட்ட ஆன்மீக உண்மைகளோடு ஒப்பிட்டால், இயேசு கிறிஸ்து ஆன்மீகத்திலே ஒரு கருத்தும் கூறவில்லை என்றே கூற லாம்.

    ஆனாலும் எப்போதும் ஒற்றை இலக்க மதிப் பெண் எடுக்கும் மாணவன் ஜஸ்ட் பாஸ் மார்க்கு வாங்கி பாஸ் ஆனவுடன் துள்ளுவதைப் போல, சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் உலகெங்கும் ஜல்லி அடிக்க ஆரம்பித்தனர்.

    நியூ யார்க் டயம்ஸ் விவேகானந்தர் சிக்காகோவில் பேசியவுடன் இவ்வளவு சிறந்த அறிங்கர்கள் நிறைந்த நாட்டுக்கு, மதப் பிரச்சாரகரை அனுப்பவது எவ்வளவு மூடத் தனம் என்று எழுதியது.

    இதைப் பார்த்தும் வெட்கம் வரவில்லை சுவிசேஷ சூழ்ச்சியாளருக்கு, புத்தியும் வரவில்லை.

  3. மக்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கும் இடங்களில் முக்கியமானது வழிபாட்டுத் தலங்கள். அங்கே மக்கள் காணும் காட்சிகள் அவ நம்பிக்கையத் தரும் எனில் அது சுடுகாட்டிற்கு ஒப்பானதே. இக்கருத்தை கட்டுரை ஆசிரியர் மிக மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

    கட்டுரையின் கருத்தே எப்போதும் முக்கியத்துவம் பெறுகிறது. கட்டுரைக்காக காட்டப் பட்டுள்ள படத்தில் உள்ள ஒருவன் சீடனா, ஸ்நாநகநா என்பது ஒன்றுக்கும் உதவாத ஒரு விஷயம்.

    லெனின் .

  4. ஐய…தோடா! அலோ, கிறிஸ்டியன்! ஏஸ்து கிறுஸ்துவே டுபாகூர் பார்டின்றப்போ ஸ்நானன் ஆரா இர்ந்தா இன்னா? சப்ப மேட்டர ஸொல்ல வன்டியே! ஆருக்கு வேனும் கிறுஸ்துங்க பாராட்டு? உங்க பாராட்ட தூக்கி குப்பைல போடு, அஆங்!

    முனைவரு ஸோக்கா ஸொல்லிகராரு பாரு மேட்டரு, அதுக்கு பதில் ஸொல்லு வாத்யாரே!

    பதில் ஸொல்ல தாவல….அப்பாலிகா இன்னா பேச்சு? ஸொம்மா போவியா…
    வண்டாரு… பேசிகினு.

  5. எவ்வளவு நேர்த்தியான கட்டுரை .. ஆசிரியர் ஐயா அவர்கள் வாழ்வாங்கு வாழ அந்த முருகனை வேண்டுகிறேன்.

  6. அருணகிரிநாதர், மணிவாசகர், அப்பர் பெருமான் போன்ற அடியார்களின் பாடல்களை தந்த ஆசிரியர்களுக்கு நன்றி. ஆயினும், இந்தக்கட்டுரை இந்துக்களுக்கு எந்தவிதத்தில் பயன்படும் என்று எனக்குத் தெரியவில்லை. தோழர் மன்னாரு அவர்களே, இயேசு கிறிஸ்துவை பற்றியோ அவரது சீடர்களைப்பற்றியோ நாம் பேசவேண்டிய அவசியமில்லை. மேலும், நாமும் கிறிஸ்தவ/முகமதியர்களைப்போன்று மற்ற மதங்களைப்பற்றி தரக்குறைவாகப் பேசினால், அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம் உள்ளது? சற்றே சிந்தியுங்கள்! திருவள்ளுவரோ, நாயன்மார்களோ, ஆழ்வார்களோ நம்மை அடுத்தவர்களை கேவலப்படுத்தும்படி சொல்லவில்லை!

    நமச்சிவாய வாழ்க!!

  7. //–கட்டுரையின் கருத்தே எப்போதும் முக்கியத்துவம் பெறுகிறது. கட்டுரைக்காக காட்டப் பட்டுள்ள படத்தில் உள்ள ஒருவன் சீடனா, ஸ்நாநகநா என்பது ஒன்றுக்கும் உதவாத ஒரு விஷயம்.–//
    நண்பர்களே,
    ஒரு கட்டுரையை, ஒருவர் பதிக்கும்போது அந்த துறையில், ஓரளவு ஞானமும் தேர்ச்சியும் தேவை. யோவான் ஸ்நானகன், சீடன் யோவான் இருவரும் பைபிளில் மிக முக்கியமானவர்கள். இது கூட தெரியாமல் இவர் எப்படி இதை போல் விமர்சிக்கலாம் என்பதே என் கேள்வி.
    இதை தவிர, இயேசுவின் கொடூரமான மரணமும், உயிர்த்தெழுதலும்தான், கிறிஸ்துவத்தின் அடித்தளம். அந்த ஓவியம் சித்தரிப்பதைவிட, இயேசுவின் மரணம் கொடூரமானது. ஆனாலும், அதில்தான் கிறிஸ்துவர்கள் நம்பிக்கை பெறுகிறார்கள்.
    நாட்டை காப்பாற்றும் ஒரு வீரன், குண்டு வெடித்து உடல் கருகி இறந்து, அவன் குடும்பத்தார் கதறி அழுவதை இப்படி விமர்சிப்பீர்களா? கிறிஸ்துவர்களை பொறுத்தவரை, இயேசு மக்களுக்காய் கோர மரணமடைந்தவர்.
    கட்டுரை ஆசிரியர் கூறும் சித்தர்கள் இத்தகைய மரணம் தனக்கு வேண்டாம் என்று விரும்பி இருக்கலாம். யாருமே இந்த கோர சாவினை அடைய விரும்ப மாட்டார்கள். அதற்காக, அவரின் மரணத்தை கொச்சை படுத்தலாமா? அவருக்கும் மகதலேனா மரியாளுக்கும் இருக்கும் உறவையும் கொச்சை படுத்தலாமா? ஒரு குரு சிஷ்ய உறவை, சில புரளிகளின் காரணமாக கணவன் மனைவி உறவென கூறலாமா? சில நூறு சுவிசேஷகர்கள் உங்களை புன்படுத்துவதினால், பல கோடி கிறிஸ்துவர்களை நீங்கள் புண் படுத்த வேண்டுமா?
    நீங்கள் வாழ்வாங்கு வாழ அந்த இயேசுவை வேண்டுகிறேன்.

  8. மதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் அவர்களே,

    எனக்கு கோவம் கோவமா வருது திராவிடம் பேசி தமிழை தவிட்டுக்கு வித்தவனுங்களை பாத்து! கருணாநிதி மட்டும் என் எதிரில் வந்தார் அப்பிடின்ன நான் ஒன்னே ஒன்னு கேக்கணும் அவர் கிட்ட,அது என்னனா, “ஏன் ஐயா எனககு தமிழை ஒழுங்கா பள்ளியில் கற்று கொடுக்க சரியான நடவடிக்கை எடுக்கலை”.என்று!

    என்னை மன்னிச்சுடுங்க ஐயா ! எனககு ரொம்ப விஷயம் நீங்க எழுதனது படிக்க முடிஞ்சது ஆனா புரிஞ்சிக்க முடியலை! அடுத்த முறை எழுதும் போது விளக்க உரையும் சேர்த்து எழுதிடுங்க ஐயா, தயவு செய்து ! இப்போதைக்கு இந்த கட்டுரையை முழுமையா புரிஞ்சிக்கரவரைக்கும் நான் 100 முறையாவது படிக்க போறேன்!

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  9. //மன்னாரு
    28 October 2009 at 6:07 pm//
    ஆகா மன்னாரு வந்திட்டீங்களா, எங்க ஆளக்கானோமேன்னு பாத்தேன்.

    ////வள்ளுவன்
    28 October 2009 at 10:52 pm
    ஆயினும், இந்தக்கட்டுரை இந்துக்களுக்கு எந்தவிதத்தில் பயன்படும் என்று எனக்குத் தெரியவில்லை. தோழர் மன்னாரு அவர்களே, இயேசு கிறிஸ்துவை பற்றியோ அவரது சீடர்களைப்பற்றியோ நாம் பேசவேண்டிய அவசியமில்லை. மேலும், நாமும் கிறிஸ்தவ/முகமதியர்களைப்போன்று மற்ற மதங்களைப்பற்றி தரக்குறைவாகப் பேசினால், அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்யாசம் உள்ளது? சற்றே சிந்தியுங்கள்! திருவள்ளுவரோ, நாயன்மார்களோ, ஆழ்வார்களோ நம்மை அடுத்தவர்களை கேவலப்படுத்தும்படி சொல்லவில்லை!

    நமச்சிவாய வாழ்க!///

    வள்ளுவன் அவர்கள் சரியாகச் சொல்கிறார். நாம் தூற்றுபவர்களுக்கு புரியவைக்கலாம். கட்டுரைகளும் இந்து தர்மத்தை இதிகாசத்தை விளக்கும் வகையிலேயே தொடர்ந்து அமைந்தால் இன்னும் நலமாக இருக்கும்.

    (Edited.)

  10. இங்கே நண்பர்கள் வள்ளுவன், ram ஆகியோர் எழுதியதை முனைவர் ஐயா, தயவு செய்து பரிசீலிக்கவும்.

    அத்வேஷ்டா என்பது இந்துக்களின் மனதில் ஆழமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

    இந்துக்கள் இந்து மத வழியை பின்பற்றுவதே சிறந்தது. நாம் சுவிசேசக சூழ்சியாளரைப் போல , அவர்களின் வழியை பின் பற்ற முடியுமா?

  11. இந்து மதம் விவேகனந்தர், அப்பர், சங்கரர், கிருட்டினர் போன்றவர்களாலேயே வழி நடத்தப் பட்டு வந்துள்ளது.

    திடீரென்று இந்து மதம் சோடா புட்டி வீசும், குவார்ட்டர் கோவிந்தர்களின் கையில் சிக்கி விட்டதோ எனத் தோன்றுகிறது.
    இந்து மதத்தை சாக்கடையில் கொண்டு போய் சேர்த்து விடாதீர்கள் ஐயா!

    (Comment edited & published)

  12. /அருணகிரிநாதர், மணிவாசகர், அப்பர் பெருமான் போன்ற அடியார்களின் பாடல்களை தந்த ஆசிரியர்களுக்கு நன்றி. ஆயினும், இந்தக்கட்டுரை இந்துக்களுக்கு எந்தவிதத்தில் பயன்படும் என்று எனக்குத் தெரியவில்லை. தோழர் மன்னாரு அவர்களே, இயேசு கிறிஸ்துவை பற்றியோ அவரது சீடர்களைப்பற்றியோ நாம் பேசவேண்டிய அவசியமில்லை./
    Dear Editor and Author,
    I fully accept the views of Valluvan statement. Shaivam is religion of tolerance. Kindly post more article on our Thirumurai’s and Saivasidhantham.

    Somasundaram

    (Comment edited & published)

  13. //இயேசுவின் கொடூரமான மரணமும், உயிர்த்தெழுதலும்தான், கிறிஸ்துவத்தின் அடித்தளம். அந்த ஓவியம் சித்தரிப்பதைவிட, இயேசுவின் மரணம் கொடூரமானது.//

    தேவ குமாரனுக்கே, நேர்ந்தது துர் மரணம்! – என்பது சாமானியன் முதல் சகலமும் அறிந்தோர்க்கும் அவ நம்பிக்கையை மட்டுமே தரும் விஷயம். அவ நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்ட ……………..

    //ஆனாலும், அதில்தான் கிறிஸ்துவர்கள் நம்பிக்கை பெறுகிறார்கள்// – கோளாறு எங்கே உள்ளது என்பதை முதலில் கண்டறிவது அவசியம். .

    //கிறிஸ்துவர்களை பொறுத்தவரை, இயேசு மக்களுக்காய் கோர மரணமடைந்தவர்//

    எந்த நாட்டு மக்களுக்காக? எந்த நாட்டின் சார்பில் ? எந்த நாட்டுடன் போர் புரிந்து மாண்டார்?

    //அவருக்கும் மகதலேனா மரியாளுக்கும் இருக்கும் உறவையும் கொச்சை படுத்தலாமா? ஒரு குரு சிஷ்ய உறவை, சில புரளிகளின் காரணமாக கணவன் மனைவி உறவென கூறலாமா?//

    எந்த நாட்டில் இருந்து கிறிஸ்துவ மதம் பரப்பப் பட்டதோ, அதே நாட்டில் இருந்துதான் நீங்கள் புரளி என்று சொல்லப் பட்ட விஷயமும் வந்தது. ஒன்றுக்கு முக்கியத்துவமும் மற்றொன்றை வசதியாக புரளி என்றும் உம் போன்றோர் கூறலாமா?

    இரண்டாம் நூற்றாண்டில் இஸ்ரேலில் இருந்த ஒரு படை வீரனையே பைபிளில் இயேசு என்று சித்தரிக்கப் பட்டுள்ளது என்று இதாலிய கிறிஸ்துவர் ஒருவர் வழக்கு தொடர்ந்ததை நீர் அறிவீரா?

    //சில நூறு சுவிசேஷகர்கள் உங்களை புன்படுத்துவதினால், பல கோடி கிறிஸ்துவர்களை நீங்கள் புண் படுத்த வேண்டுமா?// –

    சுவிசேஷகர்கள் எதற்காக விலைக்கு வாங்கப் பட்டார்களோ அதை (கூலிக்கு மாரடிப்பது) செய்கிறார்கள். எஜமான் விசுவாசத்தில் தவறில்லை. ஆனால் அவர்கள் உம் போன்ற பல்லாயிரக் கணக்கானவர்களை மூளை மழுங்கச் செய்வதே எம் போன்றோரைப் புண் படச் செய்கிறது.

    //நீங்கள் வாழ்வாங்கு வாழ அந்த இயேசுவை வேண்டுகிறேன்// –
    இந்த லோள்ளுதான வேண்டாங்கறது.

    லெனின்

  14. //இயேசுவின் மரணம் கொடூரமானது. ஆனாலும், அதில்தான் கிறிஸ்துவர்கள் நம்பிக்கை பெறுகிறார்கள்.//

    1)”அறுவகைச் சமயத்தோர்க்கும் அவரவர் பொருளாய்” ஒரே இறைவன்தான் அவரவர் வழிபடும் வடிவில் அருள்புரிகின்றான் என்பது சைவசித்தாந்தம். கட்டுரையில் சுட்டப்பட ஓவியத்தின் வழி கிறித்துவர்கள் பயன் பெறுகின்றார்கள், இதில் நம்பிக்கை பெறுகின்றார்கள் என்பது உண்மையே. அதனால் இந்து மதத்தினரை உருவ வழிபாட்டினர் என ஏசும் தகுதி அவர்களுக்கு இல்லை.
    2) மாணிக்கவாசகர் சிவனைத் தவிர வேறு பிறப்பிறப்பில் சிக்குண்ட மனிதர்களைத் தெய்வமென வணங்கினாரல்லர்.
    “உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லால் எங்கள் உத்தமனே” என்றும்,
    “மற்றும் ஓர்தெய்வம் தன்னை உண்டுஎன நினைந்து எம்மாற்கு
    அற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே” என்றும் தம்முடைய இறைக் கொள்கையை மணிவாசகர் தெளிவாகக் கூறுகின்றார். சிவனைத் தவிர வேறு தெய்வம் உண்டு என நினைந்து வழிபடுவோரைக் கண்டு அஞ்சுவதாகக் கூறும் மணிவாசகரை, போப் , கட்டுரையில் கூறிய இத்தாலிய சர்ச்சில், கூறிய ஓவியங்களுக்கு முன் மண்டியிட்டுத் தம்முடன் வழிபட்டதாகக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். ?இப்படிக் கூறுவதில் surreptitious, covert , subtle evangelisation இருப்பதாக நான் கருதுகின்றேன். இது தமிழ்இந்து நண்பர்களுக்கு எச்சரிக்கையாகப் பயன்படும் எனவே கருதுகின்றேன்.

    3. போப் கிறித்துவ மிஷனரிகளில் சற்று வேறுபட்டவர். தமிழ்க் காதலும் சைவக்காதலும் அவரிடம் நிறையவே இருந்தது. ஜே. எம் நல்லுசாமி பிள்ளை முதலிய சைவசித்தாந்தப் பேரறிஞர்களிடம் நெருங்கிய நட்பும் அன்பும் அவருக்கு இருந்தது. இவற்றின் காரணமாக அடிப்படைவாதக் கிறித்துவர்களின் மனக்கசப்பையும் பெற்றிருந்தார். “Actually one wonders if Manikkavacakar had almost succeeded in breaking the Reverend(G.U.Pope) from his chiristian moorings at times. Well, that is Pope’s outlook, not ours” -Hephzibah Jesudasan.
    4. போப்பின் தமிழ்ப் பற்று , சைவத்தின் மேல் மதிப்பு இரண்டையும் மிஷனரிப் பண்பு அழுத்திவிட்டது. அது இயற்கையே. “Pope was a child of his times, and his comments and translation do not transcend his Victorian and missionery biases … ” என ஓரறிஞர் கூறிய கருத்தே என் கருத்தும்.

    5. சைவசித்தாந்தத்தை இளஞர்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம். தெய்வ நம்பிக்கை உடைய. தெய்வபக்தியை வலியுறுத்துகின்ற சமயங்கள் த்ம்முள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. திருவாசகத்தை கஸ்பர் , தெய்வநாயகம் போன்ற மிஷனரிகள் முன்னெடுத்துச் செல்வதை பற்றி எச்சரிக்கை செய்ய வேண்டுவதும் கடமையாகும்.
    6. இறை அனுபவம் சமயங்கடந்தது. சமயங்கள் எல்லாம் இறையனுபவத்துக்குப் பெரியோர் அமைத்துக் கொடுத்த பாதைகளே. அந்த உண்மைமேல் நாட்டம் உடையவர்கள் எம்மததினராக இருந்தாலும் போற்றுதற்கு உரியவர்களே. அறுபத்து மூன்று சைவநாயன்மார்களில் சாக்கியநாயனார் என்பவர் ஒருவர். சமயநூல்கள் எல்லாம் கற்றுத் தேர்ந்தார். சமயப் பொதுமையினைச் சைவத்தில் தெளிவாகக் கண்டார். தம்முடைய மதத்தை மாற்றிக் கொள்ளாமல், புறக்கோலத்தை மாற்றிக் கொள்ளாமல் சைவத்தின் வழி நின்றார். பேறு பெற்றார். நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகின்றார்.
    7. இறை அனுபவத்தை விரும்பும் கிறித்துவ அன்பர்கள் மதமாற்றத்தைத் தவிர்க்க வேண்டும். எண்ணிக்கையைப் பெருக்குவது ஆதிக்க உணர்வையே காட்டுகின்றது.
    8.தமிழ், வடமொழி வேறுபாடு கற்பித்து, பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் காழ்ப்பினைத் தூண்டிவிட்டுத் தமிழுக்கும் தமிழ் இந்துக்களுக்கும் கேடு விளைக்கும் அனுகூல சத்துருக்களின் அடையாளத்தையும் அறிய வேண்டும்.

  15. ‘சாக்கிய நாயனார் பெளத்த சமயத்தினர். ‘ இதனை 6ஆவது பாராவில் இரிய இடத்தில் சேர்த்து வாசிக்கவும்

  16. நாம் முக்கிய‌மாக‌ அம்ப‌ல‌ப் ப‌டுத்த‌ வேண்டியது பைபிளைத் தான்.

    பைபிள் ஒரு காட்டுமிராண்டி க‌ட்டுக் க‌தை என்ப‌தை எளிதாக‌ நிரூபிக்க‌ முடியும்.

    பைபிளுக்கு எந்த‌ ஒரு வ‌ர‌லாற்று ஆதார‌மும் கிடையாது. அறிவிய‌லுக்கு எதிராக‌ க‌ட‌லே இர‌ண்டாக‌ப் பிள‌ந்து நீர் சுவ‌ர் போல‌ நின்ற‌தாக, சிரிப்புக் க‌தைக‌ள் பல‌ உண்டு.

    இந்த உலகத்தயே சுடு காடு ஆக்கும் விசக் கருத்துக்களை உருவாக்கி அதை பைபிள் என்ற பெயரிலே அமைத்து விட்டார்கள். இந்த பைபிளின் அடிப் படையிலே யூதர்கள் தங்கள் மதத்தை அமைத்தனர்.

    அதக் காப்பி அண்ட் பேஸ்ட் செய்து, அதே விசக் கருத்துக்களை, தங்கள் மதத்திற்கும் அடிப் படையாக வைத்தன, கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள்.

    பைபிளின் காட்டு மிராண்டிக் கருத்துக்களாவன:

    1) இனப் படுகொலை, இன அழிப்பு : உலகிலே முதல் இனப் படுகொலைக் கருத்தைக் கூறியது பைபிளே

    2) வெறுப்புக் கருத்துக்கள்: தங்கள் மார்க்கதினரல்லாத பிறரை,
    தான் கூறிய கடவுளை வணங்க்காதவரை வெறுக்கும் கருத்துகளை முத‌லில் கூறியது பைபிளே

    3) சிந்த‌னையைத் த‌டை செய்து அடிமை ஆக்குத‌ல்: யாரோ ஒருவர் கடவுளைப் பார்த்ததாக கதையை விட்டு, இந்த உலகிலே யாரும் கடவுள் இருக்கிறாரா என்று ஆரய்ச்சி செய்வதை தடை போட்டது பைபிளே!

    4)க‌ட‌வுளுக்கே ஆப்பு: ஒரு உயிர் ஒரே முறைதான் பிறக்கிறது என்று கதை கட்டி, அப்படியானால் ஒரே ஒரு முறை பிறக்கும் உயிரை கடவுள் எதற்கு குருடனாகப் பிறக்க வைக்க வேண்டும், கடவுள் தவறே செய்யாத உயிரை தண்டிக்கும் கல் நெஞ்சனா என்ற வ‌கையிலே க‌ட‌வுளையெ ஒரு கொடுமையான‌வ‌ன் போல‌ சித்த‌ரித்தது,

    இத‌ன் மூல‌ம் பைபிள் என்ப‌து காட்டு மிராண்டிகளின் க‌ற்ப‌னையில் உருவான‌து என்ப‌தை நாக‌ரீக‌ம் தெரிந்த‌ எந்த‌ ம‌னித‌னும் புரிந்து கொள்வான்.

    தும்பை விட்டு வாலைப் பிடிப்ப‌து போல‌ பைபிளை விட்டு யோவான பிடித்து என்ன‌ ப‌ல‌ன்.

    ம‌னித‌த்துக்கு எதிரான‌ விசக் கருத்துக்களை அம்‌ப‌ல‌ப் ப‌டுத்த தேவையான‌ அருமையான‌ க‌ருத்துக்க‌ள் ந‌ம்மிட‌ம் உள்ளன‌.

    சூரிய‌னைக் கையிலே வைத்துக் கொண்டு, டார்ச் லைட்டை தேடி அலைவ‌து போல‌ உள்ள‌து.

    இ ந்து ம‌த‌த்தையும் ப‌ற்றி எல்லொரும் த‌வ‌றாக‌க் க‌ருதும்ப‌டி நாம் செய‌ல் ப‌ட‌ வேண்டிய‌தில்லை.

    Will be continued…….

  17. வள்ளுவன் சொன்னதை மறுக்கிறேன்.

    இந்த கட்டுரை கிறிஸ்துவர்களுக்கு எழுதப்பட்டதல்ல. இந்துக்களுக்கு எழுதப்பட்டது. போப் எழுதியதை படித்து, மாணிக்கவாசகரும் இயேசுவை அடிபணிந்தார் என்று இந்துக்களாலேயே திரிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் துர்மரணம் அடைந்த இயேசு போல மரணம் அடைவது சரிதான் என்றும், அது போற்றத்தக்கதே என்றும் ஒரு சாதாரண இந்து நினைக்க வாய்புள்ளது.

    இந்துக்களுக்கு விளக்கம் கொடுக்கவே இந்த கட்டுரைகள் எழுதப்படுகின்றனவே அன்றி, கிறிஸ்துவர்களுக்கு புரியவைக்க அல்ல.

    இது போன்ற கட்டுரைகள் ஏராளம் தமிழ் இந்து தளத்தில் வெளிவர வேண்டும்.

    இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற தவறான மார்க்கங்களை சரி என்று நினைப்பது சாதாரணமாக எல்லா இந்துக்களும் நினைப்பது. அவற்றை பற்றி விளக்கங்கள் இந்துக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

  18. மாணிக்க வாசகர் தன்னுடன் சேர்ந்து மண்டியிட்டு வணங்கியது போல தோன்றியதாக புரூடா விட்டதைக் கண்டித்தது நியாயமே, அவசியமே. இதற்காக முனைவர் அய்யாவுக்கு நன்றிகளும் வணக்கங்களும்.

    ஆனால் முனைவர் ஐயா, வேறு ஒரு இடத்திலே கொஞ்சம் வேகமாக எழுதி விட்டாரோ என்று அச்சப் படுகிறேன்.

    முனைவர் ஐயாவின் சில வார்த்தைகள் கட்டுரையின் முக்கியக் கருத்தை பின்னுக்குத் தள்ளி விட்டது போல ஆகி விட்டதோ, எனத் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

    இந்து நேர்மையானவன், பண்புள்ளவன், வெறுப்புக் கருத்துக்கள் இல்லாதவன்.

    இங்கெ பலரும் ஆதரிக்கிறேன் என்று எழுதுவது, அவர்கள் உண்மையில் ஆதரிப்பது எதை?

    தமிழ் நாட்டிலே இரு கழகங்களும், மேடை போட்டு மாற்றுக் கட்சித் தலைவரை தாக்கிப் பேசுவது போல ஒரு இந்து, மத விசயத்திலே பேசுவது சரியல்ல. ஆபிரகாமிய மத பிரசாரகர் என்ன வேண்டுமமனாலும் பேசுவார்கள் , செய்வார்கள். நாம் அப்படி அல்ல. ஆயிரம் ஆனாலும் இந்து, இந்துவாகத் தான் இருப்பான். .

    நான் முனைவர் ஐயா முன்பு எழுதிய சிறந்த கருத்துக்களை இங்கெ மீண்டும் மேற்க்கோள் இடுகிறேன்.

    //C.N.Muthukumaraswamy
    5 October 2009 at 6:14 pm
    பாட்டி கடைஞ்ச மசுருலே கீரையைக் கண்டது போல அபத்தக்களஞ்சியமான நயவஞ்சகக் கிறித்துவத்திலே காந்தியடிகள் போன்ற நல்ல உளம் படைத்தவ்ர்கள் ஏதோ சில நல்லதைக் காண முயன்றதன் பலன் நம் இந்தியா எனும் பாரதத் திருநாடு கிறித்துவர்களின் அறுவடை செய்யும் நன்செயாக மாறிவிட்டது. டேனியல் தங்கராஜ் போன்ற கிறித்துவர்கள் தேவன் என்றும் கர்த்தர் என்றும் கூறுபவ்ன் ,
    மடமைக்கும் முட்டாளதனத்துக்கும் அடிமையானவன்.
    செத்துப் பிறக்கின்ற மானுடப்பதர்
    புலாலும் மதுவும் விரும்பும் புல்லன்
    மனக்கொதிப்பு மிக்கவன்
    பொறாமையின் வைப்பு; வஞ்சகத்தின் இருப்பிடம்
    வீண்பேச்சுப்பேசும் பதடி
    சொல்லொன்று செயலொன்றாக நடக்கும் சிறியோன்
    அருளாளலர்களையும் தீர்க்கதரிசிகளையும் கொடியவர்களெனக் கூறும் கொடியோன்.
    இழிபண்புகளுக்கு இருப்பிடம்.//

    இதற்க்கு நான் //அடேயப்பா சும்மா சொல்லக் கூடாது – பெரும்பாலும் உண்மைதான்!// என்று எழுதினேன்

    இங்கெ பின்னோட்டம் இடும் சென்னை செந்தமிழ்களே, இந்தப் பட்டங்களை எல்லாம், இந்துக்களுக்கும் வாங்கிக் கொடுக்காதீர்கள்.

  19. வணக்கம்,

    நண்பர் வள்ளுவனார், மற்றும் திருச்சிக்காரர் என்று பல நண்பர்களின் மறுமொழிகளைக் கண்டு நான் மீண்டும் சிலமுறை இக்கட்டுரையை வாசிக்க வேண்டி வந்தது, ஒரு நல்ல கட்டுரையை பலமுறை வாசிக்க வைத்த நண்பர்கட்கு நன்றிகள் முதலில்.
    ————————————————-
    ///ஜி.யு.போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும், Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போலவும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார்.///

    ////மணிவாசகர் மானசீகமாகத் தம்மோடு இருந்து இந்த ஓவியத்தை கண்டு மெய்யுணர்வு பெற்றார் எனப் போப் கருதுவது விந்தையாக உள்ளது. அந்தமில்லா ஆனந்தம் பெற்ற மணிவாசகப் பெருமானை இழிவு செய்வதாகவே தோன்றுகிறது.///
    ——————————————————————————-

    இவைகளே இக்கட்டுரையின் ஆராய்ச்சிக்கான கருத்துக்கள், இக்கருத்தினை போப் அவர்கள் சொல்லப்போகத்தான் இந்த ஓவியத்தின் மீது நமது ஆய்வுக் கண்ணோட்டம் ஏற்பட்டது. ஆசிரியருக்கும் அவ்வாறே,

    போப் அவர்களின் இந்த தவறான கருத்தினால் கூட சிலர் மதி மயங்கிப் போகக் கூடும், அந்த தவறினை சுட்டிக் காட்டும் விளக்காகவே இக்கட்டுரை, மற்றபடி அவர்களை வலியச்சென்று கட்டுரை ஆசிரியர் குறை சொல்லவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து,

    இந்து தர்மத்தில் ஆன்மாவை அறிந்து, அதனை பரமாத்மாவோடு இணைப்பதுவே மானுடத்தின் இலக்கு என்பது எல்லோரும் அறிந்திருக்கும் பொழுது, பெரும் ஞானியான மணிவாசகர் சவமான இயேசுவின் ஓவியத்தைக் கண்டு மெய்யுணர்வு பெற்றார் என்று போப் அவர்கள் கட்டுக் கதை கூறுவதை பொய் என்று உணர்த்துவது நமது கடமையாகிறது, அதை ஆசிரியர் செவ்வனே செய்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி.

    ஓரளவு தெளிவு பெற்ற நமக்கே சுவிசெஷர்கள் தண்ணி காட்டி விடுகிறார்கள், இதை தெளிவு படுத்தா விட்டால் போப்பின் இக்கருத்து உண்மை என நம்பி படித்த பாமரர்களே ஏமாந்து விடுவார்கள். எனவே இக்கட்டுரை இந்துக்களுக்கு முக்கியமானது என்பது நான் சொல்லவேண்டுவது இல்லை என நினைக்கிறேன். இன்னொரு இந்து நண்பரின் மனதில் தோன்றும் மணிவாசகரின் மெய்யுணர்வு பற்றிய சந்தேகத்தையாவது தீர்க்க நமக்கு உதவும்.

  20. ஆசிரியர் அய்யாவிற்கு வணக்கம்,
    நீங்கள் சைவ சித்தாந்தத்தை பின்பற்றும் தமிழ் சைவர் என்று நான் அறிகிறேன். அதனால் இதை கேட்கிறேன். நான் சைவ சித்தாந்தத்தை பின்பற்றாவிட்டாலும், அம்மார்க்கத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் பற்றுடையவன்.

    மறைமலை அடிகளாருக்கு உங்கள் மார்கத்தில் இருக்கும் மதிப்பு எவ்வளவு? இதை ஏன் கேட்கிறேன் என்றால், அவர் ஒரு சைவத்துறவி ஆக இருந்தாலும், ஈ.வே.ராமசாமி நாயக்கருடன் தொடர்பு வைத்திருந்தார் அல்லவா? மேலும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் வைணவர்களின் வேலை என்றும், சைவர்களை ‘மதமாற்றம்’ செய்ய நடக்கும் சூழ்ச்சி என்றும் மறைமலை அடிகளார் பேசினார், அல்லவா??

    “The leader of the Self-respect movement is a Vaishnavite; his brother too, we come to understand, is a Vaishnavite who has converted many gullible Saivites to Vaishnavism. Their accomplices too are Vaishnavites. Some of the Justice Party leaders too are Vaishnavites. Moreover, not only are they Vaishnavites, they are also Telugu-speakers.”

    https://en.wikipedia.org/wiki/Maraimalai_Adigal

    ஈ.வே.ரா வைனவராக இருந்திருந்தால் ஏன் இராமன், இலக்குவன், கிருஷ்ணன் படங்களை காலனிகளால் அடித்தார்?? ஏன் எப்பொழுதும் அன்னை சீதையைப் பற்றி அவதூறாகவும், ஒரு பெண்ணை எவ்வளவுதூரம் கேவலப்படுத்த முடியுமோ, அதற்க்கு ஒரு படி மேலாகவும் பேசினார்? இதெல்லாம் மறை மலை அடிகலாருக்குத் தெரியாதா?

    மேலும், இளவழகனார் என்ற மறைமலை அடிகளின் சீடர் கூறியது:-

    “Saivism is not one iota different from the primary aim of the Self-respect movement. The Self-respect movement arose to dispel the illusion of Brahmanism form the Tamil people and infuse self-respect into them. Saivism also does the same. The Self-respect Movement detests the Aryan Brahmins. Saivism too doesn’t like the Aryan Brahmins one bit… The Self-respect movement wishes to uplift the depressed classes. That is also the basic idea of Saivism…. The Self-respect movement is against caste differences among the Tamil people. Saivism too emphasis the same point… when there are so many commonalities, why should Saivism and Saivite apostles be deprecated and condemned [by the Self-respect movement].”

    https://en.wikipedia.org/wiki/Maraimalai_Adigal ….

    திராவிட இயக்கத்தைப் போலவே, சைவமும் அந்தணர்களை எதிர்ததாம்? அப்போ, ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மணிவாசகப்பெருமான், நம்பியாண்டார் நம்பி இவர்களெல்லாம் யார் அய்யா? மேலும், மறைமலை அடிகளுக்காகவாவுது நாயக்கர் சைவத்தை கேவலப்படுத்தாமல் இருந்தாரா? ஏன் இராம, இலக்குவன் படங்களை காலனிகளால் அடித்ததுபோல விநாயகரின் படத்தையும் அடித்தார்? அப்பொழுது ஏன் மறைமலை அடிகள் தடுக்கவில்லை? விநாயகர் தமிழ் கடவுள் இல்லை எனும் ஆதாரமற்ற வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது! ஏன் எனில், அவ்வையாரில் தொடங்கி, நக்கீரர், நாயன்மார்கள் வழியாக, சமீப காலத்தில் வாழ்ந்த திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் வரை எவரும் விநாயகரை புறக்கணிக்கவில்லை!! அதோடு நில்லாது, சிதம்பரம் நடராஜர், ஸ்ரீரங்கம் அரங்கன் சிலைகள் என்று தூள் தூளாகுமோ அன்று தான் ‘திராவிடர்களுக்கு’ உண்மையில் விடுதலை என்று நாயக்கர் பேசியபொழுது, ஏன் மறை மலை அடிகள் கண்டிக்கவில்லை???

    மேலும், மறை மலை அடிகள் உண்மையான இந்துத் துறவியாக இருந்திருந்தால் ஏன் ஈ.வே.ரா கேட்டவுடன் அரும் பொக்கிஷமான இராமாயணத்தை அவதூறாக பெரியாருக்கு எழுதித் தந்தார்??? இப்படி எழுதி விட்டு பிறகு முருகனை துதித்தால், எப்படி அவன் அருள் புரிவான்?? தன் மாமனைப் பற்றி தரக்குறைவாக பேசிவிட்டு முருகனை வணங்கினால், அவன் மகிழ்ச்சி அடைவானா? அதுசரி, முருகன், சிவன் திராவிட கடவுள்கள், திருமால் ஆரியனின் சூழ்ச்சி என்று பேசுபவர்களிடம் என்னவென்று கூறுவது? இவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் என்ன கூறுகிறார்? முருகனை எப்படி வர்ணிக்கிறார்??

    “முருகனே, செந்தில் முதல்வனே,
    மாயோன் மருகனே, ஈசன் மகனே ..
    ஒருகைமுகன் தம்பியே,
    நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
    நம்பியே கைதொழுவேன் நான். ”

    நக்கீரருக்கு, அவ்வய்யாருக்கு, நாயன்மார்களுக்கு, கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு, மற்றும் வேதகால மகரிஷிக்களுக்குத் தெரியாததுவா மறைமலை அடிகளுக்குத் தெரிந்து விட்டது?????????

    சைவ சித்தந்தம் மட்டும்தான் சைவத்தின் ஒரே மார்க்கம் என்று நமது மக்கள் தவறாக நினைக்கிறார்கள். மிகப்பழமையான சைவம் குஜராத் மாநிலத்தில் தோன்றிய “பசுபதாயம்” ஆகும். இதுபோலவே காஷ்மீர் சைவம் (சொல்லப்போனால், காஷ்மீரில் சிவனைத்தவிர வேறு எந்த கடவுளையும் வழிபட்டதாக கேள்வி பட்டதுகூட இல்லை), சித்த சித்தாந்தம், சைவ அத்வைதம் போன்ற பல மார்கங்கள் உள்ளன. ஆனால், சைவத்தை இந்து சமூகத்திலிருந்து பிரிக்க நினைக்கும் கூட்டம் சொல்வது என்ன தெரியுமா:- “வீரசைவம் என்றழைக்கப்படும் லிங்காயதம் வேதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, எனவே அவர்கள் இந்துக்களே அல்ல” என்பது. அவர்கள் வேதங்களை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால், அம்மார்கத்தை தோற்றுவித்த ஸ்ரீ பாசவண்ணரே ‘ஸ்மார்த்த கம்மே’ அந்தண சமூகத்தில் பிறந்து, சாதிகளினால் வெறுப்புற்ற சாதியற்ற மார்கத்தை தோற்றுவித்தார் என்று வரலாறு கூறுகிறது. இராமானுஜர், இராமானந்தர், சைதன்யா போன்றவர்கள்கூட தீண்டாமை, சாதிக்கொடுமையை எதிர்த்து போராடினார்கள். அதற்காக, அவர்கள் அந்தணர்கலையே எதிர்த்தார்கள், வெறுக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி??

    இந்துக்கள் ஒன்றுசேர்ந்தால் மட்டுமே வெற்றி இல்லை, வாழக்கூட முடியும். எனவே, நமக்குள் இருக்கும் இப்படியான பேதங்களை நாம் களையவில்லை என்றால், என்ன நடக்கும்??

    இறைவன்தான் அறிவான்!!!!!

  21. ///ஒரு கட்டுரையை, ஒருவர் பதிக்கும்போது அந்த துறையில், ஓரளவு ஞானமும் தேர்ச்சியும் தேவை. யோவான் ஸ்நானகன், சீடன் யோவான் இருவரும் பைபிளில் மிக முக்கியமானவர்கள். இது கூட தெரியாமல் இவர் எப்படி இதை போல் விமர்சிக்கலாம் என்பதே என் கேள்வி.///

    க‌ட்டுரை ஆசிரிய‌ரின் நோக்க‌ம் ம‌க்ட‌ல‌னா மேரியோ அல்ல‌து யோவானோ என்ன செய்தார்கள் என்பது அல்ல. ஆனால், “மாணிக்கவாசகப் பெருமான் மண்டியிட்டு ஏசுவை தன்னுடன் சேர்ந்து வணங்குவதாக எனக்குத் தோற்றம் வந்தது” என்று ஜி.யு.போப் எழுதியதை அனைவரின் கவனத்துக்குக் கொண்டுவருவதே ஆகும். இதே போல‌, முக‌ம‌து ந‌பி என்னோடு முழ‌ங்காலிட்டு ஏசுவை வண‌ங்குவ‌து போன்ற‌ காட்சி க‌ண்டேன் என்று எவ‌ராவ‌து எழுத‌வோ, சொல்ல‌வோ முடியுமா? அல்ல‌து திருமயிலை அறுப‌த்து மூவ‌ர் உலா வ‌ரும்போது
    ஏசு என்னோடு சேர்ந்து கை கூப்பி, மாணிக்கவாச‌க‌ப் பெருமானை வ‌ண‌ங்குவ‌து போல‌ என‌க்குத் தோற்ற‌ம் ஏற்ப‌ட்ட‌து என்று யாராவ‌து கூறினால், சும்மா விட்டுவிடுவார்க‌ளா கிறித்துவ‌ர்க‌ளும், ப‌குத்த‌றிவுவாத, போலி ம‌த‌ச்சார்பின்மை அர‌சிய‌லாரும்?

    இங்கே ம‌றுமொழியிட்ட‌ ப‌ல‌ அன்ப‌ர்க‌ள், பார‌த‌த்தின் (இந்து மதத்தினரின்) ச‌கிப்புத் த‌ன்மை எவ்வ‌ள‌வுக்குத் த‌ன‌து பாதுகாப்பையும் மீறிய‌தாய், பிற‌ன் ம‌ன‌ம் நோகாப் பேராண்மை மிக்க‌தாய் இருக்கிற‌து என்ப‌த‌ற்கு எடுத்துக்காட்டாய் இருந்தாலும், இந்த‌ப் பெருந்த‌ன்மையைத்தான், ஜி.யு.போப் போன்ற‌ பிறமத அடிப்படைவாதிக‌ள், ப‌சுத்தோல் போர்த்திய‌ புலிக‌ள், பார‌த‌த்திற்கே கேடு விளைக்கும் வ‌ண்ண‌ம் தத்தம் காரியத்தை, மத மாற்றத்தை, பாரதப்பண்பாட்டு அழிப்பை ந‌டத்திக்கொள்ள‌ ஏதுவாகிற‌து.

    ///இந்துக்களுக்கு விளக்கம் கொடுக்கவே இந்த கட்டுரைகள் எழுதப்படுகின்றனவே அன்றி, கிறிஸ்துவர்களுக்கு புரியவைக்க அல்ல.///

    இது ஒரு பொதுத்த‌ள‌ம். இந்துக்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌, அகில‌ உல‌குக்கும் ஜி.யு. போப்பின் இந்தக் க‌ப‌ட‌த்தைப் ப‌றைசாற்றும் வ‌கையில் இக்கட்டுரை அவ‌சிய‌மான‌தே. இனியும் நாங்க‌ள் வாய் மூடி, கை க‌ட்டி வாளாவிருக்க‌ மாட்டோம் என்ப‌தைப் ப‌றை சாற்றித்தான் ஆக‌ வேண்டும். குறைந்த‌ ப‌ட்ச‌ம், க‌ட்டுரைக‌ளாவ‌து எழுதுவோம், பொதுக் க‌ருத்தை உருவாக்குவோம், எழுச்சியை உருவாக்குவோம் என்ப‌து தெரிந்தால்தான் இனியும் இப்ப‌டி இன்னுமொரு போப் எழுத‌மாட்டார். ஒரு கிறித்துவ‌ர், ஸ்னான‌க‌ன் யோவான் என்றும் சீட‌ன் யோவான் என்றும் எப்ப‌டி ஒரு ம‌றுத‌லிப்பை உட‌னே செய்கிறார் என்ப‌தை அன்பர்கள் வ‌ள்ளுவ‌ன், திருச்சிக்கார‌ன் போன்றோர் க‌வ‌னிக்க‌ வேண்டும். இது போல‌வே இக்க‌ட்டுரையும் போப்பின் விஷ‌ம‌த்த‌ன‌மான வேலைக‌ளுக்கு ஒரு ம‌றுப்பாக‌ச் ச‌ரித்திர‌த்தில் இட‌ம் பெற‌வேண்டும்.

  22. ///இதை தவிர, இயேசுவின் கொடூரமான மரணமும், உயிர்த்தெழுதலும்தான், கிறிஸ்துவத்தின் அடித்தளம். அந்த ஓவியம் சித்தரிப்பதைவிட, இயேசுவின் மரணம் கொடூரமானது. ஆனாலும், அதில்தான் கிறிஸ்துவர்கள் நம்பிக்கை பெறுகிறார்கள்.
    நாட்டை காப்பாற்றும் ஒரு வீரன், குண்டு வெடித்து உடல் கருகி இறந்து, அவன் குடும்பத்தார் கதறி அழுவதை இப்படி விமர்சிப்பீர்களா? கிறிஸ்துவர்களை பொறுத்தவரை, இயேசு மக்களுக்காய் கோர மரணமடைந்தவர்.///

    எம்.ஜி.ஆரின் குண்ட‌டி ப‌ட்ட‌ ப‌டங்க‌ள் கொண்ட போஸ்டர்கள் 1967 தேர்த‌லில் பிர‌ப‌ல‌மான‌வை. ஓட்டு வாங்க‌ப் பெரிதும் உத‌வின‌. இதேபோல, ‘கூலி உய‌ர்வு கேட்ட‌ அத்தான் குண்ட‌டி ப‌ட்டு செத்தான்’ என்ற‌ ப‌ட‌மும், வாச‌கமும் உள்ள போஸ்ட‌ர்க‌ளும் ஓட்டுப் பெற‌ உத‌வின‌.

    எம்.ஜி. ஆரின் அமெரிக்க‌ப் ப‌டுக்கைப் ப‌ட‌ம் கொண்ட‌ போஸ்ட‌ர்க‌ள் 1984 தேர்த‌லில் ந‌ல்ல‌ வ‌சூலைக் குவித்த‌ன‌.

    ராஜீவ் காந்தியின் ம‌ர‌ண‌ப் போஸ்ட‌ரின் ம‌கிமை 1991 தேர்த‌லில் பார்த்தோம்.

    அண்மையில் சாமுவேல் ராஜசேக‌ர‌ ரெட்டியின் ம‌ர‌ண‌மும் ஆந்திராவில் காங்கிரசுக்கு‌ வ‌ழியைத் த‌ந்திருக்கிற‌து, அடுத்த‌ தேர்த‌லுக்கு உத‌வும்.

    இப்ப‌டியெல்லாம் ஏதோ ஒருவர் படுத்த படுக்கையிலோ, ம‌ர‌ண‌த்திலோ லாப‌ம் பார்ப்ப‌து எப்ப‌டி என்ப‌தை அர‌சிய‌லாருக்கு எப்ப‌டித் தெரிந்த‌து என்ப‌து இப்போது புரிகிற‌து.

  23. //சிவனைத் தவிர வேறு தெய்வம் உண்டு என நினைந்து வழிபடுவோரைக் கண்டு அஞ்சுவதாகக் கூறும் மணிவாசகரை, போப் , கட்டுரையில் கூறிய இத்தாலிய சர்ச்சில், கூறிய ஓவியங்களுக்கு முன் மண்டியிட்டுத் தம்முடன் வழிபட்டதாகக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். ?இப்படிக் கூறுவதில் surreptitious, covert , subtle evangelisation இருப்பதாக நான் கருதுகின்றேன். இது தமிழ்இந்து நண்பர்களுக்கு எச்சரிக்கையாகப் பயன்படும் எனவே கருதுகின்றேன்//

    இது சரியான கருத்தே.

    எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், எவ்வளவு நல்ல புத்தகங்களை படித்து இருந்தாலும், சுவிசேஷ காரருக்கு இந்த மத மாற்ற, ஆள் பிடிக்கும் அசிங்க புத்தி போகாது.

    விட்டால், சிவ கணங்கள், நந்தி எல்லாம் என் பக்கத்தில வந்து குந்தி உக்காந்து கும்பிட்டுதுனு சொன்னாலும் சொல்வாங்க.

    என‌க்கு என்னவோ மார்க்கண்டேயன் கதைதான் நினைவுக்கு வருது. சிலுவையில் அடிக்கும் போது சிவனை நினைத்து இருந்தால், காப்பற்றப் பட்டு இருப்பார். காலனையே காலால் உதைத்து மார்க்கண்டேயனைக் காத்தவர் ப‌ர‌மேஸ்வ‌ர‌ன்.

    ஜி.யு. போப் கொஞ்சம் முன்னால பிற‌ந்து த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்து
    சிவ‌ பெருமானைப் ப‌ற்றி அறிந்து கொண்டு போய், இயெசு கிரிஸ்துவிட‌ம் சொல்லி இருக்க‌லாம்.

    கை விட்ட‌ தேவ‌னைக் கூப்பிடும் முன், காக்க‌ வ‌ரும் ‌ இறைவ‌னை கூப்பிட்டு இருக்கக‌லாம்.

  24. // 1) இனப் படுகொலை, இன அழிப்பு : உலகிலே முதல் இனப் படுகொலைக் கருத்தைக் கூறியது பைபிளே

    2) வெறுப்புக் கருத்துக்கள்: தங்கள் மார்க்கதினரல்லாத பிறரை,
    தான் கூறிய கடவுளை வணங்க்காதவரை வெறுக்கும் கருத்துகளை முத‌லில் கூறியது பைபிளே

    3) சிந்த‌னையைத் த‌டை செய்து அடிமை ஆக்குத‌ல்: யாரோ ஒருவர் கடவுளைப் பார்த்ததாக கதையை விட்டு, இந்த உலகிலே யாரும் கடவுள் இருக்கிறாரா என்று ஆரய்ச்சி செய்வதை தடை போட்டது பைபிளே! //

    நண்பர் திருச்சிக்காரன் அவர்கள், பைபிள்தான் உலகத்தின் ஆதி வேதம் என்பதை ஒப்புக்கொள்வது போல கருத்து கூறுகிறார்;

    தன் சொந்த சகோதரனை பகைத்து கொலை செய்தவனையே முதல் கொலைகாரனாக பைபிள் பதிவு செய்கிறது; அப்படியானால் முன்னரே கொலை என்பது முன்னரே நடந்திருக்கிறது; ஏனெனில் அவனைக் கடவுள் துரத்திவிடும் போது தன்னைக் காணும் ‘எவனும் கொன்று போடுவானே’ என்று கூறுகிறான்;

    சாதுவான ஒருவனை மிரட்டி இது தங்கள் முன்னோர்களின் கிணறு என்று வம்பு சண்டைக்கு வந்தோரைக் கூட பதிவு பைபிள் செய்கிறது;

    எங்குமே ஆக்கிரமிப்பையும் ஆதிக்க உணர்வையும் போதிக்கவில்லை;
    காண்கிற சூரிய,சந்திர,நட்சத்திரக் கூட்டங்களையோ கடல் வாழ் ஜீவராசிகளையோ பறவைகளையோ மிருகங்களையோ ஆணையோ பெண்ணையோ அல்லது மற்ற எந்த சிருஷ்டியையோ நமஸ்கரிக்காமல் அவற்றைப் படைத்தவரை ஆராய்ச்சி செய்யும் சுதந்தரத்தை வழங்கியிருக்கிறது.

  25. சிலுவை வழிபாடு

    இயேசுவின் படங்கள் அல்லது சர்ச்ச்னுள், வெளியில் சிலுவைகள் வைத்தல் என்பது உருவ பொம்மை வழிபாடுகளின் உச்சக் கட்டம்.

    வரலாற்று ரீதியில் ரோமன் தண்டனை முறையில் துக்குமரம் என்பது சாரம் கட்டி உயரமான சாரத்தில் ரோம் ஆட்சிக்கு எதிரான போராளிகளை நிர்வாணமாக தொங்க விடுவர். விசாரணையின் போதான காயங்கள், பசி, கழுகு போன்ற தொந்தரவுகளில் கதறி கதறி 5-6 நாள் கழித்தே மரணம் வரும்.

    நிர்வாணமாக குற்றவாளி படும் வேதனை கண்டு பொது மக்கள் ரோம் ஆட்சியை எதிர்க்க பயப்பட வேண்டும் என்பது இதன் அடிப்படை.

    குற்றவாளி இறந்தாலும் அவருடைய கழுத்தெலும்பு உடைந்து மண்டை ஓடு விழும் வரை பிண உடல்கள் தொங்கும். அதாவது தூக்குமரத்தில் மரண தண்டனை குடுக்குமிடம் கபாலதலம்- மண்டைஓடு புரளுமிடம் எனப்படும். இட்தண்டனையில் மரணம் ந்ன்பது சம்பவிக்க 2லிருந்து 10 நாள் வரை ஆகும்.

    சர்ச் நடை முறையில் சிலுவைகள் தோன்றக் காரணம்- 4ம் நூற்றாண்டில் மன்னன் கான்ஸ்டன்டைன் தன் படைக் குழுவினருக்கு பெயர் எழுதுகையில் கிறுஸ்துவர் என எழுதியதின் சுருக்கம் கிரேக்கத்தில் சி-ரோ- இரண்டும் இணைய இன்றைய வடிவம் பெற்றது 6 அல்லது 7ம் நூற்றாண்டில் தான்.

    ஆரம்பத்தில் சிரோ சிலுவை அருகில் ஆடு போடப் பட்டது, பின் இறக்கும் வாலிபன், பின் வாலிபன் சிலுவை மேல் வர இன்றைய வடிவம் பெற்றது. பரவலாக சர்ச்கள் சிலுவை பயன்பாடு 14-15ம் நூற்றாண்டு வாக்கில் தான்.

  26. // என‌க்கு என்னவோ மார்க்கண்டேயன் கதைதான் நினைவுக்கு வருது. சிலுவையில் அடிக்கும் போது சிவனை நினைத்து இருந்தால், காப்பற்றப் பட்டு இருப்பார்…//

    மற்றவருடைய நம்பிக்கைகளை தகர்த்து இன்னொன்றை ஸ்தாபிக்கவே முடியாது; இதனை நான் பொதுவான கருத்தாகவே சொல்லுகிறேன்..!

    (Comment edited & published)

  27. அருமை சகோதரர் chillsam அவர்களே,

    சுவிசேஷ சூழ்சியாளர் களின் தகிடு தத்த வேலைகைளை நீங்களும் செய்ய வேண்டுமா?

    //நண்பர் திருச்சிக்காரன் அவர்கள், பைபிள்தான் உலகத்தின் ஆதி வேதம் என்பதை ஒப்புக்கொள்வது போல கருத்து கூறுகிறார்//

    உண்மையில் நான் கூறியது என்ன?

    //பைபிளின் காட்டு மிராண்டிக் கருத்துக்களாவன:

    1) இனப் படுகொலை, இன அழிப்பு : உலகிலே முதல் இனப் படுகொலைக் கருத்தைக் கூறியது பைபிளே

    2) வெறுப்புக் கருத்துக்கள்: தங்கள் மார்க்கதினரல்லாத பிறரை,
    தான் கூறிய கடவுளை வணங்க்காதவரை வெறுக்கும் கருத்துகளை முத‌லில் கூறியது பைபிளே//

    விசக் கருத்துகளின் முதல் வூற்றுக் க‌ண்ணாக பைபிள்‌ விள‌ங்கிய‌து, என்று தெளிவாக‌ நான் எழுதிய‌தை,

    அப்ப‌டியே நைசாக‌ மாற்றி

    //பைபிள்தான் உலகத்தின் ஆதி வேதம் என்பதை ஒப்புக்கொள்வது போல கருத்து கூறுகிறார்// என்று ப‌ச்சைப் பொய்யை பாலிஷாக‌ எழுதுவது ச‌ரியா?

    இதே பாணியில் தானே ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ விச‌க் க‌ருத்துக்க‌ளை பைபிள் என்ற‌ பெய‌ரிலே உல‌க‌ம் முழுதும் ப‌ரப்பி வ‌ந்தார்க‌ள்.

    அந்த‌ அழிவுச் செய‌லை நீங்க‌ளும் தொட‌ர‌ வேண்டுமா?

  28. உமா சங்கர் , உங்களின் கருத்துகள் சிறப்பாக உள்ளன!

  29. ச‌கோத‌ர‌ர் வ‌ள்ளுவ‌ர் அவ‌ர்க‌ளே,

    சைவ‌ , வைண‌வ‌ பிண‌க்கு எல்லாம் ஃப்ர‌ண்ட்லி மேட்ச் போல‌ தான்.

    இப்போது புதிதாக‌ வ‌ருகிர‌ கோவில்க‌ள் எல்லாம்,

    “சிவா விஷ்னு டெம்பிள்”

    “ர‌ஜினி ராஜா ஆல‌ய‌ம்”

    என்று ட‌பில் பேர‌ல் க‌ன்னாக‌ க‌ல‌க்குகின்ர‌ன‌.

    மறைம‌லை அடிக‌ளை ம‌திக்கிறோம். பெரியாரின் க‌ருத்துக்க‌ளிலும் இந்து ம‌த‌த்தை செம்மை செய்ய‌ தேவையான‌தை எடுத்துக் கொள்ளுவொம்.

    அதே நேர‌ம் இன்றைய‌ இந்து எதிர்கால‌த்தை நோக்கி ப‌ய‌ணிக்கிரான்.

    மறை ம‌லை அடிக‌ள் சொன்ன‌த‌ற்க்கும், செய்தத‌ற்க்கும் முனைவ‌ர் ஐயா, விள‌க்க‌ம் கூற‌ வேன்டூம் என்று எதிர்பார்ப்ப‌து ச‌ரியா?

    இப்போது உள்ள‌ புதிய‌ இந்து ஒரு பேத‌மும் பார்ப்ப‌து இல்லை.

    இராம‌ரையும் ம‌ரியாதை செய்து ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ வ‌ழி படுவான். சிவ‌ பெருமானையும் வ‌ழிப‌டுவான்.

    ஐத‌ராபாத்தில் பிலிம் சிட்யடியிலெ ப‌ஞ்சாரா ஹில்ஸ் பகுதி ஒரு சிற‌ப்பான‌ புதிய‌ கோவில் உள்ள‌து. அங்கே இந்து ம‌த‌த்தின் எல்லா க‌ட‌வுள்களுக்கும், த‌னித் த‌னி ச‌ன்னிதி உள்ள‌து.

    இன்றைய‌ இந்துவுக்கு, இது போல‌ ச‌ர்ச்சையில் ஈடுப‌ட‌ நேர‌ம் செல‌வ‌ழிப்ப‌தை விட‌, வ‌ழிபாட்டில் அதிக‌ நேர‌ம் செல‌வ‌ழிப்பான்!
    ‍ ‍
    இந்துக்க‌ளிடையே இனி பேத‌ம் இருக்க‌ வாய்ப்பே இல்லா. யாராவ‌து உருவாக்க‌ நினைத்தாலும் இய‌லாது.

    அதே நேர‌ம், எல்லா பிரிவுக‌ளின் த‌னித் த‌ன்மை அப்ப‌டியே சிற‌ப்பாக‌ இருக்க‌ட்டும். அதையும் பாதுகாப்போம்.

    நீங்க‌ள் சிறப்பாக‌ எழுதுகிறீர்க‌ள். ஆனாலும் இது விட‌ய‌த்திலே நீங்க‌ள் த‌ய‌வு செய்து சுவாமி விவேகான‌ந்த‌ர் கூறிய‌தை சிந்த‌னை செய்யுங்க‌ள் என‌ கேட்டுக் கொள்கிறேன்.

  30. ////Oct-27
    The Hindus who had converted said that they were disenchanted which in turn
    prompted them to revert back to their earlier faith.

    They said that promises of houses and other luxuries had tempted to take
    up Christianity.

    “I don’t have any problem. But they (Christian missionaries) tempted us.
    They promised us houses. We stayed with them for two years. Our religion is
    good,” said Ram D’souza.

    Swami Narendra Maharaj, head of a Hindu sect and organiser of this programme
    mentioned that he was on a mission to save Hindus who were misguided by
    Christian missionaries.

    “Christian missionaries are carrying out conversion of religion. So we need
    to stop them,” said Swami Narendra Maharaj.

    This is the second function to take place this year.

    In April, this Hindu seer, Swami Narendra Maharaj spearheading a religious
    campaign against Christians had reportedly converted about 1130 Christians.
    And last year, also in the month of April, over 1700 Christians were brought
    back to Hindu fold by him.

    It is also claimed by Swami Narendra Maharaj and his followers that they
    intend to re-convert 100 thousands of people into Hindu faith.////

    ஏமாந்தவர்கள் திரும்பியிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்களை என்ன செய்வது?

  31. அருமை சகோதரர் chillsam அவர்களே,

    //சாதுவான ஒருவனை மிரட்டி இது தங்கள் முன்னோர்களின் கிணறு என்று வம்பு சண்டைக்கு வந்தோரைக் கூட பதிவு பைபிள் செய்கிறது;

    எங்குமே ஆக்கிரமிப்பையும் ஆதிக்க உணர்வையும் போதிக்கவில்லை;//

    அருமை சகோதரர் chillsam அவர்களே,

    நீங்க‌ள் புரியாம‌ல் , தெரியாம‌ல் இப்ப‌டி எழுதி இருந்தால், உங்களின் பார்வைக்கு இங்கெ கீழெ வ‌ழ‌ங்கியுள்ளேன்.

    அல்ல‌து நீங்க‌ள் தெரி ந்தே எழுதியிருந்தால், விச‌க் க‌ருத்துக்களை சாக்லெட்டிற்க்குள் வைத்து குடுப்ப‌து போல‌ இப்ப‌டி இனிமேல் எழுதாதீர்க‌ள்.

    “பைபிள் கூறூம் இன‌ அழிப்பு, இன‌ப் ப‌டுகொலை விச‌க் க‌ருத்துக்க‌ளில் சில‌:

    மோச‌சிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    “எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”

    யோசுவாவிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    யோசுவா, அதிகாரம் 6,

    2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!

    21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

    24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//

    க‌ர்த்த‌ரின் “ஆசீர்வாத‌ம்” இன்னும் ப‌ல‌ உள்ளது.

    இஸ்ரேல்தான் தேர்ந்து எடுக்க‌ப் ப‌ட்ட‌ இன‌ம் ப‌ல‌ பிற‌ இன‌ங்க‌ளை முழுவ‌தியும் அழித்துப் போடு, இர‌க்க‌ம் காட்டாதே என்று கூறியிருப்ப‌து தெளிவாக‌ இருக்கிற‌து.

    பைபிள் என்ப‌து காட்டுமிராண்டி ம‌ன‌ நிலையில் இருந்த‌ யூதர்க‌ள் உருவாக்கிய‌ க‌ற்ப‌னை. அத‌னால் உல‌கிலே ப‌ல‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டு விட்ட‌ன‌ர்.

  32. இயேசுவின் பெயரை வைத்தே இந்த உலகிலே- முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் இரண்டிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையிலான மக்களைக் கொன்று குவித்து விட்டீர்கள்- சிலுவைப் போர்கள் என்னும் பெயரில்.

    இயேசுவைக் கொன்றார்கள் என்று கூறி பாதி யூதரைப் பரிதாபமாகக் கொன்று விட்டீர்கள்.

    பைபிளில் ஆதாரம் இருக்கிரது என்று கூறி பாலஸ்தீநியரை அடித்து விரட்ட பிளான் போட்டுக் கொடுத்து அதை நிறைவேற்றியும் விட்டீர்கள்.

    பைபிள் ஆதாரம் காட்டுவதால், பாலஸ்தீனிலும், மத்தியக் கிழக்கு முழுவதும் பைபிள் இருக்கும் வரை அமைதி நிலவ முடியுமா என்று ஆயாசமாக உள்ளது.

    நான் கூறும் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள்கள் பொய்யானவை என்று வெறுப்பு பிரச்சாரம் செய்து அடுத்த போருக்குத் தயார் செய்கிறீர்கள்.

    உங்களிடம் இருந்து அமைதியை காக்க பாடாத பாடு பட வேண்டியுள்ளது.

    ஆன்மீக‌ ஆராய்ச்சியில் சிற‌ந்து விள‌ங்கிய இந்தியாவில் வ‌ந்து இப்படிக் காட்டுமிராண்டித் த‌ன‌மும், பைத்திய‌க்கார‌த் த‌ன‌மும் நிறைந்த‌ க‌ல‌க்க‌ல் ச‌ர‌க்கை திணிப்ப‌து ஏன்?

  33. மதம் மாற்றுவேன், அது என் சுதந்திரம் என்கிறார்கள்.

    ஆனால் மதம் மாறிய பின் அவர்கள் செய்வது என்ன ?

    கையிலே கருப்பு உறைக்குள் பைபிளை எப்போதும் வைத்துக் கொள்கிறார்கள். அதில் தவறில்லை.

    அதை விட அவர்கள் முக்கியமாக செய்யும் வேலை, பிற மதங்கள் பொய்யானவை என்றும், பிற மதக் கடவுள்கள் ஜீவனில்லாதவை என்றும், தங்கள் கடவுள் மட்டுமே ஜீவனுள்ளவை என்றும், என்னவோ இவர்கள் கடவுளிடம் கைக் குலுக்கி விட்டு வந்தது போல சரடு விடுவார்கள்.

    இந்தியா என்றாலே சகிப்புத்தன்மை தான், அசோகர், அக்பர், காந்தி…என எல்லோரையும் உருவாகிய இந்திய சமுதாயம் சகிப்புத் தன்மை உடைய சமுதாயம் தான்.

    இந்த 10,000 வருடத்துக்கும் முந்தைய சமுதாயத்தைப் பாழாக்கும் வகையிலே,

    என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்றும்,

    என் கடவுள் மட்டுமே சர்வ வல்லமை உள்ள கடவுள் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிந்து இந்தியா முழுவதையும் பாலஸ்தீன் போல ஆகும் நிலையை உருவாக்குவதற்கான வேலையை செய்கின்றனர்.

    என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், என் கடவுள் மட்டுமே சர்வ வல்லமை உள்ள கடவுள் என்றெல்லாம் கூறும் கொள்கையுடையவர் இந்த உலகையே சுடுகாடு ஆக்காமல் ஓய மாட்டார்கள்.

    எனவே இந்தியாவில் எந்த மதம் வேண்டுமானாலும் பரப்பப் படலாம். ஆனால் தன் மதம் மட்டுமே உண்மை , தன் கடவுளை மட்டுமே இந்த உலகம் முழுவதும் வணங்க வேண்டும் என்ற சர்வாதிகார கொடுங்கோல் மதங்களை, கல்லறைகளை உருவாக்கும் மதங்களை பரவ அனுமதிக்க முடியாது.

    உங்களின் தேவை என்ன?
    இந்து மதக் கடவுள்களை இகழ வேண்டும், இந்து மதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.

    பிறகு வெறி பிடித்த கொள்கை உடைய கூட்டங்கள் மட்டும் இருக்கும்-

    அவர்களும் (அதாவ‌து ஜீவ‌னுள்ள‌ ஒரெ க‌ட‌வுள் பார்ட்டிக‌ளும் – விண்ணுக்கும் ம‌ண்ணுக்கூம் அதிப‌தியான‌ ச‌ர்வ‌‌ வ‌ல்ல‌மை பொருந்திய‌ ஏக‌த்துவ‌ க‌ட‌வுள் பார்ட்டிக‌ளும்)அடித்துக் கொண்டு சாக வேண்டும்- இதற்க்கு பெயர் சுதந்திரமா?

    இந்த உலகையே சுடுகாடு ஆக்காமல் ஓய மாட்டார்கள்.

  34. உமா சங்கர் அவர்களே,

    //அன்பர்கள் வ‌ள்ளுவ‌ன், திருச்சிக்கார‌ன் போன்றோர் க‌வ‌னிக்க‌ வேண்டும்//

    நான் எழுதிய கருத்து என்ன என்பதை நீங்கள் தயவு செய்து புரிதல் செய்ய வேண்டும்.

    மக்தலேன் மேரி பற்றியெல்லாம் எழுதிக் கொண்டு இருந்தால் அதையே வைத்து அவர்கள் திசை திருப்பி விடுவார்கள்.

    “ஐயோ, மக்தலேன் மேரி ரொம்ப நல்லவங்க, இவங்க இப்படி குறை சொல்லுறாங்க” என்று ஜல்லி அடித்து, இரண்டாம் அனுதாப அலையை உருவாக்க ஆரம்பித்து விடுவார்கள்.

    பைபிளின் அடிப்படையே தவறு. பைபிள் இன அழிப்புக் கருத்துக்களை, வெறுப்புக் கருத்துக்களை , நச்சுக் கருத்துக்களை வைத்து இருந்த காட்டு மிராண்டிகளால் உருவாக்கப் பட்டது, அதற்கும் ஆன்மீகத்துக்கும் தொடர்பே இல்லை, என்பதை எளிதாக காட்ட முடியும்.

    விசக் கனிகளைத் தரும் மொத்த விச மரமும் ஆணி வேரோடு பிடுங்கப் பட வேண்டும்.

    சில இலைகளைப் பறித்துப் போட்டு , அந்த இலைகள் நம் மீது படுவதால் நமக்கு அரிப்பு வியாதியை உருவாக்கிக் கொள்வதால் என்ன லாபம் ?

  35. திருச்திக்காரரே, நீங்கள் சொன்னதை ஓரளவிற்கு என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், மறைமலை அடிகளாரின் அவ்வார்த்தைகள் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரி ஆகட்டும், எவ்வளவோ பார்த்தாச்சு! எத்தனயோ பெயர் அசிங்கப்படுத்தியாச்சு. மறைமலை அடிகளா நமக்குப் பெரிய துக்கமாகத் தெரியப்போறார்? “வெயிலாச்சு, புயல் மழையாச்சு; இந்த விளக்கு அதிலும் எரியுது எரியுது!”

    //சைவசித்தாந்தத்தை இளஞர்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.//

    முனைவர் அய்யா அவர்களே, உங்களைப் போன்றவர்களைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். சொல்லுங்கள் அய்யா, கேட்டுக்கொள்கிறோம்!!

  36. நண்பர்களே,
    இந்த கட்டுரையை பொறுத்தவரை, நான் கூறிய யோவான் ஸ்நானகன், மற்றும் சீடன் யோவான் பிரச்னை, காட்டுரையின் மைய கருத்து இல்லை என்றாலும், அது கட்டுரை ஆசிரியரின் பைபிள் பற்றிய ஞான குறைவையே காட்டுகிறது. மேலும், இத்தகைய முக்கியமில்லாத தவறுகளாய் கருப்படும் விஷயங்கள், நாளை தேவப்ரியா போன்றவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு(??), எடுத்து பைபிளில் உள்ள தவறுகள் என்று ஒரு கட்டுரை எழுதி அதற்க்கு முனைவர்.முத்துக்குமாரசாமியின் கட்டுரையை ஆதாரமாக்கி விடுவார்கள். பதிக்கப்படும் எந்த கட்டுரையும் விமர்சனத்துக்கு ஆளாகும். விமர்சனம் உண்மையாய் இருக்கும் பட்சத்தில், அதை ஏற்றுக்கொள்வதே கற்றவர்களின் பண்பு. அதை விடுத்து விமர்சகரின் மேல் கல் எறிவதல்ல.
    நன்றி,
    கிறிஸ்டியன்

  37. ////க‌ட‌வுளுக்கே ஆப்பு: ஒரு உயிர் ஒரே முறைதான் பிறக்கிறது என்று கதை கட்டி, அப்படியானால் ஒரே ஒரு முறை பிறக்கும் உயிரை கடவுள் எதற்கு குருடனாகப் பிறக்க வைக்க வேண்டும், கடவுள் தவறே செய்யாத உயிரை தண்டிக்கும் கல் நெஞ்சனா என்ற வ‌கையிலே க‌ட‌வுளையெ ஒரு கொடுமையான‌வ‌ன் போல‌ சித்த‌ரித்தது//////
    திருச்சிகாரர் கேட்ட இந்த கேள்விக்கு கிருஸ்தவர்கள் பதில் கூற முடியாது என்றே நினைக்கிறேன்.
    ஒரு எட்டு,வருடங்களுக்கு முன்,சித்தர்களின் பாடல்கள்,மற்றும் அதன் விளக்கங்கள் அடங்கிய ஒரு சிறு புத்தகம் ஒன்றை ஒரு கிருஸ்தவ நண்பர் என்னிடம் தந்தார்.அதில் அகத்தியர்,மற்றும் சில சித்தர்களின் பாடல்கள் ஏசுவைக் குறிப்பது போல்(சாது செல்லப்பாவைப் போல) பொய்யான விளக்கங்கள் தரப்பட்டது.இதைப் போல பொய்யான விளக்கங்களுடன் புத்தகம் வெளியிடுபவர்களை தண்டிக்க வழக்கு தொடர வழி உள்ளதா?
    சமீபத்தில் ஒரு அரசியல் தலைவர் கூட நம் திருக்குறளில் வரும் கடவுள்,மறுபிறவி போன்ற வார்த்தைகளுக்குறியப் பொருளை சொல்லாமல்,பகுத்தறிவின் காரணமாக,உண்மையான பொருளைத் திரித்து,பொய்யான அர்த்தம் கற்பித்துள்ளார்.எவர்களை நாம்,சட்டத்தால் எதுவுமே செய்ய முடியாதா?

  38. //நாளை தேவப்ரியா போன்றவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு(??), எடுத்து பைபிளில் உள்ள தவறுகள் என்று ஒரு கட்டுரை எழுதி // Christian
    30 October 2009 at 10:30 pm

    Why attack me personally, if I have misquoted Bible- Please quote and reply

  39. Dear Christian –

    This is a view of a Noble price winner

    பைபிள்- தீயொழுக்கங்களின் கையேடு-நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய எழுத்தாளர்
    October 29, 2009

    நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய எழுத்தாளர் ஹோஸே சரமாகோ பைபிளை தீயொழுக்கங்களின் கையேடு என்று உண்மையை உரைத்துள்ளார்

    இது சர்ச்சுகளிலும் ஸ்பெயினிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

    Nobel winner slams Bible as ‘handbook of bad morals’
    (AFP) – 22 hours ago
    https://www.google.com/hostednews/afp/article/ALeqM5jz7ZtcEKZzrizGRpwp7t77X41qrg
    LISBON — A row broke out in Portugal on Monday after a Nobel Prize-winning author denounced the Bible as a “handbook of bad morals”.

    Speaking at the launch of his new book “Cain”, Jose Saramago, who won the 1998 Nobel Prize for Literature, said society would probably be better off without the Bible.

    Roman Catholic Church leaders accused the 86-year-old of a publicity stunt.

    The book is an ironic retelling of the Biblical story of Cain, Adam and Eve’s son who killed his younger brother Abel.

    At the launch event in the northern Portuguese town of Penafiel on Sunday, Saramago said he did not think the book would offend Catholics “because they do not read the Bible”.

    “The Bible is a manual of bad morals (which) has a powerful influence on our culture and even our way of life. Without the Bible, we would be different, and probably better people,” he was quoted as saying by the news agency Lusa.

    Saramago attacked “a cruel, jealous and unbearable God (who) exists only in our heads” and said he did not think his book would cause problems for the Catholic Church “because Catholics do not read the Bible.

    “It might offend Jews, but that doesn’t really matter to me,” he added.

    Father Manuel Marujao, the spokesman for the Portuguese conference of bishops, said he thought the remarks were a publicity stunt.

    “A writer of Jose Saramago’s standing can criticise, (but) insults do no-one any good, particularly a Nobel Prize winner,” the priest said.

    Rabbi Elieze Martino, spokesman for the Jewish community in Lisbon, said the Jewish world would not be shocked by the writings of Saramago or anyone else.

    “Saramago does not know the Bible,” the rabbi said, “he has only superficial understanding of it.”

    The author caused a scandal in Portugal in 1992 with “The Gospel According to Jesus Christ.”

    The book depicted Jesus losing his virginity to Mary Magdalene and being used by God to control the world.

    Saramago quit Portugal at the time and moved to Lanzarote, in the Spanish Canary Islands.

  40. //Why attack me personally, if I have misquoted Bible- Please quote and reply//
    திரு.தேவப்ரியா,
    நீங்கள் பைபிளை குறித்து சொல்லும் உங்கள் கருத்துகளுக்கு, யாரோ ஒருவர் எழுதிய கட்டுரை அல்லது புத்தகத்தைதான் ஆதாரமாக வைக்கிறீர்கள். அதைத்தான் நான் குறிப்பிட்டு சொன்னேன்.
    நன்றி,
    கிறிஸ்டியன்

  41. ////க‌ட‌வுளுக்கே ஆப்பு: ஒரு உயிர் ஒரே முறைதான் பிறக்கிறது என்று கதை கட்டி, அப்படியானால் ஒரே ஒரு முறை பிறக்கும் உயிரை கடவுள் எதற்கு குருடனாகப் பிறக்க வைக்க வேண்டும், கடவுள் தவறே செய்யாத உயிரை தண்டிக்கும் கல் நெஞ்சனா என்ற வ‌கையிலே க‌ட‌வுளையெ ஒரு கொடுமையான‌வ‌ன் போல‌ சித்த‌ரித்தது////
    நல்ல ஞாயமான சிந்தனைதான். ஒருவன் தவம் செய்து முக்தி அடைவதை நீங்கள் ஒத்துக்கொள்ளுகிறீர்கள். நீங்கள் சொல்வதுபோலவே வைத்துக்கொள்ளலாம். இந்த கதையை கேட்டு பதில் சொல்லுங்கள், நானும் தெளிவு பெற்றுக்கொள்ளுகிறேன்.
    இரண்டு பிள்ளைகள் ஒரே நேரத்தில் பிறக்கின்றன(அது அவர்களின் முதல் பிறவி, இந்த பூவுலகில்). ஒரு பிள்ளை கண் குருடாகவும், கால் ஊனமாகவும் இருக்கிறது. இன்னொரு பிள்ளை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. ஊனமான பிள்ளை தன் நாற்பதாவது வயது வரை துன்பத்துடனும் வறுமையுடனும் வாழ்கிறது. ஆரோகியமான பிள்ளை, நல்ல செல்வ செழிப்போடும், புகழோடும் தன் வாழ்க்கையை நாற்பது வயதுவரை அனுபவிக்கிறது. அதன் பின்னர், அவர்கள் இருவரும் ஒரு முனிவரிடம் சீடராகி கடும்தவம் இருந்து, பரமனை கண்டு, முக்தி அடைகின்றனர்.
    இருவருக்கும், ஒரே பிறவி மட்டும் இருந்து இருக்கிறது. ஆனால், ஒருவர் நாற்பது ஆண்டு காலம் உலக சுகத்தை அனுபவித்தவர், மற்றவர் துன்பம் அனுபவித்தவர். இந்த சூழ்நிலையில் திருச்சிக்காரன் கூறிய சமநிலை வராதே.
    ஆரோக்கியமாக பிறந்த காரணத்தால் ஒருவனின் தவத்தை உங்கள் கடவுள் ஏற்க மாட்டாரா? இல்லை இல்லை, நீ ஊனமாக பிறந்து என்னிடம் வா என்று கூறுவாரா?
    அல்லது, ஊனமாயிருந்து இன்னொரு பிறப்பை வெறுத்து, முக்தி வேண்டி கடும்தவம் செய்து நிற்கும் ஒருவனிடம், இல்லை இல்லை, நீ ஆரோக்கியமாய் இன்னொரு பிறவி எடுத்து என்னிடம் வா என்று கூறுவாரா?
    கொஞ்சம் எடுத்து சொல்லங்க சார்.
    நன்றி,
    கிறிஸ்டியன்

  42. ////அவருக்கும் மகதலேனா மரியாளுக்கும் இருக்கும் உறவையும் கொச்சை படுத்தலாமா? ஒரு குரு சிஷ்ய உறவை, சில புரளிகளின் காரணமாக கணவன் மனைவி உறவென கூறலாமா?//

    எந்த நாட்டில் இருந்து கிறிஸ்துவ மதம் பரப்பப் பட்டதோ, அதே நாட்டில் இருந்துதான் நீங்கள் புரளி என்று சொல்லப் பட்ட விஷயமும் வந்தது. ஒன்றுக்கு முக்கியத்துவமும் மற்றொன்றை வசதியாக புரளி என்றும் உம் போன்றோர் கூறலாமா?//

    திரு.லெனின்,
    இந்துத்துவம் தோன்றியாதாக நீங்கள் சொல்லும் இந்தியாவில் இருந்துதான் அதற்க்கு எதிரான பல கருத்துகள் வந்துள்ளது. இதை என்னவென்று சொல்லுவது?

    நன்றி,
    கிறிஸ்டியன்

  43. ஐயா Christian அவர்களே,
    என்னுடைய கட்டுரையில் ஸ்நானகன் ‘ என்ற பிழையான சொல்லாட்சியை நீக்கிவிட்டு, சிஷ்யன் ‘ என்ற சொல்லைப் பெய்து வாசித்து, கட்டுரையின் மையக்கருத்தில் தங்களுடைய விமரிசனத்தை வைக்க வேண்டுகின்றேன். என்னுடைய கட்டுரை பைபிளைப் பற்றிய ஆராய்ச்சியல்ல. இது, எங்களால் பெரிதும் போற்றப்படும் , மதிக்கப்படும் கிறித்தவ மதத் தலைவரின் உள்ளத்தைப் பற்றியது. பாற்கடல் போன்ற இவரது விரிந்த உள்ளத்தில் christian bias எத்தகைய நஞ்சாக உள்ளது என்க்காட்டுவதே இக்கட்டுரை. போப்பே இப்படிப்பட்டவராக இருந்தால், மதமாற்றத்தையே பெரிய இலாபகரமான வியாபாரமாகச் செய்து வருவோருடைய உள்ளம் நச்சுக்கடலாக அல்லவா இருக்கும் எனச்சுட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    தாங்கள், John Banyan எழுதிய Pilgrim Progress ல் கடவுளை நாடும் கிறிஸ்டியன் எனும் இறை தேடியைப் போலவோ, கிறிஸ்துவைப் போல வாழ விரும்பிய Thomas kempisயைப் போலவோ உள்ளப் பண்புடையவர் என்றால், இறைவனைத் தேடுதலில், உங்களுடன் பயணம் செய்வதில் மகிழ்ச்சியே கொள்வேன். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்துப் பண்பு. ஒரே தண்ணீரை வெவ்வேறு லேபிள் ஒட்டி விற்கின்ற வியாபாரியைப் போல இயேசுவை விற்கின்ற பெந்தகொஸ்தே , சாதுசெல்லப்பா, தினகரன் போன்ற வியாபாரிகளைக் கண்டே என்போன்றவர்கள் அஞ்சுகிறார்கள். அருவருப்பு அடைகிறார்கள். இயேசுமீது உங்களுக்கு இருக்கும் பற்றை மதிக்கின்றேன்.

    போப் இத்தாலியச் சர்ச்சில் சர்ச்சைக்குரிய ஓவியங்களுக்கு முன்னால் தம்முடன் மாணிக்கவாசகர் வழிபட்டார் என்று கூறினார். ஏன்,? நாள்தோறும் அவர் செய்துவந்த வழிபாட்டில் மணிவாசகரை நினைந்தேன் என்றோ நாள்தோறும் திருவாசகப்பாடல்கள் சிலவற்றை ஓதிவந்தேன் என்றோ கூறியிருப்பாரேயானால் இந்தக் கட்டுரைக்கு வேலையே இருந்திராது.

  44. பைபிள் என்பது புனித நூலாக கூறப் படுகிறது. அதாவது “கர்த்தர்” கூறியதாக பல வாசகங்கள் அதில் உள்ளன.

    பைபிளில் “கர்த்தர்” என்பவரை கடவுளாக சித்தரிக்கின்றனர்.

    கர்த்தர் கூறினார்………….. கர்த்தர் கூறினார்………என்று பல வாக்கியங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் வெறுப்புக் கருத்துக்களாக, இன அழிப்புக் கருத்துக்களாக உள்ளதோடு சில சமயம் பைபிளை உருவாக்கிய காட்டு மிராண்டிகளின் வாழ்க்கை நிலையையும் சித்தரிக்கின்றன.

    தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் என்றார் வள்ளுவர்.

    எப்படி கடவுள் என்று கூறப் படுபவர் ஒரு இனத்தை வாழ வைக்க பிற இனங்களை அழித்துப் போடும் பொல்லாப்புக் காரராக இருக்க முடியும்?

    கடவுள் என்று சொல்லப் படுபவர், அவர் உலகில் உள்ள எல்லோருக்கும் தந்தையாக கூறப் படுகிறார். தந்தை ஒரு மகனைப் பார்த்து பிற மகன்களை எல்லாம் வெட்டி சாகடித்து, நீ வாழ்ந்து கொள் என்று சொல்வாரா?

    ஒரு இன‌த்துக்கு ஆதர‌வாக‌ பிற‌ இன‌ங்க‌ளை அழிக்க‌ உத‌வி செய்பவ‌ர், ஒரு போதும் க‌ட‌வுளாக‌ இருக்க‌ முடியாது. ஒரு ராஜ‌ ப‌க்ஷெவோ, ஹிட்ல‌ரோ க‌ட‌வுள் என‌க் க‌ருத‌ப் ப‌ட‌ முடியுமா?

    என‌வே இந்த கர்த்தர் என்று குறிப்பிடுபவர் யூதர்களின் தலைவராகவே, அதாவது நாட்டாண்மையாகவே இருந்தார் என்ப‌தை, மிக‌ எளிதாக‌ ப‌ள்ளியில் ப‌யிலும் மாண‌வ‌ன் கூட‌ கூறுவான். அதுவும் அடாவ‌டி வெட்டு குத்து நாட்ட‌ண்மையாக‌வே இருந்திருக்கிறார். என‌வே தான் இந்த கர்த்தரானவர், யூதர்களைப் பார்த்து பிற இனங்களை அழித்து , கிழவர்க்ள, பெண்கள், குழைந்தைகள், ஆடு மாடுகள் என ஒன்று விடாமல் எல்லாவற்றியும் கூர்மையான வாளால் வெட்டி அழிக்க சொல்லி இருக்கிரார்.

    இந்த எனவே இந்த “கர்த்தர்” என்று குறிப்பிடப் படுபவர் கடவுள் அல்ல யூதர்களின் தலைமைக்கான பதவி, அதாவது நம்மூரு நாட்டமை போல –
    என்பதை எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

    தங்களுடைய நாட்டாண்மை கர்த்தர் பதவியை, கடவுள் என்று எல்லோருக்கும் அறிமுகப் படுத்தி, எல்லொரையும் த‌ங்க‌ளின் நாட்டாண்மைக்கு அடி ப‌ணிய‌ வைத்து, அல்வா கொடுத்து விட்டனர் யூதர்கள்.

    யூத‌ர்க‌ளின் நாட்டாண்மையாகிய‌ க‌ர்த்த‌ரும், ப‌ல‌ பஞ்சாய‌த்து தீர்ப்புகளை வ‌ழ‌ங்கி உள்ளார். அதில் ஒன்று இதோ:

    Bible: Deuteronomy: 25:11
    “If two men, a man and his countryman, are struggling together, and the wife of one comes near to deliver her husband from the hand of the one who is striking him, and puts out her hand and seizes his genitals,

    Bible: Deuteronomy: 25:11

    then you shall cut off her hand; you shall not show pity.

    “இர‌ண்டு ஆண்க‌ள் ச‌ண்டை செய்யும் போது, ஒரு ஆணின் ம‌னைவி, த‌ன் க‌ண‌வ‌னுக்கு உத‌வி செய்யும் பொருட்டு, இன்னொரு ஆணின் பிற‌ப்பு உறுப்பான‌ விதைக் கொட்டைக‌ளைப் பிடித்து க‌ச‌க்கி , ந‌சுக்கி அவ‌ன் விதைக் கொட்டைக‌ளில் வ‌லி ஏற்ப‌டுத்தினால்,

    அத‌ற்கு த‌ண்ட‌னையாக‌ அந்த‌ப் பெண்ணின் கைக‌ளை இர‌க்க‌ம் காட்டாம‌ல் வெட்ட‌ வேண்டும்”

    என்ப‌தே நாட்டாண்மை க‌ர்த்த‌ரின் தீர்ப்பு.

    தீர்ப்பை நாம் குறை சொல்ல‌வில்லை. கொஞ்ச‌ம் க‌டுமையான தீர்ப்புதான். ஆனாலும் “நாட்டாண்மை க‌ர்த்த‌ரே, தீர்ப்பை மாத்து”‘ என்று நாம் உர‌க்க‌ முழ‌ங்க‌வில்லை.

    ந‌ம்முடைய‌ விட‌ய‌ம் க‌வ‌ன‌த்துக்குரிய‌ வேறு. பைபிளை உருவாக்கிய‌வ‌ர்க‌ள் உல‌கிலே வேறு எங்கும் காண முடியாத‌ அதிச‌ய‌க் காட்டு மிராண்டிக‌ளாக‌ இருந்த‌ன‌ர் என்ப‌தே நாம் இதில் அறியும் விட‌ய‌ம்.

    நாம் கூட‌ த‌மிழ் திரைப் ப‌ட‌ங்க‌ளிலே க‌தாநாயகன் ப‌ல வில்ல‌ன்க‌ளால் தாக்க‌ப் ப‌டும் போது,
    அவனுடைய‌ காத‌லியோ, ம‌னைவியோ உருட்டுக் க‌ட்டையையோ, அல்லது வேல், சூலாயுத‌ம் போன்ற‌வ‌ற்றையோ கையிலே எடுத்துக் கொண்டு வேக‌மாக‌ வ‌ந்து வில்ல‌னைத் தாக்குவ‌தைக் க‌ண்டிருக்கிரோம்.

    ஆனால் இப்ப‌டி வில்ல‌னின் விதைக் கொட்டைகளை கைமா செய்வ‌து என்ப‌து, எந்த‌ ஒரு இந்திய‌னுக்கும், க‌ற்ப்ப‌னையில் கூட‌ வ‌ராது.

    நாம் த‌வ‌றாக‌ எதுவும் சொல்ல‌வில்லை. பைபிளில் உள்ள‌தை அப்ப‌டியே வார்த்தைக்கு வார்த்தை மாறாம‌ல் copy & paste செய்தே போட்டு இருக்கிறோம்.

    அப்ப‌டிப் ப‌ட்ட‌ காட்டுமிராண்டி நிலையில் இருந்த‌வ‌ர்களின் நாட்டாண்மை ப‌த‌விதான் க‌ர்த்த‌ர் என‌ அறிய‌லாம்.

    என்வே பைபிளை விருப்பு வெருப்பின்றி ப‌டிக்கும் ப‌ல‌ரும்

    பைபிளைக் க‌ற்ப்பித்த‌வ‌ன் காட்டுமிராண்டி,

    பைபிளை ந‌ம்புப‌வ‌ன், மூளை ச‌ல‌வை செய்து கொண்ட‌ முட்டாள்,

    பைபிளை பர‌ப்பி இந்த‌ உல‌கில் ம‌க்க‌ளின் ம‌ன‌திலே வெறுப்புக் க‌ருத்துக்களை ந‌ச்சுக் க‌ருத்துக்களை உருவாக்கு ப‌வ‌ன் அயோக்கிய‌ன்,

    என்ற‌ முடிவுக்கு வ‌ருவ‌து ஆராய்ச்சியின், அறிவின் அடிப்ப‌டையில் தான்.

    இதை மேல் நாட்டு அறிங்க‌ர் டிரிக்ஸ் கார்ன‌ர் (Tirichs kaarnar) கூறியுள்ளார்.

  45. மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் (who attained Mahasamadhi sometime around 1957) துர்மரணம் மற்றும் தானகாவே, முழு பிரக்ஞையுடன், உடலை நீத்தலின் அடையாளங்கள் பற்றிபேசியுள்ளார்கள். கிழே (தமிழில் கிடைக்கவில்லை)

    கொடுக்கப்பட்டுள்ள குறளின் தமிழ் மூலம் (marked a.) யாராவது அறிந்திருந்தால் தெரிவிக்கவும், நன்றி

    Meivazhi Salai Andavar has spoken about the symptoms of Dur Maranam and Conscious Death. Below

    The Holy Scriptures and Religions speak of death as of two kinds

    Unjust and ignoble death – with perceptible marks and signs to prove it also.

    1. Pollution – the discharge of bitter and nasty fluid – emitting stinking smell

    a.
    “Whether a person has lived an unrighteous or righteous life is revealed by his seminal discharge or its absence at the time of death” [Thirukkural]

    b.
    “O thou My mind! For the realized, the seed of life remains itself inside the body at death [and the body remains pure]. For the unrealized it departs leaving a seminal discharge [and the body, deteriorates consequently].” [Agappei Siddhar]

    2. The severe and violent throws of the shoulderd blades,

    3. The phlegm accumulating in the chest and causing dragging and jarring sound as if sawn with a sickle,

    4. The twisting and fiery breath that chokes and suffocates the throat, causlng keen and poignant agonies that shoot through every nerve like streams of pulsating fire, (The higher sense faculties, the special favours of God to man, forming the intellectual part of his nature, are snatched away while there will still be power to feel and feeling will be torment.)

    5. The closure of the gullet not allowing a drop of water to get in,

    6. The blurring of the eye,

    7. The changes in the natural conditions of the lobe and the ala,

    8. The rigormortis and a gloomy and horrified appearance of the face

    9. The increase of sinful physical weight(dead weight) and

    10. Tha decay of the body.

    Just and noble death – Heavenly – with manifestations bearing ample proof to it

    The votaries of
    MEIVAZHI, near and dear to their Holy Master, get at the time of death into the subtle body with the ‘Breath of Life’, the source for revival(Resurrection) with all betterment. In proof whereof the following symptoms are displayed :-

    1. The pure and pleasant state as is clearly reflected in the youthfulness and cheer blooming on the face,

    2. The aroma emanating from ,

    3. The Felxibility,

    4. The Weightlessness,

    5. The warmth,

    6. The sweating of the body,

    7. The natural conditions of the lobe and the ala and

    8. the knuckles giving out sound when cracked – all continuing as in live state; and

    9. the disappearence of deformities such as hunch back with which they may have been afflicted,

    10. Their bodies do not decay after death. The earth does not affect their bodies.

  46. //தாங்கள், John Banyan எழுதிய Pilgrim Progress ல் கடவுளை நாடும் கிறிஸ்டியன் எனும் இறை தேடியைப் போலவோ, கிறிஸ்துவைப் போல வாழ விரும்பிய Thomas kempisயைப் போலவோ உள்ளப் பண்புடையவர் என்றால், இறைவனைத் தேடுதலில், உங்களுடன் பயணம் செய்வதில் மகிழ்ச்சியே கொள்வேன்.//
    நன்றி முனைவர் அவர்களே,
    கிறிஸ்துவர்கள் என்றாலே சூழ்ச்சியாளர்கள் என்று இங்கு பலரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், இயேசுவை பின்பற்றி, அவரை போல வாழவிரும்பும் கிறிஸ்துவர்கள் உண்டென்று நீங்கள் நம்புவதை நான் வரவேற்கிறேன்.
    பொப் தம் அதீத கர்ப்பனயினாலே அப்படி எழுதி இருப்பார் என்றே நான் நினைக்கிறேன். இந்தியனான நான், பயணம் செய்த அனைத்து நாட்டு விஷயங்களையும், நான் இந்தியாவில் பார்த்த விஷயங்களோடு தான் ஒப்பிட்டு பார்ப்பேன். சீனாவில் நான் பார்த்த Taichi கலை, இந்தியாவின் யோகாசனத்தில் இருந்து வந்ததோ என்றே எனக்கு தோன்றியது. அதே போல மாணிக்கவாசகரின் மன ஒருக்கம், பொப் பெரிதும் மதிக்கும் இயேசுவை வணங்கியதால் வந்ததோ என்று நினைத்து இருக்கலாம். அவர் சுவிஷேகராய் இருந்ததும் அதற்க்கு காரணமாயிருக்கலாம். இதை பெருங்குற்றம் என்றும் நயவஞ்சகம் என்றும் சொல்லும் அளவுக்கு எதுவும் தெரியவில்லை.
    மேலும் போப்பை விட, இயேசுவின் மரணமே உங்கள் கட்டுரையில் மையப்பட்டு இருப்பதாக நான் உணர்கிறேன். இயேசுவின் மரணத்தை நீங்கள் இழிவு படுத்தியதாகவே தோன்றுகிறது. இயேசுவின் மரணத்தை பற்றிய புரிதல் உங்களுக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
    நன்றி,
    கிறிஸ்டியன்

  47. ///என்வே பைபிளை விருப்பு வெருப்பின்றி ப‌டிக்கும் ப‌ல‌ரும்

    பைபிளைக் க‌ற்ப்பித்த‌வ‌ன் காட்டுமிராண்டி,

    பைபிளை ந‌ம்புப‌வ‌ன், மூளை ச‌ல‌வை செய்து கொண்ட‌ முட்டாள்,

    பைபிளை பர‌ப்பி இந்த‌ உல‌கில் ம‌க்க‌ளின் ம‌ன‌திலே வெறுப்புக் க‌ருத்துக்களை ந‌ச்சுக் க‌ருத்துக்களை உருவாக்கு ப‌வ‌ன் அயோக்கிய‌ன்,

    என்ற‌ முடிவுக்கு வ‌ருவ‌து ஆராய்ச்சியின், அறிவின் அடிப்ப‌டையில் தான்.

    இதை மேல் நாட்டு அறிங்க‌ர் டிரிக்ஸ் கார்ன‌ர் (Tirichs kaarnar) கூறியுள்ளார்///

    அந்த மேல் நாட்டு பெரியாரை நான் வாழ்த்துகிறேன்.

  48. முனைவர் அய்யாவுக்கு என் வணக்கமும் நன்றியும்,
    தாமஸ் கெம்பிஸ் போல இயேசுவின் வழியில் வாழ விரும்பும் கிறிஸ்துவர்கள் உண்டு என்று நீங்கள் நம்புவது மகிழ்ச்சியளிக்கிறது. கிறிஸ்துவர்கள் அனைவரும் சூழ்ச்சியாளர்கள், பைபிள் ஒரு தவறான புத்தகம் என்று (அரைகுறை அறிவோடு) கூறுபவர்க்கு மத்தியில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
    உங்கள் கட்டுரையில் பொப் மாணிக்கவாசகரை பற்றி சொன்னதை விட, இயேசுவின் மரணத்தை பற்றி இழித்துரைப்பதில் அதிக கவனம் செலுத்தி இருப்பதாய் உணர்கிறேன். பைபிள் சொன்னபடி இயேசுவின் கோரமரணம் முன்குறிக்கப்பட்டது. அந்த மரணத்தில் இயேசு நரகத்தை ருசிபார்ததாகத்தான் எங்கள் நம்பிக்கை. உங்கள் அளவுக்கு எனக்கு தமிழ் ஞானம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் மரணம், யாரும் விரும்பாத, தனக்கு இப்படி ஒரு மரணம் வரக்கூடாது என்று நினைக்கத்தக்க கோரமான மரணம். ஆனால் துர்மரணம் என்று நீங்கள் கூறுவது எவ்வளவு சரி என்று எனக்கு புரியவில்லை. ஒரு தியாகத்தை துர்மரனமென (அது எவ்வளவு கொடூரமாய் இருந்தாலும்) நினைக்க / நம்ப முடியவில்லை.
    நான் (இயேசுவின் அன்பை உணர்ந்த எல்லா கிறிஸ்துவனும்) மற்ற மனிதர்களை, மத எல்லையை, மொழி எல்லையை, தேச எல்லையை தாண்டி, தன் சகோதரனாகவும், தேவனின் சிருஷ்ட்டியாகவும் பார்க்கிறேன். தன் சுயநலத்துக்காக, மக்களை பிசாசின் பிள்ளைகள் என்று கூறுபவர்களை பற்றி நீங்கள் கோஷமிடுங்கள், நான் உங்கள் பக்கம் நிற்பேன். இதற்காக நான் உங்கள் தெய்வங்களை வணங்கவேண்டுமென அவசியமில்லை. யாரையும் வணங்குவதும் வணங்காததும் என் சுய விருப்பம். நீங்களும், உங்கள் சுயவிருப்பப்படி செய்யுங்கள், மற்றவர் மனதை புண் படுத்தாதபடி.
    நன்றி,
    கிறிஸ்டியன்

  49. வணக்கம்,

    ///Christian
    31 October 2009 at 8:05 am

    //Why attack me personally, if I have misquoted Bible- Please quote and reply//
    திரு.தேவப்ரியா,
    நீங்கள் பைபிளை குறித்து சொல்லும் உங்கள் கருத்துகளுக்கு, யாரோ ஒருவர் எழுதிய கட்டுரை அல்லது புத்தகத்தைதான் ஆதாரமாக வைக்கிறீர்கள். அதைத்தான் நான் குறிப்பிட்டு சொன்னேன்.///

    அப்படி ஆதாரப்பூர்வமாக நிரூபித்தாலும் கூட சலவை செய்து அயர்ன் செய்யப்பட மூளைகள் அதை நம்ப மறுப்பதுதான் உலகின் மாபெரும் அதிசயம்.

  50. பைபிளில் தெரிவிக்கப் பட்டுள்ள இனப் படுகொலை, இன அழிப்பு, மக்கள் மனதில் வெறுப்புக் கருத்துக்களை, அச்சமூட்டும் கருத்துகளை உண்டாக்குதல் இவைகளை நாம் ஆதாரங்களோடு, பைபிளில் கூறப் பட்ட வரிகளை வைத்தே காட்டினோம்.

    ஆனாலும் ரொம்ப நல்லவன் போல பைபிள் பிரச்சாரம் தொடர்கிறது. அரைகுறை அறிவு என்பவர்கள், இங்கெ பைபிளில் இருந்து மேற்கோள் காட்டப் பட்ட செய்யுள்கள் தவறானது என்று கூற முடியுமா?

    அப்படி எல்லாம் அரைகுறை என்று பூசி மொழுகி உலகம் முழுவதும் நச்சுக் கருத்துக்களை, பரப்ப வேண்டும். யூதர்களின் கட்டப் பஞ்சாயத்து நாட்டமையாகிய கர்த்தரை கடவுள் போல சித்தரிக்க வேண்டும்.

    ஆனால் மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்

    பைபிளை பர‌ப்பி இந்த‌ உல‌கில் ம‌க்க‌ளின் ம‌ன‌திலே வெறுப்புக் க‌ருத்துக்களை ந‌ச்சுக் க‌ருத்துக்களை உருவாக்குப‌வ‌ன் அயோக்கிய‌ன்.

  51. பிறரை வற்புறுத்தி, இந்த தெய்வத்தை நீ வணங்க வேண்டும் என்று எந்த இந்துவும் கட்டாயப் படுத்த மாட்டான்.

    ” என் கடவுள் மட்டும்தான் ஜீவனுள்ள கடவுள், மற்ற கடவுள்கள் எல்லாம் பொய்யானவர்கள்” என்று கூறி அதே கருத்தை உடைய பாலவைனப் பங்காளிகளான இசுலாமியரோடு மோதி கோடிக் கணக்கானவர் சாகும்படி கல்லறை மார்க்கங்களாக இருந்தது, இருப்பது யார்?

    உலகிலே பிற மார்க்கத்தவர் கடவுளாக மதிப்பவர்களை ( அவர்கள் தகுதியான கருத்துக்களை கூறியிருக்கும் பட்சத்தில்) அவர்களை மதிக்கவும், மரியாதை செய்யவும் , ஏன் வழிபாடு செய்யவும் தயாராக இருப்பவன் இந்த உலகிலே இந்து மட்டும்தான்.

    நான் பலமுறை இந்த தளத்திலேயே இயேசு கிறிஸ்துவையும், மேரி மாதவையும் மதித்து மரியாதை செய்யவும், வணங்கவும் தயார் என்று பலமுறை எழுதி விட்டேன்.

    ஆனால் இது வரையிலே. பிற மார்க்கத்தை சேர்ந்த ஒருவர் கூட பதிலுக்கு – தியாக வாழ்க்கை வாழ்ந்த, தன் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்ட இந்து தெய்வங்களை மதிக்கிறேன் – என்று கூட சொல்லத் தயாராக இல்லை!

    குறைந்த பட்சம் “என் கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள் என்று சொல்லமாட்டேன், பல அவதாரங்களை எடுக்கும் சக்தி கடவுளுக்கு உண்டு” என்று கூட புரிந்து கொள்ள, ஒத்துக் கொள்ளத் தயாராக இல்லை.

    அந்த அளவுக்கு சகிப்புத் தன்மை இல்லாத, முரட்டு விசக் கருத்துக்களை நெஞ்சிலே ஏற்றிக் கொண்டு நம்மிடம் வந்து ரொம்ப நல்லவன் போல பிலாக்கணம் வைப்பது ஏன்?

    இயேசுவின் அன்பை உணர்ந்தவர் என்றால், அவர் ஒருவன் ஒரு மெயில் தூரம் வரும்படி கட்டாயப் படுத்தினால் அவனோடு இரண்டு மைல் தூரம் போ என்று சொன்னது போல,
    செல்ல‌ த‌யாராக‌ இருக்க‌ வேண்டும் அல்ல‌வா?

    இப்போது யாராவ‌து ஒருவ‌ர் இவ‌ர்களை ச‌ப‌ரி ம‌லை வ‌ரை வ‌ர‌ச் சொன்னால் , கூட‌ப் போக‌த் த‌யாராக‌ இருக்கிறார்க‌ளா( ஐய்ய‌ப்ப‌னை வ‌ண்ங்க‌ சொல்லி நாம் க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை, ச‌ப‌ரி ம‌லைக்கு வ‌ர‌த் த‌யாரா, ப‌ம்பையிலெ குளித்து எழ‌த் த‌யாரா?)

    இவ‌ர்க‌ள் இப்ப‌டி இயெசுவை ப‌ற்றி நைசாக‌ப் பேசி, இந்து ம‌தத்தை அழித்து விச‌க் க‌ருத்துக்க‌ளை இந்தியாவில் ப‌ர‌ப்பி இந்தியாவையும் பாலெஸ்தீன் போல‌ ஆக்குவார்க‌ள்.

    இந்து ம‌த‌த்த‌வ‌ர் எவ்வ‌ள‌வு பேர் உல‌கில் அதிக‌மாக‌ இருக்கிரார்க‌ளோ அந்த‌ அள‌வுக்கு இந்த‌ உல‌கில் அமைதி நில‌வும்.

    உலகிலே பிற மார்க்கத்தவர் கடவுளாக மதிப்பவர்களை ( அவர்கள் தகுதியான கருத்துக்களை கூறியிருக்கும் பட்சத்தில்) அவர்களை மதிக்கவும், மரியாதை செய்யவும் , ஏன் வழிபாடு செய்யவும் தயாராக இருப்பவன் இந்த உலகிலே இந்து மட்டும்தான்.

  52. /இதற்காக நான் உங்கள் தெய்வங்களை வணங்கவேண்டுமென அவசியமில்லை. /
    அன்புள்ள கிறிஸ்தியன் அவர்களே, நான் போப்பிடம் கண்ட குறை இதுதான். பொதுவாக எல்லாக் கிறித்துவர்களிடம் இந்தக் குறை உண்டு. இந்து தெய்வங்களை நீங்கள் வழிபட வேண்டிய அவசியமில்லை. அதனால் அந்த தெய்வங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் இந்து ஞானியர் உங்களுடன் சேர்ந்து கொண்டு கோரக்காட்சிகளின் முன்னர் மண்டியிட்டு மன்றாடினர் எனக் கூறுவதற்கு, போப் உட்பட எந்தக் கிறித்துவருக்கும் உரிமை இல்லை. தோமையரிடம் திருவள்ளுவர் ஞானம் பெற்றார், தமிழர்கள் தோமையர் வந்த பின் தான் சமயஞானம் பெற்று நாகரிகம் அடைந்தனர் என்பனபோல பொய்யை மெய்யாக்கும் வஞ்சகமே இங்குக் கண்டிக்கப்படுகின்றது.
    அருட்காட்சியையோ கோரக் காட்சியையோ வைத்துத் தியானித்தலும் வழிபடுதலும் போற்றுதலும் உங்கள் உரிமை.
    இருப்பது ஒரே கடவுள். எந்த மதத்தினர் எந்த வடிவில் தன்னை நினைந்து வழிபட்டாலும் அந்த வடிவில் நின்று அருளுபவர் ஒரே கடவுளே என்று இந்துமதம் போதிக்கின்றது. அதனால் மதமாற்றத்தை இந்துமதம் வலியுறுத்துவதில்லை.

    எனக்கு ஒரு ஐயம். நான்கு சுவிஷேசங்களிலும் எங்காவது இந்தக் கோரக் காட்சி வருணிக்கப்படுள்ளதா? இது ஓவியனுடைய கற்பனையா?
    மத்தேயூ27:55, மாற்கு15:40, லூக்கா23:49, 19:25 . இப்பகுதியில் எல்லாம் இயேசுவைப் பெற்ற தாய் உடபட பெண்கள், சீஷன் ஆகியோர் இந்தக் காட்சியைக் கண்டு நின்றனர் என்ற அளவிலேயே கூறப்பட்டுள்ளது.

  53. அன்பர் கிறிஸ்தவர் கூறுவது:
    ///நான் (இயேசுவின் அன்பை உணர்ந்த எல்லா கிறிஸ்துவனும்) மற்ற மனிதர்களை, மத எல்லையை, மொழி எல்லையை, தேச எல்லையை தாண்டி, தன் சகோதரனாகவும், தேவனின் சிருஷ்ட்டியாகவும் பார்க்கிறேன்.///

    அப்படியானால், எங்கள் மனம் புண்படும்படி, மாணிக்கவாசகரைச் சிறுமைப்படுத்தி எழுதியிருக்கும் ஆங்கிலிக்கன் சாதியைச் சேர்ந்த ஜி.யு.போப்பும், ஆசியாவின் ஆன்மாக்களை இந்த ஆயிரம் ஆண்டுகளில் அறுவடை செய்வோம் என்று ஆணவத்துடன் பிரகடனம் செய்த ரோமன் கத்தோலிக்கச் சாதியைச் சேர்ந்த போப்பும், தெருவுக்குத் தெரு மூலை முக்குகளிலெல்லம் எங்கள் இறைமூர்த்திகளைச் சாத்தான் என்றும், எங்களையெல்லாம் பாவிகள் என்றும் கூவுகின்ற பெந்தகோஸ்த் சதியைச் சேர்ந்த போதகர்களும், இனப்படுலொலை செய்த ஃப்ரான்சிஸ் சேவியரைப் புனிதர் என்று போற்றிப்புகழும் ரோமன் கத்தோலிக்கச் சாதியைச் சேர்ந்த டான் பொஸ்கோ சங்கச் சாதியைச்சேர்ந்தவர்களும், ஜீஸஸ் சங்கச் சாதியைச் சேர்ந்தவர்களும், இது போன்ற இன்னபிற மதப் பிரசாரகர்களும், ஏசுவின் அன்பை உணராதவர்கள் என்று சொல்கிறீற்களா? இதை உங்கள் சர்ச்சில் போய் சொல்வீர்களா?

    தற்போதைய சௌகரியத்திற்காக, எசுவின் அன்பைப்பற்றியும், அதை நீங்கள் உணர்ந்தவர் என்றும் பேசுகிறீர்கள் என்றே நான் நினைக்கக் காரணம், நீங்கள் கட்டுரையின் மூல காரணமான ஜி.யு.போப்பின் முழுப்பொய்யிலிருந்து முதலிலிருந்தே கவனத்தைத் திசை திருப்பும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வந்திருப்பதுதான். இவ்வாறில்லைஎன்றால், முத‌லில் நீங்க‌ள் ஜி.யு.போப்பின் blasphemy யைக் க‌ண்டித்திருப்பீர்க‌ள். அத‌ற்குப் பிற‌குதான் வேறு விஷ‌ய‌த்தை எடுத்திருப்பீர்க‌ள்.

  54. அன்பர் கிறிஸ்தவர் கூறுவது:
    ///ஆனால் துர்மரணம் என்று நீங்கள் கூறுவது எவ்வளவு சரி என்று எனக்கு புரியவில்லை. ஒரு தியாகத்தை துர்மரனமென (அது எவ்வளவு கொடூரமாய் இருந்தாலும்) நினைக்க / நம்ப முடியவில்லை.///
    எசுவின் மரணம் தியாகம் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை (faith). ஆனால், சிலுவையில் அறையப்பட்டுச் சாவது என்பது உண்மை அதாவது matter of fact . உண்மை எப்ப‌டி மாறும்? உண்மையை ந‌ம்ப‌ முடிய‌வில்லை ஆனால், ந‌ம்பிக்கையை (faith) விட‌முடிய‌வில்லை என்று கூறுவ‌து முர‌ண்பாடில்லையா?
    ///இதற்காக நான் உங்கள் தெய்வங்களை வணங்கவேண்டுமென அவசியமில்லை. யாரையும் வணங்குவதும் வணங்காததும் என் சுய விருப்பம். நீங்களும், உங்கள் சுயவிருப்பப்படி செய்யுங்கள், மற்றவர் மனதை புண் படுத்தாதபடி.///
    கட்டுரையில் கிறிஸ்த‌வ‌ர்க‌ளை, எங்க‌ள் இறைமூர்த்திக‌ளை வ‌ணங்கும்ப‌டி எந்த‌க் கோரிக்கையும் இல்லை. உங்க‌ள் சுய‌விருப்ப‌ப்ப‌டி நீங்க‌ள் ந‌ட‌ப்ப‌தில் இங்கு யாருக்கும் எந்த‌ ஆட்சேப‌னையும் இல்லை, இருக்க‌வும் முடியாது. ஆனால், ஜி.யு.போப் எங்க‌ள‌து போற்றுத‌லுக்குரிய‌ மாணிக்க‌வாச‌கப் பெருமான் ஏசுவை ம‌ண்டியிட்டு வ‌ண‌ங்குவ‌து போல் தோற்றம் க‌ண்டேன் என்று எழுதிய‌தைக் க‌ட்டுரை ஆசிரிய‌ர் சுட்டும்போது, அதிலிருந்து திசை திருப்புகிறீர்க‌ளே, அதைத்தான் நாங்க‌ள் அனும‌திக்க‌முடியாது.

  55. ///எந்த நாட்டில் இருந்து கிறிஸ்துவ மதம் பரப்பப் பட்டதோ, அதே நாட்டில் இருந்துதான் நீங்கள் புரளி என்று சொல்லப் பட்ட விஷயமும் வந்தது. ஒன்றுக்கு முக்கியத்துவமும் மற்றொன்றை வசதியாக புரளி என்றும் உம் போன்றோர் கூறலாமா?/// – லெனின்

    ///இந்துத்துவம் தோன்றியாதாக நீங்கள் சொல்லும் இந்தியாவில் இருந்துதான் அதற்க்கு எதிரான பல கருத்துகள் வந்துள்ளது. இதை என்னவென்று சொல்லுவது?/// – கிறிஸ்டியன்

    அன்பருக்கு நன்றி,

    பல புரளிகளால் உண்டானதுதான் எங்கள் மதம், ஆனாலும் உங்கள் மதத்திற்கு எதிரான பல கருத்துகள் வந்துள்ளதே என்கிறீர்கள். – நீங்கள் கூறியது உண்மை, வரவேற்கிறேன்.

    எதிர் கருத்து இல்லாத இல்லாத எதுஉமே வளர்ச்சி பெற்றதில்லை, உண்மையுமில்லை. (உ-ம்) அறிவியல், ஜனநாயகம், ……………மதம் .உள்பட.

    பகல் வேஷம் போடும், வெளிநாட்டு மத வியாபாரிகளிடம் விலை போய்விட்ட சில பகுத்தரிஉ வியாதிகளால் எதிர் கருத்துக்கள் பரப்பி விடப் படுகிறது. அவர்களின் வயிற்றுப் பிழைப்பே அதை வைத்துதான் நடக்கிறது. அவர்கள் வயிற்றுப் பிழைப்பைக் கெடுக்க இந்து மதம் விரும்பவில்லை.

    இதற்கு மாறாக, மதத்திற்கு எதிராக ஒருவனும் ஒரு கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காகவே, ” கர்த்தருக்குப் பயப்படுதலே அறிவின் ஆரம்பம்” என்று சொல்லி கேள்வி எழுப்புபவனின் மூளையை முளையிலேயே கிள்ளி ஏறிய வகை செய்யப் பட்டுள்ளது. சொந்த மூளையை உபயோகிக்கும் உரிமை மறுக்கப் பட்டுள்ளது.

    இந்து ஆன்மீகத்தின் மூலம் விளைந்த அறிவினால் புறக் கருவிகள் எதுஉமின்றி வான சாஸ்த்ர உண்மைகளை உலகுக்கு உணர்த்திய ஆர்யா பட்டா, பாஸ்கரா போன்றவர்களின் புகழ் இன்றும் உலகம் முழுவதும் நிலைத்துள்ளது.

    இதற்கு மாறாக பூமி உருண்டையானது, அது சூரியனைச் சுற்றி வருகின்றது என்ற உண்மையைக் கூறிய அறிஞர்கள் மதத்திற்கு எதிரான கருத்தைக் கூறினார்கள் என்று மேலை நாட்டில் கொலை செய்யப்பட்டார்கள்.

    நலம் விரும்பும்,
    லெனின்

  56. // எனக்கு ஒரு ஐயம்; நான்கு சுவிஷேசங்களிலும் எங்காவது இந்தக் கோரக் காட்சி வருணிக்கப்படுள்ளதா?
    இது ஓவியனுடைய கற்பனையா?

    மத்தேயு.27:55, மாற்கு15:40, லூக்கா23:49, 19:25 . இப்பகுதியில் எல்லாம் இயேசுவைப் பெற்ற தாய் உடபட பெண்கள், சீஷன் ஆகியோர் இந்தக் காட்சியைக் கண்டு நின்றனர் என்ற அளவிலேயே கூறப்பட்டுள்ளது. //

    ஆசிரியர் அருமையானதொரு பகுதிக்கு நம்மை நடத்துவதற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்;

    இன்று நாம் ஊடகங்களில் இயேசுகிறிஸ்துவைக் குறித்துக் காணும் அல்லது கேள்விப்படும் பல விடயங்கள் கற்பனையே;

    யூதரும் யூத கிறிஸ்தவரும் யூதரல்லாத கிறிஸ்தவரும் சிதறிக்கப்பட்ட பின் ரோம சாம்ராஜ்யத்தினைச் சார்ந்தோர் மூலம் அவர்களது பாரம்பரியம் கலந்த புதிய மார்க்கம் தோற்றுவிக்கப்ப்பட்டது; அவர்களது கலாச்சாரம் சார்ந்த விஷயங்களே ஓவியம் மற்றும் வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய ஆலயங்களும்..!

    அதுவே வலுவான அமைப்பாக உருவாகி கிறிஸ்தவம் என்றாகிப் போனது; எனவே தான் உங்களுக்குத் தெளிவான நேரடி பதிலைத் தரத் தடுமாற வேண்டியதாகிறது; ஆனாலும் கிறிஸ்து போதித்த மார்க்கம் இன்றைக்கு அழிந்துபோய் தேடும் நிலையிலிருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

    நண்பர் திருச்சிக்காரன் குறிப்பிட்ட மேல் நாட்டு அறிங்க‌ர் டிரிக்ஸ் கார்ன‌ர் (Tirichs kaarnar) அவர்களது குறிப்பைத் தேடினால் அது “மால்வேர்” எனப்படும் கணிணிக்கு வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தளமாக இருக்கிறது; எனவே விவரம் பெற இயலவில்லை;

    ஆனாலும் கடந்த 200 ஆண்டுகளில் அநேகம் பேர் தாங்கள் பெயர், புகழடையவேண்டும் என்ற குறுகிய எண்ணத்துடன் இது போல புறப்பட்டனர்; இது சர்ச்சைக்குரிய காரியங்களைப் பிரபலமானவர்களைப் பற்றிக் கூறி தங்கள் புத்தகத்தையும் தங்கள் படத்தையும் காசாக்கும் கீழ்த்தரமான எண்ணமே தவிர அறிஞர் எனக் கூறிக் கொள்ள அவர்களிடம் ஒன்றுமில்லை;இது போன்றோர் இங்கும் உண்டு, அவர்கள் கட்சிகளிலிருந்து நீக்கப்பட்டதும் உண்டு;

    ஆனால் நாணயத்தின் இருபக்கம் போல நடுநிலையுடன் உண்மையினை ஆராயவேண்டும்..!

  57. //மறைமலை அடிகளாருக்கு உங்கள் மார்கத்தில் இருக்கும் மதிப்பு எவ்வளவு? //

    எனுக்கு தெர்ஞ்சு பெர்ஸா ஒன்னியும் இல்ல வள்ளுவன்.

    //இதை ஏன் கேட்கிறேன் என்றால், அவர் ஒரு சைவத்துறவி ஆக இருந்தாலும், ஈ.வே.ராமசாமி நாயக்கருடன் தொடர்பு வைத்திருந்தார் அல்லவா?//

    ஆ..பின்ன? இப்டி இருக்க ஸொல்லோ எப்டி மருவாதி கெடெக்கும்?

    // மேலும், மறை மலை அடிகள் உண்மையான இந்துத் துறவியாக இருந்திருந்தால் ஏன் ஈ.வே.ரா கேட்டவுடன் அரும் பொக்கிஷமான இராமாயணத்தை அவதூறாக பெரியாருக்கு எழுதித் தந்தார்???//

    ஆங்! அது கேல்வி!…அதான் மேட்டரு. நாகபட்னம், திருவாரூரு, அந்த பக்கம்லாம் வேதாசலத்த “பாதிரி மைந்தன்” அப்டீன்னு தான் ஸொல்வாங்கோ. இன்னா…புர்ஞ்சுக்கினீங்களா?

    அப்பாலிகா வேற ஒரு மேட்டரும் கீது. இந்த சைவ சித்தாந்தத்த “தமிழ்”-ன்ற பேர்ல வடமொயிக்கு எதுரா திருப்பி இந்து மதத்துலர்ந்து பிரிக்க ஏஸ்து கிறுஸ்து பார்டீங்க ட்ரை பன்னிக்கினே இருந்தானுங்க. (இப்போவும் அது நடக்குது, அஆங்!). அப்போ ஒரு சில சைவ சாமியாருங்க அவுனுங்க கூட கூட்டு வச்சுக்கினானுங்க. அதுல மறமலயும் ஒரு பார்டி.

    அத்தொட்டு தான் அவுரு வேதாசலம்-ன்ற பேர மறைமலை அடிகள்-னு மாத்திக்கினாரு. அத்தோட வுட்டாரா? இல்லியே! இந்த திராவிட இன வெறியனுங்க கூட சேந்துக்குனு தமில் வர்ஸத்தையே மாத்திக்கினாரு. மாத்திப்புட்டு இன்னா ஸொன்னாரு? தை மாஸம் தான் தமில் வர்ஸம் பொறக்குதுன்னு வுடான்ஸு வுட்டாரு. தை மாஸம் இங்கிலீஸுல ஜனவரியாங்காட்டி…கிறுஸ்து இஸ்டைல்ல கிரெகரி கால்ண்டர் கீது பாத்யா….அத்தோட ஸொம்மா சப்புனு ஒட்டிக்கும்.

    மறமல தமில் வர்ஸத்த மாத்துனது யார் பேர்ல? திருவள்ளுவர் பேர்ல! இந்த கிறுஸ்து பார்டிங்க திருவள்ளுவரயே திருட ட்ரை பண்ணானுங்க. அத்தொட்டு அவுருக்கு ஞான ஸ்னானம் கூட செஞ்சுட்டானுங்க. தாமஸும் அவுரும் மைலபூர்ல ஒன்னா வாழ்ந்தாங்கோ…மெரினா பீச்சாங்கறைல வாக்கிங் போனாங்கோ. அப்போ தாமஸ் கைல நெறைய விஸயம் கத்துக்குனு, பைபில்லேந்து பல மேட்டர எட்துக்குனு வள்ளுவனாரு திருக்குறள் எயுதிக்கினாரு. திருவள்ளுவர் கிறுஸ்து, திருக்குறள் கிறுஸ்துவ வேதம் அப்டீனெல்லாம் டுபாகூர் வுட்டுகுனு திரியறானுங்க அயோக்கியனுங்க.

    அட பாருங்க..ட்ராக் மாறி போயிட்டேன். மேட்டருக்கு வரேன். நம்ம கலிஞரு இன்னா செஞ்சாரு? மறமல பேர ஸொல்லி தமில் வர்ஸத்த மாத்திகினாரு. ஏன்? அவுரும் கிறுஸ்து பார்டிங்க கூட கூட்டு. அவுரும் கிறுஸ்து பார்டிங்க எடுக்கப்போற தாமஸ் சினிமா தொவக்க விழாவுல கலந்துக்குனாரு. அந்த படத்துல திருவள்ளுவர கிறுத்துவரா காட்றத்துக்கு ப்ளான் போட்டுகறானுங்கோ கிறுஸ்துவனுங்கோ.

    கட்ஸீல ரிஜல்ட் இன்னான்னா….மறமலைலேந்து…கலிஞர் வரெக்கும் கிறுத்துவ கூலிங்களாத்தான் இருக்காங்கோ.

    இன்னா…அல்லாரும் தெர்ஞ்சுக்குனீங்களா?

    வர்டா…

    மன்னாரு.

  58. /// திருவள்ளுவர் பேர்ல! இந்த கிறுஸ்து பார்டிங்க திருவள்ளுவரயே திருட ட்ரை பண்ணானுங்க. அத்தொட்டு அவுருக்கு ஞான ஸ்னானம் கூட செஞ்சுட்டானுங்க. தாமஸும் அவுரும் மைலபூர்ல ஒன்னா வாழ்ந்தாங்கோ…மெரினா பீச்சாங்கறைல வாக்கிங் போனாங்கோ. அப்போ தாமஸ் கைல நெறைய விஸயம் கத்துக்குனு, பைபில்லேந்து பல மேட்டர எட்துக்குனு வள்ளுவனாரு திருக்குறள் எயுதிக்கினாரு. திருவள்ளுவர் கிறுஸ்து, திருக்குறள் கிறுஸ்துவ வேதம் அப்டீனெல்லாம் டுபாகூர் வுட்டுகுனு திரியறானுங்க அயோக்கியனுங்க///

    மன்னாரு அன்னாத்தே! அதுவாச்சம் பர்வால்ல பழங்கத…நம்ம கிட்ட டபாய்க்க முடியாது. வள்ளுவர் பத்தி நம்ம அல்லார்க்குந் தெரியும். எங்காபீஸ்ல இருக்கிற ஒரு ப்ரெயின் வாஷ் ஆன பையன் இன்னா சொன்னான் தெர்யுமா?? ரஜினி காந்து கிறிஸ்டீனு. அவ்ரு வீட்ல பெரிய ஏசு படம் வெச்சி கும்புடுகினுருக்காருன்னான். மவனே மண்டேல ஒன்னு வெச்சேன் பாரு..அப்பால இந்த பக்கமே வர்ல.

    இன்னாத்த சொல்றது இவனுங்கள பத்தி…

    நீ நல்லா எய்திர நய்னா…கண்டினியூ பன்னு…

    வர்டா

  59. //எனக்கு ஒரு ஐயம். நான்கு சுவிஷேசங்களிலும் எங்காவது இந்தக் கோரக் காட்சி வருணிக்கப்படுள்ளதா? இது ஓவியனுடைய கற்பனையா?
    மத்தேயூ27:55, மாற்கு15:40, லூக்கா23:49, 19:25 . இப்பகுதியில் எல்லாம் இயேசுவைப் பெற்ற தாய் உடபட பெண்கள், சீஷன் ஆகியோர் இந்தக் காட்சியைக் கண்டு நின்றனர் என்ற அளவிலேயே கூறப்பட்டுள்ளது.//
    இந்த விஷயத்தில் நான் முனைவர் ஐயாவுடன் ஒத்து போகிறேன். எனக்கு தெரிந்தவரை. இதை போன்ற காட்சி வருணிக்க படவில்லை.
    நன்றி,
    கிறிஸ்டியன்

  60. //ஆனால், ஜி.யு.போப் எங்க‌ள‌து போற்றுத‌லுக்குரிய‌ மாணிக்க‌வாச‌கப் பெருமான் ஏசுவை ம‌ண்டியிட்டு வ‌ண‌ங்குவ‌து போல் தோற்றம் க‌ண்டேன் என்று எழுதிய‌தைக் க‌ட்டுரை ஆசிரிய‌ர் சுட்டும்போது, அதிலிருந்து திசை திருப்புகிறீர்க‌ளே, அதைத்தான் நாங்க‌ள் அனும‌திக்க‌முடியாது.//
    நண்பர் உமாசங்கர்,
    நான் கட்டுரையை திசைத்திருப்பவில்லை. ஜி,யு.போப் செய்தது சரி என்று நான் வாதிடவில்லை. ஆனால், முனைவர் conclusion போல சொல்லியிருக்கும்:
    //இயேசு கிறிஸ்துவின் இறுதி உயிர்களுக்கு இன்பம் விளைவிப்பதற்கு மாறாக அவலமே விளைத்ததால் அதனைத் தமிழ் இந்துக்கள் மதிக்காததில் வியப்பொன்றும் இல்லை. இது துர்மரணமே.//
    மேற்க்கூறிய கருத்தைதான் நான் எதிர்க்கிறேன்.
    நன்றி,
    கிறிஸ்டியன்

  61. //இப்போது யாராவ‌து ஒருவ‌ர் இவ‌ர்களை ச‌ப‌ரி ம‌லை வ‌ரை வ‌ர‌ச் சொன்னால் , கூட‌ப் போக‌த் த‌யாராக‌ இருக்கிறார்க‌ளா( ஐய்ய‌ப்ப‌னை வ‌ண்ங்க‌ சொல்லி நாம் க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை, ச‌ப‌ரி ம‌லைக்கு வ‌ர‌த் த‌யாரா, ப‌ம்பையிலெ குளித்து எழ‌த் த‌யாரா?)//
    திருச்சிக்காரன், அடுத்த ஜூன் மாதம் நான் இந்தியா வருகிறேன். என்னை கூட்டி செல்கிறீர்களா? என் நெடுநாள் ஆசை. இதனால் உங்களுக்கு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
    அன்புடன்,
    அசோக்

  62. ////மும்பையில் ஒரு கிறிஸ்துவர் ஒரு இந்துவை இந்து முறைப்படியே திருமணம் செய்தார். பிறகு அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.
    தற்போது அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து விவாகரத்து கோரி வெளியேறிவிட்டார்.
    அவர் செல்லக்கூடாது. அவர் என்னிடம் திரும்பி வரவேண்டும் என்று கிறிஸ்துவர் முறையிட்டார்.
    கிறிஸ்துவர் இந்துவை திருமணம் செய்ததே செல்லாது. ஆகையால் அவர் விவாகரத்து கோரவேண்டிய அவசியமே இல்லை. என்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    ஆகவே ஜாக்கிரதை.
    கிறிஸ்துவர்களை திருமணம் செய்வது செல்லாது. வீணாக காதலித்து பிறகு பிரச்னையில் சிக்காதீர்கள்.
    HC annuls Christian’s marriage with Hindu
    Saeed Khan, TNN 25 October 2009, 02:57am IST
    Print Email Discuss Bookmark/Share Save Comment Text Size: |

    AHMEDABAD: A city-based Christian boy, who wanted to divorce his Hindu wife, was horrified to find that his marriage with her did not stand at all!

    Nilesh Narin married Kashmira Banker as per Hindu rituals in April 2002 and they were blessed with a child the following year. However, Kashmira deserted Nilesh in 2006, which made him approach the Ahmedabad family court claiming that his wife was married to one Ashish Surti in 1998 which was still valid when he married Kashmira. Therefore, the court should declare his marriage with Kashmira void. To his surprise, the court held that their marriage was not legal at all and there was no question of declaring it void on grounds that Nilesh gave.
    Kashmira contested the case and proved in court that she had already divorced her first husband before marrying Nilesh. But at the end of the case, Nilesh came out of the court in March this year dejected, when the judge concluded that the court cannot declare the marriage void the way he wanted. The family court judge held that the marriage could not be considered legal and valid as per Hindu Marriage Act, because one of them was not a Hindu during marriage.

    Nilesh then moved Gujarat High Court to declare his marriage void.

    His counsel cited an Andhra Pradesh High Court’s order holding that a marriage between a Christian and a Hindu taken place as per Hindu rituals is ‘void ab initio’ and therefore a nullity, which was also upheld by the Supreme Court.

    After hearing the case, a division Bench of Justice RM Doshit and Justice SD Dave observed that such a marriage is void as per law and the family court should have declared it annulled. The High Court finally declared the marriage as void.////

    இப்படி வேற நடக்குதாமே!

    https://ezhila.blogspot.com/2009/11/blog-post_02.html

  63. அன்பு சகோதரர் Chillsam,

    //நண்பர் திருச்சிக்காரன் குறிப்பிட்ட மேல் நாட்டு அறிங்க‌ர் டிரிக்ஸ் கார்ன‌ர் (Tirichs kaarnar) அவர்களது குறிப்பைத் தேடினால் அது “மால்வேர்” எனப்படும் கணிணிக்கு வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தளமாக இருக்கிறது; எனவே விவரம் பெற இயலவில்லை//

    தேடி அலைய வேண்டாம். கருத்து என்ன என்று பாருங்கள்.

    //மோச‌சிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    “எத்துயர், கிரகாசியர், எமோரியர், கானானியர், பெரிசியர் , ஏவியர் எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உன் முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்திலே ஒப்புக் கொடுக்கும் போது , அவர்களை முறிய அடித்து அவர்களை சங்காரம் பண்ணக் கடவாய். அவர்களோடு உடன் படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்!”

    யோசுவாவிட‌ம் “கர்த்தர்” கூறிய‌து:

    யோசுவா, அதிகாரம் 6,

    2.கர்த்தர் யோசுவாவை நோக்கி இதோ எரிக்கோவையும் அதன் ராஜாவையும் யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன்!

    21. பட்டணத்திலிருந்த புருஷரையும், ஸ்திரீகளையும், வாலிபரையும், கிழவரையும், ஆடுமாடுகளையும் , கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

    24.பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்! வெள்ளியையும், பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரனங்களையு மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிசத்தில் சேர்த்தார்கள்//

    இவை எல்லாம் பைபிளில் இருக்கிறதா இல்லையா?

    இவை எல்லாம் பைபிளில் இருக்கிறது என்பது உண்மையா இல்லயா?

    அப்படி இவை பைபிளில் இருக்கும் போது,

    //எப்படி கடவுள் என்று கூறப் படுபவர் ஒரு இனத்தை வாழ வைக்க பிற இனங்களை அழித்துப் போடும் பொல்லாப்புக் காரராக இருக்க முடியும்?

    கடவுள் என்று சொல்லப் படுபவர், அவர் உலகில் உள்ள எல்லோருக்கும் தந்தையாக கூறப் படுகிறார். தந்தை ஒரு மகனைப் பார்த்து பிற மகன்களை எல்லாம் வெட்டி சாகடித்து, நீ வாழ்ந்து கொள் என்று சொல்வாரா?

    ஒரு இன‌த்துக்கு ஆதர‌வாக‌ பிற‌ இன‌ங்க‌ளை அழிக்க‌ உத‌வி செய்பவ‌ர், ஒரு போதும் க‌ட‌வுளாக‌ இருக்க‌ முடியாது. ஒரு ராஜ‌ ப‌க்ஷெவோ, ஹிட்ல‌ரோ க‌ட‌வுள் என‌க் க‌ருத‌ப் ப‌ட‌ முடியுமா?

    என‌வே இந்த கர்த்தர் என்று குறிப்பிடுபவர் யூதர்களின் தலைவராகவே, அதாவது நாட்டாண்மையாகவே இருந்தார் என்ப‌தை, மிக‌ எளிதாக‌ ப‌ள்ளியில் ப‌யிலும் மாண‌வ‌ன் கூட‌ கூறுவான். அதுவும் அடாவ‌டி வெட்டு குத்து நாட்ட‌ண்மையாக‌வே இருந்திருக்கிறார். என‌வே தான் இந்த கர்த்தரானவர், யூதர்களைப் பார்த்து பிற இனங்களை அழித்து , கிழவர்க்ள, பெண்கள், குழைந்தைகள், ஆடு மாடுகள் என ஒன்று விடாமல் எல்லாவற்றியும் கூர்மையான வாளால் வெட்டி அழிக்க சொல்லி இருக்கிரார்.//

    என்பது எந்த சிந்தனையாளரும் எளிதிலே அறுதியிட்டுக் கூறக் கூடியதா இல்லையா?

    இதற்க்கு உங்களின் பதில் என்ன?

    கடவுள் என்பவர் ஒரு இனவாதியாக இருக்க முடியுமா?

    ஒரு இனத்தை மட்டும் வாழா வைத்து பிற பல இனங்களை அழைத்துப் போடா திட்டம் தீட்டி, சொல்லிக் கொடுத்து உதவியும் செய்வாரா?

    அப்படி செய்தவர் கடவுளா?

    உங்கள் அறிவிடம் கேளுங்கள். நடு நிலையுடன், மீண்டும் சொல்கிறேன் நடு நிலையுடன் சிந்தியுங்கள்.

    பிறகு உங்கள் கருத்தைக் கூறுங்கள். ஆனால் உங்கள் கருத்தை எல்லோரும் படிப்பார்கள், அது நடு நிலையான சிந்தனையா அல்லது ஒரு பக்கம் சாய்ந்து எழுதப் பட்ட சிந்தனையா என்று எல்லோருக்கு தெரியும்.

    எனவே சிந்தித்து கருத்து எழுதுங்கள்.

  64. //தெருவுக்குத் தெரு மூலை முக்குகளிலெல்லம் எங்கள் இறைமூர்த்திகளைச் சாத்தான் என்றும், எங்களையெல்லாம் பாவிகள் என்றும் கூவுகின்ற பெந்தகோஸ்த் சதியைச் சேர்ந்த போதகர்களும், இனப்படுலொலை செய்த ஃப்ரான்சிஸ் சேவியரைப் புனிதர் என்று போற்றிப்புகழும் ரோமன் கத்தோலிக்கச் சாதியைச் சேர்ந்த டான் பொஸ்கோ சங்கச் சாதியைச்சேர்ந்தவர்களும், ஜீஸஸ் சங்கச் சாதியைச் சேர்ந்தவர்களும், இது போன்ற இன்னபிற மதப் பிரசாரகர்களும், ஏசுவின் அன்பை உணராதவர்கள் என்று சொல்கிறீற்களா? இதை உங்கள் சர்ச்சில் போய் சொல்வீர்களா?//
    உங்கள் இறைமூர்த்திகள் மட்டுமல்லாது எந்த ஒரு மூத்தியையும் விக்ரகம் என்றே பைபிளும் சொல்லுகிறது, அப்படியே நானும் சொல்லுகிறேன். சாத்தானுக்கும் உருவம் இல்லை அதனால் உங்கள் மூர்த்திகள் சாத்தான் அல்ல. இயேசுவின் பெயரால் படுகொலை செய்தால், அவன் கிறிஸ்துவனாக இருக்கவே முடியாது. அவர்கள் இயேசுவின் அன்பை உணராதவர்கள்தான். தெருவில் கூவுகிற மத பிரசாரகர், “இந்து பாவி” என்று கூவினாரா? அவர் பாவிகளை யேசுவிடம் வந்து மன்னிப்படைந்து திருந்தச் சொல்லி கூவுகிறார். நீங்கள் பாவியாயில்லாமல், அவர் உங்களை குறிப்பிட்டு பாவி என்று கூப்பிட்டால், அவர் சட்டையை பிடித்து கேளுங்கள். எதை நான் எங்கே வேண்டுமானாலும் கூறுவேன்.
    நன்றி,
    கிறிஸ்டியன்

  65. If you want to sell a Tablet for Headache you should sell Headache first.

    These Machineries who are worst sinners say false and No single Apostle to any body in the last 2000 years have received any thing from Jesus, every body died.

    In Israel idols for not only YhWh but also her wife Ashreth has been found dating up to Roman periods.

    Why quote meaningless boasts which were never paractised.

    Cross or pictures of Jesus are verymuch Idol worships, even to say Bible as Gods word is much worser than idol worship

  66. அசோக் ஜி, எவ்வளவு நல்லவரு.

    அடுத்தமுறை வரும் போது சொல்லுங்க. நாம சபரி மலை வரைக்கும் கூட போக வேண்டாம். அண்ணா நகர் ஐய்யப்பன் டெம்பிள் வந்தா போதும். அண்ணா நகர் புளூ ஸ்டார் பக்கத்தில இருக்கிற ஐய்யப்பன் கோவிலுக்கு வந்து அப்படியே சுத்திப் பாத்திட்டு, சரவணா பவன்ல சாப்பிட்டுப் போலாம்.

    இயேசு கிறிஸ்து சொன்ன மாறியே பிறன் ஒரு மைல் போக வற்புறுத்தினால், இரண்டு மைல் போக தயாரானவர்தானே நீங்கள்? அதனாலே இடத்தை மாற்றியதில் உங்களுக்கு பிரச்சினை இருக்கக் கூடாது.

  67. Dear Mr. Christian

    “நான் கூறும் கடவுள் மட்டும் தான் ஜீவனுள்ள கடவுள், மற்றவை எல்லாம் ஜீவன் இல்லாதவை” என்பதுவே சுவிசெசகரின் முக்கியப் பிரச்சாரம்!

    இந்தக் கருத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா? இந்தக் கருத்து தவறு என்று இங்கெ நீங்கள் சொல்லத் தயாரா?

  68. Dear Mr. Christian,

    //இயேசுவின் பெயரால் படுகொலை செய்தால், அவன் கிறிஸ்துவனாக இருக்கவே முடியாது. //

    போப் கிருத்துவரா இல்லையா? சிலுவைப் போர்கள் என்ற பெயராலே கோடிக் கணக்கானவரைக் கொன்று குவித்துவிட்டு இங்கெ வேதம் ஓதலாமா?

    First Crusade:
    Pope Urban II
    In March 1095 at the Council of Piacenza, ambassadors sent by Byzantine Emperor Alexius I called for help with defending his empire against the Seljuk Turks.
    Later that year, at the Council of Clermont,

    Pope Urban II called upon all Christians to join a war against the Turks, promising those who died in the endeavor would receive immediate remission of their sins.[17]

    Second Crusade 1147–1149

    After a period of relative peace in which Christians and Muslims co-existed in the Holy Land, Muslims conquered the town of Edessa. A new crusade was called for by various preachers, most notably by Bernard of Clairvaux. French and South German armies, under the Kings Louis VII and Conrad III respectively, marched to Jerusalem in 1147 but failed to win any major victories, launching a failed pre-emptive siege of Damascus, an independent city that would soon fall into the hands of Nur ad-Din, the main enemy of the Crusaders.[28] On the other side of the Mediterranean, however, the Second Crusade met with great success as a group of Northern European Crusaders stopped in Portugal, allied with the Portuguese King, Afonso I of Portugal, and retook Lisbon from the Muslims in 1147.[2

    Third Crusade 1187–1192
    Pope Gregory VIII

    A statue of king Richard I of England (Richard the Lionheart), outside Westminster Palace in London.In 1187, Saladin, Sultan of Egypt, conquered Jerusalem after nearly a century under Christian rule, following the Battle of Hattin. After the Christians surrendered the city, Saladin spared the civilians and for the most part left churches and shrines untouched to be able to collect ransom money from the Franks.[30] Several thousand apparently were not redeemed and probably were sold into slavery.[31] Saladin is remembered respectfully in both European and Islamic sources as a man who “always stuck to his promise and was loyal.”[32] The reports of Saladin’s victories shocked Europe. Pope Gregory VIII called for a crusade, which was led by several of Europe’s most important leaders: Philip II of France, Richard I of England (aka Richard the Lionheart), and Frederick I, Holy Roman Emperor.

    Fourth Crusade 1202–1204
    Pope Innocent III

    The Crusader states established in Greece in the aftermath of the Fourth Crusade.The Fourth Crusade was initiated in 1202 by Pope Innocent III, with the intention of invading the Holy Land through Egypt. Because the Crusaders lacked the funds to pay for the fleet and provisions that they had contracted from the Venetians, Doge Enrico Dandolo enlisted the crusaders to restore the Christian city of Zara (Zadar) to obedience.

    it continues, continueing……

  69. யெகோவா கடவுள் இனவாதியா?
    நல்ல ஒரு கேள்வி, பாவம் அழிக்கப்பட்ட மக்களுக்காக திருச்சிக்காரர் ரொம்பவே கவலைப்படுகிறார். ஏற்கனவே அந்த ஜாதிகள் மிகவும் கொடூரர்கள் என கூறியிருந்தேன் ஆனால் அதற்கு என்ன ஆதாரம் என கேட்டீர்கள், அசுரர்கள் கொடூரர்கள் என ஏதாவது ஆதாரம் வைத்து இருக்கிறீர்களா, அவர்கள் கொலை செய்வார்கள், பெண்களை பலாத்காரம் செய்வார்கள் என கூறினீர்கள், சரி அதற்கெல்லாம் இதிகாசங்களை தானே ஆதாரமாக காட்டுகிறீர்கள். அதே போல அந்த ஜாதியாரை குறித்த விளக்கத்தை நாங்கள் பைபிளை தான் ஆதாரமாக காண்பிக்கமுடியும். இதே இஸ்ரேல் ம‌க்க‌ள் த‌வ‌று செய்த‌போது அன்னிய‌ ஜாதியின‌ரின் ப‌டையெடுப்பால் இதேபோல‌ த‌ண்டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இயேசு பிற‌க்கும் போது ஆட்சி செய்த‌ ஏரோது ம‌ன்ன‌ன் ஒரு யூதன் அல்ல (இஸ்ர‌வேல‌ன் அல்ல‌). ம‌ட்டும‌ல்லாம‌ல் யூத‌ர்க‌ள் அசீரிய‌ரின் ஆட்சியின் கீழ் இருன்த‌ன‌ர். எருச‌லேம் ந‌க‌ர‌ம் முழுவதுமாக‌ தீக்கிரையாக்க‌ப்ப‌ட்ட‌து. பெண்க‌ளும் குழ‌ந்தைகளும் கூட‌ த‌ப்ப‌வில்லை.

  70. தோழர்கள் மன்னாரு மற்றும் இராம் அவர்களுக்கு,
    நீங்கள் சொல்வது மிகவும் சரியே. இதைப் பற்றிபெசும்போது, என் நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார், திருவள்ளுவர் என்ன, சமயம் கிடைத்தால் இவர்கள் திருமலை வேங்கடவனின் நெற்றியில் இருக்கும் நாமத்தை அழித்துவிட்டு, கழுத்தில் சிலுவையை அணிவித்து, திருமால் இயேசுவின் சீடர் என்று சொன்னாலும் வியப்படைய ஒன்றும் இல்லை என்று!!

    நன்றி மன்னாரு, நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் ஒருவராவது விடயளித்தீர்களே!

    //திருச்சிக்காரன், அடுத்த ஜூன் மாதம் நான் இந்தியா வருகிறேன். என்னை கூட்டி செல்கிறீர்களா? என் நெடுநாள் ஆசை. இதனால் உங்களுக்கு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.//

    நண்பர் அசோக் குமார் கணேசன் அவர்களே, சபரிமலையில் அனைத்து மதத்தினரும் அனுமதிக்கப்படுவர். என் அய்யனின் கோவிலுக்கு அருகில், அவரின் உற்ற நண்பரான வாவருக்கு ஒரு மசூதியை கட்டித் தந்திருக்கிறான் ஐயனை வளர்த்த இராஜா இராஜசேகர பாண்டியன்!!
    சென்ற முறை நான் சென்றபோது தமிழ் நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவிலின் துவஜச்தம்பத்திற்கு அருகில் வணங்கிக்கொண்டிருந்தார்! கருணாஸ் ஒரு கிருத்தவர்!! நீங்கள் சொல்லும் சாதி, மதக் கோட்பாடுகள் எல்லாம் சபரிமலையில் இல்லை. பாடகரும், அய்யப்ப பக்தருமான திரு.கே.ஜெ.யேசுதாஸ் குருவாயூரில்தான் அனுமதிக்கப்படவில்லை, சபரிமலை கோவிலில் அல்ல! ஏனெனில் அனைவரும் சமம் என்பது எம் அய்யன் பிறப்பித்த கட்டளை!!!

  71. .U.Pope was a protestant missionary. For the protestants, Pope and Roman Catholicism are as distant as Hindu or Indian religions. Rather, they are detestable. They don’t pray together. They have separate churches; separate worship. For e.g. worship of idols of Jesus or Mary is prohibited in Protestantism and they don’t recognise saints like Antony or Dominic as worshipful. There is no tradition of Sainthood in Protestantism. For them, Pope is neither holy, nor their leader.

    During the Elizabethan times, thousands of Catholic missionaries were barbarously put to death in England; their monasteries were wantonly destroyed under orders of Queen Elizabeth. She ordered Dissolution of Monasteries; and the Catholics ran to neighboring Scotland in order to save their lives. Social History of England has recorded that many rare manuscripts were lost in dissolution of monasteries. The protestant missionaries went every where, first to US in the new found states there to propagate, what they called, the gospels: meaning the Bible.

    It is therefore strange to say that Pope went to Rome and offered prayers there in a Catholic church.

    He could not have done it without the knowledge of his Church and the London Society of Missionaries, which employed him in India. The Anglican Church would have immediately declared him an apostate and excommunicated him. Nothing of that sort happened, did it?

    Prof Muthu Kumarasamy may give reference to his statement attributed to Pope

    If Pope had said that he found Manickavaasagar with him in joint prayer wherever it was offered, to whichever God it was directed, had he made it public and released the statement among Tamil Hindus?

    Please tell us where and in which book. Please tell us whether it was his motive to reach out to Tamil Hindus and ask them to consider Manickavasagar was with him in accepting the theology of Christianity.

    I raise this query on the grounds that a person is perfectly in the right if he has such feeling towards anyone like Manickavasagar as a private matter.

    For e.g. I like someone – maybe, a Saviite saint like Appar. I became interested in him. I accept his spirituality. I belong to some other religion. I pray to my God. I feel Appar is with me in my prayer to that God. I revealed it to people within my circle. It is a private matter. How can a third person find fault with my feeling and act?

    Remember here, Thuluka Naachiyaar was said to be offering worship to Srirangan in her room in the palace of Alavudin Kilgi whose daughter he was. She was doing that and telling everyone that she was offering worship to Allah to escape punishment. Ramanujar brought her to Srirangam and the rest is history.

    Has any Tamil Muslim castigated Tamil Vaishnavas for tarnishing their religion by making her a devotee of Srirangam? Not at all. Not at all.

    When Tamil Muslims could be broad-minded, what happened to the broad-mindedness of Tamil Hindus here (unless Pope deliberately made it public to brainwash Tamil Hindus to believe Manckavasagar has Christian colors)

    Unless and until it is proved beyond doubt that Pope tried to brainwash Tamil Hindus in this matter, by disseminating the idea of his experience in a Roman church (highly improbable though) by whatsoever means in TN among Hindus, I doubt all that Dr Muthukumaarasaamy wrote about Pope here.

    Coming to the picture. I agree with Christian (the person who wrote here) that Christian theology is embedded in the picture. I am not a Christian scholar and all my knowledge is hearsay.

    As I understand, Jesus lived and died. He was, as Tirchiykkaaran said, an insignificant figure when he lived – a fact which was corroborated by Christian scholars themselves. Jesus also did not found a new religion. He did not say he came with a new religion. He said he came to reform the prevalent Judaism in which he was born, because the religion was unabashedly commercialized by Jews. He ran into deep trouble with Jewish patriarchy which controlled the religion by harshly criticizing them and also, criticizing the rich and powerful which were close to powers in Jersualem, saying the Heaven is not for them. ஊசியின் காதுக்குள் ஒட்டகம் புகுந்தாலும் பரலோகராச்சியத்தில் பணக்காரன் புகமுடியது. The murder of Jesus was a clear political conspiracy.

    The Bible was written about a 100 years after his death. The death and the passion (suffering) were given a deep theological meanings by others, chiefly St Paul – who lived during Jesus time, and who came to assassinate Jesus, but never directly spoke to Jesus. He was present in Jersusalem when the trail and murder of Jesus occurred.

    The theological meanings, as Christian said here, are based on many things, of which, the most important being, the death, the blood and the resurrection of Jesus.

    The picture gives a graphic portrayal of such a theological act: the Death. It is meant for Christians. It is not meant to brainwash Tamil Hindus.

    As Dr Muthukumarasaamy wrote here, the Saivasithaandam accepts the basic fact that people worship different gods and for that, the sithaandam does not hate them. This includes theologies also. Worship of different gods means different theologies. Why don’t then allow Christian their theologies? Why do we find their treatment of Christ’s death a butt of ridicule?

  72. No catholic missionary came from UK to Tamilnaadu. Pope, Caldwell, Margashias and others were protestant missionaries sent to TN by London Society of Missionaries. The catholic missionaries came from European countries like Spain (Francis Xavier), Italy (Beski and Robert dEe Nobili) and other minor ones from countries like France, Albania (Teresa) where Catholicism was and is a dominant faith. They were all sent by Pope.

  73. ஏசுவே மெய்யான தேவன்,அவரை தவிர வேறு ஒரு கடவுள் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.ஆனால்,புனித பீட்டர் தேவாலயம்,புனித தாமஸ் தேவாலயம், புனித ஜான்ஸ் தேவாலயம்,புனித சேவியர் தேவாலயம்,புனித அந்தோனியார் தேவாலயம்,புனித செபஸ்தியான் தேவாலயம்,புனித இங்காசியர் தேவாலயம் போன்ற இன்னும் சில தேவாலயங்கள் உள்ளன.இவைகளில் ஏசு விற்கு எவ்வாறு திருப்பலி,ஆராதனை இன்னும் பிற சடங்குகள் செய்கிறார்களோ அவ்வாறே இவர்களுக்கும் செய்து ,மண்டியிட்டு,ஏசுவை வணங்குவது போல் வணங்குகிறார்கள்.அப்படி என்றால்,இவர்களும் கடவுலர்களா?

  74. கத்தோலிக்கரோ, அல்லது ப்ரோடஸ்டண்டு பிரிவினரோ, இந்துக்களைப் பொறுத்தவரையிலே பெரிய வித்யாசம் கிடையாது.

    இயேசுவை மதிக்கும் இந்துக்கள பலரை நான் காட்ட முடியும். இயேசுவை வணக்கத் தயாராக இருக்கும் இந்துக்களையும் என்னால் காட்ட முடியும்.

    ஆனால், “கிருஸ்தவர்”களின் முதன்மையான கோட்பாடுகளுள் ஒன்று, பிற மதத்தினரின் தெய்வங்கள் பொய்யானவை. பிற மத தெய்வங்களை மரியாதை செய்யக் கூடாது, வணங்கக் கூடாது என்பது. இந்த கொள்கை அதைப் பின்பற்று பவரின் உள்ளத்திலே இருக்கும் சகிப்புத் தன்மையை அழித்து, வெறுப்பு உணர்ச்சியை தூண்டுகிறது. அதனால் உலகிலே சண்டைகளும், சச்சரவுகளும் பெருகுகின்றன. இதே கொள்கையை உடைய யூத , இசுலாமிய மார்ககத்தினருடன் சண்டையும், சச்சரவும் நடக்கிறது.

    இந்துக்கள் தயவு செய்து இந்துக்களாகவே இருக்க வேண்டும். பிற மதங்களில் கூறப் பட்டுள்ள நல்ல கருத்துக்களை பாராட்ட வேண்டும். அந்த நல்ல கருத்துக்களை கூறியவர்களை மரியாதை செய்ய இந்து தயங்க வேண்டியதில்லை.

    உலகத்திலே வெறுப்புக் கருத்துக்களை, அழிவுக் கருத்துக்களை உற்பத்தி செய்த இடமாக ஜெருசலேம் ஆகி விட்டது என்பதை வருத்தத்துடன் அறிகிறோம். அந்த வெறுப்பக் கருத்துக்களினால் உருவான நஞ்சை சரி செய்ய வேண்டியது நாமே. விசத்தை எடுத்து தொண்டையிலே வைக்க வேண்டிய நிலையிலே நாம் இருக்கிறோம்.

  75. வணக்கம்,

    ////கத்தோலிக்கரோ, அல்லது ப்ரோடஸ்டண்டு பிரிவினரோ, இந்துக்களைப் பொறுத்தவரையிலே பெரிய வித்யாசம் கிடையாது.

    இயேசுவை மதிக்கும் இந்துக்கள பலரை நான் காட்ட முடியும். இயேசுவை வணக்கத் தயாராக இருக்கும் இந்துக்களையும் என்னால் காட்ட முடியும். ////

    இது ஒரு மிகப் பெரிய உண்மை, ஆனால் இன்னமும் கிறிஸ்துவத்தில் எவ்வளவு பிரிவுகள் உள்ளன என்று தெரியாத இந்துக்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாகவே உள்ளனர், ஒரு வகையில் இது கூட கிறிஸ்துவர்களின் மத மாற்றக் கொள்கைக்கு பலம் என்றே சொல்லலாம்.

    இந்தியாவை பொருத்த வரை உண்மையான பக்தியாளர்கள் அதிகம், எனவே அவர்களை கடவுளைப் பற்றிய கனவுகளும் நிறைய, அவர்களை உண்மையான கடவுளை நான் காட்டுகிறேன் என்று அழைத்தால் அவன் நிச்சயம் வழிக்கு வந்துவிடுவான், காரணம் அவன் தெய்வத்தின் மீது கொண்ட அபாரமான நம்பிக்கையே, ஏதோவொரு தெய்வத்தை அவன் நம்பத் தாயாரை இருக்கிறான், அந்த நம்பிக்கையை இந்த மதம் மாற்றிகள் சாதகமாக்கிக் கொள்கிறார்கள்,

    இப்போது திருச்சிக் காரரின் பதிவுகளை பார்த்தால் அதிகமான பதிவுகளில் அவர் இயேசுவை வேறு படுத்திக் காட்டவில்லை, ஏசுவையும் வணங்க நான் தயார் என்கிறார், ஒரு இந்தியனின், இந்துவின் மனப் பான்மை அனேகமாக இதுதான், திருச்சிக் காரன் அவர்கள் கொஞ்சம் தெளிவானவராய் இருப்பதால் இவரது மூளை கழுவப் படவில்லை, ஆனால் ஏசுவும் ஒரு கடவுளே என்று ஒத்துக் கொள்கிறேன் என்று சொன்னாலே போதும், நம்மை மாற்றாமல் விடுவதாக இல்லை என்று கங்கணம் கட்டிக் கொள்வார்கள்.

    //திருச்சிக்காரன், அடுத்த ஜூன் மாதம் நான் இந்தியா வருகிறேன். என்னை கூட்டி செல்கிறீர்களா? என் நெடுநாள் ஆசை. இதனால் உங்களுக்கு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.//

    நண்பரே உங்களை அழைத்து செல்வதால் நண்பர் திருச்சிக் காரருக்கு எந்த பிரச்சினையும் கண்டிப்பாக வராது, ஒரு கிருஸ்துவன் என்ற முறையில் எனது இறைப் பணியை செய்கிறேன் என்று சொல்லி பம்பை நதி தீரத்தில் நீங்கள் ஒரு ஜெப வீடு கட்டாமல் இருந்தால் அதுவே போதும்.

  76. You are partly correct in saying their religion denies the gods of other religions. ‘Partly’ because you say Islam does not say that. Islam is more guilty as they call all Hindus kafirs and that there is nothing wrong in eliminating the kafirs. It is more dangerous than the belief of Christians that all others are heathens. As far as I know, Christians in India don’t want to bomb to death the heathens! Have you heard any bomb-blasts in which Indian Christians are involved? If so, tell us.

    Now, lets take only the said Christian belief that other gods are false. It is also the belief of Muslims but with the add-on that the kafirs can be eliminated and Allaah will bless the killers.

    The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so?

    You will be surprised to know that Srivaishnavism’s belief is also the same: the Srivaishnavites believe strongly and Azvaars affirm it – that the one and only God is Thirumaal. They don’t, however, go so far as to say that other gods are false. That is because they are within a religion which allow multi-god worship. But they allow such gods and goddesses as attending upon Thirumaal i.e. demigods, goddesses, sub-gods, goddesses, deputy gods, goddesses!

    A rare paasuram from peyaalzvaar says that Siva and Thirumaal are one and the same; but that paasuram, too, is interpreted by achaaryass to say that it is Thirumal in whom Siva gets integrated. Other than that paasuram, it is Thirumaal, Thirumaal all the way. They don’t even give equal status to Sri (the Vaisnava theological word for Lakshmi). According to the Vaishnavaas, Sri has vitality only when she is with Thirumaal; hence the name திருமகள் கேள்மார்பன். and all other such expressions to mean that Sri has no separate existence without Thirumaal. She should always reside within Thirumaal. Like in Roman catholicism where Mary or the saints like Antony, Dominic, Xavier, et al are just mediators, not God, nor even avataars of God, to whom the catholic take their prayers with the request to bring it to God on their behalf (இரக்கமுள்ள மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்) it means, the Mathaa cant substitute god for them and do nothing on her own!. Similarly, in Srivaishanvism, Sri is a mediatrix (feminine gender for Mediator). She takes your prayers to Lord Mahavishnu on whom she exercises influence.

    Religious scholars researching this sect (Srivaishnavism) think that this sect comes nearly equal to Islam inasmuch as it insists on MONOTHEISM. The one and only God in Islam is Allah and there is no other God except Allah. In Srivaishanvaism, the one and only God is Mahavishnu and there is no other God except Him.

    Even Dr Muthukumarasaamy says that Manickavaasagar and S.Sithantham also believe in one god who is Siva. He quotes a line from Manickavaasagar in this very essay which says so.

    I point out all to Mr Thiruchikkkaran only to bring home the point that THERE IS NOTHING OBJECTIONABLE IN ANYONE OR ANY RELIGION BELIEVING THAT THEIR GOD ALONE IS TRUE AND OTHER GODS AND GODDESSES ARE FALSE.

    The belief can, however, be restricted to themselves only. It is not necessary to say to to the face of others who believe differently. That is gratutous provocation which will harm social harmony. Let anyone believe as he or she likes – whether in one god or multi gods. Let us not disturb him or her.

    Nammaazvaar goes still further – a broadmindedness which we lack – to say that:

    Let different people believe in different Gods, if they so desire.
    If they believe following their theology to the core,
    such belief wont go waste for them.
    The Lord God (who I worship) will descend to the gods they worship
    And bless them. They shall not want.

    The above is a rough translation of mine. As all of you are Tamilians, read the paasuram straight in your mother tongue:

    அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
    அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்;
    அவரவர் இறையவர் குறைவு இலர்; இறையவர்
    அவரவர் விதிவழி அடைய நின்றனரே

    (பொழிப்புரை:

    பலவகைப்பட்டவர் தாம் தாம் அறிந்தபடி கடவுள்களை வழிபடுவர். அவரவர் கடவுள்கள் ப்லன்களைக் கொடுப்ப்தில் குறைவற்றவர்களே. ஏனெனில் அவரவர் நெறிகளில் கூறப்பட்ட விதிகளின்படியே பலன்களைக் கொடுக்கப் பகவான் அந்தந்த தேவதைகளுக்கு உள்ளே இருந்து அருள் புரிகிறான்)

    The pozippurai is from Dr Mathi Srinivasan, Retd Prof of Tamil, Vaishanva College of Men, Chennai)

    There is a similar paasuram from Poigaiaazvaar. For another day, if occasion occurs.

    (PS: The theology of Srivaishnavism given here is based on Thenkalai sub-sect_

  77. முனைவ‌ர் ஐயா,

    அப்ப‌ரின், மாணிக்க‌ வாச‌க‌ரின் பாட‌ல்க‌லை, எழுதி எங்களை உருக‌ வைத்து எங்க‌ளுக்கு புத்துண‌ர்ச்சி அளியுங்க‌ள்.

    இழ‌வு க‌தைக‌ளின் ப‌க்க‌ம் நாம் ஏன் போக‌ வேண்டும்?

    மிருத்யோமா, அமிருத்ய‌ங்க‌ம‌ய‌ என்ற‌ ப‌டி,

    “நாமார்க்கும் குடி அல்லோம்

    ந‌ம‌னை அஞ்சோம்” என்ற‌ வ‌கையிலே

    இற‌ப்புக்கே இற‌ப்பை அளிக்கும் வீர‌ராக‌,

    கால‌னை காலால் எட்டி உதைக்கும் வீர‌ராக‌

    நாங்க‌ள் பல‌ம் பெறும் வ‌கையிலே,

    அப்ப‌ரின் பாட‌ல்க‌லை எழுதி விள‌க்குமாறு கேட்டுக் கொள்கிரோம்.

    என‌க்கு சைவ‌ சித்தாந்திலே எதுவும் தெரியாது. ஒரு சில‌ வ‌ரிக‌ள் தான் தெரியும்( அந்த‌ வ‌ரிக‌ளையும் எழுதி விட்டேன்).

    எங்க‌ளுக்கு குருவாக‌ இருந்து விள‌க்க‌ம் அளியுங்க‌ள்.

    இந்த‌ சாவு குத்து ச‌மாச்சார‌ம் ந‌ம‌க்கு இந்த‌ சாவு குத்து ச‌மாச்சார‌ம் ந‌ம‌க்கு ஒரு வ‌கையான அச‌வுக‌ரிய‌த்தை உண்டு ப‌ண்ணுகிர‌து.

    உங்க‌ளின் பாட‌ல் விள‌க்க‌ங்க‌ளுக்காக‌க் காத்து இருக்கிறோம்.

  78. // It is therefore strange to say that Pope went to Rome and offered prayers there in a Catholic church.

    He could not have done it without the knowledge of his Church and the London Society of Missionaries, which employed him in India. The Anglican Church would have immediately declared him an apostate and excommunicated him. Nothing of that sort happened, did it?

    Prof Muthu Kumarasamy may give reference to his statement attributed to Pope

    If Pope had said that he found Manickavaasagar with him in joint prayer wherever it was offered, to whichever God it was directed, had he made it public and released the statement among Tamil Hindus?

    Please tell us where and in which book. Please tell us whether it was his motive to reach out to Tamil Hindus and ask them to consider Manickavasagar was with him in accepting the theology of Christianity. //

    அருமையானதொரு நடுநிலையான கருத்தினை திரு.கள்ளபிரான் அவர்கள் முன்வைத்துள்ளார்கள்; கட்டுரையின் ஆசிரியரிடமிருந்து சிறப்பானதொரு பதிலை எதிர்பார்க்கிறேன்..!

  79. திருச்சிக்காரரே,
    பைபிள் ஒரு காட்டுமிராண்டித்தனமான நூல் என்று நீங்கள் கூறி, அதற்க்கு நீங்கள் கொடுத்த எடுத்துக்காட்டு சரியானதாக இல்லை. பைபிளை நாம் பல பிரிவுகளாய் பார்க்கலாம். பாவத்திளுருந்து ரட்சிப்பு மற்றும் இயேசுவின் வாழ்க்கை (நான்கு சுவிசேஷங்கள்), எதிர்காலத்தை பற்றிய தீர்க்கதரிசனங்கள் (வெளிப்படுதினவிசெஷம்), அறிவுரைகள் (நீதிமொழிகள்), சரித்திரம், etc.,
    திருச்சிக்காரன் குறிப்பிட்டு சொல்லுவது “சரித்திர” பகுதியில் வருவது. அதில் யோசுவாவிற்கு தேவன் அவர்கள் பகைவரை சங்காரம் செய்யச்சொல்லி சொன்ன பகுதி. அது, ஆதிகாலத்தில் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று இருந்த காலத்தில். அதில், கிறிஸ்துவர்களே, நீங்கள் போய் இந்த குறிப்பிட்ட ஜாதியை அழியுங்கள் என்று கூறவில்லை. மேலும் திருச்சிக்காரன் சொல்வது போல் கர்த்தர், யூதர்களுக்கு பாரபட்சம் காட்டினதாக தெரியவில்லை. யூதர்கள், தவறு செய்யும் போது அவர்களை, எவ்வாறு தண்டித்தார் என்று பைபிள் நன்றாகவே கூறுகிறது. அவர் யூதர்களுக்கு சாதகமாக செய்தது, இயேசுவை அவர்களிடத்தில் பிறக்கவைத்தது (இருந்தாலும் பெருவாரியான யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை). அவர் இந்தியாவில் பிறந்து இருந்தால் நீங்கள் ஏற்று கொண்டிருபீர்களோ என்னவோ.
    இப்போது இருப்பதோ கிருபையின் காலம். கிறிஸ்துவனை ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டசொல்லியே இயேசு பெருமான் எங்களுக்கு சொல்லியிருக்கிறார். இந்த தளத்திலேயே நீங்கள் அதை, கிலாடி, சில்சாம், அசோக், போன்றவரிடத்தில் பார்கிறீர்கள்.
    உங்களை, கிறிஸ்த்துவத்தை பார்க்க சொன்னால், அமெரிக்க அரசியலை பார்கிறீர்கள். இயேசுவை பார்க்க சொன்னால் போப்பை பார்கிறீர்கள். என்ன செய்வது.
    பைபிள், காலத்தை வென்ற நூல். சிலரின் தவறான பிரச்சாரத்தால் அது அழிந்துபோவதில்லை.
    நன்றி,
    கிறிஸ்டியன்

  80. இசுலாம் மீன்ஸ் பீஸ் (Islaam means peace) என்று பல இசுலாமிய பிரசங்கிகள் சொல்வார்கள்.

    அதே போலத் தான் பல “கிருஸ்தவ” நண்பர்கள் பால் வடியும் பச்சைக் குழந்தைகள் போல பதிவுகளை வெளியிடுகின்றனர்.

    ஒரு இனத்தை மட்டும் வாழ வைக்க, அதற்காக பிற இனங்களை அழிக்க திட்டம் போட்டு, நிறைவேற உதவி செய்தவர் எப்படி உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் கடவுள் ஆக இருக்க முடியும்?

    அவரை கடவுள் என்று ஒத்துக் கொண்டு எந்த வித எதிர்ப்பும் காட்டாமல், மண்டியிட்டு அவர் செய்த எல்லா இன அழிப்பு, காட்டு மிராண்டித் தனங்களுக்கும் முழு அங்கீகாரம் வழங்கி விட்டு, அந்தக் காட்டு மிராண்டித் தனத்தை நடத்தியவரை மட்டுமே நான் வணங்குவேன், ஆனால் நான் ரொம்ப நல்லவன் என்பது போல உள்ளது.

    நான் இங்கே, இந்துக்களுக்கான தளத்திலே, இயேசு கிறிஸ்துவை பாராட்டி எழுதிதை காரணமாக வைத்து, சில கைத்தடிகள் என்னை கிரிப்டோ கிருஸ்தவன் என்றும், டுபாக்கூர் என்றும், கிறிஸ்தவன் இல்லை என்று சத்தியம் செய்யச் சொல்லியும் எழுதிய போதும்,

    நான் இயேசு கிறித்துவை பற்றிய என் நிலைப் பாட்டில் மாறவில்லை – அந்த‌ அள‌வுக்கு நேர்மையான‌வ‌ன் இந்து.

    நேர்மையான‌வ‌ன் இந்து.

    ஆனால் ரொம்ப நல்லவர்கள் போல எழுதும் பல கிருஸ்தவர்கள், ஒவ்வொரு அப்பாவி இந்துவையும் பிடித்து மதம் மாற்றி, இந்து தெய்வங்கள் பொய்யானவை என்று அவர்களுக்கு மூளை சலவை செய்து, அவர்களையும் வெறி பிடித்து இரட்டிப்பு பாவியாக்குபவர்கள்.
    இயேசு கிறிஸ்து கூட இவர்களை அப்பாலே போ, உன்னை ஒரு போதும் கண்டதில்லை என்று விலக்குவார்.

    இயேசு கிறிஸ்து யூதர்களின் ராஜாதானே, காணமற் போன ஆடுகளாகிய யூதர்களை மந்தையிலே சேர்க்க வந்தவர் தானே- இதை இயேசு கிறிஸ்து சொன்னாரா இல்லையா?

    இயேசு கிறிஸ்து யூதர்களின் ராஜாவா? இந்திய‌ர்களின் ராஜாவா? எகிப்தில் இருந்து த‌ப்பி வ‌ந்த‌து யூத‌ர்களா? த‌மிழ‌ர்களா?

    க‌ர்த்தர் எகிப்தில் இருந்து யூத‌ர்க‌ளை த‌ப்பிக்க‌ வைத்து அழைத்து வ‌ந்தால், அதற்க்கு ந‌ன்றிக் க‌ட‌ன் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் யூதர்க‌ள் தான் .

    எங்க‌ளுக்கும் க‌ர்த்த‌ருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?
    மாம‌னா? ம‌ச்சானா? இல்லை, நாங்க‌ள் மான‌ங் கெட்ட‌வ‌ர்க‌ளா?

    எத்த‌னைக் காட்டு மிராண்டி, இன‌ அழிப்பு, விச‌க் க‌ருத்துக்க‌ள்!

    நீங்கள் எல்லாம் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் சென்று அங்கே உள்ள யூதர்களை கிரிஸ்துவனாக மதம் மாற்ற வேண்டியதுதானே? ஒரு யூதனை கிரிஸ்துவனாக்க உங்களால் கூடுமா? இங்கே நம்மைக் கெடுக்க வந்து விட்டார்கள்.

    நீங்கள் எல்லாம் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் சென்று அங்கே உள்ள யூதர்களை கிரிஸ்துவனாக மதம் மாற்ற வேண்டியதுதானே? ஒரு யூதனை கிரிஸ்துவனாக்க உங்களால் கூடுமா?

    இங்கே நம்மைக் கெடுக்க வந்து விட்டார்கள்.

  81. Thanks Kallapiran,
    That was a nice explanation. Good to see these many people, who has wide knowledge.

    //பைபிளுக்கு எந்த‌ ஒரு வ‌ர‌லாற்று ஆதார‌மும் கிடையாது. அறிவிய‌லுக்கு எதிராக‌ க‌ட‌லே இர‌ண்டாக‌ப் பிள‌ந்து நீர் சுவ‌ர் போல‌ நின்ற‌தாக, சிரிப்புக் க‌தைக‌ள் பல‌ உண்டு. //
    திருச்சிக்காரன்,
    அனைத்தையும் படைத்த என் ஆண்டவன், அறிவியலுக்கு கட்டு பட்டவன் அல்ல. நமக்கு தெரிந்த அறிவியலுக்கும் அப்பாற்ப்பட்ட விஷயத்தைதான் அற்ப்புதங்கள் என்று சொல்கிறோம்.

    நீங்கள் நிறைய அறிவியல் பற்றி பேசுவதால் கேர்க்கிறேன்: சூரியன் ஒரு கிரகமா, அல்லது நட்சத்திரமா?
    நன்றி,
    கிறிஸ்டியன்

  82. Thiru KaLLappiraan wants source of my statement about G..U. Pope.
    While introducing “Forsake me not” (நீத்தல் விண்ணப்பம்) Pope writes a lot which any practising saivasiddhantin would not brook in silence. At the end he makes the following statement which was the point of moot in my article.
    “The writer(G.U.Pope) did a great part of these translations at beautiful Lugano, not unfrequently relieving the toil by the enjoyment of an hour in the church of S.maria degli Angioli, before the marvellous frescoes of Bernardino Luini; and could not help wishing ofttimes that the Tamil sage and seeker after could have stood there , or haply knelt by his side. Could Manikkavacagar have traced that history of the great Master, of his passage from Gethsemene to the glory of His heavenly dwelling -place , how would he have been affected? One wonders! It may be that he, and the weaver of Mailapore, and the wandering sages of the Naladiyar, and others whose legends we recall, have since, freed from the flesh , visited that spot. Certainly they know those histories now! Shall we not in our poet-sage , wherever his ashes scattered , stay hopefully and tenderly, ‘Requiesca in pace'”

    I wish friends Kallappiran and others comment on Pope’s this statement.

    On the anology of Thulukka nachiar ,to which kaLlappiran referred to, I find a reconciliation. Thulukka nachiar was so passionatly in love with Lord Ranganatha that the latter could help go with her to the Sultanate. When His devotees wanted Him to return Thiruvarangam, Thulukka Nachiar also returned with him.(Please excuse me if there is any aberration in recounting this episode) Thulukka nachiar was allowed to continue in her own religion, but her devotion and love to Lord Aranganatha continued, and this aspect of her love to the Lord is much venerated by Hindus.
    On the anology of Thulukka naachiar episode, May I reconstrue Pope’s statement. Pope’s veneration for Manikkavasagar and his Thiruvasakam was so great and intense that both of them were in his consciousness where ever he went and whatever he did.
    It was in parellel in the life of Manikkavasagar. He was ever conscious of the Grace of Siva that wherever he went Siva followed him bestowed and infused joy in every part of the body.(தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே)
    Pope was so much engrossed with Manikkavaasagar and Thiruvasakam that wherever he went and prayed, Manikkavasagar was beside him as his Mentor and Preceptor in the path of salvation. Though Pope was in the garb of his parental religion, Christianity, his mind was with Manikavasagar and his Lord. Pope was a saivite personally though a Christian externally.
    This I find in tune with the lofty sentiments Pope expressed in his book about saivam and Thiruvasakam,
    By the way, the fresco which was discussed in my article was the master piece of the great artist Bernardino Luini, before which Manikkavasakar is said to have haply knet by the side of Pope.
    My Christian friends will not object to this, I hope

  83. //ஒரு கிருஸ்துவன் என்ற முறையில் எனது இறைப் பணியை செய்கிறேன் என்று சொல்லி பம்பை நதி தீரத்தில் நீங்கள் ஒரு ஜெப வீடு கட்டாமல் இருந்தால் அதுவே போதும்.// அதச்சொல்லுங்க முதல்ல. சரியா சொன்னீங்க.

  84. Dear Kallapiran,

    I do not understand the similarity between Thulukanachiyar and the story written here. I always thought Thulukanachiyar is being worshiped . I also know the story of ThulukaNachiyaar. No Vaishnava saints made Thulukanachiyar to worship Arangan, it is because of Bhakthi of Nachiyar she is worhsiped. Then how come it is hurting the sentiments of so called Tamil ( any ) muslims. Here GU Pope is not making Manikavasagar a god or saint. He is making the saing to prostrate before HIS god.

    Nobody here says you should worship Siva or Vishnu. But do you think we should keep quiet when constant Propaganda to tarnish Hindu Gods ?
    I am wondering if you can also write about what happened before Thulkanachiyar got the Vigraham . I am sure you are aware of KoilUzhughu

    Regards
    S Baskar
    P.S: Thanks glady for reading something which is in English and also responding.

  85. Ashok kumar Ganesan
    2 November 2009 at 9:21 am edit
    //அடுத்த ஜூன் மாதம் நான் இந்தியா வருகிறேன். என்னை கூட்டி செல்கிறீர்களா? என் நெடுநாள் ஆசை. இதனால் உங்களுக்கு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
    அன்புடன்,
    அசோக்//

    அன்புள்ள திரு. அசோக், நீங்கள் சபரி மலைக்கு செல்ல ஆவலாக இருப்பது பற்றி சந்தோஷம். பெரியவர்களான பல ஐயப்ப குருசுவாமிகள் கிறிஸ்துவர்களையும் கூட சபரி மலைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். அகில பாரத் ஐயப்ப சேவா சங்கம், சென்னை ஐயப்ப பக்தர்கள் பேரவை இந்த இடங்களில் விசாரியுங்கள்.

  86. அன்புள்ள கிறிஸ்டியனுக்கு,

    //கிறிஸ்துவனை ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டசொல்லியே இயேசு பெருமான் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்//

    ஆகா உலக கிறிஸ்தவர்கல் எல்லோரும் அதை ஃபாலோ பண்ணினால் எந்த நாட்டிலும் போர் நடக்காதே! ஜப்பானில் அனுகுண்டு போட்டு லட்சோப லட்சம் மக்களை கொன்று போட்டவர்கள் முன்பாக, ஈராக்கில் ஈகோ ப்ராபளத்தினாலேயே, அதிகார மமதைக்காகவே குண்டு போட்டு லட்சக்கணக்கானவர்களை கொன்று போட்டவர்கள் முன்பாக, ஆப்கானிஸ்தானில் குண்டுபோட்டு கூட்டம் கூட்டமாக கொலைகளைச் செய்தவர்கள் முன்பாக…ஏசு தோற்றுப் போய் நிற்கிறார் என்பதே சரி. ஏனென்றால் அவர் ஒரு சொன்னதை கிறிஸ்தவர்கள் கேட்காவிட்டாலும் பரவாயில்லை அதற்கு எதிர்மரையாக நடந்து அவரை அவமதித்து விட்டார்கள். கிறிஸ்தவம் தோற்று நிற்கிறது.

    ஆனால் இந்து தர்மத்தில் அதர்மத்தை எதிர்க்க தர்மத்தை காக்க போர் தான் தீர்வு என்றால் அதை செய்வதை தவிற வேறு வழியில்லை என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    எது நடைமுறையில் சாத்தியம் என்பதை விளக்குங்கள்.

    ///கிறிஸ்த்துவத்தை பார்க்க சொன்னால், அமெரிக்க அரசியலை பார்கிறீர்கள். இயேசுவை பார்க்க சொன்னால் போப்பை பார்கிறீர்கள்.///

    அரசியல் என்பது ஒரு சமூகத்தில் உள்ள மக்களுக்காக அவர்க்ளால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் பிரதிநிதி அவர்களுக்காக அவர்களின் எதிர்ப்பில்லாத அளவிலான சம்மதத்துடன் ஒரு செயலை செய்ய உண்டான அமைப்பு. அதனால் அரசியல் நிகழ்வுகளை அதன் கீழுள்ள மக்களிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. அமெரிக்கா புரிந்த போர்களையும் அதன் வெற்றிகளையும் அந்நாட்டு மக்கள் பெருமையாக நினைத்துக் கொள்ளும் வரை அமெரிக்கா கிறிஸ்தவ நாடென்றும் அங்கே கிறிஸ்தவம் தோற்றது என்றும் ஏசுவின் பேச்சை அவர்கள் மதிக்கவில்லை என்பதும் ஏசு தோற்றுப் போய் நிற்கிறார் என்பதும் தெளிவு.

    அமைதியாக யோசியுங்கள் நண்பரே. டார்வினின் பரிணாமக்கொள்கையை ஏற்றுக்கொண்ட அறிவியலாலர்கள் அமெரிக்காவில் அதிகம். அவர்கள் கிறிஸ்தவர்களே. எனவே பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவியலை ஏற்றுக்கொள்ளுங்கள். தெளிவடையுங்கள்.

    //நீங்கள் நிறைய அறிவியல் பற்றி பேசுவதால் கேர்க்கிறேன்: சூரியன் ஒரு கிரகமா, அல்லது நட்சத்திரமா?
    நன்றி,
    கிறிஸ்டியன்//
    பொருள் ஒன்றுதான் நண்பரே கிட்ட இருந்தால் கிரகம் , தூரமா இருந்தா நட்சத்திரம் என்று சொல்கிறோம். இதுக்கெல்லாம் உங்களுக்கு வெளக்கம் சொல்லி பாடம் நடத்த வேண்டியிருப்பது எங்களுக்கு பிடித்த கிரகம்.

  87. அம்புள்ள கிறிஸ்டியனுக்கு

    ///யூதர்கள், தவறு செய்யும் போது அவர்களை, எவ்வாறு தண்டித்தார் என்று பைபிள் நன்றாகவே கூறுகிறது. அவர் யூதர்களுக்கு சாதகமாக செய்தது, இயேசுவை அவர்களிடத்தில் பிறக்கவைத்தது (இருந்தாலும் பெருவாரியான யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை). அவர் இந்தியாவில் பிறந்து இருந்தால் நீங்கள் ஏற்று கொண்டிருபீர்களோ என்னவோ///

    சரி அதுவே புரியாமல் தான் கேட்கிறேன், யாரோ சில யூதர்களை தண்டிக்க எங்கோ பிறந்த ஏசுவை கட்டிக்கொண்டு ஏன் அழுகிறீர்கள். நம் நாட்டிலே பிறந்து வளர்ந்து தத்துவங்களை போதித்த ஸ்ரீக்ருஷ்ணரையோ அல்லது ஆயுதம் தீர்ந்து போன எதிரியைக்கூட அன்பாக இன்று போய் நாளை வா என்று சொல்லி அனுப்பிய ராமரையோ ஏன் கும்பிடக்கூடாது. நம்ம கிட்ட இல்லாததா? வெளிநாட்டு மோகம் பக்தியிலுமா நண்பரே! வெள்ளைக்காரனிடமிருந்து நீங்கள் இன்னுமா சுதந்திரம் பெறவில்லை. இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் இந்துக்கள் அடிமைகளாக இருந்ததே இல்லை என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

    ஜெய் ஸ்ரீக்ருஷ்ணா!

  88. தோழர் கள்ளபிரான் அவர்களே, இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டை நீங்கள் மறந்துவிட்டீர்கள்! நானும் ஒரு காலத்தில் வைணவர்கள் (ஸ்ரீ வைஷ்ணவர்கள்) செய்ததைக் கண்டு வெருப்புற்றவந்தான். ஆனால், ஆழ்வார்கள், இராமானுஜர், மணவாள மாமுனிகள், நிகமாந்த மகாதேசிகர், பிள்ளை லோகாச்சர்யர் முதல் இன்று வாழும் வைணவர்கள் வரை எவரும் சிவனையோ, உமயையோ, முருகனையோ ‘சாத்தான்’ என்று குறிப்பிடவில்லை! அவர்கள் குறிப்பிட்டது ‘நாரணன் பெரியவன்’ என்ற கருத்தை மட்டுமே. இன்றும் நீங்கள் சொல்லும் சற்று “சகிப்புத் தன்மையற்ற” வைணவர்கள் ‘வீர வைணவர்கள்’ அல்லது தென்கலையினர் என்று அழைக்கப் படுகின்றனர்!! வடகலை வைணவர்கள் எவரும் அப்படியில்லை. இதற்க்கு சிறந்த உதாரணம் சைவக் கடவுளான பிள்ளையாருக்கு திருநீறல்லாது, திருநாமத்தை இட்டு “தும்பிக்கை ஆழ்வார்” என்று அழைக்கின்றனர்! நானும் கேள்விப்பட்டுள்ளேன், கூரத்தாழ்வார் போன்ற சில வைனவர்களால்தான் ஒரு “கிருமிகண்ட சோழன்” ஒருவானானே தவிர ஆழ்வார்களாலோ, இதர ஆசார்யார்களாலோ அல்ல! மேலும், கிறித்தவம், இஸ்லாம் சொல்வதுபோல தன் கடவுளை வணங்காதவன் “நிரந்தர நரகத்தில்” எறிவான் என்று ஸ்ரீ வைஷ்ணவம் சொல்லவில்லை. இதை கீதையில் கண்ணனே சொல்கிறான்:- “பல பிரப்புகளுக்குப் பிறகு, வாசுதேவனே எல்லாம் என்று ஒருவன் உணர்கிறான்”.

    ஆகையால், இந்துமதத்தின் முக்கியமான ஒரு மார்கத்தை கிரித்தவத்தோடோ இஸ்லாமோடோ ஒப்பிடவேண்டாம்! ஸ்ரீ வைஷ்ணவர்களோ, வேறெந்த இந்துவோ மற்ற நாடுகள் மீது படையெடுத்து, இனப்படுகொலை செய்ததாக உங்களால் ஆதாரம் காட்டமுடியுமா??? இவர்கள் ‘நம்புகிறவர்கள்’, ‘நம்பிக்கையற்றவர்கள்’ என்றுநாம் மக்களை பிரிப்பதில்லை! மேலும், பிறமதத்தினரை கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்று இந்து தர்மம் கூறவில்லையே!!

    நீங்கள் சொல்லும் துருக்கனாசியார் வரலாறும் அப்படியே, மேல்கோட்டை கோவில் சிலையை முகமதீயர்கள் களவாண்டு செல்கிறார்கள். அதை திரும்பப் பெறவே, இராமானுஜர் அங்கு செல்கிறார்! இராசியா என்ற அந்தப்பெண் சிலையை தர மறுத்ததாலும், மீறி எடுத்து சென்றால் தன்னையும் உடன் அழைத்து செல்லவேண்டும் என்று சொன்னதாலுமதான் இராமானுஜர் அவளுக்கு துருக்க நாச்சியார் என்று பெயரிட்டு அவர் சொன்ன வரிகள் என்ன:- “சம்பத்குமாரனை நமக்குத் தந்த துருக்க நாச்சியார் நமக்கெல்லாம் தாயார்”. மேலும், “என்னுடன் வந்துவிடு பிள்ளாய்” என்று சொன்னதும் மாலின் சிலை துள்ளிகுதித்து இராமானுஜரின் மடிமீது வந்ததும், துருக்க நாச்சியாரின் உயிர் அவரைவிட்டு பிரிகிறது, அல்லவா? மேல்கோட்டை கோவிலில் துருக்க நாச்சியாரின் சிலை இருப்பதாகவும், தினமும் ‘ரொட்டிகள்’ செய்து அவருக்குப் படைப்பதாகவும் நான் கேள்விப்பட்டுள்ளேன்!

    மேலும், ஜீ.யூ.போப் அவர்கள் திருவாசகத்தை மொழிபெயர்த்ததில் ஏன் மனிவாசப்பெருமானை தரகுறைவாக சித்தரித்துள்ளார்?? நீங்கள் சப்போர்ட் செய்வதுபோல இது இல்லையே! உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம் தருகிறேன்:- எனக்கு புத்தர் மிகவும் பிடிக்கும், அதனால் என் இஷ்டதெய்வத்தை வணங்கும்போது, புத்தரும் என்னுடன் சேர்ந்து வழிபட்டார் என்று கூறினால் அது சரியா?? சிந்தித்துப்பார்க்கவும்….

    //ஆனால் அதற்கு என்ன ஆதாரம் என கேட்டீர்கள், அசுரர்கள் கொடூரர்கள் என ஏதாவது ஆதாரம் வைத்து இருக்கிறீர்களா, அவர்கள் கொலை செய்வார்கள், பெண்களை பலாத்காரம் செய்வார்கள் என கூறினீர்கள், சரி அதற்கெல்லாம் இதிகாசங்களை தானே ஆதாரமாக காட்டுகிறீர்கள். அதே போல அந்த ஜாதியாரை குறித்த விளக்கத்தை நாங்கள் பைபிளை தான் ஆதாரமாக காண்பிக்கமுடியும்.//

    ஜோசப் அவர்களே, எல்லா அசுரர்களும் கொடூரமானவர்கள் என்றும், எல்லோரும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்றும் எங்குமே சொல்லப்படவில்லை. திருமால் சிங்கமாக அவதரித்து இரண்யகசிபுவை கொன்றது எதற்காக?? அவன் பிள்ளை பிரகலாதனை காப்பாற்றவே! இரண்யகசிபு அரக்கன் என்றால் அவன் பிள்ளை மட்டும் என்ன? மேலும், இராமாயணத்தில், அனுமான் தான் இலங்கையில் இருக்கும் எல்லா அரக்கர்களையும் அழித்துவிடுவதாக சொன்னபோது, சீதை கூறுவது:- “இன்று இராவணன் கீழ் இவர்கள் பணி புரிவதால், கெட்டவர்களாக இருக்கிறார்கள். நாளை, நல்லவனான விபீஷணன் ஆட்சிக்கு வந்தால், அவன் சொல் படியே இவர்களும் நல்லவர்களாக மாறப்போகிறார்கள். எல்லோரையும் அழிப்பது தவறு!”. இராமாயண யுத்தம், மகாபாரத யுத்தம், முருகன் போரிட்ட சூரபதும யுத்தம், எல்லாவற்றிலும் எத்தனைமுறை சமரசங்களுக்கு பேச்சுவார்த்தை நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? சீதையை மட்டும் தந்துவிட்டால், தன் அயோத்தி இராஜ்யத்தையே இராவணனிடம் தந்திவிடுவதாக இராமன் சொல்கிறான்! நீங்கள் செய்த சிலுவைப்போர்கள், ஜீகாத் போன்ற போர்களை இவை எதையாவது கடைபிடித்தீர்களா??
    ஆனால், இதயெல்லாம் சொன்னால் இதெல்லாம் புராணங்கள், இதீகாசங்கள், உண்மையல்ல என்று பரிகசிக்க மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது, அரகக்கர்களை எப்படி நீங்கள் பாகனீய மக்களோடு ஒப்பிடுகின்றீர்கள்?? அரக்கர்கள் உண்மை, ஆனால் தேவர்கள் பொய்! இராவணன் வாழ்ந்தது உண்மை, ஆனால் இராமன் கட்டுக்கதை என்று பேசும் உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!!

  89. //திருச்சிக்காரரே,
    பைபிள் ஒரு காட்டுமிராண்டித்தனமான நூல் என்று நீங்கள் கூறி, அதற்க்கு நீங்கள் கொடுத்த எடுத்துக்காட்டு சரியானதாக இல்லை//

    ஏன் ச‌ரியான‌தாக இல்லை? வார்த்தைக்கு வார்த்தை பைபிளில் இருந்து எடுத்துதானே எழுத‌ப் ப‌ட்டுள்ள‌து. “பைபிளில் இருக்கிர‌து” என்று நான் எழுதிய‌ வார்த்தை ஏதாவ‌து பைபிளில் இல்லாம‌ல் இருக்கிர‌தா?

    பைபிளில் இருக்கிறதா இல்லையா? பைபிளில் இருக்கிறது என்பது உண்மையா இல்லையா?

    //திருச்சிக்காரன் குறிப்பிட்டு சொல்லுவது “சரித்திர” பகுதியில் வருவது. அதில் யோசுவாவிற்கு தேவன் அவர்கள் பகைவரை சங்காரம் செய்யச்சொல்லி சொன்ன பகுதி//

    ச‌ரித்திர‌ப் ப‌குதியில் சொன்னால் என்ன‌? உபாக‌ம‌ம் ப‌குதியில் சொன்னால் என்னா? எண்ணாக‌ம‌ம் ப‌குதியில் சொன்னால் என்ன‌? அது பைபிளில் உள்ள‌தா, இல்லையா?

    இன‌ப் ப‌டுகொலைக்கு திட்ட‌ம் தீட்டிய‌வ‌ர், எந்த‌க் கால‌த்தில் தீட்டினால் என்ன‌? அவ‌ரைத் தானே நீங்க‌ள் கர்த்த‌ர் க‌ட‌வுள் என்று வணங்குகிறீர்க‌ள்? ராஜ‌ ப‌க்ஷே க‌ட‌ந்த‌ 5 வ‌ருட‌ங்களாக‌ இன‌ப் ப‌டுகொலை செய்கிறார். ஹிட்ல‌ர் 1937 முத‌ல் 1944 வ‌ரை இன‌ப் ப‌டுகொலை செய்தார்.

    இந்த‌ தேவ‌னோ உல‌கில் எல்லொருக்கும் முன்பு இன‌ப் ப‌டுகொலையை ஆர‌ம்பித்து செய்தார். அவ‌ரைத் தானே நீங்க‌ள் கர்த்த‌ர் க‌ட‌வுள் என்று வணங்குகிறீர்க‌ள்? ப‌ல‌ வ‌ருட‌ம் முன்பு செய்த‌தால் இன‌ப் ப‌டுகொலை அவ‌ர் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌வ‌ர் ஆகிவிடுவாரா?

    எப்படி கடவுள் என்று கூறப் படுபவர் ஒரு இனத்தை வாழ வைக்க பிற இனங்களை அழித்துப் போடும் பொல்லாப்புக் காரராக இருக்க முடியும்?

    கடவுள் என்று சொல்லப் படுபவர், அவர் உலகில் உள்ள எல்லோருக்கும் தந்தையாக கூறப் படுகிறார். தந்தை ஒரு மகனைப் பார்த்து பிற மகன்களை எல்லாம் வெட்டி சாகடித்து, நீ வாழ்ந்து கொள் என்று சொல்வாரா?

    ஒரு இன‌த்துக்கு ஆதர‌வாக‌ பிற‌ இன‌ங்க‌ளை அழிக்க‌ உத‌வி செய்பவ‌ர், ஒரு போதும் க‌ட‌வுளாக‌ இருக்க‌ முடியாது. ஒரு ராஜ‌ ப‌க்ஷெவோ, ஹிட்ல‌ரோ க‌ட‌வுள் என‌க் க‌ருத‌ப் ப‌ட‌ முடியுமா?

    என்ன‌வோ ஜோசுவாவுக்காக‌ ம‌ட்டும் இன‌ப் ப‌டுகொலை செய்தது போல‌வும், ம‌ற்ற‌ நேர‌த்திலே க‌ர்த்த‌ர் ந‌ல்ல‌வ‌ராக‌ இருந்த‌து போல‌வும் பாலிசாக‌ எழுதி உண்மையை ம‌றைக்க‌ முடியுமா? மோஸ‌ஸூக்காக‌ க‌ர்த்த‌ர் ந‌ட‌த்திய‌ இன‌ப் ப‌டுகொலை இதோ!

    Numbers 31
    Vengeance on the Midianites
    1 The LORD said to Moses, 2 “Take vengeance on the Midianites for the Israelites. After that, you will be gathered to your people.”
    3 So Moses said to the people, “Arm some of your men to go to war against the Midianites and to carry out the LORD’s vengeance on them. 4 Send into battle a thousand men from each of the tribes of Israel.” 5 So twelve thousand men armed for battle, a thousand from each tribe, were supplied from the clans of Israel. 6 Moses sent them into battle, a thousand from each tribe, along with Phinehas son of Eleazar, the priest, who took with him articles from the sanctuary and the trumpets for signaling.

    7 They fought against Midian, as the LORD commanded Moses, and killed every man. 8 Among their victims were Evi, Rekem, Zur, Hur and Reba—the five kings of Midian. They also killed Balaam son of Beor with the sword. 9 The Israelites captured the Midianite women and children and took all the Midianite herds, flocks and goods as plunder. 10 They burned all the towns where the Midianites had settled, as well as all their camps. 11 They took all the plunder and spoils, including the people and animals, 12 and brought the captives, spoils and plunder to Moses and Eleazar the priest and the Israelite assembly at their camp on the plains of Moab, by the Jordan across from Jericho. [a]

    13 Moses, Eleazar the priest and all the leaders of the community went to meet them outside the camp. 14 Moses was angry with the officers of the army—the commanders of thousands and commanders of hundreds—who returned from the battle.

    15 “Have you allowed all the women to live?” he asked them. 16 “They were the ones who followed Balaam’s advice and were the means of turning the Israelites away from the LORD in what happened at Peor, so that a plague struck the LORD’s people. 17 Now kill all the boys. And kill every woman who has slept with a man, 18 but save for yourselves every girl who has never slept with a man.

    19 “All of you who have killed anyone or touched anyone who was killed must stay outside the camp seven days. On the third and seventh days you must purify yourselves and your captives. 20 Purify every garment as well as everything made of leather, goat hair or wood.”

    21 Then Eleazar the priest said to the soldiers who had gone into battle, “This is the requirement of the law that the LORD gave Moses: 22 Gold, silver, bronze, iron, tin, lead 23 and anything else that can withstand fire must be put through the fire, and then it will be clean. But it must also be purified with the water of cleansing. And whatever cannot withstand fire must be put through that water. 24 On the seventh day wash your clothes and you will be clean. Then you may come into the camp.”

  90. //He was ever conscious of the Grace of Siva that wherever he went Siva followed him bestowed and infused joy in every part of the body.(தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே)
    Pope was so much engrossed with Manikkavaasagar and Thiruvasakam that wherever he went and prayed, Manikkavasagar was beside him as his Mentor and Preceptor in the path of salvation. Though Pope was in the garb of his parental religion, Christianity, his mind was with Manikavasagar and his Lord. Pope was a saivite personally though a Christian externally.//

    Good analysis. Maybe. If he had not been afflicted with some disease which compelled him to return to his native country, he would have become a Saiva Sithaanthi.

  91. //I wish friends Kallappiran and others comment on Pope’s this statement.//

    His statement is interesting. It shows how deep his relationship with the Tamil sage-poet. It is different – far different in nature – from that a Saiva Sithaanthi or Tamil hindu has with that sage poet. Pope is a different personality who brought a different approach – all his own – to the sage-poet.

    As I said already, if the statement is meant as a private circulation among his own circle or Christians, no one can interefere to comment on that. It is strictly his private feeling. A private matter of a person, if it concerns you negatively, you cant complain. Only if it becomes public, you can complain or retaliate.

  92. //I do not understand the similarity between Thulukanachiyar and the story written here. I always thought Thulukanachiyar is being worshiped . I also know the story of ThulukaNachiyaar. No Vaishnava saints made Thulukanachiyar to worship Arangan, it is because of Bhakthi of Nachiyar she is worhsiped. Then how come it is hurting the sentiments of so called Tamil ( any ) muslims. Here GU Pope is not making Manikavasagar a god or saint. He is making the saing to prostrate before HIS god.

    Nobody here says you should worship Siva or Vishnu. But do you think we should keep quiet when constant Propaganda to tarnish Hindu Gods ?//

    As I have reiterated, anyone has any feeling on any matter or a person. For e.g I can feel another person is an idiot. As long as I keep the feeling private or within a known community of persons close to me – like gossip – the person affected cant sue me.

    Pope can feel the saint knelt along with him, before the Pope;s God. Has he said it to all and sundry with a view to tarnish the sage poet? If he had, it is condemnable as it hurts all concerned. Your question in the last para will sound justified only if Pope had disseminated his private feeling widely with an ulterior motive to tarnish the reputation of the sage poet as a devotee of Siva.

    About Tuluganaachiyaar, I am referring to a typical muslim reaction, which we see today, for anything that they perceive insulting to their faith. In a sort of way, it is a political reaction based on religion. Thus, a Muslim is offended if one of their popular persons is shown to worship another God, and the people belonging to that faith, enshrine that person and make him or her worshipful in their pantheon. Muslims have taken offence to such things in the world.

    But here, the Muslims have absolutely neglected what Tamil Vaishnavas did and are doing. In my opinion, among all Muslims in the world, only a few group of Muslims are broad-minded and tolerant, respecting other faiths also. Tamil muslims should be counted among them.

    This is the point of my analogy. Hope I have made myself clear.

  93. //பைபிள், காலத்தை வென்ற நூல். சிலரின் தவறான பிரச்சாரத்தால் அது அழிந்துபோவதில்லை.//

    காலத்தை வென்று, தன் காட்டு மிராண்டித் தனத்தை தொடரும் நச்சு மரமாக உள்ளது பைபிள்.

    நாங்கள் ஒரு பிரச்சாரமும் செய்ய வேண்டியதில்லை. இந்த நூலில் உள்ள கருத்துக்களை அப்படியே எழுதினால் போரும்.

    படிப்பவர்கள் நச்சுக் கருத்துக்களை புரிந்து கொள்வார்கள்.

  94. சகோதரர் ஜோசெப் அவர்களே,

    //யெகோவா கடவுள் இனவாதியா?
    நல்ல ஒரு கேள்வி, பாவம் அழிக்கப்பட்ட மக்களுக்காக திருச்சிக்காரர் ரொம்பவே கவலைப்படுகிறார். ஏற்கனவே அந்த ஜாதிகள் மிகவும் கொடூரர்கள் என கூறியிருந்தேன் ஆனால் அதற்கு என்ன ஆதாரம் என கேட்டீர்கள், அசுரர்கள் கொடூரர்கள் என ஏதாவது ஆதாரம் வைத்து இருக்கிறீர்களா, அவர்கள் கொலை செய்வார்கள், பெண்களை பலாத்காரம் செய்வார்கள் என கூறினீர்கள், சரி அதற்கெல்லாம் இதிகாசங்களை தானே ஆதாரமாக காட்டுகிறீர்கள். அதே போல அந்த ஜாதியாரை குறித்த விளக்கத்தை நாங்கள் பைபிளை தான் ஆதாரமாக காண்பிக்கமுடியும். //

    சரி. பைபிளில் இருந்தே ஆதாரம் காட்டுங்கள்!

    ஆயி பகுதியில் இருந்த மக்கள் செய்த குற்றம் என்ன?
    எரிகோ பகுதியில் இருந்த மக்கள் செய்த குற்றம் என்ன?

    எரிகோ பகுதியை கர்த்தரின் திட்டப் படி எரிகோவை முற்றுகை இட்டு,
    கர்த்தர் எரிகோவை ஜோசுவாவின் கையில் குடுத்தார்.

    எரிகோ பகுதியில் இருந்த மக்கள் செய்த குற்றம் என்ன?

    ஆயி பகுதியில் இருந்த மக்கள் செய்த குற்றம் என்ன?

    அதிகாரம் 8
    2. நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தது போல ஆயிக்கும் அதன் ராஜாவுக்கும் செய்யக் கடவாய்.

    26. ஆயியின் குடிகளை எல்லாம் சங்ககரித்து தீரு மட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக் கொண்டு இருந்த தன் கையை மடக்கவில்லை.

    27. கர்த்தர் ஏசுவாவுக்கு கட்டளை இட்ட வார்த்தையின் படி, மிருக ஜீவனையும் அந்த பட்டணத்தின் கொள்ளையையும் மாத்திரம் இஸ்ரவேலர் எடுத்துக் கொண்டார்கள்.

    28.யோசுவா ஆயியை சுட்டெரித்து அதை இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க் கிடக்கும் மண் மேடாக்கி,

    29 . ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப் போடுவித்து , சாயங்காலம் மட்டும் அதிலே தொங்க விட்டான்.

    //நல்ல ஒரு கேள்வி, பாவம் அழிக்கப்பட்ட மக்களுக்காக திருச்சிக்காரர் ரொம்பவே கவலைப்படுகிறார்.//

    சகோதரர் ஜோசெப் அவர்களே,

    என்னைப் பார்த்து இளக்காரம் செய்கிறீர்கள். மத வெறியில் உங்கள் மனதில் இருந்த மனித தன்மை, இரக்கம் எல்லாம் அழிந்து விட்டதா?

  95. திரு. கிருஸ்டியன்,

    ////க‌ட‌வுளுக்கே ஆப்பு: ஒரு உயிர் ஒரே முறைதான் பிறக்கிறது என்று கதை கட்டி, அப்படியானால் ஒரே ஒரு முறை பிறக்கும் உயிரை கடவுள் எதற்கு குருடனாகப் பிறக்க வைக்க வேண்டும், கடவுள் தவறே செய்யாத உயிரை தண்டிக்கும் கல் நெஞ்சனா என்ற வ‌கையிலே க‌ட‌வுளையெ ஒரு கொடுமையான‌வ‌ன் போல‌ சித்த‌ரித்தது////
    நல்ல ஞாயமான சிந்தனைதான்.

    ஒருவன் தவம் செய்து முக்தி அடைவதை நீங்கள் ஒத்துக்கொள்ளுகிறீர்கள். நீங்கள் சொல்வதுபோலவே வைத்துக்கொள்ளலாம். இந்த கதையை கேட்டு பதில் சொல்லுங்கள், நானும் தெளிவு பெற்றுக்கொள்ளுகிறேன்.
    இரண்டு பிள்ளைகள் ஒரே நேரத்தில் பிறக்கின்றன(அது அவர்களின் முதல் பிறவி, இந்த பூவுலகில்). ஒரு பிள்ளை கண் குருடாகவும், கால் ஊனமாகவும் இருக்கிறது. இன்னொரு பிள்ளை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. ஊனமான பிள்ளை தன் நாற்பதாவது வயது வரை துன்பத்துடனும் வறுமையுடனும் வாழ்கிறது. ஆரோகியமான பிள்ளை, நல்ல செல்வ செழிப்போடும், புகழோடும் தன் வாழ்க்கையை நாற்பது வயதுவரை அனுபவிக்கிறது. அதன் பின்னர், அவர்கள் இருவரும் ஒரு முனிவரிடம் சீடராகி கடும்தவம் இருந்து, பரமனை கண்டு, முக்தி அடைகின்றனர்.
    இருவருக்கும், ஒரே பிறவி மட்டும் இருந்து இருக்கிறது. ஆனால், ஒருவர் நாற்பது ஆண்டு காலம் உலக சுகத்தை அனுபவித்தவர், மற்றவர் துன்பம் அனுபவித்தவர். இந்த சூழ்நிலையில் திருச்சிக்காரன் கூறிய சமநிலை வராதே.

    ஆரோக்கியமாக பிறந்த காரணத்தால் ஒருவனின் தவத்தை உங்கள் கடவுள் ஏற்க மாட்டாரா? இல்லை இல்லை, நீ ஊனமாக பிறந்து என்னிடம் வா என்று கூறுவாரா?
    அல்லது, ஊனமாயிருந்து இன்னொரு பிறப்பை வெறுத்து, முக்தி வேண்டி கடும்தவம் செய்து நிற்கும் ஒருவனிடம், இல்லை இல்லை, நீ ஆரோக்கியமாய் இன்னொரு பிறவி எடுத்து என்னிடம் வா என்று கூறுவாரா?
    கொஞ்சம் எடுத்து சொல்லங்க சார்.
    நன்றி,
    கிறிஸ்டியன்//

    இதில் முக்தி என்ற விசயத்தையும் சேர்த்து கேட்டு இருக்கிறீர்கள் சார்.

    1) முக்தி வேறு விஷயம் சார். கண் இல்லாதவரும் முக்தி அடையலாம், கண் இருப்பவரும் முக்தி அடையலாம் சார்.
    அது அவரவர்கள் நற்செயல், முயற்சி, மனக் குவிப்பு , பக்தி ….இப்படி பல காரணிகள் முக்தி அடைய முடியுமா எனத் தீர்மானிக்கின்றன.

    அதற்க்கு கண் இருக்கிறதோ, இல்லாமல் குருடாக இருக்கிறாரோ பிரச்சினை இல்லை சார்.

    2) இங்கே முக்கிய விடயம் ஏன் கடவுள் ஒருவனைக் குருடாகப் படைக்கிறார் அல்லது முடமாகப் படைக்கிறார், படைப்பிலே ஏன் பாரபட்சம் ? கடவுள் இரக்கம் இல்லாத கொடுமைக்காரனா? தினமும் காலையில் இந்தக் குழந்தை …குருடன் . ம்ம்…,. அடுத்தவன்… பணக்காரனுக்குப் குழந்தை என்று தீர்மானிப்பவர் போல கடவுளைக் கொடுமைக் காரராக சித்தரிக்கிறது, உங்கள் சித்தாந்தம்.
    ஏனெனில் யூத, கிருஸ்தவ , இசுலாமிய சித்தாந்தங்களில் ஒரே பிறப்பு, ஒரு உயிர் முதல் முறையாகப் படைக்கப் படுகிறது!

    ஆனால் இந்து, பவுத்த, ஜைன சித்தாந்தங்களில், உயிர் எப்போதும் இருக்கிறது. ப‌ல‌ பிற‌விக‌ளை எடுக்கிற‌து. ஒவ்வொரு பிற‌வியில் செய்யும் ந‌ன்மை தீமைக‌ளுக்கு ஏற்ப‌ அவ‌னுக்கு அடுத்த‌ பிற‌வி அமைகிர‌து. ஒருவ‌ன் ஒரு பிற‌வியில் சில‌ ம‌னித‌ரின் க‌ண்க‌ளைக் குத்தி அவ‌ர்களை குருடாக்கி விட்டு,த‌க்க‌ த‌ண்ட‌னை பெறாம‌ல் த‌ப்பி விட்டால், அவ‌ன் அடுத்த‌ பிற‌வியில் குருட‌னாக‌ப் பிற‌க்கிறான். இதில் க‌ட‌வுளின் மீது எந்த‌க் குற்ற‌மும் இல்லை, க‌ட‌வுள் பார‌ப‌ட்ச‌மாக‌ செய‌ல்ப‌டு ப‌வ‌ராக‌வோ, கொடுமைக் கார‌ராக‌வோ க‌ருத‌ப் ப‌ட‌ முடியாது.

    இவ்வாற‌க இந்திய‌ சிந்த‌னை க‌ட‌வுளை ச‌ரியாக‌ப் புரித‌ல் செய்கிர‌து.

    என‌வே இந்திய‌ சிந்த‌னைப் ப‌டி முத‌ல் பிற‌வியின் ப‌ய‌னே அடுத்த‌ பிற‌வி.

    ச‌ரியா சார்?

  96. /// எங்கோ பிறந்த ஏசுவை கட்டிக்கொண்டு ஏன் அழுகிறீர்கள். நம்ம கிட்ட இல்லாததா? வெளிநாட்டு மோகம் பக்தியிலுமா நண்பரே! /// – ராம்.

    நன்றி திரு.ராம்

    சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்! ஆனால் கிறிஸ்துவர்கள் சிந்திப்பார்களா என்பதே கேள்வி!?

    இன்று கிறிஸ்துவராக இங்கு இருப்பவர்கள் முன்னால் இந்துக்களாகப் பிறந்தவர்களே. தற்போதுள்ள / முந்தைய தலை முறைகளில் ஒன்று தங்களை வெளிநாட்டு மதத்திற்கு விலைபேசியதன் காரணமே மற்ற மதமாக்கப் பட்டார்கள்.

    பொறியியல், வர்த்தகம், மருத்துவத் துறைகளில் இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் சிறந்த வரவேற்பு உள்ளது. நம்முடைய யோகாவிற்கு உலகம் முழுவதும் வரவேற்பு. ஆனால், நம்மில் சிலர் வேற்று நாட்டு மதம், நாகரீகத்தை தேடிச் செல்கின்றார்கள்.

    இக்கரைக்கு அக்கரை பச்சை!

    அன்புடன்,
    ஆரோக்கியசாமி

  97. ram sir,
    ////////பொருள் ஒன்றுதான் நண்பரே கிட்ட இருந்தால் கிரகம் , தூரமா இருந்தா நட்சத்திரம் என்று சொல்கிறோம். இதுக்கெல்லாம் உங்களுக்கு வெளக்கம் சொல்லி பாடம் நடத்த வேண்டியிருப்பது எங்களுக்கு பிடித்த கிரகம்/////////
    சரியா சொன்னிங்க சார்,ஆத்திச்சூடி மாதிரி சுருக்கமா,நட்சுன்னு சொன்னீங்க சார்,நன்றி.
    _தனபால்.

  98. வணக்கம்.

    இரணியன் அரக்கன், அவனது மகன் பிரகலாதன்……
    ராவணன் அரக்கன், அவனது தம்பி விபீஷணன் …..

    இப்படி கேள்விகள் கேட்டால் அவர்களும் அரக்கர்களே என்றே பதில் சொல்ல வேண்டி வருகிறது, ஆனால் இப்போதைய அரசியல் போல வம்சாவளியில் உருவானது அல்ல அரக்கர்கள் என்பவர்கள். அரக்கர்கள் என்பதற்கு கவியரசர் கம்பர் அருமையான விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது இரக்கம் இல்லாமையை குறிப்பது அரக்கத்தனம், அப்படியானால் இரக்கம் இல்லாதவர் யாராகிலும் அவர் அரக்கர் என்கிறார்.( அர்த்தமுள்ள இந்துமதம் —கண்ணதாசன்).

    நமது மக்கள் அரக்கர் என்றதும் கோரைப் பல்லும், தலயில் கொம்பும் என்று கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன், மானுட குலத்தில் பிறந்தும் சற்றும் இரக்கம் இன்றி துன்பம் தருபவர்களே அரக்கர்கள். இப்போதும் கூட நம்மிடையே அரக்கர்கள் உலா வருகிறார்கள், இதுவும் உண்மை.

  99. வணக்கம்,

    //அனைத்தையும் படைத்த என் ஆண்டவன், அறிவியலுக்கு கட்டு பட்டவன் அல்ல. நமக்கு தெரிந்த அறிவியலுக்கும் அப்பாற்ப்பட்ட விஷயத்தைதான் அற்ப்புதங்கள் என்று சொல்கிறோம்.///

    நீங்கள் படைப்பில் இருந்து வெளியில் வந்து யோசிக்காத வரை உங்களுக்கு விஞ்ஞானம், மெய்ஞானம், இரண்டிலுமே வளர்ச்சி வராது,

    ஒருவிஷயம் தெரிந்து கொள்ளுங்கள் அறிவியலோ, அற்புதங்களோ, இவைகளை கண்டறிவது செய்வது. இரண்டுமே மனிதர்களின் வேலை, இறைவன் அது இரண்டுமாகவும் மேலும் அதை காண்பவனும் செய்பவனுமாகவும் அவற்றிற்கான ஆதாரமாகவும் நிறைந்து இருப்பவன்.

    சூரியன் கிரகமா நட்சத்திரமா என்று ஒண்ணாம் வகுப்பு மாணவன் போல ஏன் இந்த கேள்விகள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், மேலும் இதற்கு விளக்கம் கூற ஏராளமான நண்பர்கள் பொழுதை வீணடித்து கொண்டு இருப்பார்கள், எனவே இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்று விவாதியுங்கள், வீணான திசை திருப்பம் எதற்கு?

  100. அன்ப‌ர் கிறிஸ்டிய‌ன் சொன்ன‌து:
    ///நான் கட்டுரையை திசைத்திருப்பவில்லை. ஜி,யு.போப் செய்தது சரி என்று நான் வாதிடவில்லை. ஆனால், முனைவர் conclusion போல சொல்லியிருக்கும்:
    //இயேசு கிறிஸ்துவின் இறுதி உயிர்களுக்கு இன்பம் விளைவிப்பதற்கு மாறாக அவலமே விளைத்ததால் அதனைத் தமிழ் இந்துக்கள் மதிக்காததில் வியப்பொன்றும் இல்லை. இது துர்மரணமே.//
    மேற்க்கூறிய கருத்தைதான் நான் எதிர்க்கிறேன்.///
    அதாவது, ஜி.யு.போப்பின் blasphemy ஐ நீங்கள் சரி என்று வாதிடவில்லை. ஆனால் அதைக் கண்டிக்கவோ இல்லை எதிர்க்கவோ இல்லை. ஏனெனில் இப்படிப்பட்ட blasphemy யால் இந்துக்கள் மனம் வருந்துவதைப்பற்றி உங்களுக்குக் கவலையில்லை. ஒருவேளை மனதுக்குள் மத்தாப்பாகக் கூட இருக்கலாம். ஆனால், இந்த வேதனையில் கட்டுரை ஆசிரியர் கிறிஸ்துவின் மரணம் இந்துக்களுக்கு எப்படி 2000 ஆண்டுகளுக்கு மேலாக இப்படிப்பட்ட துன்பத்தைத் தருகிறது என்று சொன்னால் அதை நீங்கள் எதிர்க்கிறீர்கள்.
    ஆக, ஒரு கிறிஸ்தவர் இந்துவின் கன்னத்தில் அறைந்தால், அதற்கு இந்து வலியில் அழுதால், கன்னத்தில் அறைந்தவனைக் கண்டிக்க மாட்டீர்கள். அறைவதை எதிர்க்க மாட்டீர்கள். ஆனால், அழுகின்ற இந்து கிறிஸ்தவனால்தான் அழுகிறேன் என்றால் அதை எதிர்ப்பீர்கள். ஏசு வேறேதோ சொன்னதாகப் பிரசாரம் செய்கிறார்களே அது என்ன?

    ///தெருவில் கூவுகிற மத பிரசாரகர், “இந்து பாவி” என்று கூவினாரா? அவர் பாவிகளை யேசுவிடம் வந்து மன்னிப்படைந்து திருந்தச் சொல்லி கூவுகிறார். ///
    கிறிஸ்தவனாக மதம் மாறியவர்தான் ஏசுவிடம் வந்துவிட்டாரே, மதம் மாறாதவரைத்தானே, உங்கள் போதகர் பாவி என்று கூவுகிறார். அப்படி மதம் மாறாதவர் இந்துதானே? அதைத்தான் சொல்கிறேன். அவர் ச்ர்ச்சில் நின்று இதைச்சொன்னால் எனக்கென்ன வந்தது என்று விட்டுவிடுவேன்.

  101. /////கிறிஸ்த்துவத்தை பார்க்க சொன்னால், அமெரிக்க அரசியலை பார்கிறீர்கள். இயேசுவை பார்க்க சொன்னால் போப்பை பார்கிறீர்கள்.///

    கிறிஸ்த்தவன் அவர்களே
    போப்தானே ரொமன் கத்தோலிக்கச் சாதியின் தலைமை மதகுரு? ரோமன் கத்தோலிக்கச்சாதிதானே கிறிஸ்தவர்களுக்குள் அதிகப் பேரைக் கொண்டது? போப்புக்குத்தானே ஒரு தேசத்துக்குத் தலைமைப் பொறுப்புக்குச் சமமான அந்தஸ்தைச் சூழ்ச்சியாக ஐ.நா. வும் பல சாதி கிறிஸ்தவ நாடுகளும், பல சதி முஸ்லிம் நாடுகளும், பல மதச்சார்பில்லாத நாடுகளும் வழங்கியிருக்கின்றன.

    இன்றைக்கு ஏசுவே நேரில் வந்தாலும், உலக அரங்கில் போப்புக்குத்தானே தேசத்தின் தலைமைப்பொறுப்பு, ஏசுவுக்கில்லையே!

    போப்தானே எங்கள் ஆன்மாக்களை அறுவடை செய்வேன் என்று இந்த பாரத மண்ணில் ஆணவத்துடன் பிரகடனம் செய்தார்? கிறிஸ்துவம் என்பதன் பொருளே மதம் மாற்றுதல் என்று ஆகிவிட்டதே?

  102. வணக்கம்,

    ///கிறிஸ்த்துவத்தை பார்க்க சொன்னால், அமெரிக்க அரசியலை பார்கிறீர்கள். இயேசுவை பார்க்க சொன்னால் போப்பை பார்கிறீர்கள்.///

    அய்யா இந்து மக்களில் யாராவது ஒரு பிரச்சினையை, மத மாற்றம் நடை பெரும் இடங்களில் அறிவுப் பூர்வமாய் ஒரு கேள்வி கேட்டு அது விவகாரமாகினால் அதை அந்த நபர்களின் பிரச்சினையாக கொள்வதோ, அல்லது அந்த தெளிவான கேள்விக்கு தெளிவான பதிலோ சொல்லாமல் இந்துக்களின் மதவெறி என்று தனி மனித பிரச்சினையை கூட மதவெறி முத்திரை குத்தலாம்

    ஆனால் மத சார்பற்ற நாடு என்று தன்னை அறிவிக்காத அமேரிக்காவின் நடவடிக்கைகளை பின் எப்படி சொல்வது, அங்கே கிறிஸ்துவர்களின் ஆட்சிதானே? அப்படியானால் அவர்கள் ஆயுதங்களை தூக்கி எறிந்து விட்டு பைபிளை எடுத்துக் கொண்டு போய் சமாதானப் பிரச்சாரம் அல்லவா செய்து இருக்க வேண்டும்.அது அல்லவா இயேசுவின் போதனை, சரி அப்படியானால் அமெரிக்கர்கள் கிறிஸ்துவர்கள் இல்லை என்பதுதான் உமது தீர்வா?

    ///பைபிள் ஒரு காட்டுமிராண்டித்தனமான நூல் என்று நீங்கள் கூறி, அதற்க்கு நீங்கள் கொடுத்த எடுத்துக்காட்டு சரியானதாக இல்லை///

    எந்த எடுத்து காட்டுகளும் உங்களுக்கு சரியானதாக ஆகாது என்பது தெரிந்தும் பாவம் திருச்சியார் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறார்.

    ///பைபிள், காலத்தை வென்ற நூல். சிலரின் தவறான பிரச்சாரத்தால் அது அழிந்துபோவதில்லை.///

    காலத்தை வென்றது என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? ஏன் அய்யா புலம்புகிறீர். சரி அடுத்தது சொன்னீர்களே உண்மையில் அதை செய்வது இந்துக்களான நாங்கள் அல்ல கிறிஸ்துவர்களே.

  103. அன்பர் கள்ளபிரான் அவர்களே,
    ///You will be surprised to know that Srivaishnavism’s belief is also the same: the Srivaishnavites believe strongly and Azvaars affirm it – that the one and only God is Thirumaal. They don’t, however, go so far as to say that other gods are false. That is because they are within a religion which allow multi-god worship. But they allow such gods and goddesses as attending upon Thirumaal i.e. demigods, goddesses, sub-gods, goddesses, deputy gods, goddesses!///

    விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை அருளிய ஸ்ரீ ராமானுஜ‌ர் ஒரு ஸ்மார்த்த‌ராக‌த்தான் அவத‌ரித்தார். நீங்கள் கூறியவாறு சிவ‌னை இறைவ‌னாக‌ வைஷ்ண‌வ‌ர்க‌ள் ஏற்க‌வில்லை என்ப‌தெல்லாம் பின்னாளில் சில‌ர‌து த‌னிப்ப‌ட்ட‌ கார‌ண‌ங்க‌ளுக்காக ஏற்ப‌ட்டிருக்கிற‌து. இதையெல்லாம் இப்போது பேசுவ‌தும் எழுதுவ‌தும் ந‌ம்மில் பிரிவினை செய்து குளிர் காய்ந்த‌, காய்ந்து கொண்டிருக்கும், காய‌க் காத்திருக்கிற‌ தீய‌ச‌க்திக‌ளுக்குத் தீனி போட்டது போல் ஆகும்.

    பின்னாளில் அவ‌த‌ரித்த, சிவஅத்வைதம் என்ற தத்துவத்தை அருளிய‌ ஸ்ரீ அப்ப‌ய்ய‌ தீஷித‌ரும் கூட‌ ஒரு வைஷ்ண‌வ‌ப் பெண்ணை இறைவன் கட்டளையாலும், அருளாலும், அப்பெண்ணின் தந்தையிடம் இறைவன் அளித்த கட்டளையாலும், ம‌ண‌ம் புரிந்தார்.

    இவ்வாறிருக்க‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ பிரிவினைக‌ளைப் புற‌ம் த‌ள்ளுத‌லே ந‌ம‌து பார‌ம்ப‌ரிய‌த்திற்குப் பாதுகாப்பு. அப்ப‌டிப் புற‌ம் த‌ள்ளாது போனால், “சினிமாக் காமெடிய‌ன்கூட” ந‌ம்மை எள்ளிந‌கையாட‌ ஏதுவாகும்.

  104. //Religious scholars researching this sect (Srivaishnavism) think that this sect comes nearly equal to Islam inasmuch as it insists on MONOTHEISM. The one and only God in Islam is Allah and there is no other God except Allah. In Srivaishanvaism, the one and only God is Mahavishnu and there is no other God except Him.//

    Mr.Kallapiran, can you please give any evidence to this (so called research shcolars quotes)? Even a child can say the difference. Srivaishnavism – though claims Tirumal as the supreme, accepts the reincarnation and prays to the different avatars of Tirumal (dasavatharam). Multiple forms of the same god – which can be extended to Siva or any other god in Hindu philosophy. Can you do the same with Islam? I am not well versed in anything, but still I know that Vaishnavism teaches mainly two modes of bakthi – one of a monkey and other of a cat. Either hold on to Tirumal as a baby monkey sticks to its mother and go with the mother whereever it takes you OR be like a kitten and surrender and leave the rest to Tirumal to handle you. How can you compare this with Islam?

    Today I read the news that the Muslim clerics (40000 + ) in India, in the presence of FM Chidambara, issued a fatwa against singing ‘Vande Mataram’. And you are equating this group with Vaisnavites….My god…your imagination runs real wild. 🙂

    And you say Christians are better than Muslims, because Christians did not harm anyone…are you really serious? Or just arguing for the sake of it.

    Take any issue in the world – Australia Aborigins ethnic clencing, America Red Indians Ethnic clensing, Mayans ethnic clensing, all the civil wars in whole of Africa where one ethnic group fighting with other to gain supremacy, Aryan-Dravidian (Brahmin-NonBrahmin) divide in India, you name it – the background is Christianity and the superiority complex. If bombing is the only criteria for you, then you should also be knowing that the Maoist are funded and supported by Christian Missionaries. Have you forgotten the ‘Crusades’ or the ‘Goa Inquisitions’ or the ‘Jewish Hollocaust’ and the like? Christians are equally bad as Muslims in Harming others. There are few exceptions who are really good people in those religions, but still the majority is bound by their religion that they cannot come out of it.

    Satish

  105. கள்ளப்பிரான் மற்றும் வள்ளுவன் அவர்களுக்கு,
    ஸ்ரீ வைஷ்ணவத்தையும் ஆபிரஹாமிய மதங்களையும் இணைத்து ஒப்பிடுவது பல மேற்கத்திய அறிஞர்களால் உருவான ஒரு பழக்கம். திரு வள்ளுவன் சொன்னது போல் ஸ்ரீ வைஷ்ணவர்கள் சிவனையோ மற்ற தெய்வங்களையோ சாத்தான் என்று சொல்லுவதில்லை.. பார்க்க போனால் பல அழ்வார் பாசுரங்களில் சிவனும் திருமாலும் ஒருவரே என்று பொருள் படும் படியாக உள்ளன…

    தாழ் சடையும் நீள் முடியும்
    ஒன் மழுவும் சக்கரமும்
    சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்
    சூழும் திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
    இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து !

    – பேயாழ்வார் பாசுரம்..

    பின்னும் திருமழிசை அழ்வாரோ “முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்று பாடுகிறார்..

    திரு வள்ளுவன் சொல்லும் வீர வைணவர்கள் எல்லாரும் ஒன்றும் தென்கலை வைஷ்ணவர்கள் மட்டும் அல்ல.. நான் ஒரு தென்கலை வைணவ குடும்பத்தில் பிறந்தவன்.. எங்கள் தாத்தா பாட்டி காலம் முதல் சைவ கோவில்களுக்கு செல்லும் வழக்கம் உள்ளது.. பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் வழக்கமும் எங்களிடையே உள்ளது …சரஸ்வதி பூசையை சரஸ்வதி சிலை வைத்தே கொண்டாடுவோம்.. என்னுடைய வடகலை நண்பர் ஒருவரோ “மறந்தும் புறம் தொழா” குடும்பத்தில் பிறந்தவர்.. அவர் குடும்பத்தில் சரஸ்வதி பூசையை கூட பெருமாளுக்கு செய்யும் வழக்கம்.. ஆக சில ஸ்ரீ வைஷ்ணவ குடும்பங்களில் பிற தெய்வ வழிபாடு செய்யாத வழக்கம் உள்ளது, இது வெறும் தென்கலை வைஷ்ணவர்களோ வடகலை வைஷ்ணவர்களோ செய்வது என்று பொருள் கொள்ள வேண்டாம்..

    ஸ்ரீ வைஷ்ணவத்தை பார்த்தோமானால், ஆச்சார்யர்கள் காலத்தில், பரம் பொருள் ஒன்றே, அது திருமாலே என்று பேசும் வழக்கம் இருந்தது.. அனால் பிற்காலத்தில், எல்லா ஸ்ரீ வைஷ்ணவர்களும் எம்பெருமானை விட எம்பெருமானார் சம்பந்தத்தை பெறுதல் ரொம்ப முக்கியம்… அதாவது எல்லாரும் ராமானுஜ திருவடியை பெறுதல் மிக முக்கியம் என்று அந்த சம்பந்தத்தை பெறுதலே “சமாஸ்ரயணம்” என்னும் சடங்கால் வருவது… இதில் “இராமானுச தாசன்” அல்லது “இராமானுச தாசி” என்று நாமம் கொள்ளுவது ஒரு முக்கியமான அங்கமாக உள்ளது..

    இன்னும் பார்த்தோ மென்றால், ஸ்ரீ வைஷ்ணவர்கள் பகவானை கூட அபசார படலம், அனால் பாகவதர்களை அதாவது இறை அடியார்களை அபசார படுவது மஹா பாவமாக கருத படுகிறது.. ஏன்? அடியார்களையே இறைவனாக கருதுவதும் போற்ற படுகிறது..

    பழுதிலா ஒழுகலாற்று பல சது பேதிமார்கள்
    இழி குலத்தவர்கேலேளும் எம் அடியார்களாகில்
    தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று “நின்னோடும் ஒக்க”
    வழிபட அருளினாய் போலும் மதிள் திரு அரங்கத்தானே !

    மனிதர்கள் சாதியை படைத்தது, உயர்ந்த குளம், தாழ்ந்த குளம் என்று வேறு பாடுகளை உருவாக்கி உள்ளனர், அனால் யார் இறை அடியாரோ அவரை இறைவனே என்று கொள்ளுதல் மிக அவசியம் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சொல்ல படுகிறது…

    அமர்வோர் அரங்கமாரும் வேதமோர் நான்கும் ஓதி
    தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்
    நுமர்களை பழிபராகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே
    அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மாநகருளானே.!

    நாலு வேதங்களை படித்து விட்டோம் என்ற மமதை கொண்டு மற்ற அடியார்களை சாதி வித்தியாசம் பாராட்டுபவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்ற கூறுகிறார் தொண்டரடிபொடி அழ்வார்..

    இப்படி ஸ்ரீ வைஷ்ணவம் பலவகையாக மாறு பட்டு உள்ளது.. ஒரே புத்தகம், நம்பாதவர்கள் நரகம் போவர்கள் என்று கூறும் ஆபிரகாமிய மதங்களுடன் ஸ்ரீ வைஷ்ணவத்தை ஒப்பிடுதல் பெருந்தவறு.. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி இந்த சுட்டியில் காண்க…

    https://vaticanculturation.wordpress.com/2009/08/05/francis-clooney%E2%80%99s-talk-on-his-books-at-chennai-a-vaishnavite-christian-dialogue/

    திரு பிரான்சிஸ் கிளூனீ என்னும் கிறித்துவ மத பாதிரியார் ஸ்ரீ வைஷ்ணவமும் கிறித்துவமும் ஒப்பு செய்யும் ஆராய்ச்சியில் தவறாக சில கருத்துகளை கொண்டுள்ளார்… அன்னை மரியாளும், ஸ்ரீ எனப்படும் மகாலக்ஷ்மியும் ஒரே மாதிரி பார்க்கப்படுவதாக கதைக்கிறார்.. இதை சில ஸ்ரீ வைஷ்ணவர்களும் சரி என்று நம்பி இவரை பேச அழைக்கின்றனர்… இதை பற்றி “ramanuja” yahoogroups – இற்கு நான் அனுப்பிய மின் அஞ்சலை மட்டுறுத்தி விட்டனர்.. என்னத்தை சொல்ல!

  106. Mr Kallapiran and Mr Glady had doubts about this article and wanted proof. They insisted the author on providing the primary source of the his statement.reg Pope and Maanikavazakar. This was duly provided by the esteemed author. Somehow, Pope’s statement had been labelled as a private statement by Mr Kaalpiran and as such, we all should ignore it. With due respect,anyone with the similar reputation of Pope, in Tamilnadu at least, is simply not entitled to this privilage. He was in the public limelight for a long period of time and any view of his, in private or in public, need to be critically exaimined.
    Now, what happened to our friend Mr Glady who insisted and demanded proof from the author but had absconded now? Helloooooo, Mr Gladys, where are you???

  107. ///// எங்கோ பிறந்த ஏசுவை கட்டிக்கொண்டு ஏன் அழுகிறீர்கள். நம்ம கிட்ட இல்லாததா? வெளிநாட்டு மோகம் பக்தியிலுமா நண்பரே! /// – ராம்.

    வெளிநாட்டு மதங்கள் இந்தியாவினுள் நுழைவது காலத்தின் கட்டாயம். இதைப்போலவே வெளிநாட்டுப் பண்பாடும் (cultural aspects).

    அப்போது மிசுனோரிகள் வந்தார்கள். அல்லது அனுப்பப்பட்டார்கள். அது காலத்தின் கட்டாயமல்ல. அது பிறர் தன்முயற்சியால் வந்தது.

    அப்படியே எவரும் அன்று வந்து தங்கள் மதங்களை இந்தியாவில் பரப்பாவிட்டாலும், இன்று அது நிகழ்ந்து விடும்.

    இதற்கு காரணம், தற்கால வளர்ச்சி. Globalisation.

    People travel, migrate, emigrate – not in a few, but in massive groups – for employment, for being pushed out of their country by political governments due to genocide, or ethnic cleansing.

    While the Hindus lament and retaliate the acts of missionaries, they cant overlook the fact of globalisation. In the globalised scenario, what should they do? To hark back upon 18th century and lament the acts of the missionaires?

    Now, the missionaries are just a few. The proselytisation (மதமாற்றம்) is not done by them, but by Indians themselves, who were converted to Islam or Christianity.

    There are many pockets even in TN where Hinduism has not made inroads, as they were fully converted in 18th and 19th Century. They were once Hindus worshipping village gods. But now, they are Christians or Muslims.

    They dont know anything about the Hindu religion; and all that is written about, for e.g., here on gayatri mantra and other nice spots of the religion.

    Take a tour of southern districts and find where the Hindu religionn is practised devotely. You will see more Christians and more Muslims there. The pockets of Hindu religion is in and around the ancient temples. In villages, the people get converted en masse.

    Your lame excuse is: We dont want to propogate our religion. Then, suffer. People know little about your religion, except the stories from the epics that came to them through mass media. This is the stark reality.

  108. Chillsam
    30 October 2009 at 7:49 am

    //காண்கிற சூரிய,சந்திர,நட்சத்திரக் கூட்டங்களையோ கடல் வாழ் ஜீவராசிகளையோ பறவைகளையோ மிருகங்களையோ ஆணையோ பெண்ணையோ அல்லது மற்ற எந்த சிருஷ்டியையோ நமஸ்கரிக்காமல் அவற்றைப் படைத்தவரை ஆராய்ச்சி செய்யும் சுதந்தரத்தை வழங்கியிருக்கிறது//

    அது என்னய்யா – நாங்க எதையோ வணங்க்கிறோம்- இல்லை வணங்காம சும்மா ஒக்காந்து இருக்கோம்.

    இந்த படைத்தவனுக்கு என்னா பிரச்சினை?

    நாங்க போயி, “ஐயா, எங்களைப் படையுங்கள்” என்று கெஞசிணோமா? இல்லையே?

    அப்புறம் என்னாத்துக்கு அதை வணங்கக் கூடாது , இதை வணங்கக் கூடாது என்று பெரிய நாட்டாண்மை கட்டளை எல்லாம்? முதல்ல இந்த படைத்தவன் எங்கே?

    நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?

    யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான் , உருவம் இல்லை நான் சாட்சி குடுக்கிறேன், என்று பீலா விட வேண்டியது.

    அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது.

    அதே வியாதி இசுலாமியருக்கும் ஆனால் அவர்கள் கை குலுக்கிய கடவுளின் பெயர் அரேபிய மொழியிலே இருக்கிறது. அந்தக் கடவுள் தான் ஒரே கடவுள் என்று எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

    இதிலே உண்மை என்னவென்றால், இரு தரப்பாரும் பார்க்கவில்லை.

    யாரோ மூவாயிரம் வருடம் முன்பு கற்பலகையில் கட்டளை எழுதி வாங்கினார் என்று கதையை வைத்து, பார்க்காத கடவுளுக்கு, நான் சாட்சி குடுக்கிறேன் என்று அவ்வளவு அலப்பறை.

    இசுலாமியர் சும்மா இருப்பார்களா? அவர்களும் பார்க்கமலே, சாட்சி – ஆனால் பாசை வேறு “” குபூல் ஹை”‘ என்று சாட்சி குடுப்பார்கள்.

    சரி யார் கடவுள் உண்மையான கடவுள். ஒருவரும் ஒரு கடவுளையும் பார்க்கவில்லை.
    சாராயக் கடையிலே மூக்கு முட்ட குடித்த இருவர் , தெருவிலே தள்ளாடி வரும் போது ஒருவர் அமாவாசை இரவிலே தெரு விளக்கைப் பார்த்து இது சந்திரன் என்று சொல்ல, இன்னொருவர் சூரியர் என்று சொல்வது போல,

    நம்பிக்கை என்னும் போதையிலே விழுந்த இசுலாமியரும், கிருச்துவரும், யூதரும் தங்கள் கற்பனையில் உருவான கடவுள் தான் உண்மையான கடவுள் என்று நிரூபிக்க,

    யார் கடவுள் வலிமையான கடவுள் என்று நாமே தீர்மானிப்போம் என்று “உருவு வாளை” எனக் காட்டு மிராண்டிக் காலத்திலிருந்தே போடப் பட்டுக் கொண்டு வந்த சண்டைகளை காலத்துக் கேற்ப நவீன ஆயுதங்களுடன் செய்கின்றனர்.

    இந்த சண்டையிலே நாமும் கலந்து கொள்ள நமக்கு சுதந்திரம் உண்டு என்பதுதான் இங்கெ இவர்கள் நமக்கு சொல்வது.

  109. rama
    4 November 2009 at 9:52 am
    Mr Kallapiran and Mr Glady had doubts about this article and wanted proof. They insisted the author on providing the primary source of the his statement.reg Pope and Maanikavazakar. This was duly provided by the esteemed author. Somehow, Pope’s statement had been labelled as a private statement by Mr Kaalpiran and as such, we all should ignore it. With due respect,anyone with the similar reputation of Pope, in Tamilnadu at least, is simply not entitled to this privilage. He was in the public limelight for a long period of time and any view of his, in private or in public, need to be critically exaimined.

  110. Kallapiran,

    — Now, the missionaries are just a few. The proselytisation (மதமாற்றம்) is not done by them, but by Indians themselves, who were converted to Islam or Christianity.–

    Do you think these conversion happening on Spiritual ground ? It is the money that converts. We all know where from the money flows. I live in Chennai and I have seen a Month back there are evangelists ( White race ) were staying along with an Indian Family and doing the propaganda. They spoke to a person who is working in my house about money etc..

    I request you not to Compare Srivaishanavism and Christianity. I also know you know the following pasuram from poigai Alwar..

    அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
    உரைநூல் மறை உறையும் கோயில் வரைநீர்
    கருமம் அழிப்பளிப்புக் கையது வேல் நேமி
    உருவம் எரி கார் மேனி ஒன்று.

    Regards
    S Baskar

  111. Kallapiran

    – Your lame excuse is: We dont want to propogate our religion. Then, suffer. People know little about your religion, except the stories from the epics that came to them through mass media. This is the stark reality. —

    Yes you are right. I am also of the same feeling. In my own way I am doing something so that good things about Hinduism reaches people. I also do understand that we are fighting with a Huge Machinery with every possible things at their disposal ( not just Missionaries, I am including the Media and Government of India). I am travelling a lot within Tamilnadu and seeing some change ( though very little ). I hope every one of us join hands and put our effort however small it may be. At the same time we have to also make sure that Goebellistic Probaganda cannot be tolerated and should be given nice replies as some of the friends out here are doing.

    Regards
    S

  112. நண்பர் மாதவன் அவர்களே, நான் ஸ்ரீ வைஷ்ணவத்தைப் பற்றியோ இதர சமயங்களைப் பற்றியோ (கிறித்தவத்தைப் பற்றிக்கூட) தவறாக பேசவில்லையே. நான் பார்த்த எல்லா வீரவைனவர்களும் தென்கலையினராக இருந்ததனால் அப்படிச் சொன்னேன். தவறாக இருந்தால், மன்னிக்கவும்…

    //திரு பிரான்சிஸ் கிளூனீ என்னும் கிறித்துவ மத பாதிரியார் ஸ்ரீ வைஷ்ணவமும் கிறித்துவமும் ஒப்பு செய்யும் ஆராய்ச்சியில் தவறாக சில கருத்துகளை கொண்டுள்ளார்… அன்னை மரியாளும், ஸ்ரீ எனப்படும் மகாலக்ஷ்மியும் ஒரே மாதிரி பார்க்கப்படுவதாக கதைக்கிறார்.. இதை சில ஸ்ரீ வைஷ்ணவர்களும் சரி என்று நம்பி இவரை பேச அழைக்கின்றனர்… இதை பற்றி “ramanuja” yahoogroups – இற்கு நான் அனுப்பிய மின் அஞ்சலை மட்டுறுத்தி விட்டனர்.. என்னத்தை சொல்ல!//

    பிரான்சிஸ் கிளூனீ ஒரு ஏமாற்றுக்காரர். ராபர்ட் டீ நோபிலீயைப் போல கலாசார திருட்டு (inculturation) செய்பவர். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகச்ரனாமத்தைப் போல இயேசு சகச்ரனாமத்தை உருவாக்கியிருக்கிறார் இந்த fraud! எனவே இப்படிப்பட்ட போதகர்களிடம் கவனமாக இருக்கவும்…

    “ஏசுபிரானை இந்துக்கள் வெறுக்கிறார்கள்” என்று கூறி இந்துக்கள் மீது அபாண்டமான பழிபோடும் கிறித்தவர்களுக்கு ஒன்றைமட்டும் சொல்லிக்கொள்கிறேன்..

    மகாவதார் பபஜியை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். ரஜினிகாந்த் அவர்கள் நடித்த ‘பாபா’ என்ற 2002 இல் வெளிவந்த திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். அதில், ரஜினி பபஜியைப் பார்த்து பின்வருமாறு வினவுவர்:-

    “உங்களுக்கு வயசு 2000. ஏசுநாதரே உங்களோட இமயமலையில தங்கியிருக்கிராறு. ஆதி சங்கராசாரியருக்கு நீங்க கிரியா குண்டலினி யோகம் சொல்லிகுடுத்திருக்கீங்க, கபீர் தாசுக்கு நீங்க குரு. இதெல்லாம் உண்மையா??”.

    இந்த திரைப்படத்தை பார்க்கும்போது, இது வெறும் எல்லா மதங்களையும் இழுக்க சொல்லப்பட்ட வசனம் (secular attempt) என்று எல்லோரும் நினைப்பார். ஆனால் இது உண்மையே! பாபாஜியின் வழி வந்த மகான் பரமஹம்ஸ யோகானந்தர் இதையே சொல்லியிருக்கிறார். அதாவது பாபாஜியின் சீடர்களில் ஒருவர் லாஹிரி மகாசயர். அவரது சீடர் யுக்தேஸ்வர் கிரி. அவரது சீடர்தான் இந்த மிக பிரபலமான பரமஹம்ஸ யோகானந்தர். அவர் தனது உலகப்புகழ் பெற்ற நூலான ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ (Autobiography of a Yogi) என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-

    “The Mahavatar is in constant communion with Christ; together they send out vibrations of redemption, and have planned the spiritual technique of salvation for this age. The work of these two fully-illumined masters–one with the body, and one without it–is to inspire the nations to forsake suicidal wars, race hatreds, religious sectarianism, and the boomerang-evils of materialism. Babaji is well aware of the trend of modern times, especially of the influence and complexities of Western civilization, and realizes the necessity of spreading the self-liberations of yoga equally in the West and in the East.”

    மேலும்,
    பாபாஜி லாஹிரி மகாசயரிடம் கூறியதாக யோகானந்தர் எழுதிய வரிகள்:-

    “The Kriya Yoga that I am giving to the world through you in this nineteenth century, is a revival of the same science that Krishna gave millenniums ago to Arjuna; and was later known to Patanjali, and to Christ, St. John, St. Paul, and other disciples.”

    இதேபோன்று சுவாமி விவேகானந்தர் பகவத் கீதைக்குப் அடுத்தபடியாக தனது மனம்கவர்ந்த நூல் என்று சொன்னது எதைத்தெரியுமா? ‘The Imitation of Christ’ என்ற நூலைத்தான்!

    ஒரு இந்து புத்தரை ஏற்றுக்கொண்டான், புத்த மதத்தை அல்ல.
    ஒரு இந்து மகாவீரரை ஏற்றுக்கொண்டான், சமண மதத்தை அல்ல.
    அதேபோல நாங்கள் ஏசுநாதரையும் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அவர் பெயரால் அவருக்குப்பின் சிலர் தொடங்கிய மதத்தை அல்ல.

  113. Chillsam ,kaLLapiraan ,Christian, ashok ,glady அவர்களுக்கு,
    சனாதன தர்மம் என்பது அனைத்து மக்களுக்குமான தர்மம் என்று பொருள்.தர்மம் என்பதுக்கு சரியான வார்த்தை ஆங்கிலத்தில் இல்லாததால்,religion-மதம் என்று மொழி பெயர்த்தார்கள்.சிந்து நதிக்கு கிழக்கே வாழ்ந்த மக்களின் தர்மத்தை (மதத்தை)-சிந்து மருவி ஹிந்து ஆயிற்று -ஹிந்து மதம் என்று அழைத்தார்கள்.

    ஆனால் இது எல்லா மக்களுக்குமான,-உலகம் தழுவிய – மதம்.இதில் எல்லா மதத்தவருக்கும் ,உருவக்கடவுளை,வலிபடுபவர்களுக்கும்,அருவக்கடவுளை வழிபடுபவர்களுக்கும், நாத்திகர்களுக்கும் ,இதில் இடமுண்டு.

    அனைத்து வகையான வழிபாடுகளையும் ஏற்றுக் கொள்கிறது.

    எல்லா மதங்களும் உண்மை,எல்லா மதங்களும் கடவுளை அடையும் வழிகளே என்று ஆணித்தரமாக கூறிய சனாதன தர்மம்.
    அனைவருக்கும் இறைவனை அடையும் வாய்ப்பை தருகிறது.

    ஆனால் உங்கள் மதங்களோ ,என் கடவுள்,என் மதம் மட்டுமே உண்மை,என் மதத்தை,என் கடவுளை,ஏற்றுக்கொள்ளவிட்டால் நிரந்தர நரகம் தான் என்று கூறுகிறது.

    மகாத்மா காந்தி,ராமரை கும்பிட்டதால் அவருக்கு நிரந்தர நரகம் தான் அல்லவா???

    அப்துல் கலாம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறாததால் அவருக்கு நிரந்தர நரகம் தான் அல்லவா?

    அமெரிக்க கண்டத்தில் சமீபத்தில்,இது வரை கண்டறியாத ஒரு மலை வாழ் இனம் ஒன்றை கண்டறிந்தார்கள்.அந்த மலை வாழ்மக்கள் கிறிஸ்துவை அறியாதவர்கள்.அந்த மலை வாழ் மக்கள் அனைவரும் இறந்த பின்,நியாய தீர்ப்பிற்கு பிறகு எங்கு செல்வார்கள்?நிரந்தர நரகத்திற்கா?

    கும்பகோணம் தீ விபத்தில் இறந்த ஒன்றும் அறியாத கிருஸ்தவரல்லாத,இந்து ,முஸ்லிம், பிஞ்சுக் குழந்தைகள்,நியாயத்தீர்ப்பிர்க்கு பிறகு எங்கு செல்லும்???நிரந்தர நரகத்திற்கா???

    என்னே உங்கள் மதம்!!! என்னே உங்கள் கடவுளின் கருணை!!

    மெய் சிலிர்க்குது!!1

  114. naataamai
    3 November 2009 at 9:04 am
    அவரவர் இஷ்டம் போல மாற்றிக் கொள்ளுவதையெல்லாம் வேதம் என்று சொல்லமா,அண்ணா..? அது கதை தானே..?//

    ஒரே கதாசிரியர் பேரிலே பல கதைகள்

    2 Samuel 1:
    3Then David said to him, “From where do you come?” And he said to him, “I have escaped from the camp of Israel.”
    4David said to him, “How did things go? Please tell me.” And he said, “The people have fled from the battle, and also many of the people have fallen and are dead; and Saul and Jonathan his son are dead also.”
    8″He said to me, ‘Who are you?’ And I answered him, ‘I am an Amalekite.’
    9″Then he said to me, ‘Please stand beside me and kill me, for agony has seized me because my life still lingers in me.’
    10″So I stood beside him and killed him, because I knew that he could not live after he had fallen And I took the crown which was on his head and the bracelet which was on his arm, and I have brought them here to my lord.”
    11Then (L)David took hold of his clothes and tore them, and so also did all the men who were with him.
    12They mourned and wept and fasted until evening for Saul and his son Jonathan and for the people of the LORD and the house of Israel, because they had fallen by the sword.
    13David said to the young man who told him, “Where are you from?” And he answered, “I am the son of an alien, an Amalekite.”
    14Then David said to him, “How is it you were not afraid to stretch out your hand to destroy the LORD’S anointed?”
    15And David called one of the young men and said, “Go, cut him down.” So he struck him and he died.
    16David said to him, “Your blood is on your head, for your mouth has testified against you, saying, ‘I have killed the LORD’S anointed.'”

    1 Samuel 31
    2The Philistines overtook Saul and his sons; and the Philistines killed Jonathan and Abinadab and Malchi-shua the sons of Saul.
    3The battle went heavily against Saul, and the archers hit him; and he was badly wounded by the archers.
    4Then Saul said to his armor bearer, “Draw your sword and pierce me through with it, otherwise these uncircumcised will come and pierce me through and make sport of me ” But his armor bearer would not, for he was greatly afraid So Saul took his sword and fell on it.
    5When his armor bearer saw that Saul was dead, he also fell on his sword and died with him.//

    இது போலே அடுக்கிக் கொண்டே போகலாம்

  115. //The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //

    இந்தக் கருத்து, மேலோட்டமாகப் பார்த்தால் இதில் என்ன தவறு என்பது போல தோன்றும். உண்மையில் இந்தக் கருத்தை உடைய பலரும் அமைதியான வாழ்க்கையை நடத்தக் கூடும். அவர்கள் வாழ்க்கை முழுவதும், அமைதியாகவே வாழ்ந்து முடிக்கக் கூடும்.

    அனால் இந்தக் கருத்தை அவர்கள் பிறருக்கு அறிமுகப் படுத்தி விட்டுப் போகிறார்கள்.

    நூறு வருடம் கழித்து இந்தக் கருத்தைப் படிக்கும் ஒருவர், அந்தக் கருத்தை ஆழமாக நம்பும் ஒருவர், பிற மதத்தவர் வணங்கும் தெய்வங்களை இகழ்சியிடன் நோக்க ஆரம்பிப்பார். அது வார்த்தையிலும் வெளி வரும். சகிப்புத் தன்மை இல்லாமல் போய் வெறுப்பு உணர்வு அதிகரிக்கும். அதனால் மோதல், சண்டைகள், இரத்த வெறி உருவாகும்.

    இப்போதே பல சுவிசெகர்கள் தங்களுடைய கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், பிற கடவுள்கள் எல்லாம் போய் என்பதை தங்கள் பிரச்சாரத்தின் முதல் பகுதியாக முக்கிய பகுதியாக வைக்கின்றனர்.

    //The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //

    இந்தக் கருத்து ஒரு உறங்கும் எரிமலை ( Dormant Volcano )போன்றது. எப்போது நெருப்புக் குழம்பை கக்கும் என்று சொல்ல முடியாது. இந்தக் கருத்து பாம்பின் முட்டையை போனறது. வெளியே பார்த்தால் உள்ளே இருக்கும் விஷம் தெரியாது.

    நான் இப்படி எழுதுவது சிலருக்கு மன வருத்தத்தை உண்டு பண்ணக் கூடும். ஆனால் மனிதத்தின் நலம் கருதி இந்த விளக்கத்தை அளிக்க வேண்டி உள்ளோம்.

    //The belief that one’s own God is true and others are false – is not, according to me, condemnable. If a religion believes so, and practices such a dogma without harming others, why do you feel that they should not believe so? //

    இந்தக் கருத்தை எந்த பிரிவினர் பின்பற்றினாலும் அது மனிதத்துக்கு கெடுதலே.

    மனிதத்தின் புனிதம் கருதி நான் பரம சிவன், உமை, விநாயகர், இராமர், seethai, இலக்குவன், அனுமன், குகன், ஜடாயு….. உள்ளிட்ட இந்துக்கள் கடவுளாக கருதுபவர்களையும், அவர்களோடு சேர்த்து கிறிஸ்தவர்கள் கடவுளாக கருதும் இயேசு கிறிஸ்து, மேரி மாதா அகியவரியும் மனப் பூர்வமாக மரியாதை செய்ய தயார். அதைப் போல இசுலாமியரோடு தொழவும் , நோன்பு இருக்கவும் தயார்.

    அதே நேரம் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் தர வேண்டும், இதைக் கூறுவது அடுத்தவரைப் புண்படுத்த அல்ல. உண்மையை அறியும் பாதையை அடைக்காதீர்கள் என்று சொல்ல.

  116. கிறிஸ்துவத்தின் பழைய மற்றும் புதிய பைபிளில் எ.பே 5.2 இல் மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல உங்கள் சொந்தப் புருஷருக்கும்
    கீழ்ப்படியுங்கள்(R) எ.பே.5.23இல் கிறிஸ்து, சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும், மனைவிக்குத் தலையாயிருக்கிறான் அவரே சரீரத்திற்கும்
    இரட்சகராயிருக்கிறார் எ.பே 5.2 இல், (R)ஆகையால் சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்படிகிறது போல மனைவிகளும் தங்களது சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.

    எ.பே 5.33இல் மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக் கடவது என்று
    கிறிஸ்துவம் பெண்ணைப் பக்தியின் பின்னால், கிறிஸ்துவின் வசனங்கள் ஊடாகக் கோருவதன் மூலம் தனது சுதந்திரம் தனது உரிமையை ஆணுக்காக இழக்கக் கோருகிறது ஏன்? ஆணுக்குக் கீழ்ப்படிந்து, மதித்து, பயபக்தியாகப் பெண் நடந்து கொள்ள வேண்டும்?

    இதைப் பெண்ணுக்கு ஆண் ஏன் செய்யக் கூடாது? ஆணாதிக்கத்தைப் பிரதிபலித்தே கிறிஸ்துவ மதம் உருவாகியதை இது காட்டுகிறது.

    தனிச் சொத்துடமையைப் பாதுகாப்பதற்காக பெண்ணின் பாலியல் உறவை ஒழுங்க செய்த பைபிள் இங்ஏனம் கூறுகிறது நீ உன் கணவனோடேயன்றி வேறு ஆடவனோடு படுத்து தீட்டுப் பட்டிருந்தாயின் இந்த சாபமெல்லாம் என் மேல் வரும் சபையிலுள்ள அனைவரும் கண்டு அஞ்சும்படி ஆண்டவர் உன்னை எல்லோருடைய சாபங்களுக்கும் உள்ளாகச் செய்வாராக. அவர் உன் கால்கள் அழுகிப் போகவும், உன் வயிறு வீங்கி வெடித்துப் போகவும் செய்வாராக சபிக்கப்பட்ட தண்ணீர் உன் வயிற்றில் விழவே உன் கருப்பை வீங்கவும் உன்
    தொடைகள் அழுகவும் கடவன். (இலக்கம் 165) பைபிள் பக்கம் 145-இல், 20, 21-ஆம் வரிகள் இப்படிக் கூறுகிறது.

    1860இல் இயற்றப்பட்ட இந்திய விவாகரத்துச் சட்டம், கணவன் தன்னைக் கொடுமை, சித்ரவதை, வன்முறை புரிந்தால் பெண் விவகாரத்து பெறலாம் என்பதை 2001ம் ஆண்டில் தான் ஏற்றுக் கொண்டது வன்முறை இருந்தால் தான் என்ன? அதைத்தானே இயேசு உன்னை அனுபவிக்கும்படி கூறினார் என்பதற்கு இதுவே சான்று.

  117. பாபா படத்து வசனம் எல்லாம் ஆதாரம் ஆகமுடியாது.
    ஏசுவும் பாபாவும் சமகாலத்தவர் என்பது ஆதாரமற்றது.
    ஆதிச‌ங்க‌ர‌ருக்கு பாபா குரு என்ப‌து ஏற்க‌முடியாத‌து. ஆஅதிச‌ங்க‌ர‌ரின் அவ‌தார‌ம் 2500 ஆண்டுக‌ளுக்கு முந்தைய‌து என்ப‌த‌ற்கு க‌ல்வெட்டு, ஓலைச்சுவ‌டி, இல‌க்கிய‌ங்க‌ள் முத‌லிய‌ ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌.
    கிறிஸ்துவுக்கும் பார‌த‌த்துக்கும் எந்த‌வித‌த் தொட‌ர்பும் ஒரு 400‍ஆண்டுக்கு முன்ன‌ர் இருந்த‌து கிடையாது. பார‌த‌த்தில் எந்த‌ முக்கிய‌ நிக‌ழ்வையும் அதுவும் குறிப்பாக‌ ஒரு ம‌த‌ம் அல்ல‌து ச‌ம‌ய‌ம் அல்ல‌து இறைந‌ம்பிக்கை சார்ந்த‌ நிக‌ழ்வையும் இல‌க்கிய‌ங்க‌ளில் பாடல்களாகவோ, இதிஹாசமாகவோ எழுதி வைப்ப‌தையும், க‌ல்வெட்டுக‌ளில் பொறிப்ப‌தையும், க‌ற்சிலைக‌ளாக‌ வ‌டித்து வ‌ழிபாடு செய்வ‌தையும் மக்கள் வ‌ழ‌க்க‌மாக‌க் கொண்டுள்ள‌து உல‌க‌றியும். இவ்வாறான‌ ஆதார‌ம் எதுவும், கிறிஸ்துவைப் ப‌ற்றியோ அவ‌ருட‌ன் பாபாஜி உள்ளிட்டோருக்கான‌ தொட‌ர்பு ப‌ற்றியோ இல்லை. ப‌ட‌ம் ஓடுவ‌த‌ற்காக‌, த‌ன‌து ம‌த‌சார்பின்மையைப் ப‌றைசாற்ற‌ எழுதியதை/ கூறியதை எல்லாம் ஆதார‌மாக‌க் கொள்ள‌க் கூடாது.

  118. இந்த உலகிலேயே ….

    நான் ஒருவன்தான் அறிவாளி, மற்றெல்லாரும் முட்டாள்கள்;
    நான் ஒருவன்தான் நல்லவன், மற்றெல்லாரும் கெட்டவர்கள்;
    நான் ஒருவன்தான் யோக்கியன், மற்றெல்லாரும் அயோக்கியன்கள்;
    நான் ஒருவன்தான் உண்மை பேசுபவன், மற்றெல்லாரும் பொய்யர்கள்;
    நான் ஒருத்திதான் கற்புடையவள், மற்றெல்லாரும் கற்புடையவர் அல்லர்;

    இப்ப‌டியெல்லாம் சொல்வதற்கும்,

    என் க‌ட‌வுள் ம‌ட்டுமே க‌ட‌வுள்; ம‌ற்ற‌தெல்லாம் சாத்தான்க‌ள் ……

    என்று சொல்வ‌த‌ற்கும் எந்த‌ வித்தியாச‌மும் இல்லை.
    என‌வே இப்ப‌டிப் போதிக்கும் எந்த மதமும் /ச‌ம‌ய‌மும், உண்மையைப் போதிக்க‌வில்லை என்ப‌தே உண்மை.

  119. உமாசங்கர் அய்யா, ரஜினியின் செகுலர் வசனத்தை வைத்து மட்டும் நான் அந்த மறுமொழியை எழுதவில்லை… பாபாஜியின் சீடர்களில் ஒருவரான லாஹிரி மகாசயர், அவரது சீடர் யுக்தேஸ்வர் கிரி, அவரது சீடர் பரமஹம்ஸ யோகானந்தர். அவர் எழுதிய “ஒரு யோகியின் சுயசரிதம்” (Autobiography of a Yogi) என்ற உலகப்புகழ் வாய்ந்த நூலிலிருந்தே நான் குருப்பிட்டேன்… ஆதிசங்கர பகவத்பாதர் பாபாஜியை சந்தித்ததாக நானும் சங்கர திக்விஜயத்திலோ வேறுஎந்த நூலிலோ கேள்விப்பட்டதில்லை… ஆனால் பெரும் மகானான பரமஹம்ஸ யோகானந்தர் கூறுவதை ‘பொய்’ என்றும் ஒதுக்கமுடியவில்லை.

    நீங்கள் சொல்வதுபோல ஆதிசங்கரரின் காலம் (788-820 AD) ஆக இல்லாமல் (509-477 BC) ஆக இருந்தால், அவர் நிச்சயம் புத்தபிரானை (550-483 BC) சந்த்தித்திருக்கவேண்டுமே… அப்படி ஏதேனும் குறிப்பு உள்ளதா?

    மேலும், திருஞானசம்பந்தர் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) அன்னை உமையிடம் ஞானப்பால் உண்டதை ஆதிசங்கரர் தங்கள் “சௌந்தர்யலகிரி” இல பதிவு செய்கிறாரே… அது எப்படி சாத்தியம்??

  120. ஐயா வள்ளுவனாரே,

    ///பாபாஜியின் சீடர்களில் ஒருவரான லாஹிரி மகாசயர், அவரது சீடர் யுக்தேஸ்வர் கிரி, அவரது சீடர் பரமஹம்ஸ யோகானந்தர். அவர் எழுதிய “ஒரு யோகியின் சுயசரிதம்” (Autobiography of a Yogi) என்ற உலகப்புகழ் வாய்ந்த நூலிலிருந்தே நான் குருப்பிட்டேன்///

    பாபாஜியைப் பற்றிய சான்று இந்த ஒரு நூல்தான் என்றால், ஏன் இந்த 2000 ஆண்டுகளில் வேறெந்த நூலும் ஏன், ஆதிசங்கரரின் பல்வேறு படைப்புகளில் ஒன்று கூட, பாபாஜியைப்பற்றி எழுதவில்லை?

    அதாவது பாபாஜியைப் பற்றிய ஒரே நூல் தாங்கள் குறிப்பிட்டது மட்டுமே. பாரதத்துக்கே உரித்தான கற்சான்றுகள், செப்புப் பட்டயங்கள், செப்புத் திருமேனிகள் எதுவும் கிடையாது என்பதைத் தாங்கள் கவனத்தில் கொள்க.

    ஆதி சங்கரருக்கும், புத்தருக்கும் சந்திப்பு நிகழ்ந்தே ஆக வேண்டும் என்றில்லை, அப்படியே ஆனாலும், ஒரே ஒரு நிகழ்வின் சரித்திரம் கிடைக்காதது மற்ற ஆதாரங்களை நிராகரிக்கப் போதுமானது அல்ல. மேலும், புத்தரின் காலமும் விவாதத்துக்குறியதாகவே உள்ளது.

    ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் குறிப்பிட்டது திருஞானசம்பந்தரை அல்ல என்று பல ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் உள்ளன.

  121. அன்பர் வள்ளுவன் அவர்களே,

    கௌதம புத்தபிரானின் வாழ்க்கை அண்டுகளைப்பற்றிய ஒரு விவரம் இதோ:

    According to the Pāli historical chronicles of Sri Lanka, the Dīpavaṃsa and Mahāvaṃsa, the coronation of Aśoka (Pāli: Asoka) is 218 years after the death of Buddha. According to one Mahayana record in Chinese (十八部論 and 部執異論), the coronation of Aśoka is 116 years after the death of Buddha. Therefore, the time of Buddha’s passing is either 486 BCE according to Theravāda record or 383 BCE according to Mahayana record. However, the actual date traditionally accepted as the date of the Buddha’s death in Theravāda countries is 544 or 543 BCE, because the reign of Aśoka was traditionally reckoned to be about 60 years earlier than current estimates. (https://en.wikipedia.org/wiki/Buddha)

    விக்கிபீடியாவின் தகவல்கள் சரித்திர ஆதாரமாகாது எனினும் ஒரு ஆராய்ச்சிக்கான தகவலாகக் கொள்ளலாம்.

  122. உமாசங்கர் அய்யா, எனக்கு தெரிந்தவற்றை எழுதுறேன்:-

    //பாபாஜியைப் பற்றிய சான்று இந்த ஒரு நூல்தான் என்றால், ஏன் இந்த 2000 ஆண்டுகளில் வேறெந்த நூலும் ஏன், ஆதிசங்கரரின் பல்வேறு படைப்புகளில் ஒன்று கூட, பாபாஜியைப்பற்றி எழுதவில்லை?//

    பாபாஜி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. ஆயினும், 14 ஆம் நூற்றாண்டில், இலங்கையில் வாழ்ந்த போகர் சித்தரிடம் சீடராக இருந்து, பிறகு அகத்தியமுனிவரிடம் கிரியா யோகம் கற்றவர் என்று கூறப்படுகிறது. இப்படிப்பார்த்தால் ஏசுநாதர் பாபாஜியுடன் சேர்ந்து கிரியா யோகத்தில் ஈடுபட்டிருக்க முடியாது, ஏனெனில் பாபாஜி கற்றதே 14 ஆம் நூற்றாண்டில் என்று கூறப்பட்டுள்ளது. இதைப்பற்றி எனக்கு வேறுஏதாவது விவரம் தெரிந்தால் உங்களுக்கு சொல்கிறேன்…

    //ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் குறிப்பிட்டது திருஞானசம்பந்தரை அல்ல என்று பல ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் உள்ளன.//

    சௌந்தர்யலகிரியில் கூறப்பட்டுள்ள “திராவிட சிசு” இருவரில் ஒருவராகத்தான் இருந்க்கவேண்டும். ஒன்று, ஆதிசங்கரர் தன்னைப்பற்றியே குறிப்பிட்டிருக்கவேண்டும், அல்லது திருஞானசம்பந்தராக இருக்கவேண்டும்.. இவை இரண்டே சாத்தியம். ஆனால், ஆதிசங்கரர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி சங்கர திக்விஜயத்திலோ வேறு ஏதாவது அதிகாரப்பூர்வமான நூல்களிலோ இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அப்படி இல்லைஎன்றால், அது திருஞானசம்பந்தர்தான்…

    ஆதிசங்கர பகவதாதர் வாழ்ந்தது கி.மு.வில் என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான், ஆனால் உண்மையாக இருக்கவேண்டுமே..

    ஆதிசங்கரர்தான் தனி மனிதனாக நின்று பவுத்த மற்றும் சமண மதங்களை வென்றார் என்பதுதான் வலியுருத்தபடுகின்றன.. அப்படியென்றால், அவர் பிறந்தபோது இவ்விரு மதங்களும் இந்தியா முழுக்க பரவியிருக்கேண்டும். 50 ஆண்டுகளில் இந்தியாமுழுக்க பரவுவது சாத்தியமா??

    நீங்கள் சொன்ன தகவல்களுக்கு மிக்க நன்றி, பாபாஜி பற்றி வேறுஏதாவது தெரிந்தால், நான் நிச்சயம் உங்களுக்கு சொல்கிறேன்…

  123. ரொம்ப நல்லவன் மாறி பேச வேண்டியது.

    நல்லவன் மாறி ஆனா நல்லவன் இல்ல.

    நீங்க பாட்டுக்கு “ஒரே கடவுளை” அமைதியா வணங்கிக் கொண்டு இருந்தா, யாரும் உங்களை குறை சொல்லப் போவது இல்லை.

    ஆனால் அந்த கடவுளை எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது. அந்த காட்டு மிராண்டிக் கட்டளைகளுக்கு கீழ் படிய மறுத்தால் கழுத்தை வெட்டுவேன் என்பது, காபிர்கள் என்பது, ஜிஹாத் செய்ய வேண்டும், மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்பது.

    அதற்குப் பரிசாக சொர்க்கத்திலே அழகிய கண்களை உடைய யாரும் தொடாதவர்கள் நம்மை வரவேற்பார்கள் என்பது.

    நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?

    என‌வே யாரும் காணாத‌ ஒரு விசய‌த்தை, அப்படியே ந‌ம்ப‌ வேண்டும் என்று க‌ட்டாய‌ப் ப‌டுத்துவ‌து ஏன்?

    க‌ட‌வுள் இருக்கிற்றாரா என்று ஆராய்ச்சி செய்வதை நீங்க‌ள் அங்கீக‌ரிக்கிறீர்க‌ளா?

    பார்க்காத‌ க‌ட‌வுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத‌ க‌ட‌வுளை இல்லை என்று கூற‌ அனும‌தி இல்லையா?

    க‌டவுள் இல்லை என்று சொல்வ‌தை ஏன் குற்றமாக கருதவேண்டும்?

    யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான், உருவம் இல்லை நான் சாட்சி குடுக்கிறேன், என்று பீலா விட வேண்டியது.

    அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது.

    யூதர்கள் தான் இதை ஆரம்பித்தது. அதே கருத்தை சுவிசெசகர்கள் சுவீகாரம் செய்து கொண்டார்கள்

    அதே வியாதி இசுலாமியருக்கும் பரவியது, ஆனால் அவர்கள் கை குலுக்கிய கடவுளின் பெயர் அரேபிய மொழியிலே இருக்கிறது. அந்தக் கடவுள் தான் ஒரே கடவுள் என்று எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

    இதிலே உண்மை என்னவென்றால், ஒரு தரப்பாரும் கடவுளை பார்க்கவில்லை.

    யாரோ மூவாயிரம் வருடம் முன்பு கற்பலகையில் கட்டளை எழுதி வாங்கினார் என்று கதையை வைத்து, பார்க்காத கடவுளுக்கு, நான் சாட்சி குடுக்கிறேன் என்று அவ்வளவு அலப்பறை.

    சரி யார் கடவுள் உண்மையான கடவுள்? ஒருவரும் ஒரு கடவுளையும் பார்க்கவில்லை!

    சாராயக் கடையிலே மூக்கு முட்ட குடித்த இருவர் , தெருவிலே தள்ளாடி வரும் போது ஒருவர் அமாவாசை இரவிலே தெரு விளக்கைப் பார்த்து இது சந்திரன் என்று சொல்ல, இன்னொருவர் சூரியர் என்று சொல்வது போல,

    நம்பிக்கை என்னும் போதையிலே விழுந்த இசுலாமியரும், கிருச்துவரும், யூதரும் தங்கள் கற்பனையில் உருவான கடவுள் தான் உண்மையான கடவுள் என்று நிரூபிக்க,

    யார் கடவுள் வலிமையான கடவுள் என்று நாமே தீர்மானிப்போம் என்று “உருவு வாளை” எனக் காட்டு மிராண்டிக் காலத்திலிருந்தே போடப் பட்டுக் கொண்டு வந்த சண்டைகளை காலத்துக் கேற்ப நவீன ஆயுதங்களுடன் செய்கின்றனர்.

    வந்தே மாதரம் பாடுவதை கட்டாயப் படுத்தக் கூடாது என்கிறார்கள் அல்லவா,

    அதைப் போல நீங்களும்

    “ஒரே கடவுள் தான்,
    அவரை வணங்க்கித் தான் ஆக வேண்டும்.
    அப்படி வணங்காதவர் மீது ஜிஹாத் போர் நடத்தி அவர்களை கொல்ல வேண்டும்”
    என்பது போன்ற காட்டு மிராண்டி, காம கொடூர கருத்துக்களை குரானில் இருந்து எடுத்து, மற்றவர்களை கட்டளை போடாமல் கட்டாயப் படுத்தாமல் இருங்கள்.

    அப்போது உங்களையும் யாரும் கட்டாயப் படுத்த மாட்டார்கள்.

  124. Hello christian u did your fine job..by explaining the TRUE facts and thats our(christians) job….. They have understood the true one ..either they accept or not, we are not for that .

    But they will know it when the time comes..

    ALL the other one who read this don’t laugh or mock at me and this post but time comes where you all will know.. i am just givin warning that Jesus comes second time

  125. Dear John,

    // i am just givin warning that Jesus comes second time

    Your warning seems as though Jesus is going to come and bring some kinda of epidemic flu with him

    If at all Jesus is going to come and do something good – why warn? is he going to kill all of us (non christians) – if so thanks for preempting

    have you not read the posts (here) that torment the basis of christianity – why are u selectively reading christian posts?

    no one mocks at others here – instead we discuss objectively

  126. my dear….

    jesus is going to come soon.
    he has writen evething in the bible he has writen about you also. ANTI CHRIST your also anti christ.
    anti christ means agains christ.
    one day jesus will judge you, your thinking is not good.
    you have devil action, after death where you will be you know. better you do good thinks before your going to die still your alive i don’t no.
    god will give you good funishment be ready………………

    do good thinks//
    by lawrence
    OMAN……

  127. கிறிஸ்தவர்களின் பலம் வெளிநாடுகளில் இருந்து வருவதை விட உள் நாட்டில் அவர்களுடைய செயல்பாடுகளே அதிகம். நான் ஒரு சங்க karyakartha .ஸ்ரீ குருஜி நூற்றண்டுக்காக வீட்டு தொடர்பு கொண்டபோது ஒரு ஒய்வு பெற்ற வங்கி அதிகாரியை பார்த்தேன், அவர் சொன்னார் ,இப்போது retire ஆஹிவிட்டேன் .இனிமேல் complete ரெஸ்ட்.பேரனுடன் விளையாட இப்போதுதான் நேரம் கிடைத்தது. இதுதான் ஒரு ஹிந்துவின் மனப்பான்மை. ஆனா ஒரு கிறிஸ்தவன் ஒய்வு பெற்றதும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய இப்போதுதான் நேரம் கிடைத்தது என்று சந்தொஷபடுவன். ஒரு கிறிஸ்தவன் தன் வாழ்நாளில் எத்தனை பேரை மாற்ற முடியுமோ அவ்வளவு வேலை செய்கிறான். ஆனால் ஹிந்து கோவிலுக்கு போறதை தவிர வேறு எந்த முறையிலும் ஹிந்துவாக இருப்பதில்லை. இதுதான் மிஹபெரிய ஆபத்து.தனக்கு வரும் ஆபத்தை பற்றி உணராதவநாய் ஹிந்து இருக்கிறான். சங்கம் மட்டுமே காப்பாற்ற முடியும்.

  128. //இனிமேல் complete ரெஸ்ட்.பேரனுடன் விளையாட இப்போதுதான் நேரம் கிடைத்தது//

    இப்படி ஒரு ஹிந்து இருப்பது தவறல்லவே! நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன். பிறர் மகிழ்ச்சியைக் கெடுக்கவும் மாட்டேன் என்று வாழ்வது ஒரு சாதாரண ஹிந்துவின் வாழ்க்கைதானே! ஹிந்து மதமே ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாகவே இருங்கள் என்பதையே வலியுறுத்துகிறது. கூட்டம் சேரவேண்டும் என்று அவசியம் இல்லை. பிறர் வாழ்வில் தலையிட்டு அதை கெடுக்காமல் இருந்தாலே நல்ல ஹிந்துவின் வாழ்க்கை வாழ்ந்ததாக அர்த்தம். ஆனால் கிறிஸ்தவர்கள் ஊழியம் என்ற பெயரில் ஏமாற்றவே செய்கிறார்கள். அப்படி வாழ்வதற்கு இந்துவின் வாழ்வே மேல். முடிந்தால் மற்றவர்களையும் அப்படி வாழச்செய்வோம்.

  129. நான் ஒரு இந்துவாக பிறந்து கிறிஸ்துவத்தை தழுவியவன்.இந்து மதத்தில் சத்தியமே வெல்லும் என்ற வசனம் உள்ளதை நாம் எல்லோரும் அறிவோம்.சத்தியங்கள் வெல்லும் என்று எங்கும் சொல்லப்படவில்லை.சத்தியம் என்பது ஒன்றே.சத்தியங்கள் பல என்று என்று வேதத்திலோ அல்லது புரானகளிலோ இருந்தால் சொல்லவும்.சத்தியம் என்பது ஒன்றே.
    ஆனால் சத்தியம் என்பது எது?அல்லது என்ன? என்பது தான் இன்றைக்கு கேள்வி.

    கிறிஸ்துவன் பைபிள் தான் சத்தியம் என்று சொல்கிறான்
    ஹிந்து வேதம் தான் சத்தியம் என்று சொல்கிறார்.
    இஸ்லாமியன் குரான் தான் சத்தியம் என்கிறார்.

    எல்லா மதமும் அன்பை போதிக்கிறது என்று சொல்கிறது.உண்மையாக வாழ வேண்டும் என்று சொல்கிறது.பிறர் நம்மை துன்பபடுத்தினால் நன்மை செய்யவேண்டும் என்று சொல்கிறது.

    ஒரு இந்துவோ,கிருச்துவனோ,இஸ்லாமியனோ தான் படிக்கின்ற வேதத்தினால் முதலாவது தன குடும்பத்தில், சமூகத்தில், வேலை ஸ்தலத்தில், அன்பையும் உண்மையும் தீமை செய்தவர்க்கு நன்மையையும் செய்து,தான் பின்பற்றுவது மெய்யான சத்தியம் என்று அவனுக்கே(அவன் மனசாட்சிக்கே)முதலாவது நீருபிப்பானாக.பிறகு அவன் செல்வது சத்தியத்தின் வழி என்பது எல்லோரும் அறிவர்.

    சத்தியமே வெல்லும்.

  130. பிணத்தை வைத்துகொண்டு மதத்தை வளர்த்தவன் வெள்ளைக்காரன் மட்டும்தான் . இந்து மதம் எவனாலும் அசைக்கமுடியாது. ஆதிசங்கரர் ராமானுஜர் போன்ற மகான்களால் வளர்க்கப்பட்ட மதம் எங்கள் ஹிந்து மதம் .

  131. விநாயகரை வட நாட்டு கடவுள் என்றவர் எல்லாம் ஏசுவையும் அல்லாவையும் தமிழ் நாட்டு கடவுளாக எப்படி கண்டனரோ? வெட்கம்! வெட்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *