வேதம் புனிதமடைந்தது!

லப்புழா:  ஆசார்ய நரேந்திர பூஷன் அவர்களது சீடரும்,  இந்து ஆன்மீக சாதகருமான சிவானந்த சர்மா அவர்கள்,  கர்நாடகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சிருங்கேரி மடத்தின் ஆசிரமத்தில் இணைந்துள்ளார். அங்கு அவர் தனது  வேத, வேதாந்தக் கல்வியைத் தொடர்வார்; துறவு நெறியில் செல்வார்.

பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவானந்த சர்மா அவர்கள், திரு. பி.ஆர்.குஞ்சன் மற்றும் திருமதி தங்கம்மா தம்பதியரின் இளைய மகன் ஆவார்.  சிறு வயது முதலே ஆன்மிக நாட்டம் கொண்டிருந்த அவர், ஆசார்ய நரேந்திர பூஷன் அவர்களின் வழிகாட்டுதலில் வேத சாஸ்திரங்களையும் இந்து ஞான நூல்களையும் பயின்று வந்தார்.

இதுவரை பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினரை மடத்தின் பாடசாலைகளிலும், ஆசிரமத்திலும் பயில சிருங்கேரி மடம் அனுமதித்ததில்லை.  அத்தகைய இறுக்கமான பழமைவாத  நிலைப்பாட்டைத் துறந்து,  உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில் ஞானத் தேடலை அங்கீகரிக்கும் விதத்தில் அந்த சம்பிரதாய மடத்தின் இச்செயல்பாடு அமைந்துள்ளது.  இதற்காக சிருங்கேரி மடத்திற்கு தமிழ்ஹிந்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதனுடன்  நின்று விடாமல், மேன்மேலும் இச்செயல்பாடு வளர வேண்டும்.  பெருக வேண்டும். ஒரு பாரம்பரிய மடத்தின் இந்தச் செயல்பாடு மற்ற மடங்களுக்கும் முன்னுதாரணமாக ஆக வேண்டும்.

நன்றி:   ஹைந்தவ கேரளம் செய்தி.

61 Replies to “வேதம் புனிதமடைந்தது!”

  1. மிக நல்ல செய்தி.

    இதுபோன்ற செய்திகள் தொடரட்டும். இந்த செய்தியையும், இதுபோன்ற செய்திகளையும் முக்கிய தமிழக நாளேடுகளும், தொலைக்காட்சியும் வெளியிடுமா?

  2. தமிழ் இந்து ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    ஆக, பறையர்களும் முறையாக பயிற்றுவித்தால் வேதம் மற்றும் ஆகமங்களை படித்து தேறலாம் என்று தெரிகிறது. கேரளத்தில் உதித்த இந்த ஞானம் இங்கு உள்ள மடங்களிலும் உதிக்கும் காலம் வருமா? அந்த வேத நாயகனே நேரில் வந்து சொன்னால் தான் உண்டு. அந்த நந்தி விலகினாலும் இங்கு இருக்கும் இரண்டு கால் நந்திகள் விலகுமா? ஆவலுடன்
    மயிலாடுதுறையான்

  3. ஜாதி பேதங்களை வேரறுப்போம்,உண்மையான இந்து மதத்தை உலகம் காண வழிவகை செய்வோம்……..தொடரட்டும் இது போன்ற இனிப்பான செய்திகள்

  4. இந்த கட்டுரையை எழுதறதுக்கு கொஞ்சமாவது யோசித்தீர்களா?

    1. ஸ்ரீங்கேரி என்பது, சன்னியாசிகள் மடம்.. ஒருவர் சன்னியாசி ஆகிவிட்டால், அவர்களுக்கு ஜாதி பேதம் கிடையாது.. ஆச்சார்யர் நரேந்திர பூஷன் என்பவர், சன்னியாசம் வாங்கிய பொழுதே, அவர் பறையர் என்ற அடையாளத்தை இழந்து விட்டார்.. அவர் சன்னியாசம் வாங்கியதால்தான் அவரை சிரிங்கேரிக்குள் அனுமதிக்கிறார்கள்.. பறையராக இருப்பதால் அல்ல.. பறையர்களுக்கு மட்டும் அல்ல.. எல்லா ஜாதிக்கும் அதே கட்டுப்பாடுதான்.. சொல்லப் போனால், பறையர்களுக்கு கூட, சிருங்கேரி குரு பார்த்து மனது வைத்தால், உள்ளே விடலாம்.. ஆனால் தர்மத்தை விட்டு மேற்கத்திய கலாச்சாரத்தை கடைபிடிக்கும் துபாஷி பிராமணர்களை அந்த பக்கமே அண்ட விடக்கூடாது, என்பதுதான் சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.. ஆனால் இன்று இருக்கும் நிலையைல் பாருங்கள். .இந்த துபாஷி பிராமணர்கள் சிருங்கேரி மடத்துக்கே ரூல்ஸ் போடுகிறார்கள்..

    2. சிரிங்கேரி மடத்தை பற்றி எவ்வளவு கீழ்த்தரமான எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை உங்கள் கட்டுரையை திரும்பி பாருங்கள்..

    /** இதுவரை பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினரை மடத்தின் பாடசாலைகளிலும், ஆசிரமத்திலும் பயில சிருங்கேரி மடம் அனுமதித்ததில்லை. அத்தகைய இறுக்கமான பழமைவாத நிலைப்பாட்டைத் துறந்து, உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில் ஞானத் தேடலை அங்கீகரிக்கும் விதத்தில் அந்த சம்பிரதாய மடத்தின் இச்செயல்பாடு அமைந்துள்ளது.
    **/

    நீங்கள் உருவாக்கிய செயற்கையான இல்லாத ஒரு பொந்து நெறியை சிருங்கேரி மடம் ஆட்படவில்லை என்பதால், அந்த மடம் பழமைவாதமாகிவிட்டது.. இது ஒரு சிந்தா ரீதியான, சித்தாந்த ரீதியான ஒரு வன்முறை ..

    2. கலியுகத்திற்கு ஸ்மிருதி எழுதிய பராசரர் உங்களை பொருத்த வரையில் ஒரு முட்டாள்.. ஆதிக்க சக்தி.. பறையர்களை அடக்கி ஆள்வதற்கே, அவரருடைய ஸ்மிருதியில், பிராமணர்கள் மட்டும் வேதம் கற்க வேண்டு என்று எழுதியிருக்கிறார்.. ஆகவே, அவருடைய அடக்குமுறையிலிருந்து, பறையர்களை காக்க, உங்கள் இந்துதுவம் உதித்திருக்கிறது.. அப்படித்தானே உங்கள் நினைப்பு… இல்லையென்றால், இப்படி வேதத்தை ஒரு கேவலப்படுத்தும் தலைப்பை இந்த கட்டுரைக்கு கொடுத்து இருக்க மாட்டீர்கள்..

    3. வேதம் கற்பது என்றால் கிறித்துவர்கள் பைபிள் படிப்பது போல எண்ணிக்கொள்வதை நிறுத்துங்கள்.. பைபிளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.. அது போல, வேதத்தையும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதுதான் உங்கள் சித்தாந்தமும் நிலைப்படும்.. இது ஒரு ரியாக்ஷனரி வேலை என்பதை அறிவீர்களா?

    4. வேதத்தை யார் படிக்கலாம்.. படிக்க கூடாது என்பது சாஸ்திரத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.. அதை மாற்ற நீங்கள் யார்.. உங்களுக்கு என்ன தகுதி.. அதை முதலில் சொல்லுங்கள்.. காலம் காலமாக பிராமனர்கள் தான் முறியாக வேதத்தை பயின்று பாதுகாத்து வந்துள்ளார்கள்.. அவர்களுக்கே சாஸ்திரத்தை மாற்றும் உரிமை இல்லதபொழுது, இங்கே இருக்கும் துபாஷி பிராமணர்களுக்கும் மற்ற இந்துதுவவாதிகளுக்கும் எப்படி உரிமை வந்தது..

    (Edited and published)

  5. இச்செயற்பட்டை நினைக்கிற போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘ஜெய ஜெய சங்கர’ என்ற நாவலின் கருப்பொருள் இங்கே சாத்தியமாகிறதோ..? ….

    இச்செயற்பாட்டிற்கு அனுமதியளித்த சிருங்கேரி ஜகத்குரு மஹாஸ்வாமிகளின் திருவடிகளைப் பன்முறை நமஸ்கரிக்கிறோம்..

  6. செய்தியை தந்தமைக்கு எனது பாராட்டுக்கள்

  7. ஆர்.எஸ்.எஸ்.மூலமாக நடைபெறும் மைத்ரேயி குருகுலம் (மங்களூரில்)-சிறுமியருக்கான குருகுலம், பிரபோதினி குருகுலம் (பெங்களூருவில்)-சிறுவர்களுக்கான குருகுலம் இரண்டிலும் 10 வயது முதல் 16 வயது வரையும், வேத விஞ்ஞான குருகுலம் 10 ஆவது வகுப்பு படித்தவர்களுக்கும் 6 ஆண்டுகள் யஜுர்வேதம், பிரஸ்தான த்ரயம் (உபநிஷத், பிராமயஞம், பகவத் கீதை) சூக்தங்கள், மந்திரங்கள் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன . இதில் எல்லா ஜாதியை சேர்ந்தவர்களும் கற்கிறார்கள் என்பது சிறப்பானது. 1994 ஆம் ஆண்டு முதல் விளம்பரம் இல்லாமல் னடைபெற்று வருகிறது.

  8. தமிழின் இயல், இசை, நாடகத்தில் இப்போது தமிழரிடம் அதிகம் இருப்பது நாடகீயம்தான். அதனால்தான் தலைப்பும் கொஞ்சமே கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கிறது.

    புனிதமானது எப்படி புனிதமாக முடியும் ? ஒரு வீரனைப் பார்த்து நீ வீரன் ஆனாய் என்று சொல்வது அவனை அவமதிப்பது போல.

    எனவே, புனிதம் அடைந்தது வேதம் இல்லை. வேதம் சொல்லித் தரும் ஸ்ருங்கேரி மடம்தான் இந்த உயர்ந்த செயலால் புனிதமானது.

    வேதாந்தத்தை நடைமுறையில் இப்போது பின்பற்றிய அம்மடத்தின் கீர்த்தி இதனால் செழித்தோங்கும்.

    .

  9. //வேதம் புனிதமடைந்தது!// — டைட்டில் தவறானது.. வேதம் அசுத்தமாக இருந்தது என்று ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது.

    Senthil
    உங்களின் கருத்தின் நோக்கம் என்ன என்று புரியவில்லை. இந்துக்களை பிளவுபட்டே இருக்க வேண்டும் என விறும்புகிறீர்களா?

    பிராமணர்கள்தான் வேதம் படிக்க வேண்டும் என சொல்ல நீங்கள் யார்? விஸ்வாமித்திரர், வால்மீகி, வியாசர் எல்லோரும் பிராமணர்களா? இவர்களெல்லாம் வேதம் படிக்க மட்டுமில்லை, வேதத்தையே எழுதியவர்கள். கீதையை ஓதியவனே பிராமணனாக இருந்த ஓதவில்லை. கேட்டவனும் பிராமணனில்லை.

    பிராமனனல்லதோர் எழுதிய வேதங்களை பின்பற்ற முடிவு செய்த பழன்குடிகல்தான் பிராமணராக மாறினார்.

  10. The title is in extremely bad taste.. ஆசிரியர் குழு மன்னிப்பு கேட்டால் சந்தோஷ படுவேன்.

  11. செந்தில்,

    நீங்கள் சொல்லும் பாக்கி விஷயங்களை விட்டு இதை மட்டும் பார்கிறேன்

    //
    . ஸ்ரீங்கேரி என்பது, சனியாசிகள் மடம்.. ஒருவர் சன்னியாசி ஆகிவிட்டால், அவர்களுக்கு ஜாதி பேதம் கிடையாது.. ஆச்சார்யர் நரேந்திர பூஷன் என்பவர், சன்னியாசம் வாங்கிய பொழுதே, அவர் பறையர் என்ற அடையாளத்தை இழந்து விட்டார்.. அவர் சன்னியாசம் வாங்கியதால்தான் அவரை சிரிங்கேரிக்குள் அனுமதிக்கிறார்கள்.. பறையராக இருப்பதால் அல்ல.. பறையர்களுக்கு மட்டும் அல்ல.. எல்லா ஜாதிக்கும் அதே கட்டுப்பாடுதான்.. சொல்லப் போனால், பறையர்களுக்கு கூட, சிருங்கேரி குரு பார்த்து மனது வைத்தால், உள்ளே விடலாம்.. ஆனால் தர்மத்தை விட்டு மேற்கத்திய கலாச்சாரத்தை கடைபிடிக்கும் துபாஷி பிராமணர்களை அந்த பக்கமே அண்ட விடக்கூடாது, என்பதுதான் சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.. ஆனால் இன்று இருக்கும் நிலையைல் பாருங்கள். .இந்த துபாஷி பிராமணர்கள் சிருங்கேரி மடத்துக்கே ரூல்ஸ் போடுகிறார்கள்..
    //

    முதலில் (originally) யார் சம்நியாசி ஆகலாம் என்று கூட ரூல் இருக்கு – அதுவும் பிராமணர்களே சம்நியாசி ஆக முடியும் – இப்படிக்கு ஆதி சங்கராச்சாரியார் கீதா பாஷ்யம் கூறுகிறது (மூன்றாம் அத்யாயம் படிக்க). இதை பத்தி அத்வைத வலை குழுக்களில் பெரிய சர்ச்சையே அடிக்கடி நடக்கும் – படிக்க செம்ம காமடியா இருக்கும் (விஷயம் என்னன்னா அதுல பேசுற எவனும் வேத அத்யாயனம் செய்தே இருக்க மாட்டான்)

    ரிஷிகளையும் சம்நியாசிகளையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று முன்பே சொல்லிவிடுகிறேன் – பிராமணர் அல்லாதவர்கள் வானப்ரச்தத்துடன் நிறுத்திக் கொள்வார்கள். பெண்களும் பிராமணர் அல்லாதோரும் சம்நியாசி ஆக முடியாது என்பது பழைய ரூலாக இருந்தது.

    மற்றவர்கள் சம்ந்யாசம் வாங்குவதெல்லாம் உங்களுக்கு பிடிக்காத ஹிந்து மத தோன்றல்களே – அதி புனிதமான பாரம்பரியத்தில் இல்லை. இதன் படி பார்த்தால் ஸ்ருங்கேரி மடம் ஒரு புதிய (நல்ல) விஷ்யத்தை செய்ய முயற்சி செய்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

    வேதம் புனிதமாகியது என்று சொன்னால் என்ன தப்பு – கற்றவனே மனிதன் என்று ஏதாவது பழமொழி சொன்னால் – உடனே அப்போ காமராஜர் மனிதன் இல்லையா. படிக்காதவர்கள் மனிதர்கள் இல்லையா என்றா சண்டை போடுவது. இது ஒரு குறியீடு தானே. இப்படி சொல்லக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிரதாக்கும். இல்லையே எதற்காக சட்டமெல்லாம் போட்டு இந்த மதத்தை இஸ்லாமாக்குகிரீர்கள்.

    சாச்ற்றத்துல பூணல காதுல மாட்டிகிட்டு உச்சா போனும்னு சொல்றாங்க – அதுக்காக இன்னைக்கும் சில பேர் corporate office ல urinaries ல காதுல பூணல மாட்டிகிட்டு உச்சா போரானங்க – அப்பா அந்த காலத்துல உக்காந்துகிட்டு போனாங்க அப்போ பூணல் தரைல படும் பூணல உச்சா படும்னு அப்படி சொன்னாங்கப்பான்ன கேக்க மாட்டேங்குறாங்க சில பேர்

    சாஸ்திரம் என்பதை வழிகாட்டுதலுக்கு பயன் படுத்தினால் சரி, அதை rule booka மாத்தினா அதற்க்கு பெயர் மடமை, இஸ்லாமிசம்.

    சனிக்கழமை வேங்கடாச்சலபதிக்காக கோழி சாப்டாம இருப்பது – புரட்டாசி மார்கழில வெங்காயம் சாப்டாம இருக்கறதெல்லாம் இப்படி தான் சும்மா ஒப்புக்கு சாஸ்திரம் பாக்கறது. சாப்ட கூடாதுன்ன மொத்தமா விட்டுரலாம்ல?

    நாமலே பரவா இல்லை ஜியாநிச்டுகள் சனி ஞாயத்து கிழமைல electronic போருல்ளெல்லாம் டச்சு கூட பன்னமாட்டார்கலாம் – அதனால ஹோட்டல் ரூம்ல swipe கார்டுக்கு பதிலா ரெண்டு பாது காப்பாளர்களை போட்டு ரூமா பாத்திகிராணுவ

    பிராமணர் அல்லாதோர் வேதம் சொல்லக் கூடாதுன்னு தர்ம சாஸ்திரங்களும் மிமம்சாமும் தான் சொல்கிறது. வேதத்திலோ வேதாந்ததிலோ எங்குமே இல்லை. காட்டுங்கள் பார்க்கலாம் – ஜாபாலி கதை படித்ததில்லையா

    பிராமணர் அல்லாதோர் வேதம் படிக்க கூடாதென்றால் வேதாந்தம் படிக்கலாமா. படிக்கலாம் என்று தான் சாஸ்திரம் சொல்கிறது. அதே சாஸ்திரம் வேத அத்யாயனம் செய்து விட்டு தான் வேதாந்தம் படிக்க வேண்டும் என்கிறது – முரணாக இல்லை.

    இதுவே பரவா இல்லை – சில கோஷ்டிங்க பொம்பளையாளுங்க விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லப்டாது பகவத் கீதா படிக்கப்டாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இதற்க்கெல்லாம் எவ்வளவு யோசித்து பார்த்தும் ஒரு நல்ல காரணம் கூட கிடைக்க வில்லை.

    சரி பராசரர் சொல்கிறார் என்பதை விடுத்து ஏன் பிராமணர் அல்லாதோர் வேடம் சொல்லக் கூடாது என்று உங்களால் உருப்படியான ஒரு காரணம் சொல்ல முடியுமா?

    இன்றைக்கு பிராமணர்கள் எலாம் அமேரிக்கா லண்டன் பாரிஸ் நகரங்களில் குடும்பத்துடன் குடித்து கும்மாளம் அடித்து கொண்டிருக்கிறார்கள். இப்படி சில பறையர்கள் படித்து தான் வேதத்தை காப்பாற்றியே ஆக வேண்டும். நிலை உள்ளது.

  12. அன்புள்ள சாரங் அல்லது சரங்,

    (விஷயம் என்னன்னா அதுல பேசுற எவனும் வேத அத்யாயனம் செய்தே இருக்க மாட்டான்)

    வேத அத்தியாயனம் செய்தவர்களை சற்று உயர்த்தியும் , பிறரை சற்று தாழ்த்தியும் நீங்கள் பேசுவதால் அது உண்மையாகிவிடாது. வேத அத்தியாயனம் என்பது இந்துமதத்தில் ஒரு சிறு பகுதியே. உண்மையான இந்துக்கள் வேதம் படிக்காதோரே அதிகம். வேதப்படிப்பு மட்டுமே இந்துமதம் என்றால் , ஏறக்குறைய இந்துமதம் செத்துவிட்டது என்று எல்லோரும் சொல்லிவிடுவார்கள்.

    அத்வைத வலைத்தளங்களில் பெரிய சர்ச்சை நடக்கிறது என்பது தெரிந்து மிகவும் மகிழ்கிறேன். ஏனெனில் இந்துமதம் மூட மதமல்ல என்பது இதன் மூலம் உறுதியாகிறது. சிந்தனை சுதந்திரம் இருந்தால் தான் விவாதங்கள் மூலம் அழுக்குகளை களைய ஏதுவாகும். அழுக்கு இருப்பது குற்றமல்ல, அழுக்கை களைய முயற்சி எடுக்காது , சும்மா இருப்பதுதான் குற்றம். எனவே விவாதங்களும், சர்ச்சைகளும் தொடர்வதே நல்லது.

    அவை உயர்வுக்கு வழிவகுக்கும்.நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள மிக உதவும்.

    ஒரு வயதான பெரியவர் ( தொண்ணூறை நெருங்கி கொண்டிருப்பவர்) ஒரு தமிழ் ஏட்டில் எழுதிய ஒரு கட்டுரையில் ” பெண்கள் காயத்திரி மந்திரத்தை சொல்ல கூடாது” சொன்னால், உடல் நலத்தில் பாதிப்புகள் வரும் என்று தெரிவித்திருந்தார். அந்த கட்டுரையை என் அருகில் இருந்த ஒரு பெண்மணி மதிய உணவு இடைவேளையின் போது படித்து கொண்டிருந்தார்.

    அவர் தன் மதிய உணவு வேளை நண்பர்களுடன் பேசும்போது சொன்னார்:

    ” இவனை போன்ற நாய்களை கோயிலில் இருந்து விரட்டி அடித்து விட்டு , பெண்களே இனிமேல் எல்லா கோயில்களிலும், மத சடங்குகளிலும் தலைமை தாங்கவேண்டும். வேத மந்திரங்களிலே மிக புனிதமானது என்று சொல்லப்படும் காயத்திரி மாதாவே ஒரு பெண் வடிவம் தான். அப்படி இருக்க பெண்களை அடிமையாக வைத்திருந்த ஆணாதிக்க சமுதாயத்தின் பொறுக்கி புத்திக்கு நாம் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இடம் கொடுக்க கூடாது. வேத மந்திரங்கள் உயர்நலம் அளிப்பவை. குறுகிய புத்தி படைத்த சில ஆண்கள் , பெண்களை வேதம் படிக்க விடாமல், சாஸ்திரம் என்று பொய்களை சொல்லி , பெண் கல்வியை புறக்கணித்தனர். அதே நிலை இனியும் தொடரக்கூடாது. பெண்களுக்கு கோயில், மசூதி, சர்ச்சு , என்று எல்லா இடங்களிலும் மத தலைமை மற்றும் மத வழிபாடுகளில் ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு செய்ய வேண்டும். மதம் என்ற பெயரால் பெண்களை சிறுமைப்படுத்தும் மதங்களை ஒழிப்போம் ” என்று பொங்கி தள்ளிவிட்டார்.

    கீதைக்கு பலர் விமரிசனம் மற்றும் உரை எழுதியுள்ளார்கள். ஆதி சங்கர பகவத் பாதர் பெரு மதிப்பிற்குரியவர். அதற்காக , பிராமணர் மட்டுமே சந்நியாசி ஆக வேண்டும் என்று அவர் கூறி இருந்தாலும் , நாம் அதை இன்று விமர்சிக்க முடியாது. ஏனெனில், ஒவ்வொரு மொழியிலும் காலந்தோறும் சொற்களின் பொருள் மாறுகிறது. அவருடைய கீதை உரைக்கு நீங்கள் தவறான கண்ணோட்டத்துடன் பொருள் கொண்டுள்ளீர்கள்.

    இன்று சாதி மற்றும் வர்ணம் இவற்றின் பொருள் வித்தியாசம் பலருக்கும் தெரியாது. அந்தக்காலத்தில் பிராமணன் என்பது சாதியல்ல. அது ஒரு வர்ணம். எந்த சாதியில் பிறந்தவனும் , பிராமணன் என்ற வர்ணத்தை சேரமுடியும். ஆனால், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ,பிராமணன் என்பது ஒரு சாதியாக கருதப்படுகிறது. பிராமணன் என்ற சாதியை சேர்ந்தவன் சந்நியாசி ஆவது மிக கடினம். ஆனால் பிராமணன் என்ற வருணத்தை சேர்ந்தவன் மிக எளிதாக சந்நியாசி ஆக முடியும்.

    சங்கரர், இராமானுஜர் போன்ற பெரியோர் காலமும் இன்றைய பிரச்சினைகளும் முற்றிலும் மாறுபட்டவை. ஊருக்கெல்லாம்” ஓம் நமோ நாராயணாய ” என்ற உயர் சொற்களை , கோபுரத்தின் மீது ஏறி உரக்க கூவிய அந்த பிரானின் வழிவந்த கோயில்களில் , இன்று வைணவ பிராமணர்களை தவிர, வைணவ செட்டியாரோ, வைணவ நாயுடுவோ, வைணவ ரெட்டியோ, பூஜை செய்யும் சமஉரிமை பெற்றுள்ளார்களா?

    எனவே, வைணவம், மற்றும் சைவம் இரண்டிலுமே சீர்திருத்தவாதிகள் இருந்ததும் உண்மை, அவர்கள் செய்த சீர்திருத்தங்கள் பிற்காலத்தில் புறக்கணிக்கப்பட்டுவிட்டன என்பதும் உண்மை.

    வேத மந்திரமான “காயத்திரியை” பெண்கள் சொல்லக்கூடாது என்று சொல்லும் ஆணாதிக்க வெறியர்கள் இருக்கும் நம் நாட்டில், பிற்கால இடைச்செருகல்கள் ஆகிய விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற இறைப்புகழ்மாலைகளை பெண்கள் சொல்லக்கூடாது என்று சொல்லும் , சில மூடர்கள் இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. இந்த மூடர்கள் அனைவரும் நமது உடன் பிறந்த மற்றும் உடன் பிறவா சகோதரர்களே ஆவார்கள். எனவே அவர்களிடம் உண்மை நிலையை எடுத்து சொல்லி, திருத்துவோம்.

    இந்து மதத்தை, ஆதி சங்கரரோ, ராமானுஜரோ உருவாக்கவில்லை. மூதாதையர் உருவாக்கிய வழியில் இவர்கள் நடைபோட்டனர். அவ்வளவு தான். இருவரும் சில சீர்திருத்தங்களை செய்து , அந்த கால கட்டங்களில் நம் மதத்தை மேலும் உயர்த்தினர். அவர்களுக்கு முன்னரும் நம் மதம் இருந்தது. நமக்கு பிறகும் இந்த மதம் உலகம் முழுதும் வியாபிக்கும்.

    வேதம் என்றுமே புனிதமானது தான். இன்று புதியதாய் புனிதமாகவில்லை. மடங்கள் நல்ல பாதையில் அடியெடுக்க , ஒரு புதிய பாதையை காட்டியுள்ள சிருங்கேரி சங்கராச்சாரிய சுவாமிகளின் திருவடிகளுக்கு இந்துக்களாகிய நாங்கள் மிக்க அன்பினையும், மரியாதையையும் , சரணத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    தர்ம சாஸ்திரத்தையும், மீமாம்சத்தையும் திருத்துவோம். ஏனெனில் அவை வேதம் அல்ல. எங்கள் முன்னோர் உருவாக்கிய ஒரு வழிகாட்டுதலே. அவற்றில் இருக்கும் தவறுகளை களையவேண்டியது, நம் முன்னோர்களின் வாரிசாகிய நம் கடமை.

    ” கற்றவனே மனிதன்” – என்பது தவறு. கற்றவனும் மனிதனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதே சரி. கல்வி என்பது ஒரு தூய்மை படுத்தும் கருவி அல்ல. ஒரு சிலரே , கல்வியை புனிதமான கருவியாக கொண்டு உயர்கின்றனர். கல்வியால் மிருகமாகி , மனித இனத்தை அழிக்க சதி செய்யும், வெடிகுண்டு தயாரிக்கும் நாசகார சக்திகளும் உள்ளன. எனவே, கல்விக்கும், மனித தன்மைக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

    இது போலவே, “அவனே கடவுள், இவனே கடவுள் ” என்பதும் ஒரு முழு மூடத்தனமே. “அவனும் கடவுளே, இவனும் கடவுளே, அதுவும் கடவுளே, இதுவும் கடவுளே ” என்பதே உண்மை. மீண்டும் சொல்கிறேன். வேதம் என்றும் புனிதமே.

    சேவற்கொடியோன்

  13. @sarang

    சன்னியாசங்கறது என்ன ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல இருக்கிற ஏ.சி ரூமா? அதை ஆதி சங்கரர் மற்ற வர்ணத்தவருக்கு மறுத்துவிட்டார்னு சொல்றதுக்கு? இல்ல சன்னியாசத்துல குதிக்கிறது, நீச்சல் குளத்துல ஹாயா குதிக்கிற விஷ்யமா.. மற்ற வர்ணாத்தவரை குதிக்க விடலன்னு சொல்ல?

    கொஞ்சமாவது மூளையை உபயோகப்படுத்துங்கய்யா..

    எல்லாத்தையும் சன்னியாசம் வாங்க வைத்து, தன்னோடு புத்தர் கூட்டிட்டு போனதன் விளைவுகள, வரலாறு தெளிவாக நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.. அதை யாராவது கவனித்தீர்களா?

    /** ரிஷிகளையும் சம்நியாசிகளையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று முன்பே சொல்லிவிடுகிறேன் **/

    இல்லை.. குழப்பவில்லை.. இரண்டும் வேறு வேறு என்பதை நன்றாகவே உணர்கிறேன்..

    சன்னியாசம் என்பது, புத்தர் காலத்துக்கு அப்புறம்தான் பிரபலமானது.. நேரிடையாக, பிரம்மச்சரியத்திலிருந்து சன்னியாசத்துக்கு போகலாம் என்பது, புத்தர் கொண்டு வந்த ஒரு கிறுக்குத்தனம்.. அதுக்கு முன்னாடி, அது தவறான ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது.. இன்னும் கூட, ஆதி சைவ மடங்களில், ஒருவர் திருமணம் செய்து, குழந்தை பெற்ற பிறகே, ஈஸ்வரன் கோயில் கருவரையில் பூஜை செய்யும் அதிகாரம் வரும், என்ற கட்டுப்பாடு இருக்கிறது..

    ரிஷி என்பதும், முனி என்பதும் வேறுபட்ட விஷ்யம்..

    /** பிராமணர் அல்லாதவர்கள் வானப்ரச்தத்துடன் நிறுத்திக் கொள்வார்கள். **/

    அப்படி யல்ல.. மேற்கோள் காட்டுங்கள்.. நீங்கள் சொல்வது தவறு என்று நினைக்கிறேன்.. ..

    /** பெண்களும் பிராமணர் அல்லாதோரும் சம்நியாசி ஆக முடியாது என்பது பழைய ரூலாக இருந்தது. **/

    பழைய ரூல்னா? மறுபடியும் மேற்கோள் காட்டுங்கள்.. அப்படி ரூல் இருந்தால் நான் வரவேற்கிறேன்..

    /** வேதம் புனிதமாகியது என்று சொன்னால் என்ன தப்பு **/

    சாரங்க் (sarang) யோக்கியனாயிட்டாருய்யா.. இப்படி சொன்னால் என்ன தப்பு?

    /** சாச்ற்றத்துல பூணல காதுல மாட்டிகிட்டு உச்சா போனும்னு சொல்றாங்க – அதுக்காக இன்னைக்கும் சில பேர் corporate office ல urinaries ல காதுல பூணல மாட்டிகிட்டு உச்சா போரானங்க
    **/
    தொடர்ந்து ஒரு நெறிமுறையை கடைபிடிக்கும்போது, அது ஒரு பழக்கமாகிவிடும்.. அந்த வகையில, சில பிராமணர்கள் கார்ப்பரேட் பாத்ரூமிலும் இதை செய்வதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.. தவறு எங்கிருக்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும்.. தவறு, கார்ப்பரேட் ஆஃபீசுக்கு வேலைக்கு போனதுக்கு அப்புறமும் பூனூலை தொடர்ந்து மாட்டிக் கொண்டிருப்பதில் இருக்கிறது.. தர்மத்தை விட்டு ரொம்ப தூரம் விலகிவிட்டு, மேற்கத்திய பாணியில் இருக்கும் சென்னை போன்ற நகரங்களுக்கு குடி போனபோதே தன்னுடைய பிராமண வர்ணம் போய் விட்டது என்பதை நகரத்து (கெட்டுப்போன துவாஷி ) பிராமணர்கள் உணர வேண்டும்..

    /** சாஸ்திரம் என்பதை வழிகாட்டுதலுக்கு பயன் படுத்தினால் சரி, அதை rule booka மாத்தினா அதற்க்கு பெயர் மடமை, இஸ்லாமிசம். **/

    ஒவ்வொரு தடவையும் வழி கரெக்டானெல்லாம் மனசு யோசிக்காது.. சாஸ்திரம் என்பது பழக்கத்தில் வருகிற ஒன்னு.. ரோட்ல கார் ஓட்டும்போது, இடது புறமா போகனும், திரும்பும்போது இண்டிகேடர் போடனும், ஹார்ன் அடிக்கனும்.. இதெல்லாம், பழக்கத்தில்தான் வரும்.. அதுக்குத்தான் டிரைவிங்க் ஸ்கூல் இருக்கு.. அத விட்டுடு, ஒவ்வொரு தடவையும் நாம் சரியான வழியான்னு யோசிச்சுக்கிட்டு இருக்க மாட்டோம்..
    அது போல தான் சாஸ்திரமும்..

    /** சரி பராசரர் சொல்கிறார் என்பதை விடுத்து ஏன் பிராமணர் அல்லாதோர் வேடம் சொல்லக் கூடாது என்று உங்களால் உருப்படியான ஒரு காரணம் சொல்ல முடியுமா?
    **/

    முதலில் வேதம் படிப்பது என்றால் என்னவென்று சொல்லுங்கள்.. அந்த வேதம் கற்றுக் கொள்ளும் முறை என்ன.. அதை கற்றுக் கொள்வதற்கு தேவையான தகுதிகள் என்ன.. இதுக்கு பதில் சொல்லுங்க.. பின்னாடி, ஏன் பிராமணர் அல்லாதோர் வேதம் சொல்லக் கூடாதுன்னு விவாதிக்கலாம்..

    (Edited and published)

  14. @சேவற்கொடியோன்

    /** ” இவனை போன்ற நாய்களை கோயிலில் இருந்து விரட்டி அடித்து விட்டு , பெண்களே இனிமேல் எல்லா கோயில்களிலும், மத சடங்குகளிலும் தலைமை தாங்கவேண்டும். வேத மந்திரங்களிலே மிக புனிதமானது என்று சொல்லப்படும் காயத்திரி மாதாவே ஒரு பெண் வடிவம் தான். அப்படி இருக்க பெண்களை அடிமையாக வைத்திருந்த ஆணாதிக்க சமுதாயத்தின் பொறுக்கி புத்திக்கு நாம் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இடம் கொடுக்க கூடாது. வேத மந்திரங்கள் உயர்நலம் அளிப்பவை. குறுகிய புத்தி படைத்த சில ஆண்கள் , பெண்களை வேதம் படிக்க விடாமல், சாஸ்திரம் என்று பொய்களை சொல்லி , பெண் கல்வியை புறக்கணித்தனர். அதே நிலை இனியும் தொடரக்கூடாது. பெண்களுக்கு கோயில், மசூதி, சர்ச்சு , என்று எல்லா இடங்களிலும் மத தலைமை மற்றும் மத வழிபாடுகளில் ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு செய்ய வேண்டும். மதம் என்ற பெயரால் பெண்களை சிறுமைப்படுத்தும் மதங்களை ஒழிப்போம் ” என்று பொங்கி தள்ளிவிட்டார்.
    **/

    சரியான பொம்பள ரௌடியா இருப்பாங்க போல.. அது சரி.. காயத்ரி மந்திரத்துக்கும், காயத்ரி தேவிக்கும் என்ன சம்பந்தம்? அந்த மந்திரத்தின் அர்த்ததை பார்க்கும்பொழுது, எந்த பெண் தெய்வத்தையும் குறிக்கவில்லை.. பொதுவாக கடவுளை குறிக்கிறது.. காயத்ரி என்பது, காயத்ரம் என்ற சம்ஸ்கிருத சொல்லின் பெண்பால்.. காயத்ரம் என்றால் பாடல் அல்லது ஓதுதல் என்பது பொருள்.. ( நான் சொல்வது தவறு என்றால் சொல்லுங்கள்.. திருத்திக் கொள்கிறேன்.. ) .. மந்திரத்துள் இந்த மந்திரம் தாய் மந்திரம், என்ற அர்த்தத்தில் காயத்ரி என்று சொல்கிறார்கள்..

    சரி.. காயத்ரி தேவி வந்து, நானும் அந்த மந்திரத்தை சொல்வேன் என்று எங்காவது அடம்புடித்ததா?

    அந்த வயதான் பெரியவர் சொன்னதில் எந்த தவறுமில்லை என்பதை அந்த அம்மணி நிரூபித்து விட்டாங்க.. அந்த பெரியவரும், நமது முன்னோர்களும் கரெக்டாதான் சொல்லியிருக்காங்க… அந்த பெண் கிட்ட சொல்லிடுங்க.. பெண்கள வேதம் படிக்க, பிராமணர் அல்லாத நாங்களும் விடமாட்டோம்.. வேணும்னா அரேபியாவில போய் பர்தாக்குள்ள முழு சுதந்திரத்தையும் அனுபவிக்க சொல்லுங்க.. இல்லை அதை தாண்டி ஐரோப்பாவுக்கு போய், யூஸ் அண்ட் த்ரோ பொருளா இருந்து இன்னும் சுதந்திரத்தை அனுபவிக்க சொல்லுங்க..

    முதல்ல பெண்கள் எதுக்கு வேதம் படிக்கனும்னு சொல்லுங்க?

    கோயில்ல பெண்கள பூஜை பண்ண விடலைன்னா உடனே அடக்குமுறை.. இன்னொரு கிறுக்குத்தனம்.. என்னை கூட தான் பிரதம மந்திரியா உட்கார விட மாட்டேங்கறாங்க.. நானும் இனிமே “என்னை அடக்குமுறை பண்றாங்கன்னு” கத்தறேன்.. அப்படி இல்லைனா, சினிமா பாணியில் ஒரு புரட்சி பண்ணி, ஒரு டயலாக் விடறேன்.. எனக்கு கிடைக்காத பிரதமர் பதவி யாருக்குமே வேண்டாம்..

    /** அந்தக்காலத்தில் பிராமணன் என்பது சாதியல்ல. அது ஒரு வர்ணம். எந்த சாதியில் பிறந்தவனும் , பிராமணன் என்ற வர்ணத்தை சேரமுடியும். ஆனால், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ,பிராமணன் என்பது ஒரு சாதியாக கருதப்படுகிறது.
    **/

    பிராமணன் என்பது ஒரு வர்ணம்.. எந்த சந்தேகமும் இல்லை.. ஆதி சைவர் என்பது ஒரு பிராமண ஜாதி.. ஐயங்கார் என்பது ஒரு பிராமண ஜாதி.. இப்பொழுது புரிகிறதா, ஜாதிக்கும் வர்ணத்துக்கும் உள்ள வித்தியாசம்? இதை பற்றி என்னுடைய வலைத்தளத்தில் மேலும் விளக்கியுள்ளேன்.. https://psenthilraja.wordpress.com/2011/09/07/the-birth-based-hysteria-2-why-birth-based/

    /** ஊருக்கெல்லாம்” ஓம் நமோ நாராயணாய ” என்ற உயர் சொற்களை , கோபுரத்தின் மீது ஏறி உரக்க கூவிய அந்த பிரானின் வழிவந்த கோயில்களில் , இன்று வைணவ பிராமணர்களை தவிர, வைணவ செட்டியாரோ, வைணவ நாயுடுவோ, வைணவ ரெட்டியோ, பூஜை செய்யும் சமஉரிமை பெற்றுள்ளார்களா?
    **/
    எதுக்கு ராமானுஜர இப்படி தூக்கி வைத்து பேசறீங்க? அவர் செய்தது, குரு துரோகம்.. அவரை பற்றி தனி பதிவில் விவாதிக்கலாம்..

    /** வேத மந்திரமான “காயத்திரியை” பெண்கள் சொல்லக்கூடாது என்று சொல்லும் ஆணாதிக்க வெறியர்கள் இருக்கும் நம் நாட்டில் **/

    காயத்ரி மந்திரத்தை பெண்கள் சொல்லக்கூடாதுன்னு சொன்னா, அது எப்படி ஆணாதிக்கம்? ஆணாதிக்கம்னு சொல்றதுக்கு உண்மையில் சீரியசான மற்ற விஷயங்கள் இருக்கும்பொழுது, இந்த மாதிரி சொல்வது பித்துக்குளித்தனம்..

    /** இந்து மதத்தை, ஆதி சங்கரரோ, ராமானுஜரோ உருவாக்கவில்லை. மூதாதையர் உருவாக்கிய வழியில் இவர்கள் நடைபோட்டனர். அவ்வளவு தான்.
    **/

    இந்து மதத்தை உருவாக்கியவர்கள் ஹிந்துதுவவாதிகள்.. சுமார் ஒரு 150 வருடங்கள் தான் இருக்கும்.. அதுக்கு முன்னாடி ஹிந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை.. இது சம்பந்தமாக ஜடாயுவுடன், இன்னொரு பதிவில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது – https://tamilhindu.com/2011/11/hindu_identity_what_and_why_1

    ஆதி சங்கரர் இருக்கிற சிறு சிறு மதங்களை தொகுத்து சன்மதங்களை நிறுவினார்.. அவராக எந்த மதத்தையும் உருவாக்கவில்லை.. ராமானுஜர், இருக்கிற வைஷ்ணவத்தை, ஸ்ரீவைஷ்ணவமாக மாற்றியவர்.. அவ்வளவே..

    /** தர்ம சாஸ்திரத்தையும், மீமாம்சத்தையும் திருத்துவோம். **/

    வடிவேல் பாணியில் சொல்லனும்னா…. கிளம்பிட்டாங்கய்யா…. கிளம்பிட்டாங்கய்யா..!!!!!!!!

    (Edited and published)

  15. திரு செந்தில்!

    //4. வேதத்தை யார் படிக்கலாம்.. படிக்க கூடாது என்பது சாஸ்திரத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.. அதை மாற்ற நீங்கள் யார்.. உங்களுக்கு என்ன தகுதி.. அதை முதலில் சொல்லுங்கள்.. காலம் காலமாக பிராமனர்கள் தான் முறியாக வேதத்தை பயின்று பாதுகாத்து வந்துள்ளார்கள்.. அவர்களுக்கே சாஸ்திரத்தை மாற்றும் உரிமை இல்லதபொழுது, இங்கே இருக்கும் துபாஷி பிராமணர்களுக்கும் மற்ற இந்துதுவவாதிகளுக்கும் எப்படி உரிமை வந்தது..//

    உண்மையை உள்ளபடி உரத்துக் கூறியதற்கு நன்றி!

    அதே சமயம் ‘நம் இந்து மதத்தில் நமக்கு வேதம் படிக்க முடியாது. வேதம் படிக்க அனுமதிக்கும் இஸ்லாத்தையோ கிறித்தவத்தையோ ஏற்றுக் கொள்ளலாம்’ என்று ஒரு பிற்படுத்தப்பட்டவன் முயற்ச்சித்தால் அங்கும் வந்து அவனுக்கு முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகை நியாயம.

    ஒன்று இந்து மத வேதங்களை திருத்த வேண்டும். அல்லது விருமபுபவர்கள் வேறு மதத்துக்கு சென்று விடலாம் என்று பொதுவான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். அதுதானே நியாயாம்?

  16. இதை நான் எழுதுவது போற்றுதலுக்குரிய இந்துமதத்தின் உன்னத மகான்களையும், சமய மரபுகளையும் தொடர்ந்து அவமதித்து வரும் செந்தில் என்ற சாதியவாதி கருத்துக் குருடருக்கு அல்ல. அவரது மறுமொழிகளைப் படித்து குழம்பும் மற்றவர்களுக்காக. அவருடன் நான் விவாதம் செய்யவில்லை. அவர் குறிப்பிட்டிருக்கும் பதிவின் மறுமொழிகளில் பர்த்ருஹரியின் வாய்மொழி மூலம் அதை ஏற்கனவே சொல்லி விட்டேன். விவாதம் செய்வதற்கும் ஒரு தகுதி வேண்டும்.

    காயத்ரி மந்திரத்தின் தேவதை “பெண்” இல்லையாம். சரி. ஆனால் ரிக்வேதத்தில் மந்திர திரஷ்டாக்களாக உள்ள 26 பெண் ரிஷிகள்? அவர்கள் வெளிப்படையான பெண் பெயர்கள் கொண்டவர்கள் தானே? அம்ப்ருணரின் மகளான “வாக்” என்ற பெண் தன்னையே தேவி ஸ்வரூபமாக கருதி பாடிய தேவி சூக்தத்தை என்ன செய்வது? (தேவி சூக்தம் எனது மொழியாக்கத்தில் – https://tamilhindu.com/2010/05/devi-sukta-in-tamil/) கமிசார் செந்தில் அதையெல்லாம் வேதத்தில் இருந்து நீக்கி விடுவாரா?

    // காயத்ரி மந்திரத்தை பெண்கள் சொல்லக்கூடாதுன்னு சொன்னா, அது எப்படி ஆணாதிக்கம்? ஆணாதிக்கம்னு சொல்றதுக்கு உண்மையில் சீரியசான மற்ற விஷயங்கள் இருக்கும்பொழுது, இந்த மாதிரி சொல்வது பித்துக்குளித்தனம். //

    இதோ நமக்கு முந்தைய தலைமுறையில் வாழ்ந்த மகான் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் காயத்ரி மந்திரம் பிறப்பு வேறுபாடின்றி, பால் வேறுபாடின்றி அனைவருக்கும் உரியது என்று சொல்லியிருக்கிறார். அந்த முழுக் கட்டுரையும் இந்த தளத்திலேயே உள்ளது – https://tamilhindu.com/2009/06/gayatri-mantra-for-all/

    இந்த ஞான குரு பித்துக்குளியா? கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்த பாரதி பித்துக்குளியா? ஸ்ரீராமகிருஷ்ண மடம் முதல் அமிர்தானந்தமயி மடம் வரை உள்ள நூற்றுக் கணக்கான இந்து ஆன்மீக மடங்கள் பித்துக்குளியா? இன்று ஆயிரக் கணக்கான பள்ளிகளில் காயத்ரி மந்திரத்தை ஸ்கூல் பிரேயராக வைத்து குழந்தைகளின் மனதில் இறையுணர்வை வளர்க்கும் நல்லாசிரியர்கள் பித்துக் குளியா? என் ஐந்து வயது மகளுக்கு காயத்ரி மந்திரத்தை சொல்லிக் கொடுக்கும் நான் பித்துக் குளியா?

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்

    என்பது பொய்யா மொழி.

    இந்து தர்மம் பற்றிய நெறிமுறைகளுக்கு யார் அத்தாரிட்டி? வேதாந்த நெறிப்படி துறவு பூண்டு வாழ்வாங்கு வாழ்ந்த நிறைமொழி மாந்தரான சுவாமிகளா அல்லது அகம்பாவமும், அரைகுறை அறிவும் கொண்டு உளறும் இந்த அற்பரா? வாசகர்களுக்கே விட்டு விடுகிறேன்.

    செந்திலின் சித்தாந்தப் படி, ஈழவர் குலத்தில் பிறந்த ஸ்ரீ நாராயண குரு வேத வேதாந்தம் படித்திருக்கக் கூடாது. சிவ பிரதிஷ்டை செய்திருக்கக் கூடாது. ஞான குருவாக ஆகியிருக்கக் கூடாது. அவரது “குல தர்மப் படி” கள் காய்ச்சி விற்றிருந்திருக்க வேண்டும். கொங்கு கவுண்டர் சமூகத்தில் பிறந்த சின்னு (பூர்வாசிரமத்தில் சுவாமி சித்பவானந்தர்) பண்ணையாட்களை அடக்கி ஆண்டு கொண்டு ஒரு நிலப்புரபுவாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். அவர் ஸ்ரீராமகிருஷ்ண மரபில் துறவியாகி ஞானத்தைப் போதித்திருக்கவே கூடாது. இதை இப்படியே நீட்டினால், இன்னும் பல நூற்றாண்டுகள் முன்பு, வால்மீகி என்ற வேடன் தன் குலாசாரப் படி பறவைகளை வேட்டையாடுவதொடு நின்றிருக்க வேண்டும். கிருஷ்ண த்வைபாயனன் மீன்வலை வீசியதைத் தவிர வேறெதுவும் செய்திருக்கக் கூடாது. சொல்லப் போனால் அவனது தந்தை பராசரன் செம்படவப் பெண்ணோடு கூடியிருக்கவே கூடாது! :))

    ஒரு சாரமும் இல்லாத வெறுப்புணர்வில் ஊறிய ”உள்ளூர்வாதத்தை”யும் சாதிய மேட்டிமைவாதத்தையுமே மேதாவித்தனமாக பேசும் கிணற்றுத் தவளைகள் முதலில் நமது பண்பாட்டையும், வரலாற்றையும் உருப்படியாகக் கற்றுக் கொள்ளட்டும். அதற்கும் முன்பு பணிவு என்ற விஷயத்தைக் கற்றுக் கொள்ளட்டும்.

  17. எங்க சுத்தியும் ரங்கரை சேவித்தல் என்பது இதுதான்.
    யார் ஹிந்து மத சம்பந்தமாக எதைபேசினாலும் பிராமணர் என்ற ஜாதியினரை திட்டுதல் [ துபாஷி பிராமணர்] கழக வியாதி. இதற்கு மருந்து தெளிந்த வேறுப்பிலாத மனது.அதுவோ ரொம்ப காஸ்ட்லி.
    எல்லாம் கெட்ட நிலையில் ஒரு ஜாதியினர் மட்டும் தங்கள் முன்னோர்ககுள் தர்மங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பது காமடி.
    இதோ, ஒரு காட்டாட்சி ஐந்து வருடங்கள் தமிழ் நாட்டை சுரண்டி தள்ளி அதன் விளைவை இன்றும் அனுபவிக்கிறோம்
    யோசித்துப்பாருங்கள்-ஆயிரம் வருடங்கள் அன்னியர் ஆதிக்கம், தமிழ் நாடு சூழலுடன் வடக்கு ஹிந்துக்களை ஒப்பிடுங்கள்.
    அவர்கள் எவ்வளவு இழந்திருக்கிறார்கள் என்று புரியும்.
    ஒரு காலத்தில் எங்கள் முன்னோர்களும் விபூதி எனப்படும் ஹோம சம்பல் அணிந்திருந்தார்களோ? என்றார் என் மராட்டி பேசும் நண்பர்.
    .
    அங்கே பிராமண சாஸ்திரிமார்கள் குடுமி கூட வைப்பதில்லை.
    இன்று தமிழ் நாட்டில் கேலி பேசி ,வெறுப்பு வளர்த்து அடச்சே இந்த தர்மமே வேண்டாம் என்று கொஞ்ச நஞ்சம் தங்கள் முன்னோர் வழியை பின்பற்ற நினைக்கும் சாஸ்திரி குடும்பத்து பிராமணர்களும் ஓடும் காலம்.

    எத்தனை பேர் சாமி அவரவர் தர்மத்தை [ முன்னோர்கள் -வீட்டு பெரியவர்கள் வழி] காப்பற்றினார்கள் இங்கே மற்றவரை குறை சொல்ல ?
    யாரால் முடிந்தது?என்று எப்படி சரி செய்யலாம் என்று நல்ல முறையில் விவாதம் நடப்பது பலருக்கு பொறுக்கவில்லை.
    இன்று வெளிநாட்டில் வசதியாக இருக்கும் பிராமணர்கள்/ மற்ற உயர் ஜாதியினர் சிலர் தங்கள் குழந்களை ஸ்பானிஷ் நடன வகுப்பில் சேர்ப்பார்கள்.ஆனால் சிலர் மட்டும் தங்கள் பிள்ளைகள் நம் தர்மத்தைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்கள்.இவர்களை ஏமாற்ற ஹை டெக் ஆங்கிலம் பேசும் குருமார்கள் வேறு.

    உண்மையில் சமூகத்திற்கு நல்லது ஏதேனும் செய்ய நினைப்பவர்கள் மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருக்க மாட்டார்கள்.
    கட்டுரையின் தலைப்பு பிரிவினை சக்திகளுக்கு அல்வா. அவர்கள் அதை நமக்கு இன்னும் கொஞ்சம் கொடுக்க உதவும்.
    நமக்கும் சாப்பிட்டு வெகு நாள் பழக்கம்.
    திரு ஜடாயு
    அப்போதே நன்றி சொல்ல நினைத்தேன், பாத்ரு ஹரி செய்யுளுக்கு மற்றும் முதலைக்கு டென்டிஸ்ட் ஆக நினைக்காமல் பதில் அளிப்பதற்கு நன்றி.:-)
    படிக்கும் மற்றவர்க்கு உதவும்.
    சரவணன்

  18. அன்புள்ள ஜடாயு,

    அருமையான விளக்கம். நன்றி.

    இந்நாட்டின் வீழ்ச்சிக்கு பிராமணர்களே காரணம் என்று சுவாமி விவேகானந்தர் ஏன் சொன்னார் என்பது, இந்த விவாதத்தில் ஈடுபட்ட சிலரது கருத்துகளில் இருந்து தெளிவாகிறது. அறிவுத்துறைக்கு தலைமை தாங்க வேண்டிய பிராமணர்கள் தங்கள் அடிப்படையை மறந்து லவ்தீக வாழ்க்கைக்கு எப்போது களம் கண்டார்களோ அப்போதே, அவர்களுக்கு மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதி போய்விட்டது. அந்தத் தகுதியை வேறு வருணத்தினர் தங்கள் முயற்சியால் அடைவதற்கு சமீப கால உதாரணங்களே விவேகானந்தர் முதல் சித்பவானந்தர் வரையிலான துறவிகளின் நீட்சி. அவர்கள் தான் இன்றைய நவீன ஹிந்துத்துவ கருத்தாக்கத்தின் தூண்களாக இருக்கிறார்கள். ஹிந்துத்துவத்துக்காகப் போராடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் கூட (அங்கு ஜாதி வேறுபாடு காணப்படுவதில்லை) முழுநேர ஊழியர்களாக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால், (தற்போதைய ஜாதி கண்ணோட்டத்தில்) பிராமணர்களை விட பிற வருணத்தவரே அதிகமாக இருப்பார்கள்.

    இப்போது நாம் ஒரு சிக்கலான காலகட்டத்தைக் கடந்து கொண்டுள்ளோம். அதாவது ஒரு புதிய மாற்றத்துக்கு நாம் தயாராகிவரும் அதே வேளையில், நம்மை பல்லாயிரம் ஆண்டுகால விலங்குகள் பின்னோக்கி இழுக்கவே செய்கின்றன. அதை மீறி நாம் பயணிக்கும்போது, வெளிநாட்டு மதங்களின் பிரசாரகர்களும் ஆதரவாளர்களும் நமது பலவீனங்களை மீண்டும் கிளறி (உதாரணம்: சுவனப்பிரியன்) நம்மிடையே வேற்றுமையை மீண்டும் வளர்க்கப் பாடுபடுகிறார்கள். ஹிந்து மதத்துக்கு யாரும் அதிகாரி இல்லை என்பதாலேயே யாரும் எதுவும் சொல்லலாம் என்றாகி விட்டது. அநேகமாக, இந்த கட்டுரையின் விவாதத்தில் இடம் பெற்றுள்ள சில கருத்துகளை ஹிந்துத்துவ எதிரிகள் தங்கள் தளங்களில் உதாரணம் காட்டி கெக்கலி கொட்டுவார்கள்.

    ஹிந்து மதத்துக்கு யாரும் அதிகாரி கிடையாது என்பது நமது குறைபாடல்ல; அது நமது பெருமிதமான ஏற்பாடு என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்? சுதந்திரமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு வித்திடும் நமது மதம் எப்போது கீழ் ஜாதி என்று ஒதுக்கப்பட்டவர்களையும் மேலே தூக்கி விடுகிறதோ அப்போதுதான், நமது பரவலான தன்மை (DECENTRALAISATION) சிறப்பானது என்பது புரியும். அந்த அடிப்படையில், ‘வேதம் புனிதம் அடைந்தது’ என்ற தலைப்பு சரியானதே.

    இவ்வாறு கூறுவதால் வேதம் முன்பு புனிதம் இழந்திருந்தது என்று எண்ணத் தேவையில்லை. தீக்கனலை சிலகாலம் சாம்பல் மூடி இருந்தது. அது தற்போது காற்றின் துணையால் தனது ஜூவாலையை மீளப் பெற்றிருக்கிறது.

    வேதம் பல்லாயிரம் ஆண்டுகால இலக்கியம். அது ஒருவகையில் நமது நாட்டின் அடிப்படை வழிகாட்டி. அதில் என்ன கூறி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இங்கு தோன்றிய உயர்வான சிந்தனை ஊற்றுக்கள் அனைத்தின் மூலமும் வேதமே. அதில் சில இடைச்செருகல்கள் காலந்தோறும் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் ‘எழுதாக்கிளவி’ என்ற முறையில் அத்யயணம் மூலமாகவே வேதங்கள் பல தலைமுறைகளாகக் காக்கப்பட்டு வந்துள்ளன. தற்போது அவற்றை சீர்திருத்துவது நாட்டுநலம் (கவனிக்க: மதநலம் அல்ல) விரும்புவோரின் கடமை. காலம் தேவையானவற்றை தானே செய்துகொள்ளும் என்றாலும் நாமும் ஒரு காரணமாக இருக்க முடியும். தமிழ் ஹிந்து அந்தத் திசையில் தான் செயல்படுகிறது.

    இங்கு விவாதத்தில் ஈடுபட்டுள்ள நண்பர்கள், நம்மை பிறர் (நம்மை ஏளனம் செய்ய வாய்ப்புகளை தேடுபவர்கள்) கண்காணிக்கின்றனர் என்பதை மனதில் கொண்டு கருத்துக்களை பதிவு செய்வது நலம்.

    -சேக்கிழான்

  19. அன்புள்ள சேக்கிழான், நன்றி.

    // இந்நாட்டின் வீழ்ச்சிக்கு பிராமணர்களே காரணம் என்று சுவாமி விவேகானந்தர் ஏன் சொன்னார் //

    அது ஒரு குறிப்பிட்ட உரையில் ஒரு குறிபிட்ட இடத்தில் சொன்னது. பொத்தாம் பொதுவாக இப்படி மேற்கோள் காட்டுவது விவேகானந்தரும் ஒரு பிராமண துவேஷி என்று சிலர் கருத இடமளித்து விடும். அது தவறான கருத்து. பல இடங்களில் சுவாமிஜி பிராமணர்களைப் புகழ்ந்தும் கூறியுள்ளார். பிரிட்டிஷ் காலனிய காலத்தில் கூட தர்மத்தையும் இந்து ஞானத்தையும் போற்றிப் பாதுகாத்து வருபவர்கள் பிராமணர்களே என்றும் சொல்லியுள்ளார். அதையும் கவனிக்க வேண்டும்.

    // அதில் சில இடைச்செருகல்கள் காலந்தோறும் சேர்க்கப்பட்டிருக்கலாம். //

    இல்லை. புராணங்களில், ஸ்மிருதிகளில் இடைச்செருகல்கள் இருக்கின்றன. ஆனால் வேதத்தில் இடைச்செருகல்கள் அனேகமாக இல்லவே இல்லை என்று மேற்கத்திய இந்தியவியல் ஆய்வாளர்கள் கூட சான்று பகர்ந்துள்ளார்கள். வேத மந்திரங்கள் சாகைகளாக (சீடர்களின் கிளைகள்) வாய்மொழியாக கற்கப் பட்டாலும் ஒவ்வொரு மந்திரத்திலும் அட்சரங்களின் எண்ணிக்கை பிசகாதவாறு அதே மந்திரங்கள் பல வடிவங்களில் பாடம் செய்யப் பட்டன. க்ரமம், கனம், ஜடா என்றெல்லாம் இந்த பாட வடிவங்களை கூறுவார்கள். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு error correcting codes என்றால் புரியும். இந்த பாட வடிவங்கள் ஒரே மந்திரத்தின் 3-4 வகையான coded forms. மேலும் விவரங்கள் இங்கே காணலாம் –

    https://www.vedah.com/essays-on-veda-upanishad-etc/elementary-topics/88-sama-veda/499-chanting-and-error-correcting-codes

    https://www.vedah.com/essays-on-veda-upanishad-etc/advanced-topics/85-mathematics-in-veda/493-mathematics-in-veda

  20. ஜெனாப் சுவனப்ரியன், மதங்களினூடே கருத்துப்பரிவர்த்தனம் என்ற விஷயம் நாடகம் போன்றே முன் தீர்மானிக்கப்பட்ட காட்சிகளுடன் தொலைக்காட்சிகளில் அரங்கேறிவருவதை பலமுறை அருவருப்புடன் பார்த்திருக்கிறேன். இந்த தளத்திலும் க்றைஸ்தவ சஹோதரர்கள் உலக ஹிந்துக்களையெல்லாம் க்றைஸ்தவத்திற்கு மதமாற்றியே தீரவேண்டும் என்ற முனைப்புடன் உத்தரங்களைப் பதிவு செய்வதையும் அவற்றில் விதிவிலக்கின்றி கண்யக்குறைவான கருத்துக்களையும் பார்த்து வருகிறேன்.

    தங்களுடைய கருத்துக்கள் பெரும்பாலும் கண்யம் குறையாது இருப்பதையும் கவனித்து வருகிறேன். ஆனால் நவம்பர் 30ம் திகதியிட்ட தங்கள் உத்தரம் விதிவிலக்காக உள்ளது.

    \\\\\ஒன்று இந்து மத வேதங்களை திருத்த வேண்டும்\\\\\

    அன்ய மதங்கள் எப்படி தங்கள் புனித நூற்கள் காலத்தால் மாறாதவை என கருதுகிறார்களோ அவ்வாறே ச்ருதி எனப்படும் வேதமும் காலத்தால் மாறாதது என வைதிக வழி ஒழுகும் ஹிந்துக்கள் கருதுகிறார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அறிந்தும் இவ்வாறு கூறுவது கண்யக்குறைவாகப்படுகிறது

    ஆப்ரஹாமிய நோக்கில் ஹைந்தவ தரிசனங்களைப் பார்க்கும் போக்கை மாற்றிக் கொண்டீர்கள் என்றால் தங்கள் முடிவுகளில் தெளிவு இருக்கும்.

    ஆப்ரஹாமிய மதநூற்கள் வாழ்க்கை வழிமுறைகள் மற்றும் இறையறிதலுக்கான வழி இரண்டையும் ஒன்று சேர்த்து தங்கள் மத நூற்களில் சொல்வது போலன்றி வேதம் சார்ந்த ஹைந்தவ தர்சனத்தில் ச்ருதி எனப்படும் வேதங்கள் இறையறிதலுக்கும் ஸ்ம்ருதி எனப்படும் நூற்கள் வாழ்க்கை வழிமுறைக்குமாய் உள்ளது.

    ச்ருதி எனப்படும் வேதத்தில் வேதத்தை யார் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எங்கும் சொல்லப்படவில்லை என்பதை இத்தளத்தில் பலபேர் பலமுறை கரடியாக கத்தியுள்ளனர். ஸ்ரீ சாரங்க் அவர்களும் உண்மைக்குப் புறம்பில்லாமல் காலத்தால் மாறுபட்டுக் கொண்டு இருக்கும் மற்றும் வாழ்க்கை வழிமுறைகளை விவரிக்கும் ஸ்ம்ருதி நூற்களிலும் வேதாந்த விவரணம் தெரிவிக்கும் பாஷ்ய நூற்களிலும் வேதங்களை யார் படிக்கலாம் என்பதில் “பழைய” காலத்தில் (பழைய காலத்தில் மட்டும்) “கட்டுப்பாடு” இருந்ததை தெரிவித்திருந்தார்.

    ஆர்ய சமாஜமும் மற்றைய மடாலயங்களும், காலத்தால் மாறாத திருத்த அவசியமில்லாத வேதக்கல்வியை அனைவருக்கும் அளித்து வருவது காலத்தல் திருத்தப்படத் தகுந்த ஸ்ம்ருதி நூற்களுக்கு சரியான விவரணங்களைக் கருத்தில் கொண்டு என்பதை அறிவீர்.

    \\\\\\\\\ஒன்று இந்து மத வேதங்களை திருத்த வேண்டும். அல்லது விருமபுபவர்கள் வேறு மதத்துக்கு சென்று விடலாம் என்று பொதுவான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். அதுதானே நியாயாம்?\\\\\\\ இது போன்ற அநியாயமான ஆதாரத்திற்கெதிரான அக்ரமமான கருத்துக்களைத் தவிர்க்கவும்

  21. \\\\\\\\\ தீக்கனலை சிலகாலம் சாம்பல் மூடி இருந்தது. அது தற்போது காற்றின் துணையால் தனது ஜூவாலையை மீளப் பெற்றிருக்கிறது.\\\\\\\\\

    வேதமாகிய தீக்கனலில் ஸ்வத: ஏதும் குறைபாடு இருந்ததில்லை. இல்லை. இருக்காது என்பது நீங்கள் அறிந்ததே. மேல் மூடப்பட்ட சாம்பலால் பார்ப்பவர்களின் பார்வைக்கு அங்கே தீ இருப்பது தெரியாது போகலாம். தோற்றத்தில் பிழை பார்ப்பவரின் அனுமானத்திலான தோஷத்தைச் சார்ந்ததேயன்றி பார்க்கப்படும் வஸ்துவிலன்று

  22. @ஜடாயு,

    /** இந்த ஞான குரு பித்துக்குளியா? கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்த பாரதி பித்துக்குளியா? ஸ்ரீராமகிருஷ்ண மடம் முதல் அமிர்தானந்தமயி மடம் வரை உள்ள நூற்றுக் கணக்கான இந்து ஆன்மீக மடங்கள் பித்துக்குளியா?
    **/

    கஞ்சா அடித்துவிட்டு போதையில் கண்டதை எழுதி தள்ளியவர் தான் பாரதியார்.. யாரையாவது இல்லையென்று சொல்ல சொல்லுங்கள் இங்கே? கஞ்சா ஏற்றிக் கொண்டால் யார் வேணும்னாலும் இபப்டி வாய்க்கு வந்த படி எழுதலாம்..

    விவேகானந்தர் ஒரு ஃப்ரீ மேசன்.. ( Free Mason ) .. மாசானிய இயக்கத்தை பத்தி இங்கு 99% பேருக்கு எதுவும் தெரியாது.. ஆனால் ஜடாயுக்கும், மற்ற தமிழ் இந்து ஆசிரியருக்கும் கண்டிப்பாக தெரியும் என நினைக்கிறேன்.. அதை தெரிந்தவர்களுக்குதான், மேலும் பல விஷயங்கள் புரியும்..

    ராமகிருஷ்ணர் ஒரு Ascetic என்ற ரீதியில் நாம் அவரை ஏற்றுக் கொள்ளலாம்.. ஆனால் அவர் வேதத்துக்கும் வேதாந்தத்துக்கும் அத்தாரிடியாக கொண்டு வருவது சரியல்ல.. விவேகானந்தர் என்பவர் ஒருத்தர் இல்லையென்றால் ராமகிருஷ்ணர் யாருக்குமே தெரியாமல் போய்விடும்.. விவேகானந்தர் ஆரம்பித்த ராமகிருஷ்ண மடமும், புத்த மத பாணியில் இருப்பதே..

    காவி உடை போட்டா உடனே அவர்கள் சொல்வதை அப்படியே ஏத்துக்கனும்.. என்ன பித்துக்குளித்தனம்?

    பெரியார் கூட, காவி உடை அணிந்து உளறியிருந்தார்னா, அவரையும் இன்னேரம் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள் போல.. அப்புறம், பெரியாரும் நம் இந்து மதத்தை சேர்ந்தவர்.. அவரையும் மதிக்க வேண்டும்.. அவர் சொல்வதையும் நாம் கடைபிடிக்க வெண்டும் என்று சொல்வார்கள்..
    பெரியாரிஸ்ம், புத்திசம் மாதிரி ஒரு புனித மதமாயிருக்கும்.. பெரியாருடைய நூல்கள் புனித நூல்களாயிருக்கும்..

    பெரியார் பண்ண ஓரே தப்பு.. அவர் காவி உடை போடாதது.

    /** இன்று ஆயிரக் கணக்கான பள்ளிகளில் காயத்ரி மந்திரத்தை ஸ்கூல் பிரேயராக வைத்து குழந்தைகளின் மனதில் இறையுணர்வை வளர்க்கும் நல்லாசிரியர்கள் பித்துக் குளியா? என் ஐந்து வயது மகளுக்கு காயத்ரி மந்திரத்தை சொல்லிக் கொடுக்கும் நான் பித்துக் குளியா?
    **/

    கண்டிப்பாக!!!!.. மேக்காலே சில்லபஸ்ல வெள்ளைக்கார முறையில் (மிஷனரி ஸ்கூலை காப்பியடித்து) பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டு நானும் நல்லவன் என வியாக்கியானம் பேசுவது பித்துகுளித்தனமாக இல்லாமல் என்ன சொல்வது? ஓரே ஒரு வித்தியாசம்.. மிஷனரி ஸ்கூலில் பைபிள் வாசிக்கப்படுவது.. இங்கே அதற்கு பதில் காயத்ரி மந்திரத்தையும், வேதத்தையும் வைத்து அதை சீரழித்து விட்டார்கள்.. இதற்கு பெயர் முற்போக்கா? ஒவ்வொன்றிலும், கிறித்துவ மிஷனரிகளை பார்த்து நாம் அடிக்கும் ஈயடிச்சான் காப்பியை பார்க்கலாம்..

    வேதம் என்பது பைபிள் மாதிரி ஓதும் ஒரு வாசகமா என்பதை சிந்திக்கும் திறன் கொண்ட வாசகர்களின் ஆய்விற்கே விட்டு விடுகிறேன்..

    வேதம் ஓதுவதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை யாராவது கவலை கொள்கிறார்களா? கிறித்துவன், பைபிள் வாசகத்தை தினமும் சொல்கிறான்.. உடனே இங்கிருக்கும் இந்துதுவவாதிகள் யோசித்தார்கள்.. நமக்கு என்ன இருக்கிறது என்று.. வேதத்தின் மேல் கையை வைத்துவிட்டார்கள்.. இங்கே பார்.. எனக்கும் புனித நூல் இருக்குது.. நானும் இனிமே உன்னை மாதிரி மந்திரம் வாசிப்பேன்..

    இதுதானே இன்று நடந்து கொண்டிருக்கிறது..

    /** இந்து தர்மம் பற்றிய நெறிமுறைகளுக்கு யார் அத்தாரிட்டி? **/

    இந்து தர்மம் என்றால் என்ன என்று பலமுறை கேட்டுவிட்டேன்.. இன்னும் பதில் இல்லை.. சமீபத்தில் கூட, இந்து மதம் பற்றிய இன்னொரு கட்டுரையில், என்னுடைய கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்ல முடியவில்லை.. இந்து மதமும் இல்லை.. இந்து தர்மமும் இல்லை.. இல்லாத ஒன்றுக்கு ஏது அத்தாரிடி?

    /** கொங்கு கவுண்டர் சமூகத்தில் பிறந்த சின்னு (பூர்வாசிரமத்தில் சுவாமி சித்பவானந்தர்) பண்ணையாட்களை அடக்கி ஆண்டு கொண்டு ஒரு நிலப்புரபுவாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். அவர் ஸ்ரீராமகிருஷ்ண மரபில் துறவியாகி ஞானத்தைப் போதித்திருக்கவே கூடாது.
    **/

    ஆம்.. ஏனென்றால், அவருடைய தர்மம் வெள்ளாமை செய்வது.. அதை விட்டு புத்தர் செய்த கிறுக்குத்தனத்தை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது..

    அது சரி.. ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தால்தான் போதனை செய்யும் தகுதி வருமா.. என்ன போதனை செய்வார்கள்? என்னை மாதிரி நீயும் இருக்கிற தர்மங்களையெல்லாம் விட்டுவிட்டு, மொட்டை தலை அடித்துக் கொண்டு, ராமகிருஷ்ணர் ஜெபம் பாடுங்க அப்படீங்கறதா? ராமகிருஷ்ண மடம் என்பது புத்த மதத்தின் ஒரு அம்சம்.. எப்படி புத்தரை ஆதி சங்கரர் விரட்டி யடித்தாரோ, அதை போல இந்த மடத்தையும் இழுத்து மூட வேண்டும்.. இவர்கள் புத்தர் மாதிரி பிர்ச்சாரத்தில் இறங்காததால், அவர்களால் இதுவரை சமுதாயத்துக்கு ஒன்றும் ஆபத்து வரவில்லை..

    நம்முடைய் பாரதிய கலாச்சாரத்தில், போதனை என்ற ஒன்றே கிடையாது.. அதனால் தான் மதமாற்றம் என்ற ஒன்று இல்லை.. புத்தன் தான் முதன் முதலில், இந்த போதனை என்ற ஒன்றை சமுதாயத்தில் கொண்டுவந்தார்.. ( Budha is the first one to project himself as the messenger.. b4 that, there is no universal messenger in bharatheeya civilization )

    வேதத்தை உருவாக்கின எந்த ரிஷியுமே, அனைவரிடத்திலும் வேதத்தை பரப்ப வேண்டும் என்று சொன்னது கிடையாது.. நான்கு வேதத்தையும் தொகுத்தருளிய வியாசரும் அப்படி சொன்னது கிடையாது.. ஆதி சங்கரர் கூட, அவரவர் பாரம்பரியம்தான் சிறந்தது.. வேதமா பாரம்பரியமா என்று வரும்பொழுது, பாரம்பரியம்தான் பிரதானமாக வரும் என்று சொன்னவர்..

    ஆனால், இங்கே இருக்கும் இந்துதுவ வாதிகள் என்ன சொல்கிறார்கள் ??????

  23. செந்தில்

    உங்களை போல உள்ள ஆட்களால் தான் சுவனப்ரியன் போன்ற ஆட்கள் ஏக இறைவன் ஒரு வழியாக அன்பால் கடைசி தூதரான நபி அவர்கள் வாயிலாக ஜிப்ரேலை கொண்டு வஹி வஹியா நபிக்கு அவசியம் ஏற்பட்ட போதெல்லாம் இறக்கிய புனித திருக் குரானை கூட வேதம் என்கிறார்கள் பாருங்கள்.

    குரான் படித்தால்

    உச்சா போவது எப்படி
    தலையை எப்படி வார வேண்டும்
    எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்
    ஆய் போறதுக்கு முன்னாடி என்ன சொல்ல வேண்டும்
    சாத்தான் மனிதத்தின் எந்த பாகத்தில் உச்சா போவான் (போகிறான்)
    உன் பொண்டாட்டிய ஒருத்தன் அடிச்சா நீ என்ன செய்ய வேண்டும்
    போரில் பிடிப்பட்ட பெண் பிணைய கைதிகளை குழந்தை உண்டாக்காமல் கற்பழிப்பது எப்படி
    சூரியன் தினமும் அச்டமனமானதும் எங்கே செல்கிறது – அர்ஷுக்கு போய் அல்லாவுக்கு எப்படி நமஸ்தே சொல்iகிறது
    சூரியன் எப்படி சைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே உதிக்கிறது
    மருமகளை கண்ணாலம் பண்ணிக்கலாமா கூடாதா மேற்படி விஷயங்கள்
    விவாகரத்தான பெண்ணுடன் மறுபடியும் சேர வேண்டு மென்றால் அந்த பெண்ணுக்கு இன்னொரு விவாகம் செய்து வைத்து மேற்படி விஷயங்கள் முடித்து வைத்து பின் தான் செய்ய வேண்டுமா ?
    இங்கேருந்து அல்லான்னு கூட்ட அவருக்கு கேக்க எவ்வளவு வருஷம் ஆகும்
    சுவர்க்கத்தில் ஆண்களுக்கு மட்டும் தான் சுகமா பெண்களுக்கு என்ன
    ….. (கை வலிக்கு)

    போன்ற அபரிமிதமான ஞானத்தை பெறலாம் – இதெல்லாம் பாரதத்தில் உதித்த வேதத்தில் இருக்கா – இதெல்லாம் வாழ்க்கைக்கு எவ்வளோ முக்கியமான விஷயங்கள்

    யாரோ கேணயர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நமது பண்பாட்டை மாற்ற வேண்டுமா என்று நீங்கள் கேட்பீர்கள் என்பது எனக்கு தெரிந்திருந்தும் அதை பற்றி சொல்லாமல் நான் விடுவது சரி அல்ல

    உங்களது புனிதமான பண்பாட்டு ஞானத்தை அவுத்து விடாமல் மௌனமாக இருக்கலாம்

    செந்தில் – இந்த பதில் சத்யமா உங்களுக்காக தான் எழுதினேன்

    ஏக இறைவனின் சாந்தியும் அமைதியும் உங்கள் மீது இருக்கட்டுமாக

  24. சேவற்கொடியோன்

    நீங்கள் என்னை சொறி வந்த சங்க என்றே கூப்பிடலாம் 🙂

    ஏன் இவ்வளோ லெந்தா பதில் எழுதறீங்க – ஒண்ணுமே பிரிலா

    நீங்க என்ன திட்ரீங்கள வேற யாரையாவது திட்ரீங்கலான்னும் பிரிலா

    வேதத்தை ஒரு வாட்டி கூட படிக்காமல் அதில் என்ன இருக்கு என்று கூட எட்டிப் பார்க்காமல் சில பிராமின்ஸ் என்று சொல்லி கொள்பவர்கள் மற்றவர்கள் வேதம் படிக்கலாமா கூடாத என்று சர்ச்சை செய்கிறார்கள் கடைச்யில் கூடாது என்று முடிவு சொல்கிறார்கள்
    – சர்ச்சை நடப்பது நல்லது என்கிறீர்கள் இப்படிப்பட்ட சர்ச்சையா – ஒண்ணுமே பிரிலா

    இதில் எங்கே வேதம் படித்தால் தான் உயர்வு என்று சொல்கிறேன் ?

    ஒரு விஷயத்தை பற்றி ஒண்ணுமே தெரிஞ்சுக்காமல் சர்ச்சை நடந்தால் அது நல்லதா – அப்படியா நீங்கள் சொல்கிறீர்கள்.

    நீங்கள் எப்படி நான் காமெடியாக எழுதியதை படித்துவிட்டு லெந்தா reply பண்ணீங்களோ அதுபோல தான் அந்த சர்ச்சையும்

    நான் சொல்ல வருவது அனைவரும் வேதம் படிக்கலாம் படிக்க வேண்டும் என்பதே – வேற ஏதாவது சொல்லி இருக்கேனே – இருந்தால் எச்ற்றீம்லி சாரிபா

    சங்கராசார்யார் கீதா பாஷ்யத்தில் சொன்னதை நான் தவறாக புரிந்து கொள்ளவில்லை – சரியாக தான் புரிந்து கொண்டிருக்கிறேன். சங்கராச்சாரியார் சொன்னது சரி என்றோ தவறு என்றோ நான் சொல்லவில்லை – திருவாளர் செந்திலுக்கு சொன்ன பதில் – அதை அவரும் எக்கு தப்பாக புரிந்துகொண்டார் என்பது வேறு விஷயம்

    ராமானுஜர் வழி வந்த கோவில்களில் செட்டியார்கள் பூஜை செய்ய வில்லை – ஆனால் தலித்களாக, நாயுடுவாக, வன்னியராக இருந்து பின்பு பிராமணர்களாக மாறியவர்கள் இன்று பூஜை செய்கிறார்கள்.

    //
    அன்புள்ள சாரங் அல்லது சரங்,

    (விஷயம் என்னன்னா அதுல பேசுற எவனும் வேத அத்யாயனம் செய்தே இருக்க மாட்டான்)

    வேத அத்தியாயனம் செய்தவர்களை சற்று உயர்த்தியும் , பிறரை சற்று தாழ்த்தியும் நீங்கள் பேசுவதால் அது உண்மையாகிவிடாது. வேத அத்தியாயனம் என்பது இந்துமதத்தில் ஒரு சிறு பகுதியே. உண்மையான இந்துக்கள் வேதம் படிக்காதோரே அதிகம். வேதப்படிப்பு மட்டுமே இந்துமதம் என்றால் , ஏறக்குறைய இந்துமதம் செத்துவிட்டது என்று எல்லோரும் சொல்லிவிடுவார்கள்
    //

  25. செந்தில்

    மூளையெல்லாம் உபயோகிக்க சொல்லி அறிவுரை தருகிறீர்கள் – நன்றி

    //
    சன்னியாசங்கறது என்ன ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல இருக்கிற ஏ.சி ரூமா? அதை ஆதி சங்கரர் மற்ற வர்ணத்தவருக்கு மறுத்துவிட்டார்னு சொல்றதுக்கு? இல்ல சன்னியாசத்துல குதிக்கிறது, நீச்சல் குளத்துல ஹாயா குதிக்கிற விஷ்யமா.. மற்ற வர்ணாத்தவரை குதிக்க விடலன்னு சொல்ல?
    //

    இதை நான் சொல்லல – சங்கராச்சாரியார் சொல்கிறார் என்று தானே சொன்னேன். அதுக்கு பொய் என் கற்பனா சக்தியெல்லாம் தட்டி விட்டு stars எல்லாம் எண்ணுகிறீர்கள்

    சன்யாசம் வாங்கினால் ஜாதி போய்விடும் என்று நீங்கள் தான் சொன்னிர்கள். அப்புறம் பிராமணர்கள் தான் வேதம் ஓத வேண்டும் என்றும் நீங்கள் சொல்கிறீர்கள்.

    இதற்கெலாம் சான்று என்று ஒன்றுமே கொடுக்க வில்லை – சன்யாசம் வாங்கிக் கொண்டால் எப்படி ஜாதி போகும். என்று சொல்வதற்கு முன்னாள் சன்யாசம் எப்படி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது என்று நீங்கள் பாக்கான்டாமா (வேதம் பிராமணர்கள் தான் சொல்ல வேண்டும் என்று சாஸ்திரப்படி சொல்லும் நீங்கள் இதற்கும் பார்க்க வேண்டுமே)

    //

    கொஞ்சமாவது மூளையை உபயோகப்படுத்துங்கய்யா..
    //

    டான்க்சு பா

    //
    எல்லாத்தையும் சன்னியாசம் வாங்க வைத்து, தன்னோடு புத்தர் கூட்டிட்டு போனதன் விளைவுகள, வரலாறு தெளிவாக நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.. அதை யாராவது கவனித்தீர்களா?
    //

    புத்தருக்கு முன் சன்யாசம் வாங்கிக்கொண்ட எவ்வளவோ வேதாந்திகள் இருக்கிறார்கள்.
    புத்தர் செய்தது கூட்டம் கூட்டமே convert செய்தது அவ்வளவே.

    பாக்கி மேட்டர் அப்புறம்

  26. துபாஷி பிராமணர்கள் பிராமணன் என்ற அடையாளத்தை தவறாக பயன்படுத்தினார்கள் ?
    நல்ல காமடி. ஓஹோ,புரிகிறது. செயற்கையாக பிளவுப்பட்ட ஹிந்து சமூகத்தை ஒன்று சேர்க்கும் பணியில் இருக்கும் ஒரு சிலரை சொல்கிறீர்கள் போலும். அதில் எல்லா ஜாதியினரும் உள்ளனரே. அவர்கள் துபாஷி கௌண்டர்கள் அல்லது துபாஷி பிள்ளைமார்கள் . இதில் துபாஷி வடிவமில்லா கடவுள் வாதிகள் வேறு,
    சுவாமி விவேகானந்தரே ஒரு துபாஷி காயஸ்தர். அவர் பாட்டுக்கு சில மன்னர் வம்சத்தவரைபோல வெள்ளைக்காரனிடம் மானியம் வாங்கிகொண்டு நிம்மதியாகபிழைத்திருகலாம். என்ன செய்ய அம்னீசியா வந்த சிங்கங்களை குணப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். பெரு வெற்றியும் பெற்றார்.அவரால் அமெரிக்க அம்னீசியா சிங்கங்கள் சில கூட தெளிந்து விட்டன.

    ஒரு சாராரை திட்டிக்கொண்டே இருப்பது பிளவு படுத்தலின் ரொம்ப பழைய டெக்னிக். வேற மாத்தி யோசிக்கவும்.

    திரு ஜடாயு அவர்களுக்கு , மீண்டும் நன்றி. சுவாமிஜி சொன்ன பல விஷயங்களை அதன் முழுமையில் பார்க்காவிட்டால் கஷ்டம் தான்.
    இதே போல் காஞ்சி பெரியவரும் சொல்லியிருக்கிறார்.
    ஆனால் சொன்ன நோக்கம் பிரிப்பது அல்ல. பிரிந்தது போல் கிடப்பதை சேர்ப்பது. நோக்கம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.
    திரு சேக்கிழான் கருத்து பதிவைப்பற்றி சொல்வது மிக சரியே.
    சரவணன்

  27. நண்பர் செந்திலின் கடிதம் மிகவும் ஒரு தலை பட்சமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்களுக்கு , மத நிறுவனங்களிலும் ,வழிபாட்டு தலங்களிலும், பூஜை முறைகள், திருவிழா , வேதக்கல்வி இவற்றிலும் சம உரிமை கொடுக்கப்படாவிட்டால் , இந்த உலகில் எந்த மதமாயினும் விரைவில் குப்பை தொட்டிக்கு தான் போய்ச்சேரும்.

    அந்த நிலை பிற மதங்களுக்கு ஏற்படுவது அவர்களின் தலை எழுத்து. ஆனால் இந்துக்களாகிய எங்களுக்கு அந்த நிலை ஏற்பட நாங்கள் விடமாட்டோம். பெண்கள் வேதம் படிக்கக்கூடாது என்று கூறும் செந்திலை போன்ற நண்பர்களை நினைத்து அனைவரும் வேதனை படுகிறோம். ஆண் ஆதிக்கம் அழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. செந்தில் போன்றவர்கள் இதனை புரிந்து கொள்வார்களா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

  28. // senthil on November 30, 2011 at 1:40 pm //

    திரு செந்தில் அவர்களின் இந்த மறுமொழியை பிரசுரிப்பதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். அதே நேரத்தில் செந்தில் போன்ற வெறுப்புணர்வாளர்களின், சாதியவாதிகளின் மனநிலை எத்தனை மோசமானது என்பதைக் காட்ட மட்டுமே இது பிரசுரிக்கப் படுகிறது.

    எந்த விஷயமாயினும் அதில் ஆக்கபூர்வமான விவாதங்களை தமிழ்ஹிந்து தளம் முழுமையாக ஏற்கிறது என்பதை வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் தேவையற்ற கடுஞ்சொற்கள் அபவாதங்களை அன்னிய மதங்களை நோக்கி வீசப்படும் போது கூட முடிந்தவரை இந்தத் தளம் தவிர்த்திருக்கிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட ஒரு மறுமொழியை இங்கு இட்டதற்காக திரு.செந்தில் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அவரது எந்த மறுமொழிகளும் இனி இங்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

    அன்புள்ள திரு.செந்தில் ஹிந்து தர்மத்தின் உயர்ந்த ஆச்சாரியர்களை குறித்தும், போற்றுதலுக்குரிய மகான்களைக் குறித்தும் இதுவே உங்கள் எண்ணம் என்றால், இந்த தளம் அதற்கான இடம் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறோம்.

  29. ஆசிரியர் குழுவின் முடிவை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

    வாதத்தை எதிர்கொள்ளலாம். குதர்க்கத்தைக்கூட மறுக்காமல் இருக்கலாம். ஆனால், உளறலை எதிர்கொள்வது சாத்தியமே இல்லை.

    இந்து மத அமைப்புக்களைப் பற்றி, பெரியோர்களைப் பற்றி, இந்துத் தொல்மரபு பற்றிக் கேவலமான கருத்துக்களை எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பேசும் செந்திலின் சிந்தனைப் போக்கில் நல்ல மாற்றத்தை அவர் கேவலமாகப் பேசும் அறம் உருவாக்கட்டும்.
    .

  30. திரு க்ருஸ்ணகுமார்!

    //தங்களுடைய கருத்துக்கள் பெரும்பாலும் கண்யம் குறையாது இருப்பதையும் கவனித்து வருகிறேன். ஆனால் நவம்பர் 30ம் திகதியிட்ட தங்கள் உத்தரம் விதிவிலக்காக உள்ளது.//

    நான் சொல்ல வந்தது இடைக்காலத்தில் இடைச் செருகலாக வேதஙகளில் சேர்க்கப்பட்டதை நீக்க வேண்டும் என்பதே!
    திரு செந்தில் அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்து எழுதியது அது. இதனால் உங்கள் மனம் புன்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சாரங்!

    //உச்சா போவது எப்படி
    தலையை எப்படி வார வேண்டும்
    எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்
    ஆய் போறதுக்கு முன்னாடி என்ன சொல்ல வேண்டும்…..//

    திரு செந்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்.

    உச்சா போகும் போது அந்த இடத்தை தண்ணீரால் கழுவ முகமது நபி அறிவுறுத்துகிறார். மலம் எப்படி அசுத்தமோ அதே போல்தான் சிறு நீரும். ஒன்றை கழுவி விட்டு மற்றொன்றை கழுவாமல் விடுவது சுத்தமாகுமா?

    இப்படி சுத்தம் செய்யாமல் விடுவதால்தான் நம் நாட்டில் பஸ் ஸ்டாண்டுகளில் மூத்திர வாடையால் மூக்கை பிடித்துக் கொண்டு செல்கிறோம்.

  31. அன்புள்ள தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு,

    இந்தத் தளத்தில் சிலர் ஹிந்துப் பெயர்களுடன் உலாவுவதாக சந்தேகிக்கிறேன். மறுமொழிகள் சிலவற்றில் தொனிக்கும் ஹிந்துத்துவ வெறுப்பு அவர்களை அடையாளம் காட்டுகிறது.

    எனவே மறுமொழிகளை மட்டுறுத்தி வெளியிடுவது அவசியம். தமிழ் ஹிந்துவின் நல்நோக்கத்தை திசை மாற்றவே இவ்வாறு புல்லுருவிகள் ஹிந்துப் பெயர்களில் பதிவிடுகிறார்கள். அவற்றை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.

    ஒரு கருத்து தொடர்பான விவாதம் எப்போது வேறு ஒரு திசையில் நகர்த்தப்படுகிறதோ, அப்போதே அதன் பின்னணி புலப்படுகிறது. அத்தகையவர்களை அனுமதிக்காதீர்கள். ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்கள் தமிழ் ஹிந்து தளத்தையே தங்கள் பிரசார சாதனமாக்க முயற்சிக்கிறார்கள். நானும் ஒருகாலத்தில் அந்தக் கூட்டத்தில் இருந்தவன் தான். கவனம்.

    -ஜான் ஜனகன்

  32. ஆசிரியர் குழுவின் இந்த முடிவைப் பெரிதும் வரவேற்கின்றேன். இந்து சமுதாயத்தின் ஒற்றுமையையும் ஒத்த சிந்தனையையும் தமிழ் இளைஞர்களுக்கு அறிவு பூர்வமாக விளக்கத் திரு ஜடாயு , அரவிந்தன் நீலகண்டன், களிமிகு கணபதி, சேக்கிழான், ஆலந்தூர் மள்ளன், கோமதிசெட்டி முதலிய இளைஞர்கள் இத்தளத்தில் மிகச் சிறந்த கட்டுரைகளையும் உண்மை நிகழ்வுகளையும் எழுதி வருகின்றனர். த்மக்குள் நடைமுறையில் எத்துணை வேற்றுமை இருந்தாலும் பாரதநாட்டின் ஒற்றுமையையும் பெருமையையும் காப்பதே இவ்விளைஞர்களின் குறிக்கோள். மாற்றுக் கருத்தை அறிதல் வேண்டுவதுதான். செந்தில் போன்றவர்கள் இதனை அறியார். உயர்ந்த தளத்தில் இழிந்த சொற்பரிமாற்றங்களுக்கு இடமளித்தல் ஆகாது. செந்தில் போன்றோருக்கு மறுமொழி அளிக்கும் செயல் தமிழ் இந்துவின் குறிக்கோளைத் திசை திருப்பிவிடும். ஆசிரியர் குழுவின் முடிவுக்கப் பாராட்டுக்கள்.

  33. அன்புள்ள சுவனப்ரியன்

    மனிதன் எப்படி உச்சா போகவேண்டும் என்பது பற்றி ஆண்டாண்ட கோடி பிரம்மாண்டங்களை படைத்த அல்லாவுக்கு என்ன கவலை பாருங்கள். சுவனத்தில் ஆசை உள்ளவர்களும் தெருக்களில் உச்சா போகிறார்கள் – ரெம்ப நாஸ்தி பண்றதே இவக தான்.

    இதை எல்லாமா வேதத்தில் வைப்பது.

    இந்த விசயமெல்லாம் எங்க ஊரு பஞ்ச தந்தர கதைகளிலும் – எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் போன்ற புஸ்தகங்களிலும் இருக்கும்.

    குர்ஆனில் உள்ள இப்படி பட்ட வசனங்கள் சுகாதார துறை அமைச்சகத்துக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கும்.

    இந்த நாட்டுல கிராமத்துல போய் பாருங்க – எல்லோரும் உச்சா போயிட்டு கழிவிட்டு ஆறு முறை வாய் கொப்பளித்து விட்டு தான் வருவார்கள். ஆய் போனா 12 times வாய் கொப்பளிப்பார்கள். இதை சொல்லித்தர வேதம் தேவை இல்லை.

    எமது வேதத்தில் ஆத்ம, பரமாத்மா, உபாசன, கர்ம விஷயங்கள் தான் – அதனால் தான் எல்லாவற்றையும் ஒரு சேரே எழுத வேண்டாம் என்பது. இது நீங்கள் செய்தது அதற்க்கு தான் அந்த பதில்.

    செந்திளுக்கேல்லாம் பதில் சொல்லி மாளாது – அவர் ஒரு சவுண்டு பார்ட்டி அவ்வளவே

    நான் குர்ஆனில் உள்ள சில விஷயங்களை பற்றி சொன்னேன் அல்லவா அதுல பொறுக்கி எடுத்து உச்சா போறதை மட்டும் ஏன் பெர்சுபடுத்தி எழுதுறீங்க

    இடைக்காலத்தில் வேதத்தில் சொருகல்கள் வந்தது என்று எப்படி சொல்கிறீர்கள் – எதை வைத்து சொல்கிறீர்கள். உங்களது ஆராய்ச்சி முடிவுகளை தாருங்கள் (உங்களை போன்றோர்கள் இப்போது நிறைய குரானை வைத்து ஆராய்ச்சி செய்வதால் கேட்கிறேன் ?)

  34. ஜெனாப் சுவனப்ரியன், ஹிந்து மதத்தின் மீது ஏற்கவியலா அபவாதங்களைக் கூறி ஆப்ரஹாமிய மதத்தவர் மதமாற்றம் செய்து வருகிறார்கள் என்பது ஹிந்து மதத்தவர் பலரின் நிலைப்பாடு.

    எழுதாக்கிளவியான வேதத்தை பதம், க்ரமம், ஜடை மற்றும் கனம் என பிரித்து அத்யயனம் செய்யும் முறையிலும் விதிக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஸ்வரங்களின் படி ஓதும் முறையிலும் ஒரு வார்த்தை கூட ஏன் ஒரு அக்ஷரம் கூட கூட்டவோ குறைக்கவோ இயலாது என்ற அளவுக்கு மிகக் கவனமாக தலைமுறை தலைமுறையாக இடைச்செருகல்கள் அறவே இல்லை என்ற படிக்கு ஓதப்பட்டு வருகிறது. ஸ்ரீ ஜடாயு அவர்களும் இது சம்பந்தமாக உத்தரமளித்ததை கவனித்து இருப்பீர்கள்.

    வேதத்தில் இடைச்செருகல் என்பது வேதநெறிப்படி ஒழுகுபவர் ஏற்கவியலா கருத்து. குறிப்பாக இல்லாது பொத்தாம் பொதுவாக சொல்லப்படும் ஆதாரமற்ற ஆரோபம்.

    பின்னும் கண்யம் குறையாது மற்றும் அடுத்த மனிதரின் மனம் புண்படாது கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற தங்களின் பண்பு ச்லாகிக்கத்தக்கது. “கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” என வள்ளுவப் பெருந்தகையும் “ந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்” என ஸம்ஸ்க்ருத ஸுபாஷிதமும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.

  35. “வாதே வாதே ஜாயதே தத்வபோத:” என்று ஒரு ஸுபாஷிதம். வாதம் செய்யச்செய்ய தத்வார்த்தம் துலங்கும் என்பது பொருள். தெளிவான ஆதாரங்களுடன் கண்யமுடன் வாதம் செய்தாலே இது சாத்யம்.

    ஆசிரியர் குழுவினர் சுடுசொற்களற்ற விவாதங்களைப்பற்றி குறிப்பிட்டது அவசியமானது. ஹிந்து மதத்தில் எந்த சமயப்படி ஒழுகுபவராயினும் ஏன் மற்ற மதங்களின் படி ஒழுகுபவராயினும் ஒவ்வொரு மனிதனும் ஆன்மீகத்தில் உயர்வதற்கு பண்பு குறையா பேச்சு மிக அவசியமாயிற்றே.

  36. தாரை வார்க்கப்பட்ட பெண் எப்படி கோத்திரம் மாறுகிராளோ, அதுபோல் சன்யாசிக்கு, அதாவது துறவு பூண்டவனுக்கு எந்த ஜாதியும் கிடையாது. துறவி என்பவன் பிணத்திற்கு சமமானவன். வீட்டிற்குள் துறவி வரமாட்டார். வீட்டிற்குள் துறவி வந்து சென்றால் தீட்டு என்று கழுவி விடுவர். துறவிக்கு கோவில் கருவறைக்கோ, கோபுரம் மேலோ கூட ஏறும் உரிமை இல்லை.

    அத்தகைய சந்நியாசி கையில் தோல்பறை கொடுத்து அவருக்கு பறையர் பட்டம் கொடுப்பது அவரின் துறவு வாழ்க்கைக்கு கலக்கம் ஏற்ப்படுத்தியதாக கொள்கிறேன்.

  37. சுவன பிரியன்,

    உங்கள் கேள்வி நியாமானதுதான். முகமது இருந்த காலத்தில் அங்கு காட்டு மிராண்டிகளாக இருந்து இருக்கலாம். இது போன்ற நிலை இங்கு இல்லை. காவேரி முதல் கங்கை வரை பாய்ந்த இடம் இது. அதுவும் தவிர இதை பற்றி எழுத வேண்டும் என்ற தேவை இல்லை. இருந்தாலும் தொழில் மற்றும் இடத்தை பொறுத்து இது வேறுபடுகிறது. முகமது பாலைவனத்தை மட்டும் பார்த்து இருக்கிறார். அதனால் அவர்உடைய கருத்து பாலைவன மக்களுக்கு மட்டும் தான் பொருந்தும். அது காஷ்மீரில் இருக்கும் ஒருவனுக்கு எப்படி பொருந்தும்?

    அதுவும் தவிர வாஸ்து என்ற ஒன்று உண்டு அதில் உச்சா முதல் கக்கா வரை அணைத்து விசயங்களும் உள்ளன. உங்களுக்கு சந்தேம்கம் இருந்தால் அதை ஒரு வாஸ்து நிபுணரிடம் கேளுங்கள். போலி மருத்துவர் மாதிரி போலி வாஸ்து நிபுணர்களும் உள்ளனர். நல்லவர்களை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

  38. பிராமின் என்பது பிரமினத்வம் உள்ளவர்ஹளை குறிப்பது இங்கு jaathi இல்லை .அய்யர் வீட்டில் பிறந்து சத்ரிய குணமோ ,soothira குணமோ இருந்தால் அவன் வேதம் படிக்க தகுதி attravan.thalith வீட்டில் பிறந்து பிராமின் குணம் இருந்தால் அவன் வேதம் படிக்க தகுதி உள்ளவன் . இதைத்தான் vetham sonnathu சொல்லுது .ஆன்மீகத்தில் முன்னேற்றம் கண்ட ரிஷிகள் பெரும்பான்மையானோர் சத்ரிய குளத்தில் பிறந்த பிரமினர்களே .

  39. இந்தியாவில் பிறந்து விட்டு வெக்கமே இல்லாமல் பாலைவன அராபியாவில் இருக்கும் ஒரு buildinga பார்த்து துவா செய்யும் மனிதர்களை என்ன என்று சொல்வது. ஓவர் நைட் முஹம்மத் இப்னு அப்துல்லா அவர்கள் அறிவுகெட்டவர்கள் நிறைந்த அராபியாவை ஆல் வோர்ல்ட் பாபுலார்க்கி இருக்கார்.

  40. திரு சாரங்!

    //மனிதன் எப்படி உச்சா போகவேண்டும் என்பது பற்றி ஆண்டாண்ட கோடி பிரம்மாண்டங்களை படைத்த அல்லாவுக்கு என்ன கவலை பாருங்கள். சுவனத்தில் ஆசை உள்ளவர்களும் தெருக்களில் உச்சா போகிறார்கள் – ரெம்ப நாஸ்தி பண்றதே இவக தான்.
    இதை எல்லாமா வேதத்தில் வைப்பது.//

    குர்ஆனில் எந்த இடத்தில் இப்படி ஒரு செய்தியைப் பார்த்தீர்கள்? சிறுநீர் சம்பந்தமாக வருவது முகமது நபி அறிவுரைகளாக சொன்ன ஹதீதுகளில் காணக் கிடைப்பது இரண்டையும் பொட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.

    //இடைக்காலத்தில் வேதத்தில் சொருகல்கள் வந்தது என்று எப்படி சொல்கிறீர்கள் – எதை வைத்து சொல்கிறீர்கள். உங்களது ஆராய்ச்சி முடிவுகளை தாருங்கள் (உங்களை போன்றோர்கள் இப்போது நிறைய குரானை வைத்து ஆராய்ச்சி செய்வதால் கேட்கிறேன் ?)//

    எழுத்து முறை உலகிலேயே முதன் முதலாக பினீசியர் என்னும் கிழக்கு மத்திய தரைப் பிரதேச மக்களால் கண்டு பிடிக்கப் பட்டது என்பதை நாம் அறிவோம். பினீசியாவிலிருந்து மெசப்பட்டோமியா வழியாகவும் பாரசீகம் வழியாகவும் வந்து இப்புதுமை இந்தியாவை அடைந்திருக்க வேண்டும். ஆதியில் இந்தியாவில் பழக்கத்திற்கு வந்த எழுத்து முறை ‘பிராமி’ எனப்படும். இவ்வெழுத்துக்களிலேயே அசோகரது கல் வெட்டுக்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

    இந்துக்களின் வேதங்கள் கி.மு. 1500 க்கும் கி.மு. ஆயிரத்துக்கும் இடைப் பட்ட காலத்தில் இயற்றப் பட்டதாக இருக்கலாம். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வியாஸர் அவற்றை தொகுத்தும் வகுத்தும் ரிக், யசூர், சாம, அதர்வம் என்று பாகு படுத்தி பதிப்பித்து இருக்கலாம் என்று இந்து மதப் பெரியார்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கான சான்றுகள் எதையும் கூறவில்லை.

    வேதம் அருளப்பட்ட காலம் எழுத்துப் பயிற்சி என்பது இல்லாத காலமாதலால் வேதம் அருளப் படும்போது அது எழுதி வைக்க சாத்தியமில்லை.

    காலம் காலமாக வேத மொழியாக (வாய் மொழியாக) இருந்த கிரந்தங்கள் பின்பு பிரகிருத மொழிக்கு மாற்றப் பட்டது. (பாகத அல்லது பிராகிருத மொழி என்பது பாமர மொழியாகும்) பின்பு பிராகிருத மொழியிலிருந்து சமஸ்கிரதத்திற்கு மாற்றப் பட்டது. (சமஸ்கிரதம் என்றால் செப்பனிடப் பட்ட மொழி – அறிஞர்கள் மொழி) இவ்வாறு காலம் காலமாக வாய் மொழியாக இருந்து பின்பு மொழி பெயர்ப்புக்கு உட்பட்டு வந்ததால் அதில் இடைச் சொருகல் ஏற்படவும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

    ஒரு வேதத்தில் ஒருவரின் கருத்தில் இரு முரண்பட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. ஒரு இடத்தில் ஒரு இறைவன்தான், வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று கூறும் வேதம், அடுத்த பாகத்தில் அக்னி, காற்று போன்ற இயற்கை பொருட்களை வணங்க சொல்கிறது. யஜூர் வேதத்தில் இயற்கை பொருட்களையும், மனிதனால் செய்யப்பட்ட சிலைகளையும் வணங்குபவர்கள் இருளில் நுழைந்து விட்டனர் என்று கூறுகிறது. ஒன்றுக் கொன்று எவ்வளவு முரண்பட்ட வசனம் என்பதை பாருங்கள். இதில் ஏதோ ஒன்று தான் இறைவனின் கூற்றாக இருக்க முடியும். இந்த வேதங்கள் செவி வழியாகவே அதிக நாட்கள் உலவி வந்ததால் பல தெய்வ கோட்பாடு இடைச் செருகல் என்பதை நம்மால் யூகிக்க முடியும். ‘ஒன்றே குலம் ஓருவனே தேவன்’, ‘நட்ட கல்லும் பேசுமோ: நாதன் உள் இருக்கையில்’ என்ற சித்தர் பாடல்களும், திருக்குறளும் இது போன்ற எண்ணற்ற நூல்கள் நம் மூதாதையர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இந்து மதம் தனது மூல கொள்கையை இழந்ததால்தான் நாத்திகர்களை அதிகம் கொண்டதாக இந்து மதம் இருக்கிறது.

    இன்று குர்ஆனில் இடைச் செருகல் உள்ளது என்று நீங்கள் சொன்னால் உடன் முகமது நபி காலத்தில் கையால் எழுதப்பட்ட மூல பிரதியை எடுத்து வாதிடலாம. இன்றும் கூட இஸ்தான்புல்லிலும் தாஸ்கண்டிலும் மூலப்பிரதிகள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்து மத வேதங்கள் அருளப்பட்டபோது எழுத்து முறை உபயோகத்தில் இல்லை. முதன் முதலாக வேதங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்ததன் மூலப்பிரதியும் நம் கை வசம் இல்லை.

    இனி விக்கிபீடியா தரும் செய்தியையும் பார்ப்போம்.

    இந்து சமயத்தின் கடவுட் கொள்கை

    இந்து சமயத்தில், இவ்வாறு பல கடவுள்கள் வணங்கப்படுவதன் காரணமாக இது ஒரு பலகடவுட் கொள்கை சார்ந்தசமயம் எனக் கூறப்படுவதுண்டு. எனினும், பல இந்து சமய ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரே கடவுளின் பல்வேறு அம்சங்களே பல கடவுள்களாக வணங்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவையாகக் கருதப்படும் நான்கு வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதத்திலிருந்தே இதற்கு சான்றுகள் காட்டப்படுகின்றன.

    வேதகாலக் கடவுள்கள்
    வேதகாலக் கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேதகாலத்தில் உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.
    வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், இந்திரன், பிரஜாபதிஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் வசுக்கள் எனவும், 11 பேர் உருத்திரர்கள் எனவும், 12 பேர் ஆதித்தர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
    இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின்ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதாஎன்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.

    நேரம் கிடைக்கும் போது மேலும் பார்ப்போம்.

  41. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

    இறையென்று வைக்கப் படும்

    -குறள்: 388

    நல்ல முறையில் நீதி பரிபாலனம் செய்து மக்கள் எவ்வகையிலும் துன்பப்படாமல் காப்பாற்றும் ஆட்சியாளன் இறைவனென்று வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர். அதாவது அந்த மன்னன் இறைவனைப் போன்று போற்றுதலுக்குரியவர் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கூற பின்னால் வந்தவர்கள் அந்த மன்னனையே கடவுளாக்கி விட்டார்கள்.

    அவ்வளவு ஏன் ‘நான் பகுத்தறிவாதி’ என்று கூறிக் கொள்ளும் கலைஞரே கூட ‘அய்யன் திருவள்ளுவர்’ என்று புகழ்ந்து இந்த கவிஞரையும் தெய்வசக்தி கொடுத்ததை நம் காலத்திலேயே பார்த்தோம். திருவள்ளுவரைப் பற்றிய முறையான வரலாற்றுக் குறிப்புகளும் நம்மிடம் இல்லை. 1959 ஆம் ஆண்டு கே.ஆர். வேணுகோபால் சர்மா என்ற ஓவியர் கற்பனையில் வரைந்த ஒரு உருவத்தைத்தான் இன்று வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் என்ற பெயரே கற்பனையாக சூட்டப்பட்ட ஒன்று. இதற்கு எந்த ஒரு ஆதார நூல்களும் இல்லை. இனி மு.க.ஸ்டாலினின் மகன் முதல்வராகும் போது தாத்தாவின் புண்ணியத்தில் வள்ளுவரும் தமிழ்நாட்டில் தெய்வமாக்கப்படலாம். தமிழ் சமூகம் அதையும் அங்கீகரித்துக் கொள்ளும். 🙂

    இது ஒரு புறம் இருக்க இந்து மத வேதங்களின் தொகுதிகளில், விளக்கங்களில் ஒன்றாக ஸ்மிருதிகள் விளங்குகின்றன. இந்த வேதங்களும் ஸ்மிருதிகளும் எழுதப்படாமல் காதால் கேட்டு மனனம் செய்தே பாதுகாக்கப்பட்டு வந்தது. எனவேதான் சங்க இலக்கியங்களில் இந்த வகை நூல்களுக்கு ‘எழுதாக் கிளவி’ என்று பெயரிடுகின்றனர். எழுதி வைத்ததையே நமக்கு தோதாக மாற்றி விடும் மனித மனம் செவி வழிச் செய்தியாகவே பல நூற்றாண்டுகள் இருந்த ஒரு வேதத்தை எந்த அளவு பாதுகாத்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

    ஸ்மிருதிகள் என்றால் என்ன?

    “இவை தர்மசாத்திரங்கள், நித்தியகருமங்கள், ஆசாரம், விவகாரம், பிராயசித்தம், இராசதர்மம், வருணாசிரமம், அக்நிகார்யம், விரதம் முதலிய பலவற்றைக் கூறும். இவைகள் பல இருடிகளால் (ரிஷிகளால்) கூறப்பட்டவை”.

    ‘அபிதான சிந்தாமணி’ (பக்கம் 702)

    “எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.”

    -“சுக்கிர நீதி” என்ற வட மொழி நூல்

    “பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன்”

    -நாரத ஸ்மிருதி,- ஆ.சிவசுப்பிரமணியன்

    அதாவது இறைவனுக்கு உரிய தகுதிகள் அனைத்தையும் நமது முன்னோர்களின் வேதங்கள் அரசனுக்கு தாராளமாக கொடுத்து வந்ததையே மேலே உள்ள வாக்கியங்கள் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த கருத்துக்களை சாதாரண மனிதன் சொன்னதாக சொல்லாமல் இறை பக்தியை ஊட்டி வேதங்களின் மூலமாக சொன்னதால் நம் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது.

    “மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தாரால் நடை பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போலக் கண் முன்னே துன்பமுறுகின்றது’ என்று குறிப்பிடுகிறார்” (8.21) மனு

    நம் நாட்டு சட்டத்தை அம்பேத்கார் தலைமையில்தான் வகுத்ததாக சொல்வார்கள். நமது நாடு முன்னேறாமல் இருக்க இதுவும் ஒரு காரணமோ! தமிழ்நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் கலைஞர் அமர்ந்திருக்கிறாரே! தமிழ்நாடு ஒரு லட்சம் கோடி கடனில் தத்தளிப்பதற்கு இதுவும் காரணமாக இருக்குமோ!

    “நாலாம் வருணத்தோன் அரசனாயிருக்கும் நாட்டில் அந்தணர் வாழக்கூடாது என்பது மனுவின் வழியாகும்” (4.61).

    ஜெயலலிதாவை முதல்வராக்குவதற்கு சோ. ராமசாமி ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறார் என்பதன் சூட்சுமம் இப்பொழுதுதான் விளங்குகிறது.

    மனுவாறு விளங்க

    மனுநெறி சிறக்க

    மனுநெறி தழைக்க

    உழைத்த நம் மன்னர்கள் தங்களை கடவுளின் அவதாரமாகவே மக்களிடம் காண்பித்து வந்தனர். உயிருடன் இருக்கும் போதே கடவுள் தன்மை வழங்கப்பட்ட மன்னர்கள் இறப்புக்கு பின்னால் வாரிசுகளின் சக்திக்கேற்ப சகதி வாய்ந்த கடவுளாக்கப்படுகின்றனர். வேத ஸ்மிருதிகளே மன்ன்தான் கடவுள் என்று சொல்வதால் மக்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

    அடுத்து திரு சாரங்! இன்று கடவுளின் உருவங்களாக வைத்து வணங்கப்படும் தோற்றத்தை எதை வைத்து தீர்மானம் செய்தீர்கள். கடவுள் முருகன் வடிவிலோ பிள்ளையார் வடிவிலோ இருந்ததாக உங்கள் வேதம் சொல்கிறதா?

  42. ஜெயலலிதாவை முதல்வராக்குவதற்கு சோ. ராமசாமி ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறார் என்பதன் சூட்சுமம் இப்பொழுதுதான் விளங்குகிறது.”

    சுவனப்பிரியன் , உங்களது கூற்று உங்களது அறியாமையையே காட்டுகிறது. சோ ராமசாமி 1996 தேர்தலின் போது , இதே ஜெயலிதாவின் ஆட்சியை அகற்ற போராடிய வரலாறு , உம்மைப்போன்ற அரைகுறைகளுக்கு தெரிய நியாயமில்லை. ஏன் இந்த வக்கிரம்? எனவே வக்கிரபுத்தியுடன் கூடிய விமரிசனம் வேண்டாம்.

    மேலும், உமது ஞான சூன்யம் எங்களை திகைக்க வைக்கிறது. ஸ்மிருதிகள் யார் வேண்டுமானாலும் எழுதலாம். நீங்கள் கூட எங்கள்மதத்தில் சேர்ந்துகொண்டால் ஒரு ஸ்மிருதி எழுதலாம். மனுஸ்மிருதி இந்து மத வேதம் அல்ல. வேதம் என்பதற்கும் , ஸ்மிருதி என்பதற்கும் உங்களை போன்ற வக்கிரங்களுக்கு புரியவைக்க முடியாது.

    பிள்ளையார், மற்றும் முருகன் வடிவங்கள் மட்டுமல்ல, இறைவன் இன்னும் கணக்கிலடங்கா உருவங்களும் உடையவன். இறைவன் பெயர்கள் மற்றும் உருவங்களுக்கு ஒரு எல்லையே இல்லை. மேலும் வேத புத்தகம் என்ற ஒன்றை எல்லையாக கொண்ட மதம் அல்ல எங்கள் மதம். யாராலும் உருவாக்கப்பட்ட மதம் அல்ல. இன்னும் பல வேதங்கள் எதிர் காலத்திலும் எங்களுக்கு கிடைக்கும்.

    ” ஒரே சக்தியை அறிஞர்கள் பல வேறு பெயர்களில் அழைக்கிறார்கள் ” என்று வேதங்கள் அறுதியிட்டு கூறுகின்றன. எனவே, பல்வேறு பெயர்களும் பல்வேறு உருவங்களும் அந்த ஒரே இறையின் வடிவங்களே என்பதை புரிந்துகொண்டால் உங்களுக்கு நல்லது.

    இது ஒன்றே வேதம் என்ற இழிநிலை எங்களுக்கு இல்லை. எங்கள் வேதங்கள் கால தேச எல்லைகளை கடந்தவை. எங்கள் கடவுள் சொர்க்கத்தில் மட்டும் இருப்பவர் இல்லை. உங்கள் உளறல் படிக்க படிக்க ஒரே நகைச்சுவையாக உள்ளது.

  43. சாதியத்தை ஒழிக்கவும், இந்துக்களை ஒன்றுபடுத்தவும் நாங்கள் பாடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் செந்திலின் கருத்து எங்களை காய படுத்துகிறது. ஒருவேளை அவர் இந்துக்களை பிரிக்கவும் இந்து விரோதத்தை வளர்க்கவும் பாடு பட்டு கொண்டிருக்கிறாரோ என்னவோ…

  44. அன்பர் செந்தில் தனது தீண்டாமையை நியாயப் படுத்தும் வலைப்பக்கத்தை ஒருமுறை நான் தீண்டாமைக் கொடுமை குறித்து எழுதியதற்கு அளித்த பதிலில் அவர் சுட்டிக் காட்டியிருந்தார், அதைப் படித்த பின்னர் இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு பாசிச சிந்தனையா என்று வியந்தேன். நிச்சயமாக இறைவன்தான் அவரை ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் இன்னபிற கொடுமையாளர் வரிசையில் சேராமல் காக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அவரது எந்த எழுத்துக்கும் பதிலிருப்பதில்லை என்றே இருந்துவிட்டேன்.

    சாதியின் அடிப்படையில் தீண்டாமையை நியாயப்படுத்தும் அவரது கட்டுரையைப் படிக்காதவர்கள் தயவு செய்து படிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். அவருக்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அதனை அவர் தமிழ் ஹிந்து தளத்தில் பயன்படுத்த அனுமதிப்பது ஹிந்து மதத்துக்குக் கேடு விளைவிக்கும் என்ற பயம் எனக்கு இருக்கிறது.

    ஜடாயு சாரங் போன்றவர்கள் செந்தில் போன்றவர்களை ignore செய்வதே நல்லது.

  45. திரு கோமதி செட்டி!

    //உங்கள் கேள்வி நியாமானதுதான். முகமது இருந்த காலத்தில் அங்கு காட்டு மிராண்டிகளாக இருந்து இருக்கலாம். இது போன்ற நிலை இங்கு இல்லை. காவேரி முதல் கங்கை வரை பாய்ந்த இடம் இது. அதுவும் தவிர இதை பற்றி எழுத வேண்டும் என்ற தேவை இல்லை. இருந்தாலும் தொழில் மற்றும் இடத்தை பொறுத்து இது வேறுபடுகிறது. //

    காவேரி முதல் கங்கை வரை இங்கு பாய்ந்திருந்தாலும் அதனால் என்ன நன்மை விளைந்தது? எங்கள் கிராமத்தை ஒட்டியே அரிஜனங்கள் கிராமமும் உள்ளது. எங்கள் கிராமத்தில் கக்கூஸ் வீட்டின் கொல்லைப்புறத்தில் எல்லா வீடுகளிலும் கட்டப்பட்டு சுகாதாரமாக வைக்கப்பட்டிருக்கும். அதே நேரம் அரிஜனங்களின் கிராமத்துக்கு நீங்கள் சென்றால் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். தெருவின் இரு மருங்கிலும் மலம் கழிக்கப்பட்டு ஒரே நாஸ்தியாய் கிடக்கும். அரசு தனது செலவில் பொது கழிப்பிடம் கட்டி கொடுத்தாலும் இவர்கள் வெளியில் மலம் கழிப்பதையே விரும்புகிறார்கள். இதனால் எவ்வளவு சுகாதார கேடுகள் வந்தாலும் அதை அவர்கள் சடடை செய்வதில்லை.

    //முகமது பாலைவனத்தை மட்டும் பார்த்து இருக்கிறார். அதனால் அவர்உடைய கருத்து பாலைவன மக்களுக்கு மட்டும் தான் பொருந்தும். அது காஷ்மீரில் இருக்கும் ஒருவனுக்கு எப்படி பொருந்தும்?//

    239. ‘ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்’ என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா அறிவித்தார்.
    புகாரி Volume :1 Book :4

    இந்த ஒரு அறிவுரை அரபு நாட்டுக்கு மட்டும் அல்ல நமது தமிழ் நாட்டுக்கும் பொருந்தும். முகமது நபி சொன்ன அறிவுரைகள் அனைத்துமே முழு உலகுக்கும் பொருந்தி வரும். முகமது நபியைப் போன்ற ஒரு வழி காடடி அந்த அரிஜன சகோதரர்களுக்கு கிடைக்காததால்தான் தெருக்களில் அமர்ந்து மல ஜலம் கழிக்கிறார்கள். மனிதர்கள் பயன்படுத்தும் குளங்களில் கூட சிலர் அசிங்கம் செய்து விடுவதை நாம் பார்க்கிறோம்.

  46. நமது தளத்தின் பெயர் “தமிழ் ஹிந்து”என்று பெயர் சூட்டப்பட்டிருந்தும் , இயன்றவரை ஆங்கிலம் கலக்காமல் அனைவரும் எழுதுவது நல்லது. தமிழ் மட்டும் தெரிந்த மக்களுக்கு நமது கருத்துக்கள் போய்ச்சேர வேண்டும் என்பதே நமது நோக்கம். எனவே, எனது கடிதத்துக்கு பதில் எழுதிய அன்பர் தன் பெயரை ஆங்கிலத்தில் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார். தமிழில் எப்படி அழைப்பது என்று எனக்கு புரியவில்லை. கடிதத்தை தமிழில் எழுத தெரிந்த நண்பருக்கு , தமது பெயரை மட்டும் ஆங்கிலத்தில் எழுதும் காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. எனவே எங்களைப்போல அவரும் பெயரை தமிழில் டைப் செய்து கடிதம் அனுப்பினால் எந்த பிரச்சினையும் வராது.

    வேறு தளங்களில் நடக்கும் விவாதங்களை பற்றி நமது தளத்தில் நாம் தேவை இல்லாமல் விமரிசிக்கக்கூடாது. நமது தளத்தினைப்பற்றி மற்ற தளங்களில் யாராவது விமரிசனங்கள் செய்யும்போது மட்டும் , அதுவும் அந்த விமரிசனம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தால் மட்டுமே நாம் நமது எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். அத்வைத தளங்களில் நடக்கும் விவாதத்தை பற்றி அவர் தேவை இல்லாமல் நமது தளத்தில் விமரிசித்ததால் , அவர்களும் நம்மை தேவை இல்லாமல் விமர்சிக்க நேரிடும்.

    வேதம் படித்தவர்கள் தான் அத்வைதம் , விஷிச்டாத்வைதம் , துவைதம் போன்ற வற்றை பற்றி கருத்துப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார் திரு SARANG. இது வேதம் படிக்காதோரை மட்டமாக கருதுவது இல்லாமல் வேறு என்ன?

    ” (விஷயம் என்னன்னா அதுல பேசுற எவனும் வேத அத்யாயனம் செய்தே இருக்க மாட்டான்) ”

    வேத அத்யயனம் செய்தவன் மட்டுமே கருத்துப்பரிமாற்றம் செய்யவேண்டும் என்ற இந்த கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள். இக்கருத்து ஏற்கப்பட்டால், இது தமிழ் ஹிந்து தளம் அல்ல. வேதாத்யாயன தளம் என்று பெயரை மாற்ற வேண்டியதுதான்.

    ஆண்கள் மட்டுமே வேதம் படிக்கவேண்டும் என்றும், பெண்கள் வேதம் படிக்கக்கூடாது என்று சொல்லுபவர்கள் யாராயினும் அவர்களின் கருத்து வன்மையாக கண்டிக்க தக்கது. மன்னிக்க முடியாதது.

    அதே போல, ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் வேதம் படிக்கலாம் மற்றவர்கள் படிக்க கூடாது என்று யார் கூறினாலும் அதுவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதே ஆகும்.

  47. சுவனப்ரியன் அவர்களே

    மறுபடியும் உச்சாவை மட்டுமே பேசுகிறீர்கள் !!! முஹம்மது தானாக எதுவும் சொல்லவில்லை எல்லாம் அல்லா சொல்லியது தான் – அப்படி இல்லாவிடில் எனது இருதய குழாயை அல்லா அறுத்துவிடுவான் என்று சுறா அடிக்கடி நபிகள் சொல்லுவாரே (அவர் கடைசியில் அப்படி தான் விஷம் வைக்கப்பட்டு இருதய குழாய் துலைக்கப்படுவது போல வேதணையுற்று இரந்தார் என்று ஹதீஸ் சொல்வதை எல்லாம் நாம் வெளியில் சொல்லிக்கொல்ல வேண்டாம்)

    உங்களது வேதம் பற்றிய முடிவு வெறும் கற்பனை விஷயங்களால் பின்னப்பட்டதும் தவறான கருத்துக்களுமே கொண்டதாகும். இந்திய மன்னில் பிறந்து விட்டு அரபு நாட்ட்டு சிந்தனைகளுடன் இருக்கும் விளைவு.

    ஏக காட்டு மிரான்டி இறைவனே இருந்து தீர வேண்டும் என்ற கருத்து. அவன் சொன்னது தான் இருதி தீர்ப்பு என்ற ததாகிரித்தனம்.

    அந்த அல்லா உலகம் தட்டை என்றால் உலகம் தட்டை என்று நம்பவேண்டும். யாரும் நம்ப மறுப்பதால் இட்டுக்கட்டி குரானை மாற்றி ப்ராக்கெட் போட்டு உளர வேண்டும். அல்லா விபச்சாரத்தை ஒகெ பன்னினால் நாம் வக்காளத்து வாங்க வேண்டும்.

    50:7 – and the earth we had spread it out and set thereon firm mountains.

    அரபிக் அறிந்த எல்லாரும் இதை தட்டை என்ற் மொழி பெயற்பபார்கள் அனால் இந்த அறிவியல் உன்மை வெளி வந்ததும் உடனே அந்தர் பல்டி.

    தட்டை என்று சொல்பவர்கள் அதை மலைகலினால் ஸ்திரமாக நிற்க வைத்துள்ளேன் என்று அல்லஹ் சொல்வதை கண்டுகொள்வதே இல்லை.

    அனால் இந்தியாவில் பார்ங்கள் சூரியனை சுற்றி தான் பூமி வருகிறது பால பாடம். நீங்கள் எந்கே காட்டு பாக்கலாம் என்று கேட்க வேண்டியே சான்றுகள் தராமல் விடுகிறேன்.

    //காலம் காலமாக வேத மொழியாக (வாய் மொழியாக) இருந்த கிரந்தங்கள் பின்பு பிரகிருத மொழிக்கு மாற்றப் பட்டது. (பாகத அல்லது பிராகிருத மொழி என்பது பாமர மொழியாகும்) பின்பு பிராகிருத மொழியிலிருந்து சமஸ்கிரதத்திற்கு மாற்றப் பட்டது. (சமஸ்கிரதம் என்றால் செப்பனிடப் பட்ட மொழி – அறிஞர்கள் மொழி) இவ்வாறு காலம் காலமாக வாய் மொழியாக இருந்து பின்பு மொழி பெயர்ப்புக்கு உட்பட்டு வந்ததால் அதில் இடைச் சொருகல் ஏற்படவும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
    //

    சமஸ்க்ரிதம் என்பது பண்டிதர்கள் மொழி அல்ல – ப்ராக்ருதம் சமஸ்க்ரிதமாக மாறவில்லை. இதெல்லாம் போகிற போக்கில் யாரு சொன்னதை நீங்கள் நெட்டிலிருந்து சுட்டு எழுதுவது.

    வேத சமஸ்க்ரிதத்திர்க்கும் பேச்சு வழக்கில் இருந்த சமஸ்க்ரிதத்திர்க்கும் (ப்ராக்ருதம்) சமன்பாடு கொண்டுவந்த ஒரு இலக்கண வடிவம் தான் சமஸ்கிரிதம் என்பது.

    வேதம் வேத சமஸ்க்ரிதத்திலேயே தான் இன்று வரை சொல்லப்பட்டு வருகிறது – அதை ப்ராக்ரிதத்திலும் சமஸ்க்ரிதத்திலும் யாரும் மொழி பெயர்க்கவில்லை. – இதை எங்கே படித்தீர்கள். சமஸ்க்ரிதம் என்பதே வேதத்திலிருக்கும் பாஷைக்கு அப்புறம் வேதங்களில் இருக்கும் நியமங்களுக்கு ஒரு சூத்ர வடிவம் தந்தது தான். பாணினி செய்த சூத்ரஙகலின் படி இருப்பது சமஸ்க்ரிதம். இந்த சமஸ்க்ரிதம் வேடத்தில் உள்ள இலக்கண விஷயங்களை விரோத்திக்காமல் தான் உள்ளது.

    உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டுமானால் மூன்று மாத்திரை காலமுள்ள ப்லுத எழுத்துக்கள் (அ3 = அஅஅ) ப்ராக்ரிதத்தில் இல்லை (ஆ நெடில் மட்டும் தான் உள்ளது ) ஆனால் வேதத்தில் அடிக்கடி வரும். இதை சமஸ்க்ரிதத்தில் சேர்த்துள்ளார்கள் எதற்க்காகŸ! வேதத்தில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக.

    இந்த மொழி பெயர்ப்பு விஷய மெல்லாம் வெறும் கற்பனை. வேத மொழி வேத மொழியாகவே உள்ளது. இது என்னமோ தமிழ் பரிபாடல்களை தூய தமிழிலிருந்து அப்புறம் கொடுந்தமிழுக்கு மொழிபெயர்த்தனர் என்பது போன்று இருக்கிறது.

    அப்புறம் வாய்பாட்டு முறைக்கும் கால நிர்ணயத்திற்கும் வருவோம்.

    1500 ஆண்டுகள் என்பது wikipedia படித்த அறிஞர்கள் மட்டுமே kooruvar. ஆனால் பாருங்கள் .

    நடு நிலையாலர்கள் மேற்கொண்ட அகழ்வாறாய்ச்சி முடிவுகள் மகாபாரதப் போர் நடந்த வருடம் 3017 – 3067 என்று நிறுவுகின்றனர். ரிக் வேத காலம் என்பது குறைந்தது 10000 ஆவது இருக்கும் என்று நான் கூரவில்லை – சான்றுகள் மூலாம் மேலை நாட்டு க்ரிஸ்துவ அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

    வாய் வழியா படிச்சா மாறிப்போகும் என்ன செய்யலாம் என்று யொசித்து தான் பல பாட முறைகலை கொண்டு வந்துள்ளனர் – இதை ப்ற்றி எற்கனவே எழுடியாகிவிட்டது ஜடாயு அவர்களும் பின்னுட்டம் இட்டுள்ளார்.
    நபிகள் சொன்னது தவிர ம்ற்ற எல்லாம் தப்புன்னு நினைப்பவர்களுக்கு இது புரியாது

    சந்தஸ், கடபயாதி சங்க்யா என்ற இறண்டு வழிகளை கொண்டு ஒரு வறியில் மாற்றம் உள்ளதா என்று அறிந்து கொள்ள முடியும்.

    //
    ஒரு வேதத்தில் ஒருவரின் கருத்தில் இரு முரண்பட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. ஒரு இடத்தில் ஒரு இறைவன்தான், வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று கூறும் வேதம், அடுத்த பாகத்தில் அக்னி, காற்று போன்ற இயற்கை பொருட்களை வணங்க சொல்கிறது. யஜூர் வேதத்தில் இயற்கை பொருட்களையும், மனிதனால் செய்யப்பட்ட சிலைகளையும் வணங்குபவர்கள் இருளில் நுழைந்து விட்டனர் என்று கூறுகிறது. ஒன்றுக் கொன்று எவ்வளவு முரண்பட்ட வசனம் என்பதை பாருங்கள். இதில் ஏதோ ஒன்று தான் இறைவனின் கூற்றாக இருக்க முடியும்
    //

    இது தான் அரபு புத்தி என்பது. பாருங்கள் ஒரு நல்ல யோசிக்கும் திரன் கொண்டவராக இருக்கவேண்டிய நீங்கள் குரான் படித்ததால் அரபு நாட்ட்க்காரன் லெவலுக்கு போய் விட்டீர்கள்.

    விக்ரஹ வழிபாட்டை பற்றி வேதத்தில் எங்குமே இல்லை. நீங்கள் இந்த https://www.usislam.org/comparative/hinduidols.htm இடத்தில் இருந்து தானே சுட்டீர்கள்

    நீஙகளே அந்த ஸ்லோகங்கலின் முழு ஆங்கில மொழி பெயற்ப்பை படியுங்கள் –
    பகவத் கீதையில் விக்ரஹ வழிபாடு சரி என்றோ தவறு என்றோ எங்கும் இல்லை. க்ண்ணன் கூறுவதெல்லாம் இது தான். அற்ப ஸ்வர்க வாழ்வை தரும் தெவதைகளை கும்பிட்டு என்ன் பயன் , பரமாத்மாவை அடைவதே சாலச் சிரந்தது.. பரமாத்மாவை அடைவது என்பது நித்ய கண்ணிகைகளுடன் சல்லாபம் இல்லை. அது மொக்ஷம் என்ற சுகத்திற்கும் (சுகம் என்றால் சல்லாப நிலை அல்ல சரியா ) அப்பாற்பட்ட நிலை – ஏன் சுகத்திற்க்காக அலைகிறாய் அதயும் கடந்து வா என்று தான் கண்ணன் சொல்வது. இதை நீங்கள் எந்த மொழி பெயற்பாலரின் உரையை வேண்டுமானாலும் படித்து பார்த்துக்கொள்ளலாம்.

    யஜுர் வேத வாக்கியம் விக்ரக வழிப்பாடு கூடாதுஎன்றா கூறுகிறது (சரி அந்த முழு ஸ்லோகத்தை என்க்காக தேடி தருவீர்களா – நாங்கள் குர் ஆன் ஹதீஸ்கலயும், சுராக்கலயும் தேடி கண்டுபிடித்து தாவா பனி செய்யும் எங்களை போன்று கொஞ்கமாவது நீங்களும் செய்யலாமே )

    நீங்கள் சுட்ட வாக்கியத்தயே பார்ப்போம்

    “All those who worship the uncreated things, they are in darkness, and you’ll enter more into darkness if you worship the created things.”

    இதில் எஙகே விக்ரக வழிபாடு வருகிறது. ஒஹோ created things இத சொல்கிரீர்களா. created things அப்படீன்னா விக்ரகம் ஏன்ன விக்ரகம் செய்யராங்க – பலெ பலெ.

    ஹிந்துக்கள் விக்ரகம் முன் சென்று ஒ புல்லயார் விக்ரகமே க்ருஷ்ண விக்ரகமே என்றா சொல்கிறார்கள் அதை கடவுளின் ஸ்வரூபமாக தான் பார்க்கிரார்கள் –அதெப்படி என்றால் அரபு நாட்டு மூலை உள்ளவர்களுக்கு புரியாது.

    (யஜுர் வேதம் என்பது குர்ஆன் இல்லை அப்படியே மூலயை உபயொகம் செய்யாமல் பாலோ பன்றதுக்கு)

    பள்ளி கூடத்தில் காட்டு விலங்குகள் பத்தி பாடம் நடக்குது அப்பொ வாத்தியார் சிங்க படத்தை காட்டி இது தான் சிங்கம் என்கிறார். உடனே ஒரு அரபு நாட்டு மும்மீன் எழுந்து இது சிங்கம் இல்லை என்று சொல்லுவார். வாத்தியார் என்ன சிங்கத்தை கூட்டிகிட்டா வர முடியும்.

    இந்த உலகம் உருன்டை என்று வாத்தியார் உலக படத்தை காட்டி சொல்லுவார் – நம்ம மும்மீன் சகோ எழுந்து யோவ் வாத்தி நீ பொய் சொல்ர இது வெறும் உலக படம் தான் என்பார். அதுவுமில்லாம அல்லாஹ் உலகம் தட்டைன்னுதான் குர் ஆனில் சொல்ரார், நீ வெல்ல வாடி உனக்கு இருக்கு .

    இந்த எஜ்ஜாம்ப்ல்ஸ எஜ்ஜாம்ப்ல்ஸா பாக்கனும் அதுல நொலி நொல்ல சொல்லக் கூடாது சரியா

    இதெல்லாம் விடுவோம் சகோ இந்த வேத வாக்கியத்தில் எங்கே செய்யக் கூடாது என்று உள்ளது.

    அடடா இத சொல்றீங்களா and you’ll enter more into darkness if you worship the created things

    பாத்தீங்களா பாத்தீங்களா இது யஜுர் வேதம் குர் ஆன் இல்லை. இங்கு darkness என்பது குர் ஆனில் வருதெ அது மாதிரி நித்திய நெருப்பு இல்ல – darkness என்றால் தமம் அல்லது அஞானம், ஞானம் இல்லாத நிலை.

    பரமாத்மா நிலயை அடைவதே உன்னதம் ம்ற்றதெல்லாம் அதற்க்கு குறைவு இது தான் இங்க விஷயம். அல்லாவின் மிரட்டல் மாதிரி எல்லாம் கிடையாது சறியா.

    அக்னியை ஆராத்திதால் இந்திரனை ஆராதிதால் அதற்க்கு உண்டான பலன் கிடைக்குமே அன்றி மொக்ஷம் என்பது பலனை எதிர்பாராமல் பகவத் த்யானத்தில் இருப்பதால் தான் கிடைக்கும்

    இது தான் விஷ்யம். அக்னியை ஆராத்திதால் இந்திரனை ஆராதிதால் உணக்கு என்நெய் சட்டி தான் சூடு தான் என்பதெல்லாம் கிடயாது சரியா.

    அதனால் தான் ஒரு மனிதனின் சாத்வீகமான தேவைக்கேற்ப அவனது ஞானத்தின் நிலையை பொறுத்து அக்னியை ஆராதிப்பதா இல்லை மொக்ஷத்தை அடைய வழி தேடுவதா என்பதெல்லாம்

    பாத்தீங்களா யஜுர் வேதமும் சரி பகவத் கீதயும் சரி ஒரே விஷயத்தை தான் மாற்றமில்லாமல் சொல்கின்றன

    வீனா யஜுர் வேதத்தயும் குர் ஆனயும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

    வாய் வழி கல்வி எழுத்து வழி கல்வியை விட ஏன் சிறந்தது புஸ்தகத்தில் இருப்பதை விட மஸ்தக்கத்தில் (மன்டையில்) இருக்கும் விஷ்யம் மாராது என்பதற்கு அடுத்து ஒரு பதில் போடுகிறேன். அதில் நீங்களே சோதித்து பார்பதற்கு செயல் முறை விளக்கமும் தருகிறேன்.

    நிச்ச்யமாக இதில் சிந்திப்பவர்கள் பயன் அடைய நிறைய அத்தாட்சிகள் உள்ளன

    எப்பொவும் போல எக்கச்சக்க எழுத்து இலக்கன பிழைகள் – மன்னிக்கவும். .

  48. முன்னர் போட்ட மறுமொழியை நானே edit செய்து மீண்டும் போடுகிறேன். அதில் இஸ்லாமிய கல்லூரிகளில் பின் பற்றப்படும் அருவருப்பான வழக்கத்தை பற்றி எழுதி இருந்தேன். பொதுவில் அதை பற்றி சொல்வது கொஞ்சம் ஓவர் தான் 🙁

    அன்பான சுவனப்பிரியன்

    //
    காவேரி முதல் கங்கை வரை இங்கு பாய்ந்திருந்தாலும் அதனால் என்ன நன்மை விளைந்தது? எங்கள் கிராமத்தை ஒட்டியே அரிஜனங்கள் கிராமமும் உள்ளது. எங்கள் கிராமத்தில் கக்கூஸ் வீட்டின் கொல்லைப்புறத்தில் எல்லா வீடுகளிலும் கட்டப்பட்டு சுகாதாரமாக வைக்கப்பட்டிருக்கும். அதே நேரம் அரிஜனங்களின் கிராமத்துக்கு நீங்கள் சென்றால் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். தெருவின் இரு மருங்கிலும் மலம் கழிக்கப்பட்டு ஒரே நாஸ்தியாய் கிடக்கும். அரசு தனது செலவில் பொது கழிப்பிடம் கட்டி கொடுத்தாலும் இவர்கள் வெளியில் மலம் கழிப்பதையே விரும்புகிறார்கள். இதனால் எவ்வளவு சுகாதார கேடுகள் வந்தாலும் அதை அவர்கள் சடடை செய்வதில்லை
    //

    ஸ்வாமின் இந்த நிலைக்கு யாருன்னா காரணம். 800 வருடங்களாக இந்தியாவை கொள்ளை அடித்த துலுக்க கிறிஸ்தவ கூட்டங்கள் தானே.

    இந்த ஆய் போகும் கூட்டத்தில் முமீன்களும் உண்டு. பாகிஸ்தான் சென்று பாக்கலாமா. காயல்பட்டினத்தின் நிலைமையும் இதே தான். இந்தியாவில் மிகவும் சுகாதாரமற்ற கூட்டம் என்றால் அது முமீன்களின் கூட்டம் தான். என்று அரசு புள்ளி விவரம் சொல்கிறது.

    பாத்தீங்களா , பாத்தீங்களா மறுபடியும் மறுபடியும் உச்சா விஷயமாகவே பேசறீங்களே. மொதல்ல உங்கள் உம்மாவிடம் நபிகள் சொன்னதை பின்பற்ற சொல்லுங்கள்

    //
    239. ‘ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்’ என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா அறிவித்தார்.
    புகாரி Volume :1 Book :4

    இந்த ஒரு அறிவுரை அரபு நாட்டுக்கு மட்டும் அல்ல நமது தமிழ் நாட்டுக்கும் பொருந்தும். முகமது நபி சொன்ன அறிவுரைகள் அனைத்துமே முழு உலகுக்கும் பொருந்தி வரும். முகமது நபியைப் போன்ற ஒரு வழி காடடி அந்த அரிஜன சகோதரர்களுக்கு கிடைக்காததால்தான் தெருக்களில் அமர்ந்து மல ஜலம் கழிக்கிறார்கள். மனிதர்கள் பயன்படுத்தும் குளங்களில் கூட சிலர் அசிங்கம் செய்து விடுவதை நாம் பார்க்கிறோம்
    //

    நபிகள் இந்த அறிவுரையை சொல்லி விட்டு வேற என்னன்னா காரியம் செய்தாருன்னு புட்டு புட்டு வைக்கலாமா .

    இதெல்லாம் பெர்சு பண்ணி எழுதுவதற்க்கு உங்களுக்கு வெக்கமாக இல்லை.

    இந்தியாவில் இன்று இருப்பது சுகாதார விழிப்புணர்வின்மை இதில் இஸ்லாமியர்களே அதிகம் உள்ளனர். இது காசு பண விஷயம். ஜாதி விஷயமில்லை. இதை கூட ஜாதி பிரச்சனையாக மாற்றி ரெண்டு காபீரை மதம் மாற்ற துடிக்கும் மன நிலையை என்ன சொல்வது.

    உங்கள் உம்மாவை சேர்ந்தவர்களின் இழிநிலையை மாற்ற கொஞ்சம் ஏதாவது செய்யுங்கள் சகோ.

    இஸ்லாமிய நாடுகளான ஆப்ரிகா நாடுகளின் கதியை கொஞ்சம் யோசித்து பாருங்கள். எதையும் எதையுமோ முடிச்சு போட்டு அல்லாவுக்காக தாவா செய்து நீங்கள் மட்டும் சுவனத்தில் ஜாலியாக இருக்க நினைப்பது சரியா சகோ ?

  49. நண்பர் சுவனப்ரியன்

    குர்ஆனில் இடை சொருல்கல்கள் கட்டாயமாக இல்லை பூராமே டுபாகூர் தான் – ஏழுல ஆற எரிச்சுப்புட்டு என்னது தான் குர் ஆன்னு நிலை நாட்டியத்தை தானே இன்று வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    //
    வேதகாலக் கடவுள்கள்
    வேதகாலக் கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேதகாலத்தில் உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.
    வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், இந்திரன், பிரஜாபதிஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் வசுக்கள் எனவும், 11 பேர் உருத்திரர்கள் எனவும், 12 பேர் ஆதித்தர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
    இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின்ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதாஎன்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்
    //

    இதை சொல்ல நீங்கள் ஒரு இந்தியர் என்ற முறையில் வெட்கப்பட வேண்டும். விக்கி பீடிய என்பது இவ்விஷயத்தில் மாக்ஸ் முல்லரின் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது.

    deus-pater என்பது த்யுஸ் பித்ர் என்ற சமக்ஸ்ரித்த சொல்லின் கிரேக்கமாக்கம்.
    த்யுஸ் பித்ர் என்பவர் அஷ்ட வசுக்களுள் ஒருவர் – இது மகா பாரத்திலும், ப்ருஹுதாரன்யாக உபநிஷத்திலும் விளக்கமாக விவரிக்கப்படுகின்றன இந்த த்யுஸ் பித்ர் தான் பீஷ்மராக வருகிறார் மகாபாரத்தத்தில்.

    கிரேக்கர்கள் இந்தியாவில் இருந்து தான் தப்பும் தவறுமாக சில கொள்கைகளை சுட்டுக் கொண்டார்கள் என்பது பாலர்களுக்கும் தெரியும்

    இதை இந்தியர்கள் கிரேக்கர்களிடமிருந்து சுட்டார்கள் என்பதை கேனயன் கூட நம்ப மாட்டான்.

    இந்த பித்ர் என்ற சப்தம் தான் ஆங்கிலத்தில் உள்ள father. அதே போல மாத்ர் சப்தம் தான் mother

    இந்தியர்கள் சும்மா போர வரவரை எல்லாம் கடவுள்களாக ஆக்குகிரார்கள் என்கிறீர். மறுபடியும் நாங்கள் பாலைவன அறிவுடையவர்கள் கிடையாது. இங்குள்ள பாப்பாக்கள் கூட சொல்லும் கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். ஞானிகளை கடவுளுக்கு சமநாமாக வைக்க ஒரு ஹிந்து தயங்க மாட்டான். கடவுளை விட ஒரு படி மேல் வைக்கவும் யோசிக்கமாட்டான். ஹிந்துக் க்டடவுள் இப்படி செய்தால் கோபிக்க மாட்டார் . அவர் காட்டு மிராண்டி அல்ல. ஆண்டாண்ட கோடி பிரம்மாண்டத்திற்கும் சொந்தக்காரர். ஒரு சிறு மனிதனிடம் சண்டைக்கு வந்து மல்லுக் கட்ட மாட்டார். 🙂

    சரி அப்சு என்று செமேடிக் கடவுள் ஒருவள் – deep waters என்கிறார்கள். ஹீப்ரூவில் sweet water. இந்த அப்சுவின் சகோதிரியான தைல்முட் என்பவளைதான் மதருக் வென்று வானத்தையும் பூமியையும் பிரிக்கிறார்

    இந்த செமேடிக் கடையை தான் அல்லா சுட்டு குர்ஆனில் இப்படி கர்ஜிக்கிறார்.
    21:30, ‘The heavens and the earth were joined together, and we clove them asunder’

    🙂

    வேத சமஸ்க்ரிதத்தில் அப்சு, ஆபஹா என்றால் நீரின் ஒரு பெயர். இதை அல்லாவே சுட்டு உபயோகப் படுத்தி இருக்கிறார் என்பது வேறு விஷயம்.

    த்யுஸ் பித்ர் என்பது பூமி உண்டானா விதத்தை விளக்க வேடம் உபயோகப்படுத்தும் பெயர். த்யுஸ் பித்ர் பூமியின் கணவராக சித்தரிக்க படுகிறார். அதாவது பூமி என்பது ஆகாஷத்தினுள்ளே (sky) இருப்பதாக அறிந்து கொள்ள வேண்டும்.

    இந்த த்யுஸ் பித்ர் என்ற கோட்பாடை கிரேக்ர்கர்கள் சுட்டுக் கொண்டு போய் என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்.

    அவரை இந்திரனாக்கி விடுகிறார்கள் – அவர்க்கு zeus என்ற நாம கரணம். அவர் கையில் வஜ்ராயுதத்தை தருகிறார்கள். அப்புறம் அவரை பிரஜாபதியாகவும் ஆக்குகிறார்கள். அவர் தான் கிரேக்க கடவுள்களுக்கெல்லாம் பிதா ஆகிறார். இதனால் தான் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை பரம அபிதாவே என்று கூவுகிறார்கள்.

    இத்தோடு விட்டால் பரவா இல்லை இந்த சுஸ் என்பவர் எப்படி பிறந்தார் என்பதை பார்த்தால் வியப்பு வரும். அதாவது இவருக்கு முன்னாள் பிறக்கும் ஏழு குழந்தைகளை அவரது தந்தை விடுவார். மகாபாரத்தில் பீஷ்மருக்கு முன்னாள் வரும் குழந்தைகளை கங்கையான அவரது அம்மா தானே தண்ணீருள் ஏற்றுக் கொண்டு விடுவார்.

    கிரேக்கத்தில் zeus வழிபாடு மகாபாரத காலத்திற்கு அப்புறமே தொடங்குவதை காணுங்கள் (1500 – 1000 BCE).

    இதனால் தான் வேத தேவரான த்யுஸ் பித்ர் என்பவரை மகாபாரத இதிகாசத்தையும் கலந்து வர்ணிக்கிறார்கள் கிரேக்கர்கள்.

    தேவதை என்றால் ஏக கடவுள் இல்லை. பாலைவன அறிவுள்ளவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் இன்னொரு விஷயம் இது. 33 முக்கிய தேவர்கள் என்றால் உடனே இவ்வளோ கடவுள்களா என்பது.

    அல்லாஹு வானவர்கலையே ஆதாமுக்கு அடிபணிய சொன்னார். ஹிந்துக்கள் உயர்ந்த தேவதைகளுக்கு அடிபணியக் கூடாதா.

  50. திரு சாரங் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்,,,,,

    வேதங்களில் இடைசொருகள்கள் வந்துள்ளன என கூறும் சுவர்ணப்ரியனிடம் ஒரு கேள்வி,திரு குர் ஆன் அல்லாஹ்வால் சொல்லப்பட்டு அபு பக்கர் என்பவரால் எழுதி வைக்க பட்டது என என் இஸ்லாமிய நண்பன் ஒருவன் கூற கேட்டிருக்கிறேன்….முதல் கேள்வி அல்லாஹ்வால் அது கூறப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் ???ஓகே அப்படியே அல்லாஹ்வே கூறி இருந்தாலும் அதை எழுதிய நபர் சுய சிந்தனை உடையவர் ஆயின் அவரின் மனகருத்துக்கள் சிறிதளவேனும் அல்லாஹ்வின் கருத்துக்களில் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது ,இல்லா விட்டால் அல்லா தேர்ந்தெடுத்த நபர் சுயமாக சிந்திக்க தெரியாத ஒரு ஆடுகுட்ட்யை போல் இருந்து இருக்க வேண்டும் …..

    மற்றும் பேராசிரியர்.பெரியார் தாசன் ஒரு நிகழ்ச்சியில் குர் ஆனை கையில் ஏந்தி பைபிள் இல் மத்தேயு,யாகோபு,தானியேல் போன்றோர் கூறியது இருக்கும்,அனால் நமது குர் ஆனில் இறைவன் கூறியது மட்டுமே இருக்கும் ..இது தான் இஸ்லாமின் சிறப்பு என்று,,,மற்றும் டாக்டர்.சாகிர் நாய்க் அவர்களின் பேச்சில் கூறப்படும் வார்த்தை …The knowledge of Alla has spread in the holy Qur’an….

    அப்போ முஹம்மது ஒன்னுக்கு போய்ட்டு கழுவ சொன்னது,பென்கள கற்புஅழிப்பு செய்து விட்டு விந்து பாயாமல் உறுப்பை எப்படி வெளியே எடுப்பது,ஜிசியா வரி வசூலிப்பு போன்ற அறிய கருத்துக்கள் எப்படி அல்லாவினால் கூறப்பட்டது என கூற முடியும் ?????பைபளின் பாதியை காபி அடித்து உருவாகிய ஒரு கொலை நூலை அதை விட சிறப்பாக மனித ரத்தத்தினால் மெருகேற்றி அதனை இறைவனின் இறுதி வசனம் என பேசும் தாங்கள் காலத்தால் அழிக்கப்பட முடியாத வேதங்களை பற்றி பேச முன்னர் தகுதி வாய்ந்த ஆதாரங்களை முன் வைக்கவும்..

    மோகன்ஜதரோ ஹரப்பா நாகரிகத்தில் கிடைக்கபெற்ற சிலைகளில் ஒரு சிலையின் தலை பகுதியில் 3 புடைப்புகள் காணப்பட்டன,அதனை 3 தலைகளாக கொண்டு ‘முந்து சிவன்’ என ஆய்வாளர்கள் கூறுகின்றன.மற்றும் ஒரு பெண் சிலை வடிவின் வயிற்றில் இருந்து செடி வளர்வது போன்று காடபட்டுள்ளது.அது அம்மனாகிய பெண் தெய்வ வடிவம்…மற்றும் இன்னுமொரு சிலை தொகுதி நடுவில் ஒரு தலைவன் சிலை இருக்க சுற்றி வர அனைத்து விதமான விலங்குகளின் சிலைகளும் கானபடுவதாக அமைக்கப்பட்டுள்ளது ..இதன் தத்துவம் உயிர்களக்கு தலைவனாக சிவா பெருமான் காணபடுவதை பசுபதியாய் உருவகிக்க படுகிறார்..தெய்வ வழிபாட்டிலும் கூட ஆண்-பெண் சமத்துவம் அங்கு பேனப்படிருப்பதை காணலாம்…பெண்களை இழிவாக நடத்தும் இஸ்லாமிய கலாசரதிட்கு இது எங்கே புரிய போகிறது…சிலை வழிபாட்டின் ஆழ்ந்த தத்துவங்களை புரிந்து கொள்ளாமல் முருகன் அப்படி இருந்தார் நு உங்களக்கு தெரியுமா? சிவன் இப்படி இருந்தார் நு உங்களக்கு தெர்யும நு சின்னபுள்ள தனமா கேன கேள்வி கேட்க வேண்டாம்…நான் கூறிய அனைத்து விடயங்களும் இலங்கையின் பாடசாலை சைவ சமய பழைய பாடத்திட்டம் -தரம் 10 இந்து சமயம் புத்தகத்திலே உள்ளடக்கப்பட்டுள்ளது..தேடி படிக்கவும்
    மற்றும் உங்களின் கழிவறை வியாக்கியானம் இந்திய கலாசாரதிட்கு என்றுமே தேவைப்பட்டதில்லை..சிந்துவெளி நாகரீக மக்கள் கழிவறை அமைத்து அவசரகடமைகளை முடித்தனர் என்கிறது அகழ்வாராய்ச்சி ..
    அதனால் தான் உலகின் சுத்தமான பண்டைய நாகரீகம் என சிந்துவெளி அறிய படுகிறது

    கொழும்பின் பல சேரிபகுதிகளில் இஸ்லாமிய ஏழை மக்களும் வாழ்ந்து வருகின்றனர்..அவர்கள் காலை கடன் மாலை கடன் அனைத்தையும் கழிப்பது பேரை நதி எனப்படும் கொழும்பு கூவத்திலேயே…..இவர்களக்கு ஏன் நபி அவர்களின் அறிவுரை எட்டி செல்லவில்லை ???கிராமத்து மக்கள் படிப்பறிவற்றவர் என கூறலாம் ..நகரத்து இஸ்லாமிய மக்கள் அவ்வாறு செய்வதன் காரணம் தான் என்ன ???

  51. சுவனப்ரியன்

    இந்து சமயத்தில் பல கடவுள்கள் உள்ளதால் அதிக நாத்தீகர்கள் உள்ளதாக சொல்கிறீர்கள். பல பல ஆயிரம் ஆண்டுகளின் பின்னும் நாத்தீகர்களின் எண்ணிக்கை ஹிந்துக்களில் மிக கம்மியே (% terms) .

    அதிக நாத்தீகர்களை கொண்ட மதம் (அந்த மதம் பரவலாக இருக்கும் இடம்) ஒரே கடவுளை கொண்iட அல்லாவின் அபிமான தூதரான ஈசாவால் தூதராக வந்து துவங்கப்பட்ட கிறிஸ்தவம். இந்த லிஸ்டில் இஸ்லாம் இப்போது வேகமாக முன்னேறிக் கொண்டு வருகிறது. இன்னும் சில வருடங்களில் கிறிஸ்தவத்தை எட்டிப் பிடித்து விடும்.

  52. நன்றி திரு சாரங் அவர்களே..மிக்க நன்றி

  53. அன்பர் திரு சாரங் அவர்கள் சுவன்ப்பிரியன் என்பவருக்கு அளித்துவரும் மறுமொழிகளை விடாமல் படித்து வருகின்றேன். paying in the same coin எனும் மொழிக்கேற்றவாறு மறுமொழிகள் அமைந்துள்ளன. என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இசுலாம் ஒரு சமயமே அல்ல. அவர்களே மார்க்கம் என்கிறார்கள். அந்த மார்க்கம் எங்கு அழைத்துச் செல்லும்? நாட்டைப் பாலைவனமாக்கத்தான் வழிகாட்டும்..

  54. நண்பர் சேவற்கொடியோன்

    நான் சாதாரணமாக சொன்ன கருத்த ஏன் இவ்வளோ யோசித்து வேறு விதமாக புரிந்துகொள்ளுகிரீர்கள்

    அடியேன் சொல்லவந்தது –
    வேதத்தின் படி வேத அத்யாயனம் செய்யாவிடில் ஒருவன் பிராமணன் இல்லை
    பிராமன பந்து என்று தான் கிண்டலாக அழைக்கப்படுவான், அதாவது பிராமணின் சொந்தக் காரன் பாருடா என்பது போல.
    இப்படி வேதமே படிக்காத பிராமண பந்துக்கள் வேத படிக்க ஆசை உள்ள ஒரு பெண்ணையோ அல்லது வேறோருவரையோ பார்த்து உனக்கு படிக்க தகுதி இல்லை என்று கூறினால் அது எப்படி இருக்கும் – ரெம்ப கேவலமாக இருக்கும். அதை தான் நான் சொன்னேன்.

    நீங்கள் அத்வைத க்ரூப்பில் மெம்பரா – ஏன் இவ்வளவு வருத்தப் படுகிறீர்கள். இப்படியாக வெப் வைஷ்ணவர்கள், வெப் அடிவைதிகள் என்று பெரிய கூட்டம் இருக்கிறது அவர்கள் வெப்பில் மட்டுமே அத்வைதிகள், வைஷ்ணவர்கள் (அத்வைதிகள் வைஷ்ணவர்கள் என்று சொல்லவில்லை நடுவுல ஒரு கமா இருக்கு பாருங்கள்) அனுஷ்டானத்தில் சூன்யமாக இருப்பதால் அவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல நிச்சயமாக அருகதை அற்றவர்கள் (ஒரு நல்ல விஷயத்தை செய்யாதே என்று சொல்ல என்று படிக்கவும்).

  55. திரு சாரங்!

    //50:7 – and the earth we had spread it out and set thereon firm mountains.
    அரபிக் அறிந்த எல்லாரும் இதை தட்டை என்ற் மொழி பெயற்பபார்கள் அனால் இந்த அறிவியல் உன்மை வெளி வந்ததும் உடனே அந்தர் பல்டி.//

    பூமியை நீட்டினோம்
    -குரஆன் 50:7
    ‘இதன் பின்னர் பூமியை விரித்தான்’
    -குர்ஆன் 79:30

    ‘பூமியை விரித்தான்’ என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் ‘தஹாஹா’ என்ற சொல் ‘தஹ்வு’ என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு ‘விரித்தல்’ என்ற ரீதியில் பொருள் கொள்வதுதான் அரபு இலக்கணத்தின் படி சரியாகும்.

    ‘பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்’
    -விஞ்ஞானி ஹப்பிள்.

    இதைத்தான் இறைவனும் ‘பூமியை விரித்தான்’ அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆன் கூறுகிறது. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!

    ‘பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ‘ என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!

    இந்த வசனம் அறிவியலை உண்மைபடுத்துகிறதா? அல்லது பொய்ப்படுத்துகிறதா என்பதை சாரங்கின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

    //ஞானிகளை கடவுளுக்கு சமநாமாக வைக்க ஒரு ஹிந்து தயங்க மாட்டான். கடவுளை விட ஒரு படி மேல் வைக்கவும் யோசிக்கமாட்டான். ஹிந்துக் க்டடவுள் இப்படி செய்தால் கோபிக்க மாட்டார் . அவர் காட்டு மிராண்டி அல்ல.//

    இதற்குதான் வேதத்திலிருந்து ஆதாரம் கேட்டேன். ‘குர்ஆனைப் போல் இந்து மதவேதங்கள் அப்படியே மனிதர்கள் பினபற்றுவதற்காக அல்ல’ என்று நீங்கள் வாதிட்டால் வேதத்தின் பயன்தான் என்ன? விளக்கம் சொல்லுங்கள.

    மற்றவற்றிற்கு வேலை முடிந்து வருகிறேன்.

  56. அன்புள்ள திரு சாரங் ,

    வேதம் படித்தவர்கள் ஆயினும், வேதம் அத்யயனம் செய்யாதவர்கள் ஆயினும், எவராயினும் சரி , பெண்கள் வேதம் படிக்கக்கூடாது , காயத்ரி மந்திரம் சொல்லக்கூடாது , கோயில் பூஜைகள் செய்யக்கூடாது என்று சொல்வோரின் கருத்துக்களுக்கு இனி நம் சமுதாயத்தில் இடமில்லை. இந்த கருத்தினை என் போன்றோர் எந்த வலைத்தளத்திலும் எழுத அஞ்ச மாட்டோம்.

    வேதம் படித்தவர்கள் நடத்தும் விவாதத்திலும், பெண்களுக்கு எதிராக எழுதினால், அவர்களை நாடு மன்னிக்காது. மீண்டும் சொல்கிறேன், பெண்கள் வேதம் படிக்கக்கூடாது என்று சொல்லுவது , யாராயினும் தவறே.

  57. வேதம் புனிதமடைந்தது என்ற தலைப்பு தவறு. ஆனால் செய்தி ஹிந்து சமூகத்தின் முன்னேற்றத்தை மேம்பாட்டை விரும்பும் அனைவருக்கும் இனிப்பானது ஆனந்தம் அளிப்பது. விவாதத்தில் திரு செந்தில் என்ற சாதீயவாதியின்
    கருத்துக்களுக்கு சிறப்பாக விடையளித்த ஸ்ரீ. ஜடாயு ஸ்ரீ சாரங் ஆகியோருக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
    சிவஸ்ரீ. விபூதிபூஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *