பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!

ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய புளுகுகளையும் வரலாற்றுப் பிழைகளையும், முரண்பாடுகளையும் நாம் பார்த்தோம். இனி அவருடைய வாரிசு மணியம்மையாரின் புளுகுகளையும் மணியம்மையினுடைய மூடநம்பிக்கையையும் ஆராயலாம்.

மணியம்மை கூறுகிறார்:-
”1954 ஆம் ஆண்டு ரங்கூனிலே நடைபெற்ற புத்தர் மாநாட்டிலே கலந்துகொள்ள அய்யா சென்றிருந்தார். நானும் இன்று அமைச்சராக உள்ள ராசாராமும் உடன் சென்றிருந்தோம். உலகப் புத்த சங்கத் தலைவர் மல்ல சேகரா அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம் மதத்தில் தாம் சேர முடிவெடுத்துள்ளதாகக் கூறி தந்தை பெரியாரையும் முஸ்லீம் மதத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அய்யா இந்து மதத்திலே இருந்துகொண்டு அதைச் சீர்த்திருத்த வேண்டுமே தவிர அந்த இழிவுகளை அப்படியே விட்டுவிட்டு மதம் மாறக்கூடாது. அப்படி நீங்கள் மதம் மாறினால் ஏராளமானவர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.”
(விடுதலை 6-1-1976)

அம்பேத்கர் முஸ்லீம் மதத்தில் சேரப்போவதாகச் சொன்னார் என்று சொல்கிறாரே மணியம்மை- இது உண்மையா?

drambedkarஒரு பொழுதும் உண்மையாக இருக்கமுடியாது. ஏனென்றால் அம்பேத்கர் மதமாற்ற அறைகூவல் விட்டவுடனேயே ஹைதராபாத் நிஜாம், முஸ்லீமாக மாறினால் ஒரு கோடி ரூபாயும், ஒரு கல்லூரியும் தருவதாக வாக்களித்தபோது அம்பேத்கர் அதைப் புறக்கணித்தார். அம்பேத்கர் முஸ்லீம் மதத்தை கனவில் கூட நினைத்துப்பார்த்ததில்லை.

அம்பேத்கர் கூறுகிறார்:-
”நான் இஸ்லாம் தழுவியிருந்தால் கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப்பட்டிருக்கும். ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும், ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை”.
(நூல் :- Ambedkar – A Critical study)

முஸ்லீமாக மாறினால் நாடே சீரழிந்து இருக்கும் என்று சொன்ன அம்பேத்கரா முஸ்லீம் மதத்தில் மாறப்போவதாக சொன்னார்? அம்பேத்கர் அப்படி சொல்லியிருக்கமாட்டார் என்பதற்கு மற்றொரு ஆதாரம்–

அ. மார்க்ஸ் என்பவர், ”பெரியார்?” என்ற நூலில் கூறுகிறார்: ”அம்பேத்கர் பவுத்த மதத்தைத் தழுவிய போது நீங்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியலாக இருக்கும் என (பெரியார்) அவருக்கு அறிவுரைத்ததும் இங்கே நினைவு கூறத்தக்கது.”

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியதை அம்பேத்கர் கூறியது என்று சொல்வதுதான் பகுத்தறிவா? அ.மார்க்ஸ் சொல்வது பொய்யாக இருக்கும் என்று சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால் ஆரம்பித்திலிருந்தே ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமுக்கு மாறுவதே சரியானதாகும்,’ என்று பல தடவை கூறியிருக்கிறார்.

இதையும் நம்பாதவர்களுக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரே பதில் சொல்கிறார்–

”நான் அம்பேத்கர் அவர்களைச் சந்தித்போது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டி, “போடு கையெழுத்தை; நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம்” என்றார். நான் சம்மதிக்கவில்லை.”
(விடுதலை 16-2-1959)

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் இந்தக் கூற்றிலிருந்து, அம்பேத்கர் புத்தமதத்துக்கு மாறவேண்டும் என்று சொன்னாரே தவிர இஸ்லாமுக்கு அல்ல என்பது தெளிவாகும். மணியம்மையின் இந்தப் புளுகை எதில் சேர்ப்பது? இதுதான் ஒரு தலைவிக்கு அழகா?

இதைக்கூட விட்டுவிடுவோம். இவர்கள் எதை மூடநம்பிக்கை என்று சொல்லிவந்தார்களோ, அதையே இவர்கள் நம்பினதுதான் வேடிக்கை.

maniammaiyarமணியம்மை கூறுகிறார்:-
”என்ன செய்வது, எதை எழுதுவது, எப்படி நினைப்பது என்பதே புரியவில்லை. மனதை எவ்வளவுதான் திடப்படுத்தினாலும் என்னையும் மீறிச் சில சமயங்களில் தளர்ந்து விடுகிறேன். உடனே அய்யாவின், அந்தப் புன்னதை முகம் என் கண்முன்தோன்றி, ”பைத்தியக்காரி இவ்வளவு தானா நீ! இத்தனை ஆண்டுகள் என்னோடு பழகியும் நான் எடுத்துச் சொல்லி வந்த கருத்துகளை உன்னிடத்திலே காணமுடியவில்லையே!

நீ எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் என் கொள்கையைக் கடைபிடிப்பவளாய் இருக்கப்போகிறாயோ! சாதாரணப் பெண்கள் போலேயே பக்குவமடையாத மனநிலையிலேயே இருக்கிறாயே! என்றாவது ஒரு நாள் எனக்கு இந்த நிலை ஏற்படும். இயற்கையை வெல்ல முடியாது. அப்போது எப்படி நீ இருக்க வேண்டும் என்று எத்தனை முறை உனக்கு உன்மனம் நோகாத வண்ணம் வேடிக்கைப் பேச்சாகவே சொல்லிச் சொல்லிப் பக்குவப் படுத்திவைத்தேன். என் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல், மற்றவர்களுக்கும், உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் நடந்துகொண்டு என் மனத்திற்கு வேதனை தருகிறாயே! என்று சொல்வதுபோல் தோற்றம் அளிக்கும்”.

உடனே நான் ”இல்லை-இல்லை-மன்னித்துவிடுங்கள். உங்கள் வார்த்தையை மீறி இன்று அல்ல, என்றுமே நடக்கமாட்டேன்” என்று மனதால் நினைத்துக்கொண்டு நானே ஒரு சிரிப்பும் சிரித்துக்கொண்டு என் உள்ளத்தை இரும்பைப்போல் கடினமாக ஆக்கிவிடுவேன் அப்போதுதான் என் மனதில் அமைதியும் ஒரு நிறைவும் பெறும்”.
(விடுதலை 4-1-1974)

பகுத்தறிவுவாதியான மணியம்மை கூறுகின்ற இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இந்துமதப் புராணங்களில் ஏராளமாகக் கிடக்கின்றன. அசரிரீ என்ற பெயரில் ஒரு குரல் கேட்கும். அந்த அசரிரீக் குரல், எச்சரிக்கைக் குரலாகவும், அறிவுரைக் குரலாகவும் அல்லது பாராட்டுக் குரலாகவும் இருக்கும். இப்படி அசரிரீ கேட்கும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையும் கூட.

ஆனால் இதில் பகுத்தறிவுவாதிகளின் கொள்கை அல்லது கருத்து என்ன?

அசரிரீக் குரல் தானாகவே கேட்காது. அதுவும் மனிதன் யாருமே இல்லாமல், எந்தவிதக் கருவியும் இல்லாமல் மனிதனைப் போல் பேசுவது என்பது பகுத்தறிவுக்கு முரணானது. இந்த நம்பிக்கை மூட நம்பிக்கையாகும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இப்படி பிரச்சாரம் செய்து வந்த பகுத்தறிவுவாதிகளின் தலைவி மணியம்மை என்ன கூறுகிறார்?

தான் சோர்ந்து இருக்கும் சில சமயங்களில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தனக்கு ஆறுதல் கூறுவதுபோல் தோற்றம் அளிக்கும் என்கிறார் மணியம்மை. இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படி தோற்றம் அளிப்பார்? அப்படியே தோற்றம் அளித்தாலும் பேசுகின்ற மாதிரி குரலுடன் தோற்றமளிக்க முடியுமா? ஒருவர் இறந்தாலும் கூட அவரை நினைக்கும்போது அவருடைய தோற்றம் நம் மனதில் எழும் என்று சொல்லலாம். அது வெறும் எண்ணமே தவிர உண்மை அல்ல என்றும் சொல்லலாம். அப்படியென்றால் உண்மையில்லாத இந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், தோற்றத்திற்கு அல்லது எண்ணத்திற்கு எதற்காக மன்னித்துவிடுங்கள் என்று சொல்ல வேண்டும்? மன்னித்துவிடுங்கள் என்று சொன்னால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன்னித்துவிடுமா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் ஆறுதல் சொல்லியவுடன்தான் மணியம்மைக்கு மனதில் அமைதியும், நிறைவும் பெறும் என்பதுதான் பகுத்தறிவா? எவ்வளவோ ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோழர்கள் மன அமைதியும் நிறைவும் இல்லாமல் திராவிடர்க் கழகத்திலிருந்து பிரிந்து வந்தார்கள். அப்போதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றி மன அமைதியைக் கொடுத்திருக்கலாமே- ஏன் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் அவர்களுக்குமுன் தோன்றவில்லை? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தோற்றம் மன அமைதியை கொடுத்துவிட முடியுமா?

இந்தத் தோற்றமே நம்மால்தான் ஏற்படுகிறது என்று சொல்வார்களானால் அதற்காக மன்னிப்பு எதற்கு? தோற்றமே நம்மால் தான் ஏற்படுகிறது என்கின்றபோது அதற்காக ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் மன அமைதி பெறுகிறது என்று சொல்வது எதற்காக? இதுதான் பகுத்தறிவு மூடநம்பிக்கை என்று சொல்வது! அதாவது பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கை.

அடுத்து-

மணியம்மை கூறுகிறார் :-
”அய்யா அவர்களிடம் சென்று நீங்கள் பயந்துவிட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விடமாட்டேன்.. என்று கூறி அவரை மகிழ்வித்தேன்”
(விடுதலை 4-1-1974)

நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்று மணியம்மை கூறுகிறாரே? இதுவாவது பகுத்தறிவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

இராமர் ஒரு காரணத்திற்காக (இராவணனை கொல்ல) இப்பூமியில் பிறந்தார். கிருஷ்ணர் ஒரு காரணத்திற்காக (கம்சனைக் கொல்ல) பிறந்தார் என்று இந்துக்கள் சொல்லும் போது அதைப் பகுத்தறிவுவாதிகள் கேலி பேசினார்கள்… விமர்சித்தார்கள்… மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்னார்கள்.

இப்படிச் சொன்ன பகுத்தறிவுவாதிகளின் தலைவி மணியம்மை, நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்று சொன்னால் அதுவும் இவர்களின் மூடநம்பிக்கைத்தானேநதான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான் என்றால் இறப்பதும் கூட ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கும். (இது ஆத்திகர்களைப் பொருத்தவரை நம்பிக்கை. ஆனால் பகுத்தறிவுவாதிகளைப் பொருத்தவரை மூடநம்பிக்கை) அப்படியென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கரும், மணியம்மையும் இறந்தது எந்தக் காரணத்திற்காக? மணியம்மை, நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காக என்று சொன்னால் அந்தக் காரணம் என்ன என்று விளக்க வேண்டாமா?

நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காக என்று சொல்லும்போது, ஏதோ ஒரு செயல் புரிவதற்காக, சாகக் கிடந்த நான் மறுபடியும் பிழைத்திருக்கிறேன் என்று பொருள்படுகிறது. ஆனால் இதே கருத்தைத்தானே இந்துக்களும் கர்மா என்ற பெயரில் சொல்கின்றனர்! மக்கள் (தங்கள் வினைப்படி) ஏதோ ஒரு காரணத்திற்காகப் பிறக்கின்றனர். தங்கள் கர்மங்களை ஆற்றுகின்றனர். பின்பு இறக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கர்மக் கொள்கையை எதிர்க்கின்ற மணியம்மைதான் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் பிழைத்ததாகச் சொல்லி மறைமுகமாக கர்மா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏன் இந்த முரண்பாடு? இதுதான் இவர்களுடைய பகுத்தறிவு மூடநம்பிக்கை.

மேலும் மணியம்மை கூறுகிறார்:-
(பெரியார்) அமைதியுடன் நாம் இனி எப்படி நடந்து கொள்கிறோம். கட்டுக்குலையாமல் என்றும் போல் கட்டுப்பாடு, ஒழுக்கம் – உண்மையுடன் இருக்கிறோமா இல்லையா என்று பார்த்துக் கொண்டே இருப்பதற்காக அவரது இல்லத்திலேயே ஓய்வுடன் இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. நம்மை அவர் கவனித்துக் கொண்டுதான் நமது செயலைப்பார்த்துகொண்டு தான் இருப்பார்.
(விடுதலை 4-1-1974)

மணியம்மையினுடைய இந்தப் பேச்சு அவர்களுடைய பகுத்தறிவுப்படி மூடநம்பிக்கையா, இல்லையா?

1973-ல் இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படி 1974-ல் ஓய்வுடன் இருப்பார்? எப்படி கவனித்துக்கொள்வார்?

இறந்தவர்களின் ஆத்மா இவ்வுலகில் இருக்கும். ஒருவருடைய அப்பா அல்லது அம்மா அல்லது வேறு உறவினர்கள் போன்றவர்கள் இறந்தால் அவர்கள் நம்மோடு இருப்பார்கள். நம்மை கவனித்துக் கொள்வார்கள் – என்பது இந்துக்களுடைய நம்பிக்கை.

ஆனால் இதை மூடநம்பிக்கை என்று சொல்லுகின்ற மணியம்மையார் இறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஓய்வுடன் இருக்கிறார். அவர் கவனிப்பார் என்று சொல்லுகிறாரே? அப்படியானால் இதுவும் மூடநம்பிக்கைத்தானே!

இப்படி இவருடைய பகுத்தறிவு மூடநம்பிக்கைக்கு ஏராளமான சான்றுகளைத் தந்துகொண்டே போகலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு சமாதி வைத்தது, ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நினைவுநாள் கொண்டாடுவது போன்ற இவர்களுடைய பகுத்தறிவுக்கு முரணான வகையில் மணியம்மையார் நடந்து கொண்டதை ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடர்களே கண்டித்திருக்கிறார்கள் என்றால் மணியம்மையாருடைய பகுத்தறிவு மூடநம்பிக்கை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நாம் அறியலாம். இந்த அளவுக்கு மூடநம்பிக்கை கொண்டிருந்த மணியம்மையாரும் அவருடைய சீடர்களும் ஆத்திகர்களை மூடநம்பிக்கையாளர்கள் என்று சொல்ல தகுதி இருக்கிறதா?

-தொடரும்…

53 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 19: மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்!”

  1. பெரியாரிடமும் திராவிட இயக்கத்திலும் ஆயிரம் குறைகள் இருக்கின்றன. நீங்களே இஸ்லாம்/புத்த மதம் பற்றி எழுதுகிறீர்கள். அதே நேரத்தில், இறந்த கணவர் எனக்கு ஆறுதல் சொல்கிறார் என்பது சாதாரணமான, தன்னைத் தானே தேற்றிக் கொள்கிற விஷயம். இதை எல்லாம் வைத்து மயிர் பிளக்கும் வேலை (hair splitting) செய்துகொண்டிருக்கிறீர்களே!

  2. //இறந்த கணவர் எனக்கு ஆறுதல் சொல்கிறார் என்பது சாதாரணமான, தன்னைத் தானே தேற்றிக் கொள்கிற விஷயம்.//

    ஓஹோ….அது சரி…அதெல்லாம் பகுத்தறிவில்லாத இந்திய பெண்களுக்கு…ஆனால் அம்மணி மணியம்மை அப்படி செய்யலாமா? ஒரு ஈவெரா போனால் மற்றொரு சோவெரா என ‘வீர’மான ‘மணி’யம்மையாக பகுத்தறிவுவாதியாக வாழ்ந்து காட்டியிருக்கலாமே…ஈவெரா ஸ்டைலிலேயே தனது பேரன் வயதில் எவனையாவது தேர்ந்தெடுத்து குறைந்த பட்சம் சுயமரியாதை திருமணமாவது செய்திருக்கலாமே….இவர்களெல்லாம் பகுத்தறிவு வாதிகளாம்…இவர்கள் கெட்ட கேட்டுக்கு “பெரியார்” என்கிற பட்டம் வேறு ஒரு குறை

  3. உங்களைப் பொன்ற உயர் சாதியினரும் இன்றும் பெரியாரை எதிர்ப்பது ஆச்சரியம் எதுவும் இல்லை.ஆனால் உஙகள் விமர்சனங்கள் உன்மையாக இருக்க வேனண்டும்.இன்னும் நிறைய விவாதிக்கவும்.see the comment of Dr. Ramendra, Reader, Department of Philosophy, Patna College, Patna University…
    (Edited.)

  4. /////RV
    25 October 2009 at 1:05 pm
    பெரியாரிடமும் திராவிட இயக்கத்திலும் ஆயிரம் குறைகள் இருக்கின்றன. நீங்களே இஸ்லாம்/புத்த மதம் பற்றி எழுதுகிறீர்கள். அதே நேரத்தில், இறந்த கணவர் எனக்கு ஆறுதல் சொல்கிறார் என்பது சாதாரணமான, தன்னைத் தானே தேற்றிக் கொள்கிற விஷயம். இதை எல்லாம் வைத்து மயிர் பிளக்கும் வேலை (hair splitting) செய்துகொண்டிருக்கிறீர்களே////

    இறந்த கணவர் ஆறுதல் சொல்லவதை பகுத்தறிவாளர்கள் நம்புவார்களானால் இறந்த தாத்தா, பாட்டி எங்களை ஆசிர்வதிப்பார்கள் என்று நம்பும் ஆத்திகன் எந்த வகையில் மூடன். ஐயாயிரம் வருஷம் முன்னாடி வாழ்ந்து மறைந்து மேலுலகம் சென்ற எனது கிருஷ்ணன் என்னை ஆசீர்வதிப்பானென்று நம்புவது எந்தவகையில் மூட நம்பிக்கை. செத்துப்போனால் அவ்வளவு தானே. அவன் சகாப்தம் முடிந்தது தானே. பிறகு அவன் எப்படி பேசமுடியும், ஆறுதல் சொல்ல முடியும். என்னப்பா ஆத்திகன் செஞ்சா மூடத்தனம், இந்த கோஷ்டிக்காரங்க செஞ்சா பகுத்தறிவா? இத நம்ப பெரிய கூட்டம் வேற இந்த நாட்டுல.

  5. மிக அருமையான ஆராய்ச்சி… பெரியாரின்(?)புளுகு இப்போது தான் வெளிவருகிறது.பாராட்டுகள்
    ஆறுமுகம் தர்மபூபதி, பொள்ளாச்சி

  6. சந்தானம் அவர்களே,

    //உங்களைப் பொன்ற உயர் சாதியினரும் இன்றும் பெரியாரை எதிர்ப்பது ஆச்சரியம் எதுவும் இல்லை.ஆனால் உஙகள் விமர்சனங்கள் உன்மையாக இருக்க வேனண்டும்.இன்னும் நிறைய விவாதிக்கவும்.see the comment of Dr. Ramendra, Reader, Department of Philosophy, Patna College, Patna University…
    (Edited.)//

    ————————————–

    ஒருவன் பெரியாரையும் அவர்செய்த பகுத்தறிவையும் (திருத்தம் மூடநம்பிக்கையும்) எதிர்த்தால் அவர் உயர்சாதியினர் என்று அர்த்தமா?
    இந்த நூலுக்கு திரு.வெங்கடேசன் எழுதிய முன்னுரையை முதலில் படித்துவிட்டு பிறகு என்ன உலரவேண்டுமோ உளறுங்கள்.
    இவ்வளவு மூடநம்பிக்கையை வைத்துக்கொண்டு இன்னமும் எப்படி உங்களால் பேசமுடிகிறது??

    திரு.வெங்கடேசன் அவர்களே, மேலும் பூந்து விளையாடுங்கள்!!

  7. வணக்கம்,

    ///பெரியாரிடமும் திராவிட இயக்கத்திலும் ஆயிரம் குறைகள் இருக்கின்றன. நீங்களே இஸ்லாம்/புத்த மதம் பற்றி எழுதுகிறீர்கள். அதே நேரத்தில், இறந்த கணவர் எனக்கு ஆறுதல் சொல்கிறார் என்பது சாதாரணமான, தன்னைத் தானே தேற்றிக் கொள்கிற விஷயம். இதை எல்லாம் வைத்து மயிர் பிளக்கும் வேலை (hair splitting) செய்துகொண்டிருக்கிறீர்களே!///

    அதைப்போலவேதான் வேதனை மிகுந்த மனிதர்கள் தன் மன வேதனையை தெய்வம் அறிவதாக ஆறுதல் கொள்கிறான்.
    அதைத்தானே மூட நம்பிக்கை என்று மயிர் பிளக்கும் வேலையாக, அல்ல மனிதனயே பிளக்கும் வேலையை செய்து, இன்று மக்களை மீண்டும் ஆதிவாசிகளாக்கப் பார்த்தார் நாயக்கர்.

  8. @ sri. RV,
    Your words are meaningful. At outset, it looks like the petty things were blown up.

    However, Moneyammai writing things in magazines is not the same as thinking for a moment. When you write something, it is not anymore accidental, but a clear cut thought process. When Moneyammai wrote these things, she must have clearly agreed that she was in hallucination of her dead husband appearing and talking Or it must have happened truly. On the later case, she should have done ‘Thivasam’ to avoid that. On the farmer case too, she and EVR lost locus standi to comment as barbaric about people to who god appears in front. When EVR could appear, young Krishna and Muruga can appear too.

    thanks,
    kargil Jay

  9. பெரியாறோ, அம்பெத்கரோ அவரவர் கருத்து அவருக்கு, மனிதன் என்ற அடிப்படையில் இறைவன் அனைவருக்கும், நல்ல சிந்திக்கும் ஆற்றலை கொடுத்துள்ளான். அதை கொண்டு சிந்தித்தால் தெரியும் எது சிறந்தது என்று இறைவன் யார்? அவன் எப்படிப்பட்டவன், அவன் தன்மைகள் இவற்றை மனிதன் தானாக அறிந்து கொள்ள முடியாது எனவே தான் அவன் ஒரு தூதரை அனுப்பி அவன் வள்ளமையை உணர்த்தினான் அதை புரிந்து நடப்பவருக்கு சொர்க்கம் இல்லையென்றால் நரகம்.

  10. லவ் ஹிஜாத் என்றொரு இயக்கம் கேரளத்தில் செயல்படவில்லை” என கேரள டி.ஜி.பி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  11. நடுநிலையுடன் சிந்தித்து எழுதுங்கள் இஸ்லாமியர்களோ, இந்துக்களோ, கிரிஸ்த்தவர்களோ, யாராக இருந்தாலும், தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

  12. திரு ram அவர்களின் பதில் நேத்தியடி
    நல்ல கட்டுரை

  13. தோழர் தங்கதுரை அவர்களே,

    //நடுநிலையுடன் சிந்தித்து எழுதுங்கள் இஸ்லாமியர்களோ, இந்துக்களோ, கிரிஸ்த்தவர்களோ, யாராக இருந்தாலும், தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும்.//

    இதை இந்திய அரசாங்கத்திற்கும் சொல்வீர்களா? ஏனெனில் முகமதியர்களுக்குப் போனால் உயிரு, இந்துக்களுக்குப் போனால் மயிறு என்று இருப்பவர்களிடம் என்ன சொல்வது! என்ன செய்வது! இத்தாலிய சாபம் இந்தியாவின் மீது!!!

  14. மயிர் பிளப்பதற்கு(Hair splitting) இவ்வளவு ஆதரவா? சரி என் பங்குக்கு நானும் கொஞ்சம் மயிர் பிளந்து ஜோதியில் ஐக்கியம் ஆகிவிடுகிறேன்.

    என் பிள்ளை வெளியூருக்கு போயிட்டான், ஆனால் என் கண்ணிலேயே நிற்கிறான் என்று யாராவது சொன்னால், அது எப்படி, hallucination! டாக்டரைப் பார்க்கப் போ என்று யாராவது சொல்வீர்களா என்ன? என் புருஷன் செத்துட்டாரு, ஆனால் இன்னும் எங்கிட்ட பேசற மாதிரியே இருக்கு என்று சொன்னால் அது ஒரு figure of speech. அவருடைய நினைவு அப்படியே இருக்கிறது என்பதை சொல்லும் ஒரு முறை. அதை literal ஆக பொருள் கொண்டால் எப்படி? Kicked the bucket என்றால் பக்கெட்டை உதைக்கலியே, பொய் சொல்றியே என்றா குறை சொல்வீர்கள்?

    பெரியாரின் கருத்துகள் மீது உருப்படியாக ஏதாவது விமர்சிக்கலாமே? அதை விட்டுவிட்டு ஒன்றும் இல்லாத விஷயத்தை ஊதுவானேன்? Making a mountain out of a molehill என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; இங்கே molehill இல்லை, mole-pebble கூட இல்லை.

  15. @Thangadurai,
    You are cooking up things with some plans in shadow. While DGP has mentioned there is no moment by name ‘Love Jihadi’, he clearly mentioned there has been moments to ‘cheat-love-convert’ and foreign money is flowing to encourage forced wedding conversion to Islam. What you are trying to hide is ‘Love Jihadi’ is there, but with different name.

  16. Mr Thangadurai, where is the proof that God sent prophet JC to earth? All unverfiable statements. Also, why god should punish anyone with eternal hell? Is He that cruel? Your muddled up thinking is of a man who had been brain washed to the core. Think and use your intelligence. Think why God, the all forgiving compassionate,person should invent a place called “eternal hell” The theory of hell and heaven does not add up to me.

  17. //என் பிள்ளை வெளியூருக்கு போயிட்டான், ஆனால் என் கண்ணிலேயே நிற்கிறான் என்று யாராவது சொன்னால், அது எப்படி, hallucination! டாக்டரைப் பார்க்கப் போ என்று யாராவது சொல்வீர்களா என்ன? என் புருஷன் செத்துட்டாரு, ஆனால் இன்னும் எங்கிட்ட பேசற மாதிரியே இருக்கு என்று சொன்னால் அது ஒரு figure of speech. அவருடைய நினைவு அப்படியே இருக்கிறது என்பதை சொல்லும் ஒரு முறை. அதை literal ஆக பொருள் கொண்டால் எப்படி? Kicked the bucket என்றால் பக்கெட்டை உதைக்கலியே, பொய் சொல்றியே என்றா குறை சொல்வீர்கள்?//

    ————————

    RV அவர்களே,
    இதையே தான் நானும் கேட்கிறேன். ரிக் வேதத்தில் இடி, மின்னலுக்கு பொறுப்புள்ள இந்திரன், மழை பெய்யாமல் தடுக்கும் விரோச்சணனை வீழ்த்தினான் என்றால், மழை பெய வைப்பது இயற்க்கை. ஆகவே, மக்கள் நலனுக்காக, இந்திரன் மழை பெய வைத்தான் என்று இருக்கும் வரிகளை, ஆரிய மன்னன் இந்திரன் திராவிட மன்னனான விரோசனன் மீது படையெடுத்து கொன்றான் என்று உளரும் மூடர்களுக்கு என்ன சொல்வீர்கள்?? மேலும், இராவணனுக்கு நான்கு வேதங்களிலும், ஆறு உபநிடதங்களிலும் இருந்த அபார அறிவு பத்து ஞானிகளுக்கு சமமானவன் (4+6=10) என்று சொல்லும்போது, பத்துதலை இல்லையே இன்று நீங்கள் உளறவில்லையா??

    பகுத்தறிவுவா(ந்)தி என்று கூறிக்கொண்டு மூடநம்பிக்கைகளை கடைபிடித்த மணியம்மையின் சொற்களை நீங்கள் நியாயப்படுத்தினால், வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும் இருக்கும் குறிப்புகளை நாங்கள் நியாயப்படுத்துவதில் என்ன குற்றம் கண்டீர்??

  18. என்னய்யா இது சின்ன புள்ளதனமான விமர்சனம்!?இதை பாராட்டுவதற்கென்று ஒரு கூட்டம் வேறு!!!
    சரி மூட நம்பிக்கை மணியம்மையிடம் இருந்தாலும் சரி பெரியாரிடம் இருந்தாலும் சரி அது மூட நம்பிக்கை தான்.பெரியார் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள அவர் ஒன்றும் கடவுள் அல்லவே!!!???
    அவரே சொல்லியிருக்கிறார் நான் சொல்வதை பகுத்தறிவை பயன் படுத்தாமல் அப்படியே நீங்கள் ஏற்றுக்கொண்டால் நானும் கடவுளாக்கப்படுவேன் என்று…
    சரி நாங்கள் இந்த விடயத்தில் மணிம்மையை மூட நம்பிக்கை வாதி ஏற்றுக் கொள்கிறோம்,இதே அளவில் நீங்களும் கடவுளர்களாக சொல்லப் படுபவர்களையும் ஏற்றுக்கொள்ள உங்களுக்கு தெளிவு இருக்கிறதா?

    (Comment edited & published)

  19. //லவ் ஹிஜாத் என்றொரு இயக்கம் கேரளத்தில் செயல்படவில்லை” என கேரள டி.ஜி.பி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.//

    Dear Mr.Tangadurai,

    How long you people will be feeding half baked news to fool people. Please read the following news…

    https://news.rediff.com/report/2009/oct/26/hc-dissatisfied-with-dgps-report-on-love-jihad.htm

    Dont spread half baked news like our ‘sickular’ politicians.

    Regards,
    Satish

  20. RV,
    //என் பிள்ளை வெளியூருக்கு போயிட்டான், ஆனால் என் கண்ணிலேயே நிற்கிறான் என்று யாராவது சொன்னால், அது எப்படி, hallucination! டாக்டரைப் பார்க்கப் போ என்று யாராவது சொல்வீர்களா என்ன?//

    அப்படித்தான் சொல்லிவந்தார்கள் திகவினரும், பெரியாரும்.

  21. ஐயா ம வெங்கடேசன் அவர்களே!

    பெரியாரைப் பற்றி நீங்கள் இன்னும் சரியாகப் படிக்கவில்லை போல் தெரிகிறது. முதலில் அதை செய்யுங்கள்.

  22. @ Sri RV,
    She did not say in the manner you claim.

    //என்று பார்த்துக் கொண்டே இருப்பதற்காக அவரது இல்லத்திலேயே ஓய்வுடன் இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. நம்மை அவர் கவனித்துக் கொண்டுதான் நமது செயலைப்பார்த்துகொண்டு தான் இருப்பார்.// IS NOT SAME AS //என் பிள்ளை வெளியூருக்கு போயிட்டான், ஆனால் என் கண்ணிலேயே நிற்கிறான் // …

    In the former action of ‘watching’ is performed by the person not physically presence. In the later example you gave, the person absent is not performing any action. To be blunt, your example is an idiom and inappropriate where as what Moneyammai told is not idiom, but against her ideology. The author tries to point out that.

    But then, I agree that, if the author points out petty things, the effect of hits in the bulls eye will become less.

  23. //என்னய்யா இது சின்ன புள்ளதனமான விமர்சனம்!?இதை பாராட்டுவதற்கென்று ஒரு கூட்டம் வேறு!!!
    சரி மூட நம்பிக்கை மணியம்மையிடம் இருந்தாலும் சரி பெரியாரிடம் இருந்தாலும் சரி அது மூட நம்பிக்கை தான்.பெரியார் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள அவர் ஒன்றும் கடவுள் அல்லவே!!!???//

    தலைவா, உங்களுக்கு ஏன் குத்துது? நீங்கள் சொன்னதே உங்களுக்கு சொல்கிறேன், “உண்மை எப்போவுமே கசக்கும்”.

    //அவரே சொல்லியிருக்கிறார் நான் சொல்வதை பகுத்தறிவை பயன் படுத்தாமல் அப்படியே நீங்கள் ஏற்றுக்கொண்டால் நானும் கடவுளாக்கப்படுவேன் என்று…//

    இதை சொன்னது பெரியார் இல்லை, பகவான் புத்தர் ஆவார்!

    //சரி நாங்கள் இந்த விடயத்தில் மணிம்மையை மூட நம்பிக்கை வாதி ஏற்றுக் கொள்கிறோம்,இதே அளவில் நீங்களும் கடவுளர்களாக சொல்லப் படுபவர்களையும் ஏற்றுக்கொள்ள உங்களுக்கு தெளிவு இருக்கிறதா?//

    சரி, எந்த கடவுளிடம் மூட நம்பிக்கை உள்ளது என்று சுட்டிக்காட்ட முடியுமா?? மணியம்மையை மூடநம்பிக்கைவாதி என்று ஏற்றுக்கொண்டால், தலைவியே மூடநம்பிக்கைவாதி என்றால், தொண்டர்கள் எப்படி??

    //பெரியாரைப் பற்றி நீங்கள் இன்னும் சரியாகப் படிக்கவில்லை போல் தெரிகிறது. முதலில் அதை செய்யுங்கள்.//

    இரா.சிவா அவர்களே, ம.வெங்கடேசன் அவர்கள் ஆராய்ந்து எழுதியதைப்போல வேருயாரும் ஆராய்ந்திருக்க மாட்டார்கள். நீங்கள்தான் உண்மையில் பெரியாரைப்பற்றி சரியாக படிக்கவில்லை.
    அவர்காட்டிய ஆதாரங்கள் பெரியார் கைப்பட எழுதிய நூல்களிலிருந்தே உள்ளன! பிறகு, பெரியாரைப் பற்றி படிக்க பல்கலைக்கழகத்தில் பட்டமா உண்டு??

  24. ///அவரே சொல்லியிருக்கிறார் நான் சொல்வதை பகுத்தறிவை பயன் படுத்தாமல் அப்படியே நீங்கள் ஏற்றுக்கொண்டால் நானும் கடவுளாக்கப்படுவேன் என்று…///

    திரு மில்டன்,

    அதே போல தான் ராமசாமியாருக்கு முன்னாடியே பகவத் கீதையில் ஸ்ரீ க்ருஷ்னரும் சொல்லியிருக்கிறார் அர்ஜுனனைப்பார்த்து. அர்ஜுனா நான் சொல்வதை நீ அப்படியே எடுத்துக்கொள்ளாமல் உனக்கு எது அறிவென்று உணர்கிறாயோ அதன் படி நட என்று.

    அதனால் எங்கள் கடவுளர்களும் பகுத்தறிவுவாதிகளே!

  25. வள்ளுவன் அவர்களே,முதலில் நீங்கள் பெயர் மாற்றம் செய்து கொண்டு வந்தால் நல்லது!?
    சரி அதை விடுங்கள்,உங்களின் மற்ற பதிலுரைக்கு நானும் மறு பதிலளித்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

    நீங்கள் குறிப்பிட்ட ஒரே வாக்கியத்தை[சரி, எந்த கடவுளிடம் மூட நம்பிக்கை உள்ளது என்று சுட்டிக்காட்ட முடியுமா?? ] எடுத்துக் கொண்டு,அதற்கான பதிலை ஆதாரத்துடன் உங்களின் புராண,இதிகாச மேற்கொள்படியே கூற விழைகிறேன்

    (comment edited&published)

  26. இங்கெ சிந்தனையாளர் ம. வெங்கடேசன் ஆதாரங்களோடும் , புள்ளி விவரங்களோடும் நடந்தவற்றை விளக்குகிறார். அவர் பெரியாரை இகழ்ச்சியாக எதுவும் எழுதவில்லை.

    அதற்க்கு இங்கெ சிலர் குய்யோ, முறையோ என்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது.

    பெரியாரோ சகட்டு மேனிக்கு வள்ளுவர் , கம்பர் , காந்தி என எல்லோரையும் சிறுமைப் படுத்தி எழுத தயங்கவில்லை. அவர் எழுதியதை ரசித்து படித்து விட்டு இங்கெ வந்து ஒப்பாரி வைப்பது ஏன்?

    பெரியாரின் கருத்துக்களில் சில முக்கியமானவைதான். அவை நமக்கு உபயோகப் படும்.

    பெரியாருக்கு தமிழாக வரலாற்றிலே ஒரு இடம் உண்டு அதை குடுப்போம். ஆனால் பெரியாரை ஒரு சித்தர் போலவோ, புத்தர் போலவோ ஒரு ஒளி வட்டத்தைப் போடாமலேயே ஆனால் போட்ட ரேஞ்சுக்கு சித்தரிப்பது நடக்கிறது.

    அவர் பேரை வைத்து சிலர் பில்லியனர் ஆகி விட்டனர்.

    பெரியார் பேரை வைத்து இன்னும் சொத்து குவிக்க அவருக்கு எக்ஸ்ட்ரா பில்டப் குடுத்துப் பார்க்கின்றனர்.

    அதே போல பெரியாரை கேடயமாக வைத்து மதமாற்ற வேலையைக் கச்சிதமாக செய்து வயிறு வளர்க்கும் கூட்டமும் உள்ளது.

    அய்யோ எங்க பெரியார் என்பார்கள்.. ஆனால் கடவுள் இல்லை என்று சொல்ல முடியுமா என்றால், பின் வாங்குவார்கள், ஒரே கடவுள் என்பாபார்கள், அவர் மட்டும் தான் ஜீவனுள்ள கடவுள் என்பார்கள், நேற்றுதான் பார்த்தேன் என்பார்கள், நான் சாட்சி குடுக்கிறேன் என்பார்கள்.

    இந்த ரவுசுக்காகத்தான் பெரியார் கடைசி வரை வேறு மதங்களுக்கு தன்னை அடிமைப் படுத்திக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ இல்லை.

    பகுத்தறிவு என்று வார்த்தைக்கு இடம் கொடுக்கும் ஒரே மார்க்கம் எது என்று பெரியாருக்கு நன்றாகத் தெரியும். தன கையிலிருக்கும் சரக்கை பகுத்தறிவு லேபில் ஒட்டி விற்க வாய்ப்பு அளிக்கும் மார்க்கம் எது எனபதை அவர் அறிந்து இருந்தார்.

    கடவுள் இல்லை என்று கூறினால் கழுத்தை அறுத்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நீதி மன்றத்திலே நீதிபதிகளே தீர்ப்பு வழங்கும் அளவுக்கு, காட்டு மிராண்டிக் முறைகள் இந்த உலகத்தில் இருப்பது பெரியாருக்கு தெரியும்.

    அதனால் தான் தன்னை இழுக்கப் பார்த்த பலருக்கும் டாட்டா காட்டி விட்டார் பெரியார்.

    அதே பெரியாரைக் கேடயமாக வைத்தே அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு ஆப்பு வைக்கப் பார்த்தால் நடக்குமா?

  27. வள்ளுவன்,

    சரி இன்னும் கொஞ்சம் மயிர் பிளப்போம்.

    // ிக் வேதத்தில் இடி, மின்னலுக்கு பொறுப்புள்ள இந்திரன், மழை பெய்யாமல் தடுக்கும் விரோச்சணனை வீழ்த்தினான் என்றால், மழை பெய வைப்பது இயற்க்கை…//
    செத்துப் போன புருஷன் இன்னும் என் கூட பேசற மாதிரியே இருக்கு என்பது figure of speech. மணியம்மை மட்டுமில்லை, பல குடும்பங்களில், பல நாடுகளில் பயன்படுத்தி கேட்டிருக்கிறேன். மழை பெய்யாமல் தடுப்பது என்ற figure of speech -ஐ என் வாழ்க்கையில் இது வரையில் கேட்டதில்லை. நீங்கள் கேட்டிருந்தால் சொல்லுங்கள்.

    ஆரிய இந்திரன் திராவிட விரோச்சணனை வீழ்த்தி மழை பெய்ய வைத்தான் என்ற கதையை கேட்ட மாதிரி இல்லை. நீங்கள் விருத்திராசுரனை சொல்கிறீர்களோ? விரோசனன் மகாபலியின் அப்பாவோ?

    // இராவணனுக்கு நான்கு வேதங்களிலும், ஆறு உபநிடதங்களிலும் இருந்த அபார அறிவு பத்து ஞானிகளுக்கு சமமானவன் (4+6=10) என்று சொல்லும்போது, பத்துதலை இல்லையே இன்று நீங்கள் உளறவில்லையா??//
    இப்படி ஒரு விளக்கம் இது வரை கேட்டதில்லை.
    சரி அப்படியே “உளறினார்” என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர் உளறியது இங்கே பலரும் உளறுவதை நியாயப்படுத்துகிறது என்றா? இங்கே இருப்பது உளறல் என்றால் அவர் உளறினார், இவர் உளறினார் என்பது என்ன விதமான வாதமோ? கலைஞர் வியாதி எல்லாருக்கும் தொத்துகிறார் போல இருக்கிறது.

    // பகுத்தறிவுவா(ந்)தி என்று கூறிக்கொண்டு மூடநம்பிக்கைகளை கடைபிடித்த மணியம்மையின் சொற்களை நீங்கள் நியாயப்படுத்தினால், வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும் இருக்கும் குறிப்புகளை நாங்கள் நியாயப்படுத்துவதில் என்ன குற்றம் கண்டீர்??//
    Figure of speech-க்கு எந்த வித நியாயப்படுத்தலும் தேவை இல்லை. அதனால் மணியம்மையின் சொற்களை நான் நியாயப்படுத்துவதாக எனக்கு தோன்றவில்லை. அதுதான் சொன்னேனே, இங்கே மயிர் பிளக்கும் வேலைதான் நடக்கிறது.
    எனக்கு வேதம் தெரியாது. நியாயப்படுத்த வேண்டிய கருத்து அதில் ஏதாவது இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் நியாயப்படுத்தினால், அது சரி என்று எனக்கும் பட்டால், சரி என்று சொல்ல ஒரு தயக்கமும் இல்லை. அது தவறு என்று பட்டால் அதை தவறு என்று சொல்லவும் ஒரு தயக்கமும் இல்லை.

    மகாபாரதத்தை உலகின் தலை சிறந்த இலக்கியமாக கருதுகிறேன். சீதை, வாலி, கர்ணன், ஏகலைவன் போன்ற நிகழ்ச்சிகளை நியாயப்படுத்துவது நடவாத காரியம்.

    கார்கில் ஜே,
    மேலும் மேலும் மயிர் பிளக்கிறீர்கள். செத்துப் போன புருஷன் என்கிட்டே பேசற மாதிரியே இருக்கு என்பது சாதாரணமாக பயன்படுத்தும் figure of speech. என் கண்ணிலேயே நிற்கிறான், என் கிட்ட பேசற மாதிரியே இருக்கு இவை எல்லாம் சாதாரண பேச்சில் வருபவை.

    // if the author points out petty things, the effect of hits in the bulls eye will become less.//
    மிக சரி. முழுமையாக உடன்படுகிறேன். இங்கே petty thing கூட இல்லை, அதுதான் பிரச்சினை. இந்த தளத்தில் பெரியாரை குறை சொல்லாவிட்டால் திருப்தி ஏற்படுவதில்லை என்பது மாதிரி இருக்கிறது. பெரியசாமி தூரன் பற்றி ஒரு பதிவு படித்தேன். அங்கேயும் ஈவேராவை பெரியார் என்பது தவறு, தூரனைத்தான் பெரியார் என்று சொல்ல வேண்டும் என்று ஒரு பாரா வருகிறது. நாளை உருப்படியாக விமர்சனம் எழுதினாலும் அது சந்தேகமாகத்தான் பார்க்கப்படும். தமிழ் ஓவியா பெரியாரை சுற்றி ஒரு ஒளி வட்டம் எழுப்பப் பார்க்கிறார். இந்த தளம் opposite extreme-க்கு போகிறதோ என்று தோன்றுகிறது.

  28. முதலில் திரு.RV, பிறகு திரு.மில்டன்.

    //ஆரிய இந்திரன் திராவிட விரோச்சணனை வீழ்த்தி மழை பெய்ய வைத்தான் என்ற கதையை கேட்ட மாதிரி இல்லை. நீங்கள் விருத்திராசுரனை சொல்கிறீர்களோ? விரோசனன் மகாபலியின் அப்பாவோ?//

    நீங்கள் ஒழுங்கான எதைத்தான் கேள்விப்பட்டிருக்கீர்கள்? இன்னொரு தளத்திலிருந்து குறிப்பிடுகிறேன். தவறாமல் படியுங்கள்:-

    “The voluminous references to various wars and conflicts in Rigveda are frequently cited as the proof of an invasion and wars between invading white-skinned Aryans and dark-skinned indigenous people. Well, the so-called conflicts and wars mentioned in the Rigveda can be categorized mainly in the following three types:

    A. Conflicts between the forces of nature: Indra, the Thunder-God of the Rig Veda, occupies a central position in the naturalistic aspects of the Rigvedic religion, since it is he who forces the clouds to part with their all-important wealth, the rain. In this task he is pitted against all sorts of demons and spirits whose main activity is the prevention of rainfall and sunshine. Rain, being the highest wealth, is depicted in terms of more terrestrial forms of wealth, such as cows or soma. The clouds are depicted in terms of their physical appearance: as mountains, as the black abodes of the demons who retain the celestial waters of the heavens (i.e. the rains), or as the black demons themselves. This is in no way be construed as the war between white Aryans and black Dravidians. This is a perverted interpretation from those who have not understood the meaning and purport of the Vedic culture and philosophy.

    Most of the verses which mention the wars/conflicts are composed using poetic imagery, and depict the celestial battles of the natural forces, and often take greater and greater recourse to terrestrial terminology and anthropomorphic depictions. The descriptions acquire an increasing tendency to shift from naturalism to mythology. And it is these mythological descriptions which are grabbed at by invasion theorists as descriptions of wars between invading Aryans and indigenous non-Aryans. An example of such distorted interpretation is made of the following verse:

    The body lay in the midst of waters that are neither still nor flowing. The waters press against the secret opening of the Vrtra (the coverer) who lay in deep darkness whose enemy is Indra. Mastered by the enemy, the waters held back like cattle restrained by a trader. Indra crushed the vrtra and broke open the withholding outlet of the river. (Rig Veda, I.32.10-11)

    This verse is a beautiful poetic and metamorphical description of snow-clad dark mountains where the life-sustaining water to feed the rivers flowing in the Aryavarta is held by the hardened ice caps (vrtra demon) and Indra, the rain god by allowing the sun to light its rays on the mountains makes the ice caps break and hence release the water. The invasionists interpret this verse literally on human plane, as the slaying of vrtra, the leader of dark skinned Dravidian people of Indus valley by invading white-skinned Aryan king Indra. This is an absurd and ludicrous interpretation of an obvious conflict between the natural forces.”

    https://www.tamilnation.org/heritage/aryan_dravidian/agrawal.htm

    மேலும், அண்ணல் அம்பேத்கர் கொடுக்கும் ஆதாரம்:-

    “வஜ்ர ஆயுதத்தை தரித்த இறைவனே, கொடியவர்களை நல்லவர்களாகவும், தாசர்களை ஆரியர்கலாகவும் மாற்றினாய். அதேபோல, நாங்களும் எங்கள் பகைவர்களை வென்றிட அருளுவாயாக! (ரிக் வேதம் 6.22.10)

    – ஆதாரம் (சூத்திரர்கள் யார்?, அத்யாயம் நான்கு). இதுபோலவே, இன்னும்பல ரிக் வேத வரிகளை சாட்சியாகத் தருகிறார் அண்ணல் அம்பேத்கர்!

    இன்னும் வேதங்களில் என்னென்ன உள்ளர்த்தங்கள் (symbolic references) உள்ளன என்று காட்டுகிறேன்.
    ஆரிய படையெடுப்புக் கோட்பாளர்கள் ஹரப்பா மற்றும் சிந்து சமவெளியில் குதிரைகள் இல்லை என்று கூறுகிறார்கள். இதற்க்கு, அகழ்வாராய்ச்சிக்காரர்கள் சொல்லும் பதில் ஒரு புறம், வேதங்களை மெய்ஞானமாக உணர்ந்த ஒரு பெரியவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். அவர் ஸ்ரீ அரவிந்தர்!

    அஸ்வம் என்னும் வடமொழி சொல்லிற்கு, குதிரை என்று பொருள் என்று ஒரு சாரார் சொல்கின்றனர். ஆனால்,

    “The word ashva must originally have implied strength or speed or both before it came to be applied to a horse.59

    More specifically,

    The cow and horse, go and ashva, are constantly associated. Usha, the Dawn, is described as gomati ashvavati; Dawn gives to the sacrificer horses and cows. As applied to the physical dawn gomati means accompanied by or bringing the rays of light and is an image of the dawn of illumination in the human mind. Therefore ashvavati also cannot refer merely to the physical steed; it must have a psychological significance as well. A study of the Vedic horse led me to the conclusion that go and ashva represent the two companion ideas of Light and Energy, Consciousness and Force….60

    For the ritualist the word go means simply a physical cow and nothing else, just as its companion word, ashva, means simply a physical horse…. When the Rishi prays to the Dawn, gomad viravad dhehi ratnam uso ashvavat, the ritualistic commentator sees in the invocation only an entreaty for “pleasant wealth to which are attached cows, men (or sons) and horses”. If on the other hand these words are symbolic, the sense will run, “Confirm in us a state of bliss full of light, of conquering energy and of force of vitality.”61

    In other words, Sri Aurobindo rejects a mechanical equation ashva = horse.

    The constant association of the Vedic horse with waters and the ocean, from the Rig-Veda to the Puranic myth of the churning of the ocean, confirms that we are not dealing here with an ordinary animal, as does the depiction of the Ashvins as birds. Within this framework, the ashvamedha sacrifice also deserves a new treatment, which the Indologist Subhash Kak has recently outlined very cogently.62

    Sri Aurobindo’s stand received indirect support from a wholly different angle, that of the late anthropologist Edmund Leach, who warned against the picture of a horse-rich Rig-Vedic society:

    The prominent place given to horses and chariots in the Rig Veda can tell us virtually nothing that might distinguish any real society for which the Rig Veda might provide a partial cosmology. If anything, it suggests that in real society (as opposed to its mythological counterpart), horses and chariots were a rarity, ownership of which was a mark of aristocratic or kingly distinction.63

    Thus the place of the horse in the Rig-Veda needs to be reassessed from a decolonized standpoint, with a fresh look at the Vedic message and experience. If Sri Aurobindo and Leach are both right, then the word ashva refers only occasionally to the actual animal, and its rarity is well reflected in the modest amount of physical remains and depictions. Indeed, even in today’s India, despite having been imported into India for many centuries, the horse remains a relatively rare animal, invisible in most villages.

    At this point, a valid objection could be raised: if the horse did exist in the Indus-Sarasvati civilization, and if one wishes to equate this civilization with Vedic culture,64 the latter at least makes a symbolic use of the animal; why is the horse therefore not depicted more often as a symbol in Harappan art, for instance on the Indus seals? The answer I propose is simple: even if the Rig- Veda is contemporary with, or older than, the mature Indus-Sarasvati civilization, we need not expect Harappan art to be a pure reflection of Vedic concepts. The Veda represents the very specific quest of a few rishis, who are unlikely to have lived in the middle of the Harappan towns. Although Vedic concepts and symbols are visible in Harappan culture, the latter is a popular culture; in the same way, the culture of today’s Indian village need not exactly reflect Chennai’s music and dance sabhas. Between Kalibangan’s peasant sacrificing a goat for good rains and the rishi in quest of Tat ekam, That One, there is a substantial difference, even if they ultimately share the same worldview.

    Only a more subtle approach to Harappan and Vedic cultures can throw light on their apparent differences. ”

    https://www.archaeologyonline.net/artifacts/horse-debate.html

    இதை எழுதியவர் மிச்செல் டானினோ என்ற பிரெஞ்சுக்காரர்!

    அடுத்து இராவணன்:-

    “The contrived meaning of “10 headed” as it is propagated by nationalists is that he possessed a very thorough knowledge in the 4 vedas, and 6 upanishadas (although the Upanishads number in their hundreds), which made him as powerful as 10 scholars. However, there is mention in Atharva Veda of demonic brahmans called ‘Dasagva’ (Ten headed) and ‘navagva’ (nine headed). These early beings may be the actual forerunners of the later character in the Ramayana.”.

    https://en.wikipedia.org/wiki/Ravana

    மேலும், நீங்கள் சொல்வதைப்போல நாங்கள் ஒன்னும் இராவணனை எதற்கும் தேவையற்ற உதவாக்கரை என்று சொல்லவில்லை.

    “Ravana is also said to have authored Ravana Sanhita, a powerful book on the Hindu astrology, also known as Kaali Kitab. Ravana possessed a thorough knowledge of Ayurveda and political science.”

    மேலும், இராவணன் அந்தணன் என்று கூறும் இராமயணத்தை நிராகரித்து, இராவணன் சூத்திரன் என்று கூறும் உங்கள் அறிவை என்னவென்று கூறுவது!

    “Ravana was born to the Brahmin sage known as Vishrava and his wife, the daitya princess Kaikesi. He was born in the Devagana gotra, as his grandfather, the sage Pulastya, was one of the ten Prajapatis or mind-born sons of Brahma and one of the Saptarishis (Seven Great Sages Rishi) in the first Manvantara. Kaikesi’s father, Sumali (or Sumalaya), king of the Daityas, wished her to marry the most powerful being in the mortal world, so as to produce an exceptional heir. He rejected the kings of the world, as they were less powerful than him. Kaikesi searched among the sages and finally chose Vishrava, the father of Kubera. Ravana was thus partly Daitya and partly Brahmin.”

    அவன் தந்தைதானே அந்தணன், தாய் அரக்கிதானே என்று நீங்கள் மொக்கை போடலாம். அனால், முடியவில்லை, இன்னும் இருக்கிறது தர்க்கம்! ஒரு அந்தணனுக்கும் அரக்கீக்கும் பிறந்ததனால் இராவணன் அந்தணன் இல்லை என்று நீங்கள்சொன்னால், நான் வேதவியாசரே அந்தணன் இல்லை என்று கூறுவேன். ஒன்றாக இருந்த வேதத்தை, நான்கு வேதங்கள், 108 உபநிடதங்கள், சம்மிதைகள், பிராமணர்கள் (இது வேதங்களில் வரும் ஒரு பங்கு ஆகும், இங்கு இது பார்பனர்களை குறிக்கவில்லை), அரண்யகங்கள், மேலும் 18 புராணங்கள், மகாபாரதம் இன்னும் மற்ற எல்லா வடமொழி இலக்கியங்களும் இயற்றினவர் பராசரர் எனும் அந்தண முனிவருக்கும், சத்யவதி என்ற மீன்கார பெண்ணுக்கும் பிறந்தார். ஆக, ஒரு அந்தணருக்கும் அரக்கீக்கும் பிறந்த இராவணன் அந்தணன் இல்லை என்றால், ஒரு அந்தணருக்கும், மீன்காரிக்கும் பிறந்த வியாசர் மட்டும் எப்படி அந்தணன் ஆவார்?? அப்போ, வேதகாலங்களில் எல்லா சாதியினரும் வேதங்களை படிக்க அனுமதி இருந்தது என்று நான் சொல்வேன், பிறகு உங்கள் திராவிட இயக்கமே தவிடுபொடி!!

    இனிமேலாவது உண்மை என்னனு தீரவிசாரிச்சிட்டு பேசுங்கப்பா!!

    அடுத்து தலைவர் மில்டன் அவர்கள்!

    //சரி அதை விடுங்கள்,உங்களின் மற்ற பதிலுரைக்கு நானும் மறு பதிலளித்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

    நீங்கள் குறிப்பிட்ட ஒரே வாக்கியத்தை[சரி, எந்த கடவுளிடம் மூட நம்பிக்கை உள்ளது என்று சுட்டிக்காட்ட முடியுமா?? ] எடுத்துக் கொண்டு,அதற்கான பதிலை ஆதாரத்துடன் உங்களின் புராண,இதிகாச மேற்கொள்படியே கூற விழைகிறேன் //

    ஆகட்டும், அடியேனால் முடிந்தவரை உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்…

    //வள்ளுவன் அவர்களே,முதலில் நீங்கள் பெயர் மாற்றம் செய்து கொண்டு வந்தால் நல்லது!?//

    ஏன் அய்யா அப்படி சொல்லுகிறீர்கள்! நான் உங்களிடம் கேள்விதானே கேட்டேன், அறிவுரை அல்லவே!!
    ஒஹொஹ், நீங்கள் கருப்புச்சட்டைக்காரர் அல்லவா, அதனால்தான் ‘திராவிட மாயையில்’ திளைக்கிறீர்கள்.

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. Kural No. 25 from நீத்தார் பெருமை !

    இதன் பொருள்:- ஐம்பொறிகளையும் அடக்கியவன் ஆற்றலுக்கு வானவர் தலைவனான இந்திரனே ஒப்பானவன்.

    அடுத்து,

    அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வைளைக் காட்டி விடும்.
    Kural No. 167 from அழுக்காறாமை!

    இதன் பொருள்:- பிறர் வளர்ச்சி கண்டு பொராமைப்படுபவனை திருமகள் கண்டு வெறுப்புற்று தனது தமக்கை மூதேவிக்கு காடிக்கொடுத்துவிடுவாள்!!

    அடுத்து,

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. kural no. 610 from மடியின்மை!

    இதன் பொருள்:- கடவுள் தன் காலடியால் அளந்த நிலப்பரப்பு முழுவதையும் சொம்பலில்லாத அரசன் ஒருசேர அடைவான். (எந்த கடவுள் உலகை அளந்தான் என்று எல்லோருக்கும் தெரியும்).

    அடுத்து,

    அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும் முகடியால் மூடப்பட்ட டார்.
    kural no.936 from சூது!

    இதன் பொருள்:- மூதேவியாகிய சூதாட்டத்தில் மூழ்கியவர் வயிறு நிறைய உணவும் உண்ணாமல் பலவகைத் துன்பத்தையும் அடைவார். (மூதேவியை அறிமுகப்படுத்திய மதம் எது என்பதில் எவருக்காவது குழப்பம் உள்ளதா??).

    அடுத்து,

    இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு.
    kural no.920 from வரைவின் மகளிர்!

    இதன் பொருள்:- இருவகை மனமுடைய பொது பெண்டிரும், கள்ளும், சூதுமாகிய மூன்றும் திருமகளால் நீக்கப்பட்ட உறவாகும்.

    கடைசியாக,
    தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு.
    This is Kural No. 1103 from புணர்ச்சி மகிழ்தல்!

    இதன் பொருள்:- தானே விரும்பி ஏற்கும் காதலியின் மெல்லிய தோள்களை தழுவும் இன்பத்திற்கு ஈடாகுமா தாமரைக் கண்ணான் உலகு. (திருமாலுக்குத் தான் தாமரை போன்ற கண்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே!).

    இன்னோமும் உங்களுக்கு புரியவில்லை என்றால்,

    இதோ பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி கூறுகிறார்:-
    நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
    தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த- நூன்முறையை
    வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சம்
    சிந்திக்க கேட்க செவி.

    இதன் பொருள்:- பிரம்மதேவன் திருவள்ளுவராக பிறந்து, நான்கு வேதங்களின் உண்மைப்பொருளை (தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற புருஷார்த்தங்களை) ஆறாம், பொருள், இன்பம் என்னும் மூன்று பாலாகத் தமிழில் கூறிய திருக்குரளாகிய தமிழ் வேதத்தை தலையால் வணங்கி, வாயால் துதித்து, மனத்தால் த்யானித்து காதால் கேட்பதே சால்புடயதாகும்.

    முடியவில்லை, சங்கப்புலவர் பரணர் கூறுகிறார்:-
    மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
    ஞால முழுதும் நயந்தளர்ந்தான்- வாலறிவின்
    வள்ளுவருந் தங் குறள் வெண்பா வடியால் வையத்தார்
    உள்ளுவவெல் லாமளந்தார் ஓர்ந்து.

    இதன் பொருள்:- குறுகிய வடிவாய் இருந்த திருமால் வளர்ந்து தன்னுடைய இரண்டு அடிகளால் இவ்வுலகை முழுவதும் விரும்பி அளந்தார். மெய்யறிவினை உடைய திருவள்ளுவரும் தம்முடைய சொல்லாகிய வெண்பா குறளின் இரண்டு சிறிய அடிகளால் உலகத்து மக்கள் உள்ளங்களில் எண்ணும் எண்ணங்கள் எல்லாவற்றையும் ஆய்ந்து கூறிவிட்டார்!!

    வேத மதமே தமிழர் பண்பாடு என்பதற்கு ஆதாரங்கள் கொட்டிகிடக்கின்றன. நம்பிக்கை இல்லை என்றால், இதை படித்துப் பாருங்கள்:-

    https://www.omilosmeleton.gr/pdf/en/indology/Vedic_Roots_of_Early_Tamil_Culture.pdf

    இதை எழுதியவரும் மிச்செல் டானினோ என்ற அதே பிரெஞ்சுக்காரர் தான்.

    இப்பொழுது சொல்லுங்கள் தலைவா, நான் ஏன் என் பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும்????????????????????????????????????????

  29. //எனக்கு வேதம் தெரியாது. நியாயப்படுத்த வேண்டிய கருத்து அதில் ஏதாவது இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் நியாயப்படுத்தினால், அது சரி என்று எனக்கும் பட்டால், சரி என்று சொல்ல ஒரு தயக்கமும் இல்லை. அது தவறு என்று பட்டால் அதை தவறு என்று சொல்லவும் ஒரு தயக்கமும் இல்லை.//

    அய்யா RV அவர்களே, இதை சொல்ல மறந்துவிட்டேன்.
    எனக்கும் எல்லாம் தெரியும் என்று சொல்லவில்லை! ஆனால், பெரியாரைப்போல ஒன்றும் தெரியாமல் பேசவேண்டாம் என்றுதான் சொல்கிறேன். திரு.வெங்கடேசன் எழுதிய மற்ற பாகங்களை படித்துப் பார்த்தீர்களா? பெரியாரின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் எதைக் காட்டுகின்றன???

  30. இப்ப முக்கிய விடயம் பெரியாரைப் பற்றி சிந்தனையாளர் ம. வெங்கடேசன் எழுதியது பற்றி.

    இந்த இராவணன், மூதேவி இதை எல்லாம் பேசி அப்பிடியே மேட்டரை ஹைஜாக் செய்வது ஏன்? அதை தனியா பொருத்தமான இடத்திலே அது பத்தி டிஸ்கஸ் பண்ணுங்க நண்பர்களே!

    ம. வெங்கடேசன் எழுதியது உண்மையா இல்லையா,

    இங்கெ சிந்தனையாளர் ம. வெங்கடேசன் ஆதாரங்களோடும் , புள்ளி விவரங்களோடும் நடந்தவற்றை விளக்குகிறார். அவர் பெரியாரை இகழ்ச்சியாக எதுவும் எழுதவில்லை.

    அதற்க்கு இங்கெ சிலர் குய்யோ, முறையோ என்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது.

    பெரியாரோ சகட்டு மேனிக்கு வள்ளுவர் , கம்பர் , காந்தி என எல்லோரையும் சிறுமைப் படுத்தி எழுத தயங்கவில்லை. அவர் எழுதியதை ரசித்து படித்து விட்டு இங்கெ வந்து ஒப்பாரி வைப்பது ஏன்?

    பெரியாரின் கருத்துக்களில் சில முக்கியமானவைதான். அவை நமக்கு உபயோகப் படும்.

    பெரியாருக்கு தமிழாக வரலாற்றிலே ஒரு இடம் உண்டு அதை குடுப்போம். ஆனால் பெரியாரை ஒரு சித்தர் போலவோ, புத்தர் போலவோ ஒரு ஒளி வட்டத்தைப் போடாமலேயே ஆனால் போட்ட ரேஞ்சுக்கு சித்தரிப்பது நடக்கிறது.

    //தமிழ் ஓவியா பெரியாரை சுற்றி ஒரு ஒளி வட்டம் எழுப்பப் பார்க்கிறார். இந்த தளம் opposite extreme-க்கு போகிறதோ என்று தோன்றுகிறது.//

    சரிதான், அப்பத்தான் இரண்டும் நியூட்டரலைஸ் ஆகி மக்களுக்கு ஓரளவு சரியான உண்மை கருத்து உருவாகும்.

  31. ராமாயணத்தில் இராவணன் பிராம்மணனே என்பது திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறது. பிராம்மணனை கொன்றதால் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் போக்க ராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டான் இராமன். இதுவும் இராமாயணமே

    திக திமுக பொய்யர்களுக்கு மட்டுமே இராவணன் சூத்திரன்

    நரகாசுரனையும் சூத்திரன் என்று சொல்லி தீபாவளியை கொண்டாடக்கூடாது என்பார்கள்.

    நரகாசுரனும் பிராம்மணனே.

    புராணங்களின் படி நரகாசுரன் ஹிரண்யாக்‌ஷனின் மகன். ஹிரண்யாக்‌ஷன் காஷ்யப முனிவருக்கும் திதிக்கும் பிறந்ததால் ஹிரண்யாக்‌ஷனும் பிராம்மணனே.
    ஆகவே நரகாசுரனும் பிராம்மணனே

    அசுரன் என்பவன் தீக்குணங்கள் கொண்டவன். அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அதர்ம வழியில் நடப்பவன் அனைவரும் அசுரர்களே.

    .

  32. வள்ளுவன்,

    நீங்க பெரிய அறிவாளிங்க. இந்திரன் கொன்றது விரோசனன் இல்லையே, விருத்திராசுரனை சொல்றீங்களா என்று கேட்டிருந்தேன். ஆமாம் விருத்திராசுரந்தான்னு நிறைய சொல்றீங்க. நான் எதை உருப்படியா கேள்விப்பட்டிருக்கேன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த தளத்தில தான் என்ன எழுதி இருக்கோம், அடுத்தவங்க என்ன எழுதறாங்க அப்படின்றதை முதல்லே புரிஞ்சுக்கங்க, அதுக்கப்புறம் எழுத வாங்க. புல்லரிக்க வைக்கறீங்களே!

    போன முறை விரோசனன் மழை பெய்யாமல் தடுத்தான். இந்த முறை விருத்திராசுரன் ஆறு ஓடாமல் பனி அணையாக இருக்கிறான். மழைக்கும் பனி அணைக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையா? நாளைக்கு என்ன? விருகோதரன் கபினி அணையை கட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட மறுக்கிறானா? ஆளை விடுங்கப்பா!

    மற்றவர்களுக்காக: விரோசனன் பிரஹலாதநிந் பிள்ளை, மகாபலியின் அப்பா.

  33. திரு. வள்ளுவன் அவர்களுக்கு வந்தனம். அருமையான விளக்கம் அளித்துள்ளிர். நன்றி

    திரு RV, உம்மிடம் ஒப்புக்கொள்ளும் குணம் இல்லை போலும். என்
    நேரத்தை மேலும் செலவிட விருப்பமில்லை

  34. RV அவர்களே,
    நான்தான் தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும். இந்திரன் மழை பெய்யாமல் தடுத்த விர்த்ராசுரனை (Vrtra) கொன்றான். இது ரிக் வேதம். ஆனால், சந்தோக்ய உபநிடதம் வரும் சாம வேதத்தில், இந்திரனும் விரோச்சணனும் பிரஜாபதியிடம் சென்று ஆன்மாவைப்பற்றிய விளக்கத்தைக் கேட்கிறார்கள். இங்கு மறுமொழி எழும்பொழுது இரண்டையும் படித்துக் கொண்டிருந்ததால், ஒரு பிழை ஏற்ப்பட்டு விட்டது. என்னை மன்னிக்கவும்! ஆனால், விர்த்ராசுரன் விரோசனன் இருவருமே அசுரர்கள்தான். நான் எழுதியது தவறுதான்!

    //மற்றவர்களுக்காக: விரோசனன் பிரஹலாதநிந் பிள்ளை, மகாபலியின் அப்பா.//

    இது உண்மை, ஆனால், நான் சொன்ன விரோச்சணனும் மகாபலியின் தந்தையான விரோச்சணனும் ஒன்றா என்ற தகவல் கிடைக்கவில்லை!

    //போன முறை விரோசனன் மழை பெய்யாமல் தடுத்தான். இந்த முறை விருத்திராசுரன் ஆறு ஓடாமல் பனி அணையாக இருக்கிறான். மழைக்கும் பனி அணைக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையா? நாளைக்கு என்ன? விருகோதரன் கபினி அணையை கட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட மறுக்கிறானா? ஆளை விடுங்கப்பா!//

    பனி அணையைப் பற்றி நான் குறிப்பிடவே இல்லையே, நீங்களா யூகித்துக் கொண்டீர்களா?? நான் எழுதிய பெயரில் மட்டும்தான் தவறு இருந்தது. சொன்ன செய்தி உண்மைதான்! நான் எழுதியதை இன்னொரு முறை படிக்கவும்:-

    “An example of such distorted interpretation is made of the following verse:

    The body lay in the midst of waters that are neither still nor flowing. The waters press against the secret opening of the Vrtra (the coverer) who lay in deep darkness whose enemy is Indra. Mastered by the enemy, the waters held back like cattle restrained by a trader. Indra crushed the vrtra and broke open the withholding outlet of the river. (Rig Veda, I.32.10-11)”.

    அதாவது, ஆற்றைப் பற்றிப்பேசும் இவ்வரிகள் மழையைப் பற்றிப்பேசிய வரிகளைத் தொடர்ந்து வருகின்றன! மேகமான விர்த்தாசுரனை பிழிந்து மழை பெய்ய வைத்தான் இந்திரன், என்பது சென்ற வரிகள். இவ்வரிகள் கூறுபவை, ஆறு சுதந்திரமாக ஓடத் தடையாக இருந்த விர்த்ராசுரனை அகற்றி ஆற்றின் நீர் ஓட வழிவகுத்தான் இந்திரன் என்று கூறுகின்றன. அதாவது, இந்திரனும் விர்த்ராசுரனும் எதற்கு ஒப்பிடப்படுகின்றனர் என்பதுதான் இங்கு முக்கியம்.

    முதலில், நீங்கள் முழுவதுமாக படித்து விட்டுக் கண்டியுங்கள், எனக்கு சரியென்று பட்டால் ஒப்புக் கொள்கிறேன்.

    //புராணங்களின் படி நரகாசுரன் ஹிரண்யாக்‌ஷனின் மகன். ஹிரண்யாக்‌ஷன் காஷ்யப முனிவருக்கும் திதிக்கும் பிறந்ததால் ஹிரண்யாக்‌ஷனும் பிராம்மணனே.
    ஆகவே நரகாசுரனும் பிராம்மணனே//

    மணி அவர்களே, நரகாசுரன் ஹிரன்யக்ஷனின் பிள்ளை அல்ல. திருமாலின் பிள்ளை ஆவான். வராக அவதாரத்தின்போது பிறந்தான், அவனை திருமாலே கொல்லவேண்டும் என்று பூமித்தாய் வரம் பெற்றதால், திருமால் கண்ணனாக பிறந்தபோது நரகாசுரனை கொல்கிறான்.

    எல்லா தேவர்களும் அசுரர்களும் சகோதரர்களே. திதி, அதிதி என்று இரண்டு சகோதரிகள். இருவரும் காஷ்யப முனிவரை மணக்கின்றனர். அம்முநிவருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் தைத்யர்கள் (அசுரர்கள்). முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள் ஆதித்யர்கள் (தேவர்கள்). அவர்கள் திராவிடர்கள், இவர்கள் ஆரியர்கள் எனும் வாதம் எங்குமே இல்லை!!

    //திரு. வள்ளுவன் அவர்களுக்கு வந்தனம். அருமையான விளக்கம் அளித்துள்ளிர். நன்றி//

    நன்றி, ஆனால் பெயரை மாற்றி எழுதியதால் பழி வந்து விட்டதே!

  35. அட போங்க திருவள்ளுவரே தெரியாம இருநதிருக்கார்.. திரு. வள்ளுவன் ஏதோ மத்தி சொன்னா என்ன? சற்றே பிழறினால் கடைசியில் உம்மிடம் ஏதோ அல்ப குறை கண்டு மயிர் பிளக்கிறார் RV .. மயிர் பிளப்பது கூடாது என்றவர் :-).. ஆமாம் தவறை ஒப்பௌக்கொள்கிறீர்களே!!! இது அபாயகரமானது அலுவலக வாழ்க்கையில் முன்னேற தடையாக இருக்குமே?

  36. வள்ளுவன் அவர்களே,
    தங்களின் பதில்களில் பொதிந்துள்ள பல அறிய விஷயங்கள் மிகவும் அருமை. தங்களின் விளக்கங்கள் மேலும் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

  37. பாரதிராஜா அவர்களே, தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

    கார்கில் ஜெய் அவர்களே, நான் மனிதன், அதனால்தான் செய்த தவறை ஒப்புக்கொண்டேன்! மனசாட்சியை அந்நியரிடம் காசுக்கு விற்றுவிட்டு, தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் நடக்க நான் கருப்புசட்டைக்காரன் அல்லவே!!

    //இது அபாயகரமானது அலுவலக வாழ்க்கையில் முன்னேற தடையாக இருக்குமே?//

    உண்மைதான். காலத்திற்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்! தங்கள் அன்பிற்கு நன்றி!!

  38. அம்பேத்கர் கூறுகிறார்:-
    ”நான் இஸ்லாம் தழுவியிருந்தால் கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப்பட்டிருக்கும். ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும், ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை”.
    (நூல் :- Ambedkar – A Critical study)

    அம்பேத்கர் ஏன் ஹிந்துமதத்தை விட்டார்?
    அவர் தால்தபட்ட மக்களை காப்பாற்ற?
    இஸ்லாத்தில் சேர்ந்து இருந்தால் எப்படி
    தால்தபட்ட மக்கலுக்கு குரல் கொடுக்கமுடியும்.

  39. சின்னமணி ashraf ali அவர்களே, பதினெட்டாம் பகுதியில் நான் கேட்ட கேள்விகளுக்கு விடை எங்கே??

  40. வள்ளுவன்

    சின்னமணி ashraf ali அவர்களே, பதினெட்டாம் பகுதியில் நான் கேட்ட கேள்விகளுக்கு விடை எங்கே??

    எங்கே கேள்வி கேட்டீற்கலோ அங்கேதான் போய்பாற்கவேண்டும்.
    பதில்கிடைக்கும்..

  41. சார், விடை காணோமே, சரி பரவாயில்லை, இன்னொருமுறை கேட்கிறேன்…

    முகமதீயர்கள் அரபுநாட்டிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் அல்ல என்கிறீர்கள்! அதே சமயம் வார்த்தைக்கு வார்த்தை “உங்கள் முன்னோர்”, “உங்கள் முன்னோர்” என்கிறீர்கள். இந்தியா ஒருகாலத்தில் இந்துனாடாகத் தான் இருந்தது என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள், அப்படியென்றால் உங்கள் முன்னோர்களும் இந்துக்கள்தானே! அவர்களும் நீங்கள் சொல்லும் சாதிக்கொடுமைகளை செய்திரிக்க மாட்டார்களா? நீங்கள் சொல்வதைப்பார்த்தால் உங்கள் வம்சமே நபிகள் நாயகத்திற்குப் பிறகுதான் தோன்றியது என்பதுபோல உள்ளது!

    இதுதான் என் கேள்வி, முடிந்தால் விடையளிக்கவும்!! நீங்கள் சொல்வது ஒப்புக் கொள்ளும்படி இருந்தால், நான் ஒப்புக்கொள்கிறேன்….

  42. e v ramaswamy naikarin marupakathi ulagam arithida seivavandum he is not only man in behind off british goverment,u.s agent,and pope all force act,because their motto spilt hindu religion and covert all in to cristien.

  43. Pingback: daityas
  44. ஈரோட்டில் இருந்து ராமசாமி நாயக்கர் வந்துருக்கேன் “கடவுள் இல்லை ” நு சொல்றேன் யாரும் ஏத்துக்கணும் ஒருநாளும் தந்தை பெரியார் ஒருபோதும் சொன்னது இல்லை.உன் பகுத்தறிவை கொண்டு யோசி என்று தான் சொன்னார் என் பாட்டனும் முப்பாட்டனும் இடுப்பில் கட்டிய துண்டை தோலில் போடா வைத்தவர் தந்தை பெரியார். பெரியார் நிறைய இடங்களில் முரண்பட்டு தான் பேசி இருக்கிறார் ஒன்று இரண்டு அல்ல பல தமிழனையே காடு மிராண்டி கூட்டம் என்றவர் எதற்காக ஏன் முரண்பட்டு பேசினார் என்பது பெரியாரியல் படித்தவர்களால் தான் முடியும் உங்களை போல நுனி புல் மேயும் கத்துக்குட்டியும் அவர் இல்லை ஆக பகுத்தறிவை கொண்டு காலத்துக்கு தகுந்தார் போல வாழ என் இனத்திற்கு கற்றுக்கொடுத்தவர் தந்தை பெரியார்.அதனால் கையில் கணினி இருக்கிறது என்று கண்டதையும் உங்கள் மன போக்கையும் எழுதாதீர்கள்.இன்று வரை பார்பான் தான் எங்களை இன்றும் ஆண்டு கொண்டிருக்கிறான் அவன் கொண்டு வந்த இந்த கேவலமான ஹிந்து மதத்தையும் குறிப்பாய் உங்கள் தமிழ் ஹிந்து மதத்தில் எப்படி எல்ல தமிழனும் பூணூல் pottukkolallama இல்லை பார்பனர்களுக்கு மட்டும் தானா…இவளவு பேசும் உங்களுக்கு தமிழனின் மதம் ஹிந்து என்று உங்களுக்கு யார் சொல்லிகொடுத்தார்கள்…விளக்கம் சொல்லுங்கள் .

  45. Senthil,

    Your post shows how the seeds of hatred speard by EVR has posioned this socierty. He blamed all the evil in the world on brahmins. Today, if TN society is severely fractured along caste lines, it is thanks to EVR.

  46. M.K.Gandhi

    Do you think you will gain anything by becoming non-Hindus, he told them, do not think you will gain anything by abusing, Brahmins or burning their homes. “Who were Tilak, Gokhale, Ranade and Agarkar?” he asked them. They were Brahmins, they were in the forefront of every nationalist struggle, they served the cause of non-Brahmins at the greatest cost to themselves, it is in many cases through the work of Brahmins that the non-Brahmins have been made aware of their rights, he told them. It is the Brahmins who exert for the uplift of the depressed classes, more than anybody else. Lokmanya Tilak is revered by all classes for his services to the country. The late Mr. Gokhale, Mr. Ranade and the Hon’ble Mr. Sastri have all done splendid work for the regeneration of the backward classes. You complain of the Brahmin bureaucracy. But let us compare it with the British bureaucracy. The latter follow the ‘divide and rule policy’ and maintains its authority by the power of the sword, whereas, the Brahmins have never restored to the force of arms and they have established their superiority by sheer force of their intellect, self-sacrifice, and penance. I appeal to my non-Brahmins brethren not to hate the Brahmin and not to be victims of the snares of the bureaucracy…”

    “By indulging in violent contempt of a community which has produced men like Ramdas, Tulsidas, Ranade, Tilak and others,” he told the non-Brahmins, “it is impossible that you can rise.” By looking to the British for help you will sink deeper into slavery. ”

    I have not a shadow of doubts,” he declared, “that Hinduism owes its all to the great traditions that the Brahmins have left for Hinduism. They have left a legacy for India, for which every nation, no matter to what varna he may belong owes a deep gratitude. Having studied the history of almost every religion in the world it is my settled conviction that there is no class in the world that has accepted poverty and self-effacement as its lot. ”

    By indulging in violent contempt of a community which has produced men like Ramdas, Tulsidas, Ranade, Tilak, and others”, he told the non-Brahmins, it is impossible that you can rise.”

  47. மூட நம்பிக்கை மணியம்மையிடம் மட்டும்மல்ல .திராவிட இயக்கத்தை சேர்ந்த அத்தனைபெரும் இன்று என்ன செய்கிறார்கள் ,தலைவனுக்கு சிலை வைத்து மாலை போட்டு கும்பிடுகிறார்கள் —இது உருவ வழிபாடல்லவா? தலைவன் செத்தநாளில் அவனுக்கு /சிலைக்கு /படத்துக்கு மாலை போட்டு ஊதுபத்தி கொளுத்தி கும்பிடுகிறார்கள் —இதுபித்ரு வழிபாடல்லவா /?இதையே மற்றவர் செய்தால் மூட நம்பிக்கை என்று சொல்வார்கள் .

  48. நீங்கள் கண்ணால் பார்த்திராத கடவுளை நம்பும் போது ,தன்னுடன் பல வருடங்கள் வாழ்ந்த பெரியார் இந்த சூழ்நிலையில் எப்படி தன்னை ஆறுதல் படுத்துவார் என்று மணியம்மை எண்ணி பார்த்ததில் என்ன தவறு??? “மணியம்மையாரின் புளுகும் மூடநம்பிக்கையும்” உங்கள் தலைப்பிலேயே என்ன குரூரம்.

  49. திராவிடம் என்றால் என்ன அதை பற்றியான கேள்வி பதிலை வெப்சைட் இடவும்

  50. ஏசு இந்தியாவுக்கு வந்ததாகவும் ௧௧௨ வயது முடிய வாழ்ந்ததாகவும் BBC டாகுமெண்டரி இல் பார்த்தேன். அதற்க்கு நம்மிடம் வரலாற்று சான்றுகள் உண்டா

  51. //காலத்துக்கு தகுந்தார் போல வாழ என் இனத்திற்கு கற்றுக்கொடுத்தவர் தந்தை பெரியார்.அதனால் கையில் கணினி இருக்கிறது என்று கண்டதையும் உங்கள் மன போக்கையும் எழுதாதீர்கள்.இன்று வரை பார்பான் தான் எங்களை இன்றும் ஆண்டு கொண்டிருக்கிறான் அவன் கொண்டு வந்த இந்த கேவலமான ஹிந்து மதத்தையும் குறிப்பாய் உங்கள் தமிழ் ஹிந்து மதத்தில் எப்படி எல்ல தமிழனும் பூணூல் pottukkolallama இல்லை பார்பனர்களுக்கு மட்டும் தானா…இவளவு பேசும் உங்களுக்கு தமிழனின் மதம் ஹிந்து என்று உங்களுக்கு யார் சொல்லிகொடுத்தார்கள்…விளக்கம் சொல்லுங்கள் .//

    திரு. செந்தில் அவர்களே!

    ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு வரை அனைத்து வர்ணத்தவரும் பூணூல் அணிந்தே வந்தனர் என்கிறது சான்று. நுனிப்புல் மேய்வது தமிழ் ஹிந்து அல்ல. தாங்கள் தாம். கீழ்கண்ட இணைப்பிற்குச் சென்று சரியான விஷயங்களைக் கற்றுத் தெளியவும்.

    https://thamizhan-thiravidana.blogspot.co.uk/2010/12/22.html

    இப்படிக்கு,
    ஒன்றுக்கும் உதவா விட்டாலும் சும்மாவாவது பூணூல் போட்டிருக்கும் பார்ப்பான்!

    (Edited and published)

  52. அடுத்தவன் மனைவியினை அபகரிப்பது தவறல்ல என சொல்லி ஈரோட்டு ராம்சாமி இன்றும் வாங்கிகட்டி கொண்டிருப்பதன் ஆணிவேர் எங்கிருக்கின்றது என்றால் இங்கல்ல‌

    உண்மையில் ஈரோட்டு ராம்சாமிக்கு சொந்த அறிவோ, சுய சிந்தனையோ ஒரு காலமும் இல்லை, கவனியுங்கள் அவரின் பகுத்தறிவே ரஷ்ய புரட்சிக்கு பின்புதான் வந்ததிருக்கும்

    ஆம், ரஷ்ய புரட்சி உலகில் பெரும் திருப்பங்களை கொடுத்தது, அப்படி தமிழகத்திலும் அது கம்யூனிசமாக வெடித்தது

    உள்ளே பிராமணன் மேலும் இந்துமதத்தின் மேலும் பெரும் கோபம் கொண்டிருந்த ராம்சாமிக்கு இது தோதானது, ஆனால் சிகப்பு சட்டை போட்டால் இரு சிக்கல் வரும்

    ஒன்று தன் திரண்ட சொத்துக்கள் பறிபோகும் இரண்டாவது பிரிட்டிஷ்காரன் தொலைத்துவிடுவான்

    தன் சொத்துக்களை காப்பாற்றிகொண்டே இந்துமதத்தை ஒழிக்க கறுப்பு சட்டை போட்ட ராம்சாமி மறக்காமல் ரஷ்ய நாத்திக கருத்துக்களை தமிழில் சொல்ல தொடங்கினார்

    ரஷ்யர்கள் போப் ஆண்டவர் மற்றும் கிறிஸ்தவ பாதிரிகளை வைத்த இடத்தில் பிராமணனையும், கிறிஸ்தவம் இருந்த இடத்தில் இந்துவினையும் வைத்தால் ராம்சாமியின் கொள்கை ரெடி

    பெண்விடுதலை ரெடி, இன்னும் என்னவெல்லாமோ ரெடி

    ஆனால் ரஷ்ய விஞ்ஞானமோ இல்லை பெரும் விஞ்ஞான அறிவோ இந்த கோஷ்டியிடம் இல்லை, காரணம் அதற்கு அறிவும் நல்ல சிந்தனையும் கல்வியும் வேண்டும், இவர்களிடம் அது ஏது?

    ராம்சாமிக்கு ஆங்கிலம் வராது, ரஷ்ய கம்யூனிஸ்டுகள் பத்திரிகையினை தமிழ்படுத்தி கொடுத்தவர் அண்ணாதுரை, அவருக்கும் சுய அறிவு இல்லை, ரஷ்ய கம்யூனிஸ்டுகளால் பேரரிஞன் ஆனார்

    இப்படி எல்லாமே இங்கு ரஷ்ய கள்ளு திராவிட கலயம்

    சரி விஷயத்துக்கு வரலாம்

    பொதுவுடமை பிதாமகன் கார்ல் மாக்ஸின் மறைக்கபட்ட தத்துவம் உண்டு, அதில் அவன் விபரீத கருத்துக்களை சொல்ல்லியிருந்தான்

    அதாவது ஒரு மனிதன் தனக்காக சம்பாதிப்பதில்லை தன் பிள்ளைகளுக்கும் சந்ததிக்குமே பேராசைபட்டு சொத்து சேர்க்கின்றான், இதனால் சமத்துவ மானிட இனம் வாழ குடும்ப உறவை உடைக்க வேண்டும், யாரும் யாருக்கும் குழந்தை பெறலாம், குழந்தைகள் கம்யூனின் சொத்துக்கள்

    இதற்கு மார்க்ஸின் மூளை வேண்டாம், மந்தியின் அல்லது செம்மறியாட்டு கடாவின் மூளை போதும்

    மார்க்ஸின் கோட்பாடுகளை சட்டமாக்கிய லெனினும் ஸ்டாலினும் இதை அமல்படுத்த அஞ்சினார்கள், மறைத்தார்கள். இதை உலகம் ஏற்பாது, மானிடம் ஒப்பாமல் காரி துப்பும் என அதை ஒதுக்கினார்கள்

    ஆனால் ஈரோட்டு ராம்சாமிக்கு அறிவாவது? நாகரீகமாவது? மயிராவது?

    அது தன் வழக்கமான காப்பிபடியே எவனும் எவளுக்கும் புள்ளை பெத்துக்கட்டும், அடுத்தவன் பொண்டாட்டியினை ஆட்டையினை போட்டால் தப்பு ஆகாது, இதற்கு சட்டம் வேண்டும் என அதன் போக்கில் சொல்லிகொண்டிருந்தது

    அது அன்று மறைக்கபட்டது, இப்பொழுது ரஜினி தயவில் வெளிவந்து கொண்டிருக்கின்றது

    ஆக கீழடி நாகரீக ஆய்வு முடிந்து, ஈரோட்டு கறுப்புசட்டை நாகரீக அகழ்வாராய்ச்சி நடக்கின்றது

    இது வெறும் 50 ஆண்டுகாலத்துக்கு முந்தைய நாகரீகம் என்பதால் தோண்ட தோண்ட கடும் நாற்றமும் துர்வாடையும் வருகின்றது

    ஆயினும் ஆராய்ச்சியாளர்கள் மாஸ்க், ஆக்ஸிஜன் சிலிண்டர் சகிதம் தோண்டுவதால் இந்த ஆபத்தான ஆய்விலும் இன்னும் பல அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வரலாம்

    ஒரு கேடுகெட்ட காட்டுமிராண்டி நாகரீகம் கொஞ்ச காலம் இருந்திருக்கின்றது என்ற செய்திகள் வரலாம் , காத்திருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *